Thursday 30 August 2018

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர உயிர் மொழி(பாகம்-6)

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர உயிர் மொழி(பாகம்-6)

(தமிழ் மொழியின் மூல ரகசியங்களை அறிய முழுமையாக இந்த தொடரை படியுங்கள்..... பல வாழ்வியல் உண்மைகள் , யோக அறிவியலின் உண்மைகள் , ஆன்மிக உண்மைகள் புரியும்.)

தமிழுக்கும் சமஸ்கிரததுக்கும் உள்ள உண்மையான தொடர்பு
*******************

ஊக்கம் அளித்துவரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி மேலும் பல ஆன்றோர்கள் வாழ்த்து தெரிவித்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது அனைவருக்கும் நன்றி.

இந்த  பதிவில் நாம் காண்பது தமிழுக்கும் சமஸ்கிருதம் என்ன வேறுபாடு மற்றும் சமஸ்கிருதம் பற்றிய தகவல்கள், மேலும் அதன் அவசியம் மற்றும் சமஸ்கிருதத்தை காட்டிலும் தமிழ் மொழியில் உள்ள ஆற்றல் என்ன என்பது பற்றி ஆதார பாடல்கள் ஆங்காங்கே வரும் ஆதலால் பதிவு நீளமாக இருக்கும் நிதானமாக படித்து தமிழ்மொழியின் சக்தியை புரிந்துகொள்ளுங்கள்.

நண்பர்களே சில பாடல்கள் எண் கொடுக்கபடும் பதிவின் நீளம் கருதி!
முதலில் தோன்றிய மொழி தமிழ் இது அனைவரும் அறிந்ததே அடுத்து தோன்றிய மொழி எது என்றால் அது சமஸ்கிருதம் தான்.

 சமஸ்கிருதம் தமிழ்மொழியில் இருந்து சிவன் உருவாக்கியதாக சொல்கிறார்கள் ஆனால் அதுவும் முருகனால் உருவாக்கபட்ட்து என சில குறிப்புகள் மட்டும் உள்ளன. சரி ஆய்வின் உள்ளே செல்வோம்.

சமஸ்கிருதம் தமிழின் சகோதர மொழி என்றும் அது மந்திர பூட்டுக்களுக்காக உருவாக்கபட்டமொழி என்றும் கூறுகிறார்கள். அதனால் மந்திர ஒலியலைகளை எழுப்ப முடியும் ஆனால் ஞான விளக்கங்களை சரியாக எடுத்துகாட்டமுடியாது என்கிறார்கள்.

சமஸ்கிருதத்தால் கட்டியதை அவிழ்க்க தமிழ்மொழி ஒன்றால் தான் முடியும் என்கிறார்கள்.

வசிஷ்டமுனிவர் தமிழ்மொழி கற்றார் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன மேலும் ராமனுக்கு தமிழ்மொழியில் தான் ஞானத்தை வழங்கினார் என்றும் உள்ளன. தமிழ்மொழி ஞானத்தின் பிறப்பிடம் என்று நிறைய குறிப்புகள்
உள்ளன.

எல்லா அறிஞர்களும் இந்த இரண்டு மொழியிலும் புலமை கொண்டு உள்ளதை அனேக இடங்கள் வெளிப்படுத்துகிறது.

“பாசையென்ன சமஸ்கிருத வடமாம்பாசை
பரிச்சுழியைக் காட்டிடுமே முத்தியீமா”
காகபுஜண்டார் பெருநூல் – 436

"விரும்பாற் செய்தீரே நூலைத் தொட்டு
மேலானோ ரெதினாலே கிரந்தத்தாலோ"
காகபுஜண்டார் பெருநூல் -439

இதை தொடர்ந்து
_கிரந்தமென்ன அகத்தியன்சொற் பாசைதானே
காகபுஜண்டார் பெருநூல் – 440

இங்கு நிற்க
அதாவது கிரந்தம் வடமொழிக்கு கிரந்தம் என பெயர் உள்ளது, அனைவரும் அறிவர். ஆதன் விளக்கம் யாதெனில் முடிச்சுவைக்கபட்டுள்ளது என்று அர்த்தம் அதாவது யோகத்தில் முக்கிரந்தி உள்ளது இந்த மூன்று கிரந்தியும் சமஸ்கிருத்த்தில் முடிச்சாக உள்ளது. அதை அகத்தியர் சமஸ்கிருதத்தில் சொன்னார் அந்த யோகநூலையும் குறிப்பிடுகிறார்.

