Thursday 25 June 2020

ஞாபக மறதியும் உளவியல் உண்மையும்

#ஞாபக_மறதியும்_உளவியலும்...🤔🤔🤔

நாம் மறக்கிறோம். நாம் மறந்து போகிறோம். நாம் பல நேரங்களில் மறந்து போகிறோம். அவசர வேலையாக வேகமாக தயாராகி சென்று கொண்டு இருப்போம் பாதிவழியில் தான் நினைவிற்கு வரும் அடடா நான் எனது சாவியை, அலைபேசியை, பணத்தை மறந்து வைத்துவிட்டு வந்தது நினைவிற்கு வரும் சரி அவசரத்தில் வேகமாக வந்ததால்தான் மறந்து விட்டோம் என்று சில நேரங்களில் நம் மனதிற்கு நாமே சமாதானம் கூறுவோம்.

ஆனால் உண்மை வேறு மாதிரியாக இருக்கும். நாம் மெதுவாக ஏதேனும் ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கும் பொழுது அது திரும்பவும் நடக்கும் உதாரணமாக வீட்டிற்குள் சென்று தண்ணீர் குடித்துவிட்டு மின்விசிறியை அணைக்கவேண்டும் என்று சிரித்துக்கொண்டே செல்வோம் ஆனால் மின்விசிறியை மட்டும் அணைத்துவிட்டு தண்ணீர் குடிக்காமலேயே திரும்ப வந்து விடுவோம். சிறிது நேரத்திற்குப் பிறகுதான் நாம் மறந்தது புரியும் அடடா தண்ணீர் குடிக்கலாம் என்று சென்றோம் மறந்து விட்டோமே என்று வருந்துவோம்.

இந்த நிகழ்வுகளை கவனித்த நம் மனம் நமக்குள் பேசும். நாம் இப்போது நாம் அதிகமாக மறந்துவிடுகிறோம், ஞாபக மறதி அதிகமாகிக் கொண்டே செல்கிறது, வயதாக வயதாக ஞாபக மறதியும் அதிகமாகிறது, இப்படியே சென்றால் என்ன நடக்குமோ? என்று திரும்பத் திரும்ப நமக்குள் பேசிப் பேசி நம் மனதிற்குள் பதிய வைத்து அதை ஒரு நோயகவே மாற்றி விடுகிறது. அந்த நோய்க்கு ஞாபக மறதி நோய் என்று பெயரையும் வைத்து வாழ்கிறோம். 

ஒருவேளை உங்களுக்கு ஞாபக மறதி நோய் இருப்பதாக இருந்தால் உங்களுக்கு பாதி வழியில் மட்டும் ஏன் ஞாபகம் வருகிறது? சிறிது நேரத்திற்குப் பிறகு ஏன் ஞாபகம் வருகிறது? 

உங்களுக்கு ஞாபக மறதி நோய் இருப்பதாக இருந்தால் சுத்தமாக ஞாபகமே வந்திருக்கக் கூடாது அல்லவா? அப்படி என்றால் உங்களுக்கு ஞாபக மறதி நோய் இல்லை என்பது தானே உண்மை? வேறு என்ன காரணம்? ஏன் பாதி தூரம் மட்டுமே மறக்கிறோம்? ஏன் கொஞ்ச நேரம் மட்டும் மறக்கிறோம் அது ஏன்? 

ஏனென்றால் அது ஞாபக மறதி இல்லை என்பதனால் தான். அப்படியெனில் நாம் அந்த நேரத்தில் மறந்து போவதற்கான காரணம் என்ன?

நாம் நம்மோடு இல்லை என்பது தான் காரணம். நம் உடல் மட்டும் தான் அங்கே உள்ளது ஆனால் நம் மனம் நம்மோடு இல்லை. நம் மனம் அங்கே இல்லை. நாம் வேறு எதையாவது எண்ணியபடியே ஒவ்வொரு நொடியும் செயல்படுகிறோம். உண்மையில் அங்கே அணிச்சையாக நம் உடல் மட்டுமே வேலை செய்கிறது. நாம் நம்மோடு இல்லை சிதறிக் கிடக்கிறோம். 

நாம் முழுமையாக இல்லை. நாம் நமக்குள்ளேயே தனித்தனி கூறுகளாக பிரித்து கிடக்கிறோம். நம் கண்கள் ஒன்றைப் பார்த்துக் கொண்டு உள்ளது ஆனால் நம் கால்கள் வேறு எங்கோ நடந்து செல்கிறது. நம் எண்ணங்களே நொடிக்கு ஒரு இடம் பயணம் செய்துகொண்டு உள்ளது. நாம் முழுமையாக அங்கே இல்லை. 

