Wednesday 16 November 2016

கீழ்வரும் வாக்கியங்களைக் கவனியுங்கள்.

கீழ்வரும் வாக்கியங்களைக் கவனியுங்கள்.
பல் இல்லாப் பல்லி என் இல்லத்தில் இல்லவே இல்லை.
கள்ளமில்லா வெள்ளையுள்ளம்கொண்ட வள்ளி வெள்ளிக்கொலுசணிந்து வெள்ளிக்கிழமை பள்ளிக்கு வந்தாள்.
வியாழக்கிழமை ஏழைக்கிழவன் வழுவழுப்பான வாழைப்பழத்தோல் வழுக்கிக் கீழே விழுந்தான்.
முதல் வாக்கியத்தில் ல என்ற எழுத்து 11 முறை வந்துள்ளது
இரண்டாவது வாக்கியத்தில் ள என்ற எழுத்து 15 முறை வந்துள்ளது.
மூன்றாவது வாக்கியத்தில் ழ என்ற எழுத்து 11 முறை வந்துள்ளது.
உரத்த குரல் கேட்டு விரைந்தங்கு காணின், வலக்கரத்தின் இரு விரல்கள், உதிரம் உதிர்த்து உரல் இடுக்கில்.

பார் அங்கே பார் சிறியதொரு பறவை ஒன்று பறக்கிறது. அதற்கு இரை வேண்டும். இறக்கைகளுடன் படைத்த இறைவன் அவற்றிக்கு இரையையும் படைத்திருக்கிறான். மரம் அதன் இல்லம். சிரமமில்லாமல் வாழ்க்கையில்லை என்பதை அந்தச் சிறிய பறவை சிறப்பாய் சொல்லிவிட்டு சிட்டெனப் பறந்துவிட்டது.

இரண்டு மூன்றானது

இரண்டு மூன்றானது

விடிந்தால் இவர்களுக்கு நான்காம் ஆண்டு திருமண நாள். அபிநயாவின் முகத்தில் சந்தோஷத்திற்க்கான அறிகுறி சிறிதும் இல்லை. முகிலனும் மும்முரமாய் மடிக்கணினியில் ஏதோ வேலையில் மூழ்கியிருந்தான். "முக்கியமான வேலையா?" அபிநயா படுக்கையை சரி செய்தவாறே கேட்டாள். "இல்ல அபி. நெக்ஸ்ட் வீக் ஒரு ப்ரெசென்ட்டேஷன் இருக்கு, அதுக்கு தான் டேட்டா பூல் பன்னீட்டு இருக்கன்" வேலையைத் தொடர்ந்தவாறே அவனது பதில். "நாளைக்கு காலைல நாம அங்க போறோம்ல?" அவள் குரலில் நிதானம் கலந்த தீர்மானம் ஒலித்தது. வேலையை அப்படியே நிறுத்தி நிதானமாய்த் திரும்பினான் முகிலன். "என்ன சொல்றீங்க?" பரிதாபமாய்க் கேட்டாள் அவள். எழுந்து வந்தவன் லேசான ஈரம் ஓடும் அவள் கண்களைப் பார்த்து, கைகளின் இடுக்கில் அவள் முகத்தைக் கொணர்ந்து "போகலாம்..." அவள் நெற்றியில் முத்தம் பதிக்கையில் இரு துளி நீர் அவள் கன்னத்தைக் கடந்தோடியது.

மாநகரின் மைய்யப் பகுதியில் மைதானத்துடன் கூடியபள்ளிதாங்கும் விடுதி என  விசாலமாய் மட்டுமின்றிகைவிடப்பட்ட குழந்தைகளின் விலாசமாகவும் இருந்தது அந்த  அன்னை தெரேசா இல்லம்ஆம்பெயருக்கேற்றார் போல் தாய்மை மொத்தமாய்க் கொட்டிக்கிடந்த வளாகம் அதுபோக்குவரத்து சத்தத்தையும் மீறிய விளையாடும் குழந்தைகளின் சத்தம் அந்த பகுதியில் இருப்போருக்கு புதிதல்லஅவ்வளாகத்தின் வாயிலில் ஒரு சிவப்பு  ஸ்விப்ட்  நுழைந்தது அனைத்து குழந்தைகளின் கவனத்தையும் ஒரு கனம் ஈர்த்ததுஉள்ளே  நுழையும் வாகனங்கள் பெரும்பாலும் ஏதோ பிறந்தநாளிற்கு இனிப்பு வழங்கவோநோட் புத்தகம் கொடுக்கவோ இருக்கும்சில நேரங்களில் நிர்வாகியை சந்தித்து காசோலை குடுத்துச் செல்லும் பார்வையாளர்களும் உண்டு.

