Saturday 3 February 2024

A1 A2 பால் என்றால் என்ன? பால் பற்றி அறிவோம் (A1 A2 milk )

#A1___A2__Milk 
#பித்தலாட்டங்கள்_பாகம்_1

முதல்ல A1 பால் அப்படீனா என்ன
A2 பால் னா என்னனு தெரிஞ்சுப்போம்.

பொதுவா பாலில் புரதம்,விட்டமின் ஏ,
கால்சியம் இருக்கும்.

கூடவே கேசின் ப்ரோட்டின் அப்டீன்ற ஒன்னும் இருக்கும் இது நீரழிவு நோயை தூண்டகூடியதுனு சொல்றாங்க.
அதெப்படி டா தூண்டும்னு குறுக்க கேள்வி கேக்க கூடாது அது எப்படினு கீழ சொல்லுவேன்😁

இந்த கேசின் பயபுள்ளையே ரெண்டுவிதமா இருப்பான் அதாவது டபுள் ரோல் அந்த ரெண்டு பேர்தான்
A1,A2

இந்த ஏ2 பயபுள்ள பாஸ்இன்டிகஸ் இன மாடுகளோட கூட்டாளி அதாவது திமில் இருக்கற நாட்டுரக மாடுகள்.

 சிவனும் சக்தியும் சேந்தா மாஸுடா அப்படீனு பாட்டுபாடுற அளவுக்கு கூட்டாளிங்க.

வேற எந்த மாட்டுகிட்டையும் இந்த ஏ2
பய வரமாட்டான்.

 இந்த ஏ 1 பயபுள்ள விருந்தாளிக்கு பொறந்தபய. 

 பாஸ்டாரஸ் அப்படீன்ற இனமாடுகளிடம் மட்டுமே உற்பத்தி ஆவான் அதாவது திமில் இல்லாத கலப்பின மாடுகள். (ஹைப்ரீட்)

இந்த ஏ1 பால குடிச்சா அது 
ஜீரணம் ஆகும்போது #BCM_7 (beta-caso-morpin 7) ஆக மாற்றமடைந்து நீரழிவு,ஆட்டிசம் ,நரம்புதளர்ச்சி போன்ற வியாதிகளை உருவாக்குவதாகவும்

ஏ2 பாலை குடிச்சா அது ஜீரணமாகி உடலுக்கு நல்லது சொய்றதாகவும்

கண்டுபிடிச்சு சொன்னாரு பாப் எலியாட்
அப்படீன்ற மகராசன்.

இவரு ஆக்லாந்து பல்கலைக்கழகத்துல 1990 வது வருசம் குழந்தைகளுக்கான மருத்துவ பிரிவை சேர்ந்த பேராசிரியர்.

அந்த வெண்ண என்ன கண்டுபிடிக்கிறதுனு
அதுல உள்ளத தோண்டுனோம்னா

வேற பதில் வருது 😁😁😁 அது என்ன

பாலில் 209 வகையான அமினோ அமிலங்கள் இருக்குது

அதுல 67வது இடத்தில் Proline அப்படீன்ற அமிலம் அதிகமா இருந்தா அது ஏ2 பால்

அதே 67 வது இடத்தில் Histidine அப்படீன்ற அமினோ அமிலம் அதிகமா இருந்தா அது ஏ1 பால்

இவ்வளவு தான் வித்தியாசம் இந்த ரெண்டு பாலுக்கும்😉😉

நா மேல சொன்ன 209 அமினோ அமிலத்துல இந்த ரெண்டும் இருக்கும் ஆனா இடம் மாறி இருக்கும் அல்லது அளவு மாறி இருக்கும்.

