Sunday 25 July 2021

மது அருந்துதல் குடிப்பழக்கம் சரி செய்ய மலர் மருத்துவம்

மது அருந்துதல் குடிப்பழக்கம் சரி செய்ய மலர் மருத்துவம் 

குடிப்பழக்கம் சம்பந்தப்பட்ட விஷயத்தில்....

மது குடிப்பவர் மனநிலை மிக முக்கியம்....

#Agrimony டைப் நபர்களாக இருப்பின்....தன் கவலையை மறக்க பொழுது போக்க குடிப்பார்.

#Aspen உள்ளூர ஒரு பயம் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் இருப்பதற்காக குடிப்பார்.

#Beech ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்கள் போன்றவற்றில் மட்டுமே மது அருந்தக் கூடியவர்கள்....மிக உயர்ந்த மதுவை அருந்துகிறேன் பேர்வழி என்று மதுவுக்கு அடிமையாக இருப்பதை ஒப்புக்கொள்ள மாட்டார்.

#Centaury குடிக்காவிட்டால் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை, கை கால்கள் நடுங்கும் என்று சொல்பவருக்கு.

#Cerato வாழ்க்கையின் பிரச்னைகளை  எப்படி தீர்ட்பதென்று புரியாமல் குழப்பங்கள் எற்பட்டு குடிப்பவருக்கு.

#Cherryplum டைப் நபர்கள், பிறர் குடிப்பதை பார்க்கும் போது, பிறர் குடிக்க தூண்டும் போதும்; தன் கோபத்தை கொட்டி தீர்க்க குடிப்பார்.

#Chestnutbud 
வாழ்க்கையில் பல்வேறு தவறுகளை செய்து, அதன் விளைவால் வரும் பிரச்சனை எண்ணி குடிப்பார்.
குடிக்க கூடாது என்று நினைபார், ஆனால் குடித்து விட்டு இப்படி குடித்து விட்டேனே என்று வருந்துவார்.

#Chicory தன் பணத்தில் குடிக்க மாட்டார். ஓசியில் கிடைத்தால் குடிப்பார். அல்லது தன் பணத்தை குறைவாக செலவு செய்து குடிக்க வாய்ப்பு கிடைத்தால் குடிப்பார். அல்லது யாரைவாது மது வாங்கி தரும்படி தொல்லை செய்வார்.
குடிப்பதற்காக பிச்சைக்கூட எடுப்பார்.

#Clematis தூக்கம் வரவில்லை என்பதற்காக குடிப்பவர்கள்.

#CrabApple அறுவருப்பை
சகித்துக் கொள்ள குடிப்பார்.
வைன் குடித்தால் முகம் அழகுப்பெறும். பீர் குடித்தால் முகம் வடிவாய் இருக்கும் என்று யாரோ சொல்லப்போய்
அதை நம்பி குடிக்கு அடிமையானவர்கள்.

#Elm வாழ்க்கை பிரச்சனைகள், தொழில் பிரச்னைகள், போட்டி, பொறாமை சமாளிக்க முடியாமல், குடியை நாடுபவர்கள்.

#Gentian வாழ்வின் தோல்வி துக்கம், துயரம், எல்லாம் மறக்க குடிப்பார்கள்....

#Gorce நம்பிக்கை துரோகத்தால், உற்றார் உறவினர் எமாற்றிவிட்டனர் என்ற நிலையில் குடிக்கு அடிமையானவர்கள்.

#Heather குடித்துவிட்டால், பிறரை பேசியே கொல்லும் நபர்கள்.

#Holly மனைவி மீது சந்தேகம்
மக்கள் மீது சந்தேகம், குரோதம் இதையெல்லாம் பிறர்மீது கொட்டி தீர்க்க குடிப்பவர்கள்.

#Honeysuckle காதல் தோல்வி தேவதாஸ் இவர்கள் தான். தன் பழைய கால வாழ்வில் உன்னத நிலையில் வீழ்ச்சியடைந்தவர்கள். பழைய புராணம் பாடிக்கொண்டு இருப்பவர்கள்.
 
#Hornbeam குடிப்பதால் தனக்கு ஏதோ மனோ பலம் வந்துவிட்டதாக நினைப்பவர்கள்.

#Impatience தான் நினைத்தது நினைத்த போது நடக்கவில்லையே என்ற வெறுப்பில் குடிப்பவர்கள். ஒரு போதை தெளிய தெளிய குடிப்பவர்கள் இவர்கள்.

