Monday 30 March 2020

அனைத்து காய்ச்சல் குணமாக்கும் 6 வகை கசாயங்கள் .. மூலிகைகள் குடிநீர்

தகவல்கள்- மைக்கேல்ராஜ், பசுமைப்பாதை.
98430 85615, 99430 85615.

அனைத்து வகையான கிருமிகளின் தொற்றுகள், நோய்களை தடுக்கும்/ குணமாக்கும் 6 கசாயங்கள்! 
நீங்களே தயாரிக்கலாம்!!

🌺சுக்கு - மல்லி கசாயம்

தேவையானவை:
சுக்கு - 10 கிராம்,
மல்லி - 20 கிராம்,
சீரகம் - 5 கிராம்.
செய்முறை:
சுக்கு, மல்லி, சீரகத்துடன் நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து, ஒரு டம்ளராக வற்றும் அளவு கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும். அதை ஆறவைத்தோ, மிதமான சூட்டிலோ பருகலாம். பனைவெல்லம் சேர்த்தும் குடிக்கலாம். இந்தக் கசாயத்தை உணவுக்குப்பின் காலை, மாலை இருவேளை குடிக்க வேண்டும்.
பலன்கள்:
மழைக்காலங்களில் வரும் பூஞ்சை பற்று பிரச்னைகளை தீர்க்க உதவும். வயிறு உபாதைகளை சரியாக்கும். குமட்டல், தீராத ஏப்பத்தை முறையாக்கும்.

🌺அறுகம்புல் கசாயம்

தேவையானவை:
அறுகம்புல் - ஒரு கைப்பிடி,
மிளகு - 10
செய்முறை:
அறுகம்புல்லையும் மிளகையும் இடித்து தண்ணீர் விட்டு நான்கில் ஒரு பங்காகும் வரை காய்ச்சி வடிகட்டி குடிக்கலாம். இந்தக் கசாயத்தை உணவுக்கு முன் குடிக்க வேண்டும்.
பலன்கள்:
மழைக்கால பூச்சிக்கடி, உடல் அரிப்பு, தோல் தடிப்பு, ரத்த சுத்திகரிப்பிற்கு நல்ல மருந்தாகும்.

🌺சீரகம் - ஓமம் கசாயம்

தேவையானவை:
ஓமம் - 20 கிராம்,
சோம்பு - 10கிராம்,
சீரகம் - 5 கிராம்,
உத்தாமணி (வேலிப்பருத்தி) இலை - சிறிதளவு
செய்முறை:
ஓமம், சோம்பு, சீரகம் ஆகிய மூன்றையும் தண்ணீர் சேர்த்து நான்கில் ஒரு பங்காகும் வரை காய்ச்ச வேண்டும். நீர் கொதிக்கும்போது, அதில் உத்தாமணி இலையை போட்டு இறக்கி வடிகட்டி குடிக்கலாம்.
பலன்கள்:
குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி, வயிறு மந்தம், நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு பிரச்னைகளுக்கு சிறந்த நிவாரணம் தரும்.

🌺ஆடாதொடை கசாயம்

தேவையானவை:
ஆடாதொடை இலைகள்- 10,
சுக்கு - 10 கிராம்,
மிளகு - 10 கிராம்,
கிராம்பு (லவங்கம்) - 5 கிராம்
செய்முறை:
ஆடாதொடை இலைகள், சுக்கு, மிளகு, கிராம்பு நான்கையும் சேர்த்து தண்ணீர் விட்டு அந்த தண்ணீர் நான்கில் ஒரு பங்காகும்வரை காய்ச்சி வடிகட்டி குடிக்கலாம்.
பலன்கள்:
தொண்டை கரகரப்பு, மார்பு சளி, மூச்சிரைப்பு (wheezing ) ஆகிய பிரச்னைகளுக்கு நல்ல பலன் தரும்.

🌺கற்பூர வள்ளி - வெற்றிலை கசாயம்

தேவையானவை:
கற்பூரவள்ளி இலை- 4, வெற்றிலை - 4 , தூதுவளை இலை- 2 , சுக்கு, மிளகு - சிறிதளவு
செய்முறை:
கற்பூரவள்ளி, வெற்றிலை, தூதுவளை ஆகியவற்றுடன் மையாக அரைத்த சுக்கு, மிளகைச் சேர்த்து கொதிக்கவைத்து பருகலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும்போது கசாயத்துடன் தேன் சேர்த்து கொடுக்கலாம்.
பலன்கள்:
தலைபாரம், தலை நீர்கோர்த்தல், கபம் சளி சேர்தல், தும்மல், நீர்சத்து குறைவு Dehydration (டிஹைட்ரேஷன்), Sinus போன்ற பிரச்னைகளுக்கு நலன் பலனளிக்கும்.

🌺கபசுர கசாயம்

தேவையானவை:
சுக்கு, திப்பிலி, லவங்கம், சிறுகஞ்சொறி வேர், அக்ரகாரம், முள்ளிவேர், கடுக்காய்த் தோல், ஆடாதொடை, கற்பூரவள்ளி, கோஷ்டம், சீந்தில்கொடி, சிறுதேக்கு (கண்டு பரங்கி), நிலவேம்பு, வட்டத்திருப்பி, முத்தக்காசு. (இந்த பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)
செய்முறை:
இந்த பொருள்கள் அனைத்தையும் சம அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் நீர் சேர்த்து நான்கில் ஒரு பங்காகும்வரை காய்ச்சி வடிகட்டி குடிக்கலாம்.
பலன்கள்:
எந்தவொரு காலங்களில் வரும் எல்லாவிதமான கிருமி தொற்றுக்களை/ தடுக்கவும், நுரையீரல் சுவாசப்பாதைகளை சுத்தப்படுத்தவும், ஒட்டுண்ணி காய்ச்சல்களை குணமாக்கவும் இந்த கசாயம் உதவும்.
கவனம்:
மேற்கண்ட கசாயங்களை 15 வயதுக்குட்பட்டவர்கள் 30 மி.லியும், பெரியவர்கள் 60 மி.லியும், காலை, மாலை இருவேளைக்கு மூன்று நாள்கள் குடிக்கலாம். ஒட்டுண்ணி காய்ச்சல், உடல் சோர்வு, மூச்சு திணறல் உள்ளவர்கள்  இந்த கசாயத்தை  எடுத்துக்கொள்ள வேண்டும்.

தகவல்கள்- மைக்கேல்ராஜ், பசுமைப்பாதை.
98430 85615, 99430 85615.

Saturday 28 March 2020

குடல் புழு நீங்க ஹோமியோ மருந்துகள்

குடல் புழக்கன் நீங்க (worms)

பொதுவான ஹோமியோபதி மருத்துவம்

1.Cina-1000ch ' 5 மாத்திரைகள் வீதம் 15 நிமிடத்திற்கு ஒரு முறை என மூன்று முறை மட்டும்  சாப்பிடவும்
பிறகு 24 மணி நேரம் கழித்து
Natrum phos.6X- 5 மாத்திரைகள் வீதம் தினசரி மூன்று வேளை சாப்பாட்டுக்கு முன் 15 நாட்களுக்கு கொடுக்ககவும்.

2. Tape worms எனக் கூடிய நாடாப்புழக்களுக்கு Anatherum Muricatum Dilution 30 Ch  5 மாத்திரைகள் வீதம் தினசரி மூன்று வேளை 7 நாட்களுக்கு சாப்பாட்டுக்கு பின் ஒரு மணி நேரம் கழித்து சாப்பிடவும்.

3. தூக்கத்தில் பற்களை அரைப்பது (Grinding of teeth) மேலும் பானை போல் பெருத்த வயிறு மற்றும் அடி சாப்பிட்ட உடன் வயிற்று வலி மேலும் இனிப்பு சாப்பிட ஆவல் , மலக்குழாயில் அதிகமான அரிப்பு , மேலும் படுக்கையில் சிறுநீர் கழிப்பவர்கள் , ஆகிய
இந்த அறிகுறிகளுக்கான ஹோமியோ மருந்து
Embelia Ribes Dilution 30 CH  5 மாத்திரைகள் வீதம் தினசரி மூன்று வேளை 7 நாட்களுக்கு
சாப்பாட்டுக்கு பின் ஒரு மணி நேரம் கழித்து சாப்பிடவும்.

4. வெள்ளை நிற நூல் போன்ற சிறிய புழக்கள்  (மலக்குழாய் வழியாக வெளியில் ஊர்ந்து வரும் புழுக்கள் , மலக்குழாயில் தாங்க முடியாத அரிப்பு இருக்கும் )  pin worms இருந்தால் Teucrium Marum Verum Dilution 30 CH  , 5 மாத்திரைகள் வீதம் தினசரி மூன்று வேளை 7 நாட்களுக்கு சாப்பாட்டுக்கு பின் ஒரு மணி நேரம் கழித்து சாப்பிடவும் மேலும் Natrum phos.6X- 5 மாத்திரைகள் வீதம் தினசரி மூன்று வேளை 7 நாட்களுக்கு சாப்பாட்டுக்கு 20 நிமிடம் முன் சாப்பிடவும் .

5. Hook Worms எனப்படும் கொக்கிக் புழுக்கள் இருந்தால் Chenopodium Anthelminticum Dilution 6 CH  5 மாத்திரைகள் வீதம் தினசரி மூன்று வேளை 7 நாட்களுக்கு சாப்பாட்டுக்கு பின் ஒரு மணி நேரம் கழித்து சாப்பிடவும் (இதன் அறிகுறிகள் தாங்க முடியாத அளவுக்கு வயிற்று வலி, அரிப்புடன் கூடிய தோல் வியாதிகள் , பசியின்மை , மலம் கமிக்கும் போது இரத்தம் வருதல்).

6.Ascarides எனும் புழுக்கள் இது பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரக்கூடியது இதன் அறிகுறி பானை போன்ற பெருத்த வயிறுடன் இளைத்துப் போன இழந்தைகள் வயிற்று வலி இருக்கும் மேலும் தொடர் இரும்பல் மூச்சுத் திணறல் (wheezing)  இருக்கும் மேலும் சிலருக்கு மலத்தில் இந்த புழுக்களின் முட்டைகள் இருக்கும் புழுக்கள் இருக்கும்
இவைகளுக்கு Abrotanum 30-5 மாத்திரைகள் வீதம் தினசரி மூன்று வேளை 7 நாட்களுக்கு சாப்பாட்டுக்கு பின் ஒரு மணி நேரம் கழித்து சாப்பிடவும்.


குறிப்பு - 1
மேற்கண்ட மருந்துகள் சிலருக்கு சரியாக குணமாக்க வில்லை என்றால் இரண்டு நாட்கள் இடைவெளி விட்டு Sulphur - 200 ch 5 மாத்திரைகள் சாப்பிட்ட பின் இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் நீங்கள்  மேற்கண்ட மருந்துகளை தொடரலாம் சரியாகும் வரை ஒவ்வொறு முறையும் Sulphur - 200 c சாப்பிட்டு விட்டு தொடரவும் முன்று இவ்வாறு சாப்பிடலாம் அதர் குள் பூரண குணம் கிடைக்கும்.


