Wednesday 13 April 2022

கடக ரேகை மற்றும் மகர ரேகை பற்றி பார்ப்போம்

கடக ரேகை மற்றும் மகர ரேகை பற்றி விரிவாக காண்பதற்கு முன்பு, அட்ச ரேகைகள் மற்றும் தீர்க்க ரேகைகள் பற்றி முதலில் காண்போம்.


கணிதத்தில், ஒரு வரைபடத்தில் (2D Graph) ஒரு புள்ளியின் இடத்தைக் குறிப்பிட்டு காட்டுவதற்கு அந்த புள்ளி X அச்சில் இருந்து இவ்வளவு தூரம், Y அச்சில் இருந்து இவ்வளவு தூரம் எனக் கூறுவோம். அதை (X, Y) எனக் குறிப்பிடுவோம்.
அதைப்போல, நமது புவியில் உள்ள ஒரு ஊரின் அல்லது ஒரு பகுதியின் சரியான இடத்தைக் குறிப்பிட அட்ச ரேகைகளையும் தீர்க்க ரேகைகளையும் பயன்படுத்துகின்றோம். இவை புவியின் மீது கற்பனையாக வரையப்பட்ட கோடுகள் ஆகும்.
புவிக்கோளத்தில் மேலிருந்து கீழாக அல்லது வடக்கில் இருந்து தெற்காக கற்பனையாக வரையப்பட்டுள்ள கோடுகள் தீர்க்க ரேகைகள் (Longitude) எனவும், இடமிருந்து வலமாக அல்லது கிழக்கில் இருந்து மேற்காக கற்பனையாக வரையப்பட்டுள்ள கோடுகள் அட்ச ரேகைகள் (Latitude) எனவும் அழைக்கப்படுகிறது

படம்: தீர்க்க (Longitude) ரேகைகள் மற்றும் அட்ச (Latitude) ரேகைகள்
புவி ஒரே சமதளமாக இல்லாமல், கோள வடிவத்தை பெற்றிருப்பதால், வரைபடத்தில் (2D Graph) முழு எண்களுக்கு பதிலாக பாகைகளும் (Degree), அவற்றின் +, - களுக்கு பதிலாக 0 பாகை கோட்டில் இருந்து அவற்றின் திசையும் பயன்படுத்தப்படுகிறது.
0 பாகை தீர்க்க ரேகை (Prime Meridian) புவியை கிழக்கு அரைக்கோளம், மேற்கு அரைக்கோளம் என இரண்டாக பிரிக்கிறது. அவை ஒவ்வொன்றும் 180 பாகைகள் என மொத்தம் 360 பாகைகளாக பகுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 0 பாகை அட்ச ரேகை புவியை வடக்கு அரைக்கோளம், தெற்கு அரைக்கோளம் என இரண்டாக பிரிக்கிறது. அவை ஒவ்வொன்றும் 90 பாகைகளாக பகுக்கப்பட்டுள்ளது.
ஒரு இடத்தின் தீர்க்க, அட்ச ரேகைகளின் பாகை மதிப்பு மற்றும் திசையை வைத்து, புவிக்கோளத்தில் அதன் சரியான இருப்பிடத்தை கணிக்கலாம்.
எடுத்துக்காட்டாக, சென்னை நகரம் 13.09 பாகை வடக்கு அட்ச ரேகையும் 80.27 பாகை கிழக்கு தீர்க்க ரேகையும் இணையும் இடத்தில் உள்ளது.
அடுத்ததாக, முக்கியமான அட்ச ரேகைகள் பற்றி பார்ப்போம்.

90 பாகை வடக்கு அட்ச ரேகை வட துருவம் எனவும், 90 பாகை தெற்கு அட்ச ரேகை தென் துருவம் எனவும் அழைக்கப்படுகிறது. இவற்றை தவிர மற்ற அனைத்து அட்ச ரேகைகளும் வட்ட வடிவம் கொண்டவை.
0 பாகை அட்ச ரேகை நிலநடுக்கோடு (Equator) என அழைக்கப்படுகிறது.
66.5 பாகை வடக்கு அட்ச ரேகை ஆர்க்டிக் வட்டம் எனவும், 66.5 பாகை தெற்கு அட்ச ரேகை அண்டார்க்டிக் வட்டம் எனவும் அழைக்கப்படுகிறது. இவை முறையே வட மற்றும் தென் துருவத்தில் இருந்து 23.5 பாகை தொலைவில் உள்ளன.
23.5 பாகை வடக்கு அட்ச ரேகை கடக ரேகை (Tropic of Cancer) எனவும், 23.5 பாகை தெற்கு அட்ச ரேகை மகர ரேகை (Tropic of Capricorn) எனவும் அழைக்கப்படுகிறது.
நமது புவி 23.5 பாகை சாய்ந்தவாறே தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவருகிறது என்பது நாம் அறிந்ததே.
ஒருவேளை புவிக்கோளம் 23.5 பாகை சாயாமல் சரியாக சுற்றிவந்துக்கொண்டிருந்தால் புவியின் மேற்பரப்பில் நிலநடுக்கோடு கடந்து செல்லும் பகுதியில் மட்டுமே வருடம் முழுவதும் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக (Perpendicular) விழுந்திருக்கும்.


