Tuesday 26 January 2021

எளிய மருத்துவ குறிப்புகள். எபநேசர் ஐயா

எளிய மருத்துவ குறிப்புகள்.. நன்றி ; எபநேசர்..
........
3வயது குழந்தை திக்கி திக்கி பேசுகிறது அது சரியாக புது மண் பானையில் துளசியை ஊற வைத்து அதிகாலையில் பருக கொடுக்க சரியாகும்..
..........

கருப்பை நீர்க்கட்டிகள் சரியாக மருந்து கருவேப்பிலை கசாயம் இரவில் பருக சரியாகும்..

..........
மூக்கடைப்பு, சைனஸ், தலை  நீர் கோர்வை சரியாக சரியாக மருந்து நீர் பிரம்மி ஆயில் பயன்படுத்தி கொள்ளலாம்..

..........
தைராய்டு சுரப்பி பாதிப்பு உள்ளவர்கள் முட்டைகோஸ், முள்ளங்கி உணவில் தவிர்த்தல் நலம்..

......

டான்சிலிட்டிஸ் தொண்டைப்புண் சரியாக பூண்டு அரைத்து சாறை தொண்டைப் பகுதியில் தேய்க்க சரியாகும்.. 
.........
இரத்தத்தில் Eosinophis அளவு 16 உள்ளது. குறைய ஏதாவது தீர்வு என்ன கூறுங்களேன்...

தினமும் பீட்ரூட் 30ml சாறு பருக சரியாகும்..

.........

 



Friday 8 January 2021

பாம்பு எலி பல்லி கடிக்கு பாரம்பரிய விஷ வைத்தியம்


பாரம்பரிய விஷ வைத்தியம்!

தொடர் :- 1

விஷ தோல் நோய் உருவாகும் காரணம் அறிதல்!!

உங்கள் தோல் நோய் ஏன் குணமடையவில்லை?

    நோய் தோன்றிய உன்மையான காரணத்தை அறிந்து அதற்குரிய சிகிச்சை எடுக்காத கரணத்தால் அந் நோய்  குணமாகால் இருக்கலாம்!

( எலி. பாகம் 1 )

     தோல் நோய்கள் உருவான காரணத்தை கண்டறிந்து அதற்குரிய சரியான சிகிச்சையை எடுத்து கொள்ளாததால்......
     பல ஆண்டுகள் ஆகியும் பல வகைகளில் மருத்துவம் பெற்றும் உங்களுக்கு நிரந்தர குணம் கிடைக்காததே உன்மை காரணம்...
     இதோ..... யாருக்காவது தோல் நோய் உருவானதுக்கு.....யாராவது இப்படி ஒரு காரணத்தை கண்டுபிடித்து சிகிச்சை வழங்கியிருந்தால் கூறுங்களேன்!
     
      நம் வீட்டில் நம்முடைய அனுமதியில்லாமல் வாழும் எலிகள் தங்களது புணர்ச்சி நேரத்தில் உடனே இணைவதில்லை. 
   ஆண் பெண் இரண்டும் சுமார் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் வரை தங்களை மறந்து அவைகளுக்கு வசதியாக கிடைக்கும் இடங்களில் ஓடி விளையாடி வியர்த்து ஒழுகிய பின்னரே இணையும்! 
இது வீட்டில் மட்டுமல்ல அலுவலகங்களில், மண்டபங்களில் எங்கு வேண்டுமானாலும் நம் கவனத்திற்க்கு தெரியாமல் நடை பெறலாம்!
       அவ்வாறு உயரத்தில் இணையும் போது இதை அறியாமல் கீழே நிற்பவரின் உடலின் மீது.....
எலியின் புணர்ச்சியினால் வெளிப்படும் ஒருசில  துளி சுக்கிலம் தெறித்து பட்டால்....
         சில மணி நேரத்திற்க்கு பின் அவ்விடத்தில் சிறு நமைச்சல் உண்டாகி, ஒருவாரத்தில் ஒரு ரூபாய் துண்டு அளவு படர் தாமரை ( இது படர் தாமரை அல்ல ) போல் தோன்றி பின் நாளடைவில் உடலில் உள்ள தோல் முழுவதும் பரவி பல ஆண்டுகளாக நீங்காத துன்பத்தை கொடுக்கும்!
         இந் நோய் உருவாகிய காரணத்தையும், இதை விரைவில் குணப்படுத்தும் பாரம்பரிய சிகிச்சையும்....
     பரம்பரை பரம்பரையாக வைத்தியம் செய்துவரும் பாரம்பரிய வைத்திய குடும்பத்தினரின் கையடக்கத்திலேதான்  இன்றும் உள்ளது!
      






பாரம்பரிய விஷ வைத்தியம் தொடர் 2

எலி  விஷயம் பிரிவு 2

நேற்று வெளியிட்ட எலி பாகம் 1ல் எலிகளின் புணர்ச்சியின்  நேரத்தில் வெளியேறும் சுக்கிலம் சிதறி மனித உடலில் வெளிப்பகுதியில்  படுவதால் என்ன நிகழும் என்பதை பார்த்தோம். 
 
 இன்று...
      இந்த சுக்கிலமானது மனிதனின் வாய் வழியாக உடலின் உள்ளே சென்றால் என்ன நிகழும் என்பதை பார்ப்போம்!
    புணர்ச்சி வேளையில் எலிகள் ஓடி பிடித்து விளையாடும் போது அவைகளின் வியர்வை துளிகளும் அதன்பின் அவைகள் ஆவேசமாக புணரும் போது அதன் சுக்கிலமும் தரையை நோக்கி கீழே வரும். 
      அந்த நேரத்தில் நாம் பயன் படுத்தக்கூடிய நீர் அருந்தும் குவளை, உணவருந்தும் தட்டு குடிநீர் சேகரிப்பு பாத்திரங்கள் , திறந்திருந்த  பழங்ங்கள்.  போன்றவைகளிலும் உண்பதற்க்கு திறந்து வைத்த உணவுகளிலும் 100•/• விழ வாய்ப்புண்டு....
      இவ்வாறு அறியா தன்மையுடன் இப்  பாத்திரங்கள் பழங்கள் போன்றவற்றை கழுவி சுத்தபடுத்தாமலும் உணவை மூடிவைத்து பாதுகாக்காமல் பயன் படுத்துபவர்களின் குடலில் இந்த சுக்கிலம் நீருடனோ பழச்சாறுடனோ உணவுடன் கலந்து சென்று குறுகிய நாளிலே தோல் நோயை உருவாக்கும்.

     உடலில் சத்துக்குறைவால் வரும் வெண் புள்ளி நோயை போல் காட்சியளிக்கும் . வெண்புள்ளிக்கான சிகிச்சை இதற்க்கு பயன் தராது.
சுந்தரி என்னும் எலி ( நச்செலி, முஞ்சீறு) கடிப்பதாலும் இந்நோய் தோன்றும். ஆனால் இரண்டுக்கும் சிகிச்சை விதிமுறைகள் வேறு வேறு.
     இந்நோய்களை இனம் கண்டறிந்து தனி சிகிச்சை கொடுத்து குறுகிய நாளில் குணப்படுத்த பாரம்பரிய வம்சா வழி வைத்தியர்களால் மட்டுமே முடியும்!





விஷ வைத்தியம்!

 விஷ வைத்தியம் தொடர் 3

தோல் நோய்களை உருவாக்கும் விஷ கடி என்னும்  உன்மை காரணங்கள்!

உங்கள் தோல் நோய்கள் வெகு நாட்களாகியும் குணமாகாத காரணம்...? 

 நோய் உருவான காரணம் தெரியாமல் சிகிச்சைகள் பெறுவதால்  தோல் நோய்கள் குணமாக100 •/• வாய்ப்பில்லை! 

     நீர் பாம்பு, பாகம் 1
 
      இது பாம்பு இனத்தில் ஒன்றாகும் எவ்வளவு நேரமும் தண்ணீரினுள் இருக்கும் தரையிலும் உலா வரும் பல்லில் பெரிய அளவில் விஷம் ஏதும் கிடையாது! சில் விஷமே இருக்கும். அந்த விஷம் அமாவாசை, பவுர்ணமி தினங்களில், சோர்வுடன் சில உடல் நலக்குறைவுகளை காண்பிக்கும்.

     குழம் ஏரி ஆறு போன்ற நீர் நிலைகளிலும், நீரை தேக்கம் செய்து விவசாயம் செய்யப்படும் நெற் பயிற் போன்ற நீகட்டு நிலங்களிலும் இவைகள் நீரினுள் காணப்படும்.!

     இவைகள் மிதிபடும் போது தன்னை மிதித்துள்ள காலசுற்றி அழுத்தம் கொடுத்து  தன்னை விடுவிக்க  முயற்ச்சி செய்யும்.

      அவ்வாறு அழுத்தும் போது அதன் வால் நுனிக்கும் சற்று மேலாக வயிற்றுக்கு சற்று கீழாக....

    உடலின் உள்ளே சென்று வெளியே வரும் வகையில் இரண்டு முள்கள் இருக்கும்....

     நீர் பாம்புகள் யாருடைய காலையாவது சுற்றிய  வேளயில். தன்னுடைய பிடி இறுகுவதற்காக இம் முள்களை வெளியே இறக்கி அழுத்தும்...

   அவ்வாறு அழுத்தும் நேரத்தில் அந்த முள்களிலிருந்து எண்ணை பசை போன்ற ஒரு திரவம் வெளியேறி ஒரு சில துளிகள் காலில்  குத்துப்பட்ட பகுதியினுள் சென்றுவிடும்...

     பின்னால் தொல்லை தரக்கூடிய இப்படி ஒரு நிகழ்வு நடந்ததை கணக்கில் கொள்ளாத அப்பாவிகள்....

   ஏதோ சிலேப்பி மீன் கடித்தது , கெழித்தி மீன் கொட்டியது என பிறரிடம் கூறி வேடிக்கை பேசுவார்கள்....
 
   சில காலங்களில்....இந்நிகழ்வு மறந்து போக.....

     அந்த குத்துபட்ட இடங்களில்  தோல்களில் புள்ளி புள்ளியாய் ஆரம்பித்து....

     அடுத்து கீழே வரைந்து காட்டப்பட்டுள்ள படத்தில் இருப்பது போல் ஆரம்பித்து......

  அதன் பின் அடைஅடையாக பொருக்கை பொருக்கையாக உடல் முழுவதும் பரவிவிடும்.....

     பாதிக்கப்பட்ட நபரும் ஏவனோ மாந்திரீகம் செய்துவிட்டான் என அதற்க்கான பரிகாரம் தேடுவதும்..... 

    பலர் கூற சிகிச்சை தேடி ஒவ்வொரு இடமாக அலைந்து நிவாரணம் கிடைக்காமல் பல ஆண்டுகளாக அலைவதுமாக இருக்கும்....
 
அனால் இந்நோய் காரணத்தை கண்டறிந்து குறுகிய காலத்தில் குணப்படுத்தும் வல்லமை படைத்தவர்கள் பாரம்பரிய வைத்திய வம்சத்தில் பிறந்த வைத்தியர்களே.




பாரம்பரிய விஷ வைத்தியம்! 

தொடர் 4

     விஷ வைத்திய நோய் குறிகுணம்!

      பல அண்டுகள் ஆகியும் உங்கள் தோல் நோய் குணமாகாத காரணம்......

         அது உருவாவதற்க்கான காரணம் என்ன வென்று கண்டறிந்து.....

        தனிபப்பட்ட வகையில் அதற்குரிய வைத்தியம் செய்யாததே!
 
       தலைப்பு :- 
                       பாம்பு இனம் 1 

       பாம்பன் பெயர் :-
                               சாரைப்பாம்பு......

       கேரளாவில்  ஒரு சில வகுப்பினரிடையே.....
     சாரை பாம்புகளால் வீட்டில் கார் பங்களாவுடன் செல்வம் கொழிக்கும்  குழந்தைபாக்கியம் உண்டாகும்  என பல்வேறு ஐதீகங்கள் உண்டு! 
      இரவில் ஒருவர் போர்வையை மூடி அயர்ந்து  தூங்கும் போது சாரைபாபாம்பானது அவரது கால்மீது ஏறி ஊர்ந்து தலை வழியாக கீழிறங்கினில் மேற்க்கூறியுள்ளபடி ஐஸ்வர்யங்கள் வந்து சேரும் என்பது அவர்களது நம்பிக்கை!
    ஆகவே அவர்கள் வீட்டில் சாரைப்பாம்பு புகுந்ததால்....
      சாரைபாம்புக்கு தொந்தரவு இல்லாமல் இருக்க வீட்டில் வளர்ந்து வந்த  நாய் பூனை போன்றவற்றை அன்றைய தினமே மீண்டும் திரும்பி வராத வகையில் வீட்டை விட்டு விரட்டி விடுவார்கள்!




பாரம்பரிய விஷ வைத்தி தொடர் 5
    
   
    
     எலி விஷயம் பிரிவு 3 

      தோல் நோய் உருவாகும் காரணம் அறிதல் ! 
    
    பல ஆண்டுகள் ஆகியும் உங்கள் தோல் நோய் ஏன் குணமாகவில்லை என தாங்கள் அறிந்து கொள்ள இம் முயற்சி!

      எலிகள் புணர்ச்சிக் கொள்ள இணைவதற்க்கு....
முன் சில மணி நேரங்கள் ஓடி பிடித்து விளையாடிய பின்னரே.....
   உச்சநிலை அடைந்து புணரும் என இதற்கு முந்தைய பாகங்களில் கூறி இருக்கிறேன்.
   
  அவ்வாறு புணர்ச்சியின் போது மேலிருந்து தவறி கீழ் நோக்கி வரும்போது....
  கீழே திறந்திருக்கும் உணவுகள், குடிநீர் பானை, போன்றவைகளில் விழுந்தால்....
    அந்த உணவு தண்ணீர் போன்றவற்றில் பயத்தில்அங்கும் இங்கும் ஓடி அல்லது நீச்சல் அடித்து  சிறுநீர் கழித்தவாறு முயற்சி செய்து 
தப்பி ஓடி விடும்! 
    ஆக அந்தநேரத்தில் அந்த எலிகளின் சுக்கில துளிகள், வியர்வை, சிறுநீர் என மூன்று விஷங்களும் கலந்த தண்ணீர் மற்றும் உணவுகளை தெரியாத்தனமாக உண்பவர்களுக்கு.....

     ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் மூன்று ஆண்டுகளுக்குள்ளால்...
 
   தலையில் ஓரிடத்தில் சிறு பொடுகு போன்று தோன்றி....

   பின் அது அடை அடையாக தலை முழுவதும் பரவி...
    
    சிறுக சிறுக சாலையிலிருந்து கீழ் இறங்கி உடல் முழுவதும் பரவி தீராத துன்பத்தை கொடுக்கும்....
   
  எலிகள் கூட்டமாக தங்கி வாழும் சிறையிலிருந்து வெளிப்படும்  ஒருவித கெட்டவாடை  இவர்கள் உடலில் பார்த்தவுடன் வெளிப்பட்டு அருகில் நிற்பவர்களை மூக்கை பிடிக்க வைக்கும் என்பது சங்கடத்துக்குரிய விஷயம்! அன்றைய தினம் அந்த எலிவிழுந்தபண்டத்தை குடும்பத்தினர் சேர்ந்து தொண்டர்கள்தான்....
அவர்கள் அனைவருக்கும் இந்நோய் உருவாகும்.....
ஆக.....
 யாரோ மாந்திரீகம் செய்து விட்டார்கள் என மடத்தனமாக கொவில் குளங்களுக்கு அலைந்தால் நோய்குணமாகாது....

    இந் நோயின் காரணம் மற்றும் தன்மைகளை கண்டறிந்து அதற்குண்டான சிகிச்சை கொடுத்து நிரந்தர தீர்வு வழங்க உண்மையான  பாரம்பரிய வைத்தியர்களால் மட்டுமே இயலும்!





பாரம்பரிய விஷவைத்திய தொடர் 6

   பல்லி விஷம் பிரிவு  1
  
   தோல் நோய் உருவாகும் காரணம் அறிதல் !

  பல ஆண்டுகள் ஆகியும் உங்கள் தோல் நோய் குணமாகாத காரணம் ஏன் என்பதையும் அறிந்து  கொள்ளுதல்...
    
   பல்லி வீட்டில் வளருவதுதான்!
  
       வீட்டினுள்ளே நுளையும் ஈ கொசுக்களை  முடிந்த அளவு பிடித்து சாப்பிடும். 
  யாத்திரை செல்பவர்களுக்கு சகுணம் கூறும் என்ற ஐதீகம் உள்ளது.
    அப்படி பல்லியினால் நல்ல செயல்கள் இருந்தாலும்....
  ல்லியின் சிறு நீர் நமது உடலில் எங்காவது பட்டாலும் வாய் உதட்டில்   அருகில் சிறு கொப்பளங்கள் ஆரம்பித்து...
அப்புறம் அந்த கொப்பளங்கள் விரிந்து.... உதடுகள் முழுவதையும் ஆக்கிரமிக்கும்!
  
   இந்த கொப்புளங்களை ஆரம்ப கட்டத்தில் காலையில் புல்களில் படிந்திருக்கும் பனி நீரை விரலால் தொட்டு நனைத்து  குணப்படுத்துவர்.

   திறந்திருக்கும் பழங்கள் உட்பட உணவுகளில் பல்லியின் சிறுநீர் பாடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது ! 
 அந்த உணவுகளும் விஷ தன்மை கொண்டவைகளே!
 
     பாத்திரங்களை திறந்து வைத்து உணவு சமைக்கும் போது, மேல ஊர்ந்து செல்லும் பல்லி தவறி விழுந்து வெந்து குழைந்து உணவோடு உணவாக கரைந்துவிடும். 

 அறியாதனமாக அவ்வுவணவை  உண்பவருக்கு முன்றுமணி நேரத்தில் கடுமையான வாந்தியும் தலை சுற்றலும் ஏற்பட்டு மரணம் ஏற்படலாம். 
    இன்னும் சிலருக்கு நாற்பது நாட்கள் கடந்ததும் உடலில் அங்கங்கே றோஸ் நிறத்தில் சிறு வட்ட வட்டமாக இதுதொடர்பாக அடையாளங்கள் தோன்றும்!

     அப்போது பல்லி உணவுதான் காரணம் என்று தெரியாததாலும், தெரிந்தாலும் இதற்க்கு இதுதான் வைத்திய சிகிச்சை என தெரியாமலும் சிகிச்சை ஒழுங்கில்லாத காரணத்தால்... 

 அந்த றோஸ் நிறுத்தின்  வட்டங்கள் கரு நீல நிறத்திற்கு மாறி, விரிந்து பெரிதாகி பின் துர் நாற்றத்துடன் கறுப்பு நிறமாக அடை அடையாக உடல் முழுவதும் பரவி தாங்காத துன்பத்தை கொடுக்கும்!

  அனுபவம் வாய்ந்த உன்மையான பாரம்பரிய வைத்தியர்கள் இந்நோய் எதனால் வந்தது என கண்டறிந்து.....

 முற்றிய நோயையும் தொன்னூறு நாட்களிலிருந்து நூற்றி இருபதுநாட்களில் பூரணமாக குணப்படுத்துவார்கள்! 




பாரம்பரிய விஷவைத்திய தொடர் ...7 
  
 கொம்பேறி மூர்க்கன் என்னும் பெயருடன் கடும்  விஷம் கொண்ட நாகப் பாம்பு...

இது ஒருவரை தீண்டினால்...

அந் நபர்  மரணம்  எய்தி அவரை புதைத்து அல்லது எரித்து இறுதி சடங்கு  செய்யப்பட்டதை நேரில் பார்த்த பின்னரே  இப் பாம்பு சாந்தியடையும்! 

   அந்த காலங்களில்  இப்பாம்பு தீண்டி உயிர் சேதம் ஏற்ப்படும் வகையில் இருப்பவரை....
வைத்தியன்  வந்து சிகிச்சை செய்து குணப்படுத்துவதை தடுக்க வைத்தியன்  வரும் வழிப்பாதையில் அமர்ந்து சீறும்!
  
     வைத்தியத்திற்கு என பிறவி எடுத்த வைத்த்தியர்கள் விஷ வைத்தியத்திய  பயற்சியின்போது தவம் இருந்து தீட்ச்சை பெற்றிருக்கும் காரணத்தால் இந்த பாம்பு  விலகி சென்றுவிடும்...

    ஆயினும் வேகமாக அங்கும் இங்கும் சென்று மனிதர்களின் கண்களிலிருந்து மறைந்து உயரமான ஏதாவது மரத்தில் ஏறி உச்சி கொம்பில் உட்கார்ந்து கடி பட்டவரை படுக்க வைத்து சிகிச்சை வழங்கும் வீட்டை பார்த்து படம் எடுத்தபடி சீறிக் கொண்டே  இருக்கும்!

 அது சீறச்சீற விஷமானது கடிபட்டவரின் மூளை மண்டலத்திற்கு ஏறி உயிர் பிரியும் தருவாய்க்கு செல்லும்!
 ( விஞ்ஞான பிரியர்கள் நம்பமாட்டார்கள் )

    சிகிச்சை வழங்கிக்கொண்டு இருக்கும் வைத்தியன் தீட்ச்சை பெற்ற பாரம்பரிய வைத்தியராக  இருந்தால் நிலமையை உணர்ந்து கொண்டு கருட மந்திரம் ஜெயிக்க.... 

   ஒருசில நிமிடங்களில் கருடன் ஒலி எழுப்பியவாறு அப்பகுதியில் வட்டமிடும்!
  
   உடனடியாக மரத்தின் உச்சி கொம்பில் அமர்ந்திருந்த பாம்பானது, தன் உயிரை காப்பாற்றி கொள்ள கருடனுக்கு தெரியாமல் மெதுவாக இறங்கி ஏதாவது பொந்துக்குள் நுளைந்துவிடும்.
 
 அதன் பின் வைத்தியர் தன் சிகிச்சையை தொடர்ந்து செய்து உயிரை காப்பாற்றுவார்!
  
  கிராம புறங்களில் தீட்சை பெறாத வைத்தியர்களும் இச்சிகிச்சை  செய்யும்போது பாம்பு மரத்தின் உச்சியில் இருந்து சீறுகிறது என்று தெரிந்தால்....

 மர நிழல்கள் இல்லாத வெட்டா  வெளியில்  சிறு கோழி குஞ்சிகளை கட்டியிட  அக் கோழிக்குஞ்சிகளை பார்த்ததும் செம்பருந்துகள் வட்டமிடும் உடனே பாம்பு பயந்து அடங்கி இடமாறிவிடும்!
 
    தற்போதைய விஞ்ஞான மருத்துவத்தில் இந்த கொம்பேறி மூர்க்கன் என்ற பாம்பு தீண்டினால் உயிர் காப்பாற்றும் வாய்ப்பில்லை! 

  இப் பாம்புக்கு கருநாகம்,  கார்க்கோடன் என்ற வேறு பெயர்களும் உள்ளன! 

இது சுதந்திர குல வம்சத்தை உடையது!

   ஓணான் எலி தவளை நத்தை நண்டு குருவிகள் கோழிக்குஞ்சி போன்ற அசைவ உணவுகளை உண்டு முன்னூறு ஆண்டுகள் வாழ்ந்து இயற்க்கை எய்யும். 

    இது தீண்டியவரை பாரம்பரிய வைத்தியர்களால் காப்பாற்ற இயலும்!

  இவற்றின் ஒரு தனித்தன்மை என்னவென்றால்...
 
     பழமை வாய்ந்த ஆலயங்களில் உள்ள பொருட்களையோ ஆபரணங்கள்யோ யாராவது திருடிச்சென்றால்.... அங்கே வீற்றிருக்கும் தெய்வங்களின் உத்தரவுபடி.....
அந்த நபரை தேடிச்சென்று கண்டவுடன் நேர்  எதிரே முன்னோக்கி ஏறிச்சென்று கடித்து படுகொலை செய்யும்! அவருக்கு வைத்தியம் செய்தால் பலன் கிடைக்காது! 
   அந்தநேரத்தில் அப் பாம்பை தனி மனிதனாகவோ அல்லது கும்பலாகவோ அடித்து கொன்றால்....
 அவர்களுக்கும் அவர்கள் சந்ததிக்கும் விமோசனம் இல்லாத  பெரும் சாப தீடுவந்து சேரும்!

  அன்புடன்:- பாரம்பரிய சித்த வைத்தியர் நெல்சன் ராஜ் உரிமையாளர் ராஷியா சித்த வைத்திய சாலை ( ராஷியா சித்தா பாலி கிளீனிக் )ஆலமூடு ஜங்சன் எட்டணி கருங்கல் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் கன்னியாகுமரி மாவட்டம்  9514284915. 7598080021,W app 7598684915