Sunday 30 September 2018

குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம் அத்தியாயம்:1

அத்தியாயம்:1 மூளை, பரிணாமம், பள்ளிக்கூட வாழ்க்கை.
குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம்…
இந்நூலை முன்வைத்து ஒரு உரையாடல்....
இந்த நூலின் நேரடிப்பயன்பாடு கருதி இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தைப் பற்றி தனித்தனிப் பதிவாக இடுகிறேன்…
குழந்தைகளின் கல்வியின்பால் நேசம் கொண்ட, நீண்ட பதிவுகளை வாசிக்க முயல்பவர்கள் மட்டும் தொடரலாம்.....
அத்தியாயம்:1
பள்ளிக்கூடத்தின் தேவை என்ன?
சமூக, பொருளாதார, அரசியல் காரணங்களைத்தாண்டி பள்ளிக்கூடம் என்ற கற்பிக்கும் இடத்தின் தேவைக்கான உளவியல் காரணத்தை அறிய இந்த முதல் அத்தியாயம் உதவுகிறது.
மூளை, அதன் செயல்பாடு, கல்வி கற்றலில் மூளையின் அடிப்படைகளை இது விளக்குகிறது.
மூளை என்பது நியூரான் எனப்படும் நரம்புச் சிற்றறைகளால் ஆனது. இது உடலெங்கும் தகவல்களைச் சுமந்து செல்கிறது. ஒரு காரில் இருக்கும் வெவ்வேறு பாகங்கள் வெவ்வேறு வேலைகளைச் செய்வது போல மூளையின் ஒவ்வொரு பகுதிக்கும் குறிப்பிட்ட பணிகளுண்டு. உடலியல் செயல்களான சுவாசம், எதிர் வினைகள், இதயத்துடிப்பு, நுண்தசை அசைவு, பசி தூக்கம் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதிகளாக கோர்ப்பஸ் கலோசம், பேசல் காங்லியா, மெடுல்லா, செரிபல்லம் போன்றவை உள்ளன.
விலங்குகளிடமிருந்து மனிதன் பிரிந்து பகுத்தறிவு கொண்ட உயர்ந்த மூளைத்திறனுடன் இருப்பதற்கு மூளையின் நியோ கார்டெக்ஸ் பகுதியே காரணம். ஆசிரியர்கள் மாணவர்களிடம் எதிர்பார்க்கும் திறன்களான,
புரிந்து கொள்வது, நினைவுபடுத்துவது, தொடர்புபடுத்துவது, கருத்துப்பரிமாற்றம் செய்வது, தகவல்களை அலசி சில கருத்துக்ளை கண்டறிவது, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, கண்டுபிடிப்பது போன்றவைகளுக்கு அடிப்படையாக நியோ கார்டெக்ஸ் பகுதியே உள்ளது.
நூற்றாண்டு கால ஆராய்ச்சியில்,
• பின்பக்க மூளையின் கீழ்ப்பகுதியில் கண்ணால் காணும் காட்சிகளைத் தகவல்களாக மாற்றுகிறோம்.
• நமது இடது காதின் அருகில் அமைந்திருக்கும் மூளையின் பகுதியில் மொழியைப் புரிந்து கொள்கிறோம்.
• மூளையின் மேற்பகுதியிலுள்ள கோடு போன்ற பகுதியில் உடலின் அசைவுகளையும், ஐம்புலன்களின் தூண்டலையும் அறிந்து கொள்கிறோம்.
• மூளையின் முன் வலது பக்க கோடு போன்ற பகுதி தூண்டல்களைத் தகவல்களாக்கி உடலுறுப்புகளுக்கு அனுப்புகிறது.
• மூளையின் நடுப்பகுதியில் இருக்கும் ஹிப்போகாம்பஸ் பகுதியில் நிகழ்வுகளை ஞாபகப்படுத்துகிறோம்; புதிய நிகழ்வுகளைப் பதிவு செய்கிறோம்.
ஹிப்போ காம்பஸ் பற்றி இன்னும் கொஞ்சம் அறிவோமா?.....
மூளையின் நடுப்பகுதியில் அமைந்துள்ள சிறிய, கவர்ச்சியான இந்தப் பகுதிதான் புதிய ஞாபகங்களை உருவாக்கும் பொறுப்பை வகிக்கிறது. கற்றல், ஞாபகம் உருவாவது தொடர்பான இந்தப் பகுதி சமீபத்திய ஆய்வுகளில் கவனம் பெற்றுள்ள பகுதி.. ஹிப்போ காம்பஸ் என்பது சுய உணர்வோடு நினைவுபடுத்திக் கொள்ளவும், சொற்களால் வெளிப்படுத்தவுமான பொறுப்பைக் கொண்டது. ஒரே ஒருமுறை ஏற்பட்ட அனுபவத்தைக் கூட நினைவுகளாகப் பதிவுசெய்வதே இதன் சிறப்பு ஆகும். இப்பகுதியில் புதிய நினைவுகளைப் பதிவு செய்யும்போது புதிய நியூரான்கள் உற்பத்தியாகின்றன. சிலகாலம் கழியும்போது இந்த நியூரான்கள் அழிந்துபோகின்றன. அது அழிவதற்குள் அப்பதிவுகளை மூளையின் பிற்பகுதியிலுள்ள நியோகார்டெக்ஸ் எனப்படும் நியூரான் வலைப்பின்னல் பகுதிக்கு நிலையாக இடம் மாற்றம் செய்து விடுகின்றன. எனவே தான் ஹிப்போகாம்பஸ் பகுதி பாதிக்கப்படும்போது, நிலைத்த பகுதிக்கு அனுப்பப்பட்ட நினைவுகள் மறக்காது, ஆனால் சமீபத்தில் ஹிப்போகாம்பஸ் பகுதியில் பதியப்பட்டு, இன்னும் நிலைத்த பகுதிக்கு மாற்றப்படாத நினைவுகள் அழிந்து போகும்.
ஹிப்போகாம்பஸ் பகுதியில் எவ்வளவுக்கு எவ்வளவு புதிய நியூரான்கள் உற்பத்தி ஆகிறதோ அதைப்பொறுத்து கற்றல் விரைவாக நிகழும். ஆனால் முதுமை மற்றும் நீண்ட கால மன அழுத்தம் போன்றவை இப்பகுதியில் நியூரான் உற்பத்தியை வெகுவாகக் குறைத்துவிடுகிறது. ஏனெனில் நீண்ட மன அழுத்த காலங்களில் உடலில் உற்பத்தியாகும் வேதிப்பொருளான க்ளுகோகோர்டி கோயிட்ஸர்ஸ் புதிய நியூரான் உற்பத்தியைக் குறைக்கிறது. எனவேதான் குழந்தைகள் நன்கு கற்க பள்ளியிலும், வீட்டிலும் மன அழுத்தம் இல்லாத சூழலை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது.
மூளையிலுள்ள மாட்யூல்களின் பரிணாமம்…..
மனித மூளை மிகவும் பழமை வாய்ந்தது. மனித இனம் தோன்றி வெறும் முப்பது இலட்சம் ஆண்டுகள்தான் ஆகிறது. இக்கால அளவில் மனிதன் தனது மூளையின் 99.9% பகுதியை வேட்டையாட, உணவு தேட, பலவிதமான ஆபத்துகளையும், சவால்களையும் சமாளிக்கப் பயன்படுத்தினான். இருப்பினும் நீண்டகால அளவில் நான்கு கால் உயிரியிலிருந்து இரண்டுகால் உயிரியாக எழுந்து நடந்தது, மொழியை உருவாக்கியது போன்றவைதான் மனிதனை குரங்கிலிருந்து பிரிக்கின்றன.
பழைய மனித மூளையானது மின்விளக்கில்லாத, வெள்ளை சீனியில்லாத, பள்ளிக்கூடம் இல்லாத சூழலில் வாழ்வதற்குத்தான் பழக்கப்படுத்தப்பட்டுள்ளது.
டேவிட் கீயரியின் மாடுலர் கோட்பாடு….
“இதுவரை சந்திக்காத சவாலான சூழல்களைச் சமாளிக்க அனைத்து உயிரினமும் தேவையான புதிய மாட்யூல்களை உருவாக்கும்”
இப்போது கல்வி என்பதனை இரண்டாகப் பிரிப்போம்…
1. பிறவி சார்ந்த கல்வி உளவியல்.
2. பிறவி சாராத கல்வி உள்வியல்.
இதனை இன்னும் கொஞ்சம் விளக்கிப் பார்ப்போம்….
1.பிறவி சார்ந்த கல்வி என்பது மூன்று பகுதிகளை உடையது.
அ. முறைசாரா இயற்பியல்..
முப்பரிமாண இயற்பியல் பொருட்களுக்கு இடையே சென்று வருவது, வழியிலுள்ள மேடு பள்ளங்களைப் புரிந்து கொள்வது, அசைவுகளை மதிப்பிடுவது, பொருட்களை கற்பனை செய்வது, ஒரு பொருளை வேறொன்றாகக் கருதுவது(கருவிகளைக் கையாளும்போது இந்தத் திறன் மிக அவசியம்).
ஆ.முறைசாரா உயிரியல்.
தாவரங்களையும், விலங்குகளையும் உண்ணத்தகுந்தவை, தகாதவை, மருந்தாகப் பயன்படுபவை எனவும் புலால் உண்ணிகள், அவற்றின் இரைகள் எனவும் வகைப்படுத்தப்படுகிறது.
இ. முறைசாரா உளவியல்
சமூகச் சூழலில் வாழ்வது(அவர்கள் குழுவாக வாழ்ந்திருந்தனர்), முகங்களை அடையாளம் காண்பது, முகத்தைப் பார்த்து உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வது, உறவினரை அடையாளம் காண்பது, உலகை உறவினர் குழு, உறவினர் அல்லாதவர்களின் குழு என பிரிப்பது,மொழியைப் பயன்படுத்துவது, அடுத்தவர் மனநிலையைப் புரிந்து கொள்வது.
உளவியலாளர்களும் மேலுள்ள மூன்று முறைசாரா உளவியலுக்கும் மூளையில் மாட்யூல்களைக் கண்டறிந்துள்ளனர்.
A..இயற்பியல் உலகைக் கற்பனை செய்வதில் மூளையின் பரைட்டல் கார்டெக்ஸ் மற்றும் ஹிப்போ காம்பஸின் பகுதிகளின் பங்கு.
B.உயிரினங்களுக்குப் பெயரிடுவதில் பங்குபெறும் போஸ்டீரியர் நியோ கார்டெக்ஸின் பங்கு(ஆனால் உயிரற்றப் பொருட்களைப் பெயரிடுதலில் இவை பயன்படுவதில்லை)
C.முகங்களை இனம்காண உதவும் பியூஸிபோ(ர்)ம் கைரஸ், பிரிஃப்ரன்டல் கார்டக்ஸ் ஆகியவை.
இவ்வாறாக குழந்தைகள் பள்ளிக்கு வருவதற்கு முன்பே இவை மூன்றிலும் ஆழமான கருத்துக்களை வளர்த்துள்ளனர். ஆனால் அந்த அடிப்படை அறிவைப் புறக்கணித்து விட்டு புதிய பாடத்திட்டங்களை அவர்கள் மூளைக்குள் திணிக்கிறோம்.
இப்போது நாம் ஏற்கனவே குறிப்பிட்ட கல்வியின் இரண்டு வகைகளில் இரண்டாவதாக உள்ள பிறவி சாராத கல்வி உளவியலைப் பற்றிப் பார்ப்போம்..
2.பிறவி சாராத கல்வி உளவியல்.
இவை பயிற்சியளிப்பதால் வளர்த்தெடுக்கப்படும் திறன்கள். நாம் சில் செயல்களைச் செய்வதற்கு விலங்குகளைப் பயிற்றுவிக்கிறோம். ஆனால் மனிதக் குழந்தைகள் கற்றுக்கொள்ளும் அளவையும், புதுமையையும் விலங்குகளுடன் ஒப்பிட்டால் குழந்தை மிக முன்னணியில் உள்ளார்கள். மனித மூளை சற்று வேறுபட்டது. மனித மூளையால் இயல்பற்ற திறமைகளையும் கற்றுக்கொள்ள முடியும் என்பதுதான் அந்த வேறுபாடு.
நியூரல் பிளாஸ்டிசிடி…..
பிறவி சாரா கல்வித்திறன்களை கற்றுக்கொள்ள மனிதனால் முடியும். குறிப்பாக மூளையின் செரிபிரல் கார்டெக்ஸுக்கு இந்தப் பண்பு உண்டு. மூளையின் இந்தத் திறனையே நியூரல் பிளாஸ்டிசிடி என்று அழைக்கிறார்கள். மனித மூளையில் ஏராளமான உபரி நியூரான் சுற்றுகள் உள்ளன. இதனால் புதியவற்றை ஒன்றோடொன்று இணைக்கவும், அவற்றுக்கிடையே புதிய தொடர்புகளை கண்டுபிடிக்கவும் முடிகிறது. காலந்தோறும் இத்திறனாலேயே கற்கால மனித மூளை பல்வேறு திறன்களை உடைய நாகரீக மனித இனமாக வளர்ச்சியுற்றது. தற்காலத்திலும் இதே நியூரல் பிளாஸ்டிசிடிதான் வயலினை இசைக்கவும், இயற்கணித பிரச்சினைக்குத் தீர்வு காணவும் பயன்படுகிறது.
கீயரி தத்துவம்….
இந்தப் பிறவி சார்ந்த, பிறவி சாராத கற்றலைத்தான் உயிரியல் முதன்மைத் திறமை, உயிரியல் இரண்டாம் திறமை என்கிறோம். உயிரியல் முதன்மைத் திறமையை விளையாட்டுப் போக்கிலான பரிமாற்றங்கள் மூலமும், தனக்குத்தானே பயிற்சியளிப்பதன் மூலமும் மிக விரைவில் வளர்த்துக் கொள்வார்கள் (குழந்தைகள் மொழி கற்றுக்கொள்வது மிகச்சிறந்த எடுத்துக்காட்டு).
இந்த உயிரியல் இரண்டாம் திறமையையும் தன்வயப்படுத்த முடியும். ஆனால் இங்குதான் “கல்வி” தனது பரிவாரங்களான கற்றல் , கற்பித்தல், பள்ளிக்கூடம், புத்தகங்கள்,-தேர்வுகள் எல்லாவற்றோடும் வருகிறது.
இவற்றைப் பயன்படுத்தி மாணவர்களின் மனம் நோகச்செய்யாமல், தற்கொலைக்குத் தூண்டாமல், பள்ளியை விரட்டாமல் இந்த உயிரிய் இரண்டாம் திறமையை வளர்த்தெடுக்கிறோமா?
இரண்டாம் அத்தியாயத்தில் சந்திப்போம்….
நன்றி
மூலநூல்: குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம் (கமலா.வி.முகுந்தா)
தமிழில்: இராஜேந்திரன். கிழக்கு பதிப்பகம்.
இவண்
இராமமூர்த்தி நாகராஜன்.
Image may contain: drawing
No automatic alt text available.
Image may contain: 1 person

