Saturday 30 July 2016

மாடி காய்கறித் தோட்டம்

*மாடி காய்கறித் தோட்டத்தை உருவாக்குவதில் பல் வேறு படிநிலைகள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்:*

*இடம் தேர்வு செய்தல்:*

மாடிப் பகுதியில் அதிகச் சூரியஒளி கிடைக்கும் இடங்கள் மற்றும் அதிகப்படி நீர் எளிதாக வெளியேறுவதற்கான வடிகால் வசதி உள்ள இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

*நீர்க்கசிவைத் தடுத்தல்:*

தேர்வு செய்யப்பட்ட இடத்தில் நீர்க்கசிவைத் தடுப்பதற்கு 4 X 4 சதுர மீட்டரில் பிளாஸ்டிக் விரிப்புகளை விரிக்கவும்.

*செடி வளர்ப்புப் பைகள்*

இதன் பிறகு செடிகளை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கலாம். செடிகள் வளர்ப்பதற்கான...

கீரைபைகள் காய்கறி பைகள் உள்ளன அதற்கு தகுந்தாற்போல் தேர்ந்தெடுத்து பைகளின்  மூக்கால் அளவிற்க்கு மட்டும் தோங்காய்நார் மண்புலு உரம், புண்ணாக்கு  கலந்த வைக்க வோண்டும்

*காத்திருப்பு*

செடிகள் வளர்ப்பதற்கான பைகளில் நிரப்பும்போது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது.தென்னைநார்க் கழிவுகள் நன்கு மக்குவதற்காக, பைகளை ஏழு முதல் எட்டு நாட்களுக்கு அப்படியே வைத்திருக்க வேண்டும். பிறகு தென்னைநார்க் கழிவு கருப்பு நிறமாக மாறிவிடும். அப்போதுதான் பைகள், விதைப்பதற்கு ஏற்றதாக மாறும்.

*செடிகளை வளர்க்கும் காலம்:*

காய்கறிச் செடிகளை எல்லாக் காலங்களிலும் பயிர் செய்யலாம். ஆனால், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், இந்த இரண்டு மாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

*விதைப்பு முறை*

நேரடி விதைப்புமுறை: வெண்டை, கொத்தவரை, செடி அவரை மற்றும் முள்ளங்கி விதைகளை நேரடியாக விதைக்க வேண்டும். விதையின் அளவைவிட இரண்டரை மடங்கு அதிக ஆழத்தில் விதைத்த பிறகு, மண்ணால் மூடிவிடவேண்டும்.கீரை வகைகளின் விதைகள் அளவில் மிகச் சிறியதாக இருப்பதால், ஒரு தேக்கரண்டி விதையுடன் இரண்டு பங்கு மணல் அல்லது நுண்ணுயிர் உரத்தைக் கலந்து தெளிக்க வேண்டும். பஅதன் மேல் பூவாளியைக் கொண்டு நீர் ஊற்ற வேண்டும். விதைகள் நன்கு முளைத்த பிறகு வோறு பைகளில் ஒவ்வொன்றாக வைக்கவும்

*நடவு செய்யும் முறை*

நாற்றுவிட்டு நடவு செய்து பயிரிடும் காய்கறிகளான தக்காளி, கத்தரி, மிளகாய் ஆகியவற்றைக் குழித்தட்டில் விதைக்க வேண்டும். நாற்றின் வயது 30-35 நாட்கள் ஆன பிறகு செடிகளை வளர்ப்பதற்கான பையில் நடவேண்டும். அதுவரை பையில் கீரை விதைகளை விதைத்துப் பயன் பெறலாம்.

*குழித்தட்டுநாற்றங்கால் அமைத்தல்*

காய்கறி விதைகளின் நாற்றுகளைத் தயார் செய்யக் குழித்தட்டுக்களும் பயன்படுத்தப்படுவது உண்டு. இதன் குழிகள் 2-3 அங்குலம் ஆழம் கொண்டவை. மேலும், வேர்கள் அழுகாமல் அதிகப்படியான நீர் வெளியேறுவதற்கு ஒவ்வொரு குழியிலும் ஒரு துளை உள்ளது.முதலில் தென்னைநார் கழிவைக் கொண்டு இதை நிரப்ப வேண்டும். ஒவ்வொரு குழியிலும் ஒரு விதை வீதம் விதைத்த பிறகு நுண்ணுயிர் உரம் அல்லது மணலுடன் நுண்ணுயிர் உரம் சேர்த்த கலவையைக் கொண்டு மூட வேண்டும். அதன்பிறகு, பிளாஸ்டிக் விரிப்பை எடுத்தவுடன் சூரியஒளி படுமாறு குழித்தட்டை வெய்யிலில் வைக்க வேண்டும். பிற்பகலில் நிழல் இருக்கக்கூடிய இடத்துக்கு மாற்ற வேண்டும். நாற்றுகள் அனைத்தும் ஒரு மாத காலத்தில் நடுவதற்கு ஏற்றதாக மாறிவிடும்.

