Thursday 28 June 2018

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா?

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா? என்பதை எப்படி கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை:
ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால்
அதுல பதிலை எழுதுங்க.
ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது.
ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது.
உங்களால முடியலேன்னா
அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க.
அதுவும் முடியலியா….
படிச்சிகிட்டே போங்க….
ரெடியா.....
1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்..
2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்…
3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க….
4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த
ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க…..
5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்…
உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா?
இல்லே தானே?
நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ
அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை.
இத்தனைக்கும் இவங்களெல்லாம் சாதாரண சாதனையாளர்கள் அல்ல.
அந்தந்த துறையில் உச்சத்தை தொட்டவர்கள்.
மிகப் பெரிய சாதனையாளர்கள்.
ஆனால்……?
கைதட்டல்கள் காணாமல் போய்விடுகின்றன.
சாதனைகள் மறக்கப்பட்டுவிடுகின்றன.
விருதுகளும் பாராட்டுக்களும் அவர்களுடனேயே புதைந்து போய்விடுகின்றன.
இப்பொழுது இன்னொரு ஐந்து கேள்விகள் கேட்கிறேன்
பதில் உடனே கி்டைக்குதா என்று பாருங்கள்
1) உங்கள் பள்ளிக் காலத்தில்
மிகச் சிறப்பாக பாடம் நடத்திய மூன்று ஆசிரியர்கள் பெயரை சொல்லுங்கள்.
2) உங்களுக்கு ஆபத்தான நேரத்தில் உதவிய மூன்று நண்பர்களை சொல்லுங்கள்…
3) உங்களுக்கு வாழ்க்கையில் பயனுள்ளதை கற்றுக்கொடுத்த சிலர் பெயரை கூறுங்கள்…
4) உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றிய சிலரை கூறுங்கள்….
5) நீங்கள் யாருடன் அதிக நேரத்தை செலவழிக்க விரும்புகிறீர்களோ
அவர்கள் பெயர்களை சொல்லுங்கள்…
சில மணித்துளிகளில்
விடைகளை பட்டென்று எழுதி குவித்திருப்பீர்களே.......
இதிலிருந்து என்ன தெரிகிறது?
உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள்
பணக்காரர்களோ,
புகழ்பெற்றவர்களோ
அல்லது பாராட்டுக்களை குவித்தவர்களோ அல்ல.
உங்கள் மீது அக்கறை செலுத்துபவர்களே.
மற்றவர்களை மறக்கும் நீங்கள் இவர்களை மறப்பதில்லை.
பணம் பட்டம் பதவி
இவற்றின் மூலம் பெறும் புகழோ
வெற்றியோ நிலையானதல்ல.
பிறருக்கு உதவி செய்து,
பிறர் மீது அக்கறை கொண்டு
ஒருவர் பெறும் புகழே
வெற்றியே நிலையானது.
உங்கள் மாணவர்கள்
நண்பர்கள் மற்றும் உறவினர்கள்
சிலரிடம் இப்படி கேள்விகள் கேட்டு
அவர்கள் ஒருவராவது
விடையில் உங்கள் பெயரையும் சொல்லுவார்கள் என்றால்…
நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்கள் என்று அர்த்தம்.
எனவே
அடுத்தவர் நெஞ்சில் நீங்கா இடம் பிடிக்க வேண்டுமென்றால்
எப்போதும் நல்லதே நினையுங்கள்.
எல்லோருக்கும் நல்லதையே சொல்லுங்கள்.
நல்லதையே செய்யுங்கள்.
அங்கே இங்கே போய் இறைவன் மனசுல இடம்பிடிக்கிறது இருக்கட்டும்.
முதலில்
நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களின் மனசுல நமக்கு இடம் இருக்கான்னு பார்ப்போம்.
இறைவன் தானா தன் மனசுல உங்களுக்கு இடம் கொடுப்பார்...

Monday 25 June 2018

மூக்கு குத்துவதின் மூல தத்துவம் !!!

மூக்கு குத்துவதின் மூல தத்துவம் !!!

மூக்குத்தி அணிவது ஏன்?

மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள

வாயுவை ,காற்றை வெளியேற்றுவதற்கு !!!

கைரேகை, ஜோசியம் , நாடி ,
பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடது கையும் பார்த்து பலன் கூறுவது நோய் கணிப்பது வழக்கம்.

ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.

ஞானிகளும் , மஹான்களும் , இறைநேசர்களும் தியானம்
செய்யும் போது

வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியா னம் செய்வார்கள் !!!

இஸ்லாமியர்கள் தொழுகையில் இருப்பு நிலையில் (அத்தகையாத்து )வலது காலை மடித்து வலது கால் கட்டவிரலை தரையில் குத்தி தொழுவார்கள் !!!

இதற்கு
காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும்.

வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள்.

வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியா னம், பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும். அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்ற வேண்டும்.
அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி.
நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதலாமஸ் என்ற பகுதி இருக்

கிறது.
நரம்பு மண்டலங்களை கட்டுப் படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன.

அந்தப் பகுதியில் சில உணர்ச்சி
பிரவாகங்கள் உள்ளன.

இதனைச் செயல் படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது.

இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்து வதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும்.

இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும்.

வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.

இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது

பக்க மூளையை அடைத்து வலது பக்கமாக வேலை செய்ய
வைக்கிறோம்

அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.

பெண்கள் மூக்குத்தி அணியும்

போது

முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும்.

இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த

துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்

உள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப்
பெறும்

அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண் டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.
சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண் களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டு கிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சில விதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண் ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான்

இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்து வதால் பெண்களுக்கு ஏற்படக் கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்ப ந்தமான தொந்தர வுகள், பார்வைக்
கோளாறு சரி செய் யப்படுகின்றன்.
இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்டதால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக் குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக இடப் பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்க ம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்ப டும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப் படு த்துகிறது. மனதை அமைதிப்படுத்துகி றது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது. ஒற்றைத் தலைவலி, நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் ஏற்

படாமல் இருக்க முக் குத்தி உதவுகிறது என்று ஞானிகளும் ரிஷிகளும் கூறியிருக் கின்றனர்.
உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண் ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. தங்க நகை களைப் பெண்கள் அணிவதன் மூலம் உடலில் ஏற்படும் அதிக வெப்பம் உணர்ச்சியாக மாறுவதிலிருந்து தடைப் பட்டு போகும்.

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, ஆகிய நால்வகைப் பண்புகள் உடையவர் களாகத் திகழ முடியும்.

தங்க நகைகள் அணிவதால் உணர்ச்சிப் பிரவாகம் தடைப்பட்டு பெண்களின் உடல் வெப்பம் சம நிலையடைகிறது.

இதனால் இவர்களது வாழ்க்கை தர்ம நெறிகளுக்கு உட்பட்டு சிறந்த வாழ்க்கையாக அமையப்பெற்று வாழ்வு சீரும் சிறப்போடு அமையப்பெறுகிறது .

உலோகத்தில் தங்கம் :- ஆண்
உலோகத்தில் வெள்ளி :- பெண்

ஆண்கள் தங்கம் அணிவதை நபிகளார் அவர்கள் தடை செய்தார்கள்

ஆண்கள் தங்கம் அணிவது ஹராம் (தடுக்கப்பட்டது )!!!

ஆண்கள் வெள்ளி அணிவதை நபிகளார் அவர்கள் அனுமதி அளித்துள்ளார்கள் !!!

அதனால் இஸ்லாமிய ஆண்கள் தங்கம் அணியமாட்டார்கள் !!!

வெள்ளி அணிகலன் மட்டும் தான் அணிவார்கள் .

தகவல் :- மரபு வழி சித்த வைத்தியர் மாலிக்
8220320197

Sunday 24 June 2018

சூட்சும சுவாச கலை
வாழ்வின் அத்தனை ரகசியங்களும் நமது மூச்சுக் காற்றில் அடங்கியுள்ளது.
* நாம் கோபப்படும் போதும்,பரபரப்படையும் போதும் நமது இதயத்துடிப்பு அதிகரிக்கும்.
மூச்சின் அளவும் அதிகரிக்கும்.
அதனால் தான் கோபம்,பயம் போன்ற எதிர்மறை எண்ணங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறினார்கள்.அதற்காக தியானம்,பிராணயாமம் போன்ற பல்வேறு வழிமுறைகளை நமக்கு விட்டுச் சென்றார்கள்.
*சுவாசத்தைக் கவனித்தல்*
*எளிதானதாக கிடைக்க எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவும் எளிமையானதாகவும் இருக்கும் ஒரு முறையை.
*சுவாசத்தைக் கவனித்தல் என பொருள் இது மிகவும் எளிய முறை.*
*எப்போது - நீ அமைதியாக அமர்ந்திருக்கக் கூடிய எல்லா நேரங்களிலும்,ரயிலிலோ, பஸ்ஸிலோ, விமானத்திலோ பயணம் செல்லும் சமயத்தில்..காலம் - 20 நிமிடங்கள் முதல் எவ்வளவு நேரம் நீ செய்ய விரும்புகிறாயோ அது வரை.*
*முதல் படி -
உனது கண்களை மூடி அல்லது கண்களை திறந்து
உனது சுவாசத்தை கவனி. உள்ளே செல்லும்போது நீயும் அதனுடன் உள்ளே செல், வெளியே வரும்போது நீயும் அதனுடன் வெளியே வா. வேறு எண்ணங்களை விட்டுவிடு.*
*நீ சுவாசத்துடன் உள்ளே சென்று பின் அதனுடன் வெளியே வருவது என்பது போன்று செய்யும் சமயத்தில் நீ இரண்டு விஷயங்களைப் பற்றி உணர்வடைவாய்.*
*நீ சுவாசத்துடன் உள்ளே செல்லும்போது அது வெளியே வருவதற்காக திரும்பும் முன் ஒரு கணம் சுவாசத்தில் இடைவெளி வரும். இதேபோல சுவாசத்தை வெளியே விடும்போதும் நிகழும். திரும்பவும் உள்ளே இழுக்கும் முன் ஒரு கணம் இடைவெளி வரும். நீ அதை கவனிக்க கவனிக்க இந்த இரண்டு நிலைகளும் மேலும் மேலும் தெளிவாக, பெரியதாக மாறும். ஒரு சுவாசம் உள்ளே போய் ஒரு கணம் நிற்கும்,பின் வெளி வரும். வெளியே வந்தது ஒரு கணம் நின்று பின் உள்ளே போகும்.இந்த இடைவெளி பெரிதாகிக் கொண்டே போகும்.*
*பின் ஒரு சமயம் வரும். இந்த இடைவெளி மிகச் சரியாக நாற்பத்தி எட்டு நிமிடங்கள். இது 10,000 வருடங்களுக்கு முன்பே கணக்கிடப்பட்டுள்ளது. இந்த முறையை உபயோகித்த அத்தனை சாதகர்களாலும் மிகச் சரியாக இதே நேரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்படி இடைவெளி வந்து விட்டால் நீ வீடு வந்து சேர்ந்து விடுவாய்.
தவம் தரக்கூடிய எல்லாவற்றையும் நீ பெற்று விடுவாய்.*
*உன் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் யாருக்கும் நீ செய்வது என்னவென்று தெரியாது.*
*அதை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் செய்ய வேண்டும் என்று கிடையாது. நீ இதை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு நாளில் எவ்வளவு முறை முடிகிறதோ அவ்வளவு தடவை செய்யலாம். சில சமயங்களில் வெறும் இருபது நிமிடங்கள் கூட செய்யலாம்.*
*சில நேரங்களில் படுக்கையில் படுத்திருப்பாய். ஆனால் தூக்கம் வராது. தூக்கத்தைப்பற்றி கவலைப்படாதே. அதைச் செய். இது இரண்டு வேலைகளையும் செய்யும். இது ஆழ்ந்த அமைதியான தியானத்தைத் தரும், இதைச் செய்வதன் மூலம் தூக்கமும் வந்து விடும். ஆனால் நீ எழுந்திருக்கும் போதுதான் தூங்கி விட்டிருப்பதே உனக்குத் தெரியும்.*
*ஆனால் மிகவும் வேறுபட்ட விஷயம் என்னவென்றால் நீ தவம் செய்தவாறே தூங்கி விட்டிருந்தால் நீ காலையில் எழும்போதும் தவ தன்மையோடு எழுவாய்.*
*அப்படி என்றால் ஆழ் மனதில் எங்கோ ஆழத்தில் நீ அறியாவண்ணம் இந்த முறை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது என்றுதானே அர்த்தம். உனது இரவு முழுவதும் தவமாக மாறி விட்டிருக்கிறது, இது உனக்கு கிடைக்கக் கூடிய மிக அதிக அளவு நேரமாகும். உனது தூக்கம் மிகவும் அமைதியானதாகவும்,ஓய்வானதாகவும் புத்துணர்வு தரக்கூடியதாகவும் மிகவும் வேறுபட்ட குணத்தில் இருக்கும்.*
*ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை இந்த கவனித்தல் தொடர்கிறது.*
காலையில் நீ விழித்தெழுந்த உடன் உனது சுவாசத்தை கவனிப்பதை நீ தொடர்ந்து செய்ய ஆரம்பிப்பாய். அது உனக்கு வியப்பளிக்கும்."*
எண்ணங்களை குறைத்தால் பேச்சுக் குறையும்.பேச்சைக் குறைத்தால் மூச்சு குறையும். மூச்சைக் குறைத்தால் சித்தம் தெளிவடையும்.சித்தம் தெளிவடைந்தால் மொத்தமும் கிடைக்கும்.*
*பொறுமையைவிட மேலான தவமுமில்லை*
*திருப்தியை விட மேலான இன்பமுமில்லை*
*இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை*
*மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை*
*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்*
*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க பிரபஞ்சம் அருள் புரியட்டும்!*