நிலநடுக்கோடு பகுதியில் இருந்து வடக்கு அல்லது தெற்கு திசை நோக்கி செல்லச் செல்ல மேற்பரப்புக்கும் சூரிய கதிர்களுக்கும் இடையேயான சாய்வுக்கோணம் குறைந்து கொண்டே செல்லும். புவியில் பருவகால (Season) மாற்றங்களும் நிகழ்ந்திருக்காது.
நிலநடுக்கோட்டிற்கு அருகாமையில் உள்ள பகுதிகள் வருடம் முழுவதும் கோடை காலத்தையும், மற்ற பகுதிகள் வருடம் முழுவதும் குளிர் காலத்தையும் பெற்றிருக்கும்.
இவ்வாறு இல்லாமல் புவி 23.5 பாகை சாய்ந்தவாறே சூரியனை சுற்றி வருவதால் புவியின் மேற்பரப்பில் சூரியக் கதிர்கள் செங்குத்தாக (Perpendicular) விழும் இடம் வருடம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சீராக மாறிக்கொண்டே இருக்கிறது.
புவியின் சுற்றுப்பாதையின் தொடக்கத்தில், பொதுவாக மார்ச் 21 இல், சூரியக் கதிர்கள் நிலநடுக்கோடு கடந்து செல்லும் பகுதியில் செங்குத்தாக விழும். பின்னர் புவியின் சுழற்ச்சியினால் (Revolution) தினமும் சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழும் இடம் நிலநடுக்கோட்டில் இருந்து வடக்கு திசை நோக்கி நகர்கிறது. மூன்று மாதங்களுக்கு பின்னர், ஒரு குறிப்பிட்ட தூரம் வரை சென்ற பின் மீன்டும் தெற்கு திசை நோக்கி திரும்புகிறது. இவ்வாறு சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழும் இடம் நகர்ந்துகொண்டிருக்கும் திசை மாறுவதை கதிர்திருப்பம் (Solstice) என்கிறோம். புவிக்கோளத்தில் இந்த கதிர்திருப்பம் நடைபெறும் இடத்தைத்தான் கடக ரேகை (Tropic of Cancer) என்கிறோம்.

பொதுவாக, ஜூன் 21 ஆம் தேதி இந்த கதிர்திருப்பம் நடைபெறும். இதனை கோடைகாலக் கதிர்திருப்பம் (Summer Solstice) என அழைக்கின்றோம். அன்று பகல் பொழுதில், புவியில் கடக ரேகை கடந்து செல்லும் பகுதிகளில் சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழும். அந்த நாளில், வட அரைக்கோளம் நீண்ட பகல்பொழுதையும், தென் அரைக்கோளம் நீண்ட இரவுபொழுதையும் கொண்டிருக்கும்.


படம்: கோடைகாலக் கதிர்திருப்பம் (ஜூன் 21)
கோடைகால கதிர்திருப்பம் நடந்தபின் சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழும் இடம் தெற்கு நோக்கி நகர்கிறது. மூன்று மாதத்திற்கு பின்னர், பொதுவாக செப்டம்பர் 23 இல், மீன்டும் சூரியக்கதிர்கள் நிலநடுக்கோடு கடந்து செல்லும் பகுதியில் செங்குத்தாக விழும்.
பின்னர் மீன்டும் தெற்கு திசை நோக்கி நகர்ந்து தெற்கு அரைக்கோளத்திருக்குள் நுழையும். மூன்று மாதங்களுக்கு பின்னர், ஒரு குறிப்பிட்ட தூரம் வரை சென்றபின்னர் மீன்டும் வடக்கு திசை நோக்கி திரும்பும். இவ்வாறு கதிர்திருப்பம் நடைபெறும் இடத்தைத்தான் மகர ரேகை (Tropic of Capricorn) என்கிறோம்.
இந்த கதிர் திருப்பத்தை குளிர்காலக் கதிர்திருப்பம் (Winter Solstice) என அழைக்கின்றோம். பொதுவாக, டிசம்பர் 22 ஆம் தேதி இந்த கதிர்திருப்பம் நடைபெறும். அன்று மகர ரேகை கடந்து செல்லும் பகுதிகளில் சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழும். இச்சமயத்தில் தென் அரைக்கோளம் நீண்ட பகல்பொழுதையும், வட அரைக்கோளம் நீண்ட இரவுபொழுதையும் கொண்டிருக்கும்.

