Friday 24 April 2020

விவசாய பழமொழிகள்



#நம்_பண்டைய_விவசாயப்_பழமொழிகள்...

🌝 தவளை கத்தினால் மழை 

🌝 அந்தி ஈசல் பூத்தால் 
அடை மழைக்கு அச்சாராம் 

🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை

🌝 எறும்பு ஏறில் பெரும் புயல் 

🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது 

🌝 தை மழை நெய் மழை

🌝 மாசிப் பனி மச்சையும் துளைக்கும் 

🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு

🌝 புற்று கண்டு கிணறு வெட்டு

🌝 வெள்ளமே ஆனாலும் 
பள்ளத்தே பயிர் செய் 

🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு

🌝 களர் கெட பிரண்டையைப் புதை 

🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி 
கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு

🌝 நன்னிலம் கொழுஞ்சி 
நடுநிலம் கரந்தை 
கடை நிலம் எருக்கு

🌝 நீரும் நிலமும் இருந்தாலும் 
பருவம் பார்த்து பயிர் செய் 

🌝 ஆடிப்பட்டம் பயிர் செய் 

🌝 விண் பொய்த்தால் மண் பொய்க்கும்

🌝 மழையடி புஞ்சை
மதகடி நஞ்சை 

🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை

🌝 உழவில்லாத நிலமும் 
மிளகில்லாத கறியும் வழ வழ 

🌝 அகல உழவதை விட 
ஆழ உழுவது மேல் 

🌝 புஞ்சைக்கு நாலு உழவு 
நஞ்சைக்கு ஏழு உழவு 

🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை

🌝 ஆடு பயிர் காட்டும் 
ஆவாரை கதிர் கட்டும் 

🌝 கூளம் பரப்பி கோமியம் சேர் 

🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை 

🌝 நிலத்தில் எடுத்த பூண்டு 
நிலத்தில் மடிய வேண்டும்

🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்

🌝 தேங்கி கெட்டது நிலம் 
தேங்காமல் கெட்டது குளம்

🌝 கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை 

🌝 சொத்தைப் போல் 
விதையை பேண வேண்டும்

🌝 விதை பாதி வேலை பாதி

🌝 காய்த்த வித்திற்கு பழுது இல்லை 

🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு

🌝 கோப்பு தப்பினால் 
குப்பையும் பயிராகாது

🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம் 

🌝 கலக்க விதைத்தால்
களஞ்சியம் நிறையும்.
அடர விதைத்தால் போர் உயரும் 

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! 
வாழ்க வளமுடன்! 
எல்லா உயிர்களும் இன்பமாக வாழ்ந்தால் மட்டுமே நாம் நலமோடு வாழ இயலும்.

யாரையும் நம்பாதீர்கள்.

உழவே தலை.

தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.

நீர் இன்றி அமையாது உலகு.

"என் மக்கள்"
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்.

கடைசி மரமும் வெட்டி உண்டு
கடைசி மரமும் விஷம் ஏறிக்
கடைசி மீனும் பிடி பட
அப்போதுதான் உறைக்கும் - இனி
பணத்தைச் சாப்பிட முடியாது என்பது!!

ஆறும் குளமும் மாசு அடைந்தால்
சோறும் நீறும் எப்படி கிடைக்கும்!.

நீர் நிலைகளை காப்போம்.
இணைவோம்.

நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை.

மேழிச் செல்வம் கோழை படாது.

*அன்புடன்*
*உங்கள் விவசாய* *நண்பன்*
*பகிர்ந்தால் நம் மண்* *மீண்டும் செழிக்கும்*.

ஜபம் என்றால் என்ன?

ஜபம்

திடீருன்னு இதைபத்தி சொல்லனுமுன்னு தோணித்து....

ஜபம் சம்பந்தமா ஒரு ஐந்து பேருக்குள்ள நடந்த உரையாடலை உதாரணமா  சொல்லறாங்க...  உதாரணம்னா ஒரு விதின்னு வெச்சுக்கோங்களேன்.

அந்த ஐந்து பேர் யாருன்னா?

1) ப்ராம்மணன் 2) யமன் 3) காலன் 4) மிருத்தியு 5) இஷ்வாகு

இவங்க உரையாடல் சுருக்கம் என்னான்னா....

ஞானம் யோகம் இந்த ரெண்டு மார்க்கத்திலும் ஜப யக்ஞம் சொல்லப்பட்டிருக்கு.... இதில் ஜனங்களில்லா இடம், அக்னி பூஜை, அடக்கம், பொறுமை,கணக்குள்ள ஆகாரம், அஸூஸை, மிதவசனம்,இந்திரிய அடக்கம் ஜபத்திற்க்கான பலன் கொடுக்கும்.

( வாய்க்கு வந்தபடி பேசிட்டு மவுனம் இல்லாமல் இருந்துட்டு கண்டதை சாப்பிட்டு இருந்தா ஜபம் பலிக்கறது கஷ்டம்).

சில இடத்தில் குசப்புல் அப்படிங்கறதையும் மனிதன் தரிப்பவனா இருக்கனுமுன்னு சொல்லறாங்க.

 ( தலை, கால் இப்படின்னு அளவு கணக்குண்டு).

எவன் சமபுத்தி உடையவனாக வந்து பிரம்மத்தை தியானிப்பவனாகவும் ஆகி பின் ஸமாதியில் நிலைபெற்றால் அவன் ஜபத்தை விலக்கி கொள்ளலாம். 

( பிறகு ஜபம் அவசியமில்லை)

சாதாரண மனிதன், இஷ்டமந்திரத்தை பிரவணத்துடன் ஜபிக்க வேண்டும்.எந்த வஸ்து பிரியமுள்ளதோ அதில் மனம் ஒன்ற வேண்டும்.  இதே போல காயத்திரி ஜபிக்க வேண்டும். தவத்தால் பரிசுத்த மனம் பெறவேண்டும். அடக்கமுள்ள மனமாகவும் பகையையும் ஸ்னேக்த்தையும் விலக்கியும் ஆசையும் அவிவேகமற்றவனும் குளிர்வெப்ப முதலிய தத்துவத்தில் பற்றுக்கொள்ளாமல் சோக்த்தையும் ஒதுக்கியவனுக்கு ஜபம் பிடிபடும்.

அதே போல தியானம் செய்வதை காரியமாக கொண்டும் அந்த தியானத்தால் நிச்சயமான ஞானமுள்ளவனுமாகி பிறகு அதில் ஸமாதியை உண்டுபண்ணிக்கொண்டு அந்த தியானத்தையும் விடவேண்டும்.

இப்படிப்பட்ட யோகியே பிரம்ம ரூபமான சரீரத்தை அடைவான்.  ஸமாதியுள்ளவன் மரணமடைவதாக நினைத்து நிர்விகல்ப சமாதியில் இருக்க வேண்டும்

இவன் எல்லா லோகத்தையும் கடந்து பரமாத்மாவை அடைவான் அல்லது சமாதியில் பிரம்ம ரூப அனுபவத்தை விரும்பாமல் போனால் பிரம்மலோகத்திற்க்கு கிளம்பபோவான். வேறு ஓரிடத்திலும் பிறக்க மாட்டான். 

இப்படிப்பட்டவனே மோக்‌ஷ ரூபமான சுத்த ஆத்மாவை அடைகிறான்.

இப்படியாக நினைத்தே ஜபம் ஆரம்பிக்க வேண்டும் என்பது விதி. 

( நாம என்ன நினைத்து பண்ணறோம்ன்னு தெரியல.. FBல லைக் வாங்கறக்கு கூட பண்ணுவோம்)

என் அனுபவப்படி ஜபத்துக்கு முன்னாடி சில பெரியவங்கள மானசீகமா நினைத்துக்கோங்க.... நல்லது நடக்கும். அவிங்க யாருன்னா?

1) தியாக பிரம்மம் - தினமும் 125000 முறை ராம நாம ஜபம் பண்ணி 21 வருசத்தில் 96 கோடி ஜபம் முடிச்சார்.

2) ஆத்ம போதாந்திராள் : காஞ்சி பீடாதிபதி. தினமு 108000 முறை ராம நாம ஜபம் பண்ணி ராம நாமாவே ஆயிட்டார்.

3) மருத நல்லூர் ஸ்வாமிகள் - எத்தனை தடவைன்னே தெரியலை. ராமரே இவர்தான் அப்படி சொல்லற அளவுக்கு ராம சுபாவம் வந்திருச்சு.

4) கோடகனல்லூர் சுந்தர ஸ்வாமிகள் : தினமும் 100000 பஞ்சாட்சரம் ஜபிப்பார். பரமயோகி. தரையில் இல்லாமல் தரைக்கு மேலே 1 அடி அந்தரத்தில் உட்காரகூடிய யோகி.

Pl note 

ஒரு நாளைக்கே 86400 செக்கண்டுதான்.... ஆனா இவிக பண்ணுனது லட்சத்துக்கும் மேலே.... தெய்வானுகிரகம்...

இப்படியாக பல மஹான்கள் இருக்காங்க.... அதில் சிலரை சொன்னேன்.... ஜபம் மனசும் பகவானும் சம்பந்தப்பட்டது.  ரகசியமானது.

#மஹாபாரதம்
#ஜபம்

ராம ராம ராம

நன்றி ; ராமசாமி

Monday 20 April 2020

பல்லுயிர் சூழலோடு வாழும் வாழ்வியல்

பல்லுயிர் சூழலோடு வாழும் வாழ்வியல்

#கோ- அரசன் தீவனம்::::உயிருள்ள பொருளாதரம்

#உயிர்வேலி போதுமே தேவையில்லை #தீவனம்::

#தமிழர் மரபு வழி வேளாண்மையும் உயிருள்ள பொருளாதரமும்:

#உயிருள்ள பொருளாதரத்தை விற்று என்று #உயிரற்ற பொருளாதரமாக மாறியதோ அன்றே நாம் நம் #சுயத்தை இழந்து #அடையாளமற்று நிற்கின்றோம் .

நம்முடன் சேர்ந்து #தாய்நிலமும்.

நாம் #உண்ணும் #உயிருள்ள உணவு #உயிருள்ள செல்களுக்கு #வேலியாக இருந்து நற்செயலாக மாறி #மகிழ்ச்சியான வாழ்வியலை தருகிறது.
அதுபோல்தான், நிலமும் ## உயிருள்ள பொருளாதரமாக இருக்க வேண்டுமே தவிர உயிரற்ற பொருளாதரத்தை நாடினால் நோய் நமக்கு மட்டும் தாய்நிலத்துக்கும்தான் வந்து சேரும்.

#தற்சார்பு #மரபு என்று ஏக்கர் கணக்கில் வாங்கி போட்டு அல்லல் படுவது அல்ல பல்லுயிர் சூழலோடு வாழும் வாழ்வியல்.

அங்கே , உயிரற்ற பொருளாதரத்தை தேடினால் வீழ்வது நாமே.

#விவசாயம் செய்பவர்கள் ஐந்து அடுக்கில் இயற்கை அமைப்போம்!!!!!

#முதல்வரிசை முள் நிறைந்த வேலி மற்றும் உணவுபொருள் மற்றும் ஆட்டுத்தீவனம்
இலந்தை, களாக்காய், (கிளக்காய்),கோணக்கா (கொடுகழிக்கா அல்லது கொடுக்காய் அல்லது கொடுக்கா புள்ளி), காரை முள், சூரை முள்,வில்வம், சப்பாத்திக்கள்ளி, முள் கிளுவை, சூடான் முள், முள் கள்ளி, பரம்பை முள், கருவேல்,குடைவேல்,காக்கா முள், சங்க முள், யானைக்கற்றாழை.