அந்த கணத்தில் நாம் முழுமையாக இல்லை. அந்த இடத்தில் நாம் முழுமையாக இல்லை. நாம் அங்கே தான் இருக்கிறோம் என்கிற உணர்வு கூட நம்மிடம் இல்லை. நாம் நமக்கே தெரியாத ஒரு கற்பனை உலகத்தில் வாழ்ந்து வருகிறோம் ஆனால் அங்கேயும் முழுமையாக இல்லை. நம் உடல் நமது பழக்கங்களின் விளைவாக இங்கே ஒரு அணிச்சை செயலாக செயல்பட்டு வருகிறது. ஆனால் நமது மனமோ வேறு எங்கெங்கோ பயணம் செய்துகொண்டு உள்ளது.

நமது கற்பனை உலகத்தில் இருந்து நமது மனம் அவ்வப்போது நம் உடலோடு வந்து போகும்‌ அந்த கணத்தில் தான் நாம் சுய நினைவிற்கு வருவோம்‌. அந்த சில நிமிடங்களில் தான் நாம் நாமாக இருப்போம் கொஞ்சம் முழுமையாக இருப்போம் அந்த கணத்தில் தான் நாம் மறந்ததாக நினைவு வருகிறது. உண்மையில் நாம் அதை மறந்துவிடவில்லை மாறாக நாம் சிதறிக் கிடப்பதால் ஏற்படும் விளைவுகள் தான் என்பதை நாம் உணர வேண்டும். 

நமது மனம் கற்பனை உலகத்திற்குள் சுற்றிக்கொண்டு இருந்ததால் இங்கே நடந்த எதுவும் அறியாத நிலை தான் ஏற்படுகிறது அதைத் தான் நாம் ஞாபக மறதி நோய் என்று தவறாக புரிந்துகொண்டு பயப்படுகிறோம் அந்த பயத்தினால் அதற்கு வைத்தியம் தேடுகிறோம். மாத்திரைகள், மருந்துகள் என பல வழிகளில் அதற்கான தீர்வைத் தேடுகிறோம். அவை யாவும் தீர்வு கொடுக்காததால் நம் வாழ்க்கை இனி இப்படித்தான் இருக்கும் என்று நொந்து கொள்கிறோம். 

இது நோய் இல்லை. இது உடலுக்கும் மனதுக்கும் இடையிலான பிரிவு. இதற்கான தீர்வு இந்த கணத்தில் நீங்கள் வாழ்வதால் மட்டுமே கிடைக்கும் மாறாக மாத்திரை, மருந்துகளால் அதிகமாக்க மட்டுமே முடியும். ஏனென்றால் இது நோய் இல்லை நாம் நமக்குள் இல்லாமல் சிதறிக் கிடப்பதால் ஏற்படும் விளைவுகள் தான் இது. 

இதற்கான ஒரே தீர்வு #விழிப்புணர்வு மட்டுமே. நீங்கள் இந்த கணத்தில் விழிப்புடன், உணர்வுடன் வாழ்வது மட்டுமே ஒரே தீர்வு. ஏனென்றால் இது நோய் இல்லை. உங்கள் எண்ணங்கள் ஓடிக்கொண்டே தான் இருக்கும் அதுதான் அதனுடைய இயல்பு ஆனால் அதன் பின்னால் நீங்களும் ஓடிக்கொண்டே இருந்தால் அது தான் இந்த நோய் காரணம். 

* உங்கள் எண்ண ஓட்டங்களை முதலில் வேடிக்கை மட்டும் பாருங்கள். ஒரு பார்வையாளராக, மூன்றாவது நபராக வேடிக்கை மட்டும் பாருங்கள். 

* உங்கள் செயல்கள் ஒவ்வொன்றையும் கவனியுங்கள். கவனுத்துடன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வையுங்கள். 

* உங்கள் செயல்களில் உங்கள் உடலுடன் உங்கள் எண்ணங்களும் சேர்த்து தான் செயல்படுகிறதா? என்பதை கவனித்துப் பாருங்கள். 

* இந்த கணம் தான் உண்மை. இந்த கணத்தில் நீங்கள் நீங்களாக, உங்களுக்குள் முழுமையாக இருந்தாலே போதும் அதுதான் விழிப்புணர்வு, அதுதான் விழிப்பு நிலை.

* அந்த நிலையில் நீங்கள் செயல்பட்டால் உங்களுக்கு ஞாபக மறதி என்பதே நம் கற்பனை தான் என்பதை உணர்வீர்கள்.

வாழ்க வளமுடன்...💐💐💐

பேரன்புடன்...❤️❤️❤️

த.கார்த்திக் தமிழ்
BRAIN VS MIND...

நீர்முள்ளி மூலிகை பயன்கள்

🎄 *நீர்முள்ளி*

நீர்வளம் நிறைந்த இடங்களிலும், வயல் வரப்புகளிலும் ‘நீர்முள்ளி’ வளரும். இது குத்துசெடி வகையை சார்ந்தது. இதன் விதைகள் அடந்த பழுப்பு நிறத்தில் காணப்படும். விதையை தூளாக்கி தண்ணீரில் கலக்கினால், பசை போன்று ஆகிவிடும். இந்த விதை ஆண்களுக்கு மிகுந்த ஆற்றலைத் தரும். உடல் திசுக்களுக்கு ஈரப்பதத்தை அளித்து, உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி உடலுக்கு உறுதியளிப்பது நீர்முள்ளி விதையின் சிறப்பு குணம். இதில் வைட்டமின் ஈ, புரதம், இரும்பு, நீர்ச்சத்து போன்றவை நிறைந்திருக்கின்றன.

