Thursday 17 December 2015

அஷ்டகர்ம மூலிகைகள் அறுபத்தி நான்கு

அஷ்டகர்ம மூலிகைகள் அறுபத்தி நான்கு!

பண்டைய காலத்தில் வாழ்ந்து பல அற்புதங்களை செய்த நம் தமிழக சித்தர்கள் மூலிகைகளை கொண்டே மந்திர உருவேற்றி பல காரியங்களில் வெற்றியடைந்தனர். அதன்படி அவர்கள் பயன்படுத்திய மூலிகைகள் அஷ்டகர்மங்கள் ( எட்டு சித்திகள் ) செய்ய ஒரு சித்திக்கு 8 மூலிகை என அஷ்ட சித்திக்கு 64 மூலிகைகள் ஆகும். அஷ்டகர்ம்ம் என்பது 1. ஆகர்ஷனம், 2. உச்சாடனம், 3. தம்பனம், 4. பேதனம், 5. மாரணம், 6. மோகனம், 7. வசியம, 8. வித்வேஷனம் ஆகும். இந்த அஷ்ட கர்ம செயல்களை பற்றி விரிவாக காணலாம்.
1. ஆகர்ஷனம் : நமக்கு தேவையானதை இருக்கும் இடத்திலிருந்து நாம் இருக்கும் இடத்திற்கே வரவழைக்கும் வித்தையாகும். இதற்கு உதவும் மூலிகைகள் 1. வேளை, 2. உள்ளொட்டி, 3. புறவொட்டி, 4.சிறு முன்னை, 5. குப்பைமேனி, 6. அழுகண்ணி, 7. சிறியாநங்கை, 8. எருக்கு என எட்டு மூலிகைகளாகும். இதில்
மிருகங்களை அழைப்பதற்கு - வேளை, குப்பைமேனி.
பெண்களை அழப்பதற்கு - உள்ளொட்டி, அழுகண்ணி.
அரசர், பிரபுக்ளை அழைப்பதற்கு - சிறுமுன்னை.
துர்தேவதைகளை அழைப்பதற்கு - புறவொட்டி.
தேவதைகளை அழைப்பதற்கு - எருக்கு.
அனைத்து அழைப்பிற்கும் - சிறியாநங்கை.
2. உச்சாடனம் : பேய், பிசாசு, கெட்ட ஆவிகள், நோய்கள் தீமைகளை விரட்டியடித்தல். இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. பேய் மிரட்டி, 2. மான் செவிகள்ளி, 3. தேள்கொடுக்கி, 4. கொட்டைகரந்தை, 5. வெள்ளை கண்டங்கத்திரி, 6. மருதோன்றி, 7. பிரமதண்டு, 8. புல்லுருவி ஆகும். இதில்
மிருகங்களை விரட்ட - பேய்மிரட்டி.
எதிரிகளை விரட்ட - மான்செவிகள்ளி.
உடலில் ஏறிய விஷங்களை விரட்ட - தேள்கொடுக்கி.
நீர்வாழ் உயிரனங்களை விரட்ட - கொட்டைகரந்தை.
கால்நடைகளை விரட்ட - வெள்ளை கண்டங்கத்தரி.
பூத பைசாசங்களை விரட்ட - மருதோன்றி, புல்லுருவி
பிறர் நமக்கு செய்யும் தீமகளை விரட்ட - பிரமதண்டு.
3. பேதனம் : ஒன்றை மற்றொன்றாக மாற்றுதல், அதாவது ஒரு விஷயத்தை நினைத்து நம்மிடம் வருபவரை அந்த நினைப்பை வேறுபட்டு போகும்படி செய்தல். இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. வட்டதுத்தி, 2. செம்பசளை, 3. மாவிலங்கு, 4. பாதிரி, 5. கோழியாவரை, 6. சீந்தில்கொடி, 7. புடலங்கொடி, 8. ஆகாயதாமரை ஆகும்.
நெருப்பின் உக்கிரத்தை பேதிக்க - வட்டதுத்தி,
மனிதனின் எண்ணத்தை பேதிக்க - செம்பசளை,
பூத, பிசாசுகளை பேதிக்க - மாவிலங்கு, பாதிரி,
துர்தேவதைகளை பேதிக்க - கோழியாவரை,
எதிரிகளை பேதிக்க - சீந்தில்கொடி,
பெண்களை பேதிக்க - புடலங்கொடி,
வியாதிகளை பேதிக்க - ஆகாயதாமரை.

