Saturday 30 March 2019

வாத மடக்கி தைலம் செய்முறை :

வாத மடக்கி தைலம் செய்முறை :
1 - வாத மடக்கி இலைச்சாறு - 1-லிட்டர்
2 - நயம் விளக்கெண்ணை - 1-லிட்டர்
3 -சுக்கு - 40 - கிராம் 
4 - மிளகு - 40 - கிராம்
5 - திப்பிலி - 40 - கிராம்
6 - வெண் கடுகு - 10-கிராம்
மேற் குறிப்பிட்ட 4-சரக்குகளை வாத மடக்கி இலைச்சாறு விட்டு அரைத்து எண்ணையுடன் கலந்து பதமாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொள்ளவும்.
இதனை இரவு படுக்கும் போது 2-டீஸ்பூன் அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிடவும்.காலையில் மலம் ஓரிரு முறை கழியும்.
இதனால் தீரும் நோய்கள் :-
வாத ரோகம்,கீல்வாயு,குதிக்கால் வலி,முடக்கு வாதம், நடுக்கு வாதம்,நரம்புத் தளர்ச்சி,கை கால் குடைச்சல், நரித்தலை வாதம் முழங்கால் முட்டி வீக்கம் போன்ற அனைத்தும் தீரும்.
குறிப்பு :-இதனுடன் மேற்ப் பிரயோக "வாத தைலம்" சேர்த்து பயன்படுத்தி வந்தால் மிகுந்த பலன் விரைவில் கிட்டும்.
நன்றி ; பாஸ்கர்

உயிர் சக்தி அதிகரிக்கும் முத்திரை

செய்முறை*
விரிப்பில் அமர்ந்து சுண்டு விரல், மோதிர விரல், கட்டை விரல் என மூன்று விரல்களின் நுனிகள் தொட்டுக்கொண்டு இருக்கம் படி அமர வேண்டும். மற்ற விரல்கள் நேராக வைத்திருப்பது மிக முக்கியம்.
*அடிப்படைத் தத்துவம்*
சுண்டு விரல் - நீர், மோதிர விரல் - நிலம், கட்டை விரல் - நெருப்பு. இந்த மூன்று விரல்களும் ஒன்றாகச் சேரும்போது, நிலம் மற்றும் நீரை, நெருப்பால் சமன் செய்கிறோம். இந்த செயல்பாட்டை உடலில் சிறப்பாக நடத்துவதுதான் பிராண முத்திரையின் வேலை.
*பலன்கள்*
இந்த முத்திரையை 10 நிமிடங்கள் செய்தால், உடலில் உள்ள *உயிர் சக்தி அதிகரிக்கும்*.
இடுப்பு, முதுகு வலிகளால் அவதிப்படும் போது, இந்த முத்திரையைச் செய்துவந்தால், வலியின் வீரியம் குறைந்து, நாளடைவில் குணமாகும்.
தீவிர முடி கொட்டுதல் பிரச்சனை இருந்தாலும் சரியாகும். *கருமுட்டை வளர்ச்சி நன்றாக இருக்கும். விந்தணுக்களின் வேகம் அதிகரிக்கும்.*
கண்ணாடி அணிந்திருப்பவர்கள், தினமும் 40 நிமிடங்கள் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குப் பிராண முத்திரை செய்தால், *பார்வைத் திறன் மேம்படும். கிட்டப்பார்வை, தூரப் பார்வை பிரச்சனைகள் சரியாகும்.*
தொடர்ந்து 40 நிமிடங்கள் செய்ய முடியவில்லை எனில், 10 நிமிடங்களாகப் பிரித்தும் செய்யலாம்.
இந்த முத்திரை செய்யும்போது கண் எரிச்சல், கண்களில் நீர் வழிதல், கண் பொங்குதல் போன்ற பிரச்சனைகள் வரலாம். ஒரு பஞ்சை, சாதாரண நீரில் நனைத்து, கண்களின் மேல் வைத்துக்கொள்ளவும்.
பிறகு, இளஞ்சூடான நீரில் பஞ்சை நனைத்து, கண்களின் மேல் வைக்க வேண்டும். இப்படி மூன்று நிமிடங்கள் வரை செய்ய, கண் பிரச்சனைகள் சரியாகும்.
*கவனிக்க வேண்டியவை*
கை நடுக்கம் ஏற்பட்டால், செய்வதை நிறுத்தவும். வயதானவர்கள், தூக்கம் வராதவர்கள் இரவு 8 மணிக்கு மேல் இந்த முத்திரையைச் செய்ய வேண்டாம். தூக்கம் கலைந்துவிடும்.