#இரண்டாம் வரிசை #பறவைக்கான உணவு மற்றும் அதன் வீடு மற்றும் #மனிதர்களுக்கான உணவுக்காடு

#ஆலமரம், அரச மரம், அத்தி மரம், நாவல், இலுப்பை, கோடை ஆப்பிள், சிங்கப்பூர் செர்ரீ (சர்க்கரை பழம்), வேம்பு, கொய்யா, மாதுளை, மா, பலா, சீத்தா, பேரீச்சை, ஈச்ச மரம், நெல்லி, புளிய மரம், சப்போட்டா, முந்திரி, ஆரஞ்சு, சாத்துக்குடி, நார்த்தங்காய், பேரிக்காய், எலுமிச்சை, விளாம் பழம்,பாதாம், தென்னை, பனைமரம்,பாக்கு மரம்.

#மூன்றாம் வரிசை #வருங்கால வைப்பு #நிதி மற்றும் விறகு மற்றும் #பசுந்தாள்உரம் மற்றும் #வனக்காடு

#சவுக்கு, மூங்கில், சில்வர் தேக்கு, மலைவேம்பு,குமிழ், வேங்கை, புங்கை மரம், புன்னை மரம், வேங்கை, கடம்பு,தீக்குச்சி மரம், வாகை,சந்தனம் ,தேக்கு,ரோஸ்வுட் ,செஞ்சந்தனம் ,கொன்றை, மருதம், கருங்காலி, உசிலை, தடசு, மந்தாரை, நீர் மருது, மஞ்சணத்தி, பூவரசு, மகிழ மரம், வன்னி மரம்.

#நான்காம் வரிசை #கால்நடை தீவனம்

#அகத்தி, சூபா புல், சவுண்டல், கிளைரிசீடியா, மரக்கிளுவை, மல்பெரி, செடி முருங்கை, கல்யாண முருங்கை.

#ஐந்தாம் வரிசை #மூலிகை மற்றும் #பூச்சிவிரட்டி மற்றும் உணவுபொருட்கள்

#அன்னாசி பழம், பிரண்டை, தூதுவளை, முடக்கற்றான், பண்ணைகீரை, கருவேப்பிலை,கோவக்காய், திராட்சை (முடிந்தால்), வெற்றிலை, செம்பருத்தி ,வெட்டி வேர், லெமன் கிராஸ்,கற்பூர வள்ளி (ஓம வள்ளி), பூனை மீசை, மருதாணி, சோற்றுக்கற்றாழை,நிலவேம்பு ,சிறியா நங்கை, பெரியாநங்கை,முசுமுசுக்கை, திருநீற்றுப்பச்சிலை ,துளசி, துத்தி, தும்பை, குப்பைமேனி,கீழாநெல்லி, அம்மான் பச்சரிசி, ஆடாதோடை, ஆடு தின்னாப்பாளை, நொச்சி, ஆவாரை, ஊமத்தை,நெய்வேலி காட்டாமணக்கு, ஆமணக்கு,எருக்கு,நீர்முள்ளி, சிறுகண்பீளை, சிறுநெறிஞ்சிமுள் ,வேலிப்பருத்தி.

#இட்டேரி என்பது உயிர்வேலிப் பாதை. இருபுறமும் அடர்ந்த #உயிர்வேலி, நடுவில் பாதை இருக்கும்.

#கள்ளி வகைகள்,முள்ளுச்செடிகளுக்கு இடையே வேம்பு, மஞ்சகடம்பு, நுணா, பூவரசு போன்ற மரங்கள், நொச்சி,ஆடாதொடை, ஆவாரம் போன்ற செடி வகைகள், பிரண்டை, கோவை போன்ற கொடி வகைகள் மற்றும் பெயர் தெரியாத எண்ணற்ற புற்பூண்டுகளும் இந்த #உயிர்வேலியில் நிறைந்திருக்கும்.

இந்த #உயிர்வேலியில் கறையான் புற்றுகள், எலி வலைகள் நிறைய காணப்படும்.

#நிழலும், ஈரமும், இலைக்குப்பைகளும் எப்போதும் இந்தப் பகுதியில் காணப்படுவதால், இந்தப் பகுதியில் எண்ணற்ற பூச்சியினங்களும் வாழ்ந்து வந்தன.

#உணவாக உட்கொண்டு வண்டுகள், நண்டுகள், பாம்புகள், பாப்பிராணிகள், உடும்புகள், ஓணான்கள், கோழிகள், குருவிகள், அலுங்குகள் என்று பல உயிர்கள் வாழ்ந்தன.

இந்த #உயிர்களை உண்ண பாம்புகள், பருந்துகள், நரிகள் போன்ற உயிர்கள் இருந்தன.

#கோவைப்பழம், கள்ளிப்பழம், சூரிப்பழம், பிரண்டைப்பழம் போன்ற #கனி வகைகளும், கோவைக்காய், களாக்காய், பிரண்டை கொழுந்து, சீகைக் கொழுந்து என்று சமையலுக்கு உதவும் பொருள்களும், மூலிகைகளும் கிடைத்தன.

இந்த உயிர்வேலியில் வாழ்ந்த குருவிகள், ஓணான்கள், தவளைகள் ஆகியவை சேர்ந்து விவசாயப் பயிர்களைச் சேதப்படுத்தும் பல்வேறு வகை பூச்சிகளை அழித்தன. பாம்புகள்,ஆந்தைகள் போன்ற உயிரினங்கள் எலிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தின.

#பறவைகளின் எண்ணிக்கையைப் பாம்புகளும், வல்லூறுகளும் கட்டுப்படுத்தின.

#பாம்புகளின் எண்ணிக்கையை மயில்கள் கட்டுப்படுத்தின. மயில்களின் எண்ணிக்கையை நரிகளும், காட்டுப்பூனைகளும் கட்டுப்படுத்தின.

#விவசாய நிலங்கள் #வீட்டுமனைகளாக மாறத்தொடங்கி உயிர்வேலிகள் அழிக்கப்பட்டன. மிஞ்சி இருக்கும் விவசாய நிலங்களிலும் உயிர்வேலிகளை அழித்து காக்கா #குருவிகூட #கூடுகட்ட முடியாத அளவிற்குக் #கம்பிவேலிகளை அமைத்துவிட்டோம்.

#ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்குத் தேவையான தீவனம் தரும் மரங்கள் (சூபாபுல், கருவேல்) வளர்க்கலாம்.
#மண்ணுக்கு வளம் சேர்க்க பசுந்தாள் உரம் தரும் செடி, கொடி, மரங்கள் (ஆவாரை, எருக்கு இலை, ஆடுதொடா இலை) வளர்க்கலாம்.
#பாம்பு போன்ற ஊர்வனங்கள் வீடு கட்டி, சந்தோஷமாக வாழ்ந்து நமக்கு தீமை செய்யும் எலி போன்ற உயிரினங்களை அழிக்கும் வகையில் புதர்களை வளர்க்கலாம்.
#பக்கத்து வயல் பங்காளி வரப்பு வெட்டும்போது கொஞ்சம் கொஞ்சமாக நமது நிலத்தை ஆக்கிரமித்துக் கொள்ளாமல் இருக்க, அணைபோடலாம்.
#அடையாளம் தெரியாத பறவைகளை ஈர்த்து, அவற்றுக்கு உணவு கொடுத்து (அத்தி, நாவல்) பண்டமாற்று மூலம் வெவ்வேறு விதைகள் மற்றும் எச்சங்களை உரமாகப் பெறலாம்
#பயிர் பாதுகாப்புக்குப் புழு, பூச்சிகளைத் தின்னும் ஓணான் மற்றும் பறவைகளை ஈர்க்கலாம்.
#காற்றானது நம் நிலத்துக்குள்ளே புகுந்து செல்லும்போது ஈரத்தை காவு கொண்டு சென்று விடாமல் தடுக்கலாம்.
#புயல்காற்று போன்ற ஆபத்தான காலங்களில் காற்றின் வேகத்தை தடுத்து, சேதத்தைக் குறைக்கலாம்.
#மழைக் காலங்களில் சத்துமிக்க மேல்மண் அரித்துச் செல்லாமல் தடுக்கலாம்.
#வீட்டின் எரிபொருள் தேவையைச் சமாளிக்கலாம்.
#கூந்தல்பனை பூ, ஈஞ்சி போன்ற அழகுப் பொருட்கள், வெள்ளெருக்கு பூ போன்ற பூஜை சாதனங்களைப் பெறலாம்.
#அரப்பு, பூச்சை கொட்டைக் காய் போன்ற இயற்கை ‘ஷாம்புகள்’ தயாரிக்கலாம்.
#மனிதர்களுக்கும், ஆடு மாடுகளுக்கும் தேவை யான மூலிகைச் செடிகளையும், மரங்களையும் (நொச்சி, சோற்றுக் கற்றாழை போன்றவற்றுக்காக விளைநிலத்தை தனியாக ஒதுக்கத் தேவையிருக்காது) வளர்க்கலாம்.
#கோடைக் காலங்களில் வெப்பத்தின் தாக்கத்தை சரிகட்ட நுங்கு போன்ற குளிர்ச்சியான உணவுப் பொருட்களை எந்தவித செலவோ, பராமரிப்போ இல்லாமல் பெறலாம்.
#கற்றாழை போன்ற செடிகளை வளர்த்து, விவசாய வேலை இல்லாத நாட்களில் கயிறு திரிப்பது போன்ற வேலைகளை கொடுக்கலாம்.
#எதிர்பாராத அவசரச் செலவுக்கு மரங்களை வெட்டி விற்றுச் சமாளிக்கலாம்.
#இலையுதிர் காலங்களில் இலவசமாக வருடந்தோறும் மூடாக்குப் பெறலாம்.
#தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கும்போது வேலி ஓரங்களில் நடந்தால் தூய்மையான பிராண வாயுவை (ஆக்ஸிஜன்) சுவாசித்து, உடல்நலத்தை மேம்படுத்தலாம்.
#தேனீக்கள் போன்றவை இருந்தால், தோட்டத்துக்கு மகரந்தம், நமக்கு தேன் என நன்மைகளைப் பெறலாம்.

மீள்
இட்டேரி உயிருள்ள பல்லுயிர் பொருளாதாரம்.

Friday 17 April 2020

மிளகு பயன்கள்..

மிளகு பயன்கள்.. 
மிளகு அது கருப்பு; அத்தனை பிரபஞ்ச சக்தியை தண்ணுள்ளே ஈர்த்து வைத்திருக்கும் ஒரு மாபொரும் சக்தி என்பதனை மனதில் நிறுத்தி கிழே உள்ள வற்றை வாசிக்க தொடங்குங்கள்.

நூறு மிளகு நுகரு மமுரியில் வேறு மருந்தென்ன இக்காய சித்திக்குத் தேறியிதனைச் செலுத்தவல் லாருக்கு மாறி மயிரு மறுமயி ராகுமே என்கிறார் போகர்

சித்த மருத்துவத்தில் கருப்பாக உள்ள மூலிகைகளை, உயர்வாகப் போற்றுகிறார்கள், கருந்துளசி, கருநெல்லி, கருநொச்சி,கருமஞ்சள் போன்ற மூலிகைகள், காயகற்ப மூலிகைகளைப்போல, அளவற்ற நன்மைகள் தருமென்கிறார்கள்.இதன் வரிசையில் மிளகும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

காளி,காலன் என்பவை கருப்பைத்தான் குறிக்கும்.. அதனால் தான் காளியை வணங்கி ஒருவர் ஈடுமருந்து வைத்தால் அதை யாரும் எடுக்க பயப்படுவார்கள்..ஆனால் பைரவரை வணங்குபவர்கள் எடுக்க முயற்சிப்பார்கள்..சிலர் சொல்வார்கள் காளி ஒரு பைத்தியக்காரி அவள் எப்போது எப்படி இருப்பாள் என்ன செய்வாள் என்றே தெரியாது என்பர்.

பத்து மிளகு(கறி) இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்பது மூத்தோர் சொல்..

பதினைந்தாம் நூற்றாண்டு வரை மிளகைத்தான் நம்ம முன்னோர்கள் கார்ப்பு சுவைக்காக பயன்படுத்தி வந்தனர்.அதன் பின் போர்ச்சுக்கீசியர்களினால் புகுத்தப்பட்டது தான் மிளகாய்.சிகப்பு என்றுமே ஆபத்து தான்.

