Thursday 27 June 2019

புதன் பற்றிய அரிய சூட்சுமம்

புதன் பற்றிய அரிய சூட்சுமம்
=========================
தேய்பிறை சந்திரன் அஷ்டமியிலிருந்து திரயோதசி வரை கொடும் பாவியாகிறார். அதனால்தான் தேய்பிறை அஷ்டமியிலிருந்து திரயோதசி வரை, நமது மனம் எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க பல தெய்வ வழிபாடுகளை முன்னோர்கள் முன்னெடுத்தனர். உதாரணமாக தேய்பிறை அஷ்டமி, ஏகாதேதி, பிரதோசம் (திரயோதசி), சிவராத்திரி என்ற வழிபாடுகள் சனாதனதர்மம் சொல்கிறது.
சந்திரனின் மகன் புதன். ஆகவே புதன் தனித்து செயல்படாமல் எப்போதும் சந்திரனின் நிலை சார்ந்து செய்படும் சார்புநிலை கிரகம். அதனால் மேற்கண்ட தேய்பிறை திதியில் பிறந்தவர்களுக்கு புதன் சற்று சுப மற்றும் அசுப தன்மை கலந்து செயல்படும். ஆதாவது அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதேசி, துவாதசி மற்றும் திரோயதசி திதியில் பிறந்த நபர்களின் ஜாதகத்தில் உள்ள புதன், அசுபதன்மை அதிகம் செயல்படுத்தும், அதாவது பொய் சொல்லுதல், சூழச்சி செய்தல், நண்பர்களை சுயநலத்திற்கு உபயோகம் செய்தல், நடித்தல், மோகம் அதிகம் செய்தல், சபலம், பிறர் துன்பத்தில் இன்பம் பெறுதல், நம்பி ஏமாறுதல், நம்ப வைத்து ஏமாற்றுதல், கூட்டு சதி செய்தல், மறைமுக வணிபம் செய்தல், பாலியல் வன்புணர்பு, ஓரினசேர்க்கை, காதல் தோல்வி போன்றவை தரும். பெரும்பாலும் முகநூலில் இருக்கும் FAKE ID இவர்கள் தான். ஒருவேளை இந்த புதன் மேல் குரு பார்வை அல்லது சேர்க்கை மேற்கண்ட அசுப தாக்கத்தை குறைக்குமே ஒழிய இல்லாமல் செய்யாது.
மேலும் புதன் வக்கிரம், உச்சம் அல்லது வக்ர அஸ்தங்கம், மஹா அஸ்தங்கமாகிவிட்டால், நிச்சயம் புதனின் உயிர் காரகத்துவங்களான நரம்பு, தோல், நாக்கு மற்றும் தாய்மாமனை பாதிக்கும். ஆனால் இத்தகைய ஜாதகர்கள் சிறந்த அறிவாளியாக, சிறந்த பேச்சாளர்களாகவும், அதீத சமயோஜித புத்தி, வாத திறமை, புதிய புதிய விசயங்களை சிந்தித்தல், பிரமாண்ட உபதேசம், பக்தி, கொள்கை பிடிப்பாகவும் காணப்படுவர்.
சுருக்கமாக சொல்ல, தேய்பிறை சந்திரனாகி புதன் பலம் பெற, அவர்கள் HACKERS போன்றவர்கள். அதீத அறிவாளிகள், சமயோஜித புத்தி கொண்டவர்கள், ஆனால் தன் அறிவை சூழச்சி செய்ய அதிகம் உபயோகிப்பார்.
இதற்கு உதாரணமாக மஹாபாரத கதாபாத்திரம் கிருஷ்ணனை கூறலாம், தேய்பிறை அஷ்டமியில் பிறந்த கிருஷ்ணன் செய்த பல சூழ்ச்சிகளை அறியலாம். அவருக்கு புதன் பலம் என்பதால் கீதை பற்றிய உபதேசமும் நமக்கு கிடைத்தது.
இந்த அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதேசி, துவாதசி மற்றும் திரோயதசி திதியில் பிறந்த நபர்கள், உணவு குறைவாக எடுத்துக்கொண்டு முன்னோர்கள் சொல்லி இருக்கும் காலபைரவ வழிபாடு, பிரதோச வழிபாடு மற்றும் சிவராத்திரி விரதம் கடைபிடித்தல் மிகவும் சிறப்பு.

அமாவாசை தின அபூர்வ ரகசியங்கள்

அமாவாசை !!
*“அமாவாசை தின அபூர்வ ரகசியங்கள்"*
அரசர்கள் அமாவாசையன்று விருந்து கொடுத்து ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் நடத்தியுள்ளனா்.
இந்த அமாவாசை தினம் அனேக மதங்களிலும் முக்கியத்துவத்தைப் பெற்றது.
இந்துக்களில் தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது.
அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது.
அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும்.
இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
அமாவாசையன்று விபத்துகள் கூடுதலாக ஏற்படுவதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.
அமாவாசைப் பிறவிகளில் அனேகருக்கு தலையில் இரண்டு சுழி இருப்பதை நானே கண்டிருக்கிறேன்.
சோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள் எனக் கூறுகின்றனா். அனேகா் அமாவாசையில் மோதிரம் செய்து போடுகின்றனா்.
சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது.
அதனால் அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனா். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனா்.
அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனா்.
முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை! இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்.
சாதாரணமாக இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தைப் புசிக்கும். அதுதான் அதற்கு உணவு. அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் இரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும்.
நம்மை யாராவது எண்ணுகிறார்களா? நமக்குத் தா்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும்.
நாமெல்லாம் இறந்த முன்னோர்களின் இரத்த சம்பந்தமான கொடி வழியைச் சோ்ந்தவா்கள். மேலும் அவா்கள் பாடுபட்டுத் தேடிய சொத்தை நாம் பாடுபடாமல் அனுபவிக்கிறோம்.
அமாவாசையன்று முன்னோர்களை நினைக்க நேரமில்லை. ஆனால் டி.வியில் கிரிக்கெட் பார்க்க நேரம் இருக்கிறது.
பசியால் அமாவாசையன்று வந்த பிதுா்கள் என்னும் நம் முன்னோர் ஆவிகள் நமக்குச் சாபம் இட்டுச் செல்லும். இப்படிப் பிதிர்கள் என்னும் ஆவிகள் இட்ட சாபம் நாளாவட்டத்தில் கூடும்.
பின்னா் நம் குடும்பத்தை நிச்சயம் பாதிக்கும்.
இதனால் குடும்பத்தில் அகால மரணங்கள், மனக்கோளாறுகள், கணவன் மனைவி பிரிவு, குழந்தை இல்லாமை ஆகியவை உண்டாகும்
. இதனை மந்திர யந்திர தந்திர சாதனங்களால் தீா்க்க முடியாது. அன்னதானம் செய்வதால் மட்டுமே தீா்க்கக் கூடியது.
வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் அன்று அன்னம் அளிக்கலாம். வள்ளலார் வலியுறுத்தும் ஜீவகாருண்யம் இதுதான்
!
அமாவாசை பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவா்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம்.
அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம்.
அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீா்த்மாகத் தெளிக்கலாம். அதனால் வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.
நமக்கு அன்னம் இடுபவள் அன்னபூரணி! ஆவிகளுக்கு அன்னம் இடுபவள் ஸ்வதா தேவி! நாம் ஆவிகளை நினைத்துக் கொடுக்கும் அன்னத்தை மற்றும் யாகத்தில் போடும் ஆவுதிகளை ஸ்வதா தேவிதான் சம்பந்தப்பட்ட ஆவிகளிடம் சோ்ப்பிக்கிறாள்.
உற்றார், உறவினா் தொடா்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசையன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச் சாப்பிடும். அதனால் அமாவாசையன்று மட்டும் மரம், செடி, கொடிகளையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடக்கூடாது. பறிக்கக் கூடாது.
ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவா்கள் தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும்.
புரட்டாசி அமாவாசையில் செய்தால் 12 ஆண்டுகளாக அன்னதானம் தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும்.
நகரங்களில் வசிப்பவா்கள் அமாவாசையன்று ஏழைக் குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவா்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும். இதர தானங்கள் தருவது அவரவா் வசதியைப் பொறுத்தது.
அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.
எதுவும் செய்ய முடியாமல் இருப்பவா்கள் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும். இதற்குச் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை.
முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொரு மனிதப் பிறவியும் இதைச் செய்ய வேண்டும். மாமிச ஆகாரம் தவிர்ப்பது பெரும் ஜீவகாருண்யமாகும்.
அமாவாசை சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். அமாவாசை தோறும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்களின் குடும்பம் அமைதி பெற்று, மென்மேலும் சிறந்து விளங்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது
. முன்னோர்கள் இறந்த தேதி தெரியாதவர்கள் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை தினங்களில் திதி, தர்ப்பணம் கொடுப்பது உகந்தது.
மூதாதையர்கள் உயிருடன் வாழ்ந்தபோது, அவர்களை சரிவர கவனிக்காததால், அவர்கள் அடையும் துன்பங்கள் யாவும், பாவத்தின் வடிவில் கவனிக்கத் தவறியவர்களை சேர்வதாக கூறப்படுகிறது.
