Thursday 19 November 2015

தாயின் கருவறையில் குழந்தை எப்படி உருவாகிறது???


கால்சியம்,விட்டமின், PROTEIN மாத்திரை எந்த குழந்தைக்கும் தேவையில்லை பாருங்கள்...தாயின் கருவறையில்  குழந்தை எப்படி உருவாகிறது???

பயம் உள்ளவரை மட்டும் கொள்ளும் டெங்கு காய்ச்சல்...



Dengue fever is a disease caused by a family of viruses that are transmitted by mosquitoes. ... Because dengue fever is caused by a virus, there is no specific medicine or antibiotic to treat it..

Sunday 15 November 2015

நீங்கள் சாப்பிடும் மாத்திரை இந்திய அரசால் தடை செய்யப்பட்டது.. எச்சரிக்கை.. உசார்ர்ர்ர்ர்......

Applications for Product Approvals that stand Rejected
The List of Applications, which were received in FSSAI for Product Approvals,
and where the proposals have been rejected on assessment of risk/ safety of
the proposed products by the Product Approval & Screening Committee,
and/or the Scientific Panel is placed below.
This list is updated as on 30.04.2015. Communications in individual cases,
containing reasons for rejection of the applications, have been sent to the
applicant FBOs by post/ email.















































Wednesday 11 November 2015

6,7,8 and 9 Times table trick using your hands in 2 sec



6,7,8 and 9 Times table trick using your hands in 2 sec 

சுகப்பிறசவம் வீட்டிலேயே எப்படி செய்வது பற்றிய கானொளி..



சுகப்பிறசவம் வீட்டிலேயே எப்படி செய்வது பற்றிய கானொளி..

வெற்றிலை போடுவது ஏன்?

வெற்றிலை போடுவது ஏன்?
பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான். முடி வெட்டுவதில் இருந்து மன்னர்கள் முடிசூடுவது வரை கடைபிடிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன. வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும். தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது. இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது. பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது. அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.
மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது என்று சொல்கிறார்கள். இது முற்றிலும் சரியான காரணமாகும். இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது. இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது. பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது. சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது. வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.
ஆக மொத்தம் தாம்பூலம் தரிப்பதில் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன. அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.
இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும். சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது. ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது. இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே. ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.
தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும். அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.
இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது. இந்த முறையில் தான் தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை. இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.

Monday 9 November 2015

தூதுவளை மகத்துவம் !!!

தூதுவளை மகத்துவம் !!!
இன்று நாம் பேசக்கூடிய விசயம் என்பது ஒவ்வொரு வீடுகளிலும் நாம் பார்க்கிற பொழுது நோய் என்று வருவதற்கு முன் நாம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஒரு நோய் என்று வந்துவிட்டால் நாம் அதிர்ச்சிக்குள்ளாகிறோம். ஆக நம் வீடுகளிலேயே இருக்கக்கூடிய சில மூலிகைகளை வீடுகளிலே வளர்க்கக்கூடிய சில மூலிகைகளை நம்பி நம்முடைய வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்திக் கொள்கிற பொழுது மிகச் சிறந்த ஒரு ஆரோக்கியமான ஒரு வாழ்க்கையுடன் வெற்றிநடை போட இயலும். நமது பண்டைய தமிழ்ச் சமூகத்திலே பார்க்கிற பொழுது நிறைய வீடுகளில் நிறைய மூலிகைகள் வைத்திருந்த ஒரு காலம் இருந்தது. இன்று நாம் தொகுப்பு வீடுகள் என்று சொல்லக்கூடிய (Apartments) ஒரு சிறைச்சாலை வாழ்க்கையை வாழக்கூடிய சூழலுக்கு வந்துவிட்டோம்.
அன்றைய காலங்களில் தமிழ்ச் சமூகத்தில் பார்த்தோம் என்றால் ஒரு வீடு என்று இருந்தால் அந்த வீட்டிற்குப் பின்பாக ஒரு தோட்டம் இருக்கும், வீட்டிற்கு முன்பாகவும் தோட்டம் இருக்கும். அங்கு பார்க்கும் பொழுது நிறைய மூலிகைகளை வளர்க்கக்கூடிய நிலை இருந்தது. ஒவ்வொரு வீட்டிற்குப் பின்புறமும் ஒரு முருங்கை மரம் இருக்கும், ஓமவள்ளி என்று சொல்லக்கூடிய கற்பூரவள்ளி, தூதுவளை, துளசி, ஆடாதொடா, கண்டங்கத்திரி, முசுமுசுக்கை, கல்யாண முருங்கை இப்படி பல்வேறு மூலிகைகள், மரங்கள் இவைகளை எல்லாம் கொண்ட ஒரு வீடு இருக்கும். ஆனால் அதிலிருந்து நாம் முரண்பட்டு போய்விட்டோம், மாறிவிட்டோம் என்றுதான் நாம் சொல்ல வேண்டும். மறுபடியும் அதேமாதிரி ஒரு ஆரோக்கியத்துடன் கூடிய ஒரு வீட்டமைப்பை நம்மால் உருவாக்க இயலுமா என்றால் கண்டிப்பாக முடியும் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு நாம் முயற்சி செய்யவில்லை அவ்வளவுதான். ஆனால் நாம் முயற்சி செய்கிற பொழுது கண்டிப்பாக அதற்கான பலன் கிடைக்கும். அந்த வகையில் இன்று நான் உங்களுடன் வீட்டிலேயே வளர்க்கக்கூடிய தூதுவளை என்ற மூலிகையைப் பற்றி நான் பேச இருக்கிறேன்.
தூதுவளையை நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள். அதனது இலை வட்டவடிவமென்று சொல்லமுடியாது, நீள் வடிவமென்றும் சொல்லமுடியாது, நீள்வட்டவடிவமாக இலைகள் இருக்கும். கரும்பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய அந்த இலைகளிலே நிறைய முட்கள் இருக்கும் இதுதான் தூதுவளை. இந்த தூதுவளையை கிராமங்களில் இருப்பவர்கள் சாதாரணமாக தோட்டத்தில் வைத்து வளர்க்க இயலும். வேலிகளில் கொடிபோல் படரக்கூடிய தன்மை உடையது. நகரத்தில் இருப்பவர்கள் இந்த செடியை ஒரு அகன்ற தொட்டிகளில் வைத்து வளர்க்க இயலும். நமது உடம்பில் இருக்கக்கூடிய நுரையீரலின் செயல்பாடு என்பது இதயத்தோடு இணைந்த செயல்பாடு அதாவது நுரையீரல் எந்த பிரச்சனையுமின்றி சரியான முறையில் அதனுடைய வேலையை செவ்வனே செய்கிற பொழுதுதான் நுரையீரலிலிருந்து ஆக்சிஜன் இதயத்திற்குச் சென்று இதயம் வரக்கூடிய இரத்தத்தை முறையாக சுத்திகரித்து மறுபடியும் உடல் செயல்பாடுக்குக் கொண்டு செல்லக்கூடிய ஒரு அற்புதமான பணியை செய்யும். அந்த வகையில் இந்த நுரையீரலில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல், நுரையீரலில் ஒவ்வாமை இல்லாமல், நுரையீரலில் எந்தப் புண்களும் வராமல் பாதுகாப்பதற்கு ஏற்ற ஒரு உணவியல் சூழலை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
கண்ட கண்ட உணவுகளை நாம் எடுக்கிற பொழுது, காரசாரமான உணவுகளை நாம் சாப்பிடுகிற பொழுது, மிகுந்த கோபத்தில் இருக்கும் பொழுது, மிகுந்த துக்கத்தில் இருக்கும் பொழுது அதிக பயணத்தில் இருக்கும் பொழுது, நிறைய குளுமையான உணவுகளை உண்ணுகிற பொழுது, ஆவேசப்படுகிற பொழுது, திறனுக்கு மீறிய வேலைகளை செய்கிற பொழுது அப்பொழுதெல்லாம் இந்த நுரையீரல் பாதிக்கப்படும். அந்த நுரையீரலை சரிபண்ணுவதற்கான உணவுகளை மருந்துகளை நாமே தயார் செய்கிற பொழுது நேரம் மிச்சம் அதே போல் பணம் மிச்சம் இவையெல்லாமே ஏற்படுத்திக்கொள்ள இயலும். ஏனென்றால் இன்றைய சமூக அமைப்பில் மருத்துவம் சார்ந்த வணிகம் என்பது நாம் எல்லோருமே பார்த்து மிரளக்கூடிய விசயமாக இருக்கிறது.
ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவர் அது சார்ந்து மருத்துவமனைகளுக்குச் செல்கிற பொழுது அவர் பொருளாதார ரீதியாக பின்தங்கக்கூடிய சூழலுக்கு உள்ளாக்கப்படுகிறார். ஏனென்றால் மருத்துவம் இன்று வணிகமாக பார்க்கப்படுகிறது. எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும் நிலையான ஆரோக்கியம் வேண்டுமென்றால் கண்டிப்பாக உணவு, இருக்கக்கூடிய சூழல் எல்லாவற்றையும் ஒழுங்குமுறைப்படுத்துகிற பொழுதுதான் அது சரியாக இருக்கும். அந்த வகையில் இந்த தூதுவளையை வீட்டில் தொட்டியில் வளர்க்கலாம், தோட்டத்தில் வளர்க்கலாம். தமிழில் ஒரு பழமொழி சொல்வோம் “தூதுளை மாதுளை இருக்கும் வீட்டில் மார்பிலும் வயிற்றிலும் கலங்கம் இல்லை” மார்பில்தான் நுரையீரல் இருக்கிறது தூதுவளையை யார் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு இந்த மார்பு வியாதிகள் எதுவுமே வராது என்று சித்தர்கள் சொல்கிறார்கள். மார்பு வியாதி என்று பார்க்கிற பொழுது நுரையீரல் சார்ந்த நோய்கள், கல்லீரல் சார்ந்த நோய்கள், நரம்பு சார்ந்த நோய்கள், இதயம் சார்ந்த நோய்கள் இவை அனைத்திற்கும் ஒப்பற்ற மருந்து இந்த தூதுவளை.
சரி இந்த தூதுவளையை எப்படி உணவாகக் கொள்வது?, எப்படி மருந்தாகக் கொள்வது?, தூதுவளை என்பது உணவா மருந்தா? இந்த கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில் தூதுவளை மிகச் சிறந்த உணவு. பண்டைய தமிழர்கள் மருந்தே உணவு, உணவே மருந்து என்ற உன்னத ஆரோக்கிய கோட்பாட்டின் படி வாழ்ந்தவர்கள். உலகமெல்லாம் ஒப்பிடுகிற பொழுது தமிழனைப் போல் மிகுந்த ஆரோக்கியம் உள்ளவன் இந்த உலகத்தில் எவனும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் அந்த அளவுக்கு ஆரோக்கியத்தின் அடிப்படையாக, ஆரோக்கியத்தின் மூலாதாரமாக இருந்தவன் தமிழன். அதற்கான காரணம் என்ன என்றால் அவன் பயன்படுத்திய உணவுகள். பண்டைய தமிழ் மரபிலே பார்த்தோம் என்றால் ரசம் என்பது தமிழனுக்கே சொந்தமான ஒரு உணவுப் பொருள். ரசம் என்பது நாம் இன்று எலுமிச்சை ரசம் வைப்போம், பாசிப்பயறில் ரசம் வைப்பது உண்டு, அதே மாதிரி இன்னும் பல்வேறு வகையான ரசங்கள் இன்று நாம் செய்துகொண்டிருக்கிறோம். இன்றைய வீடுகளில் ஏதாவது ஒரு வீட்டில் தூதுவளை ரசம் கமகமவென்று மணக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இன்றும் பழைய தமிழ் மரபுகளில் ஊறிப்போன குடும்பங்களில் இந்த தூதுவளை ரசத்தை மிக மணமாக அருந்துவதை நாம் உணரலாம். இந்த தூதுவளையானது நெஞ்சில் உறைந்து கிடக்கக்கூடிய கபத்தை முழுமையாக அகற்றக்கூடிய வல்லமை உள்ளது. இந்த கபம் என்பது சளி எனக் கொள்ளப்படும்.
வாதம், பித்தம், கபம் என்று சொல்கிறோம் அல்லவா அந்த மாதிரி இந்த கபத்தை அதாவது சளியை முழுமையாக அகற்றக்கூடிய வல்லமை உள்ள ஒரு மூலிகை எது என்றால் தூதுவளை என்று நாம் சொல்ல வேண்டும். பண்டைய தமிழ்மரபுகளிலே இந்த ரசம் எப்படி வைப்பார்கள் என்றால் வெள்ளை மிளகு, சோம்பு, சீரகம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, கொத்துமல்லி இவையனைத்தையும் நல்லெண்ணெய் விட்டு வதக்கி ஒன்றிரண்டாக பொடித்து அதனுடன் இந்த தூதுவளை இலையை முள்நீக்கிவிட்டு நெய்யில் நன்றாக வதக்கி அதை விழுதாக அரைத்து நாம் ஏற்கனவே சொன்ன கலவையோடு சேர்த்து லேசாக நல்லெண்ணெய் விட்டு வதக்கி சிறிது புளியைக் கரைத்து ஊற்றி ரசமாக வைப்பார்கள். இந்தத் தூதுவளை ரசத்தை நாம் சாப்பிட்டுப் பார்த்தோம் என்றால் அன்றைக்கு மட்டுமல்ல பத்து நாட்களுக்கு உங்களது குரலே மிகுந்த வளமையாக, இளமையாக பளிச்சென்று பளீர் என்ற குரலுக்கு சொந்தக்காரராக உங்களை மாற்றும். அப்பேற்பட்ட தூதுவளையை நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து வாரத்தில் இருமுறையாவது நாம் உட்கொள்ள வேண்டுமா இல்லையா. ஆகவே சிறகு இணையதள நேயர்களே தூதுவளை உங்கள் வீட்டில் இனி வளம் வரவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் நான் இந்தத் தகவலை ஒரு கட்டுரையாக எழுதிக்கொண்டிருக்கிறேன்.