இதுல மரபனு மாற்று தொழில்நுட்பம் முலம் இந்த அளவை மாற்றியும் அமைக்கலாம் அந்த இடத்தையும் மாற்றி அமைக்கலாம்😁😁😁

நிலமை இப்படி இருக்கும் போது ஏ1 பால் கெட்டது ஏ2 பால் நல்லது அப்படீன்றதெல்லாம் ஹீரோ வில்லன் பார்முலாதான் அதாவது ஒன்ன விட இன்னொன்னு சிறந்தது அப்படீன்ற எண்ணவிதைத்தல் 😤

எதுக்கு இந்த விதைத்தல் 
எல்லாம் வணிக வெறிதான்😅😅

அதென்ன வெறி சொறி🤗

அடுத்த பதில் பாக்கலாம்😁😁

அதுலையும் முழுசா எழுதமுடியாது பல பாகங்கள் வரும்னு நெனைக்கேன்😁

ஆஸ்திரேலியா நியூஸ்லாந்துல ஆரம்பிச்சு ஆப்ரிக்கா வரைக்கும் போகுது மக்களே தேடல் 😁😁 இதுல இந்தியா லிஸ்டலயே இல்ல

அதாவது கடல்லயே இல்லையாம்😁😁

             




#A1__A2__milk

#பித்தலாட்டங்கள்__பாகம்__2

இந்த ரெண்டு வகை பாலில் எது நல்லதுனு இன்னைக்கு நேத்து இல்ல
1980லயே பிரச்சினை ஆரம்பிச்சிருச்சு

அப்போதிருந்தே இந்த ரெண்டு வகை பாலை பற்றியும் ஆராய்ச்சி நடந்திட்டே இருக்கு

ஒன்னுமேல ஒன்னு பழிபோட்டு பணம் பண்ணதான்😁

1994ல் இந்த ஏ2 பால் உற்பத்தி முறைய
நியூசிலாந்து டெய்ரி போர்ட் அப்படீன்ற கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனம் காப்புரிமை சட்டத்தின் படி பதிவு சொஞ்சுட்டு (New Zealand patent application 295774)

அதாவது எமன் எறுமைல ஏற ஆரம்பிச்ச வருடம் அங்க இருந்து உலகம் முழுக்க வலம் வந்த கதையதான் இனி பாக்க போறோம்🤗🤗

நியூசிலாந்து கூட்டுறவு பால் உற்பத்தி
நிறுவனத்தில் Howard patterson அப்படீன்ற ஒரு பெரிய மனுசனும் இருந்தாப்ல அவரோட வியாபார புத்தி
ஏ2 பால் வணிகம் அது சம்பந்தமான காப்புரிமை அப்படி இப்படீனு அவரு ஆசைய கெளப்பி விட்டுச்சு🙄🙄

அதனால மனுசன் தூங்காம தவிச்சுபோய் 1994 அதே வருசத்துலயே
நியூசிலாந்து டெய்ரி போர்ட் நிறுவனத்தோட காப்புரிமைய விலைக்கு வாங்கிட்டாப்ல😁

அதுக்கு அப்புறமா ஏ2 பால் வணிகத்த வச்சு எல்லார் பணத்தையும் அள்ள நினைச்சு 2001வது வருசம் ஏ2 கார்பரேஷன் அப்படீன்ற நிறுவனத்த ஆரம்பிக்காரு அதோட விடாம

2012 ல உலகம் முழுவதும் ஏ2பால் உற்பத்தி முறை மற்றும் அதுசார்ந்த உட்பொருள் தயாரிப்பு முறை அதோட வணிகம்,ட்ரேட் மார்க் இப்படி கெடைச்சதுக்கெல்லாம் காப்புரிமை வாங்கிட்டாரு ஏ2 நிறுவனத்தோட பேருல

காப்புரிமைக்கே அப்பனா இருப்பான் போல காட்டுப்பய😁😁

1994 ல் நியூசிலாந்து டெய்ரி போர்ட் காப்புரிமை வாங்குனதுல இருந்தே இந்த ஏ1 பால பற்றி பல்வேறு ஆராய்ச்சி நடத்த ஏ2 கார்ப்ரேஷன் நிறைய செலவு செஞ்சிருக்கு