4. மாரணம் : கொல்வது அல்லது மாற்றுவது. உலோகங்களை அதன் தன்மையில் இருந்து மாற்றுவது. எதிரிகளுக்கு நோயை உண்டாக்கி கொல்வது. இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. நச்சுப்புல், 2. நிர்விஷம், 3. சித்திரமூலம், 4. அம்மன் பச்சரிசி, 5. கார்த்திகை கிழங்கு, 6. மருதோன்றி, 7. கருஞ்சூரி, 8. நாவி ஆகும்.
மனிதர்களை மாரணம் செய்ய - நச்சுப்புல், நிர்விஷம்,
வியாதிகளை மாரணம் செய்ய - சித்திரமூலம், கருஞ்சூரை,
கண்ணாடிகளை மாற்ற - அம்மன் பச்சரிசி,
மிருகங்களை மாரணம் செய்ய - மருதோன்றி, கார்திகை கிழங்கு.
5. மோகனம் : பிறரை நம்மிடம் மயங்கி இருக்க செய்வது. இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. பொன்னூமத்தை, 2. கஞ்சா வேர், 3. வெண்ணூமத்தை, 4. கோரைக்கிழங்கு, 5. மருளூமத்தை, 6. ஆலமர விழுது, 7. நன்னாரி, 8. கிராம்பு ஆகும்.
பெண்களை மோகிக்க - பொன்னூமத்தை,
பொதுமக்களை மோகிக்க - கஞ்சா வேர்,
உலகத்தை மோகிக்க - வெண்ணூமத்தை,
விலங்குகளை மோகிக்க - கோரைக்கிழங்கு,
தேவதைகளை மோகிக்க - மருளூமத்தை,
அரசர்களை மோகிக்க - ஆலம்விழுது,
மனிதர்களை மோகிக்க - கிராம்பு,
எல்லாவற்றையும் மோகிக்க - நன்னாரி.
6. வசியம் : எல்லாவற்றையும் நம்மிடம் விருப்பமாகவும் இஷ்டமாயும் இருக்க வைத்தல். இதற்கு பயன்படு்ம் மூலிகைகள் 1. சீதேவிச் செங்கழுநீர், 2. நிலவூமத்தை, 3. வெள்ளை விஷ்ணுகிரந்தி, 4. கருஞ்செம்பை, 5. வெள்ளை குன்றி மணி, 6. பொன்ணாங்கன்னி, 7. செந்நாயுருவி, 8. வெள்ளெருக்கு ஆகும்.
இராஜ வசியத்திற்கு - சீதேவி செங்கழுநீர்,
பெண் வசியத்திற்கு - நிலவூமத்தை,
லோக வசியத்திற்கு - வெள்ளெருக்கு,
ஜன வசியத்திற்கு - கருஞ்செம்பை, விஷ்ணுகிராந்தி,
விலங்கு வசியத்திற்கு - வெள்ளை குன்றி மணி,
தேவ வசியத்திற்கு - பொன்ணாங்கன்னி,
சாபம், வழக்குகள் வசியத்திற்கு - செந்நாயுருவி.
7. வித்துவேஷனம் : பகையை உண்டாக்குதல். இதற்கு பயன்படும் மூலிகைகள். 1. கருங்காக்கனம், 2. வெள்ளை காக்கனம், 3. திருகு கள்ளி, 4. ஆடுதின்னாபாளை, 5. பூனைக்காலி, 6. கீழாநெல்லி, 7. ஏறண்டம், 8. சிற்றாமணக்கு ஆகும்.
அரசர்களுக்குள் பகை உண்டாக்க - கருங்காக்கணம்,
தேவர்களுக்கு - வெள்ளைக்காக்கணம், திருகுகள்ளி,
பூத, பைசாசங்களுக்கு - ஆடுதின்னாபாளை,
பெண்களுக்கு நோய் உண்டாக்க - பூனைக்காலி,
எதிரிகளால் உண்டாகும் ஆபத்தை தடுக்க - கீழாநெல்லி,
உணவை உண்ணாமல் செய்ய - சிற்றாமணக்கு.
8. தம்பனம் : தடுத்து நிறுத்துத்தல், விலங்குகளின் வாயை கட்டுதல். இதற்க்கு பயன்படும் மூலிகைகள் 1. கட்டுக்கொடி, 2. பால்புரண்டி, 3. பரட்டை, 4. நீர்முள்ளி, 5. நத்தைச்சூரி, 6. சத்தி சாரணை, 7. பூமிச்சர்கரை, 8. குதிரைவாலி ஆகும்.
விந்துவை கட்ட - கட்டுக்கொடி, பால்புரண்டி, நீர்முள்ளி,
தண்ணீரைக்கட்டி அதன் மேல் அமர - கட்டுக்கொடி,
பெண்களின் முலைபாலை கட்ட - பால்புரண்டி,
வயிற்றுப் போக்கை நிறுத்த - பரட்டை,
கற்களை கறைக்க - நத்தைச்சூரி,
செயல்களை செயல்படாமல் கட்ட - சத்திசாரணை,
திரவத்தை கட்டி திடமாக்க - பூமிச்சர்கரை கிழங்கு,
கருப்பையில் உள்ள கருவை கட்ட - குதிரைவாலி.

மேற்படி மூலிகைகளை உரிய நாளில் காப்பு கட்டி, சாபநிவர்த்தி மந்திரம் சொல்லி பிடுங்கி வந்து உரிய மந்திர உருவேற்றி மேற்பட்ட அஷ்டகர்ம செயல்களை செய்ய அனைத்தும் ஜெயமாகும்...

Tuesday 1 December 2015

ஆங்கில மருத்துவத்தின் சர்க்கரை வணிகம்!

ஆங்கில மருத்துவத்தின் சர்க்கரை வணிகம்!

நன்றி - ம. செந்தமிழன், தி இந்து
.

முப்பது வயதைக் கடந்தாலே, சர்க்கரை நோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று நாடெங்கும் விளம்பரம் செய்யப்படுகிறது. வீதிக்கு வீதி மருந்து நிறுவனப் படங்கள் பொறித்த குடைகளுக்குக் கீழ் நின்றுகொண்டு, சாலையில் போவோருக்கெல்லாம் ‘இலவச சர்க்கரை’ சோதனையும் செய்யப்படுகிறது. சில நூறு ரூபாய்கள் செலவழித்தால், சர்க்கரை சோதனை செய்யும் கையடக்க சாதனத்தை வீட்டிலேயே வாங்கி வைத்து தினசரி ஆகாரத்துக்கு முன்பும், பின்பும் சோதனை செய்து பார்த்துக்கொள்ளும் வசதியும் வந்துவிட்டது. தலைச்சுற்றல், மயக்கம், கை கால் நடுக்கம் போன்ற புகார்களுடன் மருத்துவர்களை அணுகினால், உடனடியாக சர்க்கரை நோய் சோதனை பரிந்துரைக்கப்படுகிறது.

