Monday 19 September 2022

தமிழில் உள்ள மயங்கொலிச்சொற்கள்

தமிழில் உள்ள மயங்கொலிச்சொற்கள்
தொகுப்பு -இங்கர்சால் 


அணல் - தாடி, கழுத்து
அனல் - நெருப்பு
அணி - அழகு
அனி - நெற்பொறி
அணு - நுண்மை
அனு - தாடை, அற்பம்
அணுக்கம் - அண்டை, அண்மை.
அனுக்கம் - வருத்தம், அச்சம்
அணை - படுக்கை, அணைத்துக்
கொள்ளுதல்
அனை - அன்னை, மீன்
அணைய - சேர, அடைய
அனைய - அத்தகைய
அண்மை - அருகில்
அன்மை - தீமை, அல்ல
அங்கண் - அவ்விடம்
அங்கன் - மகன்
அண்ணம் - மேல்வாய்
அன்னம் - சோறு, அன்னப்பறவை
அண்ணன் - தமையன்
அன்னன் - அத்தகையவன்
அவண் - அவ்வாறு
அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன்
ஆணகம் - சுரை
ஆனகம் - துந்துபி
ஆணம் - பற்றுக்கோடு
ஆனம் - தெப்பம், கள்
ஆணி - எழுத்தாணி, இரும்பாணி
ஆனி - தமிழ் மாதங்களுள் ஒன்று
ஆணேறு -ஆண்மகன்
ஆனேறு - காளை, எருது
ஆண் - ஆடவன்
ஆன் - பசு
ஆணை - கட்டளை, ஆட்சி
ஆனை - யானை
இணை - துணை, இரட்டை
இனை - இன்ன, வருத்தம்
இணைத்து - சேர்த்து
இனைத்து - இத்தன்மையது
இவண் - இவ்வாறு
இவன் - ஆடவன், (அண்மைச் சுட்டு)
ஈணவள் - ஈன்றவள்
ஈனவள் - இழிந்தவள்
உண் - உண்பாயாக
உன் - உன்னுடைய
உண்ணல் - உண்ணுதல்
உன்னல் - நினைத்தல்
உண்ணி - உண்பவன், ஒருவகைப் பூச்சி
உன்னி - நினைத்து, குதிரை
ஊண் - உணவு
ஊன் - மாமிசம்
எண்ண - நினைக்க
என்ன - போல, வினாச்சொல்
எண்ணல் - எண்ணுதல்
என்னல் - என்று சொல்லுதல்
எண்கு - கரடி
என்கு - என்று சொல்லுதல்
ஏண் - வலிமை
ஏன் - வலிமை, ஒரு வினைச்சொல்
ஏணை - தொட்டில்
ஏனை - மற்றது
ஐவணம் - ஐந்து வண்ணம்
ஐவனம் - மலை நெல்
ஓணம் - ஒரு பண்டிகை
ஓனம் – எழுத்துச்சாரியை
கணகம் - ஒரு படைப்பிரிவு
கனகம் - பொன்
கணப்பு - குளிர்காயும் தீ
கனப்பு - பாரம், அழுத்தம்
கணி - கணித்தல்
கனி - பழம், சுரங்கம், சாரம்
கணம் - கூட்டம்
கனம் -பாரம்
கண்ணன் - கிருஷ்ணன்
கன்னன் - கர்ணன்
கண்ணி - மாலை, கயிறு, தாம்பு
கன்னி - குமரிப்பெண், உமை, ஒரு ராசி
கணை - அம்பு
கனை - ஒலி, கனைத்தல்
கண் - ஓர் உறுப்பு
கன் - கல், செம்பு, உறுதி
கண்று - அம்பு
கன்று - அற்பம், இளமரம், குட்டி,கைவளை
கண்ணல் - கருதல்
கன்னல் - கரும்பு, கற்கண்டு
காண் - பார்
கான் - காடு, வனம்
காணம் - பொன், கொள்
கானம் - காடு, வனம், தேர், இசை
காணல் - பார்த்தல்
கானல் - பாலை
கிணி - கைத்தாளம்
கினி - பீடை
கிண்ணம் - வட்டில், கிண்ணி
கின்னம் - கிளை, துன்பம்
குணி - வில், ஊமை
குனி - குனிதல், வளை
குணித்தல் - மதித்தல், எண்ணுதல்
குனித்தல் - வளைதல்
குணிப்பு - அளவு, ஆராய்ச்சி
குனிப்பு - வளைப்பு, ஆடல்
கேணம் - செழிப்பு, மிகுதி
கேனம் - பைத்தியம், பித்து
கேணி - கிணறு
கேனி - பித்துப் பிடித்தவர்
கோண் - கோணல், மாறுபாடு
கோன் - அரசன்
சாணம் - சாணைக்கல், சாணி
சானம் - அம்மி, பெருங்காயம்
சுணை - கூர்மை, கரணை
சுனை - நீரூற்று
சுண்ணம் - வாசனைப்பொடி
சுன்னம் - சுண்ணாம்பு, பூஜ்ஜியம்
சேணம் - மெத்தை
சேனம் - பருந்து
சேணை - அறிவு
சேனை - படை
சோணம் - பொன், சிவப்பு, தீ,சோணகிரி
சோனம் - மேகம்
சோணை - ஒரு நதி, சேரன் மனைவி
சோனை - மழைச்சாரல், மேகம்
தண் - குளிர்ச்சி
தன் - தன்னுடைய
தணி - தணித்தல்
தனி - தனிமை
தாணி - தான்றிமரம்
தானி - இருப்பிடம், பண்டசாலை,
தாணு - சிவன், தூண், நிலைப்பேறு
தானு - காற்று
திணை - ஒழுக்கம், குலம்
தினை - தானியம், ஒருவகைப்புன்செய்ப்பயிர்
திண்மை - உறுதி
தின்மை - தீமை
திண் - வலிமை
தின் - உண்
துணி - துணிதல், கந்தை
துனி - அச்சம், ஊடல் நீட்டித்தல்
தெண் - தெளிவு
தென் - தெற்கு, அழகு
நண்பகல் - நடுப்பகல்
நன்பகல் - நல்லபகல்
நணி - அணி (அழகு)
நனி - மிகுதி
நாண் - வெட்கம், கயிறு
நான் - தன்மைப் பெயர்
நாணம் - வெட்கம்
நானம் - புனுகு, கவரிமான்
பணி - வேலை, கட்டளையிடு
பனி - துன்பம், குளிர், சொல், நோய்
பணை - முரசு, உயரம், பரந்த
பனை - ஒருவகை மரம்
பண் - இசை
பன் - அரிவாள், பல
பண்ணை - தோட்டம்
பன்னை - கீரைச்செடி
பண்ணுதல் - செய்தல்
பன்னுதல் - நெருங்குதல்
பண்ணி - செய்து
பன்னி - சீப்பு, பனிநீர், மனை, சணல்
பண்மை - தகுதி
பன்மை - பல
பணித்தல் - கட்டளையிடுதல்
பனித்தல் - துளித்தல், தூறல், விரிந்த
பட்டணம் - நகரம்
பட்டினம் - கடற்கரை நகர்
பாணம் - நீருணவு
பானம் - அம்பு
புணை - தெப்பம்
புனை - இட்டுக்கட்டுதல், கற்பனை
புண் - காயம்
புன் - கீழான
பேணம் - பேணுதல்
பேனம் - நுரை
பேண் - போற்று, உபசரி
பேன் - ஓர் உயிரி
மணம் - வாசனை, திருமணம்
மனம் - உள்ளம், இந்துப்பு
மணை - மரப்பலகை, மணவறை
மனை - இடம், வீடு
மண் - தரை, மண்வகை
மன் - மன்னன், பெருமை
மண்ணை - இளமை, கொடி வகை
மன்னை - தொண்டை, கோபம்
மாணி - அழகு, பிரம்மசாரி
மானி - மானம் உடையவர்
மாண் - மாட்சிமை
மான் - ஒரு விலங்கு
முணை - வெறுப்பு, மிகுதி
முனை - முன்பகுதி, துணிவு,முதன்மை
வணம் - ஓசை
வனம் - காடு, துளசி
வண்மை - வளப்பம், கொடை
வன்மை - உறுதி, வலிமை
வண்ணம் - நிறம், குணம், அழகு
வன்னம் - எழுத்து, நிறம்
வாணகம் - அக்கினி, பசுமடி
வானகம் - மேலுலகம்
வாணம் - அம்பு, தீ, மத்தாப்பு
வானம் - ஆகாயம், மழை
வாணி - கலைமகள், சரஸ்வதி
வானி - துகிற்கொடி

