Wednesday 19 September 2018

லிங்க புராணம், புராணங்கள் தோன்றிய வரலாறு 1-34

லிங்க புராணம்
பதிவு - 1
புராணங்கள் தோன்றிய வரலாறு
மகாமக யாகம் செய்ய இடம் தேடுதல்.
ஒரு சமயம் உலக மக்கள் நன்மைக்காக 12 வருடங்கள் தலையாய யாகம், தவம் மற்றும் தானம் செய்து அதற்கான அவிற் பாகம் வழங்க சரியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார் சௌனக முனிவர். எந்தப் பணிக்குமே அதை ஆற்றும் இடம், சுற்றுச்சூழல் எல்லாம் பொருந்தி வந்தால்தான் அந்தப் பணி முழுமை பெறும், மனதிலும் நிம்மதி நிலவும்.அதுவும் தவவலிமையில் சிறந்த முனிவர்கள் குலபதி சௌகனர் தலைமையில் ஒன்று கூடி 12 ஆண்டுகளில் செய்யக்கூடிய சத்திர வேள்வியைச் செய்ய விரும்பி இடம் தேடினர்.
அந்த வகையில் தம் முனிப் பணிக்குத் தோதான இடம் சரியாகக் கிடைக்காததால், அவர் பிரம்மனிடம் அப்படி ஓர் இடத்தைத் தனக்கு அடையாளம் காட்டுமாறு கேட்டுக்கொண்டார்.
பிரம்மன் காட்டிய இடம்
பிரம்மனாலும் உடனே அப்படி அடையாளம் காட்டிவிட முடியவில்லை. உயிர்களைப் படைப்பவன் என்றாலும், அந்த உயிர்களுக்கெல்லாம் நற்கதி அளிக்கும் பரந்தாமனைவிட வேறு யாரால் முனிவரின் கோரிக்கையை நிறைவேற்றி வைக்க முடியும்? ஆனால், அவர் தன்னிடம் வந்து கேட்டுக்கொண்டதால், பரம்பொருளின் ஆக்ஞைப்படியே அது நிறைவேற வேண்டும் என்றே பிரம்மன் கருதினார். இதற்காக நேரே சர்வீஸ்வரனிடம் போய், சரியான இடத்தைக் காட்டுமாறு கேட்டு அவரைத் தொந்தரவு செய்ய வேண்டுமா என்றும், பகவானுக்கு இருக்கக்கூடிய பல்வேறு பொறுப்புகளிடையே இதையும் கேட்டு அவரை சிரமப்படுத்துவானேன் என்றும் பிரம்மன் யோசித்தார். உடனே ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்தார். இரு முனைகளையும் முடிந்து அதை ஒரு சக்கரம்போல உருவாக்கினார். மனதுக்குள் ரிஷப வாகன சொரூப பார்வதி பரமேஸ்வரை தியானித்துக் கொண்டார்.
தர்ப்பைப்புல் கொண்டு முதலும் முடிவுமான இரு நுனிகளை இணைத்து அதை சக்கரமாக பாவித்துக்கொண்டார். அந்தச் சக்கரத்தை உருட்டிவிட்டார். பிறகு முனிவரைப் பார்த்து, ‘‘இந்தச் சக்கரம் உருண்டுபோய் எங்கே நிலை கொள்கிறதோ அதுவே உங்கள் மனதுக்கிசைந்த, உங்கள் விருப்பத்தை ஈடேற்றக்கூடிய தலமாக அமையும்,’’ என்று சொன்னார். பெரிதும் மகிழ்ந்த சௌனகர் அந்தச் சக்கரத்தைப் பின்தொடர்ந்தார். அது பாரத தேசத்தில் கோமதி ஆற்றங்கரையில் வந்து விழுந்தது இவ்விடமே தமது சத்திர வேள்வியைச் செய்ய உகந்தது என்று பிரம்மா கூற அங்கே சென்று தர்ப்பை புல்லை முனிவர்கள் அடையாளம் கண்டு , அந்த இடமே தங்களுக்கு உகந்தது என கருதி தமது வேள்வியைத் தொடங்கினர்..
வேள்வியில் தோன்றிய பரந்தாமன்
சர்வேஸ்வரன் அருளால் பிரம்மா காட்டிய வழி ஆதலால் முனிவர்கள் அனைவரது அதன் முழுப்பலனை முறைப்படி ஸ்ரீமன் நாராயணருக்கு வழங்க எண்ணினர். அவ்விதமே திருமால் குறித்து தவமியற்ற வேள்வியின் இறுதியில் அந்த வேள்வி குண்டத்திலேயே தோன்றி அவிர்ப்பாகம் ஏற்றுக்கொண்டு அம்முனிவர்கட்கெல்லாம் அருள்புரிந்தார்
நைமிசாரண்யம் பெயர் காரணம்
முனிவர்கள் வேள்வி செய்த அந்த இடம், நேமி என்ற சக்கரம் விழுந்த ஆரண்யம் (காடு) அதாவது நைமிசாரண்யம் என்று புகழ் பெற்றது. அவ்வாறு சக்கரம் வீழ்ந்த இடத்துக்கு அருகே கோமதி நதி ஓடுகிறது. சக்கரம் வீழ்ந்ததோடு அங்கே ஒரு பள்ளம் உருவாகி, தீர்த்தமும் தோன்றியது. அந்த தீர்த்தம் சக்கர தீர்த்தம் என்று இன்றளவும் வழங்கப்படுகிறது. முனிவரின் விருப்பத்தை நிறைவேற்றிய பிரம்மனுக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு பிரச்னை ஏற்பட்டது.அதன் காரணமாகவே புராணங்களும் , இதிகாசங்களும் உருவாகின.
No automatic alt text available.

பதிவு 2
வேதங்கள் தொலைத்த பிரம்மா
முனிவர்களுக்கு தவம் செய்ய ஏற்ற இடம் ஏற்படுத்தி கொடுத்த பிரம்மா , அதன் பின் நான்கு வேதங்களின் துணை கொண்டு, அந்த வேதங்கள் பின் தொடர்ந்து வர தனது சிருஷ்டி தொழிலை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது மது, கைடபர் என்னும் இரு அரக்கர்கள் தங்களைப் பிரம்மனைவிடவும் பெரியவர்களாய் நினைக்க வேண்டும் என்ற எண்ணத்தால் அந்த வேதங்களைக் குதிரை வடிவில் வந்து பிரம்மாவிடம் இருந்து பறித்துச் சென்றனர்.
வேதங்கள் இல்லாமல் சிருஷ்டியின் அர்த்தமே இல்லையே. உலகை இருள் சூழ்ந்தது . பிரம்மா செய்வதறியாது திகைத்தார். மஹா விஷ்ணுவிடம் சென்று முறையிட்டார் பிரம்மா, மஹாவிஷ்ணு இவ்வுலகைக் காக்கவும், வேதங்களை மீட்டு வரவும், அசுரர்கள் எந்தக் குதிரை வடிவில் வந்தனரோ, அந்தக் குதிரை வடிவிலேயே தாமும் செல்லத் தீர்மானித்தார்.
ஹயகிரீவர் தோற்றம்
குதிரை முகம், மனித உடல், ஆயிரம் கோடி சூரியர்களையும் மிஞ்சும் ஒளி, சாட்சாத் அந்த சூரிய, சந்திரர்களே இரு கண்கள், கங்கையும், சரஸ்வதியும் அந்தக் கண்களின் இமைகள் சங்கு, சக்கரதாரியாக இந்த திவ்ய சொரூபத்துடனேயே ஸ்ரீமன் நாராயணர் ஹயகிரீவராக அவதாரம் எடுத்து , குதிரை வடிவில் ஓடிய அசுரர்கள் வதம் செய்து வேதங்களை மீட்டு எடுத்தார். அன்று முதல் விஷ்ணு எடுத்த இந்த அவதாரம் ஹயக்ரீவராக உலகில் நிலை பெற்றது.
வேத வியாசர் தோன்ற காரணம்
அப்போது பிரம்மா தன்னால் சிருஷ்டி செய்து கொண்டே வேதங்களை காப்பாற்றி வேதங்களின் அடிப்படையில் படைத்தல் தொழிலை செய்து வர இயலவில்லை. படைக்கும் போதே உயிர்களுக்கு வேத ஞானம் அளிப்பதால் சிரமமாக உள்ளது .மாற்று வழி கூறவும் என வேண்டினார்.
அப்போது தங்கள் விருப்பப்படியே, வேதங்களில் கூறியுள்ள ஸ்லோகங்களையும், இறை அவதாரங்களை புராணங்களாகவும், இதிகாசங்களாகவும் பகுத்து பிரிப்பதாகவும், அதற்காக தான் உலக நன்மைக்காக எந்த இடத்தில் 12 வருடங்கள் முனிவர்கள் தவம் செய்து அவிற் பாகம் தனக்கு அளித்தார்களோ, அதே இடத்தில் உலக நன்மைக்காக தான் வேத வியாசராக அவதரிப்பேன், " என்று கூறுகிறார்.
புராணங்கள் தோன்றிய விதம்
அந்த அவதாரம் இந்த நைமிசாரண்யத்தில் தோன்றி, வேதங்களை சீர்படுத்தி அருளும் என்றும் தெரிவித்தார். அதன்படியே வேதவியாசராகத் தோன்றிய மஹா விஷ்ணு, வேதங்களை நான்காகப் பகுத்தார். அதுமட்டுமல்லாமல் பதினெட்டு புராணங்களையும் இயற்றினார். இன்றளவும் உலகப் புகழ் பெற்றிருக்கும் மகாபாரதக் கதையையும் தொகுத்து அளித்தார்.
உலக நன்மைக்கான அவிற் பாகம் ஏற்றுக் கொண்டதால் தான் பலப்பல மகான்களாகவும், ஆன்மிக ஞானச் செம்மல்களாகவும், அடுத்தடுத்து வரும் காலங்களில் தான் அவதாரங்கள் எடுக்கப் போவதை அப்போதே வேத வியாசர் சூசகமாகத் தெரிவித்தார்.
இன்றளவும் ஆன்மிக உலகம் வியந்து பாராட்டும் மகான்கள் பலரையும் மஹாவிஷ்ணுவின் அவதார அம்சம் என்றே கொள்ளலாம்.
நைமிசாரண்யத்தில் கற்றோர் போற்ற இதிகாசத்தையும், புராணங்களையும் இயற்றிய வியாசர், அவற்றை எளிய மக்களும் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் அனைவருக்கும் பரப்பினார்.
வேதவியாசரின் மகன் சுகரிடமிருந்து கற்ற புராணங்கள் மற்றும் இதிகாசங்களை வைசம்பாயனர், அத்தினாபுரத்து மன்னன் பரிட்சித்திற்கு எடுத்துக் கூறும் போது அங்கிருந்த சூத முனிவரும் அவைகளை நன்கு கேட்டார்.
நைமிசாரண்ய காட்டில் சூத பௌராணிகரான உக்கிரசிரவஸ் என்ற சூதக முனிவர், குலபதி சௌனகர் தலைமையிலான முனிவர்களுக்கு, , இதிகாசங்களையும், புராணங்களையும் ஒவ்வொன்றாக எடுத்துரைக்கிறார். அவர்கள் மூலமாக ஏடுகளில் தேவ நகரி மற்றும் சமஸ்கிருதத்தில் ஏடுகளில் பதிக்கப்பட்ட புராணங்களும் , இதிகாசங்களும் முதலில் வட மொழியிலும், பின்னர் இவற்றிலிருந்து தமிழ் மொழிக்கும் மொழி மாற்றம் செய்யப்பட்டன
அப்போது சூதக முனிவரால் அருளப்பட்ட புராணங்களுள் ஒன்று தான் லிங்க புராணம்.
அடுத்த பதிவில் வியாசர் ஒருங்கிணைத்து பகுத்து பிரித்த புராணங்கள், இதிகாசங்கள் எவை என்பதை பற்றி பார்க்கலாம். 
Image may contain: 2 people

பதிவு - 3
கடந்த பதிவில் ஹயக்ரீவரே பிரம்மனிடம் தானே வியாசராக பிறந்து ,வேதங்களை எல்லாரும் எளிதில் புரியும் வண்ணம் புராணங்கள், இதிகாசங்களாக மாற்றி தருவதாக வாக்களித்தார் என முடித்திருந்தோம்.அதன் தொடர்ச்சி
வியாசர் வேதங்கள் தொகுத்தல்
ஸரஸ்வதி நதி கரையில் பிரசித்தமானது வியாஸருடைய ஆசிரமம். அங்கு ரிஷிகள் ஓயாமல் யாகங்கள் செய்து கொண்டிருப்பார்கள். இலந்தை மரங்களின் வரிசைகளால் அலங்காரமுற்ற அந்தத் தனது ஆசிரமத்தில் வியாஸர் நீரை எடுத்து ஆசமனம் செய்து மனத்தை வேறு விஷயங்களில் போகவொட்டாமல் அடக்கித் தன்னிலையில் இருக்கச் செய்தார்.பின்னர் ஒவ்வொரு நிகழ்வுகளையும் சத்துவம்,ராஜஸம், தாமச குணங்களின் அடிப்படையில் பகுத்து அதை 18 புராணங்களாக பிரிக்கிறார்.
வியாசர் ஆசிரமத்தில் வேதங்களின் புரோகிதர்கள்
ரிக் வேதம் – ஹோதா
யஜுர் வேதம் – அத்வர்யு
சாம வேதம் – உத்காதா
அதர்வ வேதம் – ப்ரஹ்மா
ஹோதா, அத்வர்யு, உத்காதா, ப்ரஹ்மா என இப்படி நான்கு முக்கிய ரூபங்களில் யக்ஞங்களை நிர்வகிப்பவர்கள் உள்ளனர்.இவர்கள் வியாசர் வேதங்களை பகுத்து பிரிக்க உதவினர்.
புராணங்கள் உருவான விதம்
18 புராணங்கள் சுமார் ஐந்து லட்சம் ஸ்லோகங்களைக் கொண்டவை. பத்து லட்சம் வரிகள்—50 லட்சம் சொற்களைக் கொண்டவை.
புராணம் என்பது பூதக் கண்ணாடி
‘’புராணம் என்பது வேதத்துக்கு பூதக் கண்ணாடி.
வேதத்தில் உள்ளது உத்திரவுகளாக இருக்கும்—ஸத்யம் வட=உண்மை பேசு என்று வேதம் சொல்லுகிறது அது நமக்கு நினைவுக்கு வராது.
பல அத்தியாயங்களாகச் செய்யப்பட்ட அரிச்சந்திர புராணததை வாசித்தாதான் அது நினைவுக்கு வருகிறது. ஒரு கருத்தை வார்த்தைகளால் குறிப்பிடப்படும் விட கதைகளில் விளக்கும் போது நம்மால் தர்ம,அதர்மங்களை எளிதில் புரிந்து கொள்ள இயலும்.இதனால்தான் பகவான் மகாவிஷ்ணுவே வியாசராக அவதரித்த
வேதங்களை புராணங்களில் பகுத்து பிரிக்கிறார்.
வேதம் கட்டளை பற்றி குறிப்பு தருகிறது. அது பிரபு சம்மித்தம்.
புராணம் கட்டளை பற்றி விளக்கமாக கதையாக கூறுகிறது.அது சுஹ்ருத் சம்மிதம். நண்பனைப் போன்றது. ஒவ்வொரு சத்திய வார்த்தைகளுக்கும் விளக்கம் தருகிறது.
இதிகாசங்கள் நேரடி வர்ணணை. புராண காலத்தில் வாழும் காலத்திலேயே வாழ்ந்த மனிதர்களை, அவர்களின் வாழ்வியல் நிகழ்வுகளை நேரடியாக கண்டு , கேட்டு, உணர்ந்து வரலாறு நிகழ்ந்த காலத்திலேயே எழுதப்பட்டது.அவை
வால்மீகி ராமாயணம்
வியாச மகாபாரதம்
காவியங்கள் காந்த சம்மிதம்.கற்பனை என்னும் காவிய ரசத்துடன் சேர்ந்தது"
புராணங்கள் தொகுக்கபட்ட விதம்
புராணங்களில் ஐந்து பகுதிகள் இருக்கவேண்டும் என்பது மரபு:
1.சர்கம்: பிரபஞ்சத்தின் தோற்றம்
2.பிரதி சர்கம்: மற்ற உயிர்களின் தோற்றமும் மறைவும்
3.வம்சம்: ரிஷிகள், தேவர்களின் சரிதம்
4.மன்வந்தரம்: 14 மனுக்களின் காலம்
5.வம்சானுசரிதம்: சூரிய, சந்திர குல அரசர்களின் வரலாறு
அதை தொடர்ந்து உலக கால நிலை மாற்றங்களினால் நிகழ்ந்த அதர்ம செயல்களை அழித்து தர்மத்தை நிலைநாட்ட
புராண கதாநாயகர்கள் மேற்கொண்ட முயற்சிகளும் , அதன் நலன்களும் கூறப்பட்டு உள்ளது. ஆரம்பத்தில் இருந்த புராணங்களில் யாரும் யாரையும் போற்றுவதுமில்லை. தூற்றுவதும் இல்லை. இப்போது நமக்கு கிடைக்கும் புராணங்கள் அனைத்தும் நிறைய இடைச்செருகல்கள் கலந்தே கிடைக்கின்றன.அதனால் எது சரி , எது தவறு என்ற விவாதங்கள் ஏற்பட்டு , அதற்கான ஆதாரங்களும் தற்காலத்தில் நிறைய கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
புராணங்கள் சுகர், பராசரர் முதலியோரால் கூறப்பட்டவை.அதில் பல ராஜ வம்சங்கள் போகப்போக சேர்க்கப்பட்டன. இதனால் அவைகளின் காலம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. மஹாபாரத்தில் எல்லாக் கதைகளும் சுருக்கமாக உள்ளன.ஒவ்வொரு புராணங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
Image may contain: 1 person

பதிவு - 4
“சில வரலாற்று நிகழ்வுகளுடன் கூடிய கற்பனை கதைகளே புராணம் ஆகும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புராணங்கள் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் உள்ளன. தெய்வங்கள், பிரபஞ்சம், அரசர்கள், வீரர்கள், முனிவர்கள், கிராமிய கதைகள், தீர்த்த தலங்கள், கோயில்கள், மருத்துவம், ஜோதிடம், காதல் கதைகள், சிரிப்பு கதைகள் என பல்வகையான அறிவு மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த கதைகளை உள்ளடக்கியது புராணங்கள் ஆகும்.
புராணங்களில் மூன்று வகை உள்ளன. அவை:
1) மகா புராணங்கள் : 18 நூல்கள்
2) உப புராணங்கள் : 18 நூல்கள்
3) தல புராணங்கள் : 275 நூல்கள்
மகா புராணங்கள்
மகா புராணம் என்றால் பெரிய புராணம் எனவும், உப புராணம் என்றால் துணை புராணம் எனவும், தல புராணம் என்றால் சிவதலங்களின் புராணம் எனவும் பொருள்படும்.
பதினெண் மகாபுராணங்களிலும் மொத்த 5 லட்சத்துக்கும் அதிகமான சுலோகங்கள் உள்ளன. இவற்றுள் அதிக சுலோகங்களைக் கொண்டது கந்த புராணம் ஆகும். கந்த புராணம் முருக பெருமானைப் பற்றிய புராணமாகும். தீர்த்த தலங்களைப் பற்றிய விரிவான விளக்கங்களும் இந்தப் புராணத்தில் அடங்கியுள்ளன. சிவபெருமான், பார்வதிதேவி, விநாயகர், விஷ்ணுபெருமான், ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீராமர் ஆகியோரைப் பற்றிய கதைகளும் உள்ளன.
உப புராணங்கள்:
.உபபுராணங்கள் மகா புராணங்களை விட சிறியதாகவும் காலத்தில் பிற்பட்டதாகவும் இருக்கும்.
18 உபபுராணங்கள்
சூரிய புராணம்
கணேச புராணம்
காளிகா புராணம்
கல்கி புராணம்
சனத்குமார புராணம்
நரசிங்க புராணம்
துர்வாச புராணம்
வசிட்ட புராணம்
பார்க்கவ புராணம்
கபில புராணம்
பராசர புராணம்
சாம்ப புராணம்
நந்தி புராணம்
பிருகத்தர்ம புராணம்
பரான புராணம்
பசுபதி புராணம்
மானவ புராணம்
முத்கலா புராணம்
தல புராணங்கள்
275 சிவ தலங்களைப் பற்றிய கதைகளை உள்ளடக்கிய புராணங்கள் தல புராணங்கள் ஆகும்.
மகா புராணங்கள் 18 ஒரு பார்வை:
வேதங்கள், உபநிஷத்துகள், இதிகாசங்கள் ஆகியவற்றிற்கு அடுத்த இடத்தில் இருப்பவை புராணங்கள்.
நான்கு வேதங்களும் அநாதி காலந்தொட்டு ‘ஸ்ருதி’களாக இருந்து வருபவை.
‘உபநிஷத்துகள்’ ஒவ்வொரு வேதத்தின் ‘ஆரண்யகம்’ பகுதியில் பல இடங்களில் விரவியிருக்கின்றன. சில நேரங்களில் ‘உபநிஷத்துகளும்’, ‘ஆரண்யகம்’ என்றும் ‘வேதாந்தம்’ என்றும் அழைக்கப்படும்.
வால்மீகி இராமாயணம், வியாச மகாபாரதம் இரண்டு மட்டுமே இதிகாசங்கள் என்றழைக்கப்படுகின்றன. இதிகாசம் என்றால் இப்படித்தான் நடந்தது என்று பொருள் படும். அதாவது அவை உண்மை வரலாறுகள். நிகழ்வுகள் நடந்த இடத்திலேயே எழுதப்பட்டவை. அவற்றில் கற்பனைக்கு அதிக இடமில்லை.
புராணங்கள் இதிகாசங்கள் அனைத்தும் சுமார் ஐந்து லட்சம் சுலோகங்களில் அடக்கம்!
பிரம்ம புராணம் சுமார் 13000 ஸ்லோகங்கள்
பத்மம் சுமார் 55000 ஸ்லோகங்கள்
விஷ்ணு -சுமார் 23000 ஸ்லோகங்கள்
சிவ -சுமார் 24000 ஸ்லோகங்கள்
பாகவதம்- சுமார் 18000 ஸ்லோகங்கள்
பவிஷ்யம் -சுமார் 14500 ஸ்லோகங்கள்
மார்க்கண்டேயம் சுமார் 9000 ஸ்லோகங்கள்
ஆக்னேயம்- சுமார் 15000 ஸ்லோகங்கள்
நாரதீயம் – சுமார் 25000 ஸ்லோகங்கள்
பிரம்ம வைவர்த்தம் சுமார் 18000 ஸ்லோகங்கள்
லிங்கம் சுமார் 11000 ஸ்லோகங்கள்
வராஹம் சுமார் 24000 ஸ்லோகங்கள்
ஸ்காந்தம் சுமார் 81000 ஸ்லோகங்கள்
வாமனம் சுமார் 2400 ஸ்லோகங்கள்
கூர்ம சுமார் 5246 ஸ்லோகங்கள்
மத்ஸ்யம் சுமார் 1402 ஸ்லோகங்கள்
காருடம் சுமார் 19000 ஸ்லோகங்கள்
பிரம்மாண்டம் சுமார் 12000 ஸ்லோகங்கள்
ஆக சுமார் 370541 ஸ்லோகங்களுடன் தேவி பாகவதத்தில் உள்ள 18000 ஸ்லோகங்களையும் கணக்கிட்டால் 388548 ஸ்லோகங்கள் ஆகின்றன!
இது தவிர மஹாபாரதம் ஒரு லட்சம் சுலோகங்களாலும் வால்மீகி ராமாயணம் சுமார் 24000 ஸ்லோகங்களாலும் ஆகி இருப்பதை சேர்த்துக் கொண்டால் 512548 ஸ்லோகங்கள் ஆகின்றன.
நமக்குக் கிடைக்கக் கூடிய ஒரு சில பதிப்புகளை வைத்தே இந்த கணக்கீடு உள்ளது என்பதால் அனைத்துப் பதிப்புகளையும் நன்கு ஆராய்ந்தால் சில ஆயிரம் ஸ்லோகங்கள் கூடுதலாகவும் இருக்கலாம். ஆக சுமார் ஐந்து லட்சத்து ஐம்பதினாயிரம் ஸ்லோகங்களில் பிரபஞ்சம் பற்றிய மற்றும் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து அறிவையும் இவ்வுலக வாழ் நெறிகளையும் மோட்ச வாழ் நெறிகளையும் மோட்ச மார்க்கத்தையும் நம் முன்னோர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர்.இவற்றில் இல்லாதது வேறெங்கும் இருக்கப் போவதில்லை.
ஸ்ரீ மகாவிஷ்ணு தொடர்புடைய புராணம்
விஷ்ணுவையும் அவரது அவதாரங்களையும் அடிப்படையாகக் கொண்டவை: 1.விஷ்ணு புராணம். 2.மத்ஸ்ய புராணம். 3.கூர்ம புராணம். 4.வராஹ புராணம். 5.வாமன புராணம். 6.கருட புராணம். 7.ஸ்ரீமத் பாகவத புராணம்.
சிவ பெருமான் தொடர்புடைய புராணம்:
1.அக்னி புராணம். 2.வாயு புராணம். 3.பவிஷ்ய புராணம். 4.நாரதீய புராணம். 5.ஸ்காந்தம் (கந்த புராணம்). 6.மார்க்கண்டேய புராணம்.7.லிங்க புராணம்
பிரம்மனுடன் தொடர்புடைய புராணங்கள்
1.பிரம்ம புராணம். 2.பத்ம புராணம். 3.பிரம்ம வைவர்த்த புராணம். 4. பிரம்மாண்ட புராணம்.
புராணங்கள் யார் யாருக்கு கூறியது
விஷ்ணு புராணம்
இது மிகவும் பழைமையானது. ஆறு காண்டங்களையும், ஒவ்வொரு காண்டத்திலும் ஐந்து பெரும் பிரிவுகளையும் கொண்டது. பராசர மகரிஷி, மைத்ரேயருக்கு உபதேசம் செய்ததே விஷ்ணு புராணமாகும்.
மத்ஸ்ய புராணம்
விஷ்ணுவின் முதலாவது அவதாரமான ‘மத்ஸ்யம்’ (மீன்) தன்னைக் குறித்து மனுவிடம் விவரிப்பதாக உள்ளது இப்புராணம். பதிமூன்றாயிரம் ஸ்லோகங்களை உள்ளடக்கிய இப்புராணம் பல மன்னர்களின் வரலாறுகளைக் கதைபோல விவரிக்கிறது.
கூர்ம புராணம்
விஷ்ணுவின் இரண்டாவது அவதாரமான கூர்மம் (ஆமை) இந்திரத்யும்னன் என்று மன்னனிடம் விவரிப்பது போல அமைந்துள்ளது. இதில் எட்டாயிரம் ஸ்லோகங்கள் உள்ளன. இப்புராணத்தில்தான் முதன் முதலாக ஜம்புஸ்த்வபம் என்பதாக நமது பரதக்கண்டத்தின் பூகோள அமைப்பு விவரிக்கப்படுகிறது.
வராஹ புராணம்
விஷ்ணுவின் மூன்றாவது அவதாரமான வராஹ அவதாரத்தை பதினான்காயிரம் ஸ்லோகங்களில் விவரிக்கிறது இப்புராணம்.
வாமன புராணம்
பத்தாயிரம் ஸ்லோகங்களைக் கொண்ட இப்புராணம் வாமன அவதார வரலாற்றை மட்டுமல்லாது பரமேஸ்வரன்-பார்வதி ஆகியோரின் திருமண வரலாற்றையும் கூட விரிவாக விவரிக்கிறது.
கருட புராணம்
மகாவிஷ்ணுவானவர், தமது வாகனமாகிய கருடனுக்கு எட்டாயிரம் ஸ்லோகங்களில் விவரிக்கும் செய்திகளே இப்புராணம். இதில் மருத்துவம், வான் ஆராய்ச்சி, மரணத்திற்குப் பின் மனிதர்கள் அடையும் நிலைகள் ஆகியவையும் விளக்கப்படுகின்றன.
ஸ்ரீமத் பாகவத புராணம்
வியாசரே எழுதியது. மகாபாரதத்தில் முழுமையாக இடம் பெறாத ஸ்ரீகிருஷ்ணரின் முழு வரலாறும், விஷ்ணுவின் பிற அவதாரங்கள் குறித்த செய்திகளும், பன்னிரண்டு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டு பதினெட்டாயிரம் ஸ்லோகங்களாக விவரிக்கப்பட்டுள்ளன.
லிங்க புராணம்
சிவபெருமானைக் குறித்தும் அவரது வடிவங்களைப் பற்றியும் பன்னிரண்டாயிரம் ஸ்லோகங்களில் விவரிக்கிறது இப்புராணம். லிங்க வழிபாட்டின் தோற்றமும், காரணமும், சிவபெருமானின் அவதார லீலைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
பிரம்ம புராணம்
பிரம்மன் தட்சப் பிரஜாபதிக்கு விவரிப்பதாக உள்ள இப்புராணத்தில் 25,000 ஸ்லோகங்கள் உள்ளன.
பத்ம புராணம்
ஆறு காண்டங்களில் 55,000 ஸ்லோகங்களைக் கொண்ட பெரிய புராணம் இது. பிரம்மனின் பத்மாசனம் விவரிக்கப்படுவதால் இது பத்ம புராணம் என்று பெயர் பெற்றது.
பிரம்ம வைவர்த்த புராணம்
பிரம்மகாண்டம், ப்ரக்ருதி காண்டம், கணேச காண்டம், கிருஷ்ண ஜன்ம காண்டம் ஆகிய பிரிவுகளுடன் பதினெட்டாயிரம் ஸ்லோகங்கள் கொண்டது. இதில் உள்ள கணேச காண்டம் என்ற பகுதிதான் விநாயக புராணம் என்ற உபபுராணமாக பின்னர் உருவானது. “கிருஷ்ண ஜன்ம காண்டம்” என்ற பகுதிகளில் உள்ள தகவல்களை ஸ்ரீமத் பாகவத புராணத்திலும் காணலாம்.
பிரம்மாண்ட புராணம்
பன்னிரண்டாயிரம் ஸ்லோகங்களைக் கொண்ட இப்புராணம் ஒரு பொன்னிற முட்டையிலிருந்துதான் நமது பிரபஞ்சம் (பிரம்மாண்டம்-ஹிழிமிக்ஷிணிஸிஷிணி) தோன்றி விரிவடைந்தது என்று விவரிக்கிறது. நவீன விஞ்ஞானம் தற்காலத்தில் நம்பும் பெருவெடிப்பு (ஙிவீரீ ஙிணீஸீரீ) என்ற நிகழ்வை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தொகுக்கப்பட்ட இப்புராணத்தில் காணலாம்.
அக்னி புராணம்
அக்னிதேவன் வசிஷ்ட மகரிஷிக்கு விவரித்தது இப்புராணம். சிவலிங்கம், துர்க்கை, இராமர், கிருஷ்ணர் ஆகியோரைப் பற்றியும், நாடகம், சிற்பம், ஜோதிடம் போன்ற கலைகளைப் பற்றியும் விவரிக்கிறது என்பது இப்புராணத்தின் சிறப்பாகும்.
வாயு புராணம்
பதினான்காயிரம் ஸ்லோகங்களைக் கொண்டு இப்புராணத்தில் கி.பி. நான்காம் நூற்றாண்டில் ஆண்ட குப்த வம்சத்து மன்னர்களைப் பற்றியும், கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாணபட்டர் என்பவரைப் பற்றியும் கூட தகவல்களைத் தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பவிஷ்ய புராணம்
வருங்காலத்தில் என்னென்ன நிகழ்வுகளெல்லாம் நடக்க இருக்கின்றன என்று சூரியன் முன் கூட்டியே மனுவுக்குத் தெரிவிப்பதாக அமைந்தது இப்புராணம். ஸ்தலங்களைப் பற்றியும் அங்கெல்லாம் யாத்ரிகர்களுக்கு இருக்கக்கூடிய உரிமைகளைப் பற்றியும் கூட இப்புராணம் விவரிக்கிறது.
நாரதீய புராணம்
நாரத மகரிஷியானவர் சனத்குமாரருக்கு உபதேசித்தது இப்புராணம். 25,000 ஸ்லோகங்கள் இதில் உள்ளன.
கந்த புராணம்
முருகனின் வரலாற்றை விவரிப்பதுதான் இப்புராணம்
மார்க்கண்டேய புராணம்
மிகப்பழைமையான புராணம் இது. இதிலுள்ள தேவி மகாத்மியம் என்ற பகுதிதான், பின்னர் தனியான ஓர் உப புராணமாக உருவெடுத்தது.
மேற்குறிப்பிட்ட பதினெட்டு பெரிய புராணங்களும் தேவபாஷையாகிய தேவ நகரியில்தான் உள்ளன என்றாலும் பிற்காலங்களில் பாரத நாட்டின் பல்வேறு பாஷைகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. உதாரணமாக, ஸ்காந்தம் தமிழில் கச்சியப்ப சிவாச்சாரியரால் கந்தபுராணம் என்ற பெயரில் வழிநூலாக எழுதப்பட்டது. ஹாலாஸ்ய மகாத்மியம் என்ற உப புராணம் தான் பின்னர் திருவிளையாடற் புராணம் என்ற பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்டது.
18 புராணங்களில் ஒன்றான லிங்கபுராண நிகழ்வுகளை இனி வரும் ஒவ்வொரு பதிவுகளிலும் காணலாம்.
Image may contain: one or more people

பதிவு - 5
உலக மாற்றம் பற்றி வியாசர்
லிங்க புராணம் என்பது வியாசர் எழுதிய 11வது புராணமாகும். இந்த 21வது நூற்றாண்டி நடந்து கொண்டிருக்கும் ( "Greenhouse Effects ") பருவநிலை மாற்றத்தினால் மூவாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழும் என்றும்
மழைக்கு இனிமேல் கால நேரம் எதுவும் கிடையாது. தன் இஷ்டத்துக்கு வரும் போகும் மழை கொட்டோ கொட்டென கொட்டப் போகுது இவ்வளவு மழையா.! கடவுளே என்று புலம்புவார்கள் என்றும் லிங்க புராணத்தில் கலியுகத்தில் நிகழும் மாற்றங்களை துளி கூட மாறாமல் கூறியுள்ளார் வியாசர்
கலியுகத்தில் என்ன மாற்றம் நிகழும்
இந்த கலியுகத்தில் நடந்து கொண்டிருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் லிங்க புராணத்திலும் மகாபாரத்திலும் கூறியுள்ளார் வியாசர்.
திருடர்கள் மன்னர்கள் ஆகிவிடுவர். மன்னர்கள் திருடர்கள் ஆகிவிடுவர்.
மக்களின் சொத்துக்களை ஆட்சியாளர்கள் பறிமுதல் செய்து அதைத் தங்கள் சுயநலத்திற்காக செலவிடுவர்.
கொஞ்சம் படித்த அடிப்படை ஒழுக்கம் இல்லாதவர்கள் பெரிய சாமியார்களாகக் கருதப்படுவர்.
நிறைய நாடோடிகள் (அகதிகள்?) நாடு நாடாகச் செல்வர்.
தாய்மார்களின் கர்ப்பத்திலேயே கருக்கள் அழிக்கப்படும்
கோர மிருகங்களின் தொல்லைகள் அதிகரிக்கும்
மக்கள் தவறான முடிவுகளுக்கு ஓட்டு போடுவார்கள்
ஒருவரை ஒருவர் நம்ப மாட்டார்கள். பொறாமை அதிகரிக்கும்.
ஆயுட்காலம் குறையும். பலர் 16 வயதி இறப்பார்கள்.
பசி, பிணி இவற்றால் கஷ்டப்படுவோர் பூமிக்கடியில் வசிப்பார்கள்.
இளம் பெண்கள் கற்பை விலை பேசுவார்கள்
மழைக்கான அதிபதி கண்ட கண்ட இடங்களில் கண்ட கண்ட காலங்களில் மழையைக் கொட்டுவான்.
கடைக்காரர்கள் கொள்ளை லாபம் அடிப்பர்.
கடுமையான, அசிங்கமான மொழி பயன்படுத்தப்படும்
பிச்சைக்காரர்கள், வேலை இல்லாதோர் அதிகரிப்பர்
ஆட்சியாளர்கள் மக்களுக்கு பாதுகாப்பு வழங்காமல் மக்களின் செல்வத்தை பறிப்பதிலும், இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதிலும், வரிகள் மூலம் மக்களை ஏமாற்றுவதிலும் குறியாக இருப்பர்.
பணம் சம்பாதிப்பதே குறிக்கோளாக இருக்கும். ஆட்சியாளர்கள் வேறு லட்சியம் அதுவும் இல்லாமல் பணக்காரர்கள் சொல் கேட்பர்.
தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.
ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் விற்கப்படும்.
வியாசர் கூறும் கலியுகத்தின் இறுதி நிலை
21-22 ஆம் நூற்றாண்டில் புவி வெப்பமடைந்து -(global warming) இயற்கை தானாக அழியும் எனவும் , அதற்கான காரணங்கள் லிங்க புராணத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது என்பது அரிய தகவலாக இருக்கின்றது
அது உண்மையா என்பதை சோதனை செய்ய சூரியனைப்பற்றி நவீன ஆய்வுகள் என்ன சொல்கின்றது என்பதை பார்க்கலாம்.
சூரியனில் உள்ள கரும்புள்ளிகள் நிரந்தரமாக இருப்பது கிடையாது இந்த புள்ளிகள் மறையக்கூடியது என்றும் அப்படி கரும்புள்ளிகள் மறையும் போது சூரியனின் வெப்ப நிலையில் மாற்றம் மற்றும் சூரியப் புயலின் தாக்கங்களினால் சூரியன் வெடிப்பு ஏற்படும்.இதனால் பூமி வெப்பமடைய வாய்ப்புக்கள் இருப்பதாக சொல்லப்படுகின்றது.
இதுவே உலகத்தில் நடை பெற்றுக் கொண்டு இருக்கின்ற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் எதிர்காலங்களில் வரப்போகின்ற பெரிய பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணமாக இருக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.
பெருகி வரும் மக்கள் தொகைதான் ( 8 பில்லியன் மக்கள்) இதற்கு ஏற்ப அவர்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாமல் உலக நாடுகள் தடுமாறுகின்றன இதனுடைய வெளிப்பாடு தான் புவி வெப்பமடைதலுக்கு காரணம் என்று உலக அரசாங்கங்களும்
அதிகமான தொழிற்சாலைகள் மற்றும் கெமிக்கல் கழிவுகள் நிலத்தடி அணுகுண்டு பரிசோதனைகள் என்று மக்களும் மாறி மாறி ஒருவர் மீது பழி சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மனிதனின் சுயநலத்தால் மனிதாபிமானம் தொலைந்த நிலையில் உலகம் விரைவாக அழிவை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.
வியாசர் முனிவர் இன்றைய காலநிலையை அன்று எப்படி இதை கணித்தார் என்பதுதான் அறிவியலார் நம் முன் வைக்கும் கேள்வி ?
இயற்கையை அழித்தால் அது நம்மை திருப்பி அழிக்கும் என்பது உறுதி எங்களுடைய பூமியை நாங்கள் தான் பாதுகாக்க வேண்டும் என்பது நம் எல்லோருடைய ஆதங்கமாக இருக்கின்றது
இல்லாமல் போனால், வெள்ளத்தில் ஒரு நாள் மூழ்கி வாழ வேண்டிய நிலைமைகள் தான் வரும் இது இயற்கை மனிதனுக்கு அடிக்கும் கடைசி எச்சரிக்கை மணி .
ஒற்றைக் காலிலே நிற்கும் கலியுகம்
மகாராஷ்டிரா மாநிலத்தில், 6-ஆம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால் 1424 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட, இந்த ஹரிஷ்சந்திரகட் கோட்டை உள்ளது.
மால்ஷேஜ் காட் ஸ்தலத்தின் முக்கியமான வரலாற்று சின்னமான விளங்குகின்ற இந்த ஹரிஷ்சந்திரகட் கோட்டைக்குள்ளே இருக்கும் ஹரிஷ்சந்திரேஷ்வர் கோயிலுக்கு வலது புறமாக கேதாரேஷ்வர் என்ற மிகப்பெரிய குகை இருக்கிறது. அங்கு நீரால் சூழப்பட்ட 5 அடி உயரமுள்ள பெரிய சிவலிங்கம் ஒன்று அமைந்திருக்கிறது
இந்த லிங்கத்தை சுற்றி இடுப்பளவு குளிர் நீர் சூழ்ந்து மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் நீரில் மூழ்கி கடந்து லிங்கத்தை அடைவது சற்று கடினமான ஒன்றாக கருதப்படுகின்றது
அந்த நான்கு தூண்களும் சத்யயுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களை குறிப்பதாக சொல்லப் படுகிறது. ஒவ்வொரு யுகம் முடிவடையும் போதும் ஒவ்வொரு தூணாக இடிந்து விழுமாம்.அதன்படி தற்போது மூன்று தூண்கள் இடிந்து விட்ட நிலையில் கலியுகத்தின் முடிவில் நான்காவது தூணும் இடிந்து விடும் என்று நம்பப்படுகிறது. அந்த நாளில் இந்த உலகமும் அழிந்துவிடும் என்று ஒரு நம்பிக்கையும் இங்கு நிலவுகிறது. நிகழ்கின்ற நிகழ்வுகள் அதை உறுதி செய்வதாகவே உள்ளது.
கலியுகத்தின் முடிவில் உலகம் அழியும் என்றால் உலகின் தோற்றம் எப்படி இருந்திருக்கும் ? புதியதோர் உலகம் எப்படி அமையும்.அதையும் வியாசரே சொல்ல கேட்டு சூதக மாமுனிவர் நமக்கு சொல்கிறார்.