குறிப்பு - 2,
மேற்கண்ட மருந்துகள் 5 மாத்திரைகள் அல்லது ஒரு ஸ்பூன் தண்ணீரில் 5 சொட்டுக்கள் கலந்து குடிக்கலாம்
குழந்தைகளுக்கு இரண்டு மாத்திரை அல்லது இரண்டு சொட்டுகள் ஒரு ஸ்பூன் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம்.

விவசாயிகள் எந்த மண்ணிற்கு என்ன நடவு செய்யலாம்.

#எந்தெந்த_மண்_வகைகளில்_எந்தெந்த_பயிர்கள்_நடலாம்
🌿🌾🍂☘️🌳🍁🌿🌾🍂☘️🌳🍁🌿🌾🍂
விவசாயிகள் மற்றும் 
பண்ணையாளர்கள் விவசாயம் செய்ய முதலில் உங்கள் நிலத்தில் உள்ள மண்ணின் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும் அதன் பிறகு அதற்கு ஏற்றால்போல் எந்த பயிர்களை நட வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும்

☘️#கந்தகபூமி
இந்த மன் சந்தன நிறத்தில் இருக்கும்.
இதில்
சோளன்
பருத்தி
தினை
ஆமணக்கு
அவரை
பலாமரம்
கராம்பு
மிளகு
ஏலக்காய் மாதிரியான பயிர்கள் விளையும்

☘️#கருமணல்பூமி
இதில் 
கரும்பு
பயறு
முருங்கை போன்ற சில பயிர்கள் நன்றாக வளரும்,

☘️#சாம்பல்_நிற_பூமி
இதில்
வெங்காயம்
வாழை
தென்னை 
புகையிலை
பருத்தி
நிலக்கடலை
போன்ற பயிர்கள் நன்றாக வளரும்

☘️#செம்மன்பூமி
இதில்
வாழை
தென்னை 
பருத்தி
சோளன்
அவரை இனங்கள் 
மா.பலா,கொய்யா,தோடை(பழமரங்கள்)
மிளகாய்,கத்தரி.வெண்டி
போன்ற பயிர்கள் நன்றாக வளரும்.

☘️#வண்டல்பூமி
இதில்
பருத்தி
கோதுமை
சோளன்
கரும்பு
நெல்
மிளகாய்,கத்தரி,வெண்டி
வாழை
தென்னை 
மஞ்சள் 
பழமரம் போன்ற அணைத்தும் நன்றாக 
வளரும்

☘️#கரிசல்பூமி
இதில்
சோளம் 
கடலை
கோதுமை
திணை,
கரும்பு
கேழ்வராகு
கொத்தமல்லி
போன்ற பயிர்கள் நன்றாக வளரும்.

விவசாயிகள் செடிகள் மரங்கள் நடவு செய்ய தேவையான அளவீடுகள்

#நீண்டகாலப்_பயிர்கள்_நடும்_பொழுது
#கவனிக்கவேண்டிய_முக்கிய_
#இடைவெளிகளின்_அளவீடுகள்

☘️ #வாழை_மரம் 8 × 8

☘️ #தென்னை_மரம்  24 × 24

☘️ #பப்பாளி_மரம்  7 × 7

☘️ #மாமரம்_உயர்_ரகம். 30 × 30

☘️ #மாமரம்_சிறிய_ரகம் 15 × 15

☘️ #பலா_மரம்  22 × 22

☘️ #கொய்யா_மரம்  14 × 14

☘️ #மாதுளை_மரம்  9 × 9

☘️ #சப்போட்டா_மரம். 24 × 24

☘️ #அன்ன_மீனா_மரம். 10 × 10

☘️ #தோடை_மரம். 15 × 15

☘️ #எலுமிச்சை_மரம்  14 × 14

☘️ #திராட்சை.  9 × 6

☘️ #நெல்லி_மரம்  14 × 14

☘️ #முந்திரிகை_மரம். 14 × 14

☘️ #கறிவேப்பிலை_மரம். 7 × 8

☘️ #முருங்கை_மரம்.  12 × 12

☘️ #கராம்பு_மரம்.  18 × 18

☘️ #கறுவா_மரம்.  10 × 10

☘️ #கோபி_மரம்.  7 × 7

☘️ #கொக்கோ_மரம்.  24 × 24

☘️ #வேப்பமரம். 15 × 15

☘️ #பனைமரம். 10 × 10

☘️ #கமுகுமரம்.  7 × 7

☘️ #தேக்கு_மரம் 10 × 10

☘️ #மலைவேம்பு_மரம்.  10 × 10

☘️ #சந்தன_மரம். 15 × 15

☘️ #நாவல்_மரம்.  30 × 30

☘️ #கற்றாழை   1.5  × 2

இந்த அளவீடுகள் குறையாது கட்டாயம் இருக்க வேண்டிய அடி அளவுகள் ஆகும்

இவ்வாறு இடைவெளி இருந்தால் அவற்றின் இலைகள் மற்றும் ஓலைகள் நன்கு பரப்பி வளர முடிகிறது

இந்த இடைவெளிகளையும் விட குறைவாக இருந்தால் மரங்கள் காய்க்காமல் நீண்டு ஒல்லியாக வளர்ந்து கொண்டு போகும்
இதன்பின் காய்த்தாலும் காய்கள் திரட்சி இல்லாமல். காய்கள் சிறிதாக இருக்கும்

மர தேவைக்காக வளர்க்கப்படும் மரங்கள் எனில் அம்மரங்கள் மெலிதாக நீண்டு வளரும்.
நீண்டு வளர்ந்தாலும் இதன் கேள்வி குறைவாகவே இருக்கும்

இடைவெளிகள் அதிகமானால் மரங்கள் குறைந்த உயரத்தில் காய்க்க ஆரம்பிக்கும் அதோடு காய்கள் நன்கு பெருத்து திரட்சியாக காய்க்க ஆரம்பிக்கும்
மரத்தின் சுற்றளவு நன்கு விருத்தியடையும்.

#அனைவரும் வாசித்து பயன்பெற வேண்டிய மிக முக்கியமான பதிவுகளை மாத்திரம் தேடித் தொகுத்து உங்களுக்கு வழங்கி வருகின்றோம்
ஆகையால் நீங்கள் மட்டுமன்றி அனைவரும் இதுபோன்ற தகவல்களை அறிந்து கொள்ள உதவும்

அனைத்து  நண்பர்களும் இத் தகவலை #Share பன்னவும்.
உங்களுக்கு உதவாவிடினும் உங்கள் உறவுகளில் ஒருவருக்காவது உதவியாக இருக்கும்..

Thursday 26 March 2020

தோல் நோய்கள் குணமாக ஹோமியோபதி மலர் மருந்துகள்

என் உடன் பணிபுரியும்... அண்ணாவிற்கு ஒரு தோல் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளது , காலில் இருந்து தொடை வரை உள்ளது அதற்கு மருந்துகள் இருந்தால் பகிருங்கள்...
ஹோமியோபதி மருந்துகள்

 தினமும் காலை உணவிற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு CALCAREA FLUOR-6X - 5மாத்திரைகள் சாப்பிட வேண்டும்...

தினமும் இரவு உணவிற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு  CALCAREA SULPH-6X  - 5மாத்திரைகள் சாப்பிட வேண்டும்...

1. SULPHUR-30c திங்கட்கிழமை இரவு உணவிற்கு பிறகு 30 நிமிடம் கழித்து 5மாத்திரைகள் சாப்பிட வேண்டும்..

ஒரு நாள் விட்டு

2. THUJA-30c புதன்கிழமை இரவு உணவிற்கு பிறகு 30 நிமிடம் கழித்து 5மாத்திரைகள் சாப்பிட வேண்டும்..

ஒரு நாள் விட்டு 

3. MERC  SOL-30c வெள்ளிக்கிழமை இரவு உணவிற்கு பிறகு 30 நிமிடம் கழித்து 5மாத்திரைகள் சாப்பிட வேண்டும்..

ஒரு நாள் விட்டு

இப்படி 1ல் இருந்து 3 வரை ஒவ்வொரு நாள் மருந்து சாப்பிட்டு வரலாம் இரண்டு மாதம் முழுவதும்.. 

1. SULPHUR-200c திங்கட்கிழமை இரவு உணவிற்கு பிறகு 30 நிமிடம் கழித்து 5மாத்திரைகள் சாப்பிட வேண்டும்..
பிறகு ஒரு வாரம் கழித்து

2. THUJA-200c திங்கட்கிழமை இரவு உணவிற்கு பிறகு 30 நிமிடம் கழித்து 5மாத்திரைகள் சாப்பிட வேண்டும்..
பிறகு ஒரு வாரம் கழித்து

3. MERC  SOL-200c திங்கட்கிழமை இரவு உணவிற்கு பிறகு 30 நிமிடம் கழித்து 5மாத்திரைகள் சாப்பிட வேண்டும்..

இப்படி இரண்டு மாதம் சாப்பிட வேண்டும் நல்ல மாற்றம் கிடைக்கும் சரியாகிவிடும்.. 

நன்றி ; bns
 ✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️



பொதுவாக 70% தோல் நோய்கள் குணமாக crab apple எனும் மலர் மருந்து 5 மாத்திரைகள் மூன்று வேளையும் சாப்பிட வேண்டும் ஓரிரு மாதத்தில் சரியாகிவிடும்..  அப்படியும் சரியாகவில்லை எனில் rock rose எனும்  மருந்து சேர்த்து சாப்பிட்டால் சரியாகிவிடும்...

நன்றி ; jessy. M.

Sunday 22 March 2020

ஜோதிடம் கற்போம். கா பார்த்திபன்

ஜோதிடம் கற்போம். கா பார்த்திபன்.

பகுதி - 1

அனைவருக்கும் காலை வணக்கம்.

உங்களுக்கு சோதிடம் பற்றி எதுவும் தெரியாமல் இருந்தாலும். பரவாயில்லை. தொடர்ந்து இன்று பதிவுகளை படித்து வரவும். சந்தேகங்களை கமெண்ட் ல் வந்து கேட்கலாம்.

தேவையற்ற விவாதங்கள் மற்றும்  வம்புகள் செய்வேரை அவர்களுக்கு தக்கபடி . சடங்கு சுற்றி குழுவில் இருந்து நீக்கப்படும். 

இதில் உள்ள ஒவ்வொரு கட்டமும் ராசி என்று அழைக்கப்படும். 

மொத்த கட்டடங்களும் இணைந்த அமைப்பு ராசி மண்டலம், அல்லது ராசி சக்கரம் என்று அழைக்கப்படும்.

ராசி என்றால் கூட்டம் என்று பெயர். சில பல நட்சத்திரங்களின் கூட்டங்களை வைத்து பிரித்து புரிந்து கொள்வதால் , ராசி என்று பெயர்.

இதில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. ஒவ்வொரு ராசிக்கும் சில குணங்கள் உள்ளதால் அந்த குணத்தை கிரகங்கள் பெயரால் அதை அதிபதி என்று குறிப்பிடுகிறோம்.