படம்: குளிர்காலக் கதிர்திருப்பம் (டிசம்பர் 22)
குளிர்கால கதிர் திருப்பத்திற்கு பின் சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழும் இடம் வடக்கு நோக்கி நகர்ந்து, மூன்று மாததிற்கு பின்னர் திரும்பவும் மார்ச் 21 இல், மீன்டும் நிலநடுக்கோடு பகுதிக்கு செல்லும். இந்த சுழற்சி ஒவ்வொரு வருடமும் மீன்டும் மீன்டும் நடைபெறும்.


படம்: புவியின் சுற்றுப் பாதை
ஒவ்வொரு வருடமும், பொதுவாக மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23 இல் சூரியக் கதிர்கள் நிலநடுக்கோட்டு பகுதியில் செங்குத்தாக விழுவதால், அந்த நாட்களில் புவியின் அனைத்து பகுதிகளிலும் பகல் மற்றும் இரவு பொழுதுகள் சமமாக இருக்கும். இந்த நாட்கள், சமப் பகலிரவு நாட்கள் (Equinox) என அழைக்கப்படுகின்றன.

படம்: சமப் பகலிரவு நாட்கள் (மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23)
புவிக்கோளத்தில் கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதிகள் மட்டுமே சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழும் வாய்ப்பை பெற்றிருக்கின்றது. அந்த இடங்களில் வருடத்திற்கு குறைந்தது ஒரு முறையாவது சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழும். இப்பகுதி சூரியனிடமிருந்து அதிக வெப்பத்தை பெறுவதால், வெப்பமண்டலப் பகுதி (Torrid zone) என அழைக்கப்படுகிறது.

படம்: வெப்பமண்டலப் பகுதி
அடுத்ததாக, புவியில் நாம் தற்போது வசிக்கும் பகுதியில் ஏதாவது ஒரு நாளில், சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழுந்தால் என்ன நடக்கும் என்று பார்ப்போம்.


படம்: சூரியனின் செங்குத்தான மற்றும் சாய்வான கதிர்கள்
தினமும் காலை சூரியன் கிழக்கில் உதிக்கும் என்று கூறினாலும் வருடத்தின் பெரும்பாலான நாட்கள் மிகச்சரியாக கிழக்கு திசையில் உதிக்காது. சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழும் இடத்தில், அந்த நாளின் காலையில் சூரியன் மிகச்சரியாக கிழக்கு திசையில் உதிக்கும். அன்று நன்பகல் சூரியன் நமக்கு துல்லியமாக செங்குத்துத்தாக கடந்து செல்லும். இந்த நாளைத்தான் நிழலில்லா நாள் (Zero Shadow Day) என்கிறோம்.
மகர ரேகைக்கும் கடக ரேகைக்கும் இடைப்பட்ட பகுதிகளில் மட்டுமே நிழலில்லா நாளை காணமுடியும். நமது சென்னையில் ஒவ்வொரு வருடமும் பொதுவாக ஏப்ரல் 24 மற்றும் ஆகஸ்ட் 18 இல் சூரியக் கதிர்கள் செங்குத்தாக கடந்து செல்வதால் நிழலில்லா நாளைக் காண முடியும். மேலும், நமது புதுடெல்லி நகரம் கடக ரேகைக்கு வடக்கே உள்ளதால் அங்கு சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழ வாய்ப்பே இல்லை. மேலும் அங்கு நிழலில்லா நாளை காண வாய்ப்பே இல்லை.
இப்பொழுது, 22.5 பாகை வடக்கு அட்ச ரேகை, கடக ரேகை எனவும் 22.5 பாகை தெற்கு அட்ச ரேகை மகர ரேகை எனவும் ஏன் அழைக்கப்படுகிறது எனப் பார்ப்போம்.


