Sunday 17 December 2017

செவ்வாய் கிரகம் பற்றி கல்யாணம் ஆகாதவங்க கண்டிப்பா படிங்க .

கல்யாணம் ஆகாதவங்க கண்டிப்பா படிங்க .
செவ்வாய் ஒரு யுத்த கிரகம். சண்டைக்கு அதிபதி வீரத்துக்கு அதிபதி, நிலத்துக்கு அதிபதி, ரத்தத்துக்கு அதிபதி, பெண்கள் என்றால் கணவனை குறிப்பது என சொல்கிறது ஜோதிடம்..
.ஒரு ஜாதகத்தில் செவ்வாய் எங்கு நின்றாலும் அந்த இடம் அதிக சக்தியுடன் வீரியத்துடன் இருக்கிறது..அந்த பாவத்தை பல மடங்கு கொந்தளிக்க செய்யும்...
உதாரணமாக லக்னத்துக்கு இரண்டாம் இடம் என்பது என்ன..? வாக்கு அதாவது பேச்சு ,பார்வை, ஆரம்ப கல்வி என சொல்வோம் அங்கு செவ்வாய் இருந்தால் இவையெல்லாம் பல மடங்கு சக்தி பெறும் இதனால் பேச்சு அனல் பறக்கும். கோபம் அதிகமாக, பிடிவாதம் அதிகமாக ,நான் சொல்வதே சரி என சொல்ல வைக்கும்..அப்போ செவ்வாய் தோசத்தின் அடிப்படை என்ன..? இதெல்லாம் பிரச்சினையான இடம் அதுக்கு தகுந்த மாதிரி சேர்த்துங்க என நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
4ஆம் இடம் சுக ஸ்தானம் உடல் அடிக்கடி
பாதிக்கப்படுவது அல்லது உடல் அதிக பலத்துடன் இருப்பது,சொத்துக்கள் சேர்க்கை அல்லது சொத்துக்களில் வில்லங்கம்,தாயார் பாதிப்பு தாயாரால் பிரச்சினை,ஒழுக்கம் பாதிக்கப்படுதல் அல்லது ஒழுக்கத்தில் அளவுக்கு அதிகமான கண்டிப்பு இவையெல்லாம் லக்னத்தை பொறுத்து மாறும் என்பதால் இதையும் கொடுத்திருக்கிறேன் நெகடிவ் பாசிடிவ்.
7ஆம் இடம் என்பது என்ன..? களத்திர ஸ்தானம் அதாவது செக்ஸ் ,காமம் இவற்றை பற்றி சொல்லும் இடம்.. கணவன் அல்லது மனைவியை பற்றி சொல்லும் இடம், கூட்டாளி பற்றி சொல்லும் இடம் ,அங்கு செவ்வாய் இருந்தால் அதெல்லாம் பல மடங்கு பலம் பெறும்.. அல்லது அவற்றால் பல மடங்கு பிரச்சினைகளும் வரும்..மனமத லீலையில் மன்மதனாக இருப்பார்கள்..பெண்ணாக இருப்பின் கணவனுக்கு சுகம் கொடுப்பதில்,ரதியாக இருப்பாள்
,கணவனுக்கு மட்டும். இவர்களுக்கு ஈடு கொடுக்கும்படி துணை இருக்கனும் ...தொட்டாலே கம்பளி பூச்சி ஊறுற மாதிரி இருக்கு எனும் குணவதியை கட்டி வெச்சிட்டா டைவர்ஸ் தான்.அப்போ எவ்வளவு எச்சரிக்கையா இருக்கனும்..? ராசிக்கட்டத்தை ஆராயாமல் 9 பொருத்தம் இருக்கு.. ராமனும் சீதையும் மாதிரிஇருப்பாங்க என புலிக்கு பூனையை கட்டி வெச்சிடாதீங்க மக்களே..!!
8ஆம் இடம் கொஞ்சம் விவகாரமானது எதையும் ஓபனா சொல்லிடனும்னு நினைப்பதால் சொல்கிறேன்...இந்த இடம் ஆண் உறுப்பு பெண் உறுப்பு பற்றிய இடம்,நஷ்டம் பற்றியும் திடீர் அதிர்ஷ்டம் பற்றியும் சொல்லும் இடம்,துக்கத்தை சொல்லும் இடம்..சதா குழப்பமும் துக்கமும் இருக்கும்..டென்சன் அதிகமாகவே இருக்கும் இவருக்கு 2ல் செவ்வாய் இருக்கும் வாயாடியை ( ஸாரி எளிமையா புரியனும்னு இந்த பதத்தை பயன்படுத்துறேன்) கட்டி வெச்சிட்டா என்னாகும்..? போர்க்களம்தான்..எப்படி சந்தோசம் வரும்..? சரி இவருக்கு எந்த செவ்வாய் கல்யாணம் செய்து வைக்கிறது..? துக்கத்தில் இருப்பவரை சந்தோசப்படுத்திட 2ல் செவ்வாய் தவிர வேறு செவ்வாய் எதையும் சேர்க்கலாம்,
12 ஆம் இடம் என்பது தூக்கம்,கட்டில் சுகம்,காம உணர்வு,முக்தி,மோட்சம் பத்தி சொல்லும் இடம் அதை காம உணர்வு உற்பத்தியாகும் இடம்னு வெச்சிக்குவோம்..அங்கு செவ்வாய் இருக்கிறார் அப்போ தூக்கம் இல்லாம தவித்தல்,சதா சுகம் பத்திய நினைவு உண்டாதல் இருக்கலாம்..இவருக்கு 7ல் செவ்வாய் இருப்பவரை கட்டி வெச்சா செம பொருத்தமா இருக்கும் இல்லையா..? 2ல் செவ்வாய் பேசிக்கிட்டே இருப்பார் ....புரியுதுல்ல..7,12 செவ்வாய் நல்ல பொருத்ததை தரும் 2,8 செவ்வாய் மோசமான பொருத்தம்.4-7,4-8,2-7 கூட பிரச்சினை இல்லை...
செவ்வாய் தோசத்தின் முக்கிய சாராம்சம் இதுதான்..அதுக்கப்புறம் சுக்கிரன் வெச்சி இது மாதிரி ஆராய்ச்சி பண்ணலாம்...குரு இவருக்கு மேல இருப்பாரு...குரு,சுக்கிரன்,செவ்வாய் ,சூரியன் எல்லாம் முக்கியமான பெரிய கிரகங்கள் இவர்கள் எப்படி இருக்காங்கன்னு பார்க்காம பொருத்தம் அருமையா இருக்குன்னு சொல்லாதீங்க...

.பிரம்மஹத்தியை எளிதாக நினைக்காதீர்கள்....

..பிரம்மஹத்தியை எளிதாக நினைக்காதீர்கள்....
###########################
தோஷத்தில் பெரிய தோஷமே பிரம்மஹத்தி தான்..
எவருக்கும் எளிதில் இந்த தோஷம் இருக்காது..
மீறி இருந்தால் அவனுக்கு வாழ்க்கையே இருக்காது..
சனி+ குரு சேர்க்கை
சனி குரு சப்தம பார்வை சனி குரு திரிகோண பார்வை
எப்படி சனி குருவை நீசத்துடன் பார்த்தாலும் பிடித்தது பிரம்மஹத்தி என்று பொருள்..
இராமருக்கு பிரம்மஹத்தி பிடித்ததால் தான் திருவிடைமருதூர் வந்து சிவனை வணங்கினார்.
திருவிடைமருதூர் ஜோதி மகாலிங்கம் தான் ஒரே எளிய தீர்வு..
ஆனால் அந்த சிவனுக்கே பிரம்மஹத்தி பிடித்து தான் மேல்மலையனூர் அங்காளம்மன் உருவானது..
மும்மூர்த்திகளில் பிரம்மனுக்கு பெரிய கோயிலோ மக்கள் வணங்குவதோ இல்லை ஆனால் பிரம்மன் சாபம் தான் பிரம்மஹத்தி..
பரிகாரம் செய்தாலும் ஆண்டவன் கருணை இருந்தால் தான் இந்த தோஷம் போகும்..
பிரம்ம சாபத்திற்கு அவ்வுளவு வலிமை..
படைக்கும் மூர்த்தியான பிரம்மனுக்கு அழிக்கும் நாளையும் அவனே தீர்மானிக்கிறான்..பிரம்மன் படைத்த உயிரை நாம் இடையில் கொல்வதாலேயே நம்மை பிரம்ம சாபம் பிரம்மஹத்தியாக பிடித்து உயிரோடு கொல்லும் என்பது தான் இந்த தோஷத்தின் தன்மை..
எதற்கு இந்த பதிவு என்றால் எவருகெல்லாம் பிரம்மஹத்தி வரும் என்று ஆராய்ந்தால் பணத்தீமிரில் ஆடும் மனிதர்களுக்கு தான் முக்கியமாக பிரம்மஹத்தி எங்கோ எந்த சூழலிலோ பிறவியிலோ பிடித்தே தீரும்...
ஏழையை ஏமாற்றி அவன் சொத்தை அடைதல்
பெண்ணை கற்பழித்து கொல்லுதல்
ஐந்தறிவு ஐீவனை கொல்லுதல்
பிராமணர் சாபம் அடைதல்
நல்ல பாம்பை கொன்று எரித்தல்
துடிக்க துடிக்க எந்த உயிரை கொன்றாலும்
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பிறரை அழித்தல்
பொய் சத்தியம் பெரியவர்களுக்கு அவர்களது ஆன்மாவிற்கு செய்தாலோ பிரம்மஹத்தி பிடித்தே தீரும்..
இந்த தோஷம் எல்லாம் வந்தால் வாழ்நாளே இருண்ட காலமாகவே மாறிடும்...
பிரம்மஹத்தியால் வரும் பாதிப்புகள்..
தொழில் வேலை கடைசி வரை பாதிப்பு..
மனநிம்மதி கடைசி வரை இல்லாமை
மன உலைச்சல்
தகுதி இல்லாதவர்களிடம் செய்யாத தவறுக்கு தலைகுனிவு
தொடர்ந்து எதாவது நோய் உடலில் வந்து துன்புறுத்துவது..
இனம் புரியாத பயம்.
எதிர்காலம் என்னவாகும் என்ற புரியாத இருள் சூழ்ந்த கவலை
தூக்கமின்மை
புத்தி பேதலிப்பு..
மனநிலை பாதித்தல்
உயிரை கொல்வதற்கு தண்டனையாக உயிரோடு கொல்லுதல் என்பது தான் பிரம்மஹத்தி தோஷம்..
நன்றிகள் பல..
சா.மணிகண்டன்..