ஆனா அம்புட்டு ஆராய்ச்சி பண்ணியும்
ஏ1 வகை பால் தீங்கானதுனு சந்தேகத்துக்கு இடமில்லாம நிரூபிக்க ஒரு ஆதாரம் கூட அவிங்க கம்பெனிகிட்ட
இல்ல 🙄

சரியான கேக்ரான்மேக்ரான் கம்பெனி போல😁😁

அதே நேரம் எதிர் பக்கமும் ஆராய்ச்சி பண்ண களத்துல அஞ்சாரு ஆராய்ச்சி மருத்துவர்கள் களத்துல குதிச்சாங்க அவிங்க பேர்லாம் வாய்ல நுழைய மாட்டேங்குது முடிஞ்சா வாசிச்சு பாருங்க😁

Ivano De Noni, Richard J. FitzGerald, Hannu J. T. Korhonen, Yves Le Roux, Chris T.Livesey, Inga Thorsdottir, 

இவிங்கதான் அந்த டீமு இவிங்க ஆராய்ச்சி முடிவு என்னனா

அதெ எதுக்கு உருட்டிகிட்டு அப்படியே கவுத்த வேண்டியதான அப்படீன்ற கததான்

ஏ1 பால் தீங்கானது இல்ல 😁😁
அதுசம்பந்தமா அவிங்க டீமு சொல்றது பொய்யிங்கோ அப்படீனாங்க😁

இந்த ஆய்வு.The A2 milk case: a critical review AS Truswell - என்ற தலைப்பில் Nature குழுமத்தின் European Journal of Clinical Nutrition (2005) என்ற ஏட்டில் வெளியானது.  

அதன்பிறகு, ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு நிறுவனமான EFSA என்ற அமைப்பு 2009 ல் Ivano De Noni, Richard J. FitzGerald, Hannu J. T. Korhonen, Yves Le Roux, Chris T.Livesey, Inga Thorsdottir, Daniel Tome, Renger Witkamp 

ஆகிய அறிவியல் அறிஞர்களைக் கொண்டு ஏ1, ஏ2 பற்றி ஒரு விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டது.

அதோட முடிவும் இது கததான் பழையபடி பல்லகாட்டிட்டு😁😁

ஆனா நீங்க என்னவேணா சொல்லுங்கடா உங்க பாலு கெட்டதுதான்னு ஏ2 கார்ப்ரேஷன் தன்னோட வேலைய தொடர்ந்து செஞ்சிட்டு இருந்துச்சு😁😁

கவுண்டமணி செவுடன் காதுல கத்துன மாதிரி அட நாசமா போன பாலுதானுங்க அப்படீனு ஊர ஏமாத்தினு திரிஞ்சாய்ங்க
😁😁

மோசடியான அறிவியல் கருத்தை அடிப்படையாக வைத்து, தனது வணிகக் கொள்ளையை உயர்த்த துடித்த A2 Corporation நிறுவனம் பல நாடுகளிலும் தனது முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

நியூசிலாந்தில் Fonterra Co-operative Group Limited என்ற கூட்டுறவு நிறுவனம் இருக்கிறது. அந்த நாட்டின் ஒட்டு மொத்த பால் உற்பத்தியாளர்களும் இணைந்த கூட்டுறவு நிறுவனம்அது. 

நியூசிலாந்தின் பால் வணிகம் அந்நிறுவனத்தின் கையில்தான் உள்ளது. நியூசிலாந்தின் பால் வணிகத்தை கைப்பற்றத் துடித்த A2 Corporation நிறுவனம், தனது ஏ 2 பால் என்ற பால் பொருளை ஒரு மருந்துப்பொருள் என்றி பிரிவில் பதிவுசெய்தது.

 பிறகு, Fonterra Co-operative Group Limited மீது 2001 ல் நியூசிலாந்து உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்தது.

