Thursday 30 August 2018

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர உயிர் மொழி(பாகம்-13)

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர உயிர் மொழி(பாகம்-13)

(தமிழ் மொழியின் மூல ரகசியங்களை அறிய முழுமையாக இந்த தொடரை படியுங்கள்..... பல வாழ்வியல் உண்மைகள் , யோக அறிவியலின் உண்மைகள் , ஆன்மிக உண்மைகள் புரியும்.)

தமிழ் மொழியில் ஒவ்வொரு எழுத்தும் மந்திரமா?

கவி பாடினால் உயிர்போகுமா அது எப்படி?

தமிழை இசையோடு பாடுவதால் அற்புதங்கள் நடந்ததா அது எப்படி?

தமிழ் மொழியில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் மந்திரமாக வேலை செய்யுமா? என்றால், ஒரே பதில் செய்யும்.
இது பற்றி அகத்தியர் மாந்திரீக காவியம்,அகத்தியார் அஷ்டமாசித்து என்னும் மாந்திரீக ஜோதி.பிருகு முனிவர் மாந்திரீகம் 100 என்ற நூல்களில் விரிவாக சொல்லியுள்ளது.

பிருகு முனிவர் மாந்திரீகத்தில் பாடல் 41 முதல் 50 வரை தமிழில் உள்ள முப்பத்தியொரு எழுத்துகளில் ஏறக்குறைய 25 எழுத்துக்ளை துணை பீஜத்தோடு சொன்னால் மந்திரமாக வேலை செய்வதை கூறுகிறார் அதை ஒவ்வொரு எழுத்தாக விளக்கினால் பதிவு நீளும் என்பதால் நூலின் பாடல் எண் மேலே கொடுத்துள்ளேன்.

இதில் ம்" என்ற பீஜத்தை கடைசியில் சேர்ப்பதால் சித்தியை தரும். அதாவது, எந்த எழுத்தோடு சேர்ந்து கூறபடுகிறதோ அதற்கான ஆற்றலை கொடுக்கும். "ங்" என்ற பீஜம் கடைசியில் சேர்த்தால் முக்திக்கான ஞானத்தை அளிக்கும் என பிருகுமுனிவர் கூறுகிறார்.

பாடலை கீழே காண்க
"வைப்பதுவால் சித்தி முத்தி ரெண்டுமாகும்
வகையான ம் கார மந்தம் சித்தி காட்டும்
கைப்பொருளாம் ங் கார மந்தம் முத்தியாம்
கசடில்லை என்வாக்கில் கூர்ந்து நோக்க"
பிருகு மாந்திரீகம் 100ல்-44

உதாரணம் : ஓம் அம் நமக என ஜபம் செய்தால் மரணத்தை வெல்லலாம்.
இதன் விளக்கம் யாதெனில் இயற்கை மரணம் என்பது அறிவியல் ரீதியாக சளி கீழே இறங்கினால் மூச்சு அடைக்கும் மரணம் வரும். தலைக்குள் அம் என்று அதிர்வு ஏற்பட்டால் சளி கசடுகள் வெளியேருவதையே குறிக்கும் அதை கீழே துப்பிவிடவேண்டும். இதனால் மரணம் தள்ளிபோடபடும் என்கிறார் சித்தர்.

மேற்கண்ட ம் , ங் பீஜம் பிராணனை உடலில் சேர்க்கவும்,பிராணனை அதிகபடுத்தவும் பயன்படுத்தபடுகிறது.
ஒவ்வொரு எழுத்தும் உச்சரிப்பு விதம் என்பது அதன் இலக்கண வரையறையை பொருத்து உடனே பலிதமாகும் வேலையை செய்கிறது. மற்ற மந்திரகளை சொல்லும் போது அதை அதிகபடியாக உரு ஏற்றி சொன்னால் பலிதமாகும் என கூறபடும்.

 ஆனால், தமிழில் அதை பாடலாக வடித்து குறிப்பிட்ட ஒலியோடு பயணம் செய்ய வைத்து அதை உடனே பலிதமாகுமாறு புலவர்கள் செய்கிறார்கள்.

ஒலியலைகளை பற்றிய சிறிய விடயத்தை தெரிந்துகொள்வோம் 20 ஹெர்ட்ஸ் மேல் மற்றும் 20,000 ஹெர்ட்ஸ் வரை உள்ள அதிர்வெண்களை தான் கேட்க முடியும்

 அதற்குமேல் முடியாது. இப்படி இதற்கு மேல் மற்றும் இதற்குள் உள்ள அலைவரிசையை கொண்டு மந்திரங்கள்,பாடல்கள் உருவாக்கபட்டன. 20க்கு கீழ் உள்ளதை இன்ப்ராசோனிக் என்றும் 20000 மேல் உள்ளதை அல்ட்ராசோனிக் என்றும் ஆங்கிலத்தில் கூறுகிறார்கள்.

சரி இப்போது தமிழுக்கு வருவோம் தமிழ் மொழியால் இசைக்கபடும் அலைவரிசை நன்மைக்கும் பயன்படுத்தினர், தீமைக்கும் பயன்படுத்தபட்டது.
இதை பற்றி அகத்தியரின் சீடர் சிகண்டி என்பவர் இசைநுணுக்கம் என்ற நூலில் விரிவாக எழுதினார் என்றும் பின்னாளில் காலத்தின் நன்மை கருதி அந்நூல் அழிந்துபோனதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

தமிழ் மொழி பிறர்மனதில் செல்லும் வேகம் என்பது, கண்ணாடி முன் இருக்கும் பிம்பம் கண்ணாடியில் தெரிவதுபோல, கண்ணாடிக்குள் செல்லும் மார்க்கம் எப்படி கண்ணுக்கு தெரியாமல் செல்லுமோ அப்படி இருக்கும் என ஆன்றோர்கள் கூறுகிறார்கள்.
அந்த அளவு சிறியதாக இருக்கும் என கூறுகிறார்கள்.அதன் குறைந்த அதிர்வுகளையும் கணக்கு வைத்துள்ளார்கள்.
அதாவது இந்த அதிர்வுகளை மிகவும் துல்லியமாக அளந்து கூறினார்கள். இம்மி அளவு கூட சத்தம் வரகூடாது, அணு அளவும் சத்தம் கேட்கவில்லை என்பார்கள் அல்லவா, அதன் அளவை கூறுகிறார்கள் கவனிக்க
ஒன்று (1) என்பது அளவாக கொண்டால் அதிலிருந்து பிரித்தால் அதாவது ¾, ½ , ¼ என பிரித்தால் இம்மியின் அளவு 1 க்கு/ 21,50,400 ஆகும். மேலும் ஒரு அணு அளவு என்பது அதாவது 1க்கு /165580800 அணுவின் அளவுகள் ஆகும். _அணுவை தாண்டி குணம்,பந்தம்,பாகம்,விந்தம்,நாகவி
ந்தம்,சிந்தை,கதிர்முனை_ என்று இதையும் தாண்டி தான் நம் குரல்வளைபடி என்ற அளவு கிடைக்கிறது.

அதாவது குரல்வளையில் இருந்து கிடைக்கும் குறைந்தபட்ச அதிர்வுகளின் கணக்கீடு அணுவைதாண்டி உள்ள அளவுதான் அந்த அளவு மெல்லியது மிக குறைந்த அதிர்வு அலைகளை கொண்டது 1க்கு / 958524436480000 அளவுகளை கொண்டது.

    கீழே தமிழர்களின் குறைந்த பட்ச அளவுகளை கொண்ட பட்டியல் படத்தை காண்க

இப்படி குறைந்த அதிர்வுகளை கொண்டு குரல்வளையில் ஒலியெலுப்பினால் யாருக்கு தெரியும்.இந்த அளவு நம் குரல்வளையிலிருந்து வரும் சப்தம் என்பது கணக்குவைக்க நம்மிடம் கருவிகள் இப்போது இல்லை.

 இது மெளனத்தின் தொனியில் இருந்து கொடுக்கும் அளவு சப்தம் தான் இதன் அலைவரிசை

இந்த கணக்கு மற்றும் அறிவியல் எதற்கு கொடுத்தேன் என்றால் சித்தர் சாபம்,பெண்கள் சாபம் மற்றும் புலவர்கள் கவிபாடும்போது ஏற்படும் நிகழ்வில் உள்ள சம்பவங்களை விளக்கும்போது குறைந்த அதிர்வெண் எவ்வளவு என்பது உங்களுக்கு சந்தேகம் வரக்கூடாது, என்பதற்க்கு தான் விளக்கினேன்.

இன்றைய விஞ்ஞானம் அணுவுக்குள் உள்ள குவார்க் அளவுகளை தான் கண்டுபிடித்துள்ளது அதாவது குணம் என்ற அதிர்வில் உள்ள துகள் வரைதான் ஆனால் சித்தர்கள் அதையும் தாண்டி செல்கின்றனர் என்பதை காண்க.

அடுத்த பதிவில் தமிழ்மொழி சித்துக்கு விளையாடிய காலத்துக்கு சென்று எப்படியெல்லம் அற்புதம் செய்தது, சாபங்கள் எப்படியெல்லாம் பலித்தது என்பதை விளக்கமாக காண்போம்.

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” –திருமூலர்

         -  shiva shangar

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர உயிர் மொழி(பாகம்-12)

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர உயிர் மொழி(பாகம்-12)

(தமிழ் மொழியின் மூல ரகசியங்களை அறிய முழுமையாக இந்த தொடரை படியுங்கள்..... பல வாழ்வியல் உண்மைகள் , யோக அறிவியலின் உண்மைகள் , ஆன்மிக உண்மைகள் புரியும்.)

நமது மொழியே ஒரு மந்திரமொழி என்பதை கூற முற்படுகிறேன். இதில் அறிவியல் நூல்கள்,சித்தர் நூல்கள்,இலக்கண நூல்கள்,சங்கநூல்கள் என அனைத்தையும் அடிப்படையாக வைத்து, அண்ணாமலையார்  அருளாலும் மற்றும் குருவருளாலும் கூற முற்படுகிறேன்.

மந்திரம் என்பது மனோசக்தியோடு பயணிக்க கூடிய ஒலியலைகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.ஆனால் குறிப்பாக சில வார்த்தைகள் மட்டும் தான் மந்திரமாக சில மொழிகளில் உள்ளது.

இதற்கு காரணம் அம்மொழியின் இலக்கண கூறும், இசைகூறும் இணைந்து வராததால் தான் என்கிறார்கள்.இந்த இரண்டும் தமிழில் எல்லா எழுத்தோடும் இணைந்து வருவதால் தமிழ் மொழி மந்திரமாக உள்ளது.

ஏனெனில் தமிழ் எழுத்துகள் உயிரோடும், உடலோடும், பிராணனோடும், இயற்க்கையோடும் இணைந்து பயணிப்பதால் தான் ஒவ்வொரு எழுத்தும் மந்திர வித்துகளாக உள்ளது.

உயிர் எழுத்துகள் பற்றிய பதிவை நாம் ஏற்கனவே கண்டோம் ஆதலால் அது எப்படி புலவர்களாலும் சித்தர்களாலும் மறைமுகமாக வெளிபட்ட்து என்பதை காண்போம்.

மந்திரம் என்ற சொல்லை நேரடியாக ஒரு சில இடங்களில் சித்தர்கள் மறைமொழி,பரிபாஷை என்பார்கள். புலவர்கள் சூத்திரம், நூன்மரபு, இலக்கணம், மறைமொழிதல் என்று கூறுகிறார்கள்.

 எல்லாம் ஏறக்குறைய ஒரே அர்த்தம் தான். ஆனால் கூறப்படும் சொல் பல அர்த்தம் கொண்டவையாக இருக்கும்.
இந்த மொழி மந்திரமாக சித்தியாக, முதலில் வாசி யோகம் சித்தியாக வேண்டும். வாசி சித்தியாக தமிழ் மொழி தெரியவேண்டும் இரண்டும் பிணைக்க பட்டுள்ளது.

வரலாற்றில் வாசியோகம் செய்யாமல் இயற்கையாக தமிழ் மொழியே வாசியாக சில புலவர்களிடத்திலும் பெண்களிடத்திலும் மந்திர வேலைகளை செய்துள்ளது. ஆனால் சிலர் இதை மறுக்கிறார்கள் அதை அவரவர் ஆய்வுக்கு விட்டு விடுகின்றேன்.

கூறுகிற மந்திரங்கள் எல்லாம் சித்தியாக மெய்பொருளில் மனம் நின்று கூறினால் மந்திரம் என்கிற மொழி அனைத்துமே வேலை செய்யும் என்கிறார் அகத்தியர்.

பூரணகாவியம் ஆயிரத்தில் கண்டமணிச் சருக்கத்தில்48 வது பாடலில் மந்திரம் பற்றி கீழே
"உருவான செயலறிந்து உருவேசெய்தால்
…………………………………………………
கருவான முதலெழுத்தும் யீரெழுத்துங்
கண்டுமனங் கொண்டுறுதி கனிவாய்நின்றால்
குருவான பதியில் மனங்கூர்மையாகி
கூறுகிற மந்திரங்கள் சித்தியாமே"

இப்படி மனம் கூர்மையாக்கி கூறினால் மொழிகின்ற வார்த்தை மொழிந்த வேலையை செய்யும் என்கிறார் அகத்திய சித்தர்.
சரி அடுத்து புலவர்கள், மந்திரம் பற்றி என்ன சொல்கிறார் என அதையும் தெரிந்து கொள்வோம் கீழே;

“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்
மறைமொழி தானே மந்திரம் என்ப”
தொல்காப்பியம்-பொருளதிகாரம்- பாடல் 480

அதாவது நிறைமொழியினையுடைய மனிதர்கள் ஆணையால் வெளிபடும் மறைமொழி தான் மந்திரம் என்கிறார் புலவர்.
இப்படி வெளிப்படும் வார்த்தை சரியான உச்சரிப்பு இலக்கண முறை ஆகியவற்றை கொண்டு ஒருவரை செயலிலக்க செய்யமுடியும். இதை இலக்கணத்தில் எங்கு வைத்தார்கள் என்றால் அகத்திணை, புறத்திணையில் வைத்தார்கள்.

இலக்கண நூல்கள் எல்லாமே மறைமுகமாக பல விடயங்களை கூறுகிறது. ஆனால், எல்லாம் பாடல்கள் வடிவிலேயே இருந்து காண்பதால் அதன் சூட்சமம் வெளிப்படுவதில்லை.

அதனை வாசியோக நிலையில் இருந்து மெய்பொருளில் இருந்து, காணததால் அது சாதரணமாக பேசும் மொழியாகவே இன்றைய காலத்தில் பயன்படுகிறது.

ஒரு சூத்திரம் என்பது அதாவது ஒரு சொல்லானாலும் சரி ஒரு வரியானாலும் சரி அது பத்து குற்றமும்(10) இல்லாமல் முப்பத்திரெண்டு(32) உத்திகளோடு கூட்டி சொன்னால் தான் நூல் என ஒத்துகொள்வார்கள்.நமக்கு இங்கு ஒரு உத்தியோடு பொருள் சொல்லுவதே பெரிய விடயமாக உள்ளது.

கீழே தொல்காப்பிய புலவர் பாடலை காண்போம்.
“ஒத்த சூத்திரம் உரைப்பிற் காண்டிகை
மெய்ப்படக் கிளந்த வகைய தாகி
ஈரையுங் குற்றமும் இன்றி நேரிதின்
முப்பத் திருவகை உத்தியோடு புணரின்
நூலென மொழிப நுணங்குமொழிப் புலவர்”
தொல்காப்பியம் – பொருளதிகாரம் – மரபியல் பாடல்-644
ஆக சித்தர் பாடல்கள், புலவர் பாடல்கள் என யார் விளக்கம் எழுதினாலும் இந்த முப்பத்திரெண்டு வகையான பொருள்களில் ஏதேனும் ஒன்றை கூறிவிடுவார்கள்.

அவர்கள் சென்று எடுக்கும், அலைவரிசையில் பொருள் மாறுபடுமே அன்றி, அது வேறு அர்த்தம் என கூறமுடியாது. ஆதலால் அவர் விளக்கம் சரி இவர் விளக்கம் சரி என சண்டையிடாமல் உங்களுக்கு எந்த அலைவரிசையில் கிடைத்த விளக்கம் வேண்டுமோ அதை எடுத்து கொள்ளவும்.

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” –திருமூலர்

தொடரும்......

         -  shiva shangar

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர உயிர் மொழி(பாகம்-11)

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர உயிர் மொழி(பாகம்-11)

(தமிழ் மொழியின் மூல ரகசியங்களை அறிய முழுமையாக இந்த தொடரை படியுங்கள்..... பல வாழ்வியல் உண்மைகள் , யோக அறிவியலின் உண்மைகள் , ஆன்மிக உண்மைகள் புரியும்.)

தமிழும் அகத்தியரும்
**********

அகத்தியர் பெருமான் குடத்தில் இருந்து அவதரித்தவர். இவரை உருவாக்கியவர் சிவபெருமான் என்கிறார்கள்.அதாவது பனிக்குடத்தில் இருந்து என்றும், இந்த பனிக்குடம் இருள் நிறைந்த இடத்தில் வைக்கபட்டது என்றும், அது கடல் ஆழம் என்றும் அது குளத்தில் வைக்கபட்டது என்றும் பல தகவல்கள் கூறுகிறார்கள்.இவர் பிறந்த நாட்சத்திரம் மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரம் என்கிறார்கள்.

"நற்றவ சிவனார் பெற்ற நற்றவ முனிவனே அகத்தியன்"
புஜண்டர் நாடி

"கரியமாலோ அலைகடலில் துயின்றோன்
அலைகடலோ குருமுனியின் கையில் அடக்கம்
குருமுனியோ கலசத்தில் பிறந்தோன்"
அவ்வையார்

இப்படி அகத்தியர் பிறப்பு பற்றிய குறிப்புகள் உண்டு எனலாம்.அகத்தியர் நிறைய அகத்தியர் இருந்தார்கள் என சொல்வது ஏற்க முடிவதில்லை ஏனெனில் கற்ப மருந்து சாப்பிட்டு அவர் பல யுகங்கள் வாழ்ந்தார் என சித்தர்நூல்கள் குறிப்புகள் உள்ளது.
குறிப்புகள் = கருவூரார் வாதகாவியம் பாடல் 8முதல் 11 வரை

மேலும் அவர் தமிழ் நூல்களை வடமொழிக்கு தருவதற்க்கு சென்றார் எனவும் பின் பிரளய காலத்தை நிறுத்த வடநாட்டில் இருந்து தென்பகுதிக்கு வந்தார் என குறிப்புகள் உள்ளது.(சில குறிப்புகள் பெருநூல்காவியம் 1000த்தில் உள்ளது)

மேலும், அவர் மூன்று தமிழ் சங்கத்திலும் இருந்தார் எனவும், பின் அதுவல்லாமல் சித்தர்கள் தமிழ் சங்கமான பொதிகைமலையில் தனது பெருநூல் காவியத்தை அரங்கேற்றினார் எனவும் கூறபடுகிறது.

தென்மதுரை தமிழ்சங்கத்தில் எப்படி ஒரு நூல் அரங்கேற்றபடுமோ அதுபோலவே சித்தர்கள் தமிழ் சங்கமான பொதிகையிலும்,சதுரகிரியிலும் நூல் அரங்கேற்றபடும்.

அகத்தியனார் அகத்தியம் என்ற நூலில் மூன்று தமிழையும் கூறினார்,ஆனால் அது கடல்கோளால் அழிக்கபட்டது இருப்பின் பின் பெருநூல்காவியம் என்ற நூலை இயற்றி பொதிகை தமிழ் சங்கத்தில் அரங்கேற்றினார்.