சுக்கரன் கிரக நன்மைகள்

1ல் சுக்கரன் –காமம் அதிகம் உண்டு.
2. 2ல் சுக்கரன் கள்ளத் தொடர்பு கட்டாயம் இருக்கும்.
3. 4ல் சந்திரன் நல்ல வீடு உண்டு, தாயாரால் பிரச்சினை.
4. 5ல் சனி(வக்கரம்) வேலைக்காரகளால் தொந்தரவு, மாமன் இல்லை. பிரகார தெய்வ வழிபாடு.
5. 6ல் செவ்வாய் கணவனை மதியாள். எதிரிகள் அதிகம்.
6. 4க்கு கேந்திரத்தில் சூரியன் தாகப்பன் சொத்து இல்லை.
7. 10ல் சுக்கிரன் பணக்கார வாழ்வு பின்னாளில் உண்டு.
8. செவ்வாய், சந்திரன் நல்ல நிலையில் விவசாய நிலம் உண்டு.
9. புதன் உச்சம் காலி மனைகள் காலி இடங்கள் உண்டு. கணவன் மனைவினிடையே அன்யோன்யம், மிக்க கேளிக்கையுடன் சந்தோஷம்.
10. சுக்ரன் சனி நல்ல பொருளாதாரம் உண்டு.
11. சந்திரன் சனி ராகு வெளிநாடு செல்லுதல், பயன கிரகங்கள்.
12. 7ல் குரு சாதுக்களின் சாபம்.
13. 10க்குடையவன் 3ல் சொந்த இடத்தில் தொழில் அமையாது.
14. குரு சந்திரன் ராகு உணவு விஷம்.
15. 10ல் நீச கிரகம் சொந்தப் பொருளை அனுபவிக்க இயலா நிலை.
16. செவ்வாய் +சந்திரன் +கேது திருமண வெறுப்பு.
17. சந்திரன் +சுக்ரன்+ ராகு+ சனி அருவறுப்பு நோய்.
18. குரு புதன் சந்திரன் கேது பிரம்மச்சாரு, தாமதத்திருமணம்.
19. குரு கேது தாமதத் திருமணம்.
20. குரு சந்திரன் புதன் சூரியன் காதல் திருமணம்.
21. 2க்குரியவன் 9,11ல் இரண்டு திருமணம்.
22. செவ்வாய் சுக்கிரன் சந்திரன் படி தாண்டும் திருட்டு உறவு.
23. 6க்குடையவன் திசையில் நொடிந்து போவார்கள், ஐபி கொடுத்தல்.
24. செவ்வாய் புதன் சந்திரன் கோழை.
25. 8ம் அதிபதி 8 ல் எங்குசென்றாலும் சொந்த ஊர் திரும்புதல்.
26. 6,8க்குடையவர்கள்12ல் மறைதல் அக்கா தங்கை உறவு பார்க்காது.
27. அஷ்டமச் சனி( உதயத்திற்க்கு 8ல் சனி) தன் பேராசைக்காக தன்னை வளர்த்தவருடன் போராடுதல், பேராசை அதிகமாகும் காலம்.
28. 2ல் செவ்வாய் கோபம் குடி கெடுக்கும் நிலை.
29: .சந்திராஷ்டம்ம்(தொந்தரவு).
30. 3ல் குரு தம்பியை ஏமாற்றும் நாடகதாரி, காதில் காற்றுடைப்பு.
31. 11ல் சூரியன் பழம் நழுவிபாலில் விழுதல்.
32. செவ்வாய் எங்கிருப்பினும் அதனின்று 10ம் வீடு கெடும்.
33. 3ல் சனி(அ) வக்கிரம் தன் படிப்பை பாதியில் நிறுத்துதல் .
34. சூரியன் சந்திரன் குடும்ப நபர்களில் யாரேனும் ஒருவர் திருமணப் பிரிவுடன் இருப்பிர்.
35. குரு சந்திரன் நல்ல செல்ல வளம் பெயர் தந்தாலும் தனிப்பட்ட வாழ்வில் மனக்கசப்பே, உடன் பிறந்த சகோதரர் வாழ்க்கையைக் கெடுக்கும்.
36. குரு சந்திரன் நல்ல செல்ல வளம் பெயர் தந்தாலும் தனிப்பட்ட வாழ்வில் மனக்கசப்பே உடன் பிறந்த சகோதரர் வாழ்க்கையைக் கெடுக்கும் புத்திர தோஷத்தைக் காட்டும்.
37. 10 ல் செவ்வாய் சொந்தத் தொழில செய்வதைக்காட்டும்.
38. 5ல் செவ்வாய் தகப்பன் காலத்திற்குப் பின் யோகம் தருகிறது.
39. 6ஆம் இடத்தில் ராகு வாழாத பெண்கள் உள்ள நிலை.
40. 6ஆம் அதிபதி நீச்சம் திருடிய பொருள் தங்காது.
41. 7ஆம் அதிபதி நீச்சம் மனைவி தங்காது, மனைவியின் பொருள் தங்காது (அ) எதிராளி (அ) பார்ட்னர் இருக்கமாட்டார்.
42. 8ம் அதிபதி நீச்சம் ஆயுள் தொந்தரவு.
43. குருவிற்கு 5,7,9 ல் கிரகம் இல்லை அற்ப ஆயுள், நோயாளி.
44. 7மிடம் திருடனின் நிலையை குறிக்கும்.
45. 7ம் அதிபதி திருடனைக் குறிக்கும்.
46. செவ்வாய் சனி ராகு பெரிய விபத்தைக் தரும் நிலையை காட்டுகிறது.
47. சுக்ரன் அஸ்தமனம் திருமணத் தாமதம். மனைவி தங்காமை, கண்கோளாறு, உடம்பின் முக்கிய சுரப்பகள் இயங்காத நிலை.
48. 1,7 க்குடையவர்கள் 6,8,12 இருப்பின் விரைவில் பிரிவு.
49. சனி சந்திரன் ஆஸ்துமா, புணர்பு யோகம் (திருமணத்தைத் தாமதப்படுத்த பொருளாதாரம் பாதித்தால் திருமணம் எளிதில், விரைவில் முடிந்து விடுகிறது) பந்தல் வரை போய் திருமணம் நின்றுபோனது புணர்பு யோகத்தினால்.
50. புதன் சந்திரன் சனி இழுவைச் சனி.
51. சந்திரன் புதன் டென்சன் பேர்வழி, மன அழுத்தம்.
52. 8ல் குரு வரட்டுப் பிடிவாதம்.
53. 4,8 க்குடையவர் சேர்க்கை வண்டி வாகன மிருகாதி விபத்துக்கள்.
54. 3ல் செவ்வாய் குருட்டுத் தைரியம்.
55. 5ல் சனி உதயத்தில் சனி நீசமான தெய்வம் (கருப்பராயன், முனியம்மாள், பாவாடைத் தாய், பிரகார தெய்வங்களை குறிக்கும்).
56. லக்னம்முதல் , சனி 3 பாகைக்குள் அற்பாயுள்.
57. மாந்தியிலிருந்து சனி 3 பாகைக்குள் அற்பாயுள்.
58. குரு சனி இளமையில் தொழில், நரம்பு சம்பந்தமான நோய்கள்.
59. 5ல் கேது பூர்விகம் போராடி கிடைக்கும்.
60. 8ல் செவ்வாய் சனி மாங்கல்ய தோஷம் 100 சதவீதம்
61. 10ல் சந்திரன் நீச்சம் கடன் அடையாது.
62. 7க்குடையவர் 10ல் நீச்சம் கடன் அடையாது.
63. 4ல் சனி, 4ம் அதிபதி நீசம், 4ல் நீசம் நம்பி மோசம் போதல், நம்பிக்கை இழத்தல்.
64. 8ம் ஆதிபதி 7ல் முதுகு வலி.
65. குரு புதன் அதிக நண்பர்கள்.
66. 11ல் புதன், 5ல் புதன் ஜோதிடர்.
67. 9ல் பாம்பு 10ல் பாம்பு மாந்தீரீகர்.(பாம்பு- ராகு அல்லது கேது )
68. சந்திரன் சுக்கிரன் பரிவர்த்தனை பல மனைவிகள், பணத்தட்டுப்பாடு.
69. சந்திரன் +புதன் சுக்ரன் கட்டுப்பாடற்ற மனம்.
70. செவ்வாய் புதன் குடிகாரன்.
71. நீச்ச சந்திரன் செவ்வாய் தவறான பழக்கம்.
72. 3ல் சுக்ரன் சந்தேகப் புத்தி, மறைமுக உறவு.
73. சந்திரன்+ கேது மன நிலைதடுமாற்றம்.
74. சந்திரன்+ புதன் +சுக்கிரன் அருவருக்கத்தக்க நோய்.
75. உதய லக்கனத்தில் ராகு பெருத்த உடல், மச்சம் முகத்தில் உண்டு.
76. 10ல் வக்ர கிரகம், 10ம் அதிபதி வக்ரம் தொழிலில் தனித்து இயங்கா நிலையை தருகிறது.
77. சனி நீச்சம் தொழிலில் தனித்து இயங்கா நிலை எற்படும்.

Thursday 26 October 2017

ஜாதகப்படி யாருக்கு கடன் கொடுத்தால் திரும்பி வராது?