இரத்தசோகை ஏற்படும்போது உடல் வீங்கும். அதிக சோர்வு தோன்றும். மேல் மூச்சு வாங்குதல் மற்றும் இளைப்பு ஏற்படும். அப்போது நீர்முள்ளி குடிநீர் தயாரித்து 100 மி.லி. வீதம் தினம் காலை, மாலை இருவேளை குடித்துவரவேண்டும். குடித்தால், வீக்கம் குறைந்து உடலில் ரத்த அணுக்கள் அதிகரிக்கும். உடல் பலமடையும். நீர் முள்ளி ரத்த சோகையை போக்கும் என்பது ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உடலில் வாதத்தன்மை தோன்றும்போது மூட்டுவலி ஏற்படும். இந்த வலியை போக்கி, மூட்டுகளுக்கு அதிக உறுதியை கொடுக்கும் ஆற்றலும் நீர்முள்ளி குடிநீருக்கு உள்ளது. இது, உடல் உள் உறுப்பு வீக்கங்களையும் போக்கும்.

நீடித்த வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுகிறவர்கள், அரை தேக்கரண்டி நீர்முள்ளி விதை பொடியை 200 மில்லி லிட்டர் மோரில் கலந்து காலை, மாலை ஒரு வாரம் பருகினால் நோய் குணமாகும்.

நீர்முள்ளி விதை உடலுக்கு குளிர்ச்சியளிக்கக் கூடியது. உடல் சூட்டால் உண்டாக கூடிய மேகநோய்கள், நீர் சுளுக்கு, நீர் எரிச்சல், சிறுநீரக தொற்று நோய்கள் மற்றும் கல்லடைப்புக்கு இது சிறந்த மருந்து. சிறுநீரகத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் சக்தியும் இதற்கு இருக்கிறது.

சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள்கொண்டு வரும். உடலுக்கு சக்தி அளிக்கும் மருந்துகளிலும், தாய்ப்பாலை அதிகரிக்க செய்யும் மருந்துகளிலும் நீர்முள்ளி விதை சேர்க்கப்படுகிறது. விதை மட்டுமின்றி அதன் வேரும், இலையும்கூட மருத்துவ குணங்கள் நிறைந்ததாகவே இருக்கிறது.

நீர்முள்ளி குடிநீர் சூரணம் என்பது விசேஷ குணம் கொண்டது. இதில் நீர் முள்ளி, நெருஞ்சில், சுரைக்கொடி, வெள்ளரி விதை, மணத்தக்காளி வற்றல், சோம்பு, கொட்டை நீக்கிய கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், சரகொன்றை புளி, பறங்கிச்சக்கை போன்றவை சேர்க்கப் படுகின்றன. இது நோய்களை தீர்த்து உடலுக்கு பலத்தை தரும். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

நன்றி ; செந்தில்நாதன்.

Thursday 4 June 2020

கண் நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் பயன்படுத்தும் கருவிகள்

#கண் நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் பயன்படுத்தும் கருவிகள்...

#கண்ணாயுதங்கள்

சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள கண் மருத்துவ சிகிச்சை முறைகள் அனைத்தும் மருத்துவ முறைகளுக்கும் முன்னோடி ஆகும். சித்தர் அகத்தியர் மற்றும் நாக முனி ஆகியோர் 96 வகை கண்நோய்களை குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இவற்றின் உட்பிரிவுகளையும் சேர்த்துக் கணக்கிட்டால் மொத்தம் 125 கண்நோய்கள் தமிழ் மருத்துவ நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. வடநாட்டு மருத்துவ நூல்கள் தங்கள் மருத்துவத்தில் தொகையில் கிடைக்காத கூடுதல் 21 நோய்களின் விபரங்களை தமிழ்மருத்துவ நூல்களில் இருந்து பெற்றதாக குறிப்பிடுகிறது. 

#கண்நோய்களுக்கு பயன்படுத்துவதற்காக இருபதிற்கும் மேற்பட்ட நுண்ணிய கருவிகள் சித்த மருத்துவத்தில் பயன் படுத்தப்பட்டுள்ளன. கண்ணில் வளர்ந்த சதையை உரித்து எடுப்பதற்கு சரவண பத்திரம் என்ற சொரசொரப்பான கூர்மையான விளிம்புகளை உடைய இலைகள் பயன்படுத்தப்பட்டன. அதுமட்டுமன்றி கண்களில் எண்ணை ஊறவைக்கும் புறவளையம் என்ற தர்ப்பணம், பற்று போடுதல் என்ற தப்பளம், சொட்டு சொட்டாக கண்களுக்கு மருந்துவிடும் ஒழுக்கு மருத்துவம் மற்றும் வேகமாக மருந்துகளை தாரைதாரையாக ஊற்றும் தாரை மருத்துவம் என சித்த மருத்துவம் தொடாத மருத்துவ எல்லையே இல்லை எனலாம். 

#பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கண் பரிசோதனை கருவிகள் மூலமாக பல கண்நோய்களை நவீன மருத்துவம் அறிவதற்கு முன்பாகவே 96 வகையான கண் நோய்களை பெயரிட்டு அதற்கான கருவிகளையும் பெயரிட்ட சித்த மருத்துவத்தின் அறிவியலை நவீன மருத்துவம் முழுவதுமாக எடுத்துக் கொண்டது. 

#அதுமட்டுமன்றி பலகணி பார்த்தல் என்ற அகத்தியரின் கண் மருத்துவ பயிற்சியானது Pinhole refraction என்ற நவீன கண் மருத்துவ பயிற்சி கருவியாக மாறிவிட்டது. பிரித்து அழித்தல் என்ற பெயரில் விழித்திரை பாதிப்புக்கு வழங்கப்படும் இரட்சை என்ற சூடு போடும் சிகிச்சை முறை விழித்திரை கிழிதலுக்கு லேசர் சிகிச்சை முறையாக தற்சமயம் மாற்றம் எடுத்துள்ளது. நவீன மருத்துவமுறை மற்றும் பல்வேறு இந்திய முறை மருத்துவ முறைகளுக்கும் சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளன கண் நோய் மருத்துவம் மற்றும் அதற்கான கருவிகள்தான் முன்னோடி. சித்த மருத்துவத்தில் அறிவியல் இல்லை என்று ஏளனம் செய்யும் அனைத்து முறை மருத்துவர்களும் அகத்தியரின் கண் நோய்கள் பற்றிய பாடல்களையும் அவை தொகுக்கப்பட்ட சரபோஜி மன்னரின் காலத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நவீன மருத்துவ அறிவியலுக்கு வித்திட்டது சித்த மருத்துவம்தான் என்பதை உணர்ந்து கொள்வார்கள்.

#சித்தமருத்துவத்தில் 
 #அறுவைகருவிகள்

        அகத்தியர் நனய விதியில் 26 வகையான அறுவை சிகிச்சை கருவிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அறுவை சிகிச்சைக்கு உதவும் ஆயுதங்களின் பெயர்களும், அவற்றின் பயன்பாடும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் கண்ணோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய பயன்படுத்தப்பட்டன.

        உதாரணமாக வட்ட வடிவ, பிறை வடிவ கருவிகள் எல்லாம் கண்ணின் லென்ஸ் என்னும் கண்புரையை நீக்க பயன்படுத்திய ஆதாரங்கள் என நாகமுனிவர் மற்றும் அகத்தியரின் நனய விதி மூலம் அறியப்படுகிறது.
 
“கத்தி சத்திரம் கவின்குறும்பி வாங்கியும்
முக்கவா தன்னுடன் முள்ளு வாங்கியும்
ஆழிக் கோலு மடுத்த பிறையுடன்
கத்தரிக் கையுடன் பரகரை வாங்கியும்
முச்சலா கையோடு முனிமொழி யோட்டும்
மட்டக் கோலும் மாறும் ஊசியும்
செப்புக் கிழையுஞ் சீரிய சலாகையும்
வட்டகை தன்னுடன் வளர்பஞ் சமுகமும்
செப்புச் சலாகையுங் கொம்புங் குடோரியும்
வெங்கலக் குழலும் ஈயச் சலாகையுங்
காயக் கோலுங் கண்கத்தி தண்டும்
இவையிவை யாயுத மிருபத் தாறுஞ்
சிவனவ னருளால் திகழ்சத்ரா யுதமே” - #அகத்தியர் நயன விதி
 
1.#கத்தி
 
“அறைதருங் கத்தியா றங்குல நீளம்
அகலமோ ரங்குலம் ஆம்முனை வட்டம்
மயிர்கத்தி போன்று வழற்கு மென்ப”
        6 அங்குலம் நீளம், அகலம் 1 அங்குலம், முனைவட்டமானது ரோக்கத்தியைப் போன்றது.
 
2. #சத்திரம்
 
“சத்திர நீளஞ் சாற்றினா றங்குலம்
வேப்பிலை போலும் விளங்கும்பல் பல்லாய்
நிறைகலுஞ் சாறு நெடியதோர் பிளவை
மெத்தவும் பயமான் மேதினி மிசையே”
        6 அங்கலம் நீளம், வேப்பிலையைப் போல் பல் பல்லாக இருக்கும். நிறை 6 கழஞ்சு, பிளவை, கட்டி ஆகியவற்றை கண்டமாய் அறுக்க உபயோகப்படுகிறது.
 