அதுவும் பின்னால் ஆழிபேரலையால் கடல்கொண்டு சில பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது இது ஆறு காண்டங்கள் மட்டுமே இப்போது நம்மிடம் உள்ளது.

அகத்தியம்➡பன்னீராயிர காவியம் 12000➡போகர் சப்தகாண்டம்7000
இப்படி வந்த நூல் கடைசியாக முழுமையாக உள்ள நூல் போகர் 7000

அகத்தியர் தென்பகுதிக்கு செல்லுவதை அறிவியல் பூர்வமாக கீழே காணலாம்

இதில் குறிக்கபடும் காலமும் தென்மதுரை கடல் கொண்ட காலமும் தோராயமாக ஒன்றாக வருகிறது காண்க

வானவியல் நிபுணரான வராஹமிஹிரர் காலத்தில் மேஷப் புள்ளி அசுவனி நட்சத்திரத்தில் இருந்தது.

 அதற்கு 14400 ஆண்டுகளுக்கு முன்னர் சித்திரை நட்சத்திரத்தில் அது இருந்தது.

சித்திரை நட்சத்திரத்தில் அகத்தியர் இருக்கும் போது அதன் தென் துருவ தூரம் 14 டிகிரி ஆகும்.அப்போது அது உஜ்ஜயினியில் தெரியவில்லை.ஏராளமான நட்சத்திரங்கள் உள்ள வடக்கு வானம் மட்டும் அப்போது தெரிந்தது. இதையே தேவர்கள் கூடிய திருக்கல்யாணக் கூட்டமாக புராணம் வர்ணிக்கிறது.

கி.மு.7200ம் ஆண்டு வாக்கில் அகத்தியரின் தென் துருவ தூரம் 22 டிகிரி ஆனது.அப்போது அகத்திய நட்சத்திரம் உஜ்ஜயினியில் தெரிய ஆரம்பித்தது.

பின்பு மீண்டும் கிமு.4600 ல் தென் துருவ நட்சதிரம் 24 டிகிரி ஆனது. இது பொதிகையில் இருந்து காண முடிந்தது. இதையே அகத்தியர் தெற்கே வந்து சமநிலை ஏற்படுத்தினார் என புராணம் விவரிக்கிறது.

இதில் தென்மதுரை கடலில் மூழ்கியது தோராயமாக கி.மு 4500 என ஆய்வாலர்கள் கூறுகிறார்கள்.

 கானோபஸ் என மேலை நாட்டினரால் அழைக்கப்படும் அகத்திய நட்சத்திரம் அபூர்வ ஆற்றல்களைக் கொண்டு வானில் ஜொலிக்கும் ஒன்று.

இது 700 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. கற்பனைக்கு அப்பாற்பட்ட தூரம் இது!இதன் மாக்னிட்யூட் 0.86,அகத்தியர் உள்ள ஆர்கோ நட்சத்திரத் தொகுதியில் மொத்தம் 21 நட்சத்திரங்கள் உள்ளன. ஆனால் இந்தத் தொகுதி கற்பனைக்கு எட்டாத தூரத்தில் இருந்தாலும் கூட அகத்தியர் மட்டும் தனித்து சூரியனைப் போல 13600 மடங்கு பிரகாசத்துடன் ஜொலிக்கிறார்.

எல்லையற்ற தூரத்தின் காரணமாக இவரது பிரகாசத்தை நம்மால் உணர முடியவில்லை! இவருக்கு அருகில் உள்ள டோராடஸ் நட்சத்திரமே இவரது மனைவியான லோபாமுத்ரை என்பர் அறிஞர்.

நல்லது பதிவின் நீளம் கருதி சில சித்தர்கள் பாடல்களை காண்போம் அன்பர்களே

"குறுமுனி அல்ல அது குரு முனி
தானான குருமுனியா ரென்றுசொல்லி
தன்மையுள்ள சங்கத்தா ரெல்லாருந்தான்
கோனான குருவணக்கம் மிகவுங்கூறி
குவலயத்தி லின்னூல்போல் யார்தான் செய்வார்"
பெருநூல் 12000 முதல் காண்டத்தில் எண்700

பொதிகைமலை சங்கத்தில் கமலமுனி நூல் அரங்கேற்றல் தடுக்கபட்டு பின் சதுரகிரி சங்கத்தில் அரங்கேற்றம் செய்யபட்ட்து.

"கேட்டாரெ கமலமுனி தாள்பணிந்து
கிருபையுடன் தென்பொதிகை சபையோர் முன்னே
கூட்டமுடன் அரங்கேற்றல் செய்யவென்று"
பாடல் 12000த்தில்3240

"இட்டாரே சித்துமுனி கமலர்தாமும்
யெழிலாக சதுரகிரி மலையோரந்தான்
பட்டயம்போல் வரங்கேற்றல் செய்வதற்கு
பாங்குடனே சம்மதங் கொண்டருளினாரே"
பாடல் 12000த்தில்3246

 இதன் பாடல்கள் பெருநூல்12000 மூன்றான் காண்ட்த்தில் எண் 240லிருந்து 247வரை சங்கத்தில் அரங்கேற்றம் செய்வதை கூறுகிறது

"சிறப்புடனே பொதிகைமலை சங்கமப்பா
தீரப்பா நவகோடி சித்துநாதர்
திறமுடனே யெழுதிவைத்த பலகைதானே
பலகையாம் சங்கமென்ற பலகையப்பா"
பெருநூல் 12000த்தில்பாடல்4024,25

_இதன் பாடல்கள்
 பெருநூல்12000 நான்காம் காண்ட்த்தில் எண் 24லிருந்து 30வரை சங்கத்தில் பலகை மூலம் செய்வதை கூறுகிறது._

அகத்தியத்தின் வழி நூல் தொல்காப்பியம் என்பது போல் பெருநூல் 12000த்தின் வழி நூல் போகர் சப்தகாண்டம் 7000 என்பதை போகர் கீழே கூறுகிறார்.

"வருநூலம் அடியேனும் சொன்ன மார்க்கம்
விருப்பமுடன் அகத்தியரும் ஒருநூல் செய்தார்
குருநூல் காவியம் பன்னீர் ஆயிரம் தான்"
போகர் 7000 பாடல் 4124

இனி அடுத்து மந்திரம் பற்றிய பதிவுகள் வரும் இதில் தமிழ் மொழியே மந்திரமாக செயல்பட்டதையும். புலவர்கள், சித்தர்கள் பயன்படுத்திய முறைகள்,மற்றும் சாபம் கொடுக்கும் முறைகள் என அனைத்தையும் காண்போம்.

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” –திருமூலர்


தொடரும்......

         - shiva shangar

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர உயிர் மொழி(பாகம்-10)

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர உயிர் மொழி(பாகம்-10)

(தமிழ் மொழியின் மூல ரகசியங்களை அறிய முழுமையாக இந்த தொடரை படியுங்கள்..... பல வாழ்வியல் உண்மைகள் , யோக அறிவியலின் உண்மைகள் , ஆன்மிக உண்மைகள் புரியும்.)

சென்ற பதிவில் சிவனாரை கண்டோம் இந்த பதிவில் சுருக்கமாக முருகனை காண்போம்(அனைத்தும் சித்தர்கள் நூலில் இருந்து தொகுக்கபட்ட்து).

பதிவு பெரிதாக இருந்தாலும் பரவாயில்லை பாடலை சுட்டிகாட்டவும் என அன்பர்கள் கூறியதால் பாடலுடன் விளக்குகிறேன்.

 முருகன்
*******

புராண கதைப்படி முருகன் பிறப்பிடம் வடநாடு, கங்கையை ஒட்டிய பகுதி என்றும், நட்சத்திரம் விசாகம் என்றும் கூறுகிறது.

இதை தான் விளக்கமாக ஒரு காண்டத்தின் படலமாக ஸ்கந்த புராணம் கூறுகிறது.ஆனால் கந்தனுக்கு விசாகன் என்ற பெயர் இருந்ததாக பாணினி முனிவர் இயற்றிய வியகரணத்திலும், பதஞ்சலி முனிவர் இயற்றிய மகாபாஷ்யம் நூலிலும் கூறுகிறார். இதை கொண்டே விசாகம் நட்சத்திரம் என முடிவு கட்டினர் வடநாட்டவர்.

இதையெல்லாம்(ஒரு ஓரமாக) தனியாக எடுத்து வைத்துவிட்டு சித்தர் நூல்களை ஆராய்வோம்.

முதலில் முருகன் யார் என்றால் அவர் மனிதராக பிறந்தவர் என்றும் அவர் மரபு எதுவென்றால் சைவம் என்ற பீடமாகும். இவர் பிறந்த நாள் ஆவணி மாதம் பூச நட்சத்திரத்தில் முதல் பாதத்தில் பிறந்தார் என போகர் கூறுகிறார்.

பிரணவ ஆய்வில் அதிகம் ஈடுபட்டு மெய்பொருளை அறிந்தவர் என்றும் பின் அந்த மெய்பொருளை ஈசனுக்கும், அகத்தியருக்கும் தெளிவுற காட்டினார் என்றும்,பின் தான் ஈசன் அதை சரிதான் என உணர்ந்து ஏற்றார் எனவும் கூறுகிறார்கள். பின் காங்கேயம் என்ற ஊரில் பிறந்தவர் என்று போகர் கூறுகிறார். அதனால் அவர் பெயர் காங்கயன் ஆயின.

குமரவேள் என்ற பெயரையும் கொண்டவர் என்று அடியாருக்கு நல்லாரும், முருகவேல் என்ற பெயரை நக்கீரரும் கூறுகின்றனார்.முதல் தமிழ் சங்கத்தில் முருகன் இருந்தார் என இறையனார் அகபொருள் சிறப்புப்பாயிரம் உரையும், தொல்காப்பிய சிறப்புப்பாயிரம் உரையும் கூறுகிறது.

மேலும் அவர் மூன்றுயுகம் கடந்தவர் என பிறந்த நாள் கூறபடுகிறது.

சரி மேலே சொன்ன விளக்கத்திற்க்கு எல்லாம் பாடலாய் சித்தர் பாடலில் காண்போம்.

"செப்பலாம் சுப்பிரமணியன் என்பார் பாரு
சிறப்பான மனிதனல்லால் வேறொன்றில்லை"
 போகர் 7000தில் பாடல்-5622

"முத்தான வடிவேலர் முருகரப்பா
முயற்சியுடன் வயததுவும் எது என்றாக்கால்
சத்தியமாய் வயததுவும் , கணக்கோ இல்லை
சார்பான நூல்தனிலும் சொல்லவில்லை "
 போகர் 7000த்தில் பாடல் -5852

"ஆறான சுப்பிரமணியர் மரபேதென்றால்
அப்பனே சைவம் என்ற பீடம் ஆமே"
 போகர் 7000த்தில் பாடல் – 5732

"துன்னவே மூன்றுயுகம் கடந்த வேலர்
துப்புறவாய்ப் பிறந்த்தொரு நேர்மையப்பாசொன்னபடி ஆவணியாம் திங்களப்பா
சொல்லுகிறேன் முதற் பூசங்கால் தான் ஒன்றே"
போகர் 7000த்தில் பாடல் -5941

"சேரர் கொங்கு வை காவூர் நனாடாதில்
ஆவினன் குடி வாழ்வான தேவர்கள் பெருமானே"
 திரு ஆவினன்குடி திருபுகழ் பாடல்-1

"கருதவே மும்மூலம் பிரித்துச் சொல்லும்
கருவூரிற் காங்கயனே கருவாய்த் தானே"
 சுப்பரமணியர் ஞானம் 200ல் பாடல்-31

"பேரான ஈசனுக்கு இதுதான் சொல்லிப்
பேசாத எழுத்தினூட வரையும் காட்டிச்"
 யோகஞானம் 500ல் பாடல் 13

ஆக எப்படி பார்த்தாலும் முருகன் தமிழ்நாட்டில் பிறந்தவர் என்பது தெளிவாக தெரிகிறது. நண்பர்கள் இங்கு ஒன்று வினவலாம் இது எல்லாம் போகர் மட்டும் தான் சொன்னாரா?

இல்லை, இதை அவர் அகத்தியர் நூலானா அகத்தியம் மற்றும் அகத்தியர்12000 என்ற நூலில் இருந்து பல விடயங்களை விரித்து தன்னுடய சப்தகாண்டம் 7000 த்தில் கூறியதாக கூறுகிறார். அதாவது முதல் தமிழ் சங்கத்தில் அகத்தியம் என்ற இலக்கண நூல் வெளியிட்டார்கள் அல்லவா அதிலும் அதற்கு அப்புறம் 12000 என்ற நூல் எழுதியதாகவும் அதுவும் கடல்கோளால் அழிவுற்றது எனவும் கூறுகிறார்.இது பற்றிய தகவலை அகத்தியர் தலைப்பில் காண்போம்.இப்போது அந்த பாடலை காண்போம்.

"விருப்பமுடன் பாடிவைத்த சத்த காண்டம்
குறைந்ததொரு பொருள் எல்லாம் எந்தன் நாதர்
குருமுனியாம் அகத்தியத்தில் காணலாமே"
 போகர் 7000த்தில் பாடல்-5693

"காணலாம் அகத்தியனார் காவியத்தில்
கருவான பன்னீராயிரத்தில் அப்பா"
போகர்7000த்தில் பாடல்-5694

 காங்கேயம் சிவன்மலையில் முருகன் தங்கி தவம் செய்து, அந்த தவ ஆற்றல் முழுக்க அம்மலையில் வைத்துள்ளார் எனவும் மேலும் சிவவாக்கிய சித்தர் அங்கு சமாதியானர் என்றும் அவருடைய ஆற்றல் முழுக்க உள்ள இடமும் என்று என் குருநாதர்களில் ஒருவர் கூறினார்.

சென்னிமலை கந்த சஷ்டி கவசத்தை விளக்கும் இடம். அங்கு சென்று தவம் செய்தால் அதன் மறைமுக விளக்கம் கிடைக்கும் என என்னால் உறுதியாக கூறமுடியும்.அவர் வாசியோகம் செய்பவராக இருக்கவேண்டும் என்பதை நினைவு படுத்துகிறேன்.

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” –திருமூலர்

தொடரும்......

         -  shiva shangar

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர உயிர் மொழி(பாகம்-9)

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர உயிர் மொழி(பாகம்-9)

(தமிழ் மொழியின் மூல ரகசியங்களை அறிய முழுமையாக இந்த தொடரை படியுங்கள்..... பல வாழ்வியல் உண்மைகள் , யோக அறிவியலின் உண்மைகள் , ஆன்மிக உண்மைகள் புரியும்.)

தமிழும் -சிவனும்

இவர் ஒரு மனிதராக வந்து கடவுளாக மாறியவர் என்று கூறுகிறார்கள். (இதற்க்கு சரியான சான்று இல்லை).

இந்த உலகில் இருவரின் பிறப்பு பற்றிய தகவல்கள் இதுவரை யாருக்கும் சரியாக கிடைக்கவில்லை என்றால், அது இரண்டு நபர்களுக்கு தான் என வரலாறு கூறுகிறது.

அதாவது, ஒன்று சிவபெருமான் மற்றொன்று தமிழ் மொழி இந்த இருவரின் பிறப்பும், காலமும் இதுவரை சரியாக யாராலும் கணிக்க முடியவில்லை.

சிவனால் உருவாக்கபட்டது தான் தமிழ் மொழி. அதனால் தமிழின் காலத்தை ஆய்வு செய்தால் சிவனின் காலமும் அகப்படும் என, தமிழின் காலம் தேடுகின்றனர்.

 அதுவும் சரியான ஆண்டு கிடைத்தபாடு இல்லை.

இரண்டும் சரியான தகவல் கிடைக்காத புதிராகத்தான் உள்ளது.

ஒரு நண்பர் என்னிடம் கேட்டார் “சிவன் என்பவர் வடநாட்டை சேர்ந்தவர் என்கிறார்கள் இது உண்மையா?”. இது மிகவும் தவறான கேள்வி.

சிவன் என்பவர் இந்த வடநாடு என்பதற்கு முன்னே தென்னாடு என்ற ஒன்று பெரிய நிலபரப்பை கொண்ட பாண்டிய நாட்டில்(குமரிகண்டம்) இருந்தார் என ஆய்வுகூறுகிறது.

இவர் மலையில் இருப்பதை அதிகம் விரும்புவர் என்பதால் இவர் இருந்த இடம் மேருமலை என்கிறார்கள்.இது தென்மதுரைக்கு அருகில் இருந்த மலையாகும். ஆக குறிப்பு படி பார்த்தால் இவர் குமரிகண்டத்தில் கிமு 15000 ஆண்டில் அங்கு இருந்தார் எனவும், கிமு.7000 வாக்கில் தமிழ் சங்கத்தில் இருந்தார் எனவும் உள்ளது.

வட மாநிலத்தவர் தற்காலத்தில் எழுதிய மெலுகாவின் அமரர்கள் புத்தகம் கூறும் சிவன் வரலாறு
சிந்து சமவெளியை அடிப்படையாக கொண்டது.

அவர் சிவனின் பிறப்பு பற்றி கூறவில்லை.
முதலில் அவர் புத்தகம் ஆரம்பிக்கும் இடம் மானசரோவர் என்ற இடத்தில் இருந்து தான்
அவர் குறிப்புகளின் அடிப்படையில் அந்த புத்தகம் எழுதினாலும் அவர் ஆரம்பிக்கும் காலம் முதல் பக்கத்தில் கொடுத்து இருப்பார். அதாவது அவர் சுட்டும் காலம் கிமு 1900 ஆம் ஆண்டு. இந்த காலத்தில் இருந்து தான் அவர் தொடங்குவார் .

நாம் இந்த காலத்தின் அடிப்படை படி கண்டால் கிமு 4500 வாக்கில் தென்மதுரை மூழ்கியது. இமயத்தின் உயரம் சற்று மேல் எழும்பியது.
சிவபெருமான் தென்மதுரையில் இருந்து புலம்பெயர்ந்தாலும். 2600 ஆண்டுகள் தென்னாட்டில்(கபாடபுரம்,மதுரை) இருந்து தான் பின் சென்றார் என தெளிவாக தெரியும்.

ஆக இது போன்ற நூல்களை வைத்து முடிவு செய்வது தவறு என அறியவும்.

சிவ பெருமான், களவியல் என்ற இலக்கண நூலை தமிழ் சங்கத்தில் வெளியிட்டார் எனவும், இதற்கு இறையனார் அகப்பொருள் என நூலின் பெயர் உள்ளதாகவும், இதற்கு உரை செய்த நக்கீரனார் கூறுகிறார்.

தமிழ் மொழி தன் இருப்பு குறைந்து பல இடங்களில் பேசபட்டதால் அதை கொடுந்தமிழ் என ஆன்றோர்கள் அழைத்தனர்.

 தமிழிருந்து உருவக்கபட்ட்து தான் வடமொழி என அறியவும். அதற்கும் ஒரு வரையறை அளித்தவர் சிவன்(பாணினி முனிவருக்கு அளித்தார்) என்பதால் அவர் வடநாட்டை சேர்ந்தவர் என முடிவு கட்டிவிட்டனர்.

  ஆக சிவன் என்பவர், மாணிக்கவாசகர் சொல்வதுபோல் தென்னாடுடையவர் என்பது தெளிவாக தெரிகிறது அவருக்கும் தமிழுக்கும் தொடர்பு அதிகம் உள்ளது என புரிகிறது.

      இன்னும் 100 ஆண்டு சென்றால் இது மாதிரி பல புத்தகங்களை கொண்டு சிவன் வடநாட்டை சேர்ந்தவர் என முடிவு கட்டிவிடுவர்.