Thursday 27 September 2018

பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் அனைத்து கணித சூட்சுமங்களும் இந்த ஒரே பக்கத்தில் உள்ளது.


பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் அனைத்து கணித சூட்சுமங்களும் இந்த ஒரே பக்கத்தில் உள்ளது.
 No automatic alt text available.

பஞ்ச பட்சி சாஸ்திரம் -விளக்கம்

பஞ்ச பட்சி சாஸ்திரம்
----------------------------------
“அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உள்ளது” என்பது சித்தர்களின் வாக்கு. பிரபஞ்சமானது பஞ்ச பூதங்களாலானது என்பதை சித்தர்கள் கண்டறிந்தார்கள். அது போல் மனித உடலானது பஞ்ச பூதங்களாலானது என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர்.
ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனுக்கு உடல் காரகன்,மனோக்காரகன் என்று பெயர்.மனித உடலிலும்,மனதிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு சந்திரனின் சுழற்சியே காரணம் என்பதை சித்தர்கள் கண்டறிந்தார்கள்.மனிதர்களின் உடற்கூறு அவர்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திற்கு தகுந்தாற்போல் அமைந்தூள்ளது என்பதையும் கண்டறிந்தார்கள். உடலை இயக்குவது உயிர் காந்த ஆற்றலாகும். அந்த உயிர் காந்த ஆற்றாலானது சந்திரனினின் சுழற்சிக்கு தகுந்தார்போல் சில நேரங்களில் வலிமையடைவதையும்,சில நேரங்களில் வலுவிழந்துபோவதையும் கண்டறிந்தார்கள்.
உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமையாக இருக்கும்போது, எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறுவதையும், உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமை குன்றியிருக்கும்போது, எண்ணிய எண்ணங்கள் நடைபெறாமல் தடைபடுவதையும் அனுபவத்தில் கண்டறிந்தார்கள்.
உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமையாக இருக்கும்போது, உடல் வலிமை,மனவலிமை கூடுவதையும், உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமை குன்றியிருக்கும்போது, உடல் வலிமை,மனவலிமை குறைவதையும் அனுபவத்தில் கண்டறிந்தார்கள். உடலில் ஏற்படும் இத்தகை மாற்றங்கள் ஒரு குறிப்பிட்ட கால சுழற்சியில் இயங்குகிறது என்பதையும்,அந்த கால சுழற்சிக்குத்தகுந்தார் போல் செயல்பட்டால் வாழ்க்கையில் எப்பொழுதும் வெற்றி நடை போடலாம் என்பதையும் மானிடர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு அதை பஞ்ச பட்சி சாஸ்திரம் என்னும் தலைப்பில் உலகுக்கு வெளிப்படுத்தினார்கள்.
“பஞ்ச”என்றால் “ஐந்து” என்று பொருள். “பட்சி” என்றால் “பறவை” என்று பொருள். “சாஸ்திரம்” என்றால் “எழுதப்பட்டவைகளை செயல்படுத்திப்பார்த்தால் உண்மை விளங்கும்” என்று பொருள்.
பஞ்ச பட்சிகள் என்பவை வல்லூறு,ஆந்தை,காகம்,கோழி,மயில் ஆகிய ஐந்து பறவைகளாகும்.
பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் ஜென்ம நட்சத்திரம் தெரிந்தவர்களுக்கு ஜென்ம நட்சத்திர அடிப்படையிலும், ஜென்ம நட்சத்திரம்தெரியாதவர்களுக்கு அவரவர்களுடைய பெயரின் முதல் எழுத்தில் அமைந்துள்ள உயிர் எழுத்தின் அடிப்படையிலும் பட்சி நிர்ணயம் செய்யப்படுகிறது.
தமிழ் எழுத்துக்களை சித்திர எழுத்துக்கள் என தமிழறிஞர்கள் குறிப்பிடுவர். தமிழ் உயிர் எழுத்துகளில் குறில் வடிவமுடைய “அ,இ,உ,எ,ஒ” ஆகிய ஐந்து எழுத்துக்கள் என்ன வடிவத்தில் அமைந்துள்ளனவோ,அதே வடிவத்தையொத்த பறவைகள் பஞ்ச பட்சிகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
அ - வல்லூறு
இ - ஆந்தை
உ - காகம்
எ - கோழி
ஒ - மயில்.
மனித உடல் பஞ்ச பூதங்களால் ஆனது,அந்த பஞ்ச பூதங்களின் செயல் பாட்டையே,பஞ்ச பட்சி சாஸ்திரம் விளக்குகிறது.
நிலம் - வல்லூறு
நீர் - ஆந்தை
நெருப்பு - காகம்
காற்று - கோழி
ஆகாயம் - மயில்.
பஞ்ச பூதங்களைக்கட்டுப்படுத்தும் ஆற்றல் பஞ்சாக்ஷரம் என்னும் சிவ மந்திரத்திரத்திற்கு உண்டு. எனவே பஞ்சாக்ஷரம் ஜெபிப்பவனை யாராலும் வெற்றிகொள்ள முடியாது என்பதை இந்த சாஸ்திரம் ரகசியமாக வெளிப்படுத்துகிறது.
ந - வல்லூறு
ம - ஆந்தை
சி - காகம்
வ - கோழி
ய - மயில்.
பஞ்சாக்ஷர மந்திரத்திற்குரிய தேவதையான சிவபெருமானே,இந்த பஞ்ச பட்சி சாஸ்திரத்தை முதலில் தன் குமரனான முருகப்பெருமானுக்கு அசுரர்களை அழிக்கும் பொருட்டு உபதேசித்தார் எனவும்,முருகன் அதை அகத்தியருக்கு உபதேசித்தார் எனவும்,அகத்தியர் பதினென் சித்தர்களுக்கு உபதேசித்தார் எனவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் உதவியுடன் கீழ்கண்ட காரியங்களை செய்யலாம்.
1) உடலிலிருந்து நோய் நீக்குதல்
2) பிறர் உடலில் நோயை உண்டாக்குதல்
3) மனோவிகாரங்களிலிருந்துதன்னை தற்காத்துக்கொள்தல்
4) பிறர் மனதை கட்டுப்படுத்துதல்
5) எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்தல்
6) பிறர் எண்ணங்கள் நிறைவேறாமல் தடுத்தல்
7) போட்டிகளில் வெற்றியடைதல்
8) எதிரிகளை வெல்லுதல்
9) தாம்பத்தியஉறவில் பெண்ணை திருப்திபடுத்துதல்
10) ஆருட பலன் கூறுதல்
11) கிரக தோசங்களுக்கு பரிகாரம் செய்தல்
12) சுப காரியங்களுக்கு நல்ல நேரம் தேர்ந்தெடுத்தல்
13) வர்மம் நீக்குதல்,வர்மத்தால் எதிரிகளைதாக்குதல்.

