Sunday 13 March 2022

சித்தர்கள் சிவன் சார்ந்த ஆன்மீகம் சித்தவைத்தியம் நூல்கள்

வணக்கம் நண்பர்களே ! இதுவரையில் கையில் கிடைக்காத அறிய சித்த மருத்துவ நூல்கள் இந்த டெலெக்ராம் குழுவில் உள்ளது.. நண்பர்களே பயன்படுத்தி கொள்ளுங்கள்.. நன்றி. 🙏🙏

நூல்கள் பாதுகாப்பு குழு
சித்தர்கள் சிவன் சார்ந்த ஆன்மீக நூல்கள் மட்டும். புத்தகங்கள் அழியும் தன்மை உள்ளதால். தயவு செய்து (காப்புரிமை நூல்கள்) எனது கவனக்குறைவினால் பதிவு செய்து இருந்தால் அந்த நூல்களை வேறு நபர்களுக்கு பதிவு செய்ய வேண்டாம் தயவு செய்து (இலவச சேவை)
https://t.me/AnmekaNulakam

Friday 11 March 2022

மெர்க்குரியஸ் Mercurius corrosivus ஹோமியோபதி மருந்தின் குணம்

மெர்க்குரியஸ் mercurius corrosivus
ஹோமியோபதி மருந்தின் குணம்.

நாக்கு வீங்கி தளர்ந்திருத்தல்.பற்கள் அழுந்தி பள்ளமாக இருத்தல்.ஈறுகள் வீங்கி பஞ்சு போலாகி இரத்தம்
கசிவது.சுவாசம் துர்நாற்றமாக இருத்தல்.

நாக்கு ஈரப்பசையாக இருந்தாலும் கடுமையான தாகம்.

சுரப்பிகளில் வீக்கங்கள்,சில்லிப்பு,சீழ் பிடித்தல், வெண்ணெய் போல் சீழுள்ள குழிப்புண்கள்.எலும்பு வியாதிகள் வலிகள் இரவில் அதிகமாதல்.

வயிற்றுக்கடுப்பு.வயிற்று வலியுடன் மலம் குழ குழப்பாக இரத்தம் கலந்து போதல்.மலம் வெளியேறும் போதும் பிறகும் மிகுந்த கடுப்புடன் குளிர். இரத்தமும் வலியும் எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ
அந்த அளவு இம்மருந்து
உபயோகமாக இருக்கும்.

தொண்டை சிரங்கு போன்ற
உபாதைகளில் உயர்ந்த வீரியங்களில் கொடுத்தால் சீழ் பிடிக்காமல் ஆற்றும்.


மேக கிரந்தி விசத்தை போக்கக் கூடிய
அற்புத மருந்து. உடலில் உள்ள திசுக்களில் அழிவு
ஏற்படும் நிலையில் நமக்கு
நினைவிற்கு வரவேண்டிய
மருந்து மெர்க்குரியஸ்.

நோயாளிக்கு குளிர் சூடு இரண்டும் ஒத்துக் கொள்ளாது.அனைத்து உபாதைகளும் இரவில் அதிகரிக்கும்.

அவசரமாக பேசுவார்.பதில்
கூறுவது மெதுவாகவே இருக்கும்.எந்த விஷயத்திலும் உறுதித் தன்மை இருக்காது. நம்பிக்கை இருக்காது. களைத்துவிடுதல்.சந்தேகம்.நேரம் மிக மெதுவாகப் போவதாக உணர்வார்.

தலையில் ஒருப் பக்கம் கிழிக்கும் வலி. தலைச்சுற்றல். தலையைச் சுற்றிலும்
இறுகக் கட்டியது போல் விறைப்பு. தலையில் கொட்டும் வலியுடனும் எரியும் தன்மையுடனும் துர்நாற்றக்
கழிவுள்ள சரும எழுச்சி.வியர்வை எண்ணெய் போன்றிருத்தல்.

கண்களுக்கு முன்பு கறுப்புப் புள்ளிகள் தோன்றுதல். மேக கிரந்தி நோயினால் வரும் விழி வெண்படல வேக்காடு.கண்கள் கூசுதல்.
ஓரிரு வினாடி பார்வை மங்குதல். நெருப்பு ஒளியைப் பார்த்தால் பார்வை மங்குதல்.இமைகள் கெட்டித்து சிவந்து வீங்கி விடுதல். மிக அதிக காரத்தன்மையான எரிச்சலான கழிவுகள் வெளிப்படுதல்.

