Monday 26 February 2018

இரத்த மூலம் சூரணம்

இரத்த மூலம் சூரணம்
மூலத்திலிருந்து இரத்தம் வாருவது ஒரு வாரத்துகுள் நின்று விடும் பேதியையும் கட்டுப்படுத்தி உடல் வெப்பத்தையும் தணிக்கும்.
1. ஓமம் 35 கிராம்
உ.இந்துப்பு 15 கிராம்
3. கடுக்காய் தோல் 75 கிராம்
4. சுக்கு 35 கிராம்
5 . வால் மிளகு 25 கிராம்
6. அரிசித்திப்பிலி 20 கிராம்
இந்துப்பை பொடித்து கொள்லாம் , ஒவ்வோரு சரக்கையும் தனித்தனியே லேசாக வறுத்துக் கொள்ளவும்.. பிறகு சூரணித்து ஒன்று சேர்த்துப் பத்திரப் படுத்தவும் i
காலை வெறும் வயிற்றிலும் மாலை 6 மணிக்கு அரை தேக்கரண்டி மோருடன் சாப்பிட குணமாகும்.
அன்புடன் தங்கவேல் சுவாமிகள்
701013 5982. 9942163871
No automatic alt text available.Image may contain: food

அல்சர் நிரந்திர திர்வு

அல்சர் நிரந்திர திர்வு 

மாவிதை பவுடர் உடன் மனத்தக்காளி சாறு விட்டு உலர்த்தி இதில் அரை டிஸ்பூன் காலை மாலை பால் கலந்து சாப்பிட குணமாகும்
Image result for mango seedImage result for mango seed


(Aids)பால்வினை நோயை குணப்படுத்தும் வெள்ளறுகு.

பால்வினை நோயை குணப்படுத்தும் வெள்ளறுகு.
ஒருவனுக்கு ரத்தம் ஆரோக்கியமாக இருந்தால், நோய் அணுகாது: ஆயுள் நீடிக்கும். பால்வினை நோய்களால் ஆண், பெண்களின் ரத்தம் கெட்டு 100 க்கு, 90 பங்கு நபர்களுக்கு மேக நோய் தாக்கி மருத்துவர்களால் புரிந்துக் கொள்ள முடியாத நூதன நோய்கள் தோன்றி மரணத்தை உண்டு பண்ணும் -
சிலருக்கு பரம்பரையாகவே மேக நோய்கள் தாக்கும் உதாரணமாக மதுமேகம் , நீரிழிவு, சரும நோய்கள் சிலருக்கு புற்று நோயும் தாக்கும்
அவ்வித நோய்களை குணப்படுத்த வேண்டின், ரத்தத்தில் கலந்திருக்கும் விஷ நீரை அகற்றினால் படிப்படியாக ரத்தம் சுத்தமாகி சரும நோய்கள் பூரண குணமடையும் .
ரத்தம் சுத்தி செய்யும் பல மூலிகைகளில் மிக சிறந்தது வெள்ளருகு வாலிபர்கள் பலர் விலைமாதர்களிடம் உறவு கொண்டு , பால் வினை நோய் வெட்டை கண்டதும் பிறரிடம் சொல்லாமல் மறைத்து அந்நோய் தீவிர தன்மையை அடைந்தவுடன் மருத்துவர்களை அணுகுவர். அதற்குள் அந்நோய் உடம்பெல்லாம் பரவி ரத்தத்தை அசுத்தம் செய்து விடும்
வெட்டை நோய்க் கிருமிகள் பீஜத்தின் அடிப்பாகம் வரை துளைத்து உள்ளே பதுங்கிக் கொண்டு அந்நோயாளியின் ஆயுட்காலம் வரையில் தொல்லை கொடுத்து வரும். அக்கிருமிகள் சாவதும் கிடையாது
வயதான காலத்தில் நீரடைப்பு, நீர் ஏரிச்சல், ரத்தம் போதல், சிறுநீர் பால் போல் இறங்குதல் முதலிய நோய்கள் பீடிக்கும்.
பால் வினை நோய் தாக்கிய உடன் நம் தெய்வீக மூலிகையான வெள்ளறுகை வேருடன் பிடுங்கி பசும்பால் விட்டரைத்து கொட்டைப் பாக்களவு எடுத்து பசும்பாலில் கலக்கி காலை, மாலை மூன்று நாட்கள் சாப்பிட்டு உப்பு, புளி காரம் நீக்கி பத்தியமிருப்பின்
உடன் நீர்த்தாரையில் எரிச்சல், நீர் சுருக்கு வெள்ளை படுதல் நீங்கும்.
அன்புடன் தங்கவேல் சுவாமிகள்
9942163871, 7010135982

Wednesday 21 February 2018

வீட்டிலேயே குலதெய்வ குறிகேட்கும் முறை

No automatic alt text available.

அஞ்சனம் செய்யும் ரகசியம்.

அஞ்சனம் செய்யும் ரகசியம்.
வெள்ளெருக்கன் இலையை நிழலுலர் பொடி பொடியாக்கி வஸ்திரகாயஞ் செய்து அதை வெள்ளெலியின் கருவினாலரைத்துச் சீலைக்குத்தடவி நிழலலிலுர்த்தி திரியாக்கி அகலில் போட்டு அதற்கு வெளவ்வாலின் நெய்யை யூற்றிக் கொளுத்து அதில் எழும்பு புகையை புதுச்சட்டில் புகையைபிடித்து ஆலாக்குருவியின் கொழுப்பைத் தடவி காயவைத்து.அதில் மேற்படி புகையைப் பிடித்து அப்புகையை வழித்து செப்புச் சிமிளில் வைத்துக் கொண்டு. தேவையானபோது வேற்றிலையில் தடவி நல்லெண்ணெயில் கொளுத்திய விளக்கின் வெளிச்சத்தில் பார்க்க சகலமும் நன்றாக தெரியும். நெற்றியில் இட்டுக்கொண்டு குறி சொல்ளலாம். அனைவருக்கண்களுகாகும் தெரியும். மகா அருமையானது. எந்த மறைவும் இல்லை.
சிலர் என்னிடம் ஐயா வெற்றிலையில் மை தடவி பார்க்கும் மை கூறுங்கள் என்று கேட்டவர்களுக்கு.
இந்த மையில் பெரியவர்கள் கண்களுக்கும் மை ஓடும் குழந்தைகளுக்கு ஓடும். இந்த முறையில்தான் கேரளாவில் கையாலப்படுகிறது.
நன்றி குருமுனி
9600043233
8220022497

எடுத்த காரியம் வெற்றியாக விபூதி

எடுத்த காரியம் வெற்றியாக விபூதி
நல்ல நாளில் நெய் விளக்கு ஏற்றி விநாயகர் பிடித்து வைத்து அருகம்புல் சாற்றி அலங்கரித்து, விளக்கிற்கு முல்லை மலர் சாற்றி,தேங்காய்,பழம்,சர்க்கரைப் பொங்கல்,கற்கண்டு, விபூதி, சாம்பிராணி, ஊதுவத்தி இவைகளுடன் ஒரு தட்டில் விபூதியை பரப்பி வைக்க வேண்டும்.
முதலில் முறைப்படி விநாயகர் பூஜை முடித்து விட்டு கிழக்கு முகமாக பத்மாசனத்தில் அமர்ந்து
வெற்றிலைக் காம்பு, அல்லது மலரின் காம்பினால் தட்டில் பரப்பிய விபூதியில் பெரிதாக "ஓம்" என எழுத வேண்டும்.அதனுள்ளே "சிவாய நம" என எழுத வேண்டும். " நம,மசி,அங்,சங் " என நான்கு திசையிலும் விபூதியில் எழுத வேண்டும்.
முல்லை மலர்களால் விபூதி பரப்பிய தட்டிற்கு அர்ச்சனை செய்தபடி கீழ்காகண்ட மந்திரத்தை 108 முறை கூறவேண்டும்.
ஓம் சிவாய நம ஓம் ஓம் சர்வ சக்தி ஓம் ஓம் ஓங்கார சக்தி ஓம் ஓம் பிரணவப் பொருளே ஓம் ஓம் பஞ்சாட்சரமே ஓம் ஓம் பிரபஞ்ச சக்தியே ஓம் ஓம் சர்வ காரிய சித்தி சக்தி ஓம் ஓம் சர்வ ஜெய சக்தியே ஓம் ஓம் மசி நசி அங் மங் சங் ஆதார சக்தியே ஓம் ஓம்
"
இதேபோல் 10 நாட்கள் செய்து வர சித்தியாகும். சித்தியான பிறகு ஒருமுறை கூறி விபூதி பரப்பிய தட்டிலே கற்பூரம் ஏற்றி வணங்கினால் போதும்.
இந்த விபூதியை எல்லா வகைக் காரியங்களும் நலம்பெற நெற்றியில் பூசினால் போதும். வசியம்,வசிகரம்,காரிய சித்தி இவைகள் ஏற்படும்.
இந்த விபூதியில் அமவாசையில் காலையில் "கரு நெச்சி அல்லது கருநீலா நெச்சி " வேருக்கு கருப்பு சேவல் பலியிட்டு காப்புக்கட்டி வேரை மட்டும் கொண்டுவந்து இந்த விபூதியில் இட்டு மந்திரத்தை சொல்லி வேருக்கு தங்கம் அல்லது வெள்ளி தாயத்தில் அடைத்து கட்டிக்கொண்டால் சகல வித வசியங்களும் ,சகலவித சித்துக்களும், தேவதைகள் வசியம் என கைகூடும். நம்மை பிடித்த சகலமும் பினிகளும் ஓடும். மாந்திரகத்தில் உள்ள எட்டு கர்மக்களும் கைக்கூடும். நீங்கள் பயன்படுத்திப்ருக்கள் அனுபவத்தில் பல மாற்றங்கள் நிகலும் இந்த நெச்சி வேர்' இதை யாருவேண்டுமானலும் செயலாம்.சித்தயாகும்.
நன்றி குருமுனி
+918220022497