ஆக, நாட்டில் சர்க்கரை நோய் தேடித் தேடிக் கண்டுபிடிக்கப்படுகிறது. நல்லது. ஒரே ஒரு கேள்விக்கு விடை கிடைக்க வேண்டும். பரிசோதனை செய்துகொள்பவர்களுக்கு ‘சர்க்கரை நோய்’ இருப்பதாகக் கண்டறியப்பட்டால், அதைக் குணப்படுத்தும் மருந்து யாரிடம் உள்ளது? அலோபதி மருத்துவத் துறைதான், நோய்களின் பிரச்சாரத்தை உலகப் போர் நடத்துவதைப் போல் நடத்திக்கொண்டிருக்கிறது. சரி, சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து அலோபதியில் இருக்கிறதா? இல்லை என்பதுதான் அலோபதி மருத்துவர்களே ஒப்புக்கொள்ள வேண்டிய விடை. அதுதான் உண்மையும் கூட.

இந்திய அரசின் மருந்து மற்றும் அழகுப் பொருள் சட்டம் 1940, 1945, 1995, தனது அட்டவணை ஜெ பிரிவில் 51 நோய்களை வகைப்படுத்தியுள்ளது. ‘இந்த நோய்களைக் குணப்படுத்த முடியும் என்றோ, தடுக்க முடியும் என்றோ, அவ்வாறான எண்ணங்களை வேறு ஏதேனும் வகையிலோ மக்களுக்கு அளிக்கக் கூடாது’ என்கிறது அச்சட்ட விதி. இந்த 51 நோய்களின் பட்டியலைப் பார்த்தால், நாட்டில் வரும் பெரும்பாலான நோய்களுக்கு அலோபதி மருந்துகளை வாங்கவே தேவையில்லை என்று புரிந்துவிடும். இந்தப் பட்டியலில் 14-வது நோயாக சர்க்கரை நோயும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் 1940 (Drugs and Cosmetics Act, 1940, "Schedule J") http://reghahealthcare.blogspot.in/2012/09/1940.html

இது இந்திய அரசின் சட்டம்தான். ஆனால், இதை நடைமுறைப்படுத்துவதற்குத்தான் இந்திய அரசின் பிரமாண்டமான கட்டமைப்பில் எவரும் இல்லை. மருத்துவம் என்பது ஒருவருக்கு என்ன நோய் இருக்கிறது என்று கண்டுபிடிப்பது மட்டுமல்ல. அந்த நோயைத் தீர்த்து, நோயாளியை முழு நலமுடைய மனிதராக வாழச் செய்ய வேண்டும். அந்தத் திறன் அலோபதிக்கு இல்லை. குறிப்பாக, சர்க்கரை நோய் விஷயத்தில். சட்டப்படியும் நடைமுறைப்படியும் மருந்து இல்லாத நிலையில், எந்த மருத்துவராவது தம்மிடம் வரும் நோயாளியிடம், ‘எங்கள் முறையில் இதற்கு மருந்து இல்லை. ஆகவே, வேறு மருத்துவ முறைகளில் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று கூறுவதுண்டா? எவரேனும் இருந்தால், அவர் நேர்மையாளர். மாறாக, ‘சர்க்கரை நோய் வந்துவிட்டால், ஆயுள் முழுக்க மாத்திரை சாப்பிட வேண்டும்’ என்று தான் கூறுகிறார்கள். சில ஆண்டுகள் தொடர்ந்து மாத்திரைகள் விழுங்கிவிட்டு, இறுதியில் இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டு, பரிதாபமான நிலையை அடைகிறார்கள் மக்கள். புண்கள் வந்தால் உறுப்புகளே நீக்கப்படுகின்றன.

உணவுப் பழக்கத்தையும், சில வாழ்க்கை முறைகளையும் மாற்றினாலே போதும், சர்க்கரை நோய் வராமல் தடுக்க முடியும். வந்தாலும் எளிதில் கட்டுப்படுத்திவிட முடியும். இந்த உண்மைகள் இப்போது மக்களின் கண்களுக்குத் தெரிந்துவிடாமல் மறைக்கப்படுகின்றன. இதற்குப் பின்னால், பெரும் வணிக நோக்கம் இருக்கிறது.

சர்க்கரை நோயை மையமாக வைத்து எவ்வளவு பொருட்கள் சந்தைக்கு வந்திருக்கின்றன என்பதைச் சற்றே உற்றுப் பாருங்கள். மருந்து மாத்திரைகளில் துவங்கி, ஊட்டச் சத்துப் பொருட்கள், உடற்பயிற்சிக் கருவிகள், செருப்புகள், இறக்குமதி செய்யப்பட்ட தானியங்கள் என எல்லாமே வணிகமயம். இவ்வளவு பொருட்களும் சேர்ந்து, சர்க்கரை நோயைத் தீர்த்தால் கூடச் சகித்துக்கொள்ளலாம். ஆனால், இவை எல்லாம் சேர்ந்து, அலோபதி மருத்துவர்கள் மொழியில் கூறுவதானால், ‘சர்க்கரையைக் கட்டுப்பாட்டில்’ வைக்கின்றன.

இந்திய அரசின் சுகாதாரத் துறைக்கென என்னதான் கொள்கை இருக்கிறது என்று புரியவில்லை. ஒருபுறம் சட்டத்தில் ‘இந்த நோய்களுக்கு அலோபதியில் குணமளிக்கும், தடுக்கும் மருந்துகள் இல்லை’ என்கிறது. மறுபுறம், அந்த நோய்களைத் தீர்க்கும் உள்நாட்டு மருத்துவ முறைகளை ஓரங்கட்டி வைக்கிறது.
.