பதிவு - 6
நண்பர் ஒருவர் கேட்டிருந்தார்.நாம் ஏன் புராணங்கள் படிக்க வேண்டும்.அதனால் நமக்கு என்ன கிடைக்க போகிறது என்றார்? வலைதளப் பக்கத்தில் தேடி எனக்கு கிடைத்த கருத்தையே பதிலாக அளித்து பதிவு செய்கிறேன்.
புராணங்கள் ஐந்தாம் வேதம்
வேதங்களுக்கு அடுத்தபடியாகப் புராணங்கள் ஐந்தாவது வேதமாகக் கொண்டாடப்படுகிறது. மகாபாரதத்தைப் போலவே புராணங்களும் சமய இலக்கியமாகக் கருதப்பட்டு வந்துள்ளன. உருவத்திலும், பொருளிலும் அவை இதிகாசங்களோடும், ஸ்மிருதிகளோடும் ஒப்பிடத்தக்கன.
இந்திய தெய்வீக தரிசனங்களின் வரலாற்றையும், விரத அனுஷ்டானுங்களையும் அறிவதற்குப் புராணங்கள் மிகப் பயனுடையன. இந்திய நாகரிகத்தின் கருவூலம் புராணங்களே எனலாம். புராதனமாக இருந்து வருவது புராணம் எனப்படுகிறது.
புராணம் செவி வாயிலாக வந்த புராதனச் செய்திகள். வழி வழியாக மூதாதையர்களால் தலைமுறை தலைமுறையாக தங்கள் தம்பதியினருக்கு கற்பிக்கப்பட்டு அறிவூட்டப்பட்டு வந்தன. வேத காலந்தொட்டு கற்றுத்தரப்பட்ட கதைகளும், வரலாறுகளும் மக்களிடையே பிரபலம் பெற்றுப் புராணமாக வடிவெடுத்தன. புராணங்கள் பொய் என்று சொன்னால் எத்துணையோ ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள் கற்பித்த ஒழுக்கமும், தர்மமும் பொய் என்றே அர்த்தமாகும்.
புராண கதாநாயகர்கள்
ஹிந்து மத கடவுங்களை பொருத்த வரையில் ஒவ்வொருவரும் தனி தன்மைகளை கொண்டவர்கள், ஈசனை எடுத்துக்கொண்டால் இவரை புராணங்களின் படி ஆதி இறைவன் என கூறுவர்,புராணங்களின் படி விஷ்ணுவை ஆதி இறைவன் என கூறுவார்கள், உண்மையில் நம் முன்னோர்களால் கற்பிக்கபட்ட புராண கதைகளை படித்தால் அவர்களின் தனித்தன்மை மட்டுமே தென்படும்.மற்றவை புராணங்களை எழுதிய ஆசிரியர்களின் தனிப்பட்ட கருத்துக்களே.
சிவ புராணத்தில் உலகில் படைக்கப்பட்ட அனைத்தும் என் வடிவமே என்கிறார்.கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் “நீங்கள் யாரை மனமுருகி வழிபட்டாலும் அது என்னையே சேர்கிறது” என கூறியுள்ளார்.இதில் தெளிவாக தெரிவது,அகில அண்ட சராசரத்திலும் இறைவன் வியாபித்து இருக்கிறான், அவனை நாம் ஈசன் உருவத்திலும் காணலாம், விஷ்ணு ரூபத்திலும் காணலாம், ஏன் யேசு மற்றும் அல்லா ரூபத்திலும் காணலாம்.இன்னும் சொன்னால் உலகில் ஒரு இறைவன் தான்,இரண்டு இறைவன் தான் என இறைவனை எண்ணிக்கையில் அடக்க முடியாது. அவரவர் மனங்களுக்கு அவரவர் விருப்பப்படியே காட்சியளிக்கிறார் இறைவன்.
கடவுள்களின் குணங்கள் மற்றும் தன்மை ஒவ்வொரு புராண கதைகளிலும் ஒவ்வொன்றாய் புலப்படுகிறது, ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பும் வடிவில் இறைவனை தரிசிக்க நம் முன்னோர்கள் சுதந்திரம் அளித்ததால் தான் இன்று ஹிந்து மதத்தில் எண்ணில் அடங்கா கடவுள்கள். ஆனாலும் கடந்த நூற்றாண்டின் இறுதி வரை ஒற்றுமை காத்தோம்.இன்று அப்படியா இருக்கிறது.
நாம் ஏன் புராணம் படிக்க வேண்டும்
தர்மத்தை நாம் ஏற்கும் படியாக கதையாகவோ, வரலாறாகவோ குழைந்து கொடுத்தால் தான் அது நம்மை நல்வழிப்படுத்தித் தப்பான நிகழ்வுகள் திரும்ப நிகழாமலிருக்க உதவி செய்யும்.
லிங்க புராணம் இதைத்தான் செய்கிறது. சரித்திரம் வெறுமே காலவாரியாக ராஜாக்களின் வரலாற்றை மட்டுமே தந்திருக்கிறது. இதிலே கொடுங்கோலர்கள் கெடுதல் அடைந்தார்களா, உத்தமமான ராஜாக்கள் உயர்ந்த கதியைப் பெற்றார்களா என்பதற்கு பதிலில்லை.
கர்ம நியதிப்படி ஈஸ்வரனோ இல்லை மகாவிஷ்ணுவோ இவர்களுக்குத்தான் இப்படிப்பட்ட பாப புண்ணிய பலன்களைக் கொடுத்துத் தான் இருப்பார். ஆனால் அது இந்த பிறவியிலேயே கொடுக்கப்பட வேண்டும் என்பதில்லை அல்லவா? பின் அவர்கள் பிறப்பெடுத்த ஜன்மாக்களில் இந்தப் பலன்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இதை தேடி கண்டு பிடிப்பது காரியமில்லை. விசாரித்து அறிகிற சக்தியும் சரித்திரக்காரர்களுக்குக் கிடையாது.
நல்லது கெட்டவைகளைப் பற்றி நமக்கு ஒருவிதமான பாடமும் கற்பிக்காமல் வெறுமே காலவாரியாக பல ராஜாக்கள் ஆண்டதையும் சண்டை போட்டதையும் வளர்த்திச் சொல்ல வேண்டியதில்லை. அதனால் நம் எதிர்கால சந்ததியினருக்கு எந்த நன்மையும் வழியைப் போவது இல்லை.
எப்படி புராணங்கள் வரலாற்று நிகழ்வுகளிலிருந்து மாறுபடுகிறது
நாம் வாழ்க்கையில் எடுத்துத் கொள்ளும்படியான உபதேசம் கொண்ட சரித்திரம் நமக்கு இல்லை. ஆனால் ஆத்ம லாபமான சரித்திரங்களையே சொல்வோம்’ என்ற அபிப்ராயத்தோடு புராணங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஸாம்ராஜ்யங்கள், சண்டை, படையெடுப்புக்கள், ராஜ வம்சங்கள் இவை தான் சரித்திரம் என்று நினைப்பது சரியில்லை. எல்லா விஷயங்களுக்கும் சரித்திரம் உண்டு. அரசியல் சரித்திரத்தை மட்டும் வரலாற்றில் பிரதானமாக வைத்து விட்டார்கள். ஆனால் தர்ம விஷயங்களைப் பிரதானமாக வைத்து அதற்கு ராஜ வம்சத்தை மட்டுமின்றி மற்ற புண்ய புருஷர்கள், ரிஷிகள், ஸாமானிய ஜனங்கள் முதலியோரின் கதைகளையும், மற்ற எல்லா விஷயங்களின் சரித்திரத்தையும் துணையாக சேர்த்துத் தருவனவாகப் புராணங்களில் இருக்கின்றன.
பாவ ,புண்ணிய பலாபலன்களும், புண்ணியங்களுக்கான பலனும்,அதை பெற உதவும் வழிபாட்டு முறைகளும்,
பாவங்களுக்கான பாதிப்பும் அதற்கான பரிகார முறைகளும் புராணங்கள் கூறுகின்றன. புராணங்களைப் பார்த்தால் அந்தக் கால அரசியல் மட்டுமின்றி கலாச்சார வாழ்வு, அக்கால வித்தைகள்,சமுதாய சடங்குகள்,வழிபாட்டு முறைகள் எதிர்கால நிகழ்வுகள்,அவற்றிலிருந்து நம்மை காத்
மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எல்லாவற்றையும் பற்றிகொள்ள முடிகிறது. அவற்றில் முக்கியமாக சொல்லப்படுவது தர்மங்களும் ,அதர்மங்களும் அதன் பலாபலன்களும் ஆகும்.அவற்றை ஒவ்வொரு யுகத்தின் நிகழ்வுகளின் அடிப்படையில் விரிவாக கூறுவதே புராணங்கள் ஆகும்.
நடக்கும் நிகழ்வுகளிலிருந்து நம்மை பாதுகாக்கும் வழிகளை இறைவன் ஒவ்வொரு புராணத்திலும் அருளியுள்ளார்.அதை படித்து இறை அருள் பெற்று நலம் வாழ நாம் புராணங்கள் படிக்க வேண்டும்.படிப்பதோடு மட்டுமல்லாமல் நம்மை சார்ந்தோருக்கும் புராணங்களின் மகிமையை எடுத்துக் கூற வேண்டும்.
புராணங்கள் கடந்த கால கர்ம வினைகள் நீங்க பரிகார வழிபாடுகளையும், நம் முன்னோர்கள் நமக்கு கற்றுக் கொடுத்த வழிபாடுகளை பின்பற்ற கிடைக்கும் புண்ணிய பலன்களையும், பின்பற்றாத போது நமக்கு நிகழும் கெடுபலன்களையும் பற்றி விரிவாக கூறுகிறது.தர்மம் , அதர்மம் பற்றிய விளக்கங்களையும் , ஒவ்வொரு இறைவனின் குணாதிசியங்களையும், பக்தர்களுக்காக அவர்கள் எடுத்த அவதாரங்களையும், அவர்களின் அவதார மகிமையையும் பற்றி விளக்கமாக கதையாக கூறுகிறது.
Image may contain: indoor

பதிவு -7
புராணம் எதை விவரிக்கிறது
கடந்த பதிவில் கலியுகத்தில் நடக்கும் நிகழ்வுகளாக வியாசர் என்ன கூறுகிறார். புராணங்கள் ஏன் படிக்க வேண்டும் என்பதை பற்றி பார்த்தோம்.இன்று புராணம் எதைப் பற்றி கூறுகிறது.புராணங்கள் எந்த கால கட்டத்தில் நிகழ்ந்ததாக கருதப்படுகிறது, என்பதை பற்றி பார்க்கலாம்.புராணம் வேதத்தின் பூதக் கண்ணாடி
சின்னஞ்சிறியதாக இருப்பதை பெரிதாகக் காட்டும் பூதக்கண்ணாடி. இம்மாதிரி வேதத்தில் சுருக்கமாக, சின்ன சின்னதாகப் போட்டிருக்கிற தர்மவிதிகளை கதைகள் மூலம் பெரிசு பண்ணிக் காட்டுவது தான் புராணம். ஒன்றைச் சுருக்கமாகச் சொன்னால் அது மனதில் ஆழப்பதியாமல் போய்விடலாம். அதையே சுவாரஸ்யமான கதையாக விரிவாக சொன்னால் நன்றாக மனதில் பதியும்.
வேதங்களை விவரிக்கும் புராணங்கள்
‘ஸத்யம் வத’ (உண்மையே பேசு) என்று மட்டும் வேதம் சொல்கிறது. அப்படிப் பேசுவதால் எத்தனை பெருமை ஏற்படுகிறது என்பதை ஹரிச்சந்திரன் கதை பல அத்யாயங்களில் விஸ்தாரமாகச் சொல்கிறது.
‘தர்மம் சர’ (அறத்தைப் பின்பற்று) என்று இரண்டு வார்த்தையில் வேதம் சொன்னதை நீள நெடுக மஹாபாரதத்தில் தர்ம புத்திரரின் கதையாகச் சொல்லியிருக்கிறது.
‘மாத்ரு தேவோ பவ’,’ பித்ருதேவோ பவ ‘(அன்னை தந்தையை தெய்வமாகக் கொள்) என்ற வேத வாக்குக்கு ஸ்ரீ ராம சரித்ரம் பூதக் கண்ணாடியாய் இருக்கிறது.
அடக்கம், பொறுமை, தயை, கற்பு முதலான அநேக தர்மங்களை வேதத்தில் – கட்டளையிட்டுள்ளவற்றை – புராண புருஷர்களும், புண்ய ஸ்திரீகளும் தங்களுடைய சரித்திரத்தின் மூலம் நன்றாகப் பிரகாசிக்கும்படிச் செய்திருக்கிறார்கள். அவற்றைப் படிப்பதாலும்,கேட்பதாலும் இந்த தர்மங்களில் நமக்கு இந்த ஆழ்ந்த ஈடுபாடு உண்டாகிறது. இவர்கள் எல்லாருக்கும் சோதனைகளும் கஷ்டங்களும் நிறைய வந்திருக்கின்றன. அநேக தப்பு தண்டாக்களைச் செய்கிற நம்மைவிட இந்த உத்தமமான புராண பாத்திரங்கள்தான் அதிகமாக கஷ்டப்பட்டிருக்கிறார்கள். ரொம்பவும் பயங்கரமான சோதனைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஆனாலும் இவர்களுடைய சரித்திரத்தைப் படிக்கும் போது, “தர்மங்களை கடைபிடிப்பதினால் கஷ்டந்தானே ஏற்படுகிறது? ஆனால் அநுஸரிக்க வேண்டாமே!” என்று தோன்றுவதேயில்லை. அத்தனை கஷ்டத்திலும், சோதனையிலும் விட்டுக் கொடுக்காமல் அவர்கள் பாறாங்கல் மாதிரி தர்மத்திலேயே நிற்பதால் பெற்றிருந்த மனத் தெளிவு தான் நம் மனதில் பதிகிறது. அதோடு கூட அந்த உத்தமர்கள் படும் கஷ்டங்களைக் கேட்கும்பொழுது நம் உள்ளம் உருகுவதாலேயே நம்முடைய மன அழுக்குகளையும் சுத்தப்படுத்துவது போல் இருக்கிறது. முடிவிலே அவர்களுக்கு ஏற்படுகிற பெரிய வெற்றியும் கீர்த்தியும் நமக்கு அந்த தர்மங்களில் கெட்டியான பிடிமானத்தை உண்டாக்கித் தருகின்றன. நம்மை தர்மத்தின் வழி நடக்க சொல்லி தூண்டுகின்றன.இதன் காரணமாகவே நாம் சரித்திரம், புராணம் படிக்க வேண்டும்.அதன் படி நடத்தலே மானுட வாழ்வின் மகத்துவம் என்கிறார்கள் பெரியோர்கள்.ஏன் சரித்திரம் படிக்க வேண்டும் என்பதற்குச் சொல்கிற அநேக காரணங்களில் ஒன்று .
புராணங்கள் கற்பதின் அவசியம்
சரித்திரம் திரும்பத் திரும்ப ஒரே மாதிரி நடக்கிறது என்கிறார்கள். அதனால் பூர்வத்தில் எப்படி நடந்தது என்று தெரிந்து கொண்டால் அதிலிருந்து இனி எப்படி நடக்கும் என்று தெரிந்து கொள்ளலாம். பூர்வத்தில் நடந்ததிலிருந்து எதிர்காலத்துக்குப் படிப்பினைப் பெறலாம். இப்படியிப்படிச் சூழ்நிலை உருவாகிக் கொண்டு போனால் யுத்தம் ஏற்படும், ஜனங்களின் வாழ்வு கெட்டுப் போகும், ஒரு பெரிய நாகரிகமே அழிந்து விடும் என்பது சரித்திரத்தைப் பார்க்கும்போது தெரிகிறது. இதனால் அதே மாதிரியான சூழ்நிலைகள் இப்போது உருவானால் கூட அவற்றிலிருந்து நாம் நம்மை காப்பாற்றி கொள்ள புராணங்கள், இதிகாசங்களில் ஏதேனும் வழி கூறப்பட்டு இருக்கும்.அதை நாம் புரிந்து நம்மை காத்து கொள்ள வேண்டுமெனில் புராணங்கள்,இதிகாசங்கள் படிப்பது அவசியம்.
புராணங்களின் காலம்
பிரம்மனின் ஒருநாள் என்பது ஒரு கல்பமாகும். பிரமனின் ஒருநாள் முடிவில் இந்தப்பேரண்டம் அழிவுற்றது. எங்கும் இருள்சூழ்ந்தது. அடுத்த நாள் காலையில் இந்த பிரபஞ்சம் புதிதாக தோற்றுவிக்கப் பட்டது. ஒவ்வொரு கல்பத்திலும் நிகழ்ந்த நிகழ்வுகளின் அடிப்படையில் ஒவ்வொரு புராணம் இயற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
அவை முறையே
பதினெண் புராணங்கள் - ஸ்ரீமகாவிஷ்ணுவின் உருவம்
1.பிரம புராணம் - பிரம கல்பம்,
2. பத்ம புராணம் - பத்ம கல்பம்,
3. விஷ்ணு புராணம் - வராக கல்பம்,
4. சிவ புராணம் - ச்வேத கல்பம்,
5. பாகவத புராணம் - சாரசுவத கல்பம்,
6. நாரத புராணம் - வ்ரிஹத் கல்பம்,
7. மார்க்கண்டேய புராணம் - ச்வேதவராக கல்பம்,
8. அக்னி புராணம் - ஈசான கல்பம்,
9. பவிஷ்ய புராணம் - அகோரகல்பம்,
10. பிரமவைவர்த புராணம் - ரசுந்த்ரகல்பம்,
11. லிங்க புராணம் - கல்பந்த கல்பம்,
12. வராஹ புராணம் – மனுகல்பம்,
13. கந்த புராணம் - தத்புருஷ கல்பம்,
14. வாமன புராணம் – சிவகல்பம்,
15. கூர்ம புராணம் - லக்ஷ்மி கல்பம்,
16. மத்ஸ்ய புராணம் - கல்பாதி கல்பம்,
17. கருட புராணம் - கருட கல்பம்,
18. பிரமாண்ட புராணம் - பவிஷ்யகல்பம் இவற்றை ஒருங்கிணைத்தவர் வியாசர்
புராண கதாபாத்திரங்களின் பெருமை
1. பிரம்ம புராணம்
பிரம்மாவைப் பற்றியும், அவருடைய உலகப் படைப்புகளைப் பற்றியும் கூறுவது. கலியுகத்தில் ஏற்படும் கெடுதல்களும், மக்கள் மேற்கொள்ள வேண்டிய கடமைகளும், பக்தியின் அவசியமும் இதில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.
2. பத்ம புராணம்
காயத்ரி சிறப்புகளையும், கற்பின் சிறப்பும் இதில் விரிவாகச் சொல்லப்பட்டு இருக்கிறது.
3. விஷ்ணுப் புராணம்
விஷ்ணுவின் பெருமைகளை விளக்குகிறது.
4. சிவ புராணம்
சிவபெருமானின் பெருமைகளை எடுத்துச் சொல்கிறது. இலிங்கோத்பவ நிகழ்வுகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.
5. பாகவத புராணம்
விஷ்ணுவைப் பற்றியும், தேவியைப் பற்றியும், அன்னை பராசக்தியின் பெருமைகள் பற்றியும் தெளிவாகச் சொல்கிறது.
6. நாரத புராணம்
நாராதருடைய வரலாறும், மனித வாழ்க்கைக்குத் தேவையான நீதிகளும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
7. மார்க்கண்டேய புராணம்
மார்க்கண்டேயரால், ஜைமினிக்குச் சொல்லப்பட்ட புராணம். அத்ரி, அனுசூயை முதலியோர் வரலாறுகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.
8. அக்கினி புராணம்
அக்கினியைப் பற்றிய புராணம் அக்னி, வசிஷ்டருக்கு உபதேசித்தது. மனிதன் செய்ய வேண்டிய செயல்கள், மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய நன்னெறிகள் முதலியவைகளைக் குறிக்கிறது.
9. பவிஷ்ய புராணம் -
பவிஷ்ய என்றால் வரப்போகும் என்று பொருள். கலியுகத்தில் நடைபெற இருக்கின்ற செய்திகளையும், இறைவன் கல்கி அவதாரம் எடுக்கவுள்ள செய்தியையும் வேத வியாசர் தன் முன்னறிவால் எடுத்துச் சொல்லியவை இதில் இடம் பெற்றிருக்கின்றன.
10. பிரம்ம வைவர்த்த புராணம்
கிருஷ்ண பரமாத்வையே பிரம்மாவாக, பரப்பிரம்ம ஸ்வரூபமாகப் போற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.
11. இலிங்கப் புராணம்
பரமசிவனுடைய தோற்றம், வரலாறுகளையும், திருநீறு முதலியவற்றின் சிறப்புகளையும் இது எடுத்துச் சொல்கிறது.
12. வராஹ புராணம்
திருமாலின் அவதார மகிமை, அன்னதானம் முதலிய தர்மங்களின் சிறப்புகளைச் சொல்கிறது.
13. ஸ்கந்த புராணம்
முருகப் பெருமானின் வரலாறு, சிவ ரகசியம் பற்றி சொல்லப்படுகிறது.
14. வாமன புராணம்
வாமன அவதார நிகழ்ச்சியை எடுத்துரைக்கின்றது.
15. கூர்ம புராணம்
கூர்ம அவதார நிகழ்ச்சி, மாயையால் வரும் துன்பங்கள் அவற்றை நீக்கும் முறைகள் பற்றிச் சொல்கிறது.
16. மத்ஸ்ய (மச்ச) புராணம்
பலவகை விரதங்களின் பெருமைகளைப் பற்றியும், தானங்கள் செய்வது பற்றியும் இதில் சொல்லப்பட்டுள்ளன. சிரார்த்தத்தின் அவசியம், பிதுர் காரியங்கள் இவைகளைப் பற்றியும் இது விளக்குகிறது.
17. கருட புராணம்
கருடன் கஷ்யப மகரிஷிக்குச் சொல்லியது. பிராணன் உடலை விட்டு நீங்கிய பின், அனுபவிக்கின்ற பலவிதமான நிலைகளைக் கூறுகிறது.
18. பிரும்மாண்ட புராணம்
பிரம்மாவால் படைக்கப்பட்ட பிரும்மாண்டங்கள் குறித்த பல்வேறு செய்திகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.


பதிவு -8
கடந்த பதிவில் புராணங்கள் நிகழ்ந்த கால அளவை பார்த்தோம்.இன்று
புராணங்களை எப்படி வகைப்படுத்தி பிரித்து இருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
உடலின் கூற்றுகளை இந்த 18 புராணங்களின் உருவகமாகக் கூறுவார்கள்.
பிரம்ம புராணம் – முன் நெற்றி
பத்ம புராணம் - இதயம்
விஷ்ணு புராணம் – வலது புஜம்
சிவ புராணம் – இடது புஜம்
ஸ்ரீமத்பாகவத புராணம் – இரண்டுநேத்ரங்கள்
நாரத புராணம் – நாபி
மார்கண்டேய புராணம் – வலது கால்
அக்னி புராணம் - இடது கால்
பவிஷ்ய புராணம் – வலது முட்டிக்கால்
பிரம்மவைவர்த்த புராணம் – இட்துமுட்டிக்கால்
லிங்க புராணம் – வலது கணுக்கால்
வராஹ புராணம் – இட்து கணுக்கால்
வாமன புராணம் – ரோமம்
கூர்ம புராணம் – சருமம்
மத்ஸ்ய புராணம் – வயிறு
கருட புராணம் – ம்ஞ்சையும் கொழுப்பும்
பிரம்மாண்ட புராணம் – எலும்பு
மும்மூர்த்திகள்
புராணங்களில் முப்பெரும் கடவுள்களாக பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் வணங்கப்படுகிறார்கள். இவர்களில் படைக்கும் தொழில் கொண்டவர் பிரம்மா; காக்கும் தொழில் கொண்டவர் விஷ்ணு; அழிக்கும் தொழில் கொண்டவர் சிவன் என, இவர்களைப்போற்றி வணங்குகிறது வேதம்.பிரம்ம வைவர்த்த புராணம், விஷ்ணு புராணம், சிவ புராணம்,லிங்க புராணம், ஸ்ரீமத் பாகவதம் ஆகிய புராண நூல்களில் இந்த மூவரின்தோற்றமும், அவர்கள் தத்தமக்குரியபணிகளை ஏற்ற விவரமும், அவர்களின் பூரண மஹிமையும் சித்திரிக்கப்படுகின்றன.
பதிணெண் புராணங்களின் தொகுப்பு
பதினெண் புராணங்களும், சத்துவம், ராஜஸம், தாமசம் ஆகிய முக்குணங்களுக்கு உரியவையாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
சத்துவ குணப் புராணங்கள்
சத்துவ குணப் புராணங்கள் விஷ்ணுவைப் புகழ்கின்றன. அவையாவன:
விஷ்ணுபுராணம்,
பாகவத புராணம்,
நாரதீய புராணம்,
கருட புராணம்,
பதமபுராணம்,
வராக புராணம்.
ராஜஸ குண புராணங்கள்
ராஜஸ குண புராணங்கள் பிரம்மாவைப் புகழ்கின்றன. அவையாவன:
பிரம்ம புராணம்,
பிரமாண்ட புராணம்,
பிரம்ம வைவர்த்த புராணம்,
பவிஷ்ய புராணம், வாமன புராணம்.
தாமஸ குண புராணங்கள்
தாமஸ குண புராணங்கள் சிவனைப் போற்றுகின்றன. அவையாவன:
சிவபுராணம்,
லிங்கபுராணம்,
ஸ்கந்த புராணம்,
மார்க்கண்டேய புராணம்,
அக்கினி புராணம்,
மத்சய புராணம்,
கூர்ம புராணம் முதலியன.
சத்வகுண புராணங்கள்
விஷ்ணு சம்பந்தமானவை அவை நற்குண புராணங்கள்
1 பாகவதபுராணம்
2. விஷ்ணுபுராணம்
இவை புராணங்களில் முக்கிய பங்கைப் பிடிக்கின்றன.ஆறு அம்சங்களைக் கொண்ட ஐந்து முக்கிய பிரிவுகளைக் கொண்டவை. முதலாவது அல்லது இரண்டாவது நூற்றாண்டைச் சேர்ந்த விஷ்ணு புராணம் மிகவும் பழையானது.பராசர மகஷிரி, மைத்ரேயருக்கு கற்றுக் கொடுத்ததே கற்றுக் கொடுத்ததே விஷ்ணு புராணமாகும்.
விஷ்ணு புராணத்தை ஆவணி மாதம் பவுர்ணமி அன்று அன்பளிப்பாகத் தாரை வார்த்துக் கொடுத்தால் அவர் விஷ்ணு பதத்தை அடையலாம் என்பது ஐதீகம்.
புராணங்கள் பற்றிய விரிவான விளக்கத்தை பார்த்தோம். அடுத்த பதிவிலிருந்து ஆதியும் அந்தமும் இல்லாத ஆதி சிவன் மகிமையை போற்றும் புராணமான லிங்க புராண மகிமையை காணலாம். 

பதிவு -9
கடந்த 8 பதிவுகளில் புராணங்கள் எவ்வாறு தொகுக்கப்பட்டன.புராணங்களின் மகிமையையும் உருவான விதத்தையும் பற்றி பார்த்தோம். இந்த பதிவில் லிங்கம் உருவான விதத்தையும், அதன் மகத்துவத்தையும் காணலாம்.
லிங்கம் உருவான கதை
ஒருமுறை பிரம்மாவுக்கும் மகாவிஷ்ணுவுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர்? என்ற வாக்குவாதம் ஏற்பட்டபோது மிகப் பெரிய அக்னிகோளமாக அவர்கள் நடுவே தோன்றினார் சிவபெருமான்.
அப்போது அந்த நெருப்பு மலையை சுற்றி சுற்றி அகழ்ந்து தேடியதால் நடுப்பாகம் விஷ்ணு பாகமாகவும், பிரம்மா நெருப்பு மலையை மேலும் கீழுமாக குழப்பம் கொண்டு தேடியதால் சதுர கீழ்ப்பாகம் பிரம்ம பாகமாகவும் தோற்றம் காட்டியது. அதுவே முதன் முதலாக இறைவன் எடுத்த லிங்க வடிவம். அன்று முதல் லிங்கோத்பவம் உதயமாயிற்று. லிங்கோத்பவம் என்றால் லிங்கம் தோன்றுதல் என்று பொருள். அன்று முதல் இன்று வரை சிவபெருமான் லிங்க உருவத்திலேயேதான் வழிபடப்பட்டு வருகிறார்.
லிங்கவடிவங்களும் மகத்துவமும்
வழிபாட்டுக்குரிய லிங்கங்கள் பலவகையாகப் பகுக்கப்பட்டுள்ளன.
சுயம்பு லிங்கம் – தானாகவே இறைவனின் இச்சைப்படி தோன்றிய லிங்கம்.
தெய்வீக லிங்கம் – தேவர்களால் பூஜிக்கப்பட்டு ரிஷிகள் மூலமாக பூமிக்கு வந்த லிங்கம்.
அர்ஷ லிங்கம் – ரிஷிகளும் முனிவர்களும் தங்கள் வழிபாட்டுக்கென உருவாக்கிய லிங்கம்.
மனுஷ்ய லிங்கம் – சாதாரண மனிதர்களால் உருவாக்கப்பட்ட லிங்கம். இந்த லிங்கம் மேலும் பல வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. குறைந்தது 96 வகை மனுஷ்ய லிங்கங்கள் இருக்கலாம் என்று மகுடாகமம் என்னும் ஆகம நூல் கூறுகிறது.
96 வகை லிங்கங்கள் அவற்றின் அமைப்பு அதாவது பீடத்தின் அளவு , அதன் பாணத்தின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து மேலும் பிரிக்கப்படுகிறது. கீழே இருக்கும் சதுரப் பகுதி பிரம்ம பாகம் எனவும், நடுப்பகுதி விஷ்ணு பாகம் எனவும் மேற்பகுதி ருத்ர பாகம் எனவும் வழங்கப்படுகின்றன.
க்ஷணிக லிங்கம் : தற்காலிக வழிபாட்டுக்குப் பயன்படுவது. அந்தக் காலத்தில் நீண்ட தூரம் பயணம் செல்பவர்கள் தங்களுடன் லிங்கத்தை எடுத்துச் செல்லாமல் ஆங்காங்கே கிடைக்கும் தெய்வீகப் பொருட்களைக் கொண்டு அன்றைய பூஜைக்காக உருவாக்கும் லிங்கமே க்ஷணிக லிங்கம் எனப்படுகிறது. இத்தகைய லிங்கங்கள், மலர், அன்னம், சந்தனம், விபூதி ஆகிய பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படலாம். அவை உருவாக்கப்படும் பொருட்களுக்கேற்றவாறு பெயர் பெறுகின்றன.
உதாரணம், பூக்களால் உருவாக்கப்பட்ட லிங்கம் க்ஷணிக புஷ்ப லிங்கம் எனப்படுகிறது.
வர்த்தமானக லிங்கம் : வழிபாட்டுப் பெருமைக்குரியது. பிரம்ம பாகமும், விஷ்ணு பாகமும் ஒரே அளவு இருந்து ருத்ர பாகம் மட்டும் அதைப்போல இரு மடங்கு இருப்பதே வர்த்தமானக லிங்கம் எனப்படும். இத்தகைய லிங்கம் வழிபடுவோருக்கு முக்தி அளிக்கவல்லது.
ஆத்ய லிங்கம் : இதில் மூன்று பாகங்களும் சமமான அளவு இருக்கும். இவை தவிர புண்டரீகம், விசாலா, வத்சா மற்றும் சத்ரு மர்த்தனா என்று நான்கு வகையாகப் பிரிக்கப்படுகிறது.
புண்டரீக வகை லிங்கத்தை வழிபட்டால் பெரும் புகழும், விசாலா வகை லிங்கம் பெரும் பொருளும், வத்சா லிங்கம் எல்லா வளங்களும், சத்ரு மர்த்தனா எல்லாவற்றிலும் வெற்றியையும் தருவன என்கிறது காமிகா ஆகமம்.
ஆகம சாஸ்திரம். ஏக முக லிங்கம், சதுர் முக லிங்கம், பஞ்ச முக லிங்கம் என முகங்களின் அடிப்படையிலும் லிங்கங்கள் பகுக்கப்படுகின்றன. இதில் பஞ்ச முக லிங்கம் என்பது சிவனுடைய தத் புருஷ, அகோர, சத்யோஜாத, வாமதேவ, ஈசான முகங்களைக் குறிக்கும். சதுர்முக லிங்கம் என்பது ஈசான முகம் தவிர மற்ற நான்கும் கொண்டது.
பஞ்சபூத லிங்கங்கள் என்றும் ஒரு வகை இருக்கிறது. அவை ப்ரித்வி லிங்கம் (பூமி), வாயு லிங்கம், ஜலலிங்கம், ஆகாச லிங்கம், தேஜோ லிங்கம் (அக்னி). இவை எல்லாமே மனுஷ்ய லிங்க வகைகள்தான்.
களிமண், உலோகம் அல்லது கற்களாலும் லிங்கங்கள் செய்து வழிபடலாம் என்று காமிக ஆகய நூல் கூறுகிறது. களி மண்ணிலேயே இரண்டு வகை லிங்கங்கள் செய்யப்படுகின்றன. சுட்ட களிமண் லிங்கம், சுடாத பச்சைக் களிமண் லிங்கம், சுட்ட களி மண் லிங்கம் பொதுவாக தாந்திரீகர்களாலும், அபிசார (பில்லி சூனிய) தோஷம் உடையவர்களாலும் வணங்கப்படுகிறது. இவை தவிர நவரத்தினங்களால் ஆன லிங்கங்களும் உண்டு. அவை பன லிங்கங்கள் எனப்படுகின்றன.
வீடுகளில் வழிபட மக்கள் பயன்படுத்தும் சில முக்கிய லிங்க வடிவங்கள்
1. கந்த லிங்கம்
சந்தனம், குங்குமம், மற்றும் கஸ்தூரி ஆகியன கலந்து உருவாக்கப்படுவது. இது க்ஷணிக லிங்க வகையைச் சார்ந்தது. நம் தேவைக்கேற்ற அளவில் இதை உருவாக்கிக் கொள்ளலாம். வழிபடுவதால் சிவசாயுஜ்ய மோட்சம் எனப்படும் பிறப்பில்லாத நிலை சித்திக்கும்.
2. புஷ்ப லிங்கம்
பலவகையான வாசனையுள்ள மலர்களாலும், பல நிறம் கொண்ட அழகிய மலர்களாலும்,உருவாக்கப்படுவது. வழிபடுவதால் நில சம்பந்தமான பிரச்னைகள் தீரும், நல்ல சொத்தும் சேரும்.
3. கோசாக்ரு லிங்கம்
பழுப்பு நிறத்தில் உள்ள பசுவின் சாணத்திலிருந்து உருவாக்கப்படும் லிங்கம் இது. இதை வணங்கினால் வளம் பெருகும். இதுவும் க்ஷணிக லிங்க வகையே ஆகும்.
4. வாலுக லிங்கம் : சுத்தமான மணல் கொண்டு உருவாக்கப்படும் இதை வணங்கினால் கல்வியும் ஞானமும் உண்டாகும்.
5. யவாகோதுமாசாலிஜ்ஜ லிங்கம் : இந்த லிங்கம் யவை, சோளம், கோதுமை போன்ற தானியங்களின் மாவினால் உருவாக்கப்படுகிறது. இது குழந்தை பாக்கியத்தை அருளும்.
6. சீதாகண்ட லிங்கம் : இனிப்புகளால் உருவாக்கப்படும் இது, நல்ல உடல் ஆரோக்கியத்தை அளிக்க வல்லது.
7. லவண லிங்கம் : உப்போடு மஞ்சள் மற்றும் திரிகடுகம் எனப்படும் சித்த மருந்து கலந்து செய்யப்படுகிறது. இது மற்றவர்களை வசீகரிக்கும் சக்தியை அருள்கிறது.
8. திலாப்சிஷ்த லிங்கம் : எள்ளை அரைத்து செய்யப்படும் இது, எல்லா ஆசைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும்.
9. பாம்ச லிங்கம் : சாம்பல் கொண்டு செய்யப்படும் இது, எல்லா நற்குணங்களையும் வளர்க்கும்.
10. கூட லிங்கம் அல்லது சீதா லிங்கம் :வெல்லத்தால் செய்யப்படும் இது, மன நிம்மதியை அருளும்.
11. வன்சங்குர லிங்கம் : மென்மையான மூங்கில் இலைகளால் ஆனது இந்த வகை லிங்கம். வழிபடுவோருக்கு நோய் நொடியற்ற நீண்ட ஆயுளைத் தரும்.
12. பிஷ்டா லிங்கம் : அரிசிமாவினால் செய்யப்படும் இந்த லிங்கம், நல்ல கல்வியறிவைத் தரும்.
13. ததிதுக்த லிங்கம் : பாலிலிருந்தும் தயிரிலிருந்தும் முழுவதுமாக தண்ணீரை நீக்கிய பிறகு இந்த லிங்கம் உருவாக்கப்படுகிறது. வணங்கியோருக்கு மன மகிழ்ச்சியையும் வளங்களையும் அருளும் தன்மையது.
14. தான்ய லிங்கம் : நவ தானியங்களால் உருவாக்கப்படும் இந்த லிங்கம், விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலைத் தரும்.
15. பழ லிங்கம் : பல்வகையான பழங்களால் உருவான இது, பழத்தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு நல்ல பலனைத் தரும்.
16. தாத்ரி லிங்கம் : நெல்லிக்காயைக் கொண்டு உருவாக்கப்படும் இது, மிகவும் கஷ்டப்படுபவர்களுக்கு அந்த வாழ்விலிருந்து விடுதலையைத் தரும்.
17. நவநீத லிங்கம் : வெண்ணெயால் உருவான இது, பணமும் புகழும் தரும்.
18. கரிக லிங்கம் : விசேஷ வகைப் புல்லால் உருவாக்கப்படும் இது, துர்மரணத்தைத் தடுக்கும்.
19. கற்பூர லிங்கம் : கற்பூரத்தினால் இது உருவாக்கப்படுகிறது. சிறந்த ஞானத்தைத் தந்து மாயையை அழிக்கும்.
20. ஆயஸ்காந்த லிங்கம் : காந்தத்தால் உருவான இது, சித்தர்கள் வணங்கும் லிங்கம். அஷ்டமா சித்திகளையும் எளிதாக அளிக்க வல்லது.
21. மவுகித்க லிங்கம் : முத்துகளை எரித்த சாம்பலிலிருந்து உருவாக்கப்படும் லிங்கம். மங்களமும், செல்வ வளமும் அருளும் தன்மையது.
22. ஸ்வர்ண லிங்கம் : தங்கத்தால் உருவானது. முக்தி அளித்து பிறவா நிலைக்கு உயர்த்தும்.
23. ரஜத லிங்கம் : வெள்ளி லிங்கம். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
24. பித்தாலா லிங்கம் : பித்தளையால் உருவாக்கப்படும் இது, பழுத்த இலை மரத்திலிருந்து உதிர்வது போன்ற பயமில்லாத மரணத்தைத் தரும்.
25. திராபு லிங்கம் : தகரத்தால் செய்யப்படும் இந்த லிங்கம், வணங்குபவருக்கு எதிரிகளே இல்லாமல் செய்து விடும் தன்மை உடையது.
26. ஆயச லிங்கம் : கந்தக அமிலத்தால் செய்யப்படும் இந்த லிங்கம் எதிரிகளின் தொந்தரவை அழிக்கும்.
27. சீசா லிங்கம் : வெள்ளீயத்தால் செய்யப்படுகிறது இந்த லிங்கம். இதை வணங்குபவர்களை எதிரிகளால் நெருங்கவே முடியாதவாறு செய்யும் தன்மையது.
28. அஷ்டதாது லிங்கம் : எட்டு வகையான தாதுக்களால் உருவாக்கப்படும் இது, சித்தி அளிக்கவல்லது.
29. அஷ்ட லோக லிங்கம் : எட்டு வகையான உலோகங்களால் செய்யப்படும் இதை வணங்கினால் தொழுநோய் குணமாகும்.
30. வைடூர்ய லிங்கம் : நவ ரத்தினங்களுள் ஒன்றான வைடூரியத்தால் உருவான இது, எதிரிகளின் எதிர்பாராத தாக்குதலிலிருந்து காப்பாற்றும்.
31. ஸ்படிக லிங்கம் : ஸ்படிகத்தால் ஆன இது, எல்லா ஆசைகளையும் நிறைவேற்றும்.
32. பாதரச லிங்கம் : பாதரசத்தால் ஆனது இந்த லிங்கம். அளவிட முடியாத செல்வத்தைக் கொடுக்கும்.
மேற்கூறிய 32 வகைகளில் முதல் 19 க்ஷணிக லிங்க வகையைச் சேர்ந்தவை. மற்றவை மனுஷ்ய லிங்க வகையைச் சேர்ந்தவை. இந்திரன் மணி மாய லிங்கத்தையும், சூரியன் தாமரமய லிங்கத்தையும், சந்திரன் முக்தி லிங்கம் எனப்படும் முத்துகளால் ஆன லிங்கத்தையும், குபேரன் ஹேம லிங்கம் எனப்படும் தங்கத்தால் ஆன லிங்கத்தையும் அணிந்திருப்பதாக லிங்க புராணம் கூறுகிறது.
லிங்கங்களின் மகத்துவம் பற்றி பார்த்தோம்.அடுத்த பதிவில் லிங்க புராணம் கூறும் சிவ பெருமானின் வரலாற்றையும், மகத்துவம் பற்றியும் பார்க்கலாம்.


