Sunday 18 June 2017

பணம் பெருக எதிரிகள் தொல்லைஅடங்க மூலிகை

பணம் பெருக எதிரிகள் தொல்லைஅடங்க மூலிகை
ஆடி மாதம் வளர்பிறை ஞாயிற்றுகிழமையில் மாலையில் 6-7க்குள் முறைப்படி தொட்டார்சிணுங்கி செடிக்கு மஞ்சள் நூல் காப்பு கட்டி,தூப தீபம் நிவேதனம் செய்து செடியை வேண்டி கொண்டு வேர் அருகாமல் செடியை எடுத்து ஆயுதம் படாமல் சிறிது வேர் எடுத்து, பின்பு மீண்டும் செடியை நட்டு வைத்து மஞ்சள் நீரூற்றிவிட்டு, எடுத்த வேரை நீரால் அபிஷேகம் செய்து, பின்பு மஞ்சள் தடவி தூப தீபம் காண்பித்து நம் வீட்டின் பணப்பெட்டியில், தொழில் செய்யும் இடங்களில் வைத்து கொண்டால் பண வரவு மிகுவதோடு, எதிரிகள் தொல்லையும் அடங்கி போகும்.
வளர்பிறை வியாழ கிழமையில் காய் காய்க்காத வில்வ மரத்தின் வடக்கே செல்லும் வேரை, மரத்தை வேண்டி, ஆயுதம் படாமல், மஞ்சள் நூல் காப்பு கட்டி,தூப தீபம் காட்டி ,நிவேதனம் கொடுத்து வீட்டிற்க்கு எடுத்து வந்து நீரால் அபிஷேகம் மற்றும் மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்து தூப தீபம் காட்டி வெள்ளி தாயத்தில் அடைத்து கழுத்தில் அணிந்து கொண்டால் துஷ்ட ஆவிகள் பிடித்திருந்தால் விலகும், பேய்- பிசாசு அண்டாது, பண வரவு மிகும். பெண்களுக்கு மாத விடாய் காலங்களில் அதிக ரத்த போக்கு இருப்பின் ஒரு துண்டு வில்வ வேரை வலது கை மணிக்கட்டில் கட்டி விட்டால் உடனே இரத்த போக்கு மட்டுப்படும். வீட்டில் இந்த மரத்தை பய பக்தியுடன் வளர்த்து வர சகல ஐஷ்வர்யங்களும் கிட்டும்.
கஷ்டங்கள் அனைத்தும் விலக குப்பைமேனி
எதிரிகளால் வஞ்சிக்கப்படுத்தல், உறவினர்களால் மற்றும் நண்பர்களால் ஏமாற்றப்படுத்தல், கஷ்ட நஷ்டங்கள், கடன் தொல்லை, தரித்திர நிலை, எதிரிகளின் மிகுந்த தொல்லை, தர்ம நியாயம் இல்லாத வம்பு வழக்குகள் அகல : சனிக்கிழமைகளில் காலை 6-7 மணிக்குள் குப்பைமேனி மூலிகையை (செடி) வேர் அராமல் பிடுங்கி எடுத்து வேரைமட்டும் பூஜையில் வைத்து பூஜித்து வர,மேற்சொன்ன அனைத்தும் விலகி ஓடும்.கோர்ட், வழக்கு போன்றவற்றிர்க்கு போகும் பொழுதும், எதிரிகள் தொல்லைஅதிமாகும் போதும் இதன் வேரை தன்னுடன் எடுத்து சென்றால் ஜெயம் உறுதி. இதன்வேரை எடுத்து சென்றால் காட்டு யானைகளும் பயந்து ஓடும் என்பது முன்னோர்வாக்கு.

முத்தான பற்களுக்கு மூலிகை பற்பொடி!

