Friday 25 February 2022

எளிய சித்த மருத்துவ குறிப்புகள்

கண் குறைபாடுகள் அனைத்திற்கும் தீர்வு தரும் நேத்திர பூண்டு தைலம் செய்முறை விளக்கம்:

1.சுத்தமான நல்லெண்ணெய் – 100 மி
2.நேத்திரப்பூண்டு – 50 கிராம்
3.தும்பை -10 கிராம்
4.கரிசாலை -10 கிராம்
5.பொன்னாங்காணி -10 கிராம்
6.கற்றாழை – 10 கிராம்

செய்முறை விளக்கம்:

✍️ வரிசை எண் 3 முதல் 6 வரை உள்ள இலைகளை சுத்தம் செய்து அரைத்து பிழிந்து சாறு எடுத்து கொள்ளுங்கள்

✍️ பிறகு நல்லெண்ணெய் ஒரு வாணலியில் ஊற்றி கொதிக்க வைத்து அதில் நேத்திரப்பூண்டு அரைத்து அதில் போட்டு நன்கு கொதிக்க விடவும் பிறகு 50-மி யாக சுண்டியதும் வடிகட்டி கொள்ளவும்

✍️ வடிகட்டிய எண்ணையில் ஏற்கவனே தயார் செய்து வைத்துள்ள சாறு கலந்து கொள்ளவும் 

✍️ கலந்து வைத்து கொண்டு இந்த எண்ணெயை மதியசூரிய வெயிலில் படும்படி ஒரு 3 மணிநேரம் வைக்கவும்

பிறகு,இந்த எண்ணை பயன்படுத்த தயார்

பயன்படுத்தும் முறை:

✍️காலை மற்றும் இரவு ஓய்வு நேரங்களில் இரு கண்களுக்கும் 2 சொட்டு அளவு விட்டு கண்களை மூடி மூடி திறக்கவும் பிறகு 30 நிமிடம் ஓய்வில் இருக்கவும்,பிறகு தேவைப்பட்டால் முகம் கழுவி கொள்ளலாம்

✍️இதை 15 முதல் 60 வயதினர் மட்டுமே பயன்படுத்த வேண்டும், குழந்தைகள் எடுக்க கூடாது

✍️அதிகப்பட்சம் 21 நாட்கள் பயன்படுத்தினால் போதும்

மருத்துவ பயன்கள் என்ன???

1.கண்களை சுத்தம் செய்யும்
2.புரை ஆரம்ப நிலையில் தடுக்கும்
3.கண் எரிச்சல் கண் அரிப்பு உடனடியாக தீரும்
4.கண் வலி நீங்கும்
5.தூரபார்வை மற்றும் கிட்டபார்வை தெளிவு பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

**********************

தீராத ஆஸ்துமா இயற்கை முறையில் குணமாக இயற்கை வைத்தியம் செய்முறை:

தேவையான பொருட்கள்…

1.துளசிச் சாறு – 20 மில்லி
2.ஆடாதொடைச் சாறு – 10 மில்லி
3.கண்டங்கத்தரி சாறு – 10 மில்லி
4.கற்பூரவல்லிச் சாறு – 10 மில்லி
5.புதினாச்சாறு – 20 மில்லி
6.சுக்கு – 5 கிராம்
7.ஓமம் – 5 கிராம்
8.அதிமதுரம் – 20 கிராம்
9.சித்தரத்தை – 20 கிராம்
10.மிளகு – 5 கிராம்
11.திப்பிலி – 5 கிராம்
12.பச்சை கற்பூரம் – 5 கிராம்
13.தேன் – 200 கிராம்

செய்முறை:

இதில் 6 முதல் 11 வரை உள்ள சரக்குகளை தூள் செய்து, 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து நான்கில் ஒரு பங்காய் சுண்டக்காய்ச்சவும். பின்னர் அதை வடிகட்டிவிடவும்.

1 முதல் 5 வரை உள்ள சாறுகளை ஒன்றாகக் கலந்து நன்கு கொதிக்க வைக்கவும். பாதியாக சுண்டிய பின் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள கசாயத்துடன் கலந்து வைக்கவும்.

பின்னர் தேனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சிறு தீயாய் எரித்து கொதிக்க விடவும். தேனில் நுரை நீக்கி, ஏற்கனவே தயாரித்துள்ள கசாயத்தை தேனுடன் கலந்து சிறு தீயாய் எரிக்கவும். நல்ல பதத்தில் இறக்கிவிடவும்.

சூடு ஆறிய பின்பு, பச்சைக் கற்பூரத்தை தூள் செய்து மருந்துடன் கலந்துவிடவும். 

எடுத்துக்கொள்ளும் முறை:

5 மி மூன்று வேலையும் உணவுக்கு பின்பு எடுக்கவும். சுடுநீர் மட்டுமே குடிக்க வேண்டும்...


🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽


கிராமத்து கை வைத்திய மருந்து குறிப்புகள்

கிராமங்களில் கையாண்டு மருத்துவமனை பக்கமே போகாமல் இருந்த காலக் கட்டத்தில் அவர்களை அவ்வாறு பாதுகாத்த கை பக்குவம்.

முடிந்தால் நீங்களும் கையாண்டு பலன் பெறலாம்.இந்த வீட்டு அஞ்சறை பெட்டி மருத்துவம் உங்களுக்கு  பின் விளைவுகள் இல்லா  பலன்தரும்.

நீங்கள் இதே வியாதிக்கு சிறப்பு மருத்துவரிடம் சென்றால் பின்விளைவு உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் கல்லா பெட்டிக்கும்தான் பாதிப்பை தந்து விடும்.

• நெல்லி வற்றல்- சந்தனத்தூள்- கொத்தமல்லி  மூன்றையும் தண்ணீரில் ஊற வைத்தபின் வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் தலை சுற்றல், கிறுகிறுப்பு முதலியன குறையும்.

• வெல்லத்தை கெட்டியாகப் பாகு வைத்து அதில் மிளகை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டு உருட்டி வைத்தால் இருமல் வரும்போது வாயில் அடக்கிக் கொள்ள இருமல் நிற்கும்.

• மண் சட்டியில் உப்பை வறுத்துத் துணியில் கட்டி உப்பு ஒத்தடம் இரண்டு மூன்று வேளை கொடுத்தால் கழுத்து வலி நீங்கிவிடும்.

• வயலட் நிறமுள்ள பிஞ்சு கத்தரிக்காய், கருஞ்சிவப்பு நிறமுள்ள பசலைக் கீரை, சிவப்பு பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றில் அயோடின் சத்து அதிகம் உள்ளது. இவற்றை அதிகமாகக் குழையவிடாமல் சாப்பிட்டு வர சிறுநீர் போகும்போது ஏற்படும் எரிச்சல் நீங்கிவிடும்.

• நூல்கோலைத் துருவி ஊறவைத்து பயத்தம் பருப்பு கலந்து உப்பு பிசறி எலுமிச்சைச்சாறு பிழிந்து சாப்பிட்டால் சர்க்கரை நோய்க்கு அருமருந்தாகும்.

• தேங்காய் எண்ணெயை மிதமான தீயில் வைத்துக் காய்ந்ததும் வேப்பிலையைப் போட்டு பொரித்து எடுத்துவிடவும். கொத்தாகக்கூடப் போடலாம். பிறகு இறக்கி வைத்துக் கொஞ்சம் வெந்தயம் போட்டு மூடிவைக்கவும். இந்த எண்ணெய்யைத் தலையில் தடவிவந்தால் வெயிலால் வரும் உடல் சூடு குறையும். வெப்ப நோய்கள் தாக்காது.

• வயிற்றில் பிரச்னை ஏற்பட்டால் கொஞ்சம் சீரகத்தை எடுத்து கொதிநீரில் போட்டு கஷாயமாக இரண்டு வேளை குடித்து வர நிவாரணம் கிடைக்கும்.
மாதுளைச் சாறு தினமும் குடித்து வந்தால் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

• பொடி செய்த ஓமத்தை பாலில் கலந்து வடிகட்டி படுக்கும் முன் குழந்தைகளுக்குக் கொடுத்தால் சளியை தூர விரட்டும்.

• திராட்சையை பன்னீரில் ஊறவைத்துச் சாப்பிட்டால் இதயம் பலம் பெறும். தொடர்ந்து திராட்சை உண்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி நிச்சயம்.

• வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வைத்து மோரில் கரைத்து உப்புப் போட்டுச் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும்; வயிற்று வலியும் இருக்காது.

• குழந்தைகள் ஞாபகசக்தியுடன் இருக்க வேண்டுமானால் தினமும் காலை உணவுக்குப் பின் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க வையுங்கள்.

• சின்ன வெங்காயத்தை சிறிது எண்ணெய்விட்டு வதக்கவும். வெறும் வயிற்றில் தினமும் ஐந்தாறு என்ற கணக்கில் இரண்டு வாரங்கள் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும். உடலும் குளிர்ச்சியடையும்.

🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽

ஆண்மை அதிகரிக்கவும் நீண்ட நேர உடலுறவுக்கு உதவும் ஜாதிகாய்ப்பத்திரி சூரணம்

தேவையான மூலப்பொருட்கள்:

1.நாட்டு ஜாதிக்காய் - 200g
2.ஜாதிபத்திரி - 75g
3.ஆட்டுப்பால் - 100ml
4.நெய் - 50ml

செய்முறை:

ஜாதிக்காய் 2 ஆக உடைத்து அதை இரவு முழுவதும் ஆட்டுபாலில் இரவு முழுவதும் ஊற வைக்கவும்

நன்கு ஊறிய ஜாதிக்காயை வெயிலில் காயவைத்து நன்கு காய்ந்த பிறகு

ஒரு வாணலியில் நெய் ஊற்றி காய்ந்த ஜாதிக்காய் போட்டு நன்கு வறுக்கவும்

பிறகு வறுத்த ஜாதிக்காய் மற்றும் ஜாதிபத்திரி ஆகியவற்றை சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளவும்

சாப்பிடும் முறை:

100மி சூடான பாலில் 3 கிராம் அளவு இந்த பொடியை கலந்து உடலுறவுக்கு 2 மணி நேரம் முன்னதாக குடிக்கவும்

இதனை தினமும் குடிக்கலாம் அனைவருக்கும் பலன் கொடுக்கும் பக்கவிளைவுகள் வர வாய்ப்பில்லை

பயன்கள்:

ஆண்மை அதிகரிக்கும்,விந்து முந்துதல் தடுத்து அதிக நேரம் உடலுறவு வைக்க உதவும்

இதனை தயாரிக்க ரூ.400 முதல் 750 வரை செலவாகும்... முடிந்த வரை முதல் தரமான பழைய நாட்டு ஜாதிகாய்கள் வாங்கி கொள்ளுங்கள்.

🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽

கருத்தரிப்பை தடுத்து பாதுகாப்பான முறையில் உடலுறவு கொள்ள உதவும் பூவரசம் பட்டையை பயன்படுத்துவது எப்படி…???
************
குழந்தைக்காக தவமாய் தவமிருக்கும் தம்பதியினருக்கு மத்தியில் கருத்தரிப்பை தடுக்க நினைக்கும் தம்பதியினரும் இருக்க தான் செய்கிறார்கள். கருத்தரிப்பை தவிர்க்க கருத்தடை சாதனங்கள், பாதுகாப்பான வழியில் உடலுறவு, ஆணுறை, கருத்தடை மாத்திரைகள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.

இன்னும் சிலர் தங்களுக்கு மாதவிடாய் நாட்கள் முடிவடைந்து கருமுட்டை வெளிவரும் நாட்களை கணக்கு செய்து அந்த நாட்களில் மட்டும் உடலுறவு வைத்து கொள்வதை தவிர்த்து விடுகின்றனர். குறைந்த எண்ணிக்கையிலான மக்களே கருத்தரிப்பை தடுக்க குடும்ப கட்டுப்பாடு என்ற ஆப்ஷனிற்கு செல்கின்றனர். 

ஆனால் உண்மையில் இது போன்ற கருத்தரிப்பை தள்ளிப்போட நினைக்கும் தம்பதி மற்றும் கருத்தரிப்பை தடுக்க நினைப்பவர்கள் மருத்துவரை ஆலோசித்து அதற்கேற்ப செயல்படுவது நல்லது. இதைத்தவிர கருத்தரிப்பை இயற்கையாக தடுக்கக்கூடிய சில இயற்கை வைத்தியங்களும் உள்ளன. அதில் ஒன்று தான் பூவரசம் பட்டை. கருத்தரிப்பை தவிர்க்க நினைப்பவர்கள் இந்த பூவரசம் பட்டையை பயன்படுத்தலாம். 

பூவரசம் இலைகள், பூக்கள், காய், விதைகள் மற்றும் வேர் ஆகிய அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை. இப்போது இந்த மரத்தின் பட்டையை வைத்து கருத்தரிப்பை எப்படி தவிர்க்கலாம் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். பூவரசம் மரத்தின் அடிப்பகுதியில் கரடுமுரடாக இருக்கும் பட்டையில் சிறிதளவு எடுத்து கொள்ளுங்கள்.

இந்த பட்டையில் உள்ள சொர சொரப்பை நீக்கி விட வேண்டும். பிறகு அதிலுள்ள பட்டையை மட்டும் தனியாக எடுத்து அதனை பொடியாக நறுக்கி கொள்ளவும். நறுக்கிய பட்டையை வெயிலில் காய வையுங்கள். இதனை நம் கைகளால் உடைக்கும் போது பட்டென்று உடைய வேண்டும். அந்த அளவிற்கு அவற்றை காய வைத்து கொள்ளுங்கள். இதனை வைத்து நமக்கு தேவையான மருந்தை எப்படி தயாரிப்பது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பூவரசம் பட்டை- 50 கிராம்

சீமைக்காசு கட்டி- 50 கிராம்

இந்துப்பு- 50 கிராம்

இந்த பொருட்களை எல்லாம் எங்கு வாங்குவது என குழப்பம் அடைய வேண்டாம். இவை அனைத்துமே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இவை மூன்றையும் பொடியாக அரைத்து ஒரு சல்லடை கொண்டு நைசாக சலித்து கொள்ளவும். இந்த பொடியில் 1/2 தேக்கரண்டி அளவு எடுத்து அதனை 1/4 டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து மாதவிடாய் நாளில் இருந்து காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். 

இதனை சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு வேறு எதையும் சாப்பிட கூடாது. இதனை தொடர்ந்து ஏழு நாட்கள் சாப்பிட்டு வாருங்கள். இந்த மருந்தை எடுத்து கொள்ளும் போது இதன் தன்மை குறையாமல் இருக்க மென்மையான உணவுகளான மோர், தயிர், பருப்பு, மிளகு போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். 

ஏழு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்ட பிறகு எட்டாவது நாள் தலைக்கு எண்ணெய் வைத்து குளித்து விட்டு உங்களுக்கு விருப்பமான உணவுகளை உண்ண ஆரம்பியுங்கள். இதனை ஒரு முறை சரியான பத்திய உணவோடு எடுத்து வரும்போது ஆறு மாதங்களுக்கு கருத்தரிக்காது. ஆறு மாத காலம் முடிந்த பின் மீண்டும் ஒரு முறை ஏழு நாட்களுக்கு எடுக்கலாம். இதனால் எந்த ஒரு பக்த விளைவுகளும் ஏற்படாது. ஆனால் எல்லா மாதமும் இதனை சாப்பிட கூடாது. உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் மருத்துவரை ஆலோசித்த பிறகு இதனை எடுக்கலாம்.

🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽

தோல் சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் ஒரே எண்ணெய் செய்முறை விளக்கம்

✍️தேவையான மூலப்பொருட்கள்:

1.மூக்கிரட்டை வேர்கிழங்கு - 25g
2.புண்ணை விதைகள் - 25g
3.ஆவாரம்பூ - 25g
5.மருதாணி - 50g
6.நல்லெண்ணெய் - 200ml

✍️செய்முறை விளக்கம்:

மூக்கிரட்டை,புண்ணை விதைகள்,ஆவாரம் பூ,மருதாணி அனைத்தையும் வெயிலில் நன்கு காய வைக்கவும் 

காயவைத்த பொருட்களை அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்து வைத்து கொள்ளவும்

பிறகு நல்லெண்ணெய் கொதிக்க வைத்து இந்த பொடியை அதில் கலந்து நன்கு சுண்ட வைக்கவும்

200மி எண்ணெய் 100மி ஆகும் வரை சுண்ட வைக்கலாம் ஆறிய பிறகு வடிகட்டி நேரடியாக பயன்படுத்தலாம்

✍️பயன்படுத்தும் முறை:

பாதிப்பு உள்ள இடங்களில் தடவி உளரவைக்கவும்,அல்லது வெயிலில் காயவைக்கவும்

✍️பயன்கள்:

சொறி சிரங்கு,தோல் அரிப்பு, தீராத புண்,தோல் எரிச்சல்,படர்தாமரை, சொரியாசில் ஆகியவைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.


🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽

ஏலாதி சூரணம் செய்முறை விளக்கம்

தேவையான பொருட்கள் 

1.ஏலக்காய் - 25 கிராம்
2.சுக்கு - 50 கிராம்
3.தாளிசபத்திரி - 80 கிராம்
4.சிருநாகப்பூ - 40 கிராம்
5.மிளகு - 20 கிராம்
6.இலவங்கம் - 10 கிராம்  
7.கற்கண்டு - 100 கிராம்

செய்முறை 

அனைத்தையும் முறைப்படி சுத்தம் செய்து அரைத்து ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும். கற்கண்டை பொடித்து ஒன்று சேர்த்து சலித்து அனைத்தையும் நன்றாக கலந்து வைக்கவும்.

அளவு : 

1 கிராம் முதல் 2 கிராம் வரை காலை இரவு உணவுக்கு பின் எடுக்கவும்

ஏலாதி சூரணத்தின் நன்மைகள் :

உடலில் வியாதி எதிர்ப்பு திறனை அதிகரித்து, பசியின்மை, உணவு செரிமான பாதிப்பினால் உண்டாகும் வாந்தியைப் போக்கி, செரிமானத்தைத் தூண்டும் தன்மை மிக்கது. காமாலை எனும் உடல் சூட்டினால் உண்டாகக் கூடிய வியாதிகளைத் தீர்க்கும் ஆற்றல்மிக்கது.

1.கர்ப்பிணிகளின் செரிமானத்திற்கு:

கருவுற்ற தாய்மார்களுக்கு உணவு செரிமானத்தை அளித்து, உடலுக்குத் தேவையான சத்துக்களை அளிக்கும் ஏலாதி சூரணம், உடலில் ஏற்படும் கிருமித் தொற்றைப் போக்கக்கூடியது.

2.சத்துக்கள் கிடைக்க :

கருவுற்ற மூன்றாம் மாதத்தில் இருந்து ஏலாதியை தேனில் கலந்து, பெண்கள் உண்டுவர, பசியின்மை விலகி, உணவில் நாட்டம் அதிகரித்து, உடலுக்குத் தேவையான சத்துகள் கிட்டும். பசியைத்தூண்டி, உடல்நலம் காக்கும் ஏலாதி சூரணம், இதய வியாதிகளைப் போக்குவதில் அற்புத செயல்திறன் மிக்கது.

3.இதய பாதிப்புகள் போக்கும் :

சிறுங்கி பற்பம் எனும் சித்த மருந்துடன் ஏலாதி சூரணம் சேர்த்து சாப்பிட, தீவிர நிலை இதய வியாதிகள் பாதிப்புகள் நீங்கி, நலமுடன் வாழ முடியும்.

4.இதய அடைப்பு குணமாக :

இந்த மருந்தை முறையாக சாப்பிட, தற்காலத்தில் இதய இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை சரிசெய்ய செய்யப்படும் ஆஞ்சியோ சிகிச்சையைக்கூட, தவிர்க்க முடியும் என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

5.மேனி பளபளப்புக்கு :

உடல் எடையைக் குறைக்கவும், உடல் நிறத்தை மேம்படுத்தவும், ஏலாதி சூரணத்தை குளிக்கும்போது, உடலில் நன்கு தடவிக்கொண்டு, குளித்துவருவர். ஏலாதி பொடியை, நீரில் கலந்து, குளிக்கும் முன் உடலில், முகத்தில் தடவி, சற்றுநேரம் கழித்து, குளித்துவர, உடல் புத்துணர்வாகும், சருமம் பொலிவாகும். உடல் எடையும் குறையும்.

நன்றி ; ரிஷி நேத்ராலயா

Wednesday 16 February 2022

பல்சடில்லா palsatilla ஹோமியோபதி மருந்து குணம் பயன்


பல்சடில்லா.
Pulsatilla.

அடிக்கடி மாறும் குறிகளுள்ள மருந்து
வலிகள் ஒருமூட்டிலிருந்து
வேறு மூட்டுக்குச் சென்று கொண்டே இருக்கும்.இரத்த பெருக்கு எடுப்பதும் நிற்பதுமாக இருக்கும்.மலம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவிதமாக இருக்கும்.சுரத்தில் குளிர் ஒவ்வொரு தடவை ஒவ்வொரு விதமாக
இருக்கும்.குறிகள் முன்பின்
தொடர்பற்றுக்  குழம்பியிருத்தல் .வாயில் கெட்ட ருசி.
தாகமே இருப்பதில்லை.ஜீரணம் அடிக்கடி கெட்டுவிடும்.
பல வியாதிகளில் அடிக்கடி
பயன்படும் மருந்து.

பெரும்பாலும் பெண்களுக்கே ஏற்றது.பருவம் அடையும் காலப் பெண்களுக்கு ஏற்படும் உபாதைகள்.நோயாளியின் இரத்தம் சூடாக இருக்கும்.தாகம் சிறிதும்
இல்லாமையும்,வாயில் கசப்பு சுவையும் பல்சடில்லாவின் முத்திரைக் குறிகள்.
வாய் வறண்டு இருக்கும்.
ஆனால் தாகம் சிறிதும் இருக்காது.குளிரும் உணர்ச்சி
இருக்கும்.

உடலில் கனத்த உணர்வு.மரத்துப் போதல்.அஜீரணம்.
கொழுப்புச் சத்துள்ள உணவு மற்றும் எண்ணெய் பலகாரங்களினால் வயிற்றுஉபாதைகள் மிக அதிகமடையும் .வயிற்றில் கல் போன்ற கடினத்தன்மை
ஏற்படுதல்.வாயின் ருசி அறியும் தன்மை குறைந்து
வருதல்.ருசியே தெரியாத
நிலை.வாயின் உமிழ்நீர் இனிப்பாக இருத்தல்.
                      

குளிராலும், மேகவெட்டை அமுக்கப்பட்டதாலும் வரும் விரைவேக்காடு. வயிற்றிலிருந்து வலி விரைகளுக்கு தாவுதல்.மேகவெட்டையில் கெட்டியான, பசு மஞ்சள் நிற போக்கு வெளியேறுதல்.சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறுதல். சிறுநீர்வெளியேறும் சமயம் தடைபட்டு
வரும். இத்துடன் சிறுநீர் புற
வழியில் சுருக்கும் மற்றும்
நெருக்கும் உணர்வு.சுக்கில
சுரப்பியில் வரும் திடீர் வேக்காடு. சிறுநீர் கழிக்கும் சமயம் முக்கல். முனகல். வலியுடன் முதுகுப் பக்கம் படுத்தால் வேதனை. தாடை அம்மைநோய் அமுங்கி,
நோய் இடம் மாறி விரைகளைத் தாக்கும். இம்மாதிரிதாக்குதலால் மலட்டுத் தன்மை ஏற்பட வாய்ப்புகள்
உண்டு.விரையும்,விந்து நாளமும் வீங்கி வலித்தல்.விரை வேக்காட்டுடன் வலது விரைப்பை வீக்கம்.சுக்கில
சுரப்பி பெருத்து விடுதல்.
குரல் இல்லாமை; நிலையற்று வந்து வந்து போகும் மார்பில் அமுக்கும் உணர்வும் புண் போன்ற வலியும்.வரண்ட இருமல்.இருமினால்
வயிற்றில் புண்போன்ற வலி .இருமலுடன் சிறுநீர்
வெளிப்படுதல். சளி காரமற்ற தன்மையாய், கெட்டியாக
பச்சை நிறமாய், கசப்புச் சுவையுடன் வெளிப்படும்.பயத்துடன் குட்டையான சுவாசம்.இடது பக்கம் படுப்பதால்
பட படப்பு.இரவிலும் மாலையிலும் வறண்ட இருமல்;படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தால் இருமல் சமனம்.
காலையில் தளர்ந்த இருமல்.ஆரம்ப கால காச நோய் மார்புக் கிளைக் குழல் வேக்காடு.சூடான அறையில் சுவாசிக்க சிரமப்படுதல்.
                         ‌‌
       
வறண்ட வாயுடன் தாகம் சிறிதும் இல்லாமை.உதட்டை அடிக்கடி நாக்கால் நக்கி ஈரமாக்கி கொள்ளுதல்.நீர் அருந்துவதில்லை. கீழ் உதட்டின் நடுவில் வெடிப்பு.மாலையிலிருந்து நள்ளிரவு வரை பல்வலி. பல்வலி குளிர்ந்த நீரை வாயில் வைத்திருந்தால் குறையும். சூடான உணவாலும் அறையின் சூட்டினாலும் பல் வலி
அதிகமாகும். துர் நாற்றம்.
வாயில் கசப்பு சுவை.எந்த
உணவுமே வாய்க்கு சுவையாய் தெரியாது.இனிப்பான உமிழ்நீர் ஊறுதல்.சுவையின் மாறுபாடுகள்.கசப்பு,
உப்பு சுவை,பித்த சுவை,துர்நாற்ற சுவை ஆகியவை
போன்று தென்படுதல்.நாக்கில் கெட்டியான வெள்ளை
நிற அல்லது மஞ்சள் நிறப்
படிவங்கள் தெரிதல். அனைத்து உபாதைகளுடன் தாகமின்மை. காய்ச்சலுடன் தாகமின்மை.

தொண்டையில் உணவு தடைபட்டு தேங்குதல்.உண்ட உணவின் சுவை அதிகநேரம் தொடர்ந்து காணப்படுதல். ஏப்பம்.உணவில் வெறுப்புடன் குமட்டல்.எதிர்க்கழித்தல்.நெஞ்சுக் கரிப்புடன் புளித்த நீர் மேலேறி வருதல்
தாகம் சிறிதுமின்மை.சாப்பிட்ட உணவு வெகு நேரத்திற்குப் பிறகு வாந்தியாதல்
சாப்பிட்ட பின்பு வயிற்றில்
இறுக்கமான உணர்வுடன்
வயிற்றில் வலி. வயிற்றில்
கல் போன்ற கனத்த அமுக்கும் உணர்வு.வயிறு வலியுடன் உப்பி விடும். வயிற்றில் சப்தத்துடன் அலசல். குறிப்பாக மாலையில் திருகு வலி. அஜீரணத்தால் வரும் தலை வலி. இரைப்பை குழியில் துடிப்புக்கள். இரைப்பை இயக்கம் பாதித்து கனத்த தன்மையாக உணர்தல்.


இரண்டு முறை கழிக்கும் மலம் வெவ்வேறு தன்மையானதாய் இருக்கும் ,பழங்கள் உண்ட
பின்பு மலம் கழித்தல். இரத்தப் போக்கற்ற மூலம்.அரிப்புடன் மற்றும் தைக்கும் வலி. தினசரி இரண்டு அல்லது மூன்று முறை இயல்பாகவே சாதாரணமான மலம் கழித்தல். பசுமஞ்சள் நிறமான மெலிந்த மாறும்
தன்மையுடன் கூடிய பித்தம்
போன்ற மலம். வலியுடன்
 துருத்தியுள்ள மூலம். துர்நாற்றமான, அரிக்கும் தன்மையான வெண்மை
மற்றும் இரத்தமான சளிச்
சவ்வுகள் கலந்த மலம் வெளிப்படும்.

சிறுநீர் கழித்த பின் சிறுநீர்
பையில் விட்டு விட்டு வலி
தாக்கும். இருமும் சமயம் இச்சையின்றி தானாகவே சிறுநீர் வெளிப்படுதல். தவிர்க்கவே முடியாத மாதிரி
நடக்கும் சமயமும் இவ்வாறு
இச்சையின்றி சிறுநீர் வெளிப்படும்.வெட்டும் வலியுடன் அடிக்கடி சிறுநீர் கழிக்க
பலன் அளிக்காத தூண்டுதல். படுத்திருக்கும் சமயம்
சிறுநீர் கழிக்க அதிக தூண்டல். சிறுநீர் புறவழியில் சிறுநீர் கழிக்கும் சமயமும் பிறகும் எரிச்சல்.

மாதவிலக்கு தாமதப்படுதல்
குறைவாகப் போதல்.அமுக்கப்பட்ட தடைபட்ட மாதவிடாய்.
கால்களை ஈரத்தில்
நனைப்பதால் மாதலக்கு தடைபடுதல்.மாதவிலக்கு கறுப்பு கட்டிகளாக, மாறும் தன்மைகளுடனும் விட்டு விட்டு வலியுடன் வெளியேறுதல்; போக்கின் சமயம் உடலில் குளிர்ச்சி.குமட்டல்,கீழ்
நோக்கிய அழுத்தம். எரிச்சலான காரத்தன்மையான பாலாடை போன்று வெளிப்படும் வெள்ளைப்பாடு. பல
வீனத்துடன் முதுகுவலி. மாத விலக்கு சமயத்திலும் பிறகும் வயிற்றுப் போக்கு. பெண்களின் பருவமடையும்
கால இரத்த சோகை. அமுக்கப் பட்ட மாதவிலக்கால் வரும் தலைவலி. தாடையம்மை நோய் அமுங்கி இடம்மாறி முலைகளைத் தாக்குதல்.பெண்கள் பருவமடைய
வேண்டிய வயதில் வரும் முதல் மாதவிலக்கு தாமதப்படுதல். முலைப்பால் அமுக்கப்பட்டு குறைவாக உள்ள நிலை.கருப்பை கீழ் இறக்கம். பகலில் மட்டும் வெளிப்படும் மாதவிலக்கு. முறையற்ற, மந்தமான, குறைபாடான பிரசவ வலி.
  
     
காது வேக்காடு.வேக்காடு நீடித்து காதிலிருந்து கழிவுகள் வெளியேறும். காதிலிருந்து வலியுடன்
சீழ் வெளியேருதல்; கெட்டியாக, காரணமில்லாமல்,துர்நாற்றமாக, பசு மஞ்சள் நிறமாயிருக்கும். இரவில் காது
வலி.பல்வலியும் காது வலியும் சேர்ந்தே இருக்கும்.காது அடைத்தது போன்று கேட்கும் ஆற்றல் குறையும்.செவிடு வெளிக்காது வீங்கி சிவந்துவிடும். இரைச்சலுடன் பலவித ஓசைகள் கேட்கும்.

கண்ணில் அரிப்புடன் கண்
ணீர் வடிதல். கண் மேல் இமையில்வரும் கட்டிகள்.
இமையில் வேக்காடு.காலையில் இமைகள் வீங்கி
காரமற்ற மஞ்சள் நிற கழிவுடனும்,அரிப்புடனும்
உறுத்தலுடன் வேக்காடு.
கண்புரை,கண்இமை வேக்காடடைந்து ஒட்டிக்கொள்ளும்.பிரசவ சமயம்
நோய்த் தொற்றால் குழந்தைகளுக்கு ஏற்படும் கண்வேக்காடு.

முகம் வெளுத்து தலையில்
நெற்றியில் வலி. கீழ் உதட்டின் மையத்தில் வீக்கத்துடன் வெடிப்பு .மாலையிலிருந்து இரவு வரை விட்டு விட்டு தாக்கும் முக நரம்புவலி. மிக அதிகமாக கண்ணீர் பெருக்குடன் வலதுபக்க நரம்பு வலி. தாடையம்மை . உமிழ்நீர் சுரப்பி வேக்காடு.

சளிவேக்காட்டுடன் வாசனை அறியும் சக்தியையும், ருசியையும் இழந்துவிடும். மூக்கடைப்பு. சளி முற்றிய நிலை.மூக்கு இதழில் வறட்சி. பச்சையும் மஞ்சளுமான
சளி வெளியேறும்.சளி தும்மலில் முடியும்.மூக்கு துவாரங்களில் புண் போன்ற வலி.

        
இடது பக்கம் படுத்தால் அதிக வேதனை.அதிக உணவு
உண்டால் இதயப் பட படப்பு.
மாலையில் இதயத்தில் அமுக்குவது போன்ற மற்றும் நிறைந்த உணர்வுடன்
கவலை.இதயத்தின் வலது
பக்க உபாதைகள்.

புத்துணர்ச்சி அளிக்காத தூக்கம்.மாலையில் தூங்க
தவிர்க்க இயலாத உந்தலுடன் தூங்குதல்.இரவின் முன் பகுதியில் தூங்க முடியாது.காலையில் நேரம் கழித்து தூங்குதல்.பகலில்
தூக்கக் கலக்கத்துடனேயே
இருத்தல்.

தோள்பட்டைகளுக்கு இடை
யில் பாயும் வலி.பிடரி மற்றும் முதுகிலும் பரவும் வலி.