வானியலாளர்கள் புவியின் இரவுவானில் தோன்றும் விண்மீன்களை பல தொகுதிகளாக பிரித்து அவற்றின் உருவத்திற்கு ஏற்ற பெயர்களை சூட்டியுள்ளனர்.
கடக விண்மீன் தொகுதி, மகர விண்மீன் தொகுதி, தனுசு விண்மீன் தொகுதி என, இதுவரை மொத்தம் 88 விண்மீன் தொகுதிகள் (Constellation) பெயரிடப்பட்டுள்ளன.
நம் புவியில் இருந்து பார்க்கையில் நமது சூரியனும் ஒரு விண்மீன் தொகுதியில் ஒரு அங்கமாக இருப்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்படும். பூமியின் சுழ்ற்ச்சியினால் சூரியன் வருடம் முழுவதும் வேறு வேறு விண்மீன்கள் தொகுதிக்கு மாறிக்கொண்டிருப்பது போன்ற தோற்றம் ஏற்படும். இவ்வாறு சூரியன் ஒவ்வொரு வருடமும் 13 விண்மீன் தொகுதிகளை கடந்து செல்வது போல தோன்றும்.

படம்: சூரியன் கடந்து செல்லும் விண்மீன் தொகுதிகள்
2000 ஆண்டுகளுக்கு முன்பே, அப்போதிருந்த வானியலாளர்கள், சூரியக் கதிர்களின் திசைகளையும், விண்மீன் தொகுதிகளில் சூரியனின் இருப்பிடத்தையும் கணித்து, 22.5 பாகை வடக்கு அட்ச ரேகை மற்றும் 22.5 பாகை தெற்கு அட்ச ரேகை ஆகியவற்றிற்கு முறையே கடக ரேகை மற்றும் மகர ரேகை என பெயரிட்டனர்.
கோடைகாலக் கதிர்திருப்பம் நடைபெறும்போது, சூரியன் கடக (Cancer) விண்மீன் கூட்டத்தின் அருகில் இருப்பதுபோல் தோன்றியதால், அந்த சமயத்தில் சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழுந்த பகுதியை, கடக ரேகை எனப் பெயரிட்டனர்.
அதைப்போல குளிர்கால கதிர்திருப்பம் நடைபெறும்போது, சூரியன் மகர (Capricorn) விண்மீன் கூட்டத்தின் அருகில் இருப்பதுபோல் தோன்றியதால், அந்த சமயத்தில் சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழுந்த பகுதியை, மகர ரேகை எனப் பெயரிட்டனர்.
ஆனால், தற்போது கோடைகாலக் கதிர் திருப்பம் மற்றும் குளிர்காலக் கதிர் திருப்பம் நடைபெறும்போது சூரியன் முறையே கடக விண்மீன் கூட்டம் மற்றும் மகர விண்மீன் கூட்டத்தில் இருப்பதுபோல் தோன்றுவதில்லை

கடந்த 2000 ஆண்டுகளாக புவியின் சுற்றுவட்ட பாதையில் ஏற்பட்ட சிறு மாற்றங்கள் காரணமாக, தற்போது கோடைகாலக் கதிர்திருப்பம் நடைபெறும்போது சூரியன் இடபம் அல்லது ரிஷப (Taurus) விண்மீன் கூட்டத்திலும், குளிர்காலக் கதிர்திருப்பம் நடைபெறும்போது சூரியன் தனுசு (Sagittarius) விண்மீன் கூட்டத்திலும் இருப்பதுபோல் தோன்றும். ஆனாலும், கடக மற்றும் மகர ரேகைகளின் பெயர்கள் மாற்றப்படவில்லை.
அடுத்து, கடக மற்றும் மகர ரேகைகள் கடந்து செல்லும் பகுதிகள் பற்றிப் பார்ப்போம்.
கடக ரேகை இந்தியா, அல்சீரியா, நைகர், லிபியா, எகிப்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், ஓமன், வங்காள தேசம், மியான்மர், சீனா, தைவான், மெக்சிகோ, பகாமாசு என பல நாடுகளை கடந்து செல்கிறது.
குறிப்பாக, இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்கள் வழியாக கடந்து செல்கிறது.


படம்: இந்தியாவில் ஒரு சாலைக்கு குறுக்காக கடந்து செல்லும் கடக ரேகையை குறிப்பிடும் வழிகாட்டி பலகை.
மகர ரேகை நமீபியா, தென் ஆப்பிரிக்கா, மொசாம்பிக், மடகாஸ்கர், ஆஸ்திரேலியா, சிலி, அர்ஜெண்டினா, பராகுவே, பிரேசில் ஆகிய நாடுகள் வழியாக கடந்து செல்கிறது.
படம் உதவி: விக்கிபீடியா மற்றும் கூகிள் படங்கள்
நன்றி!