முகிலனும் அபிநயாவும் காப்பக நிர்வாகியை சந்தித்தனர்முகிலனின் நண்பர் பிரபாகரன் ஏற்கனவே அனைத்தையும் தொலைப்பேசியில் தெரிவித்ததாகவும்இவர்களது முடிவை வரவேற்பதாகவும் தம்பிதுரை சொன்னார்பேசியவாரே அவர்கள் மூவரும் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் பகுதிக்கு வந்தனர்மூன்று வயது முதல் சுமார் பத்து பன்னிரண்டு வயது வரையிலான சுமார் இருநூறு குழந்தைகள் இருந்தனர்அபிநயாவின் கண்கள் இங்கும் அங்கும் ஓடினநான்கு வருட தாய்மைக் கனவின் தேடல் அதுவயிற்றில் கரு தரிக்கும் அனைவரும்தனகுழந்தையை தானே தேர்ந்தெடுக்கும் பாக்கியமற்றவர்கள்  என்றே எண்ணத் தோன்றுகிறது.

கவலையற்ற, கள்ளமற்ற, வெறும் சிரிப்பும் சந்தோஷமும் மட்டும் கலந்திருக்கும் கூட்டத்தின் நடுவே, வாடிய முகமாய், சோகத்தின் உருவாய் ஒரு பூமுகம் இவள் கண்ணில் பட்டது. முகிலன் மட்டுமே அறிந்தது இவள் கண் பேசும் பாஷைகளை. நீல நிற கவுனில் நிலம் பார்த்து அமர்ந்திருக்கும் நித்தியாவின் கதையை தம்பிதுரை ஆரம்பித்தார். கடந்த வாரம் வரை பல கனவுகளுடன் இருந்த அவளின் பெற்றோர்களோடு சேர்த்து கனவுகளையும் பறித்துக் கொண்டது அந்த கோர கார் விபத்து என்றவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே தாய்மை அடைந்ததை அபிநயா உணர்ந்தாள். நித்யாவின் கலைந்த கனவுகளுக்கு உயிர் கொடுப்பதாய் உள்ளத்தில் உறுதி பூண்டாள். நித்திரையற்ற இரவுகளுக்கு முற்றுப்புள்ளியாய் நித்யா.

அப்பிஞ்சு உள்ளத்திற்கு தான் அபிநயாவைத் தாயாக்கியிருப்பது புரிந்திருக்க வாய்ப்பில்லை. சுற்றி நிகழ்பவையெல்லாம் ஆயிரம் கேள்விகளை விதைக்க, விடைகள் தேடியவாறே வினாக்களுக்குள் தொலைந்தவளாய் நித்யா. நிலம் பார்த்தமர்ந்திருந்தவள் ஏனோ தோன்றி சற்றே நிமிர்ந்தாள். ஒரு ஆறடி தூரத்தில் அபிநயாவின் விழிகள் அரவணைப்பாய் அவளையே பார்த்திருந்தன. இருவரின் கண்களுக்கிடையே இரு நிமிட சம்பாஷணை. அதில் ஆயிரம் கேள்விகளுக்கும் விடை கண்டவளாய் நித்யா, நான்கு வருட கேள்விக்கான பதிலைக் கண்ட இன்பத்தில் அபிநயா. இரண்டு இன்று மூன்றானது.

விடிவு காலம் தூரமில்ல


கார வீட்டு
மருமக
சொமந்த கரு 
வெளிவர,
சந்தோஷத்துக்கு
பஞ்சமில்லை,
கொண்டாட்டத்துக்கு
எல்லையில்ல.

ரெண்டு தெரு 
பக்கத்துல,
குடுசை வீடு
ஒண்ணுத்துல,
பத்து மாச 
முடிவுல,
பெத்தெடுத்தா
ஒத்தபுள்ள.

மேனகாவின்
மாமியாரு
பொட்டபுள்ள 
பெத்ததுக்கு,
லட்சுமியே 
பொறந்ததா,
கன்னத்துல 
முத்தம் வெக்க;

சாந்தியோட 
மாமியாரோ, இவ 
செத்து பொழச்சு
பெத்தெடுத்தது,
தங்கமில்ல
தகரமுன்னு 
சாந்தியை தான்
தள்ளிவெக்க;

தாத்தாவான
சந்தோஷத்துல,
கெடாவெட்டுனார்
நாட்டாம,
பொண்ணு பெத்ததும்
பொண்ணாவ,
விதியை வெறுத்தா
ஆண்டாளு.

தரையிலேயே 
கால் படாம 
குடும்பம் தாங்க
அவ அங்க,
கட்டாந் தரைல 
பாய விரிச்சி,
படுத்து கெடந்தா
இவ இங்க.

பேத்திக்குதான்
பேரு வெக்க,
ஜோசியம் லாம் 
பாத்தாங்க, 
எழுத்து நாலு 
வெச்சிக்கிட்டு,
கூகிள் கிட்டயும்
கேட்டாங்க.

பொறந்த நேரம் 
குறிக்கல,
ஜோசியமும் 
பாக்கல,
மனச பாதிச்ச
கதையில,
இருந்த பேர
வெச்சிபுட்டா.