பற்களிலிருந்து வலி காதுக்
குத் தாவுதல்.காது கேளா
மை.காதிலிருந்துகெட்டியான மஞ்சளான இரத்தம் க
லந்த சளி வெளியாதல்.

கன்னங்கள் சிவந்து வீங்குதல். முகத்தில் மேக கிரந்தி
சம்பந்தமான சீழ்க் கொப்புளங்கள். வெளுத்த பார்க்க அசிங்கமான உப்பிய முகம். முக எலும்புகளில் வலி.
      
      
இரத்தம் தோய்ந்த, கண்ணாடி
போல் ஒளி ஊடுருவும் தன்மையான உமிழ்நீர். துர்நாற்ற செம்பு நிற உமிழ்
நீர்.நாக்கு நடுங்குவதால் பேச்சு தடுமாறும்.பஞ்சு போன்று ஈறுகள் தேய்ந்து இரத்தம் கசிதல்.மெல்லும்
சமயம் வலி.வாய் முழுவதும் ஈரமாக இருக்கும்.பற்களின் தலைப்பகுதி அழுகுதல்.பற்கள் ஆடுதல்.நாக்கு
வீங்குதல்.திக்குவாய்.நாக்கின் நீண்டவாக்கில் வெடிப்பு. புண்களுடன்நாக்கு வெந்து சூடானது போன்ற உணர்வு.வாயிலிருந்து துர்நாற்ற வாடை வீசும்.அறைமுழுதும்
இந்த வாடை பரவும்.வாயில்
ஈரப்பசையுடன் மிக அதிக
தாகம்.பற்களின் வேர் பகுதி
யில் எலும்பு முண்டுகளுடன் கடுமையான வலி; இரவிலும் படுக்கை சூட்டினாலும் அதிக வேதனை.

தொண்டையில் நீல நிறம்
கலந்த சிவந்த வீக்கம்.எப்பொழுதும் விழுங்க வேண்டும் என்ற உந்தல். வலது பக்கம் அதிக உபாதை.
பருவகால மாறுபாட்டால் வரும் தொண்டைப்புண்.விழுங்கும் சமயம் காதிலே தைக்கும் வலி.டான்சில்ஸ்
வேக்காடு.டான்சில்ஸ் கோளங்களின் பின் பகுதியில் கட்டிகள் உருவாகி,சீழ் பிடித்து விழுங்கினால் அதிக வேதனை.வறண்ட புண் போன்ற எரியும் தொண்டை. குரல் முழுதும் போதல்.

மெலிந்த இரத்தம் தோய்ந்த
பச்சை நிற மலம்.வலியுடன் முக்கல் முனகலுடன் இரவில் அதிகம் வெளிப்படுதல்.மலம் வெளியேறிய திருப்தியே இருக்காது.மலம்
வெளியேறும் சமயம் குளிர்ச்சியும், வயிற்றில் வேதனை உணர்வும், வெட்டும்  வலியும்,முக்கல் முனகலுடன் மிகுந்த சிரமம்,சிலநேரம் வெண்மையான சாம்பல் நிற மலம் வெளிப்படும்.     

     
சிறுநீர் கருஞ்சிவப்பு
நிறம்; இரத்தம்,சீழ், ஆல்புமின் முதலியவை கலந்திருக்கும்.குறைவான
மூத்திரம்.அடிக்கடி வருதல்.
சுண்டெலியின் நாற்றம் வீசுதல்.

ஆண் பச்சை நிறமான,நாற்றமுள்ள வெட்டை நீர் வெளியேறும்.மூத்திரம் விடும் போது எரிச்சல்.மூத்திரப்பை
யில் கடுப்பு. குறியின் நுனிபாகத்தில் புண்கள்.குழந்தை குறியை பிடித்து இழுத்துக் கொண்டிருத்தல்.
இரவில் குறி மிதமிஞ்சி விரைத்தல். இந்திரிய ஸ்கலிதம்.விரைகள் வீங்கியிருத்தல், கச கசப்பு , கவுட்டிகளில் படைகள்.

