Monday 30 May 2022

யார் கடவுள் ஆன்மீக அறிவியல் தேடல்

யார் கடவுள்? Episode -1
 
இந்த தொடரின் நோக்கம் அறிவியலையும், ஆன்மீகத்தையும் இணைத்து "கடவுள் யார் "என ஆராய்வதாகும். 

புராணக்கதைகளையும், மத நம்பிக்கைகளையும் வெறும் கட்டுக்கதை என்று ஒதிக்கிவிட முடியாது. அவைகளை பொய் என்று கூறும் முன் அவைகள் உண்மையாக இருக்க சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என்று சிந்திக்காமல் விட்டால். அதில் உண்மையிருக்கும் பச்சத்தில் இழப்பு நமக்குதான்.ஒவ்வொரு பண்டைய கதைகளிலும் நமக்கோ, நமக்கு அடுத்த தலைமுறைகளுக்கோ தெரியப்படுத்த வேண்டிய அறிவியல் மறைந்திருக்கிறது. நமக்கு புரியாவில்லை என்ற ஒரே காரணத்தால் அது பொய்யாகிவிடாது

டைனோசர்களுக்கும், அந்த காலகட்டத்தில் வாழ்ந்த Draco இனத்திற்கும் ஏற்பட்ட நிலை நம் மனித இனத்திற்கும் ஏற்படுமா? என்று கேட்டால். “ஏற்படாது” என்று உறுதியாக கூறமுடியாது. ஏனெனில் இந்த பூமியில் இதுவரை பல முறை தரம் பிரித்தல் பணி நடத்தப்பட்டுள்ளது. எளிமையாக கூறவேண்டுமென்றால் ‘அழித்தல்’. டைனோசர் காலத்தில் நடந்ததை போல மனித இனம் தோன்றிய பிறகும் அழித்தல் வேலை தொடர்ந்துள்ளது.யாரை அழித்தார்கள்? மனிதர்களைத்தான். ஆனால் நம்மை போன்ற மனிதர்களை அல்ல. புரியவில்லையா? மனிதன் உருவத்தில் பல வகைகளாக வாழ்ந்துள்ளான்.

தற்பொழுது நாம் கணித்துவைத்திருக்கும் மனித இனத்தின் வரலாறு சரிதானா? என்று கேட்டால் ‘இல்லை’ என்றுதான் கூறவேண்டும். குரங்கு – நீளமான கைகளை கொண்ட மனித குரங்கு – நிமிர்ந்து இரண்டு கால்களால் நடக்கும் மனித குரங்கு – உடல் முழுவது ரோமங்களுடன் காட்டுவாசி – நவீன மனிதன்.இவைதான் நமக்கு பாடப்புத்தகத்தில் சொல்லிக்கொடுத்த மனிதனின் தோற்றம். இதுநாள் வரை பலரும் அப்படித்தான் நினைத்துகொண்டிருக்கிறார்கள். (நானும் அப்படித்தான் நினைத்தேன்) ஆனால் உண்மை அதுவல்ல, மனிதன் என்ற இனம் பல வகைகளாக வாழ்ந்துள்ளனம். குறிப்பாக உயரத்தை கூறலாம்.

BONESouth-cast Turkey, Euphrates Valleyயில் 1950களில் கட்டிடப்பணிகள் தீவிரமாக நடந்துகொண்டிருந்தன. அப்போது நடைபெற்ற தோண்டும்பணியில் பண்டையகால எலும்பு ஒன்று கிடைத்தது. அதன் நீளம் 120 செ.மீ,. அதனை ஆராய்ந்த போதுதான் பேரதிர்ச்சி. அது மனிதனின் தொடைப்பகுதி எழும்பு. ஒரு மனிதனுக்கு தொடைப்பகுதி எழும்பே 120 செ.மீ என்றால் அந்த மனிதனின் மொத்த உயரம் என்னவாக இருக்கும்? சற்று சிந்தித்துபாருங்கள். Mt.Blanco Fossil Museum தின் இயக்குநரான Joe Taylor அந்த எழும்பை கைப்பற்றி தனது அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைத்தார். அவர் கணக்கீட்டின் படி அந்த எலும்புக்கு சொந்தமான மனிதன் சுமார் 14 – 16 அடி உயரம் இருந்திருக்க வேண்டும் என்று கூறினார்.

16 அடி உயரத்தில் மனிதன் கற்பனை செய்துபாருங்கள், சராசரி உயரம் கொண்ட மூன்று பேர் ஒருவர் மீது ஒருவர் ஏறி நின்றால் மூன்றாவது நபர் அந்த மனிதனின் முகத்தை நேருக்கு நேர் பார்த்து பேசமுடியும்.இதை விட சுவாரஸ்யமானது அடுத்த சம்பவம்,
தென்னாப்பிரிக்கா, Mapluzi அருகே பாறையில் பதிந்திருந்த ஒரு கால்தடத்தை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். அது மனிதனின் கால்தடம்தான் என்று உறுதியாக கூறமுடியாமல் திக்குமுக்காடினர்கள். காரணம் அதன் அளவு, நீளம் மட்டும் 4 அடி என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அந்தக் கால்தடம் பதித்த மனிதனின் உயரம் கிட்டத்தட்ட 25 அடியாக இருக்கவேண்டும். 25 அடியில் மனிதனா? என்று பெருமூச்சுவிடாதீர்கள். ஆய்வாளர்களின் கணக்குப்படி 36 அடி உயர மனிதர்கள்வரை பூமியில் வாழ்ந்திருக்கிறார்கள்.

இவைகளை இல்லாமல் புராண கதைகளிலும் இப்படியான மனிதர்களை பற்றிய குறிப்புகள் உள்ளன.கிறிஸ்துவர்களின் பழைய ஏற்பாடு மற்றும் Hebrew Bible-லின் முதல் புத்தகமான Book of Genesis-ல் (chapters 6-4) ‘அந்தக் காலகட்டத்தில் Nephilm என்று கூறப்படும் ராட்சசர்கள் வாழ்ந்தார்கள், அவர்களை மனிதர்களின் பெண்ணிற்கும் கடவுளின் மகனுக்கு பிறந்த குழந்தைகள் அழித்தார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது

இந்து மதப் புராணக்கதைகள் ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றிலும் ‘ராட்சசர்கள்’ என்று உருவத்தில் மிகப்பெரிய மனிதர்களைப் பற்றியக் குறிப்புகள் காணப்படுகிறது. அவர்களை ‘கடவுள்’ புதிய அவதாரம் எடுத்து அழித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏதோ ஒரு வகையில் மனிதர்களை அல்லாத வேறுவொரு மேம்பட்ட இனம் அவர்களை அழித்திருக்க வேண்டும் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. அவர்கள் யார்? ஏன் அப்படி செய்யவேண்டும்?

தரம்பிரித்தலின் படி பலதரப்பட்ட மனித வகைகளில் இன்றைக்கு இருக்கும் மனித இனம்தான் இறுதி தேர்வு (Final Product) என்றால் மற்ற இனங்களை அழிப்பதுதானே முறை. அவைகள் இறுதி தேர்வான மனித இனத்தைவிட வலிமையான இனமாக இருக்கும் பச்சத்தில் அவைகளை அழிக்க மனிதனை அல்லாத அறிவில் மேம்பட்ட, வலிமையானவர்களின் உதவி அவசியமாகிறது. அவர்கள் தான் ” கடவுள் (எ) வேற்றுக்கிரகவாசிகள் ” .

நமக்கு தேவையான ஒரு தகவலை பண்டைய கதையிலிருந்து எடுத்தேன். அது எந்த அளவுக்கு பொருந்துகிறது என்று படித்துவிட்டு கூறுங்கள். நோவா ஆர்க்(Noah’s Ark) கிறிஸ்துவர்களின் பழைய ஏற்பாடு மற்றும் Hebrew Bible-லின் முதல் புத்தகமான Book of Genesis-ல் (chapters 6-9). “நான் உருவாக்கிய மனித இனத்தில் தீயவர்கள் அதிகமாகிவிட்டதால் நீரைக்கொண்டு உலகை அழிக்கப்போகிறேன்” என்று கடவுள் கூறியிருக்கிறார். இந்த அழிவிலிருந்து தப்பிக்க மரத்தால் ஆன படகு ஒன்றை தயாரித்து, அதில் நோவாவின் குடும்பம் மற்றும் உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளில் இருந்தும் ஒவ்வொரு ஜோடியை அந்தப் படகில் ஏற்றிக் காப்பாற்றவேண்டும் என்று நோவாவிடம் கடவுள் உத்தரவிட்டிருக்கிறார். அவ்வாறே நோவாவும் மரத்தாலான படகு ஒன்றை செய்து அதில் அனைத்து ஜீவராசிகளில் இருந்தும் ஒவ்வொரு ஜோடியை அந்தப் படகில் ஏற்றி காப்பாற்றினார் என்கிறது அந்தப் புத்தகத்தில் இருக்கும் கதை.

Noah's Ark,இங்கே அந்தப் படகின் அமைப்பு குறிப்பிடப்பட்டுள்ளது 450 அடி நீளம், 75 அடி அகலம், 45 அடி உயரம். இந்த அளவிற்குள் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளில்(பறப்பன, ஊர்வன, கால்நடைகள், வனவிலங்குகள்) இருந்தும் ஒவ்வொரு ஜோடியை இதனுள் ஏற்றிவிட முடியுமா? என்பது முதல் கேள்வி. அப்படி ஏற்றிவிட்டதாகவே வைத்துக்கொள்வோம் சிங்கம், புலி, சிறுத்தை இருக்கும் அதே படகில் தான் மான், வரிக்குதிரை, மாடு, ஆடு இவைகளும் இருக்கும் ஒன்றுக்கு ஒன்று உணவாகிவிடாதா? என்பது இரண்டாவது கேள்வி. ஒருவேளை தனித் தனியாகவே பிரித்து அடைக்கப்பட்டதாக வைத்துக்கொள்வோம், அந்தக் கதையின் படி 40 பகல் 40 இரவுகள் தொடர்ச்சியாக மழை பெய்ததாகவும், அதனால் பூமி முழுவதும் நீரால் மூழ்கிவிட்டதாகவும் அதன் பிறகு 220 நாட்களுக்கு மேல் பூமியில் இருந்த நீர் வடியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. சுமார் 8 மாதங்களுக்கு மேல் நோவா குடும்பத்தாரும் அந்த விலங்குகளும் அந்தப் படகை விட்டு இறங்கவேயில்லை, அப்படியானால் அனைவருக்கும் உணவு வேண்டுமே. ஒரு சின்ன உதாரணம், உள்ளே இருக்கும் இரண்டு யானைகளுக்கு மட்டும் 8 மாதத்திற்கான உணவாக 36,000 கிலோ செடிகொடிகளை சேர்த்துவைக்கவேண்டும். இப்படியான கேள்விகள் மற்றும் சிக்கல்களை ஆராய்ந்துபார்த்து இறுதியில் இதில் எழுதப்பட்டுள்ள அனைத்தும் பொய்யான கட்டுக்கதை என்ற முடிவுக்கு வந்துவிடுவோம்.

இந்த இடத்தில் உங்கள் மனதில் ஒரு கேள்வியை எழுப்புங்கள். “இது ஏன் உண்மையாக இருக்ககூடாது?” “என்னடா குழப்புகிறார்களே” என்று யோசிக்காதீர்கள். இன்று நாம் தேடிக்கொண்டிருக்கிருக்கும் தொழில்நுட்பத்தில் ஒன்று மட்டும் அப்போது பயன்படுத்தப்பட்டிருந்தால் இந்தக் கதை உண்மை கதையாகிவிடும்.

கெளரவர்களின் அரசன் சந்தனுக்கும் கங்கை என்ற தேவலோக(வேறு உலகம்) பெண்ணுக்கும் திருமணம் நடக்கிறது. அவர்களுக்கு குழந்தையும் பிறக்கிறது, முதலில் பிறக்கும் 7 குழந்தைகளை அந்த பெண் கொலை செய்துவிடுகிறாள் எட்டாவதாக பிறக்கும் குழந்தையை தானே வளர்த்து கணவனிடம் ஒப்படைப்பதாக கூறி தன்னுடன் எடுத்துக்கொண்டு செல்கிறாள்.

அனைத்துக் கலைகளையும் கற்பித்து, வளர்த்து, கணவனிடம் ஒப்படைக்கிறாள். என்று கதை வரும். அந்தப் பிள்ளைதான் சத்தியவரதன் (எ) பீஷ்மர். மகாபாரத யுத்தத்தில் இவருக்கு பெரும்பங்கு உண்டு. பீஷ்மரின் வீரம், கலைகள் என்று அனைத்தையும் விட ஆச்சர்யமான ஒன்று அவரின் வயது. மகாபாரதப் போரில் அவர் உயிர்விடும் போது கிட்டத்தட்ட 180 வயதுக்கும் மேல் இருக்கவேண்டும். அத்தனை வயதிலும் இவரின் போர்த்திறன் கண்ணனே பிரமிக்கு அளவுக்கு இருந்ததாம். இறுதியில் உடல்முழுவதும் அம்புகள் தைத்து விழுந்தாலும் அவர் உடலிலிருந்து உயிர்ப்பிரிய 43 நாட்கள் ஆனதாம். இதில் கவனிக்க வேண்டிய விசயம் பீஷ்மருக்கு முன் பிறந்த 7 குழந்தைகளும் கொலை செய்யப்பட்டுள்ளன, ஒரு பெண் தான் பெற்ற குழந்தையைதானே கொலைசெய்வாளா? அப்படி செய்வதானால் ஏதாவது அலுத்தமான காரணம் இருக்கவேண்டும். அது என்ன காரணமாக இருக்கும். ஒருவேளை அந்த குழந்தைகள் குறைபாடுடன் பிறந்திருக்கலாம், அதனால்தான் அவைகளை அழிக்கப்பட்டிருக்கலாம்.

மேலே குறிப்பிடப்பட்ட இருவருவரின் அன்னையும் இந்த உலகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. இருவருமே அசாத்திய திறமைகளும் சக்திகளும் கொண்டவர்கள். சகமனிதர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள். இவைகளை வெறும் கட்டுக்கதையாக எப்படி எடுத்துக்கொள்வது. கடலால் பிரிக்கப்பட்டு உலகில் வெவ்வேறு பகுதியில் வாழும் வெவ்வேறு மொழிபேசும், வெவ்வேறு இனமக்கள் எப்படி ஒரே போன்று வானிலிருந்து வந்த கடவுளுக்கும் மனித இனத்திற்கும் பிள்ளைகள் பிறந்தன, அவர்களால் பல மாற்றங்கள் நடந்தன என்று இத்தனைக் கச்சிதமாக கூறமுடிகிறது. சரி வேற்றுக்கிரகவாசிகள்தான் அவர்கள் சந்ததிகளை இப்படியான வழிகளில் பூமியில் உருவாக்கினார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் இப்படி செய்ய காரணம் என்னவாக இருக்கும்? ஒருவேளை இந்த சந்ததிகளைக்கொண்டு நிறைய தொழில்நுட்பங்களை மனித இனத்திற்கு கற்றுக்கொடுக்க நினைத்திருக்கலாம்.

மனித இனத்திற்கு ஆபத்தாக இருக்கும் மற்ற இனங்களை அழிக்க நினைத்திருக்கலாம். அவர்களுக்குத் தேவையான ஒரு இனமாக மனித இனத்தை மாற்ற முயன்றிருக்கலாம். ஏனென்றால் நம் கண்முன்னே விரிந்துகிடக்கும் ஆதாரங்களை வரிசையாக அடுக்கி

பார்க்கும் போது நாம் மேலே கூறியது உறுதிசெய்யப்படுகிறது.

உதாரணமாக வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு இனமக்களால் வணங்கப்பட்ட கடவுள்கள் தோற்றத்தில் ஒரே போன்று இருப்பது எப்படி சாத்தியமாகிறது.

இந்துமதத்தின் கடவுள் ராமர் மற்றும் கிருஸ்ணர் பல பல சக்திகள் கொண்டு விளங்கினானும் மிக முக்கியமான ஒன்று அவர்களின் நிறம். மனிதர்களைப் போன்ற நிறத்தில் இல்லாமல் கருநீல நிறத்தில் இருந்ததாக குறிப்புகள் காணப்படுகின்றன. இந்து மதத்தின் இன்னொரு கடவுளான சிவபெருமானும் மனித நிறத்திலிருந்து வேறுபட்டு சாம்பல் நிறத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

அதே போல் ஜப்பானின் பண்டையக் கதைகளில் கடவுளின் மகனாக கருதப்படுபவர் கருநீலநிறத்தில் இருந்திருக்கிறார். எகிப்தின் வளர்ச்சிகளுக்கு மூலகாரணமானவர் ‘Osiris’. இவரை எகிப்தியர்கள் கடவுளின் மகனாக வழிபட்டார்கள். இவர் எகிப்தின் தான்தோன்றிக் கடவுளாக நம்பப்படும் ‘Atum’யின் சந்ததிகளில் ஒருவர். இவரும் மனிதர்கள் நிறத்திலிருந்து வேறுபட்டு நீலநிறமாக இருந்திருக்கிறார். அது மட்டுமல்ல இவரின் உருவ அமைப்பும் கிருஸ்துவர்கள் கடவுளின் மகனாக வணங்கும் ஏசுவின் உருவ அமைப்பும் ஒன்றுபோலவே இருக்கிறது.

ஒருவேளை இவர்களில் ஒருவர் ஒரு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டு பூமிக்கு அனுப்பி அந்த வேலை முடிந்ததும். அதே போன்று அடுத்தடுத்து மற்றவர்களையும் உருவாக்கி அடுத்தடுத்த நோக்கத்திற்காக அனுப்பியிருக்கலாம் அல்லவா? இந்த இடத்தில் ஏசுவின் இறப்பைப் பற்றி கூறியாக வேண்டும். ஏசு தான்உயிரிழந்த மூன்றாம் நாள் மீண்டும் உயிர்தரித்து மேல் உலகத்திற்குச் (வேறு உலகத்திற்கு) செல்வதாக இறக்கும் முன்பே கூறியிருக்கிறார். அதே போல நடந்ததாகவும் கூறப்படுகிறது. ஏசுவிற்கு இப்படியான கட்டளையிட்டு, அவர் இறந்த பின் உயிர்பித்து தன் உலகிற்கு அழைத்துக்கொண்ட அந்த கடவுள் (அறிவில் மேம்பட்ட உயிரினம்) யார்? அவர்களின் உலகம் (கிரகம்) எது?

மகாபாரதத்திலும் இறந்தபின் உயிர்பிழைக்க வைக்க மந்திரம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உயிர் பிரிந்த உடல்களுக்குள் மீண்டும் உயிரைப் புகுத்துவது சம்பந்தமாக நிறைய ஆய்வுகள் உலகில் நீண்ட காலங்களாக நடந்துவருகிறது, இன்று இல்லாவிட்டாலும் ஒரு நாள் மனிதர்களால் அது சாத்தியமாகும். அப்படியானால் நடந்தது மாயமோ மந்திரமோ அல்ல, நமக்குத் தெரியாத தொழில்நுட்பம் அவ்வளவுதான்.

எகிப்த்தில் இருக்கும் பிரமிட் இந்த தொழிநுட்பமாகக்கூட இருக்கலாம். (பூமியில் இருக்கும் உயிரை வேறு உலகிற்கு எடுத்து செல்லும் தொழில்நுட்பம்.) உலகின் பழமையான மதங்களில் ஒன்றான யூத மதத்தைத் தோற்றுவித்த மோசஸ்(Moses) அவர்களுக்கு நேரடியாக கடவுளிடமிருந்து கட்டளை கிடைத்ததாம். அதுவும் ஒன்று இரண்டல்ல பத்துக் கட்டளைகள். அவைகள் அனைத்தும் தங்கத் தகட்டில் எழுதப்பட்டிருந்தனவாம்.

ஒரு பெரிய மலையின் உச்சியிலிருந்து அந்தக் கட்டளைகளை மோசஸ் பெற்றாராம். அந்த சமயம் புயலைப்போன்று பலமான காற்றுவீசியதாம், மேகங்களுக்கு நடுவே பிரகாசமான ஒளிகளுக்குள்ளிருந்து கடவுள் அந்த கட்டளைகளை வழங்கினாராம். அது ஒரு விண்கலமாகவோ, பறக்கும் தட்டாகவோ கூட இருக்கலாம்.

MOSAS

அந்த கட்டளைகள் இவைதான்

1. உங்களுக்கு என்னைத் தவிர வேறு கடவுள் கிடையாது.
2. நீங்களாகவே சிலை செய்து வழிபடக் கூடாது.
3. உங்கள் கடவுளின் பெயரை தவறாகப் பயன்படுத்தகூடாது.
4. இறுதி நாள் ஒன்று இருப்பதை நினைவில் கொண்டு புனிதமாக வாழவேண்டும்.
5. உங்கள் தாய் தந்தையரை மதிக்க வேண்டும்.
6. கொலை செய்யாதீர்கள்.
7. விபச்சாரம் செய்யாதீர்கள்.
8. களவு செய்யாதீர்கள்.
9. அடுத்தவர்களுக்கு விரோதமாக பொய் சொல்லாதீர்கள்.
10. பிறர் மனைவியை அடைய விரும்பாதீர்கள்.