செல்வ வளம் பெற தூபம்

செல்வ வளம் பெற தூபம்"
அரசு,மருதாணி,கஸ்தூரி,சாம்பிராணி, சென்னாயுருவி,இலுப்பை,புனுகு,புங்கன்,முந்திரி,குங்கிலியம்,(கருப்பு,வெள்ளை இரண்டும்,) வெள்ளருகு,ஏலக்காய்,வெண்கடுகு, கோரோசனை,கோஷ்டம்,நீலநொச்சி,ரோஜா இதழ்,அலமரம்,சந்தனம்,அகில்,தேவதாரு,
அரசு. இந்த மூலிகையை மும்மூர்த்திகள் வசிப்பார்கள் இவர்களின் ஆசி கிடைக்கும்.
மருதாணி. அனுமான் அனுகிரகம் பெற்ற மூலிகை இதணால் அச்சம்,பயம்,காத்து,கருப்பு செய்வினை,மோகினி போன்ற தீயபிரச்சனைகளை சரிசெய்யும்.
சென்னாயுருவி. இந்த மூலிகை மனித வசியம் செய்யும்.
இலுப்பை. இது பூதங்களை அடக்கி ஆளும் பிரச்சனை குடுக்கும் பூதங்களை கட்டுப்படுத்தும்
பச்சை புனுகு. இது மலைப் பகுதில் வசிக்கும் பூணை இதன் உடலில் எடுக்கும் பொருள் . பச்சை புனுகு இது எட்சினி தேவதை வசியம் செய்து தனதானியங்களை பெருகச்செய்யும்.இதன் சந்தையின் விலை 1 கிராம் 1200 ஆகும்.
கஸ்தூரி. இது கஸ்தூரி மாண் வால்பகுதில் இருக்கிறது. இதன் விலை சந்தையில் 1 கிராம். 5200 ரூபாய் . ஆணல் இப்போதிக்கு இந்தியாவில் இது கிடைப்பதில்லை .காரணம் கஸ்தூரி மாணியின் இனம் அழிந்து வருகின்றது. கடையில் கிடைப்பது வெளிநாடுகளில் இருந்து வர வைப்பாதால் இதன் விலை அதிகம் சந்தையில்.
வெள்ளருகு. இந்த மூலிகை இறைசக்தியும் தனத்தையும் ஈர்க்கும்.
குங்குலியம். கண்திர்ஷ்டியோ அழிக்கும்.
வெண் கடுகு. தீயா எதிர்மறையான கதிர்வீச்சு அழிக்கும்.
கோரோசனை. இது காளமாட்டில் உடலில் எடுக்கும் பொருள் . இது சகல வித வசியமும் செய்யும். இதன் சந்தை விலை 1 கிராம் 2500 ரூபாய் ஆகும் ஒரு மாடு தன் வாழ்நாள் முழுவதும் ஆழிம்போது இதன் உடலி கிடைப்பது 3 கிராம் தான். கிடைக்கும்.
நெச்சி இந்த. மூலிகை பலமடங்கு தனத்தை ஈர்த்து தக்கவைக்கும் தன்மை உண்டு.
ரோஜா. இந்த எதிரிகளை அழிக்கும் சக்தி இதற்கு உண்டு எதிரியின் தீய சக்திகளை அழிக்கும்.
ஆலமரம். இந்த மூலிகை தன் இருப்பிடத்தை நிலையாக தக்க வைக்கும் எண்ணங்களை தரும்.
எல்லாம் மூலிகையின் தன்மைகளை சொல்லிக்கொண்டு .உங்கள் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.
நேரம் கிடைக்கும்போது நான் கூறுகிறேன்.
சில மூலிகைகள் பற்றி ஏன் விளக்கம் சொல்லப்படுகிறது என்றால் உங்களுக்கு சில எண்ணங்கள் வரும் எப்படி இதுநடக்கும் எப்படி நடக்குது புரியதவர்கள் புரிவதற்க்காக
மேற்கண்ட 23 மூலிகைப் பொருட்களையும் சம அளவு வாங்கி சுத்தம் செய்து,
இடித்து தூளாக்கவும்.இந்தத் தூபப் பொடியைத் தினந்தோறும் வீடு,தொழில், கம்பெனி, ஆலயம், வியாபாரம், ஸ்தானங்களில் போட்டு வர நாளுக்குநாள் தடைகளை அறுத்து தன வளர்ச்சி உண்டு பண்ணும் செல்வ வளம் பெற சிறந்த பயனுள்ள தூபப்பொடி பணத்திர்க்கு மட்டுமா இல்லை அனைத்து சுபம் உண்டு.நல்ல பலனைக் காணலாம். செலவு குறைவு,பலனோ அதிகம்.நிறையப் பேர் பலனடைந்திருக்கிறார்கள்.பயன் படுத்துவீர் பலனடைவீர்.
முடித்த வரையில் நீங்கள் இதை செய்யுங்கள் ஒரு சில பொருள் விலை அதிகமாக தான் இருக்கும் கவலை வேண்டாம் செலவு செய்யமால்,கஸ்டப்படமால் எதுவும் உலகில் கிடைப்பதில்லை. நமக்கு ஒன்று நடக்க வேண்டும் என்றால் தேடவேண்டும்.
புரியும்படி சொல்லிவிட்டேன் பலருக்கும் என்னிடம் பேசமுடியவில்லை. என்னிடத்தில் பேசுவதற்க்கு.அல்லது பொருள் தேவைக்கு .மாந்திரீக பயிற்சி என்னை சந்திக்க வேண்டும் என்றால் உங்கள் முகவரி பேன்நம்பர் உங்கள் தேவைகள். எனது வாட்ஷாப்பில் பதிவிடுங்கள் அல்லது எனது எண்ணில் SMS பண்ணுங்கள்.
நன்றி குருமுனி
MMM.JAJA
9600043233
8220022497

ஈடு மருந்து (உடலில் உள்ள வசிய மருந்து) முறிவு முறை.

ஈடு மருந்து (உடலில் உள்ள வசிய மருந்து) முறிவு முறை.
பயத்தம் பருப்புடன் கல்யாண பூசணிக்காய் சேர்த்து சூடான சாதத்தில் பிசைந்து உண்ண மருந்து முறியும்.
வில்வ பழத்தின் ஓட்டை தீயில் கருக்கி மைய அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட உடன் வாந்தி எடுத்து மருந்து முறிந்து விடும்.
பூனைவணங்கியை சமுலமாக கொண்டு வந்து கல்வதிலிட்டு நன்றாக அரைத்து புளியங்கொட்டை அளவுக்கு சிறு சிறு மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தவும். பிறவு தேவைப்படும் போது 2 மாத்திரை சாப்பிட்டு ரசம் சாதம் சாப்பிட பேதியில் ஈடுமருந்து வெளிவந்துவிடும். பேதியை நிறுத்த மோர் எலுமிச்சை பழம் சாறு குடிக்க பேதி நிற்கும்...
மறைக்கப்பட்ட மாந்திரீகம் மர்மங்கள்... ஆராய்ச்சி மற்றும் விழிப்புணர்வு.
நன்றி குருமுனி பயிற்சி...
9600043233 வாட்ஷாப்பில்
8220022134