கவனகர் ராம கனக சுப்புரத்தினம் உரையாடல்

கவனகர் ராம கனக சுப்புரத்தினம் அவர்களுடனான உரையாடல் தொடர்கிறது. # 01 Kavanagar Rama Kanaga Subburathinam (Tamil Talkes) https://www.youtube.com/watch?v=37b81... # 02 Sri Bagavath Ayya (Tamil Talkes) https://www.youtube.com/watch?v=kP2wH... # 03 Vanga Gnaniyagalam-Sri Bagavath Ayya (Tamil Talkes) https://www.youtube.com/watch?v=ez4uJ... #04 Sri Sathguru Rajkumar Swamigal (Tamil Talkes) https://www.youtube.com/watch?v=EcY4j... # 05 Purna Vidhya Kovai , Swamini Pramanandha (Tamil Talkes) https://www.youtube.com/watch?v=iML3W... # 06 Writer Balakumaran (Tamil Talkes) https://www.youtube.com/watch?v=ueZi9... # 07 Healer Latha (Tamil Talkes) https://www.youtube.com/watch?v=DBPQA... # 08 Bagavan Yogiram Suratkumar Asram, Kanimadam, Pon Kamaraj (Tamil Talkes) https://www.youtube.com/watch?v=04mlq... # 09 DNA Astrology , Vishal (Tamil Talkes) https://www.youtube.com/watch?v=GdICZ... # 10 Manam Ennum Pattambutchi By Sri Bagavath Ayya (Tamil Talkes) https://www.youtube.com/watch?v=6uR9J... # 11 Kovai Siddhagam Dr. Moorthy , Iyarkai Siddhar (Tamil Talkes) https://www.youtube.com/watch?v=M4sJm... # 12 Sri Bagavath Ayya Book Review https://www.youtube.com/watch?v=ENgf3... # 13 Celebrities Mystical Experiences (Tamil Talkes) https://www.youtube.com/watch?v=L8xTL... # 14 Karuvurar Diciple Sioddharadiyar Gunasekaran (Tamil Talkes) https://www.youtube.com/watch?v=ubji0... # 15 Dr Muthukrishnan, Siddha Researcher about Navabasanam (Tamil Talkes) https://www.youtube.com/watch?v=U9R6b... # 16 Rajayogi Atheeswaran Swamy Speaking about Secrets of Muruga (Tamil Talkes) https://www.youtube.com/watch?v=fDDjP... # 17 Siddha and Ayurvedha By Siddha vaidhiyar Govindaraj and ayurvedha Doctor Sivaranjani (Tamil Talkes) https://www.youtube.com/watch?v=F0qen...

Saturday 16 June 2018

வாழ்வில் முன்னேற, வெற்றி தரும் வசிய மூலிகைகள்

வாழ்வில் முன்னேற,
வெற்றி தரும் வசிய
மூலிகைகள்...
இந்த மூலிகை தாயத்து அணிய நீங்கள் புண்ணிய செய்திற்க்க வேண்டும்....
உங்கள் நலனுக்காக மாந்திரீகம் பஞ்ச பட்சி மூலிகைகள் ரகசியம். முழுமையாக விளக்கம்....
வெற்றி தரும் தச வசிய மூலிகைகள்...
குறிப்பு இந்த மூலிகை பயன்படுத்த விரும்புவோர் தான் பிறந்தது வளர்பிறையா தேய்பிறை என்று கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.
1) அகரம் .வல்லூறு. சப்த வசிய மூலிகை.
அ,ஆ,க,கா,ங,ஙா,ச,சா,ஞ,ஞா,ட,டா,ண,ணா,த,தா,ந,நா,ப,பா,ம,மா,ய,யா,ர,ரா,ல,லா,வ,வா,ழ,ழா,ள,ளா,ற,றா,ன,னா,ஜ,ஜா,உற,உறா,ஸ,ஸா,க்ஷ,க்ஷா,ஃ,கை,ஙை,சை,ஞை,டை,ணை,தை,நை,பை,மை,யை,ரை,லை,வை,ழை,ளை,றை,னை,ஐ,ஸை,போன் எழுத்களில் ஏதேனும் ஒரு எழுத்தை பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்கள்.
வளர்பிறையில் பிறந்திருந்தால்.
வசியமூலிகை -அரைக்கீரை
கவரும் உலோகம் -பொன்
இயக்கும் திசை -கிழக்கு
விசேஷ கிழமை-ஞாயிற்றுக்கிழமை செவ்வாக்கிழமை
யோக நேரம்- காலை 8 :45 முதல் 9: 42 மணி வரை
மாலை 4 :54 முதல் 5: 42 மணி வரை
தேய்பிறையில் பிறந்திருந்தால்.. அகரம்.கோழி.
வசிய மூலிகை-குப்பைமேனி
கவரும் உலோகம் -இருப்பு
திசை- பூமியைத் தொட்டு வணங்கவும் விசேஷ கிழமை- ஞாயிற்றுக்கிழமை செவ்வாய்க்கிழமை
யோக நேரம் -காலை 10 மணி முதல் 10: 48 மணி வரை
1: 54 முதல் 2: 12 மணி வரை.
2) இகரம் .ஆந்தை,வல்லூறு. சப்த வசிய மூலிகை.
இ,ஈ,கி,கீ,ஙி,ஙீ,சி,சீ,ஞி,ஞீ,டி,டீ,ணி,ணீ,தி,தீ,நி,நீ,பி,பீ,மி,மீ,யி,யீ,ரி,ரீ,லி,லீ,வி,வீ,ழி,ழீ,ளி,ளீ,றி,றீ,னி,னீ,ஸி,ஸீ,உறி,உறீ,ஸ்ரீ,ஜி,ஜீ, போன்ற எழுத்துகளில் ஏதேனும் ஒரு எழுத்தை பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்கள்.
வளர்பிறையில் பிறந்து இருந்தால்
வசியமூலிகை -சிறுகீரை
வேறு கவரும் உலோகம்-வெள்ளி
இருக்கும் திசை- தெற்கு
விசேஷ கிழமை- திங்கள்
புதன்
யோக நேரம்-
காலை 8 54 முதல் 9 42 மணி வரை-
மாலை முதல் 2:48 முதல் 3:36மணி வரை
தேய்பிறையில் பிறந்திருந்தால்.
வசிய மூலிகை- நாய்க்கடுகு
வேறு கவரும்- உலோகம் பொன்
இருக்கும் திசை -கிழக்கு
விசேஷ கிழமை -வெள்ளிக் கிழமை
யோக நேரம்- காலை 9: 54 மணி முதல் 10:12 மணி வரை
மாலை 3: 18 முதல் 3:36 மணி வரை
3) உகர சப்த வசிய மூலிகை
,உ,ஊ,கு,கூ,ஙு,ஙூ,சு,சூ,ஞ,ஞா,டு,டூ,ணு,ணூ,து,தூ,நு,நூ,பு,பூ,மு,மூ,யு,யூ,ரு,ரூ,லு,லூ,வு,வூ,ழு,ழூ,ளு,ளூ,று,றூ,னு,னூ,ஜு,ஜூ,ஸு,ஸூ, போன்ற எழுத்துகளில் ஏதேனும் ஒரு எழுத்தை பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்கள்...
வளர்பிறையில் பிறந்திருந்தால்
வசிய மூலிகை- சாரணைவேர்
கவரும் உலோகம்- செம்பு
திசை- மேற்கு
விசேஷ கிழமை - வியாழக்கிழமை- வியாழக்கிழமை
யோக நேரம் -காலை 8 45 முதல் 9: 42 மணி வரை -மாலை 2:48 முதல்3: 36 வரை.
தேய்பிறையில் பிறந்திருந்தால்
வசிய மூலிகை- அரைக்கீரை
கவரும் உலோகம்-வெள்ளி
திசை -வடக்கு
விசேஷ கிழமை வியாழக்கிழமை
யோக நேரம் -காலை 8 :18 முதல் 8:36 மணி வரை மாலை 3: 36 முதல் 2:54 மணி வரை
4) ஏகர சப்த வசிய மூலிகை.
எ,ஏ,கெ,கே,ஙெ,ஙே,செ,சே,ஞெ,ஞே,டெ,டே,ணெ,ணே,தெ,தே,நெ,நே,பெ,பே,மெ,மே,யெ,யே,ரெ,ரே,லெ,லே,வெ,வே,ழெ,ழே,ளெ,ளே,றெ,றே,னெ,னே,ஜெ,ஜே,ஷெ,ஷே,ஸெ,ஸே,ஹெ,ஹே,க்ஷெ,க்ஷே, போன்ற எழுத்துகளில் ஏதேனும் ஒரு எழுத்தை பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்கள்.
வளர்பிறையில் பிறந்திருந்தால்
வசிய மூலிகை -தகரை