யவனர் தந்த வினைமாண் நன்கலம் 
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் 
வளங்கெழு முசிறி இதன் பொருள் உழவு நட்பில்லாத நிலமும், மிளகு நட்பில்லாத கறியும் வழவழ. மிளகை போகர் பல பரிபாஷை பெயர்களால் கூறிப்பிட்டிருப்பதை காணலாம்.முதிர், திரைபோக்கி, அரிசி, வலசம், தீட்சணம், வன்மாஞ்சி, சியாமம், உஷ்ணம், பத்துவனேஷம், மஞ்சரம், தனியம் .


என்னை பொருத்த வரை மிளகு இல்லாத மருந்துவம் என்பது உப்பில்லாத உணவை போன்றது.. மிளகை பற்றி ஏற்கனவே ஏராளமானனோர் வெளிதரையிட்டி காட்டிவிட்டார்கள் ஆதலால் அதை பற்றி காணாமல் அதை மையாக கொண்ட சில சூச்சமத்தை காணலாம்.

எப்போது பிறவிப் பாஷாணங்களை பயன்படுத்த வேண்டும் எப்போது  வைப்புப் பாஷாணங்களை பிரையோகிக்க வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும். மிளகும் உஷ்ணம் பூண்டும் உஷ்ணம் இந்த இரண்டை தகுந்த அனுபானத்துடன் கொடுத்தால் உடல் குளிர்ச்சியடையும்.எதனுடன் சேர்த்து அனுபானமாக கொடுத்தால் குளிர்ச்சி எதை எதனுடன் சேர்த்தால் என்ன விழைவு உண்டாகும் என்ற சூத்திரத்தை நாம் முதலில் கற்று உணர வேண்டும்.

ஐம்புலன்களுக்கு அப்பாலுள்ளதை அறியமுயலுதல் மற்றும்  சிந்தித்து  பகுத்தறிவை கொண்டு ஆய்ந்து அதன் முடிவுகளை கருத்துக்களை ஏற்று ஆராய்வதே சித்தம்..அதுவே மருத்துவம்.
நமது முன்னோர்கள் அன்றுள்ள மானிடர்களுக்கு சொல்லி சென்ற மருத்துவத்தை அப்படியே இன்றுள்ள சிந்தனை செயல் உணவு வாழ்க்கைமுறை என்று எல்லாவற்றிலும்  மாறிவிட்ட மனிதனுக்கு அந்த காலத்திற்கென வரையபாபட்ட சூத்திரத்தை இன்றுள்ள மனிதனுக்கு ஒப்பிட்டு நோய் தீர்க்கும் மருந்தாக கொடுப்பது என்பது எப்படி சாத்தியம் ஆகும்..


உதாரணத்திற்கு பேதி.நான்கு மாதத்திற்கு ஒரு முறை பேதி எடுக்க வேண்டும் என்பது நம் முன்னோர் சொல்..(சிற்றாமணுக்கு கொண்டு தயாரித்த பேதி எண்ணெய் மட்டுமே..மாத்திரை அல்ல).

அதைத்தான் அடர் நான்கு  மதிக்  கொருங்கால் நுகர்வோம் என்றார்கள்.ரசாயனமே இல்லாத உணவு, தூய காற்று, இயற்கை சூழலில் வாழ்ந்த அன்றைய மனிதனுக்கே நான்கு மாதம் என்றால் இந்த கால கட்டத்தில் வாழும் மனிதனுக்கு பழைய சூத்திரத்தையை பிரையோகம் செய்வது வீண்..பழைய சூத்திரத்தை கற்றுக்கொண்டு நமது மதிநுட்பத்தை பயன்படுத்தி நோய்க்கு தகுந்த தீர்வு காண முற்பட வேண்டும்..சுகமின்மை உள்ள சரிரத்தை ஆராய கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளும் தான் அதனால் நிரத்திர தீர்வு கிடைப்பெற்றால் நல்லது தானே.

ஒரு நோய் என்பதனை செடியாய் இருக்கும் போதே கவனித்து தீர்க்க வேண்டியது ஒன்று..அதுவே மரமாய் வேரூன்றி நிலைக்கொண்டு விதை தூவ ஆரம்பித்து விட்டால் விதி வலியது தான் என்பதை உணர்க..இருப்பினும் ஒரு கடைசி அஸ்திரம் என்று ஒன்று உண்டு. அது விதியை மதியால் வெல்லும்  அஸ்திரம் தான்.கவனமுடம் பிரையோகிக்க வேண்டிய மிக அதி நுற்ப அஸ்திரமும் கூட.

மருத்துவமும் ஜோதிடமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்பதை புலிப்பாணி வைத்திய காவியம் முலம் நாம் அறியலாம். ஆராய்ச்சியை திசைதிருப்ப வேண்டும் புதிய மருத்துவ அகராதியை உருவாக்க வேண்டிய சூழலில் இப்போது உள்ளோம்.


சிந்தனைக்கு

மிளகு என்பது செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்த பொருள். தன்னுள் பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்க  தேய்பிறை அஷ்டமியில் வரும் செவ்வாய்கிழமையன்று மிளகு திபம் ஏற்றி அதன் ஒளியை கவனித்தும் அதன் வாசனையை நுகர்ந்தும் மனதை பங்குவப்படுத்தலாம்.ஆழ் மனசக்தியை வெளிக்கொண்டுவர எளிமையான வழி. செவ்வாய்க்கும் மிளகுக்கு நிறைய தொடர்ப்பு உண்டு.
எனது கிரந்தி நாயகம் பதிவை முழுவதும் படிக்கும் போது ஆராய்ச்சி என்பது எந்த நுணுக்கத்துடன் செய்வது சாலச்சிறந்தது என்பது புரியும்.பிரம்மாஸ்திரத்திற்கு பிரம்மாஸ் ஏவுகனைக்கு என்ன சம்பந்தமே அதே தான் மிளகுக்கும் செவ்வாய்க்கும் உள்ள தொடர்பு.

பதினெட்டு சித்தர்கள் ஏன் ஒரு நோய்க்கு எல்லோரும் ஒரே மருந்தை பரிந்துரைக்க வில்லை?? எனது ஐயப்பாட்டை தீர்த்து வையுங்கள்

குறிப்பு

மிச்சிகன் பல்கலைக் கழக புற்றுநோய் ஆய்வு மையத்தின் ஆய்வின் படி மார்பகப் புற்றுநோய் மற்றும் கேன்சர் கட்டிகள் வளர்ச்சியை தடுப்பது மிளகு. மிளகுடன் மஞ்சள் சேர்த்தால் புற்றுநோய் எதிர்ப்புப் பலன்கள் அதிகரிப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.மேலும் மிளகில் உள்ள வைட்டமின் ஏ, சி, கரோடின்கள், மற்றும் பிற சத்துக்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றி நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. சருமப் புற்று நோய், வயிற்று புற்றுநோய் மற்றும் குடல் கேன்சர் நோய்களையும் மிளகு தடுத்து வருவதையும் பல ஆய்வுகள் கூறியுள்ளன.

நன்றி ; சரவணன்..

Monday 13 April 2020

முலாம் பழம் பயன்கள்.

முலாம் பழம்.
இது இந்தியா மற்றும் ஈரானை தாயகமாக கொண்டது.
அதிக நீர்ச்சத்தும், இனிய நறுமணமும் கொண்டது. தாகத்தையும் களைப்பையும் உடனடியாக நீக்கி மகிழ்ச்சியை தரவல்லது.

அப்படியே சாப்பிடலாம். ஜூஸ் போட்டால் இனிப்பு ஏதும் கலக்காமல் அருந்தலாம்.

அதிக அளவு பொட்டாசியம் இருக்கு. இது இரத்த அழுத்தத்தை சீராக்கும்.
அதிக அளவு வைட்டமின் A உள்ளது. நமது பார்வைத் திறனை அதிகரிக்கும்.
அதிக அளவு வைட்டமின் C உள்ளது. இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வயிற்று புண்ணை ஆற்றும்.
அதிக நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் இருப்பதால் மலச்சிக்கல் அகலும். கிட்னியை வலுப்படுத்தும். சிறுநீர் அடைப்பு அகலும். கற்கள் இருந்தால் கரைந்து போகும். கல்லீரல் வீக்கம் குறையும்.
சீரான விகித்தில் நார்ச்சத்து உள்ளது. இது நெரிழிவு நோயுள்ளவர்களுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி நல்ல பலனை தரும்.
பொட்டாசியமும், நல்ல கொழுப்பும் சரியான விகிதத்தில் இருப்பதால் தேவையற்ற உடல் எடையை குறைக்கும்.
இதிலுள்ள போலிக் அமிலம் கருவுற்ற தாயின் உடலில் தேவையான நீர்ச்சத்தை தக்க வைக்கும். கூடுதல் சோடியம் ஐ குறைக்கும்.
மூளையின் நரம்பு மண்டலத்தை இலகுவாக்கி(Relax) தூக்கமின்மை தொடர்பான நோய்களை அகற்றும்.
மூளைக்கு செல்லவேண்டிய ஆக்சிஜனின் அளவை ஊக்கப்படுத்தி மனஅமைதியையும் நிம்மதியையும் கொடுக்கும்.
மாதவிடாய் சமயத்தில் உண்டால் வலி குறைந்து உதிர போக்கை கட்டுப்படுத்தும்.
கேன்சர் செல்களை அழித்து உடலில் கேன்சர் உருவாகாமல் காக்கும்.
தோலின் வனப்பை அதிகரித்து இளமையை அதிகரிக்கும். (Anti Aging Agent)
வைட்டமின் B மற்றும் அதனுடன் சரிவிகிதத்தில் கலந்துள்ள புரோட்டினும் இணைந்து தலைமுடியையும், விரல் நகத்தையும் நலமாக்கும்.
இதிலுள்ள அடினோசின் என்கிற பொருள் இரத்தத்தை மெலிதாக்கி இதய நோய்கள் வராமல் காக்கும்.

மேலே சொன்ன அத்தனை நலனும் வெறும் பாதி பழம் சாப்பிடும்போதே கிடைக்குதாம்.. அதுவும் எந்த பக்கவிளைவும் இல்லாமல்..

நன்றி ; கருணாமூர்த்தி

Sunday 12 April 2020

கல்லீரல் மண்ணீரல் வீக்கம் சரியாக கசாயம்

கல்லீரல் மண்ணீரல் வீக்கம் சரியாக கசாயம்..

காசினி விதை ..................  பத்து கிராம் 
காசினிக்கீரை வேர் ............... பத்து கிராம் 
சீரகம்   ............................ பத்து கிராம் 
பெருஞ்சீரகம்(சோம்பு)............. பத்து கிராம் 
அத்தி பழம் ............... பத்து கிராம் 
உலர் திராட்சை பழம் .................. பத்து கிராம் 
இருநூறு மில்லி தண்ணீரை காய்ச்சி ஒவ்வொரு பொருளாகப் போட்டு சிறுதீயில் நான்கு கொதிக்க வைத்து ஐம்பது மில்லி கசாயமாக சுருக்கி உணவுக்கு பின் ஒருமணி நேரம் கழித்து ஒரு வேளைமருந்தாகக் குடிக்க வேண்டும் 
தினமும் காலை இரவு என இரு வேளைகள் இவ்வாறு கசாயம் வைத்து குடித்து வர படிப்படியாக உடலில் தேங்கி உள்ள கெட்ட நீர் வெளியேறும் கல்லீரல் மண்ணீரல் வீக்கம் படிப்படியாக சரியாகும்.

நன்றி ; தங்கராஜ்..

சளி , இருமல் சரியாக்கும் சுப்பிரமணியக் கசாயம்

சுப்பிரமணியக் கசாயம்

---------------- சளி , இருமல் -------------

முடிந்தவரை சளி இருமலை போக்கி 
நுரையீரலை ஆரோக்யமாக வைத்துக் கொண்டால் "கிருமித்" தொற்றை தடுத்து விடலாம்.