கீழே உள்ள படத்தில் 
ராசியின் பெயர், அவைகளின் அதிபதி பெயர்களை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.


பதிவு -2.

சோதிடம் என்பது சில குறிப்பிட்ட பிரிவுகளின் வழியாக கையாளப்படுகிறது. இது வேதத்தின் கண்கள் என்று கூறுவது ‌உண்மையல்ல. வேதத்தில் சோதிடம் தனிப்பிரிவாக எங்கும் இல்லை.

சோதிடம் என்பது சாஸ்திரம். இதில் கைரேகை போன்றவைகளும் இல்லை.

கைரேகை என்பது ஹஸ்த சாஸ்திரம். நாம் இப்போது பேசுவது ஜோதிஷ சாஸ்திரம். இன்னும் கூட. மந்திரம். தந்திரம். யந்திரம் என்று பல இருந்தாலும் . அது அவரவர் விருப்பப்படி சோதிடத்தில் இணைக்கப்பட்டதே ஒழிய . இவைகளுக்கும் சோதிடத்திற்கும் தொடர்பு கிடையாது.

சோதிடம் என்பது காலக்கண்ணாடி. முன்னனுமானிக்கும் உத்தி.

இந்த சாஸ்திரம். மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் கணிதங்கள் நிரப்பியது முதல் பிரிவு. இரண்டாம் பிரிவு பலன் அறிதல். மூன்றாம் பிரிவு விடையறிதல்.

நாம் முதல் பிரிவுகளுக்கு மெனக்கெட தேவையில்லை. ஏனெனில் அது பஞ்சாங்கம் கணித்தல் போன்ற கணிதங்களுக்கான. இப்போது உள்ள சோதிட மென்பொருட்கள் பெருவாரியாக உதவுகின்றன.

எனவே நாம் கவனம் செலுத்த வேண்டியது இரண்டாம் பிரிவான பலன் அறிதலில் மட்டுமே.

பகுதி-3 

12 ராசிகள் என்பது அலகு .

அதாவது நாம் உபயோகிக்கும் ஸ்கேலில் உள்ள செ. மீட்டரைப் போன்றது. அதே ஸ்கேலில் இன்ச்ம் இருக்கும். மி,மீட்டரும் இருக்கும். நாம் ஒன்றை அளக்க இதிலிருந்து எதாவது ஒன்றை பயன்படுத்தி கொள்ளலாமே ஒழிய மூன்று அலகுகளையும் கவணிக்க வேண்டிய அவசியம் இல்லை.

அது போல ராசி, நட்சத்திரம், பாதசாரம், உப நட்சத்திரம் என்பது எல்லாமே அளவீடுகளின் வெவ்வேறு வடிவங்கள் தான். எனவே எதாவது ஒன்றை பயன்படுத்தி கொள்ளலாம். எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பயன்படுத்துவது  அறியாமை.

அதன் படி நாம் 12 ராசிகளை மட்டுமே பயன்படுத்த போகிறோம்.

ஒவ்வொரு ராசிகளும் அதன் ராசி உருவங்களின் பன்புகளை பெற்றிருக்கும். அதன் அதிபதிகளும் அதே குணத்துடன் இருக்கும்.


பகுதி- 4

எந்த ஒரு கிரகமானானும் எந்த கிரகத்துடனோ அல்லது குறிப்பிட்ட ராசியிலோ பகை நட்பு யோகி அவயோகி என்று எந்த வேறுபாடும் இல்லை.

மேலும் எந்த கிரகத்திற்கும் பார்வைகளும் இல்லை.

ராசிகளின் தன்மை 

ராசிகளின் தன்மை என்றவுடன் மக்கள் தனது பிறந்த ராசியை புரிந்து கொள்ள வேண்டாம். அது உங்கள் ஜாதகத்தில் சந்திரன் உள்ள ராசியை உங்களது ஜென்ம ராசியாகவும். அதில் சந்திரன் அமர்ந்த நட்சத்திரத்தை ஜென்ம நட்சத்திரமாகவும் கூறுவர் . ஆனால் நாம் இங்கு பேசும் ராசி என்பது அது அல்ல . அப்படி ராசிபலன் கூறுவது சோதிடமே அல்ல.

ராசி என்பது 12 பிரிவுகளின் பெயர்.

ராசிகளின் தன்மை சில குறிப்பிட்ட புள்ளியில் சமமாக இருக்கும் . அதன் படி ஒவ்வொரு சோதிட முறையும் . ஒவ்வொரு குறிப்பிட்ட புள்ளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. நாம். ஒரு ராசியில் இருந்து 1 5 9 ராசிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்போம்.

எனவே ஒரு ஜாதகத்தில் ஒரு கட்டத்தில் இருந்து 5. 9 ஆவது கட்டம் சமம். இந்த ராசிகளில் எதிலிருந்து எப்படி எண்ணினாலும் இந்த மூன்று ராசிகள் மட்டுமே வரும். கடிகார முள் திசை அல்லது அதற்கு எதிர்திசை என எப்படி வேண்டுமானாலும் எண்ணலாம்.

இனி நீங்கள் உங்கள் ஜாதகத்தில் எந்த ராசி கட்டத்தில் விரலை வைத்து எண்ண அதிலிருந்து 5 9 ஆம் ராசிகள் ஒரே வீடுகளாக மனதில் புரிந்து கொள்ள வேண்டும்.

எந்த கட்டத்தில் வேண்டுமானாலும் விரலை வைத்து எண்ணலாம். 
1=5=9 

பகுதி-5

போன பகுதியில் பார்த்தது போல எந்த ராசியாக இருந்தாலும் அதிலிருந்து 5,9 ஆவது ராசிகள் சமம்.

எனவே ஏதோ ஒரு ராசியில் ஒரு கிரகம் இருந்தால் அந்த கிரகம் அந்த வீட்டில் மற்றும் 5,9 வது வீட்டிலும் உள்ளதாக புரிந்து கொள்ள வேண்டும். 

எந்த ராசியானாலும். எந்த கிரகமானாலும் ஒரு விதிதான் இதில் விதி மாற்றம். விதி விலக்கு என்று எதுவும் இல்லை.

பகுதி 6 

ராசிகள் என்பவை வெறும் அளவுகோல் மட்டுமே. அதன் பகுதிகளில் சிறு சிறு குனமாற்றங்கள் இருந்தாலும் அவைகள் நிலையானவை. உதாரணமாக கடிகாரத்தைப் போல 12 பிரிவுகள் உள்ள டையல் நிலையானது. அதில் சிறிய முள் எட்டுக்கும் ஒன்பதுக்கும் இடையே இருந்தால் காலை அல்லது இரவு உணவுக்கான நேரம் என்று புரிந்து வைத்துள்ளோம். 

நமது வயிறு அந்த கடிகாரத்துடன் இணைந்து இல்லை. அது காலம் பற்றிய தகவலாகளை மையமாக கொண்டது அது போல

கடிகாரத்தில் உள்ள 12 பிரிவுகள் டயலைப்போல 12 ராசிகள். மூன்று முள்ளைப்போல கிரகங்கள்.

இங்கு முள்கள்தான் கால நேர மாற்றங்களை உணர்த்துகின்றன. டயல் நிலையானது.

சோதிடத்திலும் கோள்களின் நகர்வுகளை அடிப்படையாக கொண்டு காலம் கூறப்படுகிறது. ராசி பிரிவுகள் நிலையான அளவு கோல் மட்டுமே.

கடிகாரம் 12 மணி நேரத்திற்கு செயல்பட்டு புரியவைக்கும் என்றால் ஜாதகம் வருடங்களைக்கூறும்.

12 மணி நேரம் கழித்து கடிகாரம் அதே நிலையை அடையும். ஆனால் கிரக நிலைகள் அப்படி அல்ல ஒரே போன்ற கிரக அமைப்புகள் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் வரவே வராது.

இப்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயம். 12 ராசிகளில் கிரகங்கள் எங்கெங்கு உள்ளன. அதை வைத்து காலத்தை பற்றி புரிந்து கொள்ள வேண்டும்.

பகுதி -7

ஒவ்வொரு முள்ளையும் ஒவ்வொரு நேரத்தை கூறுவது போல். அதாவது சிறிய முள் மணியையும் பெரிய முள் நிமிடத்தை கூறுவது போல.

ஒவ்வொரு கிரகத்திற்கும் குறிப்பிட்ட தன்மைகளை புரிந்து கொள்ள வேண்டும்.

கிரகம் மற்றும் அதன் உறவுகள் & பண்பு

 *#சூரியன்*

 உறவு.  தந்தையும் மகனும்

 ஆளுமை


 *#சந்திரன்*

 உறவு.  அம்மாவும் மனமும்

  அழகு , தயவு, திருட்டு புத்தி , வீடு 

 * #புதன் *

 உறவு.  மகள், சகோதரி மற்றும் மாமா;

 கல்வி.  காதல், தொடர்பு திறன்.  சொத்து

 எழுத்து.  புத்திசாலி தனம்.  சட்டம்.  தொடர்பு,

 *#சுக்கிரன்*

 உறவு - மனைவி, தோழிகள்

 எழுத்து.  செல்வம்.  சொகுசு.  வசதி.

 * #செவ்வாய் *

 உறவு.  நண்பர்கள்.  கணவர்.  சகோதரன்

 உடல்நலம் & வாழ்க்கையின் செழிப்பு

 சொத்து.  அதிகாரம்.  அடக்குமுறை ஆளுகை.

 * #வியாழன் *

 உறவு - * தான் ( ஜாதகர்)  *

 சொத்து.  கண்ணியமான.  மாண்புமிகு.


 * #சனி *

பிரதான தன்மை..  தொழில்

 எழுத்து.  சம்பாதிக்கும் யோசனை.  இனிமையான தேடுபவர்.

 தொழில் - உடல் உழைப்பு.


பகுதி-8

பொதுவாக சோதிடத்தில் லக்னத்தை முதலிடமாக வைத்து பலன் கூறுவார்கள். 

நாம் லக்னத்தை பயன்படுத்தாமல் பலனறிவதால். நாம் லக்னம் துவங்கி ஒவ்வொரு ஸ்தானமாக பார்ப்பதை மாற்றி அந்த ஸ்தானங்களின் பலத்தை இனி நேரடியாக கிரகத்தை வைத்தே புரிந்து கொள்ள போகிறோம்.

உதாரணமாக போன பதிவை மீண்டும் ஒரு முறை வாசிக்கவும். அதில் ஒவ்வொரு கிரகமும் குறிக்கும் குணங்கள் பற்றிய பலன்களை . நாம் அந்த கிரகத்தின் மூலமாக பார்க்கலாம்.

அதன் படி இனி நாம் காணவுள்ள பலனுக்காக கிரகம் உள்ள ராசியே முதல் வீடு .

அதிலிருந்து எண்ண 1,5,9 ம் ராசியில்  ராகு அல்லது கேது இருந்தால் அந்த கிரகம் கூறும் தன்மைகளில் ஜாதகருக்கு சிக்கல் உண்டாகும்.