அதாவது எதிரியோட ஆயுதத்தை பலவீனபடுத்தவும் தன்னோட ஆயுதத்தை வலிமை படுத்தவும் முயற்சி பண்ணாங்க
செங்கிஸ்கான் மாதிரி😁😁

ஆனா அந்த வழக்குல தீர்ப்பு ரிவர்ஸ்ல வந்துட்டு 😁😁

ஏலேய் செத்தசெவரு ஒரு சரியான ஆதாரத்தையும் நிரூபிக்காம இங்க எதுக்குலே கேஸ்குடுத்த அப்படீனு ஏ2 கார்ப்ரேஷன் கம்பெனிய ஜட்ஜ் ஐயா அடிச்சு தொரத்தி விட்டாரு😁😁

அதன் பிறகு ஆஸ்திரேலியாவின் பால் வணிகத்தைக் கைப்பற்ற Denniston என்ற குழுவுடன் ஒப்பந்தம் போட்டு, அங்கும் தனது ஏ2 பால் என்ற மோசடி அறிவியல் கருத்தை பரப்பத் தொடங்கியது. 

ஆஸ்திரேலியா ஜட்ஜ் ரொம்ப கேவகாரரு போல 50,000டாலர் அபராதமும் போட்டு
ஆஸ்திரேலியா நாட்ல ஏ2 கார்ப்ரேஷன் கம்பெனி லைசென்ஸையும் புடிங்கினு விட்டாரு😁😁

ஆக ஏ2 கார்ப்ரேஷன் மைன்ட் வாய்ஸ்
சோத்துலையும் அடிவாங்கியாச்சு சேத்துலையும் அடிவாங்கியாச்சு😁😁

ஆனா நரிய அடிச்சு விட்டா திருந்துமா திருந்தாது

அதன்பிறகு, ஆஸ்திரேலிய உணவுப் பாதுகாப்பு அமைப்புகளுடன் சுமுகப் போக்கை மேற்கொண்டு, பேச்சுவார்த்தைகளை நடத்தியது. A2Australia என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கி, உலகம் முழுதும் கிளை பரப்பியுள்ள Fraser & Neave என்ற நிறுவனத்துடன் இணைந்து தற்போது ஆஸ்திரேலியாவின் பால் வணிகத்தை முழுவதும் ஆக்கிரமித்துவிட்டது.

2003 ல் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தொடங்கிய ஏ2 பால் வணிகம், 2015 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் மட்டும் 3000 கோடி யூரோ அளவுக்கு வணிகம் நடத்தும் மிகப் பெரிய நிறுவனம் என்ற அளவுக்கு வளர்ந்துள்ளது.

அடுத்து நாம இங்கிலாந்து அமெரிக்கா சீனா அப்படீனு போகபோறோம்😁😁

#A1___A2__milk

#பித்தலாட்டங்கள்__பாகம்__3

2003-லிருந்து அமெரிக்காவில் #Ideasphere__Incorporated அப்படீன்ற நிறுவனத்துடனும்

 2005 லிருந்து Twinlab என்ற நிறுவனத்துடனும் இணைத்து அமெரிக்காவின் பால் வணிகத்தைத் தன் கட்டுக்குள் கொண்டுவந்தது ஏ2 கார்ப்ரேஷன்

2011 நவம்பரில் இங்கிலாந்து நாட்டின் மிகப்பெரும் தொழில் நிறுவனமான #Muller__Wiseman__Dairies உடன் ஒப்பந்தம் செய்து இங்கிலாந்தில் பால்வணிகத்தையும் கைப்பற்றியது. 

தற்போது 2014 ல் சீனாவிலும் கால்பதித்துள்ளது. 
#Tmall__Global_and__JD__Worldwide என்ற நிறுவனங்களுடன் இணைந்து சீனாவின் பால் வணிகத்தையும் தன்வசப்படுத்தியுள்ளது

அடுத்த டார்க்கெட்டா தான் இந்தியா பக்கம் எட்டி பாக்காப்ல ஏ2 கார்ப்ரேஷன்
அதுக்கு நம்மாளுங்களும் தயாராகிட்டாங்க அதான் உங்களால பால் இல்லாம இருக்க முடியாதுல்ல😁😁

அதன் விளைவாக தான் நாட்டுமாட்டு பாலை பற்றிய விழிப்புணர்வு சமீபத்தில் அதிகரித்திருக்கிறது 