பண வரவு மந்திரம்

Image may contain: one or more people and text

மந்திர பிரயோகம்

சிலருக்கு புரியும் பலருக்கும் புரியாது.
மீண்டும் ஒரு முறை.
*மந்திர பிரயோகம்*
( *திருமூலர் பெருமான் உலகுக்கு சொன்ன உயர்ந்த மந்த்ர ரகசியம்* )
நவாக்கரி சக்கரம் நான் உரை செய்யின் நவாக்கரி ஒன்று நவாக்கரி ஆக
நவாக்கரி எண்பத்து ஒருவகையாக நவாக்கரி அக் கிலீ சௌ முதல் ஈறே.
சௌமுதல் அவ்வொடு ஹௌஉடன் அம் க்ரீம் கௌவுகளும் ஐயுளும் கலந்து ஹ்ரீம் ஸ்ரீம்
என்று ஒவ்வில் எழும் க்லீம் மந்திர பாதமாச் செவ்வுள் எழுந்து சிவாயநம என்னே.
நவ அட்சரிம் என்பது தமிழில் மருவி நவாக்கரி ஆனது. ஒன்பது சக்திகளின் அட்சர மந்திரம். ஒவ்வொன்றையும் முதலாக்கிக்கூற 81 அட்சரங்கள் ஆகும். முதல் வரிசையில் க்லீம் முதல் சௌம் வரை. அட்சரங்கள் இடம் மாறும்போது ஒளியும் நிறமும் மாறும்.
ஒன்பது வரிசையில் ஒவ்வொரு வரிசையும் மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும் கூறியபின் ஓம் சிவாயநம என முடிக்கவும்.
மேலிருந்து கீழாக கூறுதல்
க்லீம்
ஸ்ரீம்
ஹ்ரீம்
ஐம்
கௌம்
க்ரீம்
ஹௌம்
ஔம்
சௌம்
கீழிருந்து மேலாக கூறுதல் முடிக்கும்போது ஓம் சிவாய நம என முடிக்கவும்.
நவாக்கரியாவது நானறிவித்தை நவாக்கரி உளெழு நன்மைகள் எல்லாம்
நவாக்கரி மந்திர நாவுளே ஓத நவாக்கரி சக்தி நலம்தரும் தானே.
நலந்தரு கல்வியும் ஞானமும் எல்லாம் உரம்தரும்வல்வினை உம்மை விட்டோடிச்
சிரம் தரு தீவினை செய்வது அகற்றி வரம்தரு சோதியும் வந்திடும் காணே.
நான் அனுபவித்த மந்திரம் வித்தை இது.நாவுக்குள் மௌனமாக இதை ஓதினால் நன்மைகள் தரும். நவாக்கரி என்பது உள் எழு நன்மை என்பதால் உடம்பிற்குள் சார்த்தி சொல்லல் ஆகும். இந்திரயோனி- உள்நாக்கு, பிரம்மநாளம்- தலைஉச்சி. நவாக்கரி சக்கரம் ஓதுவதால் கல்வி ஞானம் முதலிய செல்வமும் வலிய வினை நீக்கமும் தீவினைகள் வராமல் செய்வதும் ஆகிய வரம் தரும் உள் ஒளி உண்டாகும்.
நவாக்கரி அட்சரம் உடல் உள்ளே சார்த்துமிடம்.
க்லீம்- மூலாதாரம்
ஸ்ரீம்- சுவாதிட்டானம்
ஹ்ரீம் - மணிப்பூரகம்
ஐம்- அநாகதம்
கௌம் - விசுத்தி
க்ரீம்- இந்திரயோனி
ஹௌம்- ஆக்ஞா
ஔம்- நெற்றி உச்சி
சௌம்- பிரம்ம நாளம்
மேலிருந்து சொல்லி கீழிருந்து மேல்வரை சொல்லுவது ஒரு முறையாகும்
நினைந்திடும் அச்சிறீம் அக்கிலீம் ஈறா நினைந்திடும் சக்கரம் ஆதியும் ஈறும்
நினைந்திடும் நெல்லொடு புல்லினை உள்ளே நினைந்திடும் அர்ச்சனை நேர்தருவாளே
ஸ்ரீம் என்பதை முதலாகவும் க்லீம் என்பதை இறுதியாகவும் இச்சக்கரம் ஓதி நெல்லும் அருகம்புல்லும் தூவி அர்ச்சனை செய்க பராசக்தி அருள் புரிவாள். முதலில் இருந்த க்லீம் இதில் இறுதியானது. இரண்டாவதாக இருந்த ஸ்ரீம் முதலாவதானது. இதுபோல் ஒன்பது ஒலிகளும் முதலும் ஈறும் ஆகும்.
ஹ்ரீம் முதலாகவும் ஸ்ரீம் இறுதியாகவும் சொல்வதால் நாடாளும் அரசரும் வசமாவர்.
ஐம் முதலாகவும் ஹ்ரீம் இறுதியாகவும் சொல்வதால் நால்வகை வாக்கைன் சக்தியை அடியலாம். மேலும் வேதம் ஆகமம் ஆகியன பயிலாம்.
கௌம் முதலாகவும் ஐம் இறுதியாகவும் சொல்வதால் பகையை வெல்லலாம் ஓதிய்வர்களை பல உயிர்களும் வணங்கும்.
க்ரீம் முதலாகவும் கௌம் இறுதியாகவும் சொல்வதால் தெய்வ உறவாகி மழையும் செல்வமும் தரும்.
ஹௌம் முதலாகவும் க்ரீம் இறுதியாகவும் சொல்வதால் திருஐந்து எழுத்து ஓதி பயன் பெறுவர். மனோன்மணியின் அருள் கிடைக்கும்.
ஔம் முதலாகவும் ஹௌம் இறுதியாகவும் சொல்வதால் சுழுமுனை நாடியை வசம் செய்யும் அமுதேச்வரியின் அருள் கிடைக்கும்.
சௌம் முதலாகவும் ஔம் இறுதியாகவும் சொல்வதால் தலையில் சோதி விளக்காக பராசக்தி தெரிவாள்.
ஏய்ந்த மர உரி தன்னில் எழுதிநீ வாய்ந்த இப்பெண் எண்பத்தொன்றில் நிறைந்தபின்
காய்ந்த அவிநெய் எள்கலந்து உடன் ஓமமும் ஆம்தலத்து ஆம் உயிர் ஆகுதி பண்ணே
மர உரியில் ஒன்பது பீஜங்களையும் ஒன்பது வகையாக எழுதி ஓமத் தீயில் நெய்யும் எள்ளும் வார்த்து உயிரையே நெய்யாகத் தருவதாய் எண்ணி ஆகுதி செய்க. காய்ந்த வாழை மரப்பட்டையில் நெய்யில் குங்குமம் கரைத்து நவாக்கரிச் சக்கரம் 9வகை 81 வருமாறு வரிசையில் தனித்தனியே எழுது. தீ வளர்த்து ஓமகுண்டத்தில் ஒன்பதுவகை சமித்துக்களும் எரிய விட்டு நெய்யும் எள்ளும் தெளித்து எரியச் செய்து ஒவ்வொரு வகைச் சக்கரமாகத் தீயில் இடு. செம்பு, வெள்ளி தங்கத்தில் எழுதினால் குங்குமம் சந்தனம் கஸ்தூரி சவ்வாது புனுகு நெய் ஆகிய திருமஞ்சனம் அர்ச்சனை செய்க. யாகம் செய்த பலன் தரும். சிவன் போல் மேனி உண்டாகும்.
க்லீம்
ஸ்ரீம்
ஹ்ரீம்
ஐம்
கௌம்
க்ரீம்
ஹௌம்
ஔம்
சௌம்
ஸ்ரீம்
ஹ்ரீம்
ஐம்
கௌம்
க்ரீம்
ஹௌம்
ஔம்
சௌம்
க்லீம்
ஹ்ரீம்
ஐம்
கௌம்
க்ரீம்
ஹௌம்
ஔம்
சௌம்
க்லீம்
ஸ்ரீம்
ஐம்
கௌம்
க்ரீம்
ஹௌம்
ஔம்
சௌம்
க்லீம்
ஸ்ரீம்
ஹ்ரீம்
கௌம்
க்ரீம்
ஹௌம்
ஔம்
சௌம்
க்லீம்
ஸ்ரீம்
ஹ்ரீம்
ஐம்
க்ரீம்
ஹௌம்
ஔம்
சௌம்
க்லீம்
ஸ்ரீம்
ஹ்ரீம்
ஐம்
கௌம்
ஹௌம்
ஔம்
சௌம்
க்லீம்
ஸ்ரீம்
ஹ்ரீம்
ஐம்
கௌம்
க்ரீம்
ஔம்
சௌம்
க்லீம்
ஸ்ரீம்
ஹ்ரீம்
ஐம்
கௌம்
க்ரீம்
ஹௌம்
சௌம்
க்லீம்
ஸ்ரீம்
ஹ்ரீம்
ஐம்
கௌம்
க்ரீம்
ஹௌம்
ஔம்
யாகத்தில் இதை ஆஹுதி செய்யும்போது ஒன்பது உடல் உள் உருப்புக்களிலும் இந்த ஒலிகலைச் சொல்லி செய்யவும். ஒன்பது வரிசைகள் ஒவ்வொன்றையும் மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும் ஓதி ஓமம் செய்க.
*யோகம் செய்யும் முறை*
***************************
நெறிவழியே சென்று நேர்மையுள் ஒன்றி தறி இருந்தாற் போலத் தம்மை இருத்திச்
சொறியினும் தாக்கினும் தூண் என்று உணராக் குறிஅறிவாளர்க்கு கூடலும் ஆமே.
கம்பம்போல் உடல் ஆடாமல் அசையாமல் மூலாதாரம் முதல் தலை உச்சியாகிய சகஸ்ராரம் வரை மேல்நோக்கி உள் உணர்வைச் செலுத்த வேண்டும். உடலைப் பிறர் கீறினாலும் தாக்கினாலும் திடுக்கிட்டு உணர்வு கலையாமல் குறிக்கோளாகிய சிவத்தையே அடையும் முயற்சிய விடாதவர்க்கு யோகம் கைகூடும்.