ஒரு மனிதன் தான் வாழ்நாளில் இதில் எதையாவது ஒன்றை சரியாக பின்பற்றுகிறானா? என்றால் இல்லை என்றுதான் பதில் வரும். அதை விடுவோம், அது ஏன் கடவுள் என்றவுடன் அனைவரும் வானத்தை நோக்கி பார்க்க வேண்டும். கடவுள் தூணிலும் துரும்பிலும் இருப்பார் என்றால் தரையை பார்க்கலாமே அல்லது வலதுபக்கம் இடதுபக்கம் பார்க்கலாமே. அதைவிடுத்து அனைவருமே மேலே பார்க்க காரணம் என்ன? அனைத்து மதங்களும் புராணக்கதைகளும் கடவுள் வானத்திலிருந்துதான் வந்தார் என்கிறது. கடவுள் வானத்திலிருந்து வந்தாரா? அல்லது வானத்திலிருந்து வந்த அனைவரையும் கடவுள் ஆக்கிவிட்டோமா? மோசஸிடம் மட்டும் அல்ல இன்னும் சிலரிடம் கடவுள் என்னும் வேற்றுக்கிரகவாசிகள் கட்டளைகளை வழங்கியுள்ளன.

சில அடிப்படை விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்... தொடர்ந்து போவதற்கு முன்

நீங்கள் யார்? என்று கேட்டால், உங்கள் பெயரைக் கூறுவீர்கள், அடுத்து இன்னாரது மகன், இந்த முகவரியில் வசிக்கிறேன் என்று கூறுவீர்கள், அதற்கு மேலும் தெரியப்படுத்த நினைத்தால் இந்த மொழி பேசுபவன், இந்த இனத்தைச் சேர்ந்தவன், இந்தக் கடவுளை வழிபடக்கூடிய மதத்தைச் சேர்ந்தவன், இந்த நாட்டைச் சேர்ந்தவன் என்று உங்களை அடையாளப்படுத்திக்கொள்வீர்கள். இதுதான் முறை இதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் இந்த தொடரைப் படித்து புரிந்துகொள்ள நாம் அடுத்த நிலைக்குச் செல்லவேண்டும். பூமி என்ற கிரகத்தில் வாழும் உயிரினங்களில் ஒன்றான மனித இனம் என்ற நிலைக்குச் செல்லவேண்டும். நம் சிந்தனை வட்டத்தைச் சற்றுப் பெரிதாக்கவேண்டும். நம் எல்லைகளை எதனைக்கொண்டு வகுக்கிறோம்? நம் தடம் பதித்த இடங்கள்? நம் கட்டுப்பாட்டிற்குள் உள்ள நிலப்பரப்பு? “இந்த காம்பவுன்டுக்கு உள்ளே என் இடம்”, “இந்த எல்லைவரை என் நாடு”, என்று உரிமை கொண்டாடுகிறோம். ஆனால் உண்மை வேறு, உன் உடல் உன் உயிருக்கு சொந்தம் என நினைப்பது எவ்வளவு முட்டாள்தனமோ அவ்வளவு முட்டாள்தனம் இந்த பூமி மனித இனத்திற்குச் சொந்தம் என்று நினைப்பது. இதுவே இப்படியிருக்க, இந்த மொத்த பிரபஞ்சத்திலும் பூமியில் மட்டும்தான் உயிரினங்கள் இருக்கின்றன, அதிலும் நம் மனித இனம் மட்டும்தான் அறிவில் மேம்பட்ட உயிரினம் என்று நினைத்துக்கொண்டிருப்பது எவ்வளவு பெரிய கேலிக்கூத்து.
நம் உலகம் எவ்வளவு பெரியது என்று உங்களுக்கே தெரியும். இந்த பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்று அறிவீர்களா?
நம் பூமி சூரியக்குடும்பத்தில் ஒரு சிறு அங்கம். சூரியக்குடும்பம் என்பது நம் பூமியையும் சேர்த்து 8 கோள்களையும் அவைகளின் துணைக் கோள்களையும் உள்ளடக்கியது. சூரியக் குடும்பமானது அருகில் உள்ள நட்சத்திர மண்டலத்தில் ஒரு சிறு அங்கம். இதில் நம் சூரியக் குடும்பத்தைப் போல லட்சக்கணக்கான நட்சத்திரக் குடும்பங்கள் இருக்கின்றன. இந்த நட்சத்திர மண்டலமானது பால்வெளித்திரளில் ஒரு சிறு அங்கம். பால்வெளித்திரளில் மட்டும் கிட்டத்தட்ட 40 ஆயிரம் கோடி நட்சத்திரங்கள் இருக்கின்றன (நம் சூரியனும் ஒரு நட்சத்திரம்தான்). பால்வெளித்திரளானது இதுவரை கண்டறியப்பட்ட பிரபஞ்சத்தில் மிகமிகச் சிறிய அங்கம். பிரபஞ்சத்தில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் கோடி கேலக்ஸிகள் (நம் பால்வெளித்திரளை போல்) இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இங்கே ஒரு முக்கியமான தகவலை கூறியே ஆகவேண்டும் மேலே ‘இதுவரை கண்டறியப்பட்ட பிரபஞ்சம்’ என்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா அது அடிக்கோடிடவேண்டிய வரி. ஏனெனில் இந்த பிரபஞ்சத்தின் எல்லைகள் இன்னும் கண்டறியப்படவில்லை. இதில் இன்னும் ஒரு கூடுதல் தகவல் இந்த பிரபஞ்சத்தைப் போல இன்னும் சில பிரபஞ்சங்கள் இருக்கலாம் என பல விஞ்ஞானிகள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். 
நாம் அவ்வளவு தொலைவு செல்ல வேண்டாம். உங்களிடம் ஒரு கேள்வி 
1. நம் மெரினாக் கடற்கரையில் எத்தனை மணல் துகள்கள் இருக்கின்றன?
2. பிரபஞ்சத்தில் எத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றன?
‘ஒரு கேள்வி என்று கூறிவிட்டு இரண்டு கேள்விகளைக் கேட்டுவிட்டாரே’ என நினைக்காதீர்கள். உங்களுக்கான ஒரு கேள்வி இனிதான் கேட்கப்போகிறேன்,
மேலே உள்ள இரண்டு கேள்விகளில் எளிமையான கேள்வி எது?
உங்கள் பதில் என்னவோ தெரியாது, ஆனால் என் பதில் முதல் கேள்வியே எளிமையானது. காரணம் இரண்டாம் கேள்விக்கான பதிலை கண்டறிவது அந்தளவு கடினமானது.
அதற்காக விட்டுவிடமுடியுமா? தோராயமாக கணக்கிட்டுதான் பார்ப்போமே. நம் பால்வெளித்திரளில் கிட்டத்தட்ட 40 ஆயிரம் கோடி நட்சத்திரங்கள் இருப்பதாக கூறியிருந்தேன். 40 ஆயிரம் கோடி வேண்டாம், ஒவ்வொரு கேலக்ஸியிலும் சுமார் 10 ஆயிரம் கோடி நட்சத்திரங்களைக் கொண்டதாக எடுத்துக்கொள்வோம். அப்படியானால் பிரபஞ்சாத்தில் உள்ள 20 ஆயிரம் கோடி கேலக்ஸிகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட 2*1022 (20,00,00,00,00,00,00,00,00,000) நட்சத்திரங்கள் இருக்கவேண்டும். இது நம்மால் கணிக்கப்பட்ட மிகமிகக் குறைந்த அளவிளான மதிப்பீடு. இங்கே அடுத்து ஒரு கேள்வி உங்களுக்காக ‘அப்படியானால் பிரபஞ்சத்தில் இருக்கும் மொத்தக் கோள்களின் எண்ணிக்கை என்னவாக இருக்கும்?’ 
‘ஸ்ஸூப்பா.. இப்பவே கண்ணகட்டுதே’ என்றெல்லாம் நினைக்காதீர்கள். நம்மால் அதை தோராயமாகக்கூட கணிக்கமுடியாது. 
இந்த இடத்தில் ஒரு முக்கியமான கேள்வி, ஆங்கிலத்தில் இதனை ‘BILLION DOLLER QUESTION’ என்பார்கள்.
“நம் பூமியில் வாழ்வதைப் போல வேறுகிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவா?”
இந்த கேள்விக்கு உங்கள் பதிலும், கருத்தும் என்ன என்பதை ஒரு குறிப்பேட்டில் குறித்துவைத்துகொள்ளுங்கள். இந்தத் தொடரை படித்து முடிக்கும் போது உங்கள் கருத்தும் என்கருத்தோடு ஒத்துப்போகும்.
இப்பொழுது என் கருத்தை கூறிவிடுகிறேன், ‘இந்த பிரபஞ்சத்தில் நிறைய கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றன, அதிலும் சில கிரகங்களில் நம்மைவிட அறிவில் மேம்பட்ட உயிரினங்கள் வாழ்கின்றன. அவர்களுக்கும் பூமியில் மனித இனத்தின் தோற்றத்திற்கும் நிறைய சம்பந்தங்கள் உண்டு. அவர்கள் பூமியை கண்கானித்து வருகிறார்கள், இங்கு நிறைய ஆய்வுகளையும் செய்துவருகிறார்கள்’. இனி என் கருத்தின் வேர்களை நோக்கிய பயணம்.

புரியவில்லையா? காத்திருங்கள் தொடரும்...


யார் கடவுள்? Episode -2

பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சிலர் DNAவின் வடிவத்தை அறிந்து அதை நம்மிடம் தெரியப்படுத்த முயற்சி செய்துள்ளார்கள் என்பதுதான் ஆச்சர்யமான உண்மை.

இந்து மதத்தில் நாகதெய்வத்தை வழிபடும் முறை பல ஆயிரம் வருடங்களாக இருந்துவருகிறது. இதற்காக கருங்கல்லில் இருபாம்புகள் பின்னியிருப்பதை போன்ற உருவத்தை செதுக்கி வைத்து வணங்குவது வழக்கம், அதனைக் கூர்ந்து கவனித்தால் அதில் DNA வின் வடிவம் இருப்பதை காணமுடியும். உறுதியாக DNAவின் வடிவத்தைதான் வரைந்துள்ளார்கள் என்று கூறமுடியாது, ஆனால் அதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
உலகளவில் சுமார் 2.1 பில்லியன் மக்களால் கிறிஸ்தவ மதம் பின்பற்றப்படுகிறது. ஏசுவை சிலுவையில் அறைந்த பிறகு அவரின் கொள்கைகளை பின்பற்றியவர்கள் உருவாக்கியதுதான் இந்த கிறிஸ்துவ மதம். இதில் Roman Catholic, Protestant, Orthodox, Anglican என்று பல பிரிவுகள் உண்டு. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு இருந்த பைபிளின் பெயர் Hebrew Bible இதில்தான் மனித இனத்தின் தோற்றம் பற்றி குறிப்பிடபட்டுள்ளது. The Book of Genesisல் மனிதர்களைக் கடவுள்தான் முதலில் உருவாக்கினார் என்றும் அப்படி உருவாக்கப்பட்டவர்கள் தான் ஆதாம், ஏவாள் என்றும், கடவுள் தன்னைப்போலவே மனிதர்களை உருவாக்கியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆதாம் ஏவாள் கதையில் கடவுள் உண்ணவேண்டாம் என்று கூறிய ஆப்பிள் பழத்தை ஒரு பாம்பு வடிவத்திலான சாத்தான் சொல்லைக் கேட்டு உண்டதாக வரும். அதனை விளக்கும் படத்தில் ஆப்பிள் மரத்தைப் பாம்பு சுற்றிகொண்டிருப்பது போன்று வரையப்பட்டுள்ளது. இதுவும் DNA அமைப்புடன் ஒத்துபோகிறது. 
இதே கதை சற்று மாறுபட்ட கோணத்தில் சுமேரியர்களிடம் இருக்கிறது. பழமையான சுமேரிய நாகரிக காலத்தில் எழுதப்பட்ட களிப்பட்டைகள்(Clay Tablet) 19ஆம் நூற்றாண்டில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுக்கப்பட்டது.
ஏதோ ஒன்று இரண்டு என்று நினைத்துவிடாதீர்கள், கிட்டத்தட்ட 22 ஆயிரம் களிப்பட்டைகளை கைப்பற்றினார்கள். இதில் எழுதப்பட்டிருக்கும் மொழி Hebrew Bibleலில் இருக்கும் மொழியுடன் ஒத்துப்போகிறது. இதனை 1976ல் Zecharia Sitehin என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து “The Earth Chronicles Expeditions” என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டார். இதில் நாகரிக முதல் மனிதனை Anunnaki தான் 4,50,000 வருடங்களுக்கு முன்பு உருவாக்கினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Anunnaki என்பவர் கடவுளல்ல, மனிதர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக கடவுளால் உருவாக்கப்பட்டவர். (இந்து மதத்திலும் மனிதர்களை உருவாக்கும் வேலையை மட்டுமே செய்ய “பிரம்மா” இருக்கிறார் என்று நம்பப்படுகிறது). Hebrew Bibleலில் முதல் மனிதனின் பெயர் “ஆதாம்” என்று கூறப்பட்டுள்ளது. Anunnaki உருவாக்கிய முதல் மனிதனின் பெயர் “ஆதாமு”. இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. 
இதுவரை கண்டரியப்பட்ட நாகரிங்களில் மிகப்பழமையானது சுமேரியர்களின் நாகரிகம், ஒருவேளை சுமேரியர்களின் கதையைதான் Hebrew Bibleலில் மறுபதிவு செய்திருப்பார்களோ? 
இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று, ஆதாம் ஏவாள் அந்த ஆப்பிள் பழத்தை சாப்பிட்டால் இறந்துவிடுவார்கள் என்று கடவுள் கூறியதாகவும், ஆனால் அவர்கள் சாப்பிட்டால் இறக்கமாட்டார்கள் மாறாக அவர்களுக்கு அறிவு வளரும் என்று சாத்தன் கூறியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
ஆதாம் ஏவாள் அந்த பழத்தை சாப்பிட்டபோது கடவுள் சொன்னது போல எதுவும் நடக்கவில்லை, அதாவது அவர்கள் இறக்கவில்லை. மாறாக சாத்தான் சொன்னது போல அவர்களுக்கு அறிவாற்றால் வளந்திருக்கிறது. 
கடவுள்(?) ஏன் பொய் சொல்லவேண்டும்? சாத்தானுக்கு எப்படி அந்த உண்மை தெரியும்? என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. 
ஆதாம் ஏவாள் எடுத்துக்கொண்டது பழமா? அல்லது HAR1 மரபணுவா? 
அதை வேண்டாம் என தடுத்தது கடவுளா? அல்லது அறிவில்மேம்பட்ட வேற்றுக்கிரகவாசியா? 
அதை எடுத்துக்கொள்ள சொன்னது பாம்பு வடிவிளான சாத்தானா? அல்லது டைனோசர் கால மேம்பட்ட உயிரினமான Dracoவா? 
(சுமேரியர்கள் Draco உருவ ஒற்றுமை கொண்ட ஒரு பெண் கடவுளை வணங்கினார்கள் என்று முன்பே குறிப்பிட்டிருந்தேன்) (Dracoவை 'சர்பம்' என்றும் அழைக்கிறார்கள், சர்பம் சென்றால் பாம்பு மனிதன் என்று பொருள்)
இவை அனைத்து ஒரு நேர்கோட்டில் அமைவது தற்செயலாக நடந்த ஒன்றா? அல்லது உண்மையாகவே இவைகளுக்குள் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?
இதில் ‘HAR1 மரபணு’ என்ற சொல் வருவதை கவனித்திருப்பீர்கள், 
குரங்கிலிருந்து மனிதன் இயற்கையாக பரிணாம வளர்ச்சியடையவில்லை, அறிவில் மேம்பட்ட ஒரு உயிரினத்தின் உதவியோடுதான் அது சாத்தியமானது என்பதற்கு HAR1 ஐ ஒரு உதாரணமாக கூறலாம்.
2003ல் அமெரிக்க அரசு நடத்திய Human Genome Project மூலம் மனித DNA வில் கிட்டத்தட்ட 20,500 மரபணுக்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது. அதாவது DNAவை ஒரு வீடாக கற்பனை செய்துகொண்டால், அந்த வீடு 20,500 மரபணுக்கள் எனும் செங்கற்களால் கட்டப்பட்டது. இந்த மரபணுக்கள் தான் ஒரு உயிரினத்தில் அனைத்தையும் தீர்மானிப்பது. உதாரணமாக ஒரு மனிதனை எடுத்துக்கொள்ளுங்கள் அவரின் நிறம், கண்ணின் கருவிழி நிறம், முடியின் நிறம், உருவம். முகத்தோற்றம், குரல், சில பண்புகள், அறிவாற்றல், சில பரம்பரை நோய்கள் உட்பட இவைகள் அனைத்தும் அந்த மனிதன் தாயின் கருவில் ஒரு செல்லாக உருவாகும் போதே தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. இவை அனைத்தையும் தீர்மானிப்பது அவன் தாய் தந்தையிடமிருந்து பெறப்படும் மரபணுக்கள்தான். அப்படி உருவாகும் அந்த ஒரு செல்லில் இருக்கும் மரபணுக்களில் செயற்கையாக மாற்றத்தை ஏற்படுத்தும் போது அதன் விளைவை குழந்தையிடம் காணலாம். அப்படியான ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன, அது வெற்றிபெரும் பட்சத்தில் அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கருவில் இருக்கும் போதே ஒரு குழந்தையை நாம் விருப்பம் போல வடிவமைக்களாம். பிறவி ஊனம், பிறவி நோய்களை தடுக்கலாம். இந்த 20,500 மரபணுக்களில் மிகவும் முக்கியமான மரபணுதான் இந்த HAR1.
2006ல் University of Californiaவில் நடந்த ஆய்வில் HAR1(Human Accelerated Regions1) மரபணுவை கண்டறிந்தார்கள். இந்த மரபணுதான் நம்மை விலங்குகளிடமிருந்து வேறுபடுத்துவது. மனித மூளையின் சிந்தனைத் திறனை தூண்டுவதில் பெரும்பங்கு வகிக்கிறது. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் நமது 6ஆம் அறிவின் ஆணிவரே இதுதான். 
விலங்குகளோடு விலங்குகளாக திரிந்துகொண்ருந்த மனிதக் குரங்கிற்கு இந்த மரபணு எங்கிருந்து கிடைத்தது? இதற்கான பதில் விஞ்ஞானிகளிடமும் இல்லை. சொன்னால் நம்பமாட்டீர்கள், விஞ்ஞானிகள் இதனை “ஏலியன் ஜீன்” என்றுதான் அழைக்கிறார்கள்.
இந்த மரபணுவை யார் கொடுத்தது? யாரிடம் கொடுத்தது?

“ஏலியன் ஜீன்” (HAR1) மரபணுவை யார் கொடுத்தது? யாரிடம் கொடுத்தது? 
என்று நிறைய கேள்விகள் இங்கே கேட்கத் தோன்றும். இதற்கும் அறிவியலில் பதில் இல்லை, ஆனால் பண்டையக் கதைகளில் இதைப்பற்றி தேடியபோது நிறைய தகவல்கள் கிடைத்தது.