பண்டைய கால பயோலஜி உயிரியல் கண்டுபிடிப்பு

பண்டைய கால பயோலஜி!
Jamie Gufierez என்ற பேராசிரியர் கொலம்பியாவில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருந்த போது 27 செண்டிமீட்டர் விட்டம் கொண்ட டிஸ்க் ஒன்று கிடைத்தது. 2 கிலோ எடை கொண்ட அந்த டிஸ்க் பார்ப்பதற்கு நாம் இன்றைய காலத்தில் பயன்படுத்தும் CD, DVD போல இருக்கிறது. இதன் காலத்தை ஆராய்ந்த Jamieக்கு பேரதிர்ச்சி காரணம் இந்த டிஸ்க் சுமார் 6000 வருடங்கள் பழமையானது. இதன் காலத்தை அறிந்ததும் Jamieன் ஆர்வம் அதிகமானது. அதில் செதுக்கப்பட்டிருந்த உருவங்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் அது. அந்த சிறிய டிஸ்கில் கிட்டத்தட்ட 50 உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. சில உருவங்களை பார்த்த உடனேயே கணிப்பதப்போல் இருந்தாலும் சில உருவங்களை யூகிப்பது சவாலாக இருந்தது. எனவே வேறுசில ஆய்வாளர்களிடம் ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இப்படி ஒருவர் கை ஒருவராக மாறிமாறி இறுதியாக ஒரு உயிரியல் ஆய்வளரிடம் போய் சேர்ந்தது. இதனை ஆய்வு செய்த உயிரியல் ஆய்வாளருக்கு ஒரு நிமிடம் இதயத்துடிப்பே நின்றுவிடுவது போலிருந்தது. ஆம் அந்த டிஸ்கில் இருந்தது அத்தனையும் உயிரியல் சம்பந்தமான தகவல். அதுவும் இன்றைய காலகட்டத்தில் மைக்ரோஸ்கோப் மூலம் ஆய்வுசெய்து கண்டறியப்பட்ட உண்மைகள். அப்படி என்னதான் அந்த டிஸ்கில் இருந்தது என்று கேட்கிறீர்களா? ஒரு மனித உயிர் கருவாகி உருவாகி முழுவடிவம் பெற்று குழந்தையாக மாறும் வரை அனைத்தையும் வெட்ட வெளிச்சமாக விளக்கப்பட்டுள்ளது. ஆணின் உயிரணு பெண்ணின் கரு முட்டையை அடைந்து இணைந்து முழுகருவாக மாறி பின் செல் பிளவுகளின் மூலம் உடலை பெருவது என்று அனைத்துமே தெள்ளத்தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இவை அனைத்திலும் உச்சம் ஒரு செல்லின் உள்ளே இருக்கும் வேதிப்பொருட்களை பற்றி விளக்கியிருப்பது.
இது எப்படி சாத்தியம். 6000 வருடங்களுக்கு முன்பு மனிதனின் கரு வளர்ச்சியை பற்றி அறிந்திருந்தார்கள் என்று நினைக்கும் போதே ஆச்சர்யம் தாங்கமுடியவில்லை. இதில் இன்னும் ஒருபடி மேலே சென்று நாம் மைக்ரோஸ்கோப் மூலம் ஆய்வுசெய்துகொண்டிருக்கும் செல், செல் பிளவு, அதன் உள்ளே இருக்கும் வேதிப்பொருட்கள் என்று அனைத்தையும் புட்டுபுட்டுவைத்தால் நாம் என்ன நினைப்பது.
இந்த டிஸ்கின் வடிவமும் நம்மை சிந்திக்க தூண்டுகிறது. நாம் இன்று தகவல்களை சேமித்து வைக்கை CD, DVDயை பயன்படுத்துகின்றோம். அதே வடிவில் அதே பயன்பாட்டிற்காக இந்த டிஸ்கையும் உருவாக்கியிருக்கிறார்கள். இதன்மூலம் என்ன கூற நினைக்கிறார்கள்.
கோடி கோடியாக செலவு செய்து ஆய்வுக்கூடங்களில் நடத்தப்பட்ட பெரிய பெரிய உயிரியல் கண்டுபிடிப்புகளை இப்படி சர்வசாதாரணமாக 27 செண்டிமீட்டர் டிஸ்கில் கூறிசென்ற அந்த அறிவில் மேன்பட்ட பூர்வகுடி எது? அவர்கள் என்ன ஆனார்கள்? இன்னும் எவ்வளவு கண்டுபிடிப்புகள் அதிசயங்கள் அவர்களால் நிகழ்த்தப்பட்டன.
.
இந்த டிஸ்கும் தகவல்களும் பொய் என்று சொல்பவர்களும் உண்டு.
இந்த தகவல் பொய்யாக இருந்தால் யாருக்கும் எந்த நட்டமும் இல்லை. ஆனால் உண்மையாக இருந்து நிராகரிக்கப்பட்டால் இழப்பு மனித இனத்திற்கே.
.
எழுத்து
துரைராஜ் இராஜேந்திரன்.
No photo description available.
Image may contain: 2 people