மக்கள் நோயினால் நொந்து, சிகிச்சையினால் கடன்பட்டு, சொத்துகளை இழந்து, உறுப்புகளை இழந்து மாண்டுபோகட்டும் என்பதுதான் அதன் கொள்கையா?
.

பல கோடிகள் செலவிட்டு, நோய்கள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்யும்போது, அந்த நோய்களை எந்த மருத்துவ முறைகளில் தீர்க்க முடியும் என்பதை ஏன் அரசு கூறுவதே இல்லை? என்ற கேள்வியைக் குடிமக்கள் கேட்க வேண்டும்.

சர்க்கரை நோய்க்காக அலோபதி மருத்துவத்தைக் கடைப்பிடிக்கும் மக்கள் நடைப்பிணங்களாக மாற்றப்பட்டுவருகின்றனர். தமிழக அரசு 30+ விளம்பரங்களோடு கடமையை முடித்துக்கொண்டால், அதன் அறுவடையும் அலோபதி கருவூலங்களுக்குத்தான் சென்று சேரும். தமிழக அரசு மக்கள் நலனில் அக்கறைகொண்டு, சட்டப்படியும் மனித நேயப்படியும் மரபு மருத்துவ முறைகளை நெறிப்படுத்தி,  மக்களைக் காக்க வேண்டும்.

செந்தமிழன், இயக்குநர். சர்க்கரை நோயை மையமாக வைத்து அவர் எடுக்கும் ‘இனிப்பு’ ஆவணப்படத்தின் அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது.
.

வாசகர் கருத்து:

Acu Healer Umar Farook:

காலத்திற்கேற்ற அவசியமான கட்டுரை. ஆங்கில மருத்துவத்தில் சர்க்கரை நோய்க்கு தீர்வில்லை என்பது உலகறிந்த ஒன்று. அதை சட்ட ரீதியான ஆவணத்துடன் சுட்டிக் காட்டிய இக்கட்டுரையின் எதிர் வினைகள் சமூகத்தின் இன்றைய நிலையை வெளிச்சமாக்குகிறது. ஆங்கில மருத்துவத்திற்கு எதிராக வைக்கப்படும் கருத்து அறிவியலுக்கு எதிராக வைக்கப்படும் கருத்தாக புரிந்து கொள்ளப்படுகிறது. ஆங்கில மருத்துவம் கண்டுபிடிக்கப்பட்ட நாடுகளில் அது பற்றிய விவாதங்கள் சூடாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இங்கு விவாதம் துவங்கக்கூட இல்லை. ஒரு வரியில் கருத்து சொன்னாலே அதை சகித்துக் கொள்ளும் நிலை இங்கு இல்லை.

# சர்க்கரை நோய்க்கு மூல காரணம் இன்சுலின் சுரப்பு குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்சுலின் குறைவுக்கு என்ன காரணம் என்று கண்டுபிடிக்கப்படவில்லை. இதைத்தான் ஷெட்யூல் ஜெ சட்டம் “காரணம் கண்டுபிடிக்கப்படாத நோய்களுக்கு மருத்துவம் பார்க்க முடியாது” என்ற அடிப்படையில் குறிப்பிடுகிறது.

# சர்க்கரை நோயின் அறிகுறிகளாக இரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்வு, தலை சுற்றல், சோர்வு, பாத எரிச்சல் என்ற எண்ணற்ற விஷயங்கள் உள்ளன. இந்த அறிகுறிகளில் ஒன்றை மட்டும் சரி செய்தால் மற்றவை சரியாகுமா? பாத எரிச்சலை மட்டும் சரிசெய்வது சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது ஆகாது. அதைப் போலத்தான் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் (யார் கட்டுப்பாட்டிற்குள்?) வைப்பது நோய்க் கட்டுப்பாடு இல்லை. அதனால் தான் அறிவியல் பூர்வமாக நம்பப்படும் அலோபதி சிகிச்சை எடுத்து வரும்போதே நோயாளிகள் அடுத்தடுத்த பாதிப்புகளை உணர்கிறார்கள். இது உலகம் முழுவதும் நடைபெற்று வரும் பயன்பாட்டு ஆய்வு நிரூபணம்.

மேலும் சர்க்கரை நோய் பற்றி தெளிவை பெற https://drive.google.com/open?id=0B2zArLcXi4WtaEVUMmZ0cHpUV2M

சரியான வாழ்க்கை முறையை கடைபிடிக்கும் பொழுது கண்டிப்பாக சர்க்கரை போன்ற தவறான வாழ்க்கைமுறையினால் ஏற்படும் வியாதிகளியிலிருந்தும் நம்மை முழுமையாக பாதுகாத்துக் கொள்ள முடியும். சரியான வாழ்க்கை முறை பற்றி தெரிந்துக்கொள்ள https://drive.google.com/file/d/0B2zArLcXi4WtejhmNmRfeFNjLXc/view?usp=sharing
.

குறிப்பு:
.

நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தராமான தீர்வை தர இயலாது.

சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

உதாரணமாக நம் தவறான வாழ்க்கைமுறையினால் ஏற்படும் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற தொந்தரவுகளுக்கு மருத்துவ சிகிச்சையால் எவ்வாறு நிரந்தர தீர்வு அளிக்க முடியும்.
.

ஒரு மாதத்திற்கான உணவை ஒரேநாளில் உண்பது எவ்வாறு சாதியப்ப்படும்?

இதை மக்களுக்கு புரியவைத்து மருந்துக்களின்றி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே எனது நோக்கம்.
.

மருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் இலவசமாக ஆலோசனைகள் பெற கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ / முகநூல் பக்கத்திலோ /வலைத்தளத்திலோ தொடர்பு கொள்ளலாம்.