                        சுக்கு 
                       மிளகு 
                      தனியா 
                     திப்பிலி
                   அதிமதுரம் 
                  சித்தரத்தை

அனைத்திலும் சம அளவு எடுத்து இடித்து சலித்து 

ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து
தேவையான அளவு தண்ணீரில் போட்டு
நாலில் ஒரு பங்காகச் சுருங்கும் வரை கொதிக்க வைத்து

பனை வெல்லம் சேர்த்து
தேநீர் போல தினமும் குடித்து வர 
எத்தகைய - சளி  - இருமல் - இருந்தாலும் குணமாகும்

 கை கண்ட அனுபவ மருந்து.

ஆரோக்யத்தில் விருப்பமுள்ளோர்

டீ,காப்பிக்குப் பதிலாக தினமும் பருகலாம்.

         பயம் தேவையில்லை
 
அனைத்தும் பறிபோனதாய் தோன்றும் போது தான் அனைத்தும் 
காப்பாற்றப்படும்.

கடவுளையோ,மனிதர்களையோ குறை சொல்வதை விட்டுவிடுவோம்.

விதைப்பதைத்தான் அறுவடை செய்ய முடியும்.

நமக்கு வரும் அனைத்து துன்பங்களுக்கும் நாம்தான் காரணம்.

நன்றி ; ஜெயவேந்தன்.

Saturday 11 April 2020

சக்தி சாரணை மூலிகை பயன்கள்

நன்றி ; sidha madical care.


சக்தி சாரணை மூலிகை மருத்துவம்

இது வெள்ளைச் சாறடை , வெள்ளைச் சாரணை சாறடைக் கிழக்கு என்றும் அழைக்கப்படும்.

" வித்திரிதி மூலம் விழிப்படல மார்புநோய்

தத்து சுவாசந் தனிக் கருப்பை-யுற்ற

கருச்சிதறச் செய்சூதி காவாத மும்போம்

விருச்சிகத்தின் பேரை விரி"

முறை:

இதன் இலைச் சாற்றை முலைப்பாலில் கலந்து கண்களில் மை போல் தீட்டி வர நேத்திரத்தைப் பற்றிய பல ரோகங்கள் போம்.இதன் இலைச் சாறில் வேளைக்கு அரை அவுன்ஸ் பசும் பாலில் கலந்து சாப்பிட வீக்கம், கட்டி, குன்மம், வயிற்றுளைச்சல் இவைகள் தீரும்.இன்னும் சிறு தாவர விஷங்களையும், வாத, பித்த,கபம் இம்மூன்றின் ஏற்றத்தாழ்வுகளால் உண்டான நோய்கள் அனைத்தையும் போக்கும்.

இதன் இலைச் சாறுடன் சமம் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வடித்து மூட்டுக்களில் உண்டான வீக்கம்,வலிகளுக்கு தேய்த்து வர குணமாகும்.

பொதுவாக இம்மூலிகை கல்லீரல்,மண்ணீரல்,கணையம்,சிறுநீரகம்,நுரையீரல் போன்ற ராஜ உறுப்புகளில் செயல்பட்டு அந்த நோய்களை தீர்ப்பதில் நிகரற்ற மூலிகையாகும்.காயகற்ப மூலிகையில் இதுவுமொன்று.

Friday 10 April 2020

எப்படி பூண்டு சாப்பிட்டால் சுகர்/பிரசர் குறையும்...

வேகவைக்காத பச்சை பூண்டு -  Raw Garlic

* * *Diabetic சுகர்......
உங்களுக்கு சுகர் இருந்தால் 4 பற்கள் பூண்டு எடுத்து சிறிது சிறிதாக வெட்டி 5நிமிடம் வைத்து மாத்திரை போல் விழுங்கி விடுங்கள். உணவுக்கு முன்னும் விழுங்கலாம். உணவுக்கு பின்னும் விழுங்கலாம். உங்களுக்கு பிடிக்கும் என்றால் மென்னும் சாப்பிடலாம்.

இவ்வாறு சாப்பிடும் போது உங்களது சுகர் அளவு கட்டுக்குள் வரும். மாத்திரையை நிறுத்திவிடலாம்.

மாத்திரையும் எடுத்து பூண்டும் எடுத்தால் லோ சுகர் ஆகும் கவனத்தில் கொள்ளவும்.

லோ சுகர் அச்சம் இருப்பவர்கள்

சுகர் 300க்கு மேல் இருந்தால் 4 பற்கள்
சுகர் 200க்கு மேல் இருந்தால் 3 பற்கள்
சுகர் 200க்கு கீழே இருந்தால் 2 பற்கள்
என முயற்சி செய்து பாருங்கள்.

பூண்டு சாப்பிட்டால் சுகர்/பிரசர் குறையும். அவரவர் உடலுக்கு ஏற்ப 1பல் எடுப்பதா அல்லது 2பல் எடுப்பதா அல்லது 3பல் எடுப்பதா அல்லது 4பல் எடுப்பதா முடிவு செய்து கொள்ளுங்கள்.

இங்கு நான் குறிப்பிடுவது நார்மல் அளவுள்ள நாட்டுப்பூண்டு பற்களை தான். நீங்கள் எடுக்கும் பற்களின் அளவை பொருத்து ஒவ்வோருவரின் உடலுக்கும் மாற்றம் வரும். மலைப்பூண்டு அளவில் பெரியது என்பதால் 1 அல்லது 2 பற்கள் போதும்ங்க

* * *Pressure இரத்த அழுத்தம் -
உங்களுக்கு இரத்த அழுத்தம்/பிரசர் இருந்தால் 4 பற்கள் பூண்டு எடுத்து சிறிது சிறிதாக வெட்டி 5நிமிடம் வைத்து மாத்திரை போல் விழுங்கி விடுங்கள். உணவுக்கு முன்னும் விழுங்கலாம். உணவுக்கு பின்னும் விழுங்கலாம். உங்களுக்கு பிடிக்கும் என்றால் மென்னும் சாப்பிடலாம்.

இவ்வாறு சாப்பிடும் போது உங்களது இரத்த அழுத்தம்/பிரசர் அளவு கட்டுக்குள் வரும். மாத்திரையை நிறுத்திவிடலாம்.

மாத்திரையும் எடுத்து பூண்டும் எடுத்தால் லோ பிரசர் ஆகும் கவனத்தில் கொள்ளவும்.

பூண்டு சாப்பிட்டால் சுகர்/பிரசர் குறையும். அவரவர் உடலுக்கு ஏற்ப 1பல் எடுப்பதா அல்லது 2பல் எடுப்பதா அல்லது 3பல் எடுப்பதா அல்லது 4பல் எடுப்பதா முடிவு செய்து கொள்ளுங்கள்.

இங்கு நான் குறிப்பிடுவது நார்மல் அளவுள்ள நாட்டுப்பூண்டு பற்களை தான். நீங்கள் எடுக்கும் பற்களின் அளவை பொருத்து ஒவ்வோருவரின் உடலுக்கும் மாற்றம் வரும். மலைப்பூண்டு அளவில் பெரியது என்பதால் 1 அல்லது 2 பற்கள் போதும்ங்க.

*** பூண்டை சிறிது சிறிதாக வெட்டும் போது அதிலிருந்து அலிசிலின் அமிலம் வெளிப்படும். ஐந்து நிமிடம் கழித்து விழுங்கும் போது தொண்டையில் காயம் ( inflammation) எதுவும் ஆகாது. முழு பூண்டாக விழுங்க முடியாது. பெரிய பெரிய துண்டாக தண்ணீர் அதிகம் குடித்து விழுங்க வேண்டாம். பெரிதாக விழுங்கினால் ஜீரணமாகாமல் முழுவதுமா மலத்தில் வந்தது போல் தெரியும்.

எனக்கு முழு பூண்டை வாயில் போட்டு காக்கா கடி கடித்து பல் இடையில் ஒதுக்கிக்கொள்வேன். அப்படி செய்யும் போது அதிக உமிழ்நீர் சுரக்கும். நன்கு ஜீரணம் ஆகும். நன்கு பசி எடுக்கும். அலிசினும் உமிழ்நீரும் சேரும் போது நல்ல பலன் கிடைக்கும் என டாக்டர் ஹெக்டே பதிவில் பின் தெரிந்து கொண்டேன்.

உங்களுக்கு எப்படி விருப்பமோ எப்படி முடியுமோ அப்படி சாப்பிடலாம்/விழுங்கலாம்.

பூண்டு சாப்பிட்டால் உடல் அதிக உஷ்ணம் ஆகும். தேவைக்கு தண்ணீர் குடித்துக்கொள்ளவும் அல்லது  வெண்பூசணி, சுரைக்காய், பீரக்கங்காய், வெள்ளரி போன்ற நீரச்சத்து காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளவும்.

Copy & Paste -
மிக்க நன்றிங்க - நெல்லை சாரதி

Sunday 5 April 2020

ஆடாதொடை மூலிகையின் பயன்கள்

**ஆடாதொடையும் ஆங்கிலேயனின் சதியும்**

நூரையீரல் சம்மந்தமான நோய்களுக்கு
 ஆடாதோடைக்கு இணையான உடனடி நிவாரணம் தரக் கூடிய ஒரு மூலிகையை யாராலும் சொல்ல இயலாது.

ஆடாதொடை இலைச் சாற்றினை சம அளவு சுத்தமான தேன்( அங்காடியில் விற்கப்படும் தேன் கண்டிப்பாக கிடையாது) சேர்த்து கால் அல்லது அரை ஸ்பூன் அளவு குழந்தைக்கு தினசரி 3 வேளை கொடுக்க மேற்சொன்ன இருமல் மற்றும் கப நோய்கள் அனைத்தும் குணமாகும்.

சித்த மருத்துவப்படி ஆடாதொடையை பச்சை இலையாகத்தான் உபயோக படுத்த வேண்டும். தேன் என்றால் ஒரு வருடம் ஆன பழைய தேன் தான் உபயோக படுத்த வேண்டும். இதை பற்றிய மேலும் விபரங்களை எனது சுத்தியில்லையேல் சித்தியில்லை என்ற பதிவில் விரிவாக கானலாம்.

பண்டையகாலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் துளசி, திருநீற்றுப்பச்சிலை, கற்பூரவல்லி,தூதுவளை, ஆடாதோடை, நொச்சி இவை எல்லை வீட்டின் முன்னே அல்லது வீட்டை சுற்றியோ கண்டிப்பாக இருக்கும். காலையில் விழித்தெழுந்ததும் இதன் அருகில் சென்றாலே இதன் காற்றும் நம்சுவாசத்தில் சென்று நம்மை எந்த நோய் வராமல் நம்மை அரன் போல் காத்து நின்றது.ஆனால் இப்போதோ எல்லாம் குரோட்டன்ஸ் தான். ஆழகுக்காக மட்டும்.அது விசம் என்பதனை யாரும் உணர்திருக்க மாட்டீர்கள்.

இதை பற்றி சுருக்கமாக சொல்கிறேன். வெள்ளையர்கள் நம் நாட்டின் வளத்தை கெடுப்பதற்காகவும் நோய்யை வரவளைத்து வியாபாரம் செய்வதற்காகவும் தீட்டப்பட்ட உளவியல் சதி தான் குரோட்டன்ஸ் என்ற அழகு செடி.இத்த திட்டம் பதினெட்டாம் நுற்றாண்டிலேயே தீட்டப்பட்டது என்பது எத்தனை பேருக்கு தெரியும்..?????
( குளிர் பிரதேகங்களில் இந்த செடி அதிக நச்சு வாயுவை வெளியிடாது.ஆனால் இந்தியா போன்ற வெப்ப மண்டல பிரதேசத்தில் carbondioxide வுன் சேர்த்து நஞ்சு கலந்த carbondioxide வெளியிடும்.முதலில் நர்சரியில் இருந்து எந்த ஒரு செடியையும் வாங்காதீர்கள்.வாங்கினாலும் நாட்டு ரகம் தானா என்று தெளிவு அடைந்த பின் வாங்குங்கள்)

அவன் மனிதனின் மனதின் பழவினத்தை அவனுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டான்.ஆழகு என்றால் மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் ஆதலால் குரோட்டன்ஸ் என்ற விசச்செடியை சிகப்பு நிறத்திலும் மஞ்சள் நிறத்திலும் பல வண்ணங்கள் கலந்த ஒரே செடியாகவும் மரபணு மாற்றம் செய்து நம் பழவினத்தை அவனுக்கு சாதகமாக மாற்றி கொன்டான்.