நல்ல நாள் 
ஒண்ணுத்துல,
ஊர் உலகம் 
சுத்தி நிக்க,
வெள்ளி கம்பி
தொட்டிலிலே,
அபிநயானு
பேரு வெக்க;

தென்னை ஓலை 
குடுசையில,
பழைய சேலை 
தொட்டிலிலே,
மின்னுன 
சின்ன பொண்ணுக்கு
மீனா னு 
பேரு வெச்சா.

பாலும் பழமும்
ஒரு பக்கம்,
பழைய சோறு 
மறு பக்கம்,
வாய் ருசிக்கு
அந்த பக்கம்,
வைத்து பசிக்கு
இந்த பக்கம்.

ஏசி போட்ட
ரூமுக்குள்ள,
பஞ்சு மெத்தை
மத்தியில,
கரடி பொம்ம
பக்கத்துல,
படுத்து கெடக்கு
சின்னபுள்ள.

நிலா வெளிச்சம்
வீட்டுக்குள்ள,
அம்மா பாட்டு 
காதுக்குள்ள,
பனை விசிறியோட
காத்தினிலே,
தூக்கம் வழியுது
கண்ணுக்குள்ள.

ஏசி போட்ட 
காருகுள்ள,
எட்டடுக்கு 
மாலு உள்ள,
மாசம் நாலு 
ஞாயிறுமே,
காச தீக்க
போயிவர;

வெசாலகெழம
சந்தையில,
காத்தடைச்ச
பலுகுண்ட,
வாங்கி கையில 
குடுத்துப்புட்டா,
சந்தோஷத்துல 
குதிச்சிடுவா.

கீச்சு கீச்சுனு
பேசுமுன்னே,
கிரீச்சுல போய்
விட்டுட்டாங்க,
நாப்பதாயிரம் 
பீஸ் கட்டி,
நாலுமணிநேரம்
தெனமும் அங்க.

அரசு போடும் 
சத்துணவு,
அர வயித்த
ரொப்புமுன்னு,
பால் பள்ளு 
மொளச்சவளா,
பால்வாடில 
வுட்டுப்புட்டா.

காலச் சக்கரம் 
சொழழுதே,
அபி மீனா வாழ்க்கை
வளருதே,
இறுதி தேர்வு 
முடியுதே,
முடிவும் ஒடனே
தெரியுதே.

பாஸ் மார்க்கு 
வாங்கிபுட்டா,
நெனச்ச படிப்பும்
சேந்துக்கிட்டா,
காசு மட்டும்
இருந்துபுட்டா,
சீட்டு ஒன்னும்
கஷ்டமில்லை.

இட்டிலி கடை 
சாந்தியை,
ஹிந்துவும் தந்தியும்
தேடிவர,
குப்பத்துக்குள்ள
ஆரவாரம்,
மாநில ரேங்க்
இவ நெலவரம்.

மருத்துவம்தான்
படிச்சிப்புட்டு,
மறக்காம 
இங்கயே வந்து,
மருந்து கழிச்சு
கொடுப்பேன்னு,
சாந்தி பொண்ணு
சொல்லிப்புட்டா.

ஓலை குடிசை 
வீட்டுக்கெல்லாம்,
ஏட்டு கல்வி
பாரமில்ல,
சாந்தி பட்ட 
கஷ்டத்துக்கு,
விடிவு காலம் 
தூரமில்ல...

யாழினி குட்டிக்கதை

யாழினி

ஓயாம அழுதுட்டே இருந்தா யாழினி. அவ அழுகைய நிறுத்த படாத பாடு பட்டான் பிரபாகரன். சாக்லேட், ஐஸ் கிரீம், எத குடுத்தாலும் அவ வாய மூடறதா இல்ல. அந்த டெட்டி பியரும், பார்பி டால்லும் இந்த ஆங்கிரி பேர்ட்ட அமைதியாக்கர முயற்சில தோத்து போச்சு. எந்த விளையாட்டு பொருளானாலும் ரெண்டு நிமிஷம் தான் அப்பறம் அவளோட கச்சேரி ஆரம்பமாயிடும்.

அன்னைக்கு காலைல இருந்து எல்லாமே அமைதியாதான் இருந்துச்சு. வழக்கத்துக்கு மாறா யாழினி கேட்டது எல்லாமே அவளுக்கு தாராளமாவே கெடச்சுது. வழக்கமா ஒரு ஐஸ் கிரீம் சாப்பிட்டு ரெண்டாவது வேணும்னு வாய தொறந்தா அவ அம்மா வாய் மேலயே போடுவா. ஆனா அவ இல்லாதது ரொம்ப நல்லதா போச்சு. வயிறு நெறையற அளவுக்கு ஐஸ் கிரீம்.