ஜாதகப்படி யாருக்கு கடன் கொடுத்தால் திரும்பி வராது?
ஜாதகப்படி யார் கொடுத்த கடன் திரும்பிவராது?
 சமுதாயத்தில் அதிக குடும்பங்களில் இருந்து நிம்மதியை நிதானமாக பிரித்து மனநிறைவான அல்லது மகிழ்ச்சியான வாழ்க்கையினை உருக்குலைத்துக் கொண்டிருக்கும் ஒரு முக்கியமான சமூக பிரச்சனையை பற்றியும் அதிலிருந்து இனிமேல் எப்படி நம்மை தற்காத்துகொள்வது என்பதை பற்றியும் சற்று ஜோதிட அறிவியல் முறைப்படி காண்போம்.
கடன் கொடுக்கல் அல்லது வாங்கல் :
 ஜோதிட சாஸ்திரப்படி சில கிரக அமைப்புகளை கொண்ட ஜாதகர்கள் பிறருக்கு கடன் கொடுத்தால் அந்த கடன் திரும்பிவருவது மிகவும் அரிதான காரியமாகிவிடும். அதற்கேற்ப கடன் பெற்றவர்களுக்கும் அந்த கடனை திருப்பி செலுத்தக்கூடிய சு ழ்நிலை ஏற்படாது. மீறி பெற்ற கடனை திரும்ப செலுத்தினாலும், கடனை முழுவதும் அடைக்கமுடியாத நிலைமை உண்டாகும். எனவே பின்வரும் கிரக அமைப்புகளை கொண்ட ஜாதகர்கள் பிறருக்கு தங்கள் கையால் கடன் கொடுப்பதை முடிந்த அளவு தவிர்க்கவும்.
 ஒரு ஜாதகத்தில் இரண்டாம் இடம் தனம், வாக்கு, குடும்பம் மற்றும் பணவரவை குறிக்கும். ஒரு ஜாதகத்தில் இரண்டாம் இடத்திற்கு அதிபதியான கிரகம் நல்ல நிலைமையில் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு கொடுத்த கடன் எவ்வித சிரமமுமின்றி திரும்பிவரும்.
கிரக அமைப்புகள் :
 லக்னத்திற்கு இரண்டாமிடத்தில் ராகு கேது போன்ற சர்ப்பகிரகங்கள் இருந்தால் அந்த கிரக அமைப்புடைய ஜாதகர் பிறருக்கு கடன் கொடுக்கக்கூடாது. மீறி கொடுத்தால் கொடுத்த பணத்தையோ அல்லது பொருளையோ முழுமையாக வசு லிக்கமுடியாத சு ழ்நிலை உருவாகலாம்.
 லக்னத்திலிருந்து இரண்டாம் வீட்டிற்குரிய கிரகத்தை சர்ப்பகிரகங்களான ராகு கேது சு ழ்ந்திருந்தாலும் அவர்கள் பிறருக்கு கடன் கொடுக்கக்கூடாது. மீறி கொடுத்தால் அந்த பணத்தையோ, பொருளையோ படாதபாடுபட்டு மீட்கவேண்டி இருக்கும்.
 இரண்டாம் வீட்டிற்குரிய கிரகம் நீச்சம் பெற்று பலமிழந்திருந்தாலும் அவர்கள் பிறருக்கு பொருளையோ பணத்தையோ கடனாக கொடுக்கக்கூடாது.
 இரண்டாம் வீட்டிற்குரிய கிரகம் ராசிகட்டத்தில் எவ்வளவு பலமாக இருந்தாலும் அம்சத்தில் நீச்சம் பெறாமல் இருப்பது மிகமிக அவசியம் ஆகும். ராசிகட்டத்தில் இரண்டிற்குரிய கிரகம் அம்சத்தில் நீச்சம் பெற்றிருந்தால் அது முழுமையாக தன்னுடைய பலத்தை இழந்துள்ளது என்பதாகும். இந்த கிரக அமைப்புள்ளவர்களும் பிறருக்கு கடன் கொடுக்கக்கூடாது.
 ராசிகட்டத்தில் இரண்டாம் வீட்டிற்குரிய கிரகத்துடன் அஷ்டமாதிபதி எனப்படும் எட்டாம் வீட்டிற்குரிய கிரகம் சேர்ந்திருந்தாலும் அவர் பிறருக்கு கடன் கொடுக்கக்கூடாது.
 கடன்கொடுக்கும் எண்ணம் கொண்டவர்கள் உங்கள் வாழ்க்கையை இனிமையானதாகவும் நிம்மதியானதாகவும் அமைத்துக்கொள்ள, மேற்கண்ட கிரக அமைப்புகளை உங்கள் ஜாதகத்துடன் ஒப்பிட்டுபார்த்து முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள்.
 கொடுத்த கடன் வசு லாகாதது தொடர்பான மேற்கண்ட கிரக அமைப்புகளை தவிர இன்னும் சில கிரக அமைப்புகளும் விதிகளும் ஜோதிட சாஸ்திரத்தில் உள்ளது.
இது போல் கடனை கொடுத்து சிலர் மன உலசலுக்கு தள்ளபடுகிறார் இதை சரி செய்ய யந்திரம் தாய்த்து முறையை செய்வது சிறந்த்து.

Monday 25 September 2017

நவகிரக தோஷ பாதிப்பு நீங்க அதற்கானஅபூர்வ பரிகாரங்கள்

*நவகிரக தோஷ பாதிப்பு நீங்க அதற்கானஅபூர்வ பரிகாரங்கள்.........*

*சூரியன் தோஷம் விலக *
*****************************

உங்களுக்கு சூரியதோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம். சூரியன் பிதுர்காரகன். அதாவது தந்தைவழி உறவுகளின் அமைப்பில் சாதக பாதகங்களை ஏற்படுத்தக் கூடியவன். அரசு, அரசியல் துறை அமைப்புகள், ஆரோக்யம் இதற்கெல்லாமும் சூரியனோட அமைப்பே காரணம். உங்க ஜாதகப்படியோ அல்லது தசாபுக்திப்படியோ சூரியனோட அமைப்பு கெட்டிருந்தால், தந்தை வழி உறவுகளோடான ஒற்றுமை பாதிக்கப்படும். பூர்வீக சொத்தில் வில்லங்கம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் தலை, கண்கள், வயிறு, ரத்த மாறுபாடு, பித்தம் அதிகரிப்பு இப்படிப்பட்ட உபாதைகள் மாறி வரும். சட்டப்புறம்பான நபர்களால் மிரட்டல், அரசுவழி அனுமதிகள் கிடைப்பதில் தாமதம், சிலருக்குத் திருமண தாமதம் இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் சூரியன் அமைப்பு சரியில்லையாதலால், அதாவது சூரியதோஷத்தால் வரும்.

சூரியதோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி?

உங்களுக்கு சூரியதோஷம் இருந்தால், அடிக்கடி அனுமன் கோயிலுக்குப் போய் வழிபடுங்கள். தாமிரத்தால் செய்த இஷ்டதெய்வ டாலர் அல்லது அனுமன் டாலரை அணிந்து கொள்ளுங்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியோதயத்தின் போது உங்கள் வீட்டு பூஜையறையில் பசுநெய்தீபம் 5 அகலில் ஏற்றிவைத்து வழிபடுங்கள். பசுமாட்டுக்கு கோதுமை அல்லது கோதுமைத்தவிடு வாங்கிக் கொடுங்கள். சூரியனுக்குரிய ஆதித்ய ஹ்ருதயம், அனுமன் சாலீசா துதிகளை தினமும் கேளுங்கள். முடியாதவர் மாணிக்கக் கல்லில் டாலர் செய்து கழுத்தில் அணியுங்கள். அல்லது மாணிக்கத்தால் செய்த விநாயகரை பூஜியுங்கள். அடிக்கடி பிரசித்தி பெற்ற அனுமன் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்துவிட்டு சூரியனுக்குரிய தானியமான கோதுமையால் ஆன இனிப்பு வகைகளை இயன்ற அளவு தானம் செய்யுங்கள். சூரியனார் கோயிலுக்குப் போவதும் நல்லது. தினமும் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து உங்களது பணிகளை செய்ய ஆரம்பியுங்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் நவகிரகத்தில் உள்ள சூரியனை வழிபடுங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். சூரியதோஷம் சுலபமாக விலகும்.

*சந்திரன் தோஷம் விலக*
****************************

உங்களுக்கு சந்திரதோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம்.
சந்திரன் மாத்ரு காரகன். அதாவது தாய்வழி உறவுகளால் ஏற்படும் பிரச்சனைகள், உறவுகளுக்கிடையே ஏற்படும் ஒற்றுமைக் குறைவு, தாயின் ஆரோக்யம் அடிக்கடி பாதிக்கப்படுதல், தாய்வழி சொத்துக்களில் இழுபறி, பதவி, புகழ், கல்வி உயர்வுகளில் தடை போன்ற பாதிப்புகள் தோன்றலாம்.

சந்திர தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி?