முத்தான பற்களுக்கு மூலிகை பற்பொடி! - பலம், பலன் தரும் பாரம்பர்யம்.
‘உறுதியான பல்லுக்கு உத்தரவாதம்’, `ப்ளஸ் வொயிட்னிங்’, `மல்ட்டி ஆக்‌ஷன் ஃப்ளோரைடு’, `டாக்டர்கள் பரிந்துரைப்பது’... என நீண்டுகொண்டே போகிறது இன்றைக்கு மார்க்கெட்டில் கிடைக்கும் பற்பசைகளின் வகைகள். இவற்றில் எதுவாகவும் இருக்கட்டும்... நம் பற்களுக்கு அது உண்மையான பாதுகாப்பை அளிக்கிறதா என்றால் மிஞ்சுவது மௌனமே!
நம் முன்னோர்கள் ஆரோக்கியமான பற்களைப் பெற எந்தப் பற்பசையையும் பயன்படுத்தவில்லை. ‘ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி!’ என்பது முதுமொழி. அதற்கேற்ப இயற்கை மூலிகைக் குச்சிகளையும், அவற்றைக்கொண்டு தயாரிக்கப்பட்ட மூலிகைப் பற்பொடியையுமே பயன்படுத்தினார்கள்.
“பாரம்பர்யமான சில மூலிகைப் பற்பசைகளைப் பயன்படுத்தினால் பற்களின் ஆரோக்கியம் காக்கலாம்’’ என்கிற சித்த மருத்துவர் தளவாய், எந்தக் குச்சியால் பற்களைத் தயாரிக்கலாம், பற்பசைகளை எப்படித் தயாரிப்பது, பற்பசைகளின் பலன்கள் அனைத்தையும் விவரிக்கிறார் இங்கே...
கருவேலங்குச்சி
கருவேல மரம் அல்லது கருவமரம் என்பது காடுகளில் வளரும் ஒரு வகை முள்மரம். கருவக்குச்சிகளை ஒடித்து, அப்படியே பல் துலக்கலாம். இது, ஈறுகளில் உண்டாகும் ரத்தக்கசிவைப் போக்கக்கூடியது. சர்க்கரை நோயையும் குணப்படுத்தும் ஆற்றல்கொண்டது.
வேப்பங்குச்சி
வேப்பங்குச்சியால் பல் துலக்குவதும் ஒரு பழங்கால முறை. இன்றும் கிராமப் பகுதிகளில் பலரும் வேப்ப மரத்தில் இருந்து ஒரு குச்சியை ஒடித்து, பல் துலக்குவதை ஒரு பழக்கமாக வைத்திருக்கின்றனர். இதனால் அவர்களின் பற்கள் உறுதியாகின்றன. அதற்குக் காரணம், வேப்பங்குச்சியில் எண்ணற்ற ஆன்டிசெப்டிக் (Antiseptic) மற்றும் ஆன்டிபயாடிக் பொருட்கள் (Antibiotic) இருப்பதுதான். வேப்பங்குச்சியால் பற்களைத் துலக்கினால், பற்கள் நன்கு சுத்தமாக, பளிச்சென்று இருக்கும். துர்நாற்றம் நீங்கும். அதோடு, பற்களில் நோய்கள் எதுவும் வராமல் காக்கும். வேப்பங்குச்சியைக் கொண்டு பற்களைத் துலக்கப் போகிறீர்களா? முதலில் அந்தக் குச்சியை உடைத்து, அதன் ஒரு முனையை நன்கு மென்றுவிட்டு, பிறகு பல் துலக்கவும்.
ஆலங்குச்சி
ஆலமரத்தின் குச்சியை உடைத்து அதனைப் பற்களில் தேய்த்துவர பற்கள் உறுதி பெறும். மேலும், ஈறுகளில் வீக்கம், ரத்தக்கசிவு போன்ற பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.
மூலிகைப் பற்பொடிகள்
ஒளசதம் (ஔஷதம்) பற்பொடி:
தேவையானவை:
படிகாரம் - 60 கிராம்
மிளகு -10 கிராம்
சாம்பிராணி - 10 கிராம்
இந்துப்பு - 10 கிராம்
ஓமம் - 5 கிராம்
கிராம்பு - 2.5 கிராம்
வேப்பம்பட்டை - 10 கிராம்.
செய்முறை:
மேற்கண்ட பொருட்களை ஒன்றாகச் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியை தினமும் பல் துலக்கப் பயன்படுத்தலாம்.
பலன்கள்: பல்வலி, பல் கூச்சம், வாய் துர்நாற்றம், பல் நோய்கள், பல் ஆடும் பிரச்னை, பலவீனமான ஈறுகள் ஆகிய பிரச்னைகளைத் தீர்க்கும்.
தந்ததான சூர்ணம்
தேவையானவை:
கடுக்காய் - 10 கிராம்
தான்றிக்காய் - 10 கிராம்
நெல்லி முள்ளி - 10 கிராம்
மாசிக்காய் - 15 கிராம்
ஜாதிக்காய் - 15 கிராம்
சுக்கு - 10 கிராம்
மிளகு - 10 கிராமம்
திப்பிலி - 10 கிராம்
ஏலக்காய் - 10 கிராம்
லவங்கம் - 10 கிராம்
லவங்கப் பட்டை - 10 கிராம்
கற்பூரம் - 10 கிராம்
நெற்பதர் சாம்பல் - 120 கிராம்
நாயுருவி - 100 கிராம்
இந்துப்பு - சிறிது.
செய்முறை:
கற்பூரம், நெற்பதர் சாம்பல், நாயுருவி தவிர, மேற்கண்ட பொருட்களைத் தனித்தனியாகப் பொடித்து, சலித்துக்கொள்ளவும். பிறகு கற்பூரத்தைப் பொடித்து, பொடித்த பொருட்களோடு கலக்கவும். அதன் பின்னர் சலித்த நெற்பதர் சாம்பலை நாயுருவியுடன் சிறிது இந்துப்பு சேர்த்து அரைத்து பொடித்ததுடன் சேர்க்கவும்.
பலன்கள்:
பல்லில் சீழ்வடிதல், வாய் துர்நாற்றம், பல் கூச்சம், ஈறு சார்ந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்.
தந்த ரோகம்
தேவையானவை:
சுக்கு - 10 கிராம்
காசுக்கட்டி - 10 கிராம்
கடுக்காய் - 10 கிராம்
இந்துப்பு - 10 கிராம்.
இந்த நான்கையும் ஒன்றாகச் சேர்த்து இடித்து, பொடி செய்துகொள்ளவும். தேவைப்படும்போது இந்தப் பொடியால் பற்களைத் துலக்கவும்.
பலன்கள்:
பல் ஈறுகளில் ரத்தம் கசிதல், பல் ஆடுவது, சொத்தையாவது போன்ற பிரச்னைகள் தீரும்.
`ஏ... மக்கா! பல் நலமா இருந்தா கல்லைக்கூட கற்கண்டா சாப்பிடலாம்ல...’ என கிராமத்தில் விளையாட்டாகச் சொல்வதுண்டு. இயற்கை முறையில் கிடைக்கக்கூடிய மூலிகைகளைக் கொண்டு நமது பற்களைப் பேணி காப்போம். அந்த விளையாட்டு வாசகத்தை உண்மையாக்குவோம்!