பெண் வயிற்று வலியுடன்
ஏராளமான மாதவிடாய். கறுப்பாகவும் பெரிய கட்டிகளாகவுமிருக்கும் .விடாய்க்கு முன் அதிக வெள்ளைப்பாடு
யோனியில் அரிப்பு. அனல்
வீசுதல்.மாதவிடாயின் போது சுவாசம் நாற்றமாயிருக்கும்
வயிற்றுக் கடுப்பு.சினைப்பைகளில் குத்தும் வலி.ஒவ்வொரு விடாயின் போதும் அல்லது விடாய் வருவதற்கு
பதிலாக மார்பகத்தில் பால்
சுரந்து வீங்கி வலித்தல்.
மார்பகத்தில் சீழ் கட்டிகள்.மார்பகப் புற்று.யோனிப் புற்று.

மார்பில் பிடிப்பு வலியுடன்
இரவில் வறண்ட இருமல்.
மஞ்சளாகவும் பச்சையாகவும் உப்புக் கரிக்கும் கோழை வெளியேறும்.எரிச்சல்.
வலது புறம் திரும்பி படுக்க
முடியாது.

கழுத்து முதுகு கீல்வாதப்பிடிப்பு. முதுகுத் தண்டின் மேல்பாதியில் வலி. இடுப்பு வலி.

கை கால் களிலும் மூட்டுக்களிலும் இழுப்பது போன்றும்
கிழிப்பது போன்றும் வலி.
இரவில் எலும்புகளில் வலி.
    
    
ஆசன வாயில் இடை விடாத கடுமையான கடு கடுப்பு. மலம் வெளியேறும் போதும் அதன் பிறகும்
குறைவான மலப்போக்கு.
இரத்தம் தோய்ந்த சளி.மலப் பையிலும் சிறுநீர்ப்பையிலும் ஒரே சமயத்தில் கடுப்பு. சிறுநீர் அதிக வலியுடன் சொட்டு சொட்டாக வெளியாதல்.தொண்டையில்
அதிகமான வீக்கம்.எரிச்சலுடன் அழற்சி.ஈறுகள் வீங்கி
இரத்தம் கசிதல்.

மனதில் அதிர்ச்சி.பயம். நிலை கொள்ளாமை.முட்டாள்
தனமான செயல்பாடு. தன்னோடு பேசுபவர்களை முறைத்தல். சிந்தனையில் தெளிவின்மை. பேசும்பொழுது தடுமாறுதல்.

நெற்றி எலும்பில் வலி.தலையில் நெருக்கத்துடனும்
தேங்கிய பாரமான உணர்வுடனும் கண்களில் எரிச்சல்.
மண்டை எலும்பில் வலி.மூளைக்குழப்பம் பரபரப்புடன்
ஜன்னி.மயக்க நிலை.

விழி வெண்படலத்தில் புண்கள். காரத்தன்மையான கண்ணீர் வடிதல்.வெளிச்சத்தை பார்க்க கடுமையான கூச்சம்.கருவிழியில் வேக்காடு.கருவிழி மண்
போன்ற நிறமாகி,கெட்டித்து
சுருங்கவோ விரியவோ முடியாத தன்மை.கண் இமைகளில் நீர் வீக்கம் ஏற்பட்டு சிவந்து தோலுரியும். மேக கிரந்தியினால் வரும் கருவிழி
வேக்காடு.விழி வெண்படலத்தில் துளை விழும் தன்மை.
   

குரல் வளையில் கத்தியால் வெட்டுவதுபோல் வலி.குரல் இல்லாமை. இருமல் இரத்த சளியுடன். நாடிவிட்டு விட்டு வேகமாக அடித்தல்
மார்பின் பக்கவாட்டில் தைக்கும் வலிகள்.

தொடர்ந்து பித்த வாந்தி எடுத்தல். இரைப்பையின் முன் உள்ள வயிற்றுப் பகுதியில் உணர்ச்சி அதிகரித்த வேதனை.பெருங்குடலில் வலி. வயிறு
உப்பிவிடுதல்.மலம் சிறுநீர்
கழிக்க தொடர்ந்து தூண்டுதல் இருந்து கொண்டே இருக்கும்.

இரத்தக் கடுப்பு.மலம் கழித்த பிறகும் மலக்குடலில் அதிக கடு கடுப்பு.மலம் சூடாக மெலிந்து இரத்தம் கலந்து, துர்நாற்றத்துடனும்,
சளிச் சவ்வு கலந்தும், வெட்டும் வலியுடனும் வெளியேறும்.மலம் கழித்த உணர்வே ஏற்படாமல் கடு கடுப்பு தாக்கும்.
                       