Tuesday 12 April 2022

சித்தர்கள் சிவன் சார்ந்த ஆன்மீக நூல்கள்

சித்தர்கள் சிவன் சார்ந்த ஆன்மீக நூல்கள் மட்டும். புத்தகங்கள் அழியும் தன்மை உள்ளதால். தயவு செய்து (காப்புரிமை நூல்கள்) எனது கவனக்குறைவினால் பதிவு செய்து இருந்தால் அந்த நூல்களை வேறு நபர்களுக்கு பதிவு செய்ய வேண்டாம். டெலெக்ராம் லிங்க்.

https://t.me/AnmekaNulakam

Saturday 9 April 2022

அதிசய ஹோமியோ மருந்து ஆர்னிகா

அதிசய ஹோமியோ மருந்து #ஆர்னிகா

மருத்துவர் ; ராமஸ்வாமி அவர்களின் நலம் தரும் மருந்துகள் நூலில் இருந்து .

கட்டுரை ; ராஜ்ஸ்ரீ.

அந்த இளைஞனுக்கு 25 வயது இருக்கும். ஏழு வருடஙகளாக வயிற்று வலியால் அவஸ்தை பட்டு கொண்டு இருந்தான். இடைவிடாத முணு முணு வலி. வேலை செய்யும் போது திடீரென்று அதிகமாகி தொல்லைப்படுத்தும். வேலூர் ஆஸ்பத்திரியில் நீண்ட நாள் வைத்து பரிசோதித்தார்கள். ஏதேதோ மாத்திரைகள், ஊசி மருந்துகள் எதுவும் பலன் அளிக்கவில்லை.

அவன் என்னிடம் வந்த போது மிகவும் நம்பிக்கை இழந்து இருந்தான். எப்போது முதல் வலி ஆரம்பித்தது என்று கேட்டேன். மாணவனாக இருந்த போது என்.சி.சி காம்ப் போயிருந்தானாம். ரூட் மார்ச் செய்யச் சொல்லி எங்கே நிறுத்துவது என்று சொல்ல மறந்துவிட்டார் மாஸ்டர். அவன் சோர்ந்து மயங்கி விழுந்த பின்புதான் 'அடாடா' என்று வருத்தப்பட்டாராம் அவர்.

அது முதற்கொண்டு அவனுக்கு வயிற்று வலி ஆரம்பித்து விட்டது பசி, தாகம், குடல் இயக்கம் எல்லாம் ஒழுங்காக இருந்தன .ஆனால் காரணமில்லாமல் வயிற்றின் ஒரு பகுதியில் எப்போதும் வலி, பல சமயம் துடித்து போக செய்யும்.

உள்ளுக்குள் ஏதோ தசை பிரண்டு மேலும் அழற்சியால் குணமாகவில்லை. அதான் வலிக்கு காரணம் என்று ஊகித்தேன்.இதற்கு ஏற்ற மருந்து ஆர்னிகாதான் ! இரண்டு மாத்திரைகள் கொடுத்தேன்(1000 வீரியம்).

அன்றிரவு அவனுக்கு தாங்க முடியாத வயிற்று வலி கண்டது. சற்று நேரம் துடித்து கதறினான். பிறகு தூங்கிப்போனான். காலையில் எழுந்த போது ஒன்றுமே இல்லை. அன்று முழுவதும் வலி இல்லை. அதற்கு பிறகும் கூட வயிற்று வலியே வரவில்லை..

உள்காயம், ரத்த காயம், கத்தி வெட்டு, சிராய்ப்பு எல்லாவற்றுக்கும் ஆர்னிகாதான் ஏற்ற மருந்து 30 அல்லது 200 வீரியமுள்ள இரண்டு மாத்திரைகள் ஒரு மணிக்கொருமுறை கொடுத்தால் போதும் . தழும்பு கூட தெரியாது குணமாகிவிடும். தீக்காயங்களைக் கூட ஆர்னிகா விரைவாகப் புதிய திசுக்களின் உற்பத்தியை ஊக்குவித்து குணப்படுத்த வல்லது. அதிக உழைப்பு அல்லது நீண்ட பிரயாணத்திற்குப் பின் உடம்பு அடித்துப் போட்டாற் போலாகி தலை முதல் கால்வரை வலி பிடுங்கும். ஆர்னிகா வலியை குறைத்து நன்றாக தூங்க வைக்கும்.