கருப்பணசுவாமி – பூஜா விதி

கருப்பணசாமி – ரூபலக்ஷ்ணம் ! (திருவுருவ அமைப்பு)
இவர் பைரவர் அம்சம்; கிராமிய வழக்கில் கருப்பர் – கருப்பணன் – கருப்பண்ணன் – முனியாண்டி – சடையாண்டி – கருப்பணசாமி எனப் பலபெயர் பெறுவர். ஒரு முகமும் – இரண்டு கரங்களுமே உடையவர். வலக்கரத்தில் – கத்தி அல்லது அரிவாள் கொண்டிருப்பார். இடக்கரத்தில் – தண்டம் அல்லது கதை உமையவராக இருப்பார். முறுக்கு மீசையும் – சடாமுடியும் உடையவர். காவி உடை அணியும் வழக்குடையவர். இவர் அருகில் நாய் வாகனம் இருக்கக் காணலாம். அதுவே, இவர் பைரவர் அம்சம் என்பதை எடுத்துக்காட்டும்.
குதிரை வாகனத்தின் மேலும் அமர்ந்திருப்பார். குதிரை வாகனத்தின் அருகிலும் இருப்பார். கிராமிய காப்புக் கடவுள். இவரை வழிபட்டால் – காத்தல் அடையலாம். உபாசித்தால் – பேய் – பிசாசுகளின் – பிடியில் இருந்தும் விடுபடலாம்!
கருப்பணசுவாமி – பூஜா
ஆசன ஆர்த்தி மூலம் :
ஓம் – ஹ்ரூம் – கருப்பண்ணசாமி – ஆசனாயயாய – நம:
ஓம் – ஹ்ரூம் – கம் – கருப்பணசாமி மூர்த்தியை – நம:
ஓம் – ஹ்ரூம் – ஹாம் – கம் – கருப்பணசாமியே – நம:
காயத்ரி :
ஓம் க்ருஷ்ண வர்ணாசாய வித்மஹே;
ருத்ர புத்ராய தீமஹி;
தந்நோ பீம ப்ரசோதயாத்.
த்யான ஸ்லோகம் :
வ்ருத்தாயத் த்விநேத்ரம் ச
வ்யாளபத்த சூகுந்தளம்;
நீலம் பீமம் த்ரிபுண்டர வில சந்முகம்
குந்தம் தரந்தரம் வாமேச;
க்ருகரம் தக்ஷிணே கரே
ஓட்யாண பத்த கச்சம் ச;
ஸர்வா லங்கார பூஷிதம்
கருப்பணசாமி நமஸ்துதே.
மூல மந்திரம் :
ஓம் – ஹ்ரூம் – கம் – கருப்பணசாமியே நம:
அர்ச்சனை :
இத்துடன் இணைத்துள்ள நாமாவளியைக் கொண்டு அர்ச்சிக்க.
பூஜை :
பீஜங்களுடன் கூடிய – கருப்பண்ணர்
நாமம் கூறி – சமர்ப்பியாமி சொல்லி –
தூப – தீப – நைவேத்திய –
தாம்பூலம் – சமர்ப்பிக்க.
துதி :
ரக்தாக்ஷம் க்ருஷ்ண வஸ்த்ரஞ்ச
த்வி புஜம், மோஹணா க்ருதிம்;
கட்கம் தண்டம் அபயகர ஹஸ்தம்
சுவாமி கருப்பண்ண நமோஸ்துதே.
கருப்பண்ணசுவாமி – அஷ்ட சதஸ்தோத்ரம்
ஓம் க்ருஷ்ணவர்ணாய நம
ஓம் ரக்தாசாய நம
ஓம் நீலவஸ்த்ராய நம
ஓம் த்விபுஜாய நம
ஓம் சுந்தராய நம
ஓம் கட்க பாணியே நம
ஓம் தண்டஹஸ்தாய நம
ஓம் அலங்காரசோபிதாய நம
ஓம் குக்குட ப்ரியாய நம
ஓம் பய நிவாரகாய நம
ஓம் தயா மூர்த்தியே நம
ஓம் நிசி நாதாய நம
ஓம் ரோகஹராய நம
ஓம் மகாவிக்ரமாய நம