கைகால்கள் குளிர்ச்சி.நிலை கொள்ளாமையுடன் கீழ் கால் மற்றும் தொடை பகுதியில் இழுக்கும் வலி.
கை காலின் வலிகள் இடம்
மாறும்.முழங்கையைச் சுற்றிலும் மரத்துப் போய் விடுதல்.இடுப்பு மூட்டு வலி. முழங்கால் வீக்கத்துடன் வலி.குதிக்கால் வலி. பாதிப்படைந்த கை மற்றும் கால்களைத் தொங்கப் போடுவதால் அதிக வேதனை.கை
கால்களின் அசுத்த இரத்தக்
குழாய்களில் வீக்கம்.பாதம்
சிவந்து வேக்காட்டுடன் வீங்கிக் கொள்ளுதல்.கால்களில் கணத்த உணர்வும் களைப்பும்.
                             

தோலில் எரிச்சலுடன் அரிப்பு.
தட்டம்மை.மணல்வாரி அம்மை.அசுத்த இரத்தக் குழாய்களில் வீக்கம். பருவமடையும் காலப் பெண்களின் முகப் பரு.கடுமையான அரிப்பு.சூடான அறையில் உள்ள போது உடலில் குளிர்ச்சி தாக்குதல்.

மாலையிலும் இரவிலும் தாகமின்மையுடன் பொறுக்க முடியாத வறண்ட எரிச்சலான சூடு தாக்குதல். இத்துடன் கைகளில் எரிச்சல் குறியுடன் நோயாளி குளிர்ச்சியான இடங்களை விரும்புவார்.குளிரும் உணர்வு; இருப்பினும் சூட்டில் வெறுப்பு.
சூடான அறையிலும் கூட குளிரும் உணர்வும்,தாகமின்மையும். மாலை 4 மணிக்கு குளிர் தாக்குதல்.ஒரு பக்கமாய் வியர்த்தல்.வெளிச்சூட்டைத் தாங்கமுடியாது. காய்ச்சலில் முணு முணுத்தல்,உளறுதல்.

கருவுற்ற பெண்களுக்கு பல்சடில்லா கொடுக்கக் கூடாது.பிரசவ சமயத்தில்
உயர்ந்த வீரியத்தில் கொடுக்க சுகப்பிரசவம் ஏற்படும்
குழந்தை நிலை மாறிப்
போய் குறுக்கே திரும்பிக் கொண்டு ஆபத்தான நிலை
யில் பல்சடில்லா 1M இரண்டு அல்லது மூன்று முறை அடிக்கடி தர குழந்தை சரியான நிலைக்கு மாறி,தலை வெளியே வந்து, சுகப்பிரசவம் ஏற்படும். 



அம்மை நோய்க்கு பல்சடில்லாவை தவிர சிறந்த மருந்து வேறு எதுவுமில்லை. அம்மைநோயின் பின் விளைவுகளையும் சரி செய்யும். மேகவெட்டை எனும் கொனேரியா நோய் அமுக்கப்பட்டதால் வரும் பின் விளைவுகளுக்கும் நன்கு பயன்படும்.
                              

             

நன்றி ; ராமலிங்கம் ஐயா.                      

Sunday 13 February 2022

சித்த மருத்துவ மூலிகைகள் மற்றும் அதன் சரக்குகள்.

Part 1

சித்த மருத்துவம் ஒரு மூலிகை மருத்துவம்(Herbal Medicine) என்ற தவறான கருத்து மக்களிடம் உள்ளது.
சில ஊடகங்களும் கூட சித்த மருத்துவம் என்றாலே ஏதோ சில மூலிகைகளை அரைத்து சாப்பிடுகின்ற மருத்துவம் என ஒரு உருவகத்தை உண்டாக்குகின்றன. இது முற்றிலும் தவறு.
சித்த மருந்துகளில் மூலிகைகள் மட்டுமல்லாது, உலோகங்கள்(Metals), உபரசங்கள், தாதுஉப்புக்கள், நவமணிகள்(Nine gems), பஞ்சசூதப் பாசாணங்கள், மற்றும் உயிரினங்களிலிருந்து எடுக்கப்படும் மருந்துச் சரக்குகள் போன்றவைகள் பயன்படுத்தப்படுகின்றன.
உலோகங்கள் என எடுத்துக் கொண்டால் இரும்பு, காரீயம், வெள்ளி, தங்கம் என 11 வகையான உலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இன்னும் சொல்லப்போனால் இன்று Maggi-யில் அதிக அளவில் இருப்பதாகக்கூறி தடைசெய்யப்பட்டுள்ள ‘காரீயம்’(Lead) கூட ஒரு மருந்துச் சரக்காக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
பாசாணங்கள் என எடுத்துக்கொண்டால் (Arsenic Compound), கந்தகம்(Sulphur), வெள்ளைப் பாசாணம்(White Arsenic), மிர்தார் சிங்கி, வீரம், மயில் துத்தம், அப்பிரகம், துருசு போன்ற 64 வகையான வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
உப்புகள் என எடுத்துக்கொண்டால் இந்துப்பு(Rock Salt), கல்லுப்பு(Asphalt), சீனாக்காரம்(Aluminum potassium sulphate), சூடன்(camphor), நவச்சாரம்(Ammonia Chloride), பச்சைக் கற்பூரம், வெங்காரம் (Borax), வெடியுப்பு(Potassium Nitrate) போன்ற 25 விதமான வேதிப்பொருட்கள் சித்த மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் 120 வகையான உபரசங்கள் (Secondary Minarals) சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
உதாரணமாக சொல்லவேண்டுமானால் பூநாகம், வெள்ளைக்கல், நிமிளை, கல்மதம், அன்னபேதி போன்றவற்றைக் கூறலாம்.

Part 2

மேலும் மிகவும் சக்தி வாய்ந்த மருந்துச் சரக்குகளான ரசம்(Mercury), ரசசெந்தூரம், இலிங்கம், பூரம், வீரம்(hydrargyrum Perchloride) போன்றவையும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த இடத்தில் உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம். சித்த மருத்துவம் மூலிகை மருத்துவம்தான் என இத்தனை நாள் நினைத்திருந்தோமே இவ்வளவு வேதிப்பொருட்கள் சேர்த்துத்தான் சித்த மருந்துகள் தயாரிக்கிறார்கள் என்றால் (Chemicals), அது பக்க விளைவை ஏற்படுத்தாதா?, அவை பாதுகாப்பானதா? என நீங்கள் யோசிக்கலாம்.
நிச்சயம் பாதுகாப்பானதுதான். ஏனென்றால் ஒவ்வொரு மருந்துச் சரக்கையும் (Raw Drug) பயன்படுத்துவதற்குமுன் அது சுத்தி(Purification) செய்யப்படுகிறது.
அதாவது அதிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்குவதற்கான செயல்முறைதான் சுத்தி எனப்படுகிறது.
ஒவ்வொரு சரக்கிற்கும் பல்வேறு சுத்தி முறைகளை சித்த மருத்துவ முன்னோடிகள் கூறிச்சென்றுள்ளனர்.
உதாரணத்திற்கு இன்று ‘Maggi’-யில்அதிகம் இருப்பதாக குற்றம் சாட்டப்படும் Lead என்ற காரீயத்தின் சுத்தி முறையை மட்டும் கூறுகிறேன். ஐவேலிச் சமூலச்சாறு, அதாவது Diplocyclos Palmatus என்ற தாவரத்தின் சாற்றினை பயன்படுத்தி காரீயத்தை சுத்தி கொள்ளலாம்.
மேலும் நொச்சி சாற்றினைப் பயன்படுத்தியும் சுத்தி செய்யலாம். மேலும் வெள்ளாட்டின் சிறுநீர் மற்றும் பிரண்டையை பயன்படுத்தியும் சுத்தி செய்யலாம்.
இப்படியெல்லாம் பல வேதிமுறைகளை கடந்துதான் சித்த மருந்துகள் உருவாகின்றன. அவற்றைத்தான் நாங்கள் நோயாளிகளுக்கு வழங்குகிறோம்.

Part 3

எனவே சித்த மருத்துவம் என்பது ஏதோ ஒரு மூலிகையை உணவாக பயன்படுத்தி நோயை நீக்குகின்ற மருத்துவ முறை அல்ல.
ஆக, சித்த மருந்துகள் மூலிகை மருந்துகள்(Herbal Medicine) அல்ல. சித்த மருந்துகள் மூலிகை மற்றும் தாதுப்பொருட்கள் அடங்கிய மருந்துகள்(Herbo mineral).
இவை மட்டுமல்லாது உயிரினங்களிலிருந்தும் மருந்துச் சரக்குகளை பயன்படுத்துகிறது சித்த மருத்துவம்.
உதாரணமாக ஆமை ஓடு, கிளிஞ்சல், கஸ்தூரி, கடல்வாழ் உயிரினங்கள், உயிரினங்களின் பித்த நீர், பறவைகளின் இறகுகள், முட்டைகள், அவைகளின் ஓடுகள், இரத்தம் போன்றவற்றையும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன.
சித்த மருத்துவத்தின் உண்மை வீரியம் இப்படி கடல் அளவு இருக்கும் பொழுது, கடற்கரையில் கிடக்கும் சிப்பியை மட்டும் பார்த்து இதுதான் கடலில் இருக்கிறது என்பது போல, ஒரு சில மூலிகைகளை மட்டும் கொண்டு செய்யும் மூலிகை மருந்துகளே சித்த மருத்துவம்.

கந்தகத்தை சுத்தி செய்யும் முறையை 130உள்ளது..பயன்பாடு மற்றும் நோய்க்கு தகுந்தாவறு சுத்தி முறையை மேற்கொள்ள வேண்டும்.இதை அனுபவபூர்வமாக செய்ய 15 வருடங்கள் ஆகும். 

இனாறைய அதிக பட்ச படிப்பே ஐந்து வருடங்கள் தான்..ஆனால் சித்த மருத்துவம் பயில 15வருடங்கள் ஆகும்.

நன்றி ; சரவணன்

எபநேசர் ஐயாவின் மருத்துவ குறிப்புகள்.

கர்ப்பபை இறக்கம் நலமாக..
100 கிராம் தேக்கு விதை.
50 கிராம் கசகசா.
50 கிராம் மிளகு.
250 Ml தேனில் குழைத்து காலை ..இரவு..3 கிராம் வீதம் சாப்பிடவும்.

**************

உன்மத்தன்  விதைகளை எரித்து சாம்பலில் நல்லெண்ணையுடன்...பெண்களின் இன உறுப்பினுள் பூச சதைகள் இறுகி ...14 வயது பெண்களை போல் ஆவார்கள்.(அதில் பாதிப்புகள் உள்ளவர் பயன் படுத்தாதீர்)

******************
தேக்கு விதை 75 கிராம்.
மிளகு+கசகசா 50 கிராம் வீதம் பொடித்து 250 தேனில் காலை ..இரவு ..ஒரு ஸ்பூண் சாப்பிட.. கர்ப்ப பை இறக்கம் ..குடல் இறக்கம் நலமாகும்.
**************
Hiv எய்ட்ஸ் .. Hepatitis ..B மஞ்சள் காமாலை ..நலமாக அருகன்புல்+வெள்ளருகு+கருவேப்பிலை+கொண்டை கரத்தை+கருங்காலி பட்டை+அவுரி+நாவல் கொட்டை.1:1 வீதம் பொடித்து..
காலை+இரவு 2 கிராம் எடுக்கவும். நன்னாரி குடிநீர் பருகவும் 

*******----------
பூண்டு..கல் உப்பு அரைத்து பூச...சுளுக்குகள் ..மாறும்.
*************

வெண்டைபூ+ செம்பருத்தி பூ அரைத்து பூசி வர இளநரை படிபடியாக குறையும்.

**************

தொழு நோய் தீர்வுக்கு.மருதோன்றி இலை அரைத்து இளநீருடன் காலை சாப்பிடவும்.

**************-**.


மூக்கின் ஓரத்தில் சீல் கொப்பளம் அதிகம் உள்ளது ஒவ்வொரு நாளும் அதிகாலையில் உள்ளது அதை உடைத்தாலும் மறுபடியும் வருகிறது தீர்வு

அமெரிக்கன் சிடார் விநிகர் ஒரு டம்ளர் சுடு நீரில் 5துளி விட்டு காலை மாலை 3நாள் குடிக்க நலம்.
***********************

அத்திபால் 5 துளி..5..கிராம் வெண்ணைய் சேர்த்து சப்பி சாப்பிட சர்க்கரை பாதிப்பு தீர்வுக்கு வரும்.
*************
கபம் தீர்வுக்கு ..சுண்டைகாய் சமைத்து சாப்பிடவும்(கருவுற்றவர் தவிர)
************
60 வயதான ஆண் ..பெண்..16 ஆக மாற..ஆப்பிள்..பீட்றூட்..காரட்..(Abc juice)40+20+30(g)ஜீஸ் குடிக்கவும்.
**************
வல்லைரை தொடர்ந்து சாப்பிட யானைகால் நலமாகும்.
*****************

அரச மர பாலை தடவ..கால் பித்த வெடிப்பு நலமாகும்.

******************

விதை பையில் நரம்பு சுருட்டல் தீர்வுக்கு 200 கருஞ்சீரக பொடியை
 500 Ml தேங்காய் எண்ணையில் 7 நாள் வெயிலில் வைத்து எழுத்து தடவி வரவும் நலமாகும்...
*********************

Albuminaria..நலமாக மக்காச்சோள சிகப்பு நிற நார்கள் +பனைவெல்லத்துடன் காய வைத்து 7 நாள் காலை இரவு ..சாப்பிடவும்.
****************
எலுமிச்சை சாறில் சந்தண கட்டையை உரசி நாவில் தடவி..வெளி பூச்சாகவும் பூசி வர படர் தாமரை..சொரியாசிஸ் நலமாகும்.

*******************

விந்து குறைந்தால்...முருங்கை பிசினை நெய்யில் வறுத்து பொடித்து 6 மாதம் சாப்பிடவும்.
****************

பாதத்தில் நீர் இறங்கி வீக்கம் போட்டால்..வெள்ளாட்டு சாணியை வறுத்து வெனீகருடன் பற்று போடவும்.

******************

விஷம் சாப்பிட்டவர் நலம் ஆக மற்றும்  தெரியாத விசத்தை இறக்க(வெளியேற்ற) ..இலுப்பை புண்ணாக்கை நீரிட்டு அரைத்து..சாப்பிட்டு ..வாந்தி எடுக்க விசம் வெளியேறும்.
*****************
Pcod நோய்க்கு ..வில்வ இலை+சாம்பார் வெங்காயம் இடித்து சாறு எடுத்து+சம எடை விளக்கெண்ணையுடன் காய்த்து..காலை கறண்டி வீதம் 13 நாள் கொடுக்க நலமாகும்.

*********************

தொட்டால் சிணுங்கி சூரணத்தை 3வாரம் சாப்பிட்டு வர
குஸ்டம்..பறங்கி..தீராத புண்கள் தீர்வாகும்.
***********************

சதக்குப்பையை சூரணித்து திரிகடியளவு(மூன்று விரல் எடுக்கும் அளவு) வெல்லத்துடன் சாப்பிட கபம் .பீனிசம். செவி நோய்கள்.தீர்வாகும்.

********************
சாதிக்காயை தாம்பூலத்துடன்(வெற்றிலைப்பாக்கு) சாப்பிட்டு..அரை மணி நேரம் தாண்டி பசும் பால் குடித்து வர..தாது புஸ்டி வரும்.
******†********

கரு மஞ்சள் உரசி...தொப்பிள் கால் பாதங்களில்...(நீர் உலராமல்) தேய்த்து வர கேன்சர்...நீர் கட்டிகள் நலமாகும்.காலை உணவாக கருப்பு கவுனி அரிசி கஞ்சி குடித்து வரவும்.
*******************
கருவேலங்கொழுந்தை பால் விட்டு அரைத்து உள்ளங்காலில் கட்டிவர...
கண்வலி .. கண்வியாதிகள் குணமாகும்.
*******************
காதுவலி நலமாக...
மஞ்சள் கரிசலாங்கண்ணி சாறு 2 துளி விடவும் குணமாகும். 
********************
உப்பு + வெங்காயம் + சாதம். சமமாக அரைத்து பற்று போட நகசுற்று ( நகசுத்தி ) நலமாகும்.. 
**********************
பப்பாளி காய் பாலை படர்தாமரை மீது போட்டு தடவி வர நலமாகும்.
********************
யூகாலிப்டஸ் இலைகளை போட்டு ஆவி பிடிக்க நெஞ்சி சளிகள்...வெளியேறும். 
********************
புதினாவை 10இலை 1டம்ளர் நீரில் கொதிக்க வைத்து சிறிது தேனுடன் கலந்து பருகலாம்.
******************
வெள்ளை காகிதத்தை எரித்து புகையை நுகர.. ஒற்றை தலைவலி தீரும்.
*******************
காதில் சீள் வடிகிறதா? 
இந்துப்பு+ சுக்கு..வெண்ணையில் காய்த்து..ஓரிரு  துளிகள் விடவும்.
**********************
ஊமத்தை  காய் சாம்பல் + நல்லெண்ணைய்...ஸ்திரிகளின் தளர்ந்த வெர்ஜினா சதையை சுருக்கி தரும்.
**********************
உடல் வலி, சோர்வு, அதிக தூக்கம் இதற்கு தீர்வு உள்ளதா ?