3. #குரும்பிவாங்கி
 
“குரும்பி வாங்கியின் கூறே ழங்குலம்
நிறையரைக் கழஞ்சு நெடுங்கைப் பிடியோ
ஐந்தே அங்குலம் ஆமெனப் பகர்வார்”
        நீளம் 7 அங்குலம், நிறை அரைக்கழஞ்சு, கைப்பிடி மட்டும் 5 அங்குலம்.
 
4. #முகவாதனன்
“முகவர் தனனோ முந்தான் கங்குலம்
முக்காற் கழஞ்சு நிறையென மொழிவார்”
        நீளம் 12 அங்குலம், நிறை முக்காற் கழஞ்சு.
 
5. #முள்வாங்கி
 
“முள்வாங்கி நீறம் மூவிரண் டங்குலம்
அகலமோ ரங்குலம் அணிநிறை கழஞ்சொன
றறுக்கவும் கீறவும் அவிர்நகம் வாங்கவும்
பயனாம் என்று பணித்தனர் மேலோர்”
 6 அங்குலம் நீறம், 1 அங்குலம் அகலம், 1 கழஞ்சு நிறையுள்ளது.
 
6. #ஆழிக்கோல்
 
:ஆழிக்கோல் பத்தே அங்குலம் நிறையோ
அரைப்பலம் ஆகுமென் றறைந்தன ரறிஞர்”
         நீளம் 10 அங்குலம், நிறை முக்காற் கழஞ்சு.
 
7. #பிறைக்கோல்
 
“பிறைக்கோ லென்பது பேசின்மூ வங்குலம்
நிறைமூன்று கழஞ்சு நிகழெழுத் தாணிபோல்
நீண்ட பிறைக்கோல் மத்தியில் நிலவுறும்”
        நீளம் 3 அங்குலம், நிறை 3 கழஞ்சு, எழுத்தாணி போல் நீண்ட பிறைக்கோல் மத்தியில் விளங்கும்.
 
8. #கத்தரிக்கோல்
 
“கத்தி கைச்சீர் கழறெட் டோடரை
அங்குலம் நிறைகாற் பலமே யாகும்”
நீளம் 8 ½ அங்குலம், நிறை கால் பலம்.
 
9. #பரகரைவாங்கி
 
“பரகரை வாங்கியோ பதினாறங்குலம்
நிறையரைப் பலமென நிகழ்த்துவ ருணர்ந்தோர்”
        நீளம் 16 அங்குலம், நிறை அரைப்பலம்.
 
10. #முச்சிலாகை
 
“முச்சிலா கைச்சீர் மொழியினே ழங்குலம்
நிறைநான்கு கழஞ்சே நிலவதன் வடிவோ
ஒரு மூன்ற தகட்டுவா யுள்ளது பாரே”
        நீளம் 7 அங்குலம், நிறை 4 கழஞ்சு, மூன்று தகடாகவுள்ளது.
 
11. #முனிமொழி
 
“முனிமொழி யென்பதோர் முக்கிய கருவியே”
இது ஒரு முனை மழுங்கிய முக்கிய கருவியாகும்.
 
12. #ஒட்டுக்கோல்
 
“ஒட்டுக்கோ லங்குலம் ஒன்றொடு பத்தே
தலையொரு கழஞ்சரைப் பலமுடல்ம நிறையே”
        நீளம் 11 அங்குலம், தலை மட்டும் 1 கழஞ்சு எடை, தலையை தவிர பிற பாகம் அரைப்பலம் நிறை உடையது.
 
13. #அட்டக்கோல்
 
“அட்டக்கோ லிரொன் பானங் குலமே
காசிடை யெட்டனைக் கழறுவ ருரியோர்”
        நீளம் 18 அங்குலம், நிறை 8 காசெடை
 
14. #ஊசி
 
“ஊசிமு வங்குலம் உரைநிநை யரைமா”
        நீளம் 3 அங்குலம், நிறை அரைமா.
 
15. #செப்புக்_குழை
 
“செப்புக் குழைதான் திரட்சியாங் குழலே
ஓருசா ணளவின துயர்நிறை யரைப்பலம்
தகடோ லைக்கனம் சார்புண்ணிர் விடுவது”
        ஒரு சாண் நீளம், நிறை அரைப்பலம், தகடு ஒலைக்கனம், திரட்சியான குழல், புண்ணில் விடுவது.
 
16. #சலாகை
 
“சலாகை யங்குலந் தானொரு நான்கே
அன்றியைந் ததன்நிறை யாறிரு கழஞ்சே”
        4 அல்லது 5 அங்குலம், நிறை 12 கழஞ்சு, புரையோடிய புண்களின் நிலை அறிவதற்கு உபயோகப்படுவது.
 
17. #வட்டகை
 
“வட்டகை யென்பதோர் வகையா யுதமே”
        முனையில் வட்ட வடிவமான தகடைக் கொண்ட ஒரு ஆயுதம்.
 
