Monday 28 September 2015

கத்தரிக்காய்

கத்தரிக்காய்

நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, மற்றும் பி2, காணப்படுகின்றன. கத்தரிக்காய் காய்கறியாக பாவிக்கப்பட்டாலும் உண்மையில் இது பழ வகையைச் சார்ந்ததாகும். இது வெள்ளை, ஊதா, கறுப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றது. மேலும் இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், நிறைந்துள்ளது. வைட்டமின் அதிகமாக இருப்பதால் நாக்கில் ஏற்படும் அலர்ஜியினைப் போக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.
வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று. கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது.
முற்றிய பெரிய காய்களைச் சாப்பிட்டால் உடம்பில் அரிப்பு ஏற்படும். குறிப்பாக, வீட்டிலே வளர்த்துப் பிஞ்சாகப் பறித்துச் சாப்பிட வேண்டிய காய்களுள் இதுவும் ஒன்றாகும். தக்காளிக்கு இணையானது, இக்காய். தக்காளியைப் போலவே எடை, புரதம், கலோரி அளவு, தாது உப்புகள் முதலியன கத்தரிக்காயில் உள்ளன. ஆனால் வைட்டமின் ‘ஏ’யும், வைட்டமின் ‘சி’யும் குறைவாகவே உள்ளன.
இவற்றை ஈடுசெய்யும் வகையில் வைட்டமின் ‘பி’ தக்க அளவில் உள்ளது. இதனால் நாம் சாப்பிடும் மற்ற உணவுகள் உடனடியாகச் சிதைந்து சத்தாக மாறக் கத்தரிக்காயில் உள்ள வைட்டமின் ‘பி’ பயன்படுகிறது. பாரிச வாயுநோய் தடுக்கப்படுகிறது. பசியின்மை அகற்றுகிறது. உடல் சோர்வடைவதை குறைக்கப்படுகிறது.
மூச்சுவிடுதலில் சிரமம், தோல் மரத்துவிடுவது முதலியவையும் தடுக்கப்படுகிறது.
முற்றிய காய்கள் உடல் வளர்ச்சிக்குப் பயன்படும். காரணம், இவற்றில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் இருக்கிறது. ஆனால், அளவாகத்தான் பயன்படுத்தவேண்டும். இதனால் கண்பார்வைத் திறனும் அதிகரிக்கும். உடலுக்கு சூடு தரும் காய்கறி இது. எனவே, மழை நேரத்தில் கூட இரவு நேரத்தில் உடல் கதகதப்பாய் இருக்கக் கத்தரிக்காய் குழம்பு சமைத்து உண்ணலாம்.
கத்தரி வற்றலும் உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். நீர்க்கனத்தைக் குறைக்கும். உடல் பருமனைக் குறைக்கும். உடம்பில் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்தரிக்காயைத் தவிர்ப்பது நல்லது. உடலுக்குச் சூடு தரும் காய் என்பதால் அரிப்பை உண்டு பண்ணிப் புண்கள் ஆற அதிக நாள் ஆகும்.
மற்றவர்கள் மருந்தைப்போல் கத்தரிக்காயை உணவில் சேர்த்து உடலுக்கு நன்மை பெற வேண்டும். இக்காய் இளம் பிஞ்சாய் இருந்தால், சமையலில் சேர்த்து நாம் சாப்பிடும் மற்ற உணவுகள் விரைந்து சிதைந்து சத்தாக உடலுக்குக் கிடைக்க இது பயன்படும். வீட்டில் நன்கு உரமிட்டு வளர்க்கப்படும் கத்தரிச்செடியில் உள்ள பிஞ்சு உடலுக்கு வளத்தையும் வலிமையையும் தவறாமல் தரும்.

மூட்டு வலிக்கு உருளைக்கிழங்கு சாறு..

மூட்டு வலிக்கு உருளைக்கிழங்கு சாறு..
மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே.  நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது. மூட்டுத் தேய்மானம் மூட்டழற்சி, முடக்குவாதம் என இரண்டு வகைப்படும்.
மூட்டழற்சி:
இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.
முடக்குவாதம்:
இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள், மணிக்கட்டு, கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.
மூட்டழற்சியின் அறிகுறிகள்:
நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும்.
முடக்குவாதத்தின் அறிகுறிகள்:
இது ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும்.
காரணம்:
முக்கிய காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம். முடக்குவாதம் சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரணமாகும். பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம்.
கைவைத்தியம்:
1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.
2. ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
3. இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
4. வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடுகு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.
5. இரண்டு டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கப் ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.
6. ஒரு டேபிள்ஸ்பூன் பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்..

இதயநோயை குறைக்கும் வெங்காயத்தாள்.

கொழுப்பால் உண்டாகும் இதயநோயை குறைக்கும் வெங்காயத்தாள்.
வெங்காயத்தாளில் உள்ள அதிகளவிலான கந்தகச்சத்து பல சுகாதார நன்மைகளை வழங்குகிறது.
சத்துக்கள்:
வைட்டமின் C, வைட்டமின் B2, வைட்டமின் A, வைட்டமின் k மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது தவிர, இவைகளில் காப்பர், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மங்கனீஸ் மற்றும் நார்ச்சத்துக்கள் மூலங்களாக உள்ளன.
மருத்துவ பயன்கள்:
வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் நீரில் கரையக்கூடிய கூழ்ம நிலை கார்போஹைட்ரேட், குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது.
வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. அவைகள் உடலில் உள்ள கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கின்றது.
வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது.
வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. அவைகள் உடலில் உள்ள கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கின்றது, இந்த காய்கறிகளில் உள்ள சல்பர் சேர்மங்கள், இரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும் மற்றும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
வெங்காயத்தாள் இரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவுகளை குறைக்க உதவுகிறது.
வெங்காயத்தாளில் உள்ள குரோமியம் சத்து நீரிழிவு நோய்க்கான சுகாதார நலன்களை வழங்குகிறது.
இது இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் குளுக்கோஸ் ஏற்புத் தன்மையை அதிகரிக்கிறது.
மேலும் இதில் உள்ள புரோப்பைல் டைசல்பேட்டானது, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
வெங்காயத்தாளில் உள்ள க்யூயர்சிடின், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஹிஸ்டமின் எதிர்ப்பு (திசுநீர் தேக்கி எதிர்ப்பு) போன்ற நன்மைகளை வழங்குகிறது.
இது கீல்வாதம் மற்றும் ஆஸ்துமா சிகிச்சைக்கு உதவும் வகையில் ஒரு நல்ல காய்கறியாக இருக்கிறது.
வெங்காயத்தாள் முட்டை பொரியல்:
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து லேசாக வதக்கிவிட்டு, நறுக்கிய வெங்காயத்தாளைச் சேர்க்கவும்.
வெங்காயத்தாள் சில நிமிடங்களிலேயே வதங்கிவிடும். பிறகு முட்டையை உடைத்து ஊற்றி கிளறிவிடவும்.
முட்டை வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.
சுடுசாதத்தில் அப்படியே பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும். பொரியலாகவும், சப்பாத்திக்குத் தொட்டு சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

Friday 25 September 2015

ஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா !!!.

ஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா !!!.
ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். வீடடில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.
முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.
இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள்.
இடவசதி குறைவாக உள்ளவர்களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன.
ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுகிறது. மகிழ்ச்சி பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான எண்ணங்களும் தோன்றுகின்றன. திரு மணங்களில் ‘ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.
ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேக மாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது. இது ஒரு நல்ல பயிற்சி.
கம்ப்யூட்டரில் மணிகணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன் றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற் சியை தினமும் செய்தால் முதுகுத்தண்டு வடம் பலம் பெற்று கழுத்துவலி குண மடைய வழி செய்கிறது.
தோட்டத்தில் அமைக் கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது. மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும். இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப் படும்.
ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.
சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும். கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும். வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.
பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள். வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை. சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.
இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று. இதை ஒரு தெய்வீக ஆசனம் என்றும் கூறுவர். வாஸ்துப் படி வீட்டின் முகப்பில் ஊஞ்சல் அமைத்தால் நல்லது.
ஊஞ்சல்கள் பலவகை:
சங்கிலியால் பிணைக்கப்பட்ட பெரிய பலகைகளை கொண்ட ஊஞ்சல். இது பழையகால ஊஞ்சல் என்றாலும் இதில் ஆடும்போது திரில் அதிகம்.
நவீன வகை ஊஞ்சல்கள் “சோபா” வகையை சேர்ந்தது. அமர்ந்து ஆட வசதியாக இருக்கும்.
தோட்டம் திறந்த வெளிகளுக்கு மெட்டல் ஊஞ்சல்கள் ஏற்றது.
மூங்கில் ஊஞ்சல்கள் பால்கனி படுக்கை அறைகளுக்கு ஏற்றது. மூங்கில் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் அதனால் வெயில் காலங்களில் குளிர்ச்சியை உடலுக்கு தர வல்லது. குறுகலான இடத்தில் ஊஞ்சல்கள் அமைக்கக் கூடாது. காற்றோட்டமான இடத்தில் தாராளமான இடவசதி உள்ள இடத்தில் ஊஞ்சல்கள் அமைப்பதே நல்லது.
கூடுமானவரை ஜன்னல்கள் அருகே ஊஞ்சல் அமைப்பது நல்லது. ரம்மியமான சூழ்நிலையில் ஊஞ்சல் அமைத்தால் இளைப்பாற வசதியாக இருக்கும்.
Image result for oonjalImage result for oonjal

மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய 6 பாடங்கள்..!

மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய 6 பாடங்கள் ..!
சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.
1 - சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.
2 - கொக்கு ஓடு மீன் ஓட, உறு மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.
3 - கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டுப்பட்டிருக்கும் குணம் ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
4 - விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவரவர்க்கு தேவையானவற்றை பிரித்துக் கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
5 - இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
6 - கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், தன்னைவிடவும் உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.
எவன் ஒருவன் மேலே சொன்ன இந்த இருபத்தியொரு விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.
இது நாங்க சொல்லலைங்க ..!
சாணக்கியர் சொல்லியிருக்கார் ..!!!



கர்ப்பப்பை கட்டிகள் (Uterine Tumurs) !!!