இப்போ மெரினாவுல கூவுனவங்க எல்லாரும் கைய தூங்குங்க 😁😁

எப்பா இந்த ஏ2 அப்படீனா நாட்டுமாட்டு பால் நியாபகம் வச்சுக்கோங்க 

இந்தியாவின் 2016 - 17 வரவு செலவு அறிக்கையில் இந்த நாட்டுப்பசு மாடுகளை மேம்படுத்த 850 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் வட பகுதியில் உள்ள கிர், காங்கிரேஜ், தார்பார்க்கர், சிந்து, சாஹிவால், தமிழ்நாட்டு இனமான காங்கேயம், பர்கூர் போன்ற கலப்பினமாக மாற்றப்படாத எந்த மாட்டில் இருந்தும் ஒரு லிட்டர் பால் கறந்தாலும் A 2 Milk Corporation நிறுவனத்துக்கு இராயல்டி கட்டப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

ஆக, இந்தியா ஒரு வேட்டைக்காடு என்பதை இந்த இடத்தில் நினைவுபடுத்த விழைகிறேன்😁😁

இந்தியாவின் நாட்டுப்பசு மாட்டிலிருந்து மட்டும்தான் இந்த ஏ 2 பால் கிடைக்கிறது. வெளிநாட்டு மாடுகளுக்கு வியர்வைச் சுரப்பிகளே கிடையாது. எனவே அவற்றின் வியர்வையும் பாலின் வழியாகத் தான் வரும். அந்த மாடுகளின் பால் சர்க்கரை நோயை உருவாக்கும். எனவே இந்திய நாட்டு மாடுகளை அந்நிய நாடுகளுக்குக் கொண்டு செல்வதற்காக ஜல்லிக்கட்டைத் தடுக்கிறார்கள்.”

என்று அரைகுறையாகத் தகவல்களைத் தெரிந்து கொண்டு ஆளாளுக்கு அறிவியலாளர்கள் போலக் கருத்துக்களைப் பரப்பி வருகிறார்கள்.😁😁

வாங்கடா முகநூல் போராளிகளா 
இதுல பின்னனி இசை வேற
தமிழன்னா என்றாலே சொன்னாலே திமிரேறும்னு 😁😁😁

இந்திய நாட்டுப் பசு மாடுகளிடம் மட்டுமே ஏ 2 பால் கிடைக்கும் என்பது தவறான தகவல் என்பதை - 

ஏ 2 பால் என்பதை வணிகமயப்படுத்திய - உலகமயப்படுத்திய A2 Milk Corporation நிறுவனமே உறுதி செய்து விட்டது

இந்த A 2 Milk Corporation தனது பால் உற்பத்தித் திட்டங்களுக்கு எந்த வெளிநாட்டு மாடு களையும் பயன்படுத்துவதில்லை. 

ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்டு அந்த நாட்டுக்கு உள் நாட்டு மாடுகளான Holstein மாடுகளைத்தான் நம்பி இருக்கிறார்கள். இந்தியாவிலும் ஏராளமாகக் கிடைக்கும் இந்த Holstein தான் ஏ 2 பாலைத் தருகிறது என A2 Milk Corporation நிறுவனமே அறிவித்துவிட்டது. 

அந்நிறுவனத்தின் அனைத்துப் பண்ணைகளிலும் ஆயிரக்கணக்கான ஐரோப்பிய மேய்ச்சல் நிலங்களிலும் மேய்ந்து கொண்டிருப்பவை இந்த Holstein தான். இது தொடர்பான தகவல்கள் ஏ2 நிறுவனத்தின் இணையதளங்களிலும், சர்வதேச அளவிலான அறிவியல் ஆய்வு 
முடிவுகள் அவிங்க வெப்சைட்லயே கெடைக்குது குடுகுடுனு ஓடிபோய் கூகிள்ள தேடுனீங்கனா நல்லா தெரியும்😁😁

இந்தியாவில் ஜெர்சி, ஹோல்ஸ்டியன் ஆகிய ஐரோப்பியப் பசுக்கள் ஏ 2 பாலைத் தராது எனத் தவறான பிரச்சாரம் நடைபெறுகிறது. இதையும் Nature என்ற சர்வதேச அறிவியல் இதழ் மறுத்துள்ளது.