கவரும் உலகம்- வெண்கலம்
இருக்கும் திசை- வடக்கு
விசேஷத் கிழமை- வெள்ளிக்கிழமை
யோகா நேரம் -காலை 8: 54 முதல் 9 :42 மணி வரை மாலை 2: 48 முதல் 3: 36 மணி வரை
தேய்பிறையில் பிறந்திருந்தால்
வசிய மூலிகை -வேளை வேர்
கவரும் உலோகம்- இரும்பு
இருக்கும் திசை -மேற்கு
விசேஷ கிழமை- திங்கள், சனி கிழமை
யோக நேரம்- காலை 9:54 முதல் 10: 12 மணி வரை மாலை 1: 24 முதல்1: 42 மணி வரை
5)ஒகர சப்த வசிய மூலிகை
ஒ,ஓ,கொ,கோ,ஙொ,ஙோ,சொ,சோ,ஞொ,ஞோ,டொ,டோ,ணொ,ணோ,தொ,தோ,நொ,நோ,பொ, போ,மொ,மோ,யொ,யோ,ரொ,ரோ,லொ,லோ,வொ,வோ,ழொ,ழோ,ளொ,ளோ,றொ,றோ,னொ,னோ,ஜொ,ஜோ,ஷொ,ஷோ,ஸொ,ஸோ,ஹொ,ஹோ கௌ,ஙௌ,சௌ,ஞௌ,டௌ,ணௌ,தௌ,நௌ,பௌ,மௌ,யௌ,ரௌ,லௌ,வௌ,ழௌ,ளௌ,றௌ,னௌ, போன்ற எழுத்துகளில் ஏதேனும் ஒரு எழுத்தை பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்கள்.
வளர்பிறையில் பிறந்தவர்கள்.
வசிய மூலிகை- நங்கிலிவேர்
கவரும் உலோகம்- இரும்பு
ஈர்க்கும் திசை-பூமியை வணங்கவும்
விஷேச கிழமை- சனிக்கிழமை
யோக நேரம்- காலை-8:54 முதல் 9:42 மணிவரையும்
மாலை -2:48 முதல் 3:36 மணிவரை
தேய்பிறையில் பிறந்தவர்கள்
வசிய மூலிகை- உவுரி வேர்
கவரும் உலோகம்-செம்பு
ஈர்க்கும் திசை-தெற்கு
விசேஷ கிழமை-புதன்கிழமை
யோக நேரம்- காலை 8:18 முதல் 8:36 மணிவரை
மாலை 2:36 முதல் 2:54 மணிவரை....
மூலிகை பயன் படுத்தும் முறைகள்
1) மேற்சொன்ன மூலிகைகளின் விதைகளை மூலம் தனித்தனி தொட்டிகளில் வளர்த்து கொள்ள வேண்டும் இல்லையென்றால் வயல்வெளிகளில் குப்பை மேட்டிலும் வளர்ந்திருக்கும் மேற்கண்ட மூலிகைகளை வெளியில் தெரியாதவண்ணம் மண்ணோடு சேர்த்து கொண்டு வந்து தொட்டியில் வைத்து பயிரிடலாம்.
2) மூலிகை பயன்படுத்த விரும்புவோர் வளர்பிறையில் பிறந்தவர் அல்லது தேய்பிறையில் பிறந்தவராவார் என அறிந்து தெரிந்து கொண்டு அவரின் பெயரின் முதல் எழுத்தை வைத்து அம்மூலிகை ஒரு தொட்டியை தனி அறையில் வைக்க வேண்டும்.
3)மேற்கண்ட மூலிகையை பயன்படுத்த விரும்புவோர் அவருக்கேற்ற கொடுக்கப்பட்டுள்ள கவரும் உலோகத்தால். தாயத்து வாங்கி வரவேண்டும் வசதி உள்ளவர்கள் தங்கத்தை வாங்கி வரலாம் வசதி குறைவாக இருப்பினும் சாத தாயத்து வாங்கி வரச் சொல்லும். அவருக்கென்று கொடுக்கப்பட்டுள்ள விசேஷ கிழமைகளில் மஞ்சள், குங்குமம், பூ ,பழம், தேங்காய், கற்பூரம், கொம்பு, மஞ்சள் வாங்கிவந்து தயார்நிலையில் வைத்து கொண்டு. பின் கொடுக்கப்பட்டுள்ள யோக நேரத்தில் மூலிகை இருக்கும் தனி அறையில் நிர்வாணமாக சென்று. அவருக்கென்று கொடுக்கப்பட்டுள்ள ஈர்ப்பும் திசையில் அமர்ந்து. மஞ்சள் பூசி பொட்டு இட்டு ஊதுவத்தி கொளுத்திவைத்து.காம்பு மஞ்சள் மூலிகைக்கு காப்பு கட்டி தேங்காய் உடைத்து. கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டி கொண்டு
ஓம் சர்வ சக்தி மூலிகையை உன் சாபம் நசிநசி பரமசிவன் சாபம் நசிநசி பார்வதி சாபம் நசிநசி சப்தரிஷிகள் சாபம் நசிநசி ஏனையோர் சாபம் நசிநசி
என்று 21, முறை சொல்லி முடித்தவுடன் சகலரும் எனக்கு வசி வசி சகலமும் எனக்கு வசி வசி என்று 21 முறை சொல்லி முடித்தவுடன் மூச்சை உள்ளிழுத்தபடி அவரவர் தெய்வத்தை மனதில் நினைத்து இரண்டு கைகளால் ஆணிவேர் அறுபடாமல் மெதுவாக பிடுங்கி எடுத்து பக்கத்தில் வைத்து விட்டு பழையபடி துணிகளை கட்டிக்கொள்ளலாம். கொண்டு வைத்துக்கொண்டு இருக்கு தாயத்து. அதற்கேற்றபடி அம்மொழியின் அடிவேர் வெட்டி.( ஆயுதம் படாமல் வெட்டவும் தாம்பளத்தில் வெட்டவும் )அந்த தாயத்துக்குள் அடைத்து அவருக்கேற்ற கொடுக்கப்பட்டுள்ள யோக நேரத்தில் அணிந்து கொள்ளலாம்.
இதனால் உண்டாகும் பலன்கள்.
பலரும் பகைவரும் வசியமாவார் .சகல காரியங்களும் வெற்றியாகும். ஆயுள் நீடிக்கும் ஆபத்து தடுக்கும் படிப்படியாக குபேரனுக்கு வல்லமையும் மூலிகை உண்டு .என்று காகபுஜண்டர் சித்தர் கூறுகிறார் .ஆயுள் முழுவதும் பயன்படக்கூடிய மூலிகை தாயத்து. வாழ்வில் முன்னேற இது ஒன்றே போதும்... வாழ்க வளமுடன்
நன்றி குருமுனி மறைக்கப்பட்ட மாந்திரீகம் மர்மங்கள் விழிப்புணர்வு மற்றும் ஆராய்ச்சி
Image may contain: plant, flower, nature and outdoor

Friday 15 June 2018

12 சோழி ஜோதிட பலன்கள்

12 சோழிகள் தேவை.பஞ்சாட்ச்சர இல்லைனா அட்சாட்சர ஜபம் தெரிஞ்சிருக்கணும். யாரு என்ன கேக்கராங்களோ அதை முழுசா மனதில் வாங்கிண்டு சின்ன பிர்ச்சனைன்னா அட்சாச்சரஜபம் மனதில் சொல்லிண்டு அவர்களின் பிரச்சனை தீரனும் என்று முழுமனசாக பிரார்த்தனை பண்ணிண்டு சோழிகளை குலுக்கி போடனும்.
அப்போ ஒரு சோழி மட்டும் நிமிர்ந்து விழுந்தால் நினைத்தகாரியம் வெற்றிபெரும்,மகிழ்ச்சிபெருகும்,பொருள்சேரும்,பகைகுறையும்தன்னம்பிக்கை ஏற்படும் மொத்தத்தில் நல்லதே நடக்கும்.அதுவே ரெண்டு சோழிகள் நிமிர்ந்து விழுந்தால்னினைத்தகாரியம் நிறைவேரதாமதமாகும்.ஆனால் வெற்றி கிட்டும்.கைவிட்டு போன பொருள் கிடைக்கும்மன நிம்மதி பெருகும்
மூணு சோழி நிமிர்ந்தால் நினைத்தகாரியம் முடியாது,பொருள் விரயம் ஏற்படும், நண்பர்களால் தொல்லை ஏற்படும்,மொத்தத்தில் கெட்டபலன்கள்.
நாலு நிமிர்ந்தால் நினைத்தகாரியம் நடக்கும்,தொழில் வளர்ச்சி ஏற்படும்,மேலிட ஆதரவும் உதவியும் கிடக்கும் நோய் அகலும்.
ஐந்து நிமிர்ந்தால் தேடிய பொருள் கைக்கு வரும் இழந்தது திரும்பவும் கிடைக்க்கும்,வருமானம் பெருகும், வசதிகள் கூடும்,மனதில் தன்னம்பிக்கை பெருகும்.ஆறு நிமிர்ந்தால் பொருள் இழப்பு, வீண் வம்பு,வழக்கு உடல் நல குறைபாடுபண விரயமெண்ணீய காரியம் ஈடேராது. கெடுதலான பலன்கள்.ஏழு நிமிர்ந்தால் தொழில் வளர்ச்சி ஏர்படும், நோய் நீங்கும்,சேமிப்பு பெருகும்,சொத்துக்கள் சேரும் மங்கள காரியங்கள் நடக்கும்.எட்டு நிமிர்ந்தால் தொழில் பாதிப்பு,மனக்கவலை, குடும்பத்தில் பிரிவினை,பொருள் நட்டம் ஏற்படும்.ஒன்பது நிமிர்ந்தால் பொருள் சேரும்,வருமானம் பெருகும்,னோய் நீங்கும்,நல்ல பலன்களே கிடைக்கும்.
பத்து நிமிர்ந்தால் பொருள் விரயம், நோய், கடந்தொல்லைகள், அவமதிப்பு
என்று கெட்டபலன்கள் ஏற்படும்.பதினொன்ரு நிமிர்ந்தால் சேமிப்பு பெருகும், மதிப்பு உயரும், உயர்பதவி கிடைக்கும்,மழலைச்செல்வம் கிடைக்கும், நல்லபலன்களே நலக்கும்.பனிரெண்டும் நிமிர்ந்தால் பெயருக்கு இழிவு, கடன் தொல்லை, உடல் நலக்கேடு, பொருல் திருட்டு என்ரு மோசமான பலன்கள் . இதுதான் இன்று பார்க்க படும் பிரசன்ன சாஸ்திரம். ஆனால் இது உண்மை இல்லையோ .
கேரள, தமிழகத்தில் பிரசன்ன சாஸ்திரம் பற்றிய ஆர்வம் இருந்தாலும் இந்த கலைகளை யாருக்கும் தெரியாது. பண்டைய காலத்தில் அதாவது ராஜ ராஜ சோழன் காலத்தில் முழுமையாக சோழி பிரசன்னாதான் பார்க்க பட்டது ஆனால் இன்று கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு வருகிறது. இங்குள்ள யாருக்கும் சோழி பிரசன்ன சாஸ்திரம் பற்றிய முழுமையாக தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.
ஒரு முறை சோழியை கீழே போட்டுவிட்டு திரும்பவும் சோழியை தொடமா முக்காலத்தையும் சொல்ல முடியும். செய்வினை கோளாறு, கிரகங்களின் கோளாறு, வாஸ்து கோளாறு, முன்னோர்கள் சாபம், உடலில் நோய் இருக்க இல்லையோ, நினைத்த காரியமும் ஜெயம் ஆகுமா,யார் இவர் ,இவர் குனம் என்ன, என்ன பிரச்சினை நடக்கிறது, இவர் வீட்டில் நிலவரம் எப்படி இருக்கிறது வீட்டில் பணம் இருக்க இல்லையோ, தேய்வசக்தி இருக்க இல்லையோ தீயசக்திகள் இருக்க இல்லையோ என பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியும்.
ஆயிரம் கேள்விகள் கேட்டாலும் பதில் சொல்ல முடியும்.
இதற்காக எந்திரம் விசேஷமாக மரத்தின் பலகையில் சக்கரத்தை வரைந்து இந்த சக்கரத்தில், 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள்,9 கிரகங்கள், 8 திக்குகள்,7 ஓரைகள்,6 அச்க்ஷாரகள்,5 பூதங்கள், 4 திசைகள், 3 தேவர்கள், 2 சக்திகள், 1 பிர்மாசாஸாம் பதிக்கப்பட்டுள்ளது என்று பார்த்தால் இன்று அவ்வாறு இல்லை ஏனெனில் அவர்களுக்கு தெளிவாக தெரியவில்லை.
12 சோழியை குனம் பார்ப்பதற்கு 12 நாட்கள் தேவைப்படும் .ஒரு சோழி பிரசன்னா வேண்டும் என்றால் முதலில் அந்த சோழி எங்கு இருக்கிறது, எந்த திசை நோக்கி பார்க்கிறது. எந்தெந்த சோழியை இனைந்த இருக்கிறது. என பல்வேறு பதில்கள் இருக்கின்றன இதையெல்லாம் எழுத்தில் எழுதுவதற்கு எனக்கு நேரம் இல்லை.
சோழி பிரசன்னா சாஸ்திரதிற்கு இணையான சாஸ்திரம் எதுவும் இல்லை.
ஒருவருக்கு இறந்த காலம், நிகல் காலம், எதிர்காலம் என முக்காலம் அறியலாம். குறி,ஜோதிடம், அருள் வாக்கு, வெற்றிலை வாக்கு, சொம்பு கனி வாக்கு, நீர் வாக்கு, வாஸ்து வாக்கு, கைரேகை ஜோசியம் என பல்வேறு சாஸ்திரங்கள் கூறுகின்றன நமது எதிர்காலம் பற்றி சொல்லுகிறேன் ஆனால் சோழிக்கு நிகர் இல்லை.
நன்றி குருமுனி பயிற்சி
இந்த கலையை கற்றுக்கொள்ள படிப்பு தேவையில்லை, இறையருள் தேவையில்லை, கால நேரம் தேவையில்லை , பக்தி விரதம் எதுவும் தேவையில்லை மனோசக்தி போதும்.இரண்டு நாட்களில் பிறருக்கு பிரசன்ன பார்க்க முடியும்.
நன்றி குருமுனி பயிற்சி 9600043233