இதை வேறு மாதிரியாக பார்க்கலாம். நாம் நேரடியாக ராகு அல்லது கேது உள்ள ராசியில் இருந்து 1 5 9 ஆம் ராசிகளை எண்ணி அதிலுள்ள கிரகங்களை வகைப்படுத்துவது எளிதானது.

பகுதி -9 

இதற்கு முன் வந்த 8பகுதிகளை முதலில் வாசிக்கவும்.

எந்த ஒரு ஜாதகமானாலும். அதில் ராகு கேது உள்ள ராசியில் இருந்து 1 5 9 ல் எதாவது கிரகம் இருந்தால் அந்த கிரகத்தின் தன்மையை ஜாதகர் பெறுவதில் தடை, சிக்கல்  மற்றும் தாமதம் உண்டாகும்.

மேலும் வக்ரமோ , பரிவர்த்தனையோ ஒரு ஜாதகத்தில் இருந்தால் அந்த கிரகத்தின் தன்மைகளை ஜாதகர் பெறுவதில் குழப்பம் இருக்கும்.


பகுதி-10.

வக்ரம் மற்றும் பரிவர்த்தனை என்றால் என்ன என்று எனது முகநூலில் சென்று சர்ச் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக ஒரு கிரகத்தை குறிக்கும் போது அந்த கிரகம் வக்ரமாகி உள்ளது என்று மென்பொருட்களில் குறித்திருப்பார்கள். 

பரிவர்த்தனை என்றால் ஒரு கிரகம் வெறொரு வீட்டில் அமர்ந்து உள்ள போது அது அமர்ந்து உள்ள ராசியின் அதிபதி இந்த கிரகம் எந்த வீட்டின் அதிபதியாக உள்ளதோ அங்கு அமர்வது.

சுருக்கமாக கூறினால்.

இரண்டு கிரகங்கள் தனது ஆதிபத்ய ராசியை பரிவர்த்தனை செய்து கொள்ளுதல்.

உதாரணமாக

குரு துலாத்தில். சுக்கிரன் தனுசில்.

இதில் குரு சுக்கிரன் ராசியில் இருந்து. அந்த சுக்கிரன் ‌குருவின் ராசியில் இருந்தால் அது பரிவர்த்தனை.


பகுதி-11.

நண்பர்களுக்கு மாலை வணக்கம் .

இதுவரை 10 பகுதிகள் கடந்துள்ளோம்.

இது குறித்து உங்களது கருத்துக்களை கூறவும். 

இதில் சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள்.

ஏனெனில் இன்று மட்டுமே இந்த பயிற்சி நடக்கும்.

ஜாதகத்தில் கவனிக்க வேண்டியவை.

1, ராகு மற்றும் கேது வில் இருந்து 1,5,9 ஆம் ராசிகளில் உள்ள கிரகங்களின் தன்மையை ஜாதகர் அனுபவிப்பதில் தடை தாமதம் சிக்ஙல்களை ஏற்படுத்தும்.

2, பரிவர்த்தனை மற்றும் வக்ரமான கிரகங்கள் தனது தன்மையை குழப்பமாக வழங்கும். 

இது போன்ற எதாவது ஒரு அமைப்பு உங்கள் ஜாதகத்தில் இருந்தால் வாழ்க்கை முழுவதும் நீங்கள் சந்திக்கும் பிரச்சினை இது மட்டுமே.

பகுதி 12

பிறப்பு ஜாதகத்தில் இதற்கு முன் வந்த பதிவுகள் பகுதி 11 வரை உள்ள விசயங்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்க உள்ள சிக்கல்கள் அவை மட்டுமே.

பொதுவாக காலம் என்பது கடிகாரத்தைப் போல நகர்ந்து கொண்டே இருக்கும். அதில் சில எண்களுக்கு நேராக முள் வரும் பொழுது நாம் சில விஷயங்களை செய்கிறோம். 

இதில் சில மாறுதல்கள் இருந்தாலும் அதிகமாக ஒத்துப் போகிறோம்.

இரவு குறிப்பிட்ட நேரம் வந்தால் உறக்கம் நம்மை தழுவுகிறது நேரா நேரத்திற்கு பசிக்கிறது. காலை விழிப்பு வருகிறது. இது ஒரு நாளில் நடப்பது இதுவே தினமும் சுழற்சியாக நடக்கும்.

ஆனால் கடிகாரம் என்பது பொதுவானதாக இருந்தாலும் . அனைவருக்கும் ஒரே நேரத்தில் பசிப்பது இல்லை. அனைவருக்கும் ஒரே நேரத்தில் தூக்கம் வருவது இல்லை . ஒவ்வொரு நபருக்கும் மாற்றம் இருக்கும்.

அதை அவரவர் சுழற்சி முறையில் தினமும் பார்ப்பதால் நமக்கு சரியான நேரம் பற்றிய புரிதல் உள்ளது. எனக்கு இரவு 9.30 க்கு பசிக்கும். ஆனால் மற்றவர்கள் அப்படி இருக்க வேண்டும் என்று இல்லை. ஆனால் எனக்கு தினமும் அதுதான் எனும் போது கடிகாரம் இப்போது அதற்கு உதவுகிறது.

அதைப்போலவே அனைவருக்கும் வாழ்க்கை நிகழ்வுகள் நடந்தாலும் அனைவருக்கும் ஒன்று போல இல்லை. ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு காலம். இதை நம்மால் தெரிந்து கொள்ள முடிவது இல்லை. ஏனெனில். தினமும் நடக்கும் நிகழ்வுகளை அடிக்கடி பார்த்து பார்த்து புரிந்து கொண்டு இருப்பதைப் போல வாழ்க்கையை புரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால் அது அடிக்கடி நிகழாமல் மெதுவாக நிகழ்வதால் விழிப்புணர்வு இல்லை.

ஆனாலும் காலம் ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருந்தாலும் அதிலும் ஒரு ஒற்றுமை உள்ளது. 

இதைத்தான் சோதிஷ சாஸ்திரத்தில் இரண்டாவது பிரிவில் இரண்டாவது உட்பிரிவான #தாஜிகம் குறிப்பிடுகிறது. 

இதை தசா வழியாக பார்ப்பது வழக்கத்தில் இருந்தாலும் அதில் அடிப்படையில் நமக்கு புரிந்து கொள்ளும் அளவுக்கு அறிவு இல்லை. மேலும். தசா முறைகள் 32 உள்ளது அதில் விம்சோத்திரி என்று ஒரு முறை நாம் வழக்கத்தில் பயன்படுத்தி வருகிறோம். இதில் பலன்கள் வரவே வராது. ஏனென்றால் இது பற்றி யாருக்கும் தெரியாது. ஒவ்வொரு கிரகத்திற்கும் ஏன் தசா வருடம் மாறுகிறது என்பது யாருக்கும் தெரியாது. வெறுமனே மனப்பாடம் செய்து ஒப்புவிக்க எதற்காக சோதிடம் கற்க வேண்டும்.

ஆனால் தசா என்பது மனதை பற்றிய விளக்கம். நம்மிடம் உள்ள 96 தத்துவங்களில் மிக முக்கியமான சிக்கலான தத்துவம் அதாவது மாயையில் வைத்திருப்பது 36 இதில் நம்மை பெரும்பாலும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கருவி மனம் மட்டுமே. அந்த மனதை பற்றிய விளக்கம் தேட இந்த தசா உதவும். ஆனால் நாம் ஆசைபட்டபடி வாழ்க்கை அமைவது இல்லை.

தசா ஆசைகளை ஓரளவு கூறலாம். ஆனால் ஆசைக்கும் வாழ்க்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

ஆனால் நமது கடிகாரம் காலத்தை கூறுகிறது. அதே கடிகாரம் சுழல்வதால நடப்பவை களை திட்டமிட. புரிந்து கொள்ள உதவுகிறது.

அதாவது நாம் நமது பிறந்த காலத்தை குறிக்க பெரிய கடிகாரமாக ஜாதகத்தை வைத்துள்ளோம். ஆனால் அந்த கடிகாரம் தொடர்ந்து இயக்கத்தில் உள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் முள்களைப்போல சுழன்று காலங்களை உணர்த்திக் கொண்டு இருக்கிறது.

எனவே நாம் பிறந்ததை குறிக்க பயன்படுத்திய அதே கடிகாரத்தை நமக்கு வாழ்க்கையில் ஒவ்வொரு காலத்திற்கும் பயன்படுத்தி நடப்பவைகளை தெரிந்து கொள்ள முடியும்.

தொடர்ந்து பேசலாம்.

பகுதி 13.

பகுதி 11 வரை படித்து அதன் படி ஜாதகத்தில் உள்ள விசயங்களை தெரிந்து கொள்ளுங்கள். அதுதான் உங்கள் விதி வாழ்க்கை முழுவதும் நீங்கள் சந்திக்கும் பிரச்சினை அதுதான் இது என்ன செய்தாலும் மாறாது. இதை #ஹோரா என்று கூறுவார்கள். அதனால் தான் பல சோதிட நூல்கள் ஹோரா என்ற பெயரில் இருக்கும்.

அடுத்தபடியாக பகுதி 12 ல் பார்த்தது போல நாம் விதியை தெரிந்து கொண்டாலும் அவை எவ்வெப்போது நடக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். இதை தாஜிகம் என்று குறிப்பிடுவர்.

சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் ஜாதகத்தில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகள் தீர்மானிக்கப்பட்டது. அது எப்போதுமே மாறாது. 

ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு வாழ்க்கை மற்றும் அதில் மாறுபாடுகளை உடையது. ஆனால் கூட உடலமைப்பு இயங்கும் அடிப்படையில் எல்லாம் ஒன்றுதான் . என்பது போல ஒவ்வொரு மனிதனும் தனி தனி உயிரினம் தான். அவற்றை பற்றிய தகவல்களை அறியும் நுட்பம்தான் ஜாதகம். இதிலே பறவையைப்போல இறக்கைகள் மனிதனுக்கு இல்லை என்று ஆசைப்பட்டு என்ன செய்தாலும் உங்களுக்கு இறக்கைகள் முளைக்காது.

எனவே தீர்மானிக்கப்பட்டது நடந்தே தீரும்.

அதில் என்ன நிகழ்வு உங்களுக்கு கஷ்டமானதாக மாறும் என்றும். மற்ற வேறு அனைத்தும் உங்களுக்கு எப்போது நடக்கும் என்றும் தெரிந்து கொள்ள அதே ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் தொடர்ச்சியான நகர்வு உங்களுக்கு காட்டிக் கொடுக்கும்.

முக்கியமாக 
சனி மற்றும் குரு உங்கள் ஜாதகத்தில் உள்ள விசயங்களை கொடுத்துக் கொண்டே இருக்கும்.

ராகு கேது நகர்வு என்பது உங்களுக்கு வேதனைகளை வழங்கி உங்களை அடுத்த கட்டத்துக்கு நகர உந்தி தள்ளும் அளவுக்கு பலவிதமான குழப்பங்களை தரும்.