மூக்கினுள் அடிக்கடி
பொருக்குகள் உருவாகி,புண்ணாகி, துர்நாற்றமான சளி வெளிப்படுதல்.
மூக்குத் துவாரங்களில் புண் போன்ற உணர்வுடன் கடுமையான வலி.மூக்கின்
உட் பக்கம் வறண்ட சளியுடன் சிவந்து,வீங்கி சில சமயம் இரத்த சளி தேங்கி விடும்.மிக அதிக காரமான
நீர் போன்ற சளி ஒழுகும்.
மூக்கின் நடுச் சுவர் துளைவிழும்.

காதில் கடுமையான துடிப்புக்கள். துர்நாற்ற சீழ் வெளிப்படும்.

முகம் சிவந்து வீங்கி உப்பி
விடும்.உதடு கறு நிறத்துடன் வீங்கிவிடும். உதட்டிலும்
பற்களிலும் அழுக்குபடிந்திருக்கும். முக எழும்புகளுக்குள்ளேயே முக நரம்பு வலி.

வாயில் ஏராளமான உமிழ்
நீர் சுரப்பதுடன்,கடுமையான தணியாத தாகமும் சேர்ந்திருக்கும்.வாயில் ஈறுகள்
வீங்கி பஞ்சுபோல் மாறி இரத்தம் கசிதல்.ஈறுகள்நீல நிறமாகி வீங்கி பஞ்சு போலாகி பற்கள் ஆடும்.நாக்கு வேக்காடைந்து வீங்கி விடும்.அளவுக்கு மீறி உமிழ்நீர் ஊறும்.பற்களின் அடியில் சீழ் பிடிக்கும்.வாயில் உப்பு மற்றும் கசப்பு சுவையிருக்கும்.வாயைச் சுற்றிலும் வெளுத்திருக்கும்.

உள்நாக்கு வீங்கி விடுதல்.
விழுங்க முடியாமை.தொண்டை கடுமையான வேக்காடுடன் சிவந்து வீங்கி விடும். கூர்மையான வலிகள் பெரும் பாலும் உள்தொண்டை
மற்றும் மூக்கின் உட்பகுதி
இணையுமிடத்திலிருந்து
காதுக்குத் தாவும்.தொண்டையைச் சிறிது தொட்டாலும் வலி வேதனை. உணவை விழுங்கினால் அதிக
வேதனை.
                      ‌‌

சிறுநீர் வெளியேறாமல் தடை படுதல். சிறுநீர் பாதையில் தொடர்ந்து எரிச்சல்.மிகக் குறைவான சூடான சிறு
நீர் எரிச்சலுடன் வெளிப்படும்.சிறுநீரில் இரத்தம் கலந்து பச்சை நிறமாக வெளியேறும். சிறுநீரில் ஆல்புமின். சிறுநீர் பாதையிலிருந்து பாயும் வலி சிறுநீர்ப் பைக்குத் தாவும்.சிறுநீர் கழித்த பின் வியர்க்கும். சூடான சிறு நீர் சொட்டு சொட்டாக வெளியேறும்.சிறுநீர்ப் பைவேக்காடு. சிறுநீரக வேக்காடு.

ஆண் குறியும் விரைகளும்
கடுமையாக வீங்கி விடும்.
அழுகும் தன்மையான மேக
கிரந்திப் புண்கள்.மேக வெட்டையுடன் சிறுநீர் புறவழிப் பாதை வீங்கி சிவந்து
விடுதல்.ஆண் குறியின் மொட்டுப்பகுதி சூடாகி புண்ணாகி விடும்.சிறுநீர் புறவழியில் பச்சை நிற கெட்டியான கழிவு வெளிப்படும்.மேக
கிரந்திப்புண்கள் பெரிதாகி
அழியும் புண்கள் போல் பெரிதாகத் தோன்றும்.மேக வெட்டைப்போக்குடன் சிறுநீர் பாதையில் வீக்கம்,சிவந்த தன்மை மற்றும் ஆண்குறி சூடாகி புண் போல் வலிக்கும்.ஆண் குறியின் முன் தோல் நெருக்கியிருப்பதால் அதை முன்னுக்குஇழுக்க முடியாமை.

காய்ச்சலில் உடல் பகுதியில் குளிர்ச்சி ,சிறிது குளிர்தாக்கினாலும் உடல் குளிர்ந்து விடும்.அதிகம் வியர்க்கும். ஒவ்வொரு அசை வினாலும் உடலில் வியர்வை வெளிப்படும்.முதுகுப்
பக்கம் படுத்து கால்களை
மேலே இழுத்துக் கொள்வார்.களைப்பு பலவீனம்.காரமான சீழ் வடிந்து, அரித்துப்பரவும் தன்மையான புண்கள் வருதல்.சதை அழுகிப் பரவும் புண்கள்.