லிங்க புராணம்
பதிவு -10
கடந்த பதிவில் லிங்கம் உருவான விதத்தையும், அதன் மகத்துவத்தையும் பார்த்தோம்.இன்று சிவலிங்கத்தின் சிறப்பை காணலாம்.
சிவலிங்கத் தோற்றம்- தத்துவம்
"காணாத அருவினுக்கும், உருவினுக்கும்
காரணமாய் நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்‘‘
- என்கிறார் சேக்கிழார். திருமந்திரத்திலும் சிவலிங்கத் தத்துவம் குறித்து பல்வேறு
கருத்துகள் உள்ளன.
சிவலிங்க தத்துவம்
கண்களால் காணக்கூடிய உருவம், காணமுடியாத அருவம் என்ற இரு நிலைகளுக்கும் இடைப்பட்ட அருவுருவத் தன்மையையே சிவலிங்கத் தோற்றம் என்பதை உணர்த்துகிறது திருமந்திரம்.
பரம்பொருளானவர் ஜோதி வடிவில் நிர்குண நிராகாரமாகவும், சகுணமாய், ரூபத்துடனும் உள்ளார் என்பதையே சிவலிங்க வடிவம் உணர்த்துகிறது.
இலிங்கம் என்பது ஒரு தமிழ்ச் சொல். (லிங்கம் அல்ல).
தமிழில் – இலிங்கம், சத்திலிங்கம், சிவலிங்கம் என்று மூன்று சொற்கள் உள்ளன.
இதனுடைய விளக்கம் இலக்கு = குறிக்கோள், இலங்குதல் = ஒளிர்தல், விளங்குதல் என்பதாக அமைகிறது.
இலிங்கம் – ஆன்மா வாகிய உயிர் எந்த நிலையில் உள்ளது என்பதை விளக்கும் சின்னமாக உள்ளது .
லிங்கம் என்பதன் விளக்கம்
இலிங்கம் என்றால் உயிர், அணு. ஒவ்வொரு அணுவும் ஒரே மாதிரி இருக்கும். ஓர் அணுவைப் பிளந்து பார்த்தால் அது பிரிகின்ற தோற்றம்தான் இலிங்கம். உயிரின் இரகசியம்தான் இலிங்கம். இலங்கு என்றால் ஒளி என்றொரு பொருளும், ஒலி என்றொரு பொருளும் தமிழில் உண்டு. இலங்கு என்றால் விளங்கு, விளக்கம் கொடு. இலக்கு என்றால் குறிக்கோள், சின்னம், முடிவு, நிறைவு. இலக்கு, இலங்கு என்ற வேர்ச்சொற்களிலிருந்து வந்ததுதான் இலிங்கம்.
இலிங்கம் என்பதற்கு அடையாளம் என்று பொருள் உண்டு.அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொள்வதாலும் இலிங்கம் என்ற பெயர் ஏற்பட்டதாக அறியப்படுகிறது. பேரூழிக் காலத்தில் உலகில் உள்ள எல்லா சீவராசிகளும் சிவலிங்கத்திற்குள்ளேயே ஒடுங்குகின்றன. சிருஷ்டி தொடங்கும்போது சிவலிங்கத்தில் இருந்தே அனைத்தும் வெளிப்படுகின்றன. தவிர பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் ஒரே பரம்பொருளின் வெவ்வேறு வடிவங்கள் என்பதையும் சிவலிங்க உருவம் உணர்த்துகிறது. இலிங்க உருவில் பிரம்ம பாகமாக ஆதார பீடமும், விஷ்ணு பாகமாக ஆவுடையாரும், ருத்ர பாகமாக பாணமும் விளங்குகின்றன. இதன்மூலம் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மனிதகுல நம்பிக்கைக்குரிய மூன்று செயல்களையும் மேற்கொள்ளக்கூடிய கடவுள்களின் உருவமும் லிங்க உருவத்தில் அடங்கியிருப்பதை நாம் உணரலாம். இந்தப் பரந்த அண்டத்தின் ஒட்டு மொத்த இயக்கமே இலிங்க வடிவமாக உள்ளது என்கிறது ஸ்ரீருத்ரம்.
சிவம் என்பதன் தத்துவம்
சிவனடியார்கள், பக்தர்களின் விழிகளுக்கு பரமேஸ்வரனின் தோற்றம் பரபிரும்ம வடிவமாய், பிரம்மாண்டத்தின் அடையாளமாய், அனைத்தையும் ஒடுக்கிக் கொள்ளும் ஆதாரமாய், அன்பே வடிவான சிவமாய்த் தெரிகிறது. இதனையே அன்பே சிவம் என்கிறார் திருமூலர்,
“அன்பும் சிவமும் இரெண்டேன்பார் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பும் சிவமும் ஒன்றென்று அறிந்தபின
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே”
இப்பாடலில் திருமூலர் அன்பு என்று எதனைக் குறிப்பிடுகிறார், நாம் அனைவரும் இவ் அன்பானது ஒருவர் பிறர் மீது செலுத்தும் அன்பு என்று தான் நினைத்திருக்கிறோம் அல்லவா ஆனால் இப் பாடலை ஊன்றிக் கவனித்தால் அதனுடைய பொருள் விளங்க்கும்
இது நாம் அடுத்தவர் மீது செலுத்தும் அன்பு அல்ல……. நமது உடம்பில் எங்கு அன்பு உருவாகிறதோ அல்லது எங்கு நிலை கொள்கிறதோ அதை தான் சிவம் என்று திருமூலர் சொல்கிறார்.
இதைத்தான் வள்ளல் பெருமானும் ஆன்ம நேய வழிபாடு என்று சொல்கிறார்.
சரி உடம்பில் அன்பு உருவாகும் இடம் எது?
இதனை நாம் நன்கு கவனிப்போமே யானால் நம்மில் சில நண்பர்கள், அல்லது சில யோகிகள் எப்பொழுதும் சினம் கொள்ளமால் அமைதியாகவும் அன்புடனுமே இருப்பார்கள். நீங்கள் எவ்வாறு இப்படி சினம் அடையாமல் இருகிறிர்கள் என்று கேட்டால் அவர்கள் சிரிப்பார்கள். ஆனால் அவர் உடன் இருக்கும் நண்பர்கள் சொல்வார்கள் ‘அவர் சிறு வயது முதலே இப்படிதான் அன்பாக இருப்பார்’ கோபம் கொள்ளமாட்டார் என்று. சிலர் மேலும் ஒரு படி மேலே சென்று “அதெல்லாம் பிறப்பிலே அமையவேண்டும் அல்லது யோகத்தினால் அமையவேண்டும்” என்று சொல்வார்கள்.
அது என்ன பிறப்பிலே அமைவது? அது வேறொன்றுமில்லை…..அன்பு செய்தல் உயிரிலே இயல்பாக அமைய வேண்டும் என்பதைத்தான் புரியாமல் சொல்கிறார்கள்.
அன்பே சிவம்
நம் உயிர் தன்மை எந்த அளவு அன்பு மயமாக இருக்கிறதோ அந்த அளவு நாமும் மற்ற உயிர்களிடம் அன்பாக இருக்க முடியும்.
அது என்ன உயிர் தன்மை?
நம் உயிரின் தன்மைதான்.
அதை நாம் எவ்வாறு அடைவது?
நாம் செய்யும் தவம் நம் உயிர் தன்மையை தொட வேண்டும். அவ்வாறு உயிர் தன்மையை தொட்டு தவம் செய்தோமேயானால் அப்பொழுது உள்ளூர ஒன்று நடந்தேறும்.
அது என்ன? அதைத்தான் வள்ளல் பெருமான் சொல்கிறார்,
“நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து
நெகிழ்ந்து நெகிழ்ந்து – அன்பே நிறைந்து நிறைந்து
ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு
நனைந்து நனைந்து
அருளமுதே நன்னிதியே ஞான நடத்தரச என்னுரிமை நாயகனே என்ற
வனைந்து வனைந்து ஏத்ததும நாம்
வம்மின் உலகியலீர மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம கண்டீர் புனைந்துரையோன் பொய்புகலேன சத்தியம் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகும் தருனம் இதுவே”
எப்படி தவம் செய்வது
அன்பே சிவம் என்று எளிதாக சொல்லி விடலாம். ஆனால் அந்த அன்பு நம் உடலில் எந்த விஷயத்துடன் சேர்ந்திருக்கிறது என்று பார்க்க வேண்டும். ஆம் அது உயிருடன் கலந்திருக்கிறது. இந்த பிரபஞ்சத்தின் எல்லா உயிர்களிலும் அன்பெனும் வடிவத்தில் சிவமாய் நிற்கிறது.
இதை ஞானிகள் உணர்ந்ததால் அயலானையும் நேசி’ என்றார்கள். வள்ளல் பெருமான் சீவ காருண்யமே (கொலை தவிர்த்தலே) கடவுளை அடையும் வழி என்கிறார்.
அன்பே சிவம் - திருமூலர் கருத்து
உள்ளம் பெரும் கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானுக்கு வாய்கோபுர வாசல்
தெள்ள தெளிந்தோற்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காணா மணி விளக்கே”
நாம் கோவிலுக்கு சென்று சிவலிங்கத்தை தான் கையெடுத்து கும்பிடுகிறோம். இந்த பாடலின் முதல் வரியிலே திருமூலர் ஐயா… சொல்லிவிட்டார்
பாடலின் கருத்து
ஊனுடம்பு ஆலயம் என்று…நம் உடம்புதான் ஆலயம் என்று சொல்லி விட்டார், பின் சிவலிங்கம் மட்டும் என்ன ஆலயத்திற்கு வெளியிலா இருக்கும்? ஒரு படி மேலே சென்று “சீவன் சிவலிங்கம்” என்றும் சொல்லி விட்டார், இப்பொழுது ஒன்றை உணரவேண்டும் ஏன் நாம் செய்யும் தவம் நமது உயிர்த் தன்மையை தொட வேண்டும் என்று, நாம் கையெடுத்து கும்பிட வேண்டிய சிவலிங்கம் புறத்தில் உள்ள ஆலயத்தில் மட்டும் இல்லை, ஊனுடம்பாகிய நம் உடம்பினுல்லும் இருக்கிறார்,
சிவம் பற்றி அவ்வையார் கருத்து
ஊனுடம்பாகிய நம் உடம்பினுல்லும் சிவன் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பதையே அவ்வை பிராட்டியார்
“உடம்பினை பெற்ற பயன் ஆவதெல்லாம் திடம்பட ஈசனை தேடு” -என்று சொல்கிறார்,
“திடம்பட ஈசனை தேடு” –அவ்வையார் சொல்லி விட்டார். எங்கு போய் தேடுவது?
உடம்பினுள் இருக்கார் என்று திருமூலரும் மற்றும் அவ்வையாரும் சொல்லி விட்டார்கள் இன்னும் வேறு ஏதாவது நெருங்கி சொல்லி இருகிறார்களா? என்றால் திருமூலர் இன்னும் அருகில் சொல்கிறார்
“எண் சான் உடம்பிற்கு சிரசே பிரதானம்” என்று ஒரு பாடலில் சொல்கிறார் இதன் மூலம் சிவம் என்னும் சீவனாகிய உயிர் தலையில் தான் அமைந்திருக்கிறார் என்று சொல்கிறார்.
அன்பே சிவம் விளக்கம்
சிவம் என்றால் ஒளி ,அன்பு என்றே பொருள்படும். சிவம் என்பது தனிப்பட்ட சாதிக்கோ, சமயத்திற்கோ உரியவர் அல்ல, அவர் எல்லா மனிதர்களிடமும் உள்ளார் என்பதை ‘வள்ளல் பெருமான்’மிக தீர்க்கமாக நம்பியதால்தான் அவ்வாறு பாடியுள்ளார்
“சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி”
இதன் பொருள் சிவம் இனம், மதம், மொழி எல்லாம் கடந்து எல்லோருடைய தலை பகுதியில் இருக்கிறார் என்பதாகும்.
அப்படி எனில் கடவுளை அடையும் வழியும் ஒன்றாகவே இருக்கும். அதாவது எல்லா ஞானிகளும் இறைவனை அடைய செய்த முயற்ச்சியும் ஒன்றாகவே இருக்கும். அன்பே உருவாக சிவத்தை நினைந்திடுவோம். மற்றோர் உயிரிடத்தில் கருணை காட்டும் அன்பே சிவம்.அந்த மனத்தில் தான் என் ஈசன் குடியிருப்பார்.அவரின் அருளை பெற அது ஒன்றே வழியாகும்.
லிங்கம், சிவம் என்பதன் விளக்கம் பார்த்தோம். இனி எல்லா புராணங்களும் கூறப்பட்ட நைமி சாரண்ய வனத்தில் சூதக முனிவர் தன் சீடர்களுக்கு லிங்க புராண மகிமையை பற்றி கூறுவதை அடுத்த பதிவில் காணலாம்.
Image may contain: 1 person, outdoor

பதிவு - 11
ஆன்மீகம் அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.கடந்த 10 பதிவுகளாக புராணங்கள் உருவான வரலாற்றையும், லிங்கம் சிவம் இவற்றின் மகிமையையும் பார்த்தோம். இன்று முதல் லிங்க புராண நிகழ்வுகளை காணலாம்.
நாரதர் நைமிசாரண்ய வனம் வருதல்
உலகின் தலைசிறந்த விஷ்ணு பக்தராக கருதப்படும் நாரதர் உலகின் நலன் கருதி அவ்வப்போது ஈரேழு லோகங்களுக்கும் சென்று உலக நிகழ்வுகளை கண்காணிப்பது வழக்கம். எப்போதும் நகர் வலம் வரும் போது , அவரை நாடி வேண்டுவோர் நலம் பெற அவர் பரமேஸ்வரரையோ, ஸ்ரீமன் நாராயணரையோ, பிரம்மாவையோ வேண்டி விரதங்கள், பரிகாரங்கள் கேட்பது வழக்கம். உலக இயக்கத்தின் சம நிலையை பேணிக்காப்பதில் நாரதருக்கும் பெரும் பங்கு உண்டு.அப்படி ஒரு சமயம் யாத்திரை செல்லும் போது நைமி சாரண்ய வனம் வருகிறார்.
அப்போது சூதக மகாமுனியின் சீடர்களை சந்திக்கிறார்.உலகின் நிகழ்வுகளை பற்றி கலந்தாய்வு செய்யும் போது சிவ பெருமான் பற்றியும் லிங்க வழிபாடு பற்றியும் கலந்து உரையாடுகின்றனர்.சீடர்களுக்கு சிவ பெருமான் பற்றியும் லிங்க வழிபாடு பற்றியும் விளக்கமாக எடுத்துக் கூறிய பின்னர் அங்கிருந்து கிளம்பி சென்று விடுகிறார்.அவர் சென்ற சிறிது நேரம் கழித்து அங்கே சூதகமா முனிவர் வருகிறார்
சீடர்கள் சூதக மாமுனிவரிடம் லிங்க மகத்துவம் பற்றி கேட்டல்
அப்போது அங்கு வந்த முனிவரிடம், "பணிகிறேன் குருவே.இங்கு சற்று நேரம் முன்பு நாரதமுனி நம் இருப்பிடம் வந்திருந்தார் . அவரிடம் எங்கள் ஐயம் தீர்க்க உரையாடிக்கொண்டு இருந்த போது லிங்கம் பற்றியும்,அதன் வழிபாடு மற்றும் மகத்துவம் பற்றி எடுத்துக் கூறினார்."எங்களுக்கு லிங்கம் பற்றியும்,அதன் வடிவங்கள், மகத்துவம் பற்றியும் மேலும் தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறோம். எங்களுக்கு லிங்கபுராணம் பற்றி எடுத்துக் கூறுங்கள் " என கேட்கிறார்கள்.
சூதக மாமுனிவர் லிங்கபுராணம் உருவான வரலாற்றை கூறுதல்
" அன்பு சீடர்களே.உங்கள் வேண்டுதல் கேட்டு மிக்க ஆனந்தம் அடைந்தேன். முக்காலமும் உரைத்து உலகை வழி நடத்தும் லிங்க புராண மகத்துவம் பற்றி கூறுகிறேன் கேளுங்கள் " என்று கூறி விட்டு சிவ பெருமானையும் ,பிரம்மாவையும்,வியாசரையும் மனதால் தியானித்து விட்டு சீடர்களை பார்த்து லிங்க புராணம் பற்றி கூற ஆரம்பிக்கிறார்.
"அன்பு சீடர்களே.சந்திரனைச் சூடிய ஈசனின் மகிமை கூற கூற சொற்கள் தீராது. சொல்ல சொல்ல மேலும் மேலும் கேட்க தூண்டும் அற்புதமான புராணம்.
ஜோதியாய் வெடித்து அண்ட பேரண்டத்தை உருவாக்கிய ஈசனை பின்பற்றி சகல லோகங்களிலும் சிருஷ்டியை உருவாக்கிய பிரம்மா லிங்க புராணத்தை 100 கோடி கிரந்தக்களில் உருவாக்கினார்.
பின்னர் உலகத்தோர் அனைவரும் எளிதில் படிக்கும் வண்ணம் சுருக்கி ஒரு கோடி கிரந்தங்களில் உருவாக்கினார்.வியாச முனிவர் 18 புராணங்களை தொகுத்து ஒருங்கிணைக்கும் போது மக்கள் எளிதில் படிக்கும் வண்ணம் அவற்றையே சுருக்கி
4 லட்சம் கிரந்தங்களில் உருவாக்கினார்.
அதையே சூதக முனிவனாகிய நான் 16,000 கிரந்தங்களாக சுருக்கி லிங்க வழிபாட்டின் மேன்மையை உங்களுக்கு எடுத்துக்கூறப் போகிறேன். கேளுங்கள்.வியாச முனிவர் ஒருங்கிணைத்த 18 புராணங்களில் 11 வது புராணமாக லிங்க புராணம் வருகிறது. இதனை பக்தியுடன் கேட்டு ,லிங்க புராணத்தில் கூறப்பட்ட வழிபாட்டு முறைகளை பின்பற்றி வழிபாடு செய்பவர்கள் சிவலோக பதவி பெற்று பல்லாண்டு காலம் சிவலோகத்தில் வாழ்ந்திருப்பர் " என்று கூறுகிறார்.
அப்போது ஒரு சீடர் எழுந்து உலகில் வாழும் எல்லா உயிர்களும் ஏதோ ஒரு வழியில் பிறந்திருக்க வேண்டும். இல்லையேல் உருவாகியோ , உருவாக்கப்பட்டோ இருக்க வேண்டும்.அப்படி எனில் லிங்கம் எப்போது உருவானது ,உலக சிருஷ்டிக்கு முன்னரா,இந்த யுகத்திலா.எப்படி எங்கே யாரால் உருவானது " என வினவுகிறார்!?!!
" அதற்கு நீங்கள் உலகம் தோன்றிய காலம் முதல் இப்போது வரை கால நிலையில் எவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் ஒவ்வொரு உலக மாற்றங்களிலும் சர்வேஸ்வரன் நிகழ்த்திய அற்புதங்களை அறிந்து கொள்ள முடியும் "
என சூதக மாமுனிவர் விளக்கம் அளிக்கிறார்.
அப்படி இந்த உலகம் தோன்றிய காலம் முதல் இப்போது வரை கால நிலையில் எவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என சூத மாமுனிவர் கூறுகிறார்.


பதிவு - 12
முன்னுரை
சூதக மாமுனிவர் தன் சீடர்களின் வேண்டுகோளுக்கு இணங்க லிங்க புராணத்தை கூறுகிறார்.அப்போது ஒரு சீடர் எழுந்து உலகில் வாழும் எல்லா உயிர்களும் ஏதோ ஒரு வழியில் பிறந்திருக்க வேண்டும்.இல்லையேல் உருவாகியோ , உருவாக்கப்பட்டோ இருக்க வேண்டும்.அப்படி எனில் லிங்கம் எப்போது உருவானது ,உலக சிருஷ்டிக்கு முன்னரா,இந்த யுகத்திலா?,எப்படி எங்கே யாரால் உருவானது?! " என கேட்கிறார்.
" அதற்கு நீங்கள் உலகம் தோன்றிய காலம் முதல் இப்போது வரை கால நிலையில் எவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் ஒவ்வொரு உலக மாற்றங்களிலும் சர்வேஸ்வரன் நிகழ்த்திய அற்புதங்களை அறிந்து கொள்ள முடியும் "
என சூதக மாமுனிவர் விளக்கம் அளிக்கிறார்
தொடர்ந்து கூறும் போது , " உலக மாற்றங்கள் அனைத்திற்கும் காரண காரியங்கள் உள்ளன. ஒவ்வொரு கல்பத்திலும் உலக சிருஷ்டியில் நிகழ்ந்த சிக்கல்கள் அனைத்திற்கும் தீர்வு காண ஈசன் பல அவதாரங்கள், சம்ஹாரங்கள் செய்து உலக உயிர்களை காத்து இன்று வரை உலகை சீராக இயக்கி வருகிறார். உலக சிக்கல்களை உணர வேண்டுமாயின் சிருஷ்டியில் மாற்றங்கள் நிகழ்ந்த கால கட்டங்களை பற்றி தெளிவான அறிவு வேண்டும் " என்கிறார்.
எனவே நாம் முதலில் யுகங்கள் பற்றிய விரிவான விளக்கம் காணலாம்.
கால அளவுகள்
நமது கால அளவுகள் நம்மிடமிருந்தே உருவாக்கப்பட்டன. நாம் கண் இமைக்க எடுத்து கொள்ளும் நேரத்தை அடிப்படையாகக் கொண்டே கால அளவுகள் தீர்மானிக்கப்பட்டன.
2 கண்ணிமை = 1 நொடி
2 கைநொடி =1 மாத்திரை
2 மாத்திரை =1 குரு
2 குரு =1 உயிர்
2 உயிர் = 1 சணிகம்
12 சணிகம் = 1 வினாடி
60 வினாடி = 1 நாழிகை
2 1/2 நாழிகை =1 ஓரை
3 3/4 நாழிகை = 1 முகூர்த்தம்
7 1/2 நாழிகை = 1 சாமம்
4 சாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்(திதி)
15 நாள் (திதி) = 1 பக்கம்/பிறை(வளர்பிறை/தேய்பிறை)
2 பிறை (30 நாள்) =1 மாதம்(வளர்பிறை+தேய்பிறை= 30 நாள்= ஒரு மாதம்)
6 மாதம் - 1 அயனம்(உத்தராயணம்/தட்சினாயணம்)
2 அயனம்-12 மாதம் - 1 ஆண்டு
64 ஆண்டு - 1 வட்டம்
கால கணக்குகளில் வருட அடிப்படையில் கணக்கிடும் போது ஒரு தனிப்பட்ட உயிரின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிய உதவுகிறது.
பூமி சார்ந்த சூரியனின் இயக்கத்த்தில், சூரியனின் தெற்கு-வடக்கு நகர்வு அயனம் எனப்படும். அயனநகர்வின் பொழுது பூமி சார்ந்த சூரியனின் இயக்கம் தெற்கிற்கும் வடக்கிற்கும்(தற்போது கடக ரேகை) சென்று வரும். அப்படி ஒரு முறை தெற்கிலிருந்து வடக்கிற்கு செல்லும் காலம், ஒரு அயனம் ஆகும். இரு அயனங்கள் சேர்ந்தது ஒரு வருடமாகும். அயனநகர்வின் போது சூரியன் வான் உச்சிக்கு வரும் நாளே ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டது. இந்நாளில், பகலும் இரவும் சமநீளம் கொண்டதாக இருக்கும். இந்நாளே, கதிரவன் சூரிய மாதங்களின்(இராசிச் சக்கரத்தின்) முதல் மாதத்தில்(மேச மாதத்தில்(இராசி)) நுழையும் நாளாகும். இதன்மூலம், இடம், காலம் மற்றும் செயல் ஆகிய மூன்றினை அடிப்படையாக வைத்து காலம் கணிக்கப்பட்டது.
உலக மாற்றங்களை கணிக்க உதவும்
கால அளவுகள்
60 ஆண்டுகள் = 1 வட்டம் (பிரபவ முதல் அக்ஷய வரை)
3000 வட்டம் = 1 யுகம்
4 யுகம் = 1 சதுர்யுகம்
1 சதுர்யுகம் = 43,20,000 ஆண்டுகள்
1 மனுவந்தரம் = 71 சதுர்யுகங்கள்
நிலைமாற்ற காலம் = 6 சதுர்யுகங்கள்
14 மனுவந்தரம் (994 சதுர்யுகங்கள்) + நிலைமாற்ற காலம் (6 சதுர்யுகங்கள்) = 1 கற்பம்.
1 கற்பம் = 432 கோடி ஆண்டுகள் = 1,000 சதுர்யுகங்கள்.
1000 சதுர்யுகங்கள் = பிரம்மாவின் பகல் காலம் / இரவுகாலம்
பிரம்மாவின் பகல் காலம் = படைப்பு
பிரம்மாவின் இரவு காலம் = பிரளய காலம்
இக்காலத்தில் இந்திரனோ மனிதர்களோ தேவர்களோ யாரும் இருக்கமாட்டார்கள் அனைத்து உயிர்களும் இறைவனிடம் (சிவன் )ஒடுங்கும். பிரம்மா இரவில் தூங்கி எழுந்து பகல் பொழுதில் படைப்பை தொடங்குவார் .பிரம்மாவின் ஆயுள் நூறு ஆண்டுகள் ஆகும் போது மகாபிரளயம் ஏற்பட்டு பிரம்மாவும் இறைவனிடம் ஒடுங்குவார் .
பிரம்மாவின் ஒரு நாள் கணக்கில் 14 இந்திரர்கள் ஆள்வார்கள்
540000 இந்திரர்கள் வந்து போகும் காலம் விஷ்ணுவுக்கு ஒரு நாள்
ஒரு கோடி பிரம்மாவின் ஆயுட்காலம் முடிந்தால், விஷ்ணுவுக்கு ஒரு பகல்; இன்னொரு கோடி பிரம்மாவின் ஆயுட்காலம் முடிந்தால் விஷ்ணுவுக்கு ஒரு இரவு ஆகும். இரண்டு கோடி பிரம்மாவின் ஆயுட்காலம் முடிந்தால், மகாவிஷ்ணுவுக்கு ஒரு நாள். இந்த நாள் மாதமாகி, மாதம் வருடமாகி, நூறு வருடம் ஆனால் ஒரு விஷ்ணுவின் ஆயுள் முடிவடைகிறது.
ஒரு கோடி விஷ்ணுவின் ஆயுள் காலம் முடிந்தால் சிவபெருமானுக்கு கண் இமைக்கும் நேரம் ஆகும்.
அதனால்தான் திருநாவுக்கரசர் தனது தேவாரப் பாடலில்,
‘நூறு கோடி பிரமகர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயண ரங்கனே
ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்
ஈறி லாவன் ஈசன் ஒருவனே’
என்று குறிப்பிடுகிறார்.
எனவே பிறப்பு, இறப்பில்லா பெருந்தெய்வம் சிவபெருமான் ஒருவரே என்கிறது கந்தபுராணம்
இதனால் சர்வேஸ்வரனின் ஆயுட்காலத்தை நம்மால் யோசித்துக் கூட பார்க்க முடியாது. அதனால்தான் அவர் ஆதியும் அந்தமுமில்லாத பரபிரம்ம ஜோதியாக கருதப்படுகிறார். அந்த ஜோதி வடிவத்தின் உள்ளிருந்தே மகா வெட்டவெளி முதல் அணுத்துகள் வரை அனைத்தும் படைக்கப்பட்டது. 
Image may contain: 5 people

பதிவு - 13
கடந்த பதிவில் சூதக மாமுனிவர் கால மாற்றங்களை எவ்வாறு கணக்கிடுகிறோம் என தன் சீடர்களுக்கு விளக்கி கூறுகிறார். அதன் தொடர்ச்சி........
யுகங்களின் கால அளவுகள்
கிருத யுகம் - 1,728,000 வருடங்கள்
திரேதா யுகம் - 1,296,000 வருடங்கள்
துவாபர யுகம் - 864,000 வருடங்கள்
கலியுகம் - 432,000 வருடங்கள்
யுகமும், சதுர்யுகமும் மானுட வாழ்வின் அடிப்படையில் நிகழ்வுகளை தீர்மானிக்கின்றன. ஆனால் மன்வந்திரம் , சந்தி, கல்பம் காலங்கள் நிர்மலாவின் சிருஷ்டி மாற்றங்களை பொறுத்து நிகழ்வுகளை தீர்மானிக்கின்றன.
மன் வந்திரம்
மனிதர்களின் கால அளவும், தேவர்களின் கால அளவும் வேறுபடும்.
நமக்கு ஒரு வருடம் என்பது 12 மாதங்கள்.
ஆனால் தேவர்களுக்கு மனிதர்களின் ஒரு வருடம் என்பது ஒரு நாள்.
1 மனித வருடம் = 1 தேவ நாள்.
360 மனித வருடம் = 1 தேவ வருடம்.
தேவ வருடத்தின் அடிப்படையில் சதுர்யுகத்திற்கு 12000 வருடங்கள் ஆகும்.
12000 தேவ வருடம் = 1 சதுர்யுகம் (43,20,000 மனித ஆண்டுகள்).
1 சதுர்யுகம் என்பது 4 யுகங்களை கொண்டது. அதாவது 12000 தேவ வருடங்களை நான்கு யுகங்களாக பிரிக்கலாம்.
கிருத யுகம் 17,28,000 மனித வருடம் / 4800 தேவ வருடம்.
திரேதாயுகம் 12,96,000 மனித வருடம் / 3600 தேவ வருடம்.
துவாபரயுகம் 8,64,000 மனித வருடம் / 2400 தேவ வருடம்.
கலியுகம் 4,32,000 மனித வருடம் / 1200 தேவ வருடம்.
அதாவது ஒரு சதுர்யுகம் என்பது 43,20,000 மனித ஆண்டுகள் அல்லது 12,000 தேவ வருடங்கள். சதுர்யுகத்தை மஹாயுகம் என்றும் அழைப்பர்.
71 மகாயுகங்கள் = 1 மனுவந்தரம்.
மொத்தம் 14 மனுவந்திரங்கள் உள்ளன அவை :
1.சுவயம்பு
2.சுவாரோசிஷம்
3.உத்தமம்
4.தாமசம்
5.ரைவதம்
6.சாக்சூசம்
7.வைவசுவதம்
8.சாவர்ணி
9.தக்ச சாவர்ணி
10.பிரம்ம சாவர்ணி
11.தர்ம சாவர்ணி
12.ருத்திர சாவர்ணி
13.ரௌசிய தேவ சாவர்ணி
14.இந்திர சாவர்ணி
இப்போது நாம் இருப்பது 7 வது மனுவந்திரம்.
கல்ப காலம்
ஒரு கல்பகாலம் என்பது பிரம்மனின் ஒரு பகலை மட்டும் குறிக்கும்.
எனினும் பகலுக்கு சமமான இரவும் பிரம்மனுக்கு உண்டு.
பிரம்மனின் இரவு காலத்தில் எந்தவித படைப்பும் நிகழ்வும் இருக்காது.
எனவே பிரம்மனின் பகல் மட்டும்
பிரம்மனின் ஒரு நாள் ஆகும்.
பிரம்மனின் கல்பகாலத்தில் 14 மனுவந்திரங்கள் அடங்கும்.
இந்த 4 யுகங்களும் சோ்ந்தது ஒரு மகா யுகம் அல்லது சதுா்யுகம். 12 மகா யுகங்களைக் கொண்டது ஒரு மன்வந்திரம். 14 மன்வந்திரங்களைக் கொண்டது ஒரு கல்பம். இப்படியாக 30 கல்பங்கள் இருக்கின்றன.
கல்பங்கள்
வாமதேவ கல்பம்
ஸ்வேத வராக கல்பம்
நீல லோகித கல்பம்
ரந்தர கல்பம்
ரெளரவ கல்பம்
தேவ கல்பம்
விரக கிருஷ்ண கல்பம்
கந்தற்ப கல்பம்
சத்திய கல்பம்
ஈசான கல்பம்
தமம் கல்பம்
சாரஸ்வத கல்பம்
உதான கல்பம்
காருட கல்பம்
கெளரம கல்பம்
நரசிம்ம கல்பம்
சமான கல்பம்
ஆக்நேய கல்பம்
சோம கல்பம்
மானவ கல்பம்
தத்புருஷ கல்பம்
வைகுண்ட கல்பம்
லெச்சுமி கல்பம்
சாவித்ரி கல்பம்
கோர கல்பம்
வராஹ கல்பம்
வைராஜ கல்பம்
கெளரி கல்பம்
மகோத்வர கல்பம்
பிதிா் கல்பம்
தற்போது நடந்து கொண்டிருப்பது ஸ்வேத வராக கல்பம் ஆகும்.
அதாவது ஒவ்வொரு மனுவந்திரத்திர்க்கும்
1 மனு மற்றும் 1 இந்திரன் வீதம்,
14 மனுக்கள் மற்றும் 14 இந்திரன்கள் தோன்றி மறைவார்கள்
(இந்திரன் என்பது ஒரு பட்டம் மட்டுமே. ஒவ்வொரு மனுவந்திரத்திர்க்கும் ஒவ்வொரு இந்திரன் இருப்பார். இப்போது இருக்கும் இந்திரனின் பெயர் புரந்தரா).
2 மனுவந்திரத்திர்க்கு இடையில் ஒரு சிறு இடைவேளை காலம் இருக்கும்.
இந்த காலத்தின் பெயர் “ஸந்தியா காலம்”. ஸந்தியா காலத்தின் அளவு நான்கு கலியுகம் அளவு.
அதாவது,
432000 X 4 = 1728000 மனித வருடங்கள்.
இதேபோல் 14 மனுவந்திரத்திர்க்கு பின்பு மீண்டும் ஒரு பெரிய இடைவேளை இருக்கும்.
அதுவே பிரம்மனின் இரவு
எனவே பிரம்மனின் ஒரு பகலில், 71 X 14 மகாயுகங்களும்,15 ஸந்தியாகாலங்களும் இருக்கும்.
14 மனுவந்தரங்கள் = 71 x 14
மகாயுகங்கள் = 994 மகாயுகங்கள்.
15 ஸந்தியாகாலங்கள் = 15 x 17,28,000 = 2,59,20,000 மனித ஆண்டுகள்.
2,59,20,000 = 6 மஹாயுகங்கள்.
( 43,20,000 X 6 = 2,59,20,000).
ஆக பிரம்மனின் 1 பகல் என்பது 1000 சதுர்யுகம் ஆகும் (994 + 6 சதுர்யுகங்கள்). இதையே பிரம்மனின் நாள் என்றும் கல்பம் என்றும், கல்பகாலம் என்றும் கூறுவர்.
இவ்வாறு 360 நாள் (அ) 360 கல்பம் (அ) 360 X 1000 சதுர்யுகம் என்பது பிரம்மனின் ஒரு வருடம்.
பிரம்மனின் 100 வருடம் = ஒரு பிரம்மனின் ஆயுள்.
அதாவது பிரம்மனின் ஆயுள் என்பது 155,520,000,000,000 மனித வருடங்கள்.
அவர் ஆயுள் முடியும்போது, இன்னும் பெரிய பிரளயம் ஏற்பட்டு அவரும்
ஸ்ரீமன் நாராயணனின் நாபி கமலத்தில் ஒடுங்குவார்.
தற்போதைய பிரம்மனின் ஆயுள் சரியாக 1,972,944,456 வருடங்கள்.
பிரம்மாவிற்கு இப்போது 51 வயது நடந்து கொண்டிருக்கிறது.
பிரம்மாவின் ஆயுள் 100 என்றால்,
அதன் பின் பிரளயம் ஏற்பட்டு படைப்புகள் அழியும் என்றால் இன்னும் ஜீவராசிகள் உயிர்வாழ 49 பிரம்மா ஆண்டுகள் பாக்கியுள்ளன.
அதாவது 76,20,48,00,000,000 வருடங்கள் இன்னும் பாக்கியுள்ளது.
இது போலவே யுகங்கள் மாறி கொண்டே இருக்கும் . தற்போது கலியுகம் நடந்து கொண்டு இருக்கின்றது.
கலியுகம் முடிந்ததும் மீண்டும் கிருதயுகம் ஆரம்பிக்கும், அடுத்து திரேதாயுகம், துவாபரயுகம், மீண்டும் கலியுகம் இவ்வாறு மீண்டும் மீண்டும் வந்துகொண்டேயிருக்கும்.
யுகம், சதுர்யுகம், மன்வந்திரம், கல்பம் இப்படி காலச் சுழற்சியில் உலகம் மாறிக் கொண்டே இருக்கும். ஒவ்வொரு மன் வந்திரத்திற்கு ஒருமுறை மகா பிரளயம் ஏற்பட்டு மூவுலகங்களும் அழியும். ஒவ்வொரு கல்பத்திற்கும் ஒருமுறை பிரம்ம பிரியம் ஏற்பட்டு ஈரேழு பதினான்கு லோகங்களும் அழியும். ஒவ்வொரு கல்பத்திலும் சிருஷ்டியில் நிகழும் பிரச்சினைகள் அடுத்த கல்பத்தில் சரி செய்யப்படும். லிங்க புராணம் வாம தேவ கல்பத்தில் ஆரம்பித்து சிருஷ்டியின் மாற்றங்களினால் ஏற்பட்ட பிரச்சினைகளையும், சர்வேஸ்வரனின் மகத்துவத்தால் எவ்வாறு சரி செய்யப்பட்டு இன்றைய மனித வாழ்க்கை முறையை எட்டி இருக்கிறோம் என்பதை இனி வரும் பிரிவுகளில் காணலாம். 

No automatic alt text available.


பதிவு-14
உலகின் தோற்றம்
கடந்த பதிவுகள் சுருக்கம்
உலகின் தலைசிறந்த விஷ்ணு பக்தராக கருதப்படும் நாரதர் உலகின் நலன் கருதி அவ்வப்போது ஈரேழு லோகங்களுக்கும் சென்று உலக நிகழ்வுகளை கண்காணிப்பது வழக்கம்.எப்போதும் நகர் வலம் வரும் போது , அவரை நாடி வேண்டுவோர் நலம் பெற அவர் பரமேஸ்வரரையோ, ஸ்ரீமன் நாராயணரையோ, பிரம்மாவையோ வேண்டி விரதங்கள், பரிகாரங்கள் கேட்பது வழக்கம். உலக இயக்கத்தின் சம நிலையை பேணிக் காப்பதில் நாரதருக்கும் பெரும் பங்கு உண்டு.அப்படி ஒரு சமயம் யாத்திரை செல்லும் போது நைமி சாரண்ய வனம் வருகிறார்.
அப்போது சூதக மகாமுனவரின் சீடர்களை சந்திக்கிறார்.உலகின் நிகழ்வுகளை பற்றி கலந்தாய்வு செய்யும் போது சிவபெருமான் மற்றும் லிங்க வழிபாடு பற்றி கலந்துரையாடுகின்றனர். சீடர்களுக்கு சிவ பெருமான் பற்றியும் லிங்க வழிபாடு பற்றியும் விளக்கமாக எடுத்துக் கூறிய பின்னர் அங்கிருந்து கிளம்பி சென்று விடுகிறார்.அவர் சென்ற சிறிது நேரம் கழித்து அங்கே சூதகமா முனிவர் வருகிறார்.
அப்போது சீடர்கள் அவரிடம் நாரத முனிவர் ஈசன் பற்றியும், லிங்க வழிபாடு பற்றியும் விளக்கம் கூறியதை தெரிவிக்கின்றனர். மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று வேண்டினார். சீடர்கள் வேண்டுகோளுக்கு இணங்க லிங்க புராணத்தை கூறுகிறார்.அப்போது உலகம் எவ்வாறு தோன்றியது? அதில் ஈசன் எவ்வாறு உருவானார்? ஏன் லிங்கம் வழிபாடு செய்ய வேண்டும் என்று ஒரு சீடர் கேட்கிறார் .அதற்கு பதிலளிக்க வேண்டி
"உலகின் தோற்றத்தை பற்றி லிங்க புராணம் என்ன கூறுகிறது என்பதை கூறுகிறேன் " என்று சூதக முனிவர் கூறுகிறார் .
அப்போது ஒரு சீடர் எழுந்து,
" உலகில் வாழும் எல்லா உயிர்களும் ஏதோ ஒரு வழியில் பிறந்திருக்க வேண்டும். இல்லையேல் உருவாகியோ , உருவாக்கப்பட்டோ இருக்க வேண்டும்.அப்படி எனில் லிங்கம் எப்போது உருவானது ,உலக சிருஷ்டிக்கு முன்னரா,இந்த சதுர் யுகத்திலா.எப்படி எங்கே யாரால் உருவானது " என கேட்கிறார்.
" முதலில் உலகின் தோற்றம் பற்றி கூறுகிறேன்.அதற்கு கால அளவுகள் பற்றி புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக விளக்கம் தருகிறேன் " என்று கூறுகிறார்.
கடந்த இரு பதிவுகளில் கால அளவுகள் பற்றி சூதக முனிவர் கூறியதை பார்த்தோம். இன்று அவர் என்ன கூறுகிறார் நாமும் கேட்கலாம். வாருங்கள் !!!!
கடந்த பதிவின் தொடர்ச்சி .......
சிவனின் தோற்றம்
தொடர்ந்து சூதக முனிவர் கூறியதாவது
"அநாதியாக நின்ற இந்த உலகம் ஆரம்பத்தில் நெருப்பு கோளமான பரப் பிரம்மம் ஜோதி லிங்கமாய இருந்தது. அப்போது திடீரென ஒரு பெரு வெடிப்பு ஏற்பட்டது. அப்பொழுது தோன்றிய ஒலியே ஓம் என்ற மந்திரம் ஆகும்.
ஜோதிர் லிங்கமாயிருந்த நெருப்பு கோளமானது வெடிப்பில் பல பாகமாக சிதறியது. அதிலிருந்து உருவான பாகத்தில் ஒரு சகல லோகங்களை சிருஷ்டிக்கும் பிரம்மா உருவானார். உருவாகும் உயிர்களை காத்து ரட்சிக்க விஷ்ணு உருவானார்.
உருவான அனைத்தையும் அதனதன் விதிப்படி அழிக்க ருத்ரன் எனப்படும் சிவன் உருவானார்.
ஜோதிலிங்க வெடிப்பு
தனக்கென வித்து ஏதுமின்றி அனைத்து உயிர்களுக்கும் தானே வித்தாக வியாபித்து இருக்கும் ஜோதிலிங்கத்தின் வெடிப்பில் சிதறிய பாகங்களிலிருந்தே மூன்று குணங்களுடன் கூடிய அகங்காரம் உருவானது.அவையாவன
தாமசம்
வைகாரிகம்
தைஜசம்
தாமசம்
தாமசம் என்ற அகங்காரத்திலிருந்து ஓம் என்ற ஒலி உருவானது.அந்த ஒலியின் சப்தம் எவ்வளவு தூரம் பரவியதோ அவ்வளவு தூரம் பரந்து விரிந்த ஆகாயம் உருவானது.
ஆகாய ஒலி பரவிய இடங்களில் சப்தத்தின் தன்மை கொண்ட ஒலியிலிருந்து ஸ்பரிசத்தின் தன்மையை உணர்த்தக்கூடிய காற்று உருவானது
காற்றிலிருந்து சப்தம், மற்றும் ஸ்பரிசத்தின் தன்மையை கொண்ட சொரூபமாய் நெருப்பு தோன்றியது
நெருப்பிலிருந்து அந்த சொரூபத்திற்கு காரணமான திரவத் தன்மை கொண்ட நீர் தோன்றியது.இது சப்தம்,ஸ்பரிசம்,உருவம், அது இருக்கும் இடத்தை பொறுத்து அது பெரும் வடிவம் ஆகிய தன்மைகளை கொண்ட நீராக உருவானது.
நீரிலிருந்து திடத்தன்மை கொண்ட மண் உருவானது.அந்த மண்ணே கல்லாகவும் பாறையாகவும் மாறி பூமியாக உருவானது.அறிவியல் முறைப்படி பார்த்தால் லிங்க புராணம் கூறும் உலகின் தோற்றம் ஏறக்குறைய உண்மை என்றே தோன்றுகிறது.
உலகியல் தத்துவம்
பஞ்ச குணங்கள் கொண்ட பொருளால் உருவானதே இந்த உலகம் என்பதும், அந்த உலகத்தில் ஆகாயத்தில் பூமி இருக்கிறது என்பதும் உண்மையாகிறது. அதை விட மிகப்பெரிய உண்மை கல்லாய்,பாறையாய் இருக்கும் பூமி புயலால் (காற்று) ஆகாயத்தில் மேக கூட்டத்தை ஒருங்கிணைத்து மழையாய் பொழிய ஆறாய் மாறும் நீரோட்டத்தால் அரிக்கப்பட்டு மணலாக மாறுகிறது. உலகின் தோற்றத்தில் எந்த நிலையிலிருந்ததோ மீண்டும் அதே நிலையை அடைகிறது.இதுவே லிங்க புராணம் கூறும் உலகியல் தத்துவம் ஆகும்.
ஆகாயம் பஞ்ச பூதங்களில் முதல் பூதம் அது ஓம் எனும் ஒலியின் தன்மை.அது காற்றுடன் சேர ஸ்பரிசத்தின் தன்மையை பெற்று இரு பூதங்களின் குணங்களை பெறுகிறது காற்றுடன் சொரூபத்தின் தன்மை பெறும் போது குளிர்விக்கப்பட்டால் மேகமாகவும்,வெப்பப்படுத்தப்பட்டால் நெருப்பாகவும் மாறி மூன்று பூதங்களின் குணாதிசியத்தை பெறுகிறது.சொரூபமாய் வடிவம் பெறும் மேகம் திரவத்தன்மை பெறும் போது நீராக மாறுகிறது.இந்த நீர் திரவத்தன்மையால் தன்னுள் கரைத்த பொருட்களை விட்டு ஆவியாக நீங்கும் போது திடத்தன்மை உருவாக பூமியை தோற்றுவிக்கிறது.இவ்வாறு நாம் வாழும் பூமி பஞ்ச பூதங்களின் அம்சம் கொண்டு உருவாக்கப் பட்டது . என சூதக மாமுனிவர் பூமி உருவான விதம் குறித்து விளக்கினார்.
No automatic alt text available.