ஜனனகால ஜாதக ரீதியாகவோ, தசாபுக்திப்படியோ உங்களுக்கு சந்திரதோஷம் இருந்தால் திங்கட்கிழமைகளில் சூரியோதயத்தின் போது உங்கள் வீட்டு பூஜையறையில் 5 அகல்தீபம் பசுநெய் விட்டு ஏற்றி வையுங்கள். அடிக்கடி பக்கத்தில் உள்ள சிவாலயத்திற்குச் சென்று அங்கு நடைபெறும் அன்னதானம் அல்லது நிவேதனத்திற்கு இயன்ற அளவு பச்சரிசி வாங்கிக் கொடுங்கள். ஈயத்தினால் செய்யப்பட்ட காப்பு அல்லது டாலரை அணிந்து கொள்ளுங்கள். பசுமாட்டிற்கு பச்சரிசியும் வெல்லமும் கலந்து கொடுப்பதும் சிறப்பான பரிகாரமே. திங்களூர் கைலாசநாதர் ஆலயத்திற்குச் சென்று கைலாசநாதரையும், நவகிரக சந்திரனையும் வழிபட்டு வாருங்கள். இயன்ற அளவு பால், இனிப்புகளை பிரசாதமாக விநியோகம் செய்யுங்கள்.
உங்களால் முடிந்தால் மூன்ஸ்டோன் கணபதியை வாங்கிவைத்து வழிபடுங்கள். எப்போதும் சந்திரனை தலையில் சூடியிருக்கும் சிவனது துதிகளையும், சந்திர காயத்ரியையும் சொல்லுங்கள். இதில் உங்களால் இயன்ற பரிகாரத்தைச் செய்தாலே, சந்திரதோஷம் உங்களை சங்கடப்படுத்தாமல் ஓடும். பவுர்ணமி நாளில் சந்திர ஒளி படும்படி கிரிவலம் செல்லுங்கள். அன்றை தினம் அருகிலுள்ள சிவாலயத்தில் உள்ள அம்பிகைக்கு அர்ச்சனை, அபிஷேகம் என இயன்றதைச் செய்து வழிபடுவது சிறப்பான பலன் தரும். குறைந்தது 3 நெய் தீபங்களையாவது ஏற்றி வழிபட்டால் வாழ்க்கை பிறையாகக் குறையாமல் முழுநிலவாக ஒளிரும்.
தஞ்சாவூர் நாதன்கோயில் நந்திபுர விண்ணகரப் பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாளையும், தாயாரையும் தரிசித்துவிட்டு, வெண்பொங்கல் பிரசாதம் விநியோகம் செய்துவிட்டு வருவது நல்லது. முத்து பதித்த டாலர் அல்லது முத்து மாலை அணிவது

*செவ்வாய் தோஷம் விலக*
******************************

உங்களுக்கு செவ்வாய் தோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம்.
சகோதர உறவுகளுடன் ஒற்றுமை குறையும். அவர்களின் ஆரோக்யம் அடிக்கடி சீர்கெடும். பூர்வீக சொத்துக்களான நிலம், வீடு சம்பந்தப்பட்ட வழக்குகள் இழுபறியாகும். சிற்றின்பநாட்டம் அதிகரிக்கும். கடன்கள் அடையாமல் அதிகரித்துக் கொண்டே போகும். ரத்த அழுத்த மாறுபாடு, ரத்தத்தொற்று நோய்கள், அடிக்கடி காயம் ஏற்படுதல், கழிவுப்பாதை உபாதைகள், தலைசுற்றல், பெண்களுக்கு மாதாந்திர உபாதைகளில் சிரமம் இப்படிப்பட்ட உடல்நலப் பிரச்சனைகளுள் ஏதாவது ஒன்று மாறி மாறி கஷ்டப்படுத்தக்கூடும்.

செவ்வாய் தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி?

செவ்வாய்க்கிழமைகளில் சூரியோதயத்தில் 6.15 முதல் 6.45க்குள் 5 அகல் தீபத்தினை பசுநெய்விட்டு உங்கள் விட்டு பூஜையறையில் ஏற்றி வையுங்கள். செம்பு உலோகத்தாலான டாலர் அல்லது காப்பை அணிந்து கொள்வது நல்லது. முருகன் (அ) துர்கை டாலரானால் கூடுதல் சிறப்பு. அடிக்கடி அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று முருகனை வழிபட்டும், அங்குள்ள நவகிரக சன்னதி செவ்வாயையும் வழிபட்டு வாருங்கள். முடிந்தால் பழநிக்குச் சென்று அங்குள்ள முறைப்படி முருகப்பெருமானை தரிசனம் செய்யுங்கள். வைத்தீஸ்வரன் கோயில் சென்று அங்குள்ள அங்காரகனுக்கு அர்ச்சனை செய்வதும் நல்ல பலன் தரும். ரெட்கார்னெட் டாலர் அணிவதும், ரெட்கார்னெட் கணபதியை பூஜிப்பதும் அவரவர் வசதிக்கு ஏற்ப செய்யலாம். வாயில்லா ஜீவன்களுக்கு தீவனம் வாங்கிக் கொடுங்கள்.
அடிக்கடி நவகிரக செவ்வாய்க்கு அர்ச்சனை செய்யுங்கள். உங்கள் பிறந்ததேதி அல்லது கிழமையில் செய்வது நல்லது. இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள்.

*புதன் தோஷம் விலக:*
*************************

உங்களுக்கு புதன் தோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம்.
புதன் வித்யாகாரகன். அதாவது கல்வி, கலை போன்றவற்றுக்குக் காரணமானவன். புதன் அமைப்புப் பாதகமாக இருந்தால் படிப்பு தடைபடுதல், பாட்டு, இசை, ஓவியம் போன்ற கலை ஆர்வம் தடைப்படுதல், உயர்வுகள் தடைப்பட்டு தாழ்நிலை ஏற்படுதல் போன்ற பொதுவான பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
அடிக்கடி விபத்து, உடல் சம்பந்தமான குறைபாடுகள் மாறி மாறி வரலாம். தோல் நிறமாற்றம், முக அழகு குறைதல் புத தோஷத்தால் ஏற்படும்.

புதன் தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி?

புதன் அமைதியான கிரகம், எனவே அமைதியாக, மென்மையாக இருக்கப் பழகுங்கள். பித்தளையால் செய்யப்பட்ட டாலர் அல்லது காப்பினை அணிந்து கொள்ளுங்கள். அடிக்கடி பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி வாங்கி சாற்றி வழிபடுங்கள். பக்தர்களுக்கு பச்சைப்பருப்பு பாயாசம் அல்லது பால்பாயாசம் பிரசாதமாக விநியோகம் செய்யுங்கள். புதன்கிழமைகளில் சூரியோதயத்தில் உங்கள் வீட்டு பூஜையறையில் 5 அகல்தீபம் பசுநெய் ஏற்றி இஷ்ட தெய்வத்தைக் கும்பிடுங்கள். புதன் காயத்ரி, பெருமாள் காயத்ரி மனதாரக் கூறுங்கள்.
பச்சை கார்னெட் கல் டாலர் அல்லது கணபதியை பூஜை செய்யலாம். அடிக்கடி நவகிரக புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள். முடிந்தால் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபடுவது நல்லது. நாகப்பட்டினம் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலுக்குச் சென்று அங்குள்ள முறைப்படி வழிபட்டு வாருங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள்.

*குரு தோஷம் விலக:*
************************

நமக்கு கிரகங்களினால் தோஷம் ஏற்பட்டால் குருவிடம் (வியாழன்) போய் முறையிடுவோம். ஆனால் அந்த குருவே நமக்கு தோஷமாக அமைந்து விட்டால்.... அதனால் பாதிப்பு ஏதும் இருக்காது. அதே சமயம் குரு என்ற முறையில் நமக்கு நல்ல பாடங்களையும் கற்று தருவார். வியாழன், புத்திரகாரகன். அதாவது குழந்தைகளின் ஆரோக்யம் சீர்கெடுவது, வாரிசுகளுடன் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படுவது, வாரிசுகள் உங்களைப் பிரிந்து போக நேரிடுவது இப்படிப்பட்ட பிரச்னைகள், வியாழ தோஷத்தால் ஏற்படலாம். ஞாபக மறதி, பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள், வயிறு உபாதை, தலைசுற்றல், ரத்த அழுத்த மாறுபாடு, பரம்பரை நோய் பாதிப்பு, படபடப்பு, மனஅழுத்தம் போன்ற உபாதைகள் மாறி மாறி வரலாம். செலவு இரட்டிப்பாகும்.

வியாழன் தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி?

வியாழக்கிழமைகளில் சூரியோதயத்தில் வீட்டு பூஜையறையில் 5 அகல் தீபம் ஏற்றி தட்சிணாமூர்த்தியை மனதார வழிபடுங்கள். ஆலங்குடி, திருச்செந்தூர், மந்திராலயம், தூத்துக்குடி ஆழ்வார் திருநகரி ஆகிய தலங்கள் ஏதாவது ஒன்றுக்குச் சென்று மனதார வழிபட்டு வாருங்கள். அந்தக் கோயிலுக்குப் போகும் முன் 40 லட்டுக்கும் குறையாமல் ஏழைகள் அல்லது பக்தர்களுக்கு விநியோகம் செய்யுங்கள். உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள தட்சிணாமூர்த்தியை அடிக்கடி சென்று வழிபட்டு வாருங்கள்.
தங்கத்தாலான ஏதாவது ஒரு ஆபரணத்தை உடலில் அணிவது நல்லது. அவரவர் வசதியைப் பொறுத்து மஞ்சள் டோபாஸ் கல்லால் ஆன டாலர் அணிவது அல்லது கணபதியை பூஜிப்பது நன்மைதரும். யானையைப் பார்க்கும் போது அல்லது கோயில் யானைக்கு மஞ்சள் வாழைப்பழம் இயன்ற அளவு வாங்கிக் கொடுங்கள். குரு காயத்ரி, தட்சிணாமூர்த்தி துதிகளையும் எப்போதும் சொல்லுங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். குருதோஷம் நிச்சயம் விலகி, குருவருள் பரிபூரணமாகக் கிட்டும்.

*சுக்ர தோஷம் விலக:*
************************

உங்களுக்கு புதன் தோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம்.
சுக்ரன், களத்திரகாரகன் அதாவது கணவன் மனைவி அமைப்புக்கு காரணமானவன். சுக்ரனின் அமைப்பு சரியில்லாமல் தோஷம் ஏற்பட்டால், குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை குறையும், கணவன் மனைவிக்கிடையே மனக்கசப்பு உண்டாகும். வாகன அமைப்பிற்கும் இவரே காரகன் என்பதால், புது வாகன யோகமோ அல்லது வாகன யோகத்தடையோ ஏற்படும்.
உடலில் முதுகுத்தண்டுவட உபாதை, கழிவுப்பாதை உறுப்புகள், கல்லீரல், சிறுநீரகக்கல், பிரசவகால பிரச்னைகள், இப்படி ஏதாவது ஒரு பிரச்னை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். கணவன் வழி அல்லது மனைவி வழி உறவுகளுடன் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

சுக்ர தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி?