பின்னாளில் அந்த நூல் பூட்டை நீக்கி தமிழில் செய்ததாக அகத்தியரே கூறுகிறார் அதை கீழே காணவும்.

"திருவான வடமொழியை நன்றாய்ப் பார்த்து
பரஞ்சேர்ந்த பூரணமாம் அறிவில் ஏறி
பாடினேன் செளமிய சாகரத்தை மைந்தா"
----செளமிய சாகரம் பாடல் – 7

"தேனான வட மொழியை தமிழ்தான் செய்த
திரமான கருவிபரம் நன்றாய்ச் சொன்னீர்"
செளமிய சாகரம் பாடல் – 8

(இந்த பாடல் முருகன் கூறியதாக சொல்கிறார் முழு பாடல்கள் பதிவு செய்தால் பதிவு நீளும் என்பதால் பாடல் எண் கொடுத்துள்ளேன்)

(வடமொழி தேன் என்றால் தமிழ் மொழி அமிழ்தம் என்பார் ஒரு இடத்தில் முருகபெருமான்)

வடமாம் பாஷை என்றால் வடம் என்றால் தேர்பிடித்து இழுப்பார்கள் அல்லவா அந்த கயிறுக்குபேர் தான் வடம் என்பார்கள். அந்த கயிறு மிகவும் பலபிரிவுகளை பின்னி முறுக்கி உண்டாக்கிய பலம்வாய்ந்த சுலபமாக பிரிக்க முடியாத கயிற்றை குறிக்கும்.

அது போல நேரடியாக சொல்லாமல் பல முடிச்சுகளை கட்டி சொல்லும் பாசை ஆகும் என்கிறார் காகபுஜண்டர்
“துய்ய தமிழ்ப்பண்டிதனாம் கவிவானாம்”
போகர் 7000ல் பாடல்-5835

போக முனிவர் வசிஷ்டர், தமிழ் பண்டிதர் என கூறுகிறார் கவனிக்க
“நவிலுகிறேன் ரகுராமா நன்றாய்ப் பாரு”
வசிஷ்டர் வைத்திய சூத்திரம் – 206ல் முதல் காப்பு பாடல்

இந்நூல் தமிழ் நூல் இதுபோல பல தமிழ்நூல்கள் பல வசிஷ்டர் எழுதியுள்ளார்.

தமிழ் அந்த காலத்தில் அதிகம் அதை தவறாக உபயோகபடுத்தியதால் தான். சமஸ்கிருதம் உருவக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் தான் வேதத்தை சமஸ்கிருதத்தில் கூறினார்கள். அது வாய்மொழியாக தான் இருந்தது பின் தான் சமஸ்கிருதம் எழுத்துக்கு கொண்டுவரப்பட்டது.

பேசியோ,பாடியோ ஒருவரை கொல்லமுடியும் என்றால் அது தமிழில் தான் முழு வல்லமை உள்ளது.

இன்னும் ஆதாரத்துடன் சமஸ்கிருதம் தமிழ் உள்ள வேறுபாடு, சமஸ்கிருத நன்மைகள் மற்றும் தமிழில் உள்ள ரகசியங்கள் மற்றும் ஏன் மந்திரங்கள் தமிழில் கூறவில்லை என அறிவியலோடு ஆராய்வோம்.

சமஸ்கிருதம் யோக சாதனைக்கு கடினமான மொழி என்று கூறுவதை நாம் ஏற்றுகொண்டாலும் சமஸ்கிருதத்தில் உச்சரிப்பு மிக கவனமாக கையாண்டால் இந்த மொழியையும் சாதனைக்கு உட்படுத்தலாம்.

சமஸ்கிருத மொழி ஆரிய மொழி அல்ல என்று நிறைய சான்றுகள் உள்ளன. வடக்கே இருந்தவர்கள் அதிகம் இது பேசபட்டதால், பல இடங்களில் இது பரவி ஆரிய இனத்தவர் என சுட்டும் நபர்கள் மூலம் மீண்டும் இந்தியாவுக்குள் வந்ததாக ஆன்றோர் பெருமக்கள் கூறுகிறார்கள்.

