Thursday 6 September 2018

பில்லி,சூனியம்,ஏவல் என்பது என்ன ?...

பில்லி,சூனியம்,ஏவல் என்பது என்ன ?...
இவை மூன்றுமே செயற்கையாக உண்டாக்கப்படும் தீயசக்திகளாகும். மற்றவர்களை அழிக்க வேண்டும் என்பதற்காக மாந்திரீகத்தால் தோற்றுவிக்கப்படும் அபாயயுக்திகளாகும்.
இந்தத் துஷ்ட சக்திகளுக்கு ஜாதிமத பேதம் கிடையாது.ஏற்றத்தாழ்வு கிடையாது. மனிதன் எத்தகைய மதத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும் சரி. ஜாதியைச் சார்ந்தவனாக இருந்தாலும்..சரி.... மாந்திரீகர்களின் ஏவலால் பிடித்து தீய ஆட்சியின் கீழ் கொண்டு வந்து பல சோதனைகளை ஏற்படுத்திவிடும்.
இந்த விஞ்ஞான யுகத்திலும் இத்தகைய சக்திகள் இருப்பதாகக் கூறப்படுவது நம்ப முடியாதாது என்று நீங்கள் நினைக்கலாம்.
சில செயற்கையாக அறிவாளிகள் குபீரென்று சிரிக்கவும் செய்யலாம்.
ஆனால் இதில் அத்தகைய சிரிப்புக்கு எந்தக் காரணங்களும் இல்லை...
மனிதா...ஓ..மனிதனே!
நீ யேசுநாதரை விடவும் மகத்தான சக்தி படைத்தவனா? நபிகள் நாயகத்தை விடவும் கடவுள் தன்மை கொண்டவனா?
மும்மூர்த்திகளான பிரம்மா,விஷ்ணு, சிவன் ஆகியோரை விடவும் உயர்ந்தவனா?
அல்ல...
இவர்களையே பேய்கள் ஆட்டிப் படைத்திருகின்றன. யேசுநாதர் தன்னுடைய வல்லமையை "சாத்தானே அப்பால் போ" என்று கட்டளையிட்டிருக்கிறார்.
இதிலிருந்தே சாத்தான் அவர் பூவுலகில் வாழ்ந்த காலத்திலேயே தெய்வசக்தியுடன் துஷ்டசக்தியும் போட்டியிட்டு மக்களை அல்லல்படுத்தியிருக்கிறது என்பது தெரியவில்லையா?
நபிகள் நாயகத்திற்கும் சாத்தான்களால் தொல்லைகள் விளைந்துள்ளன. தன்னிடமிருந்த அபாரசக்தியால் அவற்றை ஓடும்படி அல்லாவின் பேரால் கட்டளையிட்டு அவற்றை விரட்டியிருக்கிறார்.
எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் தங்கள் இஷ்ட தெய்வத்தின் பேரால் மந்திரித்து தாயத்தோ,காப்புகளோ கட்டுவதை இன்றும் நடைமுறையில் பார்க்கலாம்.
இந்து மத சாஸ்திரத்தில் மும்மூர்த்திகளான பிரம்மா,விஷ்ணு, சிவன் ஆகிய மூவருமே சர்வ இயக்கமும் என்று குறிப்பிட்டு உணர்த்தவும் செய்யப்பட்டிருக்கிறது.
படைக்கும் தெய்வமாக பிரம்மா பொன்நிறம் கொண்டவர்.
காக்கும் தெய்வமான மகாவிஷ்ணு கடல் உருவ நிறம் கொண்டவர்.
அழித்தல் தெய்வமாக சிவபிரான் தீயுருவ நிறம் கொண்டவர்.
இத்தகைய முப்பெரும் சக்திகளே இன்றும் படைத்தல்,காத்தல்,அழித்தல் எனும் பணியினை செய்வனே செய்து வருகின்றன.
உலகம் படைக்கப்பட்ட போதே இத்தகைய முப்பெரும் சக்திகளும் உதயமாகி விட்டன.
அவற்றில் துஷ்ட தேவதைகளின் கொட்டமும் ஒன்று.அந்தக் கொட்டத்தை மந்திரங்களும், தந்திரங்களும் கற்றவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். சில மாந்திரீகர்கள் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.தங்களை மாந்திரீக விற்பன்னர்களாக உருவாக்கில் கொள்வதால் அவர்கள் சொன்னது எதுவாக இருந்தாலும் உடனே பலிக்கிறது.
மனிதன் பிறக்கும்போது தீய எண்ணங்களேயின்றி மாசு மருவற்றக் குழந்தையாகப் பிறக்கிறான். பிறகுதான் இந்த உலகிலுள்ள சக்திகள் அவற்றின் தன்மைக்கேற்ப மாற்றிவிடுகின்றன.
பாசம் என்பது மளிதவளர்ச்சியில் முக்கியமான பங்குவகித்து அவற்றின் தன்மைக்கு ஏற்ப குணத்தையும் மாற்றுகிறது.
எத்தகைய மனிதராக இருந்தாலும் பாசத்தை வெண்றாரில்லை.
கணவன்மீது மனைவிக்குள்ள பாசம்,நட்புப்பாசம்,தாய் தந்தையர் பாசம்,குழந்தைப் பாசம்,சொந்தபாசம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
இந்தப் பாசத்திற்கு மனிதன் கட்டுப்பட்டவனேயாகும். பல பிழைகள் நேருவதற்கு இந்தப் பாசத்தின் பிழைகளும் ஒரு காரணம்.
இன்னொரு காரணமும் உண்டு. அதுதான் பேராசை! போதும் என்ற திருப்தியில்லாத குணம்,எல்லாம் வேண்டும்,இந்த உலகமே வேண்டும் என்ற நப்பாசை.
இதற்குத் துணையாக இன்னொரு சக்தியும் சேரும்போது பிறரை அழித்து வாழவேண்டும் என்ற எண்ணமும் தோன்றிவிடுகிறது. இந்தக் காரியங்களுக்குத் துணை நிற்பதே மந்திரவாதமாகும்.
மந்திரவாதத்தின் சக்திகள் அபாயகரமானவை என்பது உண்மைதான். அவற்றைப் பிரயோகித்துச் சுலபமாக வெற்றி கொள்ள முடியும் என்பதும்.தெளிவு.
ஆனால் எனது வேண்டுகோள் என்னவென்றால் தீயசக்திகளுக்கு நீங்கள் துணை போகவேண்டாம் என்பதேயாகும்.நீங்கள் மந்திரசக்திகளைக் கற்றுக் கொள்ளலாம். அது மனத்துக்கு ஒரு நம்பிக்கையையும், மனிதனாக மாற்றும்.
நீங்கள் கற்ற மந்திரங்களை உங்களுக்குப் பாதுகாப்பாக வைத்திருங்கள். உங்களையும்,உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கப் பயன்படுத்துங்கள்.
ஆனால் நீங்கள் யார்மீதும் மந்திரவாதத்தைப் பயன் படுத்த வேண்டாம்.யாருக்கும் தகடு வைக்க வேண்டாம், பில்லி,சூனியம்,ஏவல் கூடாது. பணத்துக்காகவோ,மண்ணாசை,பொன்னாசை,பெண்ணாசை காரணமாக மந்திரவாதியாக மாற வேண்டாம். அதே நேரத்தில் தற்காப்பு முக்கியமானது என்பதை நீங்கள் உணர வேண்டும்.

No comments:

Post a Comment