பூப்பெய்தல் நடந்த பெண்கள் என்னென்ன உணவு சாப்பிட வேண்டும் . அதிக உதிர போக்கை தடுக்கும் வழிமுறைகள்.




பூப்பெய்தல் நடந்த பெண்கள் என்னென்ன உணவு சாப்பிட வேண்டும் . அதிக உதிர போக்கை தடுக்கும் வழிமுறைகள்.

பூப்பெய்தல் என்றால் என்ன முழு விளக்கம் .காணுங்கள்




பூப்பெய்தல் என்றால் என்ன முழு விளக்கம் .காணுங்கள் 

2 நிமிடத்தில் வலிப்பு நோயை சரிசெய்ய வர்ம புள்ளி. வலிப்பு நோய்க்கு முதலுதவி மற்றும் தீர்வு.



2 நிமிடத்தில் வலிப்பு நோயை சரிசெய்ய  வர்ம புள்ளி. வலிப்பு  நோய்க்கு முதலுதவி  மற்றும் தீர்வு.

கற்பப்பை கட்டிகள் எப்படி வருகிறது அதை சரி செய்வது எப்படி முழு தகவல்கள் அனைவரும் காணுங்கள்.


கற்பப்பை கட்டிகள் எப்படி வருகிறது அதை சரி செய்வது எப்படி முழு தகவல்கள் அனைவரும் காணுங்கள்.