பஞ்ச பட்சி

பஞ்ச பட்சி
மனித உடலில் இயங்க கூடிய உள் உறுப்புகளுக்கு பல்வேறு வழிகளிலிருந்து சக்தி கிடைக்கும் வகையில் மனித உடல் அமைப்பு அமைந்துள்ளது.
மனிதனின் உடல் உறுப்புகளில் இருந்து வரும் நரம்புகளின் தொடர்பு மற்றும் நரம்புகளின் முடிச்சுகள் மனிதனின் கண், காது உள்ளங்கை மற்றும் கால் பாதங்களில் வந்தடைகிறது. மனிதனின் அகத்தை வெளிப்படுத்தும் புறவழி உறுப்பே கண்கள்தான் இயற்கையின் தோற்றத்தையும், மற்றவையையும் ஊர்ஜிதப்படுத்துவதும் கண்கள்தான்.
எதையும் முதலில் அங்கரிப்பது கண்கள் மூலமாகத்தான். அழகான உறுப்பே கண்கள். மனிதனின் உடல் உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் மற்றும் நோய்களுக்கும் நாடி பார்த்து நோயை கணிப்பது போல மனிதனின் கருவிழியை வைத்தும் நோயை கணிக்கலாம்.
கருவிழித் திசுக்களில் ஏற்படும் புள்ளிகள், கோடுகள், நிற மாற்றங்கள் கருவிழித் திசுக்களின் ஒருங்கிணைப்பு மாற்றங்கள் ஆகியவற்றைக் கொண்டு உடல் உறுப்புகளின் பாதிப்புகளை துல்லியமாக கண்டு தீர்வு காணலாம். கண்களின் கருவிழிக் கொண்டு நோய் அறிந்து காது, உள்ளங்கை, கால் பாதங்களில் உள்ள வர்ம புள்ளிகள் தூண்டப்படுவதின் மூலமாக நோயினை குண்படுத்த முடியும்.
கருவிழியில் மருத்துவம் எப்படி உருவானது?
பஞ்சபட்சிகளில் ஒன்றான ஆந்தையை மையமாகவும் இதன் கண்களின் கருவிழியில் ஏற்பட்ட மாற்றத்தை கொண்டும் தான் கருவிழியில் மருத்துவம் உருவானது. கால் உடைந்த ஆந்தைக்கு காலில் கட்டு போடுவதற்கு முன் ஆந்தையை வைத்தியர் பார்த்தபோது அந்த ஆந்தையின் கண்ணின் கருவிழியில் ஒரு புள்ளி இருப்பதை கண்டறிந்தார். அதை வைத்து சிகிச்சை அளித்தார். இதில் ஆந்தையின் கால் குணமானது. உடனே அப்புள்ளி மறைந்தையும் கண்டார்.
அதே போலவே ஒரு மனிதனுக்கு ஏற்பட்ட விபத்தின் போது அவன் கருவிழியில் இதைப்போன்ற மாற்றம் ஏற்பட்டதையும் பின்பு அந்த மனிதனின் காயம் சரியானதும் அவன் கண்ணின் கருவிழி சரியானதையும் கண்டார்.
இந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டுதான் நோயை நிர்ணயம் செய்ய ஒரு புதிய யுத்தியை கண்டறிந்து கையாண்டார்கள்.
கருவிழியின் மூலம் நோய் அறியும் மருத்துவம் கி.பி. 1837-ம் ஆண்டில் இருந்து இன்று வரை நடைமுறையில் உள்ளது.
அதே போல பஞ்சபட்சி சாஸ்திரம் ஓர் மனிதனின் வாழ்க்கை முறையையும், வசதி வாய்ப்பையும் மற்றும் அவனின் நோய் தன்மையையும், உள் உறுப்புகளில் எந்த உறுப்பு பாதித்துள்ளது என்பதையும், அவன் உடலில் எந்த சக்கரம் சரியாக இயங்கவில்லை என்பதையும் கூற முடியும். மகாபாரத்தில் சாகதேவன் சோதிட சாஸ்திரம் கையாண்டார்.
கிருஷ்ண பகவான் பஞ்சபட்சி சாஸ்திரத்தை கையாண்டார் என்று சாஸ்திரம் கூறுகிறது. அதே போல ராமயணத்தில் பலவகை கலைகளையும் அறிந்த ராவணனும் பஞ்சபட்சி சாஸ்திரம் அறிந்தவர் ஆவார்.
இவர்கள் பஞ்ச பட்சிசாஸ்திரம் அதிகம் கையாண்டுயுள்ளனர்
இந்த அபூர்வ சாஸ்த்திரங்களையோகிகள்"ஞானிகள்" முனிவர்கள்"சித்தர்களும்பல்லாயிரம் வருடங்களாக மிகவும் இரகசியமாக பயன்படுத்தியும் பாதுகாத்தும் பயிற்சி அளித்தும் வந்துள்ளனர்.
இவைகளை பல வருடம் தம்முடனே இருந்து தொண்டுகள் செய்துகுருவின் திருப்பாதமே கதிஎன இருந்து வரும் விசுவாசமுள்ள சீடனுக்குமட்டும் இக் கலைகளின் அரிய இரகசியங்களை உபதேசித்து வந்துள்ளனர்.
இதில் பஞ்சபட்சி சாஸ்திரம்எனப்படும் மகத்துவம் வாய்ந்த இக்கலை ஆதியில் எம்பெருமான் ஈசன் அன்னை மகாசக்திஉமையவளுக்கு உபதேசித்த அபூர்வ கலையாகும்.
தமிழ்க் கடவுளாகியசுப்பிரமணியர்சூரபத்மனுடன் போரிட்டு அவனை வெல்ல முடியாமல் போகவே அவனைசம்ஹாரம் செய்யும் பொருட்டு தாயாகியமகாசக்தியால் சுப்பிரமணியருக்குஉபதேசித்த உன்னத கலையாகும் "பஞ்ச பட்சி சாஸ்திரம்" இதனையே சூரனை வதம்செய்ய முருகனுக்கு அன்னை மகாசக்தி வேல் கொடுத்ததாக சொல்வர்.
சூரனை வதம் செய்து வெகு காலம் சென்ற பின்பு குருமுனி யாகியஅகத்திய முனிவருக்குமுருகப் பெருமான் பஞ்ச பட்சி சாஸ்த்திரத்தை உபதேசம் செய்தார்.
அகத்தியரும் மற்ற சித்தர்களுக்கு உபதேசித்தார் இக்கலையைப் பயின்ற சித்தர்களும் தம்மிடம் உள்ள உண்மையான சீடர்களுக்கு மட்டும் குருவழி உபதேசம் அளித்து வந்துள்ளனர்.
பஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது ஜோதிடக்கலையிலும் மேலான மிகவும் துல்லியமான ஒரு காலக்கணிதம் ஆகும்.இது பஞ்ச பூத சக்திகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குவது ஆகும்.
நவக்கிரகங்கள்,பன்னிரு இராசிகள்,இருபத்தேழு நட்சத்திரங்கள் ஆக மொத்தம் - 48- இவை அனைத்தையும் ஐந்து பட்சிக்குள் (பறவைகள்)அடக்குவதே இதன் சூட்சும இரகசியமாகும்.
பஞ்சபூதம் எனப்படும்நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் எனப்படும் ஐந்து வித மாபெரும் பிரபஞ்ச சக்திகளை பஞ்சபட்சி எனப்படும்வல்லூறு,ஆந்தை,காகம்,கோழி,மயில்,என ஐந்து வித பறவைகளாக மாற்றி அமைத்து இக்கலையை உருவாக்கியது இறைவனின் வல்லமையாகும்.
சரம் தெரிந்தவனிடம் சரசமாடாதே
பட்சி தெரிந்தவனிடம் பகைகொள்ளாதே
பல்லி சொல்பவனிடம் பதில் பேசாதே
என்பது பெரியோர் வாக்குவாகும்.
மேற்கண்டபடி பஞ்சபட்சி தெரிந்தவனை பகைத்துக் கொண்டால் பகைத்தவனை எளிதில் சாய்க்கும்வல்லமை அவனுக்கு உண்டு என்பதால்தான்.இன்றும் தென் தமிழகத்தில் இக்கலையின் இரகசியம் அறிந்த ஆசான்கள் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர்.இக்கலையினைப் பயன் படுத்தி சேவல் சண்டை, ஆட்டுகிடா சண்டை,சிலம்பம் ,பிரச்சனை வழக்குகள்,போன்றவற்றில் தன்னைச் சார்ந்தவர்களை மட்டும் வெற்றி பெற வைத்து வருகின்றனர்.
அதே சமயம் பஞ்சபட்சி கலையின் சூட்சும சக்தியைப் பயன்படுத்தி வாழ்வில் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ள ஒருவரைவாழ்வில் மிகவும் உச்ச நிலையில் உயர்த்தி பணம்,பதவி,புகழ், ஆகிய வற்றை எளிதில் அடைய வைக்க முடியும்.மேலும் பஞ்சபட்சி நுட்பத்தினை அறிந்தவன் ஜெகத்தை ஆள்வான்,அவனை எவரும்வெல்ல முடியாது என்பது உறுதியிட்ட உண்மையாகும்.
இக்கலையை பயன்படுத்தி மாந்திரீக அஷ்ட கர்மம் ஆடலாம்,செய்தொழில்,காரியங்கள்,வாழ்க்கையில் முன்னேற புதுவித திட்டங்கள் போன்றவற்றை உடனே நடைமுறைக்கு கொண்டு வரவும், தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறவும் முடியும்.மேலும்
நவக்கிரகங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் வல்லமை இக்கலைக்கு உண்டு.நாள் ,திதி ,நட்சத்திரம் ,யோகம் ,கரணம் ,நேரம் ,லக்கினம் ,போன்ற அனைத்து தோஷங்களும் பஞ்சபட்சியினைக் கட்டுப் படுத்த இயலாது.
இன்று இத் தெய்வீகக் கலையின் அதிசூட்சும இரகசியங்கள் அறிந்த ஆசான்கள் வெகுசிலர் மட்டும் தான் உள்ளனர்.
உண்மையான மெய்குருவிடம் சென்று பணிந்து இக்கலையை கற்கும் ஒருவனை பஞ்சபூத சக்திகள் துணை நின்று காக்கும்.அவன் வாழ்வில் மேன்மை பெற்று சீரும் சிறப்புடன் வாழ வகை செய்யும்.அதே சமயம் இக்கலையின் மூலமாக சத்ருக்களை துன்புறுத்தவோ,அழிக்கவோ நினைத்தால் ஏழு ஜென்ம பாவ வினைகள் வந்து சேரும்.
எனவே இந்த தெய்வீகக் கலையினை குருவின் வழியில் சென்று கற்று சித்திபெற்று தான் வாழ்வில் வளம் பெறுவதுடன், தன்னைச்சுற்றி உள்ளோரையும் வாழ்வில் வளம் பெறச்செய்யலாம்.....
நன்றி குருமுனி 
விழிப்புணர்வு மற்றும் ஆராய்ச்சி மையம்
Image may contain: bird