பஞ்ச பட்சி சாஸ்திரம் வெற்றி தோல்வி தரும் காலங்கள்

பஞ்ச பட்சி சாஸ்திரம் வெற்றி தோல்வி தரும் காலங்கள்
------------------------------------------------------
தன் பட்சிக்கு படுபட்சி நாளாக இல்லாமலும், தன் பட்சி அதிகார பட்சியாக மட்டுமே இருக்கும் பகல் அல்லது இரவுப்பொழுதில் தன் பட்சி ஊண் அல்லது அரசு தொழில் செய்யும் நேரத்தில் எந்தவித முயற்சியில் ஈடுபட்டாலும் நூறு சதவிகித வெற்றி நிச்சயம்.
தன் பட்சிக்கு படுபட்சி நாளாக இல்லாமலும்,தன் பட்சி அதிகார பட்சியாகவும் இல்லாத பகல்,இரவுப்பொழுதுகளில் தன் பட்சி ஊண் அல்லது அரசு தொழில் செய்யும் நேரத்தில் எந்தவித முயற்சியில் ஈடுபட்டாலும் எழுபத்தைந்து சதவிகித வெற்றி நிச்சயம்.
தன் பட்சிக்கு படுபட்சி நாளாகவும்,அதிகார பட்சி பொழுதாகவும் இருக்கும் இரவு நேரத்தில் தன் பட்சி ஊண் அல்லது அரசு தொழில் செய்யும் நேரத்தில் எந்தவித முயற்சியில் ஈடுபட்டாலும் வெற்றி தோல்வி வாய்ப்புகள் சரிசமமாக இருக்கும்.
தன் பட்சிக்கு படுபட்சி நாளாகவும், தன் பட்சி அதிகார பட்சியாகவும் இல்லாத பகல்,இரவுப்பொழுதுகளில் தன் பட்சி ஊண் அல்லது அரசு தொழில் செய்யும் நேரத்தில் எந்தவித முயற்சியில் ஈடுபட்டாலும் இருபத்தைந்து சதவிகித வெற்றி வாய்ப்பு உண்டு.
தன் பட்சி அதிகார பட்சியாக இல்லாமலும்,தன் பட்சி படு பட்சியாகவும் உள்ள நாளில் தன் பட்சி நடை,துயில்,சாவு தொழில் புரியும் நேரம் எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் படுதோல்வி ஏற்படும்.
தன் பட்சி வலுவாகவும்,எதிராளியின் பட்சி வலுக்குன்றியும் இருக்கும் நேரம் பார்த்து செயலாற்றினால் எதிரிகளை எளிதில் வீழ்த்தலாம்.
தன் பட்சி வலுக்குன்றியும்,எதிராளியின் பட்சி வலுவாகவும் இருக்கும் நேரங்களில் எதிராளியை நேரில் சந்திப்பதையோ,போட்டிகளில் ஈடுபடுவதையோ தவிர்க்கவேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால்,அந்த குறிப்பிட்ட நேரத்தில் அரசு,ஊண் தொழில் செய்யும் பட்சியின் திசையில் தான் அமர்ந்துகொண்டு,எதிராளியை,துயில் சாவு தொழில் புரியும் பட்சியின் திசையில் அமரச்செய்து விவகாரம் செய்தால் வெற்றி பெறலாம்.

27 நட்சத்திர பட்சி

சூரிய உதயம் காலை 6 மணி என வைத்துக்கொண்டு கணிக்கப்பட்டது.
27 நட்சத்திர பட்சி
--------------------------
ஒருவருடைய ஜென்ம நட்சத்திரம் எதுவோ,அதைகொண்டு,அவருடைய நட்சத்திர பட்சியை அறியவேண்டும். நட்சத்திர பட்சியை நிர்ணயம் செய்வதில் பல அபிப்பிராய பேதங்கள் காணப்படுகின்றன, ஆயினும் பெரும்பாலானவர்கள் வளர்பிறை,தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தின் பட்சி ஒன்றுதான் என கூறியுள்ளனர்.நாமும் அவ்வாறே கொள்வோம்.
ஜென்ம நட்சத்திரம் - நட்சத்திர பட்சி
அஸ்வினி - வல்லூறு
பரணி - வல்லூறு
கிருத்திகை - வல்லூறு
ரோகிணி -வல்லூறு
மிருகசீரிடம் -வல்லூறு
திருவாதிரை -ஆந்தை
புனர்பூசம் -ஆந்தை
பூசம் -ஆந்தை
ஆயில்யம் -ஆந்தை
மகம் -ஆந்தை
பூரம் -ஆந்தை
உத்தரம் -காகம்
அஸ்தம் -காகம்
சித்திரை -காகம்
சுவாதி -காகம்
விசாகம் -காகம்
அனுசம் -கோழி
கேட்டை -கோழி
மூலம் -கோழி
பூராடம் -கோழி
உத்திராடம் -கோழி
திருவோணம் -மயில்
அவிட்டம் -மயில்
சதையம் -மயில்
பூரட்டாதி -மயில்
உத்திரட்டாதி -மயில்
ரேவதி -மயில்

பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் சில பயன்பாடுகள்

பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் சில பயன்பாடுகள்
----------------------------------------------------------------------
1. புதன், சனிக்கிழமைகளில் அவரவர் நட்சத்திர பட்சி அல்லது பெயர் பட்சி துயில் ,சாவு தொழில் செய்யும் நேரம் பணம் செலவு செய்தால்,கையிருப்பு பணத்திற்கும் செலவு வந்துவிடும்.
2. கடன் கொடுப்பவரின் நட்சத்திர பட்சி அல்லது பெயர் பட்சி ஊண்,அரசுத்தொழிலும்,கடன் வாங்குபவரின் நட்சத்திர பட்சி அல்லது பெயர் பட்சி துயில்,சாவுதொழிலும் செய்யும் நேரத்தில் கடன் பத்திரம் எழுதினால் கடன் உரிய நேரத்திற்குள் திரும்பிவிடும்.
3. தன் பட்சி ஊண் தொழில் செய்யும் நேரத்தில் மாங்கல்ய தாரணம் செய்ய நன்று.அப்பொழுது பெண்ணின் பட்சி அரசு,உண் தொழில் செய்துகொண்டிருந்தால் மிகவும் நல்லது.
4. பூர்வ பட்சம் இரவு நேரத்தில் தன் பட்சி அரசுத்தொழில் செய்யும் நேரம்,தந்தையானவன் தனுக்கு பிறந்த புத்திரனை முதன்முதலாகக்கண்டால்,தந்தையின் ஆயுட்காலம் முழுவதும் மகனானவன் தந்தையிடம் மரியாதையாக நடந்துகொள்வான்.
5. இரவு மூன்றாம் ஜாமத்தில் தனது பட்சி அரசாக இருக்கும் நாளில் தன் மனையாளுடன் முதல் முறையாக கூடினால் ஆயுள் உள்ளவரைக்கும் சுக போகங்கள் இருக்கும்.
6. குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும்போது, அவர்களின் பட்சி அரசு ,ஊண் தொழில் செய்துகொண்டிருந்தால் நன்றாக படித்து படிப்பை முடிப்பார்கள்.நடை காலத்தில் சேர்த்தால் சிரமப்பட்டு படிப்பார்கள்,துயில்,சாவு நேரத்தில் சேர்த்தால் படிக்கமாட்டார்கள்.
7. எதிராளி வயதில் சிறியவனாக இருந்தால் இருவருடைய பட்சியும் ஊண் தொழில் புரியும் நேரம் விவகாரம் பண்ணினால் வெற்றி உண்டாகும்.எதிராளி உடல் ஊனமுற்றவனாக இருந்தால் இருவருடைய பட்சியும் நடை தொழில் புரியும் நேரம் விவகாரம் பண்ணினால் வெற்றி உண்டாகும்.எதிராளி வயதில் பெரியவனாக இருந்தால் இருவருடைய பட்சியும் அரசு தொழில் புரியும் நேரம் விவகாரம் பண்ணினால் வெற்றி உண்டாகும்.எதிராளி தன்னைவிட உடல் இளைத்தவனாக இருந்தால் இருவருடைய பட்சியும் துயில் தொழில் புரியும் நேரம் விவகாரம் பண்ணினால் வெற்றி உண்டாகும்.எதிராளியின் பெயரில் உள்ள மொத்த எழுத்துக்களைவிட தன் பெயரில் உள்ள மொத்த எழுத்துக்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தால் இருவருடைய பட்சியும் ஊண் சாவு புரியும் நேரம் விவகாரம் பண்ணினால் வெற்றி உண்டாகும்.