Saturday 17 June 2017

பணம் பெருக எதிரிகள் தொல்லைஅடங்க மூலிகை

பணம் பெருக எதிரிகள் தொல்லைஅடங்க மூலிகை
ஆடி மாதம் வளர்பிறை ஞாயிற்றுகிழமையில் மாலையில் 6-7க்குள் முறைப்படி தொட்டார்சிணுங்கி செடிக்கு மஞ்சள் நூல் காப்பு கட்டி,தூப தீபம் நிவேதனம் செய்து செடியை வேண்டி கொண்டு வேர் அருகாமல் செடியை எடுத்து ஆயுதம் படாமல் சிறிது வேர் எடுத்து, பின்பு மீண்டும் செடியை நட்டு வைத்து மஞ்சள் நீரூற்றிவிட்டு, எடுத்த வேரை நீரால் அபிஷேகம் செய்து, பின்பு மஞ்சள் தடவி தூப தீபம் காண்பித்து நம் வீட்டின் பணப்பெட்டியில், தொழில் செய்யும் இடங்களில் வைத்து கொண்டால் பண வரவு மிகுவதோடு, எதிரிகள் தொல்லையும் அடங்கி போகும்.
வளர்பிறை வியாழ கிழமையில் காய் காய்க்காத வில்வ மரத்தின் வடக்கே செல்லும் வேரை, மரத்தை வேண்டி, ஆயுதம் படாமல், மஞ்சள் நூல் காப்பு கட்டி,தூப தீபம் காட்டி ,நிவேதனம் கொடுத்து வீட்டிற்க்கு எடுத்து வந்து நீரால் அபிஷேகம் மற்றும் மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்து தூப தீபம் காட்டி வெள்ளி தாயத்தில் அடைத்து கழுத்தில் அணிந்து கொண்டால் துஷ்ட ஆவிகள் பிடித்திருந்தால் விலகும், பேய்- பிசாசு அண்டாது, பண வரவு மிகும். பெண்களுக்கு மாத விடாய் காலங்களில் அதிக ரத்த போக்கு இருப்பின் ஒரு துண்டு வில்வ வேரை வலது கை மணிக்கட்டில் கட்டி விட்டால் உடனே இரத்த போக்கு மட்டுப்படும். வீட்டில் இந்த மரத்தை பய பக்தியுடன் வளர்த்து வர சகல ஐஷ்வர்யங்களும் கிட்டும்.
கஷ்டங்கள் அனைத்தும் விலக குப்பைமேனி
எதிரிகளால் வஞ்சிக்கப்படுத்தல், உறவினர்களால் மற்றும் நண்பர்களால் ஏமாற்றப்படுத்தல், கஷ்ட நஷ்டங்கள், கடன் தொல்லை, தரித்திர நிலை, எதிரிகளின் மிகுந்த தொல்லை, தர்ம நியாயம் இல்லாத வம்பு வழக்குகள் அகல : சனிக்கிழமைகளில் காலை 6-7 மணிக்குள் குப்பைமேனி மூலிகையை (செடி) வேர் அராமல் பிடுங்கி எடுத்து வேரைமட்டும் பூஜையில் வைத்து பூஜித்து வர,மேற்சொன்ன அனைத்தும் விலகி ஓடும்.கோர்ட், வழக்கு போன்றவற்றிர்க்கு போகும் பொழுதும், எதிரிகள் தொல்லைஅதிமாகும் போதும் இதன் வேரை தன்னுடன் எடுத்து சென்றால் ஜெயம் உறுதி. இதன்வேரை எடுத்து சென்றால் காட்டு யானைகளும் பயந்து ஓடும் என்பது முன்னோர்வாக்கு.

Thursday 8 June 2017

நுணா (மஞ்சணத்தி) நாடி நடை உடல் வெப்பம் மிகுக்கும்.

நுணா (மஞ்சணத்தி)
நாடி நடை உடல் வெப்பம் மிகுக்கும்.
1. இலையை அரைத்துப் பற்றிடப் புண், சிரங்கு , ஆகியவை ஆறும், இடுப்பு வலி தீரும்.
2. நுணா இலைச் சாறு 1 பங்கும், உத்தாமணி, நொச்சி, பொடுதலை ஆகிய மூன்றின் சாறும்1 பங்கும் கலந்து 3, 4, வேளை கொடுத்து வரச் சகல மாந்தமும் தீரும்.
3 . நுணாத் தளிர் , இலை, பழுப்பு , சமன் சேர்த்து 35 கிராம் காட்டுச் சீரகத் துடன் 1 தேங்காய் அளவு அரைத்து . 1. லிட்டர் நல்லெண்ணெயில் மெழுகுபத முறக் காய்ச்சி எண்ணெயைப் பிரிந்து ப் பக்குவப்படுத்தவும். கல்கத்தை சுண்டையளவு காலை, மாலை, பாலுடன் கலந்து கொடுக்க வயிற்றுக் கோளாறு தீரும். எண்ணெயை வெண்மேகத்தில் தடவத் தீரும்.
4. நுணாக்காயையும் , உப்பையும் சமன் அரைத்து அடை தட்டி உலர வைத்துப் புடமிட்டு அரைத்துப் பற்பொடியாகப் பயண்படுத்த பற்கள் பலமடையும்.
5. நுணா வேரைக் கஷாயமிட்டுக் குடிக்கக் சுகப் பேதியாகும், கெடுதலில்லாமல் மலச்சிக்கல் தீரும்
https://www.facebook.com/photo.php?fbid=1860013094323072&set=pcb.1372967476101831&type=3
Image may contain: one or more people and close-upImage may contain: plant and nature