எகிப்து என்றாலே ஆச்சர்யங்களுக்கும் அதியங்களுக்கும் பஞ்சமில்லை என்பது அனைவரும் அறிந்ததே. இங்கு ஒரு பண்டையக் கதை நிலவுகிறது அதில் நட்சத்திரக் கடவுளின் மூலமாக அரசக் குடும்பத்தில் ராணிக்கும் அவரது சகோதரிக்கும் குழந்தை பிறந்ததாக நம்பப்படுகிறது. இதனை விளக்கும் கல்வெட்டு சிற்ப்பங்களின் படம்தான் அருகில் இருப்பது. அந்த சிற்பங்களில் இருக்கும் பெண்களையும், குழந்தைகளையும் பார்த்தால் சாதாரண மனிதர்களின் உடல் அமைப்புகளில் இருந்து மாறுபட்டிருப்பதை உங்களால் அறியமுடியும். அவர்களின் கழுத்தின் நீளம், தலையின் அளவு, குழந்தையின் உடல் அமைப்புகள் அனைத்திலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்த குழந்தைகள்தான் எகிப்தில் இன்றுவரை பேசப்படும் பல அதிசயங்களை நிகழ்த்திக்காட்டியவர்கள். இன்னும் சொல்லப்போனால் எகிப்த்தியர்கள் இவர்களை கடவுளாக வழிபட்டனர்.
நோவா சாதரண மனிதன் அல்ல என்று முன்பே கூறியிருந்தேன், அவரின் பிறப்பை பற்றிய Hebrew Bibleலின் முன்கதையை இப்போது பார்ப்போம். லாமிக் என்பவர் வேலையின் காரணமாக மனைவியை விட்டு பிரிந்து வேறு இடத்திற்கு செல்கிறார். சில மாதங்களுக்கு பிறகு வீடு திரும்பியவர் மனைவி கர்ப்பமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகிறார். மனைவியிடம் கர்ப்பத்தை பற்றிக் கேட்கிறார். மனைவியோ உங்களைத் தவிர வேறு ஆணின் நிழல்கூட என்மேல் பட்டதில்லை இது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியாது என்று சத்தியம் செய்கிறார். 
லாமிக் தன் மனைவியை அழைத்துக்கொண்டு அவரின் அப்பாவான மெதுசலீமிடம் சென்று நடந்ததை கூறுகிறார்கள். அவரும் உன் மனைவி நம்பிக்கைக்குரியவள் அவள் பொய் சொல்லமாட்டாள், ஆனால் நடந்தது என்ன என்று என்னாலும் கூறமுடியவில்லை என்று சொல்கிறார். மூன்றுபேரும் மெதுசலீமின் தாத்தா இனோக் என்பவரை சென்று சந்திக்கிறார்கள்.
இனோக், இந்தக் குழந்தை கடவுளிடம் இருந்து நேரடியாக உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, இது கடவுளின் குழந்தை இதனை நீங்கள் ஏற்றுத்தான் ஆகவேண்டும். உலகிற்கு வரவிருக்கும் மிகப்பெரிய அழிவிலிருந்து மனித இனத்தை காப்பாற்றும் பொறுப்பு அந்தக் குழந்தைக்கு இருக்கிறது. மனித இனத்தின் தலைவனாக இந்த குழந்தை மாறுவான் என்று கூறுகிறார். அந்த குழந்தைதான் நோவா. அழிவிலிருந்து மனித இனத்தை நோவா எப்படி காப்பாற்றினார் என்பதை முற்பகுதியிலேயே பார்த்தோம். 15ஆம் நூற்றாண்டில் வரையப்பட்டதாக கூறப்படும் இந்த ஓவியத்தில் இருக்கும் குழந்தையின் தலையையும் எகிப்தில் உள்ள சிற்பத்தில் இருக்கும் குழந்தையின் தலையையும் ஒப்பிட்டுப்பார்க்கவும்.
அடுத்து ஏசுவின் பிறப்பையும் இதில் சேர்க்கலாம், பைபிளின் படி ஏசுவும் கடவுளின் குழந்தை. மேரி கன்னியாக இருக்கும் போதே கடவுளின் மூலமாக பிறந்த குழந்தை. அதாவது உடல் கலப்பு இல்லாமல் குழந்தை பெற்றுக்கொள்ளுதல். ஆங்கிலத்தில் இதனை Virgin Birth என்பார்கள். கடவுள் குழந்தை உங்கள் மூலமாக பிறக்க இருக்கிறது என்று தேவதைகள் மூலம் மேரிக்கும் முன்கூட்டியே தகவலும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் மகாபாரதம் தெரிந்தவர்களுக்குச் சில சம்பவங்கள் நினைவுக்கு வருவதை தடுக்க முடியாது. மகாபாரதம் தெரியாதவர்களுக்கு அதனைப்பற்றி சிறிய அளவிலாவது விளங்கப்படுத்த வேண்டியது என் கடமை.
மகாபாரதகதையில் பஞ்சபாண்டவர்களில் தருமர், அர்சுனன், பீமன் ஆகிய மூவரின் தாயாரான குந்திதேவி பாண்டுவுடன் திருமணம் நடப்பதற்கு முன்பு நடந்த சம்பவம் இது. குந்தி தன் இளம்வயதில் துருவசமுனிவர் அளித்த மந்திரத்தை சொல்லி சூரிய கடவுளின் மகனான கர்ணனை பெற்றுக்கொள்வாள். அதுவும் Virgin Birth வகையில்தான். 
(இதில் கவனிக்க வேண்டிய விசயம் கர்ணன் பிறக்கும் போதே உடலில் கவசத்துடன் பிறந்தாராம். ஒரு குழந்தை எப்படி கவசத்துடன் பிறக்கும்? ஒரு குழந்தைக்கு எதற்கு கவசம்? அப்படியானால் அந்தக் குழந்தை பிறக்கும் போதே அதன் தோல்பகுதிகள் சரியாக வளர்ச்சியடையாமல் இருந்திருக்கவேண்டும், அதனால் அந்த குழந்தையின் உடலில் செயற்கையாகவே நிரந்தர கவசம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அந்தக் குழந்தை வளரவளர அதன் கவசமும் வளர்ந்திருக்கின்றது என்றால் அந்த தொழில்நுட்பத்தை என்னவென்று கூறுவது. ஒரு வேளை இதனால்தானோ என்னவோ கர்ணன் பிறந்தவுடனே தாயிடமிருந்து பிரிக்கப்படுகிறார்.) 
குந்தி பாண்டுவுடன் திருமணமான பின்பும் இதேமுறையில் தர்மதேவனின் மகனாக தருமனையும், இந்திரனின் மகனாக அர்சுனனையும், வாயுதேவனின் மகனாக பீமானையும் பெற்றெடுப்பாள். பாண்டுவின் இன்னொரு மனைவி நகுலன், சகாதேவன் என்ற இரண்டு பிள்ளைகளை இதே முறையில் தான் பெற்றெடுப்பாள். 
மேலே கூறப்பட்ட சம்பவங்கள் அனைத்து வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு இடங்களில் நடந்ததாக கூறப்படும் கதைகள். இதில் பெண்கள் இந்த பூமியைச் சேர்ந்தவர்கள், ஆனால் ஆண் இந்த பூமியைச் சேர்ந்தவர் அல்ல. பூமிக்கு வெளியிலிருந்து வந்த கடவுள்கள். பூமிக்கு வெளியிலிருந்து வந்த ஒரே காரணத்தால் அவர்களை கடவுள்கள், தேவர்கள் என்று தவறாக நினைத்துவிட்டோமோ? Virgin Birth இன்றைய தொழில்நுட்பத்தில் சாத்தியம்தான். Test Tube Baby முறையில் ஆணின் நிழலை கூட பார்க்காமல் பெண்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். இதேமுறையை ஏன் அவர்கள் செய்திருக்கக் கூடாது? அப்படி பார்த்தால் நடந்தவை எல்லாம் மாயமோ மந்திரமோ அல்ல, தொழில்நுட்பமும் அறிவியலும். வந்தவர்கள் கடவுள்களோ, தேவர்களோ அல்ல, எலும்பும் தசையுமான வேற்றுக்கிரகவாசிகள். அவர்கள் ஏன் இப்படி செய்தார்கள்? ஒருவேளை அவர்களின் உயிரணுவை மனிதப் பெண்களின் உடலில் செலுத்தி புதிய சந்ததிகளை உருவாக்க நினைத்து இப்படி செய்திருக்கலாம். இது இத்துடன் முடியவில்லை, இதே போன்று இன்னும் சில சம்பவங்கள் நடந்துள்ளன.
.

ஒருவேளை வேற்றுக்கிரகவாசிகள் அவர்களின் உயிரணுவை மனிதப் பெண்களின் உடலில் செலுத்தி புதிய சந்ததிகளை உருவாக்க நினைத்து இப்படி செய்திருக்கலாம். இது இத்துடன் முடியவில்லை, இதே போன்று இன்னும் சில சம்பவங்கள் நடந்துள்ளன.

இன்றைய சீனாவில் 5000 வருடங்களுக்கு முன்பு 'ச்சீ' என்ற நட்ச்சத்திரத்திலிருந்து வந்த கடவுள் அவரது மகனை உருவாக்கி இங்கு விட்டுசென்றாராம். அந்த கடவுளின் மகன் பெயர் Kuan ti. இந்த Kuan ti தான் சீனாவின் முதல் பேரரசை நிறுவியவர். சீனாவில் ஏற்பட்ட அனைத்து வளர்ச்சிகளுக்கும் இவரின் சந்ததிகள்தான் மிக முக்கியக் காரணம். இவர் ஒரு டிராகன் வைத்திருந்தாராம், அதில் ஏறி நினைத்த இடத்திற்கு பறந்து செல்வாராம். அந்த ட்ராகன் நெருப்பைக் கக்கக்கூடியதாம். ட்ராகன் என்ற ஒரு உயிரினம் வாழ்ந்ததற்கு எந்த ஆதாரமும் நம்மிடம் இல்லை. அப்படி இருக்க இதில் குறிப்பிடப்படும் ட்ராகன் என்னவாக இருக்கும்? ராக்கெட், ஜெட் விமானம் இவைகளாகக் கூட இருக்கலாம் மக்களுக்கு இவைகளைப் பற்றிய அறிமுகம் இல்லாததால் இதனை ட்ராகன் என்று நினைத்திருக்கலாம்.
வடகிழக்கு ஆப்பிரிக்காவில் மாலி (Mali) என்ற இடத்தில் வாழும் பூர்வகுடி டோகன் மக்கள் 'எமா' என்ற கடவுளை வணங்குகிறார்கள். (இந்து மதத்தில் எமன் என்ற அழிக்கும் கடவுள் இருப்பது அனைவரும் அறிந்ததே) இந்த எமா சீரியஸ் - B நட்சத்திரத்திலிருந்து வந்தவராம், அவர் 'மொமொ' என்ற ஒரு மகனை உருவாக்கியிருக்கிறார். அந்த மொமொவின் உடல் பாகங்கள் தனிதனியாக பிரிந்து நிறைய மொமொக்கள் உருவாகிவிட்டனவாம், அவர்கள் தீயவர்களாக மாற எமா புதிதாக இன்னொரு மொமொவை உருவாக்கி வானிலிருந்து ஒரு கோடாரியை கொடுத்து அந்த தீய மொமொக்களை அழிக்க செய்தாராம். இந்தக் கதையின் கருவை கவனித்தால் மகாபாரதக்கதையின் கருவுடன் ஒத்துப்போகும். 
ஒரு மொமொ பிரிந்து பல மொமொக்கள் உருவாதல், அவர்கள் தீயவர்களாக மாறுதல், புதிய மொமொ கடவுளின்(எமா) உதவியோடு அவர் கொடுத்த கோடாரியை கொண்டு தீயவர்களை அழித்தல். 
காந்தாரியின் ஒரு கரு கலைந்து கௌரவர்கள் (100 பேர்) உருவாதல். அவர்கள் தீயவர்களாக மாறுதல், தேவர்களின் பிள்ளைகளான பஞ்சபாண்டவர்கள் கடவுளின்(கிருஷ்ணர்) உதவியோடு வரமாக கிடைத்தை பிரம்மாஸ்திரத்தை கொண்டு தீயவர்களை அழித்தல்.
இந்த இரண்டும் ஒரே சம்பவத்தை குறிக்கிறதா? அல்லது ஒன்று போலவே இருசம்பவங்கள் நடந்தனவா?
 இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் எமா வாழும் நட்சத்திரமாக அவர்கள் காட்டும் சீரியஸ் - B நட்சத்திரம் இருப்பதை 1917ல் தான் நவீன வானியல் கண்டறிந்தது. இவர்களுக்கு எப்படி பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே தெரிந்தது? எகிப்த்தியர்கள் தங்கள் கடவுள் வந்ததாகக் கூறும் நட்சத்திரமும் அதே சீரியஸ் - B தான். கண்டிப்பாக இந்த சீரியஸ் – Bக்கு அருகே இருக்கும் ஏதோ ஒரு கிரகத்தில் நம்மைவிட அறிவில் மேம்பட்ட உயிரினங்கள் இருக்கவேண்டும். அவர்கள் நம் பூமிக்கு வந்து சென்றிருக்க வேண்டும்.
இப்படி வந்தவர்களால் உருவாக்கப்பட்ட சந்ததிகளின் ஆற்றலும் திறமையும் பிரமிப்புக்குரியது. எகிப்தில் பிறந்த அந்தக் குழந்தைதான் எகிப்தில் ஏற்பட்ட மிகப்பெரிய தொழில்நுட்ப மாற்றங்களுக்கு அச்சானி. உலகில் ஏற்பட்ட பெரிய அழிவிலிருந்து மனித இனத்தைக் காப்பாற்றியவர் நோவா. மிகச் சிறந்த சிந்தனைகளால் மனித இனம் அன்புடனும் ஒழுக்கத்துடனும் வாழ வழிசெய்தவர் ஏசு. அன்றிலிருந்து இன்றுவரை தானம் என்ற உடன் நினைவுக்கு வரும் பெயர் கர்ணன். வில்வித்தைக்கு அர்சுனன். நீதி நெறிகளுக்கு தருமன். பலத்திற்கு பீமன். பீமனின் பலத்திற்கு ஒரு உதாரணம் சொல்வார்கள் ஒரே நேரத்தில் இரண்டு கைகளால் இரண்டு யானையை தூக்கி தரையில் அடிக்ககூடிய அளவுக்கு பலசாலியாம். இவர்கள் அனைவருமே ஏதோ ஒருவகையில் இயல்பு மனிதனிடமிருந்து மாறுபடுகிறர்கள். 
மேலே கூறியதுபோல் இந்த உலகத்துப் பெண்களின் உடலில் வேற்றுக்கிரகவாசிகள் தங்கள் உயிரணுவை செலுத்தி சந்ததிகள் உருவாக்க முயன்றார்கள் என்பது உண்மையானால் அதே போன்று இந்த உலகத்து ஆணின் உயிரணுவை வேற்றுக்கிரகவாசிகளின் பெண்களின் உடலில் செலுத்தி அப்படியான ஒரு ஆராய்ச்சியும் நடந்திருக்க வேண்டும் அல்லவா? அதனை தேடிய போதுதான் பெரும் அதிர்ச்சி, அப்படியான சம்பவங்களும் நடந்திருக்கின்றன.
உலகின் மிகப்பெரிய வழிபாட்டுதளம் கம்போடியவில் இருக்கும் அங்கோர் வாட். இந்த கோயிலைக் கட்டிய இரண்டாம் சூரியவர்மனின் பிறப்பை பற்றியக் கதையை கேட்கும் போது நமக்கு தேவையான விடை கிடைக்கிறது. இவரின் தந்தை நம் பூமியை சேர்ந்தவர். ஒரு மரத்தடியில் தவம் செய்துகொண்டிருக்கும் போது இந்திரனால் அனுப்பப்பட்ட இந்திரலோகத்து பெண் (வேறுக்கிரகத்தைச் சேர்ந்த பெண்) இவரைக் கண்டு மணமுடிக்க கேட்கிறாள். இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். இவர்களுக்கு மகனாக இரண்டாம் சூரியவர்மன் பிறக்கிறார். மகனை தன் இடத்திற்கு அழைத்துச் செல்கிறாள் அன்னை. இதில் கவனிக்க வேண்டிய ஒன்று மகனைத்தான் தன் இடத்திற்கு அழைத்துச் செல்கிறார் கணவரை அல்ல. பூமிக்கு திரும்பி வரும் இரண்டாம் சூரியவர்மன் ஆகயத்தில் ஒரு மிதக்கும் மாளிகையை கண்டதாக சொல்கிறார், (அது பறக்கும் விண்கப்பலமாககூட இருக்கலாம்) பல வித்தைகளையும் தொழில்நுட்பங்களையும் கற்றவனாக திகழ்கிறார். அதன் பின் கட்டப்பட்டதுதான் இந்த அங்கோர் வாட் கோவில். உலகில் அதுவரை கட்டப்பட்ட அனைத்துக் கட்டிடக்கலைகளில் இருந்து மாறுபட்ட கலையில் இதனை கட்டிமுடித்தார். தனக்குத் தெரிந்த கலைகளையும் தொழில்நுட்பங்களையும் மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறார். `
மேலே கூறிய சம்பவம் மகாபாரதத்தில் வரும் ஒரு நிகழ்வுடன் ஒத்துபோகிறது.

#draco #humanoids 

இன்று பூமியில் வாழும் உயிரினங்களில் அறிவில்மேம்பட்ட இனமாக(?) மனித இனம் திகழ்வதைப்போல டைனோசர் இனம் வாழ்ந்த காலத்தில் அவற்றிலும் அறிவில் மேம்பட்ட உயிரினம் இருந்திருக்கின்றன. அவைகள் டைனோசர் இனத்திலிருந்து பரிணாம வளர்ச்சியடந்தவை. 
இங்கே தான் ஒரு கேள்வி எழுகிறது, உண்மையில் டைனோசர் இனத்துடன் சேர்த்து இந்த இனத்தையும் அழிக்க முயன்றிருப்பார்களோ? ஏனென்றால் டைனோசர் இனம் அழிக்கப்பட்டபோது அந்த அழிவிலிருந்து தப்பிப்பதற்காக அவைகள் பூமிக்கு அடியில் சுரங்கங்களும், குகைகளும் அமைத்துத் தப்பித்து வாழ்ந்தனவாம், (காடே தீப்பிடித்து எரிந்தாலும் பூமிக்கு அடியில் வாழும் எலிக்கு எந்த ஆபத்தும் வராது) இன்று வரை அந்த இனம் பூமிக்கு அடியில் வாழ்ந்துவருவதாகவும் நம்பப்படுகிறது. 
“பூமிக்கு அடியில் டைனோசர் காலத்தைய மனிதனைப் போன்ற உயிரினங்கள் இருக்கின்றன. வேற்றுக்கிரகவாசிகள் மற்றும் ரகசிய அமைப்பினருக்கும் இவர்களுக்கும் தொடர்பு உண்டு. இந்த உயிரினங்கள் Draco என்று அழைக்கப்படுகின்றன. Dracoதான் பூமியின் பண்டைய உயிரினங்கள், பூமிக்கு அடியிலேயே காலம் காலமாக வாழ்ந்துவருகின்றன. இவர்களைத்தான் நாம் வீழ்ச்சியுற்ற தேவதைகள் (Fallen Angels) என்கிறோமோ? தெரியவில்லை. அவர்களை பொருத்தவரை நம் மனித இனம்தான் அவர்களின் பூமியை ஆக்கிரமித்துள்ளோம் என்று நம்புகிறார்கள்” இதனைக் கூறியவர் Thaomas Edwin Castello. உலகை உலுக்கிப்போட்ட பல ரகசியங்களை வெளிவுலகத்திற்குக் கொண்டுவந்த Speck Out Unter Ground Base Security Officer. 
இவர் கூறியவற்றில் பாதி உங்களுக்கு புரிய வாய்ப்பில்லை, அவற்றை பற்றிய விரிவான விளக்கங்கள் பின்னர்வரும் பகுதிகளில் தரப்பட உள்ளன. இதில் நமக்கு இப்போதைய தேவை Draco (டைனோசர் கால மனிதனை ஒத்த உயிரினம்) பற்றிய தகவல்கள்.
இதனை நம்பக் கடினமாக இருந்தாலும் அதற்கான ஆதாரங்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. 
சுமேரியர்கள் கடவுளாக வணங்கிய பெண்ணில் சிலை ஒன்று தொல்பொருள் ஆய்வாளார்களால் கண்டெடுக்கப்பட்டது இது கிட்டத்தட்ட 7000 வருடங்கள் பழமையானது. உருவத்தில் மனிதர்களைப்போல் இருந்தாலும் அந்த பெண் மனித இனத்தைச் சேர்ந்தவள் கிடையாதாம். அதனாலோ என்னவோ அந்த பெண்ணை கடவளாக வழிபட்டுள்ளார்கள். அந்த பெண்ணின் உருவம் டைனோசர் கால மேம்பட்ட உயிரினத்தின் மாதிரியுடன் ஒத்துப்போகிறது. இதனையெல்லாம் ஒரு ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியுமா? என்று உங்களுக்கு தோனலாம். ஆனால் அடுத்ததாக கிடைத்த ஆதாரம் மனித இனத்தின் தோற்றம் பற்றி இதுவரை இருந்த கருத்துக்கள் அனைத்தின் ஆணிவேரையும் ஆட்டிப்பார்த்த ஒன்று.

1983ல், Turkmenia’s Institute of Geology யின் இயக்குனரான Professor Amanniyazovக்கு, ஒரு அழைப்பு வந்தது, அதில் Mesozoic, Strata என்னும் இடத்தில் டைனோசர் கால்தடங்கள் இருப்பதாக கூறப்பட்டது. அவருக்கு இப்படியான அழைப்புகளும் டைனோசரின் கால் தடங்களும், எச்சங்களும் புதிதல்ல. தன்னுடன் ஒரு குழுவை அழைத்துக்கொண்டு அந்த இடத்தை நோக்கி புறப்பட்டார். அந்த இடத்தை அடையும் வரை அவருக்கு தெரியாது இந்த நாள் அவர் வாழ்வில் மறக்கமுடியாத நாளாக மாறும் என்று. அங்கிருந்த ஒரு மலைக்குன்றில் டைனோசர்களின் விதவிதமான கால்தடங்கள் 1500க்கும் அதிகமானவை கிடைத்தன. அங்கு டைனோசரின் கால்தடத்திற்கு அருகே வித்தியாசமான ஒரு கால்தடத்தை கண்டார். அருகில் சென்று பார்த்த Amanniyazovக்கு ஒரு நிமிடம் இதயத்துடிப்பே நின்றுவிட்டது. அங்கே டைனோசர் கால்தடத்திற்கு அருகே இருந்தது மனிதனின் கால்தடம். இந்த செய்தி காட்டுத்தீயாக பரவதொடங்கியது. இதைப்பற்றிய செய்திகள் Rubstsov “Tracking Dinosours” Moscow News No24p,10,1983ல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. 
இது மனிதனின் கால்தடமா? அல்லது மனிதனைப் போன்ற வேறு உயிரினத்தின் கால்தடமா? என்று ஆய்வாளர்கள் தலையை பிய்த்துகொண்ட நேரம் அது. 
இதை மனிதனின் கால்தடம் என்று எடுத்துக்கொண்டால் டார்வினின் பரினாம கோட்பாடு மற்றும் நாம் இதுவரை மனித இனத்தின் தோற்றம் பற்றி வகுத்துவைத்திருக்கும் அத்தனைக் கோட்பாடுகளும் தவிடுபொடியாகிவிடும். ஏனென்றால் இதன் காலம் கிட்டத்தட்ட 15 கோடி வருடங்கள் பழமையானது. மனித இனத்தின் தோற்றமாக நாம் கனித்து வைத்திருப்பது 30 - 10 இலட்சம் வருடங்களுக்கு முன்புவரை தான். மனிதனைப் போன்ற வேறு உயிரினமாக இருக்கும் என்று எடுத்துக்கொண்டால், யார் அவர்கள்? என்ற கேள்வி எஞ்சிநிற்கும்.
--தொடர் தொடரும்




யார் கடவுள்? Episode --3.
 