பாவங்களில் பெரிய பாவம் பித்ருக்களின் கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பதுதான். நம்மை பெற்ற தாய், தந்தை, தாத்தா, பாட்டிகள் தான் ‘பித்ரு’க்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
பித்ருக்கள் மரணம் அடைந்த பிறகு ‘பித்ரு லோகம்’ சென்றடைகின்றனர். அவர்களின் ஆன்மா சாந்தியடைய, அவர்களுக்கு மறக்காமல் தர்ப்பண காரியங்களை நிறைவேற்ற வேண்டும்
. இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் சந்ததியினரை ஆசீர்வாதம் செய்வார்கள். தங்களின் சந்ததியருக்கு தேவையான பல உதவிகளை செய்வதுடன், அவர்களுக்கு வரும் கெடுதல்களை தடுத்து நிறுத்துவார்கள்.
‘ஒருவன் தனது தாய், தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல், எனக்கு செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக்கொள்வதில்லை’ என்று விஷ்ணு பகவான் கூறுவதில் இருந்தே இதன் முக்கியத்துவத்தை நாம் அறியலாம்.
பித்ரு லோகம் என்பது சூரியனுக்கு அப்பால், பல லட்சம் மைல் தொலைவில் இருப்பதாக கருடபுராணம் கூறுகிறது. பித்ருக்கள் அங்கிருந்து தங்கள் குடும்பத்தினர் நலமாகவும், வளமாகவும் வாழ அருளாசி வழங்குகின்றனர்.
அமாவாசை தினத்தன்று பித்ருக்களுக்கு பசியும், தாகமும் அதிகமாக இருக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவற்றை போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும்.
இதனால் மூதாதையர்களின் பசியும், தாகமும் விலகி சந்ததியரை வாழ்த்துவார்கள். அமாவாசையன்று தங்களுக்கு வழங்கப்படும் எள் தண்ணீரை பெற்றுக்கொள்வதற்காக, ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பித்ருக்கள் காத்து நின்று கொண்டிருப்பார்களாம்.
பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தை அமாவாசை சிறந்த நாளாகும். அன்று கடல், ஆறு, புண்ணிய நதிகள் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று இறந்த தாய், தந்தையர்களை நினைத்து திதி கொடுக்கலாம்.
தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், வேதாரண்யம், திருவையாறு போன்ற திருத்தலங்களும், வடமாநிலங்களில் காசி, திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களும் திதி கொடுப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது. அன்று சூரிய வழிபாடு செய்வது அவசியம்.
இறந்தவர்களின் நாள், தேதி தெரியாதவர்களும், வருடத்தின் 12 அமாவாசையன்றும் திதி கொடுக்க முடியாதவர்களும் தை, ஆடி, மகாளய அமாவாசை தினங்களில் திதி கொடுத்தால் ஆண்டுதோறும் திதி கொடுத்த பலனை அடையலாம்.
இந்நாளில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து பித்ருக்களின் தாகத்தை தீர்க்கவேண்டும்.
இவ்வாறு செய்தால் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி, அவர்களுக்கு முக்தி பேறு கிடைக்கும். அன்று ஏழை எளியவர்களுக்கு அன்னதானம், துணி தானம் செய்ய வேண்டும்.
மறைந்த தாய், தந்தை படங்களுக்கு மாலை அணிவித்து அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை படைத்து வணங்க வேண்டும். அன்று காகம் வடிவில் மூதாதையர்கள் வீட்டுக்கு வருவதாக ஐதீகம். அதனால் காகத்துக்கு உணவு அளிப்பதும் முக்கியம்.
வழிபடுவது எப்படி?
அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது.
மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை அறிந்து கொள்வது அவசியம்.
தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடகிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும்.
முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்துவிளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். தலை வாழை இலை படையல் போட்டு வணங்க வேண்டும். கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவிற்கு தானமாக வழங்கவேண்டும்.
பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்யலாம்.
செய்யக்கூடாதவை
அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. தர்ப்பணம் செய்யும் போது கறுப்பு எள்ளை மற்றவர் களிடம் இருந்து கடனாக வாங்கக்கூடாது.
நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதேபோல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும்.
அமாவாசையின் மகிமை
பிரதிமை முதல் அமாவாசை வரை மொத்தம் 15 திதிகள் இருக்கின்றன. இதில் அமாவாசை திதி முக்கியமானது. அன்று சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணையும் நாள்.
மற்ற திதிகளில் ஏதாவது ஒரு கிரகம் திதி, தோஷம் அடையும். ஆனால் அமாவாசையன்று எந்தக் கிரகமும் தோஷம் அடையாது. இதனால் அமாவாசையன்று சில செயல்களை தொடங்கினால் அது வெற்றி பெறும்.
ராகு, கேது மற்றும் பிற கிரகங்களால் ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வு காண அமாவாசையன்று பரிகாரம் செய்தால் சிறப்பான பலனைத் தரும். மேலும் மூத£தையர்களின் ஆசியும் கிடைக்கும்.
காகத்துக்கு சாதம் படைப்பது ஏன்?
அமாவாசை வழிப்பாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அன்று காகத்துக்கு சாதம் வைத்து அது சாப்பிட்ட பின்னரே உணவருந்தும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.