பேணிற் பிறவா உலகருள் செய்திடும் காணில் தனது கல்வியுளே நிற்கும்
நாணில் நரகநெறிக்கே வழிசெயும் ஊனில் சுடும் அங்கி உத்தமன் தானே.
இயற்கையிலேயே எல்லா உடலிலும் மயிர்க்காம்பு தோறும், அணுக்கள், திசுக்கள் தோறும் நெருப்பு மேல் நோக்கிப் போகிறது. மூச்சுக்காற்று இரத்தத்தின் மூலம் எல்லா அணுக்களிலும் சென்று அங்கே எரிகிறது, உண்ட உணவு செரிமானத்திற்காக எரிகிறது, இதற்கு மூலமான ஒளியே குண்டலினிதான். அவ்வப்போது மின் காந்த அலைகள் உடம்பிற்குள் புகுவதாலும் நிறைய ஒளித்துகள்கள் நம் உடல் முழுவதும் உள்ளன. இதனால் நம் உடம்பு சுடுகிறது. எனவே உடலில் உள்ள தீயும் பிரபஞ்சத்தில் உள்ள தீயும் ஒன்றே ஆகும். இதனால் உடம்பு தீயை வைச்வாநரன் எனலாம். விசுவமாகிய பிரபஞ்சம் முழுவதும் நரன் உடம்பிலும் உள்ள அக்னி என்பதாகும். தீயின் இயல்பு மேல் நோக்கிப் போவது. யோகமும் மேல்நோக்கி போகும்போது நெருப்பின் வேகம் கூடும். ஓரிடத்தில் திரண்டு செல்லும். இப்படி திரட்டி ஒரே ஒழுங்காக அக்னியை எழுப்பினால் யோகம் சித்தியாகும். நினைவினால் உண்டாகும் தீயும் மந்திர ஒலிமூலம் உண்டாகும் தீயும் முன்பே உடலில் மேல் நோக்கிப்போகும் தீயும் ஆகிய முத்தீ தட்சிணாக்னி, ஆகவநீயம், காருகபத்தியம் ஆகும். இதுவே சந்திர சூரிய அக்னி மண்டலங்களாகும். உடம்பைச் சுடும் அந்த நெருப்பு சிவமாகிய நெருப்பே. உலகின் எல்லா ஒளிக்கும் சிவமே காரணம்.
யோகச் சமாதியின் உள்ளே அகலிடம் யோகச் சமாதியின் உள்ளே உளர் ஒளி
யோகச் சமாதியின் உள்ளே உளசக்தி யோகச் சமாதி உகந்தவர் சித்தரே.
சமாதி யோகம் செய்பவர் உள்ளே பிரபஞ்சம் முழுவதும் அடக்கம். சிவ ஒளியைக் காண்பர். பராசக்தியை உணர்வர். யோகச் சமாதியை மகிழ்ந்து ஏற்பவர் சித்தர்களே.
தாங்குமின் எட்டுத் திசைக்கும் தலைமகன் பூங்கமழ் கோதைப் புரிகுழலாளொடும்
ஆங்கது சேரும் அறிவுடையார்கட்குத் தூங்கொளி நீலம் தொடர்தலும் ஆமே.
எந்த ஆதாரத்திலும் நிற்காமல் தனித்து தொங்குவது போல் நீல ஒளி தொடர்ந்து உயர்ந்து யோகியர்க்கு சகஸ்ராரத்தில் நீலச் சுடர் ஒளியாய் பராசக்தி காட்சி தருவாள்
நாகமும் ஒன்று படர் ஐந்து நால்-அது போகமும், புற்றில் பொருந்தி நிறைந்தது
ஆகம் இரண்டும் படம் விரித்து ஆட்டு ஒழிந்து ஏகபடம் செய்து உடம்பு இடல் ஆமே.
தூல உடல் சூக்கும உடல் என்ற இருவகை உடலாக செயல்படும். தூல உடலில் குண்டலினி சக்தி ஐந்து விதமான பொறிகள், புலன்கள், அனுபவங்கள் ஆகியவற்றைப் படம்போல் விரித்து ஆடிப்பாடிச் செய்வது சராசரியான வாழ்வு. சூக்கும உடலில் அதே குண்டலினி படம் எடுத்து புலன் அனுபவம் எதுவும் கொள்ளாமல் தூல உடம்பையே மறந்து யோகம் செய்து வாழ்வது இன்னொருவகை. நான்கு என்பது அந்தக்கரணங்கள். ஐந்தலைப்பாம்பு என்பது குண்டலினியையும் புலன் நுகர்ச்சி அனுபவம் ஆகியவையாம். அவை சுருங்கும்போது யோக சித்தி கிட்டும்.
ஆறு அந்தமும் கூடி ஆடும் உடம்பினில் கூறிய ஆதாரம் ஆறும் குறிக்கொள்மின்
ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலாக ஊறிய ஆதாரத்து ஓர் எழுத்தாமே.
ஆகும் உடம்பும் அழிகின்ற அவ்வுடல் போகும் உடம்பும் பொருந்தியவாறுதான்
ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம் ஆகும் உடம்புக்கும் ஆறந்தமாமே.
ஆறு அத்துவாக்களால் உடம்பில் செறிந்துள்ள ஆறு ஆதாரங்களையும் குறித்து அவற்றில் 51 அட்சரங்களையும் சொல்லவும். அது ஓம் எனும் மந்திரப் பொருளை அதிகமாக்கும். மந்திரம் பதம் வன்னம் முதலிய அத்துவாக்கள் ஆறு. அத்துவா என்பது வழி எனப்படும். இந்தவழி மூலம் நாம் செய்யும் யோகம் வெற்றி அடையும். 51 அட்சரங்களின் தனி ஒளி நிறம் ஆகியவை ஓம் எனும் மந்திரத்தில் பதிந்து வலுப்பெறும்.
ஆயும் மலரின் அணிமலர் மேலதும் ஆய இதழும் பதினாறும் அங்கு உள
தூய அறிவு சிவானந்தமாகிப்போய் மேய அறிவாய் விளைந்தது தானே
இலிங்கம் அது ஆகுவது ஆரும் அறியார் இலிங்கம் அது ஆகுவ எண்திசை எல்லாம்
இலிங்கம் அது ஆகுவ எணெண் கலையும் இலிங்கம் அது ஆகஎடுத்து உலகே
ஆய் செய்யும் மலர் அநாகதம் ஆகிய இதயத்திற்கும் மேலுள்ள 16 இதழ்த் தாமரை என்பது விசுத்தி-இந்த இடத்தில் ஐம்பெருங்கலைகளில் நான்காம் கலையாகிய சாந்திகலை இங்கு தொடங்குகிறது. எளிய அறிவு சிவானந்தம் உண்ரும் சிவஞானமாகிப்போய் சிவமே ஆக்கும் சாந்தியாதீத கலையாக மாறும். அண்ட லிங்கம் என்பது எது. எட்டு திசைகளும் 64 கலைகளும் வழங்கும் உலகமே ஒரு லிங்கம். அதில் உள்ள எல்லாவற்றையும் சக்தி, சக்தியற்றபொருள், உயிர் உடம்புகள், நடப்பன, இருப்பன முதலிய எல்லாவற்றையும் ஒன்று திரட்டி உணர்வதே அண்ட லிங்கம்.
தரையுற்ற சக்தி தனிலிங்கம் விண்ணாம் திரைபொரு நீரது மஞ்சன சாலை
வரைதவழ் மஞ்சுநீர், வான்உடு மாலை கறையற்ற நந்தி கலையுந்திக்கு ஆமே.
மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம் மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்
மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம் மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே
தரையாகிய நிலமே ஆவுடையாராகிய சக்தி, பாணலிங்கம் ஆகாயம், கடல் திருமஞ்சனசாலை, மேகநீர் மஞ்சனநீர். வானின் நட்சத்திரங்கள் மாலைகள் திக்குகள் எட்டும் ஆடையாகும் என அண்டலிங்கத்தை பாவிக்கும் முறையாகும். மனித உடலின் அமைப்பே லிங்க வடிவாகும். சிதம்பரமாகிய சிதாகாசம் மார்பு நடுவில் உள்ளது. சக்தியும் சிவமும் ஆகிய சதாசிவம் புருவ நடுவில் தலையில் உள்ளது. இறைவன் திருக்கூத்தாகிய ஒளிச்சுடரையும் மனித உடலியே காணலாம். எனவே சிவலிங்கம் எனப்பட்டது. பத்மாசனம் இட்டு அமர்ந்திருந்தால் உடல் வடிவம் லிங்க வடிவாவது தெரியும்.
உலந்திலர் பின்னும் உளர் என் நிற்பர் நிலம்தரு நீர்தெளி உள்ளவை செய்யப்
புலம்தரு பூதங்கள் ஐந்தும் ஒன்றாக வலம்தரு தேவரை வந்தி செய்யீரே.
