Saturday 15 August 2020

உங்கள் விரல்களின் பின்னணியில் இருக்கும் ஆரோக்கிய இரகசியங்கள்

தன் கையே  தனக்கு  உதவி. 😉

உங்கள் விரல்களின் பின்னணியில் இருக்கும் ஆரோக்கிய இரகசியங்கள்..!!!!

உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம் என பல  ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

கட்டை விரல்

உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.
கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் இணைப்புள்ளது ஆகும். இது வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த செல்களை ஊக்குவித்து செரிமானத்தை சீராக்குகிறது.

ஆள்காட்டி விரல்

உங்கள் பலவீனம் மற்றும் பயத்தை குறைக்க கூடியது ஆள்காட்டி விரல். மேலும், ஆள்காட்டி விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களிடம் இருக்கும் அடிமைத்தனத்தினை குறைக்கவல்லது.
உங்கள் ஆள்காட்டி விரல் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் இணைப்புக் கொண்டுள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் இருக்கவும், நீர்வறட்சி ஏற்படாமல் இருக்கவும் பயனளிக்கிறது.

நடுவிரல்

நடுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களது கோபத்தை குறைக்க உதவும். தலை பகுதியில் இரத்த ஓட்டத்தை சீராக்கி தலைவலி ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது.
நடுவிரலானது, கல்லீரல் மற்றும் பித்தப்பையுடன் இணைப்புடையது. இது இந்த பாகங்களின் வலிமையை மேம்படுத்துகிறது மற்றும் உடற்சக்தியை ஊக்குவிக்கிறது.

மோதிரவிரல்

ஏறத்தாழ கட்டைவிரலுடன் ஒத்துப் போவது தான் இந்த மோதிர விரலும். உங்களில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தீய எண்ணத்தை குறைக்க நீங்கள் மோதிர விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்யலாம்.
மேலும், மோதிர விரல் நுரையீரலுடன் இணைப்பு கொண்டுள்ளது. இது சுவாசக் கோளாறுகளை போக்கவல்லது. மேலும், நரம்பு மண்டலம், தசைகளுக்கு வலிமை அளிக்கிறது. இதனால், உங்கள் உடற்சக்தி மேம்படும்.

சிறுவிரல்

சிறுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது இதயம் மற்றும் இரத்த ஓட்டத்திற்கு நல்லது. இது இரத்த ஓட்டத்தை சீராக்கி இதர உடல் பாகங்களின் செயற்திறனை ஊக்குவிக்கிறது.
மேலும் இது மூளையின் செயல்திறனையும் மேம்படுத்துகிறது, இதனால் உங்கள் எண்ணம், சிந்தனை, கவனம் போன்றவையும் மேம்படும்.

உள்ளங்கை

மன அழுத்தம் தான் அனைவருக்கும் ஏற்படும் கொடிய நோய். இது ஒட்டுமொத்தமாக மனதையும், உடலையும் பாதிக்கக் கூடியது. உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க உதவுகிறது.
மேலும், இது உடல் மற்றும் மனதில் ஏற்படும் சோர்வில் இருந்து விரைவாக விடுபட்டு வெளிவரவும் பயனளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி ; உஷா ரவி

#ENT சூரணம். காது மூக்கு தொண்டை சரி செய்யும் சூரணம்.

#ENT சூரணம். காது மூக்கு தொண்டை சரி செய்யும் சூரணம். 

குப்பைமேனி இலைப் பொடி .............  ஐம்பது கிராம் 
வில்வம் இலைப் பொடி .............  ஐம்பது கிராம் 
மிளகு தூள்   .........  ஐம்பது கிராம் 

மூன்று பொருட்களையும் சம அளவு வாங்கி ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும் 

இந்த ENT சூரணத்தில் ஒரு வேளைக்கு  ஒரு தேக்கரண்டி சூரணம் இளம் வெந்நீரில் கலந்து தினமும் காலை மாலை என இரண்டு வேளைகள் சாப்பிட்டு வரவும் 

தொடர்ந்து சாப்பிட்டு வர படிப்படியாக குணம் கிடைக்கும் 

இது ஒரு பாரம்பரிய அனுபவ மருத்துவர் கூறியது 

குறிப்பு 

குப்பைமேனி பொடியும்  வில்வ இலைப் பொடியும்  நாட்டு மருந்துக் கடைகளில் தாராளமாகக் கிடைக்கிறது மிளகுத்தூள் வீட்டிலேயே அரைத்துக் கொள்ளலாம்.

நன்றி ; தங்கராஜ்.

பஞ்சகல்ப குளியல் சூரணம்:

பஞ்சகல்ப  குளியல் சூரணம்:

       இந்த பஞ்சகல்பம் சித்தர்களால் புகழப்பட்டது.

இதை உபயோகித்தால் முடி தும்பி போலாகும்.கண்கள் ஒளி பெறும். பகலில் கூட நட்சத்திரம் காணலாமென்று சித்தர்கள் புகழ்ந்துள்ளனர்.இதை உபயோகித்து சரும வியாதிகளும் குணமானதுண்டு.மேக வியாதிகள் குணமாகுமென்று சித்தர்கள் சொல்கின்றனர்.

     இந்த பஞ்ச கல்பம் சிறப்பாக #பீனிசம் எனப்படும் சைனஸ் வியாதியை முற்றிலும் குணப்படுத்த உபயோகிக்கப்படுகிறது.

      மேலும் இது தலைவலி, தலைபாரம், தலையில் நீர் கோர்த்தல்,தலைமுடி கொட்டுவது, இளநரை, தலையில் வரும் புற்று, தலைமூளை நோய்கள், கண் நோய்கள், காது சீழ், காது இரைச்சல், காது மந்தம், மூக்கு நீர் வடிதல், மூக்கு சதை வளர்ச்சி, தொண்டை சதை வளர்ச்சி, மார்புச்சளி போன்ற எண்ணற்ற நோய்களை ஓட ஓட விரட்டும் ஓர் அருமருந்து இந்த கல்பம் ஆகும்.

மருந்து செய்முறை:

"பூநெல்லி நீர்மிளகு பொற்கடுக்காய் வான்மஞ்சள்
கானகத்து வேம்பரிசி காரிகையே- மானங்கேள்
ஒன்றரை யொன்றேகால் ஒன்று றுதிமுக்கால்
கன்றரைக் கையான் நீறிற் றேய்"

1.நெல்லிக்காய்              - 300கிராம் 
2.வெள்ளை மிளகு.        -250 ,,
3.கடுக்காய்.                       -200 ,,
4.கஸ்தூரி மஞ்சள்.        - 150 ,,
5.வேப்பமுத்து.                 - 100 ,, 

    இந்த அளவுப் படி எடுத்து அரைத்து சூரணித்து நன்கு கலந்து வைக்கவும்.

பயன்படுத்தும் முறை:

       இந்த பஞ்ச கல்ப சூரணத்தை தேவையான அளவு எடுத்து கரிசாலைச் சாறில் கரைத்து அல்லது பால் விட்டு கொதிக்க வைத்து இளஞ்சூட்டுடன் தலையில் தேய்த்து அரைமணி நேரம் வைத்திருந்து பின் வெந்நீரில் குளித்து வந்தால் மேற்கண்ட நோய்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனி போல் விலகும் என்பது நிச்சயம்.

நன்றி ; குப்புசாமி