சனீஸ்வர பகவானின் வாகனமான காகம், எமலோகத்தின் வாசலில் இருப்பதாகவும், அது எமனின் தூதுவன் எனவும் கூறப்படுகிறது.
காகத்துக்கு சாதம் வைத்தால் எம லோகத்தில் வாழும் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. காகம் சாதத்தை எடுக்காவிட்டால் முன்னோர்களுக்கு ஏதோ மனக்குறை இருப்பதாக கருதுவது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
துயர் போக்கும் துளசி
பித்ருக்களுக்கு கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் மகாவிஷ்ணு. அவரை துளசி மாலை சாத்தி வழிபடுவது விசேஷம். அமாவாசையன்று பித்ருக்கள் வழிபாட்டின் போது, வீட்டில் முன்னோர்களின் படத்துக்கு துளசி மாலையோ, துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும். இது மகாவிஷ்ணுவை மகிழ்விக்கும். இதனால் பித்ருக்களுக்கு விஷ்ணுவின் ஆசி கிடைக்கும்.
அவர்கள் மகிழ்ச்சியில் தமது சந்ததியினரை வாழ்த்துவார்கள். அதன் மூலம் நமது துயர்நீங்கி வாழ்வில் சுபீட்சம் ஏற்படும். அமாவாசை அல்லது அமைவாதல் அல்லது மறைமதி என்பது சந்திரன்தோன்றாத அல்லது முழுவதும் மறைந்திருக்கும் நாளாகும்.
வானியலின்படி, பூமியைச் சுற்றிவருகின்ற சந்திரன் பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் வரும் நாளே அமைவாசை யாகும். சூரியனுடைய ஒளி சந்திரனில் பட்டுத் தெறிப்பதனாலேயே புவியிலிருந்து பார்ப்போருக்குச் சந்திரன் தெரிகிறது.
ஆனால் சந்திரன் புவிக்கும், சூரியனுக்கும் இடையில் இருக்கும்போது சூரிய ஒளி புவியிலிருந்து பார்ப்போருக்குத் தெரியாத சந்திரனின் பின்பகுதியில் விழுவதால் அது நமக்குத் தெரிவதில்லை. இந்த நிகழ்வின்போதே சில தருணங்களில் சந்திரன் சூரியனை மறைப்பதனால் சூரிய கிரகணமும் ஏற்படுகிறது.

தோஷம் நீங்க ஏற்ற வேண்டிய தீபங்கள்

1. ராகு தோஷம் - 21 தீபங்கள்
2. சனி தோஷம் - 9 தீபங்கள்
3. குரு தோஷம் - 33 தீபங்கள்
4. துர்க்கைக்கு - 9 தீபங்கள்
5. ஈஸ்வரனுக்கு - 11 தீபங்கள்
6. திருமண தோஷம் - 21 தீபங்கள்
7. புத்திர தோஷம் - 51 தீபங்கள்
8. சர்ப்ப தோஷம் - 48 தீபங்கள்
9. காலசர்ப்ப தோஷம்- 21 தீபங்கள்
10. களத்திர தோஷம் -108 தீபங்கள்
1. விநாயகர் - 1 அல்லது 3 முறை
2. கதிரவன் (சூரியன்) - 2 முறை
3. சிவபெருமான் - 3, 5, 7 முறை (ஒற்றைப்படை)
4. முருகன் - 3 முறை
5. தட்சினா மூர்த்தி - 3 முறை
6. சோமாஸ் சுந்தர் - 3 முறை
7. அம்பாள் - 4, 6, 8 முறை (இரட்டைப்படை)
8. விஷ்ணு - 4 முறை
9. இலக்குமி - 4 முறை
10. அரசமரம் - 7 முறை
11. அனுமான் - 11 அல்லது 16 முறை
12. நவக்கிரகம் - நவகிரகங்கள் நம்மை சுற்றுகின்றன அதனால் நாம் அவர்களை சுற்ற தேவையில்லை
13 பிராத்தனை - 108 முறை
* மூலவர் மற்றும் அம்மன் போன்ற திருவுருவங்களுக்கு அபிஷேகம் செய்யும்போது உட்பிரகாரத்தில் வலம் வரக்கூடாது.
* அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, சோமவாரம், சதுர்த்தி போன்ற நாட்களில் வில்வ இலை பறிக்கக்கூடாது. இதற்கு முந்தைய நாள் மாலையிலேயே இதைப் பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* மேலே துண்டு போட்டுக் கொண்டு சுவாமி தரிசனம் செய்யக்கூடாது.
...
* கொடி மரம், நந்தி, கோபுரம் இவற்றின் நிழலை மிதிக்கக்கூடாது.
* விளக்கில்லாதபோது இருட்டில் வணங்கக்கூடாது.
* தகாத வார்த்தை மற்றும் எதிர்மறை சொற்களை பேசக்கூடாது.