 இந்தியாவின் கிர், சாஹிவால், தார்பார்க்கர், காங்கேயம் மட்டுமல்ல. ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள அனைத்து மாடுகளும் ஏ 2 வகைப் பாலைத் தான் தருகின்றன. ஆசியக் கண்டத்திலுள்ள எல்லா நாடுகளிலும் உள்ள அனைத்து வகை மாடுகளும் ஏ 2 பாலைத் தான் வழங்குகின்றன. 

குறிப்பாக, ஃப்ரான்சில் உள்ள Limousin, Charolasis, இங்கிலாந்தில் உள்ள Jersey, Guernsey, Alderney போன்ற மாட்டினங்களும் ஏ 2 பாலைத் தான் வழங்குகின்றன. 2005 ஆம் ஆண்டிலேயே இக்கருத்து வெளியிடப்பட்ட போதிலும் இங்க இருக்குற முகநூல் போராளிகளும்
டுபாக்கூர் யூடிப்பர்ஸூம் இதைக் கண்டுகொள்ளவே இல்லை.

ஏ2 பால் தான் நல்லதுனு இந்தியாவில் தவறான கருத்தை உருவாக்கியுள்ளனர்.

மாட்டுபாலே மனிதனுக்கானது இல்லை 
அதெப்படினு கடைசி பதிவா அடுத்த பதிவுல பாக்கலாம்😁

            
#A1__A2__milk

#பித்தலாட்டங்கள்__பாகம்_4

ஒட்டுமொத்த மாட்டுப்பாலே மனிதனுக்கு கேடானது அப்படீனு ஆய்வுகள் நிறைய சொல்லிருச்சு

சுவீடனில் உள்ள உப்சலா பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் Susanna C. Larsson, Alessio Crippa,Nicola Orsini, Alicja Wolk Karl Michaëlsson ஆகியோர் இணைந்த குழுவினர், 

கடந்த 20 ஆண்டுகளாக பால் குடிப்பவர்கள் - பாலையே பயன்படுத்தாதவர்கள் என சுமார் 1 இலட்சம் மக்களிடம் ஆய்வு மேற்கொண்டு முடிவினை வெளியிட்டுள்ளனர்.

 “Milk Consumption and Mortality from All Causes, Cardiovascular Disease, and Cancer: A Systematic Review and Meta-Analysis” என்ற தலைப்பில் சுவிட்சர்லாந்திலிருந்து வெளி வரும் உலகப்புகழ் பெற்ற அறிவியல் ஏடான ‘Nutrients’ இந்த ஆய்வை வெளியிட்டுள்ளது.

“தினமும் இரண்டு டம்ளருக்கும் அதிகமாக, அதாவது அரை லிட்டர் அல்லது அதற்கு அதிகமாக பால் குடிப்பவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு சீக்கிரமே உயிரிழப்பது தெரியவந்தது. பாலில் கலந்திருக்கும் 'லக்டோஸ் மற்றும் கிளாக்டோஸ்' என்ற பொருட்கள் (சர்க்கரை தன்மை) காரணமாக, பல்வேறு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது. குறைவாக பால் குடிப்பவர்களை விட அதிகமாக பால் குடிப்பவர்கள் விரைவாக உயிரிழப்பது உறுதி”

பால்குடிச்சா ஆஸ்பத்திரி செலவு குறையும்னு சொல்றதெல்லாம்
அக்ஷயதிரிதியில் நகை வாங்குனா வீட்ல
செல்வம் பெருகும்னு சொல்ற கதைதான்

ஆனா யார்வீட்ல நகைகடகாரன் வீட்லதான்
அந்த மாதிரி நீங்க பால்குடிச்சா
உங்க ஏரியாவ சுத்தி இருக்குற டாக்டர்கள் வசதியா இருப்பாங்க