வெள்ளிக்கிழமைகளில் சூரியோதயத்தில் உங்கள் வீட்டு பூஜையறையில் 5 அகல் தீபம் ஏற்றி வைத்து வழிபடுங்கள். உங்கள் குலதெய்வத்தையோ அல்லது ஸ்ரீரங்கநாதரையோ வழிபடுவது சிறப்பு. பக்கத்து பெருமாள் கோயிலில் உள்ள தாயாரை தாமரை மலர் அல்து மல்லிகைப்பூ கொடுத்து வழிபடுங்கள். முயன்ற அளவு தானம் செய்யுங்கள். நேரம் கிடைக்கும் போது சுக்ர காயத்ரி, மகாலட்சுமி துதிகளை மனதார கூறுங்கள். பசுமாட்டிற்கு தயிர்சாதம் அல்லது பச்சரிசி, வெல்லம் கலந்து கொடுங்கள்.
வசதி உள்ளவர்கள் வைரம் அல்லது க்ரீன் கார்னெட் கல்லையோ அல்லது அக்கல்லாலான விநாயகரை வாங்கி பூஜியுங்கள். அடிக்கடி ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசனம் செய்யுங்கள். உங்கள் வீட்டிற்கருகிலுள்ள நவகிரக சன்னதி சுக்ரனுக்கு இயன்ற அர்ச்சனை ஆராதனை செய்யுங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். சுக்ரதோஷம் நீங்கி வாழ்க்கையில் சுபயோக பலன்கள் கூடும்.

*சனி தோஷம் விலக:*
************************

சனீஸ்வரன் வர்றான்...தொல்லை கொடுக்கப்போறான்... என சிவன் உட்பட அனைவரும் பயப்படக்கூடிய ஒரே கிரகம் சனீஸ்வரன் தான். ஆனால் இவரைக்கண்டு யாரும் பயப்பட தேவையில்லை. இவருக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. அவரவர் செய்யக்கூடிய செயல்களுக்கேற்றாற் போல் பாதிப்புகளை கொடுக்க கூடியவர். எனவே இவரை நீதிபதி என்று அழைப்பது மிகப்பொருத்தமாக அமையும். . அதிலும் தலைமை நீதிபதி என்றால் கண கச்சிதாமாகப் பொருந்தக்கூடியவர் இவர் ஒருத்தர் தான். எம தர்மருக்கு கூட மன்னிக்கும் தன்மை உண்டு. ஆனால் இவர் நீதிபதி என்பதால் இவரிடம் மன்னிப்பு கிடையாது. மன்னிப்பு இவருக்கு பிடிக்காத வார்த்தை. இவருக்கு ஒருவரை பிடித்து விட்டால்,(ஏழரை, அஷ்டமத்து சனி, கண்டச்சனி, மங்கு சனி) அந்த காலகட்டத்தில் சனி தோஷம் பிடித்தவர்கள் நன்மைகள் பல செய்து, இறைவனை மனம் உருகி வழிபாடு செய்தால், பாதிப்பை குறைப்பார். அத்துடன் அவரை விட்டு விலகும் போது நன்மைகள் பல செய்வார்.

சனி தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி?

முயற்சிகளில் தடை, முன்னேற்றத்தில் தேக்கம், அதீத அலைச்சல், பணிச்சுமை, சோம்பல், விளைச்சல் பாதிப்பு, உடல் உறுப்புகளில் கோளாறு என பலவிதமான பிரச்னைகள் ஏற்படலாம். நரம்பு பிரச்னை, வாதநோய், வயிற்று உபாதை, எலும்பு தேய்மானம் போன்ற உபாதைகள் ஏற்படலாம்.

சனிதோஷம் போக செய்யக் கூடிய பரிகாரங்கள்;

தினமும் ஒருகைப்பிடி அன்னம் எள்சேர்த்து காகத்திற்கு வைப்பது நன்மை தரும். சனிக்கிழமைகளில் சூரியோதயத்தின் போது 5 அகல் தீபம் நல்லெண்ணெய் விட்டு ஏற்றுவதும், சிவதுதி, அனுமன் துதிகளைச் சொல்வதும் நல்லது. தினமும் சிவன், லட்சுமி நரசிம்மர், அனுமன், சனிபகவான் காயத்ரி மந்திரங்களை மனதாரக் கூறுங்கள். சனி பிரதோஷ தினங்களில் நந்தி தரிசனம் செய்வதும், சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்வதும் சிறப்பானது.

திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள நளதீர்த்தத்தில் நீராடி அங்குள்ள சனிபகவானை வழிபட்டும், திருவாரூர் திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் தலத்திற்கு சென்று அங்குள்ள பொங்கு சனிபகவானையும் வழிபடலாம்.

இரும்பு சட்டியில் 8 ஒரு ரூபாய் நாணயங்கள் போட்டு, நல்லெண்ணெய் நிரப்பி அதில் உங்கள் முகம் பார்த்த பின் தானம் அளிப்பது சனிதோஷம் நீங்கும். இரும்பு அல்லது ஸ்டீல் டாலர், காப்பு அணிவதும், அதை கருப்பு கயிறில் கட்டிக் கொள்வதும் நல்லது. வசதி உள்ளவர்கள் நீலக்கல் எனும் ப்ளூடோபாஸ் கல்லை டாலரில் பதித்து அணியலாம். அல்லது அந்தக் கல்லால் செய்த கணபதி சிலையை வாங்கி பூஜிக்கலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள். அடிக்கடி சிவாலயம் சென்று அங்குள்ள பார்வதியை வழிபட்டபின், நிறைவாக நவகிரக சனிபகவானை வணங்கி விட்டு அனுமனை தரிசித்து விட்டு வருவது நல்லது. அனுமன் இல்லாவிடில் வழியில் ஏதாவது ஒரு பிள்ளையாரை தரிசிப்பது நல்லது. இதில் உங்களால் முடிந்ததை செய்தால் சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள் வராது.

*ராகு தோஷம் விலக:*
************************

உங்களுக்கு ராகு தோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம். ராகுவின் அமைப்பு சரியாக இருந்தால் தந்தைவழி சொத்துக்கள் கைகூடி வரும். இல்லாவிட்டால் இழுபறியாகும். திருமணத் தடை, குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தடை, பெயர் புகழுக்கு களங்கம் ஏற்படுவது, எதிர்பாராத நஷ்டம், மனவிரக்தி, அடிக்கடி இடமாற்றம், வீண்பழி சுமத்தல், குடும்பப் பிரிவு என பொதுவான பிரச்னைகள் வரும். உடல் நலக் கோளாறுகள் மாறி மாறி ஏற்படும்.

ராகு தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி?

ராகுவுக்கு தனியாக ஓரைகாலம் இல்லை. அதனால், சனிக்கிழமை சூரியோதயத்தில் 5 அகல் தீபம் ஏற்றி வையுங்கள். தினமும் துர்கை காயத்ரி கூறுங்கள். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்கையை உதிரி 5 எலுமிச்சம்பழம் கொடுத்து, 5 அகலில் நெய்தீபம் ஏற்றி கும்பிடுங்கள். (எலுமிச்சை தீபம் கூடாது). 3 பழம் திரும்பி வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள், அடிக்கடி பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று அங்குள்ள துர்கையையும், திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயிலுக்குச் சென்று ராகுவையும், திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று நாகரையும் தரிசித்துவிட்டு வாருங்கள். முடிந்தால் பக்தர்களுக்கு உளுந்துசாதம் தானமாக கொடுங்கள். பசுவுக்கு கடலைப்பொட்டு அல்லது அகத்திக்கீரை தீவனம் வாங்கிக் கொடுங்கள்.
அடிக்கடி உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள கோயிலில் துர்கை, ராகு சன்னதியில் வழிபாடு செய்யுங்கள். வசதியானவர்கள் கோமேதகக் கல் பதித்த டாலர் அல்லது கோமேதக கணபதியை வணங்குங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்தால் ராகுதோஷ பாதிப்பு குறைந்து வாழ்க்கை ரம்மியமாகும்.

*கேது தோஷம் விலக:*
*************************

உங்களுக்கு கேது தோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம். படிப்பு தடைபடுதல், சொத்துப் பிரச்னை, மன விரக்தி, லட்சியத்தில் சோர்வு, ஏமாற்றம், கூடா நட்பு, வீண் சண்டை சச்சரவுகள் இப்படிப் பொதுவான பிரச்னைகள் வரலாம். உடல்நலக் குறைபாடு, மறதி, விஷ ஜுரம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

கேது தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி?

செவ்வாய்க் கிழமைகளில் சூரியோதயத்தில் 5 அகல் தீபங்களை நெய்விட்டு ஏற்றி வைத்து இஷ்ட தெய்வததை வழிபடுங்கள். அடிக்கடி அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்கு சென்று அறுகு சாற்றி வழிபாடு செய்யுங்கள். முடிந்த அளவு கதம்ப சாதத்தை தானம் செய்யுங்கள்.

துருக்கல் எனப்படும் உலோகத்தாலான டாலரை அணிந்து கொள்வது சிறப்பு. அடிக்கடி பிள்ளையார்பட்டி சென்று அங்குள்ள விநாயகரை அர்ச்சனை செய்து வழிபடுங்கள். அபிஷேக விபூதியை வாங்கி வந்து தினமும் இட்டுக் கொள்ளுங்கள். விநாயகர் காரிய சித்திமாலை துதியை எப்போதும் கூறுங்கள். உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள கோயில் நவகிரக கேது பகவானை வழிபடுங்கள். வசதியானவர்கள் கோமேதகக் கல் பதித்த டாலர் அல்லது கோமேதக கணபதியை வாங்கி பூஜை செய்யுங்கள்.
காளஹஸ்தி காளத்தியப்பர், கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயிலுக்குச் சென்று அங்குள்ள கேது பகவானை வணங்குங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்தால் கேதுதோஷ பாதிப்பு குறைந்து வாழ்க்கை கோலாகலமாகும்.

