Sunday 17 December 2017

செவ்வாய் கிரகம் பற்றி கல்யாணம் ஆகாதவங்க கண்டிப்பா படிங்க .

கல்யாணம் ஆகாதவங்க கண்டிப்பா படிங்க .
செவ்வாய் ஒரு யுத்த கிரகம். சண்டைக்கு அதிபதி வீரத்துக்கு அதிபதி, நிலத்துக்கு அதிபதி, ரத்தத்துக்கு அதிபதி, பெண்கள் என்றால் கணவனை குறிப்பது என சொல்கிறது ஜோதிடம்..
.ஒரு ஜாதகத்தில் செவ்வாய் எங்கு நின்றாலும் அந்த இடம் அதிக சக்தியுடன் வீரியத்துடன் இருக்கிறது..அந்த பாவத்தை பல மடங்கு கொந்தளிக்க செய்யும்...
உதாரணமாக லக்னத்துக்கு இரண்டாம் இடம் என்பது என்ன..? வாக்கு அதாவது பேச்சு ,பார்வை, ஆரம்ப கல்வி என சொல்வோம் அங்கு செவ்வாய் இருந்தால் இவையெல்லாம் பல மடங்கு சக்தி பெறும் இதனால் பேச்சு அனல் பறக்கும். கோபம் அதிகமாக, பிடிவாதம் அதிகமாக ,நான் சொல்வதே சரி என சொல்ல வைக்கும்..அப்போ செவ்வாய் தோசத்தின் அடிப்படை என்ன..? இதெல்லாம் பிரச்சினையான இடம் அதுக்கு தகுந்த மாதிரி சேர்த்துங்க என நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
4ஆம் இடம் சுக ஸ்தானம் உடல் அடிக்கடி
பாதிக்கப்படுவது அல்லது உடல் அதிக பலத்துடன் இருப்பது,சொத்துக்கள் சேர்க்கை அல்லது சொத்துக்களில் வில்லங்கம்,தாயார் பாதிப்பு தாயாரால் பிரச்சினை,ஒழுக்கம் பாதிக்கப்படுதல் அல்லது ஒழுக்கத்தில் அளவுக்கு அதிகமான கண்டிப்பு இவையெல்லாம் லக்னத்தை பொறுத்து மாறும் என்பதால் இதையும் கொடுத்திருக்கிறேன் நெகடிவ் பாசிடிவ்.
7ஆம் இடம் என்பது என்ன..? களத்திர ஸ்தானம் அதாவது செக்ஸ் ,காமம் இவற்றை பற்றி சொல்லும் இடம்.. கணவன் அல்லது மனைவியை பற்றி சொல்லும் இடம், கூட்டாளி பற்றி சொல்லும் இடம் ,அங்கு செவ்வாய் இருந்தால் அதெல்லாம் பல மடங்கு பலம் பெறும்.. அல்லது அவற்றால் பல மடங்கு பிரச்சினைகளும் வரும்..மனமத லீலையில் மன்மதனாக இருப்பார்கள்..பெண்ணாக இருப்பின் கணவனுக்கு சுகம் கொடுப்பதில்,ரதியாக இருப்பாள்
,கணவனுக்கு மட்டும். இவர்களுக்கு ஈடு கொடுக்கும்படி துணை இருக்கனும் ...தொட்டாலே கம்பளி பூச்சி ஊறுற மாதிரி இருக்கு எனும் குணவதியை கட்டி வெச்சிட்டா டைவர்ஸ் தான்.அப்போ எவ்வளவு எச்சரிக்கையா இருக்கனும்..? ராசிக்கட்டத்தை ஆராயாமல் 9 பொருத்தம் இருக்கு.. ராமனும் சீதையும் மாதிரிஇருப்பாங்க என புலிக்கு பூனையை கட்டி வெச்சிடாதீங்க மக்களே..!!
8ஆம் இடம் கொஞ்சம் விவகாரமானது எதையும் ஓபனா சொல்லிடனும்னு நினைப்பதால் சொல்கிறேன்...இந்த இடம் ஆண் உறுப்பு பெண் உறுப்பு பற்றிய இடம்,நஷ்டம் பற்றியும் திடீர் அதிர்ஷ்டம் பற்றியும் சொல்லும் இடம்,துக்கத்தை சொல்லும் இடம்..சதா குழப்பமும் துக்கமும் இருக்கும்..டென்சன் அதிகமாகவே இருக்கும் இவருக்கு 2ல் செவ்வாய் இருக்கும் வாயாடியை ( ஸாரி எளிமையா புரியனும்னு இந்த பதத்தை பயன்படுத்துறேன்) கட்டி வெச்சிட்டா என்னாகும்..? போர்க்களம்தான்..எப்படி சந்தோசம் வரும்..? சரி இவருக்கு எந்த செவ்வாய் கல்யாணம் செய்து வைக்கிறது..? துக்கத்தில் இருப்பவரை சந்தோசப்படுத்திட 2ல் செவ்வாய் தவிர வேறு செவ்வாய் எதையும் சேர்க்கலாம்,
12 ஆம் இடம் என்பது தூக்கம்,கட்டில் சுகம்,காம உணர்வு,முக்தி,மோட்சம் பத்தி சொல்லும் இடம் அதை காம உணர்வு உற்பத்தியாகும் இடம்னு வெச்சிக்குவோம்..அங்கு செவ்வாய் இருக்கிறார் அப்போ தூக்கம் இல்லாம தவித்தல்,சதா சுகம் பத்திய நினைவு உண்டாதல் இருக்கலாம்..இவருக்கு 7ல் செவ்வாய் இருப்பவரை கட்டி வெச்சா செம பொருத்தமா இருக்கும் இல்லையா..? 2ல் செவ்வாய் பேசிக்கிட்டே இருப்பார் ....புரியுதுல்ல..7,12 செவ்வாய் நல்ல பொருத்ததை தரும் 2,8 செவ்வாய் மோசமான பொருத்தம்.4-7,4-8,2-7 கூட பிரச்சினை இல்லை...
செவ்வாய் தோசத்தின் முக்கிய சாராம்சம் இதுதான்..அதுக்கப்புறம் சுக்கிரன் வெச்சி இது மாதிரி ஆராய்ச்சி பண்ணலாம்...குரு இவருக்கு மேல இருப்பாரு...குரு,சுக்கிரன்,செவ்வாய் ,சூரியன் எல்லாம் முக்கியமான பெரிய கிரகங்கள் இவர்கள் எப்படி இருக்காங்கன்னு பார்க்காம பொருத்தம் அருமையா இருக்குன்னு சொல்லாதீங்க...

.பிரம்மஹத்தியை எளிதாக நினைக்காதீர்கள்....

..பிரம்மஹத்தியை எளிதாக நினைக்காதீர்கள்....
###########################
தோஷத்தில் பெரிய தோஷமே பிரம்மஹத்தி தான்..
எவருக்கும் எளிதில் இந்த தோஷம் இருக்காது..
மீறி இருந்தால் அவனுக்கு வாழ்க்கையே இருக்காது..
சனி+ குரு சேர்க்கை
சனி குரு சப்தம பார்வை சனி குரு திரிகோண பார்வை
எப்படி சனி குருவை நீசத்துடன் பார்த்தாலும் பிடித்தது பிரம்மஹத்தி என்று பொருள்..
இராமருக்கு பிரம்மஹத்தி பிடித்ததால் தான் திருவிடைமருதூர் வந்து சிவனை வணங்கினார்.
திருவிடைமருதூர் ஜோதி மகாலிங்கம் தான் ஒரே எளிய தீர்வு..
ஆனால் அந்த சிவனுக்கே பிரம்மஹத்தி பிடித்து தான் மேல்மலையனூர் அங்காளம்மன் உருவானது..
மும்மூர்த்திகளில் பிரம்மனுக்கு பெரிய கோயிலோ மக்கள் வணங்குவதோ இல்லை ஆனால் பிரம்மன் சாபம் தான் பிரம்மஹத்தி..
பரிகாரம் செய்தாலும் ஆண்டவன் கருணை இருந்தால் தான் இந்த தோஷம் போகும்..
பிரம்ம சாபத்திற்கு அவ்வுளவு வலிமை..
படைக்கும் மூர்த்தியான பிரம்மனுக்கு அழிக்கும் நாளையும் அவனே தீர்மானிக்கிறான்..பிரம்மன் படைத்த உயிரை நாம் இடையில் கொல்வதாலேயே நம்மை பிரம்ம சாபம் பிரம்மஹத்தியாக பிடித்து உயிரோடு கொல்லும் என்பது தான் இந்த தோஷத்தின் தன்மை..
எதற்கு இந்த பதிவு என்றால் எவருகெல்லாம் பிரம்மஹத்தி வரும் என்று ஆராய்ந்தால் பணத்தீமிரில் ஆடும் மனிதர்களுக்கு தான் முக்கியமாக பிரம்மஹத்தி எங்கோ எந்த சூழலிலோ பிறவியிலோ பிடித்தே தீரும்...
ஏழையை ஏமாற்றி அவன் சொத்தை அடைதல்
பெண்ணை கற்பழித்து கொல்லுதல்
ஐந்தறிவு ஐீவனை கொல்லுதல்
பிராமணர் சாபம் அடைதல்
நல்ல பாம்பை கொன்று எரித்தல்
துடிக்க துடிக்க எந்த உயிரை கொன்றாலும்
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பிறரை அழித்தல்
பொய் சத்தியம் பெரியவர்களுக்கு அவர்களது ஆன்மாவிற்கு செய்தாலோ பிரம்மஹத்தி பிடித்தே தீரும்..
இந்த தோஷம் எல்லாம் வந்தால் வாழ்நாளே இருண்ட காலமாகவே மாறிடும்...
பிரம்மஹத்தியால் வரும் பாதிப்புகள்..
தொழில் வேலை கடைசி வரை பாதிப்பு..
மனநிம்மதி கடைசி வரை இல்லாமை
மன உலைச்சல்
தகுதி இல்லாதவர்களிடம் செய்யாத தவறுக்கு தலைகுனிவு
தொடர்ந்து எதாவது நோய் உடலில் வந்து துன்புறுத்துவது..
இனம் புரியாத பயம்.
எதிர்காலம் என்னவாகும் என்ற புரியாத இருள் சூழ்ந்த கவலை
தூக்கமின்மை
புத்தி பேதலிப்பு..
மனநிலை பாதித்தல்
உயிரை கொல்வதற்கு தண்டனையாக உயிரோடு கொல்லுதல் என்பது தான் பிரம்மஹத்தி தோஷம்..
நன்றிகள் பல..
சா.மணிகண்டன்..

சுக்கரன் கிரக நன்மைகள்

1ல் சுக்கரன் –காமம் அதிகம் உண்டு.
2. 2ல் சுக்கரன் கள்ளத் தொடர்பு கட்டாயம் இருக்கும்.
3. 4ல் சந்திரன் நல்ல வீடு உண்டு, தாயாரால் பிரச்சினை.
4. 5ல் சனி(வக்கரம்) வேலைக்காரகளால் தொந்தரவு, மாமன் இல்லை. பிரகார தெய்வ வழிபாடு.
5. 6ல் செவ்வாய் கணவனை மதியாள். எதிரிகள் அதிகம்.
6. 4க்கு கேந்திரத்தில் சூரியன் தாகப்பன் சொத்து இல்லை.
7. 10ல் சுக்கிரன் பணக்கார வாழ்வு பின்னாளில் உண்டு.
8. செவ்வாய், சந்திரன் நல்ல நிலையில் விவசாய நிலம் உண்டு.
9. புதன் உச்சம் காலி மனைகள் காலி இடங்கள் உண்டு. கணவன் மனைவினிடையே அன்யோன்யம், மிக்க கேளிக்கையுடன் சந்தோஷம்.
10. சுக்ரன் சனி நல்ல பொருளாதாரம் உண்டு.
11. சந்திரன் சனி ராகு வெளிநாடு செல்லுதல், பயன கிரகங்கள்.
12. 7ல் குரு சாதுக்களின் சாபம்.
13. 10க்குடையவன் 3ல் சொந்த இடத்தில் தொழில் அமையாது.
14. குரு சந்திரன் ராகு உணவு விஷம்.
15. 10ல் நீச கிரகம் சொந்தப் பொருளை அனுபவிக்க இயலா நிலை.
16. செவ்வாய் +சந்திரன் +கேது திருமண வெறுப்பு.
17. சந்திரன் +சுக்ரன்+ ராகு+ சனி அருவறுப்பு நோய்.
18. குரு புதன் சந்திரன் கேது பிரம்மச்சாரு, தாமதத்திருமணம்.
19. குரு கேது தாமதத் திருமணம்.
20. குரு சந்திரன் புதன் சூரியன் காதல் திருமணம்.
21. 2க்குரியவன் 9,11ல் இரண்டு திருமணம்.
22. செவ்வாய் சுக்கிரன் சந்திரன் படி தாண்டும் திருட்டு உறவு.
23. 6க்குடையவன் திசையில் நொடிந்து போவார்கள், ஐபி கொடுத்தல்.
24. செவ்வாய் புதன் சந்திரன் கோழை.
25. 8ம் அதிபதி 8 ல் எங்குசென்றாலும் சொந்த ஊர் திரும்புதல்.
26. 6,8க்குடையவர்கள்12ல் மறைதல் அக்கா தங்கை உறவு பார்க்காது.
27. அஷ்டமச் சனி( உதயத்திற்க்கு 8ல் சனி) தன் பேராசைக்காக தன்னை வளர்த்தவருடன் போராடுதல், பேராசை அதிகமாகும் காலம்.
28. 2ல் செவ்வாய் கோபம் குடி கெடுக்கும் நிலை.
29: .சந்திராஷ்டம்ம்(தொந்தரவு).
30. 3ல் குரு தம்பியை ஏமாற்றும் நாடகதாரி, காதில் காற்றுடைப்பு.
31. 11ல் சூரியன் பழம் நழுவிபாலில் விழுதல்.
32. செவ்வாய் எங்கிருப்பினும் அதனின்று 10ம் வீடு கெடும்.
33. 3ல் சனி(அ) வக்கிரம் தன் படிப்பை பாதியில் நிறுத்துதல் .
34. சூரியன் சந்திரன் குடும்ப நபர்களில் யாரேனும் ஒருவர் திருமணப் பிரிவுடன் இருப்பிர்.
35. குரு சந்திரன் நல்ல செல்ல வளம் பெயர் தந்தாலும் தனிப்பட்ட வாழ்வில் மனக்கசப்பே, உடன் பிறந்த சகோதரர் வாழ்க்கையைக் கெடுக்கும்.
36. குரு சந்திரன் நல்ல செல்ல வளம் பெயர் தந்தாலும் தனிப்பட்ட வாழ்வில் மனக்கசப்பே உடன் பிறந்த சகோதரர் வாழ்க்கையைக் கெடுக்கும் புத்திர தோஷத்தைக் காட்டும்.
37. 10 ல் செவ்வாய் சொந்தத் தொழில செய்வதைக்காட்டும்.
38. 5ல் செவ்வாய் தகப்பன் காலத்திற்குப் பின் யோகம் தருகிறது.
39. 6ஆம் இடத்தில் ராகு வாழாத பெண்கள் உள்ள நிலை.
40. 6ஆம் அதிபதி நீச்சம் திருடிய பொருள் தங்காது.
41. 7ஆம் அதிபதி நீச்சம் மனைவி தங்காது, மனைவியின் பொருள் தங்காது (அ) எதிராளி (அ) பார்ட்னர் இருக்கமாட்டார்.
42. 8ம் அதிபதி நீச்சம் ஆயுள் தொந்தரவு.
43. குருவிற்கு 5,7,9 ல் கிரகம் இல்லை அற்ப ஆயுள், நோயாளி.
44. 7மிடம் திருடனின் நிலையை குறிக்கும்.
45. 7ம் அதிபதி திருடனைக் குறிக்கும்.
46. செவ்வாய் சனி ராகு பெரிய விபத்தைக் தரும் நிலையை காட்டுகிறது.
47. சுக்ரன் அஸ்தமனம் திருமணத் தாமதம். மனைவி தங்காமை, கண்கோளாறு, உடம்பின் முக்கிய சுரப்பகள் இயங்காத நிலை.
48. 1,7 க்குடையவர்கள் 6,8,12 இருப்பின் விரைவில் பிரிவு.
49. சனி சந்திரன் ஆஸ்துமா, புணர்பு யோகம் (திருமணத்தைத் தாமதப்படுத்த பொருளாதாரம் பாதித்தால் திருமணம் எளிதில், விரைவில் முடிந்து விடுகிறது) பந்தல் வரை போய் திருமணம் நின்றுபோனது புணர்பு யோகத்தினால்.
50. புதன் சந்திரன் சனி இழுவைச் சனி.
51. சந்திரன் புதன் டென்சன் பேர்வழி, மன அழுத்தம்.
52. 8ல் குரு வரட்டுப் பிடிவாதம்.
53. 4,8 க்குடையவர் சேர்க்கை வண்டி வாகன மிருகாதி விபத்துக்கள்.
54. 3ல் செவ்வாய் குருட்டுத் தைரியம்.
55. 5ல் சனி உதயத்தில் சனி நீசமான தெய்வம் (கருப்பராயன், முனியம்மாள், பாவாடைத் தாய், பிரகார தெய்வங்களை குறிக்கும்).
56. லக்னம்முதல் , சனி 3 பாகைக்குள் அற்பாயுள்.
57. மாந்தியிலிருந்து சனி 3 பாகைக்குள் அற்பாயுள்.
58. குரு சனி இளமையில் தொழில், நரம்பு சம்பந்தமான நோய்கள்.
59. 5ல் கேது பூர்விகம் போராடி கிடைக்கும்.
60. 8ல் செவ்வாய் சனி மாங்கல்ய தோஷம் 100 சதவீதம்
61. 10ல் சந்திரன் நீச்சம் கடன் அடையாது.
62. 7க்குடையவர் 10ல் நீச்சம் கடன் அடையாது.
63. 4ல் சனி, 4ம் அதிபதி நீசம், 4ல் நீசம் நம்பி மோசம் போதல், நம்பிக்கை இழத்தல்.
64. 8ம் ஆதிபதி 7ல் முதுகு வலி.
65. குரு புதன் அதிக நண்பர்கள்.
66. 11ல் புதன், 5ல் புதன் ஜோதிடர்.
67. 9ல் பாம்பு 10ல் பாம்பு மாந்தீரீகர்.(பாம்பு- ராகு அல்லது கேது )
68. சந்திரன் சுக்கிரன் பரிவர்த்தனை பல மனைவிகள், பணத்தட்டுப்பாடு.
69. சந்திரன் +புதன் சுக்ரன் கட்டுப்பாடற்ற மனம்.
70. செவ்வாய் புதன் குடிகாரன்.
71. நீச்ச சந்திரன் செவ்வாய் தவறான பழக்கம்.
72. 3ல் சுக்ரன் சந்தேகப் புத்தி, மறைமுக உறவு.
73. சந்திரன்+ கேது மன நிலைதடுமாற்றம்.
74. சந்திரன்+ புதன் +சுக்கிரன் அருவருக்கத்தக்க நோய்.
75. உதய லக்கனத்தில் ராகு பெருத்த உடல், மச்சம் முகத்தில் உண்டு.
76. 10ல் வக்ர கிரகம், 10ம் அதிபதி வக்ரம் தொழிலில் தனித்து இயங்கா நிலையை தருகிறது.
77. சனி நீச்சம் தொழிலில் தனித்து இயங்கா நிலை எற்படும்.