இப்படி எத்தனையோ உன்னிச்செடி, யுகலிப்டஸ் மரம், காட்டு கருவேலம் மரம், மரபணு மாற்றப்பற்ற மரங்கள் காய்கறிகள் எத்தனை எத்தனையோ.. 

குறிப்பு

மணி பிளான்ட் ( money plant) எல்லோர் வீட்டிலேயும் அலுவலகத்திலும் இருக்கும் .இதுவும் விஷச் செடி.  பணத்தின் மிது எல்லோருக்கும் ஆசை தான்  ஆக விசச் செடிக்கு Money plant என்று பெயர் வைத்துவிட்டால் போதுமே முட்டாள் மக்கள் வாங்க ஆரம்பித்து விடுவார்கள்.. என்ன ஒரு தந்நிரம்...

தயவு செய்து உங்கள் வீட்டில் உள்ள அழகு செடியை தூக்கி தூரம் எரியுங்கள்.. இன்றே இப்போதே... மற்றவர்களுக்கு இச் செய்தியை பகிருங்கள்.. பன்னீர் ரோஜாவை தவிர்த்து எல்லா ரோஜா செடியையும் பிடுங்கி எறியுங்கள். ரோஜாவை தலையில் வைப்பதற்கு பதில் உங்கள் வாயில் வையுங்கள் அதாங்க தினமும் காலையில் பன்னீர் ரோஜாவை சாப்பிடுங்கள் தோல் பளபளப்பாகும் வயதான தோற்றம் தெரியாது. கிலியோபாட்ரா உட்பட அத்தனை இளவரசி மகாராணிகளும் பன்னீர் ரோஜா இட்ட தண்ணீரில் தான் தினமும் குளிப்பார்கள் அதுவே அவர்களின் அழகின் ரகசியம் தேகமும் எப்போதும் மனம் வீசிக்கொண்டே இருக்கும். மனதையும் புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும்.

சரி இப்போதைக்கு இந்த தகவல் போதும்.பதிவு நீண்டு விடும்.எனது எல்லா பதிவையும் படித்து தெளிவு பெருங்கள்.

நண்பர்களே இன்றைய காலகட்டத்திய வாழ்க்கை முறையை ஒருவரியில் சொல்ல வேண்டும் என்றால்..நாம் எல்லாம் சிலந்தி வலைக்குள் சுதந்திரமாய் சுற்றி திரியும் ஒரு பூச்சி.

சொற்குற்றம்  இருந்தால் சொல்லுங்கள் திருத்திக்கொள்ளலாம்..

நன்றி; சரவணன்

அத்திப்பழம் நன்மைகள்

அத்திப் பூத்தாப்போல இருக்கே?’ என்று ஒரு பழமொழி உண்டு.  உண்மையில் அபூா்வமாக பூப்பதாக நினைக்க வேண்டாம். அது பூக்கலேன்னா எப்படி அத்திக்காயும் அத்திப்பழமும் நமக்குக் கிடைக்கும். அந்தப் பூ நம்ம கண்ணுக்கு அவ்வளவா தெரியறது இல்ல. ஏன்னா அது அடிமரத்திலயிருந்து உச்சி வரைக்கும் மரத்த ஒட்டியே காய்க்கும். அதனால் இதை “காணாமல் பூப் பூக்கும் கண்டு காய் காய்க்கும்” என்ற விடுகதையிலும் சொல்வர்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று தமிழில் ஆரோக்ய மொழி ஒன்று உண்டு.  ஆனால் இந்த பழமொழிக்கேற்ப யாராவது வாழ்வார்களா… என்று தேடிப்பார்த்தால் ஒருவர் கிடைப்பது கூட அபூர்வம் என்ற நிலையில் தான் இன்றைக்கு மனித வாழ்வு உள்ளது.
ஒட்டு மொத்தமாக இயற்கை வாழ்வை மறந்து செயற்கை வாழ்வை மக்கள் தேர்ந்தெடுத்து ஆண்டுகள் பல உருண்டோடி விட்டன.

பல ஆயிரம் ஆண்டுகள் இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்த மனித இனம் செயற்கையை சில ஆண்டுகள் கூட தாக்கு பிடிக்க முடியாமல் திணற துவங்கி விட்டது.

இருப்பிடம், உணவு, உடை, அழகியல் என்று எல்லாமும் செயற்கையாகி விட்ட நிலையில் மனிதனை சுற்றி அழிவின் பள்ளத்தாக்குகள் விரிவடைந்து வருகின்றன.

இந்த அபாயத்தை உணர்ந்தவர்கள் செயற்கையை ஓரளவாவது ஒதுக்கி – ஒதுங்கி வாழ வேண்டும் என்ற எண்ணத்தின் பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளனர்.

எனக்கு கிடைத்த காட்டு அத்திப்பழத்தை தேனில் ஊர வைத்துள்ளேன். பழங்களில் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது, அத்திப்பழம். இது எனக்கு எப்படி கிடைத்தது என்றால்,எனது தேடல் வாழ்க்கை முறை எல்லாமே இயற்கையை சார்ந்து உள்ளது.காட்டில் மட்டும் அல்ல இது எல்லா இடத்திலும் சாதாரனமாக கானக்கிடைக்கும் மரம் . கண் இருந்தும் குருடர்களாய் காதிருந்தும் செவிடர்களாய் வாழ்க்கை எனும் தேடல் இருந்தால் கண் முன்னே எது இருந்தாலும் அதன் பயன் நமக்கு தெரியாமல் தான் போகும்.நானும் ஒரு சாதாரண மனிதனாக வாழ்ந்தவன் தான். பின் அது மாயை என்று உணர்ந்துக்கெண்டேன் (புரிந்துக்கொள்வது, தெரிந்துக்கொள்வது,உணர்ந்துக்கொள்வது என்ற மூன்றுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது).

அத்திப்பழத்தின் பயன்கள் சொல்ல வேண்டும் என்றால் ஏராளம். மூல நோய், ரத்தக்கொதிப்பு, கேன்சர், மாதவிடாய் பிரச்சினை என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.பயன்கள் உங்களுக்கு வலைதளங்களில் தேடினால் ஏராளமாய் கிடைக்கும்.எல்லோரும் பயன்களை பற்றி சொல்வார்கள் நான் அதை பற்றி சொல்ல வரவில்லை.உங்கள் கடுகளவாவது சிந்திக்க வைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்.

மார்கட்டில் உலர்ந்த அத்திப்பழம் என்று நீங்கள் வாங்கும் பழம் மரபணு மாற்ற பெற்றது..உண்மையானது கிடையாது.. இயற்கையை வியாபாரம் ஆக்க முடியாது..

சிங்கம் புலி என மினிதனை தவிர எந்த உயிரனங்களாக இருந்தாலும் எந்த இரை தானாக வந்து உணவாக கிடைப்பதில்லை. தானாக சிரமமே இல்லாமல் இரை(உணவு) கிடைக்கிறது என்றால் ஒன்று அதற்கு அடிப்பட்டிருக்கும்,அல்லது நோய் தொற்று ஏற்பட்டிருக்கும்..

இப்படி எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம்.சிறு உதாரணம்...மூத்தோர்கள் முட்டை சாப்பிட்டால் நல்லது என்றார்கள் அது இப்போது கடைகளில் கிடைக்கும் பிராய்லர் எனும் விச கோழியுடைய முட்டை இல்லை. பால் நல்லது தான் என்று சொன்னார்கள் ஆடு மாடு காட்டில் மேட்டில் இருக்கு பல மூலிகை தாவரங்களை உண்டதால். வியாபாரம் ஆனதன் பிறகு அதை கட்டிப்போட்டு மசால் பில் மட்டும் போட்டு இப்போதும் பால் நல்லது என்று குடித்துக்கொண்டு இருக்கிறோம். 
நாட்டு மரம் பூத்து காய் காய்க ஐந்திலிருந்து ஆறு வருடங்கள் ஆகும்.அதுவும் வருடத்திற்கு ஒரு முறை தான்(அத்திப்பழம், மாம்பழம்,நெல்லிக்காய், பழாப்பழம் etc..).இதன் வாழ்வாதாரம் இயற்கையோடு இனைத்தே இருக்கும்.ஆனால் இதையே மரபணு முறையில் மாற்றம் செய்தால் இயற்கைக்கு எதிராக செயல் புரிந்து இரண்டு அல்லது மூன்று வருடங்களிலேயே காய்த்து பூக்கும்.இந்த பருவம் தான் என்று இல்லை எல்லா பருவத்திலும் நமக்கு கிடைக்கும்.

இதை உண்ணும் பெண்களுக்கும் ஆண்களுக்கு உடலில் இயற்கையாய் எந்த வயதில் என்ன உடல் மாற்ற வர வேண்டுமோ அது நிகலாமல் எல்லாம் மாறி மாறி நடக்கும்.எல்லாவற்றுக்கும் நாம் தான் காரணம். அதாவது ஒவ்வொரு தனிமனிதன் தான் காரணம். உதாரணம் நெல்லிக்காய் ஒருவர் நல்லது உலுக்கு குளிர்ச்சி
என்று சொல்லிவிட்டால் போதும் உடனே வருடம் முழுவது அதையே சாப்பிடுவோம்.ஆனால் நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டியது இயற்கை உங்களுக்கு உணர்த்துவது என்ன என்றால்,நாட்டு நெல்லிக்காய் சித்திரை மாதத்தில் தான் காய்கும் ஏன் என்றால் சித்திரையை ஒட்டி வரும் மாதங்கள் எல்லாம் உஷ்ணம் உடையவை. கடவுள் அதாவது இயற்கை நமக்கு உணர்த்துவது குளிர்ச்சியான 
நெல்லிக்காய் உஷ்ணமான காலங்களில் நாம் உண்டால் உடலின் வெப்பம் குறைந்து குளிர்ச்சி அடைந்து உஷ்ண சம்பந்தமான உபாதைகள் வராமல் தம்மை காக்கும் என்பதற்காக.ஆனால் மூடர்களாகிய நாம் நமது பகுத்தறிவை பயன்படுத்துவதே இல்லை.இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

மனிதனுக்கு பணத்தை வீசி எறிந்தால் எல்லாம் கிடைத்து விடும் என்ற இருமாப்பு..உங்களுக்கு வேண்டும் என்றால் தேடித்தான் போக வேண்டும். இயற்றை என்ற மாயை இருக்கும் மார்கட்டுக்கு அல்ல .. இயற்கை எங்கு இருக்குமோ அங்கு போங்கள்..உங்கள் ஆனவம், தலைகனம், பணத்திமிரு, பணத்தால் எதையும் வாங்க முடியும் என்ற எண்ணம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு  போங்கள் .. இயற்கை உங்களை பட்டுக்கம்பலம் விரித்து வரவேற்க தயாராக உள்ளது..

சொல்ல வேண்டியது எத்தனையோ உள்ளது.மக்களாகிய மூடர்களுக்கு சொல்லி என்ன பயன் என்ற வெறுப்பும் சேர்ந்தே உள்ளது..அதனால் இத்தோடு முடித்துக்கொள்கிறேன்.

ஒரு தீப்பொறியை தான் உங்களுக்கு கொடுக்க அல்லது காட்ட முடியுமே தவிர.அதை எதற்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதனை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். கொல்லிக்கட்டையை எடுத்து தலையை சொரிந்து கொண்ட பின் தலை எரிகிறது அது எரிகிறது இது எரிகிறது என்று சொன்னால் எதுவும் செய்ய முடியாது..

நன்றி; சரவணன்

வேங்கை மரத்து பால் திருஷ்டி பொட்டின் நன்மைகள்

வேங்கை மரத்து பால் 
திருஷ்டி பொட்டு 

ஓர் அரு மருந்து....