சரும உபாதையில் சல்பரைத் தொடர்ந்து மெர்க்குரிக் கரோசிவஸ்
நன்கு வேலை செய்யும்.எலும்பையும் தசையையும் இணைக்கும் தசைநாரில் கிழிக்கும் வலியுடனும்,தலை
சூட்டுடனும் காய்ச்சல் விட்டு
விட்டு தாக்கும். மலம் கழிக்கும் முன்பும் கழிக்கும்சமயமும் பிறகும் வயிற்றில்
திருகுவலி தாக்கும்.

நன்றி ; ராமலிங்கம் ஐயா.         

                      ‌‌


                         

                        

ஆண்டிமோனியம்க்ரூடம்.Antimonium crudum ஹோமியோ மருந்தின் குணம்

ஆண்டிமோனியம்
க்ரூடம்.
Antimonium crudum.

வெண்மையான,கனமான மாசு நாக்கில்
படித்திருந்தால்.அதிகமாக
கொழுப்புச் சத்துள்ள உணவுகளை உண்டதனால் ஏற்பட்ட கோளாறுகள்;குமட்டல்.நசுக்கப்பட்ட விரல் நகங்கள் பிரிந்து பாலுண்ணிகள் போல வளருதல்.உள்ளங்கால்களில்
குழிகளும் காய்ப்புகளும் வலி கடுமையாயிருக்கும். நடக்க சிரமம்.வயதானவர்களிடையே மாறி மாறி ஏற்படும் மலச்சிக்கலும் வயிற்றுப் போக்கும்.குழந்தைகள் சிடுமூஞ்சிகளாக இருப்பர். குழந்தைகள் தங்களைப் பிறர் பார்ப்பதையோ தொடுவதையோ
விரும்பமாட்டார்கள்.இரவில்
காய்ச்சல்.

தலைவலி..
ஆறுகளில் குளித்த பிறகு.குளிரினால்.
சாராயம் குடித்ததால், அஜீரணத்தால், புளிப்புள்ள  பானங்கள் அருந்துவதால், சருமக் கோளாறுகள் அமுக்கப்பட்டதால்.

இரைப்பையில் வேலை செய்யக்கூடிய முக்கிய மருந்துகளில் இதுவும் ஒன்று.அதிகமாக ஆகாரங்களை உண்டு அதனால் ஏற்பட்ட இரைப்பை கோளாறுகளில் குமட்டல் சங்கடம் இம்
மருந்திற்கே விசேஷமான
நாக்கு. ஏப்பம் வரும்போது
உண்ட ஆகாரத்தின் வாசனை வருதல்.தான் உண்டதை உடனே வாந்தி
எடுக்காவிட்டால் தனக்கு
சௌகரியம் ஏற்படாதென்று
நினைத்தல். கோடை காலங்களில் ஏற்படும் வயிற்றுப்
போக்கு. மூலவியாதியில்
மிகுந்த சளிப்போக்கு. அபானத்திலிருந்து விடாமல் சளி போன்ற கழிவு ஒழுகிக்
கொண்டே இருக்கும்.
                               

வருடக் கணக்கில் ஏப்பமும் அபான வாயுவும் மேலும் கீழும் பிரிந்து கொண்டே இருக்கும். இடைவிடாமல்
அபான வாயு வெளி வந்து
கொண்டிருக்கும்.தாகம் இல்லாமல் வரும் குமட்டல்.எந்த மருந்தாலும் குணப்படுத்த
முடியாத கடுமையான வாந்தியையும் ஆண்டிம் குரூடம் குணமாக்கும். விரல்
மூட்டு வேக்காடு மற்றும் கால்களில் கீழ் வாயு வீக்கத்திற்கும் பயன்படும்.வயிரும் குடலும் உப்பி வலிக்கு மானால் அதையும் குணப்படுத்தும். பாதத்திலும் குதிக்காலிலும் மிருதுவான தன்மையுடன் வலி எடுக்கும் போது இந்த மருந்து பயன்படும்.

