Saturday 9 April 2022

அதிசய ஹோமியோ மருந்து ஆர்னிகா

அதிசய ஹோமியோ மருந்து #ஆர்னிகா

மருத்துவர் ; ராமஸ்வாமி அவர்களின் நலம் தரும் மருந்துகள் நூலில் இருந்து .

கட்டுரை ; ராஜ்ஸ்ரீ.

அந்த இளைஞனுக்கு 25 வயது இருக்கும். ஏழு வருடஙகளாக வயிற்று வலியால் அவஸ்தை பட்டு கொண்டு இருந்தான். இடைவிடாத முணு முணு வலி. வேலை செய்யும் போது திடீரென்று அதிகமாகி தொல்லைப்படுத்தும். வேலூர் ஆஸ்பத்திரியில் நீண்ட நாள் வைத்து பரிசோதித்தார்கள். ஏதேதோ மாத்திரைகள், ஊசி மருந்துகள் எதுவும் பலன் அளிக்கவில்லை.

அவன் என்னிடம் வந்த போது மிகவும் நம்பிக்கை இழந்து இருந்தான். எப்போது முதல் வலி ஆரம்பித்தது என்று கேட்டேன். மாணவனாக இருந்த போது என்.சி.சி காம்ப் போயிருந்தானாம். ரூட் மார்ச் செய்யச் சொல்லி எங்கே நிறுத்துவது என்று சொல்ல மறந்துவிட்டார் மாஸ்டர். அவன் சோர்ந்து மயங்கி விழுந்த பின்புதான் 'அடாடா' என்று வருத்தப்பட்டாராம் அவர்.

அது முதற்கொண்டு அவனுக்கு வயிற்று வலி ஆரம்பித்து விட்டது பசி, தாகம், குடல் இயக்கம் எல்லாம் ஒழுங்காக இருந்தன .ஆனால் காரணமில்லாமல் வயிற்றின் ஒரு பகுதியில் எப்போதும் வலி, பல சமயம் துடித்து போக செய்யும்.

உள்ளுக்குள் ஏதோ தசை பிரண்டு மேலும் அழற்சியால் குணமாகவில்லை. அதான் வலிக்கு காரணம் என்று ஊகித்தேன்.இதற்கு ஏற்ற மருந்து ஆர்னிகாதான் ! இரண்டு மாத்திரைகள் கொடுத்தேன்(1000 வீரியம்).

அன்றிரவு அவனுக்கு தாங்க முடியாத வயிற்று வலி கண்டது. சற்று நேரம் துடித்து கதறினான். பிறகு தூங்கிப்போனான். காலையில் எழுந்த போது ஒன்றுமே இல்லை. அன்று முழுவதும் வலி இல்லை. அதற்கு பிறகும் கூட வயிற்று வலியே வரவில்லை..

உள்காயம், ரத்த காயம், கத்தி வெட்டு, சிராய்ப்பு எல்லாவற்றுக்கும் ஆர்னிகாதான் ஏற்ற மருந்து 30 அல்லது 200 வீரியமுள்ள இரண்டு மாத்திரைகள் ஒரு மணிக்கொருமுறை கொடுத்தால் போதும் . தழும்பு கூட தெரியாது குணமாகிவிடும். தீக்காயங்களைக் கூட ஆர்னிகா விரைவாகப் புதிய திசுக்களின் உற்பத்தியை ஊக்குவித்து குணப்படுத்த வல்லது. அதிக உழைப்பு அல்லது நீண்ட பிரயாணத்திற்குப் பின் உடம்பு அடித்துப் போட்டாற் போலாகி தலை முதல் கால்வரை வலி பிடுங்கும். ஆர்னிகா வலியை குறைத்து நன்றாக தூங்க வைக்கும்.

"ஆர்னிகாவை விளையாட்டு வீரர்களின் தோழன்" என்பார்கள். கீழே விழுந்து அடிபட்டாலும் சுளுக்கு அல்லது வீக்கம் ஏற்பட்டாலும் ஒரு டோஸ் ஆர்னிகா வலியையும் வீக்கத்தையும் போக்கி மீண்டும் ஆடுவதற்கு தயார் செய்துவிடும். ரத்தபெருக்கையும் தடை செய்யும். காயம் சிராய்ப்புகளுக்கு மேலே காலண்டுலா( calendula) திரவத்தால் சுத்தம் செய்து துணியில் நனைத்து கட்டுப்போட வேண்டும். சீல் பிடிக்காது விரைவில் குணமாகும்.