இவற்றை குழந்தைகளின் நெற்றியிலும் கன்னத்தில் இடுவதால் குழந்தைகளுக்கு தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்ய 
மூளையில் ஒரு வித ரசாயனத்தை உற்பத்தி செய்து கார்பன் டை ஆக்சைடு வெளியேற்ற உதவுகிறது ஆதாவது 30% ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறதாம் மேலும் 
இவற்றில் அனைத்து விதமான உலோக உப்புகள் அயனிகளாக உள்ளதால் கண்கள் மற்றும் மூளைக்கு தேவையான நுண்ணூட்ட சத்துக்களை கிரகித்து கொள்கிறது.

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பாற்றலை உண்டாக்குகிறது மற்றும் கிருமி தொற்று ஏற்படவே ஏற்படாது  
அதனால் குழந்தைகளுக்கு ஆழ்ந்த உறக்கத்தை ஏற்படுகிறது

நெற்றி பொட்டை மூன்றாவது கண்
என அழைபதற்கு காரணம் 
ஆஞ்சன சக்கரம் அமைந்துள்ளதால்
இந்த சக்கரம் உடலில் உள்ள ஐந்து சக்கரத்தையும் கட்டுபடுத்துவதால் 

"மூன்றாவது கண் "
இந்த சக்கரத்தை சரி செய்யும் போது மூளை க்கு தேவையான ஆக்சிசன்
பற்றாக்குறை சரி செய்யபடுகிறது

வேங்கை மரத்து பாலில் பாதரசம் கட்டபடுகிறது
இது ஒன்று போதாதா இதன் மகத்துவம் அறிய...

வேங்கை மரம் உள்ள பகுதியில், மின்னல் தாக்காது. மோசமான கதிர் வீச்சுகள், இடி, மின்னலில் இருந்து பாதுகாக்கும் சக்தி, வேங்கை மரத்துக்கு இருப்பதால், பழங்கால கோவில்களின் கொடிமரம், கதவுகளை, முன்னோர், வேங்கை மரத்தில் அமைத்தனர்

ஐய்யப்பன் புராணத்தில் புலி பால் என்பது இந்த வேங்கை மரத்து பால் 
தான்.நீரிழிவு நோயுள்ளோர் வேங்கை மரக்குவளையில் நீர் அருந்தினால் குணம் பெறலாம்.வேங்கை மரப் பிசின் வயிற்று நோய்களுக்கு சிறந்த மருந்தாகும்.

வேங்கை மரத்து பிசின் 
குழந்தைகளுக்கு 
திருஷ்டி போக்கும்
நோய்எதிர்ப்பு ஆற்றல் கூடும்
ஆழ்ந்த உறக்கம் ஏற்படும்
கண்கள் வசீகரமாகும் 
உடலில் உள்ள Co² ஐ வெளியேற்றும்

அப்புறம் என்ன கஸ்டம் 
இவற்றை பயன்படுத்த...

விலையில்லா வேங்கைமர பிசினை பயன்படுத்தி
விலை மதிப்பில்லா குழந்தைகளை பாதுகாக்கவும்.

வேங்கை மரப் பட்டையில் உள்ள டிரோசிலிபின் (Pterosylebene) என்கிற வேதிப் பொருள், சர்க்கரைநோயைக் குணப்படுத்தும் வல்லமைகொண்டது. இதை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஆய்வுக்கு உட்படுத்தி நிரூபித்து இருக்கிறது. சர்க்கரைநோய் உள்ளவர்கள் வேங்கைப் பட்டையை அரைத்துப் பொடியாக்கி சாப்பிடலாம்; அல்லது  4 டம்ளர் அளவு தண்ணீரில் வேங்கைப் பட்டைப் பொடியைக் கலந்து, ஒரு டம்ளர் அளவுக்கு அதைக் சுண்டக் காய்ச்சிக் கஷாயமாகவும் குடிக்கலாம். சிறுநீரகம், கண், இதயம், நரம்பு போன்ற உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கும் வேங்கைப் பட்டை சூரணம் மிகவும் நல்லது. களைப்பு, உடல் பலவீனத்தைப் போக்கி, உடலுக்கு நல்ல உறுதியைக் கொடுக்கவல்லது. இதில் உள்ள துவர்ப்புத் தன்மை தோல் சுருக்கம் அடைதல், மூட்டுத் தேய்வு போன்ற வயோதிக மாற்றங்கள் வேகமாக நடைபெறாமல் மட்டுப்படுத்தும். தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் மூலிகை எண்ணெய்த் தயாரிப்பிலும் வேங்கைப் பட்டைக்குத் தனி இடம் உண்டு!'' என்கிறார் வியப்பாக.
வேங்கை மரம் நவ கிரகங்களில்  செவ்வாய் கிரகத்தின் சக்தியை பூரணமாக உடையது. இம்மரத்தை வெட்டினால் சிவப்பு நிறத்தில் பால் வடியும். ஏனென்றால் செவ்வாய் கிரகத்தின் கதிர்கள் சிவப்பு நிறமாகும். நம் தமிழ் கடவுளான முருகப் பெருமான் இம்மரத்தில் வாசம் செய்வதாக வேதங்கள் குறிக்கின்றன.

வேங்கை மலர்கள் குறுஞ்சி நிலத்திற்குரிய அழகிய மலர்கள். அது பூக்கும் பருவம் திருமணம் நிகழ்த்திற்குரிய பருவமாக நம் முன்னோர்களால் கருதப்பட்டது. இயற்கையுடன் அளவளாவிய தமிழ் மக்கள் வேங்கை மரத்தின் நிழலில் திருமணங்களை நடத்தி வந்தனர் என்று இலக்கிய நூல்கள் குறுகின்றன.

மரத்தில் இருக்கும் 'ரெட் கிரிஸ்டல்’கள்தான் ரத்தம்போல் வரும் சாறுக்குக் காரணம். அதோடு, டானிக் ஆசிட், அமினோ ஆசிட் என பல்வேறு சத்துப் பொருட்கள் அந்த மரத்தில் இருக்கின்றன. உதிரப்போக்குக்கு மட்டும் அல்லாது, பெண்களுக்கு ஏற்படும் அடிவயிற்று வலிக்கும் இது அற்புதமான மருந்து. ஜப்பானில் இதன் இலைகளைப் பயன்படுத்தி கேன்சரைத் தடுக்கும் ஆன்ட்டி ட்யூமரைத் தயாரிக்கிறார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய மரம் இதுதான். 

இது உதிரத்தை உறையவைப்பதால், மன்னர்கள் காலத்தில் வெட்டுக் காயங்களுக்கும் இதைத்தான் மருந்தாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள்

வேங்கை மரத்தின் பாலை நெற்றியில் வைத்துக்கொண்டால் பேய், பிசாசு, காற்று, கருப்பு இவைகள் நம்மை அண்டாது. ஆங்கில தேதி 9,18,27 ல் பிறந்தவர்களும் மேஷம் விருச்சிகம் இராசியில் பிறந்தவர்களும் இம்மரத்தின் பாலை நெற்றியில் வைத்துக்கொள்வதால் இதன் சக்தி உடலில் பரவி நல்ல ஆற்றல்களையும் வாழ்வில் உயர்வுகளையும் உண்டாக்கும்.

இரு புருவ மத்தியில் ( ஆக்கினை) வேங்கை பால் வைப்பதால் பிட்யூட்டரி சுரபி நன்கு வேலை செய்யும்.அதனால் ஆழ்ந்த உறக்கம், கண் சம்பந்தமான நோய்கள், சீரான சுவாசம், காச நோய், மூட்டு ஆரேக்கியம், நரம்பு மண்டலம் பலம், மன இணக்கம், சாந்தம், பொறுமை உண்டாகும்..

நன்றி ; சரவணன்

பலாப்பழம் நன்மைகள்

******  பலாப்பழம்  நன்மைகள் ****

முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம்.கேரள மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பழமாக பலாப்பழம் அறிவிக்கப்பட்டுள்ளது.பழங்களின் அரசன் என்ற  பெருமைக்குரியது பலாப்பழம். கெம்புத்தேன் தொட்டு சாப்பிடுவதே ஒரு அலாதியான சுவைத்தான்.

தித்திக்கும் வாத சிலேஷ்மபித்தம் உண்டாக்கும் மெத்தக் கரப்பான் விளைவிக்கும் சத்தியமாய்ச் சேராப் பிணியை எலாஞ் சேர்ப்பிக்கும் ஓர்நொடியில் பாராய்ப் பலாவின் பழம்..

நெய் அல்லது தேன் கலந்த பலாப்பலத்தைச் சாப்பிட்டால் இதயம், மூளை வளர்ச்சியடையும், நரம்புகளும் வலுப்படும்.. உடலுக்கு ஊட்டத்தை அளிக்கும். தேனில் ஊறிய பலா பலாப்பாழத்தை முறையுடன் சாப்பிட்டால் கெடுதல் இருக்காது.. பலா பழத்தை சாப்பிட்ட உடன், சிறிது நெய் அல்லது கொஞ்சம் பாலை அருந்தினால் எந்த தொல்லைகளும் ஏற்படாது. உடல் பலம் பெறும். வெறும் பலாப்பலத்தை சாப்பிடாது சிறிது நாட்டுச்சர்க்கரையை கலந்து சாப்பிட உடல்புத்துணர்ச்சி பெறும். தாகம் தணியும். எளிதில் சீரணமாகும். குடலுக்கு வலிமை தரும்.

இது, சாப்பிட்டவுடன் உடலுக்கு உடனடி ஆற்றல் தரும். சோர்வாக இருக்கும்போது, இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் உடல் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி கிடைக்கும்.

இதிலுள்ள பொட்டாசியம் சத்து, குறைந்த மற்றும் உயர் ரத்த அழுத்தத்தைச் சீராக வைக்கிறது. இதன்மூலம் மாரடைப்பு நோய் வராமல் தவிர்க்கப்படுகிறது. கொழுப்புச்சத்து இல்லை என்பதால், இதய நோயாளிகளும் சாப்பிடலாம். இதிலுள்ள இரும்புச்சத்து ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, ரத்தக்குறைபாடு வராமல் தடுக்கிறது.

விட்டமின் ‘சி’ அதிகமாக உள்ளதால், பலா மிகச்சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகவும் செயலாற்றுகிறது. வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் நோய்த்தொற்று உண்டாகாமல் தடுக்கிறது. வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நோய்எதிர்ப்பு சக்தியைக் கூட்டுகிறது.

பலாவில் உள்ள லிக்னன்ஸ், ஆர்கானிக் கூட்டுத்தொகுப்பான ஐசோஃப்ளேவன்ஸ், சபானின் ஆகியவை புற்று நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. தவிர, உடல் முதிர்ச்சி ஏற்படாமல் இளமையாகத் தோன்றவும் உதவுகிறது.
செரிமானக்கோளாறு மற்றும் வயிற்றுப்புண்ணை குணப்படுத்துவதில் பலா நன்கு செயலாற்றுகிறது. இதில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்து, மலச்சிக்கல் உண்டாகாமல் தடுத்து, மலம் இலகுவாக வெளியேறவும் உதவுகிறது. பெருங்குடலையும் சுத்தமாக வைக்கிறது.
பலாப்பழத்திலுள்ள விட்டமின் ‘ஏ’ சத்து, பார்வைக் குறைபாடு வராமல் தடுக்கிறது. மாலைக்கண் நோயையும் குணமாக்கும். தொடர்ச்சியாக பலா சாப்பிடுவோருக்கு கண் நோய்கள் வராது.
எலும்புகள் பலமின்றி இருத்தல், எலும்புருக்கி நோய் உள்ளோர், பலா சாப்பிட்டு வந்தால் எலும்புகள் பலப்படும். மக்னீசியம் மற்றம் கால்சியம் சத்துக்கள் இதற்கு உதவுகின்றன. பிள்ளைகளுக்குச் சாப்பிடக் கொடுத்தால் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கப்படும்.
மனித இயக்கத்திற்கு உதவும் தைராய்டு ஹார்மோன் உடலில் உற்பத்தியாகவும், அதை உட்கிரகிக்கவும் தாமிரச் சத்து அவசியம். பலாவிலுள்ள தாமிரச்சத்து இதற்கு உதவி செய்கிறது.