*நீர் ஊற்றுதல்*

செடிகளை வளர்ப்பதற்கு ஏற்ற பைகளில் செடிகளை வளர்க்கும்போது, மிகவும் கவனம் தேவை. தென்னைநார்க் கழிவு ஊடகம், செடிகள், பருவநிலை, பைகளின் அளவு, செடியின் வளர்ச்சி ஆகியவற்றை மனதில் கொண்டு, அதற்கேற்றவாறு நீரை ஊற்ற வேண்டும். கோடைக் காலத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை நீரூற்ற வேண்டும். தென்னைநார்க் கழிவைப் பயன்படுத்துவதால் (அது இயற்கையாகவே தண்ணீரைத் தக்கவைக்கும் தன்மை கொண்டிருப்பதால்) பொதுவாக ஒருமுறையும் கோடைக் காலத்தில் இரண்டு முறையும் செடிகளுக்கு நீரூற்ற வேண்டும்.அதிகப்படியாக நீரை ஊற்றினால் சத்துகளை வெளியேற்றிப் பூஞ்சானங்களின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தப்படும். செடிகளுக்குத் தண்ணீர் தேவைப்படுகிறதா என்பதை ஒரு குச்சியை எடுத்து ஊடகத்தினுள் செருகிப் பார்க்க வேண்டும். அப்போது குச்சியில் துகள்கள் ஒட்டிக்கொண்டால் தண்ணீர் ஊற்ற அவசியமில்லை.

*உரமிடுதல்*

வளர்க்கும் செடிகளுக்கு வாரத்துக்கு ஒருமுறை உரமிட்டால், அவற்றின் வேர்கள் நன்றாக வளரும்.இயற்கை முறையில் உள்ள மண்புலு உரங்களை இளம் பருவத்திலும்,  பூக்கள் பூக்கும் தருணத்திலும், பழங்கள் பெருக்கம் அடையும் நேரத்தில், தென்னைநார்க் கழிவு கலவைமீதும் போட வேண்டும்.பிறகு பூவாளியால் தண்ணீர் ஊற்ற வேண்டும். நீரில் கரையக்கூடிய உரங்கள் மிகத் துரிதமாகவும், எளிதாகவும் வேர்ப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால், செடிகள் நன்கு செழிப்பாக இருக்கும்.

*அறுவடை செய்தல்*

நாம் உண்பதற்கு ஏற்றவாறு உள்ள நிலையை அடையும்போது காய்கறிகளை அறுவடை செய்ய வேண்டும். உதாரணமாகத் தக்காளியை நன்கு பழுத்த நிலையிலும், கிழங்கு வகைகளை நன்கு முதிர்ச்சி அடைந்த பிறகும், கீரைகளை இளம் தளிராக இருக்கும்போதும், செடி அவரை/ வெண்டை/ கொத்தவரை/ கத்தரி போன்றவற்றை இளம்பிஞ்சுகளாக இருக்கும்போதும் பறிக்க வேண்டும்.அப்போதுதான் காய்கறியின் சத்துகளும் மணமும் மாறாமல் பசுமையாக இருக்கும்.

*அறுவடைக்குப் பின்…*

அறுவடை முடிந்த பின்
செடிகளை
வளர்ப்பதற்காகப் பயன்படுத்திய பைகளில் உள்ள ஊடகத்தை ஒரு இடத்தில் ஒன்று சேர்த்துக் கட்டிகள் எதுவும் இல்லாதவாறு உடைத்த பிறகு, நன்கு கிளற வேண்டும். இத்துடன் 20 கிலோ தென்னைநார்க் கழிவு மற்றும் 10 கிலோ மக்கிய உரம் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறிய பிறகு, பிளாஸ்டிக் பைகளில் நிரப்ப வேண்டும். பிறகு மீண்டும், பழைய நடைமுறையைப் பின்பற்றிப் புதிய நாற்றுகளை வளர்க்க ஆரம்பிக்கலாம்.ஒரே மாதிரியான காய்கறியைப் பயிரிடுவதால், செடிகள் வளர்ப்பதற்கான ஊடகத்தில் சத்துகள் அனைத்தும் போய்விடும். மேலும், பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலைத் தவிர்ப்பதற்காகப் பயிர் சுழற்சி முறையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

மோலும் தகவலுக்கு......

சுந்தர்.சி
கோயமுத்தூர்
9578419307

Friday 29 July 2016

வேப்பிலையின் பயன்கள்

வேப்பிலையின் பயன்

வேப்பிலையை பச்சையாகவும் வேக வைத்தும் அல்லது கசாயம் செய்தும் சாப்பிடடு வந்தால் தீராத நோய் அனைத்தும் தீர்ந்து விடும்.