#Larch தன் இயலாமை மறக்க குடிப்பவர்கள்.....குடித்தால் தன்னம்பிக்கை வருவதாக நினைப்பவர்கள்.

#Mimulus  தன் பயத்தை சமாளிப்பதற்கு குடிப்பவர்கள்.

#Mustard உற்றார் உறவினர்....அன்பும் பாசத்திற்கும் உரியவரின் பிரிவின் ஆற்றாமையால் குடிப்பவர்கள்.

#Oak குடித்துவிட்டு வாந்தி எடுப்பவர்களுக்கு.....அப்படியும் மீண்டும் மீண்டும் குடிப்பவர்கள்.

#Olive குடிப்பது உடல்வலிமை தரும் என்று நினைப்பவர்கள்.

#Pine தான் பாவங்கள் காரியங்களை செய்துவிட்டதாக நினைத்து வருந்தி குடிப்பவர்கள்.

#Redchestnut 
தன் சொந்த பந்தத்தில் யாருக்கேனும் உள்ள பிரச்சனையை வலி வேதனை தீர்க்க முடியவில்லையே நினைப்பில் குடிப்பவர்கள்.

#Rockrose எவ்வளவு குடித்தாலும் நிலை தடுமாறாமல் இருப்பதாக
நினைப்பவர்கள்.

#Scleranthus டைப் நபர்கள் நாளை முதல் குடிக்க மாட்டேன் என்பார், நாளை முதல் குடிக்கூடாது உறுதி ஏற்பார், ஆனால் மறுநாளும் அதே கதை தான்.

நன்றி ; மலர் மருத்துவம் பக்கம்.

குழந்தைகளுக்கான சித்தா தடுப்பூசி 🔱*

*குழந்தைகளுக்கான சித்தா தடுப்பூசி 🔱*
--------------------------------------------------------

*கட்டுரை வெளியிட்ட தேதி : 25.07.2021*

*வெளியிட்ட நேரம் : 9:15 Pm*

*பிறந்த குழந்தை முதல் 5 வயது குழந்தைகள் வரை கொரோனா தடுப்பு சித்த மருத்துவ முறைகள்*

*உங்கள் குழந்தைகளை கொரோனாவில் இருந்து காக்க போகும் ஐந்து மருந்துகள் இதோ*
 
*1 - உரை மாத்திரை 🌿* 

*2 - சண்முக சூரணம் மாத்திரை 🌿*

*3 - நெல்லிக்காய் இலேகியம் 🌿*

*4 - கடுக்காய் சூரண கசாயம் 🌿* 

*5 - உச்சி பொடி 🌿*

*இந்த ஐந்து மருந்துகளை ஒன்றாக பயன்படுத்தும் முறை*

*உரை மாத்திரை - தினம்*

*1 வது நாள் : சண்முகசூரணம் மாத்திரை* 

*2 வது நாள் : இடைவேளை* 

*3 வது நாள் : நெல்லிக்காய் இலேகியம்* 

*4 வது நாள் : இடைவேளை* 

*5 வது நாள் : கடுக்காய் சூரண கசாயம்*

*6 வது நாள் : இடைவேளை*

*7 வது நாள் : சண்முகசூரணம் மாத்திரை* 

*இப்படி சண்முகச்சூரண மாத்திரை, நெல்லிக்காய் இலேகியம், கடுக்காய் சூரண கசாயத்தை ஒரு நாள் விட்டு ஒரு நாள் என தொடரலாம், உரை மாத்திரை தினம் எடுக்க வேண்டும்* 

*உச்சி பொடி (வெளிமருந்து) - தலைக்கு குளித்த பின் உச்சந்தலையில் ஒரு சிட்டிகை பொடி லேசாக தேய்த்துவிட வேண்டும்*

*மருந்துகள் செய்முறை மற்றும் பயன்படுத்தும் முறை 💓* 
-----------------------------------------------------------

*உரை மருந்து 🔱* 
--------------------------------

*தேவையான பொருட்கள்*

*வசம்பு             - 10 கிராம்* 
*அதிமதுரம்     - 10 கிராம்*
*அக்ரகாரம்      - 10 கிராம்*
*மாசிக்காய்      - 10 கிராம்*
*சாதிக்காய்      - 10 கிராம்*
*பெருங்காயம்  - 10 கிராம்*
*சித்தரத்தை      - 10 கிராம்*
*வெள்ளைப் பூண்டு - 10 கிராம்*