Monday 11 June 2018

*மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்*

🔯ஆயுர்வேத ரகசியங்கள்🔯
*******************************
*மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்*
*நேரமின்மை* இன்றைக்கு ஒரு பெரும் பிரச்னை. இதனால் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. நோய்களே இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தப்படவேண்டிய செய்தி. நேரத்தை குறைந்த அளவில் எடுக்கும், சில எளிய வீட்டு வைத்தியங்கள் நிறையவே உள்ளன. அவை நம் ஆரோக்கியத்தின் கவசமாகும். அவற்றைத் தெரிந்து கொண்டால், நோய் வரும் முன் நம்மைக் காத்துக்கொள்ளலாம். அதாவது, ரத்தம் சுத்தமில்லாமல் இருப்பது, அதைத் தொடர்ந்து உள்ளுறுப்புகள் பாதிப்பதே நோயாக வந்து நம்மைத் துன்புறுத்துகிறது. ஆகவே, நோய் வரும் வாய்ப்பையே தடுத்துவிட்டால் ஆரோக்கியம் எப்போதும் நம் வசமே. அன்றாடம் பயன்படுத்தும் இயற்கை விளைப்பொருட்களின் மூலம் நம் உடலின் உறுப்புகளைப் பலப்படுத்தும் வழிமுறைகளைப் பற்றிப் பார்க்கலாம்.
*மூளை*
***********
கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.
தாமரைப்பூவை நீர் விட்டு காய்ச்சி தினசரி மூன்று வேளையும் ஒரு டம்ளர் அளவுக்கு குடித்து வந்தால் மூளையின் செயல்பாடு மேம்படும். இதை 48 நாள்களுக்குக் குடித்து வரலாம்.
குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.
வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும்.
தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.
இலந்தைப் பழத்துடன் கருப்பட்டிச் சேர்த்து அரைத்துக் குடித்தால் பதற்றத்தைக் குறைக்க முடியும். மூளையின் நரம்புகள் வலுப்பெறும்.
பெருவிரலும் ஆள்காட்டி விரலும் இணைத்து வைத்திருக்கும் சின் முத்திரையை, தினமும் 20 நிமிடங்கள் செய்தால் மூளையின் செல்கள் புத்துயிர் பெறும். நினைவுத்திறன் மேம்படும்.
*கண்கள்*
************
பாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது.
தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும்.
அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரைக்ச் சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும்.
வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டை மசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிட கண்களுக்கு நல்லது.
தினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்னைகள் வராது.
தினமும் 5 பாதாம்களை சாப்பிட்டு வரவேண்டும்.
*பற்கள்*
***********
மாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.
கோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது. உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம்.
செவ்வாழைப் பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது.
பல் உறுதியாக, உணவை நன்றாக மென்று சுவைக்க வேண்டும். கேரட், கரும்பு, ஆப்பிள் போன்றவற்றைப் பத்து முறையாவது நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
*நரம்புகள்*
*************
சேப்பங்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நரம்புகள் பலம் பெறும்.
இரண்டு அத்திப்பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வரலாம்.
மாதுளைப் பழச்சாற்றில் தேன் கலந்து 48 நாள்கள் குடித்து வரலாம்.
இலந்தைப் பழத்தை அவ்வப்போது சுவைத்து வரலாம்.
கரிசலாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.
*ரத்தம்*
*********
வாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தியாகும்.
திராட்சைப் பழ ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.
தினம் ஒரு கப் அளவுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.
அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.
இரண்டு லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு 10 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.
நாவல் பழம், இலந்தைப் பழம்ஞ ஆகியவற்றை சீசன் நேரத்தில் தவறாமல் சாப்பிட வேண்டும்.
*சருமம்*
**********
தேகம் பளபளப்பாக மாற ஆவாரம் பூ டீ குடித்து வரலாம். ஆரஞ்சுப் பழத்தையும் சாப்பிட்டு வரலாம்.
முட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்.
சந்தனக் கட்டையை இழைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசினால் பருக்கள் நீங்கும். முகம் பிரகாசமாகும்.
ஆரோக்கியமான உடல், பொலிவான முகம், பளபளப்பான சருமம் பெற அறுகம்புல்லை நீர் விட்டு அரைத்து, வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறைக் குடித்து வரவேண்டும்.
எந்தவித தோல் நோய்களும் அண்டாமல் இருக்க, வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து, உடலில் பூசிக் குளித்து வந்தால் சருமம் மின்னும்.
*நுரையீரல் - இதயம்*
************************
தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வர நுரையீரல், இதயம் பலமாகும்.
கரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லது.
ஆர்கானிக் ரோஜாப்பூ, பனங்கற்கண்டு, தேன் ஆகியவற்றை லேகியம் போல கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.
இஞ்சி முரப்பா, இஞ்க்ச் சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும்.
முசுமுசுக்கை இலையை பொடியாக்கி மாதம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் புற்றுநோய் வராது.
சுண்டை வற்றலை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
திராட்சை ஜூஸ், உலர் திராட்சையை சாப்பிட இதயம் பலம் பெறும்.
முள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.
ஆளிவிதைகள், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3, நல்ல கொழுப்பு இருப்பதால் இதயத்துக்கு நல்லது.
*வயிறு*
***********
காலையில் எழுந்ததும் ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு சிறிதளவு தயிரையும் குடிக்க வேண்டும். வயிறு சுத்தமாகும்.
மாதுளம்பூவை தேநீராக்கிக் குடித்து வந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.
கொன்றை பூ கஷாயம், புதினா துவையல் ஆகியவை வயிற்று வலியை தீர்க்கும் சிறந்த மூலிகைகள்.
*வறுத்துப் பொடித்த சீரகத்தை ஒரு டம்ளர் மோரில் போட்டுக் குடிக்க வேண்டும்.*
*வாரத்தில் இரண்டு நாள்கள் ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி சேர்த்துக் குடித்து வருவதால், வயிறு தொடர்பான பிரச்னைகள் எதுவும் வராது.*
*சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ள தொப்பை கரையும்.*
வாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும்.
வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிடக் கெட்டக் கொழுப்பு கரையும். தொப்பையும் குறையும்.
*கணையம்*
**************
பாகற்காய், அவரைப்பிஞ்சு, நாவல்பழம் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கணையத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.
தினசரி 5 ஆவாரம் பூவை மென்று தின்ன வேண்டும்.
கொன்றைப் பூவை அரைத்து மோரில் கலந்து குடித்து வந்தால் கணையத்தின் செயல்பாடுகள் சீராகும்.
கோவைப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.
*கல்லீரல் - மண்ணீரல்*
**************************
சீந்தில் கொடியை தேநீராக்கி குடித்து வருவது நல்லது.
கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும்.
மாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள்.
வில்வ பழச்சதையை நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.
திராட்சை பழச்சாற்றை அருந்தி வந்தால் கல்லீரல், மண்ணீரல் உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.
*மலக்குடல்*
**************
அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும்.
பப்பாளிப் பழத்தை வாரம் மூன்றுமுறை சாப்பிடுவது நல்லது.
அடிக்கடி முளைக்கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வரலாம்.
நார்த்தங்காய் ஊறுகாயை அளவுடன் சாப்பிடுவது நல்லது. செரிமானச் சக்தி மேம்படும்.
மாலை ஆறு மணி அளவில், மாம்பழ சீசனில் மாம்பழத்தைத் தொடர்ந்து சுவைத்து வரலாம்.
மாதுளைப்பூ சாறு 15 மி.லி, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேளையும் குடித்து வரவேண்டும்.
*பாதம்*
*********
கண்டங்கத்திரி இலையுடன் தேங்காய் எண்ணெயை ஊற்றிச் சாறு பிழிந்துத் தடவினால் கால் வெடிப்பு சரியாகும்.
விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்.
லேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.
வாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும்.
இரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி - மடக்கும் பயிற்சியைச் செய்து வரவேண்டும். ரத்த ஓட்டம் சீராகும்.
- *சித்தர்களின் குரல் shiva shangar*

கந்த குரு கவசம் பாடல் வரிகள்

*காரிய சித்தி தரும் ..... தினமும் சொல்லுங்கள்வெல்லுங்கள்....*

*கந்த குரு கவசம் பாடல் வரிகள்*
**********************************

கலியுக தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே
மூஷிக வாகனனே மூலப் பொருளோனே
ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே
திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்
சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன்
சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்
கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்
அச்சம் தீர்த்தென்னை ரக்ஷித்திடுவீரே.

ஸ்கந்தா சரணம்; ஸ்கந்தா சரணம்
சரவணபவ குஹா சரணம் சரணம்
குருகுஹா சரணம்; குருபரா சரணம்
சரணமடைந்திட்டேன் கந்தா சரணம்
தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே
ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே
தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர்
அவதூத ஸத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர்

அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே
அறள் பொருளின்பம் வீடுமே தந்தருள்வாய்
தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுரு நாதா
சண்முகா சரணம் சரணம் ஸ்கந்தகுரோ
காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா
போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா
போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி
போற்றி போற்றி முருகா போற்றி

அறுமுகா போற்றி; அருட்பதம் அருள்வாய்
தகப்பன் சாமியே என் இதயத்துள் தங்கிடுவாய்
ஸ்வாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய்
சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதை
அகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம்
திக்கெலாம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனே

ஆறுமுக ஸ்வாமி யுன்னை அருட்ஜோதியாய்க் காண
அகத்துள்ளே குமரா நீ அன்புமயமாய் வருவாய்

அமரத் தன்மையினை அனுக்ரஹித் திடுவாயே
வேலுடைக் குமரா; நீ வித்தையும் தந்தருள்வாய்
வேல்கொண்டு வந்திடுவாய்; காலனை விரட்டிடவே
தேவரைக் காத்த திருச்செந்திலாண்டவனே
திருமுருகன் பூண்டியிலே திவ்யஜோதியான கந்தா
பரஞ்ஜோதியுங் காட்டி பரிபூர்ண மாக்கிடுவாய்
திருமலை முருகா நீ திடஞான மருள்புரிவாய்
செல்வமுத்துக் குமரா மும்மலம் அகற்றிடுவாய்

அடிமுடியறிய வொணா அண்ணா மலையோனே
அருணாசலக் குமரா அருணகிரிக் கருளியவா
திருப்பரங்கிரி குஹனே தீர்த்திடுவாய் வினைமுழுதும்
திருத்தணி வேல்முருகா தீரனாய் ஆக்கிடுவாய்
எட்டுக்குடி குமரா ஏவல்பில்லி சூனியத்தை
பகைவர் சூதுவாதுகளை வேல்கொண்டு விரட்டிடுவாய்
எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவே
எங்கும் நிறைந்த கந்தா; எண்கண் முருகா நீ
என்னுள்ளறிவாய் நீ உள்ளொளியாய் வந்தருள்வாய்
திருப்போரூர் மாமுருகா திருவடியே சரணமய்யா
அறிவொளியாய்வந்த நீ அகக்கண்ணைத் திறந்திடுவாய்
திருச்செந்தூர் ஷண்முகனே ஜகத்குருவிற் கருளியவா
ஜகத்குரோ சிவகுமரா சித்தமல மகற்றிடுவாய்
செங்கோட்டு வேலவனே சிவானு பூதிதாரும்
சிக்கல் சிங்காரா ஜீவனைச் சிவனாக்கிடுவாய்
குன்றக்குடி குமரா குருகுகனாய் வந்திடப்பா

குமரகிரிப் பெருமானே மனத்தையும் மாய்த்திடுவீர்
பச்சைமலை முருகா இச்சையைக் களைந்திடப்பா
பவழமலை ஆண்டவனே பாவங்களைப் போக்கிடப்பா
விராலிமலை ஷண்முகனே விரைவில் நீ வந்திடப்பா
வயலூர் குமாரகுரோ ஞானவரமெனக் கருள்வீரே
வெண்ணெய் மலைமுருகா மெய்வீட்டைத் தந்திடுவீர்
கதிர்காம வேலவனே மனமாயை அகற்றிடுவாய்
காந்த மலைக் குமரா கருத்துள் வந்திடுவீர்

மயிலத்து முருகா நீ மனத்தகத்துள் வந்திடுவீர்
கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர்
குமரமலை குருநாதா கவலையெல்லாம் போக்கிடுவீர்
வள்ளிமலை வேல்முருகா வேல்கொண்டு வந்திடுவீர்
வடபழனி யாண்டவனே வல்வினைகள் போக்கிடுவீர்
ஏழுமலை யாண்டவனே எத்திக்கும் காத்திடுவீர்
ஏழ்மையகற்றி கந்தா எமபயம் போக்கிடுவீர்
அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய்
ஆறுபடைக் குமரா மயிலேறி வந்திடுவாய்

பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்கு
பணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்துவப்பேன்
அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே
படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே
உலகெங்கு முள்ளது ஒருபொருள் அன்பேதான்
உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்றாய்
அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன்
அன்பே ஓமெனும் அருள்மந்திரம் என்றாய்

அன்பை உளத்திலே அசையாது அமர்த்திடுமோர்
சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும்
வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ
யாவர்க்கும் இனியன் நீ; யாவர்க்கும் எளியன் நீ
யாவர்க்கும் வலியன் நீ; யாவர்க்கு மானோய் நீ
உனக்கொரு கோயிலை என் அகத்துள்ளே புனைவேனே
சிவசக்திக் குமரா சரணம் சரணமையா
அபாயம் தவிர்த்து தடுத்தாட் கொண்டருள்வாய்

நிழல் வெயில் நீர் நெருப்பு மண் காற்று வானதிலும்
பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர்
உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்
யானெனதற்ற மெய்ஞ்ஞானமதருள்வாய் நீ
முக்திக்கு வித்தான முருகா கந்தா
சதுர்மறை போற்றும் ஷண்முக நாதா
ஆகமம் ஏத்தும் அம்பிகை புதல்வா