(குறிப்பு : தயவுசெய்து பொறுமையாக இருப்பவர்கள், நேர்மையாக வாழ்பவர்கள் மற்றும் அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாதவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்)
.

மேலும் பல மருத்துவ தகவல்களுக்கு:
.

http://reghahealthcare.blogspot.in/
https://www.facebook.com/ReghaHealthCare
https://www.facebook.com/groups/reghahealthcare
https://www.facebook.com/groups/811220052306876
.

Thanks & Regards,
Vineeth.S
+91 98409 80224
+91 97509 56398
vineeth3d@gmail.com

Thursday 19 November 2015

தாயின் கருவறையில் குழந்தை எப்படி உருவாகிறது???


கால்சியம்,விட்டமின், PROTEIN மாத்திரை எந்த குழந்தைக்கும் தேவையில்லை பாருங்கள்...தாயின் கருவறையில்  குழந்தை எப்படி உருவாகிறது???

பயம் உள்ளவரை மட்டும் கொள்ளும் டெங்கு காய்ச்சல்...



Dengue fever is a disease caused by a family of viruses that are transmitted by mosquitoes. ... Because dengue fever is caused by a virus, there is no specific medicine or antibiotic to treat it..

Sunday 15 November 2015

நீங்கள் சாப்பிடும் மாத்திரை இந்திய அரசால் தடை செய்யப்பட்டது.. எச்சரிக்கை.. உசார்ர்ர்ர்ர்......

Applications for Product Approvals that stand Rejected
The List of Applications, which were received in FSSAI for Product Approvals,
and where the proposals have been rejected on assessment of risk/ safety of
the proposed products by the Product Approval & Screening Committee,
and/or the Scientific Panel is placed below.
This list is updated as on 30.04.2015. Communications in individual cases,
containing reasons for rejection of the applications, have been sent to the
applicant FBOs by post/ email.















































Wednesday 11 November 2015

6,7,8 and 9 Times table trick using your hands in 2 sec



6,7,8 and 9 Times table trick using your hands in 2 sec 

சுகப்பிறசவம் வீட்டிலேயே எப்படி செய்வது பற்றிய கானொளி..



சுகப்பிறசவம் வீட்டிலேயே எப்படி செய்வது பற்றிய கானொளி..

வெற்றிலை போடுவது ஏன்?

வெற்றிலை போடுவது ஏன்?
பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான். முடி வெட்டுவதில் இருந்து மன்னர்கள் முடிசூடுவது வரை கடைபிடிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன. வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும். தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது. இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது. பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது. அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.
மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது என்று சொல்கிறார்கள். இது முற்றிலும் சரியான காரணமாகும். இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது. இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது. பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது. சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது. வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.
ஆக மொத்தம் தாம்பூலம் தரிப்பதில் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன. அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.
இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும். சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது. ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது. இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே. ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.
தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும். அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.
இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது. இந்த முறையில் தான் தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை. இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.

Monday 9 November 2015

தூதுவளை மகத்துவம் !!!