*நவக்கிரஹ சாந்திக்கு லால் கிதாப் வழங்கும் எளிய பரிகாரங்கள் .*
*************************************************************************

உங்கள் ஜனன ஜாதகத்தில் எந்தக் கிரகம் தீய பலன்களைத் தரும்படி உள்ளதோ அதைச் சாந்தி செய்யக் கீழ்க்கண்ட பரிகாரத்தைச் செய்து பலன் பெறுங்கள்.தீய பலன்களைத் தரும் கிரகத்தின் தசை,புத்தி நடைபெறும் சமயங்களிலும் இதைச் செய்யலாம்.

1.சூரியபகவான் - சனிக்கிழமை அன்று 7 வகையான தானியங்களை ஊற வைத்து ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அவற்றைப் பொடி செய்து எறும்புகளுக்குப் போடவும்.இதை 7 ஞாயிற்றுக்கிழமை செய்து வர சூரியனால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.

2.சந்திரபகவான் - வளர்பிறை திங்கள் கிழமை அன்று வீட்டு முற்றத்தில் நெருப்பு மூட்டி அதில் கொஞ்சம் பழைய வெல்லத்தைப் போட்டு விடவும்.சந்திரனால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.

3.செவ்வாய்பகவான் - தேய்பிறை செவ்வாய்க்கிழமை அன்று புதிதாக ஸ்வீட் வாங்கிப் பிச்சைக்காரர்களுக்குத் தானம் செய்ய செவ்வாய்க் கிரகத்தின் கெடுபலன்கள் குறையும்.

4.புதபகவான் - பூஜை அறையில் ஒரு செம்பில் கங்கா ஜலம் வைத்திருந்தால் புதன் கிரகத்தின் கெடுபலன்கள் குறையும்.

5.குருபகவான் - வியாழக்கிழமை தோறும் குங்குமப்பூவை மெழுகுப் பதமாக அரைத்து குங்குமம் கலந்து நெற்றில் திலகம் இட்டு வரக் குருபகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.

6.சுக்ரபகவான் - சிறிய வெண்ணிறப் பட்டுத் துணியில் வாசனை உள்ள மலர் வைத்து முடிந்து அதை ஓடும் நீரில் விட்டு விட சுக்கிரனால் உண்டான கெடுபலன்கள் குறையும்.

7.சனிபகவான் - ஒரு வெற்றிடத்தில் அல்லது வீட்டுப் பின்புற முற்றத்தில் கறுப்புத் துணியில் கருப்பு எள் வைத்து முடிந்து நெருப்பில் போட்டு எரிக்கச் சனிபகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.

8.கேது பகவான் - இரண்டு போர்வைகள் வேறு வேறு நிறத்தில் வாங்கிப் பிச்சைக்காரர்கள் அல்லது ஏழை முதியவர்களுக்குத் தானமாக வழங்க கேது பகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.

9.ராகு பகவான் - பாம்பாட்டிகளிடம் இருந்து ஒரு பாம்பை விலைக்கு வாங்கிக் அவற்றைக் காட்டில் கொண்டுபோய் விட ராகு பகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.இதை நாகபஞ்சமி (ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி ) அன்று செய்யவும்.

*கிரக கோளாறுகளை நீக்க எளிய குளியல் பரிகாரங்கள்.*
*********************************************************
நடக்கும் திசை அறிந்து அதற்கேற்ப அந்த கிரகங்களுக்குரிய பொருட்களால் குளித்து வர, அந்த கிரகங்களால் உண்டாகும் கெடு பலன்களை குறைத்தும், நற் பலன்கள் பெற்றும் வாழலாம்.மேலும்,ஜாதகத்தில் தற்சமயம் நமக்கு பாதகம் செய்யும் கிரகங்கள் எது என அறிந்து அதற்கேற்பவும் தினசரி குளியல் முறை செய்து வர நிச்சயம் நற் பலன்கள் பெற்று வாழலாம்.

சூரியன் : கச கசாவை பொடி செய்து நீரில் கலந்தும் அல்லது, குங்குமப்பூ அல்லது ஏதேனும் சிகப்பு மலர்கள் நீரில் போட்டு குளித்து வரலாம். சிறிதளவு போதும். இவற்றை போட்டு நான்கைந்து குவளைகள் நீரில் குளித்து விட்டு, பின்பு வழக்கம் போல் குளித்து வரலாம்.

சந்திரன் : தயிரை முதலில் உடல் முழுதும் தேய்து விட்டு சிறிது ஊறி பின்பு குளிக்கவும்.

செவ்வாய் : வில்வ கொட்டை பொடியை சிறிதளவு நீரில் சேர்த்து குளித்து வரலாம். செவ்வாய் தோஷத்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திப்பவர்கள், மற்றும் திருமண தடை போன்றவற்றிற்கு இது சிறந்த பரிகாரம்.

புதன் : மஞ்சள்கடுகுடன் சிறிது தேன் கலந்து, கங்கை நீர் அல்லது கடல் நீர் சிறிது சேர்க்கப்பட்ட நீரில் குளித்து வரலாம்.

வியாழன் : கருப்பு ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.

சுக்கிரன் : பச்சை ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.

சனி : கருப்பு எள் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.

ராகு : மகிஷாக்ஷி (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ) சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.

கேது : அருகம்புல் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.

- *சித்தர்களின் குரல் shiva shangar*

Friday 8 September 2017

உடலின் நலமும் ஆச்சாரம் ஆரோக்கியமும் (live healthy forever ) பாகம் 6.

vising பிரச்சனை மருந்து

ஐயா என் கணவர்க்கு இளப்பு vising பிரச்சனை குழந்தையில் இருந்தே உள்ளது. அவருக்கு வயது 30 எதேனும் மருந்து உண்டா ஐயா

ஆடாதொடை இலைப் பொடி--100 கிராம், கருந்துளசி இலை பொடி--100 கிராம், கருஞ்சீரகம்--20 கிராம், பனங்கற்கண்டு--250 கிராம் கலந்து வைத்து காலை , மாலை, இருவேளை வெற்றிலையில் 1 ஸ்பூன் பொடி வைத்து பீடா போல 90 நாள் சாப்பிடவும்

காலில் அடிபட்ட வீக்கம் குறைய என்ன செய்ய வேண்டும்

ஐயா. 
#எனக்கு இரண்டு மாதத்திற்க்கு முன்பு விபத்தில் காலில் அடிபட்டது. எலும்பு முறிவு இல்லை. ஆனால் இப்போது அந்த இடம் வீக்கமாக கானப்படுகிறது.இப்போது மருத்துவ மனை சென்றும் பயன் இல்லை. இப்போது x.Ray எடுத்தும்.எலும்பு முறிவு இல்லை என்று கூறி விட்டனர். வீக்கம்.வலி குறைய நான் என்ன செய்ய வேண்டும்.

முட்டை வெள்ளை கரு+துணி எரித்த சாம்பல்+ சீனி+ சிறிதளவு சுக்கு தூள்+ சிறிதளவு சுண்ணாம்பு+ வசம்பு சுட்ட கரி கலந்து அந்த இடத்தில் 3 நாள் போடுங்கள்.

உடலின் நலமும் ஆச்சாரம் ஆரோக்கியமும் (live healthy forever ) பாகம் 5.

