Monday 5 March 2018

தண்ணீர்விட்டான் கிழங்கின் பயன்கள்...

தண்ணீர்விட்டான் கிழங்கின் பயன்கள்...
தண்ணீர்விட்டான் கிழங்கு இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. உடலைப் பலமாக்கும்; உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும்; தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்; இசிவை அகற்றும்; ஆண்மையை அதிகரிக்கச் செய்யும்.
1. தண்ணீர்விட்டான் கிழங்கு பால் சேர்த்து அரைத்துக் காயவைத்து பொடி செய்து, தினமும் இரு வேளை சாப்பிட்டுவந்தால் நீரிழிவு குணமாகும்.
2. தண்ணீர்விட்டான் கிழங்குப் பொடியைப் பாலில் கலந்து குடித்துவந்தால் உடல் உஷ்ணம், வெட்டைச் சூடு குணமாகும்.
3. தண்ணீர்விட்டான் கிழங்கு, சுக்கு, மிளகு, திப்பிலி – தலா 50கிராம் எடுத்துப் பொடி செய்து, தினமும் இரண்டு வேளை இரண்டு கிராம் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டால் அனைத்துவிதமான காய்ச்சல்களும் குணமாகும்.
4. தண்ணீவிட்டான் கிழங்கு, பூனைக்காலி விதை, நெருஞ்சில், அமுக்கரா, சாலாமிசரி – தலா 100கிராம் எடுத்துப் பொடி செய்து தினமும் பாலில் கலந்து குடித்தால் ஆண்மைக்குறைவு, நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
5. தண்ணீர்விட்டான் கிழங்கு இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. உடலைப் பலமாக்கும்; உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும்; தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்; இசிவை அகற்றும்; ஆண்மையை அதிகரிக்கச் செய்யும்.
6. அழகிற்காக வளர்க்கப்படும் வகையும் உள்ளது. இது சிறுசெடி அமைப்பில் வளரும். இதனுடைய வேர்கள் பெரியதாக இருப்பதில்லை.
7. உடல் பலம் பெற தண்ணீர் விட்டான் கிழங்கைச் சேகரித்து, நீரில் கழுவி, மேல் தோல் நீக்கி, காயவைத்து தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூள் இரண்டு கிராம் அளவு, பசு நெய்யில் கலந்து, தினமும் காலை, மாலை இரண்டு வேளைகள் சாப்பிட்டுவர வேண்டும்.
8. ஆண்மை பெருக தண்ணீர் விட்டான் கிழங்கைக் காயவைத்து, தூள் செய்துகொண்டு, வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம், தினமும் இரண்டு வேளைகள், ஒரு மாதம் வரை தொடர்ந்து சாப்பிட்டு, ஒரு டம்ளர் பால் குடித்து வர வேண்டும்.
9. மாதவிடாயின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த நான்கு தேக்கரண்டி அளவு தண்ணீர் விட்டான் கிழங்கு சாற்றுடன், 2 தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து பருக வேண்டும். தினமும் மூன்று வேளைகள், 5 நாட்களுக்குச் செய்ய வேண்டும்.
10. கால் எரிச்சலைக் கட்டுப்படுத்த தண்ணீர் விட்டான் கிழங்கிலிருந்து சாறு எடுத்து, காலையிலும், படுக்கைக்குப் போகும் முன்பும், காலிலும், பாதத்திலும் பூச வேண்டும். குணமாகும் வரை சிகிச்சையைத் தொடரலாம்.
11. தண்ணீர்விட்டான் கிழங்கு பானம்: பசுமையான தண்ணீர் விட்டான் கிழங்குகளைக் கழுவி, தோல் நீக்கி, இடித்து, சாறு எடுக்க வேண்டும். ஒரு கோப்பை சாற்றுடன் ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து காலையில் பருக வேண்டும். 3 முதல் 7 நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிடலாம். இது ஒரு பல்நோக்கு ஆரோக்கிய மருந்தாகும். இதனால், இளைத்த உடல் பெருக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால் சுரப்பு அதிகமாகும், நீர்ச்சுருக்கு, நீர்க்கட்டு, வயிற்று எரிச்சல் ஆகியவையும் குணமாகும்.
வேர்க்கிழங்குகள் மூலமாகவும் இனப்பெருக்கம் செய்யும். இவை, சேகரிக்கப்பட்டு மருத்துவத்தில் பயன்படுகின்றன. காய்ந்த நிலையில் இவை நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும்.
வாழ்க வளமுடன்
Image may contain: plant