கர்ப்பப்பை கட்டிகள் (Uterine Tumurs) !!!
* கர்ப்பப்பை பாகங்கள் - கருப்பை கழுத்துப் பகுதி ( Cernix )
- உடல்பகுதி
- கருக்குழல்
- கருப்பை
எங்கு வேண்டுமானாலும் புதிய வளர்ச்சி ஏற்படலாம்.
* கர்ப்பப்பை கட்டி - பினைன் (Benign Tumor) (ஆபத்தில்லாத கட்டி)
- மாலிக்னன் (Malignant Tumor) (புற்று நோய் கட்டி)
Myomata
* ஆபத்தில்லாத கட்டி
* கர்ப்பப்பை தசைப்பகுதியில் இருந்து வளரும் கட்டி தசையில் இருந்து எழுந்த வளர்ச்சி நர் மயோமேட்டா (அல்லது) மயோமா
* இதை ஸ்க்லிரோமேட்டா, பைப்ராய்ட் என சொல்லாம்.
யார் யாருக்கு வர வாய்ப்புள்ளது?
* மாதவிலக்கு நின்ற பெண்களில் 60% பெண்களுக்கு காணப்படுகிறது.
* மணமாகி குழந்தையில்லாத பெண்கள் ஒரு குழந்தை மட்டும் பெற்றெடுத்த தாய். இவர்களில் 60% பெண்கள் வர வாய்ப்பு
* சதை வளர்ச்சி 1 செ.மீ - 15 செ.மீ. அளவு இருக்கும்.
* 30% பெண்கள் பாதிப்பு - 30 வயது - 40 வயது
* 60% பெண்கள் பாதிப்பு - 40 வயது - 50 வயது
* 30% பெண்கள் பாதிப்பு - பிள்ளையில்லாத பெண்கள்
* 20% பெண்கள் பாதிப்பு - ஒரு குழந்தை பெற்ற பெண்கள்
* 40% பெண்கள் பாதிப்பு - பல குழந்தைகள் பெற்ற பெண்கள்
* 10% பெண்கள் பாதிப்பு - முதர் கன்னிப்பெண்கள்
* 20 வயதுக்கு கீழ் உள்ள பெண்களிடம் Fibroids தோன்றுவதில்லை.
Except in Afro-Caribbean பெண்களிடம் 20 வயது கீழ் teenage -ல் தோன்றுகிறது.
(Fibroids) கர்ப்பப்பை கட்டிகளில் 4 வகைகள்
Submucus Fibroids :
கர்ப்பப்பையின் உள்ளே கரு எங்கே வளருமோ அங்கு வளரும். எண்டோ மெட்டிரியம் அடுக்கினால் இந்த Fibroids மூடப்பட்டிருக்கும்.
Intramural Fibroids
* கர்ப்பப்பையின் சுவர் பகுதியில் வளரும் கட்டிகள்.
* கர்ப்பப்பையின் இருபக்கங்களிலும் தோன்றக்கூடியது.
* 5 செ.மீ. மேல் கட்டி வளர்ந்தால் கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படும்.
Subserous Fibroids
* கர்ப்பப்பையின் வெளிப்பாகத்தில் தோன்றக்கூடியது
* சில மயோமேட்டாக்கள் காம்பு போன்ற பகுதியால் கர்ப்பப்பையுடன் இணைந்திருக்கும்.
* கர்ப்பப்பை வெளிபகுதியில் தோன்றுவதால் குழந்தை பிறப்பதில் எந்தவித பிரச்சனையும் இருக்காது.
Fundal Myoma
* கர்ப்பப்பையின் மேல், நடுப்பகுதிகளில் கட்டிகள் வருவது. இம்மாதிரி கட்டிகள் வருவது மிகவும் அரிது.
* சில மயோமா ப்ராட்லிகமெண்டுடன் இணைந்திருக்கும் ப்ராட்லிகமெண்ட்
* Penduculated Fibrods can be attached either to the inside or outside wall of the womb and they are characterize by a stalk
Cervical Myoma
மிக மிக ஆபூர்வமாக தோன்றுவது 4% காணப்படும்
Intramural Fibroids - 73%
Submucons - 16.6%
Subserous - 10.4%
கட்டிகள் உள், வெளிப்புற தோற்றம்
* வட்ட வடிவம் (அல்லது) முட்டை வடிவம்
* கேப்சியூல் போன்ற உறை. தொட்டால் ரப்பரி மாதிரி இருக்கும்
* கேப்சியூல் உள்ள இணைப்புத்தி மயோமாவை கர்ப்பப்பை சுவருடன் இணைகிறது.
* கேப்சியூல் - விசிறி போன்ற அமைப்பானது ரத்தக்குழாய் இதன் மூலம் ரத்தம் பெற்று மயோமா கட்டிகள் வளர்கிறது.
* கட்டியின் ஒரங்களில் ரத்தஒட்டம் மிகுதி. அங்கு கால்சியம் அடைப்பட்டு கல் மாதிரி தோன்றும்.
* கட்டியின் நடுப்பகுதிக்கு மிக குறைந்த ரத்தம் தான் செல்லும்
* கட்டியின் நடுப்பகுதியில் கால்சியம், பாஸ்பரஸ் அதிகமாக சேர்ந்து இறுகி விடும்.
Myoma வின் அறிகுறிகள்
* முக்கிய குறி அதிக மாதப்போக்கு ஏற்படுதல்
* கர்ப்பப்பையின் உள்ளே (அல்லது) கர்ப்பப்கையின் இருபக்கங்களிலும் வருவது மாதப்போக்கில் தன்மை ஒழுங்கற்று இருக்கும்.
* மாதப்போக்கு விட்டு விட்டு (அல்லது) ஒழுங்கற்று (அல்லது) அதிகமாக வெளிப்படலாம். கட்டிகளாகவும் வெளிப்படலாம்.
* கட்டியின் அளவு பெரியதாக இருப்பின் கர்ப்பப்பை கட்டி சிறுநீர்ப்பை (அல்லது) மலக்குடல் அழுத்துவதால் அடிக்கடி சிறுநீர் வெளியேறும். மலச்சிக்கல் ஏற்படும். முதுகுவலி ஏற்படலாம்.
* பெரும்பாலான பெண்களுக்கு மயோமாவால் அதிக மாதப்போக்கு ஏற்படுகிறது. வலி அவ்வளவாக இல்லை.
* சில பெண்களுக்கு அடிவயிறு கனத்து இருக்கும் இருக்கும் உணர்வு தோன்றுதல்
* சில பெண்களுக்கு அதிக போக்கின் காரணமாக இரத்த சோகை தோன்றலாம்.
* தொடர்ந்து இருபது நாட்களுக்குள் அதிக மாதப்போக்கு அல்லது ஐந்து நாட்கள் இடைவெளி விட்டு மீண்டும் மாதப்போக்கு ஏற்படலாம்.
* பல கேசுகளில் கர்ப்பப்பை கட்டிக்கான அறிகுறியே வெளிப்படாது.
* 25 - 30 வயதில் தோன்றும் Myoma கர்ப்பம் தரிப்பதை தடுக்கிறது.
* கர்ப்பம் தரித்த பின் ஏற்பட்டால் Myoma கருச்சிதைவு ஏற்படலாம்.
* பெரிய கட்டிகள் அழுத்தம் இரத்தக் குழாய்களைத் தாக்குவதால் இடுப்புக்குழியில்
வீக்கம், வலி ஏற்படும்.
* மாதப்போக்கு முற்றும் பெறும் காலம் மற்றும் முற்றும் பெற்றபின் சில கர்ப்பப்பை கட்டிகள் சுருங்கி விடும்.
Myoma ஏற்படக் காரணம்
* திட்டவட்டமான காரணம் அறியப்படவில்லை. பரவலான காரணம்
* நாட்பட்ட கர்ப்பப்பை தொற்று
* குழந்தையின்மை
* ஒரு குழந்தை மட்டும் பெற்ற பெண்கள்
* நாற்பது வயது வரை உள்ள கன்னிப்பெண்கள்.
=========================================================
 கர்ப்பப்பை கட்டி கரைய  இயற்கை மருத்துவக் குறிப்பு :-
அனைத்து கட்டிகளும் கரைய !!!
1)தொட்டால் சுருங்கி சூரணம் -விரற்கடை அளவு தினமும் காலை மாலை சாப்பிட்டு வர
2)ஒரு வேளைக்கு ஒரு கழற்சிக்காய் பருப்பு டன் ஐந்து மிளகு சேர்த்து சூரணமாக்கி
தினமும்
காலை மாலை
இருவேளை
சாப்பிட்டு வர
கொழுப்பு கட்டி
கருப்பைக் கட்டி
மற்றும்
அனைத்துக் கட்டிகளும் கரையும்
கட்டிகள் கரையும் வரை சாப்பிட வேண்டும்
தொட்டால் சுருங்கி சூரணமும் கழற்சிக்காய் பருப்பு பொடியும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கிறது...

கட்டுக்கொடி-Kattukodi [Cocculus hirsutus(Linn)Diels]

கட்டுக்கொடி-Kattukodi [Cocculus hirsutus(Linn)Diels]

தண்ணீரை அல்வா போல் மாற்றும் தன்மை கொண்டது.
கட்டுக்கொடியின் மருத்துவ குணங்கள்:-
கட்டுக்கொடி ஓர் ஏறு கொடியினம். முனை மழுங்கிய இலைகளுடன் வேலிகளிலும், புதர்களிலும், மானாவாரி, விவசாய நிலங்களிலும் படர்ந்து வளரக்கூடியது. இதில் சிறு கட்டுக்கொடி பெருகட்டுக் கொடி என இரு வகையுண்டு. இரண்டிற்கும் மருத்துவ குணம் ஒன்றே. ஒரே கட்டிலிருந்து பல கொடிகள் உண்டாகும். மண்ணில் பதிந்தால் வேர் விட்டு இன விருத்தியாகும். விதை மூலமும் இன விருத்தி செய்யப்படும்.
மருத்துவப் பயன்கள் :-
இது குளிர்ச்சியுட்டாக்கியாகவும் உமிழ்நீர்ப் பெருக்கியாகவும் செயற்படும்.
பாக்களவு இலையை மென்று தின்ன இரத்த பேதி, சீதபேதி, மூலக்கடுப்பு எரிச்சல் தீரும்.
இலை, வேப்பங்கொழுந்து சம அளவு அரைத்துக் காலை மட்டும் கொடுத்து வர நீரிழிவு, களைப்பு, ஆயாசம், தேக எரிவு, அதிதாகம், பகு மூத்திரம் தீரும். சிறுநீர்ச் சர்கரையும் தீரும். சூரணமாக்கியும் சாப்பிடலாம்.
பெருங்கட்டுக் கொடி இலை அரை எலுமிச்சை அளவு அரைத்து எருமைத் தயிருடன் கொடுக்க பெரும்பாடு தீரும்.
இலையுடன் மாம்பருப்பும் சமன் அரைத்து பால், சர்கரை சேர்த்து காலை, மாலை கொடுக்க பேதி தீரும். கஞ்சி ஆகாரம் மட்டும் கொடுக்கவும்.
சிறுதளவு வேரும், ஒரு துண்டு சுக்கு, 4 மிளகுடன் காய்ச்சிக் கொடுக்க வாதவலி, வாத நோய், கீல் நோய் தீரும்.
இலைச்சாற்றை சர்கரை கலந்து நீரில் வைத்து வைக்க சிறிது நேரத்தில் கட்டியாகும். இதை அதிகாலையில் சாப்பிட்டுவர வெள்ளை, வெட்டை, சீதக் கழிச்சல் ஆகியவை தீரும்.
கட்டுக்கொடி வேரையும், கழற்சிப் பருப்பையும் இழைத்து விழுதாக்கிக் கலந்து அரை தேக்கரண்டி நீரில் கலந்து கொடுக்கக் குழந்தைகளுக்குக் காணும் வயிற்றுவலி தீரும்.
கென்யாவில் இதன் இலையை வயிற்று வலிக்குப் பயன் படுத்துகிறார்கள். பாக்கிஸ்தானிலும் இந்தியாவிலும் நரம்புத் தளர்ச்சிக்காகப் பயன் படுத்துகிறார்கள் சைனாவில் வேரை உடல் பருமனைக் குறைக்கப் பயன் படுத்துகிறார்கள். ராஜஸ்த்தானில் இலையை சமைத்து மாலைக்கண் உண்டாவதைக் குணப்படுத்துகிறார்கள். இதன் இரு கொடிகளையும் பிலிப்பையின்ஸ் மற்றும் ஆப்பிரிக்காவில் கூடைகள் செய்யவும் பயன் படுத்திகிறார்கள். தமிழ் நாட்டில் இந்தக் கொடியை பிரமணை செய்வதற்கும், சிம்மாடு செயவதற்கும் பயன் படுத்துகிறார்கள்.