*செய்முறை 🌿*
-----------------------------

*அனைத்தையும் சுத்தி செய்து பொடி செய்து கலந்தால் உரை மருந்து தயார்*

*பயன்படுத்தும் முறை 🌿*
-----------------------------------------------

*200 மிலி கிராம் அளவு, மாத்திரைகளாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்*

*பிறந்த குழந்தை முதல் 5 வயது குழந்தைகள் வரை தினம் எடுக்க வேண்டும்*

*200 mg உரை மாத்திரை பயன்படுத்தும் முறை*

*பிறந்த குழந்தை முதல் 3 மாத அளவு : 1 மாத்திரை*

*வேளை : 1 வேளை* 

*3 மாத குழந்தை முதல் 1 வயது அளவு : 2 மாத்திரை*

*வேளை : 1 வேளை* 

*1 வயது முதல் 3 வயது வரை : 2 மாத்திரை*

*வேளை : 2 வேளை* 

*3 முதல் 5 வயது வரை : 3 மாத்திரை* 

*வேளை : 2 வேளை* 

*அனுபானம் : தாய் பால்*

*தாய்ப்பால் குடிக்காத குழந்தைகளுக்கு மாத்திரையை பொடித்து தேனில் கலந்து கொடுக்கலாம், நாட்டு பசும் பாலில் கொடுக்கலாம், வெந்நீரில் கொடுக்கலாம்*

*சாப்பிட்ட பின் கொடுக்கவும்*

*உரைமாத்திரை கொரோனா வராமல் தடுக்கும் என்று ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளது*

*இதோ ஆய்வு முடிவுகள் link*

The Multi-faceted role of Urai Mathirai – The Immune pill of Siddha - This was published in the 'Asian Journal of Pharmaceutical and Clinical Research'. 

https://www.researchgate.net/publication/314238918_The_Multi-faceted_role_of_Urai_Mathirai_-_The_Immune_pill_of_Siddha

*தீரும் நோய்கள் 🌿*
-------------------------------------

*கொரோனா வராமல் தடுக்கிறது, பசியின்மை, மாந்தம், மலச்சிக்கல், தூக்கமின்மை, குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது*

*சண்முகச் சூரணம் 🔱*
-------------------------------------------

*தேவையான பொருட்கள்*

*நூல் ஆதாரம் : அகத்தியர் பரிபூரணம்*

*1 - சுக்கு*
*2 - மிளகு*
*3 - வால்மிளகு*
*4 - திப்பிலி*
*5 - ஆனை திப்பிலி*
*6 - சீரகம்*
*7 - கருஞ்சீரகம்*
*8 - நெல்லிமுள்ளி*
*9 - கடுக்காய்*
*10 - தான்றிக்காய்*
*11 - ஓமம்*
*12 - சுருள்பட்டை*
*13 - கிராம்பு*
*14 - கோஸ்டம்*
*15 - கோரைக்கிழங்கு*
*16 - பற்படாகம்*
*17 - தாளிசபத்திரி*
*18 - அகில் பட்டை*
*19 - அமுக்ரா*
*20 - சித்தரத்தை*
*21 - அதிமதுரம்*
*22 - ஏலரிசி*
*23 - கருங்காலி தூள்*
*24 - மஞ்சள்*
*25 - கஸ்தூரி மஞ்சள்*
*26 - தனியா*
*27 - சிறுநாகப்பூ*

*மேற்கண்ட சரக்குகள் அனைத்தும் 1பலம்(35கிராம்)*

*28 - தூதுவேளை*
*29 - ஆடாதொடை*
*30 - கருந்துளசி*
*31 - விஷ்ணுகிராந்தி*
*32 - ஓரிதழ் தாமரை*
*33 - நிலவேம்பு*
*34 - கரிசாலை*
*35 - கீழாநெல்லி*

*மேற்கண்ட மூலிகைகள் அனைத்தும் 70 கிராம்*

*செய்முறை 🌿*
-----------------------------

*அனைத்தையும் பொடிசெய்து கொள்ளவும், மொத்தம் 1 கிலோ சூரணம் வருகிறது என்றால் ஒரு லிட்டரிற்கு சற்று அதிகமாக நாட்டு பசும்பால் எடுத்துக்கொள்ளவும்*