"ஆர்னிகாவை விளையாட்டு வீரர்களின் தோழன்" என்பார்கள். கீழே விழுந்து அடிபட்டாலும் சுளுக்கு அல்லது வீக்கம் ஏற்பட்டாலும் ஒரு டோஸ் ஆர்னிகா வலியையும் வீக்கத்தையும் போக்கி மீண்டும் ஆடுவதற்கு தயார் செய்துவிடும். ரத்தபெருக்கையும் தடை செய்யும். காயம் சிராய்ப்புகளுக்கு மேலே காலண்டுலா( calendula) திரவத்தால் சுத்தம் செய்து துணியில் நனைத்து கட்டுப்போட வேண்டும். சீல் பிடிக்காது விரைவில் குணமாகும்.

ஹைபரிகம் (Hypericum) என்பது ஆர்னிகாவைபோல ஒரு முதலுதவி மருந்து. காலில் ஆணி அல்லது கண்ணாடி குத்திவிட்டால் இந்த மருந்தை கொடுக்க வேண்டும். டெட்டானஸ் என்னும் கொடிய ஆட்கொல்லி வலிப்பு வராமல் தடுத்து குணமாக்கும். கதவில் விரல் சிக்கி நரம்பு முனைகள் நொறுங்கி விட்டாலும் ஹைபரிகம் தான் அருமருந்து.

பெலிஸ் பிரென்னிஸ் bellis parennis என்று இன்னொரு மருந்து . ஆர்னிகாவைப் போலவே காயங்களை ஆற்றவல்லது. சுளுக்கு ஊமைக்காயம் இவற்றுக்கு ஏற்ற மருந்து.

ஹைட்ராசில் எனும் விரை வீக்க ஆபரேஷன் செய்து கொண்ட ஒருவருக்கு ஆர்னிகா , ஹைபரிகம் இரு மருந்துகளைக் கொடுத்ததில் ஒரே வாரத்தில் புண் ஆறி , குறிப்பிட்ட தேதிக்கு முன்பே ராணுவ வேலைக்கு போய் சேரமுடிந்தது. சாதாரணமாக அறுவை சிகிச்சை புண் ஆறுவதற்கு சில வாரங்கள் ஆகும்.

அடிபட்டு அல்லது எங்கேயாவது இடித்துக் கொண்டு கரு ரத்தம் கட்டிக்கொண்டுவிடும். 'விண் விண்' என்று வலி தெறிக்கும். அதற்கு ஹாமமேலீஸ் (Hamamelis) தான் கைகண்ட மருந்து. உள்ளுக்குள்ளே இரத்த பெருக்கை நிறுத்தி விரைவில் குணமாக்கவல்லது. 

எலும்பு முறிவு ஏற்பட்டால் சரியாக பொருத்தி  கட்டுப் போட்டு வைப்பார்கள். எலும்புகள் சேர்ந்து கட்டவிழ்க்க சாதாரணமாக இரண்டு மூன்று மாதங்கள் ஆகும். ஹோமியோபதி மருந்தான ஸிம்பைட்டம்  (symphytum) இதை விரிவுபடுத்தும். 3 வாரங்களிலேயே எலும்பு முறிவு குணமாகிவிடும்..

வெட்டுக்காயம் ,மண்டை அல்லது வேறு உறுப்புகளில் அடிபட்டு ரத்தம் பெருகினால் ஆர்னிகாவும் ஹாமமேலீஸ் இரண்டும் சட்டென்று நிறுத்திவிடும்.. 

சிலருக்கு இரத்தம் உறையாமல் பெருகிக்கொண்டே இருக்கும். இதை ஹீமோபீலியா என்பார்கள். ஹோமியோபதியில் பாஸ்பரஸ் மருந்து ஒன்று தான் இதற்கு ஏற்றது. நீரில் கரைத்து 15 நிமிடத்திற்கு ஒருமுறை கொடுக்க இரத்தப் பெருக்கு நின்றுவிடும். ஹீமோபீலியா  குறை உள்ளவர்களுக்கும் பாஸ்பரஸ் 30 அல்லது 200 வீரிய மாத்திரைகள் இரண்டை வாரம் ஒருமுறை கொடுத்து வந்தால் போதும். இந்த குறை முற்றிலும் நீங்கிவிடும்...

ஹோமியோ மருத்துவர் ஆலோசனைப் பெற்று பயன்படுத்தி கொள்ளலாம்.

 நன்றி...
நல்லதே நடக்கும்.🙏🙏

Wednesday 6 April 2022

அஷ்ட கர்மம் என்றால் என்ன ?சல்லிய முனிவர் விவரித்தது.