பகுதி 14
காலை வணக்கம் நண்பர்களே.
நேற்று பதிவிட்ட 13பகுதிகளையும் படித்து புரிந்து கொண்டீர்களா.
இன்று அதன் தொடர்ச்சியாக சில பகுதிகள் வெளியிடுகிறேன்.
முதலில் நமது ஜாதகத்தின் வழியாக நாம் கடக்க உள்ள சிக்கல்களை வகைபடுத்தி விட்டாலே போதும். ஏனெனில் நன்மைகள் என்பவை எந்த இடையூறும் இல்லாத பயணம் (வாழ்க்கை)அதில் இடையூறு வருவதை நாம் தீமைகள் என்று புரிந்து வைத்துள்ளோம்.
நாம் எந்த இடத்தில் சிக்கிக் கொள்வோம் என்று சரியாக புரிந்து கொண்டாலே போதுமானது. அதை ஜாதகத்தில் தெளிவாக காணலாம்.
அடுத்தபடியாக அந்த தீமைகள் எப்போது நடக்கும். மற்றும் நமது வாழ்க்கை முறையில் புதிய பயணங்கள் எப்போது துவங்கும் (இதையும் நாம் நன்மையாக புரிந்து வைத்துள்ளோம்) என்பதை நடப்பு கோள்களின் வழியாக காணலாம். அதாவது கோள்சாரம் வழியாக. மற்றபடி தசா கணிதங்கள் பயனளிக்காது.
தசா புத்தி மற்றும் பாவக கணிதங்களை வைத்து நடந்து முடிந்த நிகழ்வுகளை பக்கம் பக்கமாக வர்ணனை செய்யலாம் ஆனால் முன்கூட்டியே அனுமானிக்க முடியாது.
எனவே இந்த பயிற்சி உங்களது ஜாதகத்தை நீங்களாகவே புரிந்து கொள்ள என்பதால். தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். லக்னம். ராசி. தோசம். ஏழரை. தசா புத்தி போன்றவைகள் உங்களை நீங்களே தெரிந்து கொள்ள உதவாது. ஏனென்றால் உங்களுக்கு நீங்களே கதை சொல்ல முடியாது. எனவே விதிகளை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
முதலில் ஒரு குறிப்பிட்ட காலம் அதாவது ஒரு ஜாதகம். இதை வைத்து நீங்கள் வாழப்போகும் வாழ்க்கை பயணம் பற்றி தெளிவடைய வேண்டும்.
அடுத்தபடியாக அதே காலக்கருவியான கோள்களின் தொடர்ச்சியான நகர்வு உங்களுக்கு அதை வரிசைகிரமமாக வழங்கும்.
மக்கள் பொதுவான விதிகளுக்குள்ளேயே வாழ்கிறார்கள். எனவே குறிப்பிட்ட கிரகங்கள் குறிப்பிட்ட நிலைக்கு வரும் போது குறிப்பிட்ட நிகழ்வுகள் நடக்கும். அதில் ஒவ்வொரு மனிதனுக்கும் காலங்கள் மாறுபடும். அதை குறிகாட்ட அவரவர் ஜாதகம் உதவும்.
மீண்டும் ஒரு முறை சுருக்கமாக கூறுகிறேன்.
பிறந்த ஜாதகம் என்பது நீங்கள் பிறக்கும் போது உள்ள கோள்களின் நிலை இதுதான் உங்களது வாழ்க்கை வடிவம். இதை நீங்கள் ஆடர் செய்த உணவாக புரிந்து கொள்ளுங்கள்.
அடுத்ததாக நீங்கள் பிறக்கும் போது நீங்கள் ஆடர் செய்த உணவு நீங்கள் ஆடர் செய்த நேரத்திற்கு நீங்கள் ஆடர் செய்த பதார்த்தம் மட்டுமே வரும் இதை அறிய கோள்களின் நகர்வு உதவும்.
எந்த காரணத்தைக் கொண்டும் நீங்கள் ஆடர் செய்யாத அதாவது உங்கள் பிறப்பு ஜாதகத்தில் இல்லாத எதையும் நடப்பு கோள்கள் வழங்காது.
அனைவருக்கும் இரவு பசிக்கும் ஆனால் ஒவ்வொரு நபருக்கும் அதற்கான நேரம் மாறுபடும் அது போல அனைவருக்கும் எல்லாம் நடக்கும் அதற்கான காலம் முக்கியம் அதற்கு நடப்பு கிரகங்கள் உதவும். உங்களுக்கு எப்போது பசிக்கும் என்பதை.
பிறப்பு ஜாதகம் மற்றும் நடப்பு கோள்நிலை இரண்டையும் இணைத்து புரிந்து கொள்ள வேண்டும்.
சில குறிப்பிட்ட விதிகளில் மனிதனின் வாழ்க்கை இயங்குவதால் இதை அறிவது எளிது.
உதாரணமாக மதியம் 11. 30 க்கு உணவு சாப்பிட்ட அனைவருக்கும் சுமார் 7.30 க்கே பசிக்கத்துவங்கும் அதே நேரம் மதியம் 3.30 க்கு சாப்பிட்டவர்கள் இரவு தாமதமாக சாப்பிடுவார்கள்.
இதைப்போல் பிறந்த ஜாதகத்தில் உள்ள அமைப்பு அடுத்து நீங்கள் செய்யும் செயலுக்கான காலத்தை நிர்ணயம் செய்து கொண்டு அதை செய்கிறது. இந்த விதி அனைவருக்கும் பொருந்தும்.
மீண்டும் சரியாக புரிந்து கொள்ளுங்கள்.
நான் விதிகளாக கூறுகிறேன். தோசம் சாபம் பாவம் என்றோ அல்லது இது இப்படி இருந்தது இது பார்த்ததால் அப்படி ஆனது என்று கதைகள் கூறவில்லை.
அனைவருக்கும் பொதுவான விதியை கூறுகிறேன். மேலும் நானாக ஒரு ஜாதகத்தை போட்டு அதற்கு அம்புலிமாமா கதை கூறவில்லை. நான் சூத்திரங்களை மட்டுமே கூறுகிறேன் இதை நீங்கள் எத்தனை ஆயிரம் ஜாதகத்தில் பொருத்தினாலும் பொருந்தும்.
தொடர்ந்து பேசலாம்.

பகுதி 15
உங்கள் ஜாதகத்தில் வக்ரம் மற்றும் பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் . மேலும் ராகு அல்லது கேது வில் இருந்து 1,5,9 ஆம் ராசிகளில் உள்ள கிரகங்கள் குறிக்கும் வளங்கள் உங்களுக்கு கிடைப்பதில் தடை இருக்கும். அல்லது தாமதமாக கிடைக்கும்.
தாமதமாக கிடைக்கும் பட்சத்தில் உங்களது அனுபவ மூப்பின் காரணமாக அதை கையாள்வதில் தேர்ச்சி கிடைக்கும். ஆனால் சிலருக்கு மேற்கண்ட அமைப்புள்ள கிரகங்கள் குறிக்கும் வளங்கள் விரைவாக கிடைக்கும் பட்சத்தில் அதை நிம்மதியாக அனுபவிக்க முடியாது. எது எப்படி இருப்பினும் மேற்கண்ட அமைப்பில் உள்ள கிரகங்கள் குறிப்பிடும் வளங்களை வாழ்க்கை முழுவதும் அனுபவிக்க முயலும் போது அது தொடர்பான சிக்கல்கள் உடலளவில், மனதளவில், பொருளளவில், உறவளவில் சிக்கலாக மாறுகிறது. இதுதான் அந்த ஜாதகர் வாழ்க்கை முழுவதும் சந்திக்கவுள்ள சிக்கலாகும் . இதிலும் விரித்தால் அடுத்தடுத்து விதிகள் நீண்டு கொண்டே போகும் என்பதால் இந்த அளவு பார்த்தாலே போதும். ஏனெனில் நாம் இங்கு சோதிடராகும் பயிற்சி பெறவில்லை. தனது ஜாதகத்தை புரிந்து கொள்ள முயற்சி செய்கிறோம்.
எனவே மேற்கண்ட அமைப்பு உள்ள கிரகங்களின் தன்மையை பெறுவது வாழ்க்கை முழுவதும் சிக்கல் இருக்கும். ஆனால் இவை குறிப்பிட்ட காலத்தில் செயல்படும்.
அதே நேரம் நாம் நன்மை என்று புரிந்து வைத்துள்ள புதிய துவக்கமோ அல்லது புதிய அனுகூலமோ கிடைப்பதைதான் நன்மை என்று நினைக்கிறோம்.
எனவே முதலில் பேசியது தீமை. அடுத்து பேசிய வாழ்க்கை வாய்ப்புகள் நன்மை இவை இரண்டும் எப்போது நடக்கும்?
கோட்சார கிரகங்கள் உதவியுடன் காணலாம்.
குரு மற்றும் சனி அடுத்து ராகு மற்றும் கேது இந்த நான்கும் சுற்றி வரும் போது ஒவ்வொரு விசயமாக அதாவது நன்மை மற்றும் தீமைகளை வழங்கும்.
எனவே இன்று சனி, குரு, ராகு மற்றும் கேது எந்த ராசியில் உள்ளது என்று தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