கோடைகால வயிற்றுப்
போக்கு.குளிர்ந்த நீரில் குளிப்பதால் மாதவிடாய் அமுக்கப்படும்.மூக்கு துவாரங்களில் புண்களும்
வெடிப்பும்.வாயின் ஓரங்களில் வெடிப்பு. தசைகளில்
வீக்கம் வேக்காடு. ஊறுகாயிலும்
புளித்த உணவிலும் விருப்பம்.பற்கள் அழுகிய நிலையில் வலி.கண் இமைகளில் வேக்காடும் அரிப்பும். எரியும் நெருப்பை பார்த்தாலே இருமல். வயோதிக காலத்தில் உடல் பருமனாகிவிடுதல் .இவையாவும் ஆண்டிம் குரூடத்தால் குணமாகும்.

குறிப்பு ; பூர்த்தி செய்யும் மருந்துகள்
சல்பர்,சிலிகான்.

நன்றி ; ராமலிங்கம் ஐயா..

Tuesday 8 March 2022

நடராஜரின் நடன சபைகள் ஐந்து

நடராஜரின் நடன சபைகள் 

நடராஜரின் நடன சபைகள் பொற்சபை, ரஜித சபை அல்லது வெள்ளிசபை, ரத்தின சபை, தாமிர சபை, சித்திர சபை என்று வழங்கப்படுகின்றன.

சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய ஐந்து இடங்களிலும் உள்ள சிவாலய ங்களில் நடராஜர், தன் நடனத்தால் சிறப்பித்த சபைகள் இருக்கின்றன.

இவை பஞ்ச சபைகள் அல்லது ஐம்பெரும் சபைகள் என்று அழைக்கப்படுகி ன்றன. இந்த ஐந்து சபைகளும் பொற்சபை, ரஜித சபை அல்லது வெள்ளிசபை, ரத்தின சபை, தாமிர சபை, சித்திர சபை என்று வழங்கப்படுகின்றன.

*பொற்சபை*

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ளது திருமூலட்ட நாதர் ஆலயம். இங்கு அருள் பாலிக்கும் நடன நாயகன் நடராஜர் வீற்றிருக்கும் இடமே, பொற்சபை, பொன்னம்பலம், கனக சபை, பொன் மன்றம் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

இறைவன் தனது திருநடனத்தை, பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்கிரபாதர் ஆகியோருக்கு அருளிய தலம் இதுவாகும்.

இந்த தலத்தில் நடராஜர், தனது இடது காலை ஊன்றி, வலது காலைத் தூக்கி நடனம் ஆடுகிறார். இங்கு இறைவனின் நடனம் ‘ஆனந்த தாண்டவம்’ என்று அழைக்கப்படுகிறது.

*சித்திர சபை*

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதர் ஆலயத்தில் இருக்கிறது சித்திர சபை. இங்கு எமனை சம்ஹரித்த இறைவன், பார்வதியுடன் மார்கண்டேயருக்கு அருளியபடி சித்திர வடிவில் காட்சியளிக் கிறார்.

இங்கு நடனம் புரிந்த இறைவ னின், தாண்டவத்தை கண்டுகளித்த பிரம்மதேவன், தானே இறைவனின் திருநடனத்தை ஓவிய வடிவில் வடித்ததாக கருதப்படுகிறது.

இந்த இடம் சித்திர சபை, சித்திர அம்பலம், சித்திர மன்றம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இங்கு இறைவன் ஆடிய திருநடனம் ‘திரிபுர தாண்டவம்’ எனப்படுகிறது.

*ரத்தின சபை*

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் உள்ளது, ரத்தின சபை. இங்கு காளியை தனது நடனத்தின் மூலம் சிவபெருமான் வெற்றி கண்டார் என்கிறது தல புராணம்.

இந்த இடம் ரத்தின அம்பலம், ரத்தின சபை, மணி மன்றம் என்று பல பெயர்களால் வழங்கப்படுகி றது.

இங்கு இறைவன் எட்டு கரங்களுடன், வலது காலை ஊன்றி இடது காலால் காதணியை மாட்ட ஆயத்தமாவது போல் காட்சியளிக்கின்றார்.

காளியுடன் நடந்த போட்டியில், காதில் இருந்து விழுந்த காதணியை இறைவன் தனது இடது காலால் எடுத்து இடது காதில் மாட்டி காளியை வெற்றி கொண்டார் என்கிறது தல வரலாறு.

காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து சென்று, இங்குள்ள நடராஜரின் திருவடியில் அமர்ந்து, அனுதினமும் அவரது திருநடனத்தைக் காணும் பேறு பெற்றார். இங்கு இறைவன் ஆடும் நடனம் ‘ஊர்த்துவ தாண்டவம்’ என்று போற்றப்படுகிறது.