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” –திருமூலர்

         -shiva shangar

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர உயிர் மொழி(பாகம்-8)

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர உயிர் மொழி(பாகம்-8)

(தமிழ் மொழியின் மூல ரகசியங்களை அறிய முழுமையாக இந்த தொடரை படியுங்கள்..... பல வாழ்வியல் உண்மைகள் , யோக அறிவியலின் உண்மைகள் , ஆன்மிக உண்மைகள் புரியும்.)

சென்றைய பதிவுகளில்  சமஸ்கிருதத்தின் விளக்கம் கொடுக்கபட்டுள்ளது.

இனி தமிழில் மந்திரம் எப்படி எல்லாம் உள்ளது எனபதையும், ஆய்வின் தலைப்பை தமிழும் சமஸ்கிருதமும் என்பதை மாற்றி தமிழே ஓர் மந்திரமொழி என சொல்கிறேன்

இதற்கு குறைந்தது ஐந்து பதிவுகள் வரும் என கூறலாம்.அதற்கு மேலும் வரலாம் இருப்பினும் காலம் கருதி முடிக்கபடும்.
இந்த ஆய்வின், மூலம் ஒரே வரிதான் தமிழே மந்திரமாக செயல்படும் என்பது தான்

இந்த ஆய்வில்
1. சங்க காலத்திற்க்கு நாம் செல்ல வேண்டி வரும்.

2 மறைந்த நூல்களின் குறிப்புகளை அறிய வேண்டி வரும்

3. கடலுக்கடியில் இருக்கும் பல நகரங்களை சந்திக்க(தோண்ட) வேண்டி வரும்.

4. சங்க கால பெண்களின் சக்திகளை காண வரும்,

5. சங்க கால புலவரின் திறமை இருந்த விதம் வெளிப்படும்,

6. சித்தர்களின் தமிழ்மொழி பயன்பாடு
சங்க தமிழோடு இசை சேர்ந்து விளையாடிய விதம்

7. குறைந்த எழுத்துகளை கொண்ட மந்திரம்

என அனைத்தும் குறிப்புகளாக கூறி
காலத்தின் அருமை கருதி சில ரகசியங்களை வெளிபடுத்தியும், சிலதை விளக்காமல் அவரவர் அனுபவ ஆய்வுக்கே விட்டுவிட வேண்டியதால் பொறுத்தருள வேண்டும்

பல இடங்களில் மேற்கோள் பாடல்கள் காட்டபடும் அதை அன்பர்கள் படித்து ஆய்வு செய்ய ஏதுவாக இருக்கும். இதனால் பதிவின் நீளமும் அதிகமாக இருக்கும் என்பதை கூறிவிடுகிறேன்.

சில பதிவுகள் வேலை பளுவின் காரணமாக தாமதம் ஆகலாம், சற்று காத்திருக்க வேண்டுகிறேன்

எப்படி இருப்பினும் தமிழ் மொழி பற்றி மறைந்த பல உபயோகமான தகவல்கள் கிடைக்கும் என உறுதியாக கூறலாம்.

இதற்கு என் குருநாதர் அன்னை சித்தர் மூலிகை முனிவர் ராஜ்குமார் ஸ்வாமிகளின் ஆசிகளோடும் பதிவிடுகிறேன் என்பதை கூறிகொள்கிறேன்.

தமிழ் மொழி உச்சரிப்பு என்பது இலக்கண வரையறையோடு உச்சரிக்கபடும் போது மந்திரமாக வடிவம் எடுத்து நேரடியாக சென்று தாக்கும்.

பெரும்பாலும் மொழி மந்திரமாக உருமாறும்போது நெட்டலைகளாக உபயோகபடுத்த படுகிறது

இது பாடல் பாடும்போது ஏற்படும் அலையானது நேரடியாக சென்று தாக்குதல் புரிகிறது. இதனை மறைமுகமாக அந்த காலத்தில் வைத்துள்ளனர்.
இது பற்றி காணும் முன் தமிழின் திறம் பற்றி அறியவும் சங்க காலத்தில் இருந்து வருவோம்.

இப்பொழுது நாம் செல்லவேண்டிய காலம், தென்மதுரை இருந்த இடமான குமரிகண்டம் என்ற கண்டத்திற்க்கு இங்கு தான் முதல் தமிழ் சங்கம் இருந்தது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கடலியல் ஆதாரத்தின் படி இக்கண்டம் கி.மு 8000 என்கிறார்கள். ஆனால் நில ஆய்வாளர்கள் கி.மு 30,000 என்கிறார்கள். நாம் சங்கம் தொடங்கபட்ட காலத்தில் இருந்து செல்வோம்

அதாவது கி,மு 8000 த்திலிருந்து கி.மு 7000 க்குள் செல்வோம்.

பதிவு மந்திரம் குறித்து என்பதால் இத்தமிழ் மொழியில் உள்ள ஆற்றல் மட்டும் பார்ப்போம்.மேலும் அதை வடிவமைத்த நபர்களை பற்றியும் அறிவோம். முதலில், இந்த தமிழ் செவ்வனே வளர காரணமானவர்கள் சிவன் என்கிற இறையனார் (திரிபுரம் எரித்த விரிசடை கடவுள்), முருகபெருமான் ,  மற்றும் அகத்தியர் ஆவார்கள்.

இவர்கள் மூவரையும் பற்றி இனி விரிவாக பார்ப்போம்......

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” –திருமூலர்

தொடரும்.......

         - shiva shangar

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர உயிர் மொழி(பாகம்-7)

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர உயிர் மொழி(பாகம்-7)

(தமிழ் மொழியின் மூல ரகசியங்களை அறிய முழுமையாக இந்த தொடரை படியுங்கள்..... பல வாழ்வியல் உண்மைகள் , யோக அறிவியலின் உண்மைகள் , ஆன்மிக உண்மைகள் புரியும்.)

சென்ற பதிவில் தொடர்ச்சியாக தமிழ்-சமஸ்க்ருத தொடர்பு இன்னும் ஆழமாய் தொடர்கிறது........ ம்

இப்போது சமஸ்கிருதம் பேசும் இடம் இரண்டே இரண்டு கிராமம் தான்.ஒன்று ஒரிசா மாநிலத்தில் கந்தர்புரா மாவட்டம் சியாம்சுந்தர் பஞ்சாயத்துக்குட்பட்ட  சசானா கிராமம். மற்றொன்று கர்நாடகா மாநிலத்தின் ஷிமோகா மாவட்டத்திலிருந்து சுமார் 16 கி.மீ. தூரத்தில் துங்கா நதிக்கரையில் உள்ளது மாத்தூர் கிராமம்.

 இந்தியாவில் இரண்டு கிராமங்களில்தான் இன்று வரை சமஸ்கிருதம் பேச்சுமொழியாக உள்ளது. அதில் மாத்தூர் கிராமம் மிக முக்கியமானது._

மொழியை அழியவிடமாட்டோம் என கொள்கையோடு இருக்கிறார்கள். கிராமம் என்பதால் இன்னும் உள்ளது.

நன்றாக நினைவில் கொள்ளவும் ஒரு இனம் அழிந்தால் அந்த இனத்தின் கலாச்சாரமும்,மொழியும் தானாக அழியும். நாம் இப்போது தமிழ் பேசுவது சரியான உச்சரிப்பு இல்லை என அனைவரும் அறிந்த ஒன்று. உருபடியாக பேசியது யார் என்றால் இலங்கை தமிழ் மக்கள் மட்டுமே, ஏன் 11 நாடுகள் உதவியின் மூலம் இலங்கை தமிழர்கள் கொல்லபட்டனர், யாழ்பாண நூலகம் ஏன் அழிக்கபட்டது என ஆராய்ந்தால் ஒன்று மட்டுமே விளங்கும்.அதை சிந்திக்க!!!

“நாங்கள்(போராளிகள்) எங்களுக்காக போராடவில்லை, எங்கள் இனத்திற்க்காக தான் போராடுகிறோம்.எங்கள் இனத்தின் ஒவ்வொரு நபருக்காகவும் போராடுகிறோம்”. இந்த வரி தமிழினத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களுடையது.
இதற்க்குள் என்ன என்ன உள்ளது என்று உங்களுக்கு புரியும் என நினைகிறேன்.

உலக செம்மொழிகளில் முதலில் இருப்பது தமிழ் என்றால் அடுத்து இருப்பது சமஸ்கிருதம் அதற்கடுத்து இருப்பது சீன மொழி ஆகும்.

ஒரு மொழி செம்மொழி என அறிவிக்க 11 தகுதிகள் அந்த மொழிக்கு இருக்க வேண்டும்.ஆனால் குறைந்தது 7 தகுதி இருந்தால் அது செம்மொழி என ஏற்றுகொள்வர்.

தமிழ் மொழி முழுமையாக 11 தகுதிகளை கொண்டது அதற்கடுத்து இருப்பது சீன மொழி தான் 10 தகுதிகளை உடையது.சமஸ்கிருதம் 7 தகுதிதான் ஆனால் அது பற்றி கவலை இல்லை அது அழிக்கபட்டுவிட்டது.

அப்படியானால் பார்வையெல்லாம் எதன் மீது இருக்கும்?சிந்திக்க

சீன மொழி செம்மொழியாக அறிவிக்கபட்ட ஆண்டு 1948ல், ஆனால் தமிழ் செம்மொழியாக அறிவிக்கபட்ட ஆண்டு 2004 . பலபேர் திரு.கருணாநிதி அய்யா தான் செம்மொழி பட்டம் வாங்கி தந்தார் என நினைகிறார்கள் உண்மை எது தெரியுமா?

இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புக்களினதும், அறிஞர்களினதும் நீண்ட கால முயற்சிகளைத் தொடர்ந்து , இந்திய அரசினால் தமிழ் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கீகாரம் பெற்றுள்ள முதல் இந்திய மொழி தமிழாகும்.

இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளினதும் கூட்டுக் கூட்டமொன்றின்போது, 2004 ஆம் ஆண்டு சூன் 6 ஆம் நாள் அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமால் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டது

ஆனால் இந்த விடயத்தை ……………..
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 ஆம் ஆண்டு சூன் 23 முதல் சூன் 27 வரை கோயம்புத்தூரில் கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. கோயம்புத்தூரில் 2010 இல் நடைபெற இருந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு ஈடாகத் தமிழக முதல்வர் மு. கருணாநிதி இந்த மாநாட்டை ஒருங்கிணைத்து இருக்கிறார். இந்த மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாடும் சேர்த்து நடத்தப்பட்டது.
(என்பதால் திரு.கருணாநிதி அய்யா தான் அறிவிப்பு வாங்கினார் என நாம் நினைகிறோம்.)
------- இந்த அரசியல் தகவல்கள் விக்கிபீடியா மூலம் எடுத்தது

அடுத்த பதிவில் தமிழ் மொழி, சமஸ்கிருத மொழி உபயோகம் மற்றும் மந்திரம் அவற்றின் சக்தி மற்றும் அதன் தன்மையை ஆராய்வோம்.

இன்றைய பதிவில் நாம் காண இருப்பது சமஸ்கிருதத்தில் ஒலி அமைப்புகள் மற்றும் மந்திர சக்திகள். அதாவது உலகம் இயங்குவது சப்தத்தால் என நாம் அறிந்த ஒன்று அந்த சப்தமான பல அதிர்வுகளால் இயங்குகிறது.

நம் உடல் மற்றும் இன்றி காணும் அனைத்தும் அணுக்களால் ஆனது. இந்த அணுக்கள் ஒவ்வொன்றும் அதிர்ந்து கொண்டே இருக்கிறது.இந்த அதிர்வுகளை நாம் உணர்வதில்லை.காரணம் அந்த அலைவரிசையில் நாம் இருப்பது இல்லை.

சமஸ்கிருத உச்சரிப்பு மொழி அதன் அதிர்வுகள் மிகவும் சக்திவாய்ந்தவை ஆனால் திரும்ப திரும்ப எழுப்பவேண்டிய ஒன்று அதன் எழுத்துகள் மற்றும் உச்சரிப்பு கவனமாக கையாள வேண்டும்.

பிரபஞ்சத்தில் இதன் ஒலியலைகள் தாக்கம் அந்த காலத்தில் அதிகம் எழுப்பட்டு இந்த ஒலிகள் குறிபிட்ட அலைவரிசையில் பரப்பி கண்டுபிடித்தனர். அதே அலைவரிசையில் சொன்னால் வான் மண்டலம் சென்று அதற்க்கான பலனை தரும்.

சமஸ்கிருதம் வேதமந்திரங்களுக்கு பயன்பட்டதன் காரணம் அதன்
ஒலியமைப்புகளும், அதன் அர்த்தம் மறைந்திருக்கும் விதமும் தான் காரணம்.சமஸ்கிருத ஒலியலைகள் மிகவும் நுணுக்கமானவை இந்த ஒலியலைகள் பெரும்பாலும்
பிறபொருள் மீது பிராண சக்தியை செலுத்தவும்,தன் மீது பிராண சக்தியை பெறவும் பயன்படுத்தபட்டது.

இந்த மொழி ஒலியலைகள் மிகவும் குறுக்கலைகளை கொண்டது.இது பிராண மண்டலத்தில் சென்று திரும்ப நேரம் எடுக்கும்.ஆதலால் திரும்ப திரும்ப இந்த அலைகளை எழுப்பவேண்டியதாக உள்ளது.இப்படி செய்யும் போது உடல் அணுக்களில் மாற்றம் ஏற்படும் உடல் உஷ்ணம் ஆகும்.இதை சரிசெய்ய கிருதம் என்கிற நெய்வகைகளை அதிகம் உணவில் சேர்க்கவேண்டியதாக உள்ளது.இதனால் இதன் பாதிப்பு குறைக்கபடும்.

நாம் ஏற்கனவே பார்த்தது தான் பிராணணை வெளியிட நெடில் எழுத்துகள் அதிகம் பயன்படும்.இதன் மூலம் அதிகம் பிராணன் வெளியேறினாலும, அதை காட்டிலும் அதிகம் உள்ளே வரும் ஆனால் அதற்க்கான பீஜங்கள் அறிய வேண்டும்.

நீங்கள் ஒலியை எழுப்பும் போது குறிப்பிட்ட அலைவரிசையில் பயணபடுவீர்கள் அந்த அலைவரிசையின் பண்புகள் அனைத்தும் நீங்கள் அறிவீர்கள். அதற்க்கு அதிர்வுகள் பற்றி சரியான புரிதல் இருந்தால் தான் நீங்கள் சொல்லும் மந்திரத்தின் அதிர்வுகளை உணரமுடியும்.

இந்த உலகமனைத்தும் அணுக்கலானவை அவை எப்போதும் அதிர்ந்து கொண்டே இருக்கும்.இது அறிவியல் கூறும் உண்மை.இதை நாம் எப்படி அறிவது அதானே, நீங்கள் எங்கு உள்ளீர்கள் என பார்த்தால் சுத்திகொண்டே உள்ள பூமியில் அப்படியானால் நீங்களும் அதனோடு சேர்ந்து சுத்திகொண்டே இருக்கிறீர்கள்.

இங்கு நிற்க!
நீங்கள் ஏன் உணவு சாப்பிடுகிறீர்கள் என தெரியுமா? பசிக்காக என்றால் அது நேரடியான பதில்.மறைமுகமான பதில் என்னவென்றால் பூமி சுத்துகிறது நீங்களும் சுத்துகிறீர்கள் அப்படியானால் சுத்துகின்ற ஒரு பொருள், எதன் மீது பட்டாலும், அதன் அணுஅடுக்கு குலையும் அதாவது தேய்மானம் ஏற்படும்.

எந்த பொருள் குறிப்பிட்ட வேகத்தில் தேய்க்கபடுமோ அந்த பொருள் தேய்மானம் ஆகும்

 உங்கள் உடலில் இருந்து அணுசிதறல் அனுதினமும் நடைபெறுவதால் அதனை சரி செய்ய பிராணன் உள்ள, உணவினை எடுத்து உள்ளே கொடுக்கிறீர்கள் அதனால் அதன் அடுக்கு திரும்பவும் அணுகட்டமைப்பு நடக்கிறது. இதன் மூலம் பிராண சக்தி பலம் கிடைக்கிறது.பிராணன் பலம் என்றால் உடலும் பலம் என நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம்.

உதாரணம்: நீங்கள்(சுழலும் இறக்கை) ,பூமி(மோட்டார்), வான்மண்டலம்(அழுத்தம் அல்லது விசை)
நீங்கள் பூமியோடு இணைக்கபட்டுள்ளதால் பூமி சுற்றும் இடம் வானமண்டலம், அங்கு தள்ளும் ஆற்றல் ஈர்க்கும் ஆற்றல் உள்ளதால் அந்த அழுத்த்தில், பூமி(மோட்டார்) சுற்றுவதால், இதனோடு நீங்களும்(இறக்கையும்) சுற்றுவதால் அணுசிதறல் ஏற்படுகிறது. பூமிக்கு சூரியனிடம் இருந்து பிராண சக்திவருவதால் அதன் அமைப்பு சரியாக உள்ளது. ஆனால் நமக்கு உணவின் மூலம் மட்டுமே இயற்க்கையாக கிடைக்கும் படி உள்ளது.

இதை வேறு விதமாக பெறவேண்டுமானால் யோகசாதனைகள் மூலம் பெறலாம்.

இப்போது சமஸ்கிருத மந்திரம் வருவோம்.இப்படி உள்ள பிராண சக்தி உள்ளே பெறவும் வெளியே போகவும் மொழியின் ஒலியலைகள் பயன்பட்டன. இதில் 48 ஒலியன்கள் முக்கியமாக உள்ளன.இந்த ஒலியன்களில் ஹ என்ற எழுத்து அதிகம் பயன்படுத்தபடுகிறது.

காயத்திரி மந்திரம் சொன்னால் பிராணன் அதிகம் கிடைக்கும். இந்த காயத்திரி மந்திர அதிர்வுகளை நீங்கள் உணர காலை பிரம்மமுகூர்த்த்தில் கூறினால் அதன் அதிர்வுகளை உங்களால் காண முடியும். மந்திரம் சொல்லும்போது நீங்கள் இயற்க்கையாக எழும் அதிர்வுகளில் பயணபடுவீர் அந்த நேரம் சுற்றுபுறம் அனைத்தும் அமைதியாக இருந்து நீங்கள் மந்திர அதிர்வோடு பயணம் செய்வீர் அப்போது இந்த அதிர்வுகளை நிச்சம் உணர முடியும்.

இந்த நேரத்தில் பிராண மண்டல தொடர்பு எளிதாக கிடைப்பதால் அதன் தன்மை உங்களுக்கு புரியும்.

உங்கள் உடல்மேல் ஒரு அழுத்தமான ஒரு விசை போர்வையாக உள்ளதை காண்பீர்கள் சாதனை தொடர்ந்து செய்யும்போது உணரமுடியும்.

� அதிர்வுகளை உணர்ந்து பழகிவிட்டால் சரியான அலைவரிசையை உங்களால் காண முடியும்.

மந்திர ஒலியலைகள் என்பது குறிப்பிட்ட அலைவரிசையில் பிராண மண்டலத்தில் தொடர்பு கொள்வது, அதன் ஆற்றல்களை தொடர்புகொள்வது.

காயத்திரி மந்திரம் தினமும் சொல்வதால் அதிர்வுகளை நீங்கள் கிரகிக்கும் ஆற்றல் எளிதாக கிடைக்கும்.இதனால் மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.

இந்த பிராண மந்திர எழுத்துகளில் 24 எழுத்துகளில், குறைந்தது ஆறு எழுத்துமட்டுமே நெடில்கள் உள்ளாதல் அதிகமாக பிராணனை ஈர்த்து உங்கள் பிராண உடலில் கலந்து பிராணமயகோசத்தை வளிமையடைய செய்கிறது. மற்ற மந்திரங்கள் பிராண பிரிதஷ்டை அனுப்ப பயனபடுகிறது.