பதிவு-15
உலகம் படைக்கபடுதல்
கடந்த பதிவில் பஞ்ச பூதங்களில் இருந்து நிலம்,நீர்,காற்று,நெருப்பு,ஆகாயம் இவை எவ்வாறு உருவாகின்றன என்பதை பார்த்தோம்.தாமசம் என்ற அகங்காரத்திலிருந்து ஏற்பட்ட ஓம் என்ற ஒலியானது பஞ்ச பூதங்களையும் எவ்வாறு உருவாக்கியது என்று பார்த்தோம்
இன்றைய பதிவு
சிவன்,விஷ்ணு,பிரம்மா ஆகியோரின் தோற்றமும் , 14 உலகங்கள் படைக்கப்படும் விதத்தையும் பற்றி பார்க்கலாம்.
வைகாரிகம்
வைகாரிகம் என்ற அகங்காரத்திலிருந்து இந்திரியங்களுக்கான வடிவம் அதாவது உலகில் தோன்றும் அனைத்து உயிர்களுக்கான வடிவம் தோன்றியது.
தைஜசம்
தைஜசம் என்ற அகங்காரத்திலிருந்து ஞான இந்திரியங்கள் ஐந்தும் , கர்ம இந்திரியங்கள் ஐந்தும் உண்டாயின .ஞான இந்திரியங்கள் எனப்படுபவை உணர்ச்சியால் உணரக்கூடிய உடல் உறுப்புகள் ஆகும். அவை உடல்,வாய்,கண்,
காது,மூக்கு ஆகும். கர்ம இந்திரியங்கள் என்பவை உடல் உறுப்புகளால் நாம் உணரும் உணர்ச்சிகள் ஆகும்.
உடலால் தொடு உணர்வும்
வாயால் பேச்சும் (ஒலி எழுப்பும் உணர்வு)
கண்ணால் காணவும் ( ஒளி உணரும் உணர்வு)
காதால் கேட்கவும் ( ஒலி பெற்று புரிந்து கொள்ளும் உணர்வு)
மூக்கால் மணம் நுகரவும் ( காற்றின் தன்மையை புரிந்து கொள்ளும் உணர்வு)
ஆகியவையும் எல்லா உயிர்களுக்கும் உருவாக்கப்பட்டன.
ஆரம்பத்தில் அனைத்து உயிர்களுக்கான படைப்பும் சமமே.பூமியில் உள்ள அனைத்து உயிர்களின் பாதுகாவலனாக மனிதனை படைக்க எண்ணி வேதங்கள்,ஆகமங்கள் புரிந்து கொள்ளும் திறனை கொடுத்தான். அவற்றிலிருந்தே பகுத்தறிவு உண்டானது.
இறைவனின் தைஜசம் என்ற அகங்காரத்திலிருந்து உயிர்களுக்கான உறுப்புகள், அவற்றின் உணர்வுகள் படைக்கபட்டன
பிரம்மாண்டம் உருவாதல்
நாம் வாழும் இந்த பூலோகம் உலகின் தோற்றத்தில் தன்னைப்போல 10 மடங்கு நீரால் சூழப்பட்டு இருந்தது.இந்த பூமி இருக்கும் (பால் வெளி மண்டலம்) பிரம்மாண்டமானது பஞ்ச பூதங்கள் உருவாகும் போதே உருவாக்கப்பட்டது.
பூமியானது பத்து மடங்கு நிலத்தால் சூழப்பட்டு இருக்கும்.
அந்த நிலத்தை சுற்றி பத்து மடங்கு நீர் சூழ்ந்திருக்கும்
பூமியை சுற்றியுள்ள நீரை பத்து மடங்கு நெருப்பு சூழ்ந்திருக்கும்
அந்த நெருப்பை சுற்றி பத்து மடங்கு காற்று சூழ்ந்திருக்கும்
அந்த காற்றை சுற்றி ஆகாயம் இருக்கும்.
அந்த ஆகாயத்தை சுற்றி நூறு மடங்கு அகங்காரம் சூழ்ந்திருக்கும்
அந்த அகங்காரத்தை கணக்கிட இயலாத மகிதத்துவம் சூழ்ந்திருக்கும்
அந்த மகா தத்துவத்தில் நமது பூலோகத்தைப் போல பதினான்கு லோகங்களும் உருவாக்கப்பட்டு பிரம்மாண்டம் உருவாகிறது. அந்த பிரம்மாண்டமானது விராட புருஷன் தன்னிடம் இலயம் கொண்டு இருப்பான்.
பிரம்மாண்டத்தின் 14 உலகங்கள்
பூமிக்கு மேலுள்ள 6 உலகங்கள்
சத்தியலோகம் (பிரம்மா)
தபோலோகம் (தேவதைகள்)
ஜனோலோகம் (பித்ருக்கள்)
மகர்லோகம் (முனிவர்கள்)
சுவர்லோகம் (தேவர்கள்)
புவர்லோகம் (கிரகங்கள், நட்சத்திர தேவதைகள்):
🌎பூமி🌎
பூமிக்கு கீழேயுள்ள 7 உலகங்கள்
🌐அதல லோகம்:
🌐விதல லோகம் (அரக்கர்கள்):
🌐சுதல லோகம் (மகாபலி):
🌐தலாதல லோகம்:
🌐மகாதல லோகம் (அசுரர்கள்):
🌐ரசாதல லோகம்:
🌐பாதாள லோகம் (வாசுகி முதலான பாம்புகள்)
'அதல பாதாளத்தில் வீழ்வது' என்னும் வார்த்தைப் பிரயோகம் 'அதல லோகம்' முதல் 'பாதாள லோகம்' வரையிலான உலகங்களின் பெயரால் பழக்கத்துக்கு வந்தது.இவை எல்லாம் ஒருங்கிணைத்து பிரம்மாண்டம் உருவாக்கப்படுகிறது
பிரம்மன் ,விஷ்ணு, சிவன் மூவரின் தோற்றம்
மகாதத்துவம் முதல் உண்டான தத்துவங்கள் உலகம் படைக்கப்படும் போது வெறும் நீரால் சூழப்பட்டு இருந்தது.உலகம் முழுவதும் நீரால் மிதக்கும் போது பெரும் வெடிப்பில் சிதறிய மூன்று பாகங்களிலிருந்தும் சிவன்,விஷ்ணு,பிரம்மா தோன்றுவார்கள்.
அப்பொழுது இராஜசகுணத்தோடு பிரம்மாதோன்றி தாமசஅகங்காரத்தில் இருந்து உருவாக்கப்பட்ட பூமியில் வைகாரிக அகங்காரத்திலிருந்து உயிர்களுக்கான வடிவத்தை உருவாக்கி தைஜச அகங்காரத்தில் இருந்து உயிர்களுக்கான உணர்வுகளை சிருஷ்டிப்பார்.
உயிர்களுக்கான ஞான மற்றும் கர்ம இந்திரியங்களால் உயிர்களுக்கு இடையில் இயற்கையால் ஏற்படும் தீமைகளிலிருந்து இரட்சிக்க விஷ்ணு தோன்றுவார்.
உயிர்களுக்கான ஆயுட்காலம், உலகின் ஆயுட்காலம் முடியும் போது தாமச குணத்தோடு சிவன் அனைவரையும் சம்ஹாரம் செய்வார்.
28 மன்வந்திரங்களுக்கு ஒரு முறை உருவாகும் மகா பிரளயத்தில் உலகம் முழுவதும் சிவன்,விஷ்ணு,பிரம்மா மூவரில் அடங்கும்.மூவரும் சிவனுள் அடங்கி ஜோதி லிங்கத்தில் ஐக்கியமாகி விடுவார்கள். இந்நிலையில் ஆயிரம் கல்ப காலங்கள் வெறுமனே கழியும்.இந்நிலையில் சிவன் மட்டும் தனித்திருப்பார். மீண்டும் தன்னிச்சையாக வெடிப்பு ஏற்பட்டு உலக சிருஷ்டி தொடரும்.
எவ்வளவு காலத்திற்கு ஒரு முறை உலகில் மகாபிரளயம் ஏற்படும்.அதற்கென கால அளவு உண்டா என்ற கேள்வி உங்களுள் எழும்.அதற்கான விளக்கம்.  அடுத்த இரண்டு பதிவுகளில் காணலாம்.
No automatic alt text available.

பதிவு-16
உலகம் படைக்கப்படுதல்
கடந்த பதிவில் பிரம்மாண்டத்தின் தோற்றம் பற்றி பார்த்தோம்.பின் சிவன் பிரம்மா,விஷ்ணு மூவரின் தோற்றமும், அவர்களின் குணங்களையும் பற்றியும் பார்த்தோம். இன்று நாம் உலகியலின் கால சுழற்சி பற்றி லிங்க புராணம் என் கூறுகிறது என்பதை பற்றி பார்க்கலாம்.
சூதக முனிவர் கூறும் கால கணக்க
சூதகமுனிவர் பிரம்மாண்டத்தின் தோற்றம் பற்றி கூறும் போது மகா பிரளயத்தில் எல்லாம் சிவனுள் ஒடுங்கும். ஆதியும் அந்தமும் இல்லாத ஆதி யோகி இவ்வுலகில் தனித்து இருப்பார். மீண்டும் உலகம் தோற்றுவிக்கப்படும் காலம் வரை பிரம்மாண்டமானது இருள் சூழ்ந்த நிலையில் காணப்படும் என்கிறார்.
அப்பொழுது அவரது சீடர் ஒருவர் எழுந்து நின்று ,
” மகா சீலரே!!! எல்லா நிகழ்வுகளுக்கும் கால அளவு உண்டு.உலகில் உயிர்கள் தோற்றமும்,பின் மகா பிரளய காலத்தில் உயிர்கள் ஒடுக்கமும் எவ்வாறு கணக்கிடப்படுகிறது.அதை யார் தீர்மானிக்கிறார்கள்” என கேட்கிறார்.
அதற்கு பதிலளிக்க எண்ணிய சூதகமுனிவர் அந்த சீடர்களை நோக்கி
“ இதை விளக்கி சொல்ல வேண்டும் என்றால் உங்களுக்கு கால அளவுகள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.ஏன் என்றால் பிரம்மன் சிருஷ்டி தொழிலை மேற் கொள்ளும் நேரம் அவருக்கு பகல் பொழுது ஆகும்.மகாபிரளயத்தில் அனைத்தும் ஒருங்கிணைத்து சிவனுள் ஐக்கியமாகும் நேரம் இரவுப் பொழுதாகும்.இந்த கால இடைவெளியில் சிருஷ்டி ,உலக வாழ்க்கை, உயிர்கள் சிவனுள் ஒடுங்குதல் என அனைத்தும் முடிவுக்கு வந்து விடும்.
அப்போ ஒரே நாளில் எல்லாம் நடந்து முடிந்து விடுமா என்ற சந்தேகம் உங்களுக்கு தோன்றும்.கால அளவை புரிந்து கொள்ளாமல் கடவுளின் காலக் கணக்கை புரிந்து கொள்ள முடியாது. விளக்கமாக சொல்கிறேன் கேளுங்கள் " என விளக்க ஆரம்பித்தார்.
ஈசன் நிர்ணயித்த கால அளவு
கண் இமைக்கும் பொழுதே காலத்தின் அடிப்படை அளவாகும். அதன் அடிப்படையில் விளக்குகிறேன் கேளுங்கள் “ என்றார்
15 முறை ௧ண் இமைத்தால் அது காஷ்டை எனப்படும்
30 காஷ்டை = ஒரு கலை(3நிமிடம்)
30 கலை = ஒரு முகூர்த்தம்(90 நிமிடங்கள்)
1 நாழிகை = 24 நிமிடங்கள்
3.75 நாழிகைகள் = 1 முகூர்த்தம்
7.5 நாழிகைகள் = 2 முகூர்த்தம் = 1 சாமம்
60 நாழிகைகள் = 8 சாமம் = 2 பொழுதுகள் = 1 நாள்
15 நாள் = 1 பட்சம் = 0.5 மாதம்
1 மனித ஆயுள் வட்டம் = 120 வருடங்கள்
2 வட்டங்கள் = 240 அயனங்கள் = 1440 மாதங்கள்
இது மானுடர்கள் கணக்கு.
, தேவர்கள் கால அளவு
மானுடரின் ஒரு மாதம் = பித்ருக்களுக்கு ஒரு நாள்
பித்ருக்களின் 12 நாட்கள் = தேவர்களுக்கு ஒரு நாள்(12 மாதம்)
தேவர்களின் 10 நாட்கள் = சப்த ரிஷிக்களுக்கு ஒரு நாள்
சப்தரிஷிகளின் 10 நாள் = துருவனுக்கு ஒரு நாள்
தேவர்களுக்கு ஒரு நாள் என்பது 12 மாதங்கள் எனில் ஒரு ஆண்டுக்கு எத்தனை மானுட வருடங்கள் யோசித்துப் பாருங்கள்
இம்மானுட வருடம் ஒன்று என்பது தேவர்களுக்கு ஒரு நாள். (தேவர்களுக்கு உத்தராயணம் பகலும் (6 மாதம்), தக்ஷிணாயனம்(6 மாதம்) இராத்திரியுமாயிருக்கும்)
மனுஷ வருஷம் முந்நூற்றறுபது(366) கொண்டது தேவர்களுக்கு ஒரு வருஷம்
தேவவருஷம் ( 12, 000)பன்னீராயிரங் கொண்டது ஒரு சதுர்யுகம்.
கிருதயுகம் – 4800 (தேவ வருஷம்) -17 லட்சத்து 28000 (மனுஷ வருஷம்)
திரேதாயுகம் – 3600 (தேவ வருஷம்) -12 லட்சத்து 96000 (மனுஷ வருஷம்)
துவாபரயுகம் – 2400(தேவ வருஷம்) -8 லட்சத்து 64000 (மனுஷ வருஷம்)
கலியுகம் – 1200 (தேவ வருஷம்) -4 லட்சத்து 32000 (மனுஷ வருஷம்)
சதுர்யுகம் – 12000 (தேவ வருஷம்) -43 லட்சத்து 21000 (மனுஷ வருஷம்)
பிரம்மாவின் ஆண்டு
பிரம்மாவின் வயது
ஏற்கனவே சொன்னபடி ஆயிரம் சதுர்யுகம் திரும்பினால், பிரம்மாவுக்கு ஒரு பகலாகும். பின்னும் ஆயிரம் சதுர்யுகம் கழிந்தால் ஒரு ராத்திரியாகும். ஆகவே இரண்டாயிரஞ் சதுர்யுகங்கள் கொண்டது பிரம்மாவிற்கு ஒரு நாளாகும். இந்த நாள் முப்பது கொண்டது ஒரு மாசம். இந்த மாசம் பன்னிரண்டு கொண்டது ஒரு வருஷம். இந்த வருஷம் நூறானால் பிரம்மாவின் ஆயுசு முடியும். இவ்வியல்புடைய பிரம்மாக்கள் எண்ணில்லாதவர்கள்.பிறந்திருக்கிறார்கள்.இறந்தும் இருக்கிறார்கள்.
பிரம்மாவினுடைய ஆயுசு பரமெனப்படும். அதில் பாதியாகிய ஐம்பது வருஷம் பரார்த்தம் எனப்படும் . இரு பரார்த்தங்கள் முடியும் போது பிரம்மா விஷ்ணுவினுள் ஐக்கியமாவார்.அனைத்து உயிர்களும் சிவனுள் அடங்கும்.இறுதியில் விஷ்ணுவும் சிவனுள் ஐக்கியமாக பிரம்மாண்டத்தின் பயணம் முடிவுற்று அனைத்தும் சிவனுள் ஒடுங்கும்.அடுத்த உயிர் தோற்றம் வரை சிவன் தனித்திருப்பார்.
என சிவன் ஒவ்வொருவருக்கும் வகுத்த கால அளவினைப் பற்றி தன் சீடர்களுக்கு விளக்கமாக கூறுகிறார்.
அப்பொழுது ஒரு சீடர் எழுந்து, " உலகில் பிரம்மா சிருஷ்டி துவங்கியதிலிருந்து இன்று வரை கால மாற்றங்களுக்கு தகுந்தவாறு உலகில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும் என்று கூற முடியுமா " என்று கேட்கிறார்.
அதற்கு சூதக மாமுனிவர் என்ன பதில் கூறியிருப்பார் .!?!?!
No automatic alt text available.


பதிவு- 17
உலகின் கால மாற்றம் தொடர்ச்சி.......
கடந்த பதிவில் கால மாற்றங்கள் பற்றி சூதக மாமுனிவர் தன் சீடர்களுக்கு விளக்கங்கள் அளித்து வருகிறார். அப்பொழுது ஒரு சீடர் எழுந்து பிரம்மா சிருஷ்டி துவங்கியதிலிருந்து இன்று வரை உலகில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்று கேட்டார்.அதற்கு சூதக முனிவர் என்ன விளக்கம் அளிக்கிறார் என்பதையே இன்றைய பதிவில் காணப் போகிறோம்.
சூதக முனிவர் உலக மாற்றங்களை பற்றி கூறுதல்
உலகில் தொன்றுதொட்டு நடந்துவந்த விவாகம், அஷ்டபந்தனம் , யாகங்கள் முதலிய அத்தனை சுபகாரியங்களிலும், ஈமக்கிரியைகள் முதலிய அத்தனை அமங்கலச்சடங்குகளிலும் அன்றுள்ள நேரம் காலம் முதலிய கணக்கீடுகளைச் சொல்லாமல் ஒரு செயலும் நடந்ததில்லை . இதன் அடிப்படையில் எனக்கு முன் இருந்த முனிவர்கள்,ரிஷிக்கள் சென்ற காலத்துக் கணக்கீடுகள் பஞ்சாங்கங்கள் என்று புழங்கப்படும் ஏடுகளில் குறிக்கப்பட்டு அதன் அடிப்படையில் எதிர்கால நிகழ்வுகளையும் கணக்கிடுகிறார்கள்.கால நிகழ்வுகள் பற்றி எனது குரு எனக்கு கற்று தந்ததை நான் இன்று உங்களுக்கு கற்றுத்தருகிறேன் என்று கூறி கால மாற்றங்கள் பற்றி விளக்க ஆரம்பிக்கிறார் சூதக மாமுனிவர்
கால மாற்றங்கள்
" காலத்தின் மாற்றங்களை புரிந்து கொள்வதும்,உணர்ந்து கொள்வதும் அத்தனை எளிதல்ல. பிரம்மாவின் ஆயுட்காலம் 100 பிரம்ம ஆண்டுகள். அந்தக் காலத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு 'பரார்த்தங்கள்' என்று புராணங்களில் என்று சொல்வார்கள். இப்பொழுது முதல் பரார்த்தம் முடிந்து இரண்டாவது பரார்த்தத்தின் முதல் கல்பம் நடந்து கொண்டு இருக்கிறது. இதற்குமுன் முடிந்து போன முதல் பரார்த்தத்தின் கடைசி நாள் 'பாத்ம' கல்பம் எனப்படும். முதல் பரார்த்தத்தின் முதல் நாள் 'பிராம்ம' கல்பம் எனப்படும். இவையிரண்டு கல்ப காலத்திலும் நான் இப்போது கூறிவரும் லிங்க புராணத்தில் சில நிகழ்வுகள் நடந்துள்ளது.அவற்றை பின்னர் பார்க்கலாம்.உலகில் நிகழ்ந்த கால மாற்றங்களை நான் பிரம்மனில் இருந்து விளக்குகிறேன் " என தன் சீடர்களை பார்த்து கூறுகிறார் சூதக மாமுனிவர்.
பிரம்மனின் பரார்த்தம்
'பரார்த்தம்' என்ற சொல் கணிதத்தில் 1000000000000000000 (10^17) என்ற எண்ணைக் குறிக்கும்.
பிரம்மாவின் ஆயுள் காலத்தின் பாதியிலும் ஏறக்குறைய 1000000000000000000 மனித ஆண்டுகளே .
ஒரு மகாயுகம் = 43,20,000மனித ஆண்டுகள்.
ஒரு கல்பம் அல்லது பிரம்மாவின் ஒரு பகல் = 4,32,00,00,000மனித ஆண்டுகள்.
ஒரு பகலும் ஓரிரவும் சேர்ந்தது = 8,64 ,00,00,000மனித ஆண்டுகள்
இப்படி 360 நாட்கள் கொண்ட பிரம்மனின் ஓர் ஆண்டு = 360 x 864 x1,00,00,000மனித ஆண்டுகள்
இப்படி 50 பிரம்ம-ஆண்டுகள் = 50 x 360 x 864 x 10000000
தற்போது 50 பிரம்ம ஆண்டுகள் முடிந்து 51 வது பிரம்ம ஆண்டு நடந்து கொண்டு இருக்கிறது.
கல்ப காலம்.
பிரம்மனின் பரார்த்தம் கல்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளது . ஒரு கல்பகாலம் என்பது படைப்புக் கடவுள் பிரம்மனின் ஒரு பகல் அல்லது இரவின் கால அளவைக் குறிக்கும்.14 மன்வந்திரங்களைக் கொண்டது ஒரு கல்பம். இப்படியாக 30 கல்பங்கள் இருக்கின்றன.
கல்பங்கள்
1. வாமதேவ கல்பம்
2. ஸ்வேத வராக கல்பம்
3. நீல லோகித கல்பம்
4. ரந்தர கல்பம்
5. ரெளரவ கல்பம்
6. தேவ கல்பம்
7. விரக கிருஷ்ண கல்பம்
8. கந்தற்ப கல்பம்
9. சத்திய கல்பம்
10. ஈசான கல்பம்
11. தமம் கல்பம்
12. சாரஸ்வத கல்பம்
13. உதான கல்பம்
14. காருட கல்பம்
15. கெளரம கல்பம்
16. நரசிம்ம கல்பம்
17. சமான கல்பம்
18. ஆக்நேய கல்பம்
19. சோம கல்பம்
20. மானவ கல்பம்
21. தத்புருஷ கல்பம்
22. வைகுண்ட கல்பம்
23. லெச்சுமி கல்பம்
24. சாவித்ரி கல்பம்
25. கோர கல்பம்
26. வராஹ கல்பம்
27. வைராஜ கல்பம்
28. கெளரி கல்பம்
29. மகோத்வர கல்பம்
30. பிதிா் கல்பம்
பிரம்மாவின் பகல் காலத்தில் ஏற்கனவே 30 கல்பங்கள் நடந்து முடிந்து விட்டன.பிரம்மாவின் இரவு காலம் தொடங்கி வாம தேவ கல்பம் நடந்து முடிந்துவிட்டது. தற்போது நடந்து கொண்டிருப்பது பிரம்மாவின் இரவு காலத்தில் ஸ்வேத வராக கல்பம் ஆகும்
மன்வந்திரங்கள்
ஒரு கல்பகாலத்திற்குள் 14 மன்வந்திரங்கள் நடக்கும்.இந்த 14 மன்வந்திரங்களுக்குள் பதினான்கு 'மனு'க்களும் பதினான்கு இந்திரர்களும் வந்து செல்கிறார்கள். 'மனு' என்பவர் பூமி அனைத்துக்கும் மன்னராவார். இந்திரன் தேவலோகத்திற்கு மன்னராவார்.
ஒரு மனுவின் காலம் 71 மகாயுகங்கள். இந்திரனின் கால அளவும் அவ்வளவே. இக்கால அளவிற்கு 'மன்வந்தரம்' என்று பெயர். இரு மன்வந்தரங்களுக் கிடையில் ஒரு இடைவேளை ('ஸந்தியா காலம்') நான்கு கலியுக கால அளவு கொண்டதாக இருக்கும். அதாவது 17,28,000 மானிட ஆண்டுகள்.
14 மன்வந்தரங்களும் முடிந்தவுடன் ஒரு இடைவேளை இருக்கும். ஆக, பிரமனின் ஒரு பகலில், 71 மகாயுகங்களும். 15 ஸந்தியாகாலங்களும் இருக்கும்.
14 மன்வந்தரங்கள் = 71 x 14 மகாயுகங்கள் = 994 மகாயுகங்கள்.
15 ஸந்தியாகாலங்கள் = 15 x 17,28,000 ஆண்டுகள் = 6 x 43,20,000 ஆண்டுகள் = 6 மஹாயுகங்கள்.
பிரம்மனின் பகல் = 72 மகாயுகங்கள்+ 15 சந்தியா காலங்கள்= 994+6 மகாயுகங்கள்
ஆக பிரமனின் ஒரு பகலில் ஆயிரம் மகாயுகங்கள் கடக்கும்.
மன்வந்திரங்கள் பற்றிய விளக்கம்
மன்வந்தரங்கள் கீழேயுள்ள வரிசையின்படி ஒன்றன்பின் ஒன்றாக வரும். ஒவ்வொரு மன்வந்தரமும் அப்பொழுதுள்ள மனுவின் பெயரைத் தாங்குகின்றது. இப்பொழுது நடப்பது ஏழாவது மன்வந்தரமான வைவஸ்வத மன்வந்தரம். சூரியனுடைய மைந்தனான வைவஸ்வதர் இப்பொழுதுள்ள மனு.
நடந்து முடிந்த ஏழு மன்வந்தரங்கள் பின்வருமாறு.
🌼சுவாயம்புவ மன்வந்தரம்
🌼சுவாரோசிஷ மன்வந்தரம்
🌼உத்தம மன்வந்தரம்
🌼 தாமச மன்வந்தரம்
🌼 ரைவத மன்வந்தரம்
🌼 சாக்ஷுஷ மன்வந்தரம்
🌼 வைவஸ்வத மன்வந்தரம்
இன்றைய மன்வந்தரமான வைவஸ்வத மன்வந்தரத்தில் 27 மகாயுகங்கள் சென்றுவிட்டன. இப்பொழுது நடப்பது 28-வது மகாயுகம். இந்த கல்பத்தில் இன்னும் 43 மகாயுகங்கள் மீதம் உள்ளன.
தற்போதைய மன்வந்தரம் முடிந்தபின் வரப்போகும் ஏழு மனுக்களின் பெயர்களும் புராணங்களில் கூறப்பட்டிருக்கின்றன.
அவை:
🏵ஸாவர்ணி
🏵தக்ஷஸாவர்ணி
🏵பிரம்மஸாவர்ணி
🏵 தர்மஸாவர்ணி
🏵ருத்ரஸாவர்ணி
🏵 தேவஸாவர்ணி
🏵 இந்திரஸாவர்ணி
" இவ்வாறாக ஒவ்வொரு சிருஷ்டி காலத்திலும் வரும் மன்வந்திரங்களில் மன்வந்திரத்திற்குரிய மனு பூமியையும்,இந்திரன் தேவ லோகத்தையும் ஆட்சி புரிவார்கள் " என்று சூதக மாமுனிவர் தன் சீடர்களுக்கு விளக்குகிறார்.
அப்பொழுது ஒரு சீடர் எழுந்து , குருவே ஒவ்வொரு மன்வந்திரத்திலும் அந்தந்த மன்வந்திரத்திற்குரிய மனு பூமியையும்,இந்திரன் தேவ லோகத்தையும் ஆட்சி புரிவார்கள் என்று கூறினீர்கள்.அப்படி என்றால் இது வரை நடந்து முடிந்த மன்வந்திரங்களில் யார் யார் ஆட்சி புரிந்தார்கள் என்று கூற முடியுமா என்று கேட்கிறார்.அதற்கு சூதக மாமுனிவர் என்ன விளக்கம் கூறி இருப்பார்.நாளை பார்க்கலாம்.
நாளைய பதிவு :
ஒவ்வொரு மன்வந்திரத்திலும் மனுவும்,இந்திரனும் வேறு வேறு நபர்கள் ஆட்சி செய்வார்கள். இதுவரை நடந்து முடிந்த மன்வந்திரத்தில் யார் யார் ஆட்சி செய்வார்கள் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம். 
No automatic alt text available.

லிங்க புராணம்
பதிவு- 18
மன்வந்திரங்கள்.

ஒவ்வொரு சிருஷ்டி காலத்திலும் வரும் மன்வந்திரங்களில் மன்வந்திரத்திற்குரிய மனு பூமியையும், இந்திரன் தேவ லோகத்தையும் ஆட்சி புரிவார்கள்.உலகை வழி நடத்த ரிஷிகளும், மனுவிற்கு உதவ கணங்களும், இந்திரனுக்கு உதவ தேவதைகளும் பிறந்து உலக நிகழ்வுகளை முறைப்படுத்துவார்கள் " என்று சூதக மாமுனிவர் தன் சீடர்களுக்கு விளக்குகிறார்.
" மன்வந்திரம் என்றால் என்ன ? ஏன் சாளக்கிராமம் அது எப்படி கணக்கிட படுகிறது என கேட்கிறார் ஒரு சீடர்.
மன்வந்திரம் : (ஏற்கனவே பதிவு செய்ய பட்டதுதான் .புரிந்து கொளவதற்காக மறுபதிப்பு)
1 வருடம் = 12 மாதம்
43,20,000 வருடங்கள் = 1 சதுர் யுகம் = 4 யுகங்கள் (சத்ய யுகம் + திரேதா யுகம் + த்வாபர யுகம் + கலி யுகம் )
71 சதுர் யுகம் = 30,67,20,000 சூரிய வருடங்கள் = 1 மன்வந்திரம்
இதே போல 14 மன்வந்திரங்கள் உள்ளன.
ஒவ்வொரு மன்வந்திரமும் ஒரு சத்ய யுக காலம் 'சந்தி' என்னும் இடைப்பட்ட காலத்தைக் கொண்டு வரும். எனவே
1 மன்வந்திரம் + 1 சந்தி = 30,67,20,000 சூரிய வருடங்கள் .
14 சந்தி + 14 மன்வந்திரம் = 4,31,82,72,000 சூரிய வருடங்கள்
இதையே இப்படியும் சொல்லலாம் :-
4,31,82,72,000 சூரிய வருடங்கள் = 1 கல்பம்
1 கல்பம் + 1 கல்ப சந்தி = 4,32,00,00,000 சூரிய வருடங்கள்
4,32,00,00,000 சூரிய வருடங்கள் அல்லது 1 கல்பம் = நான்முகப் பிரம்ம தேவனின் ஒரு பகல் பொழுது.அதே கல்ப அளவு பிரம்ம தேவனின் ஒரு இரவு ஆகும்
ஆக 1 பகல் கல்பம் + 1 இரவு கல்பம் = பிரம்ம தேவனின் ஒரு நாள்
= 8,64,00,00,000 வருடங்கள
இந்த நாட்கள் 360 கொண்டது பிரம்மனின் ஒரு வருடம்.
அப்படிப்பட்ட வருடங்கள் 100 கொண்டது பிரம்மனின் ஆயுள்.
அதாவது, மேற்சொன்ன 8,64,00,00,000 வருடங்களை ஒரு நாளின் காலமாகக் கொண்டு, அதன் அடிப்படையில் 100 வருடங்கள் எவ்வளவோ அவ்வளவே நாம் இருக்கும் இந்தப் பிரபஞ்சத்தின் மொத்தக் கால அளவு என லிங்க புராணம் கூறுகிறது. பிரம்மனுக்கு அது ஒரு நாளாகும் .அதன் பின் ஒட்டுமொத்த பிரபஞ்ச அமைப்பும் மாற்றி அமைக்க படும்.மஹா பேரூழி காலம் ஏற்பட்டு ஒட்டு மொத்த உயிர்களும் அழிக்கப்பட்டு புதிய உலகம் ஏற்படுத்தபடும். உலகில் கால சுழற்சி இதன் அடிப்படையிலேயே சுழன்று வருகிறது. இதனால் தான் வராக கல்பம் ஆரம்பித்த நாளில் உலகம் முழுதும் நீரால் சூழப்பட்டு இருந்தது ” என்று சூதக மாமுனிவர் கூறினார் .
அப்போது ஒரு சீடர் எழுந்து நின்று , “ இடையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்க வேண்டும் குருவே !! .ஒவ்வொரு மன்வந்திரத்திலும் குறிப்பிட அடையாளங்களை உடைய மக்கள் தோன்றுவார்கள் என்று கூறினீர்கள்.அது பற்றி கொஞ்சம் விரிவாக சொல்ல வேண்டும் "என்று கேட்கிறார் .
" ஒவ்வொரு மன்வந்திரத்திலும் குறிப்பிட அடையாளங்களை உடைய மக்கள் தோன்றுவார்கள்.அவர்கள் தான் பிரம்மனால் படைக்கப்பட்ட உயிர்களை வழி நடத துவார்கள். அவர்கள் யார் யார் என்று கூறுகிறேன். கேளுங்கள், " என்று விளக்கி விட்டு கூற ஆரம்பிக்கிறார் .
🦁உலக இயக்கம்🦁
ஒரு சமயம் எங்கும் கடலே இருந்தது. நிலப்பகுதி வெளியில் தெரியவில்லை. பிறகு நிலப்பகுதிகள் மேலே எழும்பியதை வராஹ அவதாரம் என்கிறோம். நிலம் வெளியே எழுந்த அறிவியல் உண்மையை வராஹ அவதாரம் விவரிக்கிறது.. அப்படி நிலப் பகுதி வெளி வந்த காலத்தில் இந்தக் கல்பம் ஆரம்பித்தது. அப்போது எல்லா கோள்களும் அந்த ஆரம்ப நேர்கோட்டிற்கு ஒரு சேர வந்தடைகின்றன. எல்லாக் கோள்களும் ஒரு நேர்க் கோட்டில் இருக்கும் நிலையில் இருந்து நாட்கள், மாதங்கள், வருடங்கள், மகாயுகங்கள், மனு, கல்பம், முதலியன கணக்கிடப் படுகின்றன.
வான் கோள்கள் ஐந்தும் பூமியும் ஒரே நேர்க் கோட்டில் வரும் சமயத்தை “பூஜ்யம்” எனக் கொண்டு அதிலிருந்து காலம் கணக்கிடத் தொடங்கப் படுகிறது!
.இரவும் பகலும் இணைந்தால் ஒரு நாள் எனவும் ,வானில் சூரியனும், சந்திரனும் சேர்ந்தால அது அமாவாசை எனப்படும். அப்படி ஒரு குறிப்பிட்ட வானப் பின்னணியில், ஒரு முறை சூரியனும், சந்திரனும் சேர்ந்த பிறகு, மீண்டும் அதே இடத்தில் சேர்வதை ஒரு மாதம் என்றார்கள். இதற்கு ஆரம்பம் மேஷ ராசியின் பூஜ்யம் பாகை என்று எடுத்துக் கொண்டார்கள்.
அந்தப் புள்ளியில் சூரியனும் சந்திரனும் சேர்ந்ததற்குப் பிறகு, அவை இரண்டும் வெவ்வேறு வேகத்தில், வானத்தைச் சுற்றுகின்றன. அந்த இடத்தில் மீண்டும் அவை இரண்டும் சந்திக்க ஐந்து வருடங்கள் ஆகின்றன. அதை ஒரு யுகம் என்றனர். ஆனால் அதற்குள் சந்திரனது வேகமான ஓட்டத்தால், ஒரு மாதம் அதிகம் வந்து விடுகிறது. அது இரண்டரை வருடங்களிலேயே வந்து விடுகிறது. எனவே இரண்டு, இரண்டரை சேர்த்து ஒரு யுகம் என்றானது. இதில் முதல் இரண்டரை ஏறு முகம், (ஆரோஹணம்) அடுத்த இரண்டரை இறங்கு முகம் (அவரோஹணம்) என்று கணக்கு செய்தனர்.
மனித வாழ்கையின் முக்கிய அடிப்படை தர்மமும், கர்மமும் ஆகும். ஒருவர் முன் ஜன்மத்தில் செய்த தர்ம, கர்மத்தின் அடிப்படையில்தான் இந்த ஜன்மம் அமைகிறது என்பதாலே இப்படி சொல்லப்படுகிறது. ராசிச் சக்கரத்தில் தர்மம், கர்மம் ஆகியவற்றின் அதிபதிகள் குரு கிரகமும், சனி கிரகமும் ஆகும். அதனால் அந்த குரு, சனி கிரகங்களின் சேர்க்கை ஒரு யுகம் ஆயிற்று. அதாவது, இந்த இரண்டு கிரகங்களும், ஒருமுறை ஓரிடத்தில் சந்தித்துவிட்ட பிறகு, மீண்டும் அதே இடத்தில் சந்திக்க 60 வருடங்கள் ஆகின்றன. இதுவே மனிதனது வாழ்க்கையின் அளவு.
குருவின் சுற்றுக்கான வருடப் பெயர்கள், மனித வாழ்கையின் கால அளவுக்கும் பொருந்தும். நாம் சூரியனது சுழற்சியின் அடிப்படையிலான வருடக் கணக்கைக் கொண்டுள்ளதால் அந்தப் பெயர்கள் சூரிய வருடத்துக்கும் வந்தன. இதில் ஒரு ஏறு முகம், ஒரு இறங்கு முகம் வருவது ஒரு முழு சுற்று ஆகும். ஒரு மனிதனின் முதல் 60 வருடங்கள் ஏறு முகம். அது வளரும் காலம். அது முடிந்தவுடன், மனிதன் மீண்டும் பிறப்பதாகக் கொண்டு அறுபதாம் கல்யாணம் என்று செய்கிறார்கள். இது உண்மையில் ஆயுள் விருத்திக்குச் செய்யும் ஹோமம் ஆகும். அடுத்த 60 வருடங்கள் இறங்கு முகம். 60 + 60 = 120 வருடங்கள் கொண்டது மனிதனின் முழு ஆயுள். இதன் அடிப்படையில் கிரக தசைகள் 120 வருடங்களுக்கு வருகின்றன. லிங்க புராணத்தின் படி கலியுகத்தில் ஒரு மனிதனின் அதிகபட்ச ஆயுள் காலம் 120 ஆண்டுகள் ஆகும்.
வினாடி ,நாடி, அஹோரராத்திரம், மாதம், ருது, அயனம், வருஷம், நான்கு யுகங்கள், ஸ்வாயம்பூ முதலான பதினான்கு மனுக்கள், ப்ராம்ம, பகல், இரவு, கல்பம் இவைகளின் எண்ணிக்கை , ஒன்பது விதமான காலமானங்கள், ப்ராஹ்ம, திவ்ய, பித்ரிய, பிராஜாபத்ய, குரு, ஸௌரஸாவன, சாந்திர, நக்ஷத்திர முதலானவைகள் யாவும் காலத்தின் நியதியின்படியே நடந்து வருகிறது. இதன் அடிப்படையிலேயே சிருஷ்டி செய்யப்பட்டது முதல் இந்த உலகம் இயங்கி வருகிறது என்று கூறினார் .
நடந்து முடிந்த மன்வந்திரங்கள்
அப்பொழுது ஒரு சீடர் எழுந்து , " குருவே உலக சுழற்சியில் ஒவ்வொரு மன்வந்திரத்திலும் அந்தந்த மன்வந்திரத்திற்குரிய மனு பூமியையும், இந்திரன் தேவ லோகத்தையும் ஆட்சி புரிவார்கள் என்று கூறினீர்கள்.அப்படி என்றால் இது வரை நடந்து முடிந்த மன்வந்திரங்களில் யார் யார் ஆட்சி புரிந்தார்கள் என்று கூற முடியுமா என்று கேட்கிறார்.
அப்போது சூதக மாமுனிவர் சீடர்களை நோக்கி
"அன்பு சீடர்களே.இது வரை நடந்து முடிந்த மன்வந்திரங்களில் யார் யார் ஆட்சி புரிந்தார்கள் என்பதை கூறுகிறேன் கேளுங்கள்!!!" என்று கூறி விளக்கம் தருகிறார்.
முதல் மனுவந்திரம்-சுயம்பு மனுவந்திரம்
நடக்கும் இந்த கல்பத்தில் ஆதியில் தொடங்கியது சுயம்பு மனுவந்திரம். இதில் சுவாரோசிரர்,உத்தமர்,தாமசர்,ரைவதர்,சாஷுஷர், போன்ற ரிஷிகள் அறுவரும் உலகத்தை வழி நடத்தினார்.அப்பொழுது சூரிய குமாரரான சுயம்பு மனுவின் ஆட்சி நடந்தது
இரண்டாம் மனுவந்திரம் – சுவாரோஷிஷ மனுவந்திரம்.
விபச்சித் என்ற இந்திரன் தலைமையில் ஆட்சி நடந்தது. ஊர்ஜஸ்தம்பன்,பிராணன், அக்கினி, ரிஷபன்,நிஸ்வரன்,சார்வரவன் என்ற சப்த ரிஷிகள் உலகத்தை வழி நடத்தினர்.
மூன்றாவது மனுவந்திரம் – உத்தம மனுவந்திரம்
சுசாந்தி என்ற இந்திரன் தலைமையில் ஆட்சி நடந்தது.அஜன்,பரசு,திவியன் ஆகியோர் மனு குமாரர்கள் ஆவார்கள். சுதாமாக்கள்,சத்திரியர்,சிவர்,பிரதர்த்தனர், வசவர்த்திகள் என ஐந்து கணங்கள் இருந்தனர்.கணம் ஒன்றுக்கு பன்னிரண்டு பேராக 60 கணங்கள் அவர்களுக்கு உதவியாக இருந்தனர்.வசிஷ்ட மகரிஷியின் ஏழு மகன்கள் சப்த ரிஷிகளாக இருந்து உலகத்தை வழி நடத்தினார்கள்
நான்காவது மனுவந்திரம் – தாமச மனுவந்திரம்
நரன்,கியாதி,கேதுரூபன்,சானு,சங்கன் மனு குமாரர்கள் ஆவார்கள்.இவர்கள் மகாபராக்கிரமமும் சக்தீியும் கொண்டு உலகை ஆட்சி செய்தார்கள் சிபிச்சக்கரவர்த்தி 100 அஸ்வ மேத யாகங்களை செய்ததினாலேயே வஜ்ராயுதங்களைப் பெற்று இந்திரனாகி ஆட்சி புரிந்தான்.சுபாரர்,ஹரிகள், சத்தியர்,சுதீகள் என்ற நான்கு கணங்கள் இருந்தனர்.கணமொன்றுக்கு 27 பேராக 108 பேர் உதவியாக இருந்தனர்.
ஐந்தாவது மனுவந்திரம்- ரைவத மனுவந்திரம்
பிரியாவிரதர் என்ற ராஜ ரிஷி நான்காம் மனுவந்திரத்தில் தவத்தினால் ஸ்ரீ விஷ்ணு பகவானை ஆராதித்து அவரது குல வழியில் மனு உருவாக்க வரம் பெற்றார் . அதன்படி அவரது வம்சத்தில் பிறந்த சுவாரோசிஷர், உத்தமர்,தாமசர், ரைவதர் நால்வரும் மனுவாக ஆட்சி புரிந்தனர். பல பந்து, சுசம்பாவியன், சத்தியகன் ஆகியோர் மனு புத்திரர்கள்.இம்மனுவந்திரத்தில் விபு என்பவன் இந்திரன்.அமிதாபர், பூதன்யர், வைகுண்டர்,சுசமேதர் ஆகியோர் தேவ கணங்கள் .ஒருவருக்கு 14 பேர் உதவியாளர்கள் என்ற வீதத்தில் மொத்தம் 60 தேவ கணங்கள் மனுவிற்கு உதவியாக இருந்தனர்.இரணியரோமா,வேதசிரீ,ஊர்த்துவ பாகு ,அபரன்,வேதவாகு,சுபாமா, பர்ச்சனியன் என்ற சப்த ரிஷிகள் மனுவின் ஆட்சியை வழிநடத்தினார்கள்.
ஆறாவது மனுவந்திரம்- சாக்ஷி ஷா மனுவந்திரம்
ஆறாவது மன்வந்திரத்தின் மனு சாக்ஷி ஷா . ஊரு,பூரு,சதத்தியும்னன் போன்ற மனுவின் புத்திரர்கள் அவருக்கு பின் உலகை ஆட்சி செய்தார்கள்.மனோஜவன் என்பவர் தேவேந்திரனாக ஆட்சி செய்தார். ஆப்பியர்,பிரகஷுதர் ,பவியர்,பிருதுகர்,லேகர் இந்த ஐந்து கணங்களுடன் கணம் ஒன்றுக்கு உதவியாக 8 கணங்களுடன் மொத்தம் 45 கணங்கள் மனுவிற்கு உதவியாக இருந்தனர். இவர்கள் மகானுபவர்,சுமேதன்,விரஜன், அவிஷ்மான், உத்தமன்,மது,அதிநாமா, சகிஷ்ணு என்பவர்கள் சப்த ரிஷிகளாக இருந்து உலகை வழி நடத்தினர்.
ஏழாவது மனுவந்திரம்- வைவசுத மனுவந்திரம்
ஏழாவது மன்வந்திரத்தில் சூரியனின் குமாரன் சிரார்த்த தேவன் மனுவாக ஆட்சி புரிந்தார்.அவருக்கு பின் இஷ்வாகு மனுவாக ஆட்சி புரிந்தார். இஷ்வாகு , நிருகன் , தியுஷ்டன் , சர்யாதி , நரிஷ்யந்தன், நாபாகன்,அரிஷ்டன் , கருஷன் விருஷத்திரன் ஆகியோர் சிரார்த்த தேவன் மனுவின் புதல்வர் ஆவார்கள். ஆதித்தியர், அஷ்ட வஷுக்கள்,ருத்திரர் ( சிவன் அல்ல)ஆகியோர் தேவதைகளாக இருந்தனர். புரந்திரன் தேவேந்திரனாக இருந்தார். வசிஷ்டர் ,காஷ்யபர், அத்திரி,ஜமத்க்கினி, கௌதமர், விஷ்வாமித்திரர்,பரத்துவாசர் ஆகியோர் சப்த ரிஷிகளாக இருந்து உலக நிகழ்வுகளை வழிநடத்தினர்.அவர்களால் தொகுக்க வேதங்களும்,
“ இப்போது பிரம்மாவின் பகல் காலத்தில் 30 கல்பங்கள் முடிந்து இரவு காலத்தின் இரண்டாவது கல்பமான.ஸ்வேத வராக கல்பத்தில் வைவசுத மனுவந்திரம் நடந்து கொண்டு இருக்கிறது.இந்த வைவசுத மனுவந்திரத்தில் 27 சதுர்யுகங்கள் முடிந்து 28 வது சதுர்யுகம் நடந்து கொண்டு இருக்கிறது “ என்று நடந்து முடிந்த மனுவந்திரங்கள் பற்றி சீடர்களுக்கு விளக்கங்கள் கூறுகிறார் சூதக மாமுனிவர்.
அப்போது ஒரு சீடர் குறுக்கிட்டு , நடந்து முடிந்த மனுவந்திரங்கள் போல இனி வரும் மனுவந்திரங்களில் மனுக்கள் , தேவேந்திரர்கள் அரசாள்வார்களா ?? என கேட்டார்.
அதற்கு சூதக முனிவர் என்ன பதில் கூறியிருப்பார்.
Image may contain: text