ஒருநாள் விட்டு...50 கிராம் பீட்ரூட் ஜீஸ்....

ஒருநாள் விட்டு...
50 கிராம் முள்ளங்கி ஜுஸ்...

ஒருநாள் விட்டு...
புளிவிதை 5 வறுத்து ஊற வைத்து 21நாள் சாப்பிட நலமாவீர்.

*************

தேவையற்ற மருந்தோ ஊசியோ செலுத்தி இருந்தால் 3 நாள் கத்திரிக்காய் பல முறையில் சமைத்து சாப்பிட்டால் மருந்தின் நஞ்சு தோற்கும்.
****************

வயிற்றில் வெள்ளை பூச்சி உள்ளது. 

சரியான தீர்வு சொல்லவும். 

காலை தேங்காய் பால்+10 நிமிடம் தாண்டி 2ஸ்பூண் விளக்கெண்ணைய்+20 நிமிடம் தாண்டி சுடுநீர்...ஒரே நாளில்  சரியாகிவிடும்.. 
*****************
சூதக வாய்வு ...ஆனந்த வாய்வு ..
அனைத்திற்க்கும் , வாய்வு கோளாறுகள் நீங்க எளிய மருந்து.. 
 
பேத்து மசாலா..  குழந்தை பிறந்த பிறகு தாய்க்கு கொடுக்கவேண்டிய முக்கியமான மருந்து. 

மல்லி+
சீரகம்+
வெந்தயம்+
ஓமம்(வகைக்கு 5 கிராம்)+

2கிராம் மிளகு +
1கிராம்பெருங்காயம்...

நீர் தெளித்து 10 நிமிடம் ஊறவைத்து மைய அரைத்து 7நாள் தினமும் 4gm அளவில் சாப்பிட வேண்டும்  ....உள் உறுப்புகள் பரிசுத்தமாகும்.
*****************
தொண்டையில் கட்டி வந்தாலும் ஹைப்போ தைராய்ட் ஹைப்பர் தைராய்ட் இரண்டிற்கும் சரியாக மருந்து


சீதா பழ இலைகள் அல்லது  நுணா மர இலைகள் 5 +
 5மிளகு சேர்த்து .... அரைத்து கொதி நீரிட்டு 41 நாள் பருக வேண்டும் சரியாகிவிடும்..

அதிமதுரம்
அக்கிரகாரம்
கரிசலாம்கண்ணி
2+2+2 தலா கிராம் கூடுதலாக சாப்பிட நல்லது.. 

*****************
புதினா...
திரு நீற்று பச்சிலை...
நார்த்தங்காய் இலை+
கருவேப்பிலை+ 
5மிளகு..  மைய அரைத்து..7மணி நேரம் நாட்டு பசு மோரில் ஊறவிட்டு காலை 6மணிக்கு முன்னர் தொடர்ந்து குடிக்க...உள் உறுப்பு கட்டிகள்..
நீர் கட்டிகள் அனைத்தும்..100% நலமாகும்.....
*******************

யானைகால் நோய் நலமாக..

சுக்கு சிறுதுண்டு+ 
5திற்பிலி+ 
5மிளகு+ 
5கிராம் நன்னாரி+
கைப்பிடி வல்லாரை அனைத்தையும் அரைத்து பூசி வரவும்...தினம் வல்லாரை சமைத்து சாப்பிடவும்.
*****************
வயிற்றில் உள்ள வெள்ளை பூச்சி நீங்க 

காலை தேங்காய் பால்+
10 நிமிடம் தாண்டி 
2ஸ்பூண் விளக்கெண்ணைய்+
20 நிமிடம் தாண்டி சுடுநீர்...ஒரே நாளில்  சரியாகிவிடும்.. 
குறிப்பு ; இது பெரியவர்கள் சாப்பிட. குழந்தைகளுக்கு பாதி அளவு கொடுக்க வேண்டும்.

*******************
படர்தாமரை சரியாக எளிய மருந்து.

எலுமிச்சை தோல்...
சேவிங்கட்டி..
கல் உப்பு.
அரைத்து பூசிவர
உரிந்து வரும்.
*****************
கல்உப்பு+
புளி சமஅளவு அரைத்து  ..5நாள் தினம் 3 வேளை நாவில் தடவ
டான்சில்ஸ்( tansil )  நலமாகும்.
*****************

குழந்தை பிறந்த பிறகு தாயின் உடல். கருவறை சுத்தி ஆக எளிய வைத்தியம்

3 நாள் மிளகு கொடி குளியல்
3நாள் வெற்றிலை குளியல்
3 நாள் குப்பை மேனி குளியல்
(2முறைதினம்)

11 நாள் புதினா குடிநீர்+
புதினா கொதி நீர் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
*******************
ஒரு மரத்தின் வயதை எப்படி அறிவது?
 
மரத்தின் மேல் பட்டையை பப்படம் மாதிரி... கத்தியால் வெட்டலாம்.
300 பக்கம் வரும் சமயம்.. கிளைகள் ஒவ்வொன்றாக 
உலர தொடங்கும்.
பட்டை வெட்டிய இடத்தில் குளத்து தொழி மண் தாமரை தண்டு கலந்து பூச..20 நாட்களில் பட்டை மூடும்.
****************
விதை பையில் நரம்பு சுருட்டல் தீர்வுக்கு..
200 கருஞ்சீரக பொடியை 500 Ml தேங்காய் எண்ணையில் 7 நாள் வெயிலில் வைத்து தடவி வரவும் சரியாகும்.
*****************
தும்பை இலை சாறு 5 துளி காதில் விட தலைவலி போகும்.

*****************
கல்யாண முருங்கை  பூக்கள் அல்லது துளிர் இலை + கருப்பட்டி அரைத்து கொடுக்க..பூப்பெய்யாத பெண்களுக்கு மாதவிடாய் வரும்,
****************
மலட்டு தன்மையை போக்கும் அலோபதி மாத்திரை இதின் நொச்சி மர பூவில் இருந்தே தயாராகிறது.

******************
முயல் காது இலை செடி இதின் வேர் கொதி நீர் ஆண்மை பெருக்கி.
******************
 புன்னை எண்ணைய் கால் வெடிப்பை குணபடுத்தும்.

******************
மாடு... ஆடு...களின் கொடி விழாமலிருந்தால் இதனை வயிற்றில் கட்ட கொடி விழும்.இதனால் தான் கொடி கள்ளி பெயர் வந்தது.
*****************
கோபுரந்தாங்கி

     கோபுரந்தாங்கி மூலிகையினால் புழுவெட்டு, மண்டைக்கரப்பான் முதலியவை நீங்கும். 

     கோபுரந்தாங்கி இலைச்சாறுடன் சமஅளவு நல்லெண்ணெய் கூட்டி பதமாகக் காய்ச்சி வடிகட்டி தலைக்குத் தேய்த்து குளித்துவர தலைமுடி உதிராது.
கபாலத்தில் உண்டாகும் கொதிப்பு அடங்கும். தலைமுடி வளரும்.
*****************
புணல்முருங்கை
மீனை இதன் இலையை கசக்கி மீனுக்கு போட மீன்கள் மயங்கும். மீன் கொல்லி என்று அழைப்பர்.
****************
கஞ்சா மூலிகை தினம் 10 மில்லி கிராம் சாப்பிட கேன்சர் கட்டுக்குள் வந்து நாளடைவில் நலமாகும்.உலகில் இதற்க்கு வேறு மருந்தே கிடையாது.
 *****************
சீந்தில் கொடி.
மிகுந்த மருத்துவப் பயன் கொண்டது.
ஒரு முக்கியமான மருத்துவ குறிப்பு.
இதன் முற்றிய கொடி எடுத்து மேல் புரணி சுரண்டிவிட்டு சம அளவு சுக்கு எடுத்து இரண்டையும் நன்றாக மை போல் அரைத்து ஒரு கொட்டைப்பாக்கு அளவு கொடுத்தால் வயிற்றில் குழந்தை இறந்து உயிருக்கு போராடும் பெண்ணுக்கு வயிற்றில் இறந்த அந்த பிண்டம் எந்தவித ஆபத்தும் இன்றி வெளியேறும்.
ஒரு காலத்தில் கிராமத்து மருத்துவச்சிகள் இதை கையாண்டு பல உயிர்களை காப்பாற்றி இருக்கிறார்கள்.
இன்றும் செய்யலாம் பல உயிர்களை காப்பாற்றலாம்..
***************
பஞ்ச பூதத்தாலான உடம்பில் முக்கடவுளும் சேர்ந்து மூன்று தோஷங்களை யும் தந்துள்ளார்... அதுவே வாத பித்த கபம்... இதற்கு முக்கடவுளும் மூன்று மருந்தும் தந்துள்ளார்... சுக்கு மிளகு திப்பிலி... சுக்கு வாதம் போகும்..... மிளகு பித்தம் போகும்... திப்பிலி கபம் போகும்...
*****************
கீச்சு குரல் நலமாக..அதிமதுர..நன்னாரி..இலவங்க பட்டை..குங்குமபூ..டீ..உதவும்.
***************
கடுகு 
எண்ணையுடன்..வெங்காய சாறு கலந்து பூச..வலிகள் பறந்து போகும்.
****************


நன்றி ; எபநேசர். மரியா சுக மூலிகையகம்.

Sunday 6 February 2022

உடலில் உள்ள 12 வகை உப்புகள். அதன் பயன்கள்.

ஹோமியோபதியின் தந்தை என்று போற்றப்படும் டாக்டர் ஹானிமன்க்கு பிறகு ஜெர்மனியில் வாழ்ந்த schuessler என்பவர் புதியதொரு மருத்துவ முறையை கண்டுபிடித்தார்.  அந்த வைத்தியத்தை தான் பயோ கெமிஸ்ட்ரி என்பதாகும். இந்த வைத்திய முறையை அவர் கண்டுபிடித்ததும் தற்செயலாகத்தான் (ஹோமியோபதியை ஹானிமன் கண்டுபிடித்த விதமும் அவ்வாறுதான்)

இந்த வைத்திய முறையை டாக்டர் schuessler 1872 ஆண்டில் கண்டுபிடித்தார் டாக்டர் ஹானிமன் போலவே இவரும் ஜெர்மனியில் பிறந்தவர். அவர் பிறந்ததும் 66 வருடம் கழித்து அவர் காலத்திலேயே பிறந்தார்.
அவரைப்போலவே அதாவது ஹானிமன் போலவே நன்கு படித்து பல பட்டங்கள் பெற்றார் ஹோமியோபதியில் நாட்டம் ஏற்பட்டது அதை பயின்றார் நல்ல முறையில் வைத்தியம் செய்து வந்தார்.

Schuessler இவருக்கு குழந்தை இல்லாததினால் அவர் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வந்தார் அந்தக் குழந்தை நோய்வாய்ப்பட்ட பொழுது அந்த குழந்தைக்கு எல்லா வைத்தியமும் செய்து பார்த்தும் அந்த குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. 

அதனால் மனம் வேதனைப்பட்டு schuessler எதனால் குழந்தை  இறந்திருக்கக் கூடும் என்பதை அறிந்து கொள்ளும் ஆவலினால் குழந்தையை தகனம் செய்த பின்பு எஞ்சியிருந்த சாம்பலை ஆராய்ந்து பார்த்தார். 

அப்பொழுது அந்த சாம்பலில் 12 விதமான தாது உப்புக்கள் உள்ளதை அறிந்தார் ஆராய்ச்சியை முடித்தார். மேற்படி தாது உப்புக்கள் சரியான அளவில் இல்லாததே கண்டு அவர் மனம் ஆச்சரியம் அடைந்தது.

தன் குழந்தையின் நோய்க்கு இந்த தாதுஉப்புக்கள் சரியான அளவு இல்லாதது தான் காரணம் என்று முடிவு செய்தாள் ஆராய்ச்சியை முடித்தார்.

அதிலிருந்து எந்தெந்த உப்புக்கள் உடலில் குறைந்தால் எந்தெந்த நோய்கள் தோன்றுகின்றன என்பதை கண்டறிந்து அந்த உப்பை நுண்ணிய அளவில் கொடுக்கும்போது உடல் அந்த உப்பை கிரகித்து நோயைப் போக்கிக் கொள்ளுவதை தன் ஆராய்ச்சியின் மூலமாக அவர் கண்டறிந்தார்

பயோ வைத்திய முறையை பிறந்து இன்று வரை இந்த தாது உப்புக்களை ஹோமியோபதி முறையில் பின்பற்றி அவற்றை வெளிப்படுத்தி மருந்தாக்கி மக்களுக்கு அளித்தார்

ஆகவே ஹோமியோபதி மருந்துகளைப் போலவே பயோ மருந்துகளும் சிறப்பாக வேலை செய்யும் தகுதி பெற்றவை. முக்கியமாக வியாதியின் ஆரம்பக் கட்டத்தில் நோய் குணமாகி பிறகும் தேறி வரும் நிலையிலும் பயோ மருந்துகள் வேலை சிறப்பானதும்.

ஹோமியோபதி மருத்துவத்திற்கு நிகராக, பயோ வைத்தியமும் மாற்றுவழி மருத்துவ வைத்தியத்திற்கு துணைசெய்யும் முறையில் இந்த வைத்தியமும் அமைந்திருப்பதை இயற்கை நமக்கு கொடுத்த வரப்பிரசாதம்.

பயோ சால்ட் வைத்திய முறை மிகவும் எளிமையானது அதை தெரிந்து கொண்டால் சுலபமாக வைத்தியம் செய்த நோயை குணப்படுத்திக் கொள்ள முடியும்.

1.இவர் பிறந்த ஆண்டு 1821 இல் 21ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் ஜெர்மனியில் பிறந்தார்.

2. இவரும் ஹானிமன் போலவே பல மொழிகளை கற்றுத் தேர்ந்த ஒரு மாமேதை.

3. இவர் 1873 இல் ஒரு ஹோமியோபதி பத்திரிக்கையில் தான் கண்டுபிடித்த இந்த சத்துக்களை பற்றி முதலில் வெளியிட்ட பொழுது அதனை ஆய்வு படுத்திய ஆய்வாளர்கள் வியந்து போனார்கள்.

4. இவரது இந்த கண்டுபிடிப்பை பல ஹோமியோபதி மருத்துவர்கள் அங்கீகரித்து பயன்படுத்தி துணை மருந்தாக கொடுத்தார்கள் நல்ல நோய்களை குணமாக்கும் முறையை கண்டறிந்தார்கள்.

5. கடந்த 1898 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 30ஆம் தேதி இவர் இந்த மண் உலகத்தை விட்டு இயற்கை எய்தினார்.


உடல் அமைப்பும், இதிலுள்ள தாது உப்புக்களும், இவற்றை  உபயோகிக்கும் விதமும்.

உடலில் ரத்தத்திலும் திசுக்களிலும்(Tissues) 70% சதவீதம் நீர்(water), 25% இந்திரிய உப்புக்களும் (organic matter) 5% சதவீதமும் அணிந்திரிய உப்புக்களும் (Inorganic matter)

இந்திரிய உப்புக்களான சர்க்கரை, கொழுப்பு, ஆல்புமின் முதலியவை.

அணிந்திரிய உப்புக்கள் ஆனவை அறம், கந்தகம், பாஸ்பேட், கால்சியம், சுண்ணாம்பு, இன்னும் சில....

ரத்தத்தில்  குறைவாக 5% சதவீதம் மாத்திரமே, உள்ள organic salt அனிந்திரிய உப்புக்கள் தான் உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் அத்தியாவசியமானவை என்று டாக்டர் schuessler கண்டுபிடித்தார். 
மனித உடலை எரித்து சாம்பலை ஆராய்ச்சி செய்து அதில் உள்ள உப்புக்களை கண்டுபிடித்தார் அவைதான் பயோகெமிஸ்ட்ரி வைத்திய முறையில் உள்ள 12 தாது உப்புக்கள் அவை

🎖1. Calcarea Fluoricum _ Calc Flur
🎖2. Calcarea Phosphoricum _ Calc Phos.
🎖3. Calcarea Sulphuricum_ Calc Sulp
🎖4. Ferrum Phosphoricum _ Fer Phos
🎖5. Kali Muriaticum _ Kali Mur
🎖6. Kali Phosphoricum _ Kali Phos
🎖7. Kali Sulphuricum _ Kali sulp 
🎖8. Magnesium Phosphoricum _ Mag Phos
🎖9. Natrum Muriaticum _ Nat Mur
🎖10. Natrum Phosphoricum _ Nat Phos.
🎖11. Natrum Sulphuricum  _ Nat Sulp 
🎖12. Silicea

இவற்றில் ஒன்று கூடுதல் ஆனாலும் குறைவு ஆனாலும் உடலில் வியாதி ஏற்படுகிறது அதன் குறிகளைக் கொண்டு அந்த உப்பை அதாவது மருந்தை கண்டுபிடித்துக் கொடுத்தால் வியாதி நிவர்த்தியாகிறது என்று schuessler கண்டுபிடித்தார்

இவருக்கு முன்பிருந்தே இந்த 12 தாது உப்புகளும் ஓமியோபதியில் இருக்கின்றன ஹோமியோபதி மருந்துகளை தயாரிப்பது போலவே இவற்றையும் தயாரிக்கிறார்கள்.