தமிழ் மந்திரத்திற்க்கும் சமஸ்கிருத்த்திற்க்கும் உள்ள பெரிய வேறுபாடு என்னவென்றால் தமிழ் மந்திரம் திரும்பதிரும்ப ஒலி எழுப்பதேவையில்லை  அதற்கு ஒரு கூறு உள்ளது. அதனால் நீங்கள் சமஸ்கிருதமந்திரம் 100000தடவை செபிக்க வேண்டும் அப்பதான் நீங்கள் அந்த அலைவரிசையில் பயணபடுவீர் அடுத்த பதிவில் தமிழை காண்போம்.

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” –திருமூலர்

தொடரும்.......

         - shiva shangar

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர உயிர் மொழி(பாகம்-6)

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர உயிர் மொழி(பாகம்-6)

(தமிழ் மொழியின் மூல ரகசியங்களை அறிய முழுமையாக இந்த தொடரை படியுங்கள்..... பல வாழ்வியல் உண்மைகள் , யோக அறிவியலின் உண்மைகள் , ஆன்மிக உண்மைகள் புரியும்.)

தமிழுக்கும் சமஸ்கிரததுக்கும் உள்ள உண்மையான தொடர்பு
*******************

ஊக்கம் அளித்துவரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி மேலும் பல ஆன்றோர்கள் வாழ்த்து தெரிவித்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது அனைவருக்கும் நன்றி.

இந்த  பதிவில் நாம் காண்பது தமிழுக்கும் சமஸ்கிருதம் என்ன வேறுபாடு மற்றும் சமஸ்கிருதம் பற்றிய தகவல்கள், மேலும் அதன் அவசியம் மற்றும் சமஸ்கிருதத்தை காட்டிலும் தமிழ் மொழியில் உள்ள ஆற்றல் என்ன என்பது பற்றி ஆதார பாடல்கள் ஆங்காங்கே வரும் ஆதலால் பதிவு நீளமாக இருக்கும் நிதானமாக படித்து தமிழ்மொழியின் சக்தியை புரிந்துகொள்ளுங்கள்.

நண்பர்களே சில பாடல்கள் எண் கொடுக்கபடும் பதிவின் நீளம் கருதி!
முதலில் தோன்றிய மொழி தமிழ் இது அனைவரும் அறிந்ததே அடுத்து தோன்றிய மொழி எது என்றால் அது சமஸ்கிருதம் தான்.

 சமஸ்கிருதம் தமிழ்மொழியில் இருந்து சிவன் உருவாக்கியதாக சொல்கிறார்கள் ஆனால் அதுவும் முருகனால் உருவாக்கபட்ட்து என சில குறிப்புகள் மட்டும் உள்ளன. சரி ஆய்வின் உள்ளே செல்வோம்.

சமஸ்கிருதம் தமிழின் சகோதர மொழி என்றும் அது மந்திர பூட்டுக்களுக்காக உருவாக்கபட்டமொழி என்றும் கூறுகிறார்கள். அதனால் மந்திர ஒலியலைகளை எழுப்ப முடியும் ஆனால் ஞான விளக்கங்களை சரியாக எடுத்துகாட்டமுடியாது என்கிறார்கள்.

சமஸ்கிருதத்தால் கட்டியதை அவிழ்க்க தமிழ்மொழி ஒன்றால் தான் முடியும் என்கிறார்கள்.

வசிஷ்டமுனிவர் தமிழ்மொழி கற்றார் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன மேலும் ராமனுக்கு தமிழ்மொழியில் தான் ஞானத்தை வழங்கினார் என்றும் உள்ளன. தமிழ்மொழி ஞானத்தின் பிறப்பிடம் என்று நிறைய குறிப்புகள்
உள்ளன.

எல்லா அறிஞர்களும் இந்த இரண்டு மொழியிலும் புலமை கொண்டு உள்ளதை அனேக இடங்கள் வெளிப்படுத்துகிறது.

“பாசையென்ன சமஸ்கிருத வடமாம்பாசை
பரிச்சுழியைக் காட்டிடுமே முத்தியீமா”
காகபுஜண்டார் பெருநூல் – 436

"விரும்பாற் செய்தீரே நூலைத் தொட்டு
மேலானோ ரெதினாலே கிரந்தத்தாலோ"
காகபுஜண்டார் பெருநூல் -439

இதை தொடர்ந்து
_கிரந்தமென்ன அகத்தியன்சொற் பாசைதானே
காகபுஜண்டார் பெருநூல் – 440

இங்கு நிற்க
அதாவது கிரந்தம் வடமொழிக்கு கிரந்தம் என பெயர் உள்ளது, அனைவரும் அறிவர். ஆதன் விளக்கம் யாதெனில் முடிச்சுவைக்கபட்டுள்ளது என்று அர்த்தம் அதாவது யோகத்தில் முக்கிரந்தி உள்ளது இந்த மூன்று கிரந்தியும் சமஸ்கிருத்த்தில் முடிச்சாக உள்ளது. அதை அகத்தியர் சமஸ்கிருதத்தில் சொன்னார் அந்த யோகநூலையும் குறிப்பிடுகிறார்.

பின்னாளில் அந்த நூல் பூட்டை நீக்கி தமிழில் செய்ததாக அகத்தியரே கூறுகிறார் அதை கீழே காணவும்.

"திருவான வடமொழியை நன்றாய்ப் பார்த்து
பரஞ்சேர்ந்த பூரணமாம் அறிவில் ஏறி
பாடினேன் செளமிய சாகரத்தை மைந்தா"
----செளமிய சாகரம் பாடல் – 7

"தேனான வட மொழியை தமிழ்தான் செய்த
திரமான கருவிபரம் நன்றாய்ச் சொன்னீர்"
செளமிய சாகரம் பாடல் – 8

(இந்த பாடல் முருகன் கூறியதாக சொல்கிறார் முழு பாடல்கள் பதிவு செய்தால் பதிவு நீளும் என்பதால் பாடல் எண் கொடுத்துள்ளேன்)

(வடமொழி தேன் என்றால் தமிழ் மொழி அமிழ்தம் என்பார் ஒரு இடத்தில் முருகபெருமான்)

வடமாம் பாஷை என்றால் வடம் என்றால் தேர்பிடித்து இழுப்பார்கள் அல்லவா அந்த கயிறுக்குபேர் தான் வடம் என்பார்கள். அந்த கயிறு மிகவும் பலபிரிவுகளை பின்னி முறுக்கி உண்டாக்கிய பலம்வாய்ந்த சுலபமாக பிரிக்க முடியாத கயிற்றை குறிக்கும்.

அது போல நேரடியாக சொல்லாமல் பல முடிச்சுகளை கட்டி சொல்லும் பாசை ஆகும் என்கிறார் காகபுஜண்டர்
“துய்ய தமிழ்ப்பண்டிதனாம் கவிவானாம்”
போகர் 7000ல் பாடல்-5835

போக முனிவர் வசிஷ்டர், தமிழ் பண்டிதர் என கூறுகிறார் கவனிக்க
“நவிலுகிறேன் ரகுராமா நன்றாய்ப் பாரு”
வசிஷ்டர் வைத்திய சூத்திரம் – 206ல் முதல் காப்பு பாடல்

இந்நூல் தமிழ் நூல் இதுபோல பல தமிழ்நூல்கள் பல வசிஷ்டர் எழுதியுள்ளார்.

தமிழ் அந்த காலத்தில் அதிகம் அதை தவறாக உபயோகபடுத்தியதால் தான். சமஸ்கிருதம் உருவக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் தான் வேதத்தை சமஸ்கிருதத்தில் கூறினார்கள். அது வாய்மொழியாக தான் இருந்தது பின் தான் சமஸ்கிருதம் எழுத்துக்கு கொண்டுவரப்பட்டது.

பேசியோ,பாடியோ ஒருவரை கொல்லமுடியும் என்றால் அது தமிழில் தான் முழு வல்லமை உள்ளது.

இன்னும் ஆதாரத்துடன் சமஸ்கிருதம் தமிழ் உள்ள வேறுபாடு, சமஸ்கிருத நன்மைகள் மற்றும் தமிழில் உள்ள ரகசியங்கள் மற்றும் ஏன் மந்திரங்கள் தமிழில் கூறவில்லை என அறிவியலோடு ஆராய்வோம்.

சமஸ்கிருதம் யோக சாதனைக்கு கடினமான மொழி என்று கூறுவதை நாம் ஏற்றுகொண்டாலும் சமஸ்கிருதத்தில் உச்சரிப்பு மிக கவனமாக கையாண்டால் இந்த மொழியையும் சாதனைக்கு உட்படுத்தலாம்.

சமஸ்கிருத மொழி ஆரிய மொழி அல்ல என்று நிறைய சான்றுகள் உள்ளன. வடக்கே இருந்தவர்கள் அதிகம் இது பேசபட்டதால், பல இடங்களில் இது பரவி ஆரிய இனத்தவர் என சுட்டும் நபர்கள் மூலம் மீண்டும் இந்தியாவுக்குள் வந்ததாக ஆன்றோர் பெருமக்கள் கூறுகிறார்கள்.

அவர்கள் வருகைக்கு முன்பே சமஸ்கிருதம் தமிழர்கள் பேசியதாக கூறபடுகிறது.

ஆரியன் என்றால் சிவன் , தீப்பிளம், ஒப்பில்லாதவன் என்றும் நிறைய பொருள் கூறுகிறார்கள்.ஆரியன் என்ற வார்த்தை எங்குள்ளது என்றால் நிறைய இடம் காட்டமுடிகிறது.

உதாரணம்
“சூரியன் சந்நிதியிற் சுடு மாற்போல்
ஆரியன் தோற்ற முன் அற்ற மலங்களே”
----திருமந்திரம் முதல் தந்திரம் உபதேசம் பாடல்-5

“பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே”
----திருவாசகம் சிவபுராணம்

“சூரிய காந்தக் கல்லினிடத்தே செய்ய
சுடர் தோன்றியிடச் சோதிதோன்று மாபோல்
ஆரியனாம் ஆசான் வந்தருளால் தோன்ற”
-----சிவஞான சித்தியார் –
சாதனவியல்

“ஆரியர் வழுத்திய வருணிலையனாதி காரியம்
விளக்குமோர் காரண விளக்கே”
-----அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடல்-1510

இப்படி அனைத்து இடங்களிலும் ஆரியன்,ஆரியம் என்ற வார்த்தை காணலாம்.

சமஸ்கிருதம் பற்றி ஆன்றோர்கள் கருத்து கீழே வருகிறது

பாரதிய கலாச்சாரப் பண்பாட்டிற்கு இருப்பிடமாக உள்ள சம்ஸ்க்ருத மொழியை இந்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் கற்பது அவசியம் என்பதை நான் உணர்கிறேன்._
– காமராஜர்.

வடமொழி தென்மொழியெனவே வந்த இருவிழி
------தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய சுந்தரம் பிள்ளை

_வடமொழியும் நமது நாட்டுமொழி, தென்மொழியும் நமது மொழி என்பது என் கருத்து_ --- திரு.வி.க.

_யாம் அறிந்த மொழிகளிலேயே தமிழ் மொழி போல் ஒன்றும் இல்லை என்கிறார் பாரதியார்.

_ (பாரதியார் பலமொழி கற்றவர் என நமக்கு தெரியும்)

இப்படி சமஸ்கிருதமும் தமிழும் இருந்த பூமியில், சமஸ்கிருதம் அழிந்ததற்க்கு காரணம் வெள்ளையர்கள்.ஏனெனில் ஆங்கிலம் உருவானது சமஸ்கிருதத்தில் இருந்து தான்.

அதனால் அதன் மூலமொழியான சமஸ்கிருதம் அழிய தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்க்கும் எது சிறந்தது என சண்டை மூட்டபட்ட்து. அண்ணனை வைத்து அவன் தம்பியை கொன்றது போல் தமிழை வைத்து அதன் இருப்பிடத்தை அழித்தனர்.

அதனால் அந்த மொழி அழிவுப்பாதையில் உள்ள மொழியாகும்.(இது பெரிய பதிவு சுருக்க பட்டுள்ளது)

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” –திருமூலர்

இன்னும் ஆழமாக தொடரும்....

         - shiva shangar

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர உயிர் மொழி(பாகம்-5)

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர உயிர் மொழி(பாகம்-5)

(தமிழ் மொழியின் மூல ரகசியங்களை அறிய முழுமையாக இந்த தொடரை படியுங்கள்..... பல வாழ்வியல் உண்மைகள் , யோக அறிவியலின் உண்மைகள் , ஆன்மிக உண்மைகள் புரியும்.)

பிற உயிரினங்களும் தமிழ் மொழியும்
***************

அந்த காலத்தில் எல்ல விலங்குகளும் பேசியிருக்கின்றன என பல மதங்களில் சான்று உள்ளன .

ராமயணத்தில் குரங்குகள், கரடி
,மரவகைகள், பறவைகள்(ஜடாயு) அதேபோல் பைபிளில் பாம்பு,திமிங்கலம்,பன்றிகள். என்றும் இஸ்லாமியத்தில் நரிகள், மாடுகள் என விலங்குகள் பேசியதாக வருகிறது.

இது எல்லாம் உண்மையாக இருக்குமா என்றால் உண்மைதான். ஆனால் இக்காலத்தில் இது ஒரு சில இடத்தில் மட்டுமே இவை நடக்கிறது.

அவை சில சிம்பான்சி குரங்கு வகை,கிளிகள்,பேசுகிறது. மேலும் கொரியாவில் வன விலங்கு பூங்காவில் உள்ள, ஆசிய யானை ஒன்று, கொரிய மொழி பேசும் அதிசயம் பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அமேசான் ஆற்று பகுதியில் வாழும் சில காட்டுவாசிகள் ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்திற்க்கு தகவல் அனுப்ப குறிப்பிட்ட ஒரு மரத்தை பயன்படுத்துகின்றனர். இதை ஆய்வு செய்த விஞ்ஞானிகளுக்கே இது இன்னும் விளங்கவில்லை.

இதை பற்றி அந்த காட்டுவாசியிடம் கேட்டதற்க்கு இந்த மரத்தோடு பேசும் வழக்கம் எங்களுக்கு உண்டு அதை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. ஆனால், நான் அனுப்பும் செய்தியை இந்த மரம் கேட்டு அது அந்த கிராமத்தில் உள்ள அந்த மரத்திடம் கூறும், பின் அந்த மரம் அது கூறுவதை கேட்டு அங்குள்ள என் மனைவி, மக்கள் அறிவார்கள் என கூறினார். இதுவும் இன்னும் விஞ்ஞானிகளுக்கு விளங்கவில்லை.

சித்தர்கள் மூலிகை பறிக்கும் போது சில சடங்குகள் செய்து தான் மூலிகை பறிப்பர் அதில் சாப நிவர்த்தியும் ஒன்று சில மரங்களிடம் சபநிவர்த்திக்காக பேசியதாக குறிப்புகள் ஆங்காங்கே உள்ளன.

இப்படி எல்லாவகையிலும் சில குறிப்பு பேச்சுகளை அனைத்து உயிரினங்களும் வெளிபடுத்துகின்றன.
அந்த குறிப்பு பேச்சு என்பது சில ஒலியலைகள் உள்ளடக்கியதாக உள்ளது. அது பல தமிழ் ஒலியலைகளை கொண்டதாக உள்ளது.

மதுரையில் வன்னிமரம் சாட்சி சொல்லியது பசுமாடு சாட்சி சொல்லியது என்பதெல்லாம் இந்த ஒலியலைகளை வைத்து தான். இதை சித்தர்களும் பேசுகின்றனர் ஆனால் நம்மால் தான் அறிய முடியவில்லை.

ஒரு சிலர் மனிதனுக்கு மனம் உண்டு என்பது போல், பிற விலங்குகளுக்கும் மனம் உண்டு என கூறுகின்றனர்.

நமது யோகிகள், சித்தர்கள், முனிவர்கள் கூறிய கருத்து மனம் என்பது மனிதனுக்கு மட்டுமே உள்ளது என்றும் அதனால் தான் அவனை மனிதன்(மனுஷ்யன்) என்கிறோம். ஆனால் சிலர் இதை மறுத்து பேசுகின்றனர்.

தொல்காப்பியத்தில் பொருளதிகாரத்தில் மரபியல் பிரிவில் கீழ்காணும் பாடலை கவனிக்க
*“……………………………………..
ஐந்து அறிவு அதுவே *அவற்றொடு செவியே
ஆறு அறிவு அதுவே *அவற்றொடு மனமே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே”
என்கிறார்.

இதை படித்தால் நன்கு விளங்கும். அவர் தான் கூறியதாக கூறாமல், நேரிதின் உணர்ந்தோர் நெறிசெய்தனர் என்கிறார்.
அதாவது இதை உணர்ந்தவர்கள் கூறினார் என்கிறார்.

இதை சில பேர் அறியாமல் அதை ஆராயாமல் உணராமல் மனம் என்பது எல்லாருக்கும் உள்ளது என கூறுகின்றனர்.அதற்கு இந்த பாடல் குட்டு வைத்தது போல் உள்ளது

எல்லா சித்தர்களும் மனிதன் மனதை செம்மைபடுத்தினால் வெற்றி பெறலாம் என கூறினார்களே அன்றி, மரமோ , விலங்கோ மனதை செம்மைபடுத்த வேண்டும் என கூறவில்லை.

இப்படி அனைத்து உயிரினங்களுடனும் பேசும் மொழியே தமிழ் மொழியாகும்.

சில இடங்களில் தமிழ் சொற்கள் முழுமையாக வராது அதனுடைய ஒலியன்கள்(phonetic) மட்டும் வரும் அதை பல உயிரினங்கள் உபயோகபடுத்துகின்றன.

சங்க கால இலக்கியத்தில் மரத்தை தோழியாக நினைத்து மற்றும் தங்கையாக நினைத்து அதனுடன் நல்உறவை ஏற்படுத்தியுள்ளனர். அதாவது மரத்தின் உணர்வுகளை அப்படியே புரிந்துகொள்ளும் தன்மை இருந்து இருக்கிறது.
அதேபோல் குறுந்தொகை இலக்கியத்தில் சிவபெருமானின், கவிதை ஒன்று வரும். அது தருமிக்கு பொற்கிளி கொடுக்கவும், நக்கீரருடன் வாதம் செய்யும் இடம் . அந்த கவிதையில் வண்டுடன் பேசுவதாக அமையும் அதாவது தும்பி இனத்தை சேர்ந்த வண்டே நீ கூறு என்கிறார் சிவபெருமான் வண்டு பேசும் என குறிப்பிடுகிறார்(ஆதாரம்: குறுந்தொகை பாடல் எண் -2)

அதே போல் திருதக்கதேவர் எழுதிய காப்பியமான சீவகசிந்தாமணியில் சீவகன் பிற உயிரினங்கள் பேச்சுமொழியை அறிந்திருந்தான் என ஆசிரியர் கூறுகிறார்

உதாரணம்: எறும்பு,வண்டு(ஆ
தாரம்:சீவகசிந்தாமணி பாடல் எண்-892-893,133

1) பாண்டவர்களில் நகுலன் விலங்குகள் பேச்சு மொழி (பரி பாசையை)அறிந்திருந்தான் என கதை வரும். மற்ற உயிரனங்களை காட்டிலும் குதிரையுடன் பேசும் மொழியில் வல்லவன் என வியாசர் கூறுகிறார்(ஆதாரம் மகாபாரதம்--விராட பர்வம்)

இங்கு கவனிக்க அது என்ன குதிரை பேச்சு அதுதான் அய்யா, பரி(குதிரை)….பாசை(பேச்சு) அதை சொல்லவே இந்த பதிவு.
இது மறைக்கபட்ட தமிழ்ர் கலைகளில் ஒன்று.