* கோவிலுக்குள் தூங்கிவிடக்கூடாது. கோவிலுக்குச் சென்று வீடு திரும்பியதும், கால்களைக் கழுவக்கூடாது.
பிரம்மா , விஷ்னு , சிவன் இம்மூவரை வணங்கும் போது , சிரசின் மேல் 12 அங்குலம் உயர்த்தி கைகூப்பி வணங்க வேண்டும்.
மற்ற தெய்வங்களை சிரசின் மேல் கைகூப்பி வணங்கினால் போதும்.
குருவை வணங்கும் போது , நெற்றியில் கைகூப்பி வணங்க வேண்டும்.
அரசரையும் , தகப்பனாரையும் வணங்கும் போது வாய்க்கு நேராக கைகூப்பி வணங்கவேண்டும்.
... பிராமணரை வணங்கும் போது மார்பில் கைகூப்பி வணங்க வேண்டும்.
தன்னுடைய தாயை வணங்கும் போது வயிற்றில் கைவைத்து வணங்க வேண்டும்.
மாதா, பிதா, குரு தெய்வங்களை வணங்கும் போது ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.பூமியில் நெடுஞசாண் கிடையாக வணங்க வேண்டும். ஆனால் பெண்கள் , மாதா , பிதா , குரு , தெய்வம் மற்றும் கணவனை வணங்கும் போது பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். பெண்களுடைய ஸ்தனங்கள் பூமியில் படக்கூடாது.

கிரந்தி தகரம் மூலிகை பயித்திய ரோகம்,சுவாச ரோகம் நீங்கும்

Cryptocoryne spiralis:கிரந்தி தகரம்,ஆற்று அதிவிடயம், തകരം;
இந்த கிரந்தி தகரம் மூலிகையை பல நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன்;மூலிகை கழஞ்சியம் என்ற புஸ்தகத்திலிருந்துகிடைத்த ஒரே ஒரு குறிப்பு ,இது ஆற்று ஓரங்களில் காணப்படும் என்பதாகும்;மற்றபடி இதன் தாவரவில் பெயரோ,படமோ எதும் கிடைக்க வில்லை;இறுதியாக சித்தா வைத்தியர் கந்த ரூபன் ஐய்யா அவர்களின் உதவி மூலம் கண்டுபிடிக்க முடிந்தது;அவர்களுக்கு நன்றி;
கிரந்தி தகரம் ஆற்றின் கரையோரங்களில் அல்ல ,ஆற்றின் உள்ளே பாறை இடுக்குகளில் வளரும் மூலிகை ஆகும்;பார்ப்பதற்கு புல்போல் காணப்படும்;பிடுங்கி பார்த்தால் நிலப்பனை கிழங்கு போல் சிறு சிறு கிழங்குகள் காணப்படும்;இந்த வேர்கிழங்குகள் தான் வெட்டு மருந்து கடைகளில் விற்க்கப்படுகிறது;பச்சை கிழங்கை மென்றால் வாயில் பயங்க ஊரல் உண்டாகும்;
மருத்துவ குணங்கள்:
1)கிரந்தி தகரத்தால் பயித்திய ரோகம்,சுவாச ரோகம்,வட்ட வட்டமாக எழும் படைகள்,புண்கள் ஒழியும்;
2)இதன் இலைகளுக்கு படை,ஊரல் இவைகளை குணப்படுத்தும் பண்பு உள்ளது;
3)இதன் வேர் கிழங்கு அல்லது கிழங்கின் சாறு இருமல்,காய்ச்சல்,வயிற்றுவலி,வயறு சம்பந்தப்பட்ட நோய்கள்,குமட்டல், குழந்தைக்கு ஏற்படும் வாந்தி முதலியவைகளை குணப்படுத்துகிறது.
4)மேலும் இது குறைந்த இரத்த அழுத்த நோயையும் சரிசெய்கிறது.
5)படர்தாமரைக்கு கிரந்தி தகரம், கடுக்காய் தோல்,இந்துப்பு,அறுகன்புல், கஞ்சாங்கோரை ஆகியவற்றை சம அளவு எடுத்து மோர் விட்டு அரைத்து பூச குணமாகும். Courtesy
Satheesh Krishna
Image may contain: plant, nature and outdoor

இயற்கை விவசாயத்தில் ஹோமியோபதி புரட்சி




இயற்கை விவசாயத்தில் ஹோமியோபதி புரட்சி
ஹோமியோபதி மருத்துவம் இயற்கை வழி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ஓர் வரப்பிரசாதம்
ஹோமியோபதி இயற்கையுடன் இயைந்த மருத்துவம், அது மண்ணுக்கும் ,பயிர்களுக்கும் எந்த கெடுதலையும் ஏற்படுத்தாது. மேலும் இயற்கையில் உள்ள அனைத்து உயிர்களுக்குமான மருத்துவம்,அதனால் கால்நடைகளுக்கும் அதனை கொடுக்கலாம், இன்றைய கலப்பட உலகில் மண்ணை பாழாக்கி வைத்துள்ளோம், மண்ணின் பழைய சக்தியை மீட்டெடுக்க ஹோமியோபதி விவசாயிக்கு உற்ற நண்பனாக திகழும்.