tதூதுவளையை சில வீடுகளில் தோசையாக செய்வது உண்டு. தூதுவளை தோசை எப்படி செய்வது? ஏனென்றால் மூலிகையை மருந்தாக சாப்பிடுவதற்கு அஞ்சக்கூடிய சூழலில் இருப்போம். தூதுவளையை தோசையாக செய்யலாம், அடையாக செய்யலாம், ஆக அந்தத் தூதுவளையை என்ன செய்வது என்றால் தூதுவளை இலையை முள் நீக்கி நெய்விட்டு வதக்கி அதனுடன் சிறிது சீரகம் சேர்த்து வதக்கி அதை நன்றாக விழுதாக அரைத்து தோசை மாவுடன் கலந்து நீங்கள் தூதுவளை தோசையாக செய்து சாப்பிடலாம். இந்த மாதிரி தூதுவளை தோசை செய்து சாப்பிடும் பொழுது சளி, இருமல், தும்மல், மூக்கடைப்பு எல்லாமே முழுமையாக சரிசெய்யக்கூடிய ஒரு அற்புதமான பணியை இந்தத் தூதுவளை தோசை பண்ணும். எத்தனையோ உணவகங்களை நாம் பார்க்கிறோம், Restaurant என்று சொல்லக்கூடிய உணவகங்கள் எல்லாமே புளித்துப்போன மாவை காசாக்கும் வித்தையை மிக அழகாகக் கற்றுக்கொண்டு வைத்திருக்கிறது. நிறைய அமிலத்தன்மையை விற்பனையாக்கி நமது வயிறை வாயுவாக்கி அந்த வாயுவின் அடிப்படையில் காசாக்கும் கும்பல் இன்றைக்கு உலகம் முழுக்க நிறைய நிரவி கிடக்கிறது அதுவும் தமிழகம் முழுக்க சொல்லவே வேண்டாம். சோம்பேறிகள் நடத்தக்கூடியது எதுவென்றால் சோம்பேறிகள் செய்யக்கூடிய தொழில், சோம்பேறிகளாக மக்களை மாற்றுவதற்கு செய்யக்கூடிய தொழில் இந்த உணவகம் தான். ஏன் இந்த உணவகங்களில் தூதுவளை தோசையை கொண்டுவரக்கூடாது. கொண்டுவந்தால் அரசு ஏதாவது செய்யுமா? இல்லை தூதுவளை தோசை தடைசெய்யப்பட்ட பொருளா?

அதாவது தூதுவளையின் தன்மை என்னவென்றால் நம் உடம்பில் மிதமிஞ்சிக் கிடக்கக்கூடிய அமிலத்தன்மையை முழுமையாக சரிசெய்யக்கூடிய தன்மை இந்தத் தூதுவளைக்கு உண்டு. ஏனென்றால் நரம்பை நன்றாக ஊக்கப்படுத்தக்கூடிய தன்மை இந்தத் தூதுவளைக்கு உண்டு. தூதுவளை உஷ்ணகாரி அதாவது உஷ்ணத்தை வெளிப்படுத்தக்கூடிய தன்மை, கபத்தை கரைக்கக்கூடிய தன்மை இது எல்லாமே இந்தத் தூதுவளைக்கு உண்டு.
தூதுவளை பூவை உலர வைத்து காயவைத்து அதை பொடி செய்து ஒரு மாதம் விடாமல் சாப்பிட்டால் கண்பார்வை பளிச்சென்று தெரியும். இது முற்றிலும் உண்மை. ஆனால் தூதுவளை பூவை முழுமையாக நாமே சேகரித்தால்தான் உண்டு, ஏனென்றால் அது சிரமமான ஒரு விசயம். இந்தத் தூதுவளை பூவை எப்பேற்பட்ட கண் நோய்களுக்கும் உள்மருந்தாக கொடுக்கிற பொழுது கேட்கும் அதற்குக் காரணம் நம் உடம்பிலே கண் சார்ந்த நரம்புகள் மிகவும் நுட்பமானது, உணர்ச்சிகரமானது, உணர்வுப்பூர்வமானது. இந்த கண் நரம்புகளையே வலுப்படுத்தக்கூடிய வல்லமை இந்தத் தூதுவளை பூவிற்கு உண்டு. இதே தூதுவளை பூவையும் சாதிக்காயையும் சம அளவு எடுத்து அரைத்து பொடியாக செய்து கொண்டு காலை இரவு என்று இரண்டுவேளை சாப்பிட்டு வந்தோம் என்றால் நம் உடம்பில் இருக்கக்கூடிய நரம்புகள் எல்லாம் முறுக்கேறும், நரம்புகள் வலுவாகும், ஆண்மை அதிகமாகும், அபாரமான தாம்பத்தியம் உங்களுக்குள்ளே நிலவும்.

இப்பேற்பட்ட தூதுவளையை தவிர்ப்பது சரியா ஆகவே வீடுகளிலும் வீடுகளில் இருக்கக்கூடிய தொட்டிகளில் கூட இந்தத் தூதுவளையை நீங்கள் வளர்க்கலாம், உங்கள் வீட்டிலும் தூதுவளை ரசம் வைக்கலாம், தூதுவளையை தோசையாக செய்து சாப்பிடலாம், தூதுவளையை அடையாகவும் செய்யலாம். அடை என்பது பச்சரிசி மாவில் செய்யக்கூடியது. அதாவது மிளகு, நெய்யில் வதக்கிய தூதுவளை இலை, சீரகம் இவை எல்லாவற்றையும் நன்றாக அரைத்து அடைக்கான மாவோடு கலந்து அடைசெய்து அதன் மேலே முருங்கை இலையையும் தூவி தொடர்ந்து சாப்பிடுகிற பொழுது நாம் சொன்ன சளி, இருமல், கபம், காசநோய், மூச்சுத் திணறல் எல்லாமே முழுவதுமே சரியாகக்கூடிய தன்மை உண்டு.
பச்சையாக தூதுவளை கிடைக்கிறது என்றால் மூன்று இலை, மூன்று மிளகு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு முழுமையாக அரைத்து சாறு எடுத்து வடிகட்டி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். அந்தமாதிரி சாப்பிடுகிற பொழுது கபம் என்ற பிரச்சனைகளே இல்லாத ஒரு சூழல் வரும். நமது உடம்பிலே மூன்று விதமான நாடிகள் ஓடும் அவைகள் வாதநாடி, பித்த நாடி, கபநாடி. இந்த வாதநாடி என்பது முப்பது வயதுவரைக்கும் மிகுந்த அளவில் ஓடும். வாதநாடி ஒரு மனிதனுடைய செயல்பாட்டை அளக்கக்கூடியது Active என்று சொல்லுவோம். பித்தநாடி ஒரு மனிதனுடைய மனம் சார்ந்த விசயத்தை அளக்கக்கூடியது அதை confuse என்று சொல்லுவோம். கபநாடி ஒரு மனிதனுடைய சோம்பல் நிலையை அளக்கக்கூடியது. எந்த ஒரு மனிதனுக்கு கபம் அதிகமாக இருக்கிறதோ அவனிடமிருந்து செயல்பாட்டை எதிர்பார்க்கமுடியாது. எனவே முழுமையாக ஒரு மனிதன் செயல்பட வேண்டும் என்றால் அந்த கபநாடியை ஒழுங்குபடுத்த வேண்டும். அந்த கபநாடியை ஒழுங்குபடுத்தக்கூடிய வல்லமை இந்தத் தூதுவளைக்கு உண்டு. இந்தத் தூதுவளை இனி உங்கள் ஒவ்வொருவரின் இல்லத்திலும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள், அதை மருந்தாக்குங்கள், அதை உணவாக்குங்கள், உங்கள் உடம்புக்கு விருந்தாக்குங்கள், ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெறுங்கள், வாழ்க வளமுடன்.

Wednesday 4 November 2015

குழந்தைகளை அடிக்காமல் வளர்ப்பது எப்படி? சிறப்பு கட்டுரை...!