இந்த கலையில் வல்லவர்கள் பாண்டியர்கள் தான், ஆரம்பத்தில் இது அனைத்து இடங்களிலும் இருந்தது ஆனால் பின்னால் மறைந்துவிட்டது.
இதை சுருக்கமாக தெரிந்துகொள்வோம். பரிபாஷை இரண்டு வகைபடும்.

ஒன்று 1 ஒலியலைகள் மூலம் கொடுப்பது ,
இன்னொன்று 2 கண் பார்வையால் பேசுவது அல்லது கொடுப்பது.

குதிரைக்கும்,நாய்க்கும் இந்த இரண்டு பேச்சும் இப்பவும் தெரியும். இதை அதிகமாக உபயோக படுத்துவது குதிரை மட்டுமே என்பதால் பரிபாசை என்கிறார்கள்.

பரிபாசை கூறும் பழமொழி : ஆறு பொருள்,பதினெட்டு சந்தம் வைத்து பேசாதே!!!!
(இந்த பழமொழி இப்பவும் மதுரையில் பயன்படுகிறது சந்தம் என்பது சந்து என இப்போது கூறுகிறார்கள்)
இந்த கலையை புலவர்கள், சித்தர்கள் அதிகமாக பயன்படித்தினார்கள். தாம் சொல்ல வந்த கருத்தை மறைப்பாக கண்மூலமாகவோ அல்லது ஒலியலைகள் மூலமாகவோ கூறுவார்கள் இதை பக்குவபட்டவன் அடையாளம் கண்டுகொள்வான்.

அதனால் தான் குருசிசிய உறவு மிக முக்கியம் என்பார்கள். சீடனுக்கு அப்போது புரியவில்லை என்றாலும் குரு பார்வை தக்க சமயத்தில் ஞாபகத்தில் தோன்றி அர்த்தம் கிடைக்கும்.
இதை அறியாமல் சிலர் பரிபாசை என்பதை அகராதியில் தேடுவார்கள். சித்தர்கள் பரிபாசை புத்தகம், நிகண்டு புத்தகம் என்பதெல்லாம் மருத்துவம், மூலிகை,ஜோதிடம் பற்றி அறியவே.

பிரம்ம வித்தைகள் மற்றும் சில யோக சாதனைகள் அனைத்தும் பரிபாசை (குதிரைபேச்சு கண்) மூலமே கொடுக்கபடுகிறது.

இரண்டாவது பரிபாசை ஒலியலைகள், குறிப்பிட்ட சப்தம் மூலம் சில வார்த்தைகள் மாணவன் சொல்லும்போது அது அவன் உடம்பில் அதிர்வுகளாக இருந்து வேலை செய்ய ஆரம்பிக்கும்.

இது எப்படி என்றால் நன்றாக நினைவில் கொள்ளவும் மனித தேகம் 72 சதவீதம் நீரால் ஆனது.நீருக்கு சப்தத்தை ஈர்க்கும் ஆற்றல் உண்டு. (ஆதாரம்: நீரை பற்றிய ஆய்வுகளில் இங்கிலாந்து கூறியுள்ளது)

அப்படியானல் இப்போது புரியும் மந்திர எழுத்து ஒலியை இந்த உடல் எப்படி வாங்குகிறது என்று, இந்த ஒலி அலைகள் மூலம் என்ன கிடைக்கவேண்டுமோ அது கிடைக்க அந்த வரியை உருவாக்குவார்கள்.

அப்படியானால் இந்த கந்தசட்டி வரிகள், என்ன பரிபாசை வகை என புரியும்.

செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” –திருமூலர்

தொடரும்.......

         - shiva shangar

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர உயிர் மொழி(பாகம்-4)

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர உயிர் மொழி(பாகம்-4)

(தமிழ் மொழியின் மூல ரகசியங்களை அறிய முழுமையாக இந்த தொடரை படியுங்கள்..... பல வாழ்வியல் உண்மைகள் , யோக அறிவியலின் உண்மைகள் , ஆன்மிக உண்மைகள் புரியும்.)

மனமும் தமிழும் ஓர் ஆய்வு
***************

(அந்த கரணங்களில் ஒன்றான சித்த பதிவுகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு)

சித்தம் என்பது கடவுள் மனம் என சித்தர்கள் அழைக்கிறார்கள்.உடலுக்கும் தமிழுக்கும் சம்பந்தம் உள்ளதை பார்த்து வருகிறோம்.

அதுபோலவே தமிழுக்கும் மனதுக்கும் தொடர்பு உள்ளது
அந்த கரணங்களில் மனம், புத்தி, அகங்காரம், சித்தம்.

 இதில் மனதுக்கு பெரும் பகுதி சித்தத்துடன் தொடர்பு உள்ளதால் சித்தம் பற்றி ஆராயுங்கள். மனம் என்பது கருவி மட்டுமே அதை செயல் படுத்துவது சித்தம் ஆகும்.

அதாவது நடக்கும் எல்லா பதிவுகளும் சித்தம் சேமிக்கிறது தேவை என்றால் மனம் விரித்து காட்டுகிறது.

உங்களுடைய ஆன்மா பரமாத்மாவிடம் இருந்து வரும்போது நீங்கள் மீண்டும் எப்படி பரமாத்மாவிடம் சேரவேண்டும் என்பதை பரமாத்மா பதிவு செய்து தான் அனுப்புகிறார்.

ஆனால் நீங்கள் பூமியில் வந்த அனுபவம் மற்றும் சம்பவங்களின் பதிவுகளை மட்டுமே எடுப்பதால் கடவுளிடம் சேரமுடியவில்லை.

இந்த பதிவுகளை பதிவு செய்து மற்றும் விரித்து காட்டும் சக்தி இந்த மனதிற்க்கு உண்டு.
இந்த மனதை சரியான முறையில் இயக்க தெரிந்தால் சித்தபதிவுகளை மாற்ற முடியும்.

ஆழ்நிலையில் உள்ள கடவுள் என்பவர் போட்ட பதிவுகளை திறந்து அவரிடம் செல்லமுடியும்
சமஸ்கிருத வார்த்தையில் சொல்லாமல் புரியும்படியாக சொல்லவேண்டுமானால்
கிளிஜோசியம் தெரியுமல்லவா அது தான் இந்த சித்த பதிவு வெளிவரும் முறை

அதாவது கிளி ஜோசியம் பார்க்கும்போது என்ன நடக்கும் யோசிக்கவும்
நீங்கள் கிளிஜோதிடரிடம் போய் “எனக்கு ஒரு சீட்டு எடுத்து கிளியை போட சொல்லும் அய்யா!“ என்பீர்கள்.பின் அந்த கிளிகூண்டு திறக்கவேண்டும், கிளிக்கு முன் சில சீட்டு கட்டுகள் அடுக்கி இருக்கும்.கிளி வெளியே வரும் சுற்றும் முற்றும் பார்க்கும் உங்களையும் பார்க்கும் பல சீட்டுகள் தள்ளி ஒரு சீட்டு எடுத்து கொடுத்து உள்ளே சென்று அது இருக்கும். அதன் பின் சீட்டை பிரித்து நடக்கவேண்டியதை ஜோதிடர் கூறுவார் நீங்கள் கேட்பீர்கள்.
இது தான் சித்தபதிவு

 வெளியேரும் கருத்து,
அதாவது நீங்கள் ஏற்கனவே பதிவு செய்த பதிவு தான் சீட்டுகட்டு , கிளி தான் மனம், ஜோதிடர் தான் சூழ்நிலை, நீங்கள் சும்மா இல்லாமல் சூழ்நிலையில் சிக்கும்போது அது மனம் எனும் கிளியின் கூட்டை திறக்கும் வெளியே வந்த மனம்(கிளி) உங்கள் காலநேரம் கணித்து, அதற்கான சந்தர்ப்பம் உள்ளதா என பார்த்து ஏற்கனவே உள்ள பதிவுகளை ஆராய்ந்து ஒரு பதிவை வெளியிடும். இந்த பதிவு சூழ்நிலையின்(ஜோதிடர் வார்த்தையில்) கைக்கு போய் அப்படியே செயல்படும் இது தான் சித்தபதிவு வெளிபடும் முறை .

இப்படிபட்ட சித்த பதிவுகளை மாற்றலாம் அல்லது மேல்பதிவு செய்யலாம்.

இந்த சித்தத்தில் கடவுள் பதிவை திறந்தவர்கள் ஞானிகள்,சித்தர்கள்,மகான்கள் இன்னும் என்ன பேரோ அவர்கள் எல்லாம் அடங்குவர்.
அப்படியானால் நீங்களும் ஞானி தான் இன்னும் அந்த பதிவை திறக்கவில்லை.

இதை தான் ஞானம் என்பது உனக்குள் இருந்து வருவது என்பார்கள். புறகாரணிகள் அனைத்தும் தூண்டுதல் மட்டுமே.

இப்படி சித்தத்தை வைத்து அஷ்டமா சித்து செய்வது,சித்தர் ஆவது,கடவுள் ஆவது(கடவுளோடு கலப்பது) என அனைத்தும் முடியும்.

இப்படி பட்ட கடவுள் தன்மை அடையவைக்கும் சித்தத்தை எப்படி திறப்பது,
சூழ்நிலையை எப்படி அமைப்பது,
இதற்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே தோன்றிய மூத்தகுடி தமிழ்குடி! இதை ஞாபகம் வைக்க
சரி இன்று சித்தத்திற்க்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு ஆராய்வோம்.

ஆரம்பத்தில் பரமாத்மா ஒரு பதிவு போட்டு அனுபுவார் என்றேன் அல்லவா, அந்த பதிவு தமிழில் தான் போட்டு அனுப்புவார். ஆன்மாவுக்கு மனம் என்னும் கருவி கிடைப்பது மானுடதேகத்தில் அந்த தேகம் ஆன்மா எடுக்கும் போது சித்தம் அதன் செயல்பாட்டை தொடர இந்த தமிழ் பேசும் இடத்தில் தான் முதலில் பிறக்கிறது. அது உலகில் எங்கும் இருக்கலாம் ஆனால் தமிழ் மொழி பேசும் இடத்தில் தான் சென்றடையும்.
கடவுள் சித்தம் தமிழில் பதியபட்டதால் அது தானகவே அங்கு சென்று முக்திக்காக பிறக்கும் ஆனால் சில ஆன்மாக்கள் விஷய வாசனைகளில் ஈடுபட்டு இது மறக்கிறது. அடுத்தடுத்த பிறப்பு மேற்கொண்டு மீண்டும் தமிழுக்கு வருகிறது(மேற்கண்ட விஷயம் சித்தர் நூல்களில் திரட்டிய தொகுப்பு)

இயேசு கூட தமிழ் கற்ற பின் யோகக்கலை பயின்று சென்றார் என குறிப்பு உள்ளது ஆராய்க.

இது அனுபவத்தில் கூறவேண்டுமானல் அறிதுயில்(hypnotize)யோக கலையில் ஆன்மாவின் பூர்வ ஜென்ம பதிவில் ஆராயும்போது 90 விழுக்காடு, முதல் மனித பிறப்பு ஆன்மா எடுக்கும் இடம் தமிழ் மொழி பேசும் இடத்தில் தான்.

சந்தேகம் இருந்தால்இதை அனைத்து அறிதுயில்(hyponotizem) யோககலை செய்பவர்களும் ஆய்வு செய்து பார்க்கவும்.

ஆனால் அறிதுயிலின் போது ஆன்மா திரும்ப செல்லும் வழியை அதாவது கடவுள் போட்ட பதிவை காண இயலாது(இது மறைக்கபட்ட விடயம்).

இந்த கருத்தை யாரெல்லாம் மறைமுகமாக சொல்லுகிறார்கள் என காணவும்

தமிழ் எங்கள் பிறவிக்கு தாய்,
இன்பத் தமிழ்
எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
----பாவேந்தர் பாரதிதாசன்

பாரப்பா புலத்தியனே கேள்! முத்திக்கு
வித்தாகும் முத்தமிழால் உரைகின்றேன்---அகத்தியர்

முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை ------திருமூலர்

இப்படி ஆன்மா தனக்கான சித்தபதிவை திறக்கும் நேரம் சூழ்நிலை என்ன என ஆராயம் போது இது பற்றி தமிழ் இலக்கண நூலில் மறைப்பாக சொல்லபட்டுள்ளது
இசை தமிழ் தான் இந்த பகுதிக்கு மிகவும் உதவுகிறது.

அதாவது கடவுள் பற்றிய சிந்தனை உங்களுக்கு கொண்டுவர இசை தமிழை மறைமுகமாக வைத்துள்ளனர்.

இசை தமிழில் உள்ள ராகங்கள்(பண்கள்) குறிப்பிட்ட நேரத்தில் பாடுவதாக வடிவமைத்து சில நுணுக்கமாக வைத்துள்ளனர் .

சித்தத்திற்க்கு கடவுள் பற்றிய பதிவை திறக்கும் ராகம் பூபாளம்(புள்ளாளம்) இதை தமிழிசையில் புறநீர்மை எனப்படும். இந்த இசை வேலை செய்யும் நேரம் அதிகாலை நேரம் 4 மணியிலிருந்து 8 மணிவரை இந்த சமயத்தில் கடவுள் சித்த பதிவை கொண்ட பாடலையோ அல்லது வேறு வகையான பாடலையோ பாடினால் அன்று முழுவதும் அந்த அலைவரிசயில் உங்கள் மனம் வேலை செய்யும்.

பூபாளம் நேரம் இசை இலக்கணபடி 6மணிவரைதான் அதற்கு அடுத்து பிலஹரி வரும் இருப்பினும் பிலஹரியும் சிறிது வேலை செய்கிறது(ஆய்வு செய்யபட்டது)

இது பற்றி இசைத்தமிழில் விரிவாக பின்னால் காண்போம்

இந்த இசை எப்படி வேலை செய்கிறது என்பதை அனுபவமாக சொல்லவேண்டுமானால், இந்த காலத்தில் 4 ல் இருந்து 8 மணிவரைக்கும் யாராவது தூங்கும்போது அவருக்கு தெரியாமல் மெல்லிய சப்தத்தில் ஒரு பாடலை ஒலிக்க செய்யவேண்டும் குறிப்பு அந்த பாடல் பாடுகிறது என அவருக்கு தெரியகூடாது அந்த அளவு அலைவரிசை இருக்கவேண்டும்.

பின் அவர் அந்த பாடலை அன்று முழுவதும் அவர் முனுமுனுத்து கொண்டே இருப்பார்.

இதுபோல் தான் நாம் கடவுள் சித்த பதிவு அலைவரிசையை தூண்டிவிட்டால் அது அன்று முழுவதும் அதற்க்கான அலைவரிசை உள்ள செயல்கள்,நபர்களை தொடர்புபடுத்தும்.

இதை சரியாக செய்தவர் மாணிக்கவாசகர். அவர் தன்னுடைய திருப்பள்ளி எழுச்சியில் சரியான தமிழ் வார்த்தைகளை பயன்படுத்துகிறார்.இந்த பாடல் பாடபெறும் சிறுபொழுதுகளில் வைகறை அதாவது (2to6) அதிகாலை ஆகும்.இது பாவகையில் எண்சீர் ஆசிரிய விருத்தம் அதாவது உள்ளே உள்ள அறிவை தூண்டும் ஆசிரியர் போல அந்த விருத்தத்தில் பாடபெற்றது.இசை புறநீர்மை அதாங்க பூஆழம்(சித்தர்கள் உச்சரிப்பு)
இதை அறிந்த சைவ நெறியாளர்கள் மறைப்பாக முன்பனிகாலம் என்னும் மார்கழியில் மட்டும் வைகறையில் பாட அனுமதி தந்தனர். அந்த மாதம் பூ ஆழம்(பூபாளம்) என்கிற சஹஸ்ர இதழின் ஆழத்தில் உள்ள கடவுள் சித்த பதிவு தானாகவே வெளிவரும் அந்த நேரம் பாடுவதால் எளிதாக அமையும்.

மார்கழி மாதம் மட்டும் ஏன் சொர்க்க வாசல் திறக்கிறார்கள் என இப்போது உங்களுக்கு புரியும்.

அறிவியல் ரீதியாக சித்தத்தில் பதிவு செய்யும் முறை தக்க குருவின் துணை கொண்டு அறிக.

இங்கு மெய்ஞ்ஞான (பக்தி) வழியில் மட்டுமே கூறப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்க

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” –திருமூலர்

         -  shiva shangar

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர உயிர் மொழி(பாகம்-3)

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர உயிர் மொழி(பாகம்-3)

(தமிழ் மொழியின் மூல ரகசியங்களை அறிய முழுமையாக இந்த தொடரை படியுங்கள்..... பல வாழ்வியல் உண்மைகள் , யோக அறிவியலின் உண்மைகள் , ஆன்மிக உண்மைகள் புரியும்.)

சிவபுராணத்தில் உள்ள தமிழின் மாபெரும் சிவயோக  ரகசியம்
******************

சிவபுராணம் என்பது சிவனை பற்றியும் அவன் இருக்கும் இடமான சிவபுரத்தையும் கூறும் ஒரு பகுதியாகும் (இங்கு சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து வரியை ஞாபகம் வைக்க)

தினமும் நமக்கு இறைவனால் கொடுக்கபடும் ஒரு துளி அமிர்தம் அதை முழுவதுமாக நமக்கு கிடைக்க வழிவகை செய்யும் ஒரு நூல் தான் இந்த சிவபுராணம்.

சிவபுராணத்தின் முதல் வரியில் இருந்து, முதல் ஐந்து வரிகள் வாழ்க, வாழ்க என முடியும் வரியை கவனிக்க வா…ழ்….க, இது தமிழில் ழ்… என்ற எழுத்து மட்டுமே உள்நாக்குவரை சென்று தொட்டுவரும்.

உங்களுக்கு அமிர்தம் இயற்க்கையாக சுரக்கும் ஒரு துளி, உள்நாக்கில் படர்ந்து இருக்கும் அதை நாக்கு நுனியால் தொடும்போது உங்களுக்கு பலம் கூடும்.

இதனால் தான் இதை ஓதும் முன் உடல் சுத்திகள் செய்து அதிகாலை பிரம்மத்தில் ஓத சொன்னார் வள்ளலார்.

இந்த நேரத்தில் அமிர்தம் கொட்டாது சிறு துளி அளவாக ஊரும், அதாவது சுரக்கும் அதை பிடித்து உடல் முழுவதும் பரவ செய்ய வாழ்க வாழ்க என ஆறு முறை பாடலில் வரும் இவ்வாறு அமிர்தம் உண்டு, ஸ்தூல உடலை வழுபடுத்திய பின் அடுத்த நிலைக்கு செல்வோம்.

அடுத்தது வெல்க வெல்க என்று அமிர்தம் கொடுத்த இறைவனை உடலில் வெளிபடுத்தி அடுத்த பகுதிக்கு செல்கிறோம்.

இதற்கு அடுத்த ஆறு வரிகள் இது சூட்சம உடல் என குறிப்பிடும் பிராண உடலை வழுபடுத்த போற்றி போற்றி என கூறுகிறோம். போ….ற்….றி இதில் முதலில் உள்ள போ என்றால் ஓரெழுத்து சொல் அனுப்புதல், நடுவில் உள்ள எழுத்து ‘’ற்’’ அண்ணாக்கு என்னும் அன்னத்தில் தொடும். இங்கு நாக்கு தொடும் போது பிராண உடல் வளிமையாகும்.