‘இந்த பிரபஞ்சத்தில் பூமியைப் போல உயிரினங்கள் வாழ தகுதியான கோடான கோடி கிரகங்கள் இருக்கின்றன, இந்த பிரபஞ்சத்தில் நாம் தனியாக விடப்படவில்லை. வேற்றுக்கிரகவாசிகள் இருக்கிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை’.என்று கூறியவர் தன் கண்டுபிடிப்புகளாலும், இயற்பியல் கோட்பாடுகளாலும் புகழின் உச்சிக்கே சென்ற இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டின்.
‘நாம் ஒரு நடுத்தர நட்சத்திரத்தின் சிறிய கிரகத்தில் வாழும் மேம்பட்ட ‘குரங்கினம்’ அவ்வளவுதான். நம்மைவிட அறிவில் மேம்பட்ட உயிரினம் இந்தப் பிரபஞ்சத்தில் இருந்தாக வேண்டும்’.
என்று சவுக்கடி பதில் அளித்தவர் வேறுயாருமல்ல நம் சமகாலத்தில் வாழும் ஐன்ஸ்டின் என்று நாம் பெருமைபட்டுக்கொள்ளும் இயர்பியலாளர், பேராசிரியர் Stepen Hawking.
பொதுஇடங்களில் செய்தியாளர்கள் கேட்கும் இப்படியான கேள்விகளுக்கு தயக்கமின்றி தன் கருத்துகளை கூறிவருகிறார். வேற்றுக்கிரகவாசிகளை தொடர்புகொள்ளும் முயற்ச்சி மனித இனத்திற்கு நன்மையாக அமையுமா? அல்லது ஆபத்தாக மாறுமா? என்ற கேள்விக்கு
“கொலம்பஸ் அமெரிக்காவில் அடி எடுத்து வைத்தபோது அங்கு வசித்துவந்த பூர்வகுடி மக்களுக்கு அது நன்மைபயக்கவில்லை, நமக்கு ஏலியன்ஸ் பற்றி எதுவும் தெரியாது ஆனால் மனிதர்களை மற்றி மிக நன்றாக தெரியும். உலக வரலாற்றை திரும்பி பார்க்கும்போது மனிதனால் அழிவுநிலைக்கு தள்ளப்பட்ட உயிரினங்கள் ஏறாளம், ஒரே இனமான மனிதர்களுக்குள்ளும் சில அறிவியல் தொழில்நுட்பத்தை கொண்டு ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரை அடிமைப்படுத்தியதும், அழித்ததும் நடந்ததுதானே? இன்றளவும் நடந்துகொண்டிருக்கிறது தானே? ஒருவேளை ஏலியன்ஸ் பூமிக்கு வரும்போது அதேநிலை மனித இனத்திற்கும் ஏற்படலாம். அப்படி வருபவர்கள் நம்மைவிட பில்லியன் வருடங்கள் அறிவில்மேம்பட்ட உயிரினமாக இருந்தால், அவர்கள் மனித இனத்தை ‘பாக்டீரியா’ அளவிற்கு மதித்தாலே பெரிய விசயம்”.
இப்படி தலையில் இடியை இறக்கியதுபோல் பதில் அளித்தார். இவரை போல் இன்னும் சிலர் தங்கள் கருத்துக்களை பதிவுசெய்துள்ளனர்.
‘நம்மிடம் இருக்கும் குறைவான அறிவையும், சிறியளவிளான தொழில்நுட்பத்தையும் வைத்துக்கொண்டு இந்த பிரபஞ்சத்தில் வேறுகிரகங்களில் உயிரினங்கள் இல்லை என்று எப்படி கூறமுடியும். அப்படி கூற மனித இனத்திற்கு எந்த உரிமையும் இல்லை. வேற்றுக்கிரகவாசிகள் இருக்கலாமோ என்ற சந்தேக கேள்வியே தேவையில்லை, கண்டிப்பாக இருக்கிறார்கள். நம் பூமியில் வேண்டுமானால் நாம் (மனிதன்) அறிவில் மேம்பட்ட உயிரினமாக இருக்கலாம், இந்த பிரபஞ்சத்தில் நம்மைவிட அறிவில் மேம்பட்ட உயிரினங்கள் இருக்கின்றன. அதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன’.
என்று கூறியவர் பிரெஞ்சு விஞ்ஞானி சார்லஸ் ரிச்சர்ட் (Charles Richet) 1850 - 1935. தனது “Traite De Metapsychique” என்ற புத்தகத்தில் இப்படி குறிப்பிட்டுள்ளார்.
‘சர்ச்சைக்குரிய வேற்றுக்கிரகவாசிகள் பறக்கும் தட்டுகள் மற்றும் பூமிக்கு அடியில் வாழும் அறிவில் மேம்பட்ட பூர்வக்குடி மக்கள் இவை அனைத்தும் உண்மைதான். அவர்கள் நம்மை கண்காணித்து கொண்டிருக்கிறார்கள்’.
என்று கூறியவர் நாசாவில் முன்னால் மக்கள் தொடர்பு துணை இயக்குநர் Albert McHop. (US Air Force Spokesman For Project Blue Book).
சரி வேற்றுக்கிரகவாசிகள் இருக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். நம்மைவிட அறிவில் மேம்பட்ட உயிரினமாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? ஏன் நம் பூமியில் வாழும் மற்ற உயிரினங்களைப் போல (அறிவில் வளர்ச்சியடையாத) உயிரினங்களாகவோ அல்லது நம்மை ஒத்த அறிவுகொண்ட உயிரினங்களாகவோ இருக்கக்கூடாதா? 
கண்டிப்பாக அப்படியும் சில கிரகங்களில் உயிரினங்கள் வாழலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்களைத் தேடும் முயற்சியை நாம்தான் முன்னெடுக்கவேண்டும்.
அப்படியேதேனும் தேடுதல் வேட்டை நடக்கிறதா? என்று கேட்டால். ஒன்று இரண்டல்ல பல கோடி டாலர்கள் செலவு செய்து தேடுதல் பணி நடந்துவருகிறது.
இப்படியான ஆய்வுகள் நமக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம் வளர்ந்த நாடுகள் என்றோ தொடங்கிவிட்டன.

2015 ஜீலை 23ஆம் தேதி, பல விண்வெளி ஆய்வாளர்களை சந்தோசத்தில் திக்குமுக்காட வைத்த நாள். 
உயிரினங்கள் வாழ பூமிக்கு மாற்று இல்லையே என்று தவித்தவர்களின் தவிப்பு தணிந்த நாள். 
நம் பூமியை ஒத்த இன்னொரு கிரகத்தை கண்டறிந்துவிட்டதாக நாசா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. 
அந்த கிரகம் உருவத்தில் நம் பூமியைவிட 1.5 மடங்கு பெரியது, 1.5 பில்லியன் வருடங்கள் பழமையானது. அதற்கு கெப்ளர் 452B என்று பெயர் வைத்துள்ளார்கள். 
நாசா விஞ்ஞானி Jon Jenkins என்பவர் 'இந்த கிரகத்தில் ஏதேனும் உயிரினங்கள் வாழக்கூடும்' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
இந்த மகத்தான பணியை செய்துமுடித்தது 2009ல் விண்வெளிக்கு அனுப்பிவைக்கப்பட்ட 'கெப்ளர் தொலைநோக்கி' (Kepler Telescope) தான். 
கெப்ளர் எப்படி இந்த பணியை முடித்தது என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? 
கெப்ளரின் வேலையானது பறந்து விரிந்துகிடக்கும் விண்வெளியின் ஒரு சிறு பகுதியை கண்காணித்து அங்கே சூரியனைப் போன்ற நட்சத்திரங்கள் மற்றும் அதனைச் சுற்றும் கோள்களைக் கண்டறிவது. 
அதாவது இந்த பிரபஞ்சம் கடலென்றால் அதில் ஒரு துளியை எடுத்து ஆராய்வது போல. அந்த ஒரு துளியை ஆய்வு செய்து கெப்ளர் அளித்த தகவல்கள் ஏறாலம்.
இப்படியாக கண்டறியப்பட்ட கோள்களின் எண்ணிக்கை 2740, இதனை 2013ம் ஆண்டு ஜனவரியில் “Kepler’s Planet Candidates” என்ற தலைப்பில் நாசா வெளியிட்டது. 
அது எப்படி பல ஆயிரம் ஒளியாண்டுகள் தொலைவிலிருக்கும் கோள்களைக் கண்டறிவார்கள்? (கெப்ளர் 452B கோள் நம் பூமியிலிருந்து கிட்டத்தட்ட 1400 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது) அவர்கள் அதற்கு ஒரு வழி சொல்கிறார்கள், தொலைவில் இருக்கும் நட்சத்திரங்களை அதன் கோள்கள் சுற்றும் போது நட்சத்திரத்தைக் கடந்து செல்லும் அந்த சில நிமிடங்களில், 
நட்சத்திரத்தின் ஒளி மங்கும் அதனைக் கொண்டு கிரகம் இருப்பதை உறுதிபடுத்துகின்றனர். அது மட்டுமல்லாது அதன் உருவத்தையும் கணிக்கின்றனர். 
இப்படி கண்டறியப்பட்ட கோள்களை தரம் பிரித்து, அதன் தன்மைகளை ஆய்வுசெய்து இறுதியாக ஒரு கிரகத்தை கண்டறிந்துள்ளர்கள். (நினைவில் கொள்ளுங்கள் ஒரு துளிக்கு ஒரு கிரகம் நம் கிரகத்தை ஒத்த அதைவிட பழமையான கிரகம் இருக்குமெனில் மொத்த பிரபஞ்சத்தில்?) இதனை அடுத்து அந்த கோள்களில் நீர் இருக்கிறதா? என்றும் அதில் இருக்கும் வாயுக்களின் தன்மை குறித்தும் ஆய்வுகள் நடந்துவருகிறது. நீரைப் பற்றி ஆராயக் காரணம், வேறு கிரகங்களில் உயிரினங்கள் இருக்கின்றனவா? என்ற ஆய்வின் முதல்கட்டம் இதுதான். நீர் இருந்தால் உயிரினங்கள் கண்டிப்பாக இருக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. இதைத்தான் நம் முன்னோர்கள் “நீரின்றி அமையாது உலகு” என்று கூறினார்களோ? 
மேலே கூறிய இந்த தேடல், உயிரினங்கள் வாழ தகுதியான கிரகங்களை தேடுவது அதில் வழக்கூடிய அறிவில் வளர்ச்சியடையாத உயிரினங்களை தேடுவது என்று எடுத்துக்கொள்ளளாம்.

வேற்றுக்கிரகவாசிகள் தேடல் பற்றி எழுதும்போது இவரை பற்றி கூறாமல் இருக்கமுடியாது. அவர்தான் விண்வெளி ஆராய்ச்சியாளர் Dr.Frank Drake. இவரை பற்றி ஏற்கனவே நிறைய எழுத்தாளர்கள் எழுதியிருந்தாலும் நமக்கு தேவையான சில தகவல்களை எழுதவேண்டியது அவசியம். வேறுகிரகங்களில் நம்மை விட அறிவில் மேம்பட்ட உயிரினங்கள் வாழ்கின்றன என்று தீர்க்கமாக நம்புவோர்களில் இவரும் ஒருவர்.

வேற்றுக்கிரகவாசிகளை தேடுவதற்காகவே SETI (Search For Extraterrestrial Intelligence) என்ற நிறுவனத்தை உருவாக்கினார். இந்த நிறுவனத்திற்கு சில தனியார் நிறுவனுங்களும் அமெரிக்க அரசும் பல கோடி டாலர்கள் நிதியுதவி செய்துவருகின்றது. வேற்றுக்கிரகவாசிகள் எல்லாம் வெறும் கட்டுக்கதை என்று நாம் சொல்லும் அதே கதைக்குத்தான் அவர்கள் கோடி கோடியாக டாலர்களில் செலவு செய்து தேடிக்கொண்டிருக்கிறார்கள். 
நம்மை ஒத்த அறிவு கொண்ட ஏலியன்களை எப்படி தேடுகிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா?

Dr.Frank Drake நவம்பர் 16, 1974ல் “Arecibo Message” என்ற தகவலை Messier 13 என்ற நட்சத்திரக் கூட்டத்தை நோக்கி அனுப்பினர். Messier 13ல் மட்டும் 30 இலட்சம் நட்சத்திரக் குடும்பங்கள் இருக்கின்றன. இவற்றில் ஏதேனும் ஒன்றிலாவது நம்மை ஒத்த அறிவுகொண்ட வேற்றுக்கிரகவாசிகள் இருக்கவேண்டும் என்று Frank தீர்க்கமாக நம்பினார். 
ஏழு வகையான தகவல்களை இணைத்து 01 என்ற Binary வடிவத்தில் 1679 இலக்கங்களாக மாற்றி 2380 MHZ அதிர்வெண்ணில் அனுப்பிவைத்தனர்.
அவர்கள் அனுப்பிய செய்தி இதுதான்
1. ஒன்றிலிருந்து பத்துவரை எண்கள்.
2. ஹைட்ரஜன், கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன், பாஸ்பரஸ் ஆகியவற்றின் அணு எண்கள்.
3. நம் DNAவின் நியூக்ளியோடைட்ஸில் உள்ள சர்க்கரை மற்றும் பேஸ்களின் சூத்திரங்கள்.
4. நம் DNAவில் இருக்கும் நியூக்ளியோடைட்ஸ்களின் எண்ணிக்கை மற்றும் DNA அமைப்பு.
5. மனிதனின் சராசரி உயரம், உருவம், மற்றும் பூமியில் மனிதர்களின் எண்ணிக்கை.
6. நம் சூரியக் குடும்பத்தின் அமைப்பு, அதில் பூமியின் நிலை.
7. இந்தத் தகவலை அனுப்பும் Arecibo Radio Telescope’’ன் வடிவம், மற்றும் விட்டம்.
இந்தத் தகவல்கள் இலக்கைச் சென்றடைய 25 ஆண்டுகள் ஆகும் எனக் கணிக்கப்பட்டது.
இதற்கானப் பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். 2000ஆம் ஆண்டு வரை எந்த பதிலும் வரவில்லை. அப்படியானால் 2001ல்? இதற்கான பதில் 19 ஆகஸ்ட் 2001ல் இங்கிலாந்தில் கிடைத்தது. அதனைப் பின்னர் வரும் பகுதியில் பார்ப்போம்.

1972ல் நாசா Pioneer Plaque என்ற விண்கலத்தை உருவாக்கியது. மனிதனால் உருவாக்கப்பட்டு சூரியக் குடும்பத்தை விட்டு வெளியே அனுப்பப்பட்ட முதல் விண்கலம் இதுதான். அப்போது Cornell Universityயில் பேராசிரியராகப் பணியாற்றிய Carl Sagan என்பவரை நாசா அணுகி வேற்றுக்கிரகவாசிகளுக்கு ஒரு தகவலை வடிவமைத்து தருமாறு கேட்டுக்கொண்டது. நாசாவின் வேண்டுகோளுக்கு இணங்கி Carl Sagan மனித இனத்தின் சார்பாக தங்கத் தகட்டில் வேற்றுக்கிரகவாசிகளுக்கு ஒரு தகவலை வடிவமைத்தார். அந்தச் செய்தியாவது ஆண் மற்றும் பெண்ணின் நிர்வாணப் படம். நம் சூரியக் குடும்பம் அமைந்திருக்கும் இடம், அதில் நம் பூமியின் நிலை ஆகியவையாகும். 
அந்தத் தட்டையும் Pioneer Plaque விண்கலத்துடன் இணைத்து அனுப்பினர்கள்
நாசா அதனைத் தொடர்ந்து 1977ல் அடுத்த விண்கலமான Voyager Spacecraft யை சூரியக் குடும்பத்திற்கு வெளியே அனுப்பியது. இதில் வேற்றுக்கிரகவாசிகளுக்கு தகவல் அனுப்ப Carl Saganக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்தது. இந்த முறை அவர் அனுப்பியது தங்கத்தால் செய்யபட்ட பதிவுத் தட்டு (Voyager Golden Record). விண்கற்களால் மோதிச் சிதைவடையாமல் இருந்தால் குறைந்தது 100கோடி வருடங்களாவது இந்தத் தங்கத் தட்டு விண்வெளியில் உலாவரும்.
அந்தத் தங்கப் பதிவுத் தட்டில் பல்வேறு ஒலிகள் பதிவு செய்யப்பட்டன. உதாரணமாக குழந்தை அழும் சத்தம், காற்றடிக்கும் சத்தம், கடல் அலைகளின் சத்தம், மழை பெய்யும் சத்தம், யானை, சிங்கம், புலி போன்ற விலங்குகள் எழுப்பும் சத்தம், உலகில் பல இடங்களிலில் இருந்து சேகரிக்கப்பட்ட பாடல்கள், மனிதனால் கட்டப்பட்ட வியக்கவைக்கும் கட்டிடங்களின் புகைப்படங்கள், 55 மொழிகளில் வாழ்த்து செய்திகளும் பதிவுசெய்யப்பட்டது. அந்த 55 மொழிகளில் பண்டைய மொழியான சுமேரியர்களின் மொழியும் ஒன்று.
நம் இந்தியா மொழிகளில் இருந்து 7 மொழிகளைப் பதிவுசெய்துள்ளார்கள். அவைகள் தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, கன்னடம், ராஜஸ்தானி. என்ன தேடுறிங்க? தமிழை காணவில்லையே என்றா? தமிழின் தொன்மையும், பெருமையும் தமிழனுக்கே இன்னும் சரியாக தெரியவில்லை. இதில் அன்னியருக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று நாம் நினைப்பதில் நியாயம் இல்லையே. ஆனாலும் தமிழின் மீது காதல் கொண்டவர்களுக்கு இதைப் படிக்கும் போது மனம் கனத்துபோவதை தவிர்க்க இயலாது.
இந்த தங்கப் பதிவுத் தட்டின் மேல் மூடியாக இன்னும் ஒரு தங்கத் தட்டு பொருத்தப்பட்டது. அதில் நம் சூரியக் குடும்பத்தின் அமைப்பும், அந்தத் தங்கப் பதிவுத்தட்டை எப்படி இயக்க வேண்டும் என்ற செய்முறை விளக்கமும் இதில் வரையப்பட்டிருந்தது
ஒருவேளை இந்தத் தங்கப் பதிவுத் தட்டு வேற்றுக்கிரகவாசிகளிடம் கிடைத்தால்கூட அவர்கள் நம்மைப் போன்றோ (அ) நம்மை விட அறிவில் மேம்பட்ட உயிரினமாக இருந்தால் தான் இதனை இயக்கி இதில் இருக்கும் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அதுவே ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களைப் போன்றவர்களிடம் கிடைத்தால் ஒன்று கடவுள் கொடுத்ததாக நினைத்துப் பூஜைகள் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இல்லை நம்மை போன்றவர்களிடம் புரியாத ஒன்று கிடைத்தால் அருங்காட்சியகத்தில் வைத்துவிடுவோமே அப்படி செய்துவிடுவார்கள். 
இதுவரைப் பார்த்தது நம்மை ஒத்த அறிவுகொண்ட வேற்றுக்கிரகவாசிகள் மற்றும் அதை விட குறைவான அறிவாற்றல் கொண்ட வேற்றுக்கிரக உயிரினங்களைத் தேடும் முயற்சி .

இதுவரை நம்மை ஒத்த அறிவுகொண்ட வேற்றுக்கிரகவாசிகள் மற்றும் அதை விட குறைவான அறிவாற்றல் கொண்ட வேற்றுக்கிரக உயிரினங்களைத் தேடும் முயற்சி பார்த்தோம். இதே போன்று நம்மைவிட அறிவில் மேம்பட்ட வேற்றுக்கிரகவாசிகளை தேடும் முயற்சி நடக்கிறதா? என்று கேட்டால்.அதற்கான அவசியம் இல்லை என்றே கூறலாம். நாமே இந்த அளவு செயல்படும் போது வேற்றுக்கிரகவாசிகள் நம்மைவிட அறிவில் மேம்பட்டிருந்தால் அவர்களின் செயல்பாடு நம்மைவிட பலமடங்கு அதிகமாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால் இன்று நாம் செய்யும் மேற்படி தேடுதல் வேலைகளை அவர்கள் என்றோ செய்திருப்பார்கள் (பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே). ஒருவேளை அப்படி அவர்கள் தேடி கண்டுபிடித்த கிரகம்தான் பூமியாகவும் இருக்குமோ?!
 