எல்லத்துக்கும் மேல தாய்பாலுக்கு ஓரளவு இணையான பால் ஆட்டுப்பால் மட்டுமே ஏ2,பீட்டாகெஸின் புரதம் ,செலினியம் இப்படி பல சத்துக்களில் தாய்பாலும் ஆட்டுப்பாலும் ஒற்றுப்போகிறது

வயிற்றில் அலர்ஜியை ஏற்படுத்தும்
ஆல்பா எஸ் 1 அப்படீன்ற கெஸின் புரதம்
மாட்டுப்பாலில் அதிகம் இருக்கு
ஆனா தாய்ப்பால் மற்றும் ஆட்டுப்பாலில்
ஆல்பா எஸ் 2 கெசின் புரதம் இருப்பதால் இந்தமாதிரி அலர்ஜி தவிர்க்கபடுகிறது

பாலில் உள்ள லாக்டோஸ் என்னும் சர்க்கரையைச் செரிப்பதற்கு லாக்டேஸ் என்னும் நொதி மிகவும் இன்றியமையாதது. இந்த லாக்டேஸ் அளவு மிகக் குறைவாகவோ அல்லது முற்றிலுமாக இல்லாமல் இருப்பவர்கள் பாலைச் செரிக்க முடியாமல் லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாமையால் (lactose intolerant) அவதிப்படுகின்றனர்

உடனே முகநூல் போராளிகள் ஒரு கேள்வி கேப்பாங்க அதாவது நாட்டுமாடு இருந்தாதான விவசாயம் செய்யமுடியும்னு

அடுத்த பதிவு உங்களுக்கு தான்
உங்களை சுற்றி உள்ள சிலந்திவலையை பற்றி தெரியாமல் முகநூலில் கிடைத்தை பகிர்ந்துகொண்டு எதற்கு ஏந்துகிறோம்னு தெரியாம கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஆதரவாக இன்னொரு கார்ப்ரேட்டை எதிர்த்து கையில் வாசகத்தை ஏந்தி போராடிய மாவீரர்களே
அடுத்த பதிவு உங்களுக்காகவே தான்

நீங்கள் அத்தியாவசியமென போராடிய நாட்டுமாட்டை ஏ2கார்ப்பரேஷன் நிறுவனம் தானே கட்டுபாட்டில் வைத்திருக்கிறது

எதையும் முழுமையாக ஆராயாமல் களத்துல இறங்குனா இப்படிதான்

                   
#A1__A2__milk
#பித்தலாட்டங்கள்__பாகம்_5

செயற்கை உரங்களுக்கு மாற்றாக இயற்கை விவசாயத்தைத் திறம்பட நடத்த இயற்கை உரம் தேவை. அதற்கு நாட்டுப்பசுக்கள் தேவை என்ற ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது. நாட்டு எருமையிலும் அதே தரமான எரு கிடைக்கிறது.

நாட்டுப்பசுக்களின் எருவைவிட ஆட்டுஎரு, பன்றி எரு, கோழி எரு ஆகியவை மிகச்சிறந்த இயற்கை உரங்கள். இவை எல்லாவற்றையும் விட மனிதக் கழிவு மிகச்சிறந்த எருவாகும். ஆடு, மாடு, கோழி, பன்றி எருக்கள் எவையாக இருந்தாலும், அவை தாவரங்களில் உடனடியாக மாற்றத்தைக் கொடுக்காது. மனிதக்கழிவு மட்டுமே பயிர்களுக்கு உடனடி ஊட்டம் கொடுக்கக் கூடியது.

கி.பி. 1880 களில் இங்கிலாந்து ராணி இந்திய விவசாயமுறை பற்றி அறிந்து அறிக்கை கொடுக்குமாறு ஒருவரை அனுப்பிவைத்தார். அவர் பெயர் ஜான் அகஸ்டன் வால்கர். அவர் ஓராண்டு இந்தியா முழுவதும் சுற்றி அலைந்து, ஆராய்ந்து ஒரு அறிக்கை கொடுத்தார். இந்திய விவசாய முறையின் பெருமைகளைப் பேசும் அந்த அறிக்கை முக்கியமாகச் சொன்னது இது.