அவர்கள் வருகைக்கு முன்பே சமஸ்கிருதம் தமிழர்கள் பேசியதாக கூறபடுகிறது.

ஆரியன் என்றால் சிவன் , தீப்பிளம், ஒப்பில்லாதவன் என்றும் நிறைய பொருள் கூறுகிறார்கள்.ஆரியன் என்ற வார்த்தை எங்குள்ளது என்றால் நிறைய இடம் காட்டமுடிகிறது.

உதாரணம்
“சூரியன் சந்நிதியிற் சுடு மாற்போல்
ஆரியன் தோற்ற முன் அற்ற மலங்களே”
----திருமந்திரம் முதல் தந்திரம் உபதேசம் பாடல்-5

“பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே”
----திருவாசகம் சிவபுராணம்

“சூரிய காந்தக் கல்லினிடத்தே செய்ய
சுடர் தோன்றியிடச் சோதிதோன்று மாபோல்
ஆரியனாம் ஆசான் வந்தருளால் தோன்ற”
-----சிவஞான சித்தியார் –
சாதனவியல்

“ஆரியர் வழுத்திய வருணிலையனாதி காரியம்
விளக்குமோர் காரண விளக்கே”
-----அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடல்-1510

இப்படி அனைத்து இடங்களிலும் ஆரியன்,ஆரியம் என்ற வார்த்தை காணலாம்.

சமஸ்கிருதம் பற்றி ஆன்றோர்கள் கருத்து கீழே வருகிறது

பாரதிய கலாச்சாரப் பண்பாட்டிற்கு இருப்பிடமாக உள்ள சம்ஸ்க்ருத மொழியை இந்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் கற்பது அவசியம் என்பதை நான் உணர்கிறேன்._
– காமராஜர்.

வடமொழி தென்மொழியெனவே வந்த இருவிழி
------தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய சுந்தரம் பிள்ளை

_வடமொழியும் நமது நாட்டுமொழி, தென்மொழியும் நமது மொழி என்பது என் கருத்து_ --- திரு.வி.க.

_யாம் அறிந்த மொழிகளிலேயே தமிழ் மொழி போல் ஒன்றும் இல்லை என்கிறார் பாரதியார்.

_ (பாரதியார் பலமொழி கற்றவர் என நமக்கு தெரியும்)

இப்படி சமஸ்கிருதமும் தமிழும் இருந்த பூமியில், சமஸ்கிருதம் அழிந்ததற்க்கு காரணம் வெள்ளையர்கள்.ஏனெனில் ஆங்கிலம் உருவானது சமஸ்கிருதத்தில் இருந்து தான்.

அதனால் அதன் மூலமொழியான சமஸ்கிருதம் அழிய தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்க்கும் எது சிறந்தது என சண்டை மூட்டபட்ட்து. அண்ணனை வைத்து அவன் தம்பியை கொன்றது போல் தமிழை வைத்து அதன் இருப்பிடத்தை அழித்தனர்.

அதனால் அந்த மொழி அழிவுப்பாதையில் உள்ள மொழியாகும்.(இது பெரிய பதிவு சுருக்க பட்டுள்ளது)

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” –திருமூலர்

இன்னும் ஆழமாக தொடரும்....

         - shiva shangar

2 comments:

  1. பதிவுக்கு நன்றி..
    அன்புடையீர்!,
    இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
    #தமிங்கிலம்தவிர்
    #தமிழெழுதிநிமிர்
    #வாழ்க #தமிழ்
    இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
    ÷÷ வநவ

    ReplyDelete
  2. சமஸ்கிருதம் பற்றி கீழே உள்ள கருத்துக்களை கேள்விப்பட்டிருக்கிறேன் இதைப்பற்றி கொஞ்சம் விளக்கம் கொடுக்க முடியுமா
    தமிழ் இயல்பாய் இயற்கையாய் உருவாகியது சமஸ்கிருதம் செயற்கையாய் கட்டமைக்கப்பட்டது
    சமஸ்கிருதத்தை உருவாக்கியவர்கள் தமிழர்களே.
    சமஸ்கிருதம் Programming language பயன்பாட்டிற்கு பெரிதும் உதவும் என்று கூறப்படுகிறது ஏன் அப்படி.

    ஸ ஷ ஹ போன்ற அட்சரங்கள் ஏன் தமிழில் இல்லாமல் போனது.

    ReplyDelete