வேற்றுக்கிரகவாசிகள் நம்மைவிட அறிவில் மேம்பட்டிருக்க ஏதேனும் சாத்தியம் உண்டா? என்று கேட்டால். ‘100% சாத்தியம் உண்டு’ அடித்து கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். அதற்கு அவர்கள் முன்வைக்கும் துடுப்பு பரிமாணங்கள் (Dimensions). ஒருவேளை வேற்றுக்கிரகவாசிகள் நமக்கு அடுத்தடுத்த பரிமாணங்களில் வாழ்வார்களேயானால், அவர்கள் நம்மைவிட பலமடங்கு அறிவில் மேம்பட்ட உயிரினமான இருப்பார்கள்.பரிமாணம் பற்றி அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை, அதைப் பற்றிய சிறு விளக்கம் பின்வருமாறு.பரிமாணம் என்பது இடமோ, பொருளோ அல்ல. அது ஒரு நிலை (Level). 
இந்தப் பிரபஞ்சத்தில் 10க்கும் மேற்பட்ட பரிமாணங்கள் இருப்பதாக ஸ்ட்ரிங் தியரி கூறுகிறது. ஒவ்வொரு பரிமாணத்திலிருந்தும் அடுத்தடுத்த நிலைக்கு செல்லச் செல்ல அதன் அதிர்வுகள் அதிகரிக்கும், நிறைய உண்மைகள் புரியும், தெளிவான உயர்ந்த நிலையை அடைந்ததாக உணர்வு ஏற்படும். அதிக சுதந்திரம், அதிக சக்தி, புதியவைகளை உருவாக்க நிறை சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.
நாம் இதில் மூன்றாவது பரிமாணத்தில் வாழ்ந்துவருகிறோம். நீளம், அகலம், உயரம் இவை மூன்றும்தான் நாம் வாழும் பரிமாணங்கள். இந்த மூன்றையும் நம்மால் உணரமுடியும் அதில் பயணம் செய்யவும் முடியும்.
 நான்காவது பரிமாணம் என்னவாக இருக்கும் என்றக் கேள்வி உங்களுக்குள் எழத் தொடங்கினால் நீங்கள் தொடரின் வேகத்திற்கு இணையாக இருக்குறீர்கள் என்று உங்களையே தட்டிக்கொடுத்துகொள்ளாம். உலகின் பல மூத்த விஞ்ஞானிகளும், இயற்பியலாளர்களும் ‘காலம்’தான் நான்காவது பரிமாணம் என்று நம்புகிறார்கள். நீளத்தில், அகலத்தில், உயரத்தில் எப்படி இருபுள்ளிகளைக் குறித்துக்கொண்டு அதில் பயணம் செய்கிறோமோ, அதே போல காலத்திலும் இருவேறு புள்ளிகளை குறித்துக்கொண்டு அதற்கிடையே பயணம் செய்ய வேண்டும். இதனைக் ‘காலப்பயணம்’ என்பார்கள்.
அதாவது நாம் எதிர்காலத்திற்கோ, இறந்தகாலத்திற்கோ சென்று திரும்புவது. இது சாத்தியமா? என்ற கேள்வி இங்கே வலுக்கும். அதனை தகர்த்தெறிகிறது ஆல்பர்ட் ஐன்ஸ்டினின் இயற்பியல் கோட்பாடு.ஐன்ஸ்டின் கூற்றுப்படி ‘எந்த ஒரு பொருள் ஒளியின் வேகத்தில் பயணம் செய்கிறதோ அந்த பொருள் எதிர்காலத்திற்குச் செல்லும்’. அப்படியென்றால் மணிக்கு 108 கோடி கி.மீட்டர் வேகத்தில் பயணிக்கவேண்டும்.
நம்மிடம் இருக்கும் இன்றைய தொழில்நுட்பத்தை கொண்டு இது சாத்தியமல்ல. ஆனால் வருங்காலத்தில் சாத்தியமாகலாம். 

புராணக்கதைகளில் வரும் முனிவர்கள் சித்தர்கள் சிலரை முக்காலமும் அறிந்தவர் என்று கூறுவது உண்டு. அப்படியானால் அவர்கள் ஒளியின் வேகத்தில் பயணம் செய்திருப்பார்களா? என்று கேட்டால். அதற்கான வாய்ப்புகள் மிகமிக குறைவு.
 அவர்கள் வேறுவழியில் இதனை அடைந்திருக்கலாம். உயிர் சக்தியைச் சேமித்து ஒன்று திரட்டி அதனை ஒரே புள்ளியில் செலுத்தும் போது காலப்பயணம் போன்ற நிறைய விசயங்கள் சாத்தியப்படும் என்று ஆன்மீகரீதியில் நம்பப்படுகிறது.அறிவியல் நிரூபிக்க படாதபாடு பட்ட பல உண்மைகளை ஆன்மீகம் போகிற போக்கில் சொல்லி சென்றதை நம்மால் மறுக்கமுடியாது.
பொதுவாகவே மனிதன் தன் மூளையை சிறிய அளவில்தான் பயன்படுத்திவருகிறான், இதனை ஆய்வாளர்கள் கணக்கிட்டு சராசரியாக 13% தான் நாம் பயன்படுத்துவதாக கூறினார்கள். அடுத்தடுத்த பரிமாணத்திற்குள் செல்லும் பொழுது அதன் அளவுகள் அதிகரிக்கலாம். ஒன்று மட்டும் உறுதி நமக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த மூளை மூன்றாவது பரிமாணத்திற்காக உருவாக்கப்பட்டது அல்ல, சரியாக கூறவேண்டுமானால் “ஒருவயது குழந்தையிடம் கிடைத்த IPhone 6யை போல” சுற்றிப்பார்க்கலாம் தூக்கிப்போட்டு உடைக்கலாமே தவிர அதன் பயன்பாடுகளை புரிந்துகொள்ளவோ, பயன்படுத்தவோ இந்த பரிமாணத்தில் இருந்துகொண்டு நம்மால் இயலாது.
மூன்றாவது பரிமாணத்தில் நம் உடல், உலகில் உள்ள மற்றபொருள்கள் அனைத்தும் உண்மை, இந்த உயிர் இந்த உடலுடன்தான் இருக்கமுடியும் இதனை வேறு உடலுக்கு மாற்றமுடியாது, புவியீர்ப்பு விசைக்கு எதிராக எந்த ஒரு செயலும் செய்ய முடியாது, உலகில் உள்ள அனைத்தும் புவியீர்ப்பு விசைக்குட்பட்டே ஆகவேண்டும் என்றெல்லாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். அடுத்தடுத்த பரிமாணங்களில் இந்த எண்ணங்கள் சுக்குநூறாகக்கூடும்.
அடுத்தடுத்த பரிமாணங்கள் எப்படி இருக்கும் என்று சில இயற்பியலாளர்களால் கணிக்கப்பட்டது.
அவை
நான்காவது பரிமாணத்தில் கடந்தக் காலத்தைப் பற்றிய கவலையோ, வருங்காலத்தைப் பற்றிய பயமோ இருக்காது. மிகவும் தெளிவான மனநிலை ஏற்படும். காலத்தை நமக்கு ஏற்றார்போல வளைக்கமுடியும் என்ற உண்மை தெரியவரும். மூன்றாவது பரிமாணத்தில் ஆச்சர்யமாக தோன்றிய பல விசயங்கள் இங்கு சாதாரணமாகத் தோன்றும்.
 ஐந்தாவது பரிமாணத்தில் நம் பார்வையில் இந்த உலகமே வேறாகத் தெரியும். நம் உலகைப் போன்றே உயிரினங்கள் வாழத்தகுதியான நிறைய கிரகங்களை கண்டறிந்து. அவைகளின் ஆரம்பநிலையை மாற்றியமைக்க முடியும்.
ஆறாவது பரிமாணத்தில் இந்த பிரபஞ்சத்தின் நிலைப்பாடு மற்றும் ஆரம்பம் பற்றிய நிறைய உண்மைகளை தெரிந்துகொள்ளமுடியும்.
ஏழாவது பரிமாணத்தில் புதிய ஒரு கிரகத்தை உயிர்வாழத் தகுதியானதாக மாற்றியமைக்க முடியும்.
எட்டாவது பரிமாணத்தில் பிரபஞ்சத்தின் ஆதி அந்தங்களை தெரிந்துகொள்ளமுடியும். நம் பிரபஞ்சத்தின் இயற்பியல் கோட்பாடுகள், சட்டதிட்டங்கள், கட்டுப்பாடுகள் அனைத்தும் தெரிந்துவிடும்.
 ஒன்பதாவது பரிமாணத்தில் நம் பிரபஞ்சத்தைப் போலவே வேறு பிரபஞ்சங்களை கண்டறியமுடியும், அவைகளை ஒப்பிட்டுப் பார்க்கவும் முடியும். அந்தப் பிரபஞ்சத்தின் இயற்பியல் கோட்பாடுகள், சட்டதிட்டங்கள், கட்டுப்பாடுகளையும் அதன் தொடக்கங்களையும் அறிந்துகொள்ளமுடியும்.
பத்தாவது பரிமாணத்தில் நம் கற்பனைக்கு எட்டக்கூடிய அனைத்தும் இங்கு சாத்தியம். அதனைத் தாண்டியும் பல செய்யமுடியும். மூன்றாவது பரிமானத்தில் இருந்துகொண்டு இந்த அளவுதான் நம்மால் யூகிக்கமுடியும். மேலே கூறியவையாவும் இப்படியாக இருக்கலாமோ!

--தொடரும்

அறிவார்ந்த ஆன்மீக தகவல்களையும் DNA ஜோதிடம்பற்றிய மேலும் விபரங்களையும் பெற 
https://youtu.be/fhq617sbN34

"மஹா சிவராத்ரி ஸ்பெஷல் ""
ஓம் நமசிவாய "

யார் கடவுள் --Episode --4

சிவ பெருமான் ஆரியன் (Orion) என்று அழைக்கப்படும் திருவாதிரை நட்சத்திரத்தில் இருந்து வந்து பூமியில் வசித்த மனித இனத்திற்கு உயர்ந்த ஆன்மீக அறிவியல் டெக்னாலஜியான சமாதிநிலை மற்றும் ஒளிஐக்கியம் பெறும் வழியை வழங்கினார்

 பழம்பெரும் நாகரிகங்களான இந்தியா, எகிப்து, மெசபடோமியா, சுமேரிய, மாயன் இனத்தவர்கள் உட்பட உலகின் பல நாகரிகத்தை சேர்ந்த மக்களும் Orion (அ) திருவாதிரை நட்சத்திரத்தை நோக்கியே தங்கள் வழிபாட்டுத் தலங்களை அமைத்திருந்தனர்.

சிவபெருமானே அனைத்து நாகரிக மக்களுக்கும் மெய்ஞ்ஞானத்தை வழங்கிய பேரருளாளர்.

வெறும் போதனைகளை மட்டும் அளிக்காமல் தன்னுடைய DNA வையும் தீட்சையாக மனிதகுலத்திற்கு வழங்கி மாபெரும் அறிவியல் புரட்சிக்கு வித்திட்டவர்.

அவரது DNA வானது வாழையடி வாழையாக குரு பரம்பரை மூலம் பராமரிக்கப்பட்டு தகுதியுள்ளவர்களுள் தீட்சையாக விதைக்கப்பட்டும் வருகிறது.

மஹாசிவராத்ரி நன்நாளான இன்று சிவபெருமானை வழிபடுபவர்கள் அவரது அருளுக்கு பாத்திரமாகி அனைத்து நலன்களையும் பெறலாம்

ஆதிநாயகனும், ஆதிரைநாயகனுமான சிவபெருமான் அருளிய DNA ஞானத்தைப்பற்றி மேலும் விரிவாக கீழ்க்கண்ட வீடியோவைப்பார்த்து அறிந்துகொள்ளுங்கள் நண்பர்களே!!!

https://youtu.be/ao3iRIJf4Qo

 

யார் கடவுள்? Episode -5

DNA சேமிப்புக்கிடங்கு :-

ஆர்டிக் பகுதியில் உள்ள Svalbard என்ற தீவில் நார்வே அரசு மற்ற சில நாடுகளுடன் இணைந்து 2008ல் Svalbard Global Seed Vault என்ற திட்டத்தை உருவாக்கியது. அதில் உலகில் உள்ள மரம், செடி, கொடி, பயிர்வகைகளை சேகரித்து பாதுகாப்பது என்று முடிவுசெய்தார்கள். பூமியில் ஏற்படும் (ஏற்படுத்தப்படும்) அசாதாரண காலநிலைமாற்றம் காரணமாக அழிந்துவரும் மரங்கள், தாவரங்கள், பயிர்வகைகள், இவை அனைத்தையும் அழிவிலிருந்து பாதுகாப்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். 9 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் மார்ச் 2013 வரை 7,70,000 வகையான தாவர இனங்கள் சேமிக்கப்பட்டுள்ளன. இங்கே “தாவர இனங்கள்” சேமிக்கப்பட்டுள்ளன என்றால் முழு மரமாகவோ, செடியாகவோ சேமித்துவைக்கவில்லை, அதன் விதைகளை சேமித்துவைத்துள்ளர்கள்.
உலகம் பேரழிவை சந்தித்தால் கூட அதிலிருந்து தப்பிப்பவர்கள் இந்த விதைகளை பயன்படுத்தி உலகில் மீண்டும் அவைகளை உயிர்த்தெழ செய்யமுடியும்.
இதைத்தான் நம்மவர்கள் அன்றே ஊருக்கு ஊர் கோவில் கட்டி அதன் கோபுரகலசங்களில் சிறுதானிய விதைகளை சேர்த்து வைத்தார்கள். பெருவெள்ளத்தால் ஊரில் உள்ள அனைத்தும் அடித்து சென்றாலும் கோபுரகலசத்தில் இருப்பதை கொண்டு விவசாயம் செய்யமுடியும். அதாவது அன்றைய “இன்சூரன்ஸ் பாலிசீ” எல்லாம் நம் முன்னோர்கள் சொல்லிக்கொடுத்த பாடம்தான்.

இங்கிலாந்தில் உள்ள Zoological Society Of London, Natural History Museum, மற்றும் University Of Nottingham இணைந்து 1996ல் “Frozen Ark” என்ற திட்டத்தை தொடங்கினார்கள். இதன் நோக்கம் அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகள் மற்றும் பூச்சி வகைகளில் DNAகளை எடுத்து உறைநிலையில் சேமித்துவைப்பது. நம் அடுத்தடுத்த தலைமுறைகளில் குளோனிங் தொழில்நுட்பத்தில் பெரிய முன்னேற்றம் அடையும் பொது இந்த உயிரினங்களை மீண்டும் உயிருடன் நம் பூமியில் நடமாடவிடலாம். அதாவது யானையாகவே இருந்தாலும் ஒரு சிறு கண்ணாடி சோதனை குழாயில் அடைத்துவிடலாம்.
இப்போது நான் என்ன சொல்லப்போகிறேன் என்று உங்களுக்கே தெரிந்திருக்கும். நோவாவிடம் கட்டளையிட்டது கடவுள் எனும் உயர்தொழில்நுட்பம் கொண்ட வேற்றுக்கிரகவாசி என்றால் அவர்களிடம் DNA’வை சேகரிப்பது, குளோனிங் போன்ற சகல தொழில்நுட்பமும் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறதல்லவா? இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தியிருக்கும் பட்சத்தில் இந்தக் கதை உண்மையாகிவிடுகிறதே. இப்படி நடந்திருந்தால் நோவாவின் படகே இதற்குப் போதுமானது. இது ஒரு உதாரணம்தான் இப்படியாக தேவையானவற்றை எடுத்துக்கொண்டு தேவையில்லாதவைகளை அழித்துவிடுவது என்று செய்திருக்கலாம் அல்லவா? இங்கு அந்த கடவுள் என்பவரின் அறிவையும் தொழில்நுட்பத்தையும் சிந்தித்துபார்ப்பது அவசியம். இதில் வரும் நோவா ஒரு சாதாரண மனிதன் அல்ல, அவரின் பிறப்பைப் பற்றிய கதை பிற்பகுதியில் வருகிறது. 
ஒரு கதைக்கு நீங்க இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கலாமா? என்று யோசிப்பது புரிகிறது. இது கதை அல்ல என்பதற்கு இன்னும் ஒரு ஆதரம் கிடைக்கப்பெற்றது
1812ல் பிரஞ்சு கரீபியன் தீவின் Guadelope எனற இடத்தில் ஒரு பெண்ணின் எலும்புக்கூடு தலைப்பகுதியும், கால்பகுதியும் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. சுமார் 1.6 கி.மீட்டர் நீளம், அகலம் கொண்ட Limestoneனின் உள்ளே அந்த எழும்புக்கூடு புதைந்து காணப்பட்டது. இதன் காலம் கிட்டத்தட்ட 2 கோடியே 80 இலட்சம் வருடங்கள் பழமையானது. இதனை பாறையுடன் பெயர்த்து கொண்டுவந்து மேலே கூறிய Genesis புத்தகப் பெருவெள்ளகதைக்கு ஆதாரமாக பிரிட்டீஸ் அரசு அவர்களின் அருங்காட்சியகத்தில் வைத்தது. ஆனால் டார்வின் தனது பரிணாமக் கோட்பாட்டை வெளியிடுவதற்கு 9 வருடங்களுக்கு முன்பே அதாவது 1850களிலேயே அதனை அருங்காட்சியகத்திலிருந்து எடுத்து அதற்குக் கீழ் இருந்த பாதாள அறையில் மறைத்து வைத்துவிட்டார்கள் இன்றளவும் அது வெளியே வரவில்லை. எதனால் இவை மறைக்கப்படுகின்றன என்பது கேள்விக்குறியே.
சரி வேற்றுக்கிரகவாசிகள் இப்படியான தரம்பிரிக்கும் வேலையை மட்டும்தான் செய்தார்களா? என்றால், இல்லை மனிதர்களின் அறிவை மேன்படுத்த மரபணு மாற்றமும் செய்துள்ளார்கள். 
இனிவரும் பகுதியை படிப்பதற்குமுன் DNAவை பற்றி சிறியளவிலாவது தெரிந்துவைத்திருப்பது அவசியம்.

Deoxyribonucleic acid என்பதன் சுருக்கம் தான் DNA, நம் வீட்டில் இருக்கும் சிறுவர்களை பார்த்து “இவன் அப்பனைப் போல சிரிக்கிறான்” “தாத்தாவைப் போல கோபப்படுகிறான்” என்று சொல்வதுண்டு. இவை அனைத்தும் DNAவின் வேலைதான். ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைகளுக்கு பண்புகளை எடுத்துச்செல்வது DNAவில் இருக்கும் மரபணுக்கள்தான். இதில் புற்றுநோய் போன்ற நோய்களும் அடங்கும். “அது எப்படி பண்புகளை சேகரித்து எடுத்துச்செல்லும், அது என்ன Pen drive’வா?” என்று நீங்கள் கேட்பது புரிகிறது. கிட்டத்தட்ட DNAவும் Pen Driveவைப் போலதான். என்ன சற்று பெரிய Pen Drive, உருவத்தில் அல்ல, கொள்ளளவில். ஒரு கிராம் DNAவின் கொள்ளளவு ஏழு லட்சத்து இருபதாயிரத்தி எண்ணுற்று தொண்ணுற்று ஆறு (7,20,896) GB என கண்டறியப்பட்டுள்ளது. வருங்காலத்தில் இதனை Pen Driveவாகவும் பயன்படுத்தலாம். அதர்கான ஆய்வுகளும் நடந்துகொண்டிருக்கின்றன. 
DNA தான் மனித இனத்தின் தோற்றம் பற்றிய அறிவியல் மற்றும் ஆன்மீக கதைகளை இணைக்கும் பாலம்.
இந்த DNAவின் அமைப்பை யார் முதலில் கண்டரிந்தது?
ஏப்ரல் 1953ல் James Watson மற்றும் Francis Crick என்பவர்கள் DNA அமைப்பை இவ்வுலக அறிய முதலில் வெளியிட்டார்கள். அதற்காக அவர்களுக்கு நோபல்பரிசும் கிடைத்தது. இதுதான் நாம் அறிந்த உண்மை. ஆனால் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சிலர் DNAவின் வடிவத்தை அறிந்து அதை நம்மிடம் தெரியப்படுத்த முயற்சி செய்துள்ளார்கள் என்பதுதான் ஆச்சர்யமான உண்மை.

மோசஸிடம் மட்டும் அல்ல இன்னும் சிலரிடம் கடவுள் என்னும் வேற்றுக்கிரகவாசிகள் கட்டளைகளை வழங்கியுள்ளன. அவைகள்....