பட்சிகளின் திசையும் பலன்களும்



பட்சிகளின் திசையும் பலன்களும்
---------------------------------------------------------
வளர்பிறை மற்றும் தேய் பிறை காலங்களில் பட்சிகள் ஆட்சி செலுத்தும் திசைகள் கீழே அட்டவணையாகத்தரப்பட்டுள்ளது.
பொதுவாக தன் பட்சி அரசு, ஊண், நடை ஆகிய தொழில் செய்யும்போது,எந்த காரியங்களில் ஈடுபட்டாலும் வெற்றியுண்டாகும். தன் பட்சி துயில்,சாவு போன்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும்போது நாம் செய்யும் காரியங்கள் எதுவும் வெற்றியடையாது.அத்தகைய நேரங்களில் எந்த பட்சி அரசு தொழில் செய்கிறதோ, அந்த பட்சியின் திசையில் தான் அமர்ந்து கொண்டு எதிராளியை துயில்,சாவு தொழில் செய்யும் பட்சியின் திசையில் அமரச்செய்து காரியம் செயலாற்றினால்,நிச்சயம் வெற்றியுண்டாகும். அதாவது ஒரு கூட்டத்தில் அமர்ந்துகொண்டு பேசும்போதோ அல்லது வாதாடும்போதோ இந்த வழிமுறையை கையாளவேண்டும்.
No automatic alt text available.

பஞ்சபட்சி சாஸ்திரமும் பஞ்சபூத சம நிலையும் மருத்துவம் செய்யயும் நேரம்

பஞ்சபட்சி சாஸ்திரமும் பஞ்சபூத சம நிலையும் மருத்துவம் செய்யயும் நேரம்
------------------------------------------------------------------
ஆங்கில மருத்துவத்தை தவிர மற்ற மருத்துவ முறைகளான சித்த மருத்துவம்,ஆயுர்வேதம்,யுனானி,வர்ம சிகிச்சை, நுண் அழுத்த சிகிச்சை, நுண் துளை சிகிச்சை, பிராண சிகிச்சை, ரெய்கி சிகிச்சை முதலியவை பஞ்ச பூத தத்துவங்களை உடலில் சம நிலை படுத்துவதையே குறிக்கோளாக கொண்டுள்ளன.
உடலில் எப்பொழுது உயிராற்றல் நிரம்பி வழியும், எப்பொழுது உயிராற்றல் குறைந்து காணப்படும் என்பதை பஞ்ச பட்சி சாஸ்திரம் மூலம் அறிந்து கொள்ளலாம். பஞ்ச பட்சி சாஸ்திரம் தெரிந்தவர்கள் தன்னுடைய பட்சி ஊண்,அரசு தொழில் செய்யும் நேரத்தில் முத்திரை பயிற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
வர்ம சிகிச்சை, நுண் அழுத்த சிகிச்சை, நுண் துளை சிகிச்சை, பிராண சிகிச்சை, ரெய்கி சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களும் தன்னுடைய பட்சி ஊண்,அரசு தொழில் செய்யும் நேரத்தில் முயற்சி செய்யலாம்.

ஊண் பட்சிகள்

ஊண் பட்சிகள்
          பூர்வ பட்சம் பகல் முதல் ஜாமத்தில் சாவு தொழில் செய்யும் பட்சி எதுவோ,அந்த பட்சி இரண்டாம் ஜாமத்தில் ஊண் தொழில் செய்யும். இரண்டாம் ஜாமத்தில் சாவு தொழில் செய்யும் பட்சி எதுவோ,அந்த பட்சி மூன்றாம் ஜாமத்தில் ஊண் தொழில் செய்யும். மூன்றாம் ஜாமத்தில் சாவு தொழில் செய்யும் பட்சி எதுவோ,அந்த பட்சி   நான்காம் ஜாமத்தில் ஊண் தொழில் செய்யும். நான்காம் ஜாமத்தில் சாவு தொழில் செய்யும் பட்சி எதுவோ,அந்த பட்சி ஐந்தாம் ஜாமத்தில் ஊண் தொழில் செய்யும்.

பஞ்ச பட்சி சாஸ்திரம் படுபட்சி நாள் தனிய நாட்கள்

பஞ்ச பட்சி சாஸ்திரம்
==================
படுபட்சி நாள்
============
ஒவ்வொரு பட்சிக்கும் வாரத்தில் ஒரிரு கிழமைகள் இறப்பு நாட்களாகும்.
படுபட்சி நாட்களில் பட்சிகள் முழுமையாக செயலிழந்து விடும்
எனவே அந்த நாட்களில் தொடங்கம் காரியம் எதுவும் வெற்றி அடையாது.
தனிய நாட்கள்
=============
ஒவ்வொரு தமிழ் மாதத்தில் இரண்டு நாட்கள் தனிய நாட்களாகும்.
தனிய நாட்களில் அனைத்து பட்சிகளும் செயலிழந்து விடும்.
தனிய நாட்களில் தொடங்கும் காரியங்கள் யாருக்குமே வெற்றியைத் தராது.

தனிய நாட்களில் பட்சி வித்தை பலிக்காது என்பதால் அந்நாட்களில் சுபகாரியங்கள் எதுவும் தொடங்காமல் இருப்பது நல்லது.
தனிய நாட்களிலேயே படுபட்சி நாட்களும் சேர்ந்து வந்து விட்டால், அந்நாட்களில் ஆபத்துக்கள் அதிகமாக இருக்கும். எனவே
அந்நாட்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

No automatic alt text available.

பஞ்ச பட்சி சாஸ்திரம்
புதன், சனிக்கிழமைகளில் அவரவர் நட்சத்திர பட்சி அல்லது பெயர் பட்சி
துயில், சாவு தொழில் செய்யும் நேரத்தில் பணம் செலவு செய்தால்,
கையிருப்பு பணத்திற்கும் செலவு ஆகும் .

வளர்பிறை திங்கள் கிழமை பகல்
ஆந்தை - ஊண்
காகம் - நடை(படு பட்சி)
கோழி - அரசு
மயில் - துயில்
வல்லூறு -சாவு
வளர்பிறை வியாழக்கிழமை பகல்
காகம் - ஊண்
கோழி – நடை
மயில் - அரசு
வல்லூறு – துயில் (படு பட்சி)
ஆந்தை – சாவு
No automatic alt text available.


No automatic alt text available.

No automatic alt text available.

No automatic alt text available.

ஆண்/பெண் பட்சிகள்



ஆண்/பெண் பட்சிகள்
------------------------------------
ஜென்ம நட்சத்திரத்திற்குரிய பட்சி அல்லது பெயர் பட்சியானது ஆணுக்கு ஆண் பட்சியாகவும்,பெண்ணுக்கு பெண் பட்சியாகவும் அமைந்தால் அவர்கள் தங்கள் தங்களுடைய பாலினத்தன்மையை கொண்டிருப்பார்கள். ஆணுக்கு பெண் பட்சியாகவும்,பெண்ணுக்கு ஆண் பட்சியாகவும் அமைந்தால் வேற்று பாலினத்தன்மை அவர்களிடம் காணப்படும்.

நட்சத்திற்கு உரிய பஞ்ச பூதங்களும் பட்சிகளும்

No automatic alt text available.

பஞ்ச பட்சிகளின் பொது வரிசை முறை



பஞ்ச பட்சிகளின் பொது வரிசை முறை
----------------------------------------------------------
பஞ்ச பட்சிகளின் பொது வரிசை முறையானது பஞ்ச பூதங்களின் வரிசை முறையை ஒட்டியே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பஞ்ச பூதங்களின் வரிசை முறையானது நிலம்-நீர்-நெருப்பு-காற்று-ஆகாயம் என கீழிருந்து மேலாக பூமியிலிருந்து ஆகாயத்தை நோக்கி அமைகிறது. பஞ்ச பட்சி சாஸ்திரமானது உயிராற்றல் சம்பந்தமான ஒரு சாஸ்திரமாகும். அதாவது பஞ்ச பூத தத்துவங்களால் ஏற்படும் உயிர் ஆற்றல் சுழற்சி முறையை விளக்குவதே பஞ்ச பட்சி சாஸ்திரமாகும். இதன் அடிப்படையில் பஞ்ச பூதங்களின் குறியீடுகளாக தமிழ் உயிர் எழுத்துக்களை நிர்ணயித்தார்கள் சித்தர்கள். தமிழ் உயிர் எழுத்துக்களில் குறில் வடிவங்களான அ-இ-உ-எ-ஒ என்பவை முறையே நிலம்-நீர்-நெருப்பு-காற்று-ஆகாயம் இவைகளைக்குறிக்கின்றன. தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் சித்திர எழுத்துக்களாகும். அதாவது விலங்குகள்,பறவைகள் இவைகளின் உருவ அமைப்பிலிருந்து உருவாக்கப்பட்டது தமிழ் எழுத்துக்களாகும். உயிரினங்கள் பல உலகில் இருந்தாலும் பறவைகள் மட்டுமே நிலம்-நீர்-நெருப்பு-காற்று-ஆகாயம் என அனைத்து நிலைகளிலும் சஞ்சரிக்கக்கூடியவை என்பதால் தமிழ் உயிர் எழுத்துக்களுக்கு உருவம் கொடுத்த பறவைகளை பஞ்ச பூதங்களுக்கு குறியீடுகளாக சித்தர்கள் நிர்ணயித்துள்ளார்கள். 
இதன்படி 
வல்லூறு உண்ணும்போது "அ" போலவும்
ஆந்தை உண்ணும்போது "இ" போலவும்
காகம் உண்ணும்போது "உ" போலவும்
கோழி உண்ணும்போது "எ" போலவும்
மயில் உண்ணும்போது "ஓ" போலவும் 
காட்சியளிப்பதால் உயிரெழுத்துக்கள் மற்றும் பஞ்ச பூதங்களின் வரிசை முறையில், பட்சிகள் பொதுவாக வல்லூறு-ஆந்தை-காகம்-கோழி-மயில் என வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
No automatic alt text available.