* வேப்பிலையில் நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் புரதச் சத்து, 10 விதமான அமினோ அமிலங்கள் உள்ளன.

* வேப்பிலையை நம்முடைய முன்னோர்கள் பலவிதமான ஆயுர்வேத சித்த மருந்துகளில் உபயோகப்படுத்தியுள்ளனர். வேப்பிலை சாறில் தொழுநோய், வயிற்றுப் புழுக்கள், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாவதை அறிந்து இந்த நோய்களுக்கு உபயோகப் படுத்தியுள்ளனர்.

* நாள்பட்ட தோல் வியாதிகளை எந்த விதமான பக்க விளைவுகளும் இன்றி குணப்படுத்தக் கூடிய ஒரு அற்புதம் வேப்பிலைக்கு உண்டு. சோரியாசிஸ், சாதாரண சிரங்கு, நமைச்சல், புழுவெட்டு நோய், மருக்கள் முதலியவை வேப்பிலையால் குணமாகக் கூடிய சரும நோய்கள்.

* வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் முகப்பரு மறைந்துவிடும்.

* புத்தம் புதிதாக பறிக்கப்பட்ட இலைகளை பயன்படுத்த வேண்டும்.

* வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து சுண்டக் காய்ச்சி, அதனுடைய அடர்த்தி அதிகமான நிலையில் உபயோகிப்பது.

* வேப்பிலையை சாறு எடுத்து உபயோகிப்பது.

* வேப்பிலையை அப்படியே அரைத்து சரும வியாதிகள் மேல் பூசலாம்.

* சரும வியாதி உள்ளவர்கள் வெந்நீரில் வேப்பிலை போட்டு கொதிக்கவைத்து அந்த நீரில் குளித்து வரலாம்.

* சின்னம்மை, தட்டம்மை போன்ற அம்மை நோய்களுக்கு கிருமி நாசினியாக பயன்படுத்தலாம்.

* வேப்பிலையை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

* வேப்பிலையை காலையில் டீயுடன் சேர்த்து அருந்தினால் சாதாரண சளி இருமல் குறையும்.

* வேப்பிலையை அரைத்து வீக்கம் உள்ள இடங்கள், மூட்டுகள், வாத நோய் கண்ட இடங்களில் பூசலாம். முதுகுத்தண்டு வலி, தசைப்பிடிப்பு போன்றவற்றிற்கும் சிறந்த மருந்தாகும்.

* விவசாயத் துறையில் பூச்சிக் கொல்லியாகவும், கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள முக்கிய வேதிப் பொருள் தற்போது நாம் உபயோகிக்கும உரங்களில் சேர்க்கப்படுகிறது.

* அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அழகுக்காக உபயோகப்படுத்தும் கிரீம்கள், லோஷன்கள், சோப்பு மற்றும் கூந்தல் எண்ணெய்களில் வேப்பிலை பயன்படுத்தப்படுகிறது.

* சூழ்நிலைக்கேற்ப உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் வராமல் தடுக்கிறது.

* ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மை வேப்பிலைச்சாறுக்கு உண்டு.

* வயிற்றுப்புண்களை ஆற்றும் தன்மை மற்றும் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை மட்டுப்படுத்தும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.

* மலேரியக் காய்ச்சலுக்கு குளோரோக்குவின் என்ற மருந்து கொடுக்கப்படும். இந்த மருந்துக்கு கட்டுப்படாமல் இருக்கும் காய்ச்சலை வேப்பிலை கொடுத்து கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

* காளான் நோய்களான டிரைக்கோபைட்டா மற்றும் பிற காளான் நோய்களையும் வேப்பிலையைக் கொண்டு தீர்க்க முடியும்.

* பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் பண்பு வேப்பிலைக்கு உண்டு. கிராம் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.

* வைரஸ் நோய்களை எதிர்க்கும் சக்தி வேப்பிலைக்கு உண்டு. இதனை அம்மை நோய்களுக்கு உபயோகிக்கும் மருந்தாக நம் முன்னோர் காலத்திலிருந்து பின்பற்றப் படுகிறது.

* புற்றுநோய் எதிர்ப்பு தன்மை வேப்பிலைக்கு உண்டு. இதனால் புற்றுநோய் வளர்ச்சியைத் தடைப்படுத்தக்கூடிய மருந்துகளில் வேப்பிலை பெரும்பங்கு வகிக்கிறது.