அலகு - பறவையின் மூக்கு, அளவு, ஆண்பனை
அழகு - வனப்பு
அளகு - சேவல், பெண்கூகை
அலகம் - திப்பிலி
அளகம் - வெள்ளெருக்கு, நீர்
அலகை - கற்றாழை, பேய்
அளகை - அளகாபுரி, பெண்
அழம் - பிணம்
அலம் - கலப்பை
அளம் - உப்பு
அலத்தல் - அலட்டல், அலைதல்
அளத்தல் - அளவிடுதல், மதித்தல்
அலவன் - ஆண்நண்டு
அளவன் - அளப்பவன், உப்பு எடுப்போன்
அழி - அழித்துவிடு
அலி - பேடி, காகம், விருச்சிகராசி
அளி - கருணை, கள், வண்டு
அல்லல் - துன்பம்
அள்ளல் - வாரி எடுத்தல்
அழை - கூப்பிடு
அலை - கடல், நீரலை, அலைதல்
அளை - தயிர், நண்டு, புற்று
அவல் - பள்ளம், உணவுப் பொருள்
அவள் - பெண் (சேய்மைச்சுட்டு)
அல் - இரவு
அள் - அள்ளி எடு, நெருக்கம்
உலவு - நட
உளவு - ஒற்று
உழவு - கலப்பையால் உழுதல்
உழி - இடம், பொழுது
உளி - தச்சுக் கருவிகளுள் ஒன்று
உலு - தானியப் பதர்
உழு - நிலத்தை உழு
உளு - உளுத்துப் போதல்
உலை - கொல்லன் உலை, நீருலை
உழை - பாடுபடு, பக்கம், கலைமான்
உளை - பிடரி மயிர், சேறு, தலை
உழுவை - புலி
உளுவை - மீன்வகை
எல் - கல், மாலை, சூரியன்
எள் - எண்ணெய்வித்து, நிந்தை
எலு - கரடி
எழு - எழுந்திரு, தூண்
ஒலி - சப்தம், நாதம், காற்று
ஒழி - அழி, தவிர், கொல், துற
ஒளி - வெளிச்சம், மறை(த்துவை)
ஒல் - ஒலிக்குறிப்பு
ஒள் - அழகு, உண்மை, அறிவு, ஒளி
கலகம் - போர், அமளி, இரைச்சல்
கழகம் - சங்கம், கூட்டமைப்பு
கழங்கம் - கழங்கு, விளையாட்டுக்கருவி
களங்கம் - குற்றம், அழுக்கு
கலி - கலியுகம், பாவகை, சனி
கழி - கோல், மிகுதி, உப்பளம்
களி - மகிழ்வு, இன்பம்
கலை - ஆண்மான், சந்திரன், கல்வி
கழை - மூங்கில், கரும்பு,புனர்பூசம்
களை - அழகு, புல் பூண்டு, அயர்வு
கல் - மலை, பாறை, சிறுகல்
கள் - மது, தேன்
கலம் - கப்பல், பாத்திரம்
களம் - இடம், போர்க்களம், இருள்
காலி - ஒன்றுமில்லாதது,வெற்றிடம்
காளி - துர்க்கை, மாயை
காழி - சீர்காழி (ஊர்)
காலை - பொழுது,விடியற்பொழுது
காளை - காளைமாடு, இளைஞன்
காலம் - பொழுது, நேரம்
காளம் - எட்டிமரம், சூலம்
கிலி - அச்சம், பயம்
கிழி - கிழித்துவிடு, முடிப்பு
கிளி - பறவை, வெட்டுக்கிளி
கிழவி - முதியவள், மூதாட்டி
கிளவி - சொல், மொழி
குலி - மனைவி
குழி - பள்ளம், பாத்தி, பன்னீரடிச்சதுரம், வயிறு
குளி -நீராடு
குலம் -ஜாதியின் உட்பிரிவு, இனம்,குடி
குளம் -நீர்நிலை, கண்மாய், ஏரி
குலை - கொத்து, மனம்
தடுமாறுதல்
குழை - குண்டலம், குழைந்துபோதல்
குலவி - மகிழ்ந்திருத்தல்
குழவி - குழந்தை, இளமை, யானைக்
கன்று அம்மிக்கல்
குளவி - ஒரு வண்டு, காட்டுமல்லி
குலிகம் -சிவப்பு, இலுப்பை
குளிகம் -மருந்து, மாத்திரை
குவலை -துளசி, கஞ்சா
குவளை - குவளை மலர், சொம்பு,
ஒரு பேரெண்
கூலம் - தானியம், கடைத்தெரு
கூளம் - குப்பை
கூலி - ஊதியம்
கூளி(யார்) - பேய், காளை, வீரர்
கொலு - அரசசபை, திருவோலக்கம்
கொழு - மழு, கலப்பையில் மாட்டும்பெரிய இரும்பு, கொழு கொழுத்துஇருத்தல்
கொளு - புறப்பொருள்வெண்பாமாலைத் துறை,பொருந்துவாய்
கொலை - கொல்லுதல்
கொளை - கோட்பாடு, பயன்,இசைப்பாட்டு, தாளம்
கொல்லாமை - கொலை செய்யாமை
கொள்ளாமை - ஏற்றுக்கொள்ளாமை,அடங்காமை
கொல்லி - உயிர்க்கொல்லி, ஒருமலை
கொள்ளி - கொள்ளிக்கட்டை
கொல்லை - புழக்கடை, தரிசுநிலம்
கொள்ளை - திருடுதல், மிகுதி
கோலம் - அழகு, அலங்காரம்
கோளம் - உருண்டை, வட்டம்
கோலை - மிளகு
கோழை - வீரமற்றவன், கபம்
கோளை - குவளை, எலி
கோல் - மரக்கொம்பு, அம்பு,குதிரைச்சம்மட்டி, தண்டு, யாழ்நரம்பு
கோள் - கிரகம்
கோலி - இலந்தை, விளையாடும்குண்டு
கோழி - உறையூர், விட்டில், பறவை
கோளி - பூவாது காய்க்கும் மரம்,ஆத்தி, ஆலம்
சலம் - நீர், சிறுநீர், குளிர்
சளம் - பொய், துன்பம், வஞ்சனை
சாலை - பாடசாலை, பொதுமண்டபம், அறக்கூடம்
சாளை - கடல்மீன்
சாழை - குடிசை, குச்சு
சுழித்தல் - சுழலுதல், நீர்ச்சுழல்
சுளித்தல் - முறித்தல், சினத்தல்
சூலை - வயிற்று நோய்
சூளை - செங்கல் சூளை
சூல் - கர்ப்பம்
சூழ் - சூழ்ந்துகொள், சுற்று
சூள் - சபதம்
சேல் - மீன்
சேள் - மேலிடம்
சோலி - ரவிக்கை, காரியம்
சோழி - பலகரை
சோளி - கூடைவகை
தவளை - ஓர் உயிரி
தவலை - பாத்திரம்
தலம் - இடம், பூமி
தழம் - தைலம்
தளம் - மேடை, மாடி வீட்டின்
அடுக்கு
தழை - தாவர உறுப்பு
தலை - மண்டை
தளை - விலங்கு
தாலம் - உலகம், தேன்
தாளம் - இசைக்கருவி, ஜதி
தாலி - மங்கலநாண்
தாழி - கடல், குடம், பரணி
பெரியபாண்டம்
தாளி - தாளித்தல், பனைதால் -
நாக்கு, தாலாட்டு
தாழ் - தாழ்தல், குனிதல்
தாள் - முயற்சி, பாதம், ஆதி, படி,
காகிதம்.
துலக்கம் - ஒளி, தெளிவு
துளக்கம் - அசைவு, வருத்தம், கலக்கம்,
ஒளி
துலம் - கோரை, கனம்
துளம் - மாதுளை, மயிலிறகு
துலி - பெண் ஆமை
துழி - பள்ளம்
துளி - மழைத்துளி, திவலை,
சிறிய அளவு
துலை - ஒப்பு, கனம்
துளை - துவாரம், வாயில்
தூலி - எழுதுகோல், எழுத்தாணி
தூளி - புழுதி, குதிரைதெழித்தல் - கோபித்தல், முழங்குதல்,அதட்டுதல், நீக்குதல், 
தெல் - அஞ்சுதல்
தெள் - தெளிவான
தோலன் - அற்பன்
தோழன் - நண்பன்
தோலி - பிசின், ஒருவகை மீன்
தோழி - பாங்கி, நட்பால்
நெருக்கமானவள்
தோளி - அவுரி (ஒருவகை
குத்துச்செடி), அரக்கு
தோல் - சருமம், வனப்பு, விதையின்
மேல்பகுதி
தோள் - புயம், வீரம்
நலன் - நலம், அழகு, புகழ், இன்பம்,
நன்மை, குணம்,
நளன் - தமயந்தியின் கணவன், ஓர் அரசன்
நலி - நோய்
நளி - குளிர்ச்சி, பெருமை
நலிதல் - நலிந்துபோதல், தோற்றல்
நளிதல் - செறிதல், பரத்தல், ஒத்தல்
நல் - நல்ல
நள் - இரவு, நடு, நள்ளிரவு
நாலம் - பூவின் காம்பு
நாழம் - இழிவுரை, வசவு
நாளம் - பூந்தண்டு, உட்துளை,
ரத்தநாளம்
நாலி - முத்து, கந்தை ஆடை
நாழி - உள்தொளையுள்ள பொருள்,
ஒருபடி, ஏர், அம்பறாத்துணி, நாடா,
பூரட்டாதி
நாளி - கல், நாய்
நாலிகை - மூங்கில், அடுப்புச்சந்து
நாழிகை - வட்டம், கடிகாரம்
நால் - நான்கு
நாழ் - குற்றம், செருக்கு
நாள் - காலம், திதி
நீலம் - ஒரு நிறம், கருங்குவளை,இருள்
நீளம் - நெடுமை (நீண்ட), தாமதம்
நீல் - நீலம், காற்று
நீள் - நீளம், ஒளி
பலம் - கிழங்கு, வலி, நெற்றி, சக்தி,சேனை, வன்மை, உறுதி, எடை
பழம் - கனி, முதுமை
பல்லி - சிற்றூர், இடையர் ஊர்,உழுகருவி, ஓர் உயிரி,வண்டியுறுப்பு
பள்ளி - இடைச்சேரி, புத்தர்கோயில்,குறும்பன், மருதநிலத்தூர், படுக்கை,
பலி - பலியிடுதல், பலியுயிர்
பழி - குற்றம்
பால் - திரவ உணவு, பகுப்பு, இயல்பு
பாழ் - வீண், வெறுமை
பீழை - துன்பம்
பீளை - கண் அழுக்கு
புலி - காட்டு விலங்கு
புளி - புளியமரம், புளியங்காய்
புலை - புலால், ஊன், கீழ்மை
புழை - துளை, வாயில், நரகம்
புகல் - அடைக்கலம்
புகழ் - பெருமை
புல் - அற்பம், கலவி, புல்பூண்டு
புள் - பறவை
பூலம் - புற்கட்டு
பூளம் - பூவரசு
பூழை - துவாரம், கோபுரவாயில்
பூளை - பூளைச்செடி, இலவம்பஞ்சு
பாலி - தானியக் குவியல், தூற்றாததானியம்
பாழி - கொடுத்தல், ஈதல்
பாளி - வரப்பு, எல்லை
பாலிவு - அழகு, நிறைவு
பாழிவு - பொழிதல், மேன்மை
போலி - பொய், வஞ்சகம், ஒப்பு
போளி - இனிப்புப் பண்டம்
பொலிதல் - செழித்தல், மங்கலமாதல்
பொழிதல் - ஈதல், கொடுத்தல்,
சொரிதல், பெய்தல், நிறைதல்
மலம் - அழுக்கு, பாவம்
மழம் - இளமை, குழந்தை
மலை - குன்று, பொருப்பு,
வெற்பு,சிகரம்
மழை - மழைநீர், குளிர்ச்சி, மேகம்
மலைத்தல் - வியத்தல், தடுமாறுதல்
மழைத்தல் - மழை பெய்திருத்தல்,குளிர்ந்திருத்தல்
மல்லிகை - மாலை, கழுத்தணி,வரிசை
மாளிகை - அரண்மனை, கோயில்
மாலை - அந்திப்பொழுது,பூமாலை
மாழை - மயக்கம், இளமை, அழகு
மாளை - புளியம்பட்டை
மால் - திருமால், மயக்கம், அருகன்,இந்திரன், பெருமை, மேகம்
மாள் - இறத்தல், சாதல் (இற,சாவு)
முலை - உடலிலுள்ள ஓர் உறுப்பு
முழை - குகை
முளை - முளைத்தல், தறி, ஆப்பு,அங்குசம், இளமை, தண்டு, மூங்கில்
முழி - விழி (விழித்தல்)
முளி - மரக்கணு, விரல்முளி,வாட்டம்
மூலி - மூலிகை, மரம், வேருள்ளது
மூழி - அகப்பை, சோறு, நீர்நிலை,கோணம்
மூலை - இரு கோடுகள் சந்திக்கும்இடம்
மூளை - மண்டைக்குள் இருக்கும் ஓர்உறுப்பு(முதன்மைப் பகுதி)
மெல்ல - மென்று தின்பது
மெள்ள - மெதுவாக
மாலி - மொளலி கிரீடம்
மாழி - மேழி, கலப்பை
மாளி - துணிமூட்டை
வலம் - சுற்றுதல், வலப்பக்கம், வெற்றி
வளம் - வளமை, அழகு
வலவன் - திருமால்
வளவன் - சோழன், வேளாளன்
வலன் - ஓர் அரசன், வெற்றி, வல்லவன்
வளன் - செழுமை, வளப்பன்
வழப்பம் - வழக்கம், இயல்பு
வளப்பம் - வளமை, செழிப்பு
வலி - நோய், வலிமை, துன்பம்
வழி - நெறி, பாதை, தடம், உபாயம்
வளி - காற்று
வலை - மீன் முதலியன பிடிக்கும்ஒரு கருவி
வழை - சுரபுன்னை, புதுமை,இளமை
வளை - கை வளையல், எலி வளை
வல் - வலிமை, விரைவு, திறமை
வள் - ஒலிக்குறிப்புச் சொல்
வல்லம் - வாழை, ஓர் ஊர்
வள்ளம் - மரக்கலம், படகு, அளவு,தொன்னை
வல்லி - பூமி, பெண், பிரிதல், படர்கொடி
வள்ளி - வள்ளியம்மை, ஆபரணம்,சந்திரன்
வலு - வலிமை, பலம், பற்று
வழு - குற்றம், தவறு, பழிப்புரை,கேடு
வளு - இளமை, இளைய
வாலி - கிஷ்கிந்தை அரசன்
வாழி - வாழ்க (எனவாழ்த்துதல்)
வாளி - அன்பு, வட்ட வாள், வீரன், ஒருகாதணி
வாலை - இளம்பெண், திராவகம்
வடிக்கும் பாத்திரம், ஒரு சக்தி
வாழை - வாழைமரம்
வாளை - வாளை மீன்
வால் - விலங்குகளின் ஓர் உறுப்பு
வாழ் - வாழ்வாயாக (என்றுவாழ்த்துதல்)
வாள் - போர்வாள், நீண்டகத்தி
விலா - விலா எலும்பு
விழா - திருவிழா, கொண்டாட்டம்
விளா - இளமை, வெண்மை, நிணம்
விழி - கண், கருவிழி
விளி - கூப்பிடு, அழை,
ஏழிசையில் ஒன்று
விலை - மதிப்பு, விலைக்கு விற்றல்
விழை - விரும்பு, ஆசைப்படு
விளை - ஒரு மீன்வகை, விளைவி(விளைச்சல்)
விலக்கு - விலக்கி விடு, தவிர்
விளக்கு - விளக்கமாகச் சொல், தீபம்
விலங்கு - பூட்டு, கை, கைகளைப்
பிணிக்கும் கருவி, மிருகம்
விளங்கு - திகழ் (திகழ்தல்),
சிற்றரத்தை (மூலிகை வகை)
வெல்லம் - சக்கரைக்கட்டி, கருப்பட்டி
வெள்ளம் - மிதமிஞ்சிய நீர்பெருக்கு
வேலம் - வேலமரம், தோட்டம்
வேழம் - யானை, கரும்பு, மூங்கில்
வேல் - வேலாயுதம்
வேள் - வேளிர் குலத்தவன், மன்மதன்,ஆசை
வேலை - பணி, கடல்
வேளை - பொழுது, நேரம்,ஒருவகைக் கீரை