குழந்தைகளை அடிக்காமல் வளர்ப்பது எப்படி? சிறப்பு கட்டுரை...!
குழந்தைகள் அறிவின் வாசலை கண்டுபிடிப்பவர்கள். அந்த கண்டுபிடிப்பு என்ன என்பதை பற்றி நம்மால் புரிந்து கொள்ளமுடியாது. குழந்தைகள் உலகம் மிக விந்தையானது. வேடிக்கையானது.
விநோதமானது. எவராலும் எளிதாக நுழையமுடியாது. அதனால் அவர்களால் எதையும் புரிந்து கொள்ளமுடியும். அவர்கள் அவ்வளவு ஆற்றல் உள்ளவர்கள்.
“குழந்தைகள் உங்களின் உடமைப் பொருள் அல்ல. அவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம். ஆனால் உங்கள் தயாரிப்புகள் அல்ல. அவர்கள் இயற்கையின் வெளிப்பாடு.
உங்கள் எதிர்பார்ப்புகளை, விருப்பங்களை, எண்ணங்களை அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்கள் எதிர்கால உலகிற்கு நம் இறந்தகால சடங்குகளைத் திணிப்பது தவறு.
நீங்கள் வேண்டுமானால் குழந்தைகளைப் போல இருங்கள். ஆனால் உங்களைப் போல அவர்கள் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஏனென்றால் ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை.”
என்ற வரிகளுக்கேற்ப குழந்தைகளை நாம் உருவாக்கினபோதும் அவர்கள் நமது அடிமைகள் அல்ல. நம் குழந்தையே ஆனாலும் நாம் அவர்களை வன்முறைக்குள்ளாக்கக்கூடாது.
‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ என்ற பழமொழியெல்லாம் உதவவே உதவாது. அணைக்கும் என்பதற்காக அடிக்க வேண்டுமா? பேசி புரிய வைத்து அவனை நல்லவனாக வளர்க்கலாம். நண்பனாகப் பழகுவதன் மூலம் ஒழுக்கங்களைக் கற்றுக் கொள்ளச்செய்யலாம். செய்தால் வளர்ந்தபிறகு நம்மை அணைப்பான். இல்லாவிட்டால் அவனும் ‘அடிக்கிற கை அணைக்கும்’ என்று அடிப்பான்.]
படிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்குக்கு வருவார்கள்?
சர்க்கஸ் தான் நினைவிற்கு வருகிறது. மிருகங்களை அடித்து, துன்புறுத்தி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் “ரிங் மாஸ்டரை”ப் போல குழந்தைகளை அடித்து, திருத்தி வழிப்படுத்துவது யாரை மகிழ்விக்க, “குழந்தையை நல்லா வளர்திருக்கிறாங்க” என்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவா?
சேட்டை செய்யும் குழந்தைகளை எவ்வாறு கையாள்வது?
குழந்தைகள் மீதான வன்முறை :
குழந்தைகள் எல்லாவற்றையும் பரிசோதித்து பார்க்க விரும்புவார்கள். அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் தான் “எதுசரி” “எதுதவறு” என்று சொல்லிக் கொடுக்கவேண்டும். “சேட்டை” என்றால் என்ன? நாம் சந்தோசமாக இருக்கும் போது குழந்தை நமது மூக்கில் விரலை வைத்து ஆட்டினால் கூட சிரித்து மகிழ்கிறோம்.
நாம் வேறு மனநிலையில் இருக்கும் போது குழந்தை சும்மானாச்சுக்கும் மண்ணைத் தொட்டால் கூட “சனியனே, “சனியனே” “பேயா பொறக்க வேண்டியது புள்ளையா பொறந்திருக்கு” என்று திட்டுவோம். ஆக “சேட்டை” என்பது குழந்தையை மையப்படுத்தி அல்ல. நம்மை மையப்படுத்தி இருக்கிறது. முதலில் அதை உணர்வோம்.
அடுத்து, குழந்தை தன்னையோ, மற்றவரையோ, மற்றவைகளையோ பாதிக்காமல் விளையாட அனுமதிக்க வேண்டும். சேட்டை செய்த பிறகு அடிக்காமல் முன்பே “விதிகளை” சொல்லிவிட வேண்டும். விதிகளை குழந்தை மீறும்போது நிச்சயமாய்க் கண்டிக்கவேண்டும். நீங்க குழந்தையா இருந்தபோது சேட்டை செய்தீர்களா? இல்லையா?
அடிக்காமல் வளர்ப்பது எப்படி?
அடிப்பதைத் தாண்டி வேறு எதையுமே யோசிக்க மாட்டீர்களா? அடித்து சரிபடுத்த அவர்கள் என்ன மத்தளமா? கண்டிப்பாக என்பது “இந்தச் செயல் எனக்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்த்துவது” சில குழந்தைகள் “நான் உன் கூட பேசமாட்டேன்” என்று சொன்னாலே தங்களது தவறுகளை திருத்திக்கொள்ளும்.
இப்படி ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமான உளவியல் (சைக்காலஜி) உண்டு. பெற்றோர்களுக்கும் அவரவர் குழந்தைகளைப்பற்றி நன்கு தெரியும். பொறுமையின்மையின் காரணமாக, வேலைப்பளுவின் காரணமாக, நேரமின்மையின் காரணமாக, இப்படி ஒவ்வொரு பிரச்சனையின் ஊடே குழந்தைகள் பரிதவிக்கின்றன. அடிப்பதும், மனரீதியாக வன்முறைப்படுத்தும் விதமும் கண்டிப்பாக குழந்தை உரிமை மீறல் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை.
குழந்தை உரிமை மீறல் என்கிறீர்களே? குழந்தைக்கு என்ன உரிமை? குழந்தை உரிமை என்றெல்லாம் இருக்கா?
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. இன்றைய குழந்தை நாளைய மனிதனல்லவா? இப்படித்தான் நிறைய நபர்களுக்கு சந்தேகம் உள்ளது. உதாரணமாக ஒரு 8 மாத குழந்தையை அதன் தாய் இடுப்பில் வைத்து சோறுஊட்டும் போது அந்தக் குழந்தை தனக்குத் தெரிந்த மழலையில் வேண்டாம் என்று சொன்னாலும் அந்தத்தாய் எப்படியாது இன்னும் இரு கவளத்தை அந்தக் குழந்தைக்குத் திணித்துவிடுவார். அப் போதுதான் அந்தத்தாய்க்கு மனநிறைவு.
மகிழ்ச்சி. தன் குழந்தைக்கு வயிறுநிறைய சோறு ஊட்டி விட்டதாகத் திருப்தி. ஆனால் அந்தக் குழந் தைக்கு வயிறு ஒத்துக்கொள்ளாமல் தான் சாப்பிட்டதை சிறிறு நேரத்திலேயே வாந்தி எடுத்துவிடும் சூழலில் ‘பார் பிடிவாதத்தை. அப்படியே அது அப்பனை கணவனையும் சேர்த்துத் திட்டி தன் குழந்தைக்கும் இரண்டு அடி வைப்பார் தாய்.
இந்த நிகழ்ச்சி எதைக் காட்டுகிறது. ஒரு தாய் தன் அளவுக்குமீறிய அன்பினால் செய்யக்கூடிய வன்முறையைக் காட்டுகிறது. வாந்தி எடுத்தால் தன் குழந்தை எங்கே இளைத்துவிடப் போகிறதோ என்ற அதீத பயத்தினால், அக்கறையினால் அந்தக்குழந்தைக்கு இலவசமாக இரண்டு அடியும் கொடுக்கிறார்.
ஏற்கனவே வாந்தி பண்ணியதால் மூக்கிலும் வாயிலும் ஏற்படும் எரிச்சலோடு, அடிபட்டதால் அந்தக் குழந்தை மேலும் மேலும் வன்முறைக்குள்ளாகிறது. இந்த செயல் அன்பினால் ஏற்பட்ட வன்முறை.
மற்றோர் வன்முறை அதிகாரத்தால் நிகழக்கூடியது. ஒரு குடும்பத்தில் குடித்துவிட்டு வந்த தந்தை தூங்கிக்கொண்டிருந்த தன் மகனை கடைக்கு அனுப்பித் தனக்கு சாப்பாடு வாங்கிவரச் சொல்கிறார். அந்த குழந்தை, தன் தகப்பன் கேட்ட உணவு கடையில் தீர்ந்துவிட்டால், கடையில் இருப்பதை வாங்கி வருகிறான், இதற்காக மகனை கண்மண் தெரியாமல் விளாசித் தள்ளுகிறார் தந்தை. இது அதிகாரத்தினால் நடக்கும் வன்முறை. தகப்பன் குடித்தது முதல் தவறு. தன் குழந்தைகளுக்கு தான் குடித்ததாக காட்டியது இரண்டாவது தவறு.
தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையின் தூக்கத்தை அர்த்தமில்லாமல் கெடுத்தது மூன்றாவது தவறு. அவனை அடித்தது மிக மோசமான தவறு. ஆகிய இத்தனை தவறுகளும் விளைவதற்கு காரணம் அதிகாரம். என்னால் என்னமும் செய்யமுடியும் என்கிற போக்கு, நான்தான் இந்த வீட்டில் முடிவெடுக்கும் நபர் என்ன எண்ணத்தில் எழும் சிந்தனை. இம்மாதிரி குழந்தைகளுக்கு அனுதினமும், நிறைய நேரங்களில், எல்லா நபர்களாலும் குழந்தைகளுக்கான வன்முறை நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
இதெல்லாம் வன்முறையா? நாங்கள் என்ன நினைத்தோம் என்றால் குழந்தையை ஒழுங்காகவும் நல்ல பிள்ளையாகவும் வளர்ப்பதற்கு அடித்து வளர்க்கிறோம் என்று? இப்படி ஒவ்வொரு காரியத்திற்கும் பார்த்துப் பார்த்து செய்ய முடியுமா?
கலில் கிப்ரான் என்ற கவிஞர் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.
“குழந்தைகள் உங்களின் உடமைப் பொருள் அல்ல. அவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம். ஆனால் உங்கள் தயாரிப்புகள் அல்ல. அவர்கள் இயற்கையின் வெளிப்பாடு. உங்கள் எதிர்பார்ப்புகளை, விருப்பங்களை, எண்ணங்களை அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்கள் எதிர்கால உலகிற்கு நம் இறந்தகால சடங்குகளைத் திணிப்பது தவறு. நீங்கள் வேண்டுமானால் குழந்தைகளைப் போல இருங்கள். ஆனால் உங்களைப் போல அவர்கள் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.
ஏனென்றால் ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை.” என்ற வரிகளுக்கேற்ப குழந்தைகளை நாம் உருவாக்கினபோதும் அவர்கள் நமது அடிமைகள் அல்ல. நம் குழந்தையே ஆனாலும் நாம் அவர்களை வன்முறைக்குள்ளாக்கக்கூடாது. ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ என்ற பழமொழியெல்லாம் உதவவே உதவாது. அணைக்கும் என்பதற்காக அடிக்க வேண்டுமா? பேசி புரிய வைத்து அவனை நல்லவனாக வளர்க்கலாம். நண்பனாகப் பழகுவதன் மூலம் ஒழுக்கங்களைக் கற்றுக் கொள்ளச்செய்யலாம். செய்தால் வளர்ந்தபிறகு நம்மை அணைப்பான். இல்லாவிட்டால் அவனும் ‘அடிக்கிற கை அணைக்கும்’ என்று அடிப்பான்.