இயற்கை முகப் பொலிவு பொடி

இயற்கை முகப் பொலிவு பொடி
1. சந்தனக் கட்டை - 140 கிராம்
2. அருகன்புல் 140 கிராம்
3. திருநீற்றுப் பச்சிலை 70 கிராம்
4_ ரோஜாப்பூ - 105 கிராம்
5. முல்தாணிமுட்டி - 210 கிராம்
6 குங்குமப்பூ - 7 கிராம்
செய்முறை: .
மேற்கண்ட சரக்குகளை உலர்த்தி, சுத்தம் செய்து இடித்து, பொடி செய்து சலித்து ஒன்றாக கலந்து வைக்கவும்.
பயன்படுத்தும் முறை
தேவையான அளவு பொடியை எடுத்து பன்னீரில் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கள் கழித்து இளம் சூடான நீரினால் கழுவவும்.
இதனால் பரு, கரும்புள்ளி , முகப்பொலிவின்மை முதலியவற்றை நீக்கி முகம் பளபளப்புடன் இருக்கக் செய்யும்.
அன்புடன் இயற்கை மருத்துவம்
 தங்கவேல் சுவாமிகள் 9942163871

கொடி வேலி மூளை புற்றுநோயை குணப்படுத்த முடியும்

கிளுவங்காட்டூர் தங்கவேல் சுவாமிகள் to மூலிகை மருத்துவம். , மனவியல் மருத்துவம் 2.
கொடி வேலி ( சித்தர் மூலம்)
1. ஒரு கிராம் அளவுக்கு வேர்ப்பட்டையை நெகிழ அரைத்துப் பாலில் கலக்கி வடிகட்டிக் காலை, மாலையாக 15 நாள்கள் கொடுக்க பழைய சுரம் , புரையோடிய அரையர்ப்புக் கட்டிகள், சூலைக் கட்டு, சூலைப் பிடிப்பு, வெடிசூலை, உடலில் கரடு முரடாகக் கட்டும் சூலை , மூலம், கிரந்தி, கருப்பை நோய்கள் ஆகியவை தீரும்.
2 . கொடி வேலி வேர்ப்பட்டை, ஆயில் மரப்பட்டை , புங்கம் வேர்ப்பட்டை வகைக்கு 10 கிராம் திப்பிலி, கடுக்காய் , கடுகு, கருஞ்சீரகம் வகைக்கு 5 கிராம் சேர்த்து இடித்துச் சலித்து சலித்து வைத்துக் கொண்டு அரைத்து தேக்கரண்டி வீதம் காலை மாலை வெந்நீரில் 40 நாள் சாப்பிட்டு வரக் கிராணி,, உதிர வாயு, மூல வாயு , பக்கவாதம் ஆகியவை தீரும்
முறையாக பயன்படுத்தினால்
 மூளை புற்றுநோயை குணப்படுத்த முடியும்
இந்த மூலிகையை அனுபாவம் உள்ளவர்கள் மட்டுமே பயன்
படுத்த வேண்டும்
அன்புடன் தங்கவேல் சுவாமிகள்
9942163871, 9786903 871