*வெள்ளி சபை*

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருளும் ஆலயமே ‘வெள்ளி சபை’ என்று போற்றப்படுகிறது. இதனை வெள்ளியம்பலம், வெள்ளி மன்றம் என்றும் போற்றுகிறார்கள்.

இங்கு அருள்பாலிக்கும் நடராஜர், தனது பக்தனான பாண்டிய மன்னனின் வேண்டு கோளுக்கு இணங்க, வலது காலை ஊன்றி, இடது காலைத் தூக்கி திருநடனம் புரிகிறார்.

இங்கும் முதலில் இறைவன் பஞ்சலி, வியாக்கிர பாத முனிவருக்கு தில்லையில் காட்டிய காட்சியையே காட்டி அருளினார்.

அதன்பிறகு, பாண்டிய மன்னனின் வேண்டுகோள்படி, காலை மாற்றி ஆடி, அந்த நிலையிலேயே அருள்கிறார். இங்கு இறைவ னின் நடனம் ‘சந்தியா தாண்டவம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

*தாமிர சபை*

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் இருக்கும் நடராஜர் சன்னிதியே ‘தாமிர சபை’ என்று போற்றப்ப டுகிறது.

இங்கு தாமிரத்தால் ஆன அம்பலத்தில், இறைவன் தன் இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி திருநடனம் புரிகின்றார்.

இறைவன் நடனம் புரியும் சபையானது, தாமிர சபை, தாமிர அம்பலம், தாமிர மன்றம் என்று வழங்கப்படுகிறது.

இங்குள்ள இறைவன் சந்தன சபாபதி என்று அழைக்கப்படுகி றார். இங்கு இறைவன் ஆடும் நடனமானது ‘திருத்தாண்டவம்’ என்று சொல்லப்படுகிறது.

Tuesday 1 March 2022

பிரையோனியா Bryonia ஹோமியோ மருந்தின் குணம் .

பிரையோனியா.
Bryonia ஹோமியோ  மருந்தின் குணம்.

நீர் கசிவுள்ள உறுப்புக்களில் நீர் தேக்கம் ஏற்படுதல்.
தைக்கும் வலிகள் நீர்பிடிக்க
கூடிய தசைகளிலும் எலும்பு
மூட்டுகளிலும். மனம். .மூட்டுவாத உடல் வாகுடன் கோபமும் ஆத்திரப் படுதலும்.மந்தமான மூளைக் குழப்பமும் பரபரப்பும் ஜன்னியும்.குழந்தை எந்த பொருளைக் கேட்டு நாம்
கொடுத்தாலும் திருப்தியடையாமல் தூக்கியெரியும். 
மனக்குறிகள் குளிர்ச்சியால் சமனமாகும். ஜன்னலை திறந்தே வைத்திருப்பார்.சாவு பயம்.மனமும் உடலும் அமைதியை விரும்புதல். ஏமாற்றத்தாலும் கோபத்தாலும் வரும் பின் விளைவுகள். ஜன்னியில் மூளைக் குழப்பத்துடன் தனது தொழிலைப் பற்றியே பேசுவார்.

உடலின் சளிச்சவ்வுகளில் வறட்சி காணப்படுவது பிரையோனியாவின் முத்திரைக்குறி. உதடு, வாய்,
தொண்டை,நுரையீரல் ,குடல்கள்,மலக்குடல் ஆகிய
பகுதிகளின் சளிச்சவ்வுகளில் மிகுந்த வறட்சி காணப்படும்.தாகம் அதிகமிருக்கும். ஏராளமான தண்ணீர் குடிப்பார்.நுரையீரல்களில் வறட்சி இருப்பதால் கடினமான வறண்ட இருமல் இருக்கும்.கோழை சிறிதும்
வெளியேறாது.வறண்ட இருமலுடன் நோயாளி மார்பை அமுக்கிப் பிடித்துக் கொள்வார். சளிச்சவ்வின் வறட்சியால் மலம் காய்ந்து வறண்டிருக்கும்.

உடலில் தைக்கும் வலி எங்கு தோன்றினாலும் பிரையோனியாவை நினைக்க வேண்டும். வாதரோகம்,மூட்டுகளில் நீர் வீக்கம்,நீர் சுரப்புள்ள வீக்கங்கள்,கால்
வீக்கம்,நுரையீரல் பையில்
வீக்கம் ஆகிய உபாதைகளில் இது போன்ற தைக்கும் வலிகள் காணப்படும்.சிறு
அசைவினாலும் இந்த தைக்கும் வலிகள் அதிகமடையும்
மார்பில் தைக்கும் வலிகள்.
                              