மரணமிலாப் பெருவாழ்வுக்குரிய ஒரு வழி. உடலில் உள்ள ஐந்து பூதங்களின் பகுதிகள் புலனுக்கும் அறிவுக்கும் தொடர்புடையவை. அவற்றை உடம்பில் உணர்ந்து இவைகளுக்குக் காரணமான ஒரு பொருளையும் உணர்ந்து அப்பொருள் தெய்வமென வந்தனை செய்தால் பயன் கிடைக்கும்.
கோயில் கொண்ட அன்றே குடிகொண்டது ஐவரும்
வாயில் கொண்டு ஆங்கே வழிநின்று அருளுவர்
தாய் இல்கொண்டாற்போல் தலைவன் என்னுள்புக
வாயில் கொண்டு ஈசனும் ஆளவந்தானே.
ஆன்மா உடலாகிய கோவிலுக்குள் வரும்போது அந்த ஐந்து பூதங்களும் இவ்வுடம்பில் மரணமில்லா இடம் பெற்று இருக்கின்றனர். ஐந்து பொறிபுலன்களை உருவாக்கி ஆன்மாவிற்கு இவ்வுலக் வாழ்வுக்கான அறிவைத் தந்து வருகின்றன். தாய் சேய்க்கு பால் தருவதுபோல் இறைவன் இந்த உடம்பாகிய வீட்டிற்கு வந்து ஞானமாகிய பாலை வழங்குவான்.
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத்தெளிந்தார்க்குச் சிவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே
மானுடர் உடல் சிவலிங்கம், யோகியார் உள்ளமே கருவறை. உடம்பே திருக்கோயில்கள் பகுதியாம். திருநாமத்தை ஓதும் அவர் வாய் கோபுர வாசல். நுணுகி அறிந்தோர்க்கு உயிரே சிவலிங்கம். மயங்கி நின்ற புலன்கள் ஐந்து மாணிக்க ஒளிவிளக்காகும். காளம் என்றால் நஞ்சு. அது உறைந்து நாகரத்தினம் ஆவதுபோல் ஐந்தலைநாகமாக ஐந்து புலன்களும் குண்டலினியை மேம்படுத்தும்.
படமடக் கோவில் பரமற்கு ஒன்று ஈயின் நடமாடு அக்கோயில் நம்பற்கு ஒன்று ஆகா
நடமாடு அக்கோயில் நம்பற்கு ஒன்று ஈயின் படமாடு அக்கோயில் பரமற்கு அது ஆமே.
தண்டு அறு சிந்தை தபோதனர் தாம் மகிழ்ந்து உண்டது மூன்று புவனமும் உண்டது
கொண்டது மூன்று புவனமும் கொண்டதுதென்று எண்திசை நந்தி எடுத்துரைத் தானே.
கோயிலில் அமர்ந்த இறைவனுக்கு ஒன்றைச் செய்வார்களே அல்லாமல் இறைவனை நெஞ்சில் நிறுத்திய அடியார்க்கு எதையும் செய்யார்கள். அடியார்களுக்கு ஒன்று செய்தால் அதுவே இறைவனுக்கும் செய்வது ஆகும். இறைவன் விரும்பி இருக்கும் இடமடியர் மனமே. தவம் செய்வோர் தாம் மனம் மகிழ்ந்து ஒன்றை உண்டால் அது மூன்று உலகங்களும் மகிழ்ந்து உண்டதற்குச் சமம். அதுபோல் அவர்களுக்கு ஒன்று கொடுக்க அவர்கள் அதை ஏற்றுக் கொண்டால் அதுவும் மூன்று உலகமும் ஏற்றுக்கொண்டதேயாகும்.
வித்தகமாகிய வேடத்தர் உண்ட ஊன் அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாம்
சித்தம் தெளிந்தவர் சேடம் பருகிடின் முத்தியாம் என்று நம்மூலன் மொழிந்ததே
சித்தம் சிவமாகத் தெளிந்தஞானியர் உண்டது போக எஞ்சியதைப் பருகினால் மூத்தியடைந்ததேயாகும். எல்லாவற்றிற்கும் மூலகாரணமான கடவுள்.
என்தாயோடு என் அப்பன் ஏழ் ஏழ் பிறவியும் அன்றே சிவனுக்கு எழுதிய ஆவணம்
ஒன்றாய் உலகம் படைத்தான் எழுதினான் நின்றான் முகில்வண்ணாண் நேர் எழுத்தாயே.
ஏதோ ஒரு பிறவியில் என்தாய் தந்தை இருவரும் ஏழ் பிறவியிலும் சிவனுக்கு நான் அடிமை என்று அன்றே ஆவணம் எழுதி விட்டனர். பிரம்மா ஆவணம் தயாரித்தவன் திருமால் சாட்சிக் கையெழுத்திட்டவன் ஆவர்.
வாக்கு மனமும் இரண்டும் மவுனமாம் வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம்
வாக்கு மனமும் மவுனமாம் சுத்தரே ஆக்கும் அச்சுத்தத்தை யார் அறிவார்களே.
மவுன விரதம் என்பது வாக்கும் மனமும் அடங்குவதே. மவுனத்தில் பேசுவதால் ஊமையானது. சிலர் மவுனத்தின்போது பார்வையாலும் சைகையாலும் எழுதிக் காட்டுவதாலும் சில குறிப்புக்கலைப் புலப்படுத்துவர். அது மவுனமாகாது. குறைந்த ஒளியுள்ள தனி அறையில் கண்கலையும் மூடியபடி இறைவன் நாமத்தை மட்டும் நினைத்தவராய் இருப்பதே மவுனத்தில் சிறந்தது.
சீவன் எனச் சிவனார் என்ன வேறு இல்லை சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின் சீவனார் சிவன் ஆயிட்டு இருப்பாரே.
ஆன்மாவும் சிவனும் வேறல்ல. சிவனைச் சீவன் அறியும் போது சீவனே சிவனாகிவிடும்.
அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலார் அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கு இல்லை
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே.
புலன்கள் ஐந்தும் அடக்கு அடக்கு என்பர். தேவர்கள் கூட ஐந்தும் அடக்கி இருப்பதில்லை. ஐந்து புலன்களையும் அடக்கினால் உயிருக்கு அறிவு வரும் வாயில்கள் அடைபட்டு அறியாமை உண்டாகும் என்பதால் ஐந்தையும் அடக்கிப் பழகாமல் அறிவை அறிந்தேன். மனம் அடக்க அடக்க வலிமையாகி நம்மை மீறும். நம் சக்தி வீணாகும். எனவே எப்போதும் பரந்து விரிவதை இயற்கையாகக் கொண்ட மனத்தை பிரபஞ்சம் அளவுக்கு விரியச் செய்து கொண்டே போனால் நமக்கு நல்ல அறிவு வரும்.
முழக்கி எழுவன மும்மத வேழம் அடக்க அறிவென்னும் கோட்டையை வைத்தேன்
பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக் கொழுத்தன வேழம் குலைக்கின்றவாறே.
ஐந்து புலன்களை ஒடுக்க அறிவு எனும் கோட்டையைக் கட்டினேன். அந்தக் கோட்டையையே மும்மதம் கொண்ட களிறுகள் கடந்து வந்து கரும்புக் காட்டை நாசமாக்கின. மூன்று மதங்கல், மும்மலம், மூன்று மாயை இவைகளுக்கு கட்டுப்பட்டது மனம்.
ஐந்தில் ஒடுங்கில் அகலிடம் ஆவது ஐந்தில் ஒடுங்கில் அரும்தவம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அவன்பதம் ஆவது ஐந்தில் ஒடுங்கில் அருள் உடையாரே.
ஐந்து புலன்களை அடக்குவதற்குப் பதில் ஒடுக்கினால் அதாவது நம் வழியே அதை நடக்கச் செய்தால் அது பிரபஞ்சம் முழுவதும் கருதியது ஆகும். அதுவே தவம், திருவடி ஆகும் அது செய்வோர் இறையருள் பெறுவர்.
பெருக்கப் பிதற்றின் என் பேய்த்தேர் நினைந்து என்
விரித்த பொருட்கு எலாம் வித்து ஆவது உள்ளம்
பெருக்கின் பெருக்கும், சுருக்கின் சுருக்கும்
அருத்தமும் அத்தனை, ஆய்ந்து கொள்வார்க்கே.