நாம் என்ன சொல்லிக்கொடுக்கிறோமோ அதைத்தானே குழந்தைகள் செய்வார்கள். ஒவ்வொரு காரியத்தையும் பார்த்துப் பார்த்து தான் செய்யவேண்டும். நிலத்தில் விதையைத் தூவி விட்டால் மட்டும் போதாது. தினசரி நம் கண்காணிப்பு தேவைப்படுகிறதல்லா? குழந்தைகள் விதையை விட முக்கியமானவர்கள். நல்ல பலன் தரும் விதைகளாக, விருட்சங்களாக வளர குழந்தையைப் பார்த்துப் பார்த்துத்தான் வளர்க்கவேண்டும். பக்குவமாய் சொல்லிக்கொடுத்து, பேசி வளர்க்கவேண்டும்.
குழந்தைகளை திட்டி கண்டித்து வளர்க்கலாமா? இல்லை அதுவும் கூடாதா?
சரி குழந்தைகளை அடிக்க கூடாது, திட்டி கண்டித்து வளர்க்கலாமா? இல்லை அதுவும் கூடாதா?
ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். ஒரு சிறுமியை அவள் தாய், ‘நீ எதுக்குத்தான் லாயக்கு. நீ பொறந்ததே வேஸ்ட்’ என்று திட்டிக்கொண்டே இருந்தால் அந்தக் குழந்தைக்கு அந்த வார்த்தைகள் மனதுக்குள்ளேயே தங்கிவிடும். சிறுமிக்கும் தான் எதற்கும் லாயக்கில்லாதவள் என்ற நினைவால், தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு உண்மையிலேயே எந்தக் காரியத்தையும் செய்ய லாயக்கில்லாதவளாகி விடக்கூடும்.
அப்புறம் அந்தப்பெண்ணின் தாழ்வு மனப்பான்மையை சரிசெய்வதே பெரும்பாடாகிவிடும். இம்மாதிரியான மனநிலையை, பாதிப்புக்குள்ளாகும் சொற்களை, குழந்தைகளிடம் பேசுவது மிகப்பெரிய குற்றம். நாம் இந்தத் தவறைச் செய்கிறோம் என்று தெரியாமலேயே நிறைய பெற்றோர்கள், குழந்தைகளோடு பழகுபவர்கள் செய்துகொண்டிருக்கின்றனர். ஆனால் இத்தகைய சொற்களால் மன அளவில் பாதிக்கப்படும் குழந்தைகள் நம் சமூகத்திற்கும், குடும்பத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவார்கள்.
இப்படியெல்லாம் இருக்கா? சரி நாம் கண்டிக்காம விட்டுட்டா ரொம்ப அதிகமாகப் பேசி அனைவரின் மத்தியிலும் கெட்ட பேரெடுக்குமே?
திரும்பத்திரும்பச் சொல்கிறேன், கண்டிப்பது என்பது வேறு. அந்தக் குழந்தையை மனரீதியாக தண்டிப்பது வேறு. கண்டிப்பது என்பது ஒரு செயலைச்செய்யும் போது நல்லது கெட்டது என்ன என்பதை புரியவைப்பது. அப்படியே அந்தக்குழந்தை தவறு செய்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்பின் அனுபவத்தைப் புரிய வைப்பது.
உதாரணமாகத் தீயைத் தொட்டால் சுடும் என்பதை விளக்கிய பின்னும் அந்தக் குழந்தை அதைத் தொட்டுப்பார்க்க ஆசைப்பட்டு சுட்டுக்கொண்டால் கூட அதன் விளைவுகளை, அதன் பாதிப்புகளை, காயம் ஆறியபிறகே உணர்த்தவேண்டும்.
யாரேனும் ஒருவர் பிரச்சனையில் மாட்டிக்கொண்டிருக்கும் போதுதான் ‘எனக்கு அப்பவே தெரியும். இப்படியெல்லாம் ஆகுமென்போம். நம் அறிவாற்றலை வெளிப்படுத்தாமல் பக்குவமாக, மனிதமனம் ஏற்றுக்கொள்ளும் விதத்தில், புரிய வைக்கவேண்டும். விளக்க வேண்டும். ஒரு பிரச்சனைக்கான தீர்வு என்பது பிரச்சனையை எப்படி எதிர்கொள்வது என்பதுதான்.
நாம் என்ன செய்கிறோம் என்றால் இருட்டுக்குள் போனால் பிரச்சனையாகிவிடும். ஆகவே இருட்டுக்குள்ளே போகவே கூடாது என்பதைத்தான் நாம் கற்றுக்கொடுக்கிறோம். மாறாக இருட்டுக்குள்ளே போய் பிரச்சனை வந்தால் எவ்விதம் பாதுகாத்துக்கொள்வது, எப்படி தப்பிப்பது என்பதை சொல்வதில்லை. இதற்குப்பெயர் தான் ‘மதிப்பீட்டுக்கல்வி’ (வேல்யூ எஜீகேசன்) என்று சொல்வார்கள்.
உங்களது அடுத்த கேள்வி அதிகமாப் பேசி கெட்ட பெயரை குழந்தைகள் எடுப்பார்கள் என்பதுதானே. நாம் பேசும் பேச்சு எல்லோருக்கும் பிடிக்கிறதா? வாய் தவறிப் பேசும் சில பேச்சுக்கள் நமக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் ‘இது தவறு’ ‘இது சரி’ என்று எங்கே நாம் திருத்திக்கொண்டோம்? ஒவ்வொரு முறையும் நாம் பேசுவதால் ஏற்படும் பிரச்சனைக்குப் பின்புதானே.
அந்த அனுபவத்தைக் கொண்டு குழந்தைகளைப் பேசவிட்டுப் புரியவைக்கவேண்டும். கருத்து சுதந்திரமே நாம் நம் குழந்தைகளுக்குக் கொடுத்ததில்லை. குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்குக் கொடுத்ததே இல்லை. குழந்தைகள் பேசும் அளவிற்கு வந்ததும் பெரியவர்களாகிய நாம் அமைதி காத்து, பேச்சைக் குறைத்து குழந்தைகளைப் பேச அனுமதிக்கவேண்டும்.
பேசும்போதே அதன் தவறுகளைச் சுட்டிக்காட்டி அவற்றை சரி செய்ய வேண்டும். அதுதான் சரியான அணுகுமுறை. ரூசோவின் வார்த்தைகள் எனக்கு நினைவிற்கு வருகிறது. ‘உன் பேச்சு சுதந்திரத்திற்காக என் உயிரையும் தரத்தயாராயிருக்கிறேன்’ என்கிறார், அவர் எதிரிகளைப் பார்த்து, எதிரிகளின் பேச்சு சுதந்திரத்திற்காக தன் உயிரையும் தரத்தயாராயிருந்தபோது நாம் நம் குழந்தைகளின் பேச்சு சுதந்திரத்தைப் போற்றவேண்டும்தானே.
பெண் குழந்தைகளைப் பேச அனுமதிப்பதில்லையா? அவர்கள்தானே நிறையப் பேசுகிறார்கள்? அப்படியே பேசினாலும் கண்டிப்பது தாய்க்குலங்கள் தான்.
ம்ம்ம். தாய்குலங்களுக்கு, எங்கே தங்கள் குழந்தைகள் வளர்ந்து உரிய வயதில் திருமணமாகிப் போகிற குடும்பங்களில் இப்படிப் பேசி, அந்த வீட்டில் ‘வளர்த்திருக்கிறதைப் பார்’ என்று தங்களைத் திட்டுவார்களோ என்ற ஐயத்தினால் இப்போதிருந்தே அடக்கி ஒடுக்கி வளர்க்கிறார்கள். தங்கள் வளர்ப்பைப் பற்றின விமர்சனத்திற்கு பயந்து இப்போதே பேசவிடாமல் தடுப்பது எந்தவகையைச் சார்ந்தது?
கருத்து சுதந்திரம் இல்லாததால்தான் தன் மீது நடக்கும் வன்முறைகளைக் கூட, மௌனமாக ஏற்றுக்கொள்ளும் போக்கினை குழந்தைகள் பெற்று எவ்வித எதிர்ப்பையும் காட்ட மறுக்கிறார்கள். இதுவே நாளடைவில் சமூகத்தில் நடைபெறும் பலவிதமான கேடுகளை எதிர்க்கத் திராணியற்று வன்முறைகளை வளர்க்கும் போக்கிற்கு மௌனமாக ஒத்துழைக்கிறார்கள். அதனால், வீடுகளில் நடக்கும் வன்முறைகளுக்கு ஓர் அளவே இல்லாமல் போய்விட்டது.
என்ன? வன்முறையா? குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் வன்முறையாளர்களா? பெற்ற குழந்தைகளை ஒழுங்காக வளர்க்க நாங்கள் என்ன பாடுபடுகிறோம்? வன்முறை செலுத்துகிறோம் என்கிறீர்கள்?
சரி. நான் அன்றாடம் நடக்கும் சில செய்திகளை சொல்லிக்கொண்டே வருகிறேன். இது வன்முறையா? இல்லையா என்று பாருங்கள்.
பெண் குழந்தைகளை உடலளவிலும் மன அளவிலும் பெரும்பாதிப்பை உண்டாக்கும் குழந்தைத் திருமணங்கள் நம் நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் கரூர், திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஊட்டி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நடந்து வருவதாக சமூக நலத்துறை பட்டியலிட்டிருக்கிறது. புள்ளவிபரங்கள் வெளியிட்டிருந்தால் எங்கே பிரச்சனையாகுமோ என்று வெளியிடவில்லை. இது ஒரு வன்முறையில்லையா?
குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு 15 மாதக் குழந்தை விற்கப்பட்டுள்ளது. இதற்காக பெறப்பட்டுள்ள தொகை அரிசி, மஞ்சள் கிழங்கு. (தினமணி 10-5-05) இது போன்ற பல செய்திகளைச் செய்திதாள்களில் காணமுடியும் இது வன்முறையில்லையா?
இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் நடுத்தரக் குடும்பங்களில் 1 கோடி கருக்கலைப்புகள் நடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கருவில் உள்ள குழந்தை பெண் குழந்தை என்பதால் இவை நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. இந்த உலகத்தில் ஆண்குழந்தைகள் தான் இருக்கவேண்டும் என்ற கருத்தாக்கத்தால் எழுந்து இந்த வன்முறை. இவை வன்முறையில்லாமல் வேறென்ன?
ஒரு வருடத்திற்குத் திருட்டுத்தொழில் செய்ய 50 ஆயிரத்திற்கு பெற்ற மகனை விற்ற செய்தி (தினத்தந்தி 27-10-05) எதை வெளிப்படுத்துகிறது.? குழந்தை தனது சொத்து என்ற அடிப்படையில் நடந்த இந்த நிகழ்வு வன்முறையில்லையா?.
குழந்தைகளை ஆசையோடும் அன்போடும் அரவணைத்து வளர்ப்பவர்கள் பெற்றோர்கள் என்பதுதான் நம் பொதுவான கருத்து. ஆனால் பெற்ற பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியேறும் அளவுக்கு நடக்கும் நிகழ்வுகள் ஏராளம். இவைகளை வன்முறை என்று சொல்லலமா? கூடாதா?
குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 6 முதல் 7 லட்சம் சிறுமிகள் என்கிறது யுனிசெஃப் அமைப்பு. இவை வன்முறைதானா? இல்லையா?
ஆக, குழந்தைகளுக்கு அங்கிங்கெணாதபடி எல்ல இடங்களிலும் வன்முறைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதன் அடிப்படையான காணத்தைத் தோன்டும் போதுதான் சங்கிலித்தொடர் போன்று சமூகப் பிரச்சனையாகவும், அரசியல் பிரச்சனையாகவும் வடிவமெடுக்கின்றன. பாரபட்சமான, ஏற்றத்தாழ்வான சாதிய அடுக்குமுறைகளும் இதற்குக் காரணமாகின்றன என்று புலப்படுகிறது. இவற்றைக் களைய வேண்டும் என்றால் பல கட்டங்களில் நம் போராட்டம் தொடரவேண்டும்.
ஒட்டு மொத்தமாக குடும்பத்தில் உள்ள வன்முறைகளை சொல்கிறீர்கள்? ஆனால் எங்கள் வீட்டில் அவ்வாறு நடப்பதில்லை…