உடலின் நலமும் ஆச்சாரம் ஆரோக்கியமும் (live healthy forever ) பாகம் 4

Wednesday 12 July 2017

30 வகை ரசம் 30 நாள் 30 வகை சமையல்

30 வகை ரசம்--30 நாள் 30 வகை சமையல்*
*'சௌத் இண்டியன் சூப்பர் சூப்!’- இது, நம்ம ஊர் ரசத்துக்கு வெளிநாட்டவர்கள் வைத்திருக்கும் செல்லப் பெயர்.*
நாக்கின் ருசி நரம்புகளைத் தூண்டி, சாப்பிடும் அனுபவத்தை ஆனந்தமாக்குவதால்தான், நம்முடைய சாப்பாட்டில் ரசத்துக்கு ஸ்பெஷல் இடஒதுக்கீடு கொடுத்திருக்கிறோம்.
அத்தகைய ரசத்தை, இங்கே 30 விதமாக சமைத்து திக்குமுக்காட வைக்கிறார் சமையல் கலை நிபுணர் .
''இளநீர் ரசம், ஆப்பிள் ரசம், மாங்காய் ரசம் என வித்தியாசமான ரசங்களுடன், குடும்ப ஆரோக்கியத்துக்கு கைகொடுக்கும் வகையில் மருத்துவ குணம்மிக்க இஞ்சி ரசம், ஓமவள்ளி ரசம், திப்பிலி ரசம் போன்றவற்றையும் தந்திருக்கிறேன்'' என்ற சமையல் கலை நிபுணர் சொல்லும் முக்கியமான டிப்ஸ் -
*''பொங்கி வரும்போதே ரசத்தை இறக்கிவிடவேண்டும். அதிக நேரம் கொதிக்க வைக்கக் கூடாது.''*
உங்களுக்காக 30 வகை ரசத்தையும், அழகுற அலங்கரித்து இங்கே பரிமாறுகிறார் செஃப் ! ----------------------------------------------------------------------------- *கொட்டு ரசம்*
*தேவையானவை:*
புளித் தண்ணீர் - 2 கப், ரசப்பொடி - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கடுகு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
*ரசப்பொடி செய்ய - தேவையானவை:*
தனியா - 300 கிராம், மிளகு - 100 கிராம், துவரம்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 50 கிராம், சீரகம் - 25 கிராம், மஞ்சள்துண்டு - சிறியது, காய்ந்த மிளகாய் - 20-லிருந்து 30 அல்லது காரத்துக்கு ஏற்றப்படி (கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மெஷினிலோ அல்லது மிக்ஸியிலோ கரகரப்பாக அரைத்து வைத்துக் கொண்டு தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்).
*செய்முறை:*
புளித் தண்ணீரை கொதிக்கவிடவும். புளி வாசனை போனவுடன் உப்பு, ரசப்பொடி, பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு பொங்கு பொங்கியவுடன் கீழே இறக்கி... கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். --------------------------------------------------------------------------- *முருங்கைப் பிஞ்சு ரசம்*
*தேவையானவை:*
முருங்கைப் பிஞ்சு (நறுக்கியது) - ஒரு கப், துவரம்பருப்பு - கால் கப், தக்காளி - 2, மிளகு - சீரகத்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
*செய்முறை:*
துவரம்பருப்பு, தக்காளி, முருங்கைப் பிஞ்சு ஆகியவற்றுடன் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். இதில் தேவையான தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து, உப்பு, மிளகு - சீரகத்தூள் சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில் எரிய விடவும். ஒரு கொதி வந்ததும் கீழே இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்துச் சேர்க்கவும். கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி அலங்கரிக்கவும். ----------------------------------------------------------------------------------- *வெங்காய ரசம்*
*தேவையானவை:*
தனியா - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், பூண்டு - 4 பல், தக்காளி - 2, நறுக்கிய வெங்காயம் - கால் கப், புளித் தண்ணீர் - 2 கப், கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
*செய்முறை:*
தனியா, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், இஞ்சித் துருவல், பூண்டு, தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை சிறிது நேரம் வதக்கி விழுதாக அரைக்கவும். இந்த விழுதுடன் புளித் தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும் (தேவைப்பட்டால் இன்னும் சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம்). எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்து இறக்கவும். கறிவேப்பிலை தூவவும் . -------------------------------------------------------------------------------- *கொத்தமல்லி ரசம்*
*தேவையானவை:*
தக்காளி - 3, தனியா - 2 டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கொத்தமல்லி - ஒரு சிறிய கட்டு, கடுகு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
*செய்முறை:*
தக்காளி, கொத்தமல்லியுடன் தனியா, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதைத் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். பெருங்காயம் தேவை இல்லை. ------------------------------------------------------------------------------- *கறிவேப்பிலை ரசம்*
*தேவையானவை:*
கறிவேப்பிலை - ஒரு கப், துவரம்பருப்பு - 3 டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், புளி - ஒரு சிறிய உருண்டை, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், நெய் - சிறிதளவு, கடுகு, உப்பு - தேவையான அளவு.
*செய்முறை:*
கறிவேப்பிலை, துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். புளியில் இரண்டு கப் தண்ணீர் விட்டுக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதை அடுப்பில் வைத்து மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும். இதனுடன் உப்பு மற்றும் அரைத்த விழுதை சேர்த்து, மேலும் ஓரிரண்டு நிமிடம் கொதிக்கவிடவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்த்து இறக்கவும். -------------------------------------------------------------------------- *பொரித்த ரசம் - 1*
*தேவையானவை:*
வேக வைத்து கரைத்த துவரம்பருப்பு தண்ணீர் - 2 கப், தக்காளி - 2, எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 3 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
*அரைக்க:*
துவரம்பருப்பு, தனியா - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, மிளகு - ஒரு டீஸ்பூன் (சிறிது நெய்யில் வறுக்கவும்), சீரகம் - ஒரு டீஸ்பூன் (வறுக்க வேண்டாம்).
*செய்முறை:*
பருப்புத் தண்ணீர், தக்காளி துண்டுகள் சேர்த்து தக்காளி வேகும் வரை கொதிக்க விடவும். (அல்லது பருப்பு, தக்காளி துண்டுகளை ஒன்றாக வேக வைத்து மசிக்கவும்). இதில் தேவையான அளவு அரைத்த பொடி, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, பொங்க வைத்து, கீழே இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்த்து... கொத்தமல்லி, கறிவேப்பிலை கிள்ளிப் போடவும். --------------------------------------------------------------------------- *பொரித்த ரசம் - 2*
*தேவையானவை:*
வேக வைத்து கரைத்த துவரம்பருப்புத் தண்ணீர் - 2 கப், காய்ந்த மிளகாய் - 3, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், தனியா - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், தக்காளி சாறு - ஒரு கப், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
*செய்முறை:*
தனியா, உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை நெய்யில் வறுத்து, சீரகம் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதுடன் பருப்புத் தண்ணீர், தக்காளி சாறு, உப்பு கலந்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்த்து.... கொத்தமல்லி, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு இறக்கவும். --------------------------------------------------------------- *திப்பிலி ரசம்*
*தேவையானவை:*
கண்ட திப்பிலி - 10 கிராம், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கடுகு - ஒரு டீஸ்பூன், புளி - எலுமிச்சம் பழ அளவு, எண்ணெய், உப்பு - தேவையானஅளவு.
*செய்முறை:*
வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு திப்பிலியை வறுக்கவும். கீழே இறக்கி சிறிதளவு தண்ணீர் விட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும் காய்ந்த மிளகாய், புளி, மிளகு, சீரகம் ஆகியவற்றை இதில் சேர்த்து தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். பிறகு, இதை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கரைத்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். கீழே இறக்கி, கடுகு தாளிக்கவும் . ------------------------------------------------------------------------- *ஒப்பட்டு ரசம்*
*தேவையானவை:*
வேக வைத்த கடலைப்பருப்பு - அரை கப், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், பொடித்த வெல்லம் - 3 டேபிள்ஸ்பூன், புளித் தண்ணீர் - 2 கப், ரசப்பொடி - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
*செய்முறை:*
வேக வைத்த கடலைப்பருப்பு, வெல்லம், தேங்காய் துருவலை சேர்த்து கெட்டியாக அரைத்து, வாணலியிலில் சேர்த்து கிளறிக் கொள்ளவும். புளித் தண்ணீரில் மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்க விடவும். பெருங்காயத்தூள், ரசப்பொடி, உப்பு சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்க விட்டு, பருப்புக் கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு, ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு, கீழே இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். கடைசியில் கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவவும். ------------------------------------------------------------- *ஆப்பிள் ரசம்*
*தேவையானவை:*
பொடியாக நறுக்கிய ஆப்பிள் - ஒரு கப், வேக வைத்த துவரம்பருப்பு (நன்றாக மசித்துக் கொள்ளவும்) - அரை கப், தக்காளி துண்டுகள் - கால் கப், கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. வறுத்து அரைக்க: துவரம்பருப்பு - இரண்டு டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், தனியா - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2.
*செய்முறை:*
வறுத்து அரைக்கக் கொடுத்துள் ளவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஆப்பிள் துண்டுகளை 3 கப் தண்ணீர் விட்டு வேகவிடவும் (குழைய வேகவிட வேண்டாம்). பிறகு, இதில் தக்காளி துண்டுகள், மசித்த பருப்பு, வறுத்து அரைத்த விழுது, மஞ்சள்தூள் உப்பு சேர்த்து, இரண்டு கொதி விட்டு இறக்கவும். எண்ணெ யில் கடுகு, சீரகம் தாளித்துச் சேர்க்கவும். கொத்தமல்லி, கறிவேப் பிலை கிள்ளிப் போடவும். ------------------------------------------------------------------------------ *துவரம்பருப்பு ரசம்*
*தேவையானவை:*
வேக வைத்து கரைத்த துவரம்பருப்பு தண்ணீர் - 2 கப், தக்காளி சாறு - அரை கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், துவரம்பருப்பு - மிளகு - மிளகாய் அரைத்த பொடி - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
*செய்முறை:*
பருப்புத் தண்ணீர், தக்காளி சாறு, அரைத்த பொடி, உப்பு பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பொங்கி வரும்வரை கொதிக்கவிட்டு, கீழே இறக்கவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்த்து, கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவவும். ---------------------------------------------------------------------- *கிள்ளு மிளகாய் ரசம்*
*தேவையானவை:*
காய்ந்த மிளகாய் - 2, கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், புளித் தண்ணீர் - 2 கப், கறிவேப்பிலை, கடுகு, எண்ணெய், உப்பு - தேவையானஅளவு.
*செய்முறை:*
புளித் தண்ணீரை 5 நிமிடம் கொதிக்கவிட்டு... உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். கடுகு மற்றும் இரண்டாக கிள்ளிய மிளகாயை எண்ணெயில் தாளித்துச் சேர்த்து, ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும். கடைசியில் கறிவேப்பிலையை கிள்ளி சேர்க்கவும். ------------------------------------------------------------------------- *மைசூர் ரசம்*
*தேவையானவை:*
வேக வைத்த துவரம்பருப்பு - அரை கப், தக்காளி - 6, வெல்லம் - சிறிய துண்டு, கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, தனியா - 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், நெய், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
*செய்முறை:*
நெய்யில் கடலைப்பருப்பு, தனியா, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சிவப்பாக வறுத்துக் கொள்ளவும் (சீரகத்தை வறுக்க வேண்டாம்). மிக்ஸியில் தண்ணீர் விட்டு, வறுத்து வைத்திருப்பவற்றுடன் தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும். கூடவே சீரகத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். தக்காளியை தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். தக்காளி சாறு, வேகவைத்து மசித்த துவரம்பருப்பு மற்றும் பருப்பு வேகவைத்த தண்ணீர் இவற்றுடன் அரைத்த விழுதையும் சேர்த்து, உப்பு போட்டு, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். வெல்லம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும். ------------------------------------------------------------------------ *மிளகு ரசம்*
*தேவையானவை:*