பஞ்சபூதங்களும் பஞ்ச பட்சிகளும்

பஞ்சபூதங்களும் பஞ்ச பட்சிகளும்
------------------------------------------------------
பஞ்ச பூதங்களின் குறியீடுகளாக பஞ்ச பட்சிகளை எப்படி நிர்ணயித்தார்கள் என்பது கீழே தரப்பட்டுள்ளது. 
பூமியில் பல விதமான உயிரினங்கள் வசித்து வருகின்றன. அவை, நடப்பன,மிதப்பன,பறப்பன என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக பறவையினங்கள் மட்டும் நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களையும் தொட்டு நிற்பவையாகும். அதாவது பறவைகள் நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் ஆகிய ஐந்து நிலைகளிலும் சஞ்சரிக்கக்கூடியவையாகும். இதன் காரணத்தினாலேயே சித்தர்கள் பஞ்ச பூதங்களின் குறியீடுகளாக பறவைகளை நிர்ணயித்துள்ளார்கள்.
வல்லூறு பறவை வானத்தில் மிக உயரத்தில் பறக்கும் தன்மையுடையது என்றாலும்,வானத்தில் பறந்துகொண்டே பூமியை கூர்மையாக கவனிக்கும் தன்மையுடையது என்பதால் நில பூதத்தை குறிக்கும் பறவையாக சித்தர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆந்தையானது நீர் சார்ந்த இடங்களான ஆற்றங்கரை, குளத்தங்கரை, ஏரிக்கரை, வாய்க்கால் ஓரம், வயல்வெளிகள் ஆகிய இடங்களில் வசிக்கும் பறவை என்பதால் நீர் பூதத்தை குறிக்கும் பறவையாக சித்தர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
வெப்ப காலத்தில் மட்டுமே இன விருத்தியில் ஈடுபடும் பறவை காகம் என்பதால், அதை நெருப்பு பூதத்தை குறிக்கும் பறவையாக சித்தர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
அதிகாலையில் குரல் எழுப்பும் பறவை கோழி என்பதால், அதை காற்று பூதத்தை குறிக்கும் பறவையாக சித்தர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆகாயத்தில் நகர்ந்து செல்லும் மேகங்களைக்கண்டு ஆனந்த நடனமிடும் பறவை மயில் என்பதால், அதை ஆகாய பூதத்தை குறிக்கும் பறவையாக சித்தர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நன்றி : ரவி சங்கரன் 

நமசிவய வந்தது எப்படி?

ந ம சி வ ய= 51
எப்படி?
தமிழில் மெய் எழுத்துகள் 18
அதில்
எட்டாம் எழுத்து ந்
பத்தாம் எழுத்து ம்
மூன்றாம் எழுத்து ச்
பதினான்காம் எழுத்து வ்
பதினொன்றாம் எழுத்து ய்
8+10+3+14+11=46
மெய் என்றால் உடல் நமது உடலில் இந்த ஐந்து எழுத்தும ஐந்து இடத்தில் உடல் எழுத்தாய் விளங்கி நிற்க
அதற்கு உயிர்ப்பு கூட்ட உயிர் எழுத்தாக
அ+அ+இ+அ+அ
என்ற அட்சரத்தைக் கூட்டி
ந ம சி வ ய
என்ற மந்திரம் உருப்பெற்றது
மேற் சொன்ன எண்ணிக்கையில் உயிர்எழுத்து ஒன்று கூட்ட அதாவது
8+1=9
10+1=11
3+1=4
14+1=15
11+1=12
ஆகக் கூட்ட
9+11+4+15+12=51 என்று வரும்.
இதில் ஓம் என்பது மூலமந்திரம்
ஆகவே அது மூலாதாரத்தோடு தொடர்புள்ளது
இந்த ஐந்தெழுத்தும் மூலத்தின் துணையின்றி வேலை செய்யாது.
ஓம் தாய் எழுத்து மற்றவை சேய் எழுத்து (தாய் எழுந்து போனால் குட்டிகள் தானே போகும்)
ஓம்நமசிவய
இது் மூலாதாரம் தொடங்கி அடுத்த ஐந்து சக்கரங்களையும் இயக்கும்
ஆகவே ஆறு ஆதாரங்களை இப்படி சூட்சமமாக சொல்லிவைத்தனர்...
51அட்சரம்
5+1=6
6 ஆதாரங்கள்.
நன்றி : கோரக்க தாசன் 

தேய்பிறை வளர்பிறை இரவு தொழில் அட்டவணை

No automatic alt text available.
No automatic alt text available.
No automatic alt text available.

நோயாளிக்கு மருந்து கொடுக்கும் போது பட்சி எப்படி இருக்க வேண்டும்.

நோயாளிக்கு மருந்து கொடுக்கும் போது நம்/நோயாளி
பட்சி எப்படி இருக்க வேண்டும்.
எந்த பட்சியாக இருந்தாலும், பொது பட்சியை கணக்கில் வைத்து, அந்த நேரத்தில் இயங்கும் அரசு தொழிலில் உள்ள பட்சியில் முதல் வினாடியான அரசில் அரசு (வளர்பிறை பகலில் 48 நிமி- வளர்பிறை இரவில் 24 நிமி, தேய்பிறை பகலில் 18 நிமி , தேய்பிறை இரவில் 18 நிமி ) இருக்கும்பொழுது மருந்து உண்ண சிறப்பாகும்.

படு பட்சியும் பிராண முத்திரையும்.



படு பட்சியும் பிராண முத்திரையும்.
---------------------------------------------------------------
படு பட்சி நாட்களிலும், நம் பட்சி துயில் , சாவு தொழில் செய்யும் நேரங்களிலும் பிராண முத்திரை பயிற்சி செய்வதன் மூலம் உடலுக்கு ஏற்படும் ஆற்றல் குறைவை சமன் செய்துகொள்ளலாம்.
படத்தில் காட்டியவாறு விரல்களை அழுத்தி பிடிப்பது பிராண முத்திரையாகும். இதை குறைந்தது இருபது நிமிடங்கள் செய்யவேண்டும்.
No automatic alt text available.

பஞ்ச பட்சியில் பந்தய கணிப்பு

பஞ்ச பட்சியில் பந்தய கணிப்பு
--------------------------------------------
விளையாட்டுப்போட்டிகளில் யார் வெற்றி பெறுவார் என்பதை பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் மூலம் எளிதில் கணிக்க முடியும். ஆட்டத்தில் பங்கு பெறும் இரு அணிகளின் பெயர்களில் உள்ள முதல் எழுத்தை எடுத்து அந்த முதல் எழுத்து உயிரெழுத்தாக இருந்தால் அப்படியே எடுத்துக்கொள்ளவும்.அல்லது அந்த முதல் எழுத்தில் கலந்திருக்கும் உயிர் எழுத்தை எடுத்துக்கொள்ளவும். அந்த உயிர் எழுத்தைக்கொண்டு அந்த அணியின் பட்சியை நிர்ணயித்துக்கொள்ளலாம்.
அ,ஆ-வல்லூறு
இ,ஈ-ஆந்தை
உ,ஊ-காக்கை
எ,ஏ-கோழி
ஒ,ஓ- மயில்
ஆட்டம் நடக்கும் நேரத்தில் எந்த அணியின் பெயர் பட்சி அரசு,ஊண் தொழில் செய்கிறதோ அந்த அணி வெற்றி பெறும். எந்த அணியின் பெயர் பட்சி துயில், சாவு தொழில் செய்கிறதோ அந்த அணி தோற்கும்.
நடைத்தொழில்- 50% வெற்றி வாய்ப்பு.
பெயர் பட்சி படுபட்சியானால் தோல்வி
பெயர் பட்சி அதிகார பட்சியானால் வெற்றி வாய்ப்பு அதிகம்.
உதாரணம்
----------------
இந்தியா (இ)- ஆந்தை - அரசு
பாகிஸ்தான் (ஆ)- வல்லூறு - துயில்
இதை வைத்து பார்த்து விட்டு
பிறகு இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு என கூறிவிடலாம்.