மருந்தை தயாரிக்கும் முறை பற்றிய விவரங்கள்

ஓமியோபதியில் மருத்து தயாரித்தல் அதனின் வீரியப்படுத்தும் முறைகளைப் பற்றி இங்கு நாம் பார்ப்போம்.

மற்ற வைத்திய முறையில் உபயோகிக்கப்படும் மருந்துச் சரக்குகள் தான் ஹோமியோபதி முறையிலும் உபயோகப்படுத்தப்படுகின்றன அதனால் அவைகளை தயாரிப்பதில் தான் வித்தியாசம் உண்டு.

நாயுருவி, குப்பைமேனி ஆடாதோடா, செவ்வந்தி, எட்டிக்கொட்டை, கடுகு, முதலிய தாவர வர்க்கத்திலிருந்து.

வெள்ளை பாஷாணம், நேற்றிக் ஆசிட், கந்தகம், பாதரசம், வெடியுப்பு, முதலிய ரசாயன பொருள்களிலும் இருந்தும்.

தங்கம் வெள்ளி செம்பு இரும்பு முதலிய உலோக பொருள்களில் இருந்தும்.


மருந்துகள் தயார் செய்யப்படுகின்றன.

ஹோமியோபதி மருந்துகள் தயார் செய்வதற்கு உபயோகிக்கும் பொருட்களில் கல்வங்கள், சீஷாக்கள் முதலியவை பரிசுத்தமாக இருக்க வேண்டும். 

1 ஒரு பங்கு தாது உப்பு 9 பங்கு பால் சக்கரை மாவு போட்டு பல மணி நேரம் அரைத்து எடுக்க வேண்டும் இது 1X.

இதில் 1X ஒரு பங்கு எடுத்து ஒன்பது பங்கு பால் சர்க்கரை மாவு போட்டு பல மணி நேரம் அரைத்தால் 2X

அதைப் போலவே தேவையான பிரியங்கள் வரை செய்து கொள்ளலாம் 3X, 6X, 12X.

12X வீரியம் விதை போதுமானவை நல்ல பலனைத் தரும் முற்றிலுமாக அந்த உறுப்பு கெட்டு பழுதடைந்து விட்டது என்றால் உயர்ந்த வீரியமான 30X மற்றும் 200X பயன்படுத்தலாம்.

மருந்தைக் கொடுக்கும் பொது விதிகள்.
1. தவறாக மருந்து கொடுத்தாலும் பக்க விளைவு இல்லாதது உதாரணத்திற்கு மலர் மருத்துவம் போல...

2. சிறு குழந்தைகளுக்கும் எடுத்துக்காட்டு பிறந்த குழந்தை முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 6X மூன்று வேளை உணவுக்குப் பின்பு நான்கு மாத்திரை சப்பி சாப்பிட சொல்ல வேண்டும்.

15 வயது முதல் பெரியவர்களுக்கு 12X வீரிய படுத்தப்பட்ட மாத்திரையை சாப்பிட சொல்லலாம் உணவுக்குப் பின்பு மூன்றுவேளை.

3. ஒரு நோய்க்குறிகள் உதாரணத்திற்கு காய்ச்சல் Fever
இதற்கு ஒரு குவளையில் சுடுநீர் 50 அல்லது 100 ml எடுத்துக்கொண்டு உதாரண மாத்திரை Fer phos, Calc phos ஒரு பத்து பத்து மாத்திரையை எடுத்து தண்ணீரில் கலக்கி அரை மணி நேரத்திற்கு அல்லது ஒரு மணி நேரத்திற்கு 10ml கொடுக்கலாம்.

4. ஹோமியோபதி மருத்துவத்தில் ஒரு மருந்து அல்லது இரண்டு மருந்து ஒரு மணி நேரம் அல்லது ஒரு நாளைக்கு காலை மாலை என இரு மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் என்று அனுபவமுள்ள மேதைகள் கூறியுள்ளார்கள் ஆனால் பயோ சால்ட் முறையில் ஐந்து மாத்திரைகளை ஒன்றாக கலக்கி காம்பினேஷன் combination செய்து கொடுக்கலாம் என்ற ஒரு முக்கியத்துவமான முறை உள்ளது. 



மேலும் இவைகளைப் பற்றி ஒவ்வொன்றாக ஒவ்வொரு நாளாக பார்க்க இருக்கிறோம் இதனுடைய மருத்துவ குணபாடம்
Materia medica மற்றும் பல மேதைகள் சொன்ன அனுபவ முறைகள்.


🦋Bio Chemistry 🦋

🎖🎖🎖 Calcarea Fluoricum 🎖🎖🎖

இதை சுருக்கமாக Calc Fulr அல்லது C F என்று அழைக்கலாம்.

இந்த உப்பு எலும்பின் மேல் மூச்சிலும் பற்களின் மேல் பூச்சு காண எனாமேலும், நீண்டு சுருங்கும் தசை நார்களும் மேல் தோல்களிலும் நிறைந்திருக்கின்றது.

இது குறைந்தால் எலும்புகளில் கரடு, முரடு, கோணல் மாடல், ரணம் வலி ஏற்படும் அடிபட்டு எலும்புகளில் வலித்தால், கோளங்களில் வீக்கம், கல் போன்ற வீக்கங்கள், ரத்தம் தாரையில் வீக்கம் ஏற்படுதல், இதனால் ரத்த அழுத்தம் தடைபட்டு ரத்தக் கொதிப்பு (Blood Pressure) வியாதி ஏற்படும் இருதயம் வீக்கம், மூல வியாதி ஏற்படும்.

கல் போன்ற கழலை கட்டிகளையும் கரைக்கும். புற்று வியாதியில் தசை இறுகி கடினமாகி இருப்பதையும் இம்மருந்து கரைக்கும்.

மனம் Mind😇:
சோர்வு, கவலை, பயம், காரணமில்லாத பயம், தீர்மானிக்க முடியாமை, முடிவெடுக்க முடியாத நிலை.

தலை Head😡:
மயக்கம் மந்தமான தலைவலி மலச்சிக்கல் எதனால் ஏற்படுகின்ற தலைவலி மலச்சிக்கல்.

கண்கள் Eye👁:
தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதால் ஏற்படும் தலைவலிகள். சிறிது நேரம் கண்ணை மூடிக் கொண்டு இருந்த நாள் மறைந்து விடும். கண் விழிகள் வெண்படலம்(Catatact) இமைகளில் கழலை கட்டிகள்.

மூக்கு Nose👃:
மூக்கின் எலும்புகள் கோலங்கள் கெட்டுப்  போய் இருத்தல், மூக்கில் சதை வளர்ச்சிகளை சரி செய்தல். கும்பலுடன் ரத்தமும் சளியும் வெளியாகும் தன்மையில் இந்த மருந்து குணம் தரும்.

முகம் Face👩‍🦱:
தாடை எலும்புகளில் வீக்கம் உதடுகளில் வெடிப்புகள்.

பல் Teeth🦷:
பற்கள் உடைந்ததால் அல்லது எனாமல் தேய்ந்து போய் போனதனாலே பற்கள் கூசும் பொழுது இந்த மருந்து கொடுத்தால் எனாமல் வளர்ச்சி செய்து கூச்சத்தை நிறுத்திவிடும். பற்கள் ஆடுவதற்கு இது ஒரு நல்ல மருந்து. ஈறுகளில் ரத்தம் வந்தால் இது சரி செய்யும்.

நாக்கு Tongue👅:
நாக்கில் வெடிப்புகள் நாக்கில் தரித்த தன்மை நாக்கில் புண் சரி செய்யும் மருந்து.

தொண்டை Thorat🗣:
தொண்டையில் வீக்கம், வலி, எரிச்சல், அருவுதல், குத்துதல், இதனால் இருமல், கெட்டியான சளி, வெளியேறுதல். இரவில்  குளிர்பானத்தை கொடுப்பதினால் வரும் தொண்டை பிரச்சனை. தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பது போன்ற உணர்ச்சி, அதனால் அடிக்கடி விழுங்க நேரிடும், ஆனால் இந்த வீக்கம், வலி, தொண்டையில் இருந்து சுவாசக்குழாய் வரை பரவினால் ஆஸ்துமா ஏற்படும் சுவாசிக்க கஷ்டமா இருக்கும் ஆபத்தான வியாதிகள் உண்டாகும் இதற்கு இது ஒரு நல்ல மருந்து.

மலச்சிக்கல் constipation 😔:
பூச்சிகள் ஆசனத்தில் அரிப்பு ஏற்பட்டு இரவில் தூக்கம் கலையும் ஆசனத்தில் வெடிப்புகள் மலச்சிக்கல் ரத்தம் கொட்டும் மூலவியாதி லேசான தலைவலியுடன் மயக்கத்துடன் மலச்சிக்கல்.

பிறப்புறப்பு:
மர்ம ஸ்தானங்களில் வெடிப்பு மற்றும் புண்கள் விரைவாதம் விதைகளில் கெட்டியான வீக்கம் மர்ம ஸ்தானங்களில் ஏற்படக்கூடிய கோலங்கள் வீக்கம் உள்ளுறுப்புகளில் ஏற்படக்கூடிய புண்கள் பெண்களுக்கு கர்ப்பப்பை கீழிறங்குதல் மாதவிடாய் அதிக போக்கு இவை அனைத்தையும் கேட்கும் ஒரு நல்ல மருந்து.

இருதயம் heart❤:
இதயம் பெருத்திருத்தல், ரத்த தாரையில் வீக்கம், அடைப்பு, இதனால் ரத்தக் கொதிப்பு.

கழுத்து, முதுகு, கை, கால்கள்:
சிறு சிறு மூட்டுகளில் வலி பச்சை நரம்புகள் சுரண்டுதல் (varicose veins) எலும்புகள் தாறுமாறாக வளர்ந்து இருத்தல் உடைத்தல் எலும்புகளில் சீழ்.

🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽

Bio Chemistry (Salt)

🎖🎖2. Calcarea Phosphoricum 🎖🎖

இதை சுருக்கமாக Calc  Phos அல்லது C P என்று அழைக்கலாம் இந்த உப்பு எலும்புகளிலும், பற்களிலும், இணைப்பு தசைநார் களிலும், திசுக்களிலும், இருக்கின்றது. இது எலும்புகளில் 57 சதவீதம் இருக்கிறது.

உடல் வளர்ச்சிக்கு இது முக்கியமான மருந்து. முக்கியமாக குழந்தை வளரும் காலத்தில் வளர்ச்சிக்கு இது முக்கியமான மருந்து. இது குறைவதால் உடல் மெலிந்து, எலும்பும் தோலுமாக இருப்பார்கள்,  மெலிந்தவருக்கு இழுப்பு, வலிப்பு ஏற்பட்டால் இந்த மருந்தை கொடுக்க வேண்டும் பொதுவாக இழப்புகளுக்கு Mag Phos மற்றும் kali Phos கொடுப்பது வழக்கம். இவை கொடுத்து வலிப்பு நிற்கவில்லை என்றால் Calc Phos நிறுத்தும் திரும்ப வராமல் இருக்கவும் செய்யும். 

ரத்தசோகை, எலும்புருக்கி நோய், போன்றவைக்கு இது ஒரு நல்ல மருந்து. பலன் அளிக்கக்கூடிய மருந்து. காய்ச்சல், அழைச்சல், போன்ற வியாதிகளுக்கு பிறகு உடலை தேற்ற இதை கொடுத்து வரலாம் டானிக் போன்று வேலை  செய்யும்

மணம்😇
காதல் நிறைவேறாததால், வியாபாரநஷ்டத்தால்லும், கோபத்தாலும், கவலையாலும், ஏற்படும் நோய்கள் வியாதிகள்.

தனியாக இருக்க விரும்பும் குணம். மனதிற்கு வேலை செய்ய சிரமம், ஞாபக மறதி, ஞாபக சக்தி இன்மை.

தலை😡
தலைவலி, மனம் வேலை செய்தால் வரக்கூடிய தலைவலி, குளிர்ந்த நீரால் குளிப்பதால் ஏற்படும் தலைவலி, மயக்கம், குழந்தைகளுக்கு மண்டை ஓடு மூடாத தன்மை, தலை முடி கொட்டுதல்.

கண்கள்👁
கண்களில் உஷ்ண உணர்ச்சி, கண் விழியில் வெண்படலம், வெளிச்சத்தைப் பார்க்கக் கூச்சம்.

காது👂
காது எலும்புகளில் வலி, கொப்புளங்கள், வீக்கங்கள், இது ஒரு நல்ல மருந்து.

மூக்கு👃
கண்ணீருடன் தும்மல், அடிக்கடி சளி பிடித்தல், நோஞ்சான் பிள்ளைக்கு நீடித்த முக்கில் சளி பிடித்தல், மூக்கில் சதை வளர்ச்சிகளை அடினாய்டு என்று கூறப்படும் சதை கட்டிகளை கரைக்கும்.

முகம்🧑‍🦰
வெளுத்த முகம், எண்ணெய் வடியும் முகம், வாலிப பெண்களுக்கு, வாலிப ஆண்களுக்கு, நிறைய முகப்பருக்கள், முகத்தில் வலி, நரம்புகளில் வலி, மேல் தாடை எலும்புகளில் வலி, வலது பக்கத்தில் இருந்து இடது புறமாக மாறும் வழிகள், வாயில் பாலுண்ணிகள்.

பற்கள்🦷
பல் மறைப்பதால் ஏற்படும் எல்லா கோளாறுகளுக்கும் இதை கொடுத்தால் சரிசெய்யும் முக்கியமாக குழந்தைகளுக்கு பல் வளர வில்லை என்றால் இந்த மருந்து சிறப்பாக வேலை செய்யும். பல் வலி இரவில் காற்று பட்டாலே புதிதாக பல் முளைக்கும் சமயத்தில் இருந்தாலும் அதில் அலைச்சல் இருந்தாலோ இந்த மருந்து சரி செய்யும் பல் சொத்தை ஏற்பட்டால் இந்த மருந்து அதை சீர் செய்ய முக்கியமான மருந்தாகும் ஈறுகளில் ஏற்படக்கூடிய வலி வீக்கத்திற்கு சிறந்த மருந்து

வாய்🤐
கசப்பு ருசி, நாக்கில் முனையில் கொப்பளங்கள், விழுங்கும்போது நாக்கில் வலி, வாயில் வரட்சி, ஆனால் தாகம் இன்மை. ஜலதோஷத்தின் போது வாயில் எச்சில் ஊறுதல், போன்ற அறிகுறிகளுக்கு இது ஒரு நல்ல மருந்து.

தொண்டை🗣
தொண்டையில் புண் எரிச்சல் விழுங்கும் சமயத்தில் சிரமம் ஆனால் இரும்பல் குடிக்கும் போது தொண்டையில் வலி ஏற்படுதல் தொண்டையில் சதை வளர்ச்சி அதாவது டான்சில்ஸ் தொண்டையில் உள்ள சதையை இருக்க படுத்தி வரக்கூடிய நோய்.

கை கால்களில் 💪🦵🦶
சலிப்புடன் இரும்பல் நீடித்த இருமல் கக்குவான் இரும்பல் மஞ்சள் சளி வெளியேறுதல் பாசி நோய்க்கு இது ஒரு துணை மருந்தாக பயன்படுத்தலாம்

இருதயம்🫀
பலவீனத்தின் ஆல் இருதய படபடப்பு வேகமான நாடி கழுத்து பகுதியில் வலித்தல் நாடி அதிகமாக குடிப்பதால் ஏற்படும் தொந்தரவு

வயிறு திணிப்பை🧑‍🍳
பசியின்மை, தாறுமாறான பசி, வயிறு உப்பசம் கொழுப்பு உணவுகளையும் கொழுப்பு சார்ந்த எண்ணெய் சார்ந்த உணவுகளையும் உண்ண அதிக விருப்பம். ஆனால் உண்ட பின்பு தொந்தரவு. மாலை 4 மணிக்கு பசி உண்ட பிறகு வயிறு உப்பசம். சிலசமயங்களில் குமட்டல், மலச்சிக்கல், அடிக்கடி மலம் கழித்தல்,  இது ஒரு நல்ல மருந்து தொப்புள் ஏற்படக்கூடிய ஹெரநீயா இது நல்ல மருந்து.