அவ எப்ப கத சொல்ல ஆரமிச்சாலும் வாய மூடு. அமைதியா டிவி பாருனு ஒரு பதில் தான் கேட்டுருக்கா. இன்னைக்கோ இவ வாய் ஒயரவரைக்கும் கத கேட்டுட்டு இருந்தான் நம்மாளு. அவளுக்கே அது கனவா நெஜமானு கிள்ளி பாத்துக்கற அளவுக்கு நடந்த ஒரு எட்டாவது அதிசயம். அவ பிரென்ட் நான்சி வீட்டு நாய்க்குட்டி ஜூஜூல ஆரமிச்சு, ரீனா மிஸ், வாட்ச்மேன் தாத்தா, சோட்டா பீம் கதைல நேத்து நடந்தது, பேஸ்ட்ல புடிச்ச டேஸ்ட், கிஷோர் வீட்ல அவன் வளக்கற டைனோசர், லான்ல பொதச்சு வெச்ச பல்லு, சாக்லேட்ட விட டேஸ்ட்டா இருக்கற சாக்பீஸ்னு சீசன்ல கொட்டற குத்தால அருவி மாதிரி அவ பேசீட்டே இருந்தா...

பிரபாகர் சுயதொழில் செய்றான். சுயதொழில்னு சொன்னாலே நிரந்தர வருமானம் இல்லனு அர்த்தம். கெடச்சா பிரியாணி இல்லைனா ஈரத்துணிங்கற நெலம தான். ஆனா அவன் பிரச்சனையெல்லாம் தீரரமாதிரி இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங். ரொம்ப நாள் யோசிச்சு அவன் செஞ்ச ஒரு வேலையோட முழு பலனே இன்னைக்கு மீட்டிங்ல தான் இருக்கு. ராஜேஷ் ரங்கராஜன். கன்ஸ்ட்ரக்ஷன் பீல்ட்ல கொஞ்சம் பிரபலம். அவரோட தான் இன்னைக்கு மீட்டிங். டைம், வெனியூ, ஏற்கனவே பிக்ஸ் பன்னியாச்சு. அதுக்கு கிளம்பும் போது தான் இவளோட கதையெல்லாம்.

அவ பிசியா செவுத்துல ஏதோ ஓவியம் தீத்தீட்டே இருந்தப்ப அவன் கெளம்பீட்டே இருந்தான். ஒரு வீடு வரைஞ்சிருந்தா. பக்கத்துல ஒரு மரம். கீழ ரெண்டு ஜீவன். குருவியா, கோழியானு தெரியல. அதுக்கு பக்கத்துல பூச்செடிங்க. எல்லாத்தையும் முடிச்சிட்டு பாத்தா. கொஞ்சம் எக்கி வீட்டுக்கு மேல ஒயரத்துல இவளால தொட முடியற அதிகபட்ச ஒயரத்துல ஒரு வட்டம் வரைஞ்சா. ஒரு அஞ்சாறு கோடு இழுத்துட்டே இருந்தா. சூரியன் முழுமையடையறதுக்குள்ள எதையோ யோசிச்சவ, "இன்னைக்கு என்ன டே?" பிரபாகர பாத்து கேட்டா. இன்னைக்கு சாட்டர்டே மா இவன் சொல்ல. ஓவிய பணிய பாதில விட்டுட்டு அவ ஓன்னு அழ ஆரமிச்சிட்டா.

மன்னாதி மன்னன் கூட மண்ணை கவ்வன எடம் குழந்தை வளர்ப்பு. அகராதிலயே அடம்ங்கற வார்த்தைக்கு அர்த்தம் நிச்சயம் யாழு குட்டின்னு தான் போட்ருப்பாங்க. டிவில வர கார்ட்டூன், ஐபோன்ல இருக்கற கேம் எதுமே செல்லமா போக, மீட்டிங்கு வேற நேரம் ஆகுது, இவ இப்டி அழுதுட்டு இருந்தா எப்படி போறதுன்னு யோசிச்சான்.

சாட்டர்டேனு சொன்னதுக்கு ஏன் அழறானு தெரியல. ஒரு கால் மணி நேரத்துக்கு அப்பறம், சாட்டர்டே மூவீக்கு போயிட்டு அப்டியே தீபாவளிக்கு புது டிரஸ் எடுக்கலாம்னு மம்மி சொன்னாங்கனு சொல்லீட்டு மறுபடியும் அழ ஆரமிச்சிட்டா. சமாதான படுத்த வழியே இருக்கற மாதிரி தெரியல. கொஞ்சம் யோசிச்சு பாத்துட்டு, சரிம்மா அழாத. நானே உன்ன மூவி கூட்டிட்டு போறன். அப்பறம் டிரஸ் எடுக்கலாம். நீ அழக்கூடாதுனு சொன்னான். அதுக்கு பிறகு தான் அவ அமைதியானா. இந்த மீட்டிங்க என்ன செய்றதுனு யோசிச்சவன் அவருக்கு கால் பன்னி "சார். பிளான்ல ஒரு சின்ன சேஞ்ச். ஈவினிங் ஒரு அஞ்சு மணிக்கு ஃபீனிக்ஸ் மால்கு வந்துருங்க. அங்கேயே நாம மீட் பன்னலாம்" னு சொல்ல, அவரும் சரினு சொல்லீட்டாரு.