வளர்பிறை மூலிகை எடுக்க சிறந்த பட்சி நாள் மற்றும் நேரம்

வளர்பிறை மூலிகை எடுக்க சிறந்த நாள் மற்றும் நேரம்
மேற்குறித்த நாட்களில் அந்தந்த பட்சிக்கு உள்ளவர்கள் அந்தந்த நாட்களைத் தவிர்த்து மூலிகைகள் எடுக்க, தொழிற் செய்ய நற்பலன்களைப் பெறலாம்.
பட்சி நாள் நேரம்
1. வல்லாறு வெள்ளி காலை 6.00 முதல் 6.45
2. ஆந்தை புதன் காலை 6.00 முதல் 6.30
3. காகம் வியாழன் காலை 6.00 முதல் 6.30
4. கோழி புதன் காலை 6.00 முதல் 6.48
5. மயில் வியாழன் காலை 6.00 முதல் 6.48
தேய்பிறை மூலிகை எடுக்க சிறந்த நாள் மற்றும் நேரம்
பட்சி நாள் நேரம்
1. வல்லாறு வெள்ளி காலை 6.00 முதல் 6.45
2. ஆந்தை புதன் காலை 6.00 முதல் 6.30
3. காகம் வியாழன் காலை 8.23 முதல் 8.42
4. கோழி புதன் காலை 8.23 முதல் 8.42
5. மயில் வியாழன் காலை 8.23 முதல் 8.42

பஞ்ச பூத விளையாட்டு

பஞ்ச பூத விளையாட்டு
----------------------------------------
அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்கு உரிய பட்சிக்கு உரிய பூதம் எதுவோ அந்த பூதத்தோடு விளையாடுவது ஜாதகனுக்கு பிடிக்கும். அந்த பூதத்தால் ஜாதகனுக்கு ஆபத்து வராது. உதாராணம் ஒருவருக்கு   பூரம் நட்சத்திரம் என்றால் . பூரத்தின் பூதம் நீர்.  நீரில் விளையாடுவது மிகவும் பிடிக்கும்.
No automatic alt text available.
No automatic alt text available.

பஞ்ச பட்சி விளக்க புத்தகம்

Image may contain: text
Image may contain: text
No automatic alt text available.
Image may contain: text
No automatic alt text available.
No automatic alt text available.
No automatic alt text available.
No automatic alt text available.
No automatic alt text available.
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
Image may contain: text
No automatic alt text available.
Image may contain: text



Monday 24 September 2018

சிவ சிவ சிவாய நம எனும் மந்திரம்

சிவ சிவ சிவாய நம,
உலகில் எண்ணற்ற மந்திரங்கள் உள்ளன . அவற்றில் மிகவும் உயர்ந்தது சிவாயநம எனும் மந்திரம் . ஆனால் ஈசனை நினைத்து மௌனத்தில் ஐந்தெழுத்தை மனம் உருக உச்சரிக்கும் போது சிவாயநம என்பது முதல் நிலைக்கு வருகிறது . இனி ஐந்தெழுத்தின் சக்தியை அறிந்து கொள்ளுங்கள் .!!!
(சி) --- சிவம் , உடலில் ஆதார சக்கர அதிபதி, லக்ஷ்மி கடாட்சம் , உடலில் உஷ்ண தன்மை , தவத்தில் பிரகாச மான ஒளியை தருவிக்கிறது . யோகத்தில் இஷ்ட சித்தியை தரும் . மோட்சம் தரும் எழுத்து . பஞ்ச பூதங்களில் அக்னியை வசியம் செய்யும்.
(வா)--- வாயு , உடலில் இறை அருளுக்கு அதிபதி , நோய்களை போக்கும் , சஞ்சீவி .உடலில் பிராணன்,தவத்தில் உயிர் சக்தியை தருவது,தேகத்தில் வசீகரம் அழகு தருவது, பஞ்ச பூதங்களில் வாயுவை வசியம் செய்வது.
(ய)-- ஆகாயம் , சொல் வர்மம் , நோக்கு வர்மம், தொடு வர்மம் , இவற்றை பிறர் உடலில் செயல் படுத்தும் சித்தியை நமக்கு தருவது, உச்சாடன திற்க்கு சித்தி தருவது , உடலில் உயிர் , சஞ்சிதா கர்மம், பிராப்த கர்மம் , ஆகாமீய கர்மம் மூன்றையும் போக்குவது , பஞ்ச பூதங்களில் பரவெளியை வசியம் செய்வது .
(ந)--- பூமி , உடலில் அருள் சக்தி தேகத்தை தருவது , துஷ்டா பிராப்தத்தை போக்குவது , மண்ணுலகில் கிடைக்கவேண்டிய ஐஸ்வரியம் தரவல்லது ,தவத்தில் ரூப முறையில் இறைவனை விஸ்வரூபமாக காட்டுவது, பஞ்ச பூதங்களில் பிருததிவி யை வசியம் செய்வது ,
(ம)--- நீர் --- ஆணவ மலம் பொருந்திய அசுத்த மாயை போக்குவது , உடலில் உதிரம், யோகிகளின் கமண்டல நீராகி சகல செயல்களையும் செய்வது, தனஞ்செயன் , ஈஸ்வரன் ,மிருத்யு கால ருத்ரன் ,உமா தேவி , ஆகியோரின் சக்தியை தவத்தில் தரவல்லது , பஞ்ச பூதங்களில் அப்புவை வசியம் செய்வது .
இத்தனை சக்தி வாய்ந்த சிவாயநம எனும் மந்திரத்தை அதன் உண்மை சக்தியை புரிந்து கொண்டு , எந்த வகையிலாவது பக்தி மார்க்கம் , ஞான மார்க்கம் ஏதோ ஒரு முறையில் செயல் படுத்தினால் , உங்களைப்போல் பாக்கியவான்கள், உங்களைப்போல் ஞானம் உடையோர், மூவுலகும் உங்களை பின் பற்றும் உன்னத நிலை அடையலாம் !!
சிவசக்தி ரூபங்களுக்கு வணக்கம். அன்புள்ளம் கொண்ட எனது அருமை சிவசக்தி ரூபங்களே நீங்கள் எல்லோரும் மானுடம் அல்ல ! உண்மை பிரம்ம மான ஈசனின் மருவுருவங்கள் . நமது அன்றாட நிகழ்வுகளில் நான் நாம் என்ற வார்த்தைக்கே இடமில்லை எல்லாம் அவன் , எல்லாம் அவன் செயல்,,
ஈசன் நமது உடலில் என்ன செய்கிறான் என்பதை பார்ப்போம் .
1. ஆகாய சக்தியாய் நம் உடலில் நின்று , மோகம்,இராகம் ,துவேசம் ,பயம் , வாஞ்சை , வெட்கம் ,
போன்றவையாக செயல் படுகிறான்.
2. வாயு சக்தியாக நம் உடலில் நின்று ஓடுதல் , சயனித்தல், நடத்தல் உட்காருதல் , தாண்டுதல் குதித்தல்
போன்றவையாக செயல் படுகிறான் .
3. அக்னி சக்தியாக நம் உடலில் நின்று, நித்திரை , பசித்தல் , தாகம் , ஆலாசியம் , ஆண் பெண்
சம்போகம். போன்றவையாக செயல்படுகிறான் .
4. நீர் சக்தியாக நம் உடலில் நின்று , சிறுநீர் , எச்சில் , வேர்வை , இரத்தம், சுக்கிலம் ( விந்து ,நாதம்)
போன்றவையாக செயல் படுகிறான் .
5. பூமி ( மண் ) சக்தியாக நம் உடலில் நின்று , எலும்பு , மாமிசம் , தோல் , நரம்பு , ரோமம் ,
போன்றவையாக செயல்படுகிறான் .
மேலும் உடல் உறுப்புகளில்
ஆகாயம்----- இருதயம்.
வாயு --------- நுரையீரல்.
அக்னி -------- பித்தப்பை .
அப்பு(நீர்)----- ஈரல் .
பிருத்திவி(மண்)--- மண்ணீரல்.. போன்ற கருவிகளாகவும் . மேலும் நமது தேகத்தில் ஐந்து பேதங்களாகவும் செயல் படுகிறான் .
1. இருள் தேகம் , ஆணவ மலம் பொறுத்தி உடலை நான் என்று இருப்பது .
2. மறுள் தேகம் , மாயாமல சம்பந்தம் தனக்கு வருவது தெரியாமல் அகங்காரம் கொண்டு இருப்பது.
3. சுத்த தேகம் , அறிவு அருள் வடிவாய் தேகம் தோன்ற செய்வது .
4. பிரணவ தேகம், பார்வைக்கு தோன்றும்,கைக்கு அகப்படாது , நிழல் சாயாது , சித்தர் தேகம் மாகும் .
5. ஞான தேகம் , பார்வைக்கு தெரியாது , அறிவுக்கு புலப்படும் . இவ்வாறு நாமாகவும் நம் உடலாகவும்
நமது செயலாகவும் ஈசனே இருக்கின்றான் .
அன்பான சிவரூபங்களே இப்போது நீங்கள் யார் ??? எல்லாம் சிவமயம் !!
குத்தம் குறை ஏதுமற்ற
ஜீவன் இங்கு யாரடா?
குத்தம் என்று யாரும் இல்லை
பாவ மூட்டை தானடா!
சிவனைக்கூட பித்தன் என்றுபேசு கின்ற ஊரடா
புத்திகெட்ட மூடர்க்கு என்றும்
ஞானப் பார்வை ஏதடா? 
என்றும் அன்புடன் உங்கள் ஆச்சார்யா பாபாஜி

கன்னிகாதானம்" என்றால் என்ன?