எவ்வளவு ஆழமாக நம்புகிறீர்கள். பெரியவர்கள் வீடுகளில் சண்டை போடுவது கூட குழந்தைகளின் மனநிலையை மிக ஆழமாக பாதிக்கிறது. நான் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள ஒரு குழந்தையிடம் படம் வரையச்சொன்னேன். தன் அப்பாவும் அம்மாவும் சண்டையிடுவதால் தனக்குப் படிப்பும் வரவில்லை, இருக்கவும் பிடிக்கவில்லை என்று குழந்தை சொல்வதான கார்ட்டூன் அது. அந்தக் குழந்தையிடம் பேசிக் கொண்டிருந்த போது எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளாள் என்று தெரிந்தது.
“யார் யாரோடு சண்டை போட்டாலும் கடைசியில் பாதிக்கப்படுவது நான் தான். எனக்குத்தான் அடி கிடைக்கும். திட்டு கிடைக்கும். அப்போதெல்லாம் நான் அழுவேன். அழுதால் அதற்கும் அடி கிடைக்கும். அதனால் கஷ்டப்பட்டு அடங்குவேன். தொண்டையெல்லாம் அமுக்கி வலிப்பது போல இருக்கும். நெஞ்சுவலிக்கும். நிற்க வைத்து ஜெயிலுக்குள் இருப்பவர்கள் கிட்ட கேள்வி கேட்பது போல் கேட்பார்கள். நிறைய தடவை நினைப்பேன். சுனாமி வந்தப்ப இவங்க செத்து போயிருக்க கூடாதா?… என்று. அப்புறம் உடனே சாமிகிட்ட மன்னிப்பும் கேட்பேன். நான் அவங்க கிட்ட அடியும் உதையும் வாங்கறப்ப எல்லாம் எங்கயாவது ஓடிப்போலாம் போல இருக்கும்.
அப்படி போனா பொம்பளைப் பிள்ளங்கள யாரோ பிடிச்சுக்கிட்டு போயிருவாங்கன்னு எங்க பக்கத்து வீட்டு பெரியம்மா சொல்லும். நான் எங்கப்பாரு அடிக்கும் போதெல்லாம் கெஞ்சுவேன். என் சத்தம் எதையும் காதில வாங்க மாட்டாங்க. எனக்கு எங்கம்மாவும் அப்பாவும் அன்பு செய்ய மாட்டாங்களான்னு இருக்கும்.
பக்கத்துல உட்கார்ந்து பேசமாட்டாங் களான்னு இருக்கும். அவங்க மடியில் படுத்து கத்தணும் போல இருக்கும். கோபமா இருக்கும்போது அவங்களைப் பாத்தாலே எனக்கு பயம். இதனால சரியாவே படிக்க முடியலை. பள்ளிக் கூடத்திலே டீச்சரும் படிக்காட்டி அடிப்பாங்க. எங்கம்மாவும், எங்கப்பாவும் கையில அடிச்சாங்கன்னா எங்க டீச்சர் குச்சியில அடிப்பாங்க. எல்லா பிள்ளைகளும் சிரிக்கும். சிரிக்கிறப்ப செத்து போகலாம்னு இருக்கும். ஏன் பொறந்தோம்னு இருக்கு. நான் யாருக்கும் பிரயோசனமில்லை. ஒண்ணு சுனாமில நா செத்திருக்கணும்” என்று கேவிக்கேவி அழுதாள் அந்தக் குழந்தை.
மனசே தாங்கவில்லை. இப்படிப்பட்ட சின்னச்சின்ன விசயங்கள் கூட அந்தக் குழந்தைகளை எப்படிப் பாதிக்கிறது. ஒரு வார்த்தையைக் கூட தாங்க முடியாத அளவு அவ்வளவு மெல்லியதா இவர்கள் உள்ளம்? பூ என்று சொல்வார்களே, அதைப்போன்றதா? எங்களின் சொல்லும் செயலும் உங்களை அவ்வளவாகவா பாதிக்கிறது? எங்களின் நடவடிக்கை உங்களை உட்சுருக்கி சுக்குநூறாக நொறுக்கி விடுகிறதா? என் போன்றோர் திருந்தாத வரையில் ஒட்டுமொத்த பெற்றோர்கள் சார்பாக உங்களிடம் மன்னிப்பு மட்டும் தான் கேட்கமுடிகிறது என்னால். ஆனால் இதை வாசிக்கும் ஒவ்வொரு நபரும் கண்டிப்பாகத் திருந்துவார்கள். எனக்கு நம்பிக்கையிருக்கிறது.
யார் குழந்தைகளின் சுதந்திரத்தை யோசிக்கப்போகிறார்கள்?
மனதுக்கு துயரமாகத்தான் உள்ளது. ஆனால், இவ்வளவு பெரியவர்களாகிய நமக்கே சுதந்திரம் கிடைக்கலை. யார் குழந்தைகளின் சுதந்திரத்தை யோசிக்கப்போகிறார்கள்?
இங்கு நான் ஒரு கேள்வி கேட்கிறேன். உங்களுக்கு தெரிந்து என்னென்ன சுதந்திரங்கள் உள்ளன? (பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், கல்வி கற்க, இந்தியாவில் எங்கும் சுதந்திரமாக போய்வர… இப்படி கொஞ்சம் தெரியும். ஆனா எங்க…. (!?) இதெல்லாம் இருந்தும் நம்மால் செய்ய முடிகிறதா என்ன?)
உங்கள் ஆதங்கமா இது? சரி, சுதந்திரம் என்பதை இப்படியாகப் புரிந்துகொள்ள வேண்டும். குடைபிடித்துப் போவது சுதந்திரம் என்றால் அந்தக் குடையின் கம்பி அடுத்தவரது கண்ணைக் குத்தாதவரை என்பதாக அர்த்தம் கொள்ளவேண்டும். எல்லா சதந்திரமும் அனுபவிக்க முடியாதவரை நம்மைத் தடுப்பது எது? என்பதை நாம் யோசிக்கவேண்டும். நமது கல்வி அவற்றை கற்றுக்கொடுக்க வேண்டும்.
விஞ்ஞானத்தைப் படித்தவர்கள் அந்தப்படிப்பின் தன்மையும் பயனும் உண்மைகளும் தெரிவதற்கு பதிலாக பாம்புப் பால்குடிக்கும் என்று புத்துக்கு பால்வார்ப்பது, போன்ற மூட நம்பிக்கைகளை வளர்ப்பதில் பெரும்பாலும் முன்னணியில் நிற்கும் அளவிற்கு தான் கல்வி முறைகள் உள்ளன.
கல்வி என்பது தீயவற்றை எதிர்க்கும் சிந்தனையை வளர்த்தெடுக்கவும், மனிதம் வளர்க்கும், மனம் வளர்க்கும், உடல் வளர்க்கும், சுதந்திரமான, அடிமைத்தனம் அற்ற, மனித ஆளுமைகளை வளர்க்கிற கல்வியாக இருக்கவேண்டும்.
குழந்தைகளின் உரிமைகளைப் புரிந்து கொள்ளாதவரை நமக்கு நாமே பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்கிறோம் என்பது நிச்சயம். ஒவ்வொரு குழந்தைக் கல்வியாளர்களிடமும் கேட்டுப் பாருங்கள். தன்னிடம் படிக்கும் மாணவர்கள் மிக உயர்ந்த மதிப்பெண்களைப் பெற்று நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பதாகத்தான் அவர்களின் எண்ணம் இருக்கும். ஆனால் வெளிப்படுத்தும் விதம்தான் மாறுபடுகிறது. மாணவர்களைத் ‘திருத்துவது’ என்பது அடித்து திருத்துவது, தண்டித்து திருத்துவது, பிற மாணவர்கள் மத்தியில் மனம் புண்படுகிறவரை திட்டித் திருத்துவது அல்ல.
அதன் விளைவு எதுவாக இருக்கும்? ஒரு மாணவன் எந்த நிலைக்கு வரவேண்டும் என்ற ஈடுபாட்டில் ஆசிரியர்கள் யோசித்தார்களோ அந்த நிலை மாறி அம்மாணவன் தன் ஆசிரியரை ஒரு எதிரியாகப் பாவிப்பான். வகுப்பில் சரியாகக் கவனிக்காத மாணவனை ஒரு ஆசிரியர் எல்லா மாணவர்கள் மத்தியிலும் சத்தம் போட்டு திட்டி ‘வெளியே போ” என்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அம்மாணவன் மிகச் சாதாரணமாக வகுப்பை விட்டு வெளியேறினால் ஆசிரியரின் நோக்கம் வீணாகிவிடும். மாறாக, அம்மாணவனைத் தனியாக அழைத்து நேரத்தின் முக்கியத்துவத்தையும், அவன் வீட்டில் எந்த அளவு கஷ்டப்பட்டு அவனைப் படிக்க வைக்கிறார்கள் என்பதையும், வகுப்பு நேரத்தில் கவனிப்பு எந்த அளவிற்கு பிரயோசனமானது என்பதையும் உணர்த்தினால் நிச்சயமாக சிறிதளவு பயன் இருக்கும். அம்மாணவனின் உள்ளத்தில் ஆசிரியரைப் பற்றிய மதிப்பும் மரியாதையும் எண்ணமும் உயரும். ஏனென்றால் நாம் சொல்லக்கூடிய கருத்துக்களைப் பிறர் ஏற்கவேண்டும் என்றால் கேட்பவர் மத்தியில் கருத்து சொல்பவர்களைப் பற்றிய மதிப்பீடு சிறந்த முறையில் இருக்கவேண்டும்.
சொன்னபடி கேட்காத பிள்ளையை என்ன செய்வது?
கொஞ்சநாளாக நானும் குழந்தைகளை அடிப்பதை நிறுத்தினேன். எவ்வளவு கோபம் வந்தாலும் பரவாயில்லை என்று என்னைக் கட்டுப்படுத்தினேன். ஆனால் என் மகன் சொன்னபடியே கேட்பதில்லை. இவனை என்ன செய்யலாம்?
அதை உங்கள் குழந்தையிடமே கேட்டுப்பாருங்கள். பலன் கிடைக்கும். நான் உன்னை அடிக்கக் கூடாது என்று நினைக்கிறேன். நீ இப்படி செய்தால் கண்டிப்பாக அடிப்பேன். உனக்கு அடி கொடுக்கட்டுமா? என்று கேட்டுப்பாருங்கள்… குழந்தைகள் எப்போதும் நிறைய விசயங்களை உள் வாங்குகிறார்கள். உங்களிடம் ஏற்பட்ட மாற்றத்தை இந்நேரம் உணர்ந்திருப்பார்கள். உட்கார்ந்து பேசினால் போதும். நாம் நம் குழந்தைப்பருவத்தைக் கொஞ்சம் திரும்பி பார்ப்பது அவசியம்.
நாம் நம் சிறுவயதில் என்னவெல்லாம் செய்திருப்போம். எப்போது பார்த்தாலும் தெருவில் ஆடிக்கொண்டிருக்கவில்லையா? வெயிலும், மழையும், பனியும் நம்மை பாதிக்குமா? எப்போது பார்த்தாலும் ஒரே துள்ளல்தான். இந்த நிலையை நாம் நம் குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோமா? எப்போது பார்த்தாலும் படிப்பத்தான். விளையாடுவது கூட அடைக்கப்பட்ட கூண்டுக்குள் தான். போதாதற்கு டி.வி. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நம்முடைய குழந்தைப் பருவம் எவ்வளவு நன்றாக இருந்தது? இப்போதுள்ள குழந்தைகளைப் பாருங்கள். எவ்வளவு இன்பத்தை இழக்கிறார்கள்? இவர்கள் பெரியவர்களானதும் இதைவிட இன்னும் இறுகலாகி இயந்திரங்களைப் போல ஒரு வாழ்க்கையை மேற்கொள்வார்கள். விளையாட்டு என்ற பதமே நம் அகராதியிலிருந்து இல்லாமல் போய்விடும்.
பெரியவர்களுக்குத்தான் எதையும் எளிதில் சொல்லிப் புரியவைக்க முடியாது. எல்லாவற்றிற்கும் ஒரு உதாரணம் வேண்டும். அதை விளக்கிச்சொல்ல வேண்டும். காரணம் சொல்லவேண்டும்.
குழந்தைகள் அறிவின் வாசலை கண்டுபிடிப்பவர்கள். அந்த கண்டுபிடிப்பு என்ன என்பதை பற்றி நம்மால் புரிந்து கொள்ளமுடியாது.
குழந்தைகள் உலகம் மிக விந்தையானது. வேடிக்கையானது. விநோதமானது. எவராலும் எளிதாக நுழையமுடியாது. அதனால் அவர்களால் எதையும் புரிந்து கொள்ளமுடியும். அவர்கள் அவ்வளவு ஆற்றல் உள்ளவர்கள்.