பதிவு - 19
நடக்க இருக்கும் மன்வந்திரங்கள்
"பிரம்மாவின் பகல் காலத்தில் 30 கல்பங்கள் முடிந்து இரவு காலத்தின் இரண்டாவது கல்பமான ஸ்வேத வராக கல்பத்தில் வைவசுத மனுவந்திரம் நடந்து கொண்டு இருக்கிறது.இந்த வைவசுத மனுவந்திரத்தில் 27 சதுர்யுகங்கள் முடிந்து 28 வது சதுர்யுகம் நடந்து கொண்டு இருக்கிறது “ என்று நடந்து முடிந்த மன்வந்திரங்கள் பற்றி சீடர்களுக்கு விளக்கங்கள் கூறுகிறார்.
அப்போது ஒரு சீடர் குறுக்கிட்டு ,"நடந்து முடிந்த மனுவந்திரங்கள் போல இனி வரும் மனுவந்திரங்களில் மனுக்கள் , தேவேந்திரர்கள் அரசாள்வார்களா ? ”என கேட்டார்.
அதற்கு சூதகமாமுனிவர் , " ஆம் , அதிலென்ன சந்தேகம் ? .லிங்க புராணம் நடந்தது , நடப்பது , இனி நடக்கபோவது என அனைத்து நிகழ்வுகளையும் பற்றி கூறுவது .அப்படி இருக்க நடந்து முடிந்த மன்வந்திர தகவல்களோடு கால குறிப்புகள் முடிந்து விடவில்லை. அடுத்து வரும் மன்வந்திரங்கள் பற்றிய குறிப்புகளும் லிங்கபுராணத்தில் உள்ளன .இனி நிகழ இருக்கும் எட்டு முதல் பதினான்கு வரையான மன்வந்திரங்கள் பற்றி கூறுகிறேன் கேளுங்கள் ." என்று கூறி தொடர்ந்து விளக்குகிறார்.
எட்டாவது மனுவந்திரம் சாவர்ணி மனுவந்திரம்
அடுத்து நடக்க போகும் எட்டாவது மனுவந்திரத்தில் ஆதியில் தொடங்குவது சாவர்ணி மனுவந்திரம். இந்த மனுவந்திரத்தில் விஷ்ணு பகவானால் பாதாள லோகத்திற்கு அனுப்பப்பட்ட மகாபலி இந்திரனாவார்.அவர் தலைமையில் தேவலோகத்தில் ஆட்சி நடக்கும். வீரஜயன், சாவரீவன்,நிர்மோகன் ஆகியோர் மனு குமாரர்கள் ஆவார்கள். சுதபர் , அமிதாபர் என இரண்டு தேவ கணங்கள் இருப்பர். கணம் ஒன்றுக்கு 22 பேராக 46 கணங்கள் அவர்களுக்கு உதவியாக இருந்தனர். அவர்களுடன் தீப்திமான், காலவர்,பரசு இராமர்,கிருபர்,அஸ்வத்தாமா,வியாசர், ரிஷ்யசிருங்கர் ஆகியோர் சப்த ரிஷிகளாக இருந்து உலகத்தை வழி நடத்துவார்கள்
ஒன்பதாம் மனுவந்திரம் – தாக்ஷசாவர்ணி மனுவந்திரம்.
அடுத்து நடக்க போகும் ஒன்பதாவது மனுவந்திரத்தில் தாக்ஷசாவர்ணி மனு ஆவார்.இவர் தலைமையில் ஆட்சி நடக்கும். வீரஜன்,சாவரீவன்,நிர்மோகன் ஆகியோர் மனு குமாரர்கள் ஆவார்கள். அற்புதன் என்ற இந்திரன் தலைமையில் ஆட்சி நடக்கும். சுதாமாக்கள்,வாரர், மரீசி,கருப்பர் என்கின்ற தேவ கணங்களுடன் கணமொன்றுக்கு 12 பேராக 52 கணங்கள் தேவ லோகத்தில் ஆட்சிக்கு உதவுவார்கள். சவனன்,தியுதீமான், அவியன்,வசு,மேதாதிதி,ஜோதிஸ்மான், சத்தியன் என்ற சப்த ரிஷிகள் உலகத்தை வழி நடத்துவார்கள்
பத்தாவது மனுவந்திரம் – பிரமசாவர்ணி மனுவந்திரம்
அடுத்து நடக்க போகும் பத்தாவது மனுவந்திரத்தில் பிரமசாவர்ணி மனு ஆவார்.இவர் தலைமையில் ஆட்சி நடக்கும்.சக்ஷேத்திரன் ,உத்தமஜன், பூரிசேனன் முதலான பதினோரு பேர் மனு குமாரர்கள் ஆவார்கள். மகாபலவானான சாந்தி என்ற இந்திரன் தலைமையில் ஆட்சி நடக்கும். சுதாமாக்கள்,வாரர்,மரீசி,கருப்பர் என்கின்ற தேவ கணங்களுடன் கணமொன்றுக்கு 12 பேராக 52 கணங்கள் தேவ லோகத்தில் ஆட்சிக்கு உதவுவார்கள். ஹவிஷ்மான், சுகிருதன், சத்தியன், தபோ மூர்த்தி, நாபாகன், அப்பிரதிமௌஜன், சத்திய கேது போன்ற சப்த ரிஷிகள் உலகத்தை வழி நடத்துவார்கள்
பதினொன்றாவது மனுவந்திரம் – தர்மசாவர்ணி மனுவந்திரம்
அடுத்து நடக்க போகும் பதினொன்றாவது மனுவந்திரத்தில் தர்மசாவர்ணி மனு ஆவார்.இவர் தலைமையில் ஆட்சி நடக்கும்.சர்வ த்திரகன் , ஸ்வதர்மா, தேவானீகன் ஆகியோர் மனு குமாரர்கள் ஆவார்கள். விருஷா என்ற இந்திரன் தலைமையில் ஆட்சி நடக்கும். சுதாமாக்கள், விமங்கமர்,காமகமர் ,நிர்வாணரெர்,ருசிகளன் என்கின்ற தேவ கணங்களுடன் கணமொன்றுக்கு 30 பேராக 124 கணங்கள் தேவ லோகத்தில் ஆட்சிக்கு உதவுவார்கள். நிச்சரன்,அக்னிதேஜன்,வபுஷ்மான்,கிருணி, ஆருணி,அவிஷ்மான்,அனகன் போன்ற சப்த ரிஷிகள் உலகத்தை வழி நடத்துவார்கள்
பன்னிரண்டாவது மனுவந்திரம் – ருத்திர சாவர்ணி மனுவந்திரம்
அடுத்து நடக்க போகும் பன்னிரண்டாவது மனுவந்திரத்தில் உருந்திரர் புத்திரறாகிய ருத்திர சாவர்ணி மனு ஆவார்.இவர் தலைமையில் ஆட்சி நடக்கும். தேவவான், உபதேவன்,தேவசிரேஷ்டன் ஆகியோர் மனு குமாரர்கள் ஆவார்கள். ருதுதாமா என்ற இந்திரன் தலைமையில் ஆட்சி நடக்கும். அரிதர்,ரோகிதர், சுமசனர், சுகர்மர்,சுராபர் என்கின்ற தேவ கணங்களுடன் கணமொன்றுக்கு 10 பேராக 55 கணங்கள் தேவ லோகத்தில் ஆட்சிக்கு உதவுவார்கள். தபசுவீ,சுதபன்,தபோமூர்த்தி, தபோரதி, தபோதிருதி,தபோதியுதி, தபோதனன் போன்ற சப்த ரிஷிகள் உலகத்தை வழி நடத்துவார்கள்
பதிமூன்றாவது மனுவந்திரம் – தேவசாவர்ணி மனுவந்திரம்
அடுத்து நடக்க போகும் பதிமூன்றாவது தேவசாவர்ணி மனுவந்திரத்தில் இரவுச்சியன் மனு ஆவார்.இவர் தலைமையில் ஆட்சி நடக்கும். சித்திர சேனன், விசாித்திரன் ஆகியோர் மனு குமாரர்கள் ஆவார்கள். மகா வீரியனான திவஸ்பதி என்ற இந்திரன் தலைமையில் ஆட்சி நடக்கும். சூத்திராமர், சுகர்மர் என்கின்ற தேவ கணங்களுடன் கணமொன்றுக்கு 33 பேராக 68 கணங்கள் தேவ லோகத்தில் ஆட்சிக்கு உதவுவார்கள். நிர்மோகன்,தத்துவதர்சி,நிஷ்பிரகம்பியன், நிருச்சுகன், திருதிமான்,அவியயன், சுதபன் போன்ற சப்த ரிஷிகள் உலகத்தை வழி நடத்துவார்கள்.
பதினான்காவது மனுவந்திரம் – இந்திரசாவர்ணி மனுவந்திரம்
அடுத்து நடக்க போகும் பதினான்காவது இந்திரசாவர்ணி மனுவந்திரத்தில் பௌனன் மனு ஆவார்.இவர் தலைமையில் ஆட்சி நடக்கும். உரு,கம்பீர புத்தி ஆகியோர் மனு குமாரர்கள் ஆவார்கள். மகா வீரியனான சுசி என்ற இந்திரன் தலைமையில் ஆட்சி நடக்கும்.சாக்ஷூஷர்,பவித்திரர்,கனிஷ்டர்,பிராசிதர்,வாசாவிருத்தர்,என்ற தேவ கணங்களுடன் கணமொன்றுக்கு 20 பேராக 105 கணங்கள் தேவ லோகத்தில் ஆட்சிக்கு உதவுவார்கள். அக்கினி,பாகு,சுகி, சுக்கிரன், மாகதன்,ஆக்கனீத்திரன், யுத்தன்,தாதஜிதன் போன்ற சப்த ரிஷிகள் உலகத்தை வழி நடத்துவார்கள்
“ இப்போது பிரம்மாவின் பகல் காலத்தில் 30 கல்பங்கள் முடிந்து இரவு காலத்தின் இரண்டாவது கல்பமான.ஸ்வேத வராக கல்பத்தில் வைவசுத மனுவந்திரம் நடந்து கொண்டு இருக்கிறது.இந்த வைவசுத மனுவந்திரத்தில் 27 சதுர்யுகங்கள் முடிந்து 28 வது சதுர்யுகம் நடந்து கொண்டு இருக்கிறது . ஒவ்வொரு மகாயுகமும் ஒவ்வொரு மன்வந்திரத்திலும் சுழன்று வருவதால் அதே நிகழ்வுகள் ஒரு யுகத்தில் ஒரு தலத்திலும் அடுத்த யுகத்தில் வேறொரு தலத்திலும் நிகழ்ந்திருக்கும். " என்று நடக்க இருக்கும் மன்வந்திரங்கள் பற்றி விளக்கமாக கூறினார்.
உலக சுழற்சி
ஒவ்வொரு சதுர்யுகங்களின் முடிவில் உலகிலுள்ள அனைத்து ஆத்மாக்களின் பயணம் பிரளயத்தின் போது முடிவுக்கு வரும்.பிரம்மா பிரள காலம் முடிந்து கிருதாயுகத்தில் சிருஷ்டி ஆரம்பிப்பார். அப்போது சத்திய லோகத்திலிருந்து சப்த ரிஷிகள் பூமிக்கு வந்து அதற்காக தேர்ந்தெடுக்க பட்ட தன் சீடர்களுக்கு வேதங்கள்,வேத ஆகமங்களை கற்றுத்தருவார்கள்.
இவ்வாறு சதுர்யுகங்கள் மாறி மாறி தோன்றும் மறைந்து பதினான்கு மனுவந்திரம் முடியும் போது ஒரு கல்ப காலம் முடியும் . அப்போது பிரளயம் ஏற்பட்டு பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் அழியும். பின் சாந்தி காலம் முழுதும் பூமி நீரால் சூழப்பட்டு இருக்கும்.அப்போது பிரளய வெள்ளத்தில் பிரம்மா தாமரையிலும் , நாராயணர் பாற்கடலிலும் துயில் கொள்வர். ஈசன் தவம் மேற்கொண்டு உலக நிகழ்வுகளை கவனிப்பார் .உடலற்ற ஆத்மாக்கள் பித்ரு லோகத்தில் அனாதியாய் அலையும் .
ப்ரபஞ்சம் அழியக்கூடியது. ஒரு முறை உருவாகும், மறு முறை அழியும். ஆக இது ஒரு சுழற்சியே.ப்ரம்மாவிற்கும் அழிவுண்டு. ப்ரம்மாவின் வாழ்நாள் "மஹாகல்பம்" ஆகும் . .ப்ரம்மாவின் இறப்பிற்கு பிறகு வரும் ப்ரளயம் "மஹாப்ரளயம்". அப்போது உலகம் முழுதும் சுமார் 1000 வருடங்களுக்கு நீரால் மூழ்கபட்டு இருக்கும்.மகா கல்ப முடிவில் மஹா பிரளயம் ஏற்படும் . அல்லது பூமி சூரியனோடு இணைந்து விடும் . அப்போது சகல லோகங்களும் அழிந்து பஞ்ச பூதங்களும் ஒன்றுடன் ஒன்று ஐக்கியமாகி பரமசிவனுள் அடங்கும்.அதன் பின் ஆயிரம் யுகங்களுக்கு தனித்திருப்பார் . அதன் பின் புதிய கல்பம் துவங்கும் .மறுபடி சிருஷ்டி ஆரம்பமாகும். பின் சந்தி காலம் முடிந்ததும் மீண்டும் பெருவெடிப்பு உருவாகி புதியதோர் உலகமும் ,புதிய பிரம்மாவும் படைக்க படுவர் . இது போல் இன்னும் 42 மன் வந்திரங்களும்,28 கல்பங்களும் மீதமிருக்கின்றன " என்று விளக்கம் கூறினார். 
அப்போது ஒரு சீடர் எழுந்து நின்று,
" எல்லா மன்வந்திரங்களிலும் மனித பிறப்புகள் எவ்வாறு தோன்றுகிறது.பிரம்மா அவற்றை எவ்வாறு சிருஷ்டி செய்கிறார் " என கேட்கிறார்.
அதற்கு சூதக மாமுனிவர் என்ன பதில் கூறியிருப்பார்.அடுத்த பதிவில் பார்க்கலாம்.
Image may contain: food and text

பதிவு- 20
பிரம்மா உலகைப் படைத்தல்
கடந்த பதிவில் இனி வரும் மன்வந்திரங்கள் பற்றியும், அதில் சிருஷ்டி ஆரம்பிக்கும் போது எந்த மனுவின் பெயரில் சிருஷ்டி உருவாகும் என்றும் யார் யார் மன்வந்திரங்களில் தேவேந்திரன்,தேவ கணங்கள்,சப்த ரிஷிக்கள் போன்ற பதவிகளை வகிப்பார்கள் என்று சூதக முனிவர் விளக்குகிறார்.அப்போது ஒரு சீடர் எழுந்து உலகில் எவ்வாறு சிருஷ்டி ஆரம்பித்தது என கேட்கிறார்கள். அதற்கு சூதக முனிவர் கூறிய பதிலை இன்று பார்க்கலாம்
சிவனின் சிருஷ்டி தத்துவம்
உலகில் அனைத்தும் சிவனிலிருந்து உருவாக்க பட்டவையே.எனவேதான் சர்வம் சிவமயம் என்று கூறுகிறார்கள்.சிருஷ்டி அனைத்துக்கும் ஆதாரமாய், சாதாரண மனிதர்களின் அறிவுக்கு எட்டாது விளங்கும் அந்தப் பரம்பொருளுக்குத் தோற்றமோ, கால அளவோ கிடையாது.உலகில் அனைத்தும் அதனிடமிருந்து உண்டாகி, அதனையே அடைகின்றன.
சுயம்பு மனு மன்வந்திரம் ஆரம்பம்
மகா பிரளய காலம் முடிந்து இறைவன் சிவ பெருமான் தனித்திருக்கிறார். வாம தேவ கல்பத்தில் முதல் மன்வந்திரமான சுயம்பு மன்வந்திரத்தில் சத்திய யுகத்தின் ஆரம்ப காலம்.திருமால் ,பிரம்மா துயில் கொள்கையில் பதிநான்கு லோகங்களும் பிரளய வெள்ளத்தில் அழிந்து விட்டன.அச்சமயம் சிவ பெருமான் ஆணைப்படி பிரமன் சிருஷ்டியைத் தொடங்குகிறார்.
உயிர்கள் சிருஷ்டி ஆரம்பம்
சிருஷ்டி உருவாக்க ஆரம்பித்த சமயத்தில் தாமச சிருஷ்டிகள் எனப்பட்ட ஐந்து வகை சிருஷ்டிகள் பிரம்மாவிடமிருந்து தோன்றின. அவை தமசு, மோகம், மகாமோகம், தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம் ஆகும். அடுத்து நுண்ணுயிரிகள்,புழு,மீன்கள், பாம்பு, தவளை கள்,பூச்சி,பறவைகள்,பசு முதலான விலங்குகள், தேவர்கள்,மனிதர்கள், பூதம் , பேய் முதலான சிருஷ்டிகள் தோன்றின . பின்னர் பிரம்மனிடமிருந்து சனகர், சனந்தனர், சனத்சுஜாதர், சனத்குமாரர்,ருத்திரர் தோன்றினர்.
அவர்கள் சிருஷ்டித் தொழிலில் ஈடுபடாமல் மகேசுவரனிடம் மனத்தைச் செலுத்தி அவனிடத்தில் தியானத்தில் ஈடுபட்டனர்.
அவர்களால் சிருஷ்டியை தொடர இயலாது என்று உணர்ந்த பிரம்மன் வேறு வழியின்றி புலஸ்தியர், கிருது, பிருகு, அத்திரி, மரீசி, புலகர், தக்கன், வசிஷ்டர், ஆங்கிரசு, தருமர் ஆகிய 10 பேரைத் தோற்றுவித்தார் . அவர்கள் மூலம் உலகிலே சிருஷ்டியைப் பரப்ப சுயம்பு மனு என்ற ஆணையும், சதரூபை என்னும் பெண்ணையும் பிரமன் படைத்தார். இவ்வாறு சிருஷ்டி பெருகலாயிற்று.
மனித வம்சாவளி உருவான விதம்
சுயம்பு மனு சத்ரூபையை மணந்து பிரியவிரதன்,உத்தான பாதன் என்ற இரு மகன்களையும்,ஆகூதி ,பிரசூதி என்ற இரு மகள்களையும் பெற்றனர்
பிரம்மன் சிருஷ்டி உருவாக்க படைத்த 10 பேர்களில் மரீசி ஆகூதியையும், தக்கனுக்கு பிரசூதியையும்,மணம் செய்து கொடுத்தார்.
ருசி- ஆகூதி தம்பதியினருக்கு யக்கியன் என்ற மகனும்,தட்சனை என்ற மகளும் பிறந்தனர்.விலங்குகளை போல யக்கியன் தட்சணையை மணந்து 12 மக்களை பெற்றனர்
தக்கன்- பிரசூதி தம்பதியினருக்கு 24 பெண்கள் பிறந்தனர். அவற்றில் முதலில் பிறந்த 13-பேரை பிரம்மன் சிருஷ்டி செய்ய படைத்த 10 பேர்களுள் ஒருவரான தருமருக்கு மணம் செய்து கொடுத்தார்.தக்கன் தனது 14வது மகளான சதியை வையகம் அனைத்துக்கும் ஆதிகாரணனான ஈசன் மணந்தார். ஈசன் அனேக ருத்திரர்களைத் தோற்றுவித்தார்.
பிருகு முனிவர் 15ம் மகளான கியாதீயை மணந்து தாதா,விதாதா என்ற மகன்களும் ,கமலை எனற மகளும் பிறந்தனர்
மரீசி முனிவர் 16ம் மகளான சம்பூதியை மணந்து சிரேட்டை,பூரணை, திருஷ்டி,கிரீசி என்ற மகள்கள் பிறந்தனர்
இப்படி பிரம்மனால் படைக்கப்பட்ட பத்து பேருக்கும், ருசி- ஆகூதி,தக்கன்- பிரசூதி தம்பதியினருக்கு பிறந்த பெண்களை சிருஷ்டி செய்ய ஒன்று சேர்த்தார்கள்.
சிருஷ்டியில் நிகழ்ந்த பிழை
" இதனால் அவர்களுக்கு பிறந்த மக்கள் உலகம் முழுவதும் அவர்கள் நிறைந்தனர். சம்சார பந்தத்தை உருவாக்காது, சிறப்பின்றி ருத்திரர்களை மக்கள் உருவானதை படைத்ததைக் கண்டு பிரமன் அவரிடம் அவ்வகை சிருஷ்டி உலகுக்கு ஏற்றதல்ல " என்று பிரம்மா ஈசனிடம் கூறினார்.
பகுத்தறிவு உள்ள மனிதன் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் சம்சாரம் என்ற பந்தமின்றி வெறும் ஆண் , பெண் என்பதற்காக சிருஷ்டிக்கு பயன் படுத்துவது சரியல்ல.பின்னாளில் இதுவே இவர்கள் அழிவுக்கு காரணமாகும் என்று கூறினார் .அப்போது ஈசன் , "நான் குறிப்பிடும் சிருஷ்டிகள் நமக்கு ஏற்றதல்ல என்றால் தகுந்த வழிமுறைகளை கண்டறிந்து தடையற்ற முறையான சிருஷ்டிக்கு நீயே வழி கூறுவாயாக " என்றார்.
பிரம்மா என்ன வழி ஏற்படுத்தி சிருஷ்டியை தொடர்ந்து செய்திருப்பார் நாளை பார்க்கலாம்.
குறிப்பு :
சிருஷ்டி செய்யும் ஆரம்ப காலத்திலேயே மனித சிருஷ்டிக்காக சொந்த சகோதர சகோதரிகளை மணப்பது முறையற்றது.அது மனித வம்ச அழிவுக்கு ஆரம்பமாக அமையும் .பகுத்தறிவு கொண்ட மனித சிருஷ்டிக்கு உகந்ததல்ல என்கிறார் பிரம்மா.
நடக்கும் கலியுகத்தில் மனிதர்கள் அழிவு இப்படிப்பட்ட முறையற்ற மனிதர்களின் உறவுகளால்தான் ஆரம்பமாகிறது என்பதை லிங்க புராணம் எவ்வளவு அழகாக எடுத்துக் கூறுகிறது பார்த்தீர்களா!?!?
காரண காரியங்களின்றி எந்த ஒரு நிகழ்வுகளும் நிகழ்வதில்லை.புரிந்து கொண்டு வாழத்தான் பகுத்தறிவு. இங்கே அது தொலைந்து போய் நம்மிடம் மறைந்து வெகுநாட்களாகிறது. உணர்வுகள் படைத்த உறவுகள் வெறும் சுயநலத்திற்காக சமூகத்தை சீரழிக்கின்றன. இது உலக அழிவிற்கான ஆரம்பம். 
Image may contain: 1 person

பதிவு- 21
சிருஷ்டியில் நிகழ்ந்த பிழை , சரி செய்த பிரம்மா
கடந்த பதிவில் பிரம்மா எவ்வாறு சிருஷ்டி செய்ய ஆரம்பித்தார் என்று பார்த்தோம் .
பிரம்மனால் படைக்கப்பட்ட பத்து பேருக்கும், ருசி- ஆகூதி,தக்கன்- பிரசூதி தம்பதியினருக்கு பிறந்த பெண்களை சிருஷ்டி செய்ய ஒன்று சேர்க்க அவர்களுக்கு பிறந்த மக்கள் உலகம் முழுவதும் நிறைந்தனர். ஆரம்பத்தில் சகோதர சகோதரி உறவுகள் இல்லை. ஆண் , பெண்களின் என்ற பாலின வேறுபாடு மட்டுமே இருந்தது.
" விதை நடுவதால் செடி வேண்டுமானால் உருவாகலாம். ஆனால் முறையான வழியில் ஆண் பெண் சேராமல் சம்சார பந்தத்தை உருவாக்காது , சிறப்பின்றி மனிதர்களை ஈசன் தானாக உருவாக்கியதை படைத்ததைக் கண்டு பிரம்மா அவரிடம் அவ்வகை சிருஷ்டி உலகுக்கு ஏற்றதல்ல.இதனால் உயிர்கள் கணக்கின்றி உருவாகும்.நம்மால் கட்டுப்படுத்த இயலாது " என்று ஈசனிடம் அந்த வகை சிருஷ்டியை நிறுத்தக் கோரி வேண்டினார்.
" பகுத்தறிவு உள்ள மனிதன் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் சம்சாரம் என்ற பந்தமின்றி வெறும் ஆண்,பெண் என்பதற்காக சகோதர உறவுடைய ஆண் மற்றும் பெண்ணை சிருஷ்டிக்கு பயன் படுத்துவது சரியல்ல.பின்னாளில் இதுவே மனித குல அழிவுக்கு காரணமாகும், " என்று பிரம்மா கூறினார்.
அப்போது ஈசன் , "நான் குறிப்பிடும் சிருஷ்டிகள் நமக்கு ஏற்றதல்ல என்றால் தகுந்த வழிமுறைகளை கண்டறிந்து தடையற்ற முறையான சிருஷ்டிக்கு நீயே வழி கூறுவாயாக " என்று பிரம்மாவிற்கு ஆணை பிறப்பித்தார்.
சிவனது வேண்டுகோளை ஏற்று ப்ரம்மா தன் சக்தியால் சிருஷ்டிக்கு உரிய சிறந்த வழி முறைகளையும் சட்ட திட்டங்களையும் வகுத்தார். இதனால் தான் படைத்த சிருஷ்டிக்கள் அனைத்தையும் சிவன் உலகை விட்டு மறைய செய்தார். அப்போது "படைக்கப்பட்ட உயிர்கள் சிருஷ்டி செய்யப்பட்ட பின் அவற்றின் நிலை என்ன," என ப்ரம்மா கேட்கிறார் .
சிருஷ்டியின் நோக்கம்
" என்னால் படைக்கப்பட்ட உயிர்கள் தான் பிறப்பிற்க்கான பாவ புண்ணிய பலன்களை அனுபவித்து மோட்சத்திற்க்காக என்னை தேடி அலைந்து என்னால் அடையாளம் காணப்பட்டு மீண்டும் என்னை வந்தடைவதே சிருஷ்டி செய்யப்பட்ட உயிர் பிறப்பின் தத்துவமாகும், " என்று சிவன் கூறுகிறார்.
" பிறக்கும் உயிர்களுக்கு என்னென்ன மாற்றங்கள் நிகழும் , அவை எப்படி உங்களை வந்தடையும்!" என்று ப்ரம்மா சிவனை கேட்கிறார்.
அதற்க்கு சிவன் " எந்தன் பேரில் என்னிலிருந்து உன்னால் படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும் தான் பிறந்த கடமையை செம்மையாக முடித்து , என் ஆலயங்களில் என்னை வழிபட்டு என்னிடம் மோட்சத்திற்க்கான பாதை தேட வேண்டும் . என் திருவருள் கிடைக்கப் பெற்றவர்களுக்கு மட்டுமே மோட்சத்திற்க்கான ஞானம் கிடைக்கும் .அந்த ஞானத்தை தக்கமுறையில் பிரயாகம் செய்து யோகத்தை கடை பிடித்தால் பிறவா பேரின்பமாகிய முக்தியை பெறலாம் " என்று பிரம்மாவிற்கு விளக்கம் அளித்தார்.
" சிருஷ்டியில் பிறந்த உயிர்கள் மீண்டும் ஈசனிடம் ஒடுங்க வேண்டுமெனில் தான் கற்ற ஞானத்தின் மூலம் யோக நிலையை கற்க வேண்டும் .எட்டு விதமான யோக நிலையை கற்றவனுக்கு மட்டுமே மோட்சத்தை அடைவதற்கான பாதை கண்டறிய முடியும் .அதற்க்கான ஞானம் பெற வேண்டுமெனில் உயிர்கள் உலக பொருட்கள் யாவற்றிலும் பற்றின்றி இருக்க வேண்டும் , "என்று சூதக மாமுனிவர் தன் சீடர்களுக்கு மோட்சத்தை பற்றி விளக்கி கூறுகிறார் .
அப்போது ஒரு சீடர் எழுந்து, " முனிவர் பெருந்தகையே!!!! ,அறிவிற் சிறந்த மகா முனிவரே!!!! பற்றற்று இருத்தல் என்றால் என்ன? " என்று கேட்கிறார். .
" அருமையாக கேட்டீர்கள் !!!! . கூறுகிறேன் கேளுங்கள், " என்று கூறி பற்றற்ற நிலை பற்றி விளக்கி கூறுகிறார் சூதக முனிவர் .
பற்றற்று இருக்கும் தன்மை எப்படி உண்டாகும்
பற்று இன்றி இதழுக்கு இயமம் என்று பெயர் . பிரம்மச்சரியத்தை கடை பிடிப்பதிலும் , உண்மையே பேசுவதாலும், உயிர் கொல்லாமை ,ஒழுக்க விதிகளில் இருந்து வழுவாமை , இரவாதிருத்தல் , களவு புரியாது இருத்தல் இந்த நிலைகளை கடை பிடித்தால் பற்றற்று இருக்கும் தன்மை உருவாகும் .
பிரம்மச்சரியம்
முற்றும் துறந்த முனிவர்கள் வனத்தில் ஆசிரமம் அமைத்து வானப்ரஸ்த ஆசிரமம் அனுஷ்டித்து வருபவர்கள் பிரம்மச்சரிய விரதம் கடை பிடிப்போரே.
மனைவியை இழந்தோர் , மனைவியை பிரிந்து வாழ்வோர் மனம் , சொல்,செயல் மூன்றாலும் பெண்களை தீண்டாதிருந்தாலும் ப்ரம்மச்சாரிகளே .
இல்லறத்தில் வாழும் குடும்பத்தலைவன் மனைவியை தவிர பிற பெண்களிடத்தில் இச்சை கொள்ளாது , ருது காலம் , பருவ காலம், நோயுற்ற காலம், மற்றும் விலக்க வேண்டிய காலங்களில் விலக்கி,மனைவிக்கு விருப்பமான நாட்களில் சேர்ந்து இல்லறத்தில் ஈடுபடுவதும் பிரம்மச்சரியம் ஆகும் .
உண்மையாயிருத்தல்
மனதிலே தோன்றிய எண்ணங்கள்
உணர்வால் அறிந்த கருத்துக்கள்
கண்ணால் பார்த்ததையும் , காதல் கேட்டதையும் ஒலிக்காது கூறுதல் பொய்யாமை ஆகும்
உயிர்க்கொள்ளாமை
சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட யாகம் முதலான கர்மாக்களுக்கு தவிர உணவுக்காகவோ ,மற்ற விஷயங்களுக்காகவோ எந்த பிராணிகளையும் வதைக்காதிருத்தல் உயிர்க்கொள்ளாமை ஆகும் .
எந்த பொருளையும் ஆசை கொண்டு விரும்பி கேளாதிருத்தல் இரவாதிருத்தல் எனப்படும் .
மனதாலும் பிறர் பொருள் மீது ஆசை கொண்டு அதை அடைய எண்ணாதிருத்தல் களவு புரியாமை ஆகும்
இவ்வித இயமங்களை கடை பிடித்து வருபவனே பற்றற்ற நிலையை அடையலாம்.
உலகில் மனதை பற்றற்ற நிலைக்கு கொண்டு வரும் முறைக்கு நியமம் என்று பெயர் .
இயமங்களை கடை பிடித்து அதற்க்கு தகுதியானதும் சவுசம், தவம், பேரானந்த நிலை, ஜபம்,சிவபிரநிதானம்ஆகிய நியமங்களை அடையலாம்
அந்த நியமங்களை எப்படி அடைவது அதற்க்கான வழி முறைகள் என்ன என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
No automatic alt text available.


பதிவு - 22
ஈசன் சொன்ன சிருஷ்டி ரகசியம்
முந்தைய பதிவுகளில் பிரம்மன் சிவபெருமானிடம், " சிருஷ்டி செய்யப்பட்ட உயிர்களின் நிலை என்ன ? " என்று கேட்டார் . அதற்கு பதிலளித்த சிவபெருமான், " இயமம் , நியமம், ஆசனம், பிராணாயாமம் , பிரத்தியாகாரம், தாரணை ,தியானம், சமாதி ஆகிய எட்டு யோக நிலைகளை கடை பிடித்து பிறந்த உயிர்கள் அனைத்தும் மோட்ச நிலையை அடைய வேண்டும் . . இதுதான் சிருஷ்டி செய்யப்படும் உயிர்கள் பிறப்பெடுப்பதின் ரகசியம் " என்று சிருஷ்டி ரகசியம் பற்றி கூறுகிறார்.
கடந்த பதிவில் இயமங்களை பின்பற்றி பற்றற்ற நிலையை அடையும் வழிகளை சிவபெருமான் கூறுகிறார். சிவபெருமான் கூறிய இயமங்களை கடை பிடித்து வருபவனே பற்றற்ற நிலையை அடையலாம். ஒருவன் தன் மனதை பற்றற்ற நிலைக்கு கொண்டு வரும் முறைக்கு நியமம் என்று பெயர். இயமங்களை கடை பிடித்து அதற்க்கு தகுதியானதும் சவுசம், தவம், பேரானந்த நிலை, ஜபம், சிவபிரநிதானம் ஆகிய நியமங்களை அடையலாம் . அந்த நியமங்களை எப்படி அடைவது அதற்க்கான வழி முறைகளையும், ஆசனம் மற்றும் பிராணயாம முறைகளை இன்றைய பதிவில் பார்க்கலாம்.
நியமங்கள்
சவுசம், தவம், பேரானந்த நிலை, ஜபம்,சிவபிரநிதானம் ஆகிய ஐந்தும் நியமங்கள்.
சவுசம்
சவுசம் இரண்டு வகைப்படும்.
அகசவுசம் , புறசவுசம்.
ஆசையின்மை என்ற மனஅழுக்கை பஞ்சாட்சர சிவமந்திரங்கள் உச்சாடனம் செய்து ஞானமாகிய நீரில் மன அழுக்கை சுத்தம் செய்யும் முறை அகசவுசம் எனப்படும் .
வெளிபுரத்தில் உடலில் காணப்படும் அசுத்தங்களில் இருந்து காவிரி கங்கை புண்ணிய தீர்த்தங்களில் நீராடி உடல் முழுதும் திருநீறு அணிந்து சுத்தம் செய்யும் முறை புறசவுசம் எனப்படும்
தவம்
தவம் என்பது சந்திரயான விரதம் ஆகும்.சந்திரயான விரதம் என்பது அம்மாவாசை அன்று உபவாசம் இருக்க வேண்டும்.பின்னர் பிரதமை அன்று ஒரு கவளம் ,துவிதியை அன்று இரண்டு கவளம் என ஒவ்வொரு நாளும் ஒரு கவளம் உண்ணும் உணவை அதிகரித்து பௌர்ணமி அன்று 14 கவளம் உணவு உன்ன வேண்டும். பின்னர் பௌர்ணமி முதல் அம்மாவாசை வரை உண்ணும் உணவை நாளொன்றுக்கு ஒவ்வொரு கவளமாக குறைத்து இறுதியில் அம்மாவாசை அன்று உபவாசம் இருக்க வேண்டும். இது மனம் ,உடல்,சக்தி இவை மூன்றையும் கட்டுப்படுத்தி தவ நிலைக்கு உயர்த்தும்.உணவு உண்ணும் அளவை கட்டுப்படுத்தி தவ நிலைக்கு யாரும் தங்களை உயர்த்தி கொள்ளலாம். அதற்கு மனக்கட்டுப்பாடு பிரதானம் ஆகும்.
மகிழ்ச்சி
ஆகம நிலைகளுக்கு ஏற்ப மறை நூல்கள் வகுத்து கூறும் விதி முறைகளை மீறாமல் கடை பிடித்து வரும்போது மனதிற்கு ஏற்படும் அமைதியான உணர்வு நிலை மகிழ்ச்சி எனப்படும்
ஜபம்
ஈசனுக்கு உரிய மந்திரங்களை உச்சரித்து சிவனை எண்ணி பிராணயாமம் செய்யும் முறை ஜபம் எனப்படும்
சிவபிரணிதானம்
எந்த வித மந்திரங்களும் உச்சரிக்காமல் ஈசனை மனதில் நிலை நிறுத்தி தியானிக்கும் முறை சிவபிராணிதானம் எனப்படும்
ஆசனம்
இயமங்களால் பற்றற்ற நிலையை பெற்று நியமனங்களால் யோக நிலையை அடைய நம்மை தயார்படுத்தி கொள்ள முடியும்.யோக நிலையை அடைய முதன் முதலாக நாம் கற்று கொள்ள வேண்டியது ஆசனம் ஆகும்.யோகா நிலையில் ஆசனமும் ஒரு அங்கமாகும் .
உடலை ஒரு நிலையில் நிலை நிறுத்தி நம் எண்ணங்களையும் , உணர்வுகளையும் , உடல் இயக்கங்களையும் கட்டு படுத்த வேண்டும். அதற்க்கு நாம் கடைபிடிக்கும் வலி முறையே ஆசனம் ஆகும்.பத்மாசனம் , கவதிகாசனம் போன்ற ஆசனங்களில் ஏதேனும் ஒன்றை கடை பிடித்து நாம் உடலை நிலை நிறுத்தலாம் .
பிராணாயாமம்
நாம் உடலை ஏதேனும் ஒரு ஆசன நிலையில் அமர்ந்து நிலைநிறுத்திய பின் நாம் சுவாசிக்கும் பிராண வாயுவை கட்டுப்படுத்தி , நாம் உடலுக்குள் உடலியல் மாற்றங்களை விளைவிக்கும் 10 விதமான வாயுக்களை கட்டு படுத்தி நாம் உடலை நம் எண்ணங்களுக்கு தகுந்தவாறு இயங்க செய்யும் முறைக்கு பிராணாயாமம் என்று பெயர். சித்தர்கள் செய்யும் சித்து விளையாடல்களை பிராணாயாமம் செய்தே உருவாக்குகிறார்கள் . உதாரணம் நீரிலே நடப்பது , வானத்தில் பறப்பது,உணவு நீர் இன்றி ஆண்டுக்கணக்கில் தவமிருப்பது , ஊசி முனை தவம்,ஒற்றைகால் தவம் என சொல்லி கொண்டே போகலாம்.
பிராணாயாமத்தை மூன்று விதமாக கூறுவார்கள் . பிராணாயாமம் செய்யும் பொது உடலில் வியர்வை தோன்றுமானால் அது அதமம் ஆகும். இதனால் தான் தவம் செய்யும் முனிவர்கள் அடர்ந்த காடுகளிலும் , நீர் வீழ்ச்சிக்கு அருகிலும் தவம் செய்கிறார்கள்
மனம் ஒரு இடத்தில நிலை கொள்ளாது அலைந்தால் அது மத்திமம் ஆகும். இதனால் தான் புற சப்தங்களால் இடையூறு ஏற்படாத வகையில் குகை,மரம், புற்று போன்ற ஆளரவமற்ற இடங்களை பிரணாயாமம் செய்ய தேர்ந்தெடுக்கிறார்கள்
மனம் , உடல் இரண்டும் பிராணாயாமம் செய்யும் போது மகிழ்ச்சி ஏற்பட்டால் அது உத்தமம் ஆகும்.மனம் , உடல் இரண்டும் மூச்சு காற்றால் கட்டுப்படுத்த படும் போதுதான் உடல் இயக்கங்களை நம்மால் கட்டுபடுத்த முடியும் .
மந்திரங்கள் உச்சரித்து பிராணாயாமம் செய்யும் முறை சகற்பம் எனவும் , வெறுமனே த்யானம் மூலம் பிராணாயாமம் செய்யும் முறை விகற்பம் எனவும் அழைக்கப்படுகிறது .
நமது உடலிலே பத்து விதமான வாயுக்கள் உள்ளன .பிராண யாமத்தை உபயோகிக்க, நம் சுவாசத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நம் சுவாசத்தில் இருந்து பத்து விதமாக பிரிந்து உடல் இயக்கத்திற்கு காரணமாக அமையும்
பத்து விதமான வாயுக்களை கட்டுப்படுத்தி நம் உடல் இயக்கத்தையே நம்மால் கட்டுப்படுத்த முடியும்.
🌹1 .பிராணன்
நாம் சுவாசிக்கும் வாயுவிலிருந்தே உடலில் அணைத்து இயக்கங்களுக்கும் காரணமான வாயுக்கள் பெறப்படுவதாலும் , நமது இருதயத்தின் இயக்கத்திற்கு காரணமாக அமைவதாலும் பிராணன் எனப்படுகிறது
🌹2 . அபானன்
நாம் சுவாசிக்கும் வாயுவிலிருந்து கீழ் நோக்கி பிரியும்.இதுவே உடலில் உள்ள மல ஜலங்களை வெளியேற்ற காரணமாக அமைகிறது.
🌹3 . வியானன்
நம் உடலெங்கும் வியாபித்து ரத்த ஓட்டத்திற்கு காரணமாக அமைகின்ற காரணத்தால் வியானன் என்று அழைக்கப்படுகிறது.
🌹4 . உதானன்
நம் உடலில் எலும்புகள் சேரும் இடத்தில உடலின் இயக்கங்களுக்கு காரணமாக அமைகிறது.
🌹5 . சமானன்
நம் உடலின் உயிர் சத்துக்களை உடலின் எல்லா பாகங்களுக்கும் கொண்டு சேர்ப்பது சாமானான் ஆகும் .
🌹6 . கூர்மன்
நாம் உடலின் செருமல்,விக்கல் போன்றவற்றின் மூலம் உடலின் தண்ணீர் தேவையை உணர்த்த பயன்படுகிறது .
🌹7 .கிரிகரன்
நாம் உண்ணும் உணவில் சேரும் ஒவ்வாத பொருட்களை வெளியேற்ற உதவும் வாந்தி, தும்மல் போன்றவற்றை செயலாற்ற பயன்படுகிறது .
🌹8 . தேவதத்தன்
தேவதத்தன் என்ற வாயு உடலுக்கு ஒய்வு தேவை என்பதை கொட்டாவி மூலம் உணர்த்துகிறது .
🌹9 . தனஞ்செயன்
அடிபட்டால் , காயம் பட்டால், உடலின் பாதிப்புகளில் இருந்து உடலை பாதுகாக்க உடலை வீங்க செய்ய தனஞ்செயன் என்ற வாயு உதவுகிறது.
🌹10 . நாகன்
பேசுதல்,பாடுதல்,குரல் மாற்றி பேசுதல்,கண்சிமிட்டல் ,சப்தம் கேட்டல் மயிர் கூச்செறிதல்,உடல் சிலிர்த்தல் என அனைத்துவகை ஐம்புலன்களின் இயக்கத்திற்கு துணை நிற்பது நாகன் வாயு ஆகும்.
இப்படி உடல் இயக்கத்திற்கு காரணமான பத்துவிதமான வாயுக்களை பிராணாயாமம் மூலம் கட்டுப்படுத்துவதன் மூலம் நம் உடல் இயக்கங்களை கட்டுப்படுத்தலாம். உடல் இயக்கங்களை கட்டுபடுத்துவதன் மூலம் நம் உடலை நம் எண்ணங்களுக்கு தகுந்தவாறு இயக்க முடியும்,பிராண யாமம் அதைத்தான் நமக்கு கற்றுத்தருகிறது
பிராணாயாமம் முறையில் நம் உடலை கட்டுப்படுத்தினால் மட்டுமே யோக நிலையின் அடுத்தடுத்த நிலைகளான பிரதியாகாரம் , தாரணை , தியானம் , சமாதி போன்ற நிலைகளை கடந்து மோட்ச நிலையை அடைய முடியும்.
அது எப்படி என்பதை அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம், 