கன்னிகாதானம்" என்றால் என்ன?
2.திருமணம் முடிந்த பின் ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா..? பிரம்மிப்பூட்டும் இரகசியம்..!!
வயிற்றுப்பசியைப் போக்குகிற அன்னதானமே சிறந்தது என்று சொல்வார்கள்.
நிதானமே சிறந்தது என்பவர்களும் உண்டு.
ஆனால், தானங்களிலேயே மிகப் பெரியதாக, மகா தானமாக சாஸ்திரம் குறிப்பிடுவது கன்னிகாதானத்தைதான்!
திருமணம் செய்துவைக்கும்போது, தந்தையானவர் தான் பெற்ற பெண்ணை மற்றொரு குடும்பத்தில் பிறந்த ஆண்மகனுக்கு தானமாக அளித்து அவனிடம் ஒப்படைக்கும் இந்த நிகழ்வையே கன்யாதானம் அல்லது கன்னிகாதானம் என்கிறார்கள்!
இந்த உலகில் பலவித தானங்கள் செய்யப்பட்டாலும் அவை எல்லாவற்றிலும் உயர்ந்தது இந்த கன்னிகாதானமே என்பதற்கு இந்த நிகழ்வின்போது சொல்லப்படுகிற சங்கல்பமும், மந்திரமுமே சாட்சி.
'தசானாம்பூர்வேஷாம், தசானாம்பரேஷாம்,
மம ஆத்மனஸ்ச ஏகவிம்சதிகுல உத்தாரண..' என்று அந்த மந்திரம் நீள்கிறது.
அதாவது, கன்யாதானம் செய்பவனுக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறையும், பின்னால் வருகிற பத்து தலைமுறையும், கன்யாதானம் செய்பவனது தலைமுறையையும் சேர்த்து ஆகமொத்தம் இருபத்தியோரு தலைமுறைகளையும் கரைசேர்க்கும் விதமாக இந்த கன்னிகாதானம் என்று அழைக்கப்படுகிற மகாதானத்தைச் செய்கிறேன் என்பது இந்த மந்திரத்தின் பொருள்.
உன் வம்சவிருத்திக்காக எம் குலவிளக்கை உனக்கு தானமாக அளிக்கிறேன் என்று ஒரு தந்தை செய்யக்கூடிய கன்னிகாதானமே உலகில் அளிக்கப்படுகின்ற தானங்களில் மிகப்பெரியது என்று சாஸ்திரம் போற்றுகிறது.
ஆண்பிள்ளையைப் பெற்றால் அந்தப் பிள்ளை செய்கிற கர்மாவின் மூலம் அந்த ஒரு தலைமுறை மட்டுமே கரையேறும்.
ஆனால், பெண்பிள்ளையைப் பெற்று, அவளைக் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து, மற்றொருவனின் வம்சவிருத்திக்காக அவளை தானம் செய்து கொடுப்பதால், அவனது வம்சத்தில் 21 தலைமுறைகளும் கரையேறுகிறது என்றால் பெண்பிள்ளையைப் பெற்றவன் எப்பேர்ப்பட்ட புண்ணியம் செய்தவன் என சிலாகிக்கிறார்கள் சான்றோர்கள்!
ஆக, பெண்பிள்ளையைப் பெற்றவன், இருபத்தியோரு தலைமுறையைக் கரையேற்றும் வாய்ப்பைப் பெற்றவன் என சாஸ்திரம்சொல்கிறது...
திருமணம் முடிந்த பின் ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா..? பிரம்மிப்பூட்டும் இரகசியம்..!!
பெண்ணானவள் தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தை விட்டு புதிய சூழலில் வாழ வருவதால் எல்லாமே புதிதாக இருக்கும்.
கணவர் வீட்டார் கூறும் வார்த்தைகளில் தவறாக புரிதல் வரும் அதிலும் கேலி கிண்டல் ஏன் சில நேரம் அதட்டல் என ஏற்படலாம்.
அந்த நேரங்களில் பெண்ணே *ஒருபசு மாடு எப்படி விஷத்தையே உண்டாலும் அது தரும் பாலில் துளிகூட விஷம் இராதோ,* அது போல கணவன் வீட்டார் உனக்கு தீமையே செய்தாலும் விஷம் போன்ற வார்த்தைகளை கொட்டி விடாதே என குறிக்க பாலும்.
வாழைபழம் எப்படி விதையே இல்லாவிட்டாலும் மூலமரத்தை சார்ந்து கன்றை தருகிறதோ அது போல் கணவனை சார்ந்து *வம்சவிருத்தியை நீ தரவேணும்* என குறிக்க பழமும் தருவர்.
மணமகனுக்கு ஏன் தருகிறார்கள் என்றால்,
ஏ ! மணமகனே *பாலில் எப்படி தயிரும் நெய்யும் உள்ளதோ* அதுபோல் இந்த பெண்ணிடமும் *அறிவும் ஆற்றலும்* உள்ளது பக்குவமாக உறையிட்டு பக்குவமாக கடைந்து வெண்ணையை நெய்யை எடுப்பாயாக பாலை கெட வைத்துவிடாதே என குறிக்க பாலும்.
வாழைமரத்தை எப்படி அதன் தாய் மரத்தில் இருந்து பக்குவமாக பிரித்து நடுவரோ அது போல் *இந்த பெண்ணை உங்கள் குடும்ப தோட்டத்தில் நட்டுள்ளோம்* அதை பட்டுபோக விடாமல் அதை பக்குவமாக கவனித்து அதிலிருந்து உங்கள் *சந்ததிகளை வாழையடி வாழையாக விருத்தி செய்து கொள்ளுங்கள் என உணர்த்தவே பழமும் கொடுக்கிறார்கள்.*
திருமணத்தில் பால் பழம் கொடுப்பது சும்மா ஒரு வேடிக்கையான செயல் அல்ல.