அஷ்ட கர்மம் - சல்லிய முனிவர் விவரித்தது.
**********************************

 அஷ்ட கர்மம் என்பது மாந்திரீகத்தின் எட்டு
அங்கங்களை
குறிக்கும். அவை

1) வசியம்
2) மோகனம்
3) தம்பனம்
4) உச்சாடனம்
5) ஆக்ருஷணம்
6) பேதனம்
7) வித்துவேஷணம்
8)மாரணம் என்பனவாகும்.

இவற்றை முறைப்படி கற்று தேர்ந்தவர்க்கே
இது சித்தியாகும்.

அப்படி முறையாக கற்றவரே உண்மையான
மாந்திரீகவாதியாவார்.

அப்படி அஷ்ட கர்மங்களை முறையாக
கற்றுத்தேர்வதற்குரிய
முறைகளை சித்தர் பெருமக்கள் நமக்காக
அருளியுள்ளனர்.

அவ்வகையில் சல்லிய முனிவர் அருளிய
சல்லியம் என்னும்
மாந்திரீக நூலில் அஷ்ட கர்மங்களுக்குரிய
நாள், திசை, உடுப்பு,
உலோகம்,எண்ணை, அதிதேவதை, மலர்,
ஆசனம் இவைகள்
பற்றிய தகவல்களை தந்துள்ளார்.

 அதைப்பற்றி
இன்றைய
பதிவில்
தெளிவாக பார்ப்போம்.

அஷ்டகர்மத்திற்குரிய நாட்கள்:
*********************************

ஞாயிறு - வசியம்
திங்கள் - மோகனம்
செவ்வாய் - வித்துவேஷணம்
புதன் - தம்பனம்
வியாழன் - உச்சாடனம்
வெள்ளி - ஆக்ருஷணம்
சனி - மாரணம் இந்நாட்களில் அக்கர்மங்கள்
செய்ய அது
சித்தியாகும்.

இதில் குறிப்பாக வியாழக்கிழமையில் எந்த
வேலைகளைச்
செய்தாலும் அது பச்சை மரத்தில்
ஆணிஏறுவது போல
உடனுக்குடன் பலிக்கும் என்கிறார் சல்லிய
முனிவர்.

திசைகள்:
************

கிழக்கு - வசியம்
தெற்கு - மோகனம்,மாரணம்
மேற்கு - உச்சாடனம்
வட்க்கு - பேதனம்
தென்மேற்கு - வித்துவேஷ்ணம்
தென்கிழக்கு - தம்பனம்
வடமேற்கு - ஆக்ருஷணம்
வடகிழக்கு - சகல கர்மத்திற்கும் உகந்த
திசையாகும்.

உடுப்புகள்:
*************

சிவந்த வஸ்திரம் - வசியம்
மஞ்சள்வஸ்திரம் - மோகனம்
பச்சை வஸ்திரம் - தம்பனம்
வெள்ளை வஸ்திரம் - பேதனம்
பச்சைப்பட்டு - உச்சாடனம்
கருப்பு வஸ்திரம் - மாரணம்
செம்பட்டு-சகல கர்மத்திற்கும் உகந்த
உடுப்புகளாகும்.

உலோகங்கள்:
****************

காரீயம் - வசியம்
வங்கம் - மோகனம்
பொன் - ஆக்ருஷணம்
செம்பு - தம்பனம்
வெள்ளீயம் - உச்சாடனம்
குருத்தோலை - வித்துவேஷணம்
இரும்பு - பேதனம்
வெள்ளி - மாரணத்திற்கும் உகந்த
உலோகங்களாகும்.

எண்ணைகள்:
*****************

பசு நெய் - வசியம்
நல்லெண்ணை - மோகனம்
வேப்பெண்ணை - மாரணம்
புங்கெண்ணை - உச்சாடணம்
புன்னை எண்ணை - பேதனம்
ஆதளை எண்ணை - தம்பனம்
கழுதை,ஆடு,பன்றிகளின் நெய் -
வித்துவேஷணம்
வன்னி,ஆல்,விளா,இவைகள் -
சுபகர்மத்திற்கும்
கள்ளி,எருக்கு,எட்டி
அத்தி,இச்சி,விடத்தலை
இவைகள்} - அசுபகர்மத்திற்கும் உகந்த
எண்ணை வகைகளாகும்.

அதிதேவதைகள்:
********************

ஈசன் - வசியம்
அக்கினி - மோகனம்
இந்திரன் - தம்பனம்
நிருதி - உச்சாடனம்
வருணன் - ஆக்ரூஷணம்
வாயுதேவன் - வித்துவேஷனம்
குபேரன் - பேதனம்
எமன் - மாரணம் முதலியன
அஷ்டகர்மத்திற்குரிய
அதிதேவதைகளாகும்.