இவள கூட்டிட்டு படத்துக்கு போனான். அனிமேஷன் படம். காலைல கதறி அழுதவ வேற ஒருத்தியோன்னு நெனைக்கற அளவுக்கு ஒரே சிரிப்பு சத்தம். படம் முடியற வரைக்கும் சிரிச்சிட்டே இருந்தா. நல்ல ரிங் டோன் மாதிரி இருந்துச்சு அவ சிரிப்பு. படம் முடிஞ்சி ரெண்டு பேரும் புட் கோர்ட்ல. கங்காரு மாதிரி இவளை சுமந்துட்டே எல்லா கவுண்டரையும் நோட்டம் விட்டான். அவ நூடுல்ஸ் வேணும்னு சொல்ல, அதையே வாங்கனான்.

அடுத்து ஷாப்பிங். அவ அமைதியா கடைக்குள்ள இருந்தா. வழக்கமா இவ எதனா எடுத்தா, அவளோட அம்மா இதெல்லாம் வேணாம் நானே எடுத்து தரேன். உனக்கு எது வேணும்னு மம்மிக்கு தெரியும்னு அவ இஷ்டத்துக்கு தான் எடுத்து குடுப்பா. ஆனா மொதமொறயா உனக்கு என்ன வேணுமோ எடுத்துக்கோன்னு இவன் சொன்னதும் அவளுக்கு எதுமே புரியல. ஹெட் மாஸ்டர பாத்த ஸ்டூடெண்ட்டாட்டம் அமைதியா இருந்தா. அப்பறமா அவனே சிலதை எடுத்து இது புடிச்சிருக்கா? இது எப்படி இருக்கு? இதுல எது புடிச்சிருக்குன்னுலாம் கேட்டான். ஒன்னே ஒன்னு போதும் இருந்தவ இப்ப அஞ்சு டிரஸ் எடுத்துட்டா. சந்தோஷத்தோட உச்சத்துல இருக்கா.
அடுத்து அங்கேயே ஒரு ஐஸ் கிரீம் டப் வாங்கி குடுத்தான்.

அப்ப அவனுக்கு ஒரு கால் வந்துச்சு. ராஜேஷ் பார்க்கிங்ல இருக்கறதா சொன்னாரு. இவன் அவர மேல காபி ஷாப்கு வர சொன்னான். இவ பக்கத்துல அந்த டிரஸ் எல்லாமே வெச்சிட்டு, இவ கிட்ட ஒரு சின்ன வேல இருக்கு நீ ஐஸ் கிரீம் சாப்டுட்டே இரு, ஒரு டென் மினிட்ஸ்ல நான் வந்துர்ரன். எங்கயும் போக கூடாது. இங்கயே இருனு சொன்னான். இங்கயே இருக்கறதா அவளும் தலையாட்டி டாட்டா சொல்லி சிரிச்சா.

ராஜேஷ் கைல ஒரு லெதர் பேக் எடுத்துட்டு அவன மீட் பன்ன வந்தாரு. எதிர்லயே அவன் கண்ணு பாக்கற எடத்துலயே தான் யாழினி இருந்தா. குட்டி தேவதை. சுத்தி நடக்கற எதையுமே கவனிக்காம ஐஸ் டப்ல மூழ்கீருந்தா. ராஜேஷ் வந்து அவன் கிட்ட பேசன ரெண்டு நிமிஷத்துலயே நாலு தடவ அவள இருக்காளான்னு பாத்தான். பேசி முடிச்சதும் அந்த லெதர் பேக்க எடுத்துட்டு அதுக்குள்ளயே ஒரு தடவ எதையோ சரிபாத்துட்டு பிரபாகர் கிளம்பீட்டான்.

சாப்டுட்டே இருந்த யாழினி நிமிந்து பாத்தா ராஜேஷ் நின்னுட்டு இருந்தாரு. வாமா போகலாம்னு அவள அவர் தூக்க. அவ வரமாட்டேன்னு அழுதா. பக்கத்துல இருக்கவங்களாம் ஒரு மாதிரி பாக்க, யாழினி ஏன் பிரச்னை பன்ற? டாடி கூட வானு ராஜேஷ் அதட்டி கூப்பிட, இல்ல வரமாட்டேன். நான் அங்கிள் கூடவே இருக்கேன். எனக்கு நீ வேணாம். நீ ஆபீஸ்லயே இரு. எனக்கு உன்ன புடிக்கல. ஏன் இங்க வந்த? நான் உன் கூட வரலனு அழ ஆரமிச்சிட்டா.

ஐ ஆம் யுவர் பாதர் டாமிட். அவன் குரல உயர்த்த. நீ என் கூட பேசல. ஸ்டோரி சொல்லல. நான் பேசறதை எதுவும் கேட்கல. ஸ்கூல்ல ட்ராப் பன்னல, ஷாப்பிங் கூட்டிட்டு போல. ஹோம் வர்க் செஞ்சி குடுக்கல. உன் லேப்டாப்ல கேம் விளையாட குடுக்கல. ஐ போன் பாஸ்வோர்ட் சொல்லல. நான்சி, கிஷோர், ரம்யாவோட பாதர் செய்றது எதுமே நீ செய்யல. அப்பறம் எப்படி நீ என் பாதர்?