எலுமிச்சையில் மாந்திரீகம்

எலுமிச்சையில் மாந்திரீகம்
"ஒரு நண்பருக்காக மீண்டும் ஒருமுறை "
தேவ கனி என்று கூறப்படும் எலுமிச்சையில் அனைவரும் செய்ய கூடிய முறையில் ஒரு மாந்திரீக பயிற்சியை இங்கே வழங்கி உள்ளேன். இதன் பலன் : மாந்திரீக பயிற்சி முறை முடிந்ததும் அந்த எலுமிச்சையை தன்னுடனே வைத்திருக்க சகல காரிய சித்தியும் உண்டாகும்.
இதை வெள்ளி கிழமை காலை 6:15 க்கு ஆரம்பிக்கவும்.குளித்து வெள்ளை நிற அதை அணிந்து இருக்க வேண்டும். பெண்கள் வெள்ளை நிறம் கலந்த உடைகள் அணியலாம்.காமாட்சி விளக்கில் நல்லெண்ணை தீபமேற்றி ஒரு மர ஸ்டூலில் அல்லது மனையில் கிழக்கு முகமாக வைக்கவும். விளக்கில் இருந்து நாலடி தள்ளி தர்ப்பை புல் பாய் விரித்து அதில் மேற்கு பார்த்தவாறு அமராவும். வலது கையில் எலுமிச்சை கனியை வைத்து கொண்டு (கனியை பேரம் பேசாமல் வாங்க வேண்டும்-கனியில் கருப்பு புள்ளிகள் இல்லாமல் பார்த்து கொள்ளவும்) தீப ஒளியை பார்த்தவாறே அகத்தியர் மந்திரமான " ஓம் ரீங் ஆகர்ஷய ஆகர்ஷய தேசிப்பழம் ஆகர்ஷய வாவா ஸ்வாகா" என 108 முறை ஜெபம் செய்து கனியை விளக்கின் பாதத்தில் வைக்கவும். மீண்டும் விரிப்பில் அமர்ந்து இடது கையை விரித்து அதில் வலது கையை வைத்து கண்களை மூடி புருவ மத்தியில் ஒரு நிலைப்படுத்தி அதே மந்திரத்தை முடிந்த வரை தியானிக்கவும்.சுமார் 15 நிமிடங்கள் அவ்வாறு செய்து முடித்ததும் எழுந்து விடலாம். அதே கனியை வைத்து கொண்டு தினசரி கூறியுள்ள நேரத்தில் தொடர்ந்து 90 நாட்கள் செய்து வர மந்திர சித்தி உண்டாகி விடும். 90 நாட்களுக்குள் விளக்கு பாதத்தில் வைத்த பழம் நகர்ந்து நம்மிடம் வந்து சேரும். இது 45 நாட்களிலேயே கை கூடி விட்டால் கூட மேற்கண்ட பயிற்சியை நிறுத்தி கனியை வைத்து கொண்டு தேவைகளை நிறைவேற்றி கொள்ளலாம். இந்த மந்திர பயிற்சியில் கனி வாடி கனத்து போகுமே அன்றி அழுகி விடாது. கையில் வந்து சேர்ந்த கனியை அடுத்த 60 நாட்கள் வரை வைத்து உபயோகிக்கலாம். ஒரு முறை மந்திரம் சித்தி ஆகிவிட்டால் பின்பு ஓரிரு நாட்களிலேயே அடுத்து செய்தால் கனி கைகளில் சேர்ந்து விடும். மிக உபயோகமான சக்தி வாய்ந்த முறை இது. பயிற்சி நாட்களில் மது,மாது,மாமிசம்,புகை போன்றவை அறவே கூடாது. பொதுவாக இந்த மந்திரம் 1.25 லட்சம் முறைகள் உருவேற்றி விட்டால் மந்திரம் நம்முடனே இருந்து தேவையான சமயத்தில் யாருக்காக வேண்டுமானாலும் இதை செய்து கொடுக்கலாம். சுபம் உண்டாகும்.
நன்றி குருமுனி பயிற்சி