பகுதி-16
குறிப்பு;
பலரும் இந்த 21 நாட்கள் நடக்கும் #ராஜகலை சுய ஜோதிட பலன் அறியும் பயிற்சி இந்த முகநூல் குழுவில் தான் நடக்கும். இதெற்கென தனியாக வாட்சப், டெலிகிராம் குழு இப்போது வரை இல்லை. ஏனென்றால் கட்டணம் இல்லாமல் பயிற்சி தருவதால் பொதுவான முகநூல் பயிற்சியே சிறந்ததாக இருக்கும். எனவே கமெண்ட் ல் வந்த என்னை இணைக்கவும் என்று உங்கள் தொலைபேசி எண்ணை போட வேண்டாம். எனக்கு வாட்சப்பில் வந்தி ப்ளீஸ் ஆட் மீ என்ற மெசேஜ் அனுப்ப வேண்டாம்.
21 நாட்கள் வீட்டில் இருப்போம் ஜோதிடம் கற்போம் என்ற இந்த குழுவில் பொதுவாக பயிற்சி நடக்கும்.
பெரும்பாலும் சோதிடம் கற்ப்பவர்கள் , தோஷம். பாவம். சாபம். என்ற எதிர்மறை விசயங்களை மட்டுமே தெரிந்து கொள்கிறார்கள். பெருவாரியான பழைய மற்றும் புதிய சோதிட நூல்களை வாசித்தால் கூட அதில் 92% நெகடிவ் விதிகளே இருக்கும். நீங்கள் இந்த நூல் என்று இல்லாமல் எந்த ஒரு சோதிட நூலையும் எடுத்து மெதுவாக வாசித்துப் பாருங்கள். அதில் பெண்கள் பற்றி பலன் அறியும் பகுதியில் பலருடன் உறவு கொள்பவர். கணவர் அல்லாதவரின் சிசுவை சுமப்பவள். பணியளருடன் சல்லாபமாக இருப்பவள். கணவனை இழந்து விதவையானவள். இரண்டுக்கும் மேற்பட்ட ஆண்களுடன் வாழ்பவள் என்று வெறும் நெகடிவ் மட்டுமே இருக்கும். குழந்தை பற்றிய பகுதியை படித்து பாருங்கள். பாலரிட்டம் ஜந்து வயதில் இறந்து போவான். தந்தை நோயினால் மடிவான். வேறோரு நபருக்கு பிறந்தவன். தாயின் மரணமறிதல். உடன் பிறந்தவர்களை விழுங்கும் சாதகன் னு இருக்கும்.
இதுதான் பல சோதிடர்கள் வாழ்க்கை குழப்பம் ஆனதற்கு காரணமாக இருக்கிறது.
நீங்கள் கவணித்து பாருங்கள். எந்த ஊரானாலும் அங்கு உள்ள சோதிடர்கள் குடும்பத்தில் குறிப்பிட்டு கூறுமளவுக்கு பெரிய அளவில் வேதனை அல்லது குறை இருக்கும்.
உடனே சோதிடம் கர்மா சேர்க்கும் தொழில் என்று கூறி பலர் மனதை தேற்றலாம்.
காரணம் அதுவல்ல எதிர்மறை பலன்களால் நிரம்பிய மனம் அதையே தனக்கும் செய்து கொள்ளும்.
ஆனால் நாம் அது போல் இங்கு எதையும் கற்க போவது இல்லை. வாழ்க்கையின் போக்கிலேயே வாழ்க்கையை காணப்போகிறோம்.
நமது முறைப்படி தோசம். சாபம். பாவம். பரிகாரம். தகடு . மந்திரம் என எதுவும் இல்லை.
நீங்கள் கவணித்து இருக்கிறீர்களா என்று தெரியவில்லை. பரிகாரம். தகடு .பாசி விற்பனை செய்யும் சோதிடரோ இல்லை எவரோ ஒருவர் வீட்டிற்கு சென்று பாருங்கள் அங்கு ஒரு இறுக்கமான சூழல் இருக்கும். எண்ணெய் பிசுக்கு கப்பு இருக்கும். சுத்தமில்லாமல் ஏதோ ஒரு தவறான இடத்தில் உள்ளது போல உணர்வு வரும். அவரது நக இடுக்குகளில் அழுக்குகள் நிறைந்து இருக்கும். அவரது குடும்பத்தில் யாரோ ஒருவர் மனநலமில்லாமல் அல்லது வாழ வழியில்லாமல் வீட்டில் முடங்கி இருப்பார்கள். இன்னும் நெரய பேசலாம் ஆனால் இது போதும்.
ஆனால் நாம் இப்போது வெறொருவருக்கு பலன் கூறப்போவது இல்லை . இங்கு எதிர்மறையான சிந்தனைகள் எதற்காகவும் தேவையில்லை. பெரும்பாலும் இந்த நெகடிவ் வார்த்தைகள் பரிகாரம் செய்ய வைக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நமக்கு அது தேவையில்லை. ஏனெனில் உங்க ஜாதகத்தை நீங்கள் பார்த்து நீங்களே புரிந்து கொள்ள இது போல கதைகள் எதுவும் தேவையில்லை.
எனவே உங்கள் மனதில் எங்காவது ஒரு மூலையில் எதிர்மறை சிந்தனை ஒட்டியிருக்குமானால் அதை துடைத்தெறியுங்கள். நமக்கு அது எதற்கவும் தேவையில்லை.
தொடர்ந்து பேசலாம்.

பகுதி 17.
வணக்கம் நண்பர்களே .
சரியாக உள்வாங்கி கொள்ளுங்கள். குழப்பங்கள் என்பது என்னவென்றால் ஒரு இடத்தில் கிடைத்ததை அடுத்த இடத்தில் பொருத்திப் பார்ப்பதுதான். நீங்கள் இதுவரை படித்த தெரிந்த பல வித சோதிட நுனுக்கங்களை இதில் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்.
சரியாக உள்வாங்கி கொள்ளுங்கள்.
பொதுவாக சோதிடத்தில். கிரகங்களுக்கு தனியான ஒரு தன்மை உள்ளது. அதே நேரம் ஸ்தான காரகம் என்று ஒன்றும் உள்ளது. தசா நாதன் தன்மையை ஸ்தான பலம் வழியாக கணிக்க வேண்டும். நாம் இங்கு ஸாதானம் பற்றி பேசவில்லை. அதனால் லக்னம் . தசா புத்தி கணிதங்களும் தேவையில்லை.
சரியாக உள்வாங்கி கொள்ளுங்கள்.
ஒரு கிரகம் தனித்துவமான தன்மையை குறிக்கும். உதாரணமாக சுக்கிரன் என்பது எதிர்பாலினத்தைக் குறிக்கும் என்றால் அனைவருக்கும் அதையேதான் குறிக்கும். ஆளாளுக்கு மாறாது.
ஆனால் ஸ்தானபலம் என்பது வேறு . உதாரணமாக ரிசப லக்னம் என்றால் இப்போது சுக்கிரன் இரு வேறு தன்மைகளை குறிகாட்டும். லக்னத்தின் தன்மையான குணம். உருவம். ஆற்றல். உடலமைப்பு. போன்றவைகளையும். ரிசபத்தில் (லக்னத்தில்) இருந்து ஆறாமிடத்தின் அதிபதியாக அதே சுக்கிரன் வரும் எனவே இப்போது சுக்கிரன் வம்பு வழக்குகள் எதிரி உள்ளுறுப்புகள் சேதம் போன்றவற்றை கூறும். ஆனால் இதை வேறு ஒரு ஜாதகருக்கு பொருந்தாது அவருடைய லக்னத்தை பொறுத்து மாறுபடும். அதே சமயம் அந்த சுக்கிரன் எங்கே சென்று அமர்ந்தது அது எத்தனையாவது வீடு. அந்த வீட்டின் அதிபதி அது அமர்ந்த வீடு. எனத்துவங்கி எந்த எந்த தசா நாதன் நடப்பில் உள்ளதோ அந்த கிரகத்தின் ஆதிபத்தியம் அது அமர்ந்த வீட்டின் அதிபதி எனத்துவங்கி ஒவ்வொரு கிரகமும் ஏறிய நட்சத்திர சாரம் அதன் அதிபதி. அது அமர்ந்த நட்சத்திர சாரம் என்று இந்த கதை நீளும்.
ஆனால் இதை வைத்து நீங்கள் ஒரு முடிவுக்கு வர முடியாது.
நீங்கள் இதெயெல்லாம் தெரிந்திருநாதாலும் இந்த 21 நாட்கள் ஓரமாக வைத்து விட்டு வாருங்கள்.
இவ்வளவு குழப்பம் தேவையில்லை. ஏனெனில் இவ்வளவு இடியாப்பம் போல கணிதங்களில் தேறியவர்கள் கூட கடைசியில் ராசி பலன்கள் கூறுவதை பார்க்கும் போது பிறகு எதற்கு இவ்வளவு கணிதங்கள் என்று நகைக்கத் தோன்றுகிறது.
நாம் தெளிவாக இருக்கலாம்.
சரியாக உள்வாங்கி கொள்ளுங்கள்
எந்த ஒரு கிரகமானாலும் அனைவருக்கும் ஒரே தன்மையை மட்டுமே குறிகாட்டும்.
உங்களுக்கு சந்திரன் என்றவுடன் தாய் என்றும். சூரியன் என்றால் தந்தை என்றும். புதன் என்றால் காதல். கல்வி என்றும். செவ்வாய் என்றால் சக உதிரன் ( சகோதரன்) என்றும் தெரியும்தானே. இதுதானே சோதிடத்தில் அடிப்படை . ஆம் நமக்கு தெரிந்துள்ளது. ஆனால் சிலரின் வார்த்தைகள் நம்மை குழப்பி விட்டது.
எந்த கிரகம் எந்த ராசியில் இருந்தாலும் அது தான் குறிக்கும் தன்மையை மட்டுமே செய்யும். ஒவ்வொரு ராசிகளுக்கும் சிறு வேறுபாடுகள் வைத்திருந்தாலும் தனது நிலையான காரகத்தை எப்போதும் மாற்றிக் கொள்ளாது.
இன்னும் புரியும்படி கூறுகிறேன்.
ஒரு காவல் ஆய்வாளர் இருக்கிறார் அவரது அதிகாரம் எவ்வளவு உயர்ந்தது என்று உங்களுக்கு தெரியும். அவர் எல்லைக்குட்பட்ட அனைத்து விசயங்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரக் குவியலாக அவர் இருப்பார். அவருக்கான பொறுப்புகளும் மிக அதிகம்.
நீங்கள் அவரை அவரது காவல் நிலையத்தில் போய் பார்க்கும் போது அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கும்.
அதே நேரத்தில் எஸ்பி அலுவலகத்தில் அதே ஆய்வாளர் இங்கு இருக்கும் தோரனையோடு இருக்கமாட்டார் ஏனெனில் அங்கு இவரைவிட அதிகமான அதிகாரம் உள்ளவர் இருக்கிறார். இதே ஐஜி அலுவலகத்தில் எனில் இன்னும் கூட தோரனை குறையும். ஆனால் கூட அவர் ஆய்வாளர்தான் அவரது அதிகார வரம்பு குறையவில்லை. ஆய்வாளர் தனது பொறுப்பை மற்றும் அதிகார வரம்பை அப்படியே வைத்திருந்தாலும் அவர் இருக்கும் இடத்தை பொறுத்து அவரது ஆளுமையின் தன்மை இருப்பதைப் போல எந்த கிரகமானாலும் அதற்கான தன்மையை அப்படியே வைத்துக் கொண்டு அது இருக்கும் ராசிக்கு தக்க மாறுதலாக இருக்கும். இதில் இந்த ராசிகளில் இந்த கிரகம் பலமானது. பலமிழந்து இருக்கிறது என்று எந்த மாற்றமும் இல்லை. எந்த கிரகம் எங்கே இருந்தாலும் ஒரே பலம் தான். ஆய்வாளர் எங்கே இருந்தாலும் அவர் ஆய்வாளர்தான்
தொடர்ந்து பேசலாம்.