இப்படிப்பட்ட பழத்தை தேன் அல்லது நெய் கலந்து உண்ட பின் அதன் கொட்டையை சுட்டு குழம்பாக்கி  படத்தில் காட்டியது போல சாப்பிட அத்தனையும் பிணியும் நீங்கும்.

நன்றி; சரவணன்

ஆமணக்கு எண்ணெய் நன்மைகள் ( விளக்கு எண்ணெய்)

சிற்றாமணுக்கு எண்ணெய்( வெடிமுத்து எண்ணெய்) ஒரு பொக்கிஷம்.

இதை விளக்கெண்ணெய் என்று சொல்வார்கள்.இது உடம்புக்கு நல்லது. சில வயிற்று பிரச்சனைக்கு இதை சிறிது குடிக்க கொடுக்க உடனே தீர்வு கொடுக்கும். கர்ப்பமாக இருக்கும்போது இந்த எண்ணெய் வயிற்றில் தேய்த்து வந்தால் குழந்தை பிறந்த பின் ஏற்படும் தழும்புகள் மறையும் மற்றும் தொப்பை இருக்கவே இருக்காது. குழந்தை பிறப்பதற்கு முன் அடிவயிறு எப்படி இருந்ததோ அப்படியான நிலையை திரும்ப கொண்டு வர உதவும்.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயின் போது சிற்றாமணுக்கு எண்ணெய்யை சிறு எடுத்து வயிற்றில் தடவி வந்தால் பிற்காலத்தில் ஏற்படும் வயிறு சம்பந்தபட்ட உபாதைகளில் இருந்து விடுபடலாம் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

அந்த காலத்தில் திருமணமாகி பெண் மாப்பிள்ளை வீட்டிக்கு வரும்போது சீதனமாக ஐந்து மரக்கால் (4 படி கொண்டது ஒரு மரக்கால்) சிற்றாமணுக்கை கொடுப்பார்கள்.நாகரீகம் என்ற  சேற்றுக்குள் மூழ்க மூழ்க  தம் முன்னோர்கள் வகுத்த நன்மைகள் எல்லாம் மறைந்தே போய்விட்டது அது கூடவே பிணியும் பீடித்துக்கொண்டது.


பேதி கொடுக்க சிற்றாமணுக்கு தான் சிறந்தது. பெரிய ஆமணுக்கு உகந்தது அல்ல.சிட்டாமணுக்கு வயிற்றை மட்டும் சுத்தம் செய்வதில்லை அது  மூலை உட்பட எல்லா உறுப்புக்களிலும் ஊடுருவி வந்து அதில் தேங்கியுள்ள கழிவுகளை எல்லாம் நீக்க செய்யும்.பேதி கொடுக்கும் போது சிற்றாமணுக்கு எண்ணெய்யை பிரமாணமாகவும் நிலாவாரை வேர் பட்டையை கசாயத்தை அனுபானமாகவும் சேர்த்து கொடுப்பார்கள் நம் முன்னோர்கள்.இந்த பதிவில் இனைக்கப்பட்டு இருக்கும் இனைப்பை பார்க்கவும்.

விளக்கெண்ணெய் இரத்த வெள்ளையணுக்களின் அளவை அதிகரித்து நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்கி, நோய்களை எதிர்த்துப் போராடும். மேலும் ஆய்வு ஒன்றில், விளக்கெண்ணெயை கொண்டு உடலை மசாஜ் செய்யும் போது, அது இரத்த வெள்ளையணுக்களின் அளவை 24 மணிநேரத்திற்குள் அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது.

நோய் குணமாக்கலில் `நிணநீர் கழிவு ஓட்டம்’ (Lymphatic drainage) மிகமிக முக்கியமானது. உடலில் இந்த ஓட்டத்தைச் சீராக நடத்தி, எங்கும் வீக்கத்தைக் (Inflammation) கட்டுப்படுத்துவதில் விளக்கெண்ணெய்க்கு நிகர் ஏதும் இல்லை.

மூலிகை மருந்தறிவியலில், அமெரிக்காவின் எஃப்.டி.ஏ (The Food and Drug Administration - FDA)-வின் அங்கீகாரம் பெறுவது மிக கஷ்டமான காரியம். அந்தப் பெரும் அமைப்பே, `விளக்கெண்ணெய் பொதுவாகப் பாதுகாப்பானது’ (GRAS - Grossly recognized as Safe) எனச் சான்று தந்துள்ளது. 

விளக்கெண்ணெய் உடல், கண், மூக்கு, செவி, வாய், இவைகளிலுண்டாகின்ற எரிச்சலை நீக்கும். உடலைப் பொன்னிறமாக்கும். குழந்தைகளைத் தாய் போல் வளர்க்கும். குழந்தைகளுக்கும், பிள்ளை பெற்ற பெண்களுக்கும் வயிறு கழியக் கொடுப்பதற்கு இது ஒரு சிறந்த மருந்தாகும். இதை கைக்குழந்தை, கிழ வயதுடையவர், சூல் கொண்டவர், பிள்ளை பெற்றவர், சீதபேதியால் வருந்துபவர்களுக்கும் அச்சமின்றிக் கொடுக்கலாம்.

4 தேக்கரண்டி அளவு ஆமணக்கு எண்ணெய், 1 தேக்கரண்டி அளவு தேன் ஆகியவற்றை நன்றாகக் கலந்து உள்ளுக்குள் சாப்பிட சுகபேதியாகும். சிறுவர்களுக்கு இந்த அளவில் பாதியும், கைக்குழந்தைகளுக்கு இந்த அளவில் நான்கில் ஒரு பங்கும் தரலாம். இது ஒரு சிறந்த கை மருந்தாகும்.

விளக்கெண்ணெய் குழந்தைப் பிறப்பை எளிதாக்குகிறது மற்றும் பிரசவ வலியையும் குறைக்கறது என்கிற தகவல் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.நிறைய கப்பிணி பெண்களுக்கு பிரசவ வலியைத் தூண்ட விளக்கெண்ணெயை சாப்பிட கொடுப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் அதில் உள்ள ரிச்சினோலியின் அமிலம் கருப்பையில் சுருக்கத்தை ஏற்படுத்தி, சுகப்பிரசவம் நடைபெற உதவும்.


மூட்டு வலியால் நீண்ட நாட்கள் அவஸ்தைப்பட்டு வந்தால், விளக்கெண்ணெய் கொண்டு வலியுள்ள இடத்தில் மசாஜ் செய்யுங்கள். இதனால் மூட்டு வலி குறைவதோடு, நரம்புகளில் உள்ள வீக்கங்கள் மற்றும் தசைகளில் ஏற்பட்ட காயங்கள் குணமாகும். அதிலும் உங்களுக்கு ஆர்த்ரிடிஸ் எனில்,முறைப்படி தயாரித்த சிட்டாமணுக்கு எண்ணெய் கொண்டு வாரம் இரண்டு முறை மசாஜ் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

விளக்கெண்ணெய் தயாரிக்கப் பயன்படும் ஆமணக்கு முத்து, மன்னராட்சிக் காலத்தில் வரிவிதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இதை, 'ஆமணக்கங் கொட்டை வண்டி ஒன்றுக்குக் காசு பத்தும் பொதி (பெரிய மூடை) ஒன்றுக்குக் காசு அரையும் பாக்கம் (சிறிய மூடை) ஒன்றுக்குக் காசு காலும்' என்று கி.பி. 1300ஆம் ஆண்டு பிரான்மலைக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

திருவிதாங்கூர் மன்னரின் அரண்மனையிலும் கோட்டைகளிலும் இரவில் எரியும் தீப்பந்தங்கள் விளக்கெண்ணெய் ஊற்றியே எரிக்கப்பட்டன என்றும் தேவையான எண்ணெயை இலவசமாக வழங்குவது குடிமக்களின் பொறுப்பு என்றும் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலியார் ஓலைகள் குறிப்பிடுகின்றன.

தரம் குறைந்த ரகம் அடர்த்தியான மஞ்சள் நிறமாகவும், கனமாகவும், தெவிட்டலான மணம் கொண்டதாகவும் இருக்கும்.தரமான எண்ணெயையே உள்மருந்தாகக் கொடுப்பதற்குப் பயன்படுத்த வேண்டும்.

ஆமணக்கு எண்ணெயில் ஆய்வு செய்த விஞ்ஞானிகள், வைரஸ்க்கு எதிராக அது செயல்படுவதை உறுதிப்படுத்தி உள்ளனர். ஹெச்.ஐ.வி வைரஸைக்கூட சோதனைக் குழாயில் ஆமணக்கு கட்டுப்படுத்துவதைக் கண்டறிந்து உள்ளனர்.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாக இந்தியரிடம் மட்டும் அல்லாது, சீனரிடமும், ரோமானியரிடமும், கிரேக்கரிடமும்கூட விளக்கெண்ணெயின் பயன்பாடு இருந்திருக்கிறது.

மொத்தத்தில், விளக்கெண்ணெய் காலம் காலமாக யாரும் விலக்காத எண்ணெய்.

குறிப்பு:

சிற்றாமணுக்கு எண்ணெய்யை ஐந்து விதமாக தயாரிக்கலாம்.பேதிக்கு என்றால் ஒரு சூத்திரமும்.உடல் மேல் பூச்சுக்கு என்றால் ஒரு விதமாகவும்.சமையலுக்கு என்றால் ஒரு விதமாகவும்.குழந்தைக்கு உள்ளுக்குள் கொடுக்க என்றால் ஒரு விதமாகவும்.கண்ணுக்கு என்றால் ஒரு விதமாகவும் தயாரித்து உபயோகப்படுத்த வேண்டும்.

சிற்றாமணக்கை சுருக்கியும் பெரிய ஆமணக்கை பெருக்கியும் தயாரிக்க வேண்டும் என்பது சித்தர்களின் கூற்று.இப்போது கடைகளில் கிடைப்பது அனைத்தும் பெருக்கி தயாரிக்கப்பட்ட பெரிய ஆமணக்கே ஆகும்.பெரிய ஆமணுக்கு சிற்றாமணக்கை விட தரத்திலும் மருத்துவ குணத்திலும் குறைந்ததே.

மந்திர மாந்தீகரத்திற்கு சிற்றாமணக்கு எண்ணெய் மட்டுமே உபயோகமாகும். எந்த பாலினத்தவர்களுக்கு என அறிந்து கொடுக்கப்போகும் அல்லது பிரையோகிக்க போகும் மருந்தை பொருத்து வெள்ளை சிற்றாமணக்கா அல்லது சிகப்பு சிற்றாமணக்கு எண்ணெய்யா என வைத்தியர்கள் முடிவு செய்வார்கள்.

யார் தயாரித்தாலும் பொருள் வரும் அதில் எந்த ஐயமும் இல்லை.ஆனால் அந்த  பொருளில் தரத்தையும் வீரியத்தையும் அப்படியே உள்ளடக்கி கொண்டுவரும் பக்குவம் ஒருசிலரால் மட்டுமே முடியும்.நல்ல உள்ளம் தூய்மையான  எண்ணம் , தயாரிப்பதை ஒரு கலையாய் பார்க்கும் மனோபாவம், வியாபார நோக்கம் இல்லாமை.இவற்றை மனதில் நிறுத்தி பக்குவமாய் கவனமாய் தயாரித்தால் நீங்கள் மண்ணை கொடுத்தாலும் அது மருந்தாகும் என்பது மருக்க முடியாது உண்மை..

நான் பல நபர்களுக்கு பெருக்கி தயாரிப்பது இல்லை. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாய் அவர் தேவைக்கும் நோய்க்கும் தகுந்தாற்போல்  தயாரித்து கொடுப்பதால் தான் நேரம் அதிகமும் கால தாமதமும் எடுத்துக்கொள்கிறது.

எனது எல்லா பதிவை படித்த பின் என்னை தொடர்ப்பு கொள்ளவும்.பக்குவம் இல்லாதவர்கள் தயவுசெய்து என்னை தொடர்ப்பு கொள்ள வேண்டாம்..