அந்த அங்கிள் எங்க? அவரு வேணும். அங்கிள்.. அங்கிள்... என்ன விட்டுட்டு எங்க போனீங்க? யாழினியோட கலங்கன கண்ணுங்க பிரபாகரனை அந்த கூட்டத்துல தேடுச்சு. இருவத்தஞ்சி லட்சம் டீல் முடிச்சு, பிரபாகர் லெதர் பேக்கோட போகும்போது அவளோட அழுக சத்தம் மட்டும் காதுல கேட்டுட்டே இருக்க, பாலன்ஸ் ஷீட்டையே பாத்துட்டு பர்சனல் லைப்ல பாலன்ஸ் இல்லாம பாதாளத்துல விழுந்திருக்கறத மொதமுறையா உணர்ந்தான் ராஜேஷ்.

Saturday 12 November 2016

All bank balance check no

Excellent service !!
Dial  * 99# to do basic Banking instantly. One can check balance for accounts, mini statement where the mobile number is registered & no internet required. Below are the direct codes for banks::
* 99* 41#-State Bank of India
* 99* 42#- Punjab National Bank
* 99* 43#-HDFC Bank
* 99* 44#-ICICI Bank
* 99* 45#-AXIS Bank
* 99* 46#-Canara Bank
* 99* 47#- Bank Of India
* 99* 48#-Bank of Baroda
* 99* 49#-IDBI Bank
* 99* 50#-Union Bank of India
* 99* 51#-Central Bank of India
* 99* 52#-India Overseas Bank
* 99* 53#-Oriental Bank of Commerce
* 99* 54#-Allahabad Bank
* 99* 55#-Syndicate Bank
* 99* 56#-UCO Bank
* 99* 57#-Corporation Bank
* 99* 58#- Indian Bank
* 99* 59#-Andhra Bank
* 99* 60#- State Bank Of Hyderabad
* 99* 61#- Bank of Maharashtra
* 99* 62#- State Bank of Patiala
* 99* 63#- United Bank of India
* 99* 64#-Vijaya Bank
* 99* 65#-Dena Bank
* 99* 66#-Yes Bank
* 99* 67#-State Bank of Travancore
* 99* 68#-Kotak Mahindra Bank
* 99* 69#-IndusInd Bank
* 99* 70#- State Bank of Bikaner and Jaipur
* 99* 71#- Punjab and Sind Bank
* 99* 72#-Federal Bank
* 99* 73#-State Bank of Mysore
* 99* 74#-South Indian Bank
* 99* 75#-Karur Vysya Bank
* 99* 76#-Karnataka Bank
* 99* 77#-Tamilnad Mercantile Bank
* 99* 78#-DCB Bank
* 99* 79#- Ratnakar Bank
* 99* 80#-Nainital Bank
* 99* 81#-Janata Sahakari Bank
* 99* 82#-Mehsana Urban Co-Operative Bank
* 99* 83#-NKGSB Bank
* 99* 84#-Saraswat Bank
* 99* 85#-Apna Sahakari Bank
* 99* 86#-Bhartiya Mahila Bank
* 99* 87#- Abhyudaya Co-Operative Bank
* 99* 88#-Punjab & Maharashtra Co-operative Bank
* 99* 89#-Hasti Co-Operative Bank
* 99* 90#- Gujarat State Co-Operative Bank
* 99* 91#- Kalupur Commercial Co-Operative Bank

Also u can dial * 99* 99# to know your Aadhaar linking and OverDraft Status.

Thursday 10 November 2016

அமிர்த கரைசல் இயற்கை உரம்

அமிர்த கரைசல்

பச்சை பசுஞ்சாணம் -10kg
பசுவின் கோமியம் -10லிட்
நாட்டு சர்க்கரை -250g
தண்ணீர் -100lit
இவைகளை ஒரு சிமெண்ட் தொட்டியில் போட்டுக் கலக்கி ஒரு நாள் வைத்திருந்தால் அடுத்த நாளே இந்த கரைசல் தயாராகி விடும்.இதை 10% கரைசலாக பாசன நீருடன் கலந்து விடலாம்.அல்லது தெளிப்பு உரமாகவும் பயன்படுத்தலாம்.பாசன நீருடன் கலந்து விட ஏக்கருக்கு 50லிட்டர் தேவைப்படும்.தெளிப்பு உரமாகவும் பயன்படுத்த 10லிட்டர் போதும்.இது மண்ணின் வளம் மற்றும் நலத்தையும் கூட்டி பயிர்கள அனைத்திற்கும் நன்மை பயக்கும்.