18. #பஞ்சமுகம்
 
“பஞ்ச முகமுகப் பரிசின தாமே”
        ஐந்து முகங்களைக் கொண்ட ஒரு ஆயுதம்.
 
19. #செப்புச்சலாகை
 
“செப்புச் சிலாகை சிறந்ததோர் கருவியே”
        செம்பால் செய்யப்பட்ட நீளமான குச்சி போன்ற ஒரு ஆயுதம்.
 
20. #கொம்பு
 
“கொம்பீ ரைந்தங் குலமாம் வாழையின்
குருத்தொப் பதுபூண் குலவிரண் டங்குலம்
மேனிவீக் கத்தை வீட்ட வல்லதே
கீறிக் கட்டியைக் கெட்டசெந் நீரை
வெளியிடத் தக்க மிருபய னாயதே”
        10 அங்குலம் நீளம், காளை மாட்டுக் கொம்பிற்கு அடிப்பாகத்தில் பித்தளையினால் ஆன, பூண் போன்ற சுற்றுப்பூண் இரண்டங்குலம். குருதி கட்டிய சரீர வீக்கம், கட்டி இவைகளைக் கீறி, இரத்தத்தைக் கொம்பு வைத்து வாயினால் உறிஞ்சி உமிழ உதவுகிறது.
 
21. #குடோரி
 
“குடோரியே ழரையங் குலம்நிறை காற்பலம்”
        நீளம் 7½ அங்குலம், நிறை கால் பலம்.
 
22. #வெண்கலக்குழல்
 
“வெண்கலக் குழல்தான் மேவுமெட் டங்குலம்
நிறைபலம் மூன்றோ மறையென நிகழ்த்துவர்”
        நீளம் 8 அங்குலம், நிறை 3½ பலம்.
 
23. #ஈயச்சலாகை
 
“ஈயச் சலாகை மியன்பின்மூ வங்குலம்
நிறையோ நான்கு கழஞ்சென நிலவிடும்”
        நீளம் 3 அங்குலம், நிறை 4 கழஞ்சு, கட்டி, பிளவை, கிருமி இவற்றைக் குணப்படுத்துவது.
 
24. #காயக்கோல்
 
“காயக் கோல் நீளம் களறினே ழங்குலம்
நிறையிரு கழஞ்சு நெடிய பருமனோ
இரண்டங் குலமென விசைத்தனர்
பெரியோர்”
        நீளம் 7 அங்குலம், பருமன் 2 அங்குலம், நிறை 2 கழஞ்சு.
 
25. #தண்டுச்சலாகை
 
நீளம் 9 அங்குலம், நிறை ½ கழஞ்சு, ஈர்க்குக் கனம்.
 
26. #நயனக்கத்தி
 
        நீளம் 3 அங்குலம், நிறை இரு பண வெடை, ஊசி போன்ற முனையுள்ளது. முனையில் புளியிலை கனம் விட்டு மற்ற பாகங்களெல்லாம் நூலால் சுற்றப்பட்டுள்ளது.
       
இவ்வாறு 26 வகை கருவிகளை அகத்தியர் குறிப்பிட்டுள்ளார். அதுபோல் நாக முனிவரும் பல்வேறு கருவிகளை தனது நூலில் விளக்கியுள்ளார். இந்த கருவிகளை பல்வேறு அசுர சிகிச்சையில் அதாவது காரம், அறுவை, அக்கினி ஆகிய சிகிச்சை முறைகளில் சித்த மருத்துவர்கள் பெரிதும் பயன்படுத்தினர்.
 
        பாண்டிய மன்னனின் #கூன்முதுகை நிமிர்த்தியது, மன்னனின் தலைக்குள் நுழைந்த #தேரையை, தலையை உடைத்து வெளியேற்றியது, போரில் காயம் பட்ட வீரர்களின் #அழுகிய தோலை நீக்கி, வேறிடத்தில் நல்ல தோலை வெட்டி எடுத்து, வைத்து தைத்தது, உடைந்த, வளைந்த #எலும்புகளை சீராக கட்டியது, மீண்டும் உடைத்து #நேராக மாற்றியது போன்ற பல்வேறு குறிப்புகள் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சித்தர் வரலாறு மற்றும் பல்வேறு இலக்கிய நூல்களில் காணப்படுகின்றன.

#தகவல் தொகுப்பு மற்றும் படங்கள்:
சித்த மருத்துவர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை.

சித்தரத்தை மூலிகை பயன்கள்

சித்தரத்தை
சித்தரத்தையில் இரு பிரிவுகள் உள்ளன. அவை
சிற்றரத்தை. பேரத்தை. இவை இந்தியாவில் பயிராகும். இதன் வேர் மருத்துவ குணம் உடையது. மஞ்சளைப் போல், இஞ்சியை போல், சித்தரத்தையும் கிழங்கு வகையை சார்ந்தது.
பயன்கள்

சாதாரண ஜுரம் மற்றும் சுவாச பாதிப்புகள் விலக, சில துண்டுகள் சித்தரத்தையை தூளாக்கி அத்துடன் அதே அளவு கற்கண்டைக் தூளாக்கி இவற்றை, ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, அதில் சிறிதளவு தினமும் பாலில் கலந்து பருகிவர, ஜுரம் மற்றும் சுவாச பாதிப்புகள் யாவும் விலகிவிடும். 
சித்தரத்தை கோழை, கபத்தை அகற்றும். உடல் வெப்பத்தை அகற்றும். பசியை தூண்டும்.