கழுத்து வலி தீர பாட்டி வைத்தியம் !



கழுத்து வலி தீர பாட்டி வைத்தியம் !

மனிதனை அவதிப்படுத்தும் வலிகள் அனேகம். அதிலும் கழுத்து வலி ஏற்படுத்தும் வேதனை அதை அனுபவிப்பவர்களுக்கே தெரியும். இன்று இளைஞர்களும் கூட கழுத்து வலியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கழுத்து வலி தீர பாரம்பரிய மருத்துவத்தில் சில வழிகள் உள்ளன.
அதில் ஒன்று தலையாணை வைத்து தூங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் இந்த கழுத்து வருவதாக கூறப்படுகிறது. எனவே கழுத்து வலி வந்தால் முதலில் தலையணை வைத்து தூங்குவதை நிறுத்துங்கள் சமதளமான தரையில் பாய் விரித்து தூங்குங்கள் என்கிறார்கள்.
அடுத்து நொச்சி இலையை நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி அதை தலைக்கு தேய்த்து அரைமணி நேரம் கழித்து வெந்நீரில் குளியுங்கள். ஒருநாள் நொச்சி இலை குளியல் என்றால், மறுநாள் யூகலிப்டஸ் இலையை கொதிக்க வைத்து குளியுங்கள்.
அடுத்தநாள் வாதமடக்கி(வாத நாராயணன்) இலையை கொதிக்க வைத்து உடம்புக்கு ஊற்றுங்கள் என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றார்கள். காலை சிற்றுண்டிக்கு முடக்கத்தான் இலையை இட்லி, தோசை மாவில் கலந்து சாப்பிடலாம்.
மதிய உணவுக்கு மிளகு ரசம் அல்லது கண்டதிப்பிலி ரசம் வைத்து சாப்பிடலாம். முடக்கத்தான் ரசமும் சாப்பிடலாம். பூண்டு, மிளகு குழம்பு சாப்பிடலாம். கடல் நண்டு கிடைத்தால் இஞ்சி பூண்டு காராமாக சேர்த்து சாப்பிடலாம்.
இரவு வேளையில் கண்டதிப்பிலியை இடித்து பால், நீர் சேர்த்து வேக வைத்து பனங்கற்பண்டு அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் கழுத்துவலி காணாமல் ஓடிவிடும் என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். கழுத்து வலியால் அவதிப்படுபவர்கள் இந்த குறிப்புகளை பின்பற்றி பாருங்கள்...


Saturday 19 September 2015

how to cure sugar without medition



how to cure sugar without medition

வலைத்தளம் கொண்டு பணம் சம்பாதிக்கலாம்



சுயதொழில் வருவாய் - இணையத்தில் சுயமாய் வலைத்தளம் கொண்டு பணம் சம்பாதிக்கலாம்.

கைகண்ட [அனுபவ] மருத்துவம் 1 !!