தூதுவளை மகத்துவம் !!!
இன்று நாம் பேசக்கூடிய விசயம் என்பது ஒவ்வொரு வீடுகளிலும் நாம் பார்க்கிற பொழுது நோய் என்று வருவதற்கு முன் நாம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஒரு நோய் என்று வந்துவிட்டால் நாம் அதிர்ச்சிக்குள்ளாகிறோம். ஆக நம் வீடுகளிலேயே இருக்கக்கூடிய சில மூலிகைகளை வீடுகளிலே வளர்க்கக்கூடிய சில மூலிகைகளை நம்பி நம்முடைய வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்திக் கொள்கிற பொழுது மிகச் சிறந்த ஒரு ஆரோக்கியமான ஒரு வாழ்க்கையுடன் வெற்றிநடை போட இயலும். நமது பண்டைய தமிழ்ச் சமூகத்திலே பார்க்கிற பொழுது நிறைய வீடுகளில் நிறைய மூலிகைகள் வைத்திருந்த ஒரு காலம் இருந்தது. இன்று நாம் தொகுப்பு வீடுகள் என்று சொல்லக்கூடிய (Apartments) ஒரு சிறைச்சாலை வாழ்க்கையை வாழக்கூடிய சூழலுக்கு வந்துவிட்டோம்.
அன்றைய காலங்களில் தமிழ்ச் சமூகத்தில் பார்த்தோம் என்றால் ஒரு வீடு என்று இருந்தால் அந்த வீட்டிற்குப் பின்பாக ஒரு தோட்டம் இருக்கும், வீட்டிற்கு முன்பாகவும் தோட்டம் இருக்கும். அங்கு பார்க்கும் பொழுது நிறைய மூலிகைகளை வளர்க்கக்கூடிய நிலை இருந்தது. ஒவ்வொரு வீட்டிற்குப் பின்புறமும் ஒரு முருங்கை மரம் இருக்கும், ஓமவள்ளி என்று சொல்லக்கூடிய கற்பூரவள்ளி, தூதுவளை, துளசி, ஆடாதொடா, கண்டங்கத்திரி, முசுமுசுக்கை, கல்யாண முருங்கை இப்படி பல்வேறு மூலிகைகள், மரங்கள் இவைகளை எல்லாம் கொண்ட ஒரு வீடு இருக்கும். ஆனால் அதிலிருந்து நாம் முரண்பட்டு போய்விட்டோம், மாறிவிட்டோம் என்றுதான் நாம் சொல்ல வேண்டும். மறுபடியும் அதேமாதிரி ஒரு ஆரோக்கியத்துடன் கூடிய ஒரு வீட்டமைப்பை நம்மால் உருவாக்க இயலுமா என்றால் கண்டிப்பாக முடியும் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு நாம் முயற்சி செய்யவில்லை அவ்வளவுதான். ஆனால் நாம் முயற்சி செய்கிற பொழுது கண்டிப்பாக அதற்கான பலன் கிடைக்கும். அந்த வகையில் இன்று நான் உங்களுடன் வீட்டிலேயே வளர்க்கக்கூடிய தூதுவளை என்ற மூலிகையைப் பற்றி நான் பேச இருக்கிறேன்.
தூதுவளையை நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள். அதனது இலை வட்டவடிவமென்று சொல்லமுடியாது, நீள் வடிவமென்றும் சொல்லமுடியாது, நீள்வட்டவடிவமாக இலைகள் இருக்கும். கரும்பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய அந்த இலைகளிலே நிறைய முட்கள் இருக்கும் இதுதான் தூதுவளை. இந்த தூதுவளையை கிராமங்களில் இருப்பவர்கள் சாதாரணமாக தோட்டத்தில் வைத்து வளர்க்க இயலும். வேலிகளில் கொடிபோல் படரக்கூடிய தன்மை உடையது. நகரத்தில் இருப்பவர்கள் இந்த செடியை ஒரு அகன்ற தொட்டிகளில் வைத்து வளர்க்க இயலும். நமது உடம்பில் இருக்கக்கூடிய நுரையீரலின் செயல்பாடு என்பது இதயத்தோடு இணைந்த செயல்பாடு அதாவது நுரையீரல் எந்த பிரச்சனையுமின்றி சரியான முறையில் அதனுடைய வேலையை செவ்வனே செய்கிற பொழுதுதான் நுரையீரலிலிருந்து ஆக்சிஜன் இதயத்திற்குச் சென்று இதயம் வரக்கூடிய இரத்தத்தை முறையாக சுத்திகரித்து மறுபடியும் உடல் செயல்பாடுக்குக் கொண்டு செல்லக்கூடிய ஒரு அற்புதமான பணியை செய்யும். அந்த வகையில் இந்த நுரையீரலில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல், நுரையீரலில் ஒவ்வாமை இல்லாமல், நுரையீரலில் எந்தப் புண்களும் வராமல் பாதுகாப்பதற்கு ஏற்ற ஒரு உணவியல் சூழலை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
கண்ட கண்ட உணவுகளை நாம் எடுக்கிற பொழுது, காரசாரமான உணவுகளை நாம் சாப்பிடுகிற பொழுது, மிகுந்த கோபத்தில் இருக்கும் பொழுது, மிகுந்த துக்கத்தில் இருக்கும் பொழுது அதிக பயணத்தில் இருக்கும் பொழுது, நிறைய குளுமையான உணவுகளை உண்ணுகிற பொழுது, ஆவேசப்படுகிற பொழுது, திறனுக்கு மீறிய வேலைகளை செய்கிற பொழுது அப்பொழுதெல்லாம் இந்த நுரையீரல் பாதிக்கப்படும். அந்த நுரையீரலை சரிபண்ணுவதற்கான உணவுகளை மருந்துகளை நாமே தயார் செய்கிற பொழுது நேரம் மிச்சம் அதே போல் பணம் மிச்சம் இவையெல்லாமே ஏற்படுத்திக்கொள்ள இயலும். ஏனென்றால் இன்றைய சமூக அமைப்பில் மருத்துவம் சார்ந்த வணிகம் என்பது நாம் எல்லோருமே பார்த்து மிரளக்கூடிய விசயமாக இருக்கிறது.
ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவர் அது சார்ந்து மருத்துவமனைகளுக்குச் செல்கிற பொழுது அவர் பொருளாதார ரீதியாக பின்தங்கக்கூடிய சூழலுக்கு உள்ளாக்கப்படுகிறார். ஏனென்றால் மருத்துவம் இன்று வணிகமாக பார்க்கப்படுகிறது. எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும் நிலையான ஆரோக்கியம் வேண்டுமென்றால் கண்டிப்பாக உணவு, இருக்கக்கூடிய சூழல் எல்லாவற்றையும் ஒழுங்குமுறைப்படுத்துகிற பொழுதுதான் அது சரியாக இருக்கும். அந்த வகையில் இந்த தூதுவளையை வீட்டில் தொட்டியில் வளர்க்கலாம், தோட்டத்தில் வளர்க்கலாம். தமிழில் ஒரு பழமொழி சொல்வோம் “தூதுளை மாதுளை இருக்கும் வீட்டில் மார்பிலும் வயிற்றிலும் கலங்கம் இல்லை” மார்பில்தான் நுரையீரல் இருக்கிறது தூதுவளையை யார் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு இந்த மார்பு வியாதிகள் எதுவுமே வராது என்று சித்தர்கள் சொல்கிறார்கள். மார்பு வியாதி என்று பார்க்கிற பொழுது நுரையீரல் சார்ந்த நோய்கள், கல்லீரல் சார்ந்த நோய்கள், நரம்பு சார்ந்த நோய்கள், இதயம் சார்ந்த நோய்கள் இவை அனைத்திற்கும் ஒப்பற்ற மருந்து இந்த தூதுவளை.
சரி இந்த தூதுவளையை எப்படி உணவாகக் கொள்வது?, எப்படி மருந்தாகக் கொள்வது?, தூதுவளை என்பது உணவா மருந்தா? இந்த கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில் தூதுவளை மிகச் சிறந்த உணவு. பண்டைய தமிழர்கள் மருந்தே உணவு, உணவே மருந்து என்ற உன்னத ஆரோக்கிய கோட்பாட்டின் படி வாழ்ந்தவர்கள். உலகமெல்லாம் ஒப்பிடுகிற பொழுது தமிழனைப் போல் மிகுந்த ஆரோக்கியம் உள்ளவன் இந்த உலகத்தில் எவனும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் அந்த அளவுக்கு ஆரோக்கியத்தின் அடிப்படையாக, ஆரோக்கியத்தின் மூலாதாரமாக இருந்தவன் தமிழன். அதற்கான காரணம் என்ன என்றால் அவன் பயன்படுத்திய உணவுகள். பண்டைய தமிழ் மரபிலே பார்த்தோம் என்றால் ரசம் என்பது தமிழனுக்கே சொந்தமான ஒரு உணவுப் பொருள். ரசம் என்பது நாம் இன்று எலுமிச்சை ரசம் வைப்போம், பாசிப்பயறில் ரசம் வைப்பது உண்டு, அதே மாதிரி இன்னும் பல்வேறு வகையான ரசங்கள் இன்று நாம் செய்துகொண்டிருக்கிறோம். இன்றைய வீடுகளில் ஏதாவது ஒரு வீட்டில் தூதுவளை ரசம் கமகமவென்று மணக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இன்றும் பழைய தமிழ் மரபுகளில் ஊறிப்போன குடும்பங்களில் இந்த தூதுவளை ரசத்தை மிக மணமாக அருந்துவதை நாம் உணரலாம். இந்த தூதுவளையானது நெஞ்சில் உறைந்து கிடக்கக்கூடிய கபத்தை முழுமையாக அகற்றக்கூடிய வல்லமை உள்ளது. இந்த கபம் என்பது சளி எனக் கொள்ளப்படும்.
வாதம், பித்தம், கபம் என்று சொல்கிறோம் அல்லவா அந்த மாதிரி இந்த கபத்தை அதாவது சளியை முழுமையாக அகற்றக்கூடிய வல்லமை உள்ள ஒரு மூலிகை எது என்றால் தூதுவளை என்று நாம் சொல்ல வேண்டும். பண்டைய தமிழ்மரபுகளிலே இந்த ரசம் எப்படி வைப்பார்கள் என்றால் வெள்ளை மிளகு, சோம்பு, சீரகம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, கொத்துமல்லி இவையனைத்தையும் நல்லெண்ணெய் விட்டு வதக்கி ஒன்றிரண்டாக பொடித்து அதனுடன் இந்த தூதுவளை இலையை முள்நீக்கிவிட்டு நெய்யில் நன்றாக வதக்கி அதை விழுதாக அரைத்து நாம் ஏற்கனவே சொன்ன கலவையோடு சேர்த்து லேசாக நல்லெண்ணெய் விட்டு வதக்கி சிறிது புளியைக் கரைத்து ஊற்றி ரசமாக வைப்பார்கள். இந்தத் தூதுவளை ரசத்தை நாம் சாப்பிட்டுப் பார்த்தோம் என்றால் அன்றைக்கு மட்டுமல்ல பத்து நாட்களுக்கு உங்களது குரலே மிகுந்த வளமையாக, இளமையாக பளிச்சென்று பளீர் என்ற குரலுக்கு சொந்தக்காரராக உங்களை மாற்றும். அப்பேற்பட்ட தூதுவளையை நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து வாரத்தில் இருமுறையாவது நாம் உட்கொள்ள வேண்டுமா இல்லையா. ஆகவே சிறகு இணையதள நேயர்களே தூதுவளை உங்கள் வீட்டில் இனி வளம் வரவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் நான் இந்தத் தகவலை ஒரு கட்டுரையாக எழுதிக்கொண்டிருக்கிறேன்.