சித்தர்களின் ஜீவ சக்தி விபூதி

சித்தர்களின் ஜீவ சக்தி விபூதி
சுத்தமான பசுஞ்சாணவிபூதி 2 கிலோ
1. படிகார பஸ்பம் - 10 கிராம்
2 . கல் நார்ப்பஸ்பம் 10 கிராம்
3 குங்கிலிய பஸ்பம் 10 கிராம்
4. நண்டுக்கல் பஸ்பம் 10 கிராம்
5 . ஆமை ஒடு பஸ்பம் 10 கிராம்
6. பேரண்ட பஸ்பம் 10 கிராம்
7 . சிலாசத்து பஸ்பம் 10 கிராம்
8. சிப்பி பஸ்பம் 10 கிராம்
9 ...சிற்ரண்டப்பஸ்பம் 10 கிராம்
10 . சிருங்கி பஸ்பம் 10 கிராம்
11. சங்கு பஸ்பம் 10 கிராம்
இவை அனைத்தையும் ஒரு பெரிய தாம்பாளத்தில் கொட்டி நன்றாக கலந்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தலாம்.
பசும் சாணத்தோடு பல ஜீவராசிகளின்
உயிர் பஸ்பங்களை முறை படி அளவோடு கலந்து தயாரிக்கப்படுவதால் இதற்கு ஜிவ_சக்தி விபூதி என்று பெயர்.
இதனை நீரில் குழைத்து இடும் போது ஒரு வித கதிர்வீச்சு வெளிப்படும. இதுவே மிகப் பெறிய சக்தியாகும்.
தாம்பளத்தில் பரப்பி எந்த காரியம் சாதிக்க வேண்டுமானாலும் சாதிக்கலாம். இதில் உயிர் உள்ள ஜீவ பஸ்பங்கள் சேர் திருப்பதால் மிளகு பிரமாணம் எடுத்தும் சாப்பிட உடலில் இருக்கும் நோய் தீரும்.
மந்திரம் ஜெபித்து இடும் போது தொழில் பிரச்சனைகள் ', குடும்ப பிரச்சனைகள், பகைமை, பில்லி, சூனியம், பேய் பிடித்தல் ஆகிய பிரச்சனைகள் விலகும் '
18. வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்,
ஓம்சிவயநம , ஓம்சிவயநம , ஓம்சிவயநம

ஓணாங்கொடி

கிளுவங்காட்டூர் தங்கவேல் சுவாமிகள் to மூலிகை மருத்துவம். , மனவியல் மருத்துவம் 2.
ஓணாங்கொடி
1 . 20 கிராம் சமூலத்தைப் பொடியாய் அரிந்து 400 மி.லி நீரிலிட்டு 100 மி.லி. ஆகும் வரைச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 மி.லி. அளவாகக் காலை, மதியம் மாலைக் கொடுத்து வர மூட்டு வலி, கணுக் சூலை, சிறுநீர் நோய்கள், காமாலை ஆகியவை தீரும்.
2' இலையை அரைத்துக் களிபோல் கிளறிக் கட்டிகள் மீது வைத்துக் கட்டி வர அவை பழுத்து உடையும்.
3. இலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து மூட்டு வலி, வீக்கம், ஆகியவற்றுக்கு ஒத்தடம் கொடுக்கலாம்.
4, ஒணாங் கொழுந்து 100 கிராம் வெங்காயம் 100 கிராம் இவற்றை மென்மையாய் அரைத்துத் தாய்ப்பால் , சிற்றாமணக்கு எண்ணெய் வகைக்கு 300 மி.லி சேர்த்துப் ப த முறக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு காலை , மாலை 5 மி.லி கொடுத்து வர குழந்தைகளின் ஆசன வாய் வெளித்தள்ளல் தீரும்.

ஏர் அழிஞ்சில் அற்புத வசிய சக்தி கொண்ட மரம்

கிளுவங்காட்டூர் தங்கவேல் சுவாமிகள் to மூலிகை மருத்துவம். , மனவியல் மருத்துவம் 2.
ஏர் அழிஞ்சில் எனும் அற்புத வசிய சக்தி கொண்ட மரம்
இந்த மரத்தின் விதையை குழித் தைலம் எடுத்து முறைப்படி வசனை திரவியம் சேர்த்து பயன் படுத்தலாம்
இதில் இருந்து தயாரிக்கும் மை பாகத்திற்கு ஐய்கோலம் என்று பெயர்

