Wednesday 22 August 2018

மரணதத்துவம்

 மூச்சு இழுக்கும் போது
பிறக்கின்றோம்
நாம் வெளியே விடும் போது
இறக்கின்றோம்
உடல் மூச்சை இழுக்க மறந்தால்
அதுவே நிரந்தரம் மரணம்
ஆனால் நடைமுறை வாழ்வில்
"நான் மூச்சு விடுகிறேன்" என்ற கூறுகிறோம்
நாம் மூச்சை இழுப்பது இல்லை
உடலுக்குள் இருக்கும் இறை ஆற்றல் உடலை நடத்திக் கொண்டு இருக்கிறது
நான் மூச்சை இழுத்து விடுகிறேன் என்றும்
நான் உண்ட உணவை ஜீரணம் செய்து கொண்டு இருக்கிறேன் என்று கூறுவது தான் மாயை
 பிறப்பும் இறப்பும்
நமக்குள் ஒவ்வொரு
நொடியிலும் நிகழ்கிறது
 நோயின் கொடுமையிலும்
காதலின் தோல்வியிலும்
தேர்வின் பயத்தாலும்
உணர்ச்சி வெளிப்படும் போது
உயிர்த் துகள்கள் சிதைவடைகிறது
அதுவும் மரணமே தான்
 இதில் என்ன கொடுமை என்றால்...???
நல்லவனுக்கு ''சொர்க்கமாம் ''
கெட்டவனுக்கு ''நரகமாம் ''
 விதையில் ஆரம்பித்து
மீண்டும் ஒரு கனிக்குள்
முடிவதுதானே
வாழ்க்கை தத்துவம்
 மாண்டவர்களுக்கு மரணம்
ஒன்றுமில்லை
நெருங்கி இருப்பவர்களுக்கே
மரணம் வலியாம்
 வாழ்வது ஒரு முறைதான்
வாழ்நாள் முழுதும்
வாழ்வோம்
தலை முறை
போற்றும் படியாக ......!!!
 பூமியைவிட மிகபெரிய நரகம் வேறெங்கும் இருக்க வாய்ப்பில்லை
 மரணத்தைவிட பெரிய சொர்க்கம் வேறெதுவும் இல்லை
 மரணத்தை "ஆனந்தத்தோடு "கடந்து செல்லாம்
 "மரண அனுபவத்தை தவற விட்டு விட வேண்டாம்
பின் மீண்டும் மீண்டும் பிறக்க நேரிடும்
 மரணம் என்பது என்றோ எப்போதோ நிகழ்வதில்லை
 ஒவ்வொரு உள் மூச்சும் பிறப்பு
 ஒவ்வொரு வெளி மூச்சும் இறப்பு
 தலை முடி உதிர்வது மரணம்.....
 விரல் நகம் வெட்டப்படுவது மரணம்
 பல் விழுவது மரணம்
 கண்பார்வைகுறைவு மரணம்
 இப்படி ஒவ்வொரு கணமும் மரணம் நமக்குள்நடந்துகொண்டுதான் இருக்கிறது
இவைகள் அனைத்தும் மரணத்தால் நமக்கு அனுப்பும் ஞாபகக் கடிதம்
 ஆனால் இதுதான் மரணம் என்று தெரியாதால்
தெரியாத ஒன்றை மரணம் என்று சிந்தித்து
மரணம் என்ற சொல்லைக் கேட்டாலே அபசகுனம்,
அதைப்பற்றி பேசுவதோ நினைப்பதோ தவறு என்று கற்பனை வலையில் காலம் கடத்திக்கொண்டு இருக்கிறோம்
 உடலெடுத்து பூமியில் விழும்வரை தான் பிறப்பிற்கு மகத்துவதும்
 இந்த உடல் மண்ணில் விழுந்த அந்த கணம்முதல்
இறப்பை நோக்கிய பயணத்தில் தான் சென்று கொண்டிருக்கிறோம்
 மரணம் என்று மகான்கள் குறிப்பிடுவது
"நான்" என்ற உணர்ச்சியை கடந்து நிற்கும்போது தான்
நான் மரணம் அடைவதில்லை என்ற தத்துவம் புரியும்
 இதை உணர்ந்து தெளிவு பெறாதவரை மரண பயம் ஆட்கொண்டு தான் இருக்கும்
 இதைத்தான் மகான்கள்
"மரணத்திற்கும் முன் "நீ" மரணித்து விடு" என்றும்....
 இஸ்லாமில்....
"உனக்குதொழுகை நடத்துவதற்கு முன் நீ தொழுது எழு" என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்
 மரண பயம் தீர "நான் யார்" என்ற தெளிவு அவசியம்

No comments:

Post a Comment