பிரம்மாஸ்திரா

மூன்று கிலோ அளவிலான வேப்பங்குச்சிகளை விழுதாக அரைக்கவேண்டும். இதனுடன் சீத்தா, புங்கன், ஆமணக்கு, பப்பாளி, கொய்யா, ஊமத்தை, கருவேலம், பாகல் ஆகியவற்றின் இலைகளை தலா இரண்டு கிலோ வீதம் சேர்த்து அரைக்கவேண்டும் (ஏதாவது ஐந்து இலைகள் இருந்தால் கூட போதும். இலைகளை அப்படியே போட்டால், பிரம்மாஸ்திரம் தயாராவதற்கு நாள் பிடிக்கும்). இவற்றைப் பத்து லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கலந்து அடுப்பில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்பு 48 மணி நேரம் குளிர வைத்து, வடிகட்டி, பயிர்களுக்கு தெளிக்கலாம். இந்தக் கரைசலை ஆறு மாதம் வரை சேமித்து வைத்திருக்கலாம்.

அக்னி அஸ்திரம்

புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ, பூண்டு அரை கிலோ, வேம்பு இலை 5 கிலோ ஆகியவற்றை அரைத்து, 15 லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கரைக்கவேண்டும். இதை நான்கு முறை கொதிக்கவைத்து இறக்கிக் கொள்ளவும். 48 மணி நேரம் கழித்து சுத்தமான துணியால் வடிகட்டி பயிர்களுக்கு தெளிக்கலாம். இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.

சுக்கு அஸ்திரா

சுக்குத் தூள் 200 கிராம் எடுத்து, 2 லிட்டர் நீரில் கலந்து பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும். பின்பு குளிர வைக்கவும். பசு அல்லது எருமைப் பால் 5 லிட்டர் எடுத்து, தாமிரம் தவிர்த்த பிற பாத்திரங்களில் கொதிக்க வைக்கவும். படிந்திருக்கும் ஆடையை எடுத்து விடவும். ஆறிய பிறகு இதனுடன் 200 லிட்டர் நீர் மற்றும் சுக்கு கலந்த நீர் ஆகியவற்றைக் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம். இது சிறந்த பூஞ்சானக் கொல்லியாகும். இதை 21 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம்.

பீஜாமிர்தம்

தண்ணீர் 20 லிட்டர், பசு மாட்டுச் சாணம் 5 கிலோ, கோமியம் 5 லிட்டர், நல்ல நுண்ணுயிரிகள் இருக்கும் மண் ஒரு கைப்பிடி அளவு. இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நன்றாக ஊறவிட வேண்டும். இதுதான் பீஜாமிர்தம். அதன் பிறகு சுத்தமானச் சுண்ணாம்பு 50 கிராம் போட்டு அதைக் கலக்கவேண்டும். அதன்பிறகே விதையை அந்தக் கரைசலில் நனையவிட்டு, விதைக்கவேண்டும். கரைசலில் சுமார் 2 மணிநேரம் விதைகளை நனையவிட்டால் போதும். பயிர்களைத் தாக்கும் வேர் அழுகல், வேர்க் கரையான், வேர்ப்புழு நோய்கள் தடுக்கப்படுகின்றன.

ஜீவாமிர்தம்

பசுஞ்சாணம் 10 கிலோ, கோமியம் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, தண்ணீர் 200 லிட்டர் இதனுடன் ஒரு கைப்பிடி உங்கள் நிலத்தின் மண் சேர்த்து பிளாஸ்டிக் கேனில் 48 மணி நேரம், அதாவது இரண்டு நாட்கள் வைத்திருக்கவேண்டும். பிளாஸ்டிக் கேனை மரத்தின் நிழலில் வைப்பது முக்கியம். காலை, மதியம், மாலை என்று மூன்று முறை கடிகாரச் சுற்றுப்படி குச்சி வைத்து இதைக் கலக்கி விட்டு வந்தால் ஜீவாமிர்தம் தயார். இது ஒரு ஏக்கருக்கான அளவு. பாசன நீரிலேயே கலந்து விடலாம்.

கனஜீவாமிர்தம்

பசுஞ்சாணம் 100 கிலோ, 2 கிலோ வெல்லம், 2 கிலோ பயறு மாவு போதும். இதை எல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள் கூடவே உப்புமா பதம் வருவதற்கு எவ்வளவு தேவையோ அந்தளவுக்கு கோமியத்தைக் கலந்தால் போதும்.

நீம் அஸ்திரா

நாட்டுமாட்டுச் சாணம் இரண்டு கிலோ, நாட்டுமாட்டுச் சிறுநீர் 10 லிட்டர், வேப்பங்குச்சிகள் மற்றும் இலை 10 கிலோ இவற்றை பெரிய பாத்திரத்தில் போட்டு, 200 லிட்டர் நீரையும் ஊற்றி 48 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். மூடி போட்டு மூடக்கூடாது. இதை கடிகாரச்சுற்றுக்கு எதிர்திசையில் மூன்று தடவைக் கலக்கிவிடவேண்டும். பின்பு வடிகட்டி, பயிர்களுக்குத் தெளிக்கலாம்.