மருத்துவக் குறிப்புகள் எல்லாம் மலைவாழ்மக்கள் பயன்படுத்தும் மருத்துவக் குறிப்புகள்.கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காதது.அனைவருக்கும் பயன்படவேண்டி தேடிப்பிடித்து பகிர்கிறேன்.பாதுகாப்பாக இதனை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.உங்களுக்கும்/நண்பர்களுக்கும் பயன்படும்.-டாக்டர்.பாஸ்கர்.ஜெயராமன் 09341966927)
கைகண்ட [அனுபவ] மருத்துவம் !!1
நாடோடி மக்களின் பழக்கவழக்கங்களை நன்கு அறிந்து, அதன் பயனாகப் பல மூலிகைகளின் சிறப்பை உணர்ந்து, சித்த வைத்தியத்திலும் தேர்ந்தவர் பிலோஇருதயநாத்.
அவரின் கைகண்ட அனுபவம் மருத்துவம் இவை."
சில எளிய மருத்துவம்: !!!
வயிற்றுவலிக்கு: முருங்கைக் கீரையை ஒரு கைப்பிடி எடுத்துச் சுத்தமான தண்ணீரில் கழுவி, உரலில் போட்டு நன்றாக இடித்துச் சாறு பிழிந்துகொண்டு, காலை, பகல், மாலையில் கொஞ்சம் சர்க்கரையுடன் அதைக் கலந்து உணவுக்குமுன் 1/4 ஆழாக்குச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும்.
இடுப்பில் வரும் வண்ணார் புண்: இது சாதாரணமாய் எங்கே வாழ்ந்தாலும் சரி, சிலருக்கு உண்டாகும். இந்தப் புண் இருப்பவர்கள் இடுப்பைச் சுத்தமாகக் கழுவிக்கொண்ட பின், வாழைப் பழத்தோலின் உள் பக்கத்தைப் புண்ணின்மேல் வைத்து கட்டிக் கொள்ள வேண்டும். அப்பொழுது தாங்க முடியாத எரிச்சல் உண்டாகும். சில நாட்களில் முற்றும் குணம் அடைந்து விடும்.
கண்நோய்: கடுமையான கண் நோய் இருப்பவரகளுக்கு நீலகிரியில் வாழும் ஆதிவாசிகள், வெங்காயத்தை வெள்ளைத் துணியில் மூட்டை கட்டிப் பிறகு நசுக்கிக் கண்ணில் பிறிவார்கள். சில மணி நேரங்களில் நோய் குணமாகிறது.
டான்சில்ஸ்: சுத்தமான குங்குமப் பூவை இரண்டு கீற்று எடுத்து வெற்றிலையில் வைத்து வியாதியுள்ளவர்களுக்கு காலை, மாலை கொடுக்க, இரண்டே நாட்களில் குணம் காணலாம்.
தேள் கொட்டினால்: கேரள நாட்டு ஆதிவாசிகள் தேள் கொட்டினால் உடலின் எந்தப் பக்கத்தில் கொட்டுகிறதோ. அதற்கு எதிர்ப்பக்கத்துக் கண்ணில் ஒரு சொட்டு சுத்தமான உப்புத் தண்ணீரை விடுகிறார்கள். உப்பு நீரால் தேள் கொட்டிய இடத்தில் கீழ்பக்கமாக உருவிக் கழுவ வேண்டும். 5 நிமிடத்தில் விஷம் இறங்கி விடுகிறது.
வயிற்றில் உள்ள நாக்குபூச்சி போக: வயிற்றில் நாக்குப் பூச்சி இருப்போர் கண்ட மருந்தும் சாப்பிடக்கூடாது. வயதுக்குத் தகுந்தாற்போல் நல்ல சிற்றாமணக்கெண்ணெய் ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதே எண்ணெயின் அளவுக்கு நாட்டுச் சர்க்கரையைப் போட்டு நன்றாகக் கலக்கிய பிறகு அதிகாலையில் சுமார் ஆறு மணிக்குக் குடித்துவிட வேண்டும். வயிற்றில் இருக்கும் பூச்சிகள் இந்த வெல்லத்தைச் சாப்பிட வரும். அந்த வேகத்தில் பேதியுடன் கலந்து பூச்சிகள் வெளியில் வந்து விடும். அன்று மிளகு ரசம் மட்டுமே சாப்பிட வேண்டும். குளிக்கக்கூடாது..பப்பாளிப் பாலுடன் சுத்தமான தேன் கலந்து சாப்பிட்டாலும் வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சி இறந்துவிடும். பிறகு கொஞ்சம் ஆமணக்கு எண்ணெய் சாப்பிட்டால் பூச்சிகள் வெளியே வந்துவிடும். வயதுக்குத் தக்கபடி அளவுகள் வைத்துக் கொள்ள வேண்டும்.
தொண்டைக் கம்மலுக்கு: சித்தரத்தை, அதிமதுரம், அரிசித்திப்பிலி வாங்கி ஒன்றாக இடித்து, அதை இரு பாகமாக்கி ஒரு பாகத்தில் எண்ணூறு மில்லியளவுத் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். அந்த கஷாயம் இருநூறு மில்லியளவுத் தண்ணீராகச் சுண்டியதும், அதை ஒரு நாளைக்கு மூன்று வேளையாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும். மீதிப் பாதி மருந்தை மறு நாளைக்கு அதைப்போலவே செய்து மூன்று வேளை சாப்பிட வேண்டும். இதைப்போல் நான்கு நாட்களுக்கு சாப்பிட்டால் தொண்டைக் கம்மல் குணமாகும்.
ஒற்றைத் தலைவலி : மருதோன்றி (மருதாணி)யை “அழவான இலை’ என்றும் சொல்வார்கள். அந்த இலையை அரைத்து எந்தப் பக்கத்தில் தலைவலி இருக்கிறதோ, அந்தப் பக்கத்துக் காலின் அடிப்பாகத்தில், பாதத்தில் புதிய பத்துக் காசு அளவு வட்டமாக வைத்து, துணியால் கட்டிக் கொண்டு இரவில் படுத்துவிட வேண்டும். ஒரு தடவை செய்தால் போதும். உடனே ஒற்றைத் தலைவலி நின்றுவிடும். மறுபடி தலைவலி வரும்போது இப்படிச் செய்யலாம்.
அஜீரணம்: அடிக்கடி அஜீரணத்தால் துன்பப்படும் நண்பர்கள் தினமும் பப்பாளிப் பழத்தை ஒரு துண்டு சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட அஜீரணமும் போகும்.
கல்லீரல் வீக்கம்: கல்லீரல் வீக்கமும் காய்ச்சல் கட்டியும் உள்ள குழந்தைகளுக்குப் பப்பாளிப் பழத்தைச் சாப்பிடக் கொடுத்தால் சில நாட்களில் கட்டாயம் குணமாகும். பழத்தை அல்வா, ஜாம் முதலியவை செய்தும் சாப்பிடலாம்.
கக்குவான் இருமல்: அதிமதுர வேரை வாயில் அடக்கி வைத்துக் கொண்டு அதன் நீரை விழுங்கும்படி செய்யலாம். மக்காச் சோளக் கதிர்த் தண்டைக் கஷாயம் வைத்துச் சாப்பிடலாம்.இவற்றைக் கொடுத்தால் கக்குவான் இருமல் அடியோடு நீங்கி விடும் என்று நினைக்க வேண்டாம். கொஞ்சம் குறையும். குழந்தைகளுக்கு வாந்தி அதிகம் இராது. எப்படியும் மூன்று மாதம் இருந்த பின்தான் இருமல் போகும“.
குடல் வாதம்: முள்ளங்கியின் விதையைக் கஷாயமிட்டுச் சாப்பிடக் குடல் வாதம் அறவே நீங்கும்.
தாது விருத்தியாக: முள்ளங்கி விதையையும், முள்ளங்கிக் கிழங்கையும் அதிகமாக உடயோகித்து வந்தால் தாகு விருத்தியாகும்.
ஜலதோஷம்: பகலில் சாப்பாட்டின் போது ஒரு பச்சை வெங்காயத்தைத் துண்டு துண்டாக்கி உணவுடன் மூன்று வேளை சாப்பிட்டால் ஜலதோஷம் நீங்கும்.
வயிற்றில் கட்டி: வெள்ளை முள்ளங்கியின் சாற்றை எடுத்து அரை அவுன்சு வீதம் 90 நாட்கள் சாப்பிட வேண்டும். 91ம் நாள் குணம் தெரியும். காலையில் ஆகாரத்துக்கு முன் சாப்பிட வேண்டும். அரை மணிக்குப் பிறகு எதையும் சாப்பிடலாம்.
தலையில் புழு வெட்டு : 1. ஆற்றுத் தும்மட்டிக்காயை நான்காக வெட்டி அதில் ஒரு பகுதியைத் தலையில் தேய்க்க வேண்டும். இதன் கசப்புத் தன்மையைத் தாங்காத பூச்சி, உடலில் இறங்கி ரத்தத்தின் வேகத்தில் இறந்துவிடும். தும்மட்டிக்காயைச் சுமார் 90 நாட்கள் தேய்க்க வேண்டும். 2. வெங்காயத்தையும் மூக்குப் பொடியையும் ஒன்றாக இடித்துத் தலையில் எப்பகுதியில் சொட்டை இருக்கிறதோ, அப்பகுதியில் எரிச்சலைப் பாராமல் சுமார் 15 நாட்கள் தேய்க்க வேண்டும்.
பாதத்தில் பித்த வெடிப்பு: ஐந்து நாட்களுக்கு விடாமல் வேப்ப எண்ணெயைத் தடவினால் பித்த வெடிப்பு மறைந்துவிடும். ஆறு மாதத்துக்கு இந்தத் தொல்லை இராது.
வெண்குஷ்டம் : மருதாணி வேர். அதாவது அழவான இøல் செடிவேர் சிறிது எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். அதில் கொஞ்சம் எடுத்துப் பசும்பால் விட்டு நன்றாக அரைத்துக் கொண்டு வெண்மையாக இருக்கும் தோலின்மேல் பூசவும். நாளடைவில் தோலின் வெண்ணிறம் மாறிவிடும்.
காலராவைத் தடுக்க: காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேன் குடித்தால் வாந்திபேதி வராமல் தடுத்துக் கொள்ளலாம்.
மூலம், வாய்ப்புண், வயிற்றுப்புண்: இந்த வியாதிகளுக்குத் துத்தி இலைக் கீரையைச் சமைத்துச் சாப்பிட வேண்டும். புளி ஊற்றக் கூடாது. பகல் உணவுடன் ஒரு வேளை மட்டும் சாப்பிட வேண்டும். இந்தக் கீரை சாப்பிடும்போது மற்றக் கீரைகளை உண்ணக்கூடாது.
கடுமையான சுளுக்கு: சுளுக்குப் பிடித்த இடத்தில் துத்தி இலையை மெதுவாகத் தேய்த்துவிட வேண்டும். மேலிருந்து கீழ்நோக்கிக் காலையில் தேய்த்த ஒரு மணி நேரத்துக்குப்பின், தாங்கக்கூடிய சூட்டில் வெந்நீரை ஐந்து நாட்களுக்கு விட வேண்டும். பிறகு குணமாகும்.
காதில் சீழ் வடிதல்: எட்டிக் கொட்டையை வேப்பெண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து “ஒரு கோணி ஊசியில் குத்திக் கொள்ள வேண்டும். எட்டிக் கொட்டையைக் கொளுத்தியதும் கொட்டையிலிருந்து எண்ணெய் சொட்டும். அதுதான் எட்டித் தைலம். மூன்று சொட்டு ஆற வைத்து, காதில் விட வேண்டும். சீழ் குணமாகும். (5 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு இதைத் தரக்கூடாது)
காலில் ஆணி: ஊறுகாய்க்கு ஊற்றும் காடியைப் பஞ்சில் எடுத்துக் கொண்டு அணி இருக்கும் காலில் ஒரு நாளைக்குப் பலமுறை தடவிக் கொண்டே வரவேண்டும். 45 நாட்களில் குணம் தெரியும் ஆணி மறைந்துவிடும்.
பல்வலி : 1. கீழாநெல்லி இலையைக் காலையில் நன்றாக மென்று அப்படியே பல் துலக்க வேண்டும். மூன்று நாட்களுக்குப் பல் துலக்கினால் போதும். குணம் தெரியும். 2. தென்னை மரத்தின் வேரை நன்றாக மென்று மூன்று நாட்களுக்குப் பல் துலக்க வேண்டும். குணம் தெரியும்.
வழுக்கைத் தலையில் முடி வளர: காலையிலும், இரவிலும் சாதாரண வெங்காயத்தைத் தலை நிறையத் தேய்த்து வந்தால் இரண்டு மூன்று மாதங்களில் கருகருவென்று முடி வளர்ந்துவிடும்.
.