தைக்கும் வலிகளில்
பிரையோனியாவை
தொடர்ந்து பூர்த்தி செய்யும்
மருந்தாக சல்பர் தர வேண்டும்.

மார்பில் தைக்கும் வலிகள்.
அமுக்கப்பட்ட ஆழ்ந்த சுவாசம். நுரையீரல் கல்லீரல் வேக்காட்டுடன் வீங்குதல். இருமும் போது மார்பில் புண் போன்ற வலி. அடிக்கடி ஆழ்ந்து பெருமூச்சு விட்டு நுரையீரலை முழுமையாக
விரித்துக் கொள்ள உந்தல்.
இருமும் சமயம் மார்பையும்
தலையையும் பிடித்துக்
கொள்வார்.மார்பின் வலது
பக்கமாகவே அதிகம் பாதிக்கும்.

பிரையோனியாவின் தலைவலி உடைக்கும் பிளக்கும்
தன்மையாய் இருக்கும்.தலையில் எல்லாம் பிதுங்கி
வெளியே வந்து விடும் போல் தோன்றும்.தலைவெடித்து விடுமோ எனும் அளவு
தலைவலி.அசைவினாலும்
கண்களை திறப்பதாலும்
குனிவதாலும் எல்லையற்ற
வேதனை.அமுக்குவதாலும்
கண்களை மூடிக் கொள்வதாலும் சமனம்.மலச்சிக்கலால் தலை வலி.இரத்தத்
தேக்கத்துடன் நெற்றி வெடித்து விடுவது போன்ற தலை வலியும்,மூக்கிலிருந்து இரத்தம் வருதலும்.தலை
சுற்றலுக்கு ஏற்ற மருந்து. தலையை அசைப்பதாலும் உட்கார்ந்து எழும் சமயமும்
வரும் தலைசுற்றலுக்கு ஏற்றது.

நுரையீரல் உறை நீர் சுரப்பு.
கால்மூட்டுச் சுரப்பிகளின்
நீர் சுரப்பில் பிரையோனியா நீரை உறிஞ்சி வெளியேற்றி குணமளிக்கும்.நீர்
சுரப்புள்ள மூட்டு வீக்கத்தில்
விறைப்பும் தைக்கும் வலிகளும்,சிறு அசைவும் ,இருமினால் கூட அதிக வேதனைதரும்.நீர் சுரப்பு வீக்கங்களில் பிரையோனியா நீரை உறிஞ்சி வெளியேற்றிய உடன் பூர்த்தி செய்யும் மருந்தாக சல்பர் கொடுக்கப்பட வேண்டும்.
                               

பெண்களின் மாதவிடாய் முன்னதாயும்,அதிகமாயும் மங்கின நிறமாகும்,அடி வயிற்றில் வலியுடன் வரும். மாதவிடாய்க்கு பதில் மூக்கில் இரத்தம் வரும்.வலதுசினைப்பையில் குத்தும் வலி,வலது தொடைக்கு தாவும். மார்பகங்கள் சூடாகவும் வெளுத்தும், கல்போல் கடினமாகவும் வலியுடனுமிருக்கும். மாதவிடாயும் சரும
எழுச்சியும் அமுக்கப்படுவதால் வரும் பின் விளைவுகள்,பிள்ளைப் பேற்றுக்குப்
பிறகு வரும் உதிரப்போக்கை தவறான சிகிச்சையால் அமுக்குவதால் வரும் பின் விளைவுகள் அனைத்தும் பிரையோனியா குணப்படுத்தும்.

உணவுப்பாதையில் வாயில்
கசப்பு சுவை ஏற்படுவது பிரையோனியாவின் முத்திரைக் குறி. நாக்கில் மஞ்சள் படிவம்;வாயில் வறட்சியுடன் தாகம்;நீண்ட
இடைவெளிக்குப் பிறகு அதிகமான நீர் அருந்துவது குமட்டல் ஏற்படுவது பித்தவாந்தி ,வறட்சியான வெடித்த உதடுகள், இரைப்பையில்
கல் போன்ற கடின உணர்வு
இவை யாவும் பிரையோனியாவால் தீர்க்கப்படும்.

நன்றி ; ராமலிங்கம் ஐயா.