Monday 18 July 2016

முருகா என்றால் என்ன

முருகா என்றால் என்ன

ஆகமங்கள், வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், ஞானநூல்கள், யோகநூல்கள், சாஸ்திரங்கள், ஸ்தோத்திரங்கள், உபநிஷத்துக்கள், பிரபந்தங்கள் என்றே அனைத்தையும் கற்று தேர்ந்து கடைப்பிடித்து பெறுகின்ற பலன்களையெல்லாம் முதுபெரும் ஞானத்தலைவனாம் முருகனின் நாமத்தை ஜெபித்தாலே வேதநாயகன் தன் அருளாலே அதனினும் மேலாக பெற்று சித்தி முத்தியையும் அடையலாம் என்று அறிந்து அவனருளாலே அவன்தாள் வணங்கி ஆறுமுகனார் திருஅருளிற்கு பாத்திரமாகி ஞானமும் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றி சித்திமுக்தியையும் அடையலாம்.

இயற்கையன்னை அனைத்து உயிர்களையும் படைத்தனள். அவ்வுயிர்களையெல்லாம் தோற்றி காத்து அழித்தனள். ஆயினும் இந்த சுழற்சிதனிலே ஒரேயொரு உயிரினத்திற்கு மட்டும் தம்மை வெல்லும்  தகைமைதனை அவளே அதனுள் அமைத்தனள். ஆதலின் தோற்றல், காத்தல், அழித்தல் என்றதொரு முச்சத்களுடன் தம்மை வெல்லும் தகைமை பெற்ற உயிர் தமக்கு மறைத்தல், அருளல் என்ற தன்னினும் மீறிய சக்திகளை அந்த உயிர் தானே சம்பாதித்து கொள்ளுமாறு அற்புத ஞானம் அளிக்கவல்லதொரு கருவியாய் அவளே பெருங்கருணையினால்
இந்த மானுட தேகம் தனையும் அமைத்தனள்.

உலகம் தோற்றியது முதல் இம்மானுட தேகத்தினை எண்ணிலா கோடி கோடி உயிர்கள் பெற்றும், வாழ்ந்தும், இறந்தும் போவதுமாய் அதிபிரபஞ்ச தோற்றம் முதலே நடந்து வந்ததினில், ஒரு தனி ஆன்மா மட்டும் இயற்கையின் அருட்கொடையால்  என்னவிதமான சக்தி பெற்றதோ  தெரியவில்லை. அதனின்று விடுபட்டதாயினும் இயற்கையின் செயலால் மற்ற உயிர்களெல்லாம் இயற்கை லயகதிக்கு உட்பட்டு இயங்கி அந்த இயக்கத்தின் காரணமாக வினைக்கு உள்ளாகி உள்ளாகி நல்வினை தீவினைகளாக மாறி அதனதன் இயற்கை இயக்கத்தினின்று மீளமுடியாமல்
வினை சூழ சூழ தம்மை மறந்து தன் தோற்றம் மறந்து தம் முன் உள்ள அதீத சக்தியின் வாய்ப்பை மறந்து அதன் செயலாக்க கருவி இருந்தும் செயல்படுத்த இயலாது, வினையெனும் காரிருளினுள் அகப்பட்டு தொடர்பிறவிகளிலே ஆழ்ந்து ஆழ்ந்து அனைத்தும் தன்னை மறந்து விட்டன.

விடுபட்ட ஆன்மாவோ இயக்கம்தனை சீரான லயகதிக்கு உள்ளாகி எந்த இயற்கை தம்மை தோற்றுவித்ததோ அந்த இயற்கையின் மற்றைய படைப்புகளான உயிர்களுக்கு யாதொரு தீங்கும் செய்யாது பிற உயிர்களிடத்து அன்பு செலுத்திட துவங்கிற்று. மற்றைய உயிர்கள் அனைத்தும் உயிர்வதை செய்து செய்து தன்னியக்கம் தனை தாறுமாறாக்கிக் கொண்டு இயற்கையின் கோபத்திற்கு ஆளாயின. ஆசி பெற்றிட்ட அந்த ஆன்மா நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக பிரகாசமடைந்திட பிரகாசமடைந்திட அது, தான் பெற்ற மானுடதேகம்தான் இந்த இயற்கை தோற்றுவித்ததிலேயே மிக உயர்ந்த சிக்கலான அதிநுட்பமடங்கிய அற்புத சாதன
கருவி என்றும், அதனுள்ளேயே தான் தம்மை தோற்றுவித்தவளை நம் முயற்சியால் அவள் துணை கொண்டு வெல்லும் மார்க்கம் உள்ளது என்பதையும் தனது புண்ணிய புனித பலனால் உணர்ந்திட்டது.

இது சாதாரணமன்று. எவ்விதம் இக்கருவியை உபயோகித்து வெல்வது என்றே தன்முயற்சியால் தாயாம் இயற்கையின் துணைதனை நாடி நாடி சிந்தித்து ஞானம்தனை அடைய முற்பட்டது. அதன் விளைவினாலேயே உலக உயிர்களிடத்து அன்பு செலுத்த செலுத்த எந்த இயற்கை நம்மை தோற்றுவித்ததோ, அந்த இயற்கை நமக்கு சாதகமாகி அதுவே அதனை
வெல்லும் வல்லமையை நமக்கு அளிக்கிறது என்பதை உணர்ந்தது.