*ஒரு இட்லி பாத்திரத்தில் நாட்டு பசும் பால் ஊற்றி இட்லி தட்டு வைத்து அதில் துணி விரித்து இந்த சூரணத்தை வைத்துத்து மூடி*

*அந்த ஒரு லிட்டர் பால் முழுவதும் சுண்டிய பின்னர் சூரணம் தயார் என்று அர்த்தம்*

*பின்னர் இந்த சண்முக சூரணத்தை சேகரித்து வைக்கவும்*

*இதை பாலில் பிட்டு அவியல் இடுதல், பாலேற்றம் செய்தல் என சொல்வார்கள். இதன் பலன்கள் பிட்டு அவியல் செய்தால் சூரணத்தின் ஆயுட்காலம் 1 வருடம், செய்யாவிட்டால் 6 மாதம், மேலும் பிட்டு அவியல் செய்தால் சுரணத்தின் சக்தி அதிகரிக்கிறது, இதில் உள்ள குற்றங்கள் நீங்குகிறது*

*பயன்படுத்தும் முறை 🌿*
------------------------------------------------

*இம்மருந்தை 1 வயது முதல் தரலாம்* 

*மாத்திரை அளவு : 200 மிலி கிராம்*

*1 வயதிற்கு மேல் 3 வயது அளவு : 1 மாத்திரை*

*வேளை : 1 வேளை சாப்பிட்ட பின்*

*3 வயதிற்கு மேல் 5 வயது அளவு : 1 மாத்திரை*

*வேளை : 2 வேளை சாப்பிட்ட பின்*

*தடுப்பு மருந்தாக செயல்பட* 

*அனுபானம் : தாய்ப்பால், நாட்டுப்பசும்பால், பச்சை தண்ணீர்*

*சாப்பிட்ட பின்*

*காய்ச்சலை சரி செய்ய* 

*அனுபானம் : தாய்ப்பால், தேன், வெந்நீர்*

*சாப்பிட்ட பின்*

*தீரும் நோய்கள் 🌿*
-------------------------------------

*அனைத்து கொரோனா symptoms, கபம் தொடர்பான அனைத்து பிரச்சனைகள், தொற்று காய்ச்சல், கொரோனா*

*நெல்லிக்காய் இலேகியம் 🔱*
---------------------------------------------------------

*தேவையான பொருட்கள்*

*நெல்லி வற்றல்                 - 3500 கிராம்*
*சுக்கு                                    - 35 கிராம்* 
*ஓமம்                                    - 35 கிராம்*
*திப்பிலி                               - 35 கிராம்*
*கிராம்பு                                - 35 கிராம்*
*தக்கோலம்                          - 35 கிராம்*
*ஏலம்                                      - 35 கிராம்*
*வெண்குங்கிலியம்            - 35 கிராம்*
*பூனைக்கண் குங்கிலியம் - 35 கிராம்*
*வாய்விடங்கம்                      - 35 கிராம்*
*சீரகம்                                     - 35 கிராம்*
*கொத்தமல்லி                       - 35 கிராம்*
*அதிமதுரம்                             - 35 கிராம்*
*கூகைநீரு                               - 35 கிராம்*  
*பனங்கற்கண்டு                    - 350 கிராம்*
*நெய்                                        - 1400 மி.லிட்டர்*

*செய்முறை 🌿*
-----------------------------

*அனைத்தையும் பொடி செய்து நெய்யில் சிறுதீயில் கிளரவும், இலேகிய பதம் வந்ததும் அடுப்பை அனைத்து ஆற வைத்து கண்ணாடி பாட்டலில் சேகரிக்கலாம்* 

*பயன்படுத்தும் முறை 🌿*
------------------------------------------------

*இம்மருந்தை 2 வயது முதல் தரலாம்* 

*அனுபானம் : நாட்டு பசும்பால், வெந்நீர், தேன்*

*2 வயது - 0.5 கிராம்* 

*3 வயது - 1 கிராம்*

*4 வயது - 2 கிராம்* 

*5 வயது - 3 கிராம்*

*வேளை : 1 வேளை சா.பின்*

*அப்படியே சாப்பிடும் குழந்தைகளுக்கு அப்படியே கொடுக்கலாம்* 

*அப்படியே சாப்பிடாத குழந்தைகளுக்கு நாட்டுப்பசும் பாலில் கலந்து கொடுக்கலாம்* 

*மேலும் வெந்நீரில் அல்லது தேனிலும் கலந்து கொடுக்கலாம்*

*தீரும் நோய்கள் 🌿*
-------------------------------------

*நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், மேகம், கிராணி, அஸ்திசுரம், பொருமல், காந்தல், இருமல், கபம், ஈளை, சிலேற்பனம்*