Tuesday 15 September 2015

Engineer Jobs 2015 (4771 Govt Vacancies Opening)

Engineer Jobs 2015 (4771 Govt Vacancies Opening)

Advertisements
Engineering Graduates, who pursing final year or recently completed engineering degree holders get your discipline wise suitable Government jobs - latest recruitment / vacancy details here. Engineering Graduates recruiting Government of India owned Public Sector Undertakings Companies / Organizations List: BHEL, BEL, Coal India, HPCL, EIL, BPCL, Mazagon Dock, MECON, NACL, NLC, NMDC, SAIL, NTPC, IOCL, ONGC, Power Grid, Railtel, RITES, UCI etc.
Educational Qualification: Four Year B.E. / B.Tech full time regular course/s from AICTE approved / UGC recognized University/Deemed University. Some vacancies required to GATE qualified candidates.
Engineering Disciplines: Civil Engineering, Electrical Engineering, Mechanical Engineering, Electronics Engineering, Systems Engineering. Computer Engineering, Chemical Engineering, Telecommunications engineering‎, Automobile Engineering etc.
Latest Engineering Jobs 2015 List Below (Last Updated on 15th September 2015)


Read more: Engineer Jobs 2015 (4771 Govt Vacancies Opening) http://www.indgovtjobs.in/2013/09/government-jobs-for-engineers-2013-2014.html#ixzz3lpk9pJoj

Wanted Mechanical / Electrical Engg

Mazagon Dock Shipbuilders Limited

Executive Trainees through GATE-2016 – 35 Posts Degree (Mechanical/ Electrical Engg)

Read more details: Latest Engineering Jobs  http://www.freejobalert.com/engineering-jobs/#ixzz3lphkbIvN




உடலெனும் பிரபஞ்சம்


அரசமரத்தின் சிறப்புகள் பற்றி காணலாம்.