பிற உயிர்களுக்கு நாம் நமது சிந்தை, சொல்,  செயல்களால் மகிழ்ச்சியை உண்டு பண்ண பண்ண அந்த உயிர்கள் படுகின்ற இன்பமானது நம்முள் ஜீவதயவை தோற்றுவிக்கின்றது. பிற உயிர்கள் நம்மை வாழ்த்த வாழ்த்த அந்த உயிர்கள் படுகின்ற இன்பமே நமக்குள் இன்பமான ஒளியாய் கருணையாய் உண்டான ஜீவ ஒளியாய் தோன்றி நம்முள் அறிவாய் மாறி
பிரகாசிக்கிறது. பிற உயிர்களுக்கு நமது சிந்தை, சொல், செயலால் துன்பப்படுத்தினால் அந்த உயிர்கள் படுகின்ற துன்பமே நம்மை தாக்கி நம்முள் இருளை தோற்றுவித்து நமது அறிவின் ஒளியை மங்கச் செய்து அறியாமையை உண்டுபண்ணிவிடும் என்பதை உணர்ந்து பிறஉயிர்களுக்கு எல்லா வகையிலும் உதவிகள்  செய்துசெய்து உலக உயிர்கள் அனைத்திடமும் அளவிலாத கருணை மழையாய் பொழிந்தனன் ஆதிதலைவன் முருகப்பெருமான்.

அவ்விதமே உலக உயிர்களிடத்து அளவிலா கருணை செலுத்த செலுத்த இயற்கையன்னை அவர்தம்முள்ளே தம்மை வெல்லுதற்கு வைத்திருந்த பொறியமைப்பினை அவர் அறிவினுள்ளே உணர்த்தலாயிற்று. அந்த பொறியமைப்பாம் மானுடதேகமும் மானுடதேகத்தின்
கண் உள்ள சூட்சுமங்களையும் அறிந்தனன் ஆதிதலைவன்.

அறிந்து பிற உயிர்களின் தேகத்தின்கண் காணப்படாத ஒரு சிறப்பு பாதையாம் புருவமத்தியையும் அதன் உடனான இடகலை, பின்கலை என்ற இருநாடிகளையும் அதன் நடுவே மெல்லிய மயிர்ப்பாலம் போன்ற  சுழிமுனை நாடியையும் கண்டு கொண்டார்.

உயிர்களுக்கு காட்டும் ஜீவதயவே அறிவாக மாறும், ஜீவதயவு உயர உயர அந்த அறிவே சிறப்பறிவாக மாறும். அந்த சிறப்பறிவின் துணை கொண்டே தன்னைப் பற்றியும் தனது ஆன்மாவைப் பற்றியும் அறிந்து கொள்ள முடியும் என்று உணர்ந்து ஜீவதயவினை விடாது அளவிலாது உயிர்கள் அனைத்திற்கும் செய்து செய்து தயவினை பெருக்கிக் கொண்டார்.

ஜீவதயவின் அளவு அதிகமாகிட ஆன்மாவைப் பற்றியும் அறிகின்ற அறிவு தெளிவு  கிடைத்தது. அந்த ஆன்மா ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலக் குற்றமாகிய வலிமைப் பெற்ற சிறையில் அடைப்பட்டுள்ளதையும் அறிந்தார்.

இயக்கத்தின் காரணமாக வினைக் குற்றங்களுக்கு ஆளாகி மும்மல சிறையினுள் அகப்பட்ட ஆன்மாவை ஜீவதயவின் துணைகொண்டுதான் அதன் கசடை நீக்கிட முடியும் என்றும் உணர்ந்தார்.

ஜீவதயவு பெருக பெருக பெருக அந்த ஜீவதயவின் ஆற்றலினால் அந்த தயவே செம்பொருள் அறிவாய் மாறிடக் கண்டு அந்த அறிவே அருளொளியாய் மாறி மாசுபட்ட ஆன்மாவை தூய்மைப் படுத்திடவும் கண்டு தெளிந்தார்.

எல்லா உயிர்களிடத்தும் பலப்பல ஜென்மங்களிலே தொடர்ந்து உலக உயிர்களிடத்து அன்பு செலுத்த செலுத்த அந்த உயிர்களெல்லாம் வாழ்த்த வாழ்த்த ஒரு காலத்தில் அவர் கண்முன்னே இயற்கை அற்புதமாய் ஒரு காட்சியை காண்பித்தது. தன்முன்னே சென்று கொண்டிருந்த மாடு
ஒன்று பாம்பு கடித்தவுடன் மூச்சு முட்டி இறக்கக் கண்டார். பிற உயிர்களும் இறக்கும்போது சுவாசம் நிற்க கண்டார்.