கானல்நீர் போல் மாயையாகிய உலகக் காட்சிகளை நினைத்து ஒரு பயனும் இல்லை. பிரபஞ்சம் முழுவதும் விரிந்த பொருள்கள் எல்லாவற்றையும் நம் உள்ளம் உற்று அறிவது ஆகும். உள்ளத்தைப் பிரபஞ்சம் அளவு பெருகச் செய்தால் பெருகும். சுருங்கச் செய்தால் சுருங்கும். மனதில் கற்பித்துக் கூறிய ஒருசொல் நினைவு பிரபஞ்சத்தில் எங்கேயோ உள்ள ஒரு பொருளைச் சென்று அடையும். அப்பொருளுக்கு மனமே விதையாகும்.
நடக்கின்ற நந்தியை நாடோறுமுன்னிப் படர்கின்ற சிந்தையைப் பைய ஒடுக்கிக்
குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில் வடக்கொடு தெற்கு மனக் கோயிலாமே.
எல்லா உயிர்களிலும் இயங்கும் சக்தியாக உள்ள இறைவனை நாள்தோறும் நினைத்துப் பழகவேண்டும். அப்போது மனம் பல இடங்களிலும் பரந்து செல்லும். அதை மெலிதாக ஒடுக்கி ஆறு ஆதாரம் சுழுமுனைநாடி ஆகிய குறிக்கோள் தானங்களில் செலுத்துமாறு நினைத்தால் தெற்காகிய மூலாதாரமும் வடக்காகிய சகஸ்ராரமும் ஒன்றுபட்டு மனத்தால் அமைந்த கோயிலாகும். ஆகாயத்திலிருந்து காற்றும், காற்றில் இருந்து நெருப்பும், நெருப்பில் இருந்து நீரும், நீரில் இருந்து நிலமும் உண்டாகின. கீழ் இருந்து மேல் நோக்க பிரிந்தது தன் கரணத்தில் ஒடுங்கும். ஆறு ஆதாரங்களின் இடமறிந்து கீழிருந்து மேலாக பெயர் மந்திர எழுத்துடன் சொல்லி நினைத்தால் உணர்வு அசைவது தெரியும்.
போற்றிசைத்தும் புனிதன் திருமேனியே போற்றிசெய் மீண்டே புலனைந்தும் புத்தி ஆம்
நால்திசைக்கும் பின்னை ஆற்றுக்கும் நாதனை ஊற்றுகை உள்ளத்து ஒடுங்கலும் ஆமே
இறைவன் திருமேனியை நினைத்து அவன் திருமேனியாக நாம மந்திரத்தை அடிக்கடி சொல்லி வந்தால் புலன்கள் ஒடுங்கி புத்தியாக மாறும். திரு ஐந்தெழுத்து முதலான மந்திரங்களே இறைவன் திருமேனி மந்திரங்கல் ஆகும். எட்டெழுத்து திருமாலுக்கும் ஆறு எழுத்து முருகனுக்கும் பதினைந்து எழுத்து பராசக்திக்கும் உரியது. உடலின் நான்கு புறமும் உள்ள நாடிகளுக்கும் நடுவே உள்ள ஆறு போன்ற சுழுமுனை நாடிக்கும் இறைவனே தலைவன். அவன் பெயரை உள்ளத்தில் ஊற்று எடுக்க வைத்தால் உள்ளம் அவனுடன் ஒடுங்கி நிற்கும். எல்லா நாடிகளுக்கும் ஆறுபோல் இணைப்பானது. அது அமுதம் வரும் வழியாகும்.
கைவிடல் ஆவது ஒன்று இல்லை கருத்தினுள் எய்தியவனை இயல்பினால் ஏத்துமின் ஐவருடைய அவாவினில் தோன்றிய பொய்வருடு ஐய புலன்களும் ஐந்தே.
புலன் ஒடுக்கத்திற்காக எதையும் கைவிட்டு ஓட வேண்டாம். கருத்தில் வந்துள்ள இறைவனின் இயல்புகளைப் புகழ்ந்துரைப்பீராக. ஐந்து பொறிகளின் விருப்பத்தால் பொய்யான மாய புலன்கள் ஐந்து உள்ளன. பொய்யானவற்றை நீக்கி மெய்யான இறைவனை துதித்தால் மனம் ஒடுங்கும்.
நேயத்தே நிற்கும் நிமலன் மலம் அற்ற நேயத்தை நல்க வல்லோன் நித்தன் சுத்தனே
ஆயத்தவர் தத்துவம் உணர்ந்தாங்கு அற்ற நேயர்க்கு அளிப்பவன் நீடும் குரவனே
பரிசன வேதி பரிசித்தது எல்லாம் வரிசை தரும்பொன் வகையாகு மாபோல்
குருபரி சித்த குவலயம் எல்லாம் திரிமலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே
அன்பில் நிறைந்து நிற்பவன் இறைவன் மலமில்லாத அன்பை அவன் அருள்வான். தத்துவம் 36ம் உணர்ந்து அவற்றின் மாயையில் சிக்காது நீங்கி வாழ்பவர்க்கு வீடுபேறு அளிக்கும் குருவாக இறைவனே வருவான். அவன் சுத்தனாகவும் நித்தனாகவும் இருப்பதால் அவன் மீது கொண்ட அன்பும் அந்த இயல்பு உடையதாகும்.
உலோகங்கள் எல்லாவற்றையும் பரிசத்தால் பொன்னாக்கும் ஒரு மருந்து பரிசனவேதி எனும் ரசாயனம். இது எல்லாவற்றையும் பொன் ஆக்குவதுபோல் குருவின் பரிசம் பட்ட உலகம் சிவனாக இருக்கும்.
உள்ளிடும் ஐம்மலம் பாச உணர்வினால் பற்ரு அற நாதன் அடியில் பணிதலால்
சுற்றிய பேதம் துரியம் மூன்றால் வாட்டி தற்பரம் மேவுவோன் சாதகனாமே.
ஐந்து மலம் பந்தபாசம் ஆகியவற்றை உணர்வினால் நீக்கி இறைவன் திருவடியில் பணியும்போது மூன்று விதத்துரியம் காட்டி பிறகு சிவமாகவே நிற்பவே சாதகன். ஐந்து மலமான ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதயி.என்பன.
உயிர் அது வேறா உணர்வு எங்கும் ஆகும். உயிரை அறிவியல் உணர்வு அறிவு ஆகும்,
உயிர் அன்று, உடலை விழுங்கும் உணர்வை அயரும் பெரும் பொருள் ஆங்கு அறியாரே
உயிரும் உயிருக்குக் காரண்மானவைக்கு வேறாக உணர்வு என்பதும் உடல் முழுவதும் பரவி உள்ளது. உயிரையும் அதற்கு காரணமானவற்றையும் பிரித்து அறியும்போது உணர்வு என்பது உடலில் தனித்து இயங்குவதையும் உணரலாம்.உயிருக்கு அப்பால் உடலை முழுவதும் உணர்ச்சிவயமாக்கும் ஒரு பெரிய பொருளைப் பலர் அறிவதில்லை. பெரிய பொருள் கடவுள்.
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து நின்றே நிலைபெற நீர் நினைந் துய்மினே.
உயிர்குலம் யாவும் ஒன்றே. கடவுள் எல்லா உயிர்க்கும் ஒருவனே என உணர்ந்து பேதமில்லா அன்பில் ஊன்றி நின்றவர்கலுக்கு யம பயமில்லை. மரணமில்லாது வாழலாம். பேதங்களால் வெறுப்பு, பகை முதலிய தீய உணர்வுகள் தோன்றும். மேற்கண்டவாறு நினைத்தால் நல்ல உணர்வே தோன்றும் என்பதால் நன்றே நினையுங்கள்.
காயப்பை ஒன்று சரக்குப் பலவுள மாயப்பை ஒன்று உண்டு மற்றுமோர் பையுண்டு
காயப்பைக்கு உள்நின்ற கள்ளன் புறப்பட்டால் மாயப்பை மண்ணாய் மயங்கியவாறே.
சென்ற பிறவியில் செய்த விணைகள் இப்பிறவியின் உடலுக்குக் காராணமாகி நம் வடிவமைப்பு வாழ்வு முதலியவற்றைத் தீர்மானிக்கும் காரண உடல், கண்ணுக்குத் தெரியாப் பல உறுப்புகளுடன் இருக்கும் சூக்கும உடல், கண்ணுக்குத் தெரியும் தூல உடல் என்ற மூன்று உடல்கள் பைகளுக்குள் பை இட்டது போல் செறிந்து நமக்குள் உள்ளன. யாவற்றுக்கும் காரணமான இறைவன் இவ்வுடலாகிய பையிலிருந்து வெளியேறிவிட்டால் மற்ற பைகளும் உடலும் மண்ணாகி அழியும். காயப்பை- தூல உடல், மாயப்பை- நுண் உடல், மற்றுமோர்பை- காரண உடல். திசுக்களில் உள்ள குரோமோசோம் (43) ஒவ்வொன்றும் உடலின் செயலையும் வாழ்வையும் வடிவையும் தீர்மானிக்கும். அது காரண உடம்பின் பிரதிநிதி.
இதன் பயிற்சி நமது குருகுலத்தில் உண்டு
நன்றி குருமுனி பயிற்சி
9600043233