ஏழையைக் காக்க நீ வேலேந்தி வந்திடுவாய்
தாயாய்த் தந்தையாய் முருகா தக்கணம் நீ வருவாய்
சக்தியும் சிவனுமாய்ச் சடுதியில் நீ வருவாய்
பரம்பொருளான பாலனே ஸ்கந்தகுரோ
ஆதிமூலமே அருவாய் உருவாய் நீ
அடியனைக் காத்திட அருவாய் வந்தருள்வாய்
உள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வா
தேவாதி தேவா சிவகுரோ வா வா வா
வேலாயுதத்துடன் குமரா விரைவில் நீ வந்திடப்பா

காண்பன யாவுமாய்க் கண்கண்ட தெய்வமாய்
வேதச் சுடரோய் மெய்கண்ட தெய்வமே
மித்தையாம் இவ்வுலகை மித்தையென் றறிந்திடச்செய்
அபயம் அபயம் கந்தா; அபயமென்று அலறுகிறேன்
அமைதியை வேண்டி அறுமுகா வா வாவென்றேன்
உன்துணை வேண்டினேன் உமையவள் குமராகேள்
அச்சம் அகற்றிடுவாய் அமைதியைத் தந்திடுவாய்
வேண்டிய துன்னருளே அருள்வதுன் கடனேயாம்

உன் அருளாலே உன்தாள் வணங்கிட்டேன்
அட்டமா சித்திகளை அடியனுக் கருளிடப்பா
அஜபை வழியிலே அசையாம லிருத்திவிடு
சித்தர்கள் போற்றிடும் ஞானசித்தியும் தந்துவிடு
சிவானந்தத் தேனில் திளைத்திடவே செய்துவிடு
அருள்ஒளிக் காட்சியை அகத்துள்ளே காட்டிவிடு
அறிவை அறிந்திடும் அவ்வருளையும் நீ தந்துவிடு
அனுக்ரஹித் திடுவாய் ஆதிகுரு நாதாகேள்
ஸ்கந்த குருநாதா; ஸ்கந்த குருநாதா

தத்துவம் மறந்து தன்னையும் நான் மறந்து
நல்லதும் கெட்டதும் நானென்பதும் மறந்து
பாவ புண்ணியத்தோடு பரலோகம் மறந்திடச் செய்
அருள்வெளி விட்டிவனை அகலா திருத்திடுவாய்
அடிமையைக் காத்திடுவாய் ஆறுமுகக் கந்தகுரோ
சித்தியிலே பெரிய ஞானசித்தி நீ அருள
சீக்கிரமே வருவாய் சிவானந்தம் தருவாய்
சிவானந்தம் தந்தருளி சிவசித்த ராக்கிடுவாய்

சிவனைப் போலென்னைச் செய்திடுவதுன் கடனே
சிவசத் குருநாதா சிவசத் குருநாதா
ஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய்
தாளினைப் பிடித்தேன் தந்திடு வரமெனக்கு
திருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய்
சத்ரு பகைவர்களை ஷண்முகா ஒழித்திட்டு
கிழக்குத் திசையிலிருந்து க்ருபாகரா காப்பாற்றும்
தென்கிழக்கு திசையிலிருந்து தீனபந்தோ காப்பாற்றும்

தென்திசை யிலுமென்னைத் திருவருளால் காப்பாற்றும்
தென்மேற்கிலு மென்னைத் திறல்வேலால் காப்பாற்றும்
மேற்குத் திக்கிலென்னை மால்மருகா ரக்ஷிப்பாய்
வடமேற் கிலுமென்னை மயிலோனே ரக்ஷிப்பாய்
வடக்கிலென்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய்
வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரே
பத்துதிக்குத் தோறுமெனை பறந்துவந்து ரக்ஷிப்பாய்
என்சிகையையும் சிரசினையும் சிவகுரோ ரக்ஷிப்பாய்

நெற்றியும் புருவமும் நினதருள் காக்கட்டும்
புருவங்களுக் கிடையே புரு÷ஷாத்தமன் காக்கட்டும்
கண்க ளிரண்டையும் கந்தவேல் காக்கட்டும்
நாசிக ளிரண்டையும் நல்லவேல் காக்கட்டும்
செவிக ளிரண்டையும் சேவற்கொடி காக்கட்டும்
கன்னங் களிரண்டையும் காங்கேயன் காக்கட்டும்
உதட்டி னையும்தான் உமாசுதன் காக்கட்டும்
நாக்கை நம்முருகன் நயமுடன் காக்கட்டும்

பற்களைக் கந்தன் பலம் கொண்டு காக்கட்டும்
கழுத்தை ஸ்கந்தன் கைகளால் காக்கட்டும்
தோள்களிரண்டையும் தூயவேல் காக்கட்டும்
கைகள் விரல்களைக் கார்த்திகேயன் காக்கட்டும்
மார்பையும் வயிற்றையும் வள்ளி மணாளன் காக்கட்டும்
மனத்தை முருகன் கைமாத்தடிதான் காக்கட்டும்
ஹ்ருதயத்தில் ஸ்கந்தன் இனிது நிலைத் திருக்கட்டும்
உதரத்தையெல்லாம் உமை மைந்தன் காக்கட்டும்

நாபிகுஹ்யம் லிங்கம் நவையுடைக் குதத்தோடு
இடுப்பை முழங்காலை இணையான கால்களையும்
புறங்கால்விரல்களையும் பொருந்துமுகர் அனைத்தையுமே
உரோமத் துவாரமெல்லாம் உமைபாலா ரக்ஷிப்பாய்
தோல் ரத்தம் மஜ்ஜையையும் மாம்ஸமென்பு மேதஸையும்
அறுமுகா காத்திடுவீர்; அமரர் தலைவா காத்திடுவீர்
என் அகங்காரமும் அகற்றி அறிவொளியாயிருந்தும்
முருகா வெனைக்காக்க வேல்கொண்டு வந்திடுவீர்

பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே
ஓம் ஸெளம் சரவணபவ; ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும்
க்லௌம் ஸெளம் நம: வென்று சேர்த்திடடா நாள்தோறும்
ஓமிருந்து நம: வரை ஒன்றாகச் சேர்த்திடடா
ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி
ஒருமனத்தோடு நீ உருவையும் ஏத்திடடா
முருகனின் மூலமிது முழுமனத்தோ டேத்திட்டால்
மும்மல மகன்றுவிடும் முக்தி உந்தன் கையிலுண்டாம்

முக்தியை வேண்டியுமே எத்திக்கும் செல்லவேண்டாம்
முருகன் இருப்பிடமே முக்தித் தலமாகுமப்பா
ஹ்ருதயத்தில் முருகனை இருத்திவிடு இக்கணமே
இக்கணமே மூலமந்திரம் ஏத்திவிடு ஏத்திவிடு
மூலமதை ஏத்துவோர்க்குக் கால பயமில்லையடா
காலனை நீ ஜயிக்க கந்தனைப் பற்றிடடா
சொன்னபடிச் செய்தால் சுப்பரமண்ய குருநாதன்
தன்னொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான்

ஜகமாயை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமே
மூலத்தை நீ ஜபித்தே முத்தனு மாகிடடா
அக்ஷர லக்ஷம் இதை அன்புடன் ஜபித்துவிடில்
எண்ணியதெலாம் கிட்டும் எமபயம் அகன்றோடும்
மூவுலகும் பூஜிக்கும் முருகனருள் முன்னிற்கும்
பூவுலகில் இணையற்ற பூஜ்யனு மாவாய் நீ
கோடித்தரம் ஜபித்துக் கோடிகாண வேண்டுமப்பா
கோடிகாணச் சொன்னதை நீ நாடிடுவாய் மனமே
ஜன்மம் கடைத்தேற ஜபித்திடுவாய் கோடியுமே
வேதாந்த ரகசியமும் வெளியாகு முன்னுள்ளே
வேத சூக்ஷ்மத்தை விரைவாகப் பற்றிடலாம்
சுப்பரஹ்மண்ய குரு ஜோதியாயுள் தோன்றிடுவான்
அருட்பெருஞ் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே
அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய்
சித்தியையும் முக்தியையும் ஸ்கந்தகுரு தந்திடுவான்
நின்னையே நான் வேண்டி நித்தமும் ஏத்துகிறேன்

மெய்யறிவாகக் கந்தா வந்திடுவாய் இவனுளே நீ
வந்திடுவாய் மருவிடுவாய் பகுத்தறி வாகவே நீ
பகுத்தறி வோடிவனைப் பார்த்திடச் செய்திடப்பா
பகுத்தறிவான கந்தன் பரங்குன்றில் இருக்கின்றாள்
பழனியில் நீயும் பழம்ஜோதி யானாய் நீ
பிரமனுக் கருளியவா பிரணவப் பொருளோனே
பிறவா வரமருளி பிரம்ம மய மாக்கிடுவாய்
திருச்செந்தூரில் நீ சக்திவேல் தாங்கிவிட்டாய்

பழமுதிர்ச் சோலையில் பரஞ்சோதி மயமானாய்
சுவாமி மலையிலே சிவசுவாமிக் கருளிய நீ
குன்றுகள் தோறும் குருவாய் அமர்ந்திட்டாய்
ஸ்கந்தகிரியை நீ சொந்தமாக்கிக் கொண்டனையே
ஸ்கந்த குருநாதா ஸ்கந்தாஸ்ரம ஜோதியே
பிறப்பையும் இறப்பையும் பெயர்த்துக் காத்திடுவாய்
பிறவாமை என்கின்ற பெருவரம் நீ தந்திடுவாய்
தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடுவாய்

எந்த நினைப்பையும் எரித்து நீ காத்திடுவாய்
கந்தா சரணம் கந்தா சரணம்
சரண மடைந்திட்டேன் சடுதியில் வாருமே
சரவண பவனே; சரவண பவனே
உன்னருளாலே நான் உயிரோடிருக்கின்றேன்
உயிருக்குயிரான கந்தா உன்னிலென்னைக் கரைத்திடப்பா
என்னிலுன்னைக் காண எனக்கு வரமருள்வாய்
சீக்கிரம் வந்து சிவசக்தியும் தந்தருள்வாய்
இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்

இந்திரிய மடக்கி இருந்து மறிகிலேன் நான்
மனதை அடக்க வழி ஒன்றும் அறிந்திலேன் நான்
ஸ்கந்தா உன் திருவடியைப் பற்றினேன் சிக்கெனவே
சிக்கெனப் பற்றினேன் செப்பிடுவீர் <உபதேசம்
காமக் கசடுகள் யாவையும் களைந்திடுவாய்
சித்த சுத்தியும் ஜபமும் தந்திடுவாய்
நினைப்பெல்லாம் நின்னையே நினைத்திடச் செய்திடுவாய்
திருமுருகா வுன்னைத் திடமுற நினைத்திடவே

திருவருள் தந்திடுவாய் திருவருள் தான் பொங்கிடவே
திருவருள் ஒன்றிலே நிலைபெறச் செய்திடுவாய்
நிலைபெறச் செய்திடுவாய் நித்யானந்தமதில்
நித்யானந்தமே நின்னுரு வாகையினால்
அத்வை தானந்தத்தில் இமைப்பொழுது ஆழ்த்திடுவாய்
ஞான பண்டிதா நான்மறை வித்தகா கேள்
ஸ்கந்த குருநாதா ஸ்கந்தகுரு நாதாகேள்
மெய்ப்பொருள் காட்டி மேன்மை அடைந்திடச்செய்

வினைகள் யாவையுமே வேல்கொண்டு விரட்டிடுவாய்
தாரித்திரியங்களை உன் தடிகொண்டு விரட்டிடுவாய்
துக்கங்களனைத்தையும் தொலைதூரம் போக்கிடுவாய்
பாப உடலைப் பரிசுத்த மாக்கிடுவாய்
இன்ப துன்பத்தை இருவிழியால் விரட்டிடுவாய்
ஆசைப் பேய்களை அறவே நசுக்கிடுவாய்
அகந்தைப் பிசாசை அழித்து ஒழித்திடடா
மெய்யருளாம் உன்னருளில் முருகா இருத்திடுவாய்

கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
ஆறுமுகமான குரோ அறிந்திட்டேன் உன் மகிமை
இக்கணமே வருவாய் என் ஸ்கந்த குருவே நீ
என்னைக் காத்திடவே எனக்கு நீ அருளிடவே
அரைக்கணத்தில் நீயும் ஆடிவரு வாயப்பா
வந்தென்னைத் தடுத்து வலிய ஆட்கொள் வரதகுரோ
அன்புத் தெய்வமே ஆறுமுகமானவனே
சுப்ரஹ் மண்யனே சோகம் அகற்றிடுவாய்