ஆக மூச்சுக்காற்றின் இயக்கமே ஆன்ம இயக்கமாக இருக்கிறது என்ற ஒரு மகோன்னத உண்மையை எந்த இயற்கை தோற்றுவித்ததோ அந்த இயற்கையே அறிவாய் மாறி அவர் தம்முள்ளே அறிவுக் கண்ணை விழிப்பித்து உணர்த்திட அதன்பின்னே சுவாசக் காற்றின் இயக்கங்களையும் அதை ஒடுக்கும் முறைகளையும் உடம்பினுள்ளே, உள்ளே ஓடுகின்ற ஜீவான்மாவையும் புறத்தேயுள்ள பரமான்மாவையும் ஒன்று சேர்த்திட்டால் மரணத்தை வெல்லலாம் என்றும் அதற்கு சாதனமான இந்த உடம்பினை தன்வயப்படுத்தினாலன்றி ஆகாதெனவும் தெளிந்தார்.

எந்த இயற்கை ஞானம் பெறுதற்காக அற்புதமான மனிததேகம்தனை தோற்றுவித்ததோ அதே இயற்கை அன்னை தாயாக மாறி கருணைமிகக் கொண்டு ஞானபண்டிதன் அறிவைச் சார்ந்து அவளே அவளின் இயற்கை சுழற்சியை மீறிட அளவிலாத ஜீவதயவினை கொண்ட முருகப்பெருமானார் தமக்கு தேக சூட்சுமங்களை படிப்படியாக குருவாய் நின்று அறிவில் சார்ந்து அற்புத தேகத்தின் அற்புதங்களை உணர்த்திட உணர்ந்த பெரும் சிரமங்களுக்கு இடையே பல்லாயிரமாண்டுகள் இடைவிடாது முயற்சிகள் செய்து இறுதியில் உடல் அசுத்தம் நீங்கிட, உயிர்மாசு நீங்கிட இரண்டையும் சுவாசப்பயிற்சியாம்  வாசிப்பழக்கத்தினாலே பெருக்கி மூலக்கனல் உதவி கொண்டு தேகம் தனை சுட்டெரித்து ஊன்கரைத்து உள்ளொளி பெருக்கி உடலையும் உயிரையும் ஒன்றிணைத்து ஜீவான்மாவையும் பரமான்மாவையும் ஒன்றிணைத்து என்றும் அழியாத ஒளிதேகத்தை பெற்று சொல்லொண்ணா பேரொளியாய் ஜீவதயவே  வடிவினனாய் அளவிலா ஆற்றல் மிகமிக கொண்டுமே அது, நீ, நான் என்ற வேற்றுமையின்றி நாமே அதுவாய், அதுவே நாமாய் உலகின் அனைத்து உயிர்களிலும் இரண்டற கலந்து நின்றுமே அற்புத ஞானத்தலைவனாகி நின்றனன் கந்தவேலன் கருணை மிகக்கொண்ட கருணாமூர்த்தி.

ஆதலின் ஜீவர்களுக்கு செய்கின்ற உபகாரமே ஜீவதயவாய் மாறி ஞானம்தனை பெறுதற்கு அன்று முதல் இன்றுவரை இனி என்றும் இருப்பதினாலே ஜீவதயவே ஞானவீட்டை திறக்கின்ற திறவுகோல் ஆதலாலே ஜீவதயவே அறிவாய் மாறுவதாலே ஜீவதயவே கனலாய் மாறி தேகக்கசடை நீக்குவதாலே ஜீவதயவே ஆன்ம ஒளியாய் தோன்றி ஆன்மகசடை நீக்குவதாலே ஜீவதயவே இயற்கையின் கருணையைப் பெற காரணமாய் இருப்பதாலே ஜீவர்கள்பால் கொண்ட
ஜீவதயவே ஜீவர்களின் ஆசியைப் பெறச்செய்து அருளாய் அருளொளியாய், சோதி சுடராய் நம்முள்ளே தோன்றுவதாலே இப்படி எந்த வகையிலும் எந்த முறையிலும் நின்று பார்க்கினும் ஜீவதயவில்லையேல் ஞானம்தனிலே ஒரு அணுவினையும் அசைத்திடலாகாது என்பதை உணர்ந்து இன்று முதலேனும் உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து புண்ணியங்கள் செய்து
பிறஉயிர்கள் பால் அன்பு செலுத்தி சொல்லால், செயலால், உடலால் என்றே பாவியாகாமல் இருந்து முற்றுப்பெற்ற ஞானிகளை வணங்கி அவர்தம் அருளைப் பெறுங்கள்.