பஞ்சாட்சரம்.

பஞ்சாட்சரம்.
மீண்டும் ஒரு முறை பலருக்கும் இது புரியாது...
பஞ்சாட்சரம் இருவகைப்படும்.
அவை தூல பஞ்சாட்சரம், சூட்சும பஞ்சாட்சரம்.
‘ந’ காரத்தை ஆரம்பமாகக் கொண்டு அமையும் ‘நம சிவாய’ என்பது ‘தூல பஞ்சாட்சரம்.’
அதைப் போன்று ‘சி’காரத்தை ஆரம்பமாகக் கொண்டு அமையும் ‘சிவாய நம’ என்பது ‘சூட்சும பஞ்சாட்சரம்’ எனப்படும்.
தூல பஞ்சாட்சரம்மான ‘நம சிவாய’ என்பது பொதுவாக இகபரஇன்பங்களை வேண்டி வழிபடுபவர்களுக்கு பொருத்தமானது. இது ‘சிவனுக்கு வணக்கம்’ எனப் பொருள்படும்.
சரியை நெறியில் நிற்போர் தூல பஞ்சாட்சரத்தையும்,
கிரியை யோக நெறியில் நிற்போர் சூட்சும பஞ்சாட்சரமான ‘சிவாய நம’ என்பதையும்,
ஞானநிலையில் நிற்போர் முத்தி பஞ்சாட்சரமான ‘ம’காரம் ‘ந’காரம் ஆகிய இரண்டும் நீக்கிய ‘சிவாய’ என்ற மூன்று அட்சரங்களைக் கொண்ட ‘முத்தி பஞ்சாட்சரம்’; உட்சரிப்பதற்கு உகந்தது. அதாவது நிருவான திக்கை பெற்றவர்கள், பஞ்சாட்சரத்தை உச்சாடணம் செய்யும் போது மூன்று முறையாக பின்பற்றுவர் அவை மானதம், மந்தம், உரை என்பனவாகும்.
இதில் வெளியில் ஒலி எழுப்பாது மனத்தினுள் தியானித்தலைக் குறிக்கும் இது உத்தம மாகும் இதனை ‘மானதம்’ என்பர்.
தானது காதுகளுக்கு மட்டும் கேட்கக் கூடியதாக உச்சரித்தல் ‘மந்தம்’ எனப்படும்.
பிறர் கேட்க்கக் கூடியதாக சத்தமாக உச்சரித்தல் ‘உரை’ எனப்படும்.
‘மானதம’ கோடி மடங்கு பலனும், ‘மந்தம்’ பத்தாயிரம் மடங்கு பலனும். ‘உரை’ யில் நூறு மடங்கு பலனும் கிடைக்கும் என ஸ்மிருதிகள் கூறுகின்றன்.
திருவைந்தெழுத்தின் பொருமையை திருமந்திரம் குறிக்கையில்
‘அஞ்ந்தெழத் தாலைந்து பூதம் படைத்தனன்
அஞ்ந்தெழத் தாற்பல யோனி படைத்தனன்
அஞ்ந்தெழத் தாலிவ் வகலிடந் தாங்கினன்
அஞ்ந்தெழத் தாலே மெர்ந்துநின் றானே’
குறிப்பிடுகின்றார். திருவைந்தெழுத்தின் ‘ம’காரத்தினால் உலக படைக்கப்பட்டது. ‘ய’காரத்தால் உடலும் உயிரும் இணைந்து விளங்குகின்றது. யோனியான உயிர் நகர அடையாளத்தால் விரிந்த உலகத்தை இயைந்து யாக்கிக் காக்கும் நடுநிலைமை விளங்கும் ‘சி’காரம் ‘வ’கார அடையாளங்களால் எல்லாமாய் அமர்ந்தமை விளங்கும் என குறிப்பிட்டுள்ளார்.
அஞ்தெழுத்து உலகத்தை ஆக்க வல்லது என்பது புலணாகும்.
அஞ்செழுத்து பந்தத்திலிருந்து விடுலையளிக்கும் என்பதை
‘வீழ்ந்தெழ லாம்விகிர் தன்திரு நாமத்தைச்
சோர்ந்தொழி யாமல் தொடங்கும் ஒருவர்ற்குச்
சார்ந்த வினைத்துயார் போகத் தலைவனும்’
போந்திடும் என்னும் புரிசடை யோனே‘ திருவருட் துணையால் திருவைந்தெழுத்தை முறையாக ஒதுவதனால் உலகியல் நுகர்வுடன் அதன் கண் தொடக்கின்றி வாழ்தலுமாகும். புறவிப் பெருந்துயர் நீங்கத் தம் முதல் முருவுமாய் வந்தருலுவான். புரிகடையோன் என்னும் போது புரி சடையோன் என்பது திருவாதிரை நாளை விரும்புபவன் என்றும் ஒன்றாய் வேறாய் உடனாய் விரும்பி உறையும் பண்பினேன். என்பது பொருள்.
திருவைந்தெழுத்தால் எல்லாவுலகமும் ஒழுங்காக நடைபெறுகின்றது. என்பதை
‘ஐந்தின் பெருமையே அகலிட மாவது
ஐந்தின் பெருமையே ஆலய மாவது
ஐந்தின் பெருமையே யறவோன் வழக்கமும்
ஐந்தின் வகைசெயப் பாலனு மாமே’
திருவைந் தெழுத்தின் சிறந்த திருக்குறிப்பே திருக்கோயிலாகும். அதில் ‘சி’காரம்; சிவலிங்கமாகும். ‘வ’காரம் அடுத்த மண்டபமாகிய மனோன்மணி நிலை. ஆனேற்று நிலை ‘ய’காரம். அம்பலவாணர் நிலை ‘ந’காரம். பலிபீடம் ‘ம’காரம் அவ்வாறு பெருமை பெற்றது திருவைந் தெழுத்து.
ஓர்எழுத்தான ஓமிலிருந்து பஞ்சபூதங்களானான் ஐந்தெழுத்தில் என்பதை திருமந்திரம்
‘வேரெழுத் தாய்விண்ணாய் அப்புற மாய்நிற்கும்
நீரேழுத் தாயநில ந்தங்கியும் அங்குளன்
சீரெழுத் தாய்அங்கி யாயுயி ராமெழுத்து
ஓரெழுத் தீசனும் ஒண்சுட ராமே’
விண் ‘வ’காரமாயும்
நீர் ‘ம’ காரமாயும்
நிலம் ‘ந’ காரமாயும்
தீ ‘சி’ காரமாயும்
காற்றாகி உயிரெழுந்து ‘ய’ காரமாயும் உள்ளவன் சிவன் ‘வமநசிய’ என்பதில் அடங்கும்.
திருவைந்தெழுத்தல் ‘ந’காரமே உலகை உருவாக்கும் என்கின்றது திருமந்திரம்
‘நாலாம் எழுத்தோசை ஞாலம் உருவது
நாலாம் எழுத்தினுள் ஞாலம் அடங்கிற்று
நாலாம் எழுத்தே நவிலவல் லார்கட்கு
நாலாம் எழுத்தது நன்னெறி தானே’ உலகம் அடங்கி அதன் ஆணைப்படி நடக்கும் ‘நமசிவாய’ என ஓதுவார்க்கு நன்நெறி செல்லும் வெல்வர்களாவர்.
‘அகாரம் உயிரே உகாரம் பரமெ
முகாரம் மலமாய் வருமுப் பதத்திற்
சிகாரம் சிவமாய் வகாரம் வடிவமாய்
யகாரம் உயிரென் றறையலு மாமே’
உயிரெனக் குறிக்கும் உடல் மெய் இருபத்திநான்கும் அகாரமாகும்.
புரமென குறித்து உணர்ந்து மெய் ஐந்தும் உகாரம் மாகும்.
முலமெனக் கூறிய உணர்வு மெய் ஏழும் மகாரமாகும்.
இம் முப்பத்தாறும் மெய்களுள் சிகாரம் கிவமாய் உயிருக்குயிராய் வகாரம் சிவனின் திருமேனியாய் யகாரம் திருவருளாகும். ஏனக் குறிப்பிட்டுள்ளார்.
‘நகார மகார சிகார நடுவாய்
வகாரம இரண்டும் வளியுடன் கூடி
ஒகார முதற்கொண்டு டொருகால் உரைக்க
மகார முதல்வன் மனத்கத் தானே’
நமசிவாய என்பதில் சிகாரம் நடு இரண்டு வளி என்பது இடபால் வலபால் மூச்சு என உயிர் அடையாளமான யகாரத்தைக் குறிக்கின்றது.
ஓம் எனும் மந்திரத்துடன் சேர்த்து நமசிவாய மந்திரத்தை ஓம் நமசிவாய என ஓத சிவப்பரம் பொருள் நெஞ்சகத்தே கோயில் கொள்வான் என்கின்றது திருமந்திரம்.
சிவபெருமானின் மந்திரவுருவை கூறுகையில்
‘சிவாயவொ டவ்வே தெளிந்துளத் தோதச்
சிவாயவொ டவ்வே சிவனுரு வாகுமஞ்
சிவாயவொ டவ்வுந் தெளியவல் லார்கள்
சிவாயவொ டவ்வே தெளிந்திருந் தாரே’
‘சிவய’ என்பதுடன் முதலாக ‘சிவ’ என்பதைச் சேர்த்து ‘சிவயசிவ’ என்பதே சிவபெருமானின் மந்திரவுருவாகும்.