*கடுக்காய் சூரணம் 🔱*
--------------------------------------------

*தேவையான பொருட்கள்*

*கடுக்காய் பொடி          - 20 கிராம்*
*நிலாவாரை சூரணம்  - 20 கிராம்* 
*திப்பிலி பொடி              - 5 கிராம்* 

*செய்முறை 🌿* 
-----------------------------

*மூன்று பொடிகளையும் கலந்து சேகரிக்கவும்*

*பயன்படுத்தும் முறை 🌿*
------------------------------------------------

*5 கிராம் கடுக்காய் சூரண பொடியை 200 ml தண்ணீரில் கொதிக்க வைத்து 100 மிலி ஆன பின் பருத்தி துணியில் வடித்து ஆற வைத்து தரலாம்**

*இம்மருந்தை 6 மாதம் முதலே தரலாம்*

*6 மாதம் முதல் 1 வயது வரை - 5 மில்லி*

*1 வயதிற்கு மேல் 2 வயது வரை - 10 மில்லி*

*2 வயதிற்கு மேல் 5 வயது வரை - 15 மில்லி*

*கொரோனா Symptoms உள்ள பெரியவர்கள் இதே மருந்து 100 ml வரை எடுக்கலாம்* 

*தீரும் நோய்கள் 🌿*
-------------------------------------

*ஆக்சிஜன் பற்றாக்குறை, மூச்சு திணறல், கோழை, தொண்டை கரகரப்பு, மார்பு சளி, தீராத இருமல்*

*உச்சி பொடி 🔱*
-----------------------------

*நாட்டு மருந்து கடைகளில் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்*

*பயன்படுத்தும் முறை 🌿*
-------------------------------------------------

*6 மாத குழந்தைகள் முதல் தினம் பயன்படுத்தலாம்*

*தலைக்கு குளித்த பின் 1 சிட்டிகை உச்சந்தலையில் லேசாக தேய்த்துவிடலாம்*

*பிறந்த குழந்தை முதல் 6 மாத குழந்தை வரை தலைக்கு குளித்த பின் கற்பூரவள்ளி இலை சாறு மட்டும் ஒரு துளி உச்சியில் வைத்து விடலாம்*

*தீரும் நோய்கள் 🌿*
--------------------------------------

*சளி பிடிக்காது, வீசிங், மூச்சுத்தினறல், ஆஸ்துமா வராமல் தடுக்கும் (உடலில் சளி தங்காது)* 

*குறிப்பு : இந்த அளவுகள் மற்றும் மருந்து எடுக்கும் முறைகள் தடுப்பு மருந்தாக எடுப்பதற்கு மட்டுமே, பிரச்சனைகள் உள்ள குழந்தைகளுக்கு சித்த மருத்துவரை ஆலோசித்து அவர்கள் கூறும் அளவுகளை தரலாம்*

*சித்தா தடுப்பு மருந்துகளை உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்திடுங்கள் 🌿*

*அனைத்து வகை கொரோனாவில் இருந்து குழந்தைகளை காத்திடுங்கள் 💓*

*நன்றி*

*இரா.மதிவாணன்*

🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥
🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹

Wednesday 14 July 2021

சர்க்கரை நோயினால் வந்த புண்கள் மற்றும் ஆறாத புண்களை குணமாக்கும் சித்த மருந்துகள்.

ஆறாத புண்களுக்கு
திரு வோட்டு எண்ணெய்

சர்க்கரை நோயினாலோ வெரி கோஸ் வெயின் என்ற நோயினாலோ , காலில் ரத்த ஓட்டத்தில் ஏற்பட்ட தடைகளினாலோ புண்கள் ஏற்பட்டால் விரைவில் ஆறாது
எந்த வகையான புண்களையும் தேங்காய் ஓட்டை மூலப்பொருளாகக் கொண்டு தயார் செய்யப்படும் எண்னெய் குணப்படுத்தும். 