விவசாயிகளுக்கு பயனுள்ள சில குறிப்புகளை மொழிபெயர்த்து கொடுத்துள்ளோம் ,மேலும் விவரம் தேவைப்படுவோர் எங்களை அணுகலாம்.
இந்தக் கட்டுரையில் பரிந்துரைக்கப்படும் மருந்துகள் அனைத்தும், எல்லா ஹோமியோபதி மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். விலையும் மிகக் குறைவு. மருந்துகளை மிக குறைவாக பயன்படுத்தினாலே போதுமானது.அதனால் உரம்,பூச்சி மருந்து,களை நீக்கி மருந்து என்று என விவசாயிகளுக்கு செலவு இல்லை. இந்த செலவீனங்களை கட்டுப்படுத்தினாலே விவசாயம் லாபம் கொழிக்கும் தொழிலாக மாறிவிடும். உரத்திற்காகவும், பூச்சி மருந்துக்காகவும் வங்கிகளில் கடன் வாங்க வேண்டிய தேவை இராது, விவசாயம் பொய்த்துப்போகாது.விவசாயத்தை விட்டு புலம் பெயர்ந்து மாநகரங்களில் அகதிகளாக திரியத் தேவையில்லை.
மண்ணை நம்பினோர் கைவிடப்படார். மண்ணை பாழ்படுத்தாமல் விவசாயம் செய்தால்.
விவசாய பூமியை காப்பாற்ற உற்ற தோழன் ஹோமியோபதியே.
ஹோமியோபதி மருந்துகள் பயன்படுத்தும் முறை:
பயிர்களுக்கு தேவையான பொருத்தமான மருந்தை திரவ வடிவில் (DILUTION) அல்லது இனிப்பு உருண்டை வடிவில் (GLOBULES) வாங்கி வைத்துக் கொள்ளவும். 10 லிட்டர் தண்ணீருக்கு 5 சொட்டு அல்லது 5 உருண்டைகள் போட்டு நன்றாக கலக்கவும், குச்சியோ அல்லது கரண்டியோ கொண்டு நன்கு ½ மணி நேரம் கலக்கவும். கலக்கியபின் தெளிப்பான் உதவியுடன் பயிர்களுக்கு தெளிக்கலாம்;அல்லது சொட்டுநீர்ப்பாசானமாக இருந்தால் பாசான நீரில் கலந்து விடலாம். மரப்பயிர்களுக்கு வேரில் படும்படி மருந்து கலந்த நீரை பாய்ச்சினால் போதுமானது.
மருந்து ஒரு முறை தெளித்தால் அல்லது நீரில் பாய்ச்சினால் போதுமானது, பயிரின் நிலைமையை பொறுத்து இரண்டு அல்லது மூன்று முறை கொடுக்கலாம்.
பயிரின் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டால் மீண்டும் மருந்து கொடுக்க வேண்டிய அவசியமில்லை; முன்னேற்றம் ஏற்படாதபட்சத்தில் மீண்டும் அதன் அறிகுறிகளை உற்று கவனித்து அதற்கு பொருத்தமான மருந்தை தேர்வு செய்து கொடுக்க வேண்டி வரலாம்
செடிகளுக்கு வரும் ஆலைப்பேன் Plant Lice
பயிர்களுக்கு வரும் முக்கியமான பேன் போன்ற பூச்சிகள் தான் அவை ஒருமாதிரி பிசுபிசுவென இலைகளை ஆக்கி மாவு போன்ற பொருளை சுரந்து பயிர்த்தண்டை பாழாக்கி விடும். இவற்றுக்கு அவற்றின் அறிகுறிகளின் அடிப்படையில் ஹோமியோபதியில் சிறப்பான நிவாரணிகள் உள்ளன.
• பேன் தொல்லையுடன் இலை சுருண்டு போதல்,/பூ சுருண்டு போதல், ஒட்டக்கூடிய வகையான சுரப்புகள் உள்ள நோய்த் தன்மைக்கு (rolled up leaves/ flowers, sticky secretions) சிமிசிபுகா (Cimicifuga) ஓர் அருமையான மருந்து.