இளநீரின் மருத்துவம் :-

தேங்காய் தண்ணீர் மருத்துவம் :-
இளநீரின் நன்மைகளைப் பற்றி அனைவருக்கும் தெரியும்.
அதேபோல் தேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்களைப் பற்றியும் பலரும் அறிந்திருப்பீர்கள்.
இப்போது நாம் பார்க்கப் போவது இளநீர் பற்றி அல்ல,
தேங்காய் தண்ணீரின் நன்மைகளைப் பற்றி தான்.
1) நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை பெறும் தேங்காய் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் நோயெதிர்பபு மண்டலம் வலிமைப் பெறுவதோடு, சிறுநீர் பாதை தொற்றுகள், ஈறு நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் மற்றும் காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ்களையும் தேங்காய் தண்ணீர் அழித்து வெளியேற்றிவிடும்.
2) தைராய்டு ஹார்மோன்கள் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து, தைராய்டு சுரப்பி சீராக செயல்பட வழிவகுக்கும்
3) சிறுநீரக பிரச்சனைகள் சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால், தேங்காய் தண்ணீரைக் குடித்து வருவதன் மூலம், சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.
மேலும் தேங்காய் தண்ணீர் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, சிறுநீரக கற்கள் இருந்தால், அவற்றைக் கரைத்துவிடவும் செய்யும்.
4) செரிமான பிரச்சனை செரிமான பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீரை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால், செரிமான பிரச்சனை நீங்குவதை நன்கு உணரலாம்.
ஏனெனில் தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளது. இவற்றை தெடர்ந்து குடித்து வந்தால், வாய்வு தொல்லையில் இருந்தும் விடுபடலாம்.
5) எடையைக் குறைக்கும் தேங்காய் தண்ணீரை எவ்வளவு குடித்தாலும், உடலில் கொழுப்புக்கள் சேராது. மேலும் இதனை குடித்தால், பசி கட்டுப்படும்.
இதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.
6) உயர் இரத்த அழுத்தம் உயர் இரத்த அழுத்தம் இருந்தால், தினமும் காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்தால், அவை உடலின் எலெக்ரோலைட்டுக்களை சீராக்கி,
உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.
7) தலைவலி இரவில் அதிகமாக மது அருந்திவிட்டு, மறுநாள் காலையில் எழும் போது கடுமையான தலைவலியை உணரும் போது, தேங்காய் தண்ணீர் குடித்தால், தலைவலி நீங்குவதோடு, ஆல்கஹால் மூலம் உடல் வறட்சி அடைவது தடுக்கப்பட்டு, ஹேங்ஓவர் பிரச்சனை நீங்கும்.
8) நீர்ச்சத்து அதிகமாகும் தினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, நாள் முழுவதும் பொலிவான தோற்றத்துடனும், போதிய ஆற்றலுடனும் செயல்பட முடியும்.
9) கர்ப்பிணிகளுக்கு நல்லது கர்ப்பிணிகள் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்

வாஸ்து சாஸ்திரம்:-

தவறானவாஸ்துஅமைப்புகளால் - ஏற்படும் தீய பலன்கள:-

வாஸ்து சாஸ்திரம்:-
கண்ணுக்கு புலனாகாத சக்திகளே நம்மையும், நம்முடைய வாழ்க்கையையும் வலி நடத்துகின்றன. திருஷ்டிக்கு (பார்வைக்கு அகபடாதது). அப்பாற்பட்ட சக்திகள் அதிர்ஷ்டம் என அழைக்கபடுகின்றன. கிழக்கும் மேற்கும் சூரியனால் இணைக்கபடுகின்றன. அதுபோல வடக்கும் தெற்கும் காந்த சக்திகளால் இணக்கபடுடுகின்றது.
இவ்விரு இயற்கை சக்திகளும் தம் போக்கில் இயங்குவதை அனுகூலமாக அமைதுக்குகொள்வதே "வாஸ்து" எனப்படும் சாஸ்திரம் என அழைக்கபடுகின்றது.
இயற்க்கை சக்திகள் "Short Circuit" ஆகவிடாமல் முறையாக உபயோகப்படுத்த எந்த இடத்தில வாசல், ஜன்னல் அமைப்பது? போன்ற விஷயங்கள் சரியாக அமைப்பதனால் ஸ்தானங்கள் பலன்பெற்று வாஸ்து பலம் யோகமகாவும், மாறி அமைப்பதினால் வாஸ்து வக்ரமாகவும் அமைந்து நம்மையும், நம்முடைய வாழ்வையும் பாதிக்கின்றது.
பரிபூரண வாஸ்து சாஸ்திரம்:-
பூமியின் மீது அமைந்த எந்த ஒரு மனைக்கும் அதனுள் அமையும் எல்லா விதமான கட்டிட அமைப்பிற்கும் பரிபூரண வாஸ்து சாஸ்திரம் மிகவும் அவசியமாகும் அவ்வாறு அமைக்கபட்டால் மாத்திரமே அங்கு அமையும் வீடானாலும், கடையானாலும் தொளில்கூடங்கள், வியாபார காம்ப்ளெக்ஸ்கள், மிகப்பெரிய தொழிற்சாலைகள் ஆனாலும் அங்கு ஒரு இணக்கமான நல்ல அமைப்பும் சீரான பொருளாதார வளர்ச்சியும் மற்றும் பயன் பெறுபவர்களுக்கு ஏற்றமான, மகிழ்வான வாழ்வும் அமைந்து வளம் பெறுவார்கள்.
தவறானவாஸ்துஅமைப்புகளால் - ஏற்படும் தீய பலன்கள:-
மனையின் வடக்கு மற்றும் கிழக்கு பாகங்கள் உயர்வாக இருந்து மற்ற பக்கங்கள் இருப்பின் பொருளாதார தாழ்வு, வம்ச வளர்ச்சி பாதிப்பு போன்ற தீய விளைவுகளே ஏற்படும்.
மனையின் வடக்கு மற்றும் கிழக்கு சுற்றுச் சுவர்களில் கட்டிடங்கள் அமைத்து ஈசானிய மூலை மூடப்பட்டால் உரிமையாளரின் உடல்நலம் மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகும்.ஆயுள் குறையும்.வம்சவளர்ச்சி தடைபட்டு தீயவிளைவுகளே ஏற்படும்.
மனையின் வடகிழக்கு மூலை குறைவுபட்டலோ,வீட்டு அமைப்பில் வடகிழக்கு குறைவுபட்டலோ ஆண் வாரிசு இல்லாமல் போகும்.மீறி ஆண்வாரிசு இருந்தாலோ ஆயுள் குறைவாகவோ அல்லது முரட்டு குணம் கொண்ட தீய நடததையுள்ளவர்க்ளாகவோ இருக்கலாம்.
வடகிழக்கில் கட்டிடங்களை அமைத்து தென்மேற்கில் கிணறு போன்ற பள்ளமான அமிப்புகளிருந்தால் அந்த வீட்டில் துர்மரணம் ஏற்படும்.
வீட்டு மனையில் வடகிழக்கு மூலை நீண்டு அமைந்திருந்து, வீட்டு கட்டிட அமைப்பில் வடகிழக்கு பாதிப்படைந்தால் பெரியவர்கள் உயிரோடு இருக்க இளவயதினர் உயிர் பறிப்படையும்.
வடகிழக்கு இடத்தில குப்பைக் குழி அமைப்பதோ, கழிவறை அமைப்பதோ மிகவும் தீய பலன்களைத தரும் பொருளாதார தாழ்வு, அவப்பெயர்,தீராத நோய்கள் போன்ற பாதிப்பைத தரும். இங்கு சமையல் அறை இருப்பினும் இதே தீய பலன்கள் ஏற்படும்
மனையின் கிழக்கு பாகம் மேடாக இருந்தாலும்,கிழக்கு சுற்றுச் சுவற்றோடு சேர்ந்து கட்டிடம் அமைந்து இருந்தாலோ பொருளாதார வீழ்ச்சியும்,வம்சவளர்ச்சியும் பாதிக்கும். வாரிசுகள் அறிவுவளர்ச்சியில் குறைவாக இருக்கும்படியான தீய பலன்களே ஏற்படும்.
கிழக்குபாகத்தில் இடம் இல்லாமல் சுற்று சுவற்றோடு சேர்ந்து மேற்கில் சரிவாக அமைக்கும் வீட்டில் உள்ளோர் தீராத வியாதிகள் அல்லது நரம்பு சம்பந்தமான மற்றும் கண் சம்பந்தமான நோய்களால் பாதிப்பு அடைவார்கள்.
தென்கிழக்கில் கிழக்கிலிருந்து பாதைத்தாக்கம் உள்ள வீட்டில் உள்ள பெண் முரட்டு சுபாவத்துடன் மற்றவர்களுடன் அடிக்கடி சண்டையிடுபவளாகவும் இருப்பாள். ஆண் தவறான பழக்கங்களில் சிக்கித் தவிப்பார்கள்.
தென்மேற்கில் தெற்கிலிருந்து பாதைத் தாக்கம் உள்ள வீட்டில் உள்ள பெண் உடல்நல பாதிப்புடனும் தவறான பழக்கங்களுக்கும், இரத்த அழுத்தம், படப்படப்பு மற்றும் திடீர் மரணங்களும் ஏற்படலாம்.
மனையின் வடக்கில் இடமில்லாமலும் தெற்கில் அதிக காலியிடங்களுடனும் தென்மேற்கில், தெற்கில் கிணறு போன்ற பள்ளமான அமைப்பிருந்தால் அந்த வீட்டின் பெண்கள் தீராத நோய்களால் பாதிப்படைவார்கள். மனநலமும் பாதிப்பு அடையும. பொருளாதார வீழ்ச்சியும், திடீர் மரணங்களும் ஏற்படும்.
தென்கிழக்கு மூலை தெற்கில் அல்லது கிழக்கில் வளர்ச்சி பெற்று அதே மூலையில் கிணறு போன்ற பள்ளமான அமைப்புகள் இருந்தாலும், வடக்கு சுற்றுச் சுவற்றில் வீட்டை அமைத்து தெற்கில் அதிக காலியிடங்கள் இருந்தாலும், வடகிழக்கு மூடும் படியாக கட்டிடம் அமைந்திருந்தாலும் அந்த வீட்டில் பொருளாதார வீழ்ச்சி, கடன் தொல்லை, திருட்டு, தீவிபத்துக்கள் வழக்கு விவகாரங்கள் போன்ற தீய அமைப்பே தொடரும். ஆண் வாரிசுகள் குறைவு பட்டு பெண்களுக்கான சொத்தாக மாறும் அபாயம் உண்டு.
தெற்கில் அதிக காலியிடமிருந்து கிழக்கு, வடக்கு சுற்றுச் சுவர்களில் கட்டிடம் அமைத்து வடகிழக்கு பாதிப்படைந்து, தெற்கில் கிணறு போன்ற குழி அமைப்பிருந்து, தெற்கில் கூரை தாழ்வாக அமைந்திருந்தால் அந்த வீட்டின் பெண் துணை இழந்து தவிப்பாள். தீராத வியாதியாலும், தவறான பிள்ளைகளாலும் வேதனைப் படுவாள்.
வடகிழக்கு எல்லையில் கட்டிடம் அமைத்து, கிழக்கு வாசல் வைத்து மேற்கிலும் தெற்கிலும் அதிக காலியிடமிருக்கும் அக்னிமூலை மனையில் வசிக்கும் கணவன் மனைவி இருவரும் சண்டையிட்டு பிரிவார்கள், குழந்தைகள் நோயாலும், தவறான வாழ்வாலும் அலைக்களிக்கபடுவார்கள்.
மனையின் காளியிடதிலோ, வீட்டின் அறைகளிலோ தெற்கு பாகம் பள்ளமாக இருந்தால் பெண்களுக்கு தீராத நோய்களால் வேதனை, பொருளாதார வீழ்ச்சி மற்றும் திடீர் மரணம் ஏற்படும் .
தெற்கில் அதிக காலியிடமிருந்தால் பொருளாதார நஷ்டம், வீண் விவகாரங்கள், பெண்களுக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்படும்.
தென்மேற்கு மூலையில் மேற்கில் பாதைதாக்கம் இருந்தால் அங்கு கிணறு போன்ற பள்ளமான அமைப்பிருந்தால் அது ஆண்களை தீய வழியில் நடத்தி தற்கொலைக்கு தூண்டும், தீராத நோய்கள் போன்ற தீய பலன்களை ஆண்களுக்கு ஏற்படுத்தும் தவறான அமைப்பாகும்
மனையில் வடக்கு அல்லது கிழக்கு பாகத்தை விற்பனை செய்தால் பொருளாதார வீழ்ச்சியும், உடல்நல பாதிப்பு, தொழில் முடக்கம் ஏற்படும்.
தெற்கு திசையிலும், மேற்க்கு திசையிலும் சுற்றுச் சுவர்களில்லாமல் காலியிடமாக, மைதானமாக இருந்தால் பொருளாதார வீழ்ச்சி, அகால மரணம்,உடல்நலப் பாதிப்பு, மனநலப் பாதிப்பு தீய பழக்கங்கள் போன்ற தீய அமைப்புகளே நடைப்பெரும்.
மனையில் வீட்டு அறைகளில் கூரை அமைப்புகளில் மேற்கில் தாழ்வாக இருந்தால் பொருளாதார வீழ்ச்சி, உடல்நலப் பாதிப்பு தவறான பாதையில் சென்று நற்ப்பெயர் இழப்பு, போன்ற தீய காரியங்களே ஏற்படும். மேற்கு பாகத்தில் திண்ணைகள் தரை மட்டத்தை விட தாழ்வாக இருந்தால் மேற்சொன்ன பலன்களே ஏற்படும்.
வடமேற்கு மூலையில் வடக்கில் பாதைத் தாக்கம் இருந்தால் அது பெண்களின் உடல்நல பாதிப்பிற்கும், தவறான தீய பழக்கங்கள் ஏற்படவும் காரணமாகிறது.
வாய்விய மனையில் மேற்கில் முகப்பு வாசலிலிருந்து ஈசானிய மூலை மறைத்து வீட்டை கட்டினால் அந்த வீட்டார் பொருளாதார தாழ்விற்கு ஆளாகி வீட்டை விற்க வேண்டி வரும்.
வாய்விய மனையில் வடமேற்கில் வளர்ச்சியோ அல்லது அந்த பகுதி மறைத்து கட்டிடம் கட்டபட்டாலோ மன அமைதியின்றி அலைந்து திரிவார்கள் தற்கொலை போன்ற தவறான முடிவிற்கும் ஆளாவர்கள்.
வடக்கு பார்த்த மனையில் வடக்கில் காலியிடமில்லாமல், தெற்கில் அதிக காலியிடமிருக்குமாறு அமைந்த வீட்டில் பெண் உடல்நல பாதிப்படைந்து உயிரிழக்கச் செய்யும் படியான தீயபலன்களே ஏற்படும்.
வடக்கில் வீட்டில் தரையைவிட உயர்வான திண்ணைகள் அமைந்தால் பொருளாதார தாழ்வும், அனாவசியச் செலவுகளால் மன நிம்மதியின்மையும், கடன்சுமைகளும் போன்ற தீய பலன்களே ஏற்படும்.
வடக்கில் வீட்டில் தரையைவிட உயர்வான திண்ணைகள் அமைந்தால் பொருளாதார தாழ்வும், அனாவசியச் செலவுகளால் மன நிம்மதியின்மையும், கடன்சுமைகளும் போன்ற தீய பலன்களே ஏற்படும்.
வடகிழக்கில் கழிப்பிடம் போன்ற அமைப்புகளிருந்தல் வீட்டில் உள்ளோரிடயே கருத்து வேறுபாடுகளால் சண்டைச் சச்சரவுகள் அதனால் சுற்றுச் சுழலில் அவப்பெயர்கள், தவறான நடத்தைகள் பொருளாதார வீழ்ச்சி, உடல் நலக்குறைவு போன்ற தீயபலன்களே ஏற்படும்.