4000 வருடங்களுக்கு முன்பு மோசஸ் அவர்களுக்கு கடவுளிடமிருந்து கட்டளைகள் வந்தது அவர் உருவாக்கியதுதான் யூத மதம். அவருக்கு எகிப்த் மொழியும், அராமிக் மொழியும் தெரியும். அதன்பிறகு 2000 வருடங்களுக்கு முன்பு ஏசுவிடம் அடுத்த கட்டளைகள் வழங்கப்பட்டது அவரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படாது தான் கிருஸ்துவ மதம். அவருக்கு அராமிக் மொழியும், ஹிப்ரு மொழியும் தெரியும். அதன்பிறகு 1300 வருடங்களுக்கு முன்பு முகமது நபிகளிடம் அடுத்த கட்டளைகள் வழங்கப்பட்டது அவர் உருவாக்கியதுதான் இஸ்லாமிய மதம். அவருக்கு அரபிக்மொழி தெரியும். இந்த மூன்றிலும் உள்ள ஒற்றுமைகளை பார்ப்போம் 
மூன்றுமே மனிதர்களைவிட மேம்பட்ட சக்தியிடம் இருந்து கிடைத்த கட்டளைகள். 
மூன்றுமே இந்தப் பூமிக்கு வெளியிருந்து வந்த கட்டளைகள்.
மூன்றுமே மனித இனம் நல்வழியில் செழித்திட வேண்டி வழங்கப்பட்ட கட்டளைகள்.
இங்கே பெற்றுக்கொண்டவர்கள் வேறு வேறு என்பதால் வழங்கியவர்களும் வேறு வேறு தான் என்று எப்படி உறுதியாக கூற முடியும். ஒரு இடத்திலிருந்து வந்தக் கட்டளைகளின் மூன்று பகுதிகள் வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு மனிதர்களிடம் கிடைத்ததாக எடுத்துக்கொள்ளலாமே. அப்படிப் பார்த்தால் யூத மதத்தின் தொடர்ச்சிதான் கிருஸ்துவ மதம், கிருஸ்துவ மதத்தின் தொடர்ச்சிதான் இஸ்லாமிய மதம். இதை மக்கள் உணர ஆரம்பித்தால் உலகில் நிலவும் பாதிப் பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.
இந்த இடத்தில் ஒரு எதிர்ப்பு குரல் கிளம்பலாம் ‘பல கோடி மக்கள் நம்பி வழிபடும் பல மத கடவுள்களை இப்படி உங்கள் கற்பனைக்கு களங்கப்படுத்துவது சரியா? என்று.
நம் மக்களைப் பொறுத்தவரை கடவுள் என்றால் ‘நம் இனத்திற்கு நன்மை செய்பவர்’ என்று பொருள். 
4 நாள் பட்டினியாக கிடப்பவனுக்கு ஒரு வேளை உணவிடுபவன்தான் கடவுளாகத் தெரிவான். நமக்கு நன்மை செய்வது எதுவாக இருந்தாலும் அதனைக் கடவுளாக வழிபடுவது நமது மரபணுவில் ஊறிப்போன ஒன்று. அது மனிதனாகவோ அறிவில் மேம்பட்ட உயிரினமாகவோ இருக்கவேண்டிய அவசியமில்லை. தன்தொழிலுக்கு உதவுவதால் வருடத்தில் ஒரு நாள் ஐந்தறிவு கொண்ட ஆடு, மாடுகளுக்கு நன்றிகூறி வழிபடுவது நம் தமிழர்களின் பண்பாடு. தான் விவசாயம் செய்யும் மண்ணையும், அதற்கு ஒளிகொடுக்கும் சூரியனையும் வணங்குபவன் தமிழன். அதன்படி கடவுளாக நினைக்கவேண்டுமானால் உலகில் உள்ள அனைத்தும் கடவுள்தான் புல்லும் கடவுள், பூண்டும் கடவுள், மண்ணும் கடவுள், மலையும் கடவுள். அதே போலத்தான் வேறுக்கிரகத்திலிருந்து வந்து நமக்கு உதவிசெய்த அறிவில் மேம்பட்ட வேற்றுக்கிரகவாசிகளையும் கடவுளாக நினத்துவிட்டோமோ, என்ற சந்தேகம் இங்கே எழுகிறது? 
கடவுளை ஆய்வுப்பொருளாக மாற்றவேண்டும் என்பது என் நோக்கம் அல்ல. கடவுள் என்று நாம் லேபில் ஒட்டி வைத்திருக்கும் அனைத்தும் வணங்கும் பொருள் அல்ல, அதில் அறிவியல் உண்மைகள் மறைந்திருக்கின்றன அதை வெளிக்கொண்டு வருவதுதான் என் நோக்கம்,
2008ல் வெர்டிகன் சபை ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில் “வேற்றுக்கிரகவாசிகள் இருக்கலாமோ?” என்ற சந்தேதகத்தை வெளிப்படையாகவே கேட்டது. “இந்தப் பிரபஞ்சத்தில் நம் பூமியில் மட்டும் தான் உயிரினங்கள் இருக்கின்றனவா?” என்ற கேள்வியையும் எழுப்பியது.
அதன் பின் வெர்டிகன் சபையில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அது வழக்கம் போல ஆன்மிகக் கூட்டம் அல்ல. அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள், இயற்பியலாளர்களைக் கொண்ட கூட்டம். ஆன்மிகக் கூடாரத்திற்குள் அறிவியல் விவாதம். இதில் அமெரிக்கா பிரான்ஸ், இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, இத்தாலி, சில்லி போன்ற நாடுகளிலிருந்து 30க்கும் மேற்ப்பட்ட விஞ்ஞானிகள் கலந்துகொண்டார்கள். இதில் கத்தோலிக் சபையை சேராதவர்களும் அடங்கும். கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய Rev.Jose Gabriel Funes (வெர்டிகன் வானியலரங்கின் இயக்குனர்) “வேற்றுக்கிரகவாசி இருக்கலாம் என்பது பற்றிய கருத்தரங்கில் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை, ஆனாலும் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்பது தெளிவாகிறது. இது போன்ற கருத்தரங்குகள் நடத்துவதால் நாம் கடவுள் நம்பிக்கையிலிருந்து விலகிச் செல்கிறோமோ என்று அச்சம் ஏற்படத் தேவையில்லை. கடவுளின் சக்தி மிகப் பெரியது, அவரின் படைப்பாற்றலுக்கு நாம் வரம்புகள் விதிக்க முடியாது. ஒருவேளை வேறுக்கிரகங்களில் நம்மைப் போன்ற உயிரினங்கள் இருப்பது கண்டறியப்பட்டாலும் அவைகளும் நம் கடவுளின் படைப்புகளில் ஒன்றே” என்று மிகவும் சாமர்த்தியமாக கூறிமுடித்தார்.
1633ல், 'பூமியை சூரியன் சுற்றவில்லை, சூரியனைத்தான் பூமி சுற்றிவருகிறது' என்ற கருத்தை கலிலியோ வெர்டிகன் சபையில் நம்பவைக்கப் படாதபாடுபட்டார். ஆனால் இன்றோ அறிவியலில் உச்சங்களான பெருவெடிப்பு கொள்கை, வேற்றுக்கிரகவாசிகள் கொள்கை, பிரபஞ்சம் உருவான கொள்கைப் போன்ற அறிவியல்பூர்வமான விவாதங்களை நடத்த கத்தோலிக்க திருச்சபை தயாராகிவிட்டது. அனைத்து மதங்களிலும் இப்படி ஒரு மாற்றம் கட்டாயம் தேவை. அறிவியலையும் ஆன்மீகத்தையும் தள்ளித்தள்ளி தூரமாக வைப்பதில் யாருக்கும் எந்த ஒரு பயனுமில்லை. இரண்டையும் இணைத்து ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடத்தவேண்டும். அப்போதுதான் இரண்டிலும் புரியாத புதிராக இருக்கும் பல மர்மங்கள் வெளிச்சத்திற்கு வரும்.
மேலே கூறியது போல சூரியன் எந்தக் கோள்களையும் சுற்றவில்லை பூமி மற்றும் ஏனைய கோள்கள் தான் சூரியனைச் சுற்றுகின்றன என கலிலியோவுக்கு முன்பே இந்துக்களுக்கு தெரிந்திருக்கிறது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே நடந்துவரும் நவக்கிரக வழிபாட்டை கூர்ந்து கவனித்தால் அதில் சூரியன் மையத்தில் இருப்பதை காணலாம். 
பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட சுமேரியர்களின் களிப்பட்டையிலும் சூரியக் குடும்பத்தைப் பற்றித் தகவல்கள் பல காணப்படுகின்றன.
பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு இந்தத் தகவல்களை கொடுத்தது யார்? 
இப்படி பதில் காணமுடியாத கேள்விகள் இந்த உலகில் கொட்டிகிடக்கின்றன.
நாம் இன்று செவ்வாய்கிரகத்திற்கு மனிதனை அனுப்பத் தயாராகிவிட்டோம், விண்கல்லுக்கும் விண்கலம் அனுப்பி அதனை வெற்றிகரமாக இறக்கியாகிவிட்டது. நாம் நம்மையே கண்டு வியந்துகொண்டிருக்கும் வேளையில், நம் பின்னிருந்து ஒரு குரல், ‘நீ என்னதான் தொழில்நுட்பத்தில் முன்னேறிவிட்டதாக மார்தட்டிக்கொண்டாலும், உன் தொழில்நுட்பங்கள் என் அருகில்கூட வரமுடியாது’ என்று கூறுகிறது. எங்கிருந்து வருகிறது அந்தக் குரல் என்று தேடிப்பார்த்தால், அட நம்ம எகிப்த் பிரமிட்.
இதைக் கற்பனையாக கூறினாலும் இதில் இருக்கும் கரு உண்மை. நம் தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு அதன் அருகில் கூட செல்லமுடியவில்லை. கடந்தகால வரலாற்றில் வேற்றுக்கிரகவாசிகள் மனித இனத்திற்கு உதவியிருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு சாட்சி தேவையில்லை. எகிப்த் கிரேட் பிரமிட்’டை பற்றி எத்தனை முறை படித்தாலும் அதன்மேல் இருக்கும் ஆர்வம் கொஞ்சமும் குறைவதில்லை. அதனை பற்றி முழுவதும் எழுத ஒரு புத்தகம் போதாது. நமக்குக் தேவை அதிலிருந்து சிறு துணுக்குகள்தான்.

எகிப்த் கிரேட் பிரமிட்’டை பற்றி எத்தனை முறை படித்தாலும் அதன்மேல் இருக்கும் ஆர்வம் கொஞ்சமும் குறைவதில்லை. அதனை பற்றி முழுவதும் எழுத ஒரு புத்தகம் போதாது. நமக்குக் தேவை அதிலிருந்து சிறு துணுக்குகள்தான். 

இந்த கிரேட் பிரமிட் கிட்டத்தட்ட 4500 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. எதற்காக கட்டப்பட்டது என்பது இன்றுவரை கேள்விக்குறியே.
இதற்கு 2 - 30 டன்கள் எடை கொண்ட 23 லட்சம் பாறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் சில 50 டன்கள் வரை எடை கொண்டது.
இந்த பிரமிடின் உள்ளே நிலவும் வெப்பநிலை (200C) பூமியின் சராசரி வெப்பநிலைக்கு சமம்.
பிரமிடுக்கு மேல் கூறையாக 15 டன்கள் எடை கொண்ட ஒரு லெட்சத்து நாற்பதாயிரம் Casing Stone’களை கண்ணாடிபோல வளவளப்பாக தேய்த்து அடுக்கியிருக்கிறார்கள். சூரிய ஒளி இதன்மீதுபட்டு மிகவும் பிரகாசமாக எதிரொலித்திருக்கிறது. இதனை பூமியில் இன்னொரு சூரியன் என்று கூறும் அளவுக்கு பிரகாசமாக இருந்திருக்கிறது. எகிப்தியர்கள் இதனை ‘Ikhet’ என்று அழைத்துள்ளார்கள் அதற்கு ‘பிரமாண்ட ஒளி’ என்று பொருள்.
பிரமிடின் நான்குமூளைகளும் நிலநடுக்கம் மற்றும் பிற காலநிலை மாற்றங்களால் பாதிக்காதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாறைகளுக்கு இடையே ஒட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட பசை அந்த பாறைகளைவிட வலுவானது. அதனால்தான் இன்றுவரை எந்த ஒரு இயற்கை சீற்றத்தாலும் பிரமிடை அசைக்கமுடியாவில்லை. அதில் இருக்கும் வேதிப்பொருள்கள் கண்டறியப்பட்டுவிட்டன. ஆனால் அந்த கலவைகளை எப்படி உருவாக்குவது என இன்றளவும் கண்டறிமுடியவில்லை.
பூமியின் Center Of Mass இரண்டு இடங்களில் காணப்படுகிறது. ஒன்று கடலுக்கு அடியில் இருக்கிறது, மற்றொன்றின் மீதுதான் கிரேட் பிரமிட் கட்டப்பட்டுள்ளது.
கிரேட் பிரமிட்’ன் நான்கு பக்கங்களும் சிறிது உள்ளே வளைந்து காணப்படுகிறது. இதனைச் சாதரணமாக பார்க்கமுடியாது. உயரத்திலிருந்து குறிப்பிட்ட அளவு வெளிச்சத்தில் பார்க்கும்போதுதான் இந்த அமைப்பு தெரியும். 
பிரமிடில் உள்ள கற்கதவுகளில் சில 20 டன் வரை எடை கொண்டது. ஆனால் இதனை திறக்க நாம் சிறிய அளவு சக்தியைப் பயன்படுத்தினால் போதும், அவ்வளவு நுட்பமான அமைக்கப்பட்டுள்ளது.
பிரமிடின் இரண்டு வழிகளில் ஒன்று Alpha Draconis’யை பார்க்கிறது. தெற்கில் இருக்கும் மற்றொன்றான King Champer’னின் வழி Alnitak நட்சத்திரத்தை நோக்கிப் பார்க்கிறது. இந்த நட்சத்திரம் எகிப்தின் கடவுளான Osiris என்று கூறப்படுகிறது. இது தற்போதைய Orion நட்சத்திரத்தில் ஒன்று. இந்த அமைப்புகள் பிரமிட் கட்டப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது.
கிரேட் பிரமிட் கட்டப்பட்ட நாளிலிருந்து 3800 வருடங்கள் வரை இதுதான் உலகின் உயரமான கட்டிடமாக இருந்துள்ளது.
பிரமிடின் அமைப்பு Orion நட்சத்திர அமைப்புடன் கச்சிதமாக பொருந்துகிறது.
இதனை Christopher Dunn என்பவர் ஆய்வு செய்து அறிக்கையை ஒன்றை வெளியிட்டார். அதில் 
‘பிரமிட் வழிபாட்டு தளமோ, பிணங்களை அடுக்கிவைக்கும் கல்லறையோ அல்ல. அது நம்மால் கண்டறியப்படாத தொழில்நுட்பக்குவியல். அது நம்மால் உருவாக்க முடியாத இயந்திரம். Tectonic அதிர்வுகளை மின்சாரமாக மாற்றும் இயந்திரமாகக்கூட இருக்கலாம். இன்றைய தொழில்நுட்பவல்லுநர்கள் இந்த இயந்திரத்தை மீண்டும் உருவாக்க நினைத்தால் இதில் இருக்கும் தொழில்நுட்பத்தை முழுவதுமாக அறிந்துகொள்ளவேண்டும். அதன்பின் இதற்கு பயன்படுத்திய கருவிகளை உருவாக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார். 
அவர்கூறியது முற்றிலும் உண்மை, எகிப்த் கிரேட் பிரமிட்’ஐ இறந்த உடல்களை பதப்படுத்த உருவாக்கிய கட்டிடம் என்று இன்னும் நாம் நம்பிக்கொண்டிருப்பதும் அடுத்த தலைமுறையை அதே கண்னோட்டத்தோடு சிந்திக்க தூண்டுவதும் மிகப்பெரிய முட்டாள்தனம். அது ஒரு இராட்சச இயந்திரம், அதன் தொழில்நுட்பத்தை நாம் இன்னும் அடையவில்லை. Christopher Dunn கூறியதுபோல மின்சாரம் உருவாக்கும் கருவியாகதான் இருக்கவேண்டும் என்பதல்ல. Teleportation கருவியாக கூட இருக்கலாம். ஆம், நம் புகைப்படங்களை எப்படி 01 என்ற பைனரி கோடாக மாற்றி e.Mail அனுப்புகிறோமோ அதே போல் உயிருள்ள மனிதர்களையும் கோடாக மாற்றி வேறு இடத்திற்கு அனுப்பும் டெலிப்பொடெசன் கருவியாகவும் இருக்கலாம். காலப்பயணத்திற்கு பயன்படும் இயந்திரமாகவும் இருக்களாம். எகித்தியர்களின் கூற்றுப்படி அவர்களின் அரசர் (நட்சத்திர கடவுளின் மகன்) இறந்த பின்னும் உயிர் திரும்புவார் என்றும், வேறு உலகத்தில் உயிர்வாழ்வார் என்றும் நம்பியிருக்கிறார்கள் (இந்த இடத்தில் ஏசுவின் இறப்பை நினைவில் கொள்ளவும்). அதற்கு இந்த பிரமிட் பயன்பட்டதாகவும் கூறப்படுகிறது. (ஏசு உயிர் திரும்பியது ஒரு குகையில்) ஒரு பாலைவனத்தில் செயற்கையாக குகையை உருவாக்கியிருப்பார்களோ? இவர்கள் உயிர் திரும்பும் போது ஏற்படும் வெப்பம் அல்லது ஒளி பிளம்பை தாங்கும் சக்தி பாறைக்குதான் உண்டோ என்னவோ?
அது எதுவாக இருந்தாலும் அதன் தொழில்நுட்பத்தை மனித இனம் இன்னும் நெருங்கவில்லை. அப்படி இருக்க அதனை 4500 வருடங்களுக்கு முன்பு அவர்களால் எப்படி கட்ட முடிந்தது? அதனை அறிவில் மேம்பட்ட வேற்றுக்கிரகவாசிகளின் துணையின்றி மனிதன் தானாக செய்திருக்க வாய்பேயில்லை. 
பாறைகளை துண்டாடுவதற்கு, துளையிடுவதற்கு, அதனைத் தூக்கிச் செல்வதற்கு, அடுக்குவதற்கு, என்று அவர்கள் எதனைப் பயன்படுத்தியிருப்பார்கள் என்பது இன்றுவரை கண்டறியப்படாத மர்மகவே இருந்துவருகிறது.
பாறைகளை மிகவும் கச்சிதமாக இன்று நாம் இயந்திரங்களைக் கொண்டு அறுப்பதைப்போல அறுத்துள்ளார்கள். எதனைப் பயன்படுத்தி இப்படி செய்தார்கள்? 
இவைகள் மட்டுமல்ல இதே போன்று கடவுள்கள்(?) துணையுடன் கட்டப்பட்ட கட்டிடங்கள் இந்த உலகில் ஏறாளம்…..

#தமிழர்கள் #செவ்விந்தியர்கள் 

சிறிய கூட்டமாக வாழ்ந்த மனிதர்கள் , நாகரீக வளர்ச்சி அற்ற மனிதர்கள் என்றெல்லாம் ஐரோப்பிய ஆளும் வர்க வரலாற்று ஆசிரியர்களால் வர்னிக்கப்பட்ட செவ்விந்தியர்கள் , அந்த ஐரோப்பியர்களுக்கு முன்பாகவே நாகரீக வளர்ச்சி அடைந்திருந்தார்கள் , தத்துவங்களிலும், இயற்கையை அறிந்திருந்த விதத்திலும் அவர்கள் ஐரோப்பியர்களை மிஞ்சியே இருந்தார்கள் .அதற்கு எடுத்துக்காட்டாக வட அமேரிக்காவின் மிசுசிப்பி நதிக்கரையில் தோன்றிய சகோகிய நகரையும் , அதன் மக்களையும் எடுத்துககொள்ளலாம். 

சகோகியா , சூரிய நகரம் என்று அழைக்கப்பட்டது , கி.பி 750 முதல் கிபி 1300 வரை இந்த நகரம் செயல்பட்டுள்ளது. 13ஆம் நூற்றாண்டின் இறுதியில் சுமார் 40,000 மக்கள் இந்த நகரத்தில் வாழ்ந்துள்ளனர்.அதில் பெரும்பாலானோர் உழவர்கள், மீனவர்கள், வேட்டுவர்கள். நகரை சுற்றியும் மக்காச்சோள வயல்கள் சூழ்ந்திருந்தன. மக்கள் பெரிய குடிசைகளில் வாழ்ந்தார்கள்.

சூரியனில் இருந்து வந்த ஒரு தலைவன் இந்த நகரை தொற்றிவித்ததாக கருதப்படுகிறது. அவர் ஒரு ஆன்மீக குருவாகவும், அரசராகவும் வாழ்ந்துள்ளார்.அவர் அந்த நகரிலேயே பெரிய மண் மேட்டில் வாழ்ந்துள்ளார் . அந்த மேடு மனிதர்களால் கட்டப்பட்டது , 16 ஏக்கர் அளவு பெரிய அடித்தளம் கொண்டது. இதை முனிவர்மேடு(monks mound) என்று அழைக்கிறார்கள். இது மட்டும் அல்லாமல் இன்னும் நிறைய பெரிய மேடுகள் இந்த மக்களால் கட்டப்பட்டு உள்ளது அதில் ஒன்று பாம்பு மேடு (great serpent mound).

இந்நகரை தோற்றிவித்த அந்த சூரிய தலைவனால் சில மனித விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது, இவைகளே சகோக்கிய மக்களின் வாழ்வியல் சட்டமாகவும் இருந்துள்ளது . 

எந்த ஒரு மனிதனும் மற்றொரு மனிதனை தற்காப்பை தவிர்த்து வேறு காரணத்திற்காக கொல்லக்கூடாது.

தன் மனைவியை தவிர மற்ற பெண்ணை ஒரு ஆண் அறிந்திருக்கக் கூடாது.