அர - பாம்பு
அற - தெளிய, முற்றுமாக
அரவு - பாம்பு
அறவு - அறுதல், தொலைதல்
அரம் - ஒரு கருவி
அறம் - தர்மம், நீதி, கற்பு, புண்ணியம்,கடமை, அறநூல், துறவறம்
அரி - திருமால், அரிசி, அழகு,
அரிதல், பன்றி, வண்டு, கடல், தகடு,சிவன்
அறி - அறிந்துகொள்
அரிய - கிடைத்தற்கு அரிதான,கஷ்டமான
அறிய - அறிந்துகொள்ள,தெரிந்துகொள்ள
அரன் - சிவன்
அறன் - தர்மம், அறக்கடவுள்
அரிவை - பெண் (7 பருவத்துள் ஒன்று.18 வயதுக்கு மேல் 25 வயதுக் குட்பட்ட
பெண்)
அறிவை - அறிவாய்
அருகு - புல்வகை (அருகம்புல்),அண்மை
அறுகு - குறைந்து போதல்
அக்கரை - அந்தக் கரை
அக்கறை - ஈடுபாடு
அரை - பாதி, மேகலை, வயிறு, ஒருமரம்
அறை - வீட்டின் பகுதி, அடி, பாத்தி,
ஒலி, பாசறை, சொல், குகை,
வஞ்சனை, மாளிகை
அரைதல் - தேய்தல்
அறைதல் - அடித்தல், சொல்லுதல்
அப்புரம் - அந்தப் பக்கம்
அப்புறம் - பிறகு
அர்ப்பணம் - உரித்தாக்குதல்
அற்பணம் - காணிக்கை செலுத்துதல்
அரு - உருவமற்றது
அறு - துண்டித்துவிடு,
அறுத்துவிடு
அருமை - சிறப்பு, அன்பு, இன்மை,சுலபத்தில் கிடைக்காதது
அறுமை - நிலையின்மை, ஆறு
ஆரு - குடம், நண்டு
ஆறு - ஒரு எண், வழி, சமயம், தன்மை,
நதி, ஒழுக்கம், பக்கம், நிலை
ஆர - நிறைய, அனுபவிக்க
ஆற - சூடு ஆற (குறைய)
ஆரல் - ஒருவகை மீன்
ஆறல் - சூடு குறைதல்
இரத்தல் - யாசித்தல்
இறத்தல் - இறந்துபோதல், சாதல்
இரகு - சூரியன்
இறகு - சிறகு
இரக்கம் - கருணை
இறக்கம் - சரிவு, மரணம்
இரங்கு - கருணைகாட்டு
இறங்கு - கீழிறங்கி வா
இரவம் - இரவு
இறவம் - இறால் மீன்
இரவி - சூரியன், எருக்கு, மலை,
வாணிகத்தொழில்
இறவி - இறத்தல்
இரவு - இரவு நேரம், யாசித்தல்
இறவு - மிகுதி, இறால்மீன், இறுதி,
தேன்கூடு, சாவு, முடிவு, நீக்கம்
இரை -ஒலி, உணவு
இறை - கடவுள், அணு, அரசன், ரேகை,
சந்து, கடமை, தலைமை, விடை,
உயரம், மூலை
இரு - இரண்டு, பெரிய, உட்கார்,
அமர்ந்துகொள்
இறு - ஒடி, கெடு, சொல்லு
இரும்பு - கடிவாளம், கிம்புரி,
ஆயுதம், ஓர் உலோகம்
இறும்பு - வண்டு, சிறுமலை
இருப்பு - கையிருப்பு, இருப்பிடம்,
ஆசனம், நிலை, பொருள், முதல்
இறுப்பு - வடிப்பு
இருத்தல் - அமர்ந்திருத்தல்,
காத்திருத்தல்
இறுத்தல் - வடித்தல், செலுத்தல்,
எறிதல், கடன் கொடுத்தல், பதில்கூறல்,
முடித்தல், முறித்தல்
இருக்கு - மந்திரம், ரிக் வேதம்
இறுக்கு - அழுத்து, இறுக்கிக்கட்டு
இரைத்தல் - ஒலித்தல்,
மூச்சுவாங்குதல்
இறைத்தல் - சிதறுதல், மிகு செலவு
உரவு - அறிவு, ஒலி, மிகுதி, வலி,
ஞானம், விடம்
உறவு - நட்பு, சுற்றம், எறும்பு
உரவோர் - அறிஞர், முனிவர்
உறவோர் - சுற்றத்தார், அடைந்தோர்
உரி - தோல், மரப்பட்டை,
அரைப்படியளவு,
உரிச்சொல்,கொத்துமல்லி
உறி - உறிவெண்ணெய், தூக்கு
உரு - வடிவம், அழகு, உடல், மரக்கலம்,
நிறம், அச்சம், பெருமை, மேன்மை
உறு - மிகுதி
உருக்குதல் - இளக்குதல், மெலியச்
செய்தல்
உறுக்குதல் - சினத்தல், அதட்டுதல்
உரை - புகழ், விளக்கவுரை, நூல்,
பொன்மாற்று, அறிவுரை, சொல்
உறை - இடம், பண்டம், பொருள்,
மருந்து, பாலில் இடும் பிரை, துளி,
மழை, ஆடை, துன்பம், பாம்பின்
விஷப்பை
உரைப்பு - தங்குதல், தோய்தல்
உறைப்பு - காரம், கொடுமை
உரையல் - சொல்லல்
உறையல் - மாறுபாடு, பிணக்கு
உரிய - உரிமையான
உறிய - உறிஞ்ச
ஊரல் - ஊர்தல், கிளிஞ்சல், ஒருவகைப்
பறவை
ஊறல் - தினவு, ஊற்று, சாறு,
வருவாய், ஊறுதல், களிப்பு
ஊரு - அச்சம், தொடை
ஊறு - இடையூறு, துன்பம், காயம்
உறுதல், தீண்டல், குற்றம், புண்,
கொலை
எரி - தீ, கார்த்திகை, பிரபை,
இடபராசி, நெருப்பு, நரகம், வெம்மை,
கந்தகம்
எறி - விடுதல், எறிதல், குறிப்பாகக்
கூறுதல்
ஏர - ஓர் உவமஉருபு
ஏற - மிகுதி, உயர (ஏறுதல்)
ஏரி - நீர்நிலை, குளம்
ஏறி - உயர்ந்த, மேலே ஏறி
ஒரு - ஒன்று, ஒப்பற்ற, ஆடு
ஒறு - தண்டி, அழி, இகழ்
ஒருத்தல் - ஆண் விலங்குகளின்
பொதுப்பெயர்
ஒறுத்தல் - தண்டித்தல், துன்புறுத்தல்,
வருத்துதல், வெறுத்தல், கடிதல்,
இகழ்தல், குறைத்தல்
ஒருவு - நீங்கு
ஒறுவு - வருத்தம், துன்பம்
கரடு - மரக்கணு, மணிக்கட்டு,
முருடு, வளர்ச்சியற்றது
கறடு - தரமற்ற முத்து
கரம் - கிரணம், விஷம், செயல், கை,
கழுதை
கறம் - கொடுமை, வன்செய்கை
சிகரம் - மலை உச்சி