சிறுநீர்🚽
மஞ்சளான மூத்திரம், அடிக்கடி அவசரமாக சிறுநீர் கழித்தல், நீரழிவு நோய் உள்ளவர்களுக்கான, சிறுநீர் பிரச்சனை, சிறுநீர் கழிக்கும் சமயத்தில் கற்கள் வெளியேறுதல், சிறுவர்கள் படுக்கையில் சிறுநீர் கழிப்பார்கள் இது ஒரு நல்ல மருந்து.

பெண்கள்🧕
மெலிந்த வாலிப பெண்களுக்கு ஏற்படக்கூடிய அனைத்து தொந்தரவுக்கு இது ஒரு துணை மருந்தாக பயன்படுத்தலாம் தாமதமான மாதவிடாய் ஒல்லியாக உள்ள பெண் குழந்தைக்கு பல் முளைக்க வில்லை என்றால் பெண் பிள்ளை பால் குடிக்க மறுத்தால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய நரம்புவலி.


நோய்க்குறி களுக்கான தன்மை கூடுதலான விவரங்கள்
வீயாதியை நினைக்கும்போது இரவில், ஈழப் பருவத்திலும், பருவ மாற்றத்திலும், தண்ணீரில் நினைக்கும்போது, அசையும்போது, கூடுதலாகும்.

நோய்க்குறிகள் தணிந்து ஆரோக்கியமாக வெளிப்படும் சூடான, பருவத்தில் சூடான, அறையில் படுத்திருக்கும், பொழுது நல்ல சுகமாகத் தோன்றும்.

🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽

Bio Chemistry (Salt)

🎖🎖 3. Calcarea Sulphuricum 🎖🎖

இதனை சுருக்கமாக Calc Sulp CS என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த உப்பு குறைந்தவர்களுக்கு தோலில் சர்ம நோயான சிரங்கு நோய், அரிப்பு நோய், கட்டிகள் சடுதியில் ஆறாது. பொதுவாக இந்த மருந்து ஒரு வியாதி பெரும்பாலான நோயாக மாறிய கட்டிகளை குணப்படுத்த பயன்படுத்தும்.

பெண்களுக்கு மாதவிடாய் தாமதத்தின் நீடித்து இருக்கும் சமயத்தில் தலைவலி களைப்பு உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளுக்கு ஏற்ற மருந்து கெட்டியான மஞ்சளான வெள்ளைப்பாடு மர்ம ஸ்தானங்களில் வீக்கம் வலி நல்ல மருந்து.

தலை
சிவந்த கண்களுடன் வயிற்றில் வலியுடனும் தலைவலி இருந்தால் இந்த மருந்து பயன்தரும். நெற்றியில் தலை வலி, மாதவிடாயின் போது தலை வலி, நடக்கும்போது தலை சுற்றல், தலையில் பொடுகு, வலியுள்ள சிரங்குகள், கொப்புளங்கள்.

கண்கள்
சிவந்த கண்கள் கண்களில் பிடித்தது போன்ற உள்ள தன்மைக்கு கண்களை கசக்கிக் கொள்வார்கள்.

காதுகள்
காது கோலங்களில் வீக்கம், பின்புறம் வீக்கம், காதுகளில் படைகள், காதிலிருந்து சீழ் வடிதல், செவிடு, போன்ற பிரச்சனைகளுக்கு இந்த மருந்து ஏற்ற பொருள்.

மூக்கு
கெட்டியான சளி காரமான அரிப்பைத் தரும் நீர் ஒழுகுதல்.

பற்கள்
பல் வலி, ஈறு வீக்கம், சீழ் பிடித்தல், பற்களில் வேர்கள் ஆடுதல், கெட்டுப்போகும் தன்மை.

வாய்
வாயில் கசப்பு சுவை, புளிப்பு சுவையும் சேர்ந்து காணப்படும். அல்லது தனித்தே காணப்படும். நாக்கில் வீக்கம், மஞ்சள் நிறம், அல்லது சிவப்பு கோடுகள்.

நுரையீரல் சுவாச கருவிகள்
இலேசான காய்ச்சலுடன் ஆஸ்துமா, வரண்ட வாயுடன் மூச்சடைப்பு, கஷ்டப்படுத்தும் சுவாச கோளாறுகள். நாள்பட்ட இரும்பல்  இந்த மருந்து ஏற்ற ஒரு நல்ல தீர்வை கொடுக்கும்.

வயிறு
சாப்பிட்ட பிறகு குமட்டல், உடன் தலைவலி மயக்கம், திணிப்பையில் இருந்து வலி ஆரம்பித்து கல்லீரல் பக்கம் போகும் குடல்களில் புண், மலச்சிக்கல்.

வயிற்றுப்போக்கு
இரத்தம் கலந்த சீழ் போன்ற கழிச்சல். மூல வியாதி, ஆசன துருவங்களில் கட்டி, மலக்குடலில் வெடிப்பு மற்றும் புண்கள்.

ஆண் /பெண்
நீடித்த மூத்திரக்காய் வியாதிகள் சிவந்த மூத்திரம் ரத்தம் கலந்த மூத்திரம் நீடித்த பல நாள் பட்ட வியாதிகள் வெள்ளைப்பாடு நாட்பட்ட முறையில் இருக்கும் வியாதிகள் அரையாப்பு கட்டிகள் அடிக்கடி இந்திர தனங்களில் ஏற்படுகின்ற புண் அலைச்சலுக்கு.

முக்கிய குறிப்புகள்
கை கால்கள் விரல்கள் காலையில் வலி தோன்றுகின்றது என்றால் இந்த மருந்து பொருந்தும் பகலில் தூக்கம் வருகிறது இரவில் தூக்கம் வரவில்லை என்றால் இந்த மருந்து பொருந்தும் செதில் செதிலாக உள்ள தோல் வியாதிகள் கட்டிகளுக்கு இந்த மருந்து உறுதுணையாக உதவும் சிவந்த நிறத்தில் ரத்தம் வெளியேறுகின்ற பாதை உள்ள தன்மைக்கு இந்த மருந்து துணை மருந்தாக பொருந்தும்
எந்த ஒரு பிரச்சனையை நனைவதாலும், குளிப்பதாலும் வியாதி தோன்றும் அல்லது அதிகரிக்கும்.
திறந்தவெளி காற்றோட்டமான உள்ள இடங்களில் வியாதிகள் குணமடையும்.

🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽

Bio Chemistry (Salt)

🎖🎖04. Ferrum Phosphoricum 🎖🎖

இதனை சுருக்கமாக Fer Phos FP என்று அழைக்கப்படும்

எந்த ஜீவராசியும் உயிர் வாழ பிராணவாயு அதிமுக்கியமானது என்று எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம். 

ஒரு உயிர் போய்விட்டது என்றாள் பிராணன் போய் விட்டது என்கிறோம், அல்லவா பிராண வாய்வு இல்லை என்றால் இந்த உடல் சக்தியை கிரகிக்கும் ஆற்றல் இல்லை என்று அர்த்தம்.

இந்த பிராண வாயுவை கிரகிக்கும் சக்தி இரும்புக்கு அதிகமுண்டு இந்த ஐயம் ரத்தத்தில் சிவப்பு அணுக்களில் நிறைய காணப்படுகிறது Fer phos என்ற இந்த உப்பு குறைந்தால் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறையும், தசைகள் தளர்ச்சி அடையும், ரத்த தேக்கம், ஜுரம், வலி, ரத்தப்போக்கு, போன்ற உபாதைகள் ஏற்படும் உடம்பில் இந்த உப்பு குறையும் தன்மையில் Fer phos கொடுத்து மேற்கண்ட அனைத்து வியாதிகள் நீக்கிக் கொண்டு உடல் பலமடையும்.

காயப்பட்டும் சமயங்களில் அந்த காயம் பட்ட இடத்தில் ஏற்பட்ட ரத்தக்கட்டு, ரத்தப்போக்கு, வலி போன்ற இடங்களில் உள்ளுக்கும், வெளிக்கும், இந்த மருந்தை பயன்படுத்தலாம்.

மூக்கு, காது, வாய், நீர்த்தாரை, ஆசனத்துவாரம் போன்ற எந்த துவாரத்திலிருந்து ரத்தம் வரும் அது பிரகாசமாக சிவந்த நிறத்தில் இருந்தால் இந்த மருந்தை பயன்படுத்தினால் உடனடி தீர்வு கிடைக்கும்.

மனம்
அதிகமாகப் பேசிக் கொண்டே இருக்கும் தன்மை கொண்ட நபர்கள்..... கோபப்படும் நபர்கள்.... மனதை கட்டுப்படுத்த முடியவில்லை என்று சொல்லும் நபர்கள்....ஞாபக சக்தி இன்மை அவை பெயர்களையும், காரியங்களையும், உடனடியாக மறந்து விடும் தன்மை... தைரியம் இன்மை நம்பிக்கை இன்மை.

தூக்கம்
இரவிலே தூங்காமல் பகலில் தூங்குன போன்ற உணர்வு கொண்டவர்களுக்கு இந்த மருந்து ஒரு வரப்பிரசாதம்... பகல் நேரத்தில் சோர்வாய் இருக்கிறது, படுத்துவது போன்ற உணர்வு...  ஒரு வீரியத்துடன் செயல்படுத்த முடியாமல்.... சோம்பேறித்தனம் போல இருக்கிறது என்ற உணர்வு.... தூக்கத்தில் கனவுகள் மூலம் கலைகின்ற தூக்கம் அல்லது கனவில் திடீரென்று எழுந்து ஓடும் தன்மை கொண்ட இவர்களுக்கெல்லாம் உயர்ந்த வீரியமான Fer phos 30x or 200X மருந்துகளைக் கொடுக்க வேண்டும்.

தலை
தலைவலி அதிக ரத்தம் ஏறுவதால் வருகின்ற தலைவலி.... அழுத்துவது போன்ற வெடித்து விடுவது போன்ற இருக்கும் தலைவலி..... தலையை அசைக்க முடியாத அளவுக்கு அல்லது தொட்டாலும் வலிக்கும் தன்மை கொண்ட தலைவலி...... முகம் சிவந்த நிலையில் இருக்கும் மூக்கில் ரத்தம் வெளியேறும் தன்மை இருக்கும், குளிர்ந்த ஒத்தடம் வலி குறையும்.... வெயிலில் போனால் வலி அதிகமாக வரலாம், சூடு ஒத்தடம் கொடுத்தால் அதிகமாக வலி தென்படலாம். அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி.

கண்கள்
அழற்சி, சிவந்த வீக்கம், மணல் உறுத்துவது போன்ற உணர்வு.... பல் முளைக்கும் குழந்தைக்கு ஏற்படுகின்ற கண் அழற்சிக்கு கண்ணில் அடிபட்டு விடும் தன்மை இருந்தால் இந்த மருந்து உடனடி சரி செய்யும்....

மூக்கு
ஜலதோஷம் தும்மல் ஆரம்பகட்டத்தில் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும் இது ஒரு துணை மருந்தாக பயன்படுத்தலாம்.

பற்கள்
பல் வலி, அசைவினால் ஏற்படக்கூடிய வலி, சூடான பானங்கள் குடிப்பதினால் ஏற்படக்கூடிய வலி, பற்களில் சிவந்த தன்மையுடனும் வீக்கத்துடன் இருக்கும் தன்மை கொண்ட வலி.

தொண்டை
டான்சில்ஸ் வீக்கம் தொண்டையில் ஏற்படக் கூடிய சிவந்த தன்மைகொண்ட வறண்ட புண் போன்ற வலிகளுக்கும், வீக்கத்திற்கும், பாடல் பாடுகின்ற நபர்கள் தொண்டைக்கம்மல் ஏற்படாத வகையில் பாதுகாத்துக் கொள்ள இந்த மருந்தை பயன்படுத்தலாம்.

இரும்பல்
எல்லாம் ஜலதோஷத்தை எலும்புகளிலும் இது ஒரு துணை மருந்தாக பயன்படுத்தி சப்தத்துடன் ஏற்படக்கூடிய இருமலுக்கும் வாந்தியுடன் ஏற்படக்கூடிய தொந்தரவுக்கும் நல்ல மருந்து.

சுவாச கோலங்கள்
நிமோனியா, ரத்தத்துடன் சேர்ந்து வரக்கூடிய சளி ஆரம்பகட்ட காய்ச்சல் இரும்பும் அடுத்து வரக்கூடிய இரத்தச் சளி தொண்டையில் புண் மூச்சுத்திணறல் அனைத்தும் சீராகும் ஆஸ்துமா கக்குவான் இருமல் நுரையீரல் கவசம் போல இந்த மருந்து வேலை செய்யும்.

மலம்
ஜீரணமாகாத மலம் வெளியேறும், கழிச்சல், சீதபேதி காலராவில் முதல் கட்டத்தில் கொடுக்க பயன்படுத்தும் ரத்தக்கசிவு ஏற்படக்கூடிய சீதபேதி போன்ற மலக்குடல் வெளியேறும் தன்மைக்கு முக்கிய மருந்து.

மூத்திரம்
தாரை வழியாக ரத்தம் வருதல், மூத்திரம் வருவதற்கு முன்பு வலி, வரும்போது வலி, எரிச்சல், மூத்திரம் அடக்க முடியாத தன்மை, அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டுதல், படுக்கையில் சிறுநீர் கழிக்கும் தன்மை, மூத்திரப்பையை தாங்கமுடியாத வலி.

ஆண்களுக்கு
விந்து அடிக்கடி வெளியேறுதல் உயிரணு குறைபாடு உள்ள போஸ்டட் வீக்கத்திற்கு நல்ல மருந்து..

பெண்கள்
வலியுடன் கூடிய மாதவிடாய் உதிரம் சிவப்பாக இருக்கும் தன்மையின் போது அஜீரணம் தலைவலி வாந்தி வயிற்றுப் போக்கு வயிற்று வலி இவர்களுக்கு துணை மருந்தாக பயன்படுத்தலாம்..

🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽

Bio Chemistry (Salt)

🎖🎖5.Kali Muriaticum 🎖🎖

இதனை சுருக்கமாக Kali Mur KM என்று அழைக்கப்படும்.

உப்பு ரத்தத்திலும் மூளை நியூரான்கள் இணைப்பதற்கு மற்றும் மூளை சதைகளில் உள்ள நரம்புகளில் காணப்படும்.

இது குறைந்தால் புதிய மூளை கேபிள்கள் நியூரான்கள் உற்பத்தி ஆகாது. இதனால் ஞாபக சக்தி குறையும், கவலை ஏற்படும், மூளை கலைப்பு, சருமத்தில் அரிப்பு, எரிச்சல், கொப்புளங்கள் ஏற்படும். இவற்றிலிருந்து வெள்ளையாக குழ குழப்பான சீழ் வெளியேறும்....இரத்தம் விஷத்தன்மை அடையும்...

இதன் முக்கிய குறிகள் நாக்கு வெண்மையாய் இருக்கும், சருமத்தில் வெண்மையாக தோல் உரியும், கழிவுகள் வெண்மையாகவும், தடித்து இருக்கும், கோளங்களில் வீக்கம் சளி, ஜுரம், கொப்பளங்கள்.... மற்றும் உபத்திரவங்கள் அசைவதாலும் தொடர்ந்து அசைவது அதிகமாகும்.

மனம்
மூளை பலவீனம், கவலை, கவலை தரும் கனவுகள், ஞாபக சக்தி குறையும், எளிதில் எதையும் புரிந்துகொள்ள முடியாத நிலை....

தலை
கல்லீரலில் சோர்வால் ஏற்படும் தலைவலி. மலச்சிக்கலால் ஏற்படும் தலைவலி. இடது பக்கத்திலும் பின்புறத்தில் வரும் தலைவலி, தலையில் ரத்தம் தேங்கும் நிலை தேகப்பயிற்சி செய்யும் பொழுது ஏற்படும் தலைச்சுற்றல், தலையில் செதில்கள் உதிர்தல் அதாவது தோல் உரிதல்.

கண்கள்
கண்களில் சகல கோளாறுகளுக்கு இது ஒரு பயன்தரக்கூடிய முக்கிய மருந்து. கழிவு வெள்ளையாய் இருக்கும், மஞ்சளாக இருந்தால் இது உடன் Kali Sulp  மாற்றி மாற்றிக் கொடுக்கலாம், கண்ணில் மணல் இருப்பது போன்ற உணர்ச்சி.... கண் இமைகளில் கட்டி.... வெளிச்சத்தை கண்டால் பயம்... வெளிச்சத்தைப் பார்க்க முடியாமை... கேட்ராக்ட் எனப்படும் கண் சதை வளர்ச்சிக்கு இது ஒரு முக்கிய மருந்து.

காதுகள்
காது கோளங்களில் வீக்கம். Mumps எனப்படும் பொண்ணுக்கு வீங்கிய வியாதியில் இது நன்கு பயன்படும் மருந்து... காதிலிருந்து சீழ், அத்துடன் மணல் போன்ற வஸ்து வெளியேறுதல்.... காது சவ்வு தடித்து விடுவதாலும், தொண்டை கோளாறுகளாலும் ஏற்படும் செவடுகள் இது ஒரு நல்ல மருந்து.