நன்றி

குழந்தை வளர்ப்பு இரகசியம். ஆமணக்கு எண்ணெய் பயன்கள்

*** குழந்தை வளர்ப்பு இரகசியம் *** சிறு தொகுப்பு

அந்த காலத்தில் வீடுகளில் எண்ணெய் தேய்த்துக் குளிகப்பாட்டாத குழந்தைகள் இல்லை என்று சொல்லலாம்.எண்ணெய் குளியலின் போது குழந்தைகளுக்கு மூக்கிலும் காதிலும் கண்ணிலும் எண்ணெய் விடுவார்கள்..அந்த எண்ணெய் தொண்டை வழியாக நுரையீரலுக்குள் செல்லும்.

நுரையீரலுக்கு எண்ணெய் ஆகாது.அப்போது நுரையிரலில் இருக்கும் சளியானதும் வெளியேற்றப்படும்.
அதனால் தான் அந்த காலங்களில் குழந்தையை குளிப்பாட்டியதுமே சுத்தமான சாம்பிராணி புகைப்போடுவார்கள்..

அது நுரையிரலில் உள்ள சளியை சுலபமாக வெளியேற்ற உதவும்..ஆனால் இன்று இது எதுவுமே இல்லை..சுத்தமான சாம்பிராணி அந்த காலத்தில் காட்டில் இருந்து கொண்டு வந்து தருவார்கள்.. இப்போதும் எங்கள் பகுதிகளில் ஆதிவாசிகள்  மரத்தில் இருந்து எடுத்துவந்த சாம்பிராணி கட்டியை கொண்டு வந்து தருவார்கள்..

குழந்தைகளுக்கு சளிப்பிடித்தால் பால் புகட்டும் தாய்மார்கள் உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். சாதாரணமாகவே பால் புகட்டும் தாய்மார்கள் உணவில் உப்பு புளி காரம் இவைகளை அறவே தவிராப்பது நல்லது என்பது எனது கருத்து..

சில குழந்தைகளுக்கு சளி அடிக்கடி பிடிக்கும்..அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பாற்றல்  இயல்பை விட குறைந்து இருக்கிறது என்று அர்த்தம்..

தொண்டையிலோ, காதிலோ, சைனஸ்லோ,டான்சில் பகுதியிலோ,நுரையீரலிலோ ஏற்பட்டுள்ள உபாதைகளை சரி செய்ய முடியாமல் திணறுகிறது என்று பொருள்..
அந்த சமையத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்..

சளிப்பிடித்தால் வாய் வழியாக சுவாசிக்க ஆரம்பிக்கும்..எந்நேரமும் வாயால் சுவாசித்துக்கொண்டே இருந்தால் வாய் முழுவதும் ஈரப்பசை இல்லாமல் உலர்ந்து போவதால் குழந்தைகள் அடிக்கடி தண்ணீர் குடிக்கும் இதனாலும்  சளி நீங்காது..பேச்சு சரியாக வராது.அழுத்தமான வார்த்தைகளை பேச முடியாமல் போகும்..சிற்றாமணக்கு எண்ணெய்யை பயன்படுத்தி குழந்தைகளுக்கு ஏற்படும் பல உபாதைகளுக்கு தீர்வு கண்டார்கள் நம் முன்னோர்கள்.

இப்போது யாருக்கும் முறையாக சிற்றாமணக்கு எண்ணெய்யை சுத்தி செய்து தயாரிக்க தெரிவதில்லை என்றே சொல்லாம்.

குழந்தை பிறந்ததும்  ஆரோக்கியமாக வளர்ப்பது என்பது ஒருபுறம் இருந்தாலும்.கருவில் இருந்தே கரு உருவாவதற்கு முந்தைய காலத்தில் இருந்தே பெண்கள் ஆரோக்கியம் காத்தால் தான் ஆரோக்கியமான உயிர் ஜனிக்கும்

முந்திய திங்கள்தன்னில் கருமுளைத்தது கட்டியாகும் பிந்திய திங்கள் தன்னிற் பிடரிதோள் முதுகுமன்றி யுதிக்கும் மூன்றாந்திங்க ளுடல்விலா யரையுங்கால்கள் ளுந்திக்கு யுயிரும்வந்தே யிணைந்திடுமென்றே என்கிறது சித்தர் பாடல்

நன்றி ; சரவண குமார்.

Thursday 2 April 2020

நீரழிவு நோய் தீர சித்த மருத்துவம்

நீரழிவு நோய் தீர

தே.பொருட்கள்:-
உலர்ந்த ஆல இலை – ½ கிலோ
வெந்தயம் – 100 கிராம்
நாவல் கொட்டை – 100 கிராம்
நெல்லிக்காய் – 100 கிராம்
மஞ்சள் – 100 கிராம்
படிகார பற்பம் – 50 கிராம்

     இவையனைத்தையும் தூள் செய்து கலந்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் வீதம், காலையும் இரவும் உணவுக்குமுன் 48 நாட்கள் சாப்பிட்டு வர, நோய் குணமாகும்.

     மேலும், ஆலங்குச்சியினால் பற்களைத் துலக்கிப் பாருங்கள். நாக்கு வெடிப்பு, பல் ஆட்டம், பல் ஈறுகளில் ரத்தம் வடிதல், வாய் நாற்றம் போன்றவை ஆலங்குச்சியால் பல்துலக்கி வரத் தீரும்.

நன்றி ; பாஸ்கர்.

Wednesday 1 April 2020

ரத்தம் சுத்தமாக வைத்து கொள்ள உதவும் மருந்துகள்.

இரத்த சுத்தி முறைகள்
***************************

ஒவ்வொரு மாற்று மருத்துவ முறையிலும் இரத்த சுத்தி முறைகள் இருக்கின்றன. ஆனால், ஆங்கில மருத்துவத்திலோ இரத்தத்தில் இரசாயனக் கழிவை அதிகரிக்கும் சிகிச்சை முறையைத்தான் கொண்டுள்ளது. நீங்கள் எந்தப் பக்கம்? இரத்த சுத்தி முறை பக்கமா? அல்லது இரசாயனத்தின் பக்கமா? அன்பு நண்பர்களே! மாற்று மருத்துவ இரத்த சுத்தி முறைகளை ஒவ்வொன்றாக இனிப் பாப்போம்.

1. இயற்கை மருத்துவம்: 
*****************************

குடல் சுத்தம் உடலையும் இரத்தத்தையும் சுத்தமாக்க வழிதரும் என்பதால் இயற்கை அகிம்சை எனிமாவை இயற்கை மருத்துவம் பரிந்துரைக்கிறது. காலைக்கடன் முடித்தாலும் முடிக்க முடியாவிட்டாலும் எனிமாவை தினமும் எடுத்தால் இரத்தத்தில் மலக்கழிவு சேருவதைக் குறைக்கும். அப்புறம் தினமும் ஒரு டீஸ்பூன் அறுகம்புல் பொடி ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் காலையில் குடித்தால் இரத்தத்தில் உள்ள நீர்(சளி)க் கழிவுகள் வெளியேற்றப்படும். தினமும் இரவு படுக்கப்போகும் முன் அதேமாதிரி ஒரு டீஸ்பூன் கடுக்காய் பொடியை வெதுவெதுப்பான வெண்ணீரில் கலந்து அருந்தினால், இரத்தத்தின் கொழுப்புக் கழிவுகள் வெளியேற்றப்படும்.

2. சித்த மருத்துவம்: 
************************

ஒரு டம்ளர் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் 20 மிளகை உடைத்து போட்டு கொதிக்கவிடவும். அரை டம்ளர் நீராகும் வரை கொதிக்கவைத்துச் சிறிது இயற்கை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து வடிகட்டி பதமான சூட்டில் காலையில் வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். நம் உணவுகளில் மிளகாய்க்கு பதில் மிளகை பயன்படுத்தினால் இரத்த சுத்தி இயல்பாக தினப்படி நிகழும்.

3. ஹோமியோபதி மருத்துவம்: 
*************************************

நம் இரத்தம் சுத்தமாக ஹோமியோபதியில் உப்புக் கழிவுகள் நீங்க நாட்ரம் முர் (Natrum mur), நுண் கிருமிக் கழிவுகள் நீங்க நக்ஸ் வோமிக்கா (Nux vomica) மற்றும் ரஸ் டாக்ஸ் (Rhus tox), செரிமானக் கழிவு நீங்க கார்போ வெஜ் (Carbo veg), விஷக்கடி நீங்க ஏபிஸ் மெல் (Apis mel) மற்றும் காந்தாரிஸ் (Cantharis) உள்ளிட்ட ஏராளமான மருந்துகள் உள்ளன.

4. மலர் மருத்துவம்: 
************************

நம் இரத்தம் சுத்தமாக சில மலர் மருந்துகள் உதவும். உதாரணமாக தோல் நோய் இருப்பவர்களுக்கு திடக் கழிவு நீங்க கிராப் ஆப்பிளும் (Crab apple), இரசாயனக் நீர்க் கழிவு நீங்க ராக் ரோஸும் (Rock rose), கொழுப்பு உஷ்ணக் கழிவுகள் நீங்க செரி பிளமும் (Cherry plum), வாய்வுக் கழிவுகள் நீங்க கிளமேட்டிஸ் (Clematis) மற்றும் பித்த ஆகாசக் கழிவு நீங்க (White chestnut) ஆகிய மலர் மருந்துகள் மிக உதவியாக இருக்கும்.

5. சத்துணவு மருத்துவம்: 
******************************

நீரில் கரையும் நார்ச் சத்து நம் இரத்தத்தில் உள்ள திடக் கழிவுகளை நீக்கும். சி-உயிர்ச் சத்து (Vitamin C) இரத்தத்தில் உள்ள நீரில் கரையும் மற்றும் சளிக் கழிவுகளை நீக்கவல்லது. ஈ-உயிர்ச் சத்து (Vitamin E) இரத்தத்தில் உள்ள கொழுப்பில் கரையும் கழிவுகளை நீக்க வல்லது. கரோட்டின் (Carotene) தாவரச் சத்து நம் இரத்தத்தில் உள்ள எதிர்வினைப் புரியக்கூடிய இரசாயனக் கழிவுகளை நீக்க வல்லது. பக்குவப் பூண்டுச் சத்து வாய்வுக் கழிவுகளை நீக்கும். தியோபிளாவின் (Theoflavin) மற்றும் கேட்சின் (Catechin) தாவரச் சத்துக்கள் கெட்ட கொலஸ்ட்ரால் கழிவுகளை நீக்கும்.

6. மூச்சு பயிற்சிகள்: 
************************

ஆழமான, அதே சமயம் நிதானமான மூச்சுப் பயிற்சியானது நம் உடல் முழுமைக்கும் பாயும் இரத்தத்தில் பிரான வாய்வை (Oxygen) உள் செலுத்தி சக்தியாக்கம் செய்துவிட்டு (Oxidation), பின்னர் பிரான வாய்வானது கரியமில வாய்வாக (Carbondioxide) உருமாற்றமாகி வெளிப்படுகிறது. நாம் விடும் மூச்சானது முழுமையாகவும் ஆழமாகவும் இருக்கும் போதுதான், இந்தப் பிரான சக்தியாக்கம் தரமாக நிகழ்ந்து கழிவாக வெளிப்படும் கரியமில வாய்வு முழுமையாக வெளியேற்றமாகிறது. உண்மையில் ஆழமான மூச்சு பயிற்சியால்தான் நம் உடலின் 40 சதவீத கழிவுகள் வெளியேற்றமாகிறது. ஆகவே, நாம் ஆழமான மற்றும் சீரான மூச்சு பயிற்சியை தவறாமல் செய்து வருவதன் மூலமும் நம் இரத்தத்தை செலவில்லாமல் சுத்திகரிக்கலாம்.

மாற்று மருத்துவ இரத்த சுத்தி முறைகளைக் கையாண்டு மாசற்ற இரத்தத்தை நாம் கைகொள்ளப் பெறுவோமாக!

        நன்றி   - shiva shangar