ஞான ஸ்கந்தரே ஞானம் அருள்வாய் நீ
ஞான தண்டபாணியே என்னை ஞான பண்டிதனாக்கிடுவாய்
அகந்தையெலாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய்
அன்புமயமாக்கி ஆட்கொள்ளு வையப்பா
அன்பைஎன் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திவிடு
அன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய்
உள்ளும் புறமும் உன்னருளாம் அன்பையே
உறுதியாக நானும் பற்றிட உவந்திடுவாய்

எல்லையில்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ
அங்கிங்கெனாதபடி எங்கும் அன்பென்றாய்
அன்பே சிவமும்; அன்பே சக்தியும்
அன்பே ஹரியும்; அன்பே பிரம்மனும்
அன்பே தேவரும்; அன்பே மனிதரும்
அன்பே நீயும்; அன்பே நானும்
அன்பே சத்தியம்; அன்பே நித்தியம்
அன்பே சாந்தம்; அன்பே ஆனந்தம்

அன்பே மௌனம்; அன்பே மோக்ஷம்
அன்பே பிரம்மமும்; அன்பே அனைத்துமென்றாய்
அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லையென்றாய்
எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா
அன்பில் உறையும் அருட்குரு நாதரே தான்
ஸ்கந்தாஸ்ரமத்தில் ஸ்கந்த குருவானான் காண்
மூவரும் தேவரும் முனிவரும் போற்றிடவே
ஸ்கந்தாஸ்ரமந் தன்னில் ஸ்கந்த ஜோதியுமாய்

ஆத்ம ஜோதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுரு
இருளை அகற்றவே எழுந்திட்ட எங்கள் குரு
எல்லையில்லாத உன் இறை வெளியைக் காட்டிடுவாய்
முக்தியைத் தந்திடுவாய் மூவரும் போற்றிடவே
நம்பினேன் உன்னையே நம்பினேன் ஸ்கந்தகுரோ
உன்னையன்றி இவ்வுலகில் ஒன்றுமில்லை என்றுணர்ந்தேன்
நன்கறிந்து கொண்டேன் நானும் உனதருளால்
விட்டிட மாட்டேன் கந்தா வீட தருள்வீரே

நடுநெற்றித் தானத்து நானுனைத் தியானிப்பேன்
பிரம மந்திரத்தைப் போதித்து வந்திடுவாய்
சுழுமுனை மார்க்கமாய் ஜோதியைக் காட்டிடுவாய்
சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா
ஆசை அறுத்து அரனடியைக் காட்டிவிடும்
மெய்யடியராக்கி மெய் வீட்டில் இருத்தி விடும்
கொங்கு நாட்டிலே கோயில் கொண்ட ஸ்கந்தகுரோ
கொல்லிமலை மேலே குமரகுரு வானவனே

கஞ்சமலை சித்தர் போற்றும் ஸ்கந்தகிரி குருநாதா
கருவூரார் போற்றும் காங்கேயா ஸ்கந்தகுரோ
மருதமலைச் சித்தன் மகிழ்ந்துபணி பரமகுரோ
சென்னி மலைக்குமாரா சித்தர்க் கருள்வோனே
சிவவாக்கிய சித்தருளைச் சிவன்மலையில் போற்றுவரே
பழனியில் போகருமே பாரோர்வாழப் பிரதிஷ்டித்தான்
புலிப்பாணி சித்தர்களால் புடைசூழ்ந்த குமரகுரோ
கொங்கில் மலிந்திட்ட ஸ்கந்த குருநாதா

கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே
கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே
உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ள இடம்
ஸ்கந்தகிரி என்பதை தான் கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்
நால்வர் அருணகிரி நவமிரண்டு சித்தர்களும்
பக்தர்களும் போற்றும் பழனிமலை முருகா கேள்
கொங்கு தேசத்திலே குன்றுதோறும் குடிகொண்டோய்
சீலம் நிறைந்த சேலம் மாநகரத்தில்

கன்னிமார் ஓடையின் மேல் ஸ்கந்தகிரி அதனில்
ஸ்கந்தாஸ்ரமத்தினிலே ஞானஸ்கந்த சத்குருவாய்
அமர்ந்திருக்கும் ஜோதியே; ஆதிமூலமான குரோ
அயர்ச்சியை நீக்கிடுவாய் என் தளர்ச்சியை அகற்றிடுவாய்
சுகவனேசன் மகனே சுப்ரமண்ய ஜோதியே
பேரின்ப மகிழ்ச்சியையும் பெருகிடச் செய்திடப்பா
பரமானந்தமதில் எனை மறக்கப் பாலிப்பாய்
மால் மருகா வள்ளி மணவாளா ஸ்கந்தகுரோ

சிவகுமரா உன்கோயில் ஸ்கந்தகிரி என்றுணர்ந்தேன்
ஜோதிப் பிழம்பான சுந்தரனே பழனியப்பா
சிவஞானப் பழமான ஸ்கந்தகுரு நாதா
பழம் நீ என்றதினால் பழனிமலையிருந்தாயோ
திருவாவினன்குடியில் திருமுருகனானாயோ
குமரா முருகா குருகுகா வேலவனே
அகத்தியர்க்குத் தந்து ஆட்கொண்டாய் தமிழகத்தை
கலியுக வரதனென்று கலசமுனி உனைப் புகழ்ந்தான்

ஒளவைக்கு அருள் செய்த அறுமுகவா ஸ்கந்தகுரோ
ஒழுக்கமோடு கருணையையும் தவத்தையும் தந்தருள்வாய்
போகருக்கு அருள் செய்த புவன சுந்தரனே
தண்டபாணித் தெய்வமே தடுத்தாட் கொண்டிடப்பா
ஆண்டிக் கோலத்தில் அணைத்திடுவாய் தண்டுடனே
தெய்வங்கள் போற்றிடும் தண்டாயுத ஜோதியே
ஸ்கந்தகிரி மேலே ஸ்கந்தகிரி ஜோதி யானவனே
கடைக்கண்ணால் பார்த்திடப்பா கருணையுள்ள ஸ்கந்தகுரோ
ஏழையைக் காத்திடப்பா ஏத்துகிறேன் உன்நாமம்
உன்னையன்றி வேறொன்றை ஒருபோதும் நம்புகிலேன்

கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
கந்தனென்ற பேர்சொன்னால் கடிதாக நோய்தீரும்
புவனேஸ்வரி மைந்தா போற்றினேன் திருவடியை
திருவடியை நம்பினேன் திருவடி சாட்சியாக
புவனமாதா மைந்தனே புண்ணிய மூர்த்தியே கேள்
நின் நாமம் ஏத்துவதே நான் செய்யும் தவமாகும்

நாத்தழும் பேறவே ஏத்திடுவேன் நின்நாமம்
முருகா முருகா வென்றே மூச்செல்லாம் விட்டிடுவேன்
உள்ளும் புறமும் ஒரு முருகனையே காண்பேன்
அங்கிங்கெனாதபடி எங்குமே முருகனப்பா
முருகன் இலாவிட்டால் மூவுலக மேதப்பா
அப்பப்பா முருகனின் அருகே உலகமப்பா
அருளெல்லாம் முருகன்; அன்பெலாம் முருகன்
ஸ்தாவர ஜங்கமமாய் ஸ்கந்தனாய் அருவுருவாய்

முருகனாய் முதல்வனாய் ஆனவன் ஸ்கந்தகுரு
ஸ்கந்தாஸ்ரமமிருக்கும் ஸ்கந்தகுரு அடிபற்றிச்
சரணம் அடைந்தவர்கள் ஸாயுஜ்யம் பெற்றிடுவர்
சத்தியம் சொல்கிறேன் சந்தேகமில்லையப்பா
வேதங்கள் போற்றிடும் வடிவேலன் முருகனை நீ
சந்தேகமில்லாமல் சத்தியமாய் நம்பிடுவாய்
சத்தியமான தெய்வம் ஸ்கந்த குருநாதன்
சத்தியம் காணவே நீ சத்தியமாய் நம்பிடப்பா.

சத்தியம் வேறல்ல ஸ்கந்தகுரு வேறல்ல
ஸ்கந்தகுருவே சத்தியம்; சத்தியமே ஸ்கந்தகுரு
சத்தியமாய்ச் சொன்னதை சத்தியமாய் நம்பியே நீ
சத்தியமாய் ஞானமாய் சதானந்தமாகி விடு
அழிவற்ற பிரம்மமாய் ஆக்கிவிடுவான் முருகன்
திருமுறைகள் திருமறைகள் செப்புவதும் இதுவேதான்
ஸ்கந்தகுரு கவசமதைச் சொந்தமாக்கிக் கொண்டு நீ
பொருளுணர்ந்து ஏத்திடப்பா பொல்லாப்பு வினையகலும்

பிறவிப் பிணியகலும் பிரம்மானந்த முண்டு
இம்மையிலும் மறுமையிலும் இமையோருன்னைப் போற்றிடுவர்
மூவருமே முன்னிற்பர்; யாவருமே பூஜிப்பர்
அனுதினமும் கவசத்தை அன்புடன் ஏத்திடப்பா
சிரத்தா பக்தியுடன் சிந்தையொன்றிச் செப்பிடப்பா
கவலையகன்றிடுமே கந்தனருள் பொங்கிடுமே
பிறப்பும் இறப்பும் பிணிகளும் தொலைந்திடுமே
கந்தன் கவசமே கவசமென்று உணர்ந்திடுவாய்

கவசம் ஏத்துவீரேல் கலியை ஜயித்திடலாம்
கலியென்ற அரக்கனைக் கவசம் விரட்டிடுமே
சொன்னபடிச் செய்து சுகமடைவாய் மனமே நீ
ஸ்கந்தகுரு கவசத்தைக் கருத்தொன்றி ஏத்துவோர்க்கு
அஷ்ட ஐஸ்வர்யம் தரும்; அந்தமில்லா இன்பம் தரும்
ஆல்போல் தழைத்திடுவன்; அறுகுபோல் வேறோடிடுவன்
வாழையடி வாழையைப் போல் வம்சமதைப் பெற்றிடுவன்
பதினாறும் பெற்றுப் பல்லாண்டு வாழ்ந்திடுவன்
சாந்தியும் சௌக்யமும் ஸர்வமங்களமும் பெருகிடுமே
ஸ்கந்தகுரு கவசமிதை கருத்திறுத்தி ஏற்றுவீரேல்
கர்வம் காமக்ரோதம் கலிதோஷ மகற்றுவிக்கும்
முன்செய்த வினையகன்று முருகனருள் கிட்டிவிடும்
அறம்பொருள் இன்பம் வீடு அதிசுலபமாய் கிட்டும்
ஆசாரம் சீலமுடன் ஆதிநேம நிஷ்டையுடன்
கள்ளமிலா உளத்தோடு கந்தகுரு கவசந்தன்னை
சிரத்தா பக்தியுடன் சிவகுமரனை நினைத்துப்

பாராயணம் செய்வீரேல் பார்க்கலாம் கந்தனையும்
கந்தகுரு கவசமிதை மண்டலம் நிஷ்டையுடன்
பகலிரவு பாராமல் ஒருமனதாய் பகருவீரேல்
திருமுருகன் வேல்கொண்டு திக்குகள் தோறும் நின்று
காத்திடுவான் கந்தகுரு; கவலையில்லை நிச்சயமாய்
ஞான ஸ்கந்தனின் திருவடியை நம்பியே நீ
கந்தகுரு கவசந்தனை ஓதுவதே தவமெனவே
உணர்ந்துகொண்டு ஓதுவையேல் உனக்குப் பெரிதான

இகபர சுகமுண்டாம் என்னாளும் துன்பமில்லை
துன்பம் அகன்றுவிடும் தொந்தரவுகள் நீங்கிவிடும்
இன்பம் பெருகிவிடும்; இஷ்டசித்தி கூடிவிடும்
பிறவிப் பிணியகற்றி ப்ரம்மநிஷ்டையும் தந்து
காத்து ரக்ஷிக்கும் கந்தகுரு கவசமுமே
கவலையை விட்டு நீ கந்தகுரு கவசமிதை
இருந்த படியிருந்து ஏற்றிவிடு ஏற்றினால்
தெய்வங்கள் தேவர்கள் சித்தர்கள் பக்தர்கள்