• பேன் தொல்லையுடன் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட(அதாவது பராமரிக்காமல் அல்லது தண்ணீர் விடாமல் விடப்பட்ட) அல்லது அதிக உரமூட்டப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயிர்கள் அல்லது தாவரங்களுக்கு நேட்ரம் குளோரேட்டம் (for neglect or over-fertilization)--Natrium chloratum
• பேன் தொல்லையுடன் பலவீனமான குறுகிய ,குள்ளமான ,வளராத, குளிர்ச்சியை தாங்க முடியாத அல்லது குளிர்ச்சியால் நோயுறக்கூடிய தாவரங்களுக்கு (weak, puny plant sensitive to the cold)சோரினம் (Psorinum
• பேன் தொல்லைக்கு மிக முக்கியமான மருந்து அதனுடன் காயங்களாலோ,அடிபட்டதாலோ பலவீனமடைந்த தாவரங்களுக்கு(plant weakened by injury) ஸ்டாபிசாக்ரியா Staphysagria
ஒருமுறை என் மருத்துவ வகுப்பில் வெள்ளைப்பேன் பிடித்த காய்க்காத கொய்யாமரத்திற்கு staphysagria போட்டால் நன்றாக காய்க்கும் என்று வகுப்பில் சொன்னார். அதை ஞாபகத்தில் வைத்து என் வீட்டில் காய்க்காமல் இருந்த கொய்யாமரம்,எலுமிச்சை மரம்,முருங்கை மரம், கத்திரிச்செடி என சகட்டுமேனிக்கு அனைத்திற்கும் staphy கரைசலை தெளித்ததில் அனைத்தும் காய்த்துக் குலுங்கின.எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பயங்கர ஆச்சரியம்.
staphy யின்  விளைச்சலுக்கு பிறகு எங்கள் வீட்டில் “அந்த செடிக்கு போடற மருந்த கொடுங்க” என கேட்டு என்னிடம் கேட்காமலே செடியோ மரமோ காய்க்காமல் இருந்தால் staphy30 5 உருண்டைகளை ஒரு வாளி தண்ணீரில் கலந்து தெளித்துவிடுவார்கள், இது வரை எங்கள் வீட்டு மரத்திற்கோ செடிக்கோ வேறு மருந்து தேவைப்படவில்லை.
சிறு சிலந்திப்பூச்சிகள் Spider Mites
• சிறுசிறு சிலந்தி போன்ற பூச்சிகள் மற்றும் குளிர்ச்சியால் பலவீனமடையும் தாவரங்கள்,வீட்டு வளர்ப்பு தாவரங்கள்: சூடான, வறண்ட காற்று, வெளிச்சமின்மை இதனால் பாதிக்கப்பட்டிருந்தால் (outdoor:weakness after the cold, indoor: warm, dry air, lack of light) – பெட்ரோலியம்
• சிறுசிறு சிலந்தி போன்ற பூச்சிகள் மற்றும் குறுகிய ,குள்ளமான ,வளராத, குளிர்ச்சியை தாங்க முடியாத அல்லது குளிர்ச்சியால் நோயுறக்கூடிய தாவரங்கள். (weak, puny plants sensitive to the cold)-- Psorinum
* சிறுசிறு சிலந்தி போன்ற பூச்சிகள் மற்றும் குளிர்ச்சியால் பாதிக்கப்படக்கூடிய தாவரங்கள், தண்ணீர் உறிஞ்சக்கூடிய தாவரங்கள், தண்ணீர் உறிஞ்சுவதில் பிரச்சனை இருக்குமானால் (sensitive to the cold, thirsty plant with problems Absorbing water)-- Sulphur இது அருமருந்து.
Whiteflies –வெண்பூச்சிகள்/ஈக்கள்
• வெண்பூச்சிகள் மற்றும் குறுகிய ,குள்ளமான ,வளராத, குளிர்ச்சியை தாங்க முடியாத அல்லது குளிர்ச்சியால் நோயுறக்கூடிய தாவரங்களுக்கு . (weak, puny plants sensitive to the cold)--- Psorinum
• வெண்பூச்சிகள் மற்றும் குளிர்ச்சியால் பாதிக்கப்படக்கூடிய தாவரங்கள், தண்ணீர் உறிஞ்சக்கூடிய தாவரங்கள், தண்ணீர் உறிஞ்சுவதில் பிரச்சனை இருக்குமானால் இது அருமருந்து. (sensitive to the cold, thirsty plant with problems absorbing water)
• நத்தைகள் தோட்டங்களில் அதிகமாக காணப்பட்டால் அது செடிகளை பாதிக்குமானால் Helix tosta (put the remedy in water and pour it over the ground) வீரியப்படுத்தப்பட்ட இந்த நத்தை மருந்தை தண்ணீரில் கலந்து நிலத்தில் பாய விட்டால்/ ஊற்றினால் நத்தைத் தொல்லை குறையும்,
Brown Rot பழுப்பு அழுகல்
• மஞ்சளும் பழுப்புமான இலைகள், கருப்பு பூஞ்சை புள்ளிகள்,குளிர்ச்சி ஆகாமை (yellowish-brown leaves, black