Sunday 11 September 2022

kke அக்பர்ஜி ஜீவசக்தி ஐயாவின் மருத்துவ குறிப்புகள்

குறைந்த ரத்த அழுத்தம் குணமாக
இதயத்திற்கு ரத்தம் சரிவர செல்லாத காரணத்தினால் LOW BP என்ற குறைந்த ரத்த அழுத்தம் உருவாகின்றது.
 மூளைக்கும் சரி வர ரத்தம் செல்லாது. அதனால் தலைகனம், தலைசுற்றல், வாந்தி, மயக்கம், அதிக நாவறட்சி, சோம்பல், பலவீனம், கண்பார்வை மங்குதல், உடல் சில்லிட்டு போதல், மூச்சு வாங்குதல், கவனமின்மை, வேலைத்திறன் குறைந்துபோதல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
சிஸ்டாலிக் அழுத்தம் 90ம் டயஸ்டாலிக் அழுத்தம் 60க்கும் கீழ் சென்றால் குறை ரத்த அழுத்தம் எனப்படும். இதற்கு கீழே சென்றால் மிகவும் ஆபத்தான நிலை ஏற்படும். இதற்கு அவசர சிகிச்சையாக 1 டம்ளர் நீரில் 3 கிராம் சோற்றுப்பை கரைத்து குடித்தால் ரத்த அழுத்தம் உயரும். இதற்கு தற்காலிக உடனடி நிவாரணி இதுவே. ஆனால் நமக்குநிரந்தர தீர்வே தேவை.
குணப்படுத்தும் மருந்து

IMP COPS கம்பெனியில் கருப்பு விஷ்ணு சக்கர மாத்திரை தயார் செய்து விற்பனை செய்கின்றனர்.

அதனை மதிய உணவுக்கு அரைமணி நேரத்திற்கு பின் 1 மாத்திரை வீதம் 15 நாள் சாப்பிட்டு வர LOW BP என்ற குறைந்த ரத்த அழுத்தம் குணமாகும்.
90% சதவிகித நோயாளியை இது குணப்படுத்துகின்றது. நீண்ட நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.


🌼🌼🌼🌼🌼🌼🌼

முப்பூர பதங்கம்

பொதுவாக பதங்கங்கள் மிகவும் வீரியமானது. மிக விரைவில் பலன் தருபவவை. அவற்றில் ஒன்று முப்புர பதங்கம்.

சுத்தி செய்த வீரம் 10 கிராம்
சுத்தி செய்த பூரம் 10 கிராம்
சுத்தி செய்த லிங்கம் 10 கிராம்
இவைகளை கல்வதிலிட்டு 3 மணிநேரம் நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
தூள் செய்த அயோடின் கலவாத கல்லுப்பை ஒரு சட்டியில் இட்டு சடசடப்பு அடங்கும்வரை நன்றாக வறுக்கவேண்டும்.கல்லுப்புப்பானது சுண்ணத்தன்மையை அடையும்வரை வறுக்கவேண்டும்.
வாய் பொருத்தமான இரண்டு பதங்கச் சட்டிகளை எடுத்து அதில் ஒன்றின் உட்பக்கம் குப்பைமேனி சாற்றினை பூசி உலரவைக்க வேண்டும். இதுபோல் 3 முறை பூசி உலரவைக்க வேண்டும்
அல்லது அந்தசட்டியில் 2 அல்லது 3 முறை அரிசியை சமைக்க வேண்டும். இது போல் செய்ய சட்டியில் உள்ள நுண்ணிய துவாரங்கள் அடைபட்டுபோகும். இதனால் மருந்தின் ஆவி வெளியேறுவது தடுக்கப்படும். ஒரு சட்டியில் வறுத்த உப்புத்தூளை கொட்டி அதன்மேல் அரைத்த மருந்துக் கலவையை கொட்டவேண்டும். அந்தசட்டியின் மேல் முன்பு தயார் செய்த இன்னொரு சட்டியை கவிழ்த்துப் பொருத்தி 7 சீலைமண் வலுவாக செய்து உலர்த்தவேண்டும். நன்றாக உலர்ந்த பின்பு அடுப்பேற்றி ஒரு மணிநேரம் தீபாக்கினியாகவும் அடுத்த ஒரு மணிநேரம் கமலாக்கினியாகவும் அடுத்த 3 மணிநேரம் கடும் தீயாகவும் எரிக்க வேண்டும். 24 மணிநேரம் ஆறவிட்டு நன்றாக குளிர்ந்த பின் சீலையை மெதுவாகப் பிரித்து மேல்சட்டியில் பரவி படிந்துள்ள பதங்கத்தை சேகரித்து பத்திரப்படுத்தவும். கீழ் சட்டியின் சுவர்களிலும் சற்று படிந்திருக்கும். அந்த பதங்கத்தையும் சேகரித்துக்கொள்ளவும்.
திரிகடுகு அல்லது ஏதாவது கபசூரணத்தில் 100 கிராம் எடுத்து அதனுடன் 2 கிராம் பதங்கத்தை சேர்த்து நன்றாக அரைத்து 500 MG கேப்சூலில் அடைத்துக்கொள்ளவும்.
இதனை காலை உணவுக்கு 1 மணிநேரம் முன் 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 20 சொட்டுகள் விளக்கெண்ணெய் கலந்து அதில் 1 மாத்திரை சாப்பிட வேண்டும். அல்லது இரவு உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு பின் இதுபோல் சாப்பிடலாம். ஒரு நாளைக்கு ஒரு மாத்திரை போதும். 10 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு 3 நாட்கள் இடைவெளிவிட்டு மீண்டும் 10 நாட்கள் சாப்பிட வேண்டும். மொத்தம் 30 மாத்திரைகள் சாப்பிட ரத்தக்குழாயில் எங்கு அடைப்புகள் இருந்தாலும் கரைந்துவிடும். இதயத்தில் வலி மற்றும் இறுக்க உணர்வு உள்ளவர்களுக்கு ஒரு நாள் மருந்தில் மாறுதல் தெரியும், வலி ஒரே நேர மருந்திலேயே குறைந்துவிடும். அற்புதமான மருந்து இது.

நமது தயாரிப்பான ROOT CLEANER என்ற ரத்தக்குழாயில் உள்ள அடைப்புகளை கரைக்கும் HEART DROPS உடன் இணைந்து சாப்பிட்டு வர இதுபோன்ற பலன்கள் விரைவில் கிடைக்கும். கொலஸ்டிரால் அடைப்புகள், ரத்த உறைவு துணுக்குகளால் ஏற்பட்ட அடைப்புகள் போன்றவற்றை மிக விரைவில் கரைக்கும். STENOSIS என்ற கால்சியம் அடைப்புகளை கரைக்க சற்று தாமதமாகும். இதுநாள்வரை STENOSIS என்ற சுண்ணாம்பு படிமானத்தை கரைக்க ROOT CLEANERல் எந்த மூலிகையை சேர்க்கப்படவில்லை. ஆனால் இந்த மாதம் முதல் அதில் புதியதாக இன்னொரு மூலிகை சேர்க்கப்பட்டுள்ளது. இது எல்லாவகை அடைப்புகளையும் கரைத்துவிடும் வல்லமை படைத்தது. STENOSIS அடைப்பு ஏற்பட்டால் ஆங்கில மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கே பரிந்துரைப்பார்கள். ஆனால் மக்களின் அமோக ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்ற ROOT CLEANER         STENOSIS ம் மெதுமெதுவாக கரைத்துவிடும்.
மும்பூர பதங்கமும், ROOT CLEANER ம் சேர்த்து சாப்பிட்டு வர ரத்த குழாய்களில் எங்கு அடைப்புகள் இருந்தாலும் கரைத்துவிடும்
தற்போது ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளே பிரதான நோயாக உள்ளது. இதனை சித்த மருத்துவர்கள் மிக சுலபமாக குணப்படுத்தலாம்.
ரத்தக்குழாயில் உண்டாகும் அடைப்புகளை கரைக்க ஆங்கிலமருந்துகளை சாப்பிடுபவர்களும் நமது சித்த மருந்துகளை சாப்பிடலாம். இதனால் மிக விரைவில் பலன் கிடைக்கும்.
ROOT CLEANER தயார் செய்யும் முறையை எனது முகநூல் பக்கத்தில் முன்பே தெளிவாகக் கூறி உள்ளேன். இது நீராவி வடித்தல் முறையில் தயார் செய்வதனால் என்னால் அதிக அளவில் தயார் செய்ய இயலவில்லை. ஆனால் மக்களின் ஆதரவும், தேவையும் அதிகமாக உள்ளது. அதனால் சிலசமயம்  ROOT CLEANER கேட்கும் மருத்துவர்களுக்கு என்னால் சரியான சமயத்தில் அனுப்ப முடிவதில்லை. தாமதமாக அனுப்ப நேரிடுகின்றது.
அதனால் திறமை உள்ள மருத்துவர்கள் இதனை தயார் செய்துகொள்ளவும். இந்த மருந்துகளுக்கு எதிர்காலத்தில் எதிர்பாராத அளவுக்கு வரவேற்பு இருக்கும்.