ஆதிமூல நாயகனாம் ஞானத்தலைவன் முருகப்பெருமானார் தம் திருவடிகளை மனதாரப் போற்றி உளம் உருகி பூசித்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளுங்கள்.

ஜீவதயவின் உருவம் ஆறுமுகனார் தயவில்லையேல் அறிவில்லை, தெளிவில்லை, புண்ணியங்கள் இல்லை, யோகம் இல்லை, ஞானம் இல்லை, ஏன் ஞானவர்க்கமே இல்லை.

பற்றுவோம் முருகன் திருவடியை பெறுவோம் பேரின்ப வாழ்வை.

மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்

Saturday 16 July 2016

ஸ்ரீஆதிசங்கரர் அருளிய இந்த வைராக்ய ஸ்லோகங்களில் சில

ஒரு காவல்காரன். வழக்கம்போல் தப்பட்டை அடித்துக்கொண்டு நடுநிசியில் ''ஜாக்கிரதை'' என்று கத்திக்கொண்டே போவான்....
ஒருநாள் அவசரமாக வேறு ஒரு ஊருக்கு போகவேண்டி இருந்ததால் அவன் வேலையை அவன் பிள்ளை செய்யவேண்டியதாயிற்று....
அவன் பிள்ளை முன் ஜன்மத்தில் ஒரு #வேதமறிந்த_பண்டிதனாக இருந்தவன். எனவே பூர்வ ஜன்ம வாசனை ஞானம் இருந்தது...

இரவில் அவன் தப்பட்டை அடித்துக்கொண்டு ஜாக்கிரதை சொல்லிக்கொண்டு தகப்பன் வேலையை செய்தான்....
அடுத்த நாள் ராஜாவே அந்த காவல்காரன் வீட்டு வாசலில் நின்றான்....
அந்த பையனைப் பார்க்கத்தான் வந்தான்.
''ஐயோ ராஜாவே வந்திருக்கிறார், என் பிள்ளை என்ன பெரிய தவறு ஏதாவது செய்து விட்டானோ,
இங்கேயே ஏதாவது தண்டனையை கொடுத்து நிறைவேற்றுவானோ ?''
காவல் காரன் நடுங்கினான்.....
ஆனால் ராஜா அந்த பையனுக்கு பரிசு கொடுத்து கௌரவிக்க அல்லவோ வந்தான்? எதற்காக?
முதல் நாள் இரவு பையன் '' ஜாக்கிரதை. ஜாக்கிரதை'' என்று அப்பாவை போல் சும்மா கத்திக்கொண்டு போகவில்லை....

அவன் ஸ்லோகமாக சில வார்த்தைகள் சொன்னதுதான் ராஜாவை மயக்கியது.
அந்த நீதி வாக்யங்கள் இவைதான்.......

#ஸ்ரீஆதிசங்கரர் அருளிய இந்த வைராக்ய ஸ்லோகங்களில் சில........

(1)

माता नास्ति पिता नास्ति नास्ति बन्धुः सहोदरः।
अर्थँ नास्ति गृहँ नाति तस्मात् जाग्रत जाग्रत॥

“மாதா நாஸ்தி பிதா நாஸ்தி பந்து ஸஹோதரா
அர்தம் நாஸ்தி க்ருஹம் நாஸ்தி தஸ்மாத்
ஜாக்ரதா ஜாக்ரதா”

There is no mother, no father, no relationships nor any siblings. No money or house. Therefore be alert, Wake up!

அடே தூங்குமூஞ்சி விழித்துக் கொள்ளடா. அப்பன் என்னடா , தாயுமென்னடா, அண்ணனென்னடா தம்பியென்னடா,காசும் பொய் வீடும் பொய். சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை,. காயமும் பொய் காற்றடைத்த பை, இதையெல்லாம் நம்பி ஏமாறாதே, உடனே விழித்துக் கொள் ஜாக்ரதை ஜாக்ரதை,...

(2)

जन्म दुःखँ जरा दुःखँ जाया दुःखँ पुनः पुनः।
सँसारसागरँ दुःखँ तस्मात् जाग्रत जाग्रत॥

“ஜன்மதுக்கம் ஜராதுக்கம் ஜாயாதுக்கம் புந;புந: சம்ஸார ஸாகரதுக்கம் தஸ்மாத் ஜாக்ரதா: ஜாக்ரதா”

Birth is sorrow, aging is sorrow, spose is sorrow !
Samsara itself is sorrow, therefore remain awake! be alert!