போற்றிடுவர் ஏவலுமே புரிந்திடுவர் நிச்சயமாய்
ஸ்கந்தகுரு கவசம் சம்சயப் பேயோட்டும்
அஞ்ஞானமும் அகற்றி அருள் ஒளியும் காட்டும்
ஞான ஸ்கந்தகுரு நானென்று முன்நிற்பன்
உள்ளொளி யாயிருந்து உன்னில் அவனாகிடுவன்
தன்னில் உனைக்காட்டி உன்னில் தனைக்காட்டி
எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவன்
ஸ்கந்தஜோதியான கந்தன் கந்தகிரியிலிருந்து

தண்டாயுதம் தாங்கித் தருகிறான் காட்சியுமே
கந்தன் புகழ்பாடக் கந்தகிரி வாருமினே
கந்தகிரி வந்துநிதம் கண்டுய்மின் ஜகத்தீரே
கலிதோஷ மகற்றுவிக்கும் கந்தகுரு கவசமிதை
பாராயணம் செய்து பாரில் புகழ் பெறுமின்
ஸ்கந்தகுரு கவசபலன் பற்றறுத்துப் பரம் கொடுக்கும்
ஒருதரம் கவசமோதின் உள்ளழுக்குப் போகும்
இருதரம் ஏத்துவீரேல் எண்ணியதெல்லாம் கிட்டும்

மூன்றுதர மோதின் முன்னிற்பன் ஸ்கந்தகுரு
நான்குமுறை யோதி தினம் நல்லவரம் பெறுவீரே
ஐந்துமுறை தினமோதி பஞ்சாக்ஷரம் பெற்று
ஆறு முறையோதி ஆறுதலைப் பெற்றிடுவீர்
ஏழுமுறை தினமேத்தின் எல்லாம் வசமாகும்
எட்டுமுறை ஏத்தின் அட்டமா சித்தி கிட்டும்
ஒன்பது தரமோதின் மரண பயமொழியும்
பத்துத்தர மேத்தி நித்தம் பற்றறுத்து வாழ்வீரே

கன்னிமார் ஓடையில் நீராடி நீறுபூசிக்
கந்தகுரு கவசமோதி கந்தகிரி ஏறிவிட்டால்
முந்தை வினையெல்லாம் கந்தன் அகற்றிடுவான்
நிந்தைகள் நீங்கிவிடும் நிஷ்டையும் கைகூடும்
கன்னிமார் ஓடைநீரை கைகளிலே நீ எடுத்துக்
கந்தனென்ற மந்திரத்தைக் கண்மூடி உருவேற்றி
உச்சியிலும் தெளித்து உட்கொண்டு விட்டால் உன்
சித்தமலம் அகன்று சித்த சுத்தியும் கொடுக்கும்

கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலே
கண்டு வழிபட்டு கந்தகிரியேறிடுவீர்
கந்தகிரியேறி ஞான ஸ்கந்தகுரு கவசமிதை
பாராயணம் செய்துலகில் பாக்யமெலாம் பெற்றிடுவீர்.

அரோகரா…. அரோகரா அரோகரா…

கசடற கற்க – 89

பாசமலர் இதழுக்காக எழுதியது...
கசடற கற்க – 89
எப்போதெல்லாம் வாசிப்பைப் பற்றி ஆசிரியப் பயிற்சியில் கலந்துரையாடுகிறோமோ அப்போதெல்லாம் இந்தப் பிரச்சனையைப் பற்றி ஆசிரியர்கள் குறிப்பிடுவார்கள்.
எங்கள் வகுப்புக் குழந்தைகளுக்கு எல்லா எழுத்துகளும் தெரியும் ஆனால் வாசிப்பதில் ஆர்வம் இல்லை. இதைப் பற்றி நாங்கள் ஆழமாகக் கலந்துரையாடுவோம்.
முதலில் ஆர்வம் எப்போது தோன்றும். அப்படி ஆர்வம் தோன்ற வேண்டிய காரணம் என்ன, ஆர்வம் இல்லாவிட்டால் என்னாகும், கட்டாயப்படுத்தி ஒரு வேலையைச் செய்ய வைத்தால் என்ன பிரச்சனை என்னும் வினாக்களைக் கேட்போம்.
ஆர்வம் தோன்ற எத்தனையோ காரணங்களுண்டு. அவற்றில் வகுப்பறையில் ஆசிரியர்கள் பின்பற்றுவதற்கான ஒரு காரணத்தைப் பற்றி விவாதிப்போம். முதலில் அதைப் பார்ப்போம்.
நீங்கள் எதையாவது ஒன்றை மறைத்து வையுங்கள். குழந்தைகள் அது என்னவென்று தெரிந்துகொள்ள முன்வருவார்கள். ஒரு பொட்டலத்தோடு நீங்கள் வீட்டுக்குள் நுழைகிறீர்கள். குழந்தை அதைப்பார்த்தும் செய்யும் வேலையை நிறுத்திவைத்துவிட்டு ஓடி வரும் அல்லவா... அதுதான் ஆர்வம். மறைத்து வைப்பது, சற்றே காட்டி மறைப்பது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் கதையை நிறுத்துவது என்பதெல்லாம் குழந்தையின் ஆர்வத்தைத் தூண்டும். ஆனால்...
எப்போதும் பொட்டலத்தோடு வீட்டுக்குள் நுழைபவரா நீங்கள். அந்த ஆர்வம் இருக்காது. கதை சொல்லும்போது அடிக்கடி கேள்விக் கேட்டு புரிந்ததா புரிந்ததா என்ற முறையில் கதை சொல்பவரா நீங்கள் குழந்தைக்கு அவ்வளவு ஆர்வம் இருக்காது. ஒரு நாள் கதை சொல்லிவிட்டு அடுத்தநாள் அந்தக் கதையை நினைவுபடுத்தச் சொல்லி, பரிசோதித்து... என்ற அதிகப்படியான நம்பிக்கையற்றவரா நீங்கள். குழந்தை உங்கள் பக்கத்திற்கே வராது.
அப்படியானால் என்ன செய்வது.?
அது ஒரு சுகமான அனுபவமாக இருக்க வேண்டும். ஒருமுறை பொட்டலத்தோடு வந்தபோது குழந்தைக்கு விளையாட்டுப் பொருள் கிடைத்தது. வேறொருமுறை தின்பண்டம் கிடைத்தது... என்று பொட்டலம் சுகமான அனுபவத்தை நினைவுபடுத்தினால் ஆர்வம் கொப்பளிக்கும்.
இது குழந்தைகளின் இயல்பு. அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ளும் இயல்பு பிறவியிலேயே குழந்தைகளுக்குக் கிடைத்துள்ளது. தான் அழும் ஒவ்வொருமுறையும் அம்மாவின் அரவணைப்பு கிடைக்கிறது. பசி அடங்குகிறது. அதனால் அது அழுகிறது.
இப்போது வாசிப்புக்கு வருவோம்.
குழந்தை எழுத்துகளை அறிந்து கொண்ட அனுபவத்தை நினைத்துப் பாருங்கள்.
நன்றாகப் பேசத் தெரிந்த, ஒருநாள் முழுக்க நடந்த நிகழ்வுகளை, தன்னிடம் இருக்கும் சொற்பமான சொல்வளத்தை வைத்து மாலையில் வீடு திரும்பும் பெற்றோருக்குச் சொல்கிற குழந்தைதான் எல், கெ. ஜி வகுப்பில் இருக்கும் மூன்றரை வயதுக் குழந்தை. அந்தக் குழந்தையிடம் ப ப என்று கத்தச் சொல்கிறோம். கையைப் பிடித்து எழுத வைக்கிறோம். நான் எதற்காக இதை எழுதுகிறேன். எனக்கும் இந்த ப வுக்கும் என்ன தொடர்பு என்று எதுவும் தெரியாமல் ஆசிரியர் சொல்கிறார் என்பதற்காக எழுதுகிறது.
எழுதுவது என்பது எவ்வளவு சிரம்மான செயல் என்பதை உணர வேண்டுமா? உங்களை நீங்களே ஒரு கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள். கடந்த ஆறுமாதமாக நீங்கள் என்ன எழுதியிருக்கிறீர்கள்? புத்தகம் வாசித்திருப்பீர்கள், செய்திகள் கேட்டிருப்பீர்கள். நண்பர்களுடன் அரட்டை அடித்திருப்பீர்கள். ஆனால் எழுதியிருக்கிறீர்களா?
ஆம்... எழுத்து அனைத்து உறுப்புகளும், மனமும் இதயமும் ஒருங்கிணையும் ஒரு செயல்பாடு. ஆனால் நாம் இதையெல்லாம் யோசிக்காமல் பத்துக்குப் பத்து கட்டம் போட்ட குறிப்பேட்டில் எழுத வைக்கிறோம். கையைப் பிடித்து, அழுத்தி எழுத வைக்கிறோம். அந்த அனுபவம் குழந்தையின் மனத்தில் ஆழப்பதிகிறது. எழுதுவது எத்தனை கொடுமையானது என்று... அன்றிலிருந்து படிப்பை, பள்ளிக்கூடத்தை வெறுக்கத் தொடங்குகிறது.
இதையெல்லாம் யோசிக்காத பெற்றோர்களாகிய நாமோ ஆசிரியர்களிடம் பக்கத்துவீட்டுக் குழந்தை அ எழுதி விட்டது. ஏன் நீங்கள் எழுதச் சொல்லிக்கொடுக்கவில்லை? நிறைய எழுத்து வேலை கொடுங்க டீச்சர், எழுதினால்தான் மனத்தில் பதியும் (பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது ஆயிரக்கணக்கான குறிப்பேட்டுப் பக்கங்களை எழுதிக்குவித்தீர்களே அதெல்லாம் உங்கள் நினைவில் இருக்கிறதா?) மூன்றுமுறை எழுதச் சொன்னால் போதாது, குறைந்தது ஐந்துமுறை எழுதச் சொல்லுங்கள்.... என்றெல்லாம் ஆசிரியர்களிடம் சொல்கிறோம். ஆசிரியர்களும் எங்கே குழந்தையைப் பள்ளியை விட்டு நீக்கிவிடுவார்களோ என்று பயந்து நாம் சொல்வது போல் செயல்படுகிறார்கள். இருவருக்கும் இடையே பாவம் குழந்தை.
அப்படியானால் எழுத வேண்டாமா?
கீழ்வரும் பரிசோதனையைச் செய்து பாருங்கள். முன்னரே திட்டமிட்டு இச்செயல்பாட்டை நடத்துங்கள். மூன்று மூன்றரை வயதுள்ள குழந்தையின் பெற்றோர்களாக இருப்பின் மிகவும் நல்லது.
கணவனும் மனைவியும் குழந்தை இருக்கும் நேரம் பார்த்து ஒரு கதை சொல்லுங்கள். ஆனால் குழந்தையைப் பார்த்துச் சொல்லாதீர்கள். கணவனிடம் சொல்லுங்கள், நல்ல சுவையான திருப்பத்தில் ஐயோ... அடுப்பில் பால் வைத்திருக்கிறேனே என்றோ, நண்பரை அழைக்க மறந்துவிட்டேன் என்றோ சொல்லியபடி கதையை நிறுத்துங்கள். குழந்தை உங்களைத் தொடர்ந்து வந்து கதை சொல்லும்படி வற்புறுத்துகிறதா என்று கவனியுங்கள்.
நிறைய வெற்றுத்தாள்களும் பேனாவும் பென்சிலும் வண்ணப் பென்சிலும் எல்லாம் குழந்தையின் பார்வைபடும் இடத்தில் வையுங்கள். நீங்களும் எதையோ எழுதுங்கள். நீங்கள் வற்புறுத்தாமலே, அதுவாக வந்து தாளையும் பென்சிலையும் எடுக்கிறதா பாருங்கள். அப்படி வரும்போது உனக்காக நான் என்ன எழுதட்டும் என்று கேளுங்கள். குழந்தை எழுதச் சொல்லும் சொல்லை எழுதிக்காட்டுங்கள். என்ன நடக்கிறது என்று பாருங்கள்.
குழந்தைகள்... அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ளும் மிகப்பெரிய புத்திசாலிகள். நல்ல அனுபவங்களை அவர்களுக்குக் கொடுப்போம். மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தையால் மட்டுமே முழுத்திறமையோடு கற்றுக்கொள்ள முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
G. Rajendran
Director, Academics
Qrius Learning Initiatives, Coimbatore.