“பயிர் சாகுபடியைப் பொறுத்தவரை ஒரே ஒரு குறைபாட்டைத்தான் பார்க்கிறேன். மனித மலத்தை எருவாகப் பயன்படுத்துவது இந்தியாவில் காண முடியவில்லை. அதற்குக் காரணம் உள்ளது. நிலம் மேல் ஜாதிக்காரனிடம் இருக்கிறது. கீழ்ஜாதிக்காரர்கள் தங்கள் நிலத்தில் மலம் கழிக்க மேல்ஜாதிக்காரர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அதனாலேயே மனித மலம் இன்னும் எருவாகப் பயன்படவில்லை.” என்கிறார்.

இன்று செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனங்கள் ஏராளமாக வந்துவிட்டன. வத்துக் கறவைப் பசு மாடுகளை வளர்த்து, நட்டப்பட வேண்டியதில்லை. ஒரு ஏக்கருக்கு ஒரு டேங்க் என தாராளமாகக் கொட்டலாம். அதுபற்றி இயற்கைக் காவலர்கள் யோசிப்பதே இல்லை.

பார்ப்பன வந்தனா சிவாவின் ‘நவதான்யா’, நம்மாழ்வாரின் ‘வானகம்’, சுற்றுச்சூழலுக்காக இயங்கும் ‘பூவுலகின் நண்பர்கள்’ உட்பட இந்த நாட்டில் இயற்கை விவசயாம், இயற்கை உரம் பற்றிப் பேசுபவர்கள் ஏராளமாக உள்ளனர். 

பார்ப்பன ‘பசுமை விகடன்’ உட்பட ஏராளமான ஏடுகள் உள்ளன. எந்த நிறுவனமும், எந்த ஏடும், எந்த இயற்கை ஆர்வலரும், பயிர்களுக்கு உடனடிப்பலனைக் கொடுக்கக்கூடிய இயற்கை எருவான, மனித மலத்தைப் பயன்படுத்துவது பற்றிப் பேசுவதுகூடக் கிடையாது.

எல்லாத்துக்கும் மேல நாங்க தினமும் பால்குடிப்போம்னு நீங்க தலைகீழா நிற்கும் வரை உங்கள் கண்ணைகட்டி கையில் போர்டை குடுத்து போராட வைப்பார்கள் அவர்களுக்கு ஆதரவாகவே

பால் எப்படி அன்றாட தேவையாக மாறியது ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இல்லால பழக்கம் இப்போது மட்டும் ஏன்வந்தது யோசித்ததுண்டா

அடுத்தவரை நகலெடுக்கும் மனிதனின் அற்ப குணத்தினால் மட்டுமே
ஆம் அவன் குடிக்கான் நானும் குடிக்கேன்
அப்போது தான் என்னை உயர்வாக எண்ணுவான் என்ற மோசமான மனபாங்கு 

காக்கா முட்டைனு ஒரு படம் அதுல சிம்பு சாப்டுறாருன அந்த பீட்சாவ வாங்க இரண்டு சிறுவர்கள் படாதபாடு படுவார்கள்
அதே உளவியல் தாக்கம்தான் அனைவரிடமும் உள்ளது அவன் தின்றான் நானும் தின்றேன் அவன் அவன் அவன் இப்படி எல்லாவற்றிர்க்கும் காரணம் கேட்டால் உங்கள் ஆழ்மனது அடுத்தவரை தான் கைகாட்டும் 

இப்படி மேல்தட்டு ஆட்களை நகலெடுத்து
வாழ்பவர்களே வணிககொள்ளையர்களின் இரை

இயல்பை உணர்ந்து உங்கள் தேவைய அறிய முற்படுங்கள் 

      நன்றி - துரியன்🙏