மீன் அமினோ அமிலம்

‘மீன் அமிலம்’ தயாரிப்பது மிகவும் எளிது. மீன் விற்கும் இடத்தில் அல்லது நறுக்கும் இடத்தில் மீதப்படும் செதில், குடல், வால், தலை போன்றவைகளுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்து… நன்கு பிசைந்து… ஒரு பிளாஸ்டிக் வாளிக்குள் மூடி வைக்கவேண்டும். இருப்பத்தைந்து நாள் கழித்து, எடுத்து நன்கு கலக்கினால் டானிக் தயார். இந்த வளர்ச்சி ஊக்கியே ‘மீன் அமிலம்’. 10 லிட்டர் நீருக்கு 100 கிராம் (மில்லி) கலந்து பயிரில் தெளித்தால், பயிர் பச்சை கொடுத்து செழித்து வளர்கிறது

Wednesday 9 November 2016

Pothigai channel umar farook interview

இன்றைய பொதிகை தொலைக்காட்சியில் healer umar இன்டர்வியூவின் யூடியுப் லிங்க் (YouTube)

https://www.youtube.com/watch?v=V1Ame7Mxlqw

Wednesday 2 November 2016

பயனுள்ள தகவல்


*பொது தகவல் மையம் வாட்சப்குழு +919787472712*
1. குடும்ப அட்டை 5ரூபாயிலும்,
2,4சக்கர ஓட்டுனர் உரிமம் 490 ரூபாயிலும்,
வீட்டிற்கு மின் இணைப்பு 1600 ரூபாயிலும்,
2சிலிண்டர் இணைப்பு 3285ரூபாயிலும்
இப்படி சுமார் 36வகையான அரசு அலுவலகத்தேவைகளை" லஞ்சம் தராமல்"
பெற
ஆதரவு இயக்க அறக்கட்டளை
90437 44957,
82200 44957
web atharavuiyakam.weebly.com

2. தமிழ் நாட்டில் எங்கேயாவது குழந்தைகள் பிச்சை எடுத்தால் கிழே உள்ள தொலைபேசி எண்ணினை தொடர்பு கொண்டு அவர்களுக்கு உதவலாம்.
"RED SOCIETY" @ 9940217816.

3. உங்களுக்கு தேவையான இரத்தத்தை இங்கே இருந்து பெறலாம்.இங்கே இரத்தம் கொடுப்பவரின் தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும்.
BLOOD GROUP @ www.friendstosu
pport.org

4. பட்டப்படிப்பு படித்த மாணவர்கள் இங்கே உங்கள் விவரங்களை பதித்து வைத்தால் உங்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ 40 கம்பெனிகளிடமிருந்து வாய்ப்பு கிடைக்க பெறலாம்.
இணையதள முகவரி :
www.campuscouncil.com

5. உடல் ஊனமுள்ளவர்கள் இலவசமாக படிக்கவும் தங்குமிடத்திருக்கும் இங்கே தொடர்பு கொள்ளலாம்.
தொலைபேசி எண்கள் :- 9842062501 & 9894067506.

6. இலவசமாக பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கொள்ள
முகவரி :
Kodaikanal PASAM Hospital > From 23rd March to 4th April by German Doctors.
தொலைபேசி எண்கள் : 045420-240668, 245732
"Helping Hands are better than Praying Lips"

7. நீங்கள் கீழே இருந்து ஓட்டுநர் லைசென்ஸ்,ரேஷன் கார்டு,பாங்க் பாஸ் புக் போன்ற முக்கியமான ஆவணங்கள் எதையாவது கண்டெடுத்தால் அருகிலுள்ள தபால் பெட்டியில் சமர்பித்தால்,அந்த ஆவணங்கள் உரியவரிடம் பத்திரமாக சேர்ந்து விடும்.

8. கண் தானத்திற்கான தொலைபேசி எண்கள் : 04428281919 and 04428271616
(Sankara Nethralaya Eye Bank). மேலும் விபரங்களுக்கு இந்த இணையதளத்தை பாருங்கள்.
இணையதள முகவரி : http://
ruraleye.org/

9. 10 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்து கொள்ள இங்கே அணுகவும்.
Sri Valli Baba Institute Bangalore. 10.
தொலைபேசி எண்கள் : 9916737471

10.  இரத்த புற்றுநோய் உள்ளவர்கள் இலவசமாக சிகிச்சை பெற.
முகவரி :-
"Adyar Cancer Institute in Chennai".
Cancer Institute in Adyar, Chennai
Category: Cancer
Address:
East Canal Bank Road, Gandhi Nagar
Adyar
Chennai -600020
Landmark: NearMichael School
Phone: 044-24910754 044-24910754 , 044-24911526 044-24911526 ,
044-22350241 044-22350241

11.ஏதாவது விழாக்காலமா? வீட்டில் ஏதாவது விருந்து பார்ட்டியா? அதில் உணவு மீந்து விட்டதா?
அதை குப்பையில் கொட்டாதீர்கள்.நீங்கள் இந்த எண்ணினை 1098 (இந்தியாவில் மட்டும் ) தொடர்பு கொண்டால் அதை வாங்கி பட்டினியால் வாடும் ஏழைகளுக்கு கொடுக்க ஆட்கள் இருக்கிறார்கள்.