சொக்கலிங்கத்தின் பிரமிக்க வைக்கும் மூலிகைப் பண்ணை!

பிரமிக்க வைக்கும் மூலிகைப் பண்ணை!

இயற்கை முறையில் மூலிகைப் பண்ணையைப் பராமரித்து வரும் சிவகங்கை மாவட்டம், ஆவுடப் பொய்கை கிராமத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் சொக்கலிங்கத்தின் நாற்பது ஏக்கர் மூலிகைப் பண்ணையில் இயற்கையில் பல மூலிகைகள் முளைந்திருந்தன. அது போக, மருத்துவத்திற்குத் தேவையான பல மூலிகைகளைத் தேடித்தேடி வாங்கிட்டு வந்து வளர்த்திருக்கிறார் சொக்கலிங்கம். விஷத்திலேயே கொடிய விஷமான எட்டி, ஒத்தத் தலைவலியைக் குணப்படுத்தும் காஞ்சொறி, ஆஸ்துமாவை அழிக்கும் ஆஸ்துமா கொடி, சர்க்கரை நோயை குணப்படுத்தும் சர்க்கரைக் கொல்லி, இன்சுலின் செடிகளும் இங்கே இருக்கிறது. இந்த இன்சுலின் நாற்றுகளை நிறைய பண்ணைகளில் ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் என்று விற்கிறார்கள். ஒரு செடியை வாங்கிக் கொண்டு வந்து அது வளர்ந்ததும் தண்டை ஒடித்து வைத்தாலே போதும், தன்னால் வளர்ந்துவிடும்.
அதேமாதிரி .. பிரம்பு, கருப்பு வெத்திலை, கருநெல்லி, கருநொச்சி, ரசவாதத்திற்குப் பயன்படும் செங்குமரி, வெள்ளை நாவல், திருவோடு மரம், பேய்கரும்பு, வல்லாரை, ஓரிதழ் தாமரை, முடக்காத்தான், ரணகள்ளி, நீர் நொச்சி, நீர் பிரம்மி, நீல மிளகாய், தவசி, முருங்கை, மான் செவி, கேசவர்த்தினி, கரிசலாங்கன்னி, தண்ணீர் விட்டான் கிழங்கு, ஆகாயகருடன், மதனகாமப்பூ, ஈஸ்வர மூலிகை என்று வகை வகையான அறிய மூலிகைகளையும் தேடிப்பிடித்துக் கொண்டுவந்து வளர்க்கிறேன் என்றார்.
கனகாம்பரத்தில் பச்சை கலரில் பூ வரும் செடி, இரண்டு வகை வல்லாரை, இரண்டு வகை மருதாணி, மூன்று வகை பொன்னாங்கன்னி, ஐந்து வகை வில்வம், ஐந்து வகை பிரண்டை, மூன்று வகை நாரத்தை, ஐந்து வகை எலுமிச்சை என்று ஒரே செடியில் இருக்கும் பல வகைகளும் இங்கே இருக்கிறது. இருமல் உள்ளிட்ட நிறைய நோய்களை குணப்படுத்தும் சித்தரத்தை மட்டுமே தனியாக அரை ஏக்கரில் இருக்கிறது.
மொத்தமாக பார்த்தால்.. ஏறத்தாழ ஐநூறுக்கும் மேற்பட்ட மூலிகைகள் இங்கே இருக்கு. இந்த மூலிகைகளை வைத்து ஆண்மைக்குறைவு, குழந்தையின்மை, புற்றுநோய், தோல் நோய் என்று ஆங்கில மருத்துவத்திற்கு சவால் விடும் எல்லா நோய்களையும் முழுவதுமாக குணப்படுத்த முடியும். இங்கிருக்கும் எந்தச்செடிக்கும் எந்த ஊட்டமும் கொடுப்பதில்லை. தன்னாலேயே வளர்கிறது. மூலிகையயோட குணமே அதுதான். காட்டில் உரம் போட்டா வளர்க்கிறார்கள் என்றார் சொக்கலிங்கம்.
பாம்பும் கீரியும் சண்டை போடும் போது, கீரி ஒரு இலையைச் சாப்பிடும். அதற்குப் பேர் கீரி புரண்டான் செடி, அது வேற ஒன்றும் கிடையாது. நம்ம காலடியில் கிடக்கும் சாதாரண சுண்ணாம்புக் கீரைதான். பொதுவாக, நாம செம்பருத்தி என்று சொல்லும் செடி அது கிடையாது. அதை ‘செம்பரத்தைப்பூ’ என்று சொல்லணும். செம்பருத்தி என்பது நாட்டுப்பருத்தியில் சிவப்பு கலரில் பூக்கும் ஒரு ரகம்’ என்றபடியே அந்தச் செடியைக் காண்பித்தார் சொக்கலிங்கம். எளிய மருத்துவக் குறிப்பு ஒன்றையும் சொன்னார்.
‘பல் சொத்தை, பல்லில் புழு என்று பல்டாக்டரிம் போய் ஐநூறு, ஆயிரம் என்று செலவழிப்பாங்க. அதற்கு ஒரு சுலபமான வைத்திய முறை இருக்கு. தும்பை இலைகளை ஒரு கைப்பிடி எடுத்துக்கிட்டு, நான்கைந்து சின்ன வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வாயில் மென்று குதப்பி துப்பினால்… எல்லாம் சரியாயிடும்.
நிறைவாக, என்னோட மூலிகைத் தோட்டத்தை பார்க்கணும் என்று ஆசைப்படுபவர்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றார்.
தொடர்புக்கு,
சொக்கலிங்கம், செல்போன் : 94439 – 19801.

Monday 2 November 2015

இயற்கை உணவின் இனிய பயன்கள் !!!