தகவல்தொடர்புக்கு
KKE அக்பர்ஜி
ஜீவசக்தி ஹெர்பல் கிளினிக்
145 மாணிக்கவாசகர் காலணி
ஈரோடு - 2
கைபேசி: 9443014894
✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

சிறுநீரக கற்கள் கரைய

படிகாரம் 1 பங்கு வெடி உப்பு 1 பங்கு நவாச்சாரம் 1/4 பங்கு இந்த மூன்றையும் சேர்த்தரைத்து வாலையில் வடித்துக் கொள்ளவும் இதில் நவாச்சாரத்திற்கு பதில் சயின்டிபிக் கடையில் விற்கும் அம்மோனியம் குளோரை டை சேர்த்தல் நன்று

வாலையில் வடித்த திராவகத்தை 1 டம்ளர் நீரில் 10 சொட்டுகள் கலந்து உணவுக்கு 1 மணி முன் சாப்பிடவும் இது போல் 3 நேரமும் சாப்பிட்டு வரவும் 
சிறுநீரகக் கற்கள் விரைவில் கரையும்

தகவல் தொடர்புக்கு
KKE அக்பர் ஜி ஈரோடு
944301 4894

-------------
கெண்டை பிடித்தல் குணமாக

தூக்கத்தில் காலை நீட்டும் போதோ, நீண்ட நேரம் உட்கார்ந்திருந்து எழுந்திக்கும் போதோ கெண்டைக் கால் அல்லது தொடை தசைகள் மிகவும் இறுக்கமடைந்து விடும்
வலி உயிர்போகும் மெல்ல மெல்ல அழுத்தி தேய்த்து பிடித்து விட தசைகள் முன்பிருந்த நிலைக்கு வந்துவிடும்.
இந்த கெண்டை பிடித்தலை குணமாக்க ஆங்கில மருத்துவரிடம் சென்றால் அவர் கால்சியம் பற்றாக்குறை தான் காரணம் என்று கால்சியமாத்திரைகளை பரிந்துரைப்பார். அதனை மாதக்கணக்கில் சாப்பிட்டு வந்தாலும் குணம் கிடைக்காது.
ஏராளமான நபர்கள் கெண்டை பிடித்தலுக்கு மருத்துவம் கேட்டு என்னிடம் கைபேசியில் தொடர்பு கொள்கின்றார்கள் இதனை மிகவும் சுலபமாக குணப்படுத்தலாம்.
20 நாள் மருந்து போதுமானது
ஆயுர்வேத மருந்தில் தான் வந்தர குடிகா என்ற மாத்திரை கிடைக்கும் விலை மிகவும் மலிவானது
விலை ஒரு டப்பா ரூ 120 மட்டுமே
இதனை வாங்கி உணவுக்கு அரை மணி முன் 2 மாத்திரை வீதம் 3 நேரமும் சாப்பிட்டு வர 15 நாட்கள் முதல் 30 நாட்களுக்குள் பூரணமாக குணமாகும்
இந்த மாத்திரை சித்தா மெடிக்கல் ஷாப்களில் கிடைக்கும் இதில் சில அரிதான பொருட்கள் சேர்கின்றார்கள் எல்லா தயாரிப்பாளர்களும் இதனை சேர்க்க மாட்டார்கள், அதனால் IMPCOPS தயாரிப்பில் வாங்கிக் கொள்ளவும்
தரமானதாக இருக்கும்

தகவல் தொடர்புக்கு
KKE அக்பர் ஜி
ஜீவசக்தி ஹெர்பல் கிளினிக்
145 மாணிக்கவாசகர் காலணி
ஈரோடு 2
கைபேசி 9443014 894



---------

ஆஸ்த்துமா மாத்திரை

இந்த ஆஸ்த்துமா மாத்திரை 10 நிமிடத்தில் 'ஆஸ்த்துமா நோயினால் ஏற்படும் மூச்சிழைப்பை குணப்படுத்தும் இருமலை குணப்படுத்தும் ஆஸ்த்துமா நோயினை மிக விரைவில் குணப்படுத்தும்
அலோபதி ஊசி மருந்தினை விட மிக விரைவில் பலன் தரும்

இந்த மாத்திரை கொரானா நோயாளிகளுக்கு நல்ல பலன் தருகின்றது அவர்களுக்கு ஏற்படும் மூச்சுத் திணறலுக்கு நல்ல மருந்து இந்த மாத்திரை சாப்பிட்ட 10 நிமிடத்தில் மூச்சுக்குழல் வரிவடைந்து விடும் சவாசம் சீர்படும்
மூச்சிரைப்பு குணமாகும்
10 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் இந்த மாத்திரையை தர வேண்டும்

திறமை உள்ள மருத்துவர்கள் இதனை செய்து கொள்ளவும். செய்ய இயலாதவர்கள் அல்லது செய்முறையில் சந்தேகம் உள்ளவர்கள் என்னிடம் தொடர்பு கொள்ளவும் .

சுத்தி செய்த மடல் தாளகம் 100 கிராம்
சுத்தி செய்த மனோ சிலை 100 கிராம்
சுத்தி செய்தலிங்கம் 100 கிராம்
பொரித்த வெண்காரம் 100 கிராம்
சுத்தி செய்த கருநாபி 100 கிராம்

மடல் தாளக சுத்தி
3 முறை கற்சுண்ணா பிற்குள் வைத்து தாளித்துக் கொள்ளவும்
3 முறை கற்சுண்ணாம்பு தெளிவு நீரில் தலா ஒரு மணி நேரம் கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்
வாழைத்தண்டை சிறிது சிறிதாக வெட்டி அதனுள் வைத்து 2 மணி நேரம் கமலாக்கினியாக எரித்து எடுத்துக் கொள்ளவும்
அடுத்து வாழைக் கிழங்கை சிறிது சிறிதாக வெட்டியோ அல்லது சிதைத்தோ அதனுள் வைத்து 2 மணி நேரம் கமலாக்கினியாக எரித்து எடுத்துக் கொள்ள தாளகம் நல்ல முறையில் சுத்தியாகும்
மனோ சிலை சுத்தி
மனோ சிலையை சிறிது சிறிதாக உடைத்து சுண்ணாம்பு நீக்கின ஒரு லிட்டர் இஞ்சிச் சாற்றில் சுண்டும் வரை எரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்
அடுத்து இஞ்சிச் சாற்றில் 2 மணி நேரம் அரைத்து காய வைத்து தூள் செய்து கொள்ளவும்

லிங்கசுத்தி 
சுத்தமான தேனில் 3 நாளும் எலுமிச்சை பழச் சாற்றில் 3 நாளும் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்
அடுத்து அதனை வெள்ளை கரிசாலை சாற்றில் 6 மணி நேரம் சுருக்குத் தரவும்

வெண் காரம்
வெண் காரத்தை தூள் செய்து சடசடப்பு அடங்கும் வரை பொரித்து எடுத்துக் கொள்ளவும்
கருநாபிசுத்தி
கருநாபியை சிறிது சிறிதாக உடைத்து கோமூத்திரத்தில் 24 மணி நேரம் ஊற வைத்து எடுத்து மீண்டும் புதிய கோமூத்திரத்தில் ஊற வைக்கவும் இது போல் 7 முறை ஊற வைத்து எடுத்து சுத்தமாக கழுவி விழுதாக அரைத்து காய வைத்து பொடித்துக் கொள்ளவும்
கருநாபிசுத்தி மிகவும் சிறப்பானதாக இருக்க வேண்டும்

செய்முறை
தாளகம் லிங்கம் இரண்டையும் தனித்தனியாக 2 மணி நேரம் அரைத்துக் கொள்ள வேண்டும்
அடுத்து 5 சரக்குகளையும் ஒன்றாகச் சேர்த்து இஞ்சிச் சாறு விட்டு 24 மணி நேரம் அரைத்து காய வைக்கவும் அடுத்து கண்டங்கத்திரி சாறு விட்டு 2 மணி நேரம் அரைத்து காய வைக்கவும்
அடுத்து நஞ்சறுப்பான்சாறு விட்டு 2 மணி நேரம் அரைத்து காய வைக்கவும்
அடுத்து தூதுவளை சாறு விட்டு அரைத்து காய வைக்கவும்
காய்ந்ததும் கல்வத்திலிட்டு 2 மணி நேரம் அரைத்து பத்திரப்படுத்தவும்
மேலே செய்த செய்த செந்துரம் 20 கிராமிற்கு 100 கிராம் கபக்குடோரி சூரணம் அல்லது வேறு ஏதாவது கபத்தை நீக்கும் சூரணம் சேர்த்து மிக்ஸியில் போட்டு 2 நிமிடம் ஓடவிட்டு 500 MGகேப்சூலில் அடைத்துக் கொள்ளவும்

உணவிற்கு அரை மணி முன் அல்லது அரை மணி பின் காலை மாலை 1 மாத்திரை வீதம் சாப்பிட்டு வர வேண்டும்
ஆஸ்த்துமா 48 நாட்களில் பூரண குணமாகும் சித்த மருத்துவர்கள் அனைவரிடமும் இருக்க வேண்டிய சிறப்பான மருந்து 
இந்த மருந்து திருநெல்வேலி வெள்ளை சாமி அவர்களின் முறை
இதனை எனது அனுபவத்திற்கேற்ப சிறிது மாற்றிக் கொண்டேன்
இது எனது அனுபவ மருந்து

தகவல் தொடர்புக்கு
KKE அக்பர் ஜி
145 மாணிக்கவாசகர் காலணி
ஈரோடு 2
கைபேசி 9443014 894

-------------

கொரானாவால் உடல் பலகீனம் அடைந்தவர்களுக்கு

வெங்காய திராவக அன்னபேதி செந்துரம்

கொரானா வைரஸ் பாதித்தவர்களுக்கு உடல் பலகீனம்' ரத்தக் குறைவு பசி இன்மை கை கால் குடைச்சல் உடல் வலி போன்ற உபாதைகள் தொடர்கின்றன, இதனால் அவர்களது இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைகின்றது இந்த உபாதைகளை விரைவில் குணப்படுத்த வெங்காயத்திராவத்தினை கொண்டு தயார் செய்த அன்னபேதி செந்தூரம் உதவுகின்றது இது ஒரு உயர் தரமான அற்புத முறை

செய்முறை
அன்னபேதி சுத்தி முறை
தேவையான அளவு அன்னபேதியை எடுத்து தூள் செய்து 4 பங்கு கல் சுண்ணாம்பு தெளிவு நீரில் ஊற வைத்து 24 மணி நேரத்திற்குப் பின் ஒரு கெட்டியான துணியில் வடிகட்டிக் கொள்ள வேண்டும்
வடிகட்டின நீரை ஒரு மண் பாத்திரத்தில் ஊற்றி சுண்ட வைக்க வேண்டும். குழம்பு பதம் வந்ததும் ஒரு பீங்கான் தட்டில் ஊற்றி காய வைக்க வேண்டும் 
நன்றாக காய்ந்த பின் ஒரு இரும்புக்கடாயில் காய்ந்த அன்னபேதியை தூள் செய்து போட்டு வறுக்க வேண்டும்

வெங்காய திராவகம் செய்முறை
சிறிய வெங்காயத்தில் காரம் அதிகம் உள்ள நாட்டு வெங்காயம் வாங்கி சுத்தம் செய்து தண்ணீர் விடாமல் அரைக்க வேண்டும்
சக்கையை பிழியாமல் அதனை 9 நாட்கள் காடி வைக்க வேண்டும் அதன் பின் சக்கையை பிழிந்து கிடைக்கும் சாற்றை வாலையில் வடித்துக் கொள்ள வேண்டும்
இந்த நீரே வெங்காய திராவகம்
    சுத்தி செய்து வறுத்த அன்னபேதியை கல்வத்திலிட்டு வெங்காய திராவகம் விட்டு 6 மணி நேரம் அரைத்து வில்லை தட்டி காய வைத்து அகலிட்டு சீலை மண் செய்து புடம் இட வேண்டும்
இது போல் 4 புடம் போட நல்ல முறையில் செந்தூரமாகும்
மற்ற அன்னபேதி செந்துரம் போல் 150 MG முதல் 250MG வரை சாப்பிடத் தேவை இல்லை 60 MG முதல் 100 MG சாப்பிட்டால் போதுமானது சாப்பிட்ட 3 வது நாள் முதலே பலன் தெரிய ஆரம்பிக்கும்
நன்றாக பசி எடுக்கும்
உடல் பலகீனம் உடல் வலி நீங்குகின்றது
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கின்றது

கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல பலன் தருகின்றது உடல் பலகீனமடைந்து நடக்க இயலாமல் சிரமப்பட்டவர்கள் கூட ஒரு வாரத்தில் உடல் பலகீனம் நீங்கி இயல்பு வாழ்க்கைக்கு மாறினார்கள்
ரத்த சோகை குணமாக நல்ல மருந்து இது வெகு விரைவில் புதிய ரத்தம் உற்பத்தியாக துணைபுரிகின்றது.
யார் வேண்டுமானாலும் இதனை சாப்பிட்டு வர ஈரல் கோளாறுகள் நீங்கி எதிர்பார்த்த நல்ல பலன் கிடைக்கும்

பொள்ளாச்சி அப்பாஸ் பாபு அவர்களின் முறை இது அன்னபேதி செந்தூரம் செய்முறை எளிமை என்றாலும் பலன் அருமை

நான் கொரானாவிற்கு தரும் மருந்தில் இந்த அன்னபேதி செந்துரம் கலந்துள்ளேன்
கொரானா பாதித்தித்தவர்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்காது ஹீமோகுளோபின் அளவு அதிகரித்தால் தான் ஆக்ஸிஜன் அளவு உயரும் நமது உடல் முழுவதும் ஆக்ஸிஜன் பரவ ஹீமோகுளோபினே காரணம் ஆக்ஸிஜனை ரத்தத்தில் சுமந்து செல்வது ஹீமோகுளோபினே. அதனை அதிகரித்தால் தான் ஆக்ஸிஜன் அளவு உயரும் அதற்கு இந்த செந்தூரம் நல்ல பலன் அளிக்கின்றது
ஆக்ஸிஜன் குறைபாட்டை குணப்படுத்த நுரையீரலை மட்டும் கவனித்தால் போதாது, ஹீமோகுளோபின் அளவையும் மேம்படுத்த வேண்டும் சித்த மருத்துவர்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்

தகவல் தொடர்புக்கு
KKE அக்பர் ஜி
ஜீவசக்தி ஹெர்பல் கிளினிக்
145 மாணிக்கவாசகர் காலணி
ஈரோடு 2
கைபேசி 9443014894


---------


பொடுகு குணமாக சிகைக்காய்த்தூள்

சிகைக்காய் 1 கிலோ பூவந்திக் கொட்டை 300 கிராம் அதிமதுரம் 100 கிராம் வெண் மிளகு 100 கிராம் கார்போக அரிசி 50 கிராம் வேப்பம்பூ 50 கிராம் பூலாங்கிழங்கு 50 கிராம் வெந்தயம் 250 கிராம் எடுத்துக் கொள்ளவும் பூவந்தி கொட்டையின் உள்ளே உள்ள கொட்டையை நீக்கிக் கொள்ளவும் கொட்டை நமக்குத் தேவையில்லை அனைத்தையும் சேர்த்து நன்றாகக் காய வைத்து மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும்
குளிப்பதற்கு கால் மணி நேரத்திற்கு முன் தேவையான அளவெடுத்து நீரில் குழைத்து வைத்துக் கொள்ளவும்தலைக்கு தேய்த்து குளித்து வர பொடுகு குணமாகும் 4 முறை குளித்தாலே பொடுகு நீங்கி விடும் தொடர்ந்தும் தேய்த்து குளித்து வரலாம் நன்றாக நுரை வரும் நறுமணமாகவும் இருக்கும்

தகவல் தொடர்மக்கு KKE அக்பர் ஜி ஈரோடு 944301 4894

-----------

சாராயக் குடியை நிறுத்த

சாரா யம் குடிப்பதை நிறுத்த நினைப்பவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டால் நிறுத்தி விடலாம் நம்பகமான மருந்து
கொத்தமல்லி விதையை தூள் செய்து கொள்ளுங்கள் கடையில் விற்கும் பொடியை வாங்க வேண்டாம் அதில் ஒரு கிராம் எடுத்து காலை மாலை உணவுக்கு 1 மணி முன் சாப்பிட்டு வரவும் 15 நாள் சாப்பிட்டால் அதன் பின் சாராயம் சாப்பிட்டால் வாந்தி வரும் தொடர்ந்து 60 நாட்கள் சாப்பிட்டால் ஆயுளுக்கும் மது அருந்த இயலாது

தகவல் தொடர்புக்கு KKE அக்பர் ஜி 944301 4894


-----_-------


அதிக உதிரப் போக்கு குணமாக

படிகாரம் 1 கிலோ காசுக்கட்டி 1/4 கிலோ இரண்டையும் வாழைப்பூ சாற்றால் நன்கு அரைத்துக் காய வைத்து வாய் அகலமான சட்டியில் சிறிது சிறிதாகப் போட்டு பொரித்தெடுத்து அரைத்துக் கொள்ளவும் காலை மாலை உணக்கு | மணி முன்500 MG சாப்பிட்டு வர அதிகம் உதிரம் போதல் மூலத்தில் ரத்தம் கசிதல் போன் றவை குணமாகம் தகவல் தொடர்புக்கு 944301 4894

------------

சூதக வயிற்று வலி மற்றும் கருப்பை சுத்தி அடைய

வேப்பிலை கொழுந்தை ஒரு சிறு நெல்லி அளவு அரைத்து அதனுடன் ஒரு பட்டாணி அளவு பெருங் காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் காலை வெறும் வயிற்றில் மாத விடாய்க் கு முதல் 3 நாள் தரவும் இது போல் அடுத்த மாதமும் தர மாதவிடாய் சமயம் உண்டாகும் வயிற்று வலி குணமாகும் மேலும் கருப்பையில் இருக்கும் புழுக்கள் வெளியேறும் புத்திர பாக்கியம் உண்டாகும்
தகவல் தொடர்புக்கு 944301 4894

--------------

HYPER ACTIVITY என்ற

HYPER AUTISM
அதிக சுறுசுறுப்புடன் அடங்கமறுக்கும் குழந்தைகள் ஹைப்பர் ஆட்டிச குழந்தைகளாவர். இவர்கள் எந்த நேரமும் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். ஓடிக்கொண்டும் குதித்துக்கொண்டும் கத்திக்கொண்டும் இருப்பார்கள். அதிக சக்தியுடன் இருப்பார்கள். இவர்கள் எந்த வேலைவும் தொடர்ந்து செய்யமாட்டார்கள். இவர்களது கவனம் மற்றும் ஆர்வம் மாறிக்கொண்டே இருக்கும். மிகவும் அமைதியின்மையாக இருப்பார்கள். மற்ற சுறுசுறுப்பான குழந்தைகளுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு எனில் சாதாரண குழந்தைகள் விளையாடும் பொம்மைகளை வீணாக உடைக்க மாட்டார்கள். இவர்கள் மிக விரைவில் பொருட்களை உடைத்துவிடுவார்கள். தன்னுடன் விளையாடும் குழந்தைகளை சீண்டிக்கொண்டே இருப்பார்கள். கிட்டத்தட்ட குரங்கின் குறுப்புத்தனம் இவர்களிடம் உண்டும். இவர்களது சேட்டைகள் அனைத்தும் அர்த்தமில்லாத சேட்டைகள். திடிரென கத்துவார்கள் ஓடுவார்கள், குதிப்பார்கள் எதன் மீதாவது ஏறுவார்கள். இவர்களைகளை கண்கானிக்க ஒரு நபர் தேவை. வெளியில் ஓட வே முயற்சி செய்வார்கள். 15 வயது வரை இந்த நோயின் தாக்கம் அதிகம் இருக்கும்.
சமிப காலத்தில் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகரித்து வருகின்றார்கள். இதற்கு காரணம் தடுப்பூசிகளே. இது பிறவி குறைபாடு அல்ல என என் மனதிற்கு படுகின்றது. இது தவறாகக் கூட இருக்கலாம்.
இந்த குழந்தைகளை குணமாக மூலிகை மருந்து உண்டு. பெண்கள் தங்கள் வீட்டிலேயே செய்துகொள்ளலாம்.
சுக்கு
திப்பிலி, வால் உளுவை அரிசி, கடுக்காய் தோல் இவைகளை சம அளவு வாங்கிகொள்ளவும்.
சுக்கின் மேல்தோலை சீவவும். வால் உளுவை அரிசியின் குப்பைகளை நீக்கவும். கடுக்காயின் கொட்டைகளை நீக்கி எறிந்து விட்டு அதனை அரிசி கழுவின நீரில் ஊறவைக்கவும்
3 மணிநேரம் ஊறின பிறகு அதனை நீரால் கழுவி காயவைக்கவும்.பிறகு அனைத்தையும் தனித்தனியாக தூள் செய்து ஒன்றாகக் கலந்து மிக்ஸில் ஓட விட்டு கொள்ளவும்.
உணவுக்கு அரைமணி முன் 2 அல்லது 3 கிராம் சூரணத்தை சுத்தமான தேனில் கலந்து காலை மாலை இரு நேரமும் சாப்பிட்டு வரவும். தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
இந்த மருந்து எனது அனுபவத்தில் இருந்த மருந்து. முதல் மாதம் பெரிதாக வேறுபாடு தெரியாது. 2ம் மாதம் முதல் பலன் தெரிய ஆரம்பிக்கும். குழந்தைகள் சற்று அமைதி அடைவார்கள்.அவர்களது சேட்டைகள் குறைந்துவிடும்.பெற்றோருக்கு அடிபணிவார்கள். தொடர்ந்து சாப்பிட நல்ல பலன் உண்டு.
ஆட்டிசம்பாதித்த குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை குணப்படுத்த பல்லாயிரக்கணக்கில் செலவு செய்கின்றனர். மாதம் 10 ஆயிரம் வாங்கும் மருத்துவர்கள் உண்டு. ஆனால் பலன் எதுவும் கிடைக்காது. இதுபோன்ற மருத்துவர்கள் தங்கள் பரம்பரைக்கு சொத்து மட்டும் சேர்த்து வைப்பதுடன் பாவமூட்டைகளையும் சேர்த்து வைக்கின்றன். இறைவன் இவர்களின் மனதில் கருணையை உண்டாக்கட்டும்.
இந்த மருந்து மிகமிக மலிவானது. மாதம் ரூ 100 மட்டுமே செலவாகம். ஆனால் பலனோ அதிகம். எவ்வளவு நாள் சாப்பிட்டாலும் எந்த பின் விளைவுகளும் இல்லை.
இதை நான் இலவசமாக செய்து வந்தேன். வேலை பளுவின் காரணமாக அதை நிறுத்திவிட்டேன்.அந்த மருந்தின் பலனை உங்களுக்கு தெரிவிக்கின்றேன்
தகவல்தொடர்புக்கு

KKE அக்பர்ஜி
ஜீவ சக்தி ஹெர்பல் கிளினிக்
145 மாணிக்கவாசகர் காலணி
ஈரோடு. 2
கைபேசி 9443014894
----------------
ஆறாத புண்களுக்கு
திரு வோட்டு எண்ணெய்

சர்க்கரை நோயினாலோ வெரி கோஸ் வெயின் என்ற நோயினாலோ , காலில் ரத்த ஓட்டத்தில் ஏற்பட்ட தடைகளினாலோ புண்கள் ஏற்பட்டால் விரைவில் ஆறாது
எந்த வகையான புண்களையும் தேங்காய் ஓட்டை மூலப்பொருளாகக் கொண்டு தயார் செய்யப்படும் எண்னெய் குணப்படுத்தும். 