மூக்கு
தும்பல், ஜலதோஷம், வெள்ளை சளி, பகலிலும் இரவிலும் மூக்கிலிருந்து ரத்தம் வருதல்.... பலத்தினாலும் மூக்கிலிருந்து நிறைய சளி வெளியேறி விட்டதால் ஜலதோஷம் குறையும்.... மூக்கின் வேர்கள் அரிப்பு இது ஒரு நல்ல மருந்து

பற்கள்
பொதுவாக இதற்கு  CF மற்றும் KM சேர்த்து சாப்பிட்டாலே அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும். சொத்தை, ஈறு வீக்கம், கட்டிகள், நீரில் வீங்கி வலிக்கும் பொழுது ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு இது ஒரு அற்புதமான மருந்து, நன்றாக வேலை செய்யும்.... சீழ் பிடித்த இடத்தில் சில சமயங்களில் silica கொடுக்க நேரிடும் மிக அற்புதமாக வேலை செய்யும்.

வாய், தொண்டை
வெள்ளையாக மாசுபடிந்த நாக்கு புளிப்பான...அதிக எச்சில்.... கண்ணங்களில் உட்புறத்திலும், உதடுகளிலும், நாக்கிலும் புண் போன்ற நிலையும் தன்மையிலும் இது நன்றாக வேலை செய்யும் மருந்து.

தொண்டையில் வீக்கம் புண்கள் டிப்ரியா இந்த சமயங்களில் FP சேர்த்து சாப்பிட வேண்டும் இரண்டாவது கட்டத்தில் இருந்தாலும் இது நல்ல மருந்து டான்சில் வீக்கத்துக்கு இது ஒரு நல்ல மருந்து.

சுவாசக் கருவிகள் (நுரையீரல்)
நிமோனியா ஆஸ்துமா மற்றும் சுவாச கழிவுகளில் உள்ள எல்லா கோளாறுகளுக்கும் இது கொடுக்கப்படுகின்ற துணை மருந்தாக வேலை செய்யும் இரும்பல் நாய் குறைப்பது போன்ற ஓசையுடன் இருந்தாள் மூச்சடைக்கும் இருமலாக இருந்தால் ரத்தம் வரும் இருமலாக இருந்தால் இந்த மருந்து ஒரு நல்ல மருந்து....

இருதயம்
சுவாசம் கருவிகளில் கோளாறுகளால் இருதயம் அழுத்தப்படுவதால் அதனால் இருதயம் படபடப்பு பலவீனமான நாடி இருதயம் உள்ள சலிப்பு தன்மையான தொந்தரவுகளுக்கு இது ஒரு நல்ல மருந்து

வயிறு
பசியின்மை கல்லீரல் கோளாறுகள் பசியின்மை சாப்பிட்ட பிறகு வயிற்று வலி கொழுப்பான ஆகாரங்கள் ஒத்துக் கொள்ளாத தன்மை புளித்த ஏப்பம் மாலையில் விக்கல் வயிறில் காலியான உணர்வு வலது புறத்தில் கல்லீரல் பக்கம் கனத்த தன்மை வீக்கம் மஞ்சள் காமாலை நோய்களுக்கு இது ஒரு நல்ல மருந்து நாக்குப்பூச்சி நாடா பூச்சி வயிற்றில் உள்ள பூச்சிகளை  அந்தப் பூச்சிகளை அழிப்பதற்கு இது பயன்படும்

மலம்
கல்லீரல் பலவீனத்தால் மலச்சிக்கல், மலம் வெளுத்து மஞ்சள் ஆயிருக்கும், வெள்ளை கயிறு போன்ற சீத மலத்துடன் இருக்கும்... ஆசனத்தில் அரிப்பு வலி.... சாப்பிட்ட உடனே வயிற்றுப்போக்கு.... வெள்ளையாகவும் இருக்கும். டைபாய்டு ஜுரத்தில் ஏற்படும் வயிற்றுப்போக்கு, ரத்த போக்கு, சீதபேதி, வலியுடன் கூடிய மலச்சிக்கல், வலியுடன் கூடிய மலம் அவசர அவசரமாக மலம் கழிக்க வேண்டும் என்ற ஒரு உந்துதல்.... உள்ள நிலையில் இந்த மருந்து ஒரு நல்ல தீர்வை கொடுக்கும்.

🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽


Friday 4 February 2022

ஹோமியோபதி மருந்து நக்ஸ் வாமிகா Nuxvomica

நக்ஸ் வாமிகா... nux vomica ஹோமியோபதி மருந்தின் குணங்கள்.


இம்மருந்து பல வகையான உடல் உபாதைகளுக்கு அடிக்கடி பயன்படக்கூடிய
ஒரு மருந்து. உடல் உழைப்பில்லாமல் உட்கார்ந்தே வேலை பார்ப்போருக்கு
ஏற்றது.மிக அதிக மன உழைப்பு, முறையற்ற உணவுப் பழக்கம், முறையற்ற தூக்கம், பல்வேறு விதமான மருந்துகளை முறையற்று எடுப்பவர்களுக்கு நக்ஸை எடுக்க குணமேற்படும்.பொறாமை, கோபத்துடன் எரிந்து விழுதல்,மிகுந்த
முன் கோபம்,பதற்றம்,கவலை,மது அபினி காபி மற்றும் மசாலா உணவுகளை கண்ட நேரங்களில் உண்பது போன்ற பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்றது.மலச்சிக்கல், ஜீரணக் கோளாறுகள்
வயிற்றை அமுக்கினால் வேதனை வலி. சிறிது சாப்
பிட்டாலும் வயிறு நிரம்பிய
உணர்ச்சி.இரவில் தூக்க
மின்றி அதிகாலையில் ஆழ்ந்த தூக்கம் தூங்குதல்.
சுய நினைவுடன் வரும் வலிப்பு, சிறு அசைவினாலும் வலிப்பு.நோயாளி நடக்கும் சமயம் பாதங்களை தேய்த்தே நடப்பார்.மலச் சிக்கலில் தூண்டுதல்
அடிக்கடி இருந்தாலும் ஒவ்வொரு முறையும் சிறிதளவே மலம் வெளியேறும்.மலம் கழித்த பின் உபாதைகள் சமனம்.
                       
நக்ஸ் வாமிகா.

பயனற்ற பிரசவவலியினால் பிரசவ
சமயம் சிரமப்படும்;
இந்த பயனற்ற வலி மலப்பை, சிறுநீர்ப் பைக்குத் தாவி அடிக்கடி மலம் சிறுநீர்
போகத்தூண்டுதல்.உடல் குறிகள் வாந்தி எடுப்பதாலும்,
மலம் கழிப்பதாலும் தணியும்.சாப்பிட்ட 1 அல்லது 2 மணிக்குப் பிறகு வயிற்றில்
கல் போன்ற கடினத் தன்மை வாயில் கசப்பு சுவை.
தீவிரமான குமட்டல்.தீவிரமான விக்கல்.வாந்தி கருப்பு நிறமாக வெளிப்படுதல்.
மலேரியா காய்ச்சலில் குளிர்,சூடு,வியர்வை ஆகிய மூன்று நிலைகளிலும் படுத்து கொண்டே இருக்க விரும்புதல்.மாதவிலக்கு போக்கு வழக்கத்திற்கு முன்பே வெளிப்படும்;நீண்ட
நாள் நீடித்து அதிகமாகப்
போகும்.கெண்டைக்காலில்
இழுத்துப் பிடிக்கும் கடுமையான வலி.இடது பக்க குடல்
பிதுக்கம்.சுய இன்பம் கண்டதால் வரும் பின் விளைவுகள். மலட்டுத்தன்மை.சிறுநீர்பை பாரிசவாதத்தில் சிறு
நீர் சொட்டுச் சொட்டாக வருதால்.போதிய அளவு ஆண்
குறி விறைக்காமலிருத்தல்.
திக்குவாய்.இடது பக்க பாரிச வாதம்.
                      
நக்ஸ் வாமிகா.

ஆத்திரத்துடன் பிறரை அடிக்கவே கூட
சென்று விடுவார் தீய எண்ணம், பொறாமை,குரோதம்,தற்கொலை செய்து கொள்ள கடுமையான உந்தல்; ஆனால் சாவு பயம்.
பிறர் சொல்லும் மாறுபட்ட
கருத்து இவருக்கு எரிச்சலைத்
தூண்டும்;உடனே கோபப்
படுவார். கெட்டியான வாசனையையும், துர்நாற்ற பெட்டியையும், பிரகாசமான வெளிச்சத்தையும்,பலமான சப்தத்தையும் இவர் தாங்கிக் கொள்ளமாட்டார்.கூட்டமாய் இருப்பதில் வெறுப்பு.
பிறரிடம் குற்றம் கண்டுபிடிக்கும் குணம்.பொறுமையின்மை,வலியை தாங்க
இயலாது.

பின்மண்டை மற்றும் கண்களின் மேல் வலியுடன் தலை சுற்றல்.ஒருவினாடி
நினைவின்றி மயக்க நிலையுடன் தலை சுற்றல்
உச்சந் தலையில் ஆணி அடிப்பது போன்ற அமுக்கும்
வலி. காலையிலும், மதிய
உணவிற்கு பின்பும் தலை
சுற்றல்.மண்டைத்தோலில்
உணர்ச்சிகள் அதிகரித்த
நிலை.நெற்றியில் கடுமையான வலியுடன் நெற்றியை
ஏதாவது ஒரு பொருளின் மீது அழுத்திக்கொள்வார்.
மூல உபாதையுடன் தலையில் இரத்தத் தேக்கத்துடன்
வலி.சூரிய ஒளியில் தலை
வலி.தலை உடலை விட பெரிதாக இருப்பது போன்ற
மாய எண்ணம்.தலைச்சுற்றல் பக்க வாட்டில் தள்ளும்.

கண்கள் வெளிச்சத்தைப்
பார்த்தால் கூசும்.இமைகளின் உட்பக்கம் வறட்சி.
கண்குழியின் கீழ் உட்பகுதியில் நரம்பு வலியுடன் கண்ணீர் வடிதல்.கண் தசைகளில் பாரிச வாதம். கண் முழுமையிலும் ஏற்படும் துல்லல் பின் மண்டைக்குத்தாவும்.

காது நடுச் செவிக்குழல் வழியாக அரிப்பு.வறட்சி. உணர்ச்சிகள் அதிகரித்த நிலை.காது வலி.பலமான
சப்தம் வலி எரிச்சலை உண்டாக்கும்.

அடைபட்ட மூக்கு.இரவில் வறண்ட குளிர்ந்த சூழலில் சிக்குவதால் மூக்கடைப்புடன் சளி பிடித்தல் .சூடான
அறையில் அதிக சிரமம்.வாசனையால் மயக்கம்.

நக்ஸ் வாமிகா.

மூத்திரம் அடிக்கடியும் அவசரமாகவும் வரும். ஆனால் குறைவாகவே வரும்.சிறிது நேரம் முயற்சிக்க வேண்டும்.
வலியுடன் சில சொட்டுக்களே கழிதல்,முக்கியமாக வயதானவர்களிடத்தில். மூத்திரப்பை சக்தியிழத்தல்,மூத்திரக் காய்களில் வலி வலது தொடைக்குத் தாவும்.மூலத்தின் இரத்தப் போக்கு அல்லது மாதவிடாய் தடைப்பட்ட பிறகு, மூத்திரத்தாரை வழியாக இரத்தப் போக்கு.

காமக்கனவுகளுடன் இந்திரிய ஸ்கலிதம்,அதனால் காலையில் இடுப்புவலி, தலைவலி. மித மிஞ்சிய சிற்றின்பநுகர்ச்சியினாலும், முஷ்டி மைதுனத்தாலும் ஏற்பட்ட கோளாறுகள். ஹெர்னியா
எனப்படும் குடலிறக்கம்.

மாதவிடாய் முன்னதாகவும்
குறைவாகவும்,அதிகமாகவும்,நீடித்தும்,ஒழுங்கற்றும்
கருப்பாகவும் இருக்கும். மாதவிடாய்க்கு முன் குளிர்,குமட்
டல், விடாய்க்குப் பிறகு மஞ்சள் நிறமான வெள்ளைப்பாடு.கனமான சுமையைத்
தூக்கியதால் யோனி வெளித் தள்ளுதல்.பிரசவ வலிதாறு மாறாயிருத்தல், பிடிப்பு வலிகள்

நடுநிசியிலிருந்து காலை
வரை வறண்ட இருமல்.
இருமும் போது தலையிலும்
வயிற்றிலும் வலி.அதிகமா
க சாப்பிட்டாலும்,அஜீரணத்
தாலும் இருமல்.கஷ்ட சுவாசம்.

குளிர் தாக்கியதால் கழுத்தில் பிடிப்பு. தோள் பட்டைகளுக்கு நடுவில் எரிச்சலும் பிடிப்பு வலிகளும் இடுப்பில்
கடுமையான பிடிப்பு வலி.

நக்ஸ் வாமிகா..

பகலில் ஒழுகும் ஜலதோசம்.இரவில் மூக்கடைப்பு.மூக்கு துவாரங்கள் மாறி மாறி அடைத்துக் கொள்ளுதல். மூக்கிலிருந்து
காலையில் இரத்தப் போக்கு மூக்கடைத்த உணர்வுடன்
காரமான கழிவு மூக்கிலிருந்து வெளியேறுதல்.

தாடை சுருங்குதல். ஈறுகள்
வெளுத்து வீங்கி இரத்தம்
கசிதல்.மேல் தொண்டையில் உமிழ் நீர் சுரத்தல்.வாய் வறண்டு புண்ணுடன்
இரத்தம் தோய்ந்த உமிழ்நீர்.

தொண்டை வறண்ட உணர்வு. முன் தொண்டையில் நெருக்கும் உணர்வு.உள் நாக்கு வீங்கி விடுதல். விழுங்கும் சமயம் தொண்டையிலிருந்து  காதுகளுக்கு தைக்கும் வலிகள் தாவும்.

இரைப்பை புளிப்புச் சுவையுடன் காலையில் குமட்டலும் வாந்தியும்.சாப்பிட்ட 2
மணிக்குப்பிறகு வலியும்
கனத்த உணர்வும்.உப்பி விடுதல் .ஓக்காளத்துடன் குமட்டலும் வாந்தியும்.அஜீரண உபாதை தோன்றுவதற்கு முதல் நாள் அகோரப்பசி.
காரமான மசாலா உணவில்
விருப்பம்.கொழுப்பு உணவை விரும்பி உண்பார்.நன்கு ஜீரணமாகும்.வாயு சேர்ந்து கடுமையாய் வயிறு உப்பி விடும்.கடுமையாய் புளிப்பு வாந்தி. நெஞ்சுக் கரிப்பு.வயிற்றிலிருந்து புளிப்பு நீர் தொண்டைக்கு ஏறுதல்.
வாந்தி எடுத்தால்தான் சௌகரியமாயிருக்கும்.

இருமுவதாலும் படியிறங்குவதாலும் அதிக வலி. வயிற்றில்விட்டு விட்டு
வலியுடன் வாயு சேர்ந்து உப்பிவிடுதல். கல்லீரல் விரிவடைந்து தைப்பது போன்றவலியும் புண்போன்ற வலி
யும், பித்த கற்களால் வலியும் தாக்குதல்.வயிற்றைச்
சுற்றிலும் வட்டமான பகுதியில் பலவீனம்.இரத்த ஓட்டம் தடைபட்டு குடல்கள் இறுக்கப்பட்ட நிலையில் உள்ள குடல் இறக்கம். குழந்தைகளின் தொப்புள் பகுதி குடல் இறக்கம்.இடது பக்க குடல் இறக்கம்.அதிக மது
அருந்தியதால் கல்லீரல் வீக்கம்.

மலச்சிக்கல். மலம் கழிக்க
அடிக்கடி தூண்டுதல்.சிறிதளவே மலம் வெளிப்படும். மலம் கழிப்பதில் திருப்தியற்ற நிலை.மலம் கழிக்க
சிறிதும் தூண்டுதல் இல்லாதவர்களுக்கு நக்ஸ் பயன்
படாது.
                            
  நக்ஸ் வாமிகா.

கைகால் துவண்டுவிடு விடுதல்.கால்களில் மரத்ததன்மை.
பாரிசவாதம் வந்தது போன்ற நிலை.கெண்டைக்காலிலும் பாதத்திலும் இழுத்துப் பிடிக்கும் வலி. கடுமையான உழைப்பு மற்றும் நீரில்நனைந்து விடுவதால் சில உறுப்புகளில் மட்டும் வரும் பாரிச வாதம்.அசைவதால் முழங்கால்
மூட்டில் வெடிக்கும் ஒலி.
கால் மூட்டு வீக்கத்தில் நடக்கும் சமயம் கால்களை இழுத்து இழுத்தே நடப்பார்.பலவீனமும் பாரிசவாதமும்
வலிப்பும் தசைகளில் விறைப்பும்.