மணம் தருவதும், செரிமான ஊக்கியாகவும் செயல்படுவதுமான சித்திரத்தை பன்னெடுங் காலமாகத் தென்னாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஒரு மூலிகையாகும். சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் இதை கபம், வாதம், வீக்கம், இழுப்பு, இருமல், காய்ச்சல் போன்றவைகளுக்குப் பயன்படுத்துவார்கள் என்றாலும் நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றுவதில் திறன் மிக்கது. நுரையீரல் நுண்குழாய்களை விரிவடையச் செய்து மூச்சு எளிதாக வரச் செய்வதுடன் இக்குழாய்களிலும், மூச்சுக்குழல் மற்றும் தொண்டையிலும் உள்ள சளியை வெளியேற்றுகிறது.

ஒரு காலத்தில் தென்னாடு எங்கும் எல்லா வீட்டு மருந்துப் பெட்டிகளிலும் சித்தரத்தை இடம் பெற்றிருந்தது. கபம் சளி போன்றவை மட்டுமின்றி எல்லாவிதமான மூச்சுக்குழல் தொடர்புடைய நோய்களுக்கும் இது சிறந்த மருந்தாகும். 

சித்தரத்தை ஒரு சிறந்த மணமூட்டியாக இருப்பதால் இதை வாயிலிட்டுச் சுவைக்க வாய் நாற்றம் மறையும். இதன் நறுமணம் காரணமாக இதைப் பல வகை ஆயுர்வேத மருந்துகளில் சேர்ப்பதுண்டு.
உபயோகிக்கும் முறை
இதை உலர்த்தி சிறு துண்டுகளாக வெட்டிய ஒன்றிரண்டு சித்தரத்தையை, மூன்று தம்ளர் தண்ணீரில் இட்டு கொதிக்கவைத்து, தண்ணீர் மூன்றில் ஒரு பங்காக சுண்டிவரும் வேளையில், நீரை எடுத்து வைத்துக் கொண்டு, தினமும் இருவேளை, சில நாட்கள் தொடர்ந்து பருகிவர, வறட்டு இருமலை தணிக்கும்.

நன்றி ; செந்தில்நாதன்

இயற்கையாக கர்ப்பம் தரிக்க பாட்டி வைத்தியம்

'இயற்கையாக கர்ப்பம் தரிக்க பாட்டி வைத்தியம்'

பெண்கள் #கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு பலவித காரணங்கள் இருக்கலாம்.

1) கருப்பையில் புழுக்கள் இருந்தால்
மிளகு, வெள்ளைப்புண்டு, வெள்ளைக்குன்றிமணி வேர், கண்டங்கத்திரி வேர், வெள்ளைச் சாரணை வோ் வகைக்கு 5 காசு எடை எடுத்து துளசிச்சாறு விட்டு அரைத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து வீட்டு விலக்கான மூன்றாம் நாள் காலை மட்டும் கொடுக்க கர்ப்பம் தரிக்கும்.
சீரகம், கடுக்காய் சமன் சேர்த்தரைத்து தண்டில் புசி புணர குழந்தை உண்டாகும்.
புங்கன் வேர் எலுமிச்சையளவு அரைத்து விலக்கான மூன்று நாள் சாப்பிட மலட்டுக்கிருமிகள் செத்துவிடும்.
விழுதி வேர் 2 பலம் இடித்து 1 படி தண்ணீரில் போட்டு அரைக்கால்படியாக காய்ச்சி வடிகட்டி விலக்கான நாட்களில் கொடுக்க மலட்டுப்பூச்சிகள் சாகும்.

2) உறவுக்கு பின் அடி வயிறு குத்தல் , வலி இருந்தால் கருப்பையில் தசை வளர்ந்துள்ளது என்று பொருள். மிளகு, சீரகம் இரண்டையும் கடுகெண்ணெய் விட்டு அரைத்து விலக்கான நாட்களில் சாப்பிட்டு விட்டு விலக்கு முடிந்தபின் தண்டில் தடவி புணரவும்.

3) உறவுக்கு பின் உடல் நடுங்கி மயக்கம் வந்தால் கருப்பை ஜவ்வு தடித்திருக்கும். பெருங்காயத்துடன் நல்லெண்ணெய் சேர்த்தரைத்து விலக்கான நாட்களில் சாப்பிட கொடுத்து, பின் தண்டில் புசி புணர குழந்தை உண்டாகும்.