பிறப்பே துன்பம், வயோதிகம் பரம துக்கம், கட்டின மனையாளோ நடக்கும் துயரம், வாழ்வே சோகம்,மாயம்,
விழித்துக்கொள் ஜாக்ரதை....
(3)

कामक्ष्च क्रोधक्ष्च लोभक्ष्च देहे तिष्ठन्ति तस्कराः।
ज्ञनरत्नापहाराय तस्मात् जाग्रत जाग्रत॥

“காம; குரோதச்ச லோபச்ச தேஹே நிஷ்டந்தி தஸ்கரா;
ஞான ரத்நாப ஹாராய தஸ்மாத் ஜாக்ரத ஜாக்ரதா!”

Kama (desires), Krodha (Anger), Lobha (Greed) are like theifs in this body who steal the jewel called "Jnana" [Self Knowledge]. Therefore be alert! Be Awake!

ஆசையும் பாசமும், கோபமும், பேராசையும் திருடர்களப்பா .உன் உள்ளே இருக்கும் ஞானமெனும் விலை மதிப்பில்லா மாணிக்கத்தை திருடுபவர்கள். விளக்கு எடுத்துக்கொண்டு வெளியே திருடர்களை தேடாதே, உள்ளே, உனக்கு உள்ளே ஒளிந்திருக்கும் அவர்களைத் தேடி துரத்து. விழித்துக் கொள், ஜாக்ரதை ஜாக்ரதை...

(4)

आशाया बध्यते जन्तुः कर्मणा बहुचिन्तया।
आयु क्षीणँ न जानाति तस्मात् जाग्रत जाग्रत॥

“ஆசாயா பத்யதே ஜந்து : கர்மணா பஹு சிந்தயா: ஆயுக்ஷீணம் ந ஜாநாதி தஸ்மாத் ஜாக்ரதா
ஜாக்ரதா”

We are [The animal -humans are also addressed as animals here] bound by Expectations: various activities and excess thinking. so much so that we do not recognize the ebbing away of life. Therefore be awake! Be Awake!

ஆசையெல்லாம் தோசை தான் மனித மிருகமே, எதிர்பார்த்து ஏமாறுவதே வழக்கமா? நாம், மனக்கோட்டை கட்டுபவர்கள்... அழிவதை சாஸ்வதம் என்று மனப்பால் குடிப்பவர்கள், விழித்துக் கொள்ளவேண்டாமா, ஜாக்ரதை ஜாக்ரதை.

(5)

सम्पदः स्वप्नसँकाशाः यौवनँ कुसुमोपम्।
विधुच्चन्चचँल आयुषँ तस्मात् जाग्रत जाग्रत॥

All possessions are like what are seen in a dream, youthfulness is only for a short time , like a flower's lifetime. Life passes away like a lightening therefore be alert!

“நம்முடைய சொத்து எல்லாமே கனவில் கட்டிய மாளிகைகள், இளமை வாலிபம் நிரந்தரமல்ல ... நேற்று மொட்டு, காலை மலர், மாலையில் வாடிபோய் எறிந்தாகி விட்டது. மின்னல் போலாகும் இந்த வாழ்க்கை, இதில் நீ என்ன நான் என்ன, விழித்துக் கொள், ஜாக்ரதை ஜாக்ரதை,.

(6)

क्षणँ वित्तँ क्षणँ चित्तँ क्षणँ जीवितमावयोः।
यमस्य करूणा नास्ति तस्मात् जाग्रत जाग्रत॥

Money, memory and life are all momentary. Lord Yama, the lord of death, does not show any mercy. Therefore be awake!!

சூரியன் வருமுன் ஜொலிக்கும் இலையின் மேல் உள்ள பனித்துளி நம் வாழ்வு, சாஸ்வதம் என்று மயங்காதே. சொத்து சுதந்திரம், டாம்பிகம், பேர் புகழ் எல்லாமே, கண்மூடி கண் திறக்கும் வரை தான். கொஞ்சம் கூட நெஞ்சில் ஈரமில்லாதவன் அந்த யமன் . ஜாக்ரதை ஜாக்ரதை

(7)

यावत् कालँ भवेत् कर्म तावत् तिष्ठन्ति जन्तवः।
तस्मिन् क्षीणे विन्श्यन्ति तत्र का परिदेवना॥

As long as their karma lasts so long we see the animal here, the moment the karma is over, the animal is gone. what is there to brood over this ?

சாவி கொடுத்தால் அது வேலை செய்யும் வரை தான் இந்த குரங்கு பொம்மை டமாரம் தட்டும்.தலை ஆட்டும் நடக்கும். கர்மா அளிக்கும் நேரம் வரை தான் வேலையே இங்கு.அப்புறம்? வேறென்ன, தொடரும் கதை தான்.
இதில் என்ன யோசிக்க இருக்கிறது. மேடையில் ஏறியாயிற்று.., வேஷம் கலையும் வரை, வேளை வரும் வரை ஆடு பாடு. இதை உணர விழித்துக் கொள், ஜாக்ரதை ஜாக்ரதை.....