தியானம்

தியானம்
அமையான தனியிடத்தில் அமர்வதற்கு முன்பு , ஒரு விளக்கை ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.
சிறிது நேரம் அந்த விளக்கினை உற்று நோக்கியபடி அப்படியே உட்கார்ந்திருக்க வேண்டும்,
பிறகு கண்ணிமைகளை மூடி, நமது நெற்றியில் இரண்டு புருவங்களுக்கும் இடையில் இருக்கும் மையப் புள்ளியை உற்று நோக்க வேண்டும். அதாவது, அகமுகமாக!
எண்ண ஓட்டங்கள் அப்போது அலை பாய்ந்து உங்கள் மனத்தைச் சிதறடித்தாலும், அவற்றைப் பொருட்படுத்தாமல் கண்களை மூடி உங்கள் புருவமத்தி மையத்தின் நினைவாகவே உட்கார்ந்திருக்க வேண்டும் .
ஆரம்ப காலத்தில் இப்படி உங்களால் சில நிமிட நேரம் தான் உட்கார்ந்திருக்கவியலும். ஆனால் பயிற்சி தொடர , தொடர சில மணி நேரங்கள் இப்படித் தொடர்ந்து உட்கார்ந்திருக்க உங்களால் இயலும்.
தியானம் செய்வதனால் உங்கள் மனதில் எண்ண ஓட்டங்கள் அலை பாய்வது ஒழிக்கப்பட்டு உடற்கூறுகள் சிறந்த முறையில் செயல் புரிய ஆரம்பிக்கும்.

காயகற்ப ரசமணி விளக்கம்

காயகற்ப ரசமணி விளக்கம்
லிங்கத்திலிருந்து ரசத்தை பிரித்து எடுத்து முறையாக சுத்தி செய்து நெருப்பிற்கு புகையாமல் கட்டி மணியாக செய்து காயகற்ப மூலிகையான வெள்ளை விஷ்ணு கிரந்தி வெண்துத்தி வெள்ளை நீர்முள்ளி
மகாவில்வம் செந்நாயுறுவி சிவகரந்தை
கொட்டக்கரந்தை சிறுசென்னி சிறுசெருப்படை இதுபோன்ற பல காயகற்ப
மூலிகையால் சாரணை கொடுத்து
சிவமந்திரங்கள் செய்து முறைப்படி
முடிப்பது. இவ்வாறு ஒருவர் நான்கு மணி முடிக்க குறைந்தது முப்பது முதல் நாற்பது
நாட்கள் வரை ஆகும்.
இவ்வாறு தயாரிக்க சித்தர்கள் அருள் இருந்தால் மட்டுமே முடிக்க முடியும்.
சித்தர்கள் அருள் உள்ளவர்களுக்கு மட்டுமே
முழுமையாக பயன்படுத்த முடியும்.
இருப்பினும் முழுவதும் பதிவை போட்டு
வருகிறேன். இந்த பதிவு ரசமணி செய்ய
தெரியாத நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே. தெரிந்தவர்கள் எதிர் கேள்வி
கேட்பதற்கு அல்ல.
அவசரப்படாதீர்கள். பதிவுகள் நிதானமாக
வந்து கொண்டு இருக்கும்.
நன்றி

ஹேர் ஆயில் தயாரிப்பு

ஹேர் ஆயில் தயாரிப்பு
1. மருதாணி
2 . கருவேம்பிலை
3. தேக்கன் கொழுந்து
4. கரு சலங்கண்ணி
5. பொடுதலை
6. கொத்தன்,
7. நீலி இலை ( அவரி)
8 . பேய் தேத்தான் பட்டை
9 . வெண்மிளகு
10.வேம்பாடு பட்டை
11. வெட்டி வேர்
12. விளாமிச்சை வேர்
ஆகிய பொருட்களை இடித்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து அடுப்பில் ஏற்றி பதமாக காய்ச்சி வடிகட்டி பயன்படுத்தலாம்
முடி உதிர்வதை தடுக்கும். , இளநரையை போக்கும், முடி செழித்து வளரும் , பொடுகு, பேண் தொல்லை, அரிப்பு ஆகியவை நீங்கும்
180 மில்லி பாட்டில் 250 ரூபாய்
மருத்துவம் 9942163871

சங்கு நாரயாணி சஞ்சிவி மூலிகை


இந்த மூலிகை கய கற்ப மூலிகை என்று சித்தர்களால் அருளப்பெற்றது
இதன் தண்டின் உட்பகுதியை சிறு சிறு துண்டுகளாக செய்து இதனுடன் தேன் கலத்து பத்திரப்படுத்தி தினம் இரண்டு வேளை சாப்பிட தேகம் சட்டை விடும் . புதுப் பொலிவும் பெறும் நரை, திரை, மூப்பு , பிணி , தீரும்.
முறைப்படி 48 நாள் பத்தியத்துடன் சாப்பிட சித்தியடைலாம் என்பது சித்தர்கள் வாக்கு