அதிகாலை 3 மணிக்கு மேல் காலை வரை தூக்கமின்மை.விடியும் சமயம்
தூங்கினால் புத்துணர்வின்மை.சாப்பிட்டபின் தூக்கக்கலக்கம்.பரபரப்பான கனவுடன் தூக்கம்.

உடம்பில் சூடான எரிச்சல்.குறிப்பாக முகத்தில் சூடான
எரிச்சல்.இருப்பினும் நோயாளி உடம்பை போர்த்திக்
கொள்வார். வயிற்று உபாதைகளுடன் கடுமையான சரும அரிப்பு.சிவந்த முகப்பரு.நெற்றியில் வலியுடன் வீக்கம்.

காய்ச்சலில் குளிர்ந்த நிலைமேலோங்கி, அதிக குளிர் நடுக்கத்துடன்,விரல்
நகங்களில் நீலம் பாரித்தல்.
உடலின் ஒரு பக்கம் மட்டும்
புளிப்பான வியர்வை.

வலிப்புடன் டெடனஸ் போன்று அனைத்து தசைகளிலும் விறைப்பு.
தாடை விறைத்து மூடிக்
கொள்ளுதல்.தலைவலி
சூடான அறையிலும் அமைதியாக உட்கார்ந்திருந்தாதும்,படுத்திருந்தாலும் தலை வலி குறையும்.காலை
10 அல்லது11 மணிக்கு குளிர் தாக்கும்.
                                                        

நன்றி - மருத்துவர் ராமலிங்கம்.

ஹோமியோபதி மருத்துவம் மூன்று மூல விஷங்கள் அவை சரி செய்யும் முறைகள்.

ஹோமியோபதி மருத்துவம் மூன்று மூல விஷங்கள் அவை சரி செய்யும் முறைகள்.

மூல விசங்களான மூன்று...
1.சோரா.(Psora)
2.சிபிலிஸ்.(Syphilis)
3.சைகோசிஸ்
(Sycosis)
எல்லாவியாதிகளுக்கும் மூலகாரணமானது மனதில்
ஏற்படும் மன அரிப்பே 'சோரா' .

இதுவே பிறகு உடலில் அரிப்பாக வெளிப்படும். மூல விசம் இல்லாத
மனிதன் உலகில் இல்லை.
சோரா தொற்றும் குணமுள்ள ஒரு பயங்கரமான விசம்.
டாக்டர் "ஹானிமன்" அவர்கள் "ஹோமியோ" முறைப்படி
குணப்படுத்த முடியாத பல
நோய்களில் நோயாளிக்கு
முன்பு ஏதோ ஒரு காலத்தில்
ஏற்பட்ட சொறி சிரங்கு தான்,நோய் மீண்டும் திரும்ப  வராமல் குணமாவதற்குத் தடையாக இருக்கிறது எனவும் கண்டறிந்தார்.அதைத்தான் "சோரா" எனக் குறிப்பிட்டார்.
                       

மூல விசங்களில்
முதல் விசம்"சோரா"
(Psora)..
தவறான மருந்துகளைக் கொண்டு சருமத்தின் மேலே தோன்றும் உபாதைகளை அமுக்குவதால் அது உடலின் உள்ளே சென்று அது   சோரா  வாக உருவெடுத்து பல உடல் உபாதைகளை உண்டாக்குகிறது
சோரா எனும் சொறி சிரங்கு
வியாதி விசமுள்ள நாட்பட்ட
வகை நோய்கள் அனைத்திற்கும் முதன்மையானது.
எண்ணற்ற முகங்களைக்
கொண்டது. மிகப் பழமையானது. மிக்க அழிவு சக்தியுள்ளது. உலகெங்கும் நீக்கமறப்
பரவியுள்ளது. சொறிசிரங்கு
போன்ற சரும உபாதைகள்
சில சமயம் அமுக்கப்படாமலேயே கூட தானாகவே உள்ளே அமுங்கி  சோரா பலமாக பல்வேறு முகங்களாக உருவெடுக்கும்.

சோரா...சிபிலிஸின்
பறங்கிப் புண்ணும்
(Syphilitic Ulcers),
சைகோசிஸின் துர்சதை வளர்ச்சியும்(Extra growth of sycosis)தாமாகவே உள்ளே அமுங்கி வேறு
நோய்களை உண்டாக்காது.
சிபிலிஸின் பறங்கிப் புண்ணும்,சைகோசிஸின் துர் சதை வளர்ச்சியும் வெளிப்புற மருந்து கொண்டு அமுக்காவிடில் அவை ஆயுட்காலம் முழுதும் வெளிக்குறிகளாகவே இருந்து விடுபடும்.
எனவே சோரா தான் மிகுந்த ஆபத்தை விளைவிக்கும் விசம். சரும உபாதைகளை
உள்ளே அமுக்கினால் சோரா மேலும் பலம் கொண்டு க்ஷயம்,கல்லீரல்
உபாதைகள், ஹிஸ்டீரியா
போன்ற நூற்றுக்கணக்கான வேறுவிதமான உபாதைகளாக உருவெடுக்கும்.சொறி சிரங்கு என்கிற சோரா
நோய் நீடிக்கும் வகையைச்
சேர்ந்த நச்சுக் குண நோய்கள் அனைத்திலும் அதிகமாகத் தொற்றக்கூடியது.
உடல் உறுப்பின் இயக்கக்
கோளாறுகள்(Functional
disorders)அனைத்திற்கும்
சோராவே காரணம்.
       
        சோரா..Psora...
சோரா நோயாளி மிகவும் பிரகாசமானவர். சுறு சுறுப்பானவர், காரியங்களை வேக வேகமாக செய்வார்,நோய் பயம்,சாவு பயம்,
பொறுமையின்மை,ஞாபக
மறதி,இதய பட படப்பு,தலை
சுற்றல்,தோலில் அரிப்பு,தலையில் அரிப்பு,தலைப்பொடுகு,தலைமுடி வறட்சியுடன் சிக்கு விழுதல்,அரிப்புடன் கண் வேக்காடு,வாயில்
புளிப்பு, இனிப்பு,கசப்பு சுவை தென்படுவதில்லை,
அதிக பசி ஆனால் சீக்கிரம்
பசி அடங்கி விடுதல், புளிப்பு இனிப்பு உப்புப் பொருளில் ஆசை.சூடான
உணவு மற்றும் வறுத்த உணவில் விருப்பம்,தூக்க
மின்மை,தூங்கும் சமயம்
பற்களைக் கடித்தல்,கடுமையான மலச்சிக்கல்.சில சமயம் ஆட்டுப் புழுக்கை
போன்ற மலம் வெளிப்படுதல் அனைத்து மாதவிடாய் பிரச்சனை,புளித்த கசப்பான ஏப்பம்,சீழ் பிடிக்கின்ற சுவாச கோச க்ஷயம்,முலைகளில் புற்று,
குழந்தைகளின் குடற்புழு
உபாதைகள் அனைத்தும் சோராவின்குறிகள்.
                              
     சோரா...Psora..
 சோரா விசம் உடலில் ஏற்கனவே இருந்தால்தான் சிபிலிஸ் விசமோ சைகோசிஸ் விசமோ உடலில் உள்ளே
நுழைய முடியும்.சோரா விசம் ஒருவர் உடலில் தனித்து
இருக்கலாம்.ஆனால் சிபிலிஸ் சைகோசிஸ் விசங்கள் தனித்து இருக்க
முடியாது.ஏற்கனவே உடலில் சோரா விசம் இருப்பின் சிபிலிஸ் விசம் நுழைந்து சோரா+சிபிலிஸ் விசங்களின் கெடுதல்கள் வியாதிக்
குறிகளாக உருவெடுக்கும்.
அதே போல் சோராவுடன் சைகோசிஸ் சேர்ந்து அவ்விரு விசங்களின் கெடுதல்களை உடலில் ஏற்படுத்தும்.ஒருசிலருக்கு சோராவுடன் சிபிலிஸ் மற்றும் சைகோசிஸ் விசங்கள் கூட்டாகச் சேர்ந்து மூவகை விசங்களின் கெடுதல்களையும் வியாதிக் குறிகளாக வெளிப்படுத்தும்.

🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽
     
   2.சிபிலிஸ்.(Syphilis).

உடல் உறவுக்குச் சிலநாட்களுக்குப்
பின் பிறப்புறுப்பில் பறங்கிப்புண் ஏற்படும்.அரையாப்புக் கட்டிகள் புண்கள்.நாக்கில் வீக்கம் புண்.ஈறுகள் பஞ்சு போலாதல் இரத்தம் வருதல்.ஈறுகளில் புண்கள்
வாயில் துர்நாற்றம்.விரைகள் அழுகுதல்.ஞாபக மறதி.
தன்னம்பிக்கை குறைதல்.
தற்கொலை நினைவுகள்
அடிக்கடி வருதல்.சூடு குளிர்
இரண்டும் ஒத்துக் கொள்ளாத நிலை.எதிலும் முட்டாள் தனமான அவசரம்.இரவில் உபாதை அதிகம்.படுக்கை சூட்டினால் உபாதை அதிகம்.உமிழ்நீர் அதிகம் வெளிப்படும் .எலும்புகளில் வீக்கம்.எலும்புகளில் வலி.குறிப்பாக இரவில் அதிக வலி.களைப்பை ஏற்படுத்தும் இரவு வியர்வை.கல்லீரல் வேக்காடு.
வெளிறிய கறுப்பு நிற சரும
உபாதைகள்.நாக்கிலும் உதட்டிலும் வெடிப்புக்கள்.
மந்தமான மனம்.அறிவின்மை.முட்டாள்தனம். இவையாவும் சிபிலிஸின் குறிகள்.
                                

சிபிலிஸ்.
சிபிலிஸ் வியாதியுள்ள பெண்களுடன் உடல் உறவுகொள்வதால் சிபிலிஸ் விசம் உடலில் நுழைகிறது. உடல் உறவில் ஈடுபட்ட அக்கணமே உராய்வின் மூலம் பட்ட இடத்தில்
தொற்று ஏற்பட்டு விடுகிறது.
தொற்று உராய்வின் அக்கணமே ஏற்பட்டு-விடுவதால்
உடல் உறவுக்குப்பின் அவ்
விடங்களை எவ்வளவுதான்
சுத்தம் செய்தாலும், சுத்தமாக கழுவினாலும் பயனில்லை.தொற்று ஏற்பட்ட உடன் விசம் உடலெங்கும் பரவி விடுகிறது.பிறகு சுமார் ஒரு வாரத்திற்குள் அவ்விடத்
தில் உள்ளிருக்கும் சிபி
லிஸ் நோயின் பிரதிநிதியாக பறங்கிப்புண்(Chancre)
ஏற்படுகிறது. அப்பறங்கிப்
புண்ணைக் கொடூரமான
வெளிமருந்துகளைக் கொண்டு அமுக்குவதால்
அது மீண்டும் உடலின் உள்ளே நுழைந்து அரையாப்புக் கட்டி போன்ற
பயங்கரமான வேறு முகங்களை எடுத்துக் கொள்கிறது.
உடல் உறுப்பின் அழிவுக்கு
காரணம் சிபிலிஸ்தான்.

            🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽

3.சைகோசிஸ்.. Sycosis ..

உடல் உறவுக்குப் பிறகு பெரும்பாலும்
இந்த துர்சதை பிறப்புறுப்புக்களிலேயே முதலில் தோன்றுகிறது. இத்துடன்
மூத்திரப் புற வழியில் மேக
வெட்டை(Gonorrhoea) போக்கும் வெளிப்படும்.இவ்விசம் முறையற்ற சிகிச்சையால் உள்ளே அமுங்கி உடலில் வேறு இடங்களில் துர்ச்சதை வளர்ச்சியாக உருவெடுக்கிறது. மேலும் அது பல உருவங்களை எடுத்து உடலில் பல இடங்களில்
தடிப்புக்களாவும் மூட்டு
வேக்காடுகளாகவும் இன்னும் பல உபாதைகளாகவும்
வெளிப்படும். உடலில் அதிகப்படியான எல்லாவகையான சதை வளர்ச்சிக்கும் காரணம் சைகோசிஸ்தான்.
எரிச்சலடையும் குணம்.பொறுமையின்மை..பேசும் போதும் எழுதும் போதும் எண்ணங்களை வெளிப்படுத்த
சரியான வார்த்தைகளைத்
தேட வேண்டிய நிலை.உண்மைகளை மறைக்கும் குணம்.எந்த ஒரு டாக்டரிடமும் திருப்தியடையமாட்டார்
அடிக்கடி டாக்டரை மாற்றுவார்.பேச்சிலும் செயலிலும்
தடை ஏற்படும்.தன்வியாதி
குணமாகாது என அவநம்பிக்கையடைதல். தவறான
செயல்களைச் செய்ய மனதில் தூண்டுதல்.எப்பொழுதும் பாவங்களை நோக்கியே மனம் செல்லுதல்.மனிதனை நேசிக்காத தன்மை. மூட்டு வாதம்,கீழ் வாதம்,
இடுப்பு வாதம், அரையாப்பு
கட்டிகள், சினைப்பையில்
வேக்காடு,சிறுநீர் பாதை உபாதைகள்.சுக்கில சுரப்பி
வேக்காடு,பைத்தியம்,உடலில் வரும் மரு, துர்சதை வளர்ச்சிகள், சதைக்கட்டிகள் அமுக்கப்பட்ட மேகவெட்டை,
குடல்வால் வேக்காடு, மூல உபாதை, புற்று,கருப்பைக் கட்டிகள், ஞாபக மறதி.
                                 
  சைகோசிஸ்...
Sycosis...

சைகோசிஸ் நோயாளி அடிக்கடி சிறுநீர் கழிப்பார்.குறிப்பாக
புயல் மழை வீசப் போவதற்கு முன்பு இவர் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்.புயல் மழை வீசுவதற்கு முன்பு இவர் மனநிலை பாதித்து
மிகுந்த கோபத்துடன் எரிச்சலடைவார். சைகோசிஸ் நோயாளி நீதி நேர்மை பற்றி கவலைப்படமாட்டார்
தவறுகளையே செய்யும் குற்றவாளியாக மாறி விடுவார்கள்.அதிகம் பொய்
சொல்வார்.கெட்ட பழக்கமுடைய போக்கிரி யாகவும்,அயோக்கியனாகவும் சைகோசிஸ் விசம் அவரை மாற்றி
விடும்.மற்றவர்கள் அவர் மேல் அன்பு செலுத்தாத அளவு அவர் கெட்டவனாகவும், கொடூரமானவராகவும்
மாறிவிடுவார்கள். குறுகிய
மனம் படைத்தவராக வரும்,
தன்னலமிக்கவராகவும் மாறி விடுவார்.சந்தேகக் குணம் படைத்தவர் ,கெட்ட நடத்தையுள்ள குறும்புக்கார், குறுகிய மனம் படைத்தவர், தன்னலமானவர், ஞாபக
மறதியுடையவர்.                                                🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽

3 விசங்களை போக்க
ஹோமியோ மருந்து தரும் முறை...


மீண்டும் மீண்டும் அதே உபாதைகள்
வராமலிருக்க அந்தந்த உபாதைகளுக்குப் பொருந்துகிற விசக்கூறுகளை முறிக்கும்
விச முறிவு மருந்துகளாகத்
தேர்ந்தெடுத்துத் தரவேண்டும். சோரா குறிகளாயிருப்பின் தேர்ந்தெடுத்துத் தரும்மருந்தும் சோரா விசத்தை
அடக்கும் மருந்தாகவும் இருக்க வேண்டும். 2 அல்ல
து 3 விசங்களும் உடலில்
இணைந்து குழம்பிய நிலையில் இருப்பின் முதலில் சோரா குறிகளுக்குப் பொருந்தும் மருந்தினைத்
தேர்ந்தெடுத்துக் கொடுத்து
பெரும் பகுதியான அவ்விசத்தினை நீக்கவேண்டும்.
பிறகு அடுத்த இரண்டு விசங்களில் எந்த விசத்தின்
குறிகள் பெரும்பான்மையாக தலை தூக்கியுள்ளதோ
அதற்கான மருந்தினைக்
கொடுக்க வேண்டும். பிறகு
எஞ்சியுள்ள விசத்தை முறிக்க அவ்விசத்தை முறிக்கும் மருந்தாகத் தேர்ந்தெடுத்துத் தரவேண்டும்.
கடைசியில் மீதமிருக்கும்
சோரா விசத்தைச் சோரா
விச அடக்கி மருந்துகளைக்
கொண்டு குணப்படுத்த
வேண்டும்.

நன்றி ; மருத்துவர் ராமலிங்கம்..