மலர்கள்:
**********

மல்லிகை - வசியம்
முல்லை - மோகனம்
தாமரை - தம்பனம்
தும்பை - உச்சாடனம்
அரளி - ஆக்ரூஷணம்
காக்கண மலர் - வித்துவேஷணம்
ஊமத்தம் - பேதனம்
கடலை மலர் - மாரணம் முதலியன
அஷ்டகர்மத்திற்குரிய
மலர்களாகும்.

ஆசனங்கள்:
**************

வில்வப்பலகை - வசியம்
மாம்பலகை - மோகனம்
பலாப்பலகை - தம்பனம்
நீலக்கம்பளம் - உச்சாடனம்
வெள்ளாட்டுத்தோல் - ஆக்ருசணம்
எட்டிப்பலகை - வித்துவேஷனம்
மரத்தோலாடை -பேதனம்
அத்திப்பலகை - மாரணம் முதலியன
அஷ்டகர்மத்திற்குரிய
ஆசனங்களாகும்.

 அஷ்டமாசித்துக்கள்
**********************

* அணிமா:
பெரிய ஒரு பொருளை தோற்றத்தில்
சிறியதாகக் காட்டுவது/ஆக்குவது.
பிருங்கி முனிவர் முத்தேவர்களை மட்டும்
வலம் வருவதற்காக சிறு வண்டாக
உருமாறினார் என்ற செய்தி அணிமா என்ற
சித்தைக் குறிக்கும்.

* மஹிமா:
சிறிய பொருளைப் பெரிய பொருளாக்குவது.
வாமன அவதாரத்தில் திருமால் இரண்டடியால்
மூவுலகை அளந்ததும், கிருஷ்ண பரமாத்மா
அர்ஜூனனுக்கு விஸ்வ ரூப தரிசனம் காட்டி
உலகமே தன்னுள் அடக்கம் என்று
காட்டியதும் மஹிமா என்னும் சித்தாகும்.

* லஹிமா:
கனமான பொருளை இலேசான பொருளாக
ஆக்குவது.
திருநாவுக்கரசரை சமயப் பகை காரணமாக
கல்லில் கட்டி கடலில் போட்டபோது கல்
மிதவையாகி கடலில் மிதந்தது லஹிமா
ஆகும்.

*கரிமா:
இலேசான பொருளை மிகவும் கனமான
பொருளாக ஆக்குவது.
அமர்நீதி நாயனாரிடம் கோவணம்
பெறுவதற்காக இறைவன் வந்தபோது, ஒரு
கோவணத்தின் எடைக்கு தன்னிடமுள்ள
எல்லா பொருட்களை வைத்தும் தராசுத்
தட்டு சரியாகாமல் கடைசியாக தானும் தன்
மனைவியும் ஏறி அமர்ந்து சரி செய்த சித்தி
கரிமா.

*பிராத்தி:
எவ்விடத்திலும் தடையின்றி சஞ்சாரம்
செய்வது.
திருவிளையாடற்புராணத்தில் "எல்லாம்வல்ல
சித்தரான படலம்" என்னும் பகுதியில் சிவன்
ஒரே சமயத்தில் நான்கு திசைகளிலும்
காட்சியளித்ததாக வரும் சித்தி பிராத்தி.

*பிரகாமியம்:
வேண்டிய உடலை எடுத்து
நினைத்தவரிடத்தில் அப்போதே தோன்றுதல்.
அவ்வையார் இளவயதிலேயே முதுமை
வடிவத்தைப் பெற்றதும், காரைக்கால்
அம்மையார் தன்னுடைய அழகான
பெண்வடிவத்தை மாற்றி பேய் வடிவம்
பெற்றதும் பிரகாமியம் என்னும் சித்தாகும்.

*ஈசத்துவம்:
ஐந்து தொழில்களை நடத்துதல்.
திருஞானசம்பந்தர் பூம்பாவைக்கு உயிர்
கொடுத்து எழுப்பியமை ஈசத்துவம் எனும்
சித்தாகும்.

*வசித்துவம்:
ஏழுவகைத் தோற்றமாகிய தேவ, மானிட, நரக,
மிருக, பறப்பன, ஊர்வன, மரம்
முதலியவற்றைத் தம்வசப் படுத்துதல்.
திருநாவுக்கரசர் தம்மைக் கொல்வதற்காக
வந்த யானையை நிறுத்தியதும், ராமர்
ஆலமரத்திலிருந்து ஒலி செய்து
கொண்டிருந்த பறவைகளின் ஓசையை
நிறுத்தியதும் வசித்துவம் எனும் சித்தாகும்.

       - நன்றி shiva shangar