வளைகாப்பு விளக்கம்

வளைகாப்பு விளக்கம்
************************
கருப்பைக்குள்ளிருந்து கதவைத்திறக்க காத்துக்கொண்டிருக்கும் குழந்தையோடு வெளியிலே இருந்தே விளித்துப் பேசும் உக்தி தான் இந்த வளைகாப்பு. நான் யார்? எங்கே இருக்கிறேன்? யாருக்குள் இருக்கிறேன்? யாரோடு இருக்கிறேன்? யாரெல்லாம் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள்? என்ன நடக்கிறது என்னைச் சுற்றி? என்றெல்லாம் வார்த்தைகளே இல்லாமல் முட்டையிலிருந்து முளைத்த பச்சிளம் குழந்தை உணர்ச்சிப்பூர்வமாக உள்ளுக்குள்ளிருந்தே கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விக்கு வெளியே இருந்து பெரியோர்களால் வெளிப்படையாக கூறப்படும் பதில்களே இந்த வளைகாப்பு!
இச்சடங்கின் போது கர்ப்பமான பெண்ணின் இரண்டு கைகளிலும் பலவை ஒலி எழுப்பக் கூடிய வளையல்களை (காப்பு) அணிவித்து ஒலி எழுப்பி பாடல்கள் பாடி மகிழ்வர்....!
இந்த சடங்கு சம்பிரதாயங்கள் தனி ஒரு மனிதரின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு கட்டாயத்தின் பெயரால் செய்யப்பட்டு வந்ததாக இருந்ததில்லை. பலரது வாழ்வில் உணர்ந்து தெளிந்த விஷயங்களை உளப்பூர்வமாக ஆராய்ந்து அது சரியென ஒருங்கே எல்லோருமாய் உணரும் போது அது சடங்காக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு ஒவ்வொரு பெரியோர்களும் வாழ்ந்து பார்த்து கடைபிடித்த சடங்கே வளைகாப்பு அல்லது சீமந்தம்.
பொதுவாக கர்பினிப்பெண்களுக்கு வளைகாப்பு சடங்கு கர்பம் தரித்து ஆறாவது முதல் எட்டாவது மாதம் வரை அவரவர் குடும்ப வழக்கப்படி நடத்தப்படுவதுண்டு. காரணம் ஆறாம் மாதம் முதல் ஒரு ஜான் குளத்தில் கவலையின்றி நீந்திக்கொண்டிருக்கும் குழந்தை வெளியுலக விசித்திரங்களை கவனிக்கத் துவங்குகிறது.
உஷ்ணம், குளிர், சப்தம் என்று தன்னைச் சுற்றி நடக்கும் சகல விஷயங்களையும் குழந்தை கவனிக்கத் துவங்குவது அந்த மாதத்தில் இருந்து தான்.
எட்டாம் மாதம் முதல் கருவிலிருக்கும் குழந்தை நன்றாக கேட்க துவங்குகிறது.நம் கலாச்சாரத்தில் எந்த ஒரு துவக்கத்தையும் முடிவையும் முத்தாய்ப்பாக நினைத்து கொண்டாடுவது வழக்கம். கருவாய் உருவாகி உதிப்பது முதல் உருவற்று அழிந்து நீர்த்துப்போகும் மறைவு வரை அத்தனையையும் தெய்வீகமாக நினைத்து கொண்டாடுவதே
நமது பழக்கம். ஏனெனில் நாம் எதையும் முழுவதுமாக முற்றுப்பெறுவதாக நினைப்பதில்லை.
அது போல ஒரு குழந்தை முதன் முதலாக உலகை கவனிக்கும் தருணத்திலேயே அதன் கவனத்தை அந்த துவக்கத்தை வளைகாப்பு நடத்தி வரவேற்கிறோம். உன்னைச் சுற்றி நாங்கள் தான் இருக்கிறோம். உன் வரவை எதிர்பார்த்து உனக்காகவே காத்திருக்கும் உனது உறவுகள் நாங்கள் இருக்கிறோம் என்று குழந்தைக்கு உறுதி கூறும் சடங்கு தான் வளைகப்பு.
சில குடும்பங்களில் கர்பினிப் பெண்ணின் வயிற்றை விளக்கேற்றி ஆராத்தி எடுப்பார்கள்! காரணம் இருட்டுக்குள் இருக்கும் குழந்தைக்கு வெளிச்சம் காட்டி இதோ நாங்கள் தான் உனது உறவுகள். நன்றாகப் பார்த்துக்கொள். நீ வெளியே வந்தவுடன் உன்னை வரவேற்கப்போகும் சொந்தங்கள் நாங்கள் என்பதை உள்ளே இருக்கும் குழந்தைக்கு உறுதிப்படுத்தும் விதமாக சடங்கு செய்வார்கள். விளக்கொளி குழந்தைக்குத் தெரியுமா? தெரியும், தாயை பாதிக்கும் ஒளி, உஷ்ணம், ஒலி என எல்லாவற்றையும் குழந்தை உணர முடியும்.
மிகச் சமீபத்தில் செம்மறி ஆடோன்றில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் இருந்து மெல்லிசைகளை (பியானோ இசை போன்றவற்றை) கருவில் இருக்கும் குட்டி ஆடொன்று கேட்டு உணர்வது உறுதி செய்யப்பட்டுள்ளது...! மனிதனின் கருப்பையும் ஆடுகளின் கருப்பையும் அமைப்பில் கிட்டத்தட்ட ஒத்தவையாக இருப்பதால் இதே நிலை மனித சிசுவிற்கும் உறுதிப்படுத்தக் கூடியதே....!
தாயின் கருவறையில் இருக்கும் போதே குழந்தை கேட்டல் திறனை விருத்தி செய்யத் தொடங்குவதாகவும் தாயின் குரல் என்பவற்றை அடையாளம் கண்டு கொள்வதாகவும் இவ்வாய்வு கூறுகிறது....!
அதேவேளை உயர் அளவு சத்தங்கள் கருப்பைச் சுழலில் நுண் அதிர்வுகளை ஏற்படுத்துவதுடன் சிசுவின் கேட்டல் திறனையும் பாதிப்படையச் செய்ய சாத்தியம் இருக்கின்றது எனவும் குறிப்பாக அதிகம் இரைச்சல் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்யும் கர்ப்பிணிகளின் குழந்தைகள் இதனால் பாதிப்படைய சாத்தியம் இருப்பதாகவும் முன்னர் கருதப்பட்டது இருப்பினும் சிலவகை உயர் சத்த அலைகள் கருப்பைச் சூழலினால் வடிகட்டப்படுவதும் இவ்வாய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது....!
மிகப்பலகாலமாக இந்த பூமியின் பழங்குடி மக்களாகிய இந்துக்கள் அதாவது நாம் கடைபிடித்து வரும் சம்பிரதாயங்களை எல்லாம் பார்த்து அவற்றை பற்றி ஆராச்ச்ய் செய்யும் வெள்ளையர்கள் சில முடிவுகளைக் கூறுகிறார்கள்.
அவற்றை கொஞ்சம் வரிசைப்படுத்தினால் நீங்கள் எளிதாகப் புரிந்து கொள்ள சவுகரியமாக இருக்கலாம். இனி அவை!
1. கருவிலிருக்கும் போதே குழந்தைகள் சப்தங்களை கவனிக்கின்றது. அதீத சப்தத்தால் சில சமயங்களில் பாதிக்கப்படுவதும் உண்டு.
2. கருவிலிருக்கும் குழந்தையால் இசையைக் கேட்கமுடியும். ஒரு வயலின் வாசிப்பை விட ட்ரம்ஸ் வாசிப்பின் அதிர்வலைகளை குழந்தை எளிதில் உணர்கிறது.
3. கருவிலிருக்கும் குழந்தை தாயின் குரலையும் இதர சப்தத்தையும் சரியாக பிரித்துப் பார்த்து அறிந்து கொள்கிறது.
4. அமைதியான ஒரு இடத்தில் வாக்குவம் க்ளீனரின் சப்தம் முதல் பக்கெட்டில் தண்னீர் கொட்டும் சப்தம் வரை குழந்தையால் கவனிக்க முடியும்.
5. மனிதக் குரல்களின் மூலமாகவே வெளி உலகை குழந்தை பரிச்சியம் செய்து கொள்கிறது.
6. மற்ற சப்தங்களை விட தாய் மற்றும் தந்தையின் குரல்களை இயற்கையாகவே குழந்தை அடையாளம் கண்டு கொள்கிறது.
7. ஃப்ளாஷ் லைட் அடிக்கப்படும் போது குழந்தை அதனை எதிர் கொள்ளும் முகமாக அசைவதை ஆராய்ச்சிகளின் போது பல தாய்மார்கள் உறுதிப்படுத்தி யிருக்கிறார்கள்.
இப்படி பல ஆராய்ச்சிகள் மூலம் வெள்ளையர்களால் இன்று கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படும் விஷயங்களை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நமது முன்னோர்கள் சடங்குளாக கடைபிடித்து கருவிலிருக்கும் போதே புதிதாக வரப்போகும் ஜீவனுடன் உரையாடி உறவாடிப் பழகியிருக்கிறார்கள் என்றால் ஆச்சரியம் தான்.
வளர்பிறை பஞ்சமியன்று, நக்ஷத்ரம், நாள் நன்கு அமைந்தால் மிகவும் உகந்தது. அல்லது வளர் பிறையில் நல்ல நாளாகத் தேர்ந்தெடுக்கலாம்.
காலையில், மங்கள ஸ்னானம் செய்யவேண்டும். 9 கெஜம், உடுத்தி வளை அடுக்குவது வழக்கம்.
சில குடும்பங்களில் வளைகாப்புக்கு வாங்கின புடவை உடுத்திக் கொள்ளுவதும் உண்டு. முன்பெல்லாம், மசக்கைக்கு கறுப்பு நிறப் புடவை வாங்குவார்கள். தற்போது, வளைகாப்புக்கு, வாங்குகிறார்கள். இதெல்லாம், அவரவர் இஷ்டத்தையும், சௌகரியத்தையும் பொறுத்தது.
கோலம் போட்ட மணை அருகில், விளக்கு ஏற்றி வைத்து, தட்டில், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பழம், சர்க்கரை, கல்கண்டு எடுத்து வைக்கவும்.
மணையில் கிழக்கு நோக்கி உட்கார வைக்கவும்.
நாத்தனார் பக்கத்தில் இருந்தால், அவர் மாலை போடலாம்.
சில குடும்பங்களில், வளைச்சட்டியை வளை அடுக்கச் சொல்லுவார்கள். அன்று அவர் தாய் மாமனுக்கு சமானம்.
இல்லாவிட்டால், ஒரு கைக்கு அம்மாவும், மற்றொரு கைக்கு மாமியாரும் அடுக்குவது சில வீடுகளில் வழக்கம்.இருவரும் அந்த நேரம் இல்லாவிட்டால், வயதில் பெரியார்கள் யார் வேண்டுமானாலும் அடுக்கலாம்.
முதலில், குல தெய்வத்திற்கும், கோவிலில் அம்மனுக்கு சாத்துவதற்கும், சிவப்பு, பச்சை நிற வளைகள் 5, 5 எடுத்து சுவாமி சன்னிதியில் வைக்கவும். சில குடும்பங்களில், கன்னிப் பெணகள் தவறிப்போயிருந்தால், அவர்களை உத்தேசித்து எடுத்து வைப்பதும் உண்டு.
இடதுகைக்கு ஒற்றைப் படையும், வலது கைக்கு இரட்டைப் படையும் அடுக்க வேண்டும், (14, 15 - 21, 22)
முதலில் வேப்பிலைக் காப்பு போட வேண்டும். பொன் கப்பு, வெள்ளி காப்பு போடவேண்டும்.
கடைசியில், கொலுசு வளையோ அரக்கு வளையோ சற்றே சிறிய அளவில் போட்டால், வளைகள் ஓடாமல் இருக்கும்.மணையில் இருந்து எழுந்ததும் சபைக்கு ஒரு நமஸ்காரம் பொதுவாகப் பண்ண வேண்டும்.அந்த மணையில், கல்யாணம் ஆகி, கர்ப்பமாகாமல் இருக்கும் ஒரு பெண்ணுக்கு, மறு மணை என்று சொல்லி, வளை அடுக்குவது சம்பிரதாயம்.
அதற்குப் பின் ஏற்றி இறக்குவது வழக்கம்.ஒரு (அளக்கும்) படியில் நிரம்ப நெல் போட்டு, அதில் ஒரு சிறிய விளக்கை ஏற்ற வேண்டும்.
பெண்ணின், உச்சந்தலை, 2 தோள் பட்டைகள், 2 உள்ளங்கைகள், 2 பாதங்கள், வயிற்றில், இடுப்பில், ஒவ்வொரு வெள்ளி நாணயம் வைக்க வேண்டும்.
ஒவ்வொருவராக 5 சுமங்கலிகள், பென்ணுக்கு சந்தனம், குங்குமம் இட்டு, காலில் நலங்கு வைத்து, தலியில் பூ வைத்துப், படியால், மேலிருந்து பாதம் வரை ஏற்றி இறக்க வேண்டும்.
மூன்று முறை வலமாகவும் பின் இடமாகவும், சுற்றி கீழே வைக்கவும். பிறகு பென்ணை நமஸ்காரம் பண்ணச் சொல்லி, குனிந்ததும், இடுப்பில், பூவும் அக்ஷதையும் கலந்து தெளிக்கவேண்டும். இதற்கு அச்சுதம் தெளிப்பது என்று பெயர்.
பின்னர் ஆரத்தி எடுக்க வேண்டும்.
வந்தவர்கள் எல்லோர்க்கும் வளை கொடுப்பது வழக்கம். 5 வித பக்ஷணங்கள் செய்ய வேண்டும்.
ஒரு ஜோடி பருப்பு தேங்காய், வறுபயறு (பொரிகொள்ளு அல்லது வரவரிசி), திரட்டு பால் தவிர ஒரு உப்பு பக்ஷணமும், ஒரு ஸ்வீட்டும் செய்யலாம்.
வந்தவர்களுக்கு வெற்றிலை பாக்குடன் சிறிது வறுபயறு கொடுப்பது வழக்கம்.
சாப்பட்டிற்குச், சித்திரான்ன வகைகள் செய்ய வேண்டும். வளைகாப்புப் பெண் சாப்பிட உட்கார்ந்ததும், அந்தப் பெண்ணின் மடியில், ஒரு மிகச் சிறிய ஆண் குழந்தையையும், பெண் குழந்தையையும் உட்கார்த்தி, ஒரு அப்பளத்தில், சிறிது சாத வகைகளை வைத்துக் கொடுப்பதும் உண்டு .
மாலையில், மணையில் வைத்துப் பாடுவது அவரவர் ஸௌகரியத்தைப் பொறுத்தது.
மாமியாரோ, மற்ற பக்ககத்து உறவினர்களோ வந்தால், பணமோ, ரவிக்கைத் துணியோ கொடுப்பது வழக்கம். அவரவர் வசதியைப் பொறுத்து செய்யலாம்.
shiva shangar