பகுதி 18
இதுவரை நாம் பார்த்த விசயங்களை மீண்டும் ஒரு முறை சுருக்கமாக காண்போம்.
ஒரு ஜாதகம் என்பது காலக்குறியீடு.
நமது வாழ்க்கையை அளவிட காலம் என்ற அளவீடை நாம் பயன்படுத்துவதால். காலத்தை பற்றிய தகவல்களை வைத்து வாழ்க்கையை புரிந்து கொள்கிறோம்.
பிறந்த ஜாதகத்தில் நீங்கள் தெரிந்து கொண்ட விசயங்கள் உங்கள் விதி. இதுதான் உங்களுக்கு நடக்கும் என்ன செய்தாலும் அதுதான் நடக்கும் மாற்றவே முடியாது. நீங்கள் எதையாவது செய்து மாற்ற முயன்றாலும். அதில் உங்கள் கவனக்குறைபாடே அந்த சிக்கலை உருவாக்கி உங்களுக்கு நடக்க வேண்டியதை நடத்தி விடும். இது நன்மை மற்றும் தீமை இரண்டுக்கும் பொதுவானது.
நன்மை என்பது இயல்பாக இடையூறு இல்லாமல் வாழ்க்கை நகர்வது. தீமை என்பது அவ்வாறு நகரும் போது நமக்கு இடையூறு இருப்பது போல தோன்றுவது. எப்படி இருப்பினும் வாழ்க்கை நகர்ந்து கொண்டே இருக்கும்.
அப்படி நமது வாழ்க்கை எப்படி உள்ளது என்று ஜாதகத்தை வைத்து அறியலாம்.
ராகு மற்றும் கேது வுக்கு 1,5,9 ல் உள்ள கிரகங்களின் தன்மையை நீங்கள் பெறுவதில் தடை மற்றும் இடையூறுகள் உண்டாகும்.மேலும் வக்ரம் மற்றும் பரிவர்த்தனை அடைந்த கிரகங்கள் தன்மையை நீங்கள் பெறுவதில் குழப்பம் அல்லது தீர்மானமாக நிலையாக தேடுதல் அல்லது அனுபவித்தலில் குளறுபடி உண்டாகும்.
வாழ்க்கை முழுவதும் நீங்கள் சந்திக்கும் பிரச்சினை இது மட்டுமே. வேறு பிரச்சினை உங்களுக்கு பெரிதாக இருக்காது.
இது எப்போது உண்டாகும் என்பதையும் அதை குறிகாட்டிகள் நகர்வதன் மூலம் அறியலாம்.
காலை ஆறு மணிக்கு எழுந்து பணிகளை முடித்து உணவு உண்ண மணி எட்டரை என்பதை வேறு ஒரு மாதிரியான நேரக்குறியீடுகளை பயன்படுத்த முடியாது. அதற்கும் முதலில் பார்த்த அதே கடிகாரத்தை மட்டுமே பயன்படுத்த முடியும்.
வேறு ஒரு உதாரணம். நீங்கள் பயணம் செய்கிறீர்கள். மொத்தமாக 120 கி.மீ தூரம். உங்களுக்கு 65 கி. மீட்டரில் உணவு தயாராக உள்ளது. நீங்கள் 65 மைலில் நிறுத்தி உணவை தேட முடியாது.
அதாவது நாம் முதலில் பயன்படுத்திய அளவீடைத்தான் நடப்பிலும் பயன்படுத்த வேண்டும்.
நீங்கள் ராசிகளில் கிரகங்கள் உள்ளதை வைத்து வாழ்க்கையை புரிந்து கொள்வதால். அது எப்போது நடக்கும் என்று புரிந்து கொள்ள அதே ராசி சக்கரம் மற்றும் அதே கிரகங்கள் மட்டுமே பயன்படும். பிறந்த போது குறித்த கிரகங்கள் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கும் அதை வைத்து வாழ்க்கையில் நடக்கவுள்ளதை தெரிந்து கொள்ள முடியும்.
பலர் கூறலாம். கோச்சாரம் பத்து சதவீதம். தசா 90 சதவீதம் பலனை அளிக்கும் என்று நான் வெளிப்படையாக கூறுகிறேன் அவர்கள் யாருக்குமே தசா புத்தி என்றால் என்ன என்றே தெரியாது. புத்தகத்தை படித்துவிட்டு அதில் உள்ளதை கிராமபோன் ரெக்காடுகளை போல ஒப்புவிக்கிறார்களே ஒழிய அவர்களுக்கு தசா புத்தி பற்றி அதன் அடிப்படை உருவாக்கம் பற்றி ஆனா ஆவன்னா கூட தெரியாது. அதனால்தான் அவ்வாறு பேசுகிறார்கள்.
சுருக்கமாக கூறினால்.
பிறந்த ஜாதகத்தில் உள்ள பலன்களை வாழ்க்கை முழுவதும் நடக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள். அது எவ்வெப்போது நடக்கும் என்று அந்த கிரகங்கள் நகர்தலின் மூலம் அதாவது கோட்சாரத்தின் மூலம் அறியலாம். .
உதாரணமாக நீங்கள் ஆர்டர் செய்த உணவு போல பிறந்த ஜாதகம். கோட்சாரம் என்பது அதை சப்ளை செய்யும் உணவக ஊழியரைப்போல அது எப்போது உங்கள் மேசைக்கு வரும் என்று அவரது வருகையை வைத்து முடிவெடுக்கலாம்.

பகுதி 19
வணக்கம் நண்பர்களே.
கடிகாரத்தில் உள்ள சிறிய முள் எந்த நாட்டில் என்றாலும் மணியை மட்டுமே உணர்த்தும். ஊர் ஊருக்கு மாறுபடாது அது போல எந்த கிரகம் என்றாலும் அது அனைவருக்கும் ஒரே குனத்தை மட்டுமே குறிக்கும். ஆளாளுக்கு மாறாது.
சிலர் லக்னத்தில் இருந்து எண்ணி ஒவ்வொரு வீட்டின் அதிபதிக்கும் தன்மைகளை கூறுவர் . இனி அது தேவையில்லை ஏனென்றால் அது எதார்த்தத்தில் ஒத்துவராது.
எனவே உங்கள் ஜாதகத்தில் உள்ள ஒவ்வொரு கிரகமும் அனைவருக்கும் போலவே குறிப்பிட்ட குணங்களை மட்டுமே குறிக்கும்.
கடிகார முள் உலகம் முழுவதும் ஒரே மாதிரி பயன்படுத்தப் பட்டாலும். ஒவ்வொரு ஊருக்கும் வெவ்வேறு மணிகளை கூறுவதை போல ஒவ்வொரு மனிதருக்கும் பலன் அவர் பிறந்த ஜாதகத்தில் உள்ள நிலைகளை பொறுத்து மாறுபடும்.
நீங்கள் லக்னம். நட்சத்திரம். ராசி. நவாம்சம். அங்கீசம். சோதச வர்க்கம். திதி. சூன்யம். செவ்வாய் தோஷம், நாக தோஷம். சந்தி. தசா புத்தி. அஸ்தங்கம் . உச்சம் நீசம். பகை நட்பு. பாவர் சுபர். யோகி அவயோகி. ஏழரை. அட்டம சனி. பாவ ஆதிபத்தியம். சூட்சும வலு. உப நட்சத்திர. உப உப நட்சத்திரம் ஆளும் கிரகங்கள். பாவ குறிகாட்டி. பார்சூனா, பாதகாதிபதி. மாரகாதிபதி. என இதுவரை நீங்கள் மனப்பாடம் செய்த எந்த விசயமும் பலன் கூறுவதற்கு தேவையில்லை. ஏனென்றால் இவைகளை பற்றி தெரிந்து கொள்வதற்கும் பலனுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
உங்களுக்கு ராசிகளின் பெயர் அதன் அதிபதி. ஒவ்வொரு கிரகத்திற்கும் அதிகபட்சமாக நான்கு குணங்கள் தெரிந்தால் போதும். ஒரு ஜாதகத்தை ஒரு நிமிடத்தில் பிரித்து மேய்ந்து விடலாம்.

பகுதி 20.
நான் பதிவிடும் இணைவு பலன் பதிவுகளில் உள்ள நெகடிவான விசயங்களை மட்டும் பிரித்து எடுத்து கையில் வைத்துக் கொண்டு வயிற்றில் இடித்து இடித்து அழவேண்டாம் . அது இயல்பாக அந்த ஜாதகருக்கு உள்ள விசயம். ஆனால் ஒவ்வொரு பிரச்சனைகளும் தனித்தனியானது. ஒன்றை ஒன்றோடு சேர்ந்து வைத்து கொண்டு நாம்தான் ஒப்பாரி வைக்கிறோம். ஒரு விசயம் ஒரு விசயத்தை தீண்டாது.
நான் இதற்கு முன் குரு ராகு இணைவு பற்றி பதிவிட்டு உள்ளேன். அதில் இறுதியில் ஒரு விசயத்தை அழுத்தமாக கூறியுள்ளேன். ஆனால் அதை நமது மக்கள் தெளிவாக படிப்பது இல்லை.
குரு ராகு என்பது ஜாதகரின் குணத்தில் குறிப்பிட்ட அமைப்புகளை உண்டாக்கும் அவ்வளவுதான். ஆனால் தொழில். செல்வம். குடும்பம் போன்ற சிக்கலை வழங்காது. எதுவரை என்றால் அந்த ஜாதகர் தனது நிலையை புரிந்து கொள்ள வேண்டும். தனது சிக்கலுக்கு காரணம். புறவிசயங்கள் இல்லை. எனவே வாழ்க்கை முழுவதும் அடுத்தவர்களை நொந்து கொள்ள தேவையில்லை என்று முடிவு எடுக்க வேண்டும். ஆனால் இவராலும் திருந்த முடியாது. ஆனால் அடுத்தவரை திருத்த முயற்சி செய்து களைப்படையாமல் இருக்கலாம். மேற்படி குரு ராகு வேறு விசயங்கள் மீது தடையை உண்டாக்காது. ஏனெனில் அதற்கு அந்த கிரக நிலைகள் செயலாற்றும்.
ஒவ்வொரு விசயத்தையும் தனித்தனியாக அறிந்து கொள்ளுங்கள். இவை அனைத்தையும் ஒன்று சேர்ந்து புரிந்து கொள்ள தேவையில்லை. அவ்வாறு இணைத்து பார்க்க வாழ்க்கை பற்றிய தெளிவு மற்றும் பலனெடுத்து கூறும் அனுபவம் தேவை.
நீங்கள் ஆரம்பத்தில் தனித்தனியாக அறிந்து கொள்ளலாம். உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகள் உங்களுக்கு என்ன மாதிரியான சிக்கல்களை கொண்டு வரும் என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள். பதட்டப்படாதீர்கள்.
நீங்கள் கண்டுபிடித்ததால் மட்டுமே அது வந்து விடவில்லை. அது எப்படியும் வரும். இப்போது நீங்கள் அதை கண்டறிந்ததால் உங்களுக்கு விழிப்புணர்வு அதிகமாகிறது அவ்வளவுதான். ஆனால் நாமோ விழிப்புணர்வு அடைவதற்கு பதிலாக அச்சமடைகிறோம் பதட்டப்படுகிறோம். அடுத்தபடியாக நமக்கு இதை மாற்ற வேண்டும் என்று ஆசை வந்து விடும். இப்போது நீங்கள் உங்களையே அறியாமல் பரிகாரத்தை நாடி இன்னும் அதிகமாக சிக்கலை உண்டாக்கிக் கொள்வீர்கள்.
முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் வாழ்க்கையை பற்றி எதுவும் தெரியாமல் இருப்பது கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருக்கும் போது கண் கட்டை அவிழ்த்து விடுவது சோதிடம். கண் தெரிந்து விட்டதால் மட்டுமே காடு நகரமாக மாறிவிடாது அப்போதும் அது காடுதான். ஆனால் அடுத்து நீங்கள் எடுத்து வைக்கும் அடியை தெளிவாகவும். நிம்மதியாகவும் எடுத்து வைக்கலாம். உங்கள் பயணம் இப்போது அச்சமில்லாமல் இருக்கிறது.
உதாரணமாக நீங்கள் ஒரு பேருந்து நிலையம் செல்கிறீர்கள். அங்கு எந்த பேருந்திலும் எந்த ஊருக்கு செல்லும் என்று பலகை இல்லை. உங்களை பிடித்து தள்ளி அடுத்த பேருந்தில் ஏற்றி அமர வைத்து விட்டனர். கண்டக்டர் வந்து டிக்கெட் ம் கொடுத்து விட்டார். எங்கு இறங்கினாலும் ஒரே கட்டணம். இப்போது நீங்கள் பேருந்தில் எங்கே போகப்போகிறீர்கள் என்று ஒவ்வொரு கணமும் கேள்வி உங்கள் மூளையை துளைத்தெடுக்கும். நீங்கள் எதற்காக அங்கே போக வேண்டும் என்றும் தெரியாது. சரியாக புரிந்து கொள்ளுங்கள்.
இதே நீங்கள் எந்த ஊரில் எந்த ஸ்டாப்பில் இறங்க வேண்டும் என்று தெரிந்து விட்டது என்றால் உங்களுக்கு கேள்விகள் வராது. விழிப்புணர்வு என்பது குழப்பங்களை குறைக்கும். உங்களுக்கு பேருந்து எங்கே செல்கிறது என்று தெரிந்ததால் மட்டுமே பேருந்து வேறு ஊருக்கு செல்லாது.
நீங்கள் திருச்சி பேருந்தில் ஏற்றி விடபட்டு இருப்பதை தெரிந்து கொண்டதால். நீங்கள் திண்டுக்கல் செல்ல வேண்டும் என்று ஆசை பட்டாலும் அது நடக்காது . ஏனெனில் நீங்கள் இங்கே தேர்தெடுக்க முடியாது இருக்கிறீர்கள். இப்போது நீங்கள் திருச்சி வேலைகளை பேருந்து பயணத்தில் ஆறஅமர உட்கார்ந்து சிந்திக்கலாம்.
தொடர்ந்து பேசலாம்.