4) உறவுக்கு பின் குளிரும், சுரமும் இருந்தால் வாயு. இதற்கு கோழிப்பித்து, திப்பிலி, கஸ்தூரி மஞ்சள் சேர்த்தரைத்து தண்டில் புசி புணரவும்.

வேறு சில மருத்துவ குறிப்புகளும் உள்ளன.

கல்யாண முருங்கைப் புவுடன் மிளகு சேர்த்தரைத்து புளியங்கொட்டை அளவு இருவேளை 5 நாட்கள் சாப்பிடவும். 5 நாள் இடைவெளி விட்டு மீண்டும் 5 நாள் சாப்பிட கருப்பை கோளாறுகள் நீங்கி கரு நிற்கும்.

அசோகுப்பட்டை, மாதுளை வேர்ப்பட்டை, மாதுளம் பழ ஓடு சமன் எடுத்து பொடி செய்து 3 சிட்டிகை காலை மாலை வெந்நீரில் 3-4 மாதம் கொடுத்து வர மலடு தீரும்.

இலந்தையிலை 1 பிடி, மிளகு 6, புண்டுபல் 4 அரைத்து விலக்கான 3 நாள் கொடுத்து வர கருப்பை குறைகள் நீங்கி குழந்தை உண்டாகும்.

மாதுளை வேர்ப்பட்டை, மரப்பட்டை, விதை சமன் சூரணம் செய்து 3 கிராம் காலை மாலை வெந்நீரில் கொடுக்க கர்ப்பம் தரிக்கும்.

சித்தாமணக்கெண்ணையில் மஞ்சனத்தி இலைசாறு கலந்து கொடுக்க கரு நிற்கும்.

அரை விராகன் எடை வால்மிளகு, 1 விராகன் எடை ( 3.5g)கற்கண்டு சேர்த்தரைத்து 7நாள் கொடுக்கலாம்.

பொன்னாவரை விதையை பசும்பாலில் போட்டு காய்ச்சி 8 நாள் குடிக்க கர்ப்பம் தரிக்கும்
மிளகு, புண்டு, ஆண்வசம்பு , வேப்பங்கொழுந்து நான்கையும் அரைத்து விலக்கான மூன்று நாளும் மூன்று மாதங்களுக்கு கொடுக்க குழந்தை பேறு கிட்டும்.

நன்றி ; வேலவன்.

Tuesday 2 June 2020

மரங்கள் நடவுசெய்ய தகுந்த இடங்கள் எது?

#மரங்கள்_நடவுசெய்ய_தகுந்த_இடங்கள்_எது??

#செம்மண்
புளி, வேம்பு, முந்திரி, இலந்தை, நாவல், சூபாபுல், மா, வாதநாராயணன், வாகை, முருங்கை, செம்மரம், புங்;கமரம் நடவு செய்யுங்;கள்

#வண்டல்மண்
நெல்லி, இலுப்பை, மூங்கில், கருவேல், வேம்பு, நாவல், புங்கம்

#களிமண்
வேம்பு, புளி, கருவேலம், மஞ்சணத்தி, நாவல், வாதநாராயணன், கொன்றை, இலுப்பை, நெல்லி, வாகை ஏற்றவை

#கரிசல்மண்
பூவரசு, நுணா, வேம்பு புளி, 

#உவர்மண்
வேம்பு புளி, நெல்லி, வெள்வேல், வேலிக்கருவேல், 

#களர்_நிலத்தில்
வேம்பு வெள்வேல், நீர்மருது, நெல்லி, இலுப்பை, சுபாபுல், சீமைக்கருவேல், விளா

#மணற்பாங்கான இடங்களுக்கு
சவுக்கு.  கொடுக்காப்புளி, பூவரசு, புளி,  முந்தரி,  பனை, தென்னை, புன்னை,
 
#ஆற்றுபடுகைமண்
தேக்கு, கொடுக்காப்புளி, தைலம், நீர்மருந்து, நெல்லி, மூங்கில், சவுக்கு, பூவரசு, சூபாபுல், நாவல், நொச்சி, 

#சதுப்புநிலம்  ஏரி குளக்கரைகளில் 
நெல்லி, பூவரசு, வேம்பு, புங்;கம், புளி, நுணா, வாதநாராயணன், மூங்கில், நீர் மருது ஏற்றவை.

வயல் வரப்புகளிலும், தோட்டங்களைச் சுற்றிலும் 
தேக்கு, சூபாபுல், முள்முருங்கை, இலவம், வேம்பு, புங்கம், சவுக்கு, தைலம்

#வீட்டின்முன்புறம்
வேம்பு, புங்கம், 
வீட்டின் பின்புறம்
பலா, முருங்கை, சீதா, பப்பாளி 

#வீட்டின்_இருபக்கங்களிலும்
தேக்கு, பப்பாளி, 

#சாலையோரங்களில்
புளி, வேம்பு, புங்கம், மா, நாவல்

#இருப்புப்பாதைகளில்
புளி, வேம்பு, புங்கம், மா, நாவல்..

நன்றி ; #வயலும்வரப்பும்