அடுத்தவர்களின் பொருட்களை திருடக்கூடாது.
பொய் சொல்லக்கூடாது, மது அருந்தக் கூடாது , பேராசைக் கொள்ளக் கூடாது.

தேவையில் உள்ளவர்களுக்கு செல்வத்தைப் பகிர வேண்டும். 

இவைகளே அந்த சூரிய தலைவன் வகுத்தச் சட்டங்கள்....

தமிழர்களின் மெய்யியல் தத்துவங்களுக்கும் சகோகிய மக்களின் தத்துவங்களுக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது. 

மேன்மை பெற்ற மக்களுக்கு இந்த பாவ உலகம் இடம் தருவதில்லை போலும் பின்னாட்களில் இம்மக்களுக்கு நடேந்தேரிய அவலம் மனித இனத்திற்கே என்றும் மறையா துயரம்...
செவ்விந்திய மக்களின் சரித்திரம்.

--தொடர் தொடரும்


யார் கடவுள்? Episode --6

பெருவின் பண்டைய Inca ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கோட்டை ஒன்று இருக்கிறது. இதில் இருக்கும் கற்கள் 70 லிருந்து 360 டன்கள் வரை எடை கொண்டது. இத்தனைப் பெரிய கற்களை எப்படி கட்சிதமாக வெட்டினார்கள் என்பது ஆச்சர்யமான ஒன்று, கட்சிதம் என்றால் பிறந்த நாள் கேக் வெட்டுவது போல அவ்வளவு நேர்த்தியாக வெட்டியிருக்கிறார்கள். அந்த பாறைகளை வெட்டியெடுத்த குவாரிகளை பார்க்கும் போது ஆச்சர்யம் இன்னும் அதிகமாகிறது, நடுப்பகுதியை எப்படி இவ்வளவு நுணுக்கமாக வெட்டினார்களோ? இது அனைத்தையும்விட ஆச்சர்யம் அந்தப் பாறைகளை ஒன்றோடு ஒன்று கச்சிதமாக பொருந்தும்படி அடுக்கியிருப்பது. அடுக்குவதென்றால் தலைமுடி கூட நுழைய இடைவெளியில்லாதவாறு அடுக்குவது. எப்படி இவர்களால் இதைச் செய்யமுடிந்தது. அதற்கு இங்கிருக்கும் பதில் கடவுள் உதவினார்.
The Trilithon of Baalbek Lebanon.
இன்றைய Lebanon நாட்டில் இடிந்த நிலையில் காணப்படும் இந்தக் கட்டிடம் கிட்டத்தட்ட 2300 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. வானுயர நிற்கும் தூண்கள், பிரம்மாண்ட கட்டிடக்கலை என்று இவை அனைத்தும் தூக்கிச் சாப்பிடும் ஆச்சர்யம் இதன் அடித்தளத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பெரிய மூன்று பாறைகள். பெரிது என்றால் எவ்வளவு பெரிது என்று நினைக்கிறீர்கள், அதன் அளவுகள் 62 அடி நீளம், 14அடி அகலம், 11.3 அடி உயரம். அதன் எடை சராசரியாக 1000 டன்கள் (10 இலட்சம் கிலோ). இந்த இடத்திலிருந்து சுமார் 1.6 கி.மீட்டர் தொலைவில் இருக்கும் கற்குவாரியில் இருந்துதான் இவைகளை இங்கு கொண்டுவந்திருக்கின்றன. அந்த இடத்தில் பயன்படுத்தாத இன்னும் ஒரு பெரிய பாறை துண்டுக் கிடக்கிறது இது அந்த மூன்றையும்விட பெரியது. கிட்டத்தட்ட 1200 டன்கள் (12 இலட்சம் கிலோ) எடை கொண்டது. (படத்தில் அந்த வட்டத்தில் இருப்பவர்கள் மனிதர்கள்) இவை அனைத்தையும் எப்படி இவர்களால் நகர்த்தி, அடுக்கி இப்படி ஒரு கட்டிடத்தை கட்டியிருக்க முடியும். இங்கும் அதே பதில்தான் ‘கடவுள் இந்தக் கட்டிடம் கட்ட உதவிசெய்தார்’.
கடவுளே (அறிவில் மேம்பட்ட வேற்றுக்கிரகவாசிகளே) இதனைக் கட்ட உதவிசெய்திருந்தாலும் பெரிய பெரிய பாறைகளை பயன்படுத்தியதற்குக் காரணம் என்ன? மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இப்படிப் செய்திருக்கலாம். அப்படி ஈர்க்கப்பட்டு வரும் மக்கள் இதிலிருக்கும் கட்டிடக்கலைகளின் நுட்பங்களை அறிந்துகொள்வார்கள். அவர்களுக்கும் கற்பித்தது போல் ஆகிவிடும்.
எப்படி இவ்வளவு பெரிய பாறைகளை நகர்த்தியிருப்பார்கள்? அது ஒன்றும் பெரிய காரியமில்லை, நாம் காண்டறியாத ஒரு தொழில்நுட்பம் போதும் அதற்கு. 
Levitation பொருளையோ ஆளையோ அந்தரத்தில் மிதக்கவைப்பது. ஒரு பொருளை எடை இழப்பு செய்து அதனை தரைக்கும் வராமல் பூமியைவிட்டு ஆகாயத்திற்கும் செல்லாமல் நமக்குத் தேவையான இடத்தில் மிதக்கவைக்க முடியும். இதற்கான ஆய்வுகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
விஞ்ஞானிகள் சிறிய அளவில் அதில் வெற்றியும் பெற்றுள்ளார்கள், ஒலியை பயன்படுத்தி சிறிய அளவிலான பொருளை அந்தரத்தில் மிதக்கவிட்டனர். நாம் ஒளியை பயன்படுத்தத்தெரிந்த அளவு இன்னும் ஒலியை பயன்படுத்தவில்லை. ஒலியால் நமக்கு கிடைக்கவிருக்கும் தொழில்நுட்பங்கள் ஏறாலம்.
நம்மிடம் இருக்கும் தொழில்நுட்பம், நாம் இனி கண்டறியப்போகும் தொழில்நுட்பம் இவை அனைத்துமே நமக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். இந்தப் பிரபஞ்சத்திற்கும் அடுத்தடுத்த பரிமாணங்களில் வாழும் வேற்றுக்கிரவாசிகளுக்கும் ரொம்ப பழையது.
வேற்றுக்கிரகவாசிகள் நம் பூமிக்கு வந்தார்கள், அவர்களுடன் மனித இனம் தொடர்பில் இருந்தது என்பதற்கான ஆதாரங்களை தேடித் தேடி பார்த்துவருகிறோம். அதன் வரிசையில் நாம் பார்க்க போகும் அடுத்த ஆதாரம்….
நாஸ்கா கோடுகள்
பெரு நாட்டில் இருக்கும் நாஸ்கா பாலைவனத்தில் வரையப்பட்டிருக்கும் கோடுகள்தான் நாஸ்கா கோடுகள். கோடுகளில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது? என்றுதானே நினைக்கிறீர்கள், இருக்கிறதே. அந்த கோடுகள் வரையப்பட்டது கிட்டத்தட்ட 1500 வருடங்களுக்கு முன்பு, மேலே படிந்திருக்கும் பழுப்பு நிற சிறு கற்களை அகற்றுவதன் மூலம் அதன் அடியில் இருக்கும் வெண்ணிற மணல் வெளியே தெரிகிறது, இப்படியாகத்தான் இந்த கோடுகள் வரையப்பட்டுள்ளன. இங்கே மழையின் அளவு மிகமிகக் குறைவு என்பதால் இவைகள் நீண்ட காலமாக அழியாமல் அப்படியே இருக்கின்றன. அதனைத் தரையிலிருந்து பார்த்தால் கோடுகளாகதான் தெரியும், குறிப்பிட்ட உயரத்தில் இருந்து பார்த்தால் மட்டும்தான் அதில் வரையப்பட்டிருக்கும் உருவம் தெரியும். இதில் இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் வரையப்பட்டுள்ள படங்களில் கோடுகள் ஆரம்பித்த இடத்திலேயே முடித்திருப்பதால் ஆரம்பம் எது? முடிவு எது? என்று கண்டறிய முடியாது. அதாவது ஒவ்வொரு படமும் ஒரே கோட்டில் வரையப்பட்டது. சிலந்தி, பறவைகள், மீன், நாய், குரங்கு, மனிதன் போன்ற உருவங்கள் இங்கே வரையப்பட்டுள்ளன. ஒரு மலைசரிவில் மனித உருவமும் வரையப்பட்டிருக்கிறது, பார்ப்பதற்கு விண்ணை நோக்கி கை அசைப்பதைப் போல இருக்கிறது. இவர்கள் எப்படி இதனை வரைந்தார்கள் என்பதை விட்டுத்தள்ளுங்கள். எதற்காக வரைந்தார்கள்? என்பதே ஆச்சர்யமான ஒன்று. ஏனெனில் தரையிலிருந்து பார்த்தால் வெறும் கோடுகள் மட்டும்தான் தெரியும், விமானத்தில் பறந்து சென்று பார்த்தால் மட்டும்தான் இதில் இருக்கும் உருவம் தெரியும். 
நாஸ்கா மக்கள் தங்கள் கடவுளை வழிபடுவதற்காக இப்படியான உருவங்களை வரைந்த்தாக கூறப்படுகிறது.
ஒருவகையில் ஏற்றுகொள்ளக் கூடிய பதில்தான். நாம் பிரம்மாண்டமான கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் கட்டி வழிபடும்போது, அவர்களும் இப்படி பிரம்மாண்டமாக உருவங்களை வரைந்து வழிபட்டிருக்கலாம். 
இவர்கள் வழிபடுவதற்காக இப்படியான உருவங்களை வரைந்தார்கள் என்பதை விட அவர்கள் கடவுளை வரவேற்பதற்க்காக வரைந்தார்கள் என்பதே நம்பும்படியாக இருக்கிறது.
காரணம் அங்கு இருக்கும் சில மலைகளின் சிகரங்கள் தட்டையாக்கபட்டு விமான ஓடுதளங்களைப் போல இருக்கிறது. இதில் குறிப்பிட வேண்டிய ஒன்று அவைகள் அனைத்துமே 1500 வருடங்களுக்கு முந்தையவை.
என்ன 1500 வருடங்களுக்கு முன்பு விமான ஓடுதளமா? என்று ஆச்சர்யமாக இருக்கிறதா?

என்ன 1500 வருடங்களுக்கு முன்பு விமான ஓடுதளமா? என்று ஆச்சர்யமாக இருக்கிறதா?
அருகில் இருக்கும் படத்தைப் பார்த்தால் உங்களுக்கே புரியும். அந்த பெரிய மலைச் சிகரங்கள் அழகாக தட்டி, தட்டையாக்கி விமானம் தரையிறங்கத் தேவையான நீளம், அகலம் என்று மிகத் தெளிவாக ஒரு விமான ஓடுதளத்தையே உருவாக்கியிருக்கிறார்கள்.
இது தானாக உருவானதல்ல என்று புவியியல் ஆய்வாளர்கள் உறுதியாக கூறுகிறார்கள். அப்படியானால் யார் இதனைச் செய்திருப்பார்கள்? இங்கே வாழ்ந்த பண்டைய மக்களா? எதற்காக செய்தார்கள்? அவர்கள் கடவுள் (வேற்றுக்கிரகவாசிகள்) இங்கே தரையிரங்கியிருப்பாரோ? ஒருவேளை அவர்கள்தான் இந்த விமான ஓடுதளத்தை நிறுவியிருப்பார்களோ? அப்படியானால் உலகின் பழமையான விமான ஓடுதளம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.
அப்படியானால் விமானம் கண்டுபிடிப்பை பற்றிய நமது வரலாறு மாற்றியமைக்கப்படவேண்டும். ஏனெனில் விமான ஓடுதளம் விமானத்திற்காகத்தானே உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். 
பண்டைய காலத்திலேயே விமானங்கள் பற்றியச் செய்திகளை நம் முன்னோர்கள் விட்டுச் சென்றுள்ளார்கள் என்பதை இங்கே தெரியப்படுத்த விரும்புகிறேன். தென் அமெரிக்காவில் 2” நீளம் கொண்ட தங்கத்தால் ஆன சிலப் பொருட்களை ஆய்வாளர்கள் கண்டறிந்தார்கள். இதன் சரியான காலத்தைக் கணிக்க முடியாவிட்டாலும் குறைந்தது 1000 வருடங்களுக்கு மேல் பழமையானது என்பது மட்டும் உறுதி. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அவைகளில் சில பார்ப்பதற்கு இன்றைய நவீன விமானங்களின் உருவத்துடன் ஒத்துப்போகிறது. விமான தொழில்நுட்பவியலாளர்கள் 1997ல் இதன் அளவுகளை அப்படியே பெரிதாக்கி செயல்பாடுகளை ஆராய்ந்தார்கள். எஞ்சின் மற்றும் ஏனைய அத்தியாவசியப்பொருட்கள் இணைத்தல் இது விமானத்திற்கான சரியான வடிவம்தான் என்று கூறினார்கள். சில மறுப்பாளர்கள் இது விமானத்தின் வடிவம் அல்ல, பறவை அல்லது மீனின் வடிவம் என்று கூறிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இதனை ஏற்க மறுப்பவர்களும் வாயடைத்துபோகும் ஆதாரம் தான் எகிப்தில் கிடைத்தது. 
எகிப்தில் உள்ள ஒரு கோவில் சுவரில் இருக்கும் கல்வெட்டில் ஹெலிகாப்டர், போர்விமானம், உளவுவிமானம், நீர்முழுகிக் கப்பல், பறக்கும் தட்டு என்று பார்ப்பவர்களுக்கு ஒரு நிமிடம் தலையே சுற்றிவிடும் அளவில் தெளிவாக செதுக்கியிருக்கிறார்கள். 
அவர்களுக்கு எப்படி விமானங்கள் பற்றிய அறிவு கிடைத்திருக்கும்? என்று யோசிப்பவர்களுக்கு இங்கே ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன். ராமாயணகாலத்திலேயே (கிட்டத்தட்ட 17,000 வருடங்களுக்கு முன்பு) விமானங்கள் பயன்படுத்தப்பட்டன என்று ராமாயணத்தில் பார்த்தோம். அன்றைய இலங்கையை ஆண்ட இராவணன் என்ற தமிழ் மன்னன் மிகுந்த அறிவாற்றல் கொண்டவர், இலங்கையிலிருந்து இந்தியா வருவதற்கோ, சீதையுடன் இலங்கைக்கு திரும்பிசெல்வதற்கோ இராவணன் எந்த சிரமமும் படவில்லை. ஆகாய மார்க்கமாக வந்து சென்றுள்ளார். அதற்காக அவர் பயன்படுத்திய விமானத்தை நினைக்கும் இடத்தில் தரையிறக்க முடியும், எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் செங்குத்தாக மேலே ஏறி பறக்க செய்ய முடியும். உண்மையில் அந்தவகைத் தொழில்நுட்பம் இன்றுவரை நம்மால் கண்டறியப்படாத ஒன்று. அப்படியானால் இராவணன் எவ்வளவு பெரிய அறிவியலாளராக இருந்திருக்க வேண்டும்? அந்தத் தகவலை ஏன் வரலாறு ஏந்திவரவில்லை? எந்த இங்கேதான் நம் மக்கள் கோட்டைவிட்டனர், இராவணனுக்கு பத்துத்தலை என்பதை எண்களின் அடிப்படையில் பக்கவாட்டில் பத்துதலைகளை அடுக்கி பார்த்து இராவணனை அரக்கனாக்கிவிட்டோம். உண்மையில் அந்த உவமைக்கு அதுதான் அர்த்தமா? 
உதாரணமாக அதிகம் பேசும் ஒருபெண்ணை “இவளுக்கு வாய்நீளம்” என்பார்கள், உண்மையில் அந்தப் பெண்ணின் வாய் நீளமாக இருக்காது அவள் அதிகம் பேசுகிறாள் என்பதையே குறிக்கவே அப்படி ஒரு உவமைச் சொல். அதேபோல பத்துத்தலை என்பது பத்துபேரின் சிந்தனைத் திறனை கொண்டவன் அல்லது சாதாரண மனிதனை போல பத்துமடங்கு புத்திசாலி என்பதை குறிக்கலாமல்லவா? அப்படியானால் இராவணனால் இப்படி ஒரு விமானத்தை கண்டிப்பாக செய்திருக்க முடியும். இங்கே வரலாற்றில் பிழையில்லை நம் புரிதலில்தான் பிரச்சனை.
பண்டைய விமானம் பற்றிய செய்தியே பலருக்கு நம்பமுடியாமல் இருக்கும், அடுத்து நாம் பார்க்கப்போகும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விண்வெளிவீரர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும். 
அந்த படத்தில் காட்டப்பட்டுள்ள சிற்பங்கள் அனைத்தும் இன்று நேற்று செதுக்கப்பட்டதல்ல, மிகவும் பழமையானது. 
நவீன அறிவியலுக்கும் இதற்கும் வெகுதூரம் அப்படி இருக்க இவ்வளவுகச்சிதமாக விண்வெளிவீரர் உருவத்தை எப்படி இவர்களால் உருவாக்கியிருக்கமுடியும். தலைக்கவசம், உடல்கவசம், முகத்தில் ஆக்ஸிஜன் மாஸ்க், பின்புறம் ஆக்சிஜன் சிலிண்டர் என்று மிக கச்சிதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்றைய விண்வெளிவீரர்களின் படத்துடன் ஒப்பிட்டு பார்க்கவும். 
மாயன் நாகரிக மக்களிடம் மனிதன் விண்வெளியில் பயணம் செய்வதற்கான தொழில்நுட்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களின் சிற்பக்கலையில் அதனைக் காணமுடிகிறது. ஒரு மனிதன் விண்வெளி ஓடத்தில் அமர்ந்திருப்பதைப் போல செதுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல இறக்கையுடன் கூடிய மனிதர்கள் என்று புராணக்கதைகளில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. கிருஸ்தவர்கள் அவர்களை இறைத்தூதர்கள் அல்லது தேவதைகள் என்று அழைக்கிறார்கள். 
இயற்கையாக அப்படியான உடலமைப்பு சாத்தியமில்லை. ஆனால் செயற்கையில் இறகுடன் கூடிய சிறிய விமானத்தை பொருத்தி பறக்கமுடியும் (Jetman). அந்த தேவதைகள் (வேற்றுக்கிரகவாசிகள்) இப்படியாக ஒரு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கலாம் அல்லவா? 
இந்துமதக் கடவுளான விஷ்ணு அவரது வாகனமான கழுகில் ஏறிப் பயணம் செய்வாராம், உண்மையில் கழுகு மனிதனை சுமந்துகொண்டு பறந்து செல்லமுடியுமா? என்றால் அதற்கு கண்டிப்பாக சாத்தியம் இல்லை. ஆனால் மனிதன் பயணிக்கும் விமானம் கழுகைப் போன்ற வடிவத்தில் இருக்கலாம் அல்லவா? அந்தப் படத்தில் இருப்பது ஜெர்மனின் நாசி உளவு விமானம், கீழிருந்து பார்ப்பவர்களுக்கு கழுகு போல் தோற்றமளிக்கும். பறந்துவந்தவர் எல்லா தொழில்நுட்பமும் அறிந்த கடவுள் எனும் வேற்றுக்கிரகவாசியாக இருந்தால் அவரால் இதனை உருவாக்கியிருக்க முடியும்.
சரி நாம் நாஸ்காவுக்கு வருவோம், இந்த ஓடுதளங்களின் மர்மமே தலையை பிய்த்துகொள்ளும் அளவிற்கு இருக்கும் பொது அதனையே தூக்கிசாப்பிடும் அளவில் இருக்கிறது அங்கு காணப்படும் மிக நீண்ட கோடுகள்.