பகுதி-21
எதாவது கிரகம் பார்த்தல் பலன் மாறுமா என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம். ஏனெனில் தற்போது உள்ள சோதிடத்துறை அப்படி ஒரு நம்பிக்கையை விதைத்துள்ளது.
உதாரணமாக குரு பார்த்தால் பலன் சுபபலனாகிவிடும் என்றும். சனி செவ்வாய் பார்த்தால் அது மேலும் அசுபமாகி விடும் என்றும் நம்பப்படுகிறது.
உதாரணமாக சுக்கிரன் ராகுவில் இருந்து 1,5,9 ல் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த ஜாதகருக்கு திருமண வாழ்க்கை சிக்கலாகும். இப்போது சுக்கிரன் உள்ள வீட்டிலேயே குரு உள்ளது என்று எடுத்து கொள்வோம். இப்போது திருமண வாழ்க்கை பிரச்சினை இருக்காதா என்றால் நிச்சயமாக இருக்கும். இப்போது பிரச்சினை இன்னும் சிக்கலாக இருக்கலாம். முன் கூறிய அமைப்பு சிக்கலை ஏற்படுத்தும். குருவும் சேர்ந்ததால் ஜாதகருக்கு அவரது தோழிகளின் சாவகாசத்தால் குடும்ப பிரச்சினை உருவாகும்.
சரி சுக்கிரன் மற்றும் ராகு இந்த இணைவில் சனி வந்தால் என்ன ஆகும். இப்போது கூட பிரச்சினை வரும். ஜாதகர் தொழிலில் மூழ்கி கிடப்பார் அதுவே குடும்ப சிக்கலை ஏற்படுத்தும்.
சரி இப்போது செவ்வாய் சேருகிறது. என்ன நடக்கும். ஜாதகர் கடன் பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் அந்த கோபத்தை குடும்பத்தில் காட்டுவதால் பிரச்சினை உண்டாகும்.
எனவே எந்த கிரகமும் சுபர் இல்லை அதே நேரத்தில் எந்த கிரகமும் அசுபரும் இல்லை. அதனுடைய தன்மைகளை அவையவை தனித்துவமாக செய்கிறது.
உங்களுக்கு பக்கத்து வீட்டுக்காரன் ஒத்து வராவிட்டால் அவனை நீங்கள் அயோக்கியன் என்று கூறலாம். ஊரில் கேட்டால்தான் தெரியும் அயோக்கியன் யாரென்று. எனவே நமக்கு நாமாக புரிந்து கொள்ள வைத்த பெயர்கள்தான் சமம் நட்பு பகை சுபர் அசுபர் என்பதெல்லாம்.
காட்டிற்கு ராஜா சிங்கம் என்று சிங்கத்திற்கு தெரியாது அது அதாகவே இருக்கிறது. நமது இயலாமையின் விளைவால் அது பலமானதாக தெரிவதால் நம்மை பொறுத்தவரை அது காட்டின் ராஜாவைப் போல நாம் பெயரிட்டு வைத்துள்ளோம்.
பகுதி 22

குரு + ராகு. Vs குரு+கேது
பெரிய சண்டை. இரண்டு பக்கமும் இணையான பலம் கொண்ட நபர்கள் கெட்டவார்த்தைக்கு அங்கு உரமிட்டது போல பஞ்சமின்றி பூத்து காய்த்து கணிந்து குழுங்குகிறது. இரண்டு பக்கத்திலும் ஆயுதங்கள் தாக்குதலுக்கு தயாராகிவிட்டனர்.
இடையே நின்ற ஊர் கங்காணி இல்லாவிட்டால் இந்நேரம் பல சாவுகள் நடந்தேறி இருக்கும். அவர் என்ன தடுத்தாலும் தடை செய்யும் நிலையை கடந்து விட்டது பிரச்னை. இந்த பக்கம் இருந்து வேலாயுதம் கண்டமேனிக்கு வார்த்தைகளை இறைக்கிறார்.
மொத்த குடும்பத்தையும் தேரை இழுத்து தெருவில் விட்டது போல கழுவி ஊத்துகிறார். கங்காணியோ யோவ் வேலாயுதம் நான் இருக்குறன்ல அப்றமா நீபேசிகிட்டு இருந்தா என்ன அர்த்தம். மத்தியஸ்த்தம் பன்ன வந்துருக்கம்ல பேசி ஒரு முடிவுக்கு வாங்க ங்கரார்.
ஆனால் வேலாயுதத்தின் கண்கள் சிவந்து. மீசையை முறுக்கி கொண்டு கையில் உள்ள அறுவாளை சுழற்றி அனைவரும் அஞ்சும் படி நடந்துகொண்டான். இவர் அந்த ஊரில் பெயர் பெற்ற சாமியாடியும் கூட
வேலாயுதத்தின் மனைவிக்கு பயம் எங்கே தனது வீட்டுகாரர் மர்டர் கேசில் போய்விடப்போகிறார் என. தனது மகன் முத்துவிடம். டேய் அவரப்போய் பிடிடா யாரையும் கோவத்தில் வெட்டி சாச்சிட போறார். தேவையில்லாத கோர்ட் கேசாகிடப் போகுது ன ஒடனே முத்து ஓடி ப்போய் வேலாயுதம் அருகே நின்று கொண்டு அப்பாவை விடுப்பா னு சாந்தபடுத்துறான் .
ஊர் மக்கள் வேலாயுதம் எதுவும் செய்துவிடக்கூடாது என்ற சிந்தனையில் நிற்கிறார்கள். கங்காணி இல்லாவிட்டால் இந்நேரம் அக்குவேறா ஆணிவேறாக பிரித்து மேய்ந்திருப்பார்.
வேலாயுதத்திற்கு குரு +ராகு சும்மாவா சும்மா அதிரும்ல.
எதிர் பக்கம் நின்ற புருசோத்தமனுக்கு வேலாயுதம் சித்தப்பா முறை. புருசோத்தமனுக்கு தந்தை இல்லை தாத்தாவிடம் வளர்ந்தவன் சத்தமாக பேச தெரியாது. சுருக்கமாக சொன்னா புள்ளபூச்சி . ஆனால் அவனால் சித்தப்பாவின் வார்த்தைகளை தாங்க முடியாமல் கண்களின் ஓரம் நீர் திவளைகளுடன் நின்றிருந்தான்.
சொத்து தகராறு. புருசோத்தமனுக்கு பெரியதாக ஆசையில்லை ஆனால் தனது குடும்பத்திற்கு வர வேண்டியதை விட்டுதர மனமில்லை.
வேலாயுதத்தின் தாண்டவம் அதிகமானது வார்த்தைகள் தடிக்க துவங்கின. பலர் அவரை பிடித்து இழுத்து வைத்துள்ளனர். விட்டால் வில்லில் இருந்து கிளம்பும் அம்பு போல முன் உள்ள எல்லோரையும் வெட்டி குமித்து விடுவான்.
ஆக்ரோஷத்தின் எல்லைக்கே போய்விட்டான். வாடிவாசலில் கட்டுண்ட காளை போல உறுமினான்.
அடிபட்ட சிங்கத்தின் மூச்சுக் காற்று அதன் கர்ஜனையை விட அதி பயங்கரமாய் இருக்கும் என்பது போல அவன் மூச்சுக்காற்றிலேயே எதிரிகள் அழிந்து விடும் அளவுக்கு உக்ரமாக மாறினான்.
வார்த்தைகளை அவன் மடை திறந்த வெள்ளம் போல சகட்டு மேனிக்கு வாரி வீசினான்.
புருசோத்தமனுக்கு தாங்க முடியவில்லை. தன்னை நம்பி வந்த மனைவியை இந்த அவதூறு வார்த்தைகள் காயபடுத்துவதாக உணர்ந்தான்.
அருகே இருந்த ஒரு குடிசையில் நீட்டி கொண்டிருந்த மூங்கிலை ஒடித்தான் அதில் முனி சாய்வாக வெட்டபட்டு காய்திருந்தது. மெதுவாக முன்னேறியவன் அந்த மூங்கிலை வேலாயுதத்தின் பக்கவாட்டு கழுத்து வழியாக இதயத்தை துளைக்குமாறு மேலிருந்து கீழாக ஒரே எறக்கு இறக்கினான். வேலாயுதம் கண்கள் செருக சரிந்து விழுந்தார்.
புருசோத்தமன் கையில் இருந்த ரத்தத்தை தனது தோளில் உள்ள துண்டில் துடைத்து விட்டு இடத்தை விட்டு நகர்ந்தான். புருசோத்தமனுக்கு குரு +கேது.
வேலாயுதம் குரு +செவ்வாய் +ராகு
புருசோத்தமன் குரு +செவ்வாய் +கேது

இன்னும் பேசுவோம் ...
வக்ரம் என்றால் என்ன? வீடியோ கீழே 
https://youtu.be/I8IePjvSM_U

நன்றி ; கா . பார்த்திபன்