லிங்க புராணம்
பதிவு- 23
யோக நிலையை பெற்று உயிர்கள் மோட்சம் அடையும் வழியை ஈசன் பிரம்மாவிற்கு கூறுதல்
முந்தைய பதிவுகளில் பிரம்மன் சிவபெருமானிடம் ,"சிருஷ்டி செய்யப்பட்ட உயிர்களின் நிலை என்ன " என்று கேட்டார் .
அதற்கு பதிலளித்த சிவ பெருமான் "இயமம் , நியமம், ஆசனம், பிராணாயாமம் , பிரத்தியாகாரம், தாரணை ,தியானம், சமாதி ஆகிய எட்டு யோக நிலைகளை கடை பிடித்து பிறந்த உயிர்கள் அனைத்தும் மோட்ச நிலையை அடைய வேண்டும் . . இதுதான் சிருஷ்டி செய்யப்படும் உயிர்கள் பிறப்பெடுப்பதின் ரகசியம் " என்று சிருஷ்டி ரகசியம் பற்றி கூறுகிறார்
கடந்த பதிவு
கடந்த பதிவில் மோட்சத்தை அடைவதற்கு உரிய எட்டு யோகநிலைகளில் இயமம் , நியமம், ஆசனம் ,பிராணயமம் போன்ற நான்கு நிலைகளை பார்த்தோம் . இன்று மீதமுள்ள பிரத்தியாகாரம் , தாரணை , தியானம் ,சமாதி போன்ற நிலைகளை பார்க்கலாம் .
யோகத்தின் முதல் நான்கு நிலைகளை கட்டுபடுத்துவது மிகவும் கஷ்டமான காரியமாகும் . காட்டிலே சுதந்திரமாக சுற்றி திரியும் யானையை வெறும் சங்கிலியால் கட்டி நமது வீட்டு நாய் குட்டிகளை பழக்குவது போல நமது உடலை யோக நிலைகளால் கட்டுபடுத்த வேண்டும்.நமது உடல் நமக்கு கட்டுப்படும் போதுதான் நாம் மீதமுள்ள நான்கு யோக நிலைகளை கடந்து மோட்சம் பெற முடியும் .
பிரத்தியாகாரம்
நடை முறை வாழ்க்கையில் லோக இன்பங்களில் திளைக்கும் ஐம்புலன்களை தடுத்து நிறுத்தி நம் எண்ணங்களை நமக்கு கட்டுப்படும்படி செய்வது பிரத்தியாகாரம் ஆகும் .
தாரணை
லோக இன்பங்களில் திளைக்கும் ஐம்புலன்களை தடுத்து நிறுத்தி நம் எண்ணங்களை ஒரு நிலையில் நிலை நிறுத்த செய்வது தாரணை ஆகும் .
தியானம்
நம் எண்ணங்களை ஒரு நிலையில் நிலை நிறுத்தி நமது மனக்கண்ணில் தோன்றும் சிவபெருமானை நேரில் காணுமாறு செய்வது தியானம் ஆகும்
சமாதி
நம் புருவ மத்தியில் நாம் காணும் பரம்பொருளை தியானித்து மனம் உருகி தியானித்து ,தன்னையும் மறந்த நிலையில் நமது உடலை விட்டு ஆன்மா வெளி வந்து நமது உடலை நாமே காணும் சூட்சும நிலைக்கு சமாதி என்று பெயர் . சித்தர்கள் மகான்கள் இன்றும் ஜீவ சமாதிகளில் சூட்சும வடிவத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள் .ஆக இயமம் , நியமம், ஆசனம், பிராணாயாமம் , பிரத்தியாகாரம், தாரணை ,தியானம், சமாதி ஆகிய எட்டு யோக நிலைகளை கடை பிடித்து சமாதி நிலையில் தனது ஆன்மாவின் பரிபூரண தன்மையை உணரலாம்
சிவ பெருமானின் விளக்கங்களால் திருப்தியுற்ற பிரம்மா , “ இந்த எட்டு யோக நிலைகளை பிறந்த எல்லா உயிர்களும் பின்பற்றி மோட்சம் பெற்றால் இந்த உலகின் நிலை தான் என்ன ,? “ என்று கேட்கிறார் .
" எல்லாரும் பின்பற்றி மோட்சம் அடைந்தால் இந்த உலகத்தில் உங்களுக்கும் எனக்கும் என்ன வேலை இருக்க போகிறது . யோக நிலைகளை அவ்வளவு சீக்கிரம் எல்லோராலும் கடந்து விட முடியாது. யோகநிலைகளை கைகொள்ளும் போது செய்ய இயலாதவாறு பத்து விதமான இடைஞ்சல்கள் ஏற்படும் .நோய், சிரத்தையின்மை, பிரமதம், ஐயுறல் ,மற்ற லோக இன்பங்களில் மனம் நிலை கொள்ளல் , துன்ப மனம் , அப்பிரதிஷ்டை , போன்றவற்றால் எல்லோராலும் யோக நிலைகளை கடக்க இயலாது . யோக நிலை பெற முயற்சிக்கும் போது தியானிப்போர் அகத்துள் நிகழும் இடையூறுகளை ஒவ்வொன்றாக கூறுகிறேன் கேளுங்கள் " என்று கூறி யோக நிலைக்கு முயற்சிப்போர் பெறும் இடையூறுகளை விளக்குகிறார்.
நோய்
காற்று , நீர் , உஷ்ணம் இவை மூன்றினாலும் நம் உடலுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் நோய் எனப்படும்
சிரத்தயின்மை
முக்தி பெறுதல் பற்றி மனதிலே விருப்பமில்லாது இருத்தல் சிரத்தையின்மை ஆகும்
பிரமதம்
முக்தி பெற விரும்புவதற்க்கான முறையான காரணங்கள் எதுவும் இல்லாமல் மற்றோர் சொல்கிறார்களே என்பதற்காக தன் மனதை ஈடுபடுத்துதல் பிரமதம் ஆகும் .
ஐயுரல்
யோகா நிலைகளை மேற்கொள்ள நம் செய்யும் பயிற்சியில் சந்தேகம் கொள்ளுதல்
மனம் நிலை கொள்ளாதிருத்தல்
மற்றவர்களுக்கு கிடைத்த உலக இன்பங்கள் நமக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணி பொறமை கொண்டு மனம் நிலை கொள்ளாது இருத்தல் .
துன்ப மனம்
எந்த ஒரு சந்தோஷ தருணத்திலும் திருப்தியுறது கிடைக்காத விசயங்களில் கவலை கொள்வது துன்ப மனம் ஆகும்.
அப்பிரதிஷ்டை
தியான நிலையிலே மனதை செலுத்தாது இஷ்ட தெய்வங்களை காணாது தானும் தியானம் செய்வதாக உலகுக்கு காட்ட எண்ணுவது அப்பிரதிஷ்டை ஆகும்
பிராந்தி தரிசனம்
அழிய கூடிய இந்த தேகத்தை பற்றி எண்ணாது உலக இச்சைகளில் மனதை ஈடுபடுத்துவது பிராந்தி தரிசனம் ஆகும் .
ஆத்யாத்மிக துக்கம்
இந்திரியங்களை கட்டுப்படுத்தாது மனம் போனபடி ஓட விடுவது ஆத்யாத்மிக துக்கம் ஆகும்.
ஆதிபௌதீகம்
பஞ்ச பூதங்களால் நமக்கு ஏற்படும் இடையூறுகள் ஆதிபௌதீகம் ஆகும்
ஆதி தெய்வீகம்
மழை, இடி போன்றவற்றால் ஏற்படும் இடையூறுகள் ஆதி தெய்வீகமாகும்
" இத்தனை இடையூறுகளையும் தாண்டி எண்ணம், சொல்,சித்தமெல்லாம் சிவமயமாகி உள்ளும் புறமும் சிவமே மயமாகி சமாதி நிலையை எட்டும் யாவரும் என்னால் மோட்சம் பெற்று என்னையே வந்தடைவார்கள் " என்று சிவ பெருமான் பிரம்மாவின் சந்தேகத்திற்கு விளக்கமளிக்கிறார்.
அடுத்த பதிவு
தவ நிலையில் யோக நிலையின் ஒவ்வொரு கட்டத்தை கடக்கும் போதும் நமக்குள் நிகழும் மாற்றங்கள் நாம் யோகத்தின் அடுத்த கட்டத்திற்கு கடந்து சென்றுள்ளோம் என்பதை நம்மை சுற்றி நிகழும் நிகழ்வுகளால்,நமக்கு குறிப்பால் உணர்த்த பெறும். சிவ பெருமான் பிரம்மாவிற்கு விளக்கி கூறியுள்ள அந்த நிகழ்வை அடுத்த பதிவில் காணலாம்.

லிங்க புராணம்
பதிவு - 24
கடந்த பதிவு தொடர்ச்சி......
பிரம்மன் சிவபெருமானிடம் சிருஷ்டி செய்யப்பட்ட உயிர்களின் நிலை என்ன என்று கேட்டார் . அதற்கு பதிலளித்த சிவ பெருமான் இயமம் , நியமம், ஆசனம், பிராணாயாமம் , பிரத்தியாகாரம், தாரணை ,தியானம், சமாதி ஆகிய எட்டு யோக நிலைகளை கடை பிடித்து பிறந்த உயிர்கள் அனைத்தும் மோட்ச நிலையை அடைய வேண்டும் . இதுதான் சிருஷ்டி செய்யப்படும் உயிர்கள் பிறப்பெடுப்பதின் ரகசியம் என்று சிருஷ்டி ரகசியம் பற்றி கூறுகிறார்
கடந்த பதிவில் மோட்சத்தை அடைவதற்கு உரிய எட்டு யோகநிலைகளில் இயமம் , நியமம், ஆசனம் ,பிராணயமம் , பிரத்தியாகாரம் , தாரணை , தியானம் ,சமாதி போன்ற எட்டு நிலைகளை பார்த்தோம் . பின்னர் யோகா நிலை பயிற்சி மேற்கொள்ளும்போது நமக்கு ஏற்படும் தடைகளை பற்றியும் பார்த்தோம்.
இன்று தவ நிலையில் யோக நிலையின் ஒவ்வொரு கட்டத்தை கடக்கும் போதும் நமக்குள் நிகழும் மாற்றங்கள் நாம் யோகத்தின் அடுத்த கட்டத்திற்கு கடந்து சென்றுள்ளோம் என்பதை நம்மை சுற்றி நிகழும் நிகழ்வுகளால் நாம் எவ்வாறு உணர்ந்து கொள்ளலாம் என்பதை இன்றைய பதிவில் பார்க்கலாம் .
யோக நிலைகள்
யோகத்தின் ஒவ்வொரு நிலைகளை கடக்கும் போதும் நமக்குள் ஏற்படும் மாற்றங்களை ஆறு உபசருக்கங்கள் மூலம் சிவபெருமான் பிரம்மாவிற்கு விளக்குகிறார். பிரதிபை , தேவதரிசனம் , சிரவணம் , (வார்த்தை) அசரிரி ,சுவாதம் , இரசனை ஆகியன அந்த ஆறு சருக்கங்கள் ஆகும் .
மறைவாயிருப்பது,மிக நுண்ணியது ,எங்கும் நிறைந்திருப்பது , தூரத்தில் உள்ளது , இருப்பது , இல்லாதது , நடந்தது , நடக்க போவது , இறந்த காலம் , நிகழ காலம்,எதிர்காலம் அனைத்தையும் மனதால் உணர்வது பிரதிபை ஆகும் .
ஈசன் திரு உருவத்தை மனதால் , கனவில் ஈசனின் திரு உருவத்தை நேரில் காண்பது போல உணர்வது தேவ தரிசனம் ஆகும்
ஒளியை கேட்ட மாத்திரத்திலேயே அந்த பொருள் என்னவென்று உணர்வது , கூறுவது சிரவணம் ஆகும்
வேதத்தின் பொருள் நன்கு உணர்ந்து உச்சரிப்பது உள்மனதிற்குள் கேட்டல் வார்த்தை ஆகும்
வாசனையை வைத்து பொருளின் சுவையை உணர்வது சுவாதம் ஆகும் .
நீர்,மண் ,நெருப்பு,வானம் , ஆகாயம் ,மனம்,அகங்காரம் ,பிரம்மம் இந்த ஏட்டின் குணங்களையும் அறிந்திருப்பது ரசனை ஆகும்.
மனிதர்களுக்கு மேலானவர்களின் குணம்
பேய் , பிசாசுகளின் குணம் உடல் இல்லாமல் இருப்பது ,
அரக்கர்களின் குணம் போர் செய்வது,மது உண்டு மயங்கி கிடப்பது ,
யட்சர்களின் குணம் நிலவை போல குளிர்ந்த பிரகாசத்துடன் இருப்பது,
ஜோதி மயமான பிரகாசத்துடன் இருப்பது கந்தர்வர் குணமாகும் .
வாயுவின் குணமும் எந்த இடத்திலும் நிலையில்லாது உழல்வது .
வேந்தனின் குணம் நாட்டை பாதுகாத்து , இயற்கை வளத்தை பெருக்கி , நாட்டை விரிவாக்கி , மிஞ்சியதை நாட்டு மக்களுக்கே தானம் செய்வது
சந்திரனின் குணம் வெப்பத்தை பெற்றாலும் குளிர்ச்சியை மட்டுமே தருவது
பிரம்மனின் குணம் தவத்தின் பலனை உணர்ந்து கேட்ட வரங்களை தருவது
அது போல சிறந்த யோகியின் குணம் எதையும் அதன் பண்புணர்ந்து ஆராய்ந்து உணர்வது ஆகும்.
ஒரு யோகியனவர் தன்னை சுற்றியுள்ள நிகழ்வுகளின் சாரத்தை தன ரசனையால் உணரும் போதே யோகா நிலை கடந்து மோட்சத்தை அடைய முடியும்
யோகியனவர் எப்படி தன்னை சுற்றியுள்ள நிகழ்வுகளின் சாரத்தை எவ்வாறு உணர்ந்து , யோகா நிலைகளை கடந்து , மோட்சத்தை பெறுகிறார் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

பதிவு- 25
படைக்கப்படும் உயிர்களுக்கு குண நலன்கள் எப்படி அமைகின்றன , அவை ஏன் மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்கின்றன என்பதை பிரம்மனுக்கு ஈசன் விளக்கி கூறுதல்
" முந்தைய பதிவுகளில் பிரம்மன் சிவபெருமானிடம் சிருஷ்டி செய்யப்பட்ட உயிர்களின் நிலை என்ன ? " என்று கேட்டார் . அதற்கு பதிலளித்த சிவ பெருமான் , "இயமம் , நியமம், ஆசனம், பிராணாயாமம் , பிரத்தியாகாரம், தாரணை ,தியானம், சமாதி ஆகிய எட்டு யோக நிலைகளை கடை பிடித்து பிறந்த உயிர்கள் அனைத்தும் மோட்ச நிலையை அடைய வேண்டும் .
இதுதான் சிருஷ்டி செய்யப்படும் உயிர்கள் பிறப்பெடுப்பதின் ரகசியம் " என்று சிருஷ்டி ரகசியம் பற்றி கூறுகிறார்.யோக நிலைக்கு பயிற்சி செய்யும் போது நமக்கு என்னென்ன இடையூறுகள் ஏற்படும் என்றுவிளக்குகிறார்.
கடந்த பதிவு
கடந்த பதிவில் தவ நிலையில் யோக நிலையின் ஒவ்வொரு கட்டத்தை கடக்கும் போதும் நமக்குள் நிகழும் மாற்றங்கள் நாம் யோகத்தின் அடுத்த கட்டத்திற்கு கடந்து சென்றுள்ளோம் என்பதை நம்மை சுற்றி நிகழும் நிகழ்வுகளால் நாம் எவ்வாறு உணர்ந்து கொள்ளலாம் என்று பார்த்தோம் .

இன்றைய பதிவில் யோக நிலை பூர்த்தி அடைய பெற வேண்டிய குணங்களையும் எப்படி எல்லா உயிர்களும் மோட்சம் பெறுகின்றன என்பதை பற்றியும் பார்க்கலாம் .
யோக நிலைகளை கடந்த எந்த உயிரும் பூமிக்கு உரிய எட்டு குணங்களையும் பெற்று யோக நிலைகளை கடக்க வேண்டும். அப்போதுதான் ஈசனடி சரணடைந்து மோட்சம் பெற முடியும்.
பூமியின் எட்டு குணங்கள்
🌸அடைந்தனவற்றோடு நிறைந்து இருத்தல்
🌸நீருடன் சேர்ந்து அதன் தன்மை அடைதல்
🌸நெருப்புடன் சேர்ந்து அதன் தன்மை அடைதல்
🌸காற்றுடன் சேர்ந்து அதன் தன்மையடைதல்
🌸வானுடன் சேர்ந்து அதன் தன்மை அடைதல்
🌸மனதோடு சேர்ந்து அதன் குணத்தை பெறுதல்
🌸அகங்காரகத்தின் குணங்களை பெறுதல்
🌸பிரம்மத்தின் குணங்களை பெறுதல்
ஆகியன ஆகும்.
யோகா நிலைகளை கடக்கும் ஒருவன் இத்தகைய குணநலன்களை பெறும் போதுதான் ஈசனடி சேர்ந்து மோட்சம் பெற தகுதி உள்ளவன் ஆகிறான் .
நீருடன் சேர்ந்து அதன் தன்மை பெறுதல்
நீரிலே உயிரினங்கள் தோன்றுதல்,
நீரிலே ஜீவராசிகளாய் வாழ்தல்,
தான் இருக்கும் வடிவம் பெறுதல் ,
(நீர் எந்த பாத்திரத்தை நிறைக்கிறதோ அதன் வடிவம் பெறுகிறது )
பஞ்ச பூதங்களில் மூன்றுடன் கலந்து அதன் வடிவம் பெறுதல் ,
அந்த நீரே தேகத்தில் தங்குதல்.
சுருக்கமாக சொல்ல வேண்டும் எனில் மண்ணிலே சிருஷ்டி செய்யப்படும் எந்த உயிரும் மண்ணில் பிறந்து நிலத்தின் குணத்தையும், நீரிலே வாழ்ந்து நீரின் குணத்தையும் பெற வேண்டும். அப்போது தான் நீரிலே வாழ்வதற்கு உரிய உடல் உஷ்ணத்தை பெற முடியும்
நெருப்புடன் சேர்ந்து நெருப்பின் தன்மை பெறுதல்
🌼உடலில் உஷ்ணத்தை உண்டாக்குதல் ,
🌼நெருப்பை கையில் ஏந்துதல்
🌼நீரிலே உஷ்ணத்தை காத்தல் ,
🌼வெளிச்சத்தை உண்டாக்குதல் ,
🌼தன்னுடன் சேரும் அனைத்தையும் எரித்து சாம்பலாக்குதல் ,
🌼பஞ்ச பூதங்களில் இரண்டின் வடிவம் பெற்று அவற்றின் வடிவம் கொண்டு இயங்குதல் போன்ற நெருப்பின் குணங்களை பெற வேண்டும் .
உடல் இயக்கத்தின் போது இரத்தம் உடல் முழுவதும் விரவி பரவுவதால் உடல் சூடாகும். அப்போது நாம் உண்ணும் திட மற்றும் திரவ உணவுகள் எரிக்கப்பட்டு இயக்கத்தால் உடலின் சக்தியாக மாற்ற படுகின்றன .இந்த இயக்கத்திற்கு உரிய சக்தி காற்றின் மூலமாகவே கிடைக்கிறது.அதற்கு காற்றின் தன்மையை பெற வேண்டும்.
காற்றின் தன்மை பெறுதல்
நம் மூச்சு காற்றின் மூலமாக மட்டுமே நம் உடல் இயக்கங்கள் அனைத்தும் நிகழ்கின்றன . நம் உடலின் சக்திக்கு அதிகமாக வேலை செய்யும்போதுதான் நமக்கு காற்றின் சக்தி போதாமல் மூச்சிறைப்பு ஏற்படும் .
🌺எங்கும் நிறைந்து இருத்தல்,
🌺எல்லா இயக்கங்களுக்கும் காரணமாயிருத்தல் ,
🌺பொருளை தங்கி நிற்தல் ,
🌺கண்ணுக்கு தெரியதிருத்தல்,
🌺 உடலிலே புகுந்திருத்தல் ,
🌺ஒலியுடனிருத்தல் ,
🌺பஞ்சபூதங்களுக்கும் ஆதாரமாய் விளங்குதல்
ஆகியன காற்றின் குணங்களாகும்.
பஞ்ச பூதங்களின் இயக்கத்தின் சாவியான ஆன்மாவாக ஆகாயத்தில் வியாபித்து இருக்க வேண்டும்.அதற்கு ஆகாயத்தின் குண நலன்களை பெற்று இருக்க வேண்டும்
ஆகாயத்தின் (ஆன்மாவின் ) தன்மை பெறுதல்
பஞ்ச பூதங்கலால் ஆன உடலை இயக்க ஆன்மாவாய் உடலின் உட் புகுதல்,
பழுது இல்லாத உடலை தேர்ந்து எடுத்தல் ,
எல்லா பொருளையும் இயக்குதல் ,
இந்திரியங்களின் செயல் அறிதல் ,
இயக்கத்தால் கண்ணுக்கு தெரிதல்
(அதாவது ஒரு உடலில் இயக்கம் இருந்தால்தான் உயிர் இருக்கிறது என்று கூறுகிறோம், உண்மையில் ஆன்மாவே உடலை இயக்குகிறது என்ற ஆன்மாவின் குணம் உணர்தல் ) ,
உலகத்தில் நிகழும் இயக்கத்தின் ஒலி உணர்தல் (இடி, மின்னல் , புயலின் ஒலி,அலையின் ஒலி),
அழிவில்லாத தன்மை உணர்தல்
போன்ற ஆகாயத்தின் குணநலன்களை பெற்று இருக்க வேண்டும். இயக்கம் பெற்ற உடல் மூலம் நாம் நினைத்ததை அடைய எண்ணுவதன் மூலம் மனத்தின் தன்மை பெறலாம்
🏵மனத்தின் தன்மை பெறுதல் 🏵
இயக்கம் பெற்ற உடல் மூலம் நினைத்த இடத்தை நினைத்த மாத்திரத்தில் அடைதல் ,
மீண்டும் திரும்ப வருதல்,
விரும்பியதை அடைதல் ,
மற்றவர்களுக்கு தெரியாத அறிய விஷயங்களை பயிற்சியின் மூலம் அறிந்து கொள்ளுதல் ,
மகிழ்ச்சியுடன் வாழ வழி காணுதல் ,
இறைவனை சேர்ந்து சரணாகதி அடைவதற்கு உரிய வழி தேடுதல்
கண்களால் பார்த்து காணும் பொருளின் குணம் உணர்தல்
ஆகியன மனத்தின் குணங்களாகும் . மற்ற உயிர்கள் பஞ்ச பூதத்தை உணரும் குணங்கள் பெற்றவை . மனிதன் அவற்றோடு மனத்தால் அனைத்தையும் உணரும் குணம் பெற்றதால் பகுத்தறிவு உள்ளவனாக கருதபடுகிறான் . அனைத்து உயிர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கக்கும் பொருட்டு மனதின் குணங்களை மனிதனுக்கு கொடுத்து இருக்கிறான் ஈசன் . மனிதனின் கடமைகளை உணராது தன்மையின் குணங்களை உணர்வதால் மனிதன் அகங்காரத்தின் குணம் பெறுகிறான் .
🏵அகங்காரத்தின் குணம் பெறுதல் 🏵
தடுத்தல் ,
கூற்றினை கடத்தல் (சட்ட திட்டங்களை மீறுதல்),
மித்ரனை ஒழித்தல் (எதிரிகளை உருவாக்கி அழித்தல்),
கட்டல்
ஏற்றுதல்,
கருணை கூறுதல் ,
பேருலகில் பட்டு திருந்தி வாழ்தல் ,
உலகில் பழுதுற்று வாழ முயற்சித்தால்
ஆகியன அகங்காரத்தின் குணங்களாகும். அதாவது இறைவன் கொடுத்த குண நலன்களை முறையாக பின்பற்றும் போது நமக்கு கிடைக்கும் ஆற்றல்களால் எளியோர்களை கட்டுபடுத்த நினைக்கும் அகங்காரத்தின் குணநலன்களை பெறுகிறான் .
🏵பிரம்மத்தின் குணம் பெறுதல் 🏵
அகங்காரத்தின் குண நலன்களை பெறாமல் இறை வழியில் தன தவ வலிமை , யோகா நிலை ஆகியவற்றை கடந்து சித்தமெல்லாம் சிவமாக
💐உலகினை காத்தல் ,
💐உலக நலம் பேணுதல் ,
💐தலைமை தாங்குதல்
💐தனி தனி பண்பை உருவாக்குதல்,
💐 நீதியை உருவாக்குதல்,
💐அதை காப்பாற்றுதல்,
💐உடலினை சரிபடுத்தும் மருத்துவ முறைகளை உருவாக்குதல் ,
💐உயிர்களை காப்பாற்றுதல் ,
💐முக்தி பெறும் வழி கண்டு தனக்கு பின் வரும் உயிர்கள் முக்திக்கு வழி காட்டுதல்
ஆகியன பிரம்மத்தின் குணநலன்களாகும். சித்தர்கள் , ரிஷிகள்,முனிவர்கள் ஆகியோர் பிரம்மத்தின் குண நலன்களை பெறுவதால் மட்டுமே மோட்சத்தினை பெறுகிறார்கள்.
“எனவே பிரம்மாவே உயிர்களுக்குரிய ஆறு குணங்களையும் பெற்று மனிதனாய் பிறக்கும் ஒரு உயிர் (ஆன்மா) பெற்ற ஆற்றலையும் , தவ வலிமையையும் கொண்டு அகங்காரம் கொண்டு மற்ற உயிர்களை கட்டுபடுத்த நினைக்கும் போது என்னை அடையும் பாதையிலிருந்து விலகி செல்கிறார்கள் . என்னை அடையும் பாதை காணும் வரை மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்கிறார்கள் .
பிரம்மத்தின் குணம் பெற்று தன்னுடனான மற்ற உயிர்களுடன் கருணை செய்து, உதவி, இறைவனை சேர்ந்து மோட்சம் அடைய வழி கண்டு பிடித்து தான் கண்டு பிடித்த வழிகளை தன்னை நம்பியுள்ள உயிர்களுக்கு காட்டி கொடுத்து , இறை சரணாகதியை உணரசெய்து , தானும் உணர்ந்து என்னை சரணாகதி அடையும் எந்த ஒரு உயிரும் மோட்சம் பெற்று மீண்டும் என்னையே சேரும். “ என்று சிருஷ்டி செய்ய பட்ட உயிர் பிறப்பெடுத்து மீண்டும் தன்னை வந்தடையும் வழிகளாக பிரம்மாவிடம் ஈசன் விவரிக்கிறார் .
ஈசனின் பதிலால் திருப்தியடைந்த பிரம்மா ஈசன் கூறிய வழி முறைகளை பின்பற்றி உயிர்களை சிருஷ்டி செய்ய துவங்குகிறார் .ஈசன் சத்தியலோகத்தில் இருந்து கைலாயம் திரும்புகிறார் .அப்போது அன்னை பார்வதி தேவியார் சத்திய லோகத்தில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் கேட்டறிந்தார் .
அப்போது பார்வதி தேவியார் ஈசனிடம்
" ஐயனே !! சிருஷ்டி செய்யப்படும் உயிர்கள் ஆன்மாவை உங்களிடம் இருந்து பிரிந்து உயிர்களை பூலோகத்தில் ஜனித்து மீண்டும் மோட்சத்தின் வழியே உங்களை வந்தடையும் வழி கண்டு பேரானந்தம் அடைந்தேன். நாதா !!! உங்களை எந்த முறையில் வழி பட்டால் பிறக்கும் உயிர்கள் எளிதாக உங்களை வந்தடைய மோட்சத்தின் வழி காட்டுவீர்கள் “ என கேட்கிறார் .
“ பிறக்கும் உயிர்கள் என்னிலிருந்து பிறந்ததால் உயிர்கள் அனைத்தும் உன் பிள்ளைகலாயிற்றே !!!.பிள்ளைகள் துயர் இன்றி என்னை அடைய வழி கேட்கிறாயா தேவி? !!! சொல்கிறேன் கேள்” என்று கூறி வழிமுறைகளை கூறுகிறார்.
“மோட்சத்தை அடைய இவ்வளவு கஷ்டப்படவேண்டுமா ? எளிய வழி எதுவும் கிடையாதா “ என்று யோசிப்பவருக்கு ஈசனே வழி கூறுகிறார் .அது என்ன வழி ??

லிங்க புராணம்
பதிவு- 26
யோகா நிலை பெறாமல் ஈசனிடம் மோட்சம் பெறுவதற்கான வழி
முந்தைய பதிவுகளில் பிரம்மன் சிவபெருமானிடம் சிருஷ்டி செய்யப்பட்ட உயிர்களின் நிலை என்ன என்று கேட்டார் . அதற்கு பதிலளித்த சிவ பெருமான் இயமம் , நியமம், ஆசனம், பிராணாயாமம் , பிரத்தியாகாரம், தாரணை ,தியானம், சமாதி ஆகிய எட்டு யோக நிலைகளை கடை பிடித்து பிறந்த உயிர்கள் அனைத்தும் மோட்ச நிலையை அடைய வேண்டும் . இதுதான் சிருஷ்டி செய்யப்படும் உயிர்கள் பிறப்பு எடுப்பதின் ரகசியம் என்று சிருஷ்டி ரகசியம் பற்றி கூறுகிறார்.
கடந்த பதிவு
கடந்த பதிவில் தவ நிலையில் யோக நிலையின் ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து பஞ்சபூதங்களின் குணங்களையும் பெற்று மனத்தின் தன்மை பெற்று 6 குணங்களுடன் மனிதனாக பிறக்கிறான் .அகங்காரத்தின் குணம் பெறுவதால் அவனால் மோட்சத்தின் வழி காண இயலாமல் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கிறான் . புண்ணியவான் தன் தர்ம நெறியில் நடந்து பிரம்ம குணம் பெறுகிறான். ஈசனை சரணாகதி அடைய யோகா நிலைகளை கடந்து தேடும்போது அவனுக்கு மோட்சத்தை அடைய பாதை காட்டி தன்னுடன் ஐக்கியமாக்கி கொள்கிறான் ஈசன்.
பிரம்மாவிற்கு சிருஷ்டி செய்யப்பட்ட உயிர்கள் எப்படி மோட்சம் பெற்று மீண்டும் தன்னை வந்தடைகின்றனர் என்பதை உபதேசித்த ஈசன் சத்திய லோகத்திலிருந்து கைலாயம் திரும்புகிறார் .அப்போது அன்னை பார்வதி தேவியார் சத்திய லோகத்தில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் கேட்டரறிகிறார்.
அப்போது பார்வதி தேவியார் ஈசனிடம்,
“ ஐயனே !! சிருஷ்டி செய்யப்படும் உயிரின் ஆன்மா உங்களிடம் இருந்து பிரிந்து, பூலோகத்தில் ஜனித்து மீண்டும் மோட்சத்தின் வழியே உங்களை வந்தடையும் வழி கண்டு பேரானந்தம் அடைந்தேன்.
"நாதா !!! உங்களை எந்த முறையில் வழி பட்டால் பிறக்கும் உயிர்கள் எளிதாக உங்களை வந்தடைய மோட்சத்தின் வழி காட்டுவீர்கள் “ என கேட்கிறார் .
“ பிறக்கும் உயிர்கள் என்னிலிருந்து பிறந்ததால் உயிர்கள் அனைத்தும் உன் பிள்ளைகலாயிற்றே !!!
பிள்ளைகள் துயர் இன்றி என்னை அடைய வழி கேட்கிறாயா தேவி? !!! சொல்கிறேன் கேள்” என்று கூறி வழிமுறைகளை கூறுகிறார்.
“ பிறந்த உயிர்கள் எந்த நிலையில் ஜனித்தாலும் எந்தன் இறைநிலை உணர்ந்து என்னில் தன் உடல் பொருள் ஆன்மா அனைத்தையும் அர்ப்பணித்து என்னிடத்தில் அன்பு செலுத்தினால் அவரின் எதிர்பார்ப்பற்ற அன்பை பெற்று அவர்களை என்னுடன் சேர்த்துக்கொள்வேன் “ என்று அன்னையிடம் கூறுகிறார் .
“யோக நிலைகளை கற்று கொள்ளாமல் வெறும் வழிபாட்டின் மூலமாகவே என்னை வந்தடைவதற்கான வழிகளை இதற்க்கு முந்தைய கற்ப காலத்திலும் கூறியுள்ளேன் .
"என்னை சத்தியோசாதம்,வாமதேவம் தத்புருஷம் , அகோர ரூபம் , விஸ்வரூபம் போன்ற மூர்த்தங்களில் என்னை உள்ளன்போடு வழிபாடு செய்தவர்களை யோக நிலை கடத்தல் ,பிரம்ம குணம் பெறுதல் என்ற எந்த தகுதியும் இன்றி ஏற்று கொண்டு என்னுள் ஐக்கியமாக்கியுள்ளேன்" என்று சூலமேந்திய ஈசன் அன்னைக்கு விளக்கம் கூறுகிறார் .
" ஒவ்வொரு கல்பத்திலும் ஒவ்வொரு வடிவத்தில் தோன்றி சிருஷ்டி,மோட்சம் இரண்டிற்கும் பிரம்மாவிற்கு வழிகாட்டியும்; வேதங்கள், வேதமந்திரங்கள் பகுக்க , வழிபாட்டு முறைகளை போதித்து மோட்சத்திற்கு வழி காட்ட நான்கு முனிவர்களை படைப்பேன்.அதில் முக்கியமான ஐந்து வடிவங்களை வழிபாடு செய்பவர்கள் யோக நிலை,பிரம்ம குணம் அடையாமலேயே மோட்சம் பெறுவார்கள் " என்கிறார்
ஸ்வேதாவராக கற்பம் – சத்தியோசாதம்
ஸ்வேதா வராக கல்பத்தில் மோட்சம் அடையும் வழி கேட்டு பிரம்மா தியானம் செய்த போது அவருக்கு அருள் செய்ய அழகிய சுந்தரனாய் , இளம் பாலகனாய் காட்சி கொடுத்தார் .ஈசனின் பேரழகை கண்டு உள்ளத்தில் அன்பு பெருக்கெடுக்க , அவரது திரு பாதங்களை வேத மந்திரங்கள் வினவி துதித்தார் .வேதமந்திரங்களே நான்கு முனிவர்களாக ஈசன் திரு மேனியிலிருந்து உருவாகினர் .அவர்கள் நால்வரும் ஈசனை துதித்து அவர் திருவடிகளை பணிந்து பிரம்மாவிற்கு சிருஷ்டி , மோட்சத்தின் வழி காட்ட உடன் சென்றனர் .பிரம்மாவிற்கு அருள இளம் பாலகனாய் அவதரித்து சிருஷ்டி மற்றும் மோட்சதிற்கு வழி காட்டிய சொருபம் சத்தியோ சாதம் ஆகும் .முறைபடி ஆகம விதிப்படி ஆறுகால பூஜை செய்து நித்திய விரதம் அனுஷ்டித்து வழிபாடு செய்து என்னிடத்தில் அவர்களை அர்பணிக்க மோட்சம் அளித்து என்னுடன் சேர்த்து கொள்கிறேன் என்கிறார் ஈசன்
இரந்தர கல்பம் – வாம தேவம்
இரந்தர கல்பத்தில் மோட்சம் அடையும் வழி கேட்டு பிரம்மா தியானம் செய்த போது அவருக்கு அருள் செய்ய கொடிய விஷம் கொண்ட பாம்புகளை உடலில் அணிந்து மானும் மழுவும் கரத்தில் ஏந்தி சாந்த சொருபமாய் காட்சியளித்தார் .இந்த தோற்றத்துக்கு வாம தேவம் என்று பெயர் . ஈசனின் திவ்ய தோற்றத்தை கண்டு மெய் சிலிர்க்க சாஷ்டங்க நமஸ்காரம் செய்து மலர் தூவி அவர் திருப்பாதங்களை வழிபட்டு சிருஷ்டி , மோட்சத்திற்கான பாதை காட்ட வினவினார் . அப்போது பிறப்பு இறப்பாகிய சம்சார பந்தத்தில் வீழாமல் , மெய் தவத்தால் தெளிந்திடும் மெய்யறிவு பெற்ற நான்கு முனிவர்கள் தோன்றினர்.அவர்கள் பிரம்மாவிற்கு சிருஷ்டியில் உதவி செய்து உலகம் உய்ய நல்ல தர்மத்தை கடை பிடித்து மற்றவர்களுக்கு மோட்சம் அடையும் வழிகளை கற்று கொடுத்து சத்ய யுகத்தின் முடிவில் மோட்சம் பெற்று ஈசனை சரணடைந்து மோட்சம் பெற்றனர் .
பிரம்மவிற்கு காட்சி கொடுத்த வாமதேவ சொருபத்தை மனதால் தியானித்து, முறைப்படி வழிபாடு செய்பவர்கள் பிறப்பு , இறப்பு ஆகிய இரு வினைகளை கடந்து மோட்சத்திற்கான பாதை கண்டு ஈசனை சேர்வர் .
பிதீர் கற்பம் – தத்புருஷம்
பிதீர் கல்பத்தில் சிருஷ்டி மோட்சம் இரண்டின் வழி கேட்டு பிரம்மா தியானம் செய்த போது அவருக்கு அருள் செய்ய இருளை போக்கும் பொன்னிற சடையிலே வெண்மதி அணிந்து முடிவிலா வேத முடிவினில் விளங்கும் தத்புருஷ தோற்றத்தில் காட்சியளித்தார்.அவரது திவ்விய தோற்றம் கண்டு ஆனந்தத்தில் பலவாறு துதித்து பிறப்பு இறப்பாகிய சம்சார பந்தத்திலிருந்து விடுபடும் வழி கேட்டு மலர்கள் தூவி வழிபட்டார்.அவரது பிரார்த்தனையில் மகிழ்ந்த ஈசன் தன் முகத்திலிருந்து அழகிய தோற்றத்தை உடைய காயத்திரி தேவியை உருவாக்கினர் . இந்த காயத்திரி தேவியே ஒவ்வொரு தெய்வங்களுக்கும் உரிய காயத்திரி மந்திரங்களை உருவாக்கினர் . காயத்திரி மந்திரங்கள் கூறி காயத்திரி தேவியை வழிபடுவோருக்கு நரக வாசமே கிடையாது .பிறவியின் முடிவில் கைலாச வாசலை சென்றடைவர் .
காயத்திரி உருவான சிறிது நேரத்தில் அவரது திருமேனியிலிருந்து நான்கு முனிவர்கள் உதித்தனர் . கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் நரக வாசத்திலிருந்து கர்மாக்களை விளக்கி பஞ்சட்சார மந்திரம் உச்சரித்து மோட்சம் அடையும் வழிகளை கற்று கொடுத்து , அவர்களும் பின்பற்றி சத்ய யுகத்தின் முடிவில் மோட்சம் அடைந்தனர் . கங்கை நீரால் நனைந்து , கொன்றை அணிந்து விரிந்த சடையில் இளம் சந்திரனை சூடிய தத்புருஷனை தியானித்து முறையாக வழிபாடு செய்து திருவடிகளை சரண் அடைந்தவர்கள் பிறவி கடலை கடந்து பிறவா நிலை அடைந்து ஈசனை சேர்கின்றனர்.
பதிவின் நீளம் கருதி அகோர ரூபம் , விஸ்வ ரூபம் இரண்டு சொரூபங்களை அடுத்த பதிவில் காணலாம் .

லிங்க புராணம்
பதிவு - 27(1)
மானுட உயிர்கள் அடுத்தடுத்து பிறப்பெடுக்க என்ன காரணம் என ஈசன் கூறுகிறார்
முன் கதை
முந்தைய பதிவுகளில் சிவ பெருமான் பிரம்மாவிடம் உயிர்கள் பிறப்பும் , யோக நிலையும் ,பிரம்ம குணமும் பெற்று மோட்சம் அடையும் விதம் பற்றியும் எடுத்து கூறுகிறார்.
அவர் சத்திய லோகத்திலிருந்து கைலாயம் திரும்பும் போது அன்னை ஈசனிடம் யோகநிலை பெறாமல் மோட்சம் அடையும் வழி கேட்கிறார் .அதற்க்கு ஒவ்வொரு கல்பத்திலும் என்னிலிருந்து பிரிந்த ஆன்மாக்கள் மீண்டும் மோட்ச மடைந்து என்னை சேர பிரம்மாவிற்கு வழிகளை போதித்தேன்.அப்போது காட்சியளித்த எனது வடிவங்களை மனக்கண்ணால் தியானித்து வழிபடும் அடியார்களுக்கு மோட்சதுக்கான வழி காட்டி என்னுடன் சேர்த்துக்கொள்வேன்" என்கிறார் .
ஒவ்வொரு கல்பத்திலும் மோட்சத்திற்கான வழி காட்டி பிரம்மாவிற்கு காட்சியளித்த ஐந்து சொருபங்களை பற்றி பார்த்து வருகிறோம்.
கடந்த பதிவு
கடந்த பதிவில் பிரம்மாவிற்கு சத்தியோசாதம் ,வாம தேவம்,தத்புருஷம் , அகோர ரூபம் ,விஸ்வ ரூபம் போன்ற மூர்த்தங்களில் மோட்சத்திற்கான வழி காட்டுவதாக கூறுகிறார் .கடந்த பதிவில் சத்தியோசாதம் ,வாம தேவம்,தத்புருஷம் போன்ற சொரூபங்களை பார்த்தோம். இன்று மீதமுள்ள அகோர ரூபம் , ஈசானியம் (விஸ்வ ரூபம் ) காணலாம் .
நீல கற்பம் – அகோர ரூபம்
நீல கற்பத்தில் உயிர்கள் சிருஷ்டிக்கும், மோட்சத்திற்கும் வழி கேட்டு ஈசனின் அனுக்ரகம் வேண்டி நின்ற போது , முக்கண் பெருமான் இடது கையில் தீச் சுடரும் , வலது கையில் வாளும் ஏந்தி கரிய ரூபத்துடன் தோன்றினார் . அந்த ரூபமே அகோர ரூபம் ஆகும்.
பிரம்மா அகிலாண்ட கோடி ஆண்ட சராசரங்களை காத்தருளி , பேரொளி பொருந்தி கரிய நிறத்தானாகிய முக்கண்ணனை நோக்கி ,
“ வேத பரம்பொருளே , உயிர்கள் சிருஷ்டிக்கு வழி காட்டி , உயிர்கள் மோட்சம் பெற உரிய வழி கூறுங்கள் “ என்று ஈசன் தாழ் பணிந்து வணங்கினார் .
ஈசன் பிரம்மனிடம் ,” என்னிலிருந்து தோன்றும் நால்வகை முனிவர்கள் உன் சிருஷ்டிக்கு உதவி செய்வார்கள் .ஒரு யுகம் கழிந்து மறு யுகம் பிறக்கும்பொது உயிர்களுக்கு மோட்சத்தின் வழி காட்டி என்னையே வந்தடைவார்கள் “ என்றார்.
" சிவகாமி நேசனே , முக்கண் பரம்பொருளே ,உயிர்கள் மறு பிறப்புக்கும் , மோட்சத்திற்கும் நீங்கள் நெறி படுத்தும் வழி முறைகள் என்ன?!
எதன் அடிப்படையில் உயிர்கள் பிறப்பை , மோட்சத்தை நெறி படுத்துகிறீர்கள் என்று பிரம்மா ஈசன் திருவடிகளை தொழுது வேண்டினார் .
உலகாளும் நாயகன் பிரம்மாவை நோக்கி புன்னகைத்து ,
". சிருஷ்டியின் நாயகனே!!
சம்மதமற்ற பெண்டிரை தீண்டியவர் ,
கொலை செய்தவர் ,
அரவங்களை கொன்றவர்,
சிறந்த வேதங்களை கற்ற அந்தணரை கொன்றவர்,
நல்லாட்சி நடத்தி குடிமக்களை அன்பாய்
நடத்தி அரசாண்ட மன்னனை கொன்றவர்கள்
குருவை கொன்ற மாணவன்,
சுய லாபத்திற்காக கள்ளுண்டவன் ,
பிறர் மனை பெண்டாள நினைத்தவன் ,
பொன் பொருள் திருடியவன்,
வஞ்சகம் செய்து நம்பிய உறவுகளுக்கு
விஷம் கொடுத்தவன் ,
ஆதரவு தேடி தம்மை சரண் அடைந்தவர்களுக்கு துயர் இளைத்தவர்கள்,
ஆதாரமில்லாமல் தன் சுய லாபத்திற்காக பிறர் மேல் வீண் பழி சுமத்தியவர்கள் ,
போர்களத்தில் அரசரை கை விட்டு ஓடியவர்கள் ,
நண்பனை ஏமாற்றி நம்பிக்கை துரோகம் செய்தவர்கள்,
யாகம் செய்யும் அந்தணர்க்கு இடையூறு செய்து யாகத்தை நிறுத்துபவர் ,
குழந்தைகளை கொன்றவர்கள் இவர்கள் செய்த பாவம் அவர்களை ஏழேழு ஜென்மங்களிலும் தொடர்ந்து வரும்.
ஆன்மா அது செய்த பாவ புண்ணிய பலன்களுக்கு தகுந்தவாறு அடுத்தடுத்து பிறபெடுக்கும்.
“ இதனை பாவம் செய்தவர்களும் முறையாக வழிபாடு செய்து சுய ஒழுக்கம் பேணி எனது பஞ்சாட்சர மந்திரத்தை அனுதினமும் உச்சரித்து ஒரு மண்டலத்திற்குள் ஒரு லக்ஷம் தடவை ஆத்மார்த்தமாக உச்சரிக்கும் போது அவர்கள் செய்த பாவங்கள் ஆதவன் முகம் கண்ட பனி போல விலகும் . அப்போது அவர்களுக்கு மோட்சதிற்கான பாதையை காண்பிப்பேன். உரிய காலம் வரும்போது நான் அவர்களை எனக்குள் ஐக்கியமாக்கி ஏற்று கொள்வேன் “ என்கிறார் ஈசன் .
ஈசனின் விளக்கத்தால் மகிழ்ச்சியுற்ற பிரம்மா நெடுஞ்சான் கிடையாக ஈசனின் திரு பாதம் தொழுது வணங்கினார் . பிரம்மாவின் ஆராதனை கண்டு மகிழ்வுற்ற முக்கண்ணன் , “ “அன்பில் சிறந்த நான் முகனே!!!! , வேண்டுவன கேள், ‘ தருகிறேன் ” என்றார்.
“ ஆன்மாவின் கணக்குகளை எப்படி கண்டறிவது , என் ஒருவனால் அது இயலாத காரியம் “ என்று பிரம்மா ஈசனிடம் கேட்டார் .
“ கவலை வேண்டாம் நான்முகனே , என்னிலிருந்து தோன்றும் நான்கு முனிவர்கள் உனக்கு அதற்க்கு உனக்கு உதவுவார்கள் .அதற்க்கான ஞானத்தையும் நானே வழங்குவேன்.சத்யா யுகம் முடிவடையும் வரை ஜனிக்கும் உயிர்களுக்கு மோட்சத்தின் வழி காட்டி மீண்டும் அவர்கள் நால்வரும் என்னை வந்தடைவர்.” என்று பிரம்மாவின் குழப்பத்திற்கு வழி காட்டி ஆசி வழங்கினார் . பின் சத்ய லோகம் நீங்கி கைலாயம் வந்தடைவார்.
விஸ்வ ரூப கற்பம் – ஈசானியம்
முந்தைய கற்பங்களில் ஈசனிடம் போதனை கேட்டு சிருஷ்டி செய்ய ஆரம்பித்ததை போலவே விஸ்வரூப கற்பதிலும் ஈசன் அருள் வேண்டி ஈசனை நோக்கி தவம் இருக்கிறார்.அப்போது சடையிலே பிறை நிலவும் , நெற்றியில் மூன்றாவது கண்ணும் கடைவாயில் கோரை பற்களுமாக, தன் இரு புறமும் இரு அன்னையருடன் தோன்றினார் . இந்த தோற்றமே ஈசானியம் ஆகும்.
அன்னையருடன் தோன்றிய ஈசனை கண்டு அகம் மகிழ்ந்து மலர்களால் அர்ச்சனை செய்து தொழுது சிருஷ்டிக்கான போதனை வேண்டி நிற்கிறார் .
அவரது வேண்டுதலால் அகம் மகிழ்ந்த ஈசன் , “ நான் முகனே , உன் வேண்டுதலால் பேரானந்தம் அடைந்தேன் . வேண்டுவன கேள் .தருகிறேன் “ என்றார்
“ பரம்பொருளே !! மஹா பிரபுவே!! சிருஷ்டிக்கான போதனை வேண்டியே தங்களை நோக்கி தவம் இருந்தேன் .இன்று இரு அன்னையருடன் தோன்றிய காரணம் என்ன!? “ என வினவுகிறார்
“ உனக்காக வேண்டியே இரு அன்னையரும் என்னுடன் தோன்றி இருக்கின்றனர் .ஒருவர் மூவுலகையும் காத்து எனக்கு உதவ வந்த அன்னை அகிலாண்டீஸ்வரி என் இடப்பாகம் நிற்கிறாள் .என் வலது புறம் இருப்பவர் வெள்ளை தாமரையில் உறையும் தேவி கலைவாணி ஆவார். உலகை காக்க என்னுடன் அன்னை அகிலாண்டீஸ்வரியும் , சிருஷ்டிக்கான குழப்பம் வரும் போதெல்லாம் அதற்க்கான ஞானத்தை வழங்க தேவி கலைவாணியும் உன்னுடன் இருப்பார்கள் .
பாவ புண்ணிய கணக்குகளை பார்த்து ஆன்மாக்களின் பிறப்பை கணக்கிட்டு உலக உயிர்களின் ஜனனத்தை நெறி படுத்த என்னிலிருந்து தோன்றும் நான்கு முனிவர்களும் உனக்கு உதவுவர் என்று அருளாசி வழங்கினார்
“ உலகமெல்லாம் உய்யும் வரை தருமா நெறிகளை நிலைநாட்டி உயிர்கள் வாழ எல்லா உயிருக்குள்ளும் நான் உறைந்திருப்பேன் .எப்போது ஒரு உயிரின் ஆன்மா தனக்குள் நான் உறைந்துள்ளதை உணருகிறதோ அப்போது அந்த உயிரின் முன்னே நான் தோன்றி மோட்சம் தந்து ஆட்கொள்வேன்.அந்த ஆன்மா ஒரு உடலுக்குள் இயக்கம் தர சக்தியை அன்னை ஈஸ்வரியும் , மோட்சதிற்கான ஞானம் தர அன்னை தேவி கலைவாணியும் நீ சிருஷ்டித்த உயிருக்கு உதவி செய்வர் என்று கூறி விட்டு அன்னை ஈஸ்வரியுடன் கைலாயம் திரும்புகிறார் . பிரம்மாவிற்கு ஞானம் வழங்க அன்னை சரஸ்வதி அவருக்கு உதவியாக சத்யலோகத்திலேயே தங்கி விடுகிறார் .
இப்படி ஒவ்வொரு கற்பதிலும் உயிர்கள் சிருஷ்டிக்கும் முறைகளில் மாற்றம் உண்டாகி இறுதில் இப்போது உள்ள நிலையை எட்டி உள்ளோம். இந்த நிலையில் தான் என்ற ஆணவம் மறைந்து இறைவன் உறைந்துள்ள உயிர்களில் தானும் ஒருவன் என்ற நிலை உணர வேண்டும்.எல்லா காரியங்களும் அவனால் நிகழ்த்தபடுகிறது என்பதை உணர வேண்டும்.மனிதர்களுக்கு மட்டுமல்ல .ஈசனிளிருந்து படைக்க பட்ட எல்லா தேவர்கள் , முனிவர்களுக்கும் இது பொருந்தும் . உலகில் தோன்றிய அனைத்தும் ஈசன் அம்சங்களே.தான் என்ற ஆணவம் தோன்றும் போது அதனை அடக்க ஈசனே வழி செய்வார்.
அப்படி " தான் " என்ற அகந்தையால் வழி தவறி நடந்தவருக்கு ஈசன் வழங்கிய தண்டனை என்ன?

லிங்க புராணம்
பதிவு - 27(2)
அடிமுடி தேட ஆணவம் அழித்த வரலாறு
கடந்த பதிவில் பிரம்மாவிற்கு சத்தியோசாதம் ,வாம தேவம்,தத்புருஷம் , அகோர ரூபம் ,விஸ்வ ரூபம் போன்ற மூர்த்தங்களில் மோட்சத்திற்கான வழி காட்டுவதாக கூறுகிறார் .யோக நிலைகளை தாண்டினாலும் மோட்சமடைய தேவையான எட்டு குணங்களில் கடைசி இரு குணங்களாகிய அங்காரக குணமும் , பிரம்ம குணமுமே மோட்சத்தின் பாதையை தீர்மானிக்கின்றன . இறைவனாயினும் அகங்கார குணத்திலிருந்து தப்ப இயலாது .
அகங்கார குணம் பெற்றதால் உலகிற்கு ஏற்பட்ட பிரச்சினைகளும் அதனை ஈசன் எவ்வாறு தீர்க்கிறார் என்பதையும் இன்றைய பதிவில் பார்க்கலாம்
வராக கல்பத்தின் இறுதி காலம்
வராக கல்பத்தின் இறுதி நாளில் பிரம்மா அவரது பகல் நேர கணக்கு முடிந்து உறங்கச் சென்றார். பிரளய காலம் துவங்கிய நேரம் சூரியன் தன இருந்த நிலையிலிருந்து பூமியை நெருங்கி வர உயிரினங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின .சில ஆண்டுகள் கழிந்ததும் இடை விடாமல் மழை பெய்ய ஆரம்பித்தது , அப்பொழுது பெரும் கடற்பெருக்குத் தோன்றி மீதமுள்ள உலக உயிர்கள் அனைத்தையும் அழித்தது. அதனால் உலகம் முழுதுமாய் மறைந்து விட்டது.
வைராஜ கல்பத்தின் தோற்றம்
வராக கல்ப காலம் முடிந்து வைராஜ கல்பம் துவங்குகிறது . பிரளய வெள்ளம் வடியாத நிலையில் திருமால் ஒரு ஆலிலைமேல் சின்னஞ் சிறிய குழந்தை வடிவத்துடன் உறங்கினார். இதனிடையே நான்முகனுக்கு இரவு நீங்கி பகல் ஆரம்பமானது. பிரம்மா கண் விழித்து அனைத்து தேவ மாந்தர்களையும் ஈரேழுலகங்களையும் திரட்டி இந்திரனையும் சிருஷ்டி செய்தார். முந்தைய கல்ப காலங்களில் நிகழ்ந்த நிகழ்வுகள் மறந்து போனதால் , இந்த உலக இயக்கம் நிகழ்வுகள் அனைத்தும் தன்னாலே எனக் கர்வம் கொண்டார் பிரம்ம தேவர்.தான் படைத்த உலகின் அழகை எண்ணி கர்வம் கொள்கிறார்.
பிரம்மா விஷ்ணு யார் பெரியவர் என்ற போட்டி
தானே முழுமுதற்கடவுள் என்ற எண்ணத்துடன் உலகை வலம் வரும் போது பாற்கடலில் திருமால் ஒரு ஆலிலைமேல் சின்னஞ் சிறிய குழந்தை வடிவத்துடன் யோகநித்திரையில் இருப்பதைக் காண்கிறார். அவரிடம் சென்று நீ யார்? என வினவினார். அதற்கு பதிலளித்த குழந்தை வடிவிலிருந்த திருமால்
" நான் உனது தந்தை " என்றார்.பத்ம கல்ப காலத்தில் நீ என் தொப்புள் கொடி வழி பிறந்தவன். இதனாலேயே உலக சிருஷ்டியில் அனைத்தும் தொப்புள் வழி பிறப்பெடுக்கும். இத்தனை உயிர்களை படைத்த உன்னை படைத்தவன் நானே .நானே உன் தந்தை " என்றார்.
இதனால் குழந்தை உருவிலிருந்த திருமாலுக்கும் , பிரம்ம தேவருக்கும் இருவருக்கும் இடையில் யார் பெரியவர் என்பதில் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. அது யார் பெரியவர் என்றளவில் பெரும் போரானது. இப் போரினால் சிருஷ்டியால் தோன்றிய உலக உயிர்கள் அனைத்தும் வாடின. உடன் அவர்கள் இருவருக்கும் நடுவே நாரதர் தோன்றி,
"நீங்களிருவருமே பெரியவர் கிடையாது. உங்கள் இருவரையும் விட சிவபெருமானே அனைவருக்கும் பெரியவர். நீங்கள் அவரிடம் சென்று யார் பெரியவர் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள் " என்று கூறி மறைந்தார். அதை ஏற்க இருவரும் தயாராக இல்லை.
ஈசனின் திருவிளையாடல்
இருப்பினும் விடாமல் போர் தொடர்ந்தது. வேறு வழி இல்லாமல் நாரதர் சிவ பெருமானிடம் கூற , சிவ பெருமான் அவர்கள் இருவருக்கும் இடையில் தோன்றி சமாதானப்படுத்த முன்றார். சமாதான முயற்சி தோல்வியில் முடிந்ததால் அவர்கள் இருவருக்கும் நடுவில் நெருப்பு மலையாய் தோன்றினார். அதிலிருந்து ஒரு அசரீரீ கேட்டது.
"உங்கள் இருவரில் எவர் எனது அடியையும், முடியையும் முதலில் கண்டு வருகிறிர்களோ அவர்களே பெரியவர் " என்று அசரீரீ கூறியது. ஏற்கனவே திருமால் வராக கற்பத்தில் வராக ரூபம் எடுத்து இருந்ததால் விரைவில் அடியைத் தேட எண்ணி வராக வடிவமெடுத்து பூமியை வட்ட வடிவில் குடைந்து குடைந்து தேட ஆரம்பித்தார்.
வேறு வழியில்லாமல் நான்முகன் அன்ன வாகனத்தில் ஏறி முடியைத் தேட ஆரம்பித்தார். இருவராலும் அடியையோ முடியையோ காண முடியவில்லை.
தாழம்பூ கூறிய பொய்சாட்சி
தலை முடியை தேடி மேலும் கீழும் சுற்றி அலைந்த பிரம்மா கண்ணுக்கு சிவன் தலையிலிருந்து வீழ்ந்த தாழம்பூ தென்பட்டது போட்டியை முடிவுக்கு கொண்டு வர தாழம்பூவிடம் தலை முடி பார்த்தாக சாட்சி கூற வேண்டும் என பிரம்ம தேவர் கேட்க அதற்கு தாழம்பூவும் ஒத்துக்கொண்டது. பிரம்மா தலை முடி கண்டதாக பொய் கூறிய, கர்வத்திற்கு காரணமான பிரம்மாவின் ஐந்தாவது தலையை கொய்து விடுகிறார். அத்துடன் பிரம்மாவின் கர்வமும் அழிந்தது.
சற்றும் கோபம் குறையாத சிவன், பிரம்மாவைப் பார்த்து " மற்றோர் உன்னை வணங்குவதால் தானே நீ பெரியவன் என்ற ஆணவம் வந்தது. உனக்கு இனி தனியாக கோவில்களோ, பூஜையோ கிடையாது. உனக்கு உறுதுணையாக இருந்த தாழம்பூவிற்கும் அதுவே தண்டணை, " என்கிறார்.
அத்துடன் பிரம்மாவின் கர்வம் அழிந்தது. அடி காண இயலாத விஷ்ணுவும் தன் தேடுதலை பாதியில் விட்டு சிவனை காண வந்தார்.இருவரும் சிவனே சரணம் என்று சிவனை சரணடைந்தனர். நடந்த நிகழ்வுகளின் உண்மையை உணர்ந்து மனம் வருந்தினர்.
உடன் இருவரும் ஒன்றாக அங்கே ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜிக்க எண்ணினர். தன் பாண வடிவத்தை தலை பாகமாக கொண்டு, பூமியை சுற்றி சுற்றி அகழ்ந்த விஷ்ணுவின் பாதையை நடு பாகமாக கொண்டு, மேலும் கீழும் அலைந்த பிரம்மாவின் பாதையை கீழ் பாகமாக கொண்டு என்றும் பிரம்மா அவர்கள் இருவருக்கும் கட்டுப்பட்டவர் என்று கூறும் விதமாக "லிங்க வடிவம்" கொடுத்தார்.
லிங்க மூர்த்தத்தில் பாண லிங்க மூர்த்தியாக தோன்றி லிங்க வழிபாட்டு முறைகள் போதித்தாலும் உண்மையான லிங்க வடிவம் தோன்றியது இந்த திருவிளையாடல் நிகழ்வில் தான்.
சிவ பெருமான் தீர்ப்பு
அந்த லிங்க வடிவத்தில் சிவபெருமான் தோன்றி இருவரிடத்திலும்”, நான்முகன் என் வலது புறத்திலும், திருமால் என் இடது புறத்திலும் தோன்றியவர்கள் எனவே எனக்கு இருவரும் ஒன்றே.நீங்கள் இருவரும் ஒவ்வொரு விதத்திலும் எனக்கு சமமானவர்களே என அருளாசி வணங்கி இருவரது கர்வமும் நீக்கி தன்னில் ஒருவராக ஆக்கி கொண்டார் .அன்று முதல் சிவன் பிரம்மா விஷ்ணு மூவரும் மும்மூர்த்திகள் என்று அழைக்கபடுகின்றனர்
பிரம்மா உண்மை உணர்ந்து வணங்குதல்
சிவ பெருமானின் வார்த்தைகளை கேட்டதும் பேரானந்தத்தில் கண்ணீர் மல்க வேண்டினார். “ ஆணவம் என்ற ஒன்று என்னுள்ளே நுழைந்ததால் என்னால் சுயமாக சிந்தித்து உண்மையை உணர வழி இன்றி பொய் விட்டது.இந்த நிலையை இனி வரும் நாட்களிலும் மாற்றி கொள்ள ஏதேனும் வழி உள்ளதா? “ என கேட்டார் .அதோடு மட்டுமின்றி குழந்தை வடிவிலுள்ள இவர் எப்படி என் தந்தையாவார் விளக்கம் தாருங்கள் " என்றும் கேட்கிறார்
“என்னில் அடியார்கள் கொண்ட பக்தி குன்றாத நிலையில் ஆணவம் மட்டுமல்ல , பிறர்க்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு தீய குணமும் தோன்றுவதில்லை . மனதில் உள்ளது அன்பு.மனமெங்கும் அன்பு நிறைய அங்கே நானே வந்தமர்வேன் .அங்கே அன்பே சிவமாய் மாறும் .அதற்கு என்னிலை வரினும் தன்னிலை மாறாத பக்தி செலுத்த வேண்டும், “ என்றார் .
பிரம்மாவிற்கு ஈசன் தந்த வரம்
“ நல்லது கூறினீர் ஈசனே . அப்படியெனில் எந்நிலையிலும் உங்கள் மீதான பக்தி குறையாத நிலையை எனக்கு அருள வேண்டும் .அப்போதுதான் என்னால் எவ்வித தடையுமின்றி சிருஷ்டியில் ஈடுபட முடியும் “ என பிரம்மா சிவனிடம் வேண்டுகிறார் . உங்கள் விருப்பபடியே நீங்கள் வேண்டும் வரம் தந்தேன் . இனி வரும் காலங்களில் எந்த சூழ்நிலையிலும் என் மீதான உன் பக்தி குறையதிருக்கட்டும் “ என சிவன் அவருக்கு அருள் புரிகிறார் .
தொடர்ந்து , " நீ முந்தைய கற்ப காலங்களின் நிகழ்வுகளை ஒவ்வொரு பிரளய முடிவிலும் மறந்து விடுவாய் . ஒவ்வொரு கல்பத்தின் ஆரம்பத்திலும் நானே வேதங்கள் , ஆகமங்கள் அனைத்தையும் கற்று கொடுத்து , உன் சிருஷ்டி பணியில் துணை புரிய நான்கு முனிவர்களையும் தருவேன். அப்படித்தான் நீ பத்ம கல்பத்தில் திருமாலுக்கு மகனாக அவரது நாபி கமலத்திலிருந்து பிறந்தாய் " என்று பிரம்மாவின் சந்தேகத்திற்கு விளக்கம் அளிக்கிறார் .
பத்ம கல்பத்தில் ஏன் பிரம்மா விஷ்ணுவின் நாபி கமலத்திலிருந்து பிறப்பெடுக்கிறார் . அதையும் ஈசனே விளக்கமாக கூறுகிறார் .அதனை அடுத்த பதிவில் காணலாம். 

லிங்க புராணம்
பதிவு - 28
உயிர்கள் பிறப்புக்கு தொப்புள்கொடி ஏன் வழி அமைத்து கொடுக்கிறது ? என்பதற்கான விளக்கம்
பிரம்மனின் கர்வம் போக்கி அகங்கார குணத்திலிருந்து பிரம்மகுணத்தை அடையாமல் மோட்சம் கிடைக்காது என்ன தான் கல்வி ஞானமும் ,செல்வமும், வீரமும் இருந்தாலும் பக்தி ஒன்றே மோட்சதிர்க்கான ஒரே வழி என்பதை பிரம்மவிற்கே தன் திருவிளையாடல் மூலமாக ஈசன் போதிக்கிறார் .அதனால் தான் மோட்சம் அடைவதற்கான பக்தி நிலை அவரது பெயராலேயே பிரம்ம குணம் என்று அழைக்க படுகிறது.
பிரம்மாவின் சந்தேகம்
சிவ பெருமான் பிரம்மனின் அகங்காரம் அழித்து , நிகழ்வுகள் சிருஷ்டி எங்கிருந்து துவங்கி எங்கே முடிவடைகிறது என்பதை பற்றிய ஞானம் அளிக்கிறார் . அப்போது “ பகவான் மஹா விஷ்ணு உனக்கு தந்தை என்று கூறுகிறார் .
"ஆரம்ப உலகின் பெரு வெடிப்பில் நாம் மூவரும் ஒன்றாய் தோன்றினோம் என்று நீங்கள் கூறினீர்கள் . இப்போது பகவான் மஹா விஷ்ணு எனக்கு தந்தை என்கிறீர்கள் . இது இரண்டில் எது உண்மை என்று எனக்கு விளக்கி கூற வேண்டும் ? " என்று ஈசனின் திருவடிகளில் நெடுஞ்சான் கிடையாக விழுந்து வேண்டுகிறார் .
பிரம்மனின் வேண்டுதலில் மனம் மகிழ்ந்த ஈசன் , “ சத்திய லோகத்தின் நாயகனே , சிருஷ்டியின் மூல பொருளே !!! நான்முகனே!!! உலக நிகழ்வுகளின் மாற்றத்தில் நிகழ்ந்த இரண்டுமே உண்மை தான் . வாம தேவ கல்பத்தில் முதன் முதலாக பெரு வெடிப்பு நிகழ்த்த போது நாம் மூவரும் உருவாகினோம் . நான் உங்களுக்கு சிருஷ்டி ,உலகத்தின் தோற்றம் ,உயிர்களின் வடிவம் எல்லாவற்றையும் உபதேசித்தேன் . ஒவ்வொரு கல்பத்திலும் நானே உனக்கு எல்லாவற்றையும் கற்று தருவேன் . உங்களுக்கு உதவியாக நான்கு முனிவர்களையும் நானே தருவேன் . ஒவ்வொரு கல்பம் முடிவிலும் அவர்கள் மீண்டும் என்னை சேர்வர் .ஒவ்வொரு கல்பத்தின் முடிவிலும் சந்தி காலத்தில் நீங்கள் உறங்கி ஓய்வெடுக்க செல்வீர்கள். அந்நிலையில் முந்தைய கல்பத்தின் நினைவுகள் அனைத்தும் முற்றிலுமாக அழிக்கப்படும் .நீங்கள் உறக்கம் கழிந்து எழுந்ததும் நானே உங்களுக்கு வழக்கம் போல எல்லாவற்றையும் கற்று கொடுப்பேன் . என்று விளக்கி சொல்கிறார்
சந்தி கால நிகழ்வுகள்
எல்லா சந்தி காலத்திலும் நீங்கள் உறங்க சென்று விடுவீர்கள் .நான் தியானத்தில் இருப்பேன் .இந்நிலையில் உலக நிகழ்வுகளை காத்து நிற்ப்பது மஹா விஷ்ணு அவர்களே அவருக்கு ஓய்வு என்பதே கிடையாது . எனவேதான் எப்போதும் திருப்பாற்கடலில் யோக நித்திரையில் இருந்து கொண்டே உலக உயிர்கள் அனைத்தையும் காத்து ரட்சித்து வருகிறார்”.
பத்ம கல்பம்
“ உலக நிகழ்வுகள் மாறி வரும் வேளையில் பத்ம கல்பத்தின் தோற்றத்தில் முதல் நாளன்று நான் தியானத்திலிருந்து எழும் முன் நீங்கள் உறக்கத்திலிருந்து எழுந்து விட்டர்கள். என்ன செய்வது என தெரியாமல் உயிர்களை எப்படி சிருஷ்டிப்பது என யோசித்து கொண்டே ஈரேழு பதினான்கு லோகங்களையும் சுற்றி வந்தீர்கள் . ஸ்ரீ வைகுண்ட லோகம் வரும் போது மஹா விஷ்ணு அவர்கள் யோகா நித்திரையில் உலக நிகழ்வுகளை காத்து கொண்டிருந்தார். அவரிடம் சென்று நீங்கள் யார் இங்கு என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டீர்கள் .
பத்ம கல்பத்தின் நிகழும் நிகழ்வுகள்
பிரம்மா வயிற்றில் மஹா விஷ்ணு உலகை காணல்
“ ஈரேழு பதினான்கு லோகங்களையும் படைத்து காத்து ரட்சிப்பவன் நானே என்னை தெரிய வில்லையா ? “ என்று மஹா விஷ்ணு பிரம்மாவிடம் கேட்கிறார் .
கோவம் கொண்ட பிரம்மா “ நானே படைப்பவன் . நானே உலகையும் உயிர்களையும் படைத்தவன் .அப்படி இருக்க நீ எப்படி உயிர்களை படைத்தவன் என்று கூறலாம் “ என்று மஹா விஷ்ணுவிடம் சண்டையிடுகிறார் .
“ அதை நான் எப்படி நம்புவது “ என்று மஹா விஷ்ணு கேட்க “ நீங்கள் என் வாய் வழியே என் வயிற்றுக்குள் நுழையுங்கள் .என் வயிற்றில் ஈரேழு லோகங்களையும் எப்படி உருவாக்கினேன் என்று காட்டுகிறேன் என்று பதில் சவால் விடுகிறார் பிரம்மா .
மஹா விஷ்ணுவும் பிரம்மா வயிற்றுக்குள் நுழைந்து ஈரேழு பதினான்கு லோகங்களையும் சுற்றி பார்த்து விட்டு வெளியே வந்து விடுகிறார் .
“இப்போதாவது நம்புகிறாயா மஹா விஷ்ணு ,இது போல் உன் வயிற்றிலும் உலகை எனக்கு காட்ட முடியும்மா “ என்று கேட்டார்
மகாவிஷ்ணு வயிற்றில் பிரம்மா உலகம் காணல்
அகங்காரம் கொண்டு பிதற்றும் பிரம்மாவிற்கு பாடம் புகட்ட முடிவு செய்தார் மகாவிஷ்ணு.
“ என்னாலும் உலகை சிருஷ்டிக்க முடியும்.சந்தேகம் இருந்தால் நீங்கள் என் வயிற்றில் நுழைந்து பாருங்கள் “ என்றார். பிரம்மா மகாவிஷ்ணு வாய் வழியாக வயிற்றுக்குள் நுழைய உலகம் தோற்றம் முதல் இன்றைய காலம் வரை நடத்த மாற்றங்கள் அனைத்தையும் காட்சியாய் தெரிகிறது.இப்போது படைக்க போகும் உலகையும் காட்டுகிறார்.அது பிரம்மா படைத்த உலகை விட மிக சிறப்பாக இருந்தது. பிரம்மித்துப் போன பிரம்மா ஆச்சரியம் நிறைந்த மனதுடன் வெளி வர முயல்கிறார்.அதே நேரம் பிரம்மாவின் கர்வம் அடக்க வயிற்றுக்குள்ளிருந்து வெளி வரும் அத்தனை வழிகளையும் அடைத்து விடுகிறார்.
நாபிக் கமலத்தில் பிரம்மா தோன்றுதல்
வயிற்றின் மையப்பகுதியில் பிரம்மா உந்தி தள்ள அங்கே நாபி உருவாகி ஒரு குழாய் போல நீண்டு கொண்டே போகிறது. பிரம்மா மேல் நோக்கி நகர நகர தண்டும் நீண்டு கொண்டே போகிறது. அப்போது பிரம்மாவை காணாது தேடி வந்த ஈசன் அவர்கள் இருவருக்கும் இடையில் தோன்றி காட்சியளிக்கிறார்.அப்போது நீண்டு வந்த தண்டு போன்ற பகுதியின் மேல் பகுதியில் ஈசனின் பேரொளி தாளாமல் தாமரை மலர் தோன்றி மலர்கிறது. அங்கே வயிற்றிலிருந்து வெளி வந்த பிரம்மா தாமரை மலர் மேல் அமர்கிறார்.
அப்பொழுது கண் கூசும் வெண்ணிற ஒளியோடு , பிறை சூடி நின்ற ஈசனை கண்டு யாரென புரியாமல் திகைத்து , மகா விஷ்ணுவிடம்
“ பெருந்தகையீர் என்னை போலவே நீங்களும் சிருஷ்டிக்க அறிந்தவர் என அறிந்து கொண்டேன்.நாம் இருவரும் இன்னும் சிருஷ்டி செய்ய ஆரம்பிக்க வில்லை. இந்நிலையில் நம்முடன் தோன்றிய இவர் யார் “ என கேட்கிறார்.
மகாவிஷ்ணு உண்மை உறைவித்து அருளுதல்
“ பேரருள் கொண்ட சிருஷ்டியின் நாயகனே !!! அழிந்திடா பொருளாய், ஆதியாய் ,அகண்டமாய் ,பேரண்டமாய் ,ஆதியாய் ,அமலமாய் ,வேதங்களும் அறிய முடியாத பரம்பொருலாய் ,வெண் மதியம் அணிந்த குழலகனை அக்ஞானம் கொண்ட காரணத்தினால் உன்னால் அறிய இயல வில்லை .ஈசனின் திரு உளம் காரணமாக நெருப்பால் உருவான அண்டம் நீரால் சூழ்ந்து மண்ணாக மாறி உலகமாய் உருவானது. உருவான காலம் முதல் என்ன செய்வதென ஆயிரம் ஆண்டுகள் வெறுமனே அலைந்து திரிந்தாய் .ஈசனின் கட்டளையால் நீரும் மண்ணும் காற்றும் நெருப்பும்,ஆகாயயுமாக ஒன்று சேர்த்து அண்டத்தை உருவாக்கி ஈரேழு பதினான்கு லோகங்களும் உருவானது .அதனை எக்காலமும் காத்து நிற்பதையே நான் கடமையாக ஏற்றேன் “.
“ஒவ்வொரு கல்பமும் உனக்கு வேத மந்திரங்கள் ,சிருஷ்டி தத்துவங்கள் போதித்து உனக்கு உதவ சன,சனந்த,சனந்தர, சனாதன முனிவர்களை தோற்றுவித்தவர்.நம் இருவருக்கும் சிருஷ்டி இரகசியங்கள் அனைத்தும் கற்றுத் தந்தவர் " என சிவனது பெருமைகளை கூறி பின் ஒவ்வொரு கல்பத்திலும் அவர் கூறும் வழிகளிலேயே சிருஷ்டி செய்கிறீர்கள் சத்திய லோக அதிபதியே “ என விளக்குகிறார்.
ஈசனின் வரம் நாபியில் சிருஷ்டி யின் துவக்கம்
மகாவிஷ்ணுவின் மதுர வார்த்தைகள் கேட்டு உண்மை உணர்ந்த பிரம்மா மன்னிப்பு கோரினார்.பின் இருவரும் ஈசனை அவரது நாமங்கள் கூறி தொழுது வணங்கினார்கள்.
அதில் மனம் மகிழ்ந்த சிவன்
" ஒவ்வொரு முறை சிருஷ்டி துவங்கும் போதும் ஏதேனும் ஐயம் எழுப்பி , சிருஷ்டியை தாமத படுத்துகிறீர்கள் பிரம்மா . இந்த முறை முதல் சிருஷ்டி இன்றைய நிகழ்வுகள் போலவே அமையட்டும்.மகாவிஷ்ணு நாபிக் கமலத்தில் தோன்றியதால் அவர் உனது தந்தையாவார்,நீ அவரது மகனாவாய்.
" எப்படி அவர் சிருஷ்டி இரகசியங்களை தோற்றம் முதல் இன்றைய நாள் வரை கற்று தந்தாரோ அது போல ஜனனத்தால் பிரசவிக்கும் உயிருக்கு அதனை பிரசவித்த உயிரே எல்லாவற்றையும் கற்றுத்தரும். இந்த மாற்றம் இந்த கல்பம் முதல் இனி வரும் கல்பங்கள் அனைத்திலும் உயிர் பிறப்புகள் அனைத்தும் நாபியின் வழியிலேயே சிருஷ்டிக்க படும்" என ஈசன் வரம் வழங்குகிறார்.
ஈசனின் வரத்தால் மனம் மகிழ்ந்த பிரம்மா ஈசன்,மகாவிஷ்ணு இருவரையும் தொழுது ,
" ஒவ்வொரு கல்பத்திலும் துவக்கத்தில் சிருஷ்டி ஆரம்பிக்க ஒவ்வொரு முறையும் உங்களையே நாட வேண்டி உள்ளது. இந்நிலை மாற நானே தன்னிச்சையாக சிருஷ்டி செய்யும் ஞானமும், உங்கள் வழிகாட்டுதல் இல்லாமல் நானே உலகம் தோன்றியதும் சிருஷ்டி செய்ய வேண்டும் " என வேண்டுகிறார்
“ செங்கமலத்தில் வீற்றிருக்கும் சிங்கார நாயகனே !!! நாபி வழியாக உயிர் ஜனிக்க ஞானம் உங்களுக்கு தந்தேன். என்றவர் என் அனுமதியின்றி,என் வழிகாட்டுதல் இன்றி சிருஷ்டி இங்கே நடக்காது . சத்திய கல்பத்தில் இப்படித்தான் என் யோக நிலை மீண்டு வரும் முன் தன்னிச்சையாக சிருஷ்டிக்க முயன்று இன்னலுற்ற கதையை கூறுகிறேன் கேளுங்கள் " என்றார்.அவர் என்ன கூறிஇருப்பார் அடுத்த பதிவில் காணலாம்
குறிப்பு :
உலக அறிவை பெற்றோர்தான் கற்றுத் தர வேண்டும் என்பதையும், பாராட்டி பிறந்த உயிர்களை வளர்க்கும் உயிர்கள் அனைத்தும் நாபிக்கமலம் வழியே பிறப்பெடுக்க வேண்டும் என்பதை பத்ம கல்ப நிகழ்வுகள் வாயிலாக ஈசன் முடிவு செய்கிறார். 

லிங்க புராணம்
பதிவு - 30
பிரம்மாவின் தடுமாற்றம் - வியாசர் தோற்றுவிக்க காரணம்
கடந்த பதிவு
பத்ம கல்பத்தில் பிரம்மாவின் சிருஷ்டி ஆணவம் நீக்க மஹா விஷ்ணு அவரை நாபிகமலத்தின் வழியே பிரசவிக்கிறார் . அப்போது சிவன் அவர்முன் தோன்றி கடந்த கால நிகழ்வுகளை கூறி பிரம்மாவின் சந்தேகம் தீர்க்கிறார் .அப்போது பிரம்மா " ஒவ்வொரு கல்பத்திலும் உங்கள் வழி நடத்துதலில் சிருஷ்டி செய்கிறேன். தன்னிச்சையாக சிருஷ்டி செய்யும் ஞானம் வழங்க வேண்டும் " என வேண்டுகிறார் .
அதற்கு ஈசன், " நீ தன்னிச்சையாக சிருஷ்டி செய்ய இயலாது .எல்லாமே இயற்கையின் நியதி படியே நடக்க வேண்டும் . சத்ய கல்பத்தில் இயற்கையை மீறி தன்னிச்சையாக நீ செயல்பட்டதால் நடந்த நிகழ்வுகள் பற்றி கூறுகிறேன் .கேளுங்கள் ! " என்று கூற ஆரம்பிக்கிறார் .
பிரம்மாவின் தனிமை
சத்திய கல்பத்தின் துவக்கத்தில் ஈசன் தியானம் கழிந்து விழிப்பதற்கு முன்பாகவே பிரம்மா விழித்து கொள்கிறார் அவரை சுற்றி பிரளய கால வெள்ளம் மட்டுமே. வைகுண்டத்தில் மஹா விஷ்ணுவும் யோக நித்திரையில் இருக்கிறார் .தூக்கம் களைந்து எழும் பிரம்மாவிற்கு சிருஷ்டிக்கான சக்தி இருப்பதில்லை .சிருஷ்டிக்கான சக்தியும் ஞானமும் சிவன் அளிப்பதே . மனம் முழுக்க சிருஸ்டி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே பிரம்மாவிடம் இருந்தது . எப்போதுமே சிருஷ்டிக்கான தருணம் வரும் போது ஈசனே நேரில் தோன்றி ஞானம் வழங்குவார்.
ருத்திரர் தோற்றம்
இதனால் தனிமையில் என்ன செய்வது என தவித்த பிரம்மா சிருஷ்டி செய்ய வேண்டி ஈசனை நோக்கி தாமரை மலர் மீது அமர்ந்து கடும் தவம் மேற்கொண்டார் . சிருஷ்டிக்கான தருணம் வரும் முன்பாக பிரம்மா அவசரப்பட்டதால் அவரது தவத்தின் பலன் ஈசனை சென்றடைய வில்லை .ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தவம் இருந்தும் எதுவும் நிகழவில்லை .இதனால் மனம் வருத்தபட்டு தன் உடலில் இருந்து உயிரை பிரித்து ஈசனிடத்தில் ஐக்கியமாக எண்ணி பிரளய வெள்ளத்தில் குதித்து விடுகிறார் . உடலில் இருந்து உயிரை பிரித்து ஈசனை நோக்கி செலுத்துகிறார்.அவரது ஆத்மா ஈசனை சென்றடையும் போது பதினோரு ருத்ரர்களாக மாறி ஈசனுள் நுழைய முயல்கிறது . இயற்கை நியதிக்கு மாறான நிகழ்வால் ஈசன் தியானம் கலைந்து எழுகிறார் . பதினோரு ருத்திரர்களையும் தன்னுள் ஏற்று கொண்டு தன் பரமாத்மா ரூபத்திலிருந்து பிரம்மாவை தோற்றுவிக்கிறார் . பிரம்மாவிற்கு முன்னர் நடந்த நிகழ்வுகளை உணரும் ஞானம் தந்து சத்ய கலபங்களுக்கு முன்னர் நிகழ்ந்த கல்பங்களில் சிருஷ்டி உருவான விதங்களை பற்றி கற்றுத் தருகிறார் .
ஸ்வேதாவராககற்பம் – சத்தியோசாதம்
மஹா பரார்த்த காலம் முடிந்து மஹா பிரளயம் தோன்றி உயிர்கள் சிருஷ்டி ஆரம்பித்த சமயம் , பெரு வெடிப்பிலிருந்து நான் , மஹா விஷ்ணு , நீ மூவரும் தோன்றினோம்.அப்போது சிருஷ்டிகாக என்னை நீ துதித்து வேண்டிய போது வேதங்களும், வேத மந்திரங்களும் போதித்து சிருஷ்டிக்கான ஞானமும் அளித்தேன் . மறைகள் என் தோற்றத்தை சத்தியோசாதம் என்று கொண்டாடினர்.
இரந்தர கல்பம் – வாம தேவம்
மற்றொரு முறை இரந்தர கல்பத்தில் நீ என்னை வேண்டிய போது நான் இளஞ்சூரியன் போல செந்நிற பிரகாசத்தோடு தோன்றினேன் .மானும் மழுவும் கையில் ஏந்தி கண்டத்தில் சர்ப்பம் ஏந்தி தியான கோலத்தில் உனக்கு சிருஷ்டி ஞானம் போதித்தேன் . வையகம் என் தோற்றத்தை வாம தேவன் என கொண்டாடியது
பிதுர் கற்பம் – தத்புருஷம்
பிதுர் கல்பத்தில் சிருஷ்டி மோட்சம் இரண்டின் வழி கேட்டு நீ தியானம் செய்த போது உனக்கு அருள் செய்ய இருளை போக்கும் பொன்னிற சடையிலே வெண்மதி அணிந்து காட்சி அளித்தேன் . அப்போது மோட்சத்தின் பாதையை , அதற்கான வழி காட்ட காயத்திரி மந்திரங்களை உருவாக்கி என் முகத்திலிருந்து காயத்திரி தேவியை உனக்கு உதவ படைத்தேன் .அப்போது என்னை தத் புருஷன் என நீ கொண்டாடினாய் .
🏵 🌼நீல கற்பம் – அகோர ரூபம் 🌼 🏵
நீல கற்பத்தில் உயிர்கள் சிருஷ்டிக்கும், மோட்சத்திற்கும் வழி கேட்டு நீ என் அனுக்ரகம் வேண்டி நின்ற போது , நான் இடது கையில் தீச் சுடரும் , வலது கையில் வாளும் ஏந்தி கரிய ரூபத்துடன் தோன்றினேன். அந்த தோற்றத்தை அகோர ரூபம் என அழைத்தார்கள்
அப்போது " மறு பிறப்பெடுக்கும் உயிர்கள் எவ்வாறு மோட்சம் எடுக்கும் ? " என சந்தேகம் கேட்டீர்கள், ஏழேழு ஜென்மங்களிலும் தொடர்ந்து வரும்.ஆன்மா அது செய்த பாவ புண்ணிய பலன்களுக்கு தகுந்தவாறு அடுத்தடுத்து பிறப்பெடுக்கும். கடைசி ஏழு ஜென்மங்களில் தொடர்ந்து புண்ணியம் செய்து எட்டு குணங்கள் பெற்று தன்னுள் என்னை உணரும் போது அந்த ஆன்மாவை நான் ஆட்கொண்டு மோட்சம் தருவேன் என்று நான் கூறினேன் " எனறார் ஈசன்.
விஸ்வ ரூப கற்பம் – ஈசானியம்
" விஸ்வரூப கல்பத்தில் சிருஷ்டி மோட்சம் இரண்டின் வழி கேட்டு நீ தியானம் செய்த போது சடையிலே பிறை நிலவும் , நெற்றியில் மூன்றாவது கண்ணும் கடைவாயில் கோரை பற்களுமாக, தன் இரு புறமும் இரு அன்னையருடன் தோன்றினார் . இந்த தோற்றமே ஈசானியம் ஆகும். அன்னையருடன் தோன்றிய என்னை கண்டு அகம் மகிழ்ந்து மலர்களால் அர்ச்சனை செய்து தொழுது சிருஷ்டிக்கான போதனை வேண்டி நின்றாய்.
அப்போது என்னுடன் உருவான அகிலண்டேஸ்வரியை அண்டத்து நிகழ்வுகளை காக்கவும்,சரஸ்வதி தேவியை உன் சிருஷ்டிக்கான ஞானம் தந்து வழி நடத்தவும் தந்தேன் .என் இந்த ஐந்து சொரூபங்களை உணர்ந்து ஆத்மார்த்தமாக வழிபடும்போது மோட்சதிற்கான வழி காட்டுவேன்
இப்படி இதற்கு முன் நடந்த எல்லா கல்பங்களிலும் சிருஷ்டிக்கான போதனைகளை யானே தந்தேன் " என்று பிரம்மாவிற்கு முந்தைய சிருஷ்டி நிகழ்வுகளை கூறி நினைவு படுத்தினார்.
வியாசர் உருவாதல்
அப்போது பிரம்மா , “ உங்களிடம் இருந்து ஞானம் பெற்ற என்னாலையே உங்கள் ஞானத்தை உணர்ந்து கொண்டு நினைவு படுத்த இயல வில்லையே .பின்னர் படைக்கப்படும் உயிர்கள் மோட்சத்தின் வழியை எவ்வாறு காணும். வழி பாட்டு மந்திரங்களை எப்படி கற்றுகொள்ளும் .தன படைப்பின் ரகசியம் உணர்ந்து எப்படி உங்களை உணர்ந்து மீண்டும் உங்களை வந்தடையும் “ என்று கேட்டார் .
“நல்லது உரைத்தீர் நான் முகனே . ஒவ்வொரு சதுர்யுகத்திலும் துவாபர யுகத்தில் வேத வியாசர் என்ற நாமத்தில் ஒருவரை சிருஷ்டி செய்யுங்கள் .அவர் ஒவ்வொரு கல்பத்திலும் ஒவ்வொரு யுகத்திலும் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் புராணங்களாகவும் , இதிகாசங்களாகவும் பகுத்து பிரித்து எழுதுவார் .அவரிடமிருந்து சப்த ரிசிகளும் , முனிவர்களும் கற்று கொண்டு அவர் தம் சீடர்களுக்கு போதிப்பார். “
கலியுக அவலம்
“ உயிர்களிடத்து ஆத்மார்த்தமான இறை நம்பிக்கையும், விசுவாசமான குரு பக்தியும் உள்ளவரை புராணங்கள் , இதிகாசங்கள் பற்றிய ஞானம் தலை தோங்கும் . இறை நம்பிக்கை குறையும் போது ஆணவமும் கௌரவமும் ஒருங்கிணைய தங்களை மதிக்க வேண்டும். போற்றி புகழ வேண்டும் என்பதற்காக தாங்களாகவே ஒரு வழிபாட்டு முறையை உருவாக்கி கொண்டு தெய்வ நிந்தனை செய்வார்கள் .அப்போது பூஜை வழிபாடுகளின் பலனை ஏற்று கொண்டு காத்து ரட்சிக்கும் விஷ்ணு புராணங்கள் உப புராணங்களின் சாரத்தை எடுத்து கொண்டு காத்து ரட்சிப்பார்” .
“கலியுகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தெய்வ நிந்தனை செய்து தான் உருவாக்கிய வழிபாட்டு மார்க்கத்தை உண்மை எனவும் , மற்ற வழிபாடுகளை போலி எனவும் நம்ப வைப்பார்கள். அந்நிலையில் எந்நிலையிலும் தன்னிலை மாறாமல் எம்மை பக்தி செய்து வழிபாடு செய்பவர்களுக்கு மட்டுமே மோட்சத்திற்கான பாதை காட்டி நம்முடன் ஏற்று கொள்வோம் . மற்றவர்கள் நோய் , பஞ்சம் , பசி ,வஞ்சம் , கொலை போன்றவைகளால் உயிர் நீத்து நரக லோகத்தையும் வைதரணி நதியையும் நிறைக்க வைப்பார்கள் .கங்கையும் தன் புனிதம் இழந்து கண்ணீர் வடிப்பார் . பாவங்களின் பாரம் தங்காமல் பூமா தேவியும் கங்கையும் கதறும் போது பிரளயம் வந்து உலகம் அழிக்கும் . பின்னர் அடுத்த சதுர்யுகம் தோன்றும்”
முதல் இரு யுகங்களிலும் முறையான வழி பாடும் வேத ஞானமும் உலகத்தின் ஆயுளையும் , உயிர்களின் ஆயுளையும் நீட்டித்து வைக்கும்.துவாபர யுகத்தில் சுயநலமும் வஞ்சகமும் கற்று தரப்பட்டு உறவுகளுக்குள்ளாகவே ஒருவரை ஒருவர் கொள்ளும் நிலை ஏற்படும்” என ஈசன் பிரம்மாவிற்கு அவர் மறந்து போன நிகழ்வுகளை போதிக்கிறார் .
பிரம்மா அவர் கூறும் போது இடையில் குறுக்கிட்டு , “அப்போது நம்மையே நினைத்து நம்மை வழிபடும் உயிர்களின் நிலை என்ன என்று கேக்கிறார் .
“அவர்களை வழி நடத்தவே வேத வியாசர் ஒவ்வொரு சதுர்யுகத்திலும் தோன்றி , நம் மீது பக்தி கொண்ட உயிர்களுக்கு பக்தி மார்க்கம் காண்பித்து மோட்சத்தின் பாதை காட்டுவார் என ஈசன் பதில் கூறுகிறார் .
“எப்போது அவர்களுக்கு அதற்க்கான ஞானம் கிடைக்கும்” என்று பிரம்மா ஈசனிடம் கேட்கிறார் .ஆத்மார்த்தமாக எனை உணர்ந்து என் ஐந்து சொரூபங்களை தியானித்து லிங்க வழிபாடு செய்வதன் மூலம் யோகநிலைகளை கடக்க செய்து எட்டு குணங்கள் அருளி மோட்சம் தந்து என்னுடன் ஏற்று கொள்வேன் “ என்று கூற பிரம்மா தன் அனைத்து சந்தேகங்களும் நீங்கி வணங்கி விடை பெற்று சத்திய லோகம் சென்று நடைபெறும் இந்த கல்பத்தில் சிருஷ்டி செய்ய ஆரம்பிக்கிறார் .
நைமிசாரண்ய வனத்தில் சூதக முனிவர் ஈசனின் திரு சொருபங்களையும், பிரம்மாவிற்கு அவர் கூறிய போதனை களையும் கூறி லிங்க புராண கதையை தொடர்ச்சியாக கூறி விளக்குகிறார் .
அப்போது ஒரு சீடர் எழுந்து , " ஈசன் கூறிய லிங்க வழிபாடு இப்போதும் கடை பிடிக்க படுகிறதா ?! .அதனை கடை பிடித்து எங்களாலும் மோட்சம் பெற இயலும்மா ? "
. என கேட்கிறார் .
அதற்கு சூதக முனிவர் என்ன பதில் கூறி இருப்பார் ?
பதிவு - 31
முன் கதை
நைமிசாரணிய வனத்தில் சூதக முனிவர் லிங்க புராணத்தில் ஈசனின் மகிமைகளை தன் சீடர்களுக்கு சொல்லிக்கொண்டு இருக்கிறார் . அப்போது கதையில் சிவன் இந்திரன் , விஷ்ணு, பிரம்மா மூவருக்கும் லிங்க வழிபாடு பற்றி விளக்கி வருவதை விவரிக்கிறார் .
அப்போது ஒரு சீடர் இடைமறித்து
"லிங்க வழிபாடு இப்பொழுதும் செய்ய படுகிறதா !! நாம் லிங்க வழிபாடு செய்வதாக இருந்தால் எங்கனம் செய்வது"
என்று கேள்வி எழுப்புகிறார்
லிங்க வழிபாடு சூதக முனிவர் கற்று கொண்ட விதம் :
கற்று கொள்ளும் ஆர்வம் மிகுந்த சீடர்களே “ முன்னொரு நாள் ஈசன் கல்ப கால தோற்றத்தின் போது உமை அன்னைக்கு லிங்க வழிபாடு பற்றி போதித்தார் .
அப்போது உடனிருந்த நந்தீஸ்வரர்க்கும் போதித்தார். நந்திகேஸ்வரர் சனக சனாதன சகோதரர்களுக்கு போதித்தார் .வேதங்களை வியாசருக்கு போதிக்கும் போது அவர்கள் வியாச முனிவருக்கும் கற்று கொடுத்தனர்.
வியாச முனிவர் தன் சீடர்களுக்கு வேத ஆகமங்களை கற்று கொடுக்கும்போது லிங்க வழிபாட்டையும் கற்று கொடுத்தார் .அவரது சீடனான நான் உங்களுக்கு இப்போது கற்று கொடுக்கிறேன்
என்று கூறி முக்கண்ணனின் லிங்க வழிபாட்டை தன சீடர்களுக்கு கற்று தருகிறார் .
லிங்க வழிபாடு
லிங்க வழிபாடு உடல் சுத்தம்,மனசுத்தம் வாக்கு சுத்தம்,செயல் சுத்தம் அனைத்தையும் அடிப்படையாக கொண்டது
👉உடல் சுத்தம் ஸ்நானானதாலும்
👉மன சுத்தம் தியானத்தாலும்
👉வாக்கு சுத்தம் வேத மந்திரங்களாலும்
👉செயல் சுத்தம் லிங்க சொரூபத்திற்கு செய்யும் அபிஷேக ஆராதனைகளாலும் கிடைக்கும் . லிங்க வழிபாட்டால் பெறப்படும் ஆன்மாவின் சுத்தமானது பரப்பிரம்மத்தின் 26 நிலைகளை கடக்க உதவும்.
உடல் சுத்தம் ( ஸ்நானம் )
நல்ல நீரோட்டமுள்ள புண்ணிய நதியில் நீராடுதல் , அக்கினி பிரவேசம் , நன்னெறியில் நடத்தல் ஆகிய மூன்றும் நம்மை சுத்தம் செய்யும்.வழிகளாகும் .
மண்ணாலோ , கொமயத்தலோ உடலை சுத்தம் செய்து கொண்டு புண்ணிய நதியில் நீராட வேண்டும்.நீராடும் போது ஈசனையும் , வருணனையும் மனத்தால் தியானிக்க வேண்டும் .
தர்ப்பை புல்லாலோ , பலா இலையினாலோ , நறுமணம் கமழும் மலராலோ தண்ணீரில் தோய்த்து தலையில் மூன்று முறை தெளித்து மந்திரங்கள் உச்சரித்து உள்ளங்கையில் நீரள்ளி ஊற்றி அர்க்கியம் விட்டு ஆயிரத்தெட்டு காயத்திரி மந்திரங்களை உச்சரிக்க வேண்டும் .
பூணூலை வலமாக அணிந்து ஈசனை தியானித்து விரல் நுனியால் தேவர்களுக்கும் , மோதிர விரலில் தர்ப்பை அணிந்து முனிவர்களுக்கும் தர்ப்பணம் செய்ய வேண்டும்
பின்னர் பூணுலை இடமாக அணிந்து ஈசனை தியானித்து பெருவிரலால் எள்ளு தண்ணீரை பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
மன சுத்தம் ( தியானம் )
ஸ்நானம் பண்ணி முடிந்ததும் சுத்தாசனம் செய்து முடித்து தர்ப்பை புல்லை ஆசனமாக இட்டு அதன்மேல் அமரவேண்டும்.
பொன்னாலான பவித்திரம் அல்லது தர்ப்பை புல்லாலான பவித்திரம் அணிந்து வலது முழங்கால் மேல் வைத்து இடது கை மேல் வலது கையை வைத்து பிரம்மயக்ஞம் செய்ய வேண்டும் .
பின்னர் ஆற்றங்கரையிலிருந்து வீட்டுக்கு திரும்பி கால்களை கழுவி விட்டு பிரணவ மந்திரம் உச்சரித்து நெற்றி ,கழுத்து , தோள்,மார்பு ,கைகள் ,வயிறு , போன்ற இடங்களில் ஓம குண்டத்தில் உள்ள விபூதி எடுத்து பூசிக்கொள்ள வேண்டும்.
சுத்தமான இடத்தில அமர்ந்து கொண்டு பஞ்சாட்சர மந்திரம் உச்சரித்து ஈசனை தியானித்து பிரணயாமம் செய்ய வேண்டும்
வாக்கு சுத்தம் (வேத மந்திரங்கள் உச்சரித்தல் )
பிராண யாமம் முடிந்ததும் பூஜைக்குரிய எல்லா பொருட்களையும் தயார் செய்து கொண்டு ஈசனையும் உமை அன்னையையும் தியானித்து , விநாயக பெருமானையும் , முருக கடவுளையும் துதித்து பிம்பதிலே ஆவாகனம் செய்ய வேண்டும் .
தர்ப்பை,விளாமிச்சைவேர் ஆகியவற்றால் நனைத்த புனித நீரால் அர்க்கியம் கொடுக்க வேண்டும்.
வாசனை திரவியங்கள் சேர்க்கப்பட்ட அர்ச்சனை திரவியங்கள் கொண்டு பக்தியுடன் மந்திரங்கள் உச்சரித்து ஈசனுக்கும் உமை அன்னைக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்ய வேண்டும் .
செயல் சுத்தம் (அபிஷேக ஆராதனைகள் , அலங்காரங்கள் )
அபிஷேகம் முடிந்ததும் பட்டு பீதாம்பர ஆடைகளை உமை அன்னைக்கும் , எம்பிரான் ஈசனுக்கும் அணிவிக்க வேண்டும் .
பூஜைக்குரிய வாசனை மிகுந்த மலர்களால் அம்மையப்பன் இருவரையும் அலங்கரிக்க வேண்டும்.
வேத மந்திரங்கள் கூறி மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும் .
பின்னர் தீப தூப நைவேத்தியங்களால் ஆராதித்து கற்பூர ஆரத்தி காட்டி வழிபட வேண்டும் .பகவானின் திரு உருவத்தை மனக்கண்ணில் கொண்டு வந்து வேத மந்திரங்கள் உச்சரிக்க வேண்டும்.
லிங்க வழிபாட்டின் அனைத்து நிலைகளிலும் இறைவனின் திரு உருவம் தவிர வேறு ஒன்றையும் வேறு நினைவே மனதிற்கு வர கூடாது.அப்போதுதான் நம்மால் பர பிரம்மத்தின் இருபத்தாறு தத்துவங்களையும் உணர்ந்து ஈசனை அடைய முடியும் .
அதென்ன பர பிரம்மம் , என்ன அதன் இருபத்தாறு தத்துவங்கள் நாளை பார்க்கலாம் .

பதிவு-32
26 தத்துவங்கள்
முன் கதை
நைமிசாரண்ய வனத்தில் சூதக முனிவர் தன் சீடர்களுக்கு லிங்க வழிபாடு பற்றி விளக்கி கூறுகிறார் . " லிங்க வழிபாட்டிற்கு உடல் சுத்தம், மனசுத்தம் , வாக்கு சுத்தம்,செயல் சுத்தம் அவசியம் என்றும் அதனை முறையாக கடை பிடித்தால் மட்டும்மே பர பிரம்மத்தின் 26ம் தத்துவத்தை உணர முடியும் .அதற்க்கு மற்ற 25 தத்துவ நிலைகளை கடக்க வேண்டும் ." என்று கூறுகிறார்
என்ன அந்த 26 தத்துவங்கள் என ஒரு சீடர் கேட்க, அதற்கு பதிலளிக்கும் விதமாக சூதக மாமுனிவர் கூறிய விளக்கமே இன்றைய பதிவு .
லிங்கவழிபாடு கூறும் 26 தத்துவம்
பஞ்ச பூதங்கள் – 5
1.நீர்
2.நிலம்
3.நெருப்பு
4 .காற்று
5 . ஆகாயம்
6 . மனம்
கர்மேந்திரங்கள் - 5 (7-11 )
7.வாக்கு
8.கை
9 . கால்
10 . கழிவுகளை வெளியேற்றும் உறுப்பு (சிறுநீர் திறப்பு , மல வாய் )
11 . பாலுறுப்பு
ஞானேந்திரங்கள் – 5 (12 – 16)
12 . கண்
13 . காது
14 . மூக்கு
15 . நாக்கு
16 . தோல்
பஞ்ச தன்மாத்திரைகள் 5 (17-21)
17.கலை
18 . ஒளி
19 தொடுதல்
20 சப்தம்
21 .நாற்றம்
22. அலங்காரம்
23 . மஹா தத்துவம்
24 . அவ்வியத்தம்
25 . அப்பிரமம்
26 . பர பிரம்மம்
இவ்வுலக வாழ்வில் மோட்சம் கிடைக்க, சிவனருளை பெற வேண்டுமானால் 26 தத்துவ நிலைகளை கடந்தே ஆக வேண்டும்.
பஞ்ச பூதங்கள்
நாம் பிறந்து வளர்ந்தது முதல் நாம் மனிதனாக உருவாக பஞ்ச பூதத்தின் தன்மைகளை உணர வேண்டும்.நமது உடலில் பஞ்ச பூதங்களின் தன்மையை உணர்ந்து அதனை கட்டுபடுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.
1. நிலம் உலகம் (மண்) மனிதன் (எலும்பு,மாமிசம்,தோல்,நரம்பு,உரோமம்)
2. நீர் உலகம் (நீர்) மனிதன்
(உமிழ்நீர்,சிறுநீர்,வியர்வை,இரத்தம்,விந்து,)
3. காற்று உலகம் (வாயு) மனிதன் (சுவாசம்,வாயு)
4. ஆகாயம் உலகம் (வானம்) மனிதன் (வான் போல பரந்து விரிந்த மூளை)
5. நெருப்பு உலகம் (சூரியஒளி)மனிதன்(பசி,தூக்கம்,தாகம்,உடலுறவு,அழுகையின்போது உடல்வெப்பம் அதிகரிக்கும்)
மனம்
உலக ஆசைகளில் நமது ஐம்புலன்களும் ஈடுபட முயலும் .மனதால் ஐம்புலன்களையும் கட்டுபடுத்தி மனத்தை ஈசனிடத்தில் செலுத்த வேண்டும்
கர்மேந்திரியங்கள் 5
1. வாய் (செயல்) சொல்வது
2. கை (செயல்) கொடுக்கல்,வாங்கல்,பிடித்தல்,ஏற்றல்
3. கால் (செயல்) நிற்றல்,நடத்தல்,அமர்தல்,எழுதல்
4. மலவாய் (செயல்) மலநீரை வெளியே தள்ளுதல்
5. கருவாய் (செயல்) விந்தையும்,சுரோணிதத்தையும்,சிறுநீரையும் வெளியேத் தள்ளும்
ஞானேந்திரியங்கள் 5
1. மெய்(உடம்பு) காற்றின் அம்சமாதலால் குளிர்ச்சி,வெப்பம்,மென்மை,வன்மை அறியும்.
2. வாய்(நாக்கு) நீரின் அம்சமாதலால் உப்பு,புளிப்பு.இனிப்பு,கைப்பு,கார்ப்பு, துவர்ப்பு என அறுசுவையறியும்
3. கண் நெருப்பின் அம்சமாதலால் நிறம்,நீளம் உயரம்,குட்டை,பருமன்,மெலிவு என பத்து தன்மையறியும்
4. மூக்கு மண்ணின் அம்சமாதலால் வாசனை அறியும்
5. செவி வானின் அம்சமாதலால் ஓசையறியும்
பஞ்ச தன்மாத்திரைகள் 5
1. சுவை - உணவின் சுவையறிதல்
2. ஒளி - காட்சிகளை காணுதல்
3. ஊறு - தொட்டு உணர்தல்
4. ஓசை - சப்தங்களை கேட்டல்
5 .நாற்றம் - பொருளின் மனம் உணர்தல்
அலங்காரம்
புகழ் மாலைகளில் தன் மனதை ஈடுபடுத்தாமல் எந்நிலையிலும் தன்னிலை மாறாமல் இயல்பாக இருத்தல்
மஹா தத்துவம்
இந்த உடல் மற்றும் உயிர் இணைக்கும் புள்ளியில் தான் உடல் இயக்கமே நடை பெறுகிறது.இந்த புள்ளியினை உணர்ந்து உயிர் மற்றும் உடலியக்கத்தை கட்டு படுத்துவது மஹா தத்துவமாகும்
அவ்வியத்தம்
உள்ளிருந்து ஆன்மாவானது அறிந்து கொள்ள இயலாத பேரருளான சிவனை உணர்ந்த பக்குவமானது அவ்வியத்தம் எனப்படும்.இந்நிலையில் காணும் பொருட்கள் அணைத்திலும் இறை சொரூபம் உணர முடியும் .
அப்பிரம்மம்
மனிதன் வெளியில் இறைவனை தேடுவதற்குப் பதிலாக, சிருஷ்டியிலுள்ள புருஷனை - சைத்தியப் புருஷனைத் தனக்குள் தேடி பெறும் வாழ்வு தெய்வீக வாழ்வாகும். யோக வாழ்வில் ஆரம்பித்துத் தெய்வீக வாழ்வில் பூரணயோகம் முடிவதற்கு அப்பிரம்மம் என்று பெயர் .
அப்போது அண்டத்தில் உள்ளதே இப்பிண்டத்திலும் என்பதை மனம் ஏற்று கொள்ளும்
பர பிரம்மம்
பூமியில் வாழ சிருஷ்டிக்கபட்டவன் மனிதன். சிருஷ்டியைக் கடந்த நிலை காலத்தைக் கடந்த நிலை. அங்கு உறைந்திருப்பது பர பிரம்மம் ஈசனே . சிருஷ்டியைக் கடந்த யோகம் என்பது உலகத்தைவிட்டு மோட்சத்திற்குப் போவது. மோட்சத்தில் நாம் ஈசனுள் ஒடுங்குவோம்.
உலகம் சிருஷ்டியை ஒரு பகுதியாகவும் , இறைவனை ஒரு பகுதியாகவும் காண்கிறது. சிருஷ்டியையும், இறைவனையும் சேர்த்து ஒரே உருவமாக காண்பது பர பிரம்மம் ஆகும் .இந்நிலையில் சர்வம் பிரம்மமாகும் . உலகின் அனைத்திலும் ஈசனே நிறைந்திருப்பார்.
இந்த 26 தத்துவங்களையும் அறிந்து அவற்றை கடந்து ஜீவாத்மா பரமாத்மாவோடு ஐக்கியமாவதையே லிங்க வழிபாடு நமக்கு கற்று தருகிறது.

இந்த 26 தத்துவங்களை எப்படி கடந்து ஈசனை சேர்வது நாளை பார்க்கலாம். 

பதிவு - 33
கர்மேந்திரியங்களும் ஆத்மாவின் இயக்கமும்
முன் கதை
நைமிசாரண்ய வனத்தில் சூதக முனிவர் தன் சீடர்களுக்கு லிங்க வழிபாடு பற்றி விளக்கி கூறுகிறார் . " லிங்க வழிபாட்டிற்கு உடல் சுத்தம், மனசுத்தம் , வாக்கு சுத்தம்,செயல் சுத்தம் அவசியம் என்றும் அதனை முறையாக கடை பிடித்தால் மட்டும்மே பர பிரம்மத்தின் 26ம் தத்துவத்தை உணர முடியும் .
நேற்று பரபிரம்மத்தை நம் ஆத்மா சேர நாம் கடக்க வேண்டிய 26 தத்துவங்களை பற்றி பார்த்தோம்.இன்று நம் ஆத்மா எப்படி பரப்பிரம்மத்தை அடைகிறது என காணலாம்.
பஞ்ச பூதங்களும் கர்மேந்திரியங்களும் உயிர்களை இயக்குதல்
பிரகிருதி மாயையிலிருந்து உயிர்களுக்கு உதவுவதற்க்காக முதலில் பஞ்ச பூதங்கள் தோன்றும். அவை சித்தம், புத்தி, அகங்காரம், மனம் என்னும் அந்தக்கரணங்கள்.
அகங்காரத்தின் சாத்துவிக குண கூறிலிருந்து மனம் தோன்றும். பின்னர் ஞானேந்திரியங்கள் தோன்றும். மனம் அகக்கருவி. ஞானேந்திரியங்கள் புறக்கருவி.
மனமாகிய அகக்கருவி,இந்திரியங்கள் ஆகிய புறக்கருவிகளை பற்றி நிற்கிறது. இந்திரியங்கள் புலன்களை நுகர்ந்து அதன் மூலம் பெறும் அறிவாற்றலை மனம் பெறுகிறது.
மனம் அதை அகக்கருவியாகிய நம் புத்திக்கு தருகிறது. இதனால் நம் ஆன்மாவாகிய உயிர் புலன்களின் மூலம் பெறும் அறிவைப் பெற்று இயக்கம் பெறுகிறது.இவ்வாறு ஒவ்வொரு தத்துவத்தையும் உணர்ந்து நடப்பதாலேயே உயிர்கள் இயக்கம் நடைபெறுகிறது.
அந்தக்கரணங்களால் செயல்படும் கர்மேந்திரியங்கள்
அந்தக்கரணங்கள் நான்கு. அவை, சித்தம், புத்தி, அகங்காரம், மனம் ஆகியவையாகும். இவை நான்குமே அகக் கருவிகள் எனப்படும்.
புறத்தே உள்ள புலனை (உதாரணம் கண்) அதற்குரிய பொறியானது கவர்ந்து தர, மனம் அதனைப் பற்றி நிற்கும்
புலன் பற்றிய செய்தியை மனம் புத்திக்கு தர, புத்தி இஃது இன்னது என்று அகங்காரம் கொண்டு இச்செயல்களுக்கு அடிநிலையாக அமைந்து முன்னும் பின்னும் யான் செய்வேன் என்று முந்தியெழும். மனம் சித்தம் உற்ற அப்பொருளைப் பற்றி மீள மீள சிந்திக்கும் ஆற்றலை ஆன்மா பெறுகிறது.
சுருங்கக் கூறின், ஆன்மா இந்த நான்கு கருவிகளையும் பற்றி நின்று, சிந்திக்கும் ஆற்றல் பெற்று உலகப் பொருட்களை சிறப்பாக உணந்து அவற்றில் அழுந்துகிறது.அப்போது உயிர்கள் கர்மா செயல்பட்டு காரியங்கள் நடக்கின்றன.
பரப்பிரம்மத்தின் இயக்கம்
ஆன்மாவின் குணம்
பிரகிருதி , மாயை மூன்று குண வடிவாய் உள்ளது. சாத்துவிகம், இராசசம், தாமதம் என்பன அந்த மூன்று குணங்கள். பிரகிருதி மாயை இந்த மூன்று குணங்களையும் சூட்சுமமாய் உள்ளடக்கி நிற்கும்.
நாற்றத்தினை உள்ளடக்கி நிற்கும் அரும்பு போல இது நிற்கும். இந்த மூன்று குணங்களும் வெளிப்படாமல் சூட்சுமமாய் உள்ளடங்கி நிற்கும் நிலையே பிரகிருதி மாயை ஆகும்.
பின்னர் அம் மூன்று குணங்களும் ஓரு நிலையாக வெளிப்பட்டுத் தம்முள் சமமான நிலையாக நிற்கும். இந்நிலையில் அது குண தத்துவம் எனப்படும்.
மூன்று குணங்கள் வெளிப்பட்டு நிற்கும் நிலையை வியத்தம் என்றும், வெளிப்படாமல் நிற்கும் நிலையை அவ்வியத்தம் என்றும் கூறுவர்.
குண தத்துவத்திற்கு வியத்தம் என்றும் பிரகிருதிக்கும் அவ்வியத்தம் என்ற பெயரும் தெளிவு. இந்த குண தத்துவமே சித்தம் என்னும் அந்தக்கரணமாகும்.
ஆத்மாவின் பற்று
கஞ்சுகம் என்றால் சட்டை. உயிர்கள் முதலில் ஆணவ மலத்தில் முழுவதுமாக அழுந்தி இருக்கும். உயிர்கள் ஆணவ மலத்திலிருந்து விடுபட்டாலன்றி, உலக போகத்தை அறிந்து, அவற்றை நுகர இச்சித்து நிரந்தர இன்பமாகிய யோகத்தை அடைய முயற்சி செய்யாது.
ஆகவே, உயிர்களை ஆணவ மலத்திலிருந்து விடுவிக்க சில கருவிகள் தேவைப்படுகிறது. அவை அசுத்த மாயையிலிருந்து தோன்றுகின்றன.
மாயை, காலம், நியதி, கலை, வித்தை, அராகம் மற்றும் புருடன் என்பன மாயையிலிருந்து தோன்றும் தத்துவங்கள்
ஆன்மா உடலை இயக்குதல்
தாம் காலம், நியதி, கலை, வித்தை, அராகம் என்பன. இவற்றில் அராகம் ஆன்மாவிற்கு இச்சா சக்தியையும், வித்தை ஞான சக்தியையும், கலை கிரியா சக்தியையும் கொடுத்து ஆன்மாவை நுகர்ச்சியில் ஈடுபடச் செய்யும்.
இதுதான் நியதி இதனையே நுகர்க என்று வரையறுத்து நிறுத்தும். காலம் இந்த நுகர்ச்சியை இத்தனை காலம் நுகர்க என்று எல்லைப்படுத்தும்.
இந்த ஐந்து கருவிகளும் ஆன்மாவிற்கு இன்றியமையாதனவாய் ஆன்மாவோடு நீங்காமல் சட்டை போல ஒட்டியே இருக்கும். இதுவே பஞ்சகஞ்சுகம் என்று பெயர் பெறும்.
இந்த ஐந்தும் ஆன்மாவை தொடர்ந்து இயக்கும் வரையில் ஆன்மாவானது உலகப் பற்றிலிருந்து நீங்க இயலாது.
ஆன்மாவை விட்டு பஞ்ச கஞ்சுகம் விட்டு விலகும் போது ஆன்மா மகா தத்துவத்தை உணரும். உலக மாயையிலிருந்து விலகி பற்றை விட்டு பரமாத்ம சொரூபத்தை உணரும்
பரப்பிரம்மத்தை வெளியே தேடி கிடைக்க பெறாமல் தனக்குள்ளே தேடும்.தனக்குள்ளை தன்னை இயக்கும் பரப்பிரம்மத்தை உணர்ந்த நிலை அப்பிரம்மம் ஆகும்.
நம் ஆத்மாவும் பரம்பிரம்மம்மும் வேறல்ல என்பதை உணர்ந்து பரப்பிரம்ம தத்துவத்தை உணர்ந்து பரமாத்மாவுடன் ஐக்கியமாகும் போது ஆன்மாவானது 26 தத்துவ நிலைகளை கடந்து பரப்பிரம்மத்தை சேரும்.
பரப்பிரம்மம் உணராமல் செயல்படும் சாதாரண உயிர்களின் நிலை என்பதை அடுத்தடுத்த பதிவில் பார்க்கலாம்.

லிங்க புராணம்
பதிவு - 34
முன் கதை
நைமிசாரண்ய வனத்தில் சூதக முனிவர் தன் சீடர்களுக்கு லிங்க வழிபாடு பற்றி விளக்கி கூறுகிறார் . நந்தி தேவர் சனாதன குமாரர்களுக்கு நம் ஆத்மா எப்படி 25 தத்துவங்களை கடந்து இறுதியாக 26 வது தத்துவமாகிய பரப்பிரம்மத்தை அடைகிறது என்பதை விளக்குகிறார்.
அதன் தொடர்ச்சி . . . . .
பர பிரம்மம்
“ பரப்பிரம்ம 26வது இறுதி தத்துவமாகும்.ஜீவாத்மா 25வது தத்துவமாகும் ஜீவாத்மாவானது பரமாத்மாவை சேர்ந்து பரபிரம்மத்தில் ஐக்கியமாகும். உலக தோன்றலில் பரப்ரம்மத்திலிருந்து பிரிந்த பிரம்மா , விஷ்ணு , ருத்ரன் மூன்று பராத்மா ரூபங்களும் பிரிந்து உலகை சிருஷ்டித்து , காத்து , அழித்து மீண்டும் பிரம்ம பிரளயத்தில் பர பிரம்மத்தில் ஒடுங்குகிரார்கள்.உலகை வழி நடத்தி செல்பவர்களும் இவர்களே “ என்று நந்தி தேவர் சனாதன குமாரர்களை பார்த்து கூறுகிறார் .
உலக இயக்கமும் பிரம்ம தியானமும்
காலத்தால் மாற்றம் நிகழும் போது ஒவ்வொரு கல்ப இறுதியிலும் பிரம்ம பிரளயம் நிகழும் .அப்போது மூன்று பரமாத்மாவும் பரபிரம்மமாகிய சிவனில் ஒடுங்குவர் .
அவர்களின் ராஜச , தாமஸ , சாத்துவ குணங்களே பர பிரம்மத்தின் குணங்களாக அமைகின்றன உலகமனைத்தும் ஈசனின் அஷ்ட சொரூபங்களாக விளங்குகின்றன .
மனத்தால் உணர்ந்து கொள்ள இயலாத , கண்களால் காண இயலாத பேரொளி சொரூபம் அதன் மகிமையை வேதங்களாலும் விவரிக்க இயலாது .
பரபிரம்மமே உலகை இயக்குகிறது . உலக இயக்கம் அனைத்தும் அதன் கட்டுப்பாட்டிலேயே நிகழ்கிறது .உலகின் முடிவற்ற பேரொளியாய் தோன்றும் அவருக்கு நிகர் யாருமில்லை .
அந்த பரபிரம்மமாகிய சிவனை தவிர வேறு எதையும் நினையாது அவரது சொரூபத்தை மனதில் நிறுத்தி பிராணயாமம் செய்து தியானிப்பது பிரம்ம தியானம் ஆகும்
உலகின் தத்துவம் சர்வம் சிவமயம்
பஞ்ச பூதங்களால் ஆனது இந்த உலகம் .பஞ்ச பூதங்கள் ஈசனின் வடிவம் . உலகம் ஈசனின் உடல் என்றல் பர பிரம்மம் அதன் உயிர். பர பிரம்மத்தின் தடையற்ற இயக்கதாலே உலக இயக்கமானது நடை பெற்று கொண்டு இருக்கிறது .
உலகில் உள்ள அனைத்துமே பஞ்ச பூதங்களின் வெவ்வேறு வடிவங்களே . சிவனின் உருவமே பஞ்ச பூதங்கள் என்பதால் உலகில் உள்ள அனைத்துமே சிவனின் அம்சமே .அதன் அடிப்படையிலே உருவானது தான் சர்வம் சிவமயம் என்ற பரபிரம்ம தத்துவமாகும்
உயிர்களின் பிறப்பு அமையும் விதம்
" உலகில் பிறந்த எந்த ஒரு உயிரும் பக்தியால் ஈசனின் அன்பை பெற்றுவிட்டால் அங்கம் குறைவாக இருந்தாலும் , இழி குலத்தில் பிறந்தவனாக இருந்தாலும் கைலாய கதி பெறும் பேறு பெற்றவர்களாக விளங்குவார்கள் ."
" நற்குலத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் சிவ நிந்தனை செய்பவர்கள் எவ்வளவு தவ சீலர்களாகவும் , பக்தி மானாக இருந்தாலும் மறுமையில் கொடிய நரகத்தில் உழலுவார்கள் . எவ்வளவு தவ வலிமை பெற்று , வேத மந்திரங்கள் கற்ற முனிவர்களாக இருந்தாலும் அதனால் பயன் இல்லை "
இவ்வாறு நந்தீஸ்வரர் சனாதன குமாரர்களுக்கு பர பிரம்மம் பற்றி விளக்குகிறார் .
" வேத மந்திரங்களும் , சாஸ்திரங்களும் கற்று முறைப்படி குருகுலம் பயின்று ,எல்லா வித தவ வலிமையும் பெற்ற ரிஷிகளுக்கும் , முனிவர்களுக்கும் இதுதான் கதியா ?? "
என்று சனகர் நந்திகேஸ்வரரிடம் கேட்கிறார் .
“அவர்களுக்கும் அதுதான் கதி” என்று கூறுகிறார் நந்தீஸ்வரர்
" எதை வைத்து அவ்வளவு உறுதியாக கூறுகிறீர்கள் " என்று நந்தீஸ்வரரிடம் சனகர் கேட்கிறார் .
என்றும் அன்புடன் உங்கள் ஆச்சார்யா பாபாஜி.9840848127,

No comments:

Post a Comment