tதூதுவளையை சில வீடுகளில் தோசையாக செய்வது உண்டு. தூதுவளை தோசை எப்படி செய்வது? ஏனென்றால் மூலிகையை மருந்தாக சாப்பிடுவதற்கு அஞ்சக்கூடிய சூழலில் இருப்போம். தூதுவளையை தோசையாக செய்யலாம், அடையாக செய்யலாம், ஆக அந்தத் தூதுவளையை என்ன செய்வது என்றால் தூதுவளை இலையை முள் நீக்கி நெய்விட்டு வதக்கி அதனுடன் சிறிது சீரகம் சேர்த்து வதக்கி அதை நன்றாக விழுதாக அரைத்து தோசை மாவுடன் கலந்து நீங்கள் தூதுவளை தோசையாக செய்து சாப்பிடலாம். இந்த மாதிரி தூதுவளை தோசை செய்து சாப்பிடும் பொழுது சளி, இருமல், தும்மல், மூக்கடைப்பு எல்லாமே முழுமையாக சரிசெய்யக்கூடிய ஒரு அற்புதமான பணியை இந்தத் தூதுவளை தோசை பண்ணும். எத்தனையோ உணவகங்களை நாம் பார்க்கிறோம், Restaurant என்று சொல்லக்கூடிய உணவகங்கள் எல்லாமே புளித்துப்போன மாவை காசாக்கும் வித்தையை மிக அழகாகக் கற்றுக்கொண்டு வைத்திருக்கிறது. நிறைய அமிலத்தன்மையை விற்பனையாக்கி நமது வயிறை வாயுவாக்கி அந்த வாயுவின் அடிப்படையில் காசாக்கும் கும்பல் இன்றைக்கு உலகம் முழுக்க நிறைய நிரவி கிடக்கிறது அதுவும் தமிழகம் முழுக்க சொல்லவே வேண்டாம். சோம்பேறிகள் நடத்தக்கூடியது எதுவென்றால் சோம்பேறிகள் செய்யக்கூடிய தொழில், சோம்பேறிகளாக மக்களை மாற்றுவதற்கு செய்யக்கூடிய தொழில் இந்த உணவகம் தான். ஏன் இந்த உணவகங்களில் தூதுவளை தோசையை கொண்டுவரக்கூடாது. கொண்டுவந்தால் அரசு ஏதாவது செய்யுமா? இல்லை தூதுவளை தோசை தடைசெய்யப்பட்ட பொருளா?