இயற்கை உணவின் இனிய பயன்கள் !!!
இயற்கை உணவின் இனிய பயன்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வளவு உள்ளது. இயற்கை உணவில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு, சமையல் உணவுக்கு அடிமையானவர்களுக்கு, இயற்கை உணவின் அளப்பரிய இனிய பயன்கள் புரியாது. ஓரளவாவது இயற்கை உணவில் வாழ்ந்தவர்களுக்கு இந்தப் பேருண்மை ஓரளவுக்குப் புரியும்.
தனி மனிதர் நலமும், பொதுநலமும் இயற்கை உணவில் இணைந்து கிடைக்கிறது. மனிதருக்கு நோய், நொடிகள் இல்லை. நோய் ஒன்றே, வழியும் ஒன்றே; அதுதான் இயற்கை உணவு வழி. நோய்கள் பலப்பல அல்ல. எந்த மருத்துவத்திலும் குணம் கிடைக்காத எல்லா வகையான நோய்களும், ஒட்டுமொத்தமாக இயற்கை உணவுக்கு மாறுவதன் மூலம் – சமையல் உணவைத் துறப்பதன் மூலம் மறைந்து குணம் பெற்று, உடலும் உள்ளமும் ஆரோக்கிய-ஆனந்த-ஆன்மிக-சிக்கன நிலை பெறுகிறது.
இயற்கை உணவில் வாழும்போது, பண்ட பாத்திரங்கள் தேவை இல்லை. மனிதனது புத்தி கூர்மைபெற்று, அறிவு ஓங்கி, நல்ல சாத்விக முடிவு எடுக்க முடிகிறது.
பெண்கள், சமையல் தொழிலிருந்து விடுதலை பெறுகின்றனர். குடும்பத்தை கவனிக்கவும், பொதுநலத் தொண்டுகளில் ஈடுபடவும், போதுமான கால அவகாசம் கிடைக்கின்றது.
அறுகுணம் (காமம், குரோதம், மோகம், லோகம், சினம், மாச்சரியம்) சீரமைகின்றது. இதனால், உலகில் நல் விளைவுகள்தான் நிகழும். தீய விளைவுகள் ஏற்படாது.
உணவை சமைக்கும்போது உற்பத்தியாகும் கார்பன்-டை-ஆக்ஸைடு, காற்று மண்டலத்தில் கலக்க வாய்ப்பில்லை. மேலும், சமையல் உணவு உயிரற்ற உணவு. உயிரற்ற சமையல் உணவில் முழுவதும் நாம் வாழும்போது, நமது உடலையும் உயிரற்றதாக ஆகிறது. இயற்கை உணவு உயிருள்ள உணவு. உயிருள்ள இயற்கை உணவில் குறைந்தபட்சம் பெரும்பாலும் வாழும்போது, நமது உடலுக்கும் உயிரை ஊட்டுகின்றது.
இயற்கை உணவில் வாழும்போது, வெட்டுக் காயங்கள் மற்றும் புண்களில் சீழ் வைப்பதில்லை. வலி ஏற்படுவதில்லை. மேலும் எவ்வித மருந்தும் அவசியமில்லாது, மருந்தைவிட இயற்கை உணவு அதிகபட்சம் குணப்படுத்துகின்றது.
உலகில் சண்டை சச்சரவுகள் குறைந்து, இல்லாது போகும். ஒற்றுமை வளரும். குழந்தைப்பேறு இல்லாதவர்களும் இயற்கை உணவுக்கு மாறுவதன் மூலம் குழந்தைப்பேறு கிடைக்கிறது. சாக்கடை உற்பத்தி இல்லை. சமையலுக்கான விறகு, காஸ் போன்ற எரிபொருட்கள் தேவையில்லை. தண்ணீர் தேவை மிக மிகக் குறைவு. உணவின் அளவும் தேவையும் மிகக் குறைவு. உண்டி சுருங்கி, உபாயம் பல ஏற்படுகின்றது.
தேங்காயும் பழங்களுமே மனிதனின் தலையாய ஒப்பற்ற உணவு. இயற்கை உணவு வாழ்வில் என்றும் இன்பமே. துன்பமில்லை. என்றும் இளமையாக வலுவாக வாழ வழிவகுக்கிறது அது. உண்மையான இறை பக்தியை வளர்க்கிறது. மூட நம்பிக்கைகள் மறைந்துபோகின்றன. எளிமை ஓங்கும். ஆடம்பரம் மறையும். பகட்டான வாழ்வு பறந்துபோகும். இயற்கை உணவில் வாழும்போது, நமது உடல் பனை மரக் கட்டைபோல் வைரமாகி, உடல் உறுதி பெறுகின்றது. சமையல் உணவில் வாழும்போது நமது உடல் பனை மர சோற்றுக் கட்டை போன்று உறுதியற்றதாகின்றது.
உணவே மருந்து, மருந்தே உணவு. படுக்கைக் காபி, படுக்கையில் தள்ளும். நீரை உண். உணவைக் குடி. வேகாப் பண்டம் வைட்டமின் நிறைந்தது. கண்ட மருந்து காலனுக்கு விருந்து. இளநீர் இனிய நீர். பதப்படுத்திய உணவு, பயனற்ற உணவு. வாழ உண்போம்; உண்ண வாழுவோம். உயிரை ஓம்ப உடலை ஓம்புக. கனிகள், பிணிகளைப் போக்கும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். சமைக்காத உணவு, சத்துள்ள உணவு. நமக்கு நாமே சிறந்த மருத்துவர். உண்ணாநோன்பே உயரிய மருந்து. பச்சை உணவு பாதுகாக்கும் உணவு. மருந்துகளை மறந்து வாழ்வோம். மாத்திரை, இறுதி யாத்திரைக்கு வழி காட்டும்.
இயற்கை உணவு காதலை வளர்க்கும். சமையல் உணவு காமத்தை மட்டுமே வளர்க்கும். இயற்கை உணவின் விளைவு, மெய்ஞான வளர்ச்சி. மெய்ஞான வளர்ச்சி ஆக்க வளர்ச்சி. சமையல் உணவின் விளைவு, விஞ்ஞான வளர்ச்சி. விஞ்ஞான வளர்ச்சி அழிவு வளர்ச்சி. பசியோடு உண்ண உட்காருங்கள். பசியோடு உண்டு எழுந்திருங்கள். இயற்கை வாழ்வே இறை வாழ்வு. பழம் பலம் தரும். சோறு சோர்வு தரும்.
சமையல் உணவில் உடல், உள்ளம் அழிவு வளர்ச்சி பெறுகின்றது. இயற்கை உணவில் உடல், உள்ளம் ஆக்க வளர்ச்சி பெறுகின்றன. இயற்கையே இறைவன். இயற்கையை ஓம்புதலே இறைவழிபாடு. மருத்துவ உலகம், உடலுறுப்புகளை சீர்கேடு அடையச் செய்து, இறப்பை ஏற்படுத்துகின்றது. இயற்கை உணவு, முதுமையில் இளமையைத் தருகின்றது. சமையல் உணவு, இளமையில் முதுமையைத் தருகின்றது.
‘பல மனிதர்கள் நோய்களால் மடிவதில்லை; தாம் உண்ட மருந்துகளால்தான் மடிகிறார்கள்’ – இது, ஜப்பான் நாட்டுப் பழமொழி.
மனிதரை நோயாளியாக ஆக்குவதும், இறப்பை விரைவில் வரவழைப்பதும் தவறான சமைத்த உணவுதான். நோயிலிருந்து விடுவிப்பதும், இறப்பை தள்ளிப்போடுவதும் சரியான இயற்கை உணவுதான். எத்தகைய மருத்துவமோ, மருந்தோ அன்று!
‘உண்ணும் உணவுகளெல்லாம்
இயற்கை உணவுகளாகட்டும்
கேட்கும் ஒலிகளெல்லாம்
இயற்கை ஒலிகளாகட்டும்
தோயும் ஒளிகளெல்லாம்
இயற்கை ஒளிகளாகட்டும்
காணும் காட்சிகளெல்லாம்
இயற்கை காட்சிகளாகட்டும்
வாழும் வாழ்வுகளெல்லாம்
இயற்கை வாழ்வுகளாகட்டும்’!
‘பஞ்சபூத நிறை சுகத்தால்
பசித்தபோது பழந் தேங்காய்
கொஞ்சுங் காற்று வெளியிலே
கொட்ட வேர்வை வேலை செயல்
நெஞ்சு நிரம்ப மூச்சிழுத்தல்
நீரிலாடித் தியானித்தல்
நஞ்சு நீங்கப் பட்டினியால்
நல்லியற்கை வாழ்வோமே’
என்கிறார் யோகி சுத்தானந்த பாரதி. எனவே, உலகில் பழ உணவு உண்போர் சமுதாயம் பெருக உறுதுணையாக இருப்போம். உலகில் தரிசு நிலங்களில் எல்லாம், மற்றும் இதர விளை நிலங்களில் எல்லாம் பழமுதிர்ச் சோலைகள் உருவாகப் பாடுபடுவோம். உலகில் செயற்கை வாழ்வு நீங்கி, இயற்கை வாழ்வு மிளிரச் செய்வோம். இப்பூவுலகை சொர்க்கபூமியாக மாற்றுவோம். இயற்கை வாழ்வியல் இலக்கம் உலகெலாம் தோன்றி, பல்கிப் பெருகட்டும்.
வளர்வோம் இயற்கை உணவில்!
வாழ்வோம் இயற்கை வாழ்வில்!!
அடைவோம் மரணமிலாப் பெருவாழ்வை!!!

Sunday 1 November 2015

சிவ மந்திரமும் அதன் பலன்களும்.


சிவ மந்திரமும் அதன் பலன்களும்.
நங்சிவயநம என்று உச்சரிக்க - திருமணம் நிறைவேறும்
அங்சிவயநம என்று உச்சரிக்க - தேகநோய் நீங்கும்
வங்சிவயநம என்று உச்சரிக்க - யோகசித்திகள் பெறலாம்.
அங்சிவயநம என்று உச்சரிக்க - ஆயுள் வளரும், விருத்தியாகம்
ஓம் அங்சிவாய என்று உச்சரிக்க - எதற்கும் நிவாரணம் கிட்டும்.
கிலி நமசிவய என்று உச்சரிக்க - வசிய சக்தி வந்தடையும்
ஹிரீநமசிவய என்று உச்சரிக்க - விரும்பியது நிறைவேறும்
ஐயும் நமசிவய என்று உச்சரிக்க - புத்தி வித்தை மேம்படும்.
நம சிவய என்று உச்சரிக்க - பேரருள், அமுதம் கிட்டும்.
உங்யுநமசிவய என்று உச்சரிக்க - வியாதிகள் விலகும்.
கிலியுநமசிவய என்று உச்சரிக்க - நாடியது சித்திக்கும்
சிங்வங்நமசிவய என்று உச்சரிக்க - கடன்கள் தீரும்.
நமசிவயவங் என்று உச்சரிக்க - பூமி கிடைக்கும்.
சவ்வுஞ் சிவாய என்று உச்சரிக்க -சந்தான பாக்யம் ஏற்படும்.
சிங்றீங் என்று உச்சரிக்க - வேதானந்த ஞானியாவார்
உங்றீம்
சிவயநம என்று உச்சரிக்க - மோட்சத்திற்கு வழி வகுக்கும்.
அங்நங் சிவாய என்று உச்சரிக்க - தேக வளம் ஏற்படும்.
அவ்வுஞ் சிவயநம என்று உச்சரிக்க - சிவன் தரிசனம் காணலாம்.
ஓம் நமசிவாய என்று உச்சரிக்க - காலனை வெல்லலாம்.
லங் ஸ்ரீறியுங் நமசிவாய என்று உச்சரிக்க - தானிய விளைச்சல் மேம்படும்.
ஓம் நமசிவய என்று உச்சரிக்க - வாணிபங்கள் மேன்மையுறும்
ஓம் அங்உங்சிவயநம என்று உச்சரிக்க - வாழ்வு உயரும், வளம் பெருகும்.
ஓம் ஸ்ரீறியும் சிவயநம என்று உச்சரிக்க - அரச போகம் பெறலாம்.
ஓம் நமசிவய என்று உச்சரிக்க - சிரரோகம் நீங்கும்.
ஓங் அங்சிவாய நம என்று உச்சரிக்க - அக்னி குளிர்ச்சியைத் தரும்.
ஒரு லட்சம் தடவை சொன்னால் தான் பலன்கள் அபரிவிதமாக இருப்பதை நீங்கள் உனரலாம்.