லய வழிபாட்டின் சிறப்புகளையும், அங்கு பின்பற்றப்படும் செயல்களுக்கான அறிவியல் காரணங்களையும் இத்தொடர் கட்டுரையில் இதுவரை கண்டுவந்தோம். இப்போது ஆலயங்களிலுள்ள தலவிருட்ச சிறப்புகள் பற்றி காணலாம்.உலகிலுள்ள உயிர்களை உய்விக்கும் நன்னெறிச் சமயங்களில் நமது இந்து சமயம் தன்னிகரற்றதாக விளங்குகிறது. அவரவர் மனதின் பக்குவ நிலைக்கேற்ப, இறைவழிபாட்டுக் கொள்கையானது உருவநிலை, அருவுருவ நிலை, அருவநிலை என மூன்றாக உள்ளது.இறைவனை உருவற்ற நிலையில்- உண்மை, ஞானம், ஆனந்தம் என பண்புத்திறன் வடிவில்- எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்திருப்பவராகக் காண்பது அருவநிலை வழிபாடு. இது யோகியர், ஞானியருக்கானது. சாதாரண மக்களுக்கு இது அரிய செயல்.எங்கும் எதிலும் பரம்பொருளே உள்ளார் என்று நாம் உணர முயலவேண்டும். ஒரு இலக்காகத் தெரிகிற உருவத்துள்ளே, தெரியாத நிலையில் வேறொரு உருவாய் இறைவன் உள்ளதாகக் கருதி வழிபடுவார்கள். இது அருவுருவ வழிபாடு. உதாரணமாக சிவலிங்கத் திருமேனியைச் சொல்லலாம்.உருவ வழிபாடென்பது நடராஜர், அம்பாள், மகாவிஷ்ணு, மகாலட்சுமி, விநாயகர், முருகர் போன்ற துலங்கித் தெரியும் இஷ்ட தெய்வ வழிபாட்டைச் சொல்லலாம்.இதில் உருவ வழிபாடு முதல்படி. அருவுருவ வழிபாடு அதனினும் மேம்பட்டது. அருவவழிபாடென்பது முதுநிலை. நம் மனோலயத்தை படிப்படியாக இறைவனிடம் மேம்படுத்துவதே நமது வழிபாட்டு நெறியாகும்.இவ்வகைக்குள் தாவரமான மரங்களை ஒரு இலக்காகக்கொண்டு, அருவநிலையிலிருந்து அதனை அசைத்திடும் காற்றை கடவுளாகக் கருதி வழிபடுவது ஒரு முறையாகும். இது மிகச்சிறந்த அருவுருவ வழிபாட்டு நெறி. தெய்வீக மரங்களை இறைவனின் திருமேனியாகக் கண்டு, அவற்றைக் காத்து வணங்குவது பொதுநலத்துடன் கலந்த அறநெறியாகும்.தேவர்களும் மண்ணுலகு வந்து, தெய்வீக மரத்தின்கீழ் இறையுருவங்களை நிறுவி வழிபட்டுப் பேறுபெற்றனர் என்பதை புராணங்களிலும் இதிகாசங்களிலும் காண்கிறோம். காடுகளில் மரத்தடிகளில் இருந்த தெய்வாம்சத் தால் அப்பகுதியில் ஏற்பட்ட அதிசயங்களைக் கண்டுணர்ந்த மன்னர் முதலானோர், அந்த தெய்வங்களுக்கு ஆலயங்கள் அமைத்துப் போற்றிவந்ததையும் அறிகிறோம். இத்தகைய மரங்களே பழம்பெருங் கோவில்களில் தல மரங்களாக விளங்கிவருகின்றன. எப்பகுதியில் எந்த வகை மரங்கள் அதிகம் இருந்தனவோ, அவற்றின் பெயராலேயே தலங்கள் விளங்கி வருவதையும் காணலாம்.மிகத் தொன்மையான வேதகாலத்தில், பெருவேள்விகள் நிகழ்த்தும்போது யூபஸ்தம்பங்கள் எனப்படும் வேள்வித் தூண்களாக அத்திமரம் போன்றவை நடப்பட்டு வழிபடப் பட்டன. பிற்காலத்தில் காடுகளைத் திருத்தி மக்கள் வசிக்கும் கிராமப் பகுதிகளை அமைத்தபோது, நிலத்தை சீர்படுத்தியவுடன் ஆகம வாஸ்துப்படி எட்டு திசைகளிலும் எட்டு வகையான பெரு மரங்களை நடவேண்டும் என்று விதித்திருந்தார்கள். கிராமத்தின் எண்திசைக்கான சைத்யவிருட்சங்கள் என்று பெயரிட்டு வழிபட்டுவந்தனர்.இறைவனின் உறைவிடமாகவும், உயிர்கள் ஒடுங்கி உய்வுபெற தூண்டுதல் தரும் புனிதத் தலமாகவும் விளங்குபவை ஆலயங்கள். அங்கே ஒரு மரம் அல்லது தாவரத்தை தலவிருட்சம் என்று போற்றிவருவர். அரசு, வில்வம், ஆலம், வன்னி, அத்தி, சரக்கொன்றை, சந்தனம், பாதிரி, நெல்லி, மா, புன்னை, மகிழம், வேம்பு போன்ற மரங்கள் சிறப்பு வாய்ந்தவையாக உள்ளன. கோவில்களுக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றை சிறப்பாகச் சொல்வர். இவற்றில் தலவிருட்சம் மூர்த்தி வகையைச் சேர்ந்தது. அதுபோல மணி, மந்திரம், ஔஷதம் எனும் மூன்றனுள், தலவிருட்சத்தின் இலையானது ஔஷதம் (பச்சிலை) என்பதில் அடங்கும். இதனையே பூஜிக்கவேண்டும் என்பதை திருமூலர், "யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை' என்கிறார்.தெய்வ வடிவங்களாகக் கருதப்படும் பலவகை மரங்களுள் அரசமரம் முதன்மையானது.இம்மரத்தின் இலைகள் தேவர்களுக்கு இருக்கைகளாகவும் வசிப்பிடமாகவும் உள்ளன. நான்கு வேத ரூபமானதும், மும்மூர்த்திகளின் ஓருருவாக விளங்குவதும் அரசமரமே என்று வேதங்கள் போற்றுகின்றன. இது எங்கும் எந்தச் சூழலிலும் வளரக்கூடிய மரமாகும். அரச மரமானது சமஸ்கிருத மொழியில் அச்வத்தம், பிப்பலம், போதிவிருட்சம், சலதளம், குஞ்சராசனம், பூதாவாசம், அக்னிகர்பம், விருட்சராஜம், சமீபதி, வனஸ்பதி, வைணவம், யக்ஞாங்கம், இந்த்ரானுஜம், விருக்ஷேந்திரம், நிம்பபதி, ஹயாம்சஜம் என்னும் பதினாறு பெயர்களால் போற்றப்படுகிறது.சூரியனின் தேரிலுள்ள ஏழு குதிரைகளின் அம்சமாக அரசமரம் பூமியில் தோன்றியதென்பர். எனவே இம்மரத்தை எப்போதும் ஏழுமுறை வலம்வரவேண்டும். உதயகாலத்தில் பூஜிப்பதும் முக்கியம். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு மரத்தைக் குறிப்பிட்டிருப்பினும், அனைத்து தெய்வங்களுக்கும் விருப்பமானது அரச மரம் ஒன்றே. இம்மரத்தின் அடிப்பகுதியில் பிரம்மாவும், நடுப்பகுதியில் மகாவிஷ்ணுவும், மேல்பகுதியில் சிவனும் நித்திய வாசம் செய்வதாகக் கூறப்படுகிறது."மூலதோ பிரம்ஹரூபாய
மத்யதோ விஷ்ணு ரூபிணே/
ஆக்ரத: சிவரூபாய
விருக்ஷராஜாய தே நம//'என்னும் மந்திரம் கூறி அரசமரத்தை வணங்கவேண்டும்.இந்துசமய நெறியில் வாழ்வோருக்கு, அரசமரத்தை வலம்வருதல் அன்றாடக் கடமைகளில் ஒன்றாக விதிக்கப்பட்டுள்ளது. அமாவாசை அல்லது திங்கட்கிழமை அல்லது அமாசோம விரத காலங்களில் அங்கப்பிரதட்சிணம் செய்வதும் நியதி. பாவங்கள், தோஷங்கள், நோய்கள் அகலவும், உடல்நலம் பெறவும், மகப்பேறு அடையவும் அரசமரத்தை வலம் வருதலும், அரசமரத்தடியில் விநாயகர் அல்லது நாகர் பிரதிஷ்டை செய்து வழிபடுதலும் ஏற்றது.தெய்வப் பிரதிமைகள் செய்யவும்; கோவில், யாகசாலைக்கான பொருட்கள், வாகனங்கள்செய்யவும் அரசமரம் அவசியத் தேவையாகிறது. ஆனால் மனிதர்கள் தங்கள் சொந்த உபயோகத்