ஓம் த்ரிபுண்டாதாரிணே நம
ஓம் ருத்ர புத்ராய நம
ஓம் பீம அம்சரே நம
ஓம் த்விநேத்ராய நம
ஓம் புஜங்க ஆபரணங்ய நம
ஓம் புரவிரூடாய நம
ஓம் சுகாசனாய நம
ஓம் நூபுர பாதரே நம
ஓம் குங்கும திலகரே நம
ஓம் சந்தன மேனியாரே நம
ஓம் கல்லாட வஸ்தரே நம
ஓம் க்ராம பாதுகாவலரே நம
ஓம் உத்திரநோக்கரே நம
ஓம் அக்ஷ்மாலரே நம
ஓம் கஸ்தூரி ப்ரியரே நம
ஓம் சப்தகன்னி காவலரே நம
ஓம் ஸ்வான அருகுடயாயி நம
ஓம் தடாகவிருப்பரே நம
ஓம் நிம்பவ்ருஷஅமர்வாய் நம
ஓம் சடா மகுடாய நம
ஓம் காப்புக் கரத்தாய் நம
ஓம் வீரதண்டாய நம
ஓம் உக்ர முகத்தாய் நம
ஓம் வ்யாக்ரசர்மகக்சாய் நம
ஓம் போதிவ் ருஷப்ரியாய நம
ஓம் புருச விசேசாய நம
ஓம் மகாகாளாய நம
ஓம் ஏககாராய நம
ஓம் அம்ஸாய நம
ஓம் அம்ஸபநயே நம
ஓம் அரிசோபிதாய நம
ஓம் நவபூசணாய நம
ஓம் நமசிகதாய நம
ஓம் சர்வதூதாய நம
ஓம் கணபூஜிதியா நம
ஓம் தீர திவ்யாய நம
ஓம் ராஜாய நம
ஓம் ராஜியலோசநாய நம
ஓம் கந்தப்பிரியாய நம
ஓம் கெர்பகுண்டலாய நம
ஓம் கந வல்லபாய நம
ஓம் ருத்ரசோமிதாய நம
ஓம் ருத்ரவாதநாய நம
ஓம் ருத்ரவசாய நம
ஓம் வாதரூடாய நம
ஓம் யதாகோடியே நம
ஓம் யமவாங்கியே நம
ஓம் ஸ்வாதிஸ்டாய நம
ஓம் ஸ்வாமிசகாய நம
ஓம் அரிணே நம
ஓம் ஆசாய நம
ஓம் காகளாய நம
ஓம் ஆப்யநாய நம
ஓம் கெர்க்காய நம
ஓம் ஈடாகாய நம
ஓம் பூதரூபதிரதயே நம
ஓம் திரிசூலாயுததாரணாய நம
ஓம் ஸர்வ ராசநிவிதாய நம
ஓம் ஆததித்ரோதாய நம
ஓம் கெம்பீராய நம
ஓம் ஆதிபீமாவய நம
ஓம் காலநிதயே நம
ஓம் ÷க்ஷம÷க்ஷத்திராய நம
ஓம் பஸ்ம திருதயே நம
ஓம் வீரபத்ரஸ்வாமிணே நம
ஓம் அகோர ரூபிணே நம
ஓம் கலிநாசனாய நம
ஓம் கபாலினே நம
ஓம் கபர்தினே நம
ஓம் விரண்மயாய நம
ஓம் விசாம்பதயே நம
ஓம் விரூபாசாய நம
ஓம் ரத்யாய நம
ஓம் ரமணாய நம
ஓம் ரீதாரூபாய நம
ஓம் யவடாய நம
ஓம் யமதரூபாய நம
ஓம் யம் கக்காய நம
ஓம் ஸ்வசூத்ராய நம
ஓம் வாசபதீம்பிர்பவே நம
ஓம் கம்பநாசாய நம
ஓம் கருப்பரே நம
ஓம் கம் காளாய நம
ஓம் போகாய நம
ஓம் போக்யாய நம
ஓம் பரணதாய நம
ஓம் நீலவேணியே நம
ஓம் கிம்கிணிதிரதயே நம
ஓம் சண்டாய நம
ஓம் அஷ்டஆசாய நம
ஓம் உக்ராய் நம
ஓம் க்ருபாகாராய நம
ஓம் சர்வயக்ஷõய நம
ஓம் கருப்பண சுவாமினே நம
ஸ்ரீ கருப்பணசாமி அஷ்டசத ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.
நன்றி:- திரு.முருகவேல் குள்ளகருப்பு