அது எப்படி பிராண சக்தி சூட்சம உடலுக்கும் போகும் என கேள்வி கேட்க வேண்டாம், தீர ஆய்வு செய்து தான் விளக்கபட்டது.இது புரிய மெய்யென்ற (உடம்புக்குரிய) எழுத்து அறிந்திருக்க வேண்டும்.

நண்பர்களே ஒன்று நன்றாக நினைவில் கொள்ளவும் அடியோ, வினையோ (சூட்சம) பிராண உடலை தாக்காமல் ஸ்தூல உடலை தாக்காது பிராண சரீரம் வலிமையானால் தூல சரீரம் இன்னல்கள் வேகமாக தாக்க தூல உடல் இடம் கொடாது.

 நான் செய்வினை , செயபாட்டு வினை அனுப்பவேண்டுமானால் முதலில் உங்கள் பிராண உடலில் தான் விளைவை ஏற்படுத்துவேன். பின் அதுதான் ஸ்தூல உடலை பாதிக்கும்.

சரி இந்த எழுத்தை ஆராய்வோம்
வாழ்க + போற்றி = 2 : ½ : 1(மாத்திரை அளவு)
மேற்கண்ட மாத்திரை அளவு ஒன்று தான் ஆனால் பிறக்கும் இடமும் பொருளும் வேறு இது பற்றி பின் மெய் எழுத்து பதிவில் விரிவாக காணலாம்.

போற்றி என்று சொன்னால் பிராண தேகம் வளிமையடையும் இதனால் தான் அனைவரும் போற்றி மாலை பாடுகின்றனர்.
உம்: ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி

பிராண தேகம் வலிமை என்றால் நீங்கள் வலிமை மிக்கவர்.

இப்படி சிவபுராணம் பாடும்போது ஸ்தூல சூட்சம உடல் பலம் அடைந்து பதினேழாவது வரிக்கு போனால் சிவன் என்பவர் சிந்தையுள் நிற்பார், இப்போதான் நிற்க வைக்க முடியும்.

அவரிடமே அருள் பெற்று வினை முழுவதும் அழிய சிவபுராணம் பாட ஆரம்பிக்க போறேன் என்கிறார் இருபதாவது வரியில்......

அப்பிடினா!! இப்ப பாடினது எல்லாம், நான் சொன்ன வேலையை செய்வதற்க்காக மட்டுமே என உணர்க
இப்படி மாணவன் தன் ஸ்தூல,சூட்சம தேகங்களை வழுபடுத்திய பின் சிவபுரத்திற்க்கு செல்லும் வழியை கூறுகிறார்.

அடுத்து21வது வரி கண்ணுதலான் தன் கருணை கண் காட்ட என ஆரம்பிக்கிறார் உடம்பில் இருக்கும் இறைவன் கண்ணை வைத்து வழிகாட்டி உள்ளே செல்லும் மார்க்கத்தை கூறி அந்த மார்க்கத்தில் வருகிற உடல் இன்னல்கள், இப்பிறவியில் வந்து பெற்ற, படித்த பல விடயங்கள் அங்கு வரும் அது அந்த வழியில் செல்லவிடாமல் தடுக்கும் அங்கு அதையெல்லாம் கவனிக்காமல் இருட்டில் சென்று கொண்டே இருக்கவேண்டும்.

இந்த கட்டம் கொஞ்சம் சிரமம் தான் இருந்தாலும் மனதிற்க்கு எதையும் காட்டாமல் இருளை மட்டுமே காட்டி உள்ளே உள்ள ஒளி தெரியும்வரை செல்ல வேண்டும்.

அதாவது மாணிக்க வாசகர் சொல்வதுபோல்
“விலங்கு மனத்தால் விமலா”
விலங்கு மனம் என்பது மனதிற்க்கு கற்பித்த ஒரு விடயத்தை மட்டும் நினைக்க செய்யுமாறு விலங்கு போடபடுவது, அதாவது விலங்கு போல ஒன்றை மட்டுமே செய்வது.இது மிகவும் முக்கியம் நண்பர்களே!!!

மனமும் உடலும் ஒன்றாக இருக்க ஒரு மெய் எழுத்து உள்ளது அதை தக்க குரு மூலம் அறிக....

இப்படி செல்லும் போது இருட்டின் நடுவே விளக்கு இல்லாமல் ஒளி தெரியும் அது தான் சிவபுரத்தின்(பிராண உலகத்தின்) நுழைவுவாயில், அங்கு செல்வதற்க்குள் நடக்கும் சம்பவம் 21வது வரியிலிருந்து 87 வது வரி வரைக்கும் அனுபவம்

அவ்வாறு எல்லாவற்றையும் தாண்டி உங்களையும் அதில் சிக்க விடாமல் மீட்டு வந்து வாயிலில் நிற்க வைப்பார். இது எல்லாம் யோக சாதனை என கருத்தில் கொள்க....

சிவபுரம் என்பது பிராண உலகம் அது உள்ளே சென்றவுடன் நிஜத்தில் உள்ளதைபோல் இருக்கும் அங்கு பலபேர் உங்களை சந்திப்பார்கள் அங்கு நீங்கள் மிக தெளிவாக இருக்க வேண்டும்.

முதல் முறையாக உள்ளே போகும் போது நீங்கள் யார் மூலம் வந்தீர்கள் என அவர்களிடம் கூற வேண்டும்.பின் அந்த குருவின் சார்பாக அடியாரோ, அக்குருவோ வந்து அழைத்து செல்லுவர்.

அதாவது கடைசி வரி சிவன் அடிகீழ் உள்ள பலரும் வணங்கி அழைத்து செல்லுவர் என்கிறார்.

இது ஒரு அனுபவ அனுபவ சூட்சம யாத்திரை

       இதை அனுபவமாக சொல்லவேண்டுமானால் சூட்சம யாத்திரை செய்பவர்களுக்கு எளிதாக புரியும். அதாவது சூட்சம பயணம் செய்யும் போது சூட்சம உலகில் நுழைந்தவுடன் தாங்கள் யாருடைய வழிகாட்டுதலின் பேரில் இங்கு வந்தீர்கள் என சூட்சம வாயிலில் உங்களுக்கு ஓர் எண்ணம் வரும் இங்கு தான் தெளிவாக ஒரு குருவின் பெயர் சொல்லவேண்டும் அதை விடுத்து பல குருமார்பெயர் தெரிந்து மனம் வெளிபடுத்தினால் அங்கு பயணத்தில் குழப்பம் வரும் பின் அதை சரி செய்யவே பிராணன் விரயமாகும்.

   இங்கு நடப்பது எல்லாமே உங்கள் சித்தமனதின் வேலை அது மேற்கொண்டு உள்ளே செல்ல முடியாமல் தடுமாற வைக்கும். அதற்கு முன்னமே சித்தத்தை சரியாக வைத்திருந்தால் பயணம் தொடரும் இல்லை என்றால் மீண்டும் வரவேண்டியது தான்.நண்பர்களே!! முதல் முறை மட்டுமே தடுமாற்றம் நடக்கும் பின் அனுபவம் கைகொடுக்கும்,இது அனுபவ உண்மை

     மேற்கண்டவற்றில் நான் சொல்லுவதும் மாணிக்கவாசகர் சொல்லுவதும் ஒன்றுதான் என உங்களுக்கு புலப்படும்.

       சூட்சம பயணம் இயல்பாகவே தூக்கத்தில் நடக்கும் ஆனால் நம் மனம் சரியாக இல்லாததால் சரியாக செல்லமுடியாமல் கவனிக்க முடியாமல் போகும்.

      இங்கு நிறைய விஷயம் மறைப்பாக உள்ளது. ஆதலால் இது பயிற்சி அல்ல,அல்லவே அல்ல!
மாணிக்கவாசகர் சிவபுராணம் கூறிய பின் கீர்த்தித் திருஅகவல் கூறியிருப்பார்.
இது அகவல் என்றால், இலக்கண படி, தலைப்பு பற்றி உண்மையை கூறுதல். அதாவது திரு என்கிற குருபிராணை பற்றிய அகவல்.

         சற்று கவனிக்க அதில் சிவகுருவின் பெருமை அனைத்தையும் கூறி கடைசி இரண்டு வரியில்
“பொலிதரும் புலியூர் புகுத்தி இனிது அருளினான்
"ஒலிதரு கயிலையின் உயர்கிழவோனே

     கயிலையின் உயர்கிழவோன் என்பது யாரு? வேறு யாரு சிவந்தான். சிவன் தான் என்னை அழைத்துவந்தான் என்று கூறியவுடன் பல்லோரும் வணங்கி உள்ளே வழிவிட்டு பாதையை காட்டுவர்.

        இப்படி தான் யார் மூலம் இப்பிராண உலகத்தில் வந்தேன் என்று கூறி

     அடுத்து திரு அண்டபகுதிக்கு செல்கிறார் பிராண உலகம் தாண்டி அதி சூட்சம் என்று சொல்லுகின்ற பிரபஞ்சத்தின் பகுதிக்கு செல்கிறார் பின் அதை விளக்கி இந்த ஆன்மா வந்த பாதைக்கு செல்கிறார்.அதன் வழியாக சென்று பேராத்மா எனபடும் அவரை சந்தித்து மீண்டும் தன் பிராண தேகத்தில் வருகிறார் இது வரைக்கும் உள்ள விடயங்கள் போற்றி திரு அகவல் 86 வது வரி வரைக்கும் கூறுகிறார்.

     அதற்கு அப்புறம் மீண்டும் போற்றி பாடி பிராண வலிமை பெற்று திரும்புகிறார்.
இதெல்லாம் குறைந்த நிமிடங்களிலும் நடக்கலாம் அது பற்றி பின் பார்ப்போம்
 மாணிக்கவசகர்பெருமானுக்கு இந்த பகுதில் நடந்த விஷயம் அனைத்தையும் ஒன்னு விடாமல் மிக தெளிவாக 100 பாடல்களாக அடுத்த திருச்சதகம் என்ற தலைப்பில் 10 தலைப்புகளாக தொகுத்து தருகிறார் இது தான் மிக முக்கியம் இதை கவனமாக ஆராய்க.

 சதகம் என்பது இலக்கண படி பார்த்தால், தான் பார்த்த காட்சிகளையும்,தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் விளக்கி கூறும் பகுதியாகும்.

   ஞான சாதகர்கள் சிவபரம்பொருளை முறையாக சென்று காணம்போது என்ன செய்யவேண்டும்,என்ன நடக்கும் என்பது கூறுகிறார் இது மிக முக்கியமான பகுதியாகும்
1⃣சிவபுராணம்
2⃣கீர்த்தித் திருஅகவல்
3⃣திருஅண்டப் பகுதி
4⃣போற்றித் திருஅகவல்
5⃣திருச்சதகம்
இந்த ஐந்து யோக ஞான பகுதிகளுக்கும் ஒரு பெரிய தாழ்பால் போட்டு மூடியுள்ளார். அந்த யோக ஞான தாழ்பாலை திறக்க ஒரு இசை வேண்டும் அதை முதலில் படித்து பின் இதை படிக்க தெளிவாக விளங்கும்.

     அது என்ன என்கிறீர்களா? அது தான் மாணிக்கவாசகர் இயற்றிய "யோகஞானதாழிசை" என்ற பாடல்கள் ஆகும்.

      இதில் மொத்தம் 12 பாடல்கள் மட்டுமே ஆனால் மேற்கண்ட ஐந்து பூட்டுகளையும் திறக்கும் திறவுகோல் தான் இது. இதை படித்து ஞானம் பெற அனைவரையும் வேண்டுகிறோம்.

       இதை மேம்போக்காக படித்து அர்த்தம் கொள்ளவேண்டாம் இது அனைத்தும் யோக ரகசியத்தை கூறும் பகுதி

இன்னும் பல சூக்சுமங்கள் திருவாசக நூலில்.....

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” –திருமூலர்

         - shiva shangar

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர உயிர் மொழி(பாகம்-2)

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர உயிர் மொழி(பாகம்-2)

(தமிழ் மொழியின் மூல ரகசியங்களை அறிய முழுமையாக இந்த தொடரை படியுங்கள்..... பல வாழ்வியல் உண்மைகள் , யோக அறிவியலின் உண்மைகள் , ஆன்மிக உண்மைகள் புரியும்.)

தமிழில் நெடில் எழுத்துகள்
***************

நெடில் எழுத்துக்கள் நாம் ஏற்கனவே பார்த்ததுதான்
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள
இந்த ஏழு எழுத்துகளும் சித்துகள் என நாம் சொல்லும் வேலையை செய்யவல்லது.

சித்து வேலைகள் இப்போது நமக்கு தேவையில்லை அதனால் இதை கருத்தில் கொள்ளவேண்டாம்.

குறிப்பிட்ட ஓசையுடன் இந்த எழுத்துகள் இசைதமிழில் பயன்படுத்தபடுகிறது.

ஏழிசை எழுத்துகள் இவைதான் இதை கர்நாடிக் சங்கீதத்தில் ச ரி க ம ப த நி என்பார்களே அது போல தான் இதுவும்.

இந்த நெடில் எழுத்துகளை பயன் படுத்துவதில் ஒரு சிக்கல் பிராணா சக்தி அதிகமாக வெளியே செல்லும் அதை சித்துவேலை செய்வதற்கு ஒரு சிலர் பயன்படுத்துகிறார்கள்
அதாவது குறில் எழுத்து சொன்னால் ஒரு மாத்திரை வீதம் செலவு நெடிலாகில் இரண்டு மாத்திரை வீதம் செலவு.

இது அதிகபட்சமாக 4 மாத்திரை வரை நீளும் அது எழுப்புகிற ஒலியை பற்றியது.
ஆண் என்பவன் அதிகபடியான பிராணணை இழக்கிறான் அவன் நெடிலில் வருகிறான்

ஆண் - நெடில்
பெண் என்பவள் தன் பால் அனைத்து சக்தியும் சேகரிக்க தெரிந்தவள் அவள் பிராணனை அதிகம் இழப்பதில்லை,அவள் குறில் சொல்லில் அடக்கம்

பெண் - குறில்
அதிகபடியான நெடில் எழுத்துகள் இலக்கணமும் இசைதமிழும் பயன்படும் போது பிறர் மீது பிராணனை செலுத்தி எதிராளியை செயலிழக்கச் செய்ய முடியம்.
குறில் எழுத்தை பயன்படுத்தி பிராணை வழுபடுத்தி பிராணதேகத்தை வெளிபடுத்தலாம். இதற்கு மெய் எழுத்துக்கள் துணைபுரியும்.

இந்த ஏழு எழுத்துகளும் இசையாக நான்கு மாத்திரை நீட்ட குறிப்பிட்ட விலங்கின் ஒலியில் இருந்து எடுக்கபட்டது

மயில், மாடு, ஆடு, கிரவுஞ்சபறவை, பஞ்சமம்,

 குதிரை, யானை இந்த ஒலிகள் நெடிலுடன் ஒத்துபோவதால் இசைதமிழில் இது கொடுக்கபட்டது.

இசை தமிழில் இலக்கணம் மிக முக்கியம் இதை தவறாக ஒரு காலத்தில் பயன்படுத்தியதால் அந்த இலக்கணநூல் அழிக்கபட்டது.( இது பற்றி இசை தமிழில் விரிவாக காண்போம்)

தமிழ் எழுத்துகளில் உயிர் எழுத்துகள் பத்தில் ஐந்து எழுத்து பிராணை அதிகம் கொடுக்கவும் ஐந்து எழுத்துகள் பிராணனை நாம் யாருக்கு கொடுக்கவேண்டுமோ அவருக்கு கொடுக்க தந்திரத்தில் பயன்பட்டது
அந்த மீதி இரண்டு எழுத்துகள் ஆய்வில் உள்ளது அதை சித்தர்களின் அருள்  இருந்தால் மற்ற பதிவில் பார்ப்போம்.

இப்படி உயிர்கொடுக்கும் வேலை செய்வதால் உயிர் எழுத்து என வகைபடுத்தினர் இது எழுத்துக்கும்,மனிதனும் உயிர் கொடுக்கும் மொழி என்பதை நினைவில் நிறுத்தவும்.

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” –திருமூலர்

         -  shiva shangar

சந்திராஷ்டமம்

சந்திராஷ்டம் என்றாலே

 ஆகாத தினம் போல அஞ்சுகின்றனர் அச்சம் வேண்டாம். அதற்கும் பரிகாரம் உண்டு.

இன்று பல ஜோதிடர்கள் உருவாக காரணம் சந்திராஷ்டமம் என்றால் மிகையாகாது. ஜோதிடமே தெரியாதவர்கள் கூட முதலில் சந்திராஷ்டம தினங்களை கவனிக்க ஆரம்பிக்கிறார்கள். பின் தினம் தினம் குடும்பத்திலுள்ள அனைவரின் சந்திராஷ்டம தினங்களையும் கவனிக்க ஆரம்பிக்கிறார்கள். இதுவே ஒருவர் ஜோதிடத்தின் மீது ஆர்வம் காட்டவும் ஜோதிடத்தை கற்றுக்கொள்ளவும் முதல்படியாகிறது.

ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் பிரதானமாக இருப்பது லக்னமாகும். இதற்கு அடுத்த நிலையை பெறுவது ராசியாகும். ராசி என்பது நாம் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட்டை குறிப்பதாகும். சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் நாம் ராசி என்கிறோம்.

சந்திராஷ்டமம்

ஒருவர் பிறந்த ராசிக்கு ஒவ்வொரு மாதமும், சந்திரன் எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தை கடந்து செல்லும். இதையே சந்திராஷ்டமம் என்கிறோம். சந்திரன்+அஷ்டமம் = சந்திராஷ்டமம். சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் ‘சந்திராஷ்டம‘ காலம் என்கிறோம். அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டம வேளையாகும்.

தேய்பிறை சந்திரனும் சந்திராஷ்டமும்

வளர்பிறை காட்டிலும் தேய்பிறையில் சந்திர மறைவு தன்மை அதிக பலம் உள்ளது. சந்திரனை மனநிலைக்கு உரியவன் (மனோகாரகன்) என்றும் போக்குவரத்துகளுக்கு காரகன் என்றும் ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

மறைவுஸ்தானத்தில் சந்திரன் நிற்கும் காலத்தில் மனதில் தெளிவின்மையால் மன உளைச்சல் ஏற்பட்டு அதன் காரணமாக கோபப்படுதல், பொறுமை இன்மையால் எரிச்சல், அடுத்தவரிடத்தில் தேவையற்ற கோபம், இல்லறத்தில் சண்டை போன்ற உணர்ச்சி சார்ந்த பிழறல்கள் நிகழும். மேலும் சந்திராஷ்டம காலத்தில் வெளியில் பயணம் செய்யும் பொழுது அதிக கவனம் தேவை.

தடைகள் ஏற்படும்

பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனசங்கடங்கள், மனச்சோர்வு, இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும். மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர்பார்வையாக தனம், வாக்கு, குடும்பம் எனும் இரண்டாம் இடத்தைப் பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புக்களும் பாதிப்படைகின்றன. ஆகையால் இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுபகாரியங்களை செய்யமாட்டார்கள். மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டமம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள்.

கெடுபலன்கள் வராது

சந்திரன் ஜெனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைந்து இருந்தாலும், உச்சம், ஆட்சி, நீச்சம் போன்ற அமைப்புக்களில் இருந்தாலும் சந்திராஷ்டமத்தால் கெடுபலன்கள் ஏற்படுவதில்லை என சில ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.

சந்திராஷ்டம் எப்படி ஏற்பட்டது?