ஹைபரிகம் (Hypericum) என்பது ஆர்னிகாவைபோல ஒரு முதலுதவி மருந்து. காலில் ஆணி அல்லது கண்ணாடி குத்திவிட்டால் இந்த மருந்தை கொடுக்க வேண்டும். டெட்டானஸ் என்னும் கொடிய ஆட்கொல்லி வலிப்பு வராமல் தடுத்து குணமாக்கும். கதவில் விரல் சிக்கி நரம்பு முனைகள் நொறுங்கி விட்டாலும் ஹைபரிகம் தான் அருமருந்து.

பெலிஸ் பிரென்னிஸ் bellis parennis என்று இன்னொரு மருந்து . ஆர்னிகாவைப் போலவே காயங்களை ஆற்றவல்லது. சுளுக்கு ஊமைக்காயம் இவற்றுக்கு ஏற்ற மருந்து.

ஹைட்ராசில் எனும் விரை வீக்க ஆபரேஷன் செய்து கொண்ட ஒருவருக்கு ஆர்னிகா , ஹைபரிகம் இரு மருந்துகளைக் கொடுத்ததில் ஒரே வாரத்தில் புண் ஆறி , குறிப்பிட்ட தேதிக்கு முன்பே ராணுவ வேலைக்கு போய் சேரமுடிந்தது. சாதாரணமாக அறுவை சிகிச்சை புண் ஆறுவதற்கு சில வாரங்கள் ஆகும்.

அடிபட்டு அல்லது எங்கேயாவது இடித்துக் கொண்டு கரு ரத்தம் கட்டிக்கொண்டுவிடும். 'விண் விண்' என்று வலி தெறிக்கும். அதற்கு ஹாமமேலீஸ் (Hamamelis) தான் கைகண்ட மருந்து. உள்ளுக்குள்ளே இரத்த பெருக்கை நிறுத்தி விரைவில் குணமாக்கவல்லது. 

எலும்பு முறிவு ஏற்பட்டால் சரியாக பொருத்தி  கட்டுப் போட்டு வைப்பார்கள். எலும்புகள் சேர்ந்து கட்டவிழ்க்க சாதாரணமாக இரண்டு மூன்று மாதங்கள் ஆகும். ஹோமியோபதி மருந்தான ஸிம்பைட்டம்  (symphytum) இதை விரிவுபடுத்தும். 3 வாரங்களிலேயே எலும்பு முறிவு குணமாகிவிடும்..

வெட்டுக்காயம் ,மண்டை அல்லது வேறு உறுப்புகளில் அடிபட்டு ரத்தம் பெருகினால் ஆர்னிகாவும் ஹாமமேலீஸ் இரண்டும் சட்டென்று நிறுத்திவிடும்.. 

சிலருக்கு இரத்தம் உறையாமல் பெருகிக்கொண்டே இருக்கும். இதை ஹீமோபீலியா என்பார்கள். ஹோமியோபதியில் பாஸ்பரஸ் மருந்து ஒன்று தான் இதற்கு ஏற்றது. நீரில் கரைத்து 15 நிமிடத்திற்கு ஒருமுறை கொடுக்க இரத்தப் பெருக்கு நின்றுவிடும். ஹீமோபீலியா  குறை உள்ளவர்களுக்கும் பாஸ்பரஸ் 30 அல்லது 200 வீரிய மாத்திரைகள் இரண்டை வாரம் ஒருமுறை கொடுத்து வந்தால் போதும். இந்த குறை முற்றிலும் நீங்கிவிடும்...

ஹோமியோ மருத்துவர் ஆலோசனைப் பெற்று பயன்படுத்தி கொள்ளலாம்.

 நன்றி...
நல்லதே நடக்கும்.🙏🙏

No comments:

Post a Comment