fungal spots, sensitive to the cold)-- Carbo vegetabilis
• பழுப்பு இலைகள், ஈரத்தின் விளைவு (brown leaves, result of wetness) --- Cuprum metallicum 30 CH
மழை நீண்டகாலமாக பெய்ததின் விளைவு,ஈரப்பதமான தட்பவெப்பம் இதனுடன் பழுப்பு அழுகல்
(result of long periods of rain with humid weather)--- Natrium sulphuricum
• மழை நீண்டகாலமாக பெய்ததின் விளைவு, இதனுடன் பழுப்பு அழுகல் (result of long periods of rain with cold weather) ---Thuja
வெப்பு நோய் (கருகல்) ,வெண் சாம்பல் நிற அடுக்குகள் இலையின் மேற்பரப்பில் இருந்தால் Blight (grey-whitish layer on the leaf surface)
• வெப்பு நோய் ,வெண்மை நிற அடுக்குகள் இலையின் மேற்பரப்பில் இருந்தால் (white layer on the leaf surface) -- Cuprum Metallicum
• வெப்பு நோய் ,வெண் சாம்பல் நிற அடுக்குகள் இலையின் மேற்பரப்பில் இருந்தால் அதுவும் ஈரக்கசிவான மிதவெப்ப பருவகாலங்களில் இருந்தால். (after humid warm weather) ---Natrium sulphuricum
வெப்பு நோய் ,வெண் சாம்பல் நிற அடுக்குகள் இலையின் மேற்பரப்பில் இருந்தால் அதுவும் மழைக்காலங்களில், கோடைக்காலங்களில் (rainy spring and summer) ---Thuja
பசுமை போர்த்தியது போன்ற பூஞ்சைக்காளான் ( சாம்பல் நிறமாகவோ அல்லது சாம்பலும் கருஞ்சிவப்பு ஊதா நிறமும் கலந்த நிறப்போர்வை போன்ற காளான் இலையின் அடிப்பரப்பில் இருந்தால்) Lettuce Downy Mildew
(grey to greyish-purple layer on the leaf’s underside)
• பசுமை போர்த்தியது போன்ற பூஞ்சைக்காளான் ( சாம்பல் நிறமாகவோ அல்லது சாம்பலும் கருஞ்சிவப்பு ஊதா நிறமும் கலந்த நிறப்போர்வை போன்ற காளான் இலையின் அடிப்பரப்பில் இருந்தால் அதுவும் நிறைய மழை பெய்தபிறகு. (after lots of rain) -- Cuprum Metallicum
• பசுமை போர்த்தியது போன்ற பூஞ்சைக்காளான் ( சாம்பல் நிறமாகவோ அல்லது சாம்பலும் கருஞ்சிவப்பு ஊதா நிறமும் கலந்த நிறப்போர்வை போன்ற காளான் இலையின் அடிப்பரப்பில் இருந்தால் அதுவும் மழை பெய்தபிறகு ஈரக்கசிவான மிதவெப்ப பருவகாலங்களில் இருந்தால். (after rain with humid warm weather) ---- Natrium sulphuricum
• மழை நீண்டகாலமாக பெய்ததின் விளைவாக இருந்தால் (after long periods of rain)-- Thuja
• சூட்டினாலோ அல்லது குளிர்ச்சியை தொடர்ந்து வரும் சூட்டினால் கருகல் நோய் வந்தால் (in the heat or cold followed by heat) --- Sulphur
இலை கருகல் நோய்,இலையில் கரும்புள்ளி நோய் Black Spot Disease
(black, star-shaped spots on green leaves)
• நிறைய மழை பெய்தபிறகு இலை கருகினால்
(after lots of rain) --- Carbo vegetabilis ,Cuprum metallicum
• மழைக்கு பிறகு ஈரப்பதமான மித வெப்ப பருவத்தில் இலை கருகினால்
(after rain with humid warm weather) -- Natrium sulphuricum
• குளிர்ச்சியான ஈரப்பருவம், அதிக நசநச ஈரக்கசிவு காலங்களில் இலை கருகினால்
(after damp cold weather, high humidity) -- Thuja
• குளிர்ச்சியான, ஈரமான தட்ப வெப்பத்திற்கு பிறகு இலை கருகினால்
(after cold, wet weather) Rhus toxicodendron
இலைப்புள்ளி நோய் Leaf Spot Disease
• இலைப்புள்ளிகளுடன் சிறுசிறு மூட்டுப்பூச்சிகளும் இருந்தால் ஈரப்பருவங்களில்
(bugs and wet weather) -- Lycopodium
• இலைப்புள்ளி நோய் குளிர்ச்சியான, பனிப்பருவங்களில்
(after cold, damp weather) -- Rhus toxicodendron
குறிப்பு:
மேலே குறிப்பிட்ட மருந்துகளை 30வது வீரியத்தில் வாங்கி பயன்படுத்தவும். சந்தேகம் இருப்பின் அழையுங்கள்
சங்கம் பாலசுப்ரமணியன்
9994653396
Image may contain: plant and text