மனோகாரகனான சந்திரன் கால புருஷனுக்கு எட்டாம் வீடான விருச்சிகத்தில் நீசம் அடைகிறது. எனவே விருச்சிக ராசியில் சந்திரன் வரும்போது எண்ண அதிர்வுகளில் சில மாற்றம் ஏற்படுகிறது. பொதுவாகவே கால புருஷனுக்கு எட்டாம் வீட்டை எந்த கிரகம் கடந்தாலும் அது போகிர போக்கில் சில கெடுதல்களை செய்துவிட்டுதான் போகிறது. அந்த விதத்தில் சந்திரன் மனோகாரகன் மற்றும் பயண காரகன் என்பதால் மனதிலும் பிரயாணத்திலும் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதன் அடிப்படையில்தான் சந்திரன் எட்டாம் இடத்தில் வரும்போது சந்திராஷ்டமம் என அனுஷ்டிக்க ஆரம்பிக்கப்பட்டது.

சந்திராஷ்டமத்தால் யாருக்கு கெடுதல்?

சந்திராஷ்டமம் ஒரு கெட்ட நாளாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. ஆனால் சந்திராஷ்டமம் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை. சில நேரங்களில் முடிக்க முடியாத வேலைகள் கூட சந்திராஷ்டம தினங்களில் முடிவதை பார்க்கலாம்.

1. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசிக்கு எட்டாம் வீடு குருவின் வீடாகவோ அல்லது எட்டாம் வீட்டிற்க்கு குருவின் பார்வையோஅல்லது சேர்க்கையோ ஏற்பட்டால் சந்திராஷ்டம கெடுபலன் ஏற்படாது.

2.சந்திரனுக்கு எட்டாம் வீட்டில் சுக்கிரன் நின்று சந்திராஷ்டமம் ஏற்பட்டால் அப்போது தீமையை காட்டிலும் நன்மையை ஏற்படும். அதிலும் சுக்கிரன் ஆட்சிபலம் பெற்றுவிட்டால் உங்களுக்கு சந்திராஷ்டம தினத்தில் அதிக நற்பலன்கள் ஏற்படும்.

3.ஒருவர் ஜாதகத்தில் ஜெனன சந்திரன் குரு பார்வை பெற்ற நிலையில் அவருக்கு சந்திராஷ்டமம் கெடுதல் செய்யாது.

4. ஜெனன ஜாதகத்தில் சந்திரன் அதிக ஷட்பலம் பெற்று நின்றாலும், சந்திரன் பின்னாஷ்டகவர்க பரல்களாக 6 க்கு மேற்பட்ட பரல்கள் பெற்றுவிட்டாலும், சந்திரன் அதிக பாகை பெற்று ஆத்ம காரகனாக நின்றாலும் சந்திராஷ்டம பாதிப்புகள் ஏற்படுவதில்லை.

5. ஒருவர் சந்திராஷ்டமம் அடையும் நக்ஷத்திரம் குருவின் நக்ஷத்திரமாகவோ சுக்கிரனின் நக்ஷத்திரமாகவோ அமைந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் கெடுபலன் அளிப்பதில்லை.

6. ஒருவர் ராசிக்கு எட்டாமிடத்தில் புணர்பு தோஷத்தை தரும் சனைஸ்வரன், கிரஹன தோஷத்தை தரும் ஸர்ப கிரகங்களான ராகு கேது, சந்திரனுக்கு அஷ்டங்க தோஷத்தை ஏற்படித்தி சந்திரபலம் இல்லாத அமாவாசை ஏற்படுத்தும் சூரியன் போன்ற கிரகங்களுடன் சேர்ந்து சந்திராஷ்டமம் ஏற்படும்போது மட்டுமே கெடுபலன்கள் ஏற்படுகின்றன.

சந்திராஷ்டமத்திற்கான பரிகாரங்கள்:

1. சந்திராஷ்டம தினத்தில் குருவின் ஸ்வருபமான பிராமணர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஜோதிடர்களுக்கு வெற்றிலை பாக்குடன் இயன்ற அளவு தாம்பூலம் அளிப்பது.

2. விநாயகர், அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு பால் அபிஷேக பொருளாக வழங்கினால் சந்திராஷ்டம கெடுபலன்கள் நேராது.

3. சந்திராஷ்டம தினத்தில் பால் திரிவது, சாதம் மற்றும் உணவுப்பொருட்கள் வீணாவது, வெண்ணிர ஆடையில் அசுத்தம் மற்றும் கரை படுவது போன்றவை இயற்கையாக நேர்ந்துவிட்டால் சந்திராஷ்டம தோஷம் விலகிவிடும்.

4. திரிந்த பாலில் செய்யப்படும் ரசகுல்லா போன்ற இனிப்புகளை மற்றவர்களுக்கு வழங்கிவிட்டு சாப்பிட சந்திராஷ்டம தோஷம் விலகிவிடும்.

5. குருவின் ஆதிக்கம்பெற்ற விரளி மஞ்சளை கையில் காப்பாக கட்டிக்கொண்டால் சந்திராஷ்டம தோஷம் பலம் இழந்துவிடும் 

அனைத்தையும் நம்மிடம் சேர்க்கும் மந்திர மருந்து

அனைத்தையும் நம்மிடம் சேர்க்கும் மந்திர மருந்து நம்மிடமே இருக்கிறது. அதில் முக்கிய அம்சம், செலவே இல்லாத சிறந்த வழி இது என்பது தான்.

1975ம் ஆண்டு ஜேம்ஸ் மங்கன் என்பவர் ‘தி சீக்ரட் ஆஃப் பெர்பெக்ட் லிவிங்’ என்ற தனது நூலை வெளியிட்டார்.

அது தான் ‘ஸ்விச் வோர்ட்ஸ்’ (Switch Words) எனப்படும் திருப்பு வார்த்தைகள். பிரச்சினையிலிருந்து திருப்பி விடும் சக்தி வார்த்தைகளை அவர் ‘திருப்பும் வார்த்தைகள்’ என்கிறார்.

இப்படிப்பட்ட நூறு வார்த்தைகளைத் தொகுத்திருப்பதோடு அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் அவர் கூறுகிறார்

சாவியோ பணமோ தொலைந்து போய்விட்டால் ,’ஐயோ, ஐயோ’ என்று அலறி வீட்டை இரண்டு படுத்த வேண்டாம். ’ரீச்’ (REACH) என்ற வார்த்தையைத் திருப்பித் திருப்பி மனதிற்குள் அமைதியுடன் சொல்லுங்கள். சில நிமிடங்களிலே ஆழ்ந்த அமைதியுடனான மனம் தானாக சாவி கிடைக்க வழி செய்து விடும்.

'வாயில் இருக்கிறது வரமாட்டேன் என்கிறது' – இது ஒரு நினைவுப் பிரச்சினை. இருக்கவே இருக்கிறது 'ரீச்' என்ற வார்த்தை. தானாக உங்கள் நினைவுக்கு வர வேண்டிய வார்த்தை வந்து விடும்.

ஏதாவது விற்பதாக இருந்தால் நீங்கள் சொல்ல வேண்டிய வார்த்தை ‘விற்பனை செய்’ என்பதல்ல. கொடு (GIVE) என்பதே.

பணம்(mr) அதிகம் வர வேண்டுமா? நீங்கள் சொல்ல வேண்டிய வார்த்தை 'எண்ணு' (COUNT)

இறை சம்பந்தமான திவ்ய அனுபவம் பெற வேண்டுமா? இருக்கவே இருக்கிறது தெய்வீகம் (DIVINE) வார்த்தை.

உறவுப் பிரச்சினையா? கவலையே வேண்டாம். ‘சேர்ந்திருத்தல்’ (TOGETHER) என்ற வார்த்தையைத் திருப்பித் திருப்பிச் சொன்னால் போதும். இந்தத் திருப்பு வார்த்தை அணுகுமுறையை மாற்றி விடும்.

அனைத்தையும் இணைக்கின்ற பிரபஞ்ச சக்தி உங்களைச் சண்டை போடாமல் இருக்க வழி வகை செய்யும். இது போன்ற ஒற்றைச் சொல் வார்த்தை மிக சக்தி வாய்ந்தது. அனுபவத்தினால் மட்டுமே இதன் பயனைப் புரிந்து கொள்ளலாம்.

உங்களுக்கு நீங்களே வெற்றி வார்த்தைகளைத் தந்து உத்வேகத்தையும் உற்சாகத்தையும் பெறலாம்.

வாழ்க வளமுடன்

தீட்சை என்றால் என்ன ?

தீட்சை என்றால் என்ன ?

தீட்சை என்பது சிவாகமங்களில் கூறப்பட்ட சைவக்கிரியைகளில் ஒன்று.....சிவபெருமானைத் தியானித்து விதிப்படி வழிப்படுவதற்கு நமக்குத் தகுதியளிப்பது தீட்சை ஆகும்....சைவ சமயிகள் சமயப் பிரவேசம் செய்வதற்கான வழங்கப்பட்ட கிரியை இதுவாகும்

புராணங்களைப் படிப்பதற்கும்...மந்திரங்களை ஓதுவதற்கும்...ஞான சாஸ்திரங்களை கேட்பதறகும்.....படிப்பதற்கும்...பிரதிஷ்டை விவாகம் போன்ற நற் சமயக் கிரியைகளை செய்வதற்கும் தகுதியுடையவர்கள்   தீட்சை பெற்றவர்களே

`தீ’ என்றால் மலம். 
`ஷை’ என்றால் ஒழித்தல்.

மலமாகிய அழுக்கை ஒழித்தலே தீட்சை.

மனிதன் இறைநிலையை அடைவதற்கு மந்திரக்கலை, 
தந்திரக்கலை, 
உபதேசக்கலை ஆகிய 
மூன்று படிநிலைகள் உள்ளன.

மந்திரக்கலை, தந்திரக்கலை இரண்டும் சரியை, 
கிரியை, 
யோக நெறிமுறைகளில் உள்ள குருமார்கள் போதிப்பதாகும்.

நான்கு எழுத்து, 
ஐந்து எழுத்து, 
ஆறு எழுத்து, 
எட்டு எழுத்து உள்ளிட்ட 
பல மந்திரங்களை  உச்சரித்து செய்யும் பயிற்சிகள் மந்திரக்கலை ஆகும். 
இதை போதிப்பவர்கள் மாந்திரீகர்கள் ஆவர்.

முத்திரைகளையும், 
யந்திரங்களையும் செய்யும் பயிற்சிகள்  தந்திரக்கலை ஆகும். 
இதைப் போதிப்பவர்கள் தாந்திரீகர்கள் ஆவர்.

இந்த இரண்டு கலைகளைக் காட்டிலும் உன்னதமான, 
ஒப்புயர்வற்ற ஞானநிலைக்கான கலையே உபதேசக்கலையாகும். 

இதை போதிக்கும் குருமார்கள் ஞானகுரு ஆவார்கள். 
இந்த ஞானகுருக்களே தன் சீடர்களுக்கு  உண்மையான தீட்சைகளை வழங்குகிறார்கள்.

தீட்சைகள் ஆறு வகைப்படும்.  அவையாவன :

 
*பரிச தீட்சை,    
நயன தீட்சை,     
பாவனா தீட்சை,     
வாக்கு தீட்சை,     
யோக தீட்சை, 
நூல் தீட்சை*

1.....பரிச தீட்சை 

 ஒரு பறவை முட்டையிட்டு, 
அதன் மேல் உட்கார்ந்து, 
அதன் உடல் வெப்பத்தினால் முட்டைபொரிந்து குஞ்சு வெளியாவதைப் போன்றது, பரிச தீட்சையாகும். 

ஞானகுரு தனது திருக்கரத்தினால் சீடருடைய நெற்றியில் தொட்டு, மூலதாரத்தில் சுருண்டு உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி ஆற்றலை மேல் நிலையில்– 
புருவ மத்தியிலும், 
தலை உச்சியிலும் – 
நிலை நிறுத்துவதே பரிச தீட்சையாகும்.

2...நயன தீட்சை 

 ஒரு மீன் முட்டையிட்டு 
அதனைத் தன் கண்களால் பார்த்து பார்வையின் வெப்பத்தினால் முட்டை பொரிந்து, 
மீன் குஞ்சு வெளியாவதைப் போன்றது நயன தீட்சை. 

ஞானகுரு தமது திருக்கண்ணால் 
சீடரின் கண்களைப் பார்த்து 
புறத்தில் செல்லக்கூடிய சீடரின் மனத்தை, 
அகத்தில் பார்க்க அருளுவதே 
நயன தீட்சையாகும்.

3...பாவானா தீட்சை 

 ஒரு ஆமை கடற்கரையில் முட்டைகள் இட்டு, 
பின்பு கடலுக்குள் சென்று முட்டைகள் பொரிந்து குஞ்சுகளாக மாறவேண்டும் என்று இடையறாது நினைத்துக் கொண்டிப்பதைப் போன்றது 
பாவனா தீட்சை ஆகும். 

ஞானகுரு தன்னைப் போன்றே 
தன் சீடர்களையும் உடல் உணர்வு நிலையை விட்டு, 
உயிர் உணர்வில் நிலைக்கச் செய்து, சகஜத்திலேயே வெளிக்குள் 
வெளி கடந்து சும்மா இருக்கும் சுகமான, எண்ணமற்ற மோனநிலையாம் 
ஆனந்தப் பெருவெளியில் நிலைக்க வைப்பதே பாவனா தீட்சை.

4...யோக தீட்சை

ஞானகுரு தன் அருளால் 
அகார, உகார, மகார, சிகார, வகார நிலைகளை உணர்த்துவதே யோக தீட்சையாகும். 

தலை உச்சியாகிய சிகாரத்திலிருந்து 
12 அங்குல உயரத்திலுள்ள அண்டத்திலுள்ள பிண்டமான பெருவெளியில் நிலைத்து வெளிக்குள் வெளிகடந்து, 
சும்மா இருப்பதுவே வகார திருநிலை.

 இதனை ஞானகுரு, அக அனுபவமாக உணர்த்துவதே யோக தீட்சை ஆகும்.

5....வாக்கு தீட்சை

 ஞானகுரு, ஞானிகள் அருளிய திருமறைக் கருத்துகளையும், 
தான் தனக்குள் மெய்ஞான அனுபவமாக உணர்ந்ததையும், 
இறைத்தன்மையில் நிலைத்து நின்று, உள்ளன்போடு கேட்கும் சீடர்களுக்குச் சொல்லி, 

அவர்தம் உணர்வில், உயிரில், ஆன்மாவில் கலந்து, 
ஞான அதிர்வுகளை உருவாக்கி, என்றென்றைக்கும் வழிநடத்துவது வாக்கு தீட்சையாகும்.

6....நூல் தீட்சை

சரியை, கிரியை, யோக மார்க்க நூல்களை நீக்கி, ஞானத்திற்காக மட்டும் மெய் உணர்ந்த அருள் ஞானிகள் அருளிய திருமறைகளையும், 
அவர்கள் அனுபவித்த பேரானந்த அனுபவங்களையும், 
அதன் வழி நடக்கும் போது ஏற்படும் நிறைவான அனுபவக் கருத்துக்களையும் நூலாக்கி சீடர்களுக்கு 
வழிகாட்டும் நூலாக அருள்வது 
நூல் தீட்சையாகும்.

உண்மையில், 
யோக தீட்சை என்பது மூச்சுப்பயிற்சியோ, வாசியோகம் என்றால் என்னவென்று அறியாமலேயே மூச்சை உள்ளுக்குள்ளே ஊதிச்செய்யும் பயிற்சிகளோ அல்ல.

 எண்ணமற்று, சகஜத்திலேயே, 
மனதில் மோனநிலையைப் பெற்று சிவவெளியில் லயமாகி இருப்பதே 
வாசி யோகம் என்பதைப் புரிந்துகொள்க.

எடுத்த இப்பிறப்பில் தானே மெய்யான ஞானகுருவினைத் தேடிக் கண்டடைந்து, பணிந்து, 
அர்ப்பணித்து, ஞானதீட்சையைப் பெற்று, மன அழுக்குகளையும், 
உயிர் மற்றும் ஆன்ம அழுக்குகளையும் நீக்கப் பெற்று, 
மாசற்று தன்னை உணர்ந்து, 

தனக்குள் இறை நிலையை உணர்ந்து, இறைத்தன்மையில் இரண்டறக் கலந்து, அதில் கரைந்து என்றும் நித்தியராக வாழ்தலே சிறப்புடையது.

ஓம்  நமச்சிவாய........திருச்சிற்றம்பலம்

தகவலுக்கு நன்றி.......தீட்சை தமிழ் விக்கிபீடியா இணைய தளம்

நட்புடன்

   Palaniyachi shunmugam 
           Panagudi

கட்' பண்ணுங்க பிஸ்கட்டை...

'கட்' பண்ணுங்க பிஸ்கட்டை...

பிஸ்கட் சாப்பிடாதீர்கள்! –
எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்!

பள்ளியிலிருந்து திரும்பும் குழந்தைகள் தொடங்கி,
வீட்டுக்கு வரும்  விருந்தாளிகள் வரை எல்லோருக்கும் பிஸ்கட் கொடுத்து உபசரிப்பது மரபாகி விட்டது.

பெரும்பாலானோரின் தொலைதூரப் பயணங்களில்  பிஸ்கட்தான் உணவாகவே இருக்கிறது.

‘நாலு பிஸ்கட்டில் ஒரு டம்ளர் பாலின் சக்தி கிடைக்கிறது’ என்ற அறிவிப்போடு விற்பனைக்கு வரும் பிஸ்கட்டுகள்  நம் கவனத்தை ஈர்க்கின்றன.

இப்படி, நம் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருக்கும் பிஸ்கட் உண்மையிலேயே நம் உடலுக்கு ஆற்றலைத் தருகிறதா?

உணவுக்குப் பதிலாக பிஸ்கட் சாப்பிடலாமா?

“நிச்சயம் சாப்பிடக்கூடாது” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கற்பகம்.

“பிஸ்கட் என்பது 'கழுத்தைச்  சுற்றிய பாம்பு' போல ஆபத்தான ஓர் உணவு என்பதைப் பலர் அறிவதில்லை.

பிஸ்கட் மிருதுவாக இருக்க குளூட்டன் சேர்க்கப் படுகிறது.

மேலும் சர்க்கரை, சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பைகார்பனேட், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன.

பிஸ்கட்டின் ஆயுள்காலத்தை நீட்டிக்க ஹைட்ரஜனேட்டட் கொழுப்புச்சத்து (Hydrogenated Fat) சேர்க்கப்படும்.

இது காலப்போக்கில் டிரான்ஸ் ஃபேட் (Trans Fat) எனப்படும் மோசமான கொழுப்பாக மாறி, உடல் சார்ந்த பல பாதிப்புகளுக்குத் திறவுகோலாக அமைகிறது.

சுக்ரோஸ் அதிகமுள்ள சர்க்கரை, பிஸ்கட்டில் அதிகம் கலக்கப்படுகிறது.

இது, உடலின் சர்க்கரை அளவை அதிகரிப்பதால் சர்க்கரைநோய், இதயம் சார்ந்த பிரச்னைகள், கொழுப்புச்சத்து அதிகரிப்பது போன்றவற்றை ஏற்படுத்தும்.

சோடியம் பைகார்பனேட் எனப்படும் உப்பு பிஸ்கட்டில் அதிகளவு உள்ளது.

உடலில் சோடியம் அதிகமானால், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல், இதய பாதிப்புகள் போன்றவை ஏற்படும்.

பிஸ்கட் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும்.

சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பிஸ்கட்டுகளில்...

டிரான்ஸ் ஃபேட் (Trans Fat) அளவு பூஜ்யம் என்றும்
`லோ இன் கலோரிஸ்’ (Low in Calories) என்று பல பிஸ்கட் பாக்கெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றன. 