சரி நாம் நாஸ்காவுக்கு வருவோம், இந்த ஓடுதளங்களின் மர்மமே தலையை பிய்த்துகொள்ளும் அளவிற்கு இருக்கும் பொது அதனையே தூக்கிசாப்பிடும் அளவில் இருக்கிறது அங்கு காணப்படும் மிக நீண்ட கோடுகள்.
கோடுகள் என்றாலே பிரச்சனைதான்… ஒரு காகிதத்தில் அளவுகோள் வைத்து ஆடாமல் அசையாமல் மிகச்சரியாக வரைந்தது போல் வரையப்பட்டுள்ளது. 
ஆனால் வரைந்தது காகிதத்தில் அல்ல, நாஸ்காவின் மலைச்சரிவுகளில், ஏதோ ஒரு அடி அல்லது இரண்டு அடி வரையப்பட்டிருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள்.
ஓவ்வொரு கோட்டின் நீளமும் சில பல கிலோமீட்டர்களை தாண்டுகிறது. அவைகள் வேறும் கோடுகள் மட்டுமல்ல, சிக்கலான வடிவியல் சார்ந்த (geometrical) அமைப்புகளும் இங்கு காணப்படுகின்றன. இதனை பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு மனிதன் தான் செய்தான் என்று நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை. அப்படியானால் செய்தது யார்? 
அவர்கள் ஏன் இப்படி செய்யவேண்டும்? ஒன்று எதையேனும் கற்பிக்கும்முயற்சியாக இருக்கவேண்டும் அல்லது அந்த இடத்தில் இருந்து சோதனைக்காக மணல் மற்றும் கற்களை எடுத்திருக்க வேண்டும். ஒருவேளை இரண்டுமே காரணமாக இருக்கலாம்.
நான் முன்பே குறிப்பிட்டிருந்தேன் இங்கு மழையின் அளவு மிகமிகக்குறைவு என்பதால் மேலே படிந்திருக்கும் கற்களை நீக்கினால் அதன் தடம் காலம்காலமாக அழியாமல் இருக்குமென்று. நம் வீட்டில் பயன்படுத்தும் வேக்கியும் க்ளீனரை (Vacuum Cleaner) நினைவில் கொள்ளுங்கள். அதே போன்ற உருவில் பெரிய இயந்திரத்தைக்கொண்டு தாழ்வாக பறக்கும் விமானத்தில் மூலம் இந்த இடங்களில் இருந்து மணல் மற்றும் கற்களை சோதனைக்காக எடுத்திருக்கலாம் அல்லவா?
உங்கள் மனம் இதனை ஏற்க மறுத்தால் வேற்றுக்கிரகவாசிகள் சோதனைக்காக மணல் எடுத்திருக்கிறார்கள் என்பதற்கு இன்னும் ஒரு ஆதாரம்.
பெரு நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் Band of holes பற்றி கேள்விப்பட்டதுண்டா? Band of holes என்றால் வரிசையாக உருவாக்கப்பட்டிருக்கும் துளைகள் என்று பொருள். மலைச்சரிவு ஒன்றின் மீது 3 அடி அகலத்தில் 6-7 அடி ஆழத்தில் சரியான இடைவெளியில் துளைகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒன்று இரண்டல்ல, ஆயிரக்கணக்கான துளைகள். செயற்கைக் கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்க்கும் போது அதன் பிரமாண்டத்தை நீங்கள் உணரலாம். இதனை யார் உருவாக்கியது? இங்கு என்ன தேடினார்கள்? எதை எடுத்தார்கள்? என்று ஆய்வாளர்கள் தலையை பிய்த்துக்கொள்கிறார்கள். ஆனால் பல ஆய்வாளர்கள் இங்கு தங்கத்தைத் தேடியிருக்கலாம் என்று கூறுகிறார்கள். அது உண்மையாகவும் இருக்கலாம்.
ஏனெனில் பெரு நாட்டை ஒரு காலத்தில் தங்கப் பூமி என்று அழைக்கும் அளவிற்கு தங்கத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். 16ஆம் நூற்றாண்டில் இங்கு படையெடுத்து வந்த ஸ்பெயினியர்கள் சில கப்பல்கள் நிறைய தங்கத்தை ஏற்றி தங்கள் நாட்டிற்கு கொண்டுசென்றதாக ஒரு ஸ்பெயினியக் குறிப்பில் காணப்படுகிறது.
இங்கு துளைகள் அமைத்து கனிம வளங்களை சோதனை செய்தது வேற்றுகிரகவாசிகள் தான், என்றால்? அவர்கள் ஏன் தங்கத்தை தேடவேண்டும்? அவர்கள் பொருளாதாரமும் தங்கத்தை சார்ந்துதான் இருக்கிறதோ? என்று சிந்திக்கும் போதுதான் ஒரு உண்மை புரிந்தது. 
தங்கம் ஆபரணங்கள் செய்யவும் பொருளாதாரத்தை கட்டமைக்கவும்தான் பயன்படுகிறது என்று பெரும்பலானவர்கள் நினைத்து வருகிறார்கள். தங்கத்தின் உண்மையான பயன்பாடே வேறு. தங்கம் என்ற உலோகம் ஒரு சிறந்த மின்கடத்தி. நாம் இன்று பயன்படுத்தும் மின்னனு பொருட்கள் அனைத்திலும் தங்கத்தின் பங்கு நிச்சயம் உண்டு. சிறிய அளவே பயன்படுத்தப்பட்டாலும் அதன் பயன்பாடு பெரிது.
அதுமட்டுமல்ல நம் விண்கலங்கள், செயற்கை கோள்கள், விண்வெளி ஓடங்கள் போன்றவற்றில் கதிர்வீச்சை தடுக்கும் கவசமாக தங்கம் பயன்படுகிறது. 
விண்ணில் சுற்றித்திரியும் டெலஸ்கோப்புகள் அனைத்திலும் தங்கம் ஒரு போர்வை போல சுற்றப்படுகின்றன. அப்படி செய்தால்தான் உள்ளே இருக்கும் மின்னனு சாதனங்களை விண்வெளியின் அபாய கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாக்கமுடியும்.
நிலவிற்கு மனிதனை எடுத்து சென்ற விண்கலத்தில் தங்கம் பயன்படுத்தப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.
சிறிய அளவில் விண்வெளியில் விளையாடிக்கொண்டிருக்கும் நமக்கே இந்த அளவு தங்கம் தேவைப்படுகிறதென்றால். நட்சத்திரங்களுக்கு இடையே பயணம் செய்பவர்களாக இருக்கும் வேற்றுக்கிரகவாசிகளுக்கு எவ்வளவு தங்கம் தேவையாக இருக்கும்.
இந்த இடத்தில் கடவுளை வேற்றுக்கிரகவாசிகள் என்று அழைப்பதற்கான சான்று ஒன்று இருக்கிறது.
நம் புராணக்கதைகளில் வரும் கடவுள் தங்கத்தால் ஆன தலைக்கவசம் உடல்கவசம் போன்றவை அணிந்திருந்ததாகவும், தங்கத்தேரில் பவனிவந்ததாகவும் குறிப்புகள் காணப்படுகின்றன. அந்தக் கடவுள் எனும் வேற்றுக்கிரகவாசிகளும் இதேபோல் கதிர்வீச்சிலிருந்து தப்பிக்க இப்படி செய்திருக்கலாம் அல்லவா? அப்படியானால் நாம் நினைப்பது போல கடவுள் தங்கத்தை அழகிற்காக ஆபரணமாக பயன்படுத்தவில்லை.கவசமாகத்தான் பயன்படுத்தியிருக்கவேண்டும். அதனை தவறாகப் புரிந்துகொண்ட மனிதர்கள்தான் அதனை ஆபரணங்கலாக நினைத்து அவர்களும் அணிந்துகொண்டுள்ளனர். தாங்களும் கடவுளாக வேண்டும் என்ற உந்துதலால் அப்படி செய்திருக்கலாம். அதனால் தான் தங்கத்தை அதிகமாக சேர்த்திருக்கிறார்கள, அதன் மதிப்பைக் கூட்டியிருக்கிறார்கள்.
உண்மையை சொல்ல வேண்டுமானால் இன்று நம் பூமியில் இருக்கும் தங்கத்தைவிட அதிக அளவிளான தங்கம் பண்டையக் காலத்தில் பயன்பாடுத்தப்பட்டிருக்கின்றன. ஆபரணமாகவும், மாளிகைகளின் மேற்கூரையாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு சிந்து நதியில் தங்கத்தால் ஆன படகுகள் பயன்படுத்தப்பட்டனவாம். பிரமிடின் மேற்கூறை தங்கத்தகட்டால் நெய்யப்பட்டிருந்தனவாம். அதாவது நாம் இன்று இரும்பை பயன்படுத்து போலவே அன்று தங்கம் அதிக அளவில் இருந்திருக்கிறது. 
இந்த இடத்தில் மிக எளிமையான ஒரு கேள்வி, அன்று புழக்கத்தில் இருந்த அந்த தங்கத்தில் 10% தான் இன்று நம் மனிதர்களிடம் இருக்கிறது. மீதம் 90% தங்கம் எங்கே போயின? 
புதையலாக மறைக்கப்பட்டுள்ளனவா? காற்றில் கறைந்துவிட்டனவா? அல்லது
கடவுள் (எ) வேற்றுக்கிரகவாசிகளுக்கு காணிக்கையாக்கிவிட்டார்களா?
சுமேரியர்களின் களிப்பட்டையில் அவர்களின் கடவுள் தங்கதைக் கேட்டார் என குறிப்புகள் இருக்கின்றன. 
இன்றும், ஒவ்வொரு ஆண்டும் இந்துக்கள் கோவில்களில் தங்கள் கடவுளுக்கு பல ஆயிரம் கிலோ தங்கத்தை காணிக்கையாக்குகின்றன.
இதையேதான் அன்றிலிருந்து இன்றுவரை செய்து வருகிறோமோ? மனித இனத்தின் தோற்றத்திற்கு இதுவே காரணமாகவும் இருக்கலாம்.
மனித இனம் வேற்றுக்கிரகவாசிகளுக்கு தங்கத்தை சேகரித்து கொடுக்கும் தேனீக்களா? என்ன?

மனித இனம் வேற்றுக்கிரகவாசிகளுக்கு தங்கத்தை சேகரித்து கொடுக்கும் தேனீக்களா? என்ன? என்ற கேள்வியுடன் முடித்திருந்தோம்.
அவர்கள் தங்கம் மற்றும் கனிம வளங்களை நம்மிடமிருந்து எடுத்துக் கொண்டிருந்தாலும் அதனை அவர்கள் தானாக செய்யவில்லை நம் மனித இனத்துடன் தொடர்பை ஏற்படுத்தி மனிதர்களின் மூலமாக பெற்றிருக்கிறார்கள். அப்படியானால் அவர்களின் தேவை தங்கம் மட்டும் அல்ல மனித இனத்திற்கிடையேயான தொடர்பும் தான். அன்றைய காலத்தில் தொடர்பு கொண்டவர்கள் ஏன் இன்று தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை? என்ற கேள்வி வரும்.
அவர்கள் தொடர்பில் இருந்தார்கள்… தொடரில் இருக்கிறார்கள்…
அதற்கான ஆதாரங்கள் இனி
Unidentified Flying Object (UFO)
வானில் பறந்து செல்லக்கூடிய கண்டறியப்படாத பொருள், பெரும்பாலும் வட்டவடிவமாகவும், சில சமயங்களில் வெவ்வேறு வடிவங்களிலும் காணப்படுவதாக பார்த்த மக்களாலிடமிருந்து தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. 
National UFO Reporting Centerன் அறிக்கைப்படி உலகம் முழுவதிலிருந்தும் ஒரு மாதத்திற்கு சராசரியாக 400 புதிய தகவல்கள் UFO வை பார்த்ததாக பதிவுசெய்யப்படுகிறதாம்.
இப்படி UFOவை பார்த்தற்கு ஆதாரமாக பலர் தாங்கள் எடுத்த புகைப்படங்களை காட்டுகின்றன, அவைகள் பெரும்பாலும் பொய்யாக உருவாக்கப்பட்டவையாகவே இருக்கின்றன. இதனால் UFOவே பொய் என்ற நிலைக்கு வந்துவிடாதீர்கள். நம்மை ஆச்சர்யத்தின் உச்சிக்கே கொண்டுசெல்லும் பல ஆதாரங்கள் இருக்கின்றன.
1952 ஜூலை 31ல் New Jerseyல் காரில் சென்று கொண்டிருந்த ஒரு தம்பதிக்கு அது மறக்கமுடியாத பயணமாக மாறியது, அவர்களின் காருக்கும் சற்று தொலைவில் வட்டவடிவ பொருள் ஒன்று இங்கும் அங்கும் பறந்து செல்வதை பார்த்தனர். அது என்ன என்று இருவராலும் கணிக்கமுடியாத நிலையில் புத்திசாலிதனமாக தன் கையில் இருந்த புகைப்படகருவியின் மூலம் அதனை படம்பிடித்தனர். இதனைப்பற்றி ஆய்வு செய்பவர்கள் காட்டும் முதல் ஆதாரம் இதுதான். கம்யூட்டர் கிராபிக்ஸ் போன்றவைகள் இல்லாத காலகட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதால் இதற்கு விளக்கம் கொடுப்பது மிகக்கடினம். 
அதனை அடுத்து பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம், 30 ஜூலை 1954ல் நியூயார்க் to லண்டன் விமானத்தில் சென்ற பயணிகள் அனைவரும் ஒருசேரகூறியது. அவர்கள் சென்ற விமானத்திற்கு அருகே பெரிய சிகரெட் வடிவ பொருள் ஒன்று பறந்து வந்ததாம். அந்த விமானத்தில் பயணம் செய்த அனைவருமே அதனை பார்த்திருக்கின்றனர். ஏதேனும் போர்விமானமாக இருக்கக்கூடும் என அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்தகணமே அவர்களின் கண்முன்னே அந்த உருவம் 6 சிறுசிறுப் பகுதிகளாக பிரிந்து இங்கும் அங்கும் சுற்றி திரிந்ததாம். அதனைகண்ட பயணிகளுக்கு பதற்றம் தொற்றிக்கொண்டதாம் ஏனெனில் அப்படியான ஒரு பொருளை அவர்கள் இதற்கு முன்பு பார்த்ததும் இல்லை கேள்விப்பட்டதும் இல்லை. 15 நிமிடங்கள் கழித்து அந்த 6 சிறு பகுதிகளும் ஒன்றாக இணைந்து பழையபடி பெரிய வடிவமாக மாறி விண்ணை நோக்கி பறந்து சென்றுவிட்டதாம். இதனை ஒருவர் மட்டும் கூறியிருந்தால் ஏதாவது தவறு இருக்கும் என்று நினைக்கலாம்.

தொடரும்



--Dr. ஆடலரசன் (யோகி ரமணேந்திரநாத்)
Please Subscribe Vagisha foundation

Saturday 14 May 2022

ரசவாதம்.


துரிசு சுத்தி.

 ஆங்கிலப் பெயர் tridax கிணற்றுப் பூண்டு .
ஒரு அலுமினியம் டம்ளரில் 30 கிராம் துரிசு போடவும் மேற்படி மூலிகைச்சாறு‌200 மில்லி பிழிந்து விடவும். தானே சூடேறி கொதித்து பொங்கும் செம்பு பிரிந்து மிதந்து வரும்.
அதை ரசத்துக்கு கொடுக்க வெண்ணையாகும்
துணியில் பிழிந்து உருட்டி வைக்க இறுகும்.

**********************

வீரச் செம்பு :

வீரம் 10 பலம்
சூடன் 5 பலம்
கெந்தகம் 4 பலம்

ஆகியவற்றை எலுமிச்சம் பழச்சாறு விட்டு 4 ஜாமம் அரைத்து 10 பலம் துருசின் மேல் கவசம் கட்டவும். அதன் மேல் சுண்ணாம்பு சீலை செய்து உலர்ந்த பின்பு மண் கவசம் செய்யவும்.

அதனை 10 எருவில் புடமிட்டு எடுத்து வெங்காரம் கூட்டி உருக்கச் செம்பாகும். வெள்ளி 8 பங்குக்கு செம்பு 2 பங்கு சேர்த்து ஊத பொன் கிடைக்கும்.

Friday 6 May 2022

Root cleaner இருதய அடைப்பை நீக்கும் மருந்து

*Root Cleaner*
==============
ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்புகளை கரைத்து மாரடைப்பில் இருந்து காக்கும் சக்தி வாய்ந்த மூலிகை தீநீர்.

இந்த தீநீர் ரத்தக்குழாயில் உள்ள அடைப்புகளை கரைத்து அதை ஜீரணிக்க உதவுகிறது. கொலாஸ்ட்ரால் அடைப்பை கரைகின்றது. ரத்த உறைவால் ஏற்பட்ட அடைப்புகளை கரைகின்றது. வெரிகோஸ் வெயினால் ஏற்பட்ட இரத்த கட்டுகளை கரைக்கின்றது.

கொரானா வைரஸால் பாதித்தவர்களுக்கு ரத்தக்குழாயினுள் ரத்த உறைவு துணுக்கினால் அடைப்பு ஏற்பட்டு திடீரென மாரடைப்பு ஏற்படுகின்றது அதே போல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ரத்த உறைவு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுவதாக பரவலாக பேசிக் கொள்கிறார்கள்.

கொரோனா தடுப்பு ஊசி போட்டு கொண்டவர்களுக்கு, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டாலோ நடக்கும்போது மூச்சு வாங்கினாலோ அவர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்படலாம்.

இந்த Root cleaner என்ற மூலிகை தீநீரை சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்படவதிலிருந்து தப்பிக்காம்.

இந்த தீநீர் இரத்த உறைவு துணுக்குகளால் ஏற்பட்ட அடைப்புகளையும், கொலஸ்ட்ராலினால் ஏற்பட்ட அடைப்புகளையும் கரைக்கும். இதன் காரணமாக உயர்ந்த ரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.

*தேவையான பொருட்கள்*

1) எலுமிச்சம் பழச்சாறு ஒரு லிட்டர்

2) பூண்டுச்சாறு ஒரு லிட்டர்

3) சின்ன வெங்காயச் சாறு ஒரு லிட்டர்

4) இஞ்சிச் சாறு ஒரு லிட்டர்

5) மாதுளம் பழச்சாறு ஒரு லிட்டர்

6) புதினா இலைச்சாறு ஒரு லிட்டர்

*செய்முறை*

இவைகளை ஒரு பிளாஸ்டிக் கேனில் ஊற்ற வேண்டும்.

1) சதகுப்பை =250 கிராம்

2) ஓமம் = 250 கிராம்

3) சோம்பு = 250 கிராம்

4) பட்டை = 250 கிராம்

5) ஏலரிசி = 100 கிராம்

6) கிராம்பு = 150 கிராம்

7) கருஞ்சீரகம் = 150 கிராம்

8) மருதம் பட்டை = 250 கிராம்

9) கர்கத் பூ = 100 கிராம்

10) வெண்தாமரை பூ = 100 கிராம்

11) ரோஜா பூ = 100 கிராம்

12) செம்பருத்தி பூ = 100 கிராம்

13) சந்தனம் = 100 கிராம்

*செய்முறை*

இவைகளை ஒன்றிண்டாக இடித்து 15 லிட்டர் தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைத்து, அதன் பின்பு அடுப்பேற்றி 10 லிட்டராக சுண்ட வைத்து திப்பியை நீக்காமல் முன்பு கேனில் ஊற்றி வைத்த மூலிகை சாறுகளுடன் கலந்து வைக்கவும். தினந்தோறும் நன்கு கலக்கி விடவும் இந்த கலவை கெட்டுப்போகாதுமசாலா வாசம் வீசும் பத்து நாட்களுக்கு பின்பு  திப்பியை நன்கு வடிகட்டி கொள்ளவும்.

இந்தக் கலவை நீரை வாலையில் வடித்துக் கொள்ளவும்.  எண்ணெய் உறவான தீநீர் கிடைக்கும் அதாவது வழவழப்பான நீர் கிடைக்கும் இந்த Root Cleaner என்ற Heart drops ஐ  பட்டதாரி மருத்துவர்களும் பாரம்பரிய சித்த மருத்துவர்களும் என்னிடம் வாங்குகின்றனர்.

 அற்புதப் பலனை தரும் இந்த மூலிகை தீநீரை திறமையுள்ள மருத்துவர்கள் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். தீநீர் என்பதால் கெட்டுப்போவதில்லை. சாப்பிடுவதற்கு சுலபமானது சிறிது காரம் புளிப்பு சுவையும் உள்ளது.

சிலர் இதனை எலுமிச்சம் பழச்சாறு இஞ்சிச் சாறு பூண்டு சாறு வினிகர் மற்றும் தேன் கலந்து சிரப் போல் தயார் செய்கிறார்கள். இதில் எரிச்சல் தன்மை அதிகம் உள்ளதால் சிலருக்கு வயிற்றில் புண்களை உண்டாக்கும். 

ஆனால் இது தீநீர் என்பதால் எரிச்சல் தன்மை இல்லை அதனால் வயிற்றில் புண்களை உண்டாக்காது வாலையில் வடிப்பதால் மூலிகைகளின் சத்துக்கள் மட்டுமே வெளியேறி நமக்கு எண்ணெய் கலந்த நீராக கிடைக்கும் அதனால் சாப்பிடுவதற்கும் சுலபமானது. எளிதில் ஜீரணிக்கும் தன்மை உடையது. தீநீருக்கு பலன்கள் அதிகம்.

இந்த தீ நீருடன் ரச வீரப்பதங்கம், முப்பூர பதங்கம் போன்றவைகளை சேர்த்து தர ரத்தக்குழாயினுள் எங்கு அடைப்புகள் ஏற்பட்டாலும் எளிதில் கரையும். மருந்து சாப்பிட்ட முதல் நாளே வலி நிற்கும். மருந்தை தொடர்ந்து சாப்பிட மாரடைப்பில் இருந்து தப்பிக்கலாம்.

ரத்தக்குழாயினுள் ஏற்பட்ட அடைப்புகளுக்காக ஆங்கில மருந்து சாப்பிடுபவர்களும் ஆங்கில மருந்துகளுடன் இதனையும் துணை மருந்தாக ,  உணவுப் பொருளாக எடுத்துக் கொள்ளலாம்.

*உட்கொள்ளும் அளவு*

7 மில்லி முதல் 10 மில்லி வரை இந்த தீ நீரை எடுத்து 200 மில்லி வெதுவெதுப்பான நீரில் கலந்து காலை மாலை உணவிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு உட்கொள்ள வேண்டும்.

நன்றி  - jeevasakthi ஐயா

225ml விலை ரூ.350 +50(கொரியர்).கிடைக்கும் தமிழகம் முழுவதும் .. அழைக்க ராஜேந்திரன் 9952206050..