தேவைப்படும் பொருட்கள்
ஆடு தின்னாப் பாளை சாறு 500 ML
நார் நீக்கி சுத்தம் செய்யப்பட்ட தேங்காய் ஓட்டு துண்டுகள் 300 கிராம்
மஞ்சள் தூள் 50 கிராம்
பச்சை கற்பூரம் 30 கிராம்
சுத்தமான தேங்காய் எண்ணெய் 600 ML

ஒரு பாத்திரத்தில் ஆடு தின்னா பாளை சாறு
தேங்காய் ஓட்டு துண்டுகள்  மஞ்சள் தூள்   தேங்காய் எண்ணெய் இவைகளைப் போட்டு அடுப்பேற்றி சிறு தீயாக எரித்து வரவும் சாறு சுண்டி மணல் பதம் வந்ததும் இன்னொரு பாத்திரத்தில் பச்சைக் கற்பூரத்தை பொடித்துப் போட்டு அதில் எண்ணெயை வடிக்கவும்  சூடு ஆறின பின் பத்திரப்படுத்தவும்
இது மருத்துவர்களுக்கான செய்முறை.
பொதுமக்களுக்கு ஆடு தின்னாப் பாளை சாறு கிடைக்காது  அதனால் சாறு இல்லாமலும் தயார் செய்யலாம்
ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி அதில் தேங்காய் ஓட்டு துண்டுகள்  மஞ்சத்தூள் இவைப் போட்டு 24 மணி நேரம் ஊற வைக்கவும் பின்பு அதனை அடுப்பேற்றி சிறு தீயாக எரித்து எண்ணெய் புகை வர ஆரம்பித்ததும் இன்னொரு பாத்திரத்தில் பச்சைக் கற்பூரத்தை பொடித்துப் போட்டு துணியால் வேடு கட்டி எண்ணெயை வடிகட்டவும்
எண்ணெய் ஆறின பின்பு பத்திரப் படுத்தவும்.
புண்களை கழுவும் முறை
புளியன் இலைகசாயத்தினாலோ  வேப்பன் இலைகசாயத்தினாலோ அல்லது படிகாரம் கரைத்த வெதுவெதுப்பான நீரிலோ புண்களை கழுவ வேண்டும்
அதன் பின் ஈரமில்லாமல் துடைத்து மேலே செய்த எண்ணெயை காலை மாலை தடவி வர வேண்டும்'
இந்த எண்ணெய் எல்லா வகை புண்களையும் ஆற்றி குணப்படுத்தும்  குழிப் புண்கள் ஆற சற்று தாமதமாகும்  ஆனால் கண்டிப்பாக குணமாகும்
இதனை தோல் நோய்களுக்கும் வெளிப்பூச்சாகபூசி வர நல்ல குணம் கிடைக்கும்

ரத்த ஓட்டத்தில் ஏற்படும் தடைகளினாலேயே கால்கள் கறுப் படித்து புண்கள் ஏற்பட்டால் குணமாவது நீண்ட நாட்களாகும்
ரத்த ஓட்டத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்க  தேங்காய் ஒட்டு கசாயம் நன்கு பலன் தரும் தொடர்ந்து கசாயத்தை சாப்பிட்டு வர தடைகள் கரைந்து குணமாகும்
ரத்த ஓட்டம் சீரானால் கால்கள் இயல்பான நிறத்திற்கு மாறும்

தகவல் தொடர்புக்கு
KKE அக்பர்ஜி
ஜீவசக்தி ஹெர்பல் கிளினிக்
145 மாணிக்கவாசகர் காலணி
ஈரோடு 2

Sunday 11 July 2021

கைபேசியில் அழிந்து போன போட்டோவை மீண்டும் எடுக்க சிறந்த app (recovery app)

ஒரே ஒரு ஆப்பு 👇👇 ( App) தான் பழைய போட்டோ files எல்லாமே
ரெக்கவரி ஆகி இருக்கு...கைப் பேசிய விக்கிறவங்களும் , போன பார்மேட் பன்னா இல்ல போன அழிச்சிட்டா கூட உங்கள் குப்பைகள் ( Digital Datas)  உங்களுடனேயே(gmails ல்) பயணிக்கும், மறந்துவிட வேண்டாம். 

நன்றி ; பொழிலன்.