இது உண்மை கிடையாது.

பிஸ்கட்டினால் செரிமானக் கோளாறுகள், குடல் பிரச்னைகள் ஏற்படுவது தான் உண்மை.

குறிப்பாக குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுப்பது மிகவும் தவறு.

“ஏனெனில், பிஸ்கட்டின் வேலையே பசியை அடக்குவது தான்.

ஒரு குழந்தை மூன்று பிஸ்கட் சாப்பிட்டால், பசியே எடுக்காது.

பெரும்பாலானவர்கள், குழந்தைக்குப் பாலில் நனைத்த பிஸ்கட்டைக் கொடுப்பார்கள்.

இது முற்றிலும் தவறான பழக்கம்.

மேலும், க்ரீம் பிஸ்கட்டுகளில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்.

பெரியவர்களே வெள்ளைச் சர்க்கரை சாப்பிடக்கூடாது என அறிவுறுத்தப் பட்டு வரும் நேரத்தில், வளரும் குழந்தைகளுக்குக் கொடுப்பதென்பது, பல்வேறு உடல், மன பிரச்னைகளுக்குத் திறவுகோலாக அமைகிறது.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு,  பழங்களைச் சாப்பிடக் கொடுங்கள்.

இது பசியைத் தூண்டுவதுடன், கூடுதல் சத்துகளைக் கொடுக்கும்.

பிஸ்கட் சாப்பிடுவது உடலை மந்தப்படுத்தும் என்பதால், குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.”

மேலும், பிஸ்கட் மட்டுமல்லாமல் பாக்கெட் உணவு வகைகள் அனைத்தையும் தவிருங்கள்.

உடல், மன ஆரோக்கியம் காக்க இயன்ற வரையில்
இயற்கையான உணவுகளுக்கு மாறுங்கள்...

இனிமையாக வாழுங்கள்.💐

நன்றி..

வாதநிவர்த்தி

வாதநிவர்த்தி
******
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்  வளிமுதலா எண்ணிய மூன்று ,
         ---திருவள்ளுவர்,
         வாதம் ,பித்தம் ,கபம் ஆகியவற்றின் சமச்சீர் இன்மைதான் பிணிகளுக்கு காரணம் .இதில் வாத நோயினால் பாதிப்போரின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகம் ,காரணம் காற்று மாசு,
           வாதநோய் வரும் முன்பும் வந்த பின்னரும் நம்மைக் காத்துக் கொள்ளும் வழிமுறைகளை இந்த பகுதியில் பார்ப்போம் .
           வாதம் 84 வகைகள் கொண்டது என நமது ஆதி மருத்துவம் கூறுகிறது .(வீண்வாதம்,பிடிவாதம் ,விவாதம் ஆகியவை இதில் சேராது) . வாத நோய் முக்கியமாக நாடிகளிலும்,முடிச்சுகளிலும் சமானன் எனும் வாயு சீர்கேடு அடைவதால் தோன்றுகிறது .
 வாத நோயை எளிதில் குணப்படுத்தும் மருத்துவம் ஒன்றை இதில் அறிந்து கொள்வோம் .    இதன் மூலம்  உங்களை நீங்களே குணப்படுத்தி கொள்ளலாம் .
                பக்கவாதம்.மூலவாதம்,அக்கினி வாதம்.சுர வாதம் .தோள்பட்டை வாதம்.நடுக்கல் வாதம் .முக வாதம் என பல வாதங்கள் உள்ளன ,இவற்றை எளிதாக குணப்படுத்தலாம்,
          காற்று மாசு ஏற்படுவதால்   வாதநோய்  அதிகரிக்கிறது ,நாம் சுவாசிக்கும் காற்றில் 78% நைட்ரஜன் 21% ஆக்ஸிஜன் கார்பன் மோனாக்ஸைடு,நைட்ரஜன் ஆக்ஸைடு ,சல்ஃபர் ஆக்ஸைடு ,ஓசோன்,மீத்தேன்,.... ஆகியவை ஒரு சுதவீதமும் கலந்துள்ளன. தொழிற்சாலை ,வாகனம் ,மனித நாகரிக வளர்ச்சி ஆகியவற்றால்  காற்று மாசு தொடர்ந்து அதிகரிக்கிறது ,இதை உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது அவசியம் ,இல்லையெனில் நோய் பெருகுவதை தடுக்க முடியாது ,குறிப்பாக வாத நோயாளிகள் அதிகரிப்பார்கள்,
            காற்று மாசுபடுவதற்கும்.வாத நோய்க்கும் என்ன தொடர்பு என்று தானே யோசிக்கிறீர்கள்?
       இருக்கிறது !
   காற்றின் மாசு நாம் சுவாசிக்கும் போது உள்ளே சென்று மூளையைத் தாக்குகிறது. ஆண்டு தோறும் 90 முதல் 120 இலட்சம் பேர் இதனால் இறக்கிறார்கள்,   மாரடைப்பு 25% பக்க வாதம் 25% நுரையீரல் நோய் 43%  இத்துடன் புற்றுநோய் தோன்றுவதும் அதிகரிப்பதாக  புள்ளி விபரம் கூறுகிறது ,
       நமது மூக்கில் உள்ள ஆல்ஃபாக்டரி எபிதீலியம் எனும் உறுப்பு நாம் வாசனையை உணர  மூளையுடன் இணைந்து வேலை செய்கிறது ,குப்பைகள் மூக்கில் வடிகட்டப்படுவதால் மூளைக்கு சென்று அவை பாதிப்பு ஏற்படுத்துவதில்லை.ஆனால் நச்சுக் காற்று இதைக் கடந்து மூளைக்கு செல்லும் போது ப்ளட் ப்ரெய்ன் பேரியர் (blood brain barrier )எனும் மூளையின் பாதுகாப்பு வளையத்தை சிதைக்கிறது,   அண்மையில் டெல்லியில் ஒரு சிறுமிக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்து உள்ளே  இருந்த   புழுக்கள் அகற்றிய செய்தியை கேள்விப்பட்டு இருப்பீர்கள்,
       மூளை பாதிக்கும்போது நோய் கிருமிகள் வளர்வது இதனால் உறுதியாகிறது, 
      இன்று பற்பல  வியாதிகள் மூளையை தாக்குகின்றன, குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் இதன் பிடியிலிருந்து தங்களை காத்துக் கொள்ள ஒரு எளிய வழிமுறை உள்ளது ,
         நாம் சுவாசிக்கும் காற்றில்  பிராண சக்தியை அதிகரிப்பதன் மூலமாக மூளையை தாக்கும்  நோய்கள் ,வாத நோய்கள் ஆகியவற்றிலிருந்து விடுபடலாம்,
1.அரச இலை, 2.அத்தி இலை 3.கருந்துளசி இலை,
       இந்த மூன்றிலும் பிராண சக்தி அதிகம் உள்ளது .
   ஆதி மருத்துவத்தில் இதன் பயன்பாடு பற்றிய குறிப்புகள் ஏராளமாக உள்ளன ,
    இந்த மூன்றையும் நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும் .சம அளவில் ஒவ்வொன்றும் எடுத்து கலந்து கொண்டு வெள்ளை பருத்தி துணியில் இட்டு சிறு மூட்டை போல் கட்டிக் கொள்ள வேண்டும் ,இதை அவ்வப்போது எடுத்து மூக்கின் அருகே வைத்து அதன் வாசத்தை நுகர வேண்டும் ,இவ்வாறு செய்து வருவது உடலுக்கு பிராண சக்தியை அதிகரிக்கும் ,வாத    நோய் வராமலும் .வந்த பின்னர் விரைவில் குணப்படுத்தவும் உதவும் , 
குறிப்பு 
   *சம அளவு என்பது மூன்றும் தலா 5 கிராம்
 *இவற்றின் வீரியம் குறைந்து விட்டால் மீண்டும் புதிதாக தயார் செய்து பயன்படுத்த வேண்டும் ,

     இந்த மருந்து வெளி உபயோகத்திற்கு  அதாவது சுவாசிக்க மட்டுமே ,
    நீங்களே இதை எளிதாக தயார் செய்து பயன்படுத்தலாம் ,நிச்சயம் அனைவரும் பயன்படுத்துவது நன்மை தரும் ,

அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் குரு பரிகாரதலம்


அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், குரு பரிகாரதலம், திட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.

திட்டைக்கு வருக ! தி (கு)ருவருள் பெறுக !

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இவ்வுலகத்தில் மகாப்ரளயம் ஏற்பட்டது. அதனால் உலகம் முழுவதும் பிரளம் ஜனத்தினரல் சூழப்பட்டது. உயிர்கள் அனைத்தும் அழிந்தன. அத்தகைய தருணத்தில் ஸ்ரீ பார்வதி பரமேஸ்வரனின் திருவருளால் ஊழிப்பெருவெள்ளத்தின் மத்தியில் சுமார் பத்து மைல்கள் பரப்பளவுள்ள மேட்டுப் பகுதி மட்டும் நிலைத்திருத்தது. அம்மேட்டுப்பகுதியில் கோடி சூரியன் ஒரே சமயத்தில் உதையமானரற்போல் ஜோதிமயமான சிவலிங்கம் தோன்றியது. இந்த லிங்கத்திலிருந்து காட்சி தந்த சிவபெருமான் வேத வேதாந்த சாஸ்திர அறிவை அனைத்து உலகங்களுக்கும் தந்தருளினார். இறைவன் சுயம்புவாக அந்த மேட்டுப் பகுதியில் தோன்றியதால் ஸ்வயம்பூதேஸ்வர் (தான்தோன்றீஸ்வரர்) எனப் பூஜிக்கப்பட்டார். முதன் முதலில் வசிஷ்ட மகரிஷி இங்கு வந்து தவம் புரிந்து இறைவனைப் பூஜித்து பிரம்மஞானிகளில் முதன்மை பெற்றவராக விளங்கினார்.

வசிஷ்ட மகரிஷிக்கு அருள்புரிந்த காரணத்தினால் இத்திருத்தல இறைவன் வசிஷ்டேஸ்வரர் என அழைக்கப்பட்டார்.

மூர்த்தி தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறந்த இத்திருத்தலம் திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற பெருமை பெற்ற தலமாகும். திருக்கயிலாயம், கேதாரம், காசி, ஷ்ரீசைலம், காஞ்சி, சிதம்பரம் போன்ற சுயம்புத் தலங்களின் வரிசையில் 22-வது சுயம்புத் தலமாக விளங்குவது தென்குடித்திட்டை. திட்டை என்ற சொல்லுக்கு திட்டு அல்லது மேடு என்பது பொருளாகும். தென்குடி என்பது மனித உடல் திட்டை என்பது ஞானமேடு. மனித உடலில் மூலாதாரம் முதல் ஆன்ஞை உள்ளிட்ட ஆறு ஆதாரங்கள் பொருந்தியுள்ளன. முதலில் இறைவனைப் பற்றிய ஐய உணர்வு போன்றிகிறது. ஐயம் தெளிந்தபின் மெய்யுணர்வு தோன்றியது. இப்படி ஊரின் பெயரிலேயே ஞானமார்க்கம் மறைந்திருப்பது உணரத்தக்கது.

சக்கர தீர்த்தம்

இத்திருக்கோயிலில் எதிரில் அமைந்துள்ள சக்கர தீர்த்தம் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தால் உருவாக்கப்பட்டது. அனைத்துப் பாவங்களையும் போக்கவல்லது இந்தச் சக்கர தீர்த்தம். தீர்த்தத்தில் பக்தியுடன் புனித நீராடினால் ஸ்ரீ மகாவிஷ்ணு மற்றும் சிவபெருமான் ஆகிய பெருமான்களின் பேரருளைப் பெறலாம்.

சூல தீர்த்தம்

முன்னொரு காலத்தில் தண்டகனத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. கதிரவனின் கடும் கிரணங்களினால் குளங்களும், குட்டைகளும் வறண்டன. மழை பொய்த்தது. தெய்வாதீனமாக இந்தத் திட்டை திருத்தலத்தை வந்தடைந்த பசு, குதிரை, ஆடு, மாடு, முதலிய மிருகங்கள் தாகத்தினால் தொண்டை வறண்டு துன்புற்று வாடியதைக் கண்ட சிவபெருமாள், தன் சூலத்தால் பூமியைத் தோண்டி குளம் ஒன்றை உருவாக்கி அதில் தனது சிரசிலிருந்து கங்கை நீரை விட்டு நிரப்பினார். இறைவனின் சூலத்தால் உருவாக்கப்பட்டால் இக்குளம் சூலதீர்த்தம் எனப் பூஜிக்கப்பட்டது. அம்பிகை - மங்களாம்பிகை தரிசித்துப் பூஜிப்பவர்களுக்கு அனைத்து மங்களங்களையும் தரக்கூடியவள். மாங்கல்ய பலத்திற்கும் குடும்ப ஒற்றுமைக்கும் ரப்பிரசாதி இந்த மங்களாம்பிகை.

சந்திரனின் அபிஷேகம்

மூலவர் ஸ்ரீ வசிஷ்டேஸ்வரனின் விமானத்தில் சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. சந்திரனிடமிருந்து குளிர் கிரணங்களை அந்தக் கல் ஈர்த்து அந்தக் கிராணங்கள் நீராக மாறி 24 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு சொட்டு தீர்த்தமாக இறைவன் மீது நித்ய அபிஷேகம் நடைபெறும் அதிசயத்தை இன்றும் காணலாம்.

சிறப்பு குருபகவான்

சுவாமிக்கும் அம்பிகைக்குமிடையில் தனிச்சந்நிதியில் தனி விமானத்துடன் ராஜகுருவாக நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். நவக்கிரங்களில் பூரண சுபக்கிரகமான குருபகவான்.

இறைவி உலக நாயகி

இங்குக் கோயில் கொண்டுள்ள இறைவி உலகநாயகி என்னும் மங்களாம்பிகை அனைத்து களங்களையும் தரக்கூடியவள். இறைவனுக்கு நிகராக மிக உயர்ந்த பீடத்தில் அமர்ந்துள்ளாள். மாங்கல்ய பலத்திற்கும், குடும்ப ஒற்றுமைக்கும் வழிபட வேண்டிய அன்னை இவள். சிறப்பு மூர்த்தி குருபகவான் நவக்கிரங்களில் மகத்தான சுபபலம் பெற்றவர் குருபகவான். ஒருவரது ஜாதகத்தில் மிகக்கடுமையான பாவக்கிரகங்களால் ஏற்படக்கூடிய விளைவுகளைக்கூடத் தனது சுபப்பார்வையினால் தடுத்து நிறுத்தும் வல்லமை பிரகஸ்பதி என்று அனைவராலும் போற்றப்படும் குருபகவானுக்கு உண்டு.

எல்லாச் சிவாலயங்களிலும் தென்கோஷ்டத்தில் சிவபெருமானின் ஞானவடிவான ஸ்ரீ தெட்சிணாமூர்த்தி கோயில் கொண்டிருப்பார். சிவகுரு ஸ்தலங்களில் இந்த தெட்சிணாமூர்த்தியே குருவாகப் பாவித்து வழிப்படப்படுகிறார்.

ஆனால், தென்குடித்திட்டையில் ஸ்ரீ குருபகவானே சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் தனி சந்நிதியில் தனி விமானத்துடன் ராஜகுருவாக நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய அமைப்பு வேறு எங்கும் கிடையாது என்பதும் அறியத்தக்கது.

திருமூலர் அருளிய அட்டாங்க யோகா

திருமூலர் அருளிய அட்டாங்க யோகா
உங்களால் தலை உச்சியின் மேல் கவனம் வைத்து தியானம் செய்து, அதில் கிடைக்கும் மகிழ்வை உணர முடிகிறதா? அந்த மகிழ்வை உணர்ந்தால் நீங்கள் வானுலகில் உள்ள தேவர்களை விட மேலானவர்கள் என்று திருமூலர் சொல்கிறார்.
வானுலகத் தேவர்கள் பாற்கடலைக் கடைந்து எடுத்த அமுதை விட நமது உச்சியில் ஊறும் அமுது மேலானது. அவர்களால் அகத்தில் ஊறும் அமுதைக் கடைந்து எடுக்கும் வழி தெரியவில்லை, அதனால் புற உலகின் அமுதத்தை நாடினார்கள். தேவர்களுக்கும் தெரியாத அந்த வழியை, அகத்தியானம் செய்யும் முறையை, திருமூலர் நமக்குச் சொல்லித் தருகிறார்.
அட்டாங்கம் என்றால் எட்டு உறுப்புக்கள் என்று அர்த்தம். அட்டாங்க யோகத்தின் எட்டு உறுப்புக்கள் – இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகியவை ஆகும்.
இயமம் என்பது தீய எண்ணங்கள், தீய செயல்கள் ஆகியவற்றை விலக்குவது. ஒழுக்க நெறியை நாடி அதில் தொடர்ந்து நிற்பது நியமம். அடுத்து பயல வேண்டியது பல வகைப்பட்ட ஆசனங்கள். ஆசனங்கள் கற்ற பிறகு பிராணாயாமம் எனப்படும் மூச்சுப்பயிற்சி. அடுத்த பாடம் பிரத்தியாகரம் என்னும் மனத்தை உள்நோக்கித் திருப்பும் பயிற்சி. உள் நோக்கித் திரும்பும் மனத்தை அங்கேயே நிலை நிறுத்தும் பயிற்சி தாரணை ஆகும். மனம் அகத்திலே நிலை பெற்றால் தியானப் பயிற்சி சாத்தியமாகும். தியானத்திலே நிலைபெறப் பயின்றால் சமாதி நிலை அடையலாம். சமாதி என்பது பூரண நிலை. நமது மூலாதாரத்தில் (குறிக்கு இரு விரல் அளவு கீழே) இருக்கும் குண்டலினி வடிவிலான சக்தி, நமது தலையின் உச்சியில் இருக்கும் சிவனைச் சென்று சேர்வது சமாதி நிலையாகும்.
இயமமும் நியமமும் இல்லாமல் மற்ற பயிற்சிகள் சாத்தியமில்லை.
சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும்
சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி
சமாதி யமாதியில் தங்கினோர்க் கன்றே
சமாதி யமாதி தலைப்படுந் தானே. (திருமந்திரம் - 618)
இயமம், நியமம் முதலியவற்றைக் கடைப்பிடிப்பவர்களால் சமாதி வரை செல்ல இயலும். இயமம், நியமத்தில் ஆரம்பித்து சமாதி வரை சென்றவர்கள் அட்டமாசித்திகளை அடைவார்கள். இயமம் முதல் சமாதி வரையிலான அட்டாங்க யோகத்தில் நிலைத்து நிற்பவர்களே யோகத்தின் பூரண நிலையை அடைய முடியும்.
பிராணாயாமப் பயிற்சி செய்பவர்களுக்கு திருமூலரின் அட்டாங்கயோகம், இன்னும் சிறந்த அனுபவத்தை நோக்கி நகர உதவும். சிறு வயதில் நம்முடைய மூச்சுக்காற்று பன்னிரெண்டு அங்குல நீள அளவில் இயங்கும். வயது ஏற ஏற சுவாசிப்பின் நீளம் குறைகிறது. யோகப்பயிற்சியின் நோக்கம் சுவாசிப்பின் நீளத்தை மறுபடியும் பன்னிரெண்டு அங்குல நீளத்திற்கு கொண்டு வருவதாகும். முறைப்படி தொடர்ந்து பிராணாயாமப் பயிற்சி செய்பவர்களுக்குகள் உண்ணாமலே மகிழ்வு உண்டாகும், துள்ளி நடக்கச் செய்யும், சோம்பல் நீக்கி சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும் என்று திருமூலர் சொல்கிறார்.