Monday 25 March 2019

கடவுள் எனும் வேற்றுக்கிரகவாசிகள்

கடவுள் எனும் வேற்றுக்கிரகவாசிகள்" -


எழுத்து; துரைராஜ்  இராஜேந்திரன் 




பகுதி 1
நீங்கள் யார்? என்று கேட்டால், உங்கள் பெயரைக் கூறுவீர்கள், அடுத்து இன்னாரது மகன், இந்த முகவரியில் வசிக்கிறேன் என்று கூறுவீர்கள், அதற்கு மேலும் தெரியப்படுத்த நினைத்தால் இந்த மொழி பேசுபவன், இந்த இனத்தைச் சேர்ந்தவன், இந்தக் கடவுளை வழிபடக்கூடிய மதத்தைச் சேர்ந்தவன், இந்த நாட்டைச் சேர்ந்தவன் என்று உங்களை அடையாளப்படுத்திக்கொள்வீர்கள். இதுதான் முறை இதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் இந்த தொடரைப் படித்து புரிந்துகொள்ள நாம் அடுத்த நிலைக்குச் செல்லவேண்டும். பூமி என்ற கிரகத்தில் வாழும் உயிரினங்களில் ஒன்றான மனித இனம் என்ற நிலைக்குச் செல்லவேண்டும். நம் சிந்தனை வட்டத்தைச் சற்றுப் பெரிதாக்கவேண்டும். நம் எல்லைகளை எதனைக்கொண்டு வகுக்கிறோம்? நம் தடம் பதித்த இடங்கள்? நம் கட்டுப்பாட்டிற்குள் உள்ள நிலப்பரப்பு? “இந்த காம்பவுன்டுக்கு உள்ளே என் இடம்”, “இந்த எல்லைவரை என் நாடு”, என்று உரிமை கொண்டாடுகிறோம். ஆனால் உண்மை வேறு, உன் உடல் உன் உயிருக்கு சொந்தம் என நினைப்பது எவ்வளவு முட்டாள்தனமோ அவ்வளவு முட்டாள்தனம் இந்த பூமி மனித இனத்திற்குச் சொந்தம் என்று நினைப்பது. இதுவே இப்படியிருக்க, இந்த மொத்த பிரபஞ்சத்திலும் பூமியில் மட்டும்தான் உயிரினங்கள் இருக்கின்றன, அதிலும் நம் மனித இனம் மட்டும்தான் அறிவில் மேம்பட்ட உயிரினம் என்று நினைத்துக்கொண்டிருப்பது எவ்வளவு பெரிய கேலிக்கூத்து.
நம் உலகம் எவ்வளவு பெரியது என்று உங்களுக்கே தெரியும். இந்த பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்று அறிவீர்களா?
நம் பூமி சூரியