Sunday 9 September 2018

தமிழ் மொழியின் தொன்மையை உணர்ந்தவர்கள் சாகாவரம் பெற்றவர்கள் ஆவார்கள் .

தமிழ் மொழியின் தொன்மையை உணர்ந்தவர்கள் சாகாவரம் பெற்றவர்கள் ஆவார்கள் .

தமிழ் மொழியில் உள்ள உயிர் எழுத்துகள் மற்றும் மெய் எழுத்துகளை தெரிந்து கோண்டு அதனுடன் "ம் " மற்றும் "ங்" (பீஜங்கள்)  சேர்த்து கொண்டு உச்சரிக்கும் போது பலவித சித்திகளும், முக்தியும் கிடைக்கும் என பிருகு முனிவர் கூறுகிறார்.

முதலில் "அம்" என்று செபம் செய்து ,பிறகு "ஆம்" என்றும் , "இம்" , "ஈம்" , "உம்" , "ஊம்" , "எம்" ,
"ஏம்" , "ஐம்" , "ஓம்" , "ஔம்" என்றும் பதினோரு வகையான உயிர் பீசங்களை தனித் தனியாக
செபம் செய்யவேண்டும் . மனதிற்குள் செபித்தால் தான் மந்திரத்திருக்கு பலன் அதிகம் .

இவ்வாறு ஒவ்வொரு மந்திரத்தையும் மனதிற்குள் ஒரு லட்சம் முறை கூறவேண்டும் என கூறுகிறார்.

பிறகு மெய் எழுத்துகளுடன் "ங்"  பீஜத்தை சேர்த்து கொண்டு செபிக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.  முதலில் "கங்"  என்றும், பிறகு  தொடர்ச்சியாக எல்லா மெய் எழுத்துகளுடன் இந்த பீஜத்தை சேர்த்து லட்சம் முறை செபிக்க வேண்டும் என கூறுகிறார்.

உதாரணமாக :

முதலில் "ஓம்"  பிறகு "அம்" இறுதியில் "நம:" என்று உச்சரிக்கலாம் .

"ம்" பீஜத்தை சேர்த்து மந்திரம் கூறும் முறை ..

ஓம் அம் நம: -

என்று உச்சரித்தால் சித்தி கிடைக்கும்.

"ங்"   பீஜத்தை  சேர்த்து  மந்திரம் கூறும் முறை ..

ஓம் அங் நம:

 என்று உச்சரித்தால் முக்தி கிடைக்கும்.

நமக்கு சித்திகள் வேண்டும் என்றால் "ம்" பீஜத்தையும் முக்தி வேண்டுமென்றால் "ங்" பீஜத்தையும் சேர்த்து உச்சரித்து பலன்களை பெறலாம் என்று கூறுகிறார்.

இவ்வாறு பீசங்களை செபிக்கும்போது

பெண் போகத்தை நிறுத்த வேண்டும் என கூறுகிறார்

 இவ்வாறு செய்தால் அறுபத்து நான்கு வகையான சித்திகளும் நிச்சயம் கிடைக்கும் என கூறுகிறார்.

  - சித்தர்களின் குரல் 

No comments:

Post a Comment