ஜால வித்தை மூலிகை

"ஜால வித்தை மூலிகை "
எட்சணி வசியத்திற்கு
நத்தைச்சூரி என்பது ஒருவகையான மூலிகை இந்தவகை செடிகள் காடு,புதர்,வயல் வரப்புகளில் காணப்படுவதுண்டு.
ஞாயிற்றுக்கிழமை- சுவாதி நட்சத்திரம் இருக்கும் நேரத்தில் கும்பலக்ன வேளையில் மேற்கண்ட மூலிகைக்கு பொட்டிட்டு,பூச்சூடி,மஞ்சள் நூலால் காப்புகட்டிவிட்டு அடுத்த ஞாயிற்றுக்கிழமையில் சிம்மலக்கனத்தில் பொங்கலிட்டு, சேவல் பலி கொடுத்து பூசைசெய்து இரும்பு இல்லாத ஆயுதங்களால் அச்செடிக்கு காயம்படாமல் நுனிவேர் அறுபடாமல் தோண்டி எடுத்து- அம்மூலிகையில் பூமிக்கு மேல் வளர்ந்துள்ள பாகத்தை முறுக்கி எடுத்துவிட்டு பூமிக்கு அடியில் ஊன்றியுள்ள அவ்வேர் முழுவதையும் பொன் தயாத்துக்குள் அடைத்து விநாயகரை பூஜித்து வலது கையில் அணிந்து கொள்ளவும்..
வலது கையில் அணிந்து கொண்டு எந்தவிதமான எட்சணி தேவதைகளையும் இதனால் தடையின்றி முழுமையாக வசியம் செய்யலாம்.. ஜாலம் கைகூடும். இதற்கு உங்களுக்கு தெரிந்த எட்சணி வசிய மந்திரம் போதும்....
இந்த முறை சரியாக யாருக்கும் தெரியாது...
ஒருசிலர் மட்டுமே தெரியும் ஆனால் வெளியில் வருவதில்லை..
மேலும் இந்த தயாத்தால் ஒருவன் உடலில் இருந்தால் .காத்து கருப்பு, கண்திருட்டி,ஏவல்,பில்லி,சூலியம்,பயந்த கொளாறு,ஆவிபிடிப்பு,வியாபாரம், தொழில் முன்னேற்றம், வெளிநாடு செல்லும் வாய்ப்பு, திருமணத்தடை,மேலதிகாரிகளின் ஆதரவு தன் கீழ்வேலை பார்ப்பவற்களின் ஒத்துழைப்பு மங்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும், எதிரி தொல்லைக்கு,கடன் நீங்க,கணவன் மணைவி ஒற்றுமைக்கு மேலும் ஜனவசியம்,ராஜவசியம்,லோகவசியம் ஆகியவற்றை செய்யும் அற்புதமாதாகும்.
மறைக்கப்பட்ட மாந்திரீகம் மர்மங்கள் விழிப்புணர்வு மற்றும் ஆராய்ச்சி மையம்
நன்றி குருமுனி பயிற்சி
9600043233 வாட்ஷாப்

கணபதி சக்கரம்

கணபதி சக்கரம்
கீழ்கண்ட சக்கரத்தை ஒரு செப்புத் தகட்டில் பிழை இல்லாமல் எழுதி,பால்,தயிர்,இளநீர்,பஞ்சகவ்யம் விட்டு அபிஷேகம் செய்து பூஜையில் வைத்து,பால், பழம், சுண்டல், தேங்காய், எழுமிச்சம் பழம், வெற்றிலை பாக்கு, ஊதுபத்தி, சாம்பிராணி மற்றும் ஐந்து முகமுள்ள குத்துவிளக்கில் 5 முகமும் தீபம் ஏற்றி வணங்கி.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ளெம் கம் கணபதயே வரத ஸர்வ ஜனமே வசமானய ஸ்வாஹா. என்ற மந்திரத்தை தினமும் காலையில் 1008 மாலையில் 1008 உரு இப்படி 48 நாளில் ஒரு லட்சத்து எட்டு உருப்போட விநாயகர் வசியமாகும் உலகமே வசியம் செய்யும் அஷ்டகர்ம செய்யலாம்....
ஒரு குருவின் அருள் இருந்தால் எதிலும் ஜெயிக்கலாம்.குருதான் பரப்பிரம்மம். அவரிடம் ஆசிபெற்றுச் செய்யும் எந்தக் காரியமும் கை கூடும். குரு அருளோடு ஏதாவது ஒரு உபாசனை இருக்க வேண்டும். குறிப்பாக விநாயகர், முருகன், சிவன், சக்தி, பெருமாள் இந்த ஐந்து தெய்வங்களை உபாசனை செய்யலாம். ஒரு லட்சத்து எட்டு என்ற எண்ணிக்கையில் உருக்கொடுத்துச் சித்தி பெற வேண்டும்.
புராண காலத்தில் தேவர்கள், அசுரர்கள், முனிவர்கள், ரிஷிகள் போன்றோர் பத்தாயிரம் வருடம்,இருபதாயிரம் வருடம் தவம் இருந்து அநேகமான வரங்கள் பெற்றதை அறியலாம். நமக்கு இஷ்டமான தெய்வம் எதுவாக இருந்தாலும் அது குரு ஆசியுடன் ஒரு மண்டலத்தில் 1,00,008 உரு ஜெபித்து தெய்வத்தின் வரத்தைப் பெறலாம். பூஜை முறைகள்,கட்டுப்பாடு குருவிடம் அறிக.மனதுக்குப் பிடித்த குருவில்லா விட்டால் பெருமையாக இருங்கள் நீங்கள் விரும்பும் தேவதைகள் உங்களுக்கு அன்பான குருவை கிடைப்பார்... சரியாக குரு இல்லாமல். புத்தகங்களை படித்து விட்டு பூஜைகள் செய்யலாம் என்று நினைக்காதீர்கள். புத்தகங்கள் வெளிவரும் மாந்திரீகம் குறிப்பு வேரு ,குருவிடம் எடுப்பது வேர் .நல்ல குரு கிடைத்தவர்கள் நல்ல பயணத்தை நோக்கி செல்வார்கள். தீய்ய குருவை அடைந்தவர்கள் தீண்ட தகுதிகள் அடைவார்கள்... எனவே மாந்திரீகம் கற்றுக்கொள்ள முக்கியம், மந்திரமே,எந்திரமே,தந்திரமே முதலில் வேண்டாம் நல்ல குரு கிடைத்தால் .நீ எதையும் தேடாமல் கிடைக்கும். அதுதான் குருவின் சிறப்பு...
முதலில் ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை வழிபடும் பூஜை முறைகள் பற்றிக் காண்போம். தங்கள் நட்சத்திரம் சாதகமான நாளில் பூஜை ஆரம்பிக்கவும் காலை 6:00 மணிக்கு பூஜைகள் முடித்திட வேண்டும். முதல் நாள் எத்தனை மணிக்கு பூஜையை ஆரம்பிக்கிறோமோ அதே நேரத்தில்தான் மறுநாளும் பூஜையைச் செய்ய ஆரம்பிக்கப்பட வேண்டும். பூஜை அறையை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்...நன்றி
கணபதி என்றிட கலங்கும் வல்வினைகள்
கணபதி என்றிட காலனும் கை தொழுவான்
கணபதி என்றிடல் கர்மமுமாதலால்
கணபதி இல்லாததோர் கர்மமும் இல்லையே..
நான் மாந்திரீகம் + கணபதியை பற்றிச் சொல்ல மேற்கண்ட பாடல் புரிந்தால் போதும்.
நன்றி குருமுனி மறைக்கப்பட்ட மாந்திரீகம் மர்மங்கள் விழிப்புணர்வு மற்றும் ஆராய்ச்சி மையம்
No automatic alt text available.