புளித் தண்ணீர் - 2 கப், மிளகு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
*செய்முறை:*
மிளகு, காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் புளித் தண்ணீரை விட்டு, மஞ்சள்தூள் சேர்த்து புளிவாசனை போகும் வரை கொதிக்க விடவும். பிறகு அரைத்த விழுது, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து கீழே இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்து, கறிவேப்பிலையை கிள்ளிப் போடவும். ------------------------------------------------------------------------------- *மாங்காய் ரசம்*
*தேவையானவை:*
மாங்காய் துருவல் - அரை கப், துவரம்பருப்பு, மிளகு - தலா 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, தக்காளி சாறு - கால் கப், கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
*செய்முறை:*
துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். மாங்காய் துருவலை சிறிதளவு தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். ஆறியபிறகு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் தக்காளி சாறு, உப்பு, அரைத்து வைத்திருக்கும் பொடி, பெருங்காயத்தூள் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க வைத்து கீழே இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்து... கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவவும். ----------------------------------------------------------------------------- *அரைத்து விட்ட வேப்பம்பூ ரசம்*
*தேவையானவை:*
காய்ந்த வேப்பம்பூ - 2 டேபிள்ஸ்பூன், தக்காளி - ஒன்று, புளித் தண்ணீர் - 2 கப், கடுகு, நெய் (அ) எண்ணெய், உப்பு - தேவையான அளவு. வறுத்து அரைக்க: கடலைப்பருப்பு, தனியா - தலா 2 டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்.
*செய்முறை:*
வறுத்து அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைக்கும்போது, தக்காளியையும் அரைத்து எடுக்கவும். இதனுடன் தேவையான புளித் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, உப்பு சேர்க்கவும். நெய் அல்லது எண்ணெயில் கடுகு, வேப்பம்பூ தாளித்துச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். -------------------------------------------------------------------------- *திடீர் ரசம்*
*தேவையானவை:*
புளி - எலுமிச்சம் பழ அளவு, துவரம்பருப்பு - 3 டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், தனியா - 6 டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
*செய்முறை:*
புளி, துவரம்பருப்பு, தனியா, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகிவற்றை லேசாக எண்ணெயில் வறுத்து, மிக்ஸியில் பவுடராக செய்து கொள்ளவும். இதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துச் சேர்த்து, உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற் றையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். ரசம் தேவைப்படும் போது ஒரு பாத்திரத்தில் இந்தப் பொடியை போட்டு, தேவையான தண்ணீர் விட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். சட்டென்று செய்யக் கூடியது இந்த ரசம். ---------------------------------------------------------------------------- *டொமேட்டோ ப்யூரி ரசம்*
*தேவையானவை:*
டொமேட்டோ ப்யூரி (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - ஒரு கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், ரசப்பொடி - 2 டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
*செய்முறை:*
டொமேட்டோ ப்யூரியில் தேவையான தண்ணீர் விட்டு, மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். பிறகு ரசப்பொடி, உப்பு, பெருங்காயத்தூள் போட்டு 2 நிமிடம் கொதிக்கவிடவும். எண்ணெயில் கடுகு, சீரகம் தாளித்துச் சேர்க்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவவும். ----------------------------------------------------------------------------- *தனியா ரசம்*
*தேவையானவை:*
தனியா - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், தக்காளி - கால் கிலோ, கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
*செய்முறை:*
தனியா, காய்ந்த மிளகாய், துவரம்பருப்பு, சீரகம் ஆகியவற்றை எண்ணெயில் வறுத்து அரைக்கவும். தக்காளியை மிக்ஸியில் அரைத்து, வறுத்து அரைத்த விழுது, உப்பு ஆகியவற்றை அதனுடன் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டுக் கரைத்து, அடுப்பில் வைத்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு கீழே இறக்கி, கடுகு தாளிக்கவும். -------------------------------------------------------------------- *பார்லி ரசம்*
*தேவையானவை:*
பார்லி - ஒரு கப், மிளகு - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், தக்காளி சாறு - அரை கப், கடுகு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
*செய்முறை:*
மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக பொடிக்கவும். பார்லியில் 3 கப் தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்கவும் இந்த தண்ணீருடன் தக்காளி சாறு, மிளகு - சீரகப் பொடி, உப்பு போட்டு கொதிக்க வைக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்து இறக்கவும். -------------------------------------------------------------------------------- *மோர் ரசம்*
*தேவையானவை:*
மோர் - 2 கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், தனியா - 2 டீஸ்பூன், வெந்தயம், கடுகு - தலா அரை டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
*செய்முறை:*
துவரம்பருப்பு, தனியா, வெந்தயம், மிளகு ஆகியவற்றை வறுத்து, சீரகத்தை சேர்த்து அரைக்கவும். மோரில் மஞ்சள்தூள், உப்பு, அரைத்த விழுது சேர்த்து லேசாக சூடு செய்து (கொதிக்க வைக்க வேண்டாம்) கீழே இறக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும். -------------------------------------------------------------------------------- *புளி இல்லாத ரசம்*
*தேவையானவை:*
தக்காளி சாறு - 2 கப், வேக வைத்து கரைத்த துவரம்பருப்பு தண்ணீர் - அரை கப், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் (நீள வாக்கில் கீறியது) - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், மிளகு, கடுகு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
*செய்முறை 
உளுத்தம்பருப்பையும், மிளகையும் சிறிது எண்ணெய் விட்டு வறுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். தக்காளி சாறு, பருப்புத் தண்ணீர், உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, அரைத்த பொடியையும் போட்டு 2 நிமிடம் கொதிக்கவிடவும். கீறிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், கறிவேப்பிலை சேர்த்து கீழே இறக்கி, எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். ------------------------------------------------------------------------------- *புதினா ரசம்*
*தேவையானவை:*
புதினா இலைகள் - ஒரு கப், மிள காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், தக்காளி சாறு (அ) புளித் தண்ணீர் - 2 கப், கடுகு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
*செய்முறை:*
புதினா இலைகளை தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டவும் இந்த நீரில் உப்பு, மிளகாய்தூள், சீரகத்தூள் பெருங்காயத் தூள், தக்காளி சாறு அல்லது புளி தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிடவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்து இறக்கவும். ------------------------------------------------------------------------ *இஞ்சி ரசம்*
*தேவையானவை:*
இஞ்சித் துருவல் - கால் கப், துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், தக்காளி சாறு - 2 கப், கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
*செய்முறை:*
இஞ்சித் துருவலுடன் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, துவரம்பருப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதில் உப்பு, தக்காளி சாறு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். ----------------------------------------------------------------------------- *இளநீர் ரசம்*
*தேவையானவை:*
இளநீர் - 2 கப், தக்காளி சாறு - அரை கப், துவரம்பருப்பு, மிளகு, சீரகம் - தலா 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், இளநீர் வழுக்கை - கால் கப், கடுகு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு
*செய்முறை:*
துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து, கடைசியில் இளநீர் வழுக்கையையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதனுடன் இளநீர், தக்காளி சாறு, உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்துச் சேர்க்கவும். -------------------------------------------------------------------------- *ஸ்பெஷல் எலுமிச்சை ரசம்*
*தேவையானவை:*
தக்காளி - 3, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கொத்தமல்லி - ஒரு கப், சீரகம் - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், கடுகு, நெய், உப்பு - தேவையான அளவு.
*செய்முறை:*
தக்காளி, கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகம், ஆகியவற்றுடன் தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும் இதனுடன் தேவையான தண்ணீர், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு கீழே இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். கடைசியாக, நெய்யில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். ------------------------------------------------------------------------- *அரைத்துவிட்ட பூண்டு ரசம்*
*தேவையானவை:*
துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், தனியா - 4 டீஸ்பூன், மிளகு - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பூண்டு பல் - 10, புளித் தண்ணீர் - 2 கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கடுகு, எண்ணெய், உப்பு - தேவையானஅளவு.
*செய்முறை:*
துவரம்பருப்பு, தனியா, மிளகு, சீரகம், பூண்டு பல் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். புளித் தண்ணீரில் மஞ்சள்தூள் சேர்த்து புளி வாசனை போகும் வரை கொதிக்க விடவும். அதில் அரைத்த விழுதைச் சேர்த்து, உப்பு போட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டு கீழே இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். -------------------------------------------------------------------------------- *ஓமவள்ளி ரசம்*
*தேவையானவை:*
ஓமவள்ளி இலை - 5, சுக்கு - ஒரு சிறிய துண்டு, மிளகு - அரை டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், தக்காளி சாறு - 2 கப், நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
*செய்முறை:*
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஓமவள்ளி இலை, சுக்கு, துவரம்பருப்பு, மிளகு ஆகியவற்றை லேசாக வதக்கி, விழுதாக அரைக்கவும். இதை தக்காளி சாறுடன் கலந்து தேவையான தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைக்கவும். கீழே இறக்கி நெய்யில் கடுகு, சீரகம் தாளித்துச் சேர்க்கவும். ------------------------------------------------------------------------------- *ஸ்பெஷல் பூண்டு ரசம்*
*தேவையானவை:*
புளித் தண்ணீர் - 2 கப், துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பூண்டு - 4 பல், தக்காளி - ஒன்று, கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
*செய்முறை:*
சிறிதளவு எண்ணெயில் துவரம்பருப்பு, சீரகம், பூண்டு ஆகியவற்றை வதக்கி கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். புளித் தண்ணீரில் தக்காளி துண்டுகளை வேகவிடவும். பிறகு அரைத்த விழுது, உப்பு சேர்க்கவும். 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும். ------------------------------------------------------------------------------ *உருண்டை ரசம்*
*தேவையானவை:*
துவரம்பருப்பு - அரை கப், கடலைப்பருப்பு - கால் கப், புளித் தண்ணீர் - 2 கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
*வறுத்து அரைக்க:*
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்.
*செய்முறை:*
துவரம்பருப்பு, கடலைப்பருப்பை ஊற வைத்து, அரைத்து ஆவியில் வேக விடவும். வறுத்து அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். புளித் தண்ணீருடன் மஞ்சள்தூள் சேர்த்து, புளி வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். வறுத்து அரைத்த விழுதை இதில் சேர்த்து, உப்பு போடவும். ஆவியில் வேக வைத்து எடுத்த பருப்பு கலவையிலிருந்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி ரசத்தில் போட்டு, 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். கடைசியில் கொத்தமல்லி, கறிவேப்பிலை கிள்ளிப் போடவும்.