திற்காக வீடு கட்டவோ இதர பொருட்கள் செய்யவோ அரசமரத்தைப் பயன்படுத்தக்கூடாது.அரச மரத்தின் அனைத்துப் பொருட்களும் ஆலய சிறப்புப் பூஜைகளிலும், யாகங்களிலும் பயன்படக்கூடியவை. அரச சமித்தின் யாகாக்னி புகையானது ஆரோக்கியம், ஆயுளைத் தருவது.அரசமரக் காற்றானது நோய் நீக்கும். புனிதப்படுத்தும் சடங்குகளில் அரசமரத்தின் தேவை முதலிடம் வகிக்கிறது. இந்த மரக்கட்டையில் அக்னியை உண்டாக்கும் கருவியாகிய அரணிக்கட்டையைச் செய்து, அதைக் கடைந்து யாகத்தீயைத் தோற்றுவிப்பார்கள். அரசமரமானது யாகத்தில் யூபத்தூண்களாகவும், யாகசாலையில் கிழக்கு அல்லது மேற்கில் தோரணவாயிலாகவும், குச்சிகள் சர்வதேவதா ஹோமங்களுக்கு ஏற்றதாகவும் உள்ளது.விநாயகர் அல்லது விஷ்ணுவின் உருவப்பதுமைகளை முறைப்படி அரசமரத்தினால் செய்து ஜெபித்தால் மந்திரசித்தி உண்டாகும். மேலும் பூஜைக்குரிய சிவலிங்கம், திரிசூலம், பிம்பம், பாலாலயம், பாலபிம்பம் முதலியவற்றை இம்மரத்தில் செய்வது உரிய பயனை விரைந்தளிக்கும்.அரசமரத்தடியில் தவமிருத்தலால் யோகசித்தியும், ஞானசித்தியும் கிட்டும். புத்தர் முதலான பல மகான்கள் அரசமரத்தடியில் தவமிருந்தே ஞானம் பெற்றனர். முருகனின் திருக்கையில் விளங்குகிற ஞானவேல் என்பது அரச இலையின் உருவத்திலேயே இருப்பதும், யாகத்தில் சிதக்னிகுண்டம் என்பது அரச இலையின் வடிவமாய் உள்ளதும் இம்மரத்தின் ஆற்றலை உணர்த்தும். இம்மரத்தின் பட்டை, இலை, மொக்கு, அடிமண்ணை எடுக்கும்போது முதலில் மரத்தைப் பூஜித்து, பின்பு அதனிடம் யாசித்து தான் பெறவேண்டும்.

வலம்வரும் விதிமுறைஅரசமரத்தை விடியற்காலையில் வலம் வரவேண்டும். அதிகாலை முதல் 9.00 மணி வரையிலான பொழுதில் அரசமரத்தை ஈரத்துணியுடன் பிரதட்சிணம் செய்வது விரைவில் பலனைத் தரும். இம்மரத்தை சனிக்கிழமையில் மட்டுமே தொடலாம் என்பது சாஸ்திர விதி. அமாவாசை, ஏகாதசி, சப்தமி, பஞ்சமி ஆகிய திதிகளிலும்; சனி, ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய கிழமை களிலும் அரசமர வலம்வருவது சிறப்பைத் தரும்.விநாயகருக்கு ஒன்று; சூரியனுக்கு இரண்டு; சிவனுக்கும் பார்வதிக்கும் மூன்று; விஷ்ணுவுக்கும், மகாலட்சுமிக்கும், மகான்களின் சமாதிகளுக்கும் நான்கு என்ற எண்ணிக்கையில் வலம் வந்தால், அரசமரத்திற்கு மட்டும் ஏழு முறை வலம்வருதல் சாஸ்திர விதிமுறை.இவ்விதம் வலம் வரும்போது நிதானத்துடன் அடிமேல் அடிவைத்து, கைகளைக் கூப்பிக்கொண்டு, ஸ்தோத்ரத்தை உச்சரித்த வண்ணம் அமைதியுடனும் தூயஎண்ணத்துடனும் வலம்வர வேண்டும். ஒருபோதும் வேகமாகச் சுற்றிவரக்கூடாது. அரச மரத்தடியில் தெய்வமூர்த்தம், நாக லிங்கம் போன்றவை இருப்பின் அவற்றை தனியே விலக்கிவிடாமல் மரத்துடன் சேர்த்தே வலம்வர வேண்டும்.திங்கட்கிழமையில் அமாவாசை திதியும், ஞாயிற்றுக்கிழமையில் சப்தமி திதியும், செவ்வாய்க்கிழமையில் சதுர்த்தி திதியும், புதன்கிழமையில் அஷ்டமி திதியும் சேர்ந்து வந்தால் அந்த நாள் அரிய புண்ணிய தினமாகும். அந்த நாட்களில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடி முடித்து, புனிதராய் இருந்தவாறு அரச மரத்தைப் பூஜிக்கவேண்டும்.

பூஜைமுறைஅரசமரத்தடியில் அரிசிமாக்கோலங்களால் பூமியை அலங்கரித்து, காலம், தேசம், பயன்,நோக்கம் ஆகியவற்றை முதலில் சங்கல்பம் செய்துகொண்டு, கலசபூஜையைச் செய்யவேண்டும்.அரசமரத்தடியில் ஒரு அந்தணரை அமரச்செய்து பூஜிப்பது நன்மை தரும். தம்பதியராக பூஜித்தால் சிறந்த பயனடையலாம். சனிக்கிழமைகளில் தம்பதியை மரத்தடியில் இருத்தி லட்சுமி நாராயணராகவும், திங்கட் கிழமையில் உமா மகேச்வரராகவும் எண்ணி பூஜிக்கவேண்டும். இவ்வாறு பூஜித்து வலம் வருவோர் பலவகை கொடிய நோய்களிலிருந்தும்; தோஷங்கள், மனத்தளர்ச்சி, மனவருத்தம் போன்றவற்றிலிருந்தும் விடுதலை பெற்று, மக்கள் செல்வத்தையும் பெறுவார்கள் என்பது உறுதி.
சனிக்கிழமையில் அரச இலையில் சனி பகவானை எண்ணி வணங்கி வலம்வந்தால், சனிகிரக தோஷம் அகலும். நீண்ட ஆயுளும், உடல்நலமும் கிட்டுவது திண்ணம்.

"அச்வத்தபர்ணே சரசாபஹஸ்தம்
திஷ்டந்தமீட்யே வரதம் வரேண்யம்/
சநைச்சரம் பூரி வரப்ரதம் தம்
நமாம்யஹம் துக்கவிநாயசனாய//என்று கூறி வணங்குவதால் சனி பகவானின் அருளும், விஷ்ணுவின் அருளும் கிட்டும்.அரசமரத்தில் மின்காந்த சக்தியும், தாமிர சக்தியும் உள்ளது. உடல் நலமில்லாதவர்களும், மனக்குழப்பம் உள்ளவர்களும் சுத்தமான நீரில் தலைமுழுக்காடி, ஈரத்துணியுடன் தினமும் அரசமரத்தை காலையில் சுற்றிவந்தால் நாளுக்குநாள் சிறப்பாகத் தெளிவடைந்து, பரிபூரண நலம் பெறுவர். பொதுவாக மின்சாரமானது ஈரமான பொருட்களில் விரைவில் பரவும் தன்மைகொண்டதாகும். அரசமரத்தில் உள்ள மின்சார காந்த சக்தியானது அரச இலைகளின் நுனிவழியாக, ஈர ஆடையுடன் மரத்தடியில் வலம்வரும் அடியவர்களின் உடலில் சிறிது சிறிதாகப் பரவும். நாளுக்குநாள் இது அதிகரிப்பதால் உடல் உபாதைகள் நீங்கும். உடல் வலிமையடைந்து ஆரோக்கியம் அடைகிறார்கள்.