தேவைப்படும் பொருட்கள்
ஆடு தின்னாப் பாளை சாறு 500 ML
நார் நீக்கி சுத்தம் செய்யப்பட்ட தேங்காய் ஓட்டு துண்டுகள் 300 கிராம்
மஞ்சள் தூள் 50 கிராம்
பச்சை கற்பூரம் 30 கிராம்
சுத்தமான தேங்காய் எண்ணெய் 600 ML

ஒரு பாத்திரத்தில் ஆடு தின்னா பாளை சாறு
தேங்காய் ஓட்டு துண்டுகள் மஞ்சள் தூள் தேங்காய் எண்ணெய் இவைகளைப் போட்டு அடுப்பேற்றி சிறு தீயாக எரித்து வரவும் சாறு சுண்டி மணல் பதம் வந்ததும் இன்னொரு பாத்திரத்தில் பச்சைக் கற்பூரத்தை பொடித்துப் போட்டு அதில் எண்ணெயை வடிக்கவும் சூடு ஆறின பின் பத்திரப்படுத்தவும்
இது மருத்துவர்களுக்கான செய்முறை.
பொதுமக்களுக்கு ஆடு தின்னாப் பாளை சாறு கிடைக்காது அதனால் சாறு இல்லாமலும் தயார் செய்யலாம்
ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி அதில் தேங்காய் ஓட்டு துண்டுகள் மஞ்சத்தூள் இவைப் போட்டு 24 மணி நேரம் ஊற வைக்கவும் பின்பு அதனை அடுப்பேற்றி சிறு தீயாக எரித்து எண்ணெய் புகை வர ஆரம்பித்ததும் இன்னொரு பாத்திரத்தில் பச்சைக் கற்பூரத்தை பொடித்துப் போட்டு துணியால் வேடு கட்டி எண்ணெயை வடிகட்டவும்
எண்ணெய் ஆறின பின்பு பத்திரப் படுத்தவும்.
புண்களை கழுவும் முறை
புளியன் இலைகசாயத்தினாலோ வேப்பன் இலைகசாயத்தினாலோ அல்லது படிகாரம் கரைத்த வெதுவெதுப்பான நீரிலோ புண்களை கழுவ வேண்டும்
அதன் பின் ஈரமில்லாமல் துடைத்து மேலே செய்த எண்ணெயை காலை மாலை தடவி வர வேண்டும்'
இந்த எண்ணெய் எல்லா வகை புண்களையும் ஆற்றி குணப்படுத்தும் குழிப் புண்கள் ஆற சற்று தாமதமாகும் ஆனால் கண்டிப்பாக குணமாகும்
இதனை தோல் நோய்களுக்கும் வெளிப்பூச்சாகபூசி வர நல்ல குணம் கிடைக்கும்

ரத்த ஓட்டத்தில் ஏற்படும் தடைகளினாலேயே கால்கள் கறுப் படித்து புண்கள் ஏற்பட்டால் குணமாவது நீண்ட நாட்களாகும்
ரத்த ஓட்டத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்க தேங்காய் ஒட்டு கசாயம் நன்கு பலன் தரும் தொடர்ந்து கசாயத்தை சாப்பிட்டு வர தடைகள் கரைந்து குணமாகும்
ரத்த ஓட்டம் சீரானால் கால்கள் இயல்பான நிறத்திற்கு மாறும்

தகவல் தொடர்புக்கு
KKE அக்பர்ஜி
ஜீவசக்தி ஹெர்பல் கிளினிக்
145 மாணிக்கவாசகர் காலணி
ஈரோடு 2
கைபேசி 9443014 894

-----------

படுக்கையில் சிறுநீர் கழிவதை குணப்படுத்த :
சில குழந்தைகள் இரவில் தூக்கத்தில் சிறுநீர் கழித்துவிடுவார்கள் . அவர்களுக்கு பேதி மருந்து தர குணமாகிவிடும். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கே இது பொருந்தும். ஆனால் சில குழந்தைகள் 12,13 வயதான பின்பும் படுக்கையில் சிறுநீர் கழித்துவிடுவார்கள். வயதுக்கு வந்த பெண்கள் இதனால் மிகவும் சிரமப்படுவார்கள். இவர்களை மிக எளிதாக குணப்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்:
உலர் திராட்சை - 50 கிராம் 
மிளகு தூள் - 50 கிராம் 
சுத்தமான தேன் - 50 கிராம்
முதலில் உலர் திராட்சையை கல்வத்திலிட்டு அரைத்துக் கொள்ளவும். கல்வம் இல்லாதவர்கள் சுத்தமான கழுவின அம்மியில் வைத்து அரைத்துக் கொள்ளவும். மெழுகு போல் அரைத்த பின்பு மிளகு தூளை போட்டு அரைக்கவும். நன்றாக அரைத்த பின்பு தேன் சேர்த்து கொள்ளவும். எடுத்து பத்திரப்படுத்தவும். 
உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு காலை, இரவு 5 கிராம் வீதம் சாப்பிட 3 நாட்களில் தூக்கத்தில் சிறுநீர் கழிவது குணமாகிவிடும். மீதம் உள்ளத்தையும் சாப்பிட்டு வர நிரந்தர குணமாகும். இதனை யார் வேண்டுமானாலும் சுலபத்தில் செய்து கொள்ளலாம். 
தகவல் தொடர்புக்கு: 
K .K .E .அக்பர்ஜி , 145, மாணிக்கவாசகர் காலனி , ஈரோடு -638 002.
தொலைபேசி எண் : 9443014894

--------------

மைக்ரேன் மாத்திரை:

ஒற்றை தலை வலி எனும் மைக்ரேன் தலை வலிக்கு இந்த மாத்திரை நிரந்தர தீர்வை தருகிறது.

தேவைப்படும் பொருட்கள்
வெண்ணாபி - 1 பங்கு 
வெண் மிளகு - 1 பங்கு
பொரித்த வெண்காரம் - 1 பங்கு

வெண்ணாபியானது மிகவும் விஷ தன்மை உள்ளது. இதனை சுத்தி செய்தே மருந்து செய்ய பயன் படுத்த வேண்டும். இல்லை எனில் ஆபத்தை விளைவிக்கும். 

வெண்ணாபி சுத்தி முறை:

நாபியை சிறிய சிறிய துண்டுகளாக உடைத்து கொள்ள வேண்டும்.அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு கோமூத்திரத்தை ஊற்ற வேண்டும். கோமூத்திரத்தில் நாபியானது மூழ்கி இருக்க வேண்டும். 24 மணி நேரத்திற்கு பின் கோமூத்திரத்தை கீழே ஊற்றி விட்டு புதிதாக ஊற்றி வைக்க வேண்டும். 
இது போல் ஏழு நாட்களுக்கு புதிது புதிதாக கோமூத்திரம் ஊற்றி வைக்க வேண்டும். பின்பு கழுவி காய வைக்க வெண்ணாபி சுத்தியாகி விடும்.

செய்முறை
மூன்று சரக்குகளையும் தூள் செய்து சுண்ணாம்பு நீக்கின இஞ்சி சாறு விட்டு 12 மணி நேரம் அரைக்க வேண்டும். பின்பு பட்டாணி அளவு மாத்திரை உருட்டி காய வைக்க வேண்டும். 

சாப்பிடும் முறை :
உணவுக்கு 1 மணி நேரம் முன் 3 நேரமும் 1 மாத்திரை வீதம் 30 நாட்கள் வரை சாப்பிட மைக்ரேன் எனப்படும் நரம்பியல் தலை வலி பூரணமாக குணமாகி விடும். நிரந்தர பயன் தரும் இந்த மாத்திரையின் முறை திருநெல்வேலி வெள்ளைச்சாமி அய்யா அவர்களின் அனுபவ முறை. எந்த வித பக்க விளைவும் ஏற்படுத்தாத மாத்திரை தற்போது எனது அனுபவத்தில் உள்ளது.

தகவல் தொடர்புக்கு :
K.K.E.அக்பர்ஜி, ஜீவசக்தி ஹெர்பல் கிளினிக், 145, மாணிக்கவாசகர் காலனி,
ஈரோடு-2.
கைபேசி எண் : 9443014894

----_----------

அக்கி விரைவில் குணமாக

தற்போது அக்கியினால் மிக அதிகமான நபர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன எரிச்ச லுடன் கூடிய கொப்புளங்களினால் மிகுந்த வேதனை ஏற்படும்
அக்கி குணமாக காவிக் கல்லை அரைத்து தண்ணீரில் குழைத்துப் பூசுவார்கள் இந்த முறையில் குணமாக சற்று தாமதமாகும் மேலும் அடுத்தவரை நாடி சென்று பூசிக் கொண்டு வர வேண்டும்

இதற்கு பாதிக்கப்பட்டவர்களே மருத்துவம் செய்து கொள்ளலாம்
வெள்ளை பூ பூர்க்கும் ஊமத் தன் இலைகளை பறித்து சுத்தமாக கழுவி அதனை அரைத்து சாறு பிழிந்து கொள்ள வேண்டும் அந்த சாற்றை அக்கியின் மேல் பூச வேண்டும் முதல் நாளிலேயே எரிச்சல் மற்றம் வலி மறைந்து விடும் 3 நாட்கள் தடவ பூரண குணமாகும்
அக்கி வந்தவுடன் மருத்துவம் செய்து கொள்ளாமல் தாமதம் செய்தால் அக்கிகொப்புளங்கள் உடைந்து புண்ணாக மாறிவிடும்
அந்த புண்களும் குணமாக ஊமத் தன் இலை சாற்றை தொடர்ந்து தடவி வர புண்கள் ஆறிவிடும்
அக்கியின் பாதிப்பி அதிகமாக இருந்தால் மருந்தும் உட்கொள்ளலாம்

அத்திப்பட்டை தூள் 10 கிராம்
சீரகத்தூள் 2 கிராம்
இரண்டையும் 2 டம்ளர் நீரில் கலந்து ஒரு டம்ளராக சுண்ட வைத்து வடித்து சிறிது பனங்கள் கண்டு சேர்த்து குடிக்க வேண்டும் இத்துடன் குங்குலிய பற்பம் ஒரு பட்டாணி அளவு சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வர வேண்டும்
அதிகமாக பாதித்த அக்கி நோயை விரைவில் குணப்படுத்தும்
உடல் உஷ்ணம் எரிச்சல் வாய் முதல் குதம் வரை ஏற்படும் புண்களை குணப்படுத்தும்
அத்திப்பட்டை பொடி
குங்குலிய பற்பம் இவை இரண்டும் நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்

தகவல் தொடர்புக்கு

KKE அக்பர் ஜி
ஜீவசக்தி ஹெர்பல் கிளினிக்
145 மாணிக்கவாசகர் காலணி
கரூர் பைபாஸ் ரோடு
ஈரோடு .2
கைபேசி எண் 944 301 4894

_--_------_-----------

கற்பக மெழுகு

கருப்பை நார் கட்டி, சினைப்பை நீர் கட்டி
கருப்பை வீக்கம்
மார்பகக் கட்டி போன்ற நோய்களை குணப்படுத்தும்
பெண்களின் கருப்பை கோளாறுகளுக்கு நல்லதொரு மருந்து

தேவைப்படும் பொருட்கள்

உயர்தர பெருங்காயம் 100 கிராம்
பூண்டு 250 கிராம்
சிரட்டை கரி 350 கிராம்
கழற்சி விதை 100 கிராம்
பழைய பனங் கருப்பட்டி
350 கிராம்
பசு நெய் 500 ML

சிரட்டை கரியை நன்கு அரைத்து வஸ்திர காயம் செய்து கொள்ளவும்
பெருங்காயத்தைபசு நெய் விட்டு பொரித்து நன்கு தூள் செய்து கொள்ளவும்
பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்
கழற்சி விதையை நெய் விட்டு வறுத்து தூள் செய்து கொள்ளவும்
இந்த 4 சரக்குகளையும் சேர்த்து கலக்கி கல்வத்திலிட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்
கருப்பட்டியை சீவி மேற்படி சரக்குகளுடன் கலந்து இடிக்கவும் நன்கு உறவானவுடன் பசு நெய் சேர்த்து நன்கு இடித்து கொள்ளவும்
மெழுகு போலானவுடன் .ஒரு தட்டில் பரப்பில் வெய்யிலில் காயவைக்கவும்
பூண்டில் உள்ள நீர் சத்து போனவுடன் எடுத்து பத்திரப்படுத்தவும்

சாப்பிடும் அளவு
கழற்சி அளவெடுத்து உணவிற்கு முன் காலை மாலை 40 நாட்கள் சாப்பிட்டு வர PCOD என்ற சினைப்பை நீர் கட்டிகுணமாகும்
3 மாதம் சாப்பிட்டு வர கருப்பை நார் கட்டிகுணமாகும்
கருப்பை வீக்கமும் குணமாகும்
இதனுடன் ரசகெந்தி மெழுகு சேர்த்து 3 மாதம் சாப்பிட்டு வர பெண்களின் மார்பகக் கட்டி குணமாகும்
இந்த அற்புத மருந்தினை கோபியில் உள்ள பாரம்பரிய சித்த மருத்துவர் K சுந்தர்ராஜ் அவர்களிடம் கற்றுக் கொண்டேன்

தகவல் தொடர்புக்கு

| KKE அக்பர் ஜி
145 மாணிக்கவாசகர் காலணி
ஈரோடு .2
கைபேசி 9443014 894

-----_----------


#துருசு #சுண்ணம் #அனுபவமுறை

     100 கிராம் துருசை கல்வத்தில் போட்டு பொடித்து நன்றாகஅரைத்துக் கொள்ளவும். 50 கிராம் சோடியம் ஹைட்ராக்ஸைடு எடுத்து ஒரு பீங்கான் கிளாஸ் அல்லது சில்வர் கிளாஸில் போட்டு சிறிதளவு சுத்தமான தண்ணீர் ஊற்றி சில்வர் ஸ்பூனினால் கலக்கி தெளிய வைத்து
அதை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு அரைக்கவும். எப்போது துருசு முழுவதும் கருத்து விடுகிறதோ அப்போது தெளிவை ஊற்றுவதை நிறுத்தி நன்றாக அரைத்து கல்வத்தோடு காயவைத்து விடவும். காய்ந்தபின் பெயர்தெடுத்து மண் அகலில் வைத்து அகல் மூடி சீலைமண் செய்து உலர்த்தி ஒரு 15 எருவில் புடமிட்டு எடுத்துக் கொள்ளவும். துருசு செஞ்சாயலான கருப்பு நிறத்தில் இருக்கும். இதற்கு தேவையான துருசை லேப் ல் வாங்கிக் கொள்ளவும். நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் துருசு இதற்கு ஒத்து வராது. 

     இதனை மீண்டும் கல்வத்தில் போட்டு அரைத்துபொடியாக்கி அதில் வெடியுப்புச் திராவகம் (லேப் நைட்ரிக் ஊற்றக்கூடாது) விட்டு அரைக்கவும். நன்றாக அரைத்து கல்வத்தோடு காய வைத்து விடவும். நன்றாகக் காய்ந்தபின் அப்படியே பெயர்த்து மண் அகலில் போட்டு அகல் மூடி சீலைமண் வலுவாகச் செய்து உலர்த்தி ஒரு 30 எருவில் புடமிட வும். புடம் ஆறிய பின்பு பிரித்துப் பார்க்க சிவந்த சாயலான வெண்ணிறத்தில் சுண்ணமாகி இருக்கும். எடுத்துக் கல்வத்தில் போட்டு அரைத்துப் பத்திரப்படுத்தவும். இச்சுண்ணத்தை விராலி இலைச் சாற்றில் போட்டு அயக்கரண்டியில் ஊற்றி இரசத்தை விட்டுக் காய்ச்ச இரசம் கட்டும். கழுவி உருட்டி மணியாக்கி புடமிட்டுக் கொள்ளவும்.


நன்றிகள் - ஜீவசக்தி

--------------

பைத்தியம் மற்றும் பேய் பிடித்தல் குணமாக அரச இலை ஒரு பங்கு குப்பைமேனி இலை ஒரு பங்கு தும்பை இலை ஒரு பங்கு மூன்றும் 50 கிராம் எனில் அதனுடன் ஒரு பட்டாணி அளவு நவாச்சாரம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் 10 நிமிடம் கழித்து ஒரு கெட்டியான துணியில் பிழிந்து கொள்ளவும் நோயாளியைப் படுக்கவைத்து இரு மூக்கின் துவாரத்திலும் தலா பத்து சொட்டுகள் விடவும் கால் நிமிடத்தில் எழுந்து உட்கார வைத்து விடவும் தலையில் இருந்து கெட்ட நீர் மூக்கின் வழியாக வெளியேறும் இதனை காலை வெறும் வயிற்றில் செய்ய வேண்டும் அப்போது நோயாளிக்கு காய்ச்சல் இருக்கக்கூடாது முதல்நாளே நோயாளிக்கு நல்ல தூக்கம் வர ஆரம்பிக்கும் தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்வாறு செய்ய பைத்தியம் குணமாகும் மற்றும் பேய் பிடித்தல் விலகும் மனச்சிதைவு நோய் உள்ளவர்களுக்கும் இவ்வாறு செய்ய நல்ல தூக்கம் வந்து நோய் குணமாகும்

தகவல் தொடர்புக்கு ஜீவசக்தி ஹெர்பல் கிளினிக் ஈரோடு 2
----_-------_--

நவமூலத்திற்கு அனைத்து வகை மூலநோய் நீங்க 

செம்பிரண்டை எண்ணெய்

பெரம்பலூரில் வாழ்ந்து ஜீவ சமாதியான தலையாட்டி சித்தரின் செய்முறை இது
அற்புதமாக வேலை செய்யும்
பெரம்பலூரின் அருகில் உள்ள சோமண்டா புதூரை சேர்ந்த
கோவிந்தசாமி படையாச்சி என்ற சித்த மருத்துவரிடம் இதை 25 வருடங்களுக்கு முன் கற்றுக் கொண்டேன்
செம்பிரண்டை கொடி மலைகளிலும் கரடுகளிலும் வளரும்
15நீளத்திற்கு இதன் வேர் பரவும் ஆழமாக செல்லாது தரைக்கு அரை அடி ஆழத்தில்
ஆரஞ்சு நிறத்தில் கிழங்கு போல் இதன் வேர் பரவும்
தேவையான பொருட்கள்

செம்பிரண்டை கிழங்கு 1 கிலோ
மலைபூண்டு 1 கிலோ
வசம்புத்தூள் 20 கிராம்
மஞ்சத்தூள் 20 கிராம்
விளக்கெண்ணெய் 
1 1/2 லிட்டர்
செம்பிரண்டை கிழங்கை துண்டு துண்டாக நறுக்கி நன்றாக சிதைத்துக் கொள்ளவும்
பூண்டையும் நன்றாக சிதைத்துக் கொள்ளவும்
நான்கு பொருட்களையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்
எண்ணெயை அடுப்பேற்றி கலவையை சிறிது சிறிதாக போட்டு பொறித்து எடுத்துக் கொள்ளவும்
ஆறின பின் எண்ணெயை வடித்துக் கொள்ளவும்

இரவு தூங்கும் போது 2 முதல் 3 மில்லி எண் ணெயை சாப்பிட்டு வர 1 மாதத்தில் நவ மூலங்களும் குணமாகும்
வெளிப்பூச்சுக்கும் இந்த எண்ணெயை பயன்படுத்த மூல நோயில் ஏற்படும் முளைப்புகள் கரையும்

தகவல் தொடர்புக்கு
| KKE அக்பர் ஜி
145 மாணிக்கவாசகர் காலணி ஈரோடு 2
கைபேசி 9443014 894

-----------