அதாவது தூதுவளையின் தன்மை என்னவென்றால் நம் உடம்பில் மிதமிஞ்சிக் கிடக்கக்கூடிய அமிலத்தன்மையை முழுமையாக சரிசெய்யக்கூடிய தன்மை இந்தத் தூதுவளைக்கு உண்டு. ஏனென்றால் நரம்பை நன்றாக ஊக்கப்படுத்தக்கூடிய தன்மை இந்தத் தூதுவளைக்கு உண்டு. தூதுவளை உஷ்ணகாரி அதாவது உஷ்ணத்தை வெளிப்படுத்தக்கூடிய தன்மை, கபத்தை கரைக்கக்கூடிய தன்மை இது எல்லாமே இந்தத் தூதுவளைக்கு உண்டு.
தூதுவளை பூவை உலர வைத்து காயவைத்து அதை பொடி செய்து ஒரு மாதம் விடாமல் சாப்பிட்டால் கண்பார்வை பளிச்சென்று தெரியும். இது முற்றிலும் உண்மை. ஆனால் தூதுவளை பூவை முழுமையாக நாமே சேகரித்தால்தான் உண்டு, ஏனென்றால் அது சிரமமான ஒரு விசயம். இந்தத் தூதுவளை பூவை எப்பேற்பட்ட கண் நோய்களுக்கும் உள்மருந்தாக கொடுக்கிற பொழுது கேட்கும் அதற்குக் காரணம் நம் உடம்பிலே கண் சார்ந்த நரம்புகள் மிகவும் நுட்பமானது, உணர்ச்சிகரமானது, உணர்வுப்பூர்வமானது. இந்த கண் நரம்புகளையே வலுப்படுத்தக்கூடிய வல்லமை இந்தத் தூதுவளை பூவிற்கு உண்டு. இதே தூதுவளை பூவையும் சாதிக்காயையும் சம அளவு எடுத்து அரைத்து பொடியாக செய்து கொண்டு காலை இரவு என்று இரண்டுவேளை சாப்பிட்டு வந்தோம் என்றால் நம் உடம்பில் இருக்கக்கூடிய நரம்புகள் எல்லாம் முறுக்கேறும், நரம்புகள் வலுவாகும், ஆண்மை அதிகமாகும், அபாரமான தாம்பத்தியம் உங்களுக்குள்ளே நிலவும்.

இப்பேற்பட்ட தூதுவளையை தவிர்ப்பது சரியா ஆகவே வீடுகளிலும் வீடுகளில் இருக்கக்கூடிய தொட்டிகளில் கூட இந்தத் தூதுவளையை நீங்கள் வளர்க்கலாம், உங்கள் வீட்டிலும் தூதுவளை ரசம் வைக்கலாம், தூதுவளையை தோசையாக செய்து சாப்பிடலாம், தூதுவளையை அடையாகவும் செய்யலாம். அடை என்பது பச்சரிசி மாவில் செய்யக்கூடியது. அதாவது மிளகு, நெய்யில் வதக்கிய தூதுவளை இலை, சீரகம் இவை எல்லாவற்றையும் நன்றாக அரைத்து அடைக்கான மாவோடு கலந்து அடைசெய்து அதன் மேலே முருங்கை இலையையும் தூவி தொடர்ந்து சாப்பிடுகிற பொழுது நாம் சொன்ன சளி, இருமல், கபம், காசநோய், மூச்சுத் திணறல் எல்லாமே முழுவதுமே சரியாகக்கூடிய தன்மை உண்டு.
பச்சையாக தூதுவளை கிடைக்கிறது என்றால் மூன்று இலை, மூன்று மிளகு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு முழுமையாக அரைத்து சாறு எடுத்து வடிகட்டி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். அந்தமாதிரி சாப்பிடுகிற பொழுது கபம் என்ற பிரச்சனைகளே இல்லாத ஒரு சூழல் வரும். நமது உடம்பிலே மூன்று விதமான நாடிகள் ஓடும் அவைகள் வாதநாடி, பித்த நாடி, கபநாடி. இந்த வாதநாடி என்பது முப்பது வயதுவரைக்கும் மிகுந்த அளவில் ஓடும். வாதநாடி ஒரு மனிதனுடைய செயல்பாட்டை அளக்கக்கூடியது Active என்று சொல்லுவோம். பித்தநாடி ஒரு மனிதனுடைய மனம் சார்ந்த விசயத்தை அளக்கக்கூடியது அதை confuse என்று சொல்லுவோம். கபநாடி ஒரு மனிதனுடைய சோம்பல் நிலையை அளக்கக்கூடியது. எந்த ஒரு மனிதனுக்கு கபம் அதிகமாக இருக்கிறதோ அவனிடமிருந்து செயல்பாட்டை எதிர்பார்க்கமுடியாது. எனவே முழுமையாக ஒரு மனிதன் செயல்பட வேண்டும் என்றால் அந்த கபநாடியை ஒழுங்குபடுத்த வேண்டும். அந்த கபநாடியை ஒழுங்குபடுத்தக்கூடிய வல்லமை இந்தத் தூதுவளைக்கு உண்டு. இந்தத் தூதுவளை இனி உங்கள் ஒவ்வொருவரின் இல்லத்திலும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள், அதை மருந்தாக்குங்கள், அதை உணவாக்குங்கள், உங்கள் உடம்புக்கு விருந்தாக்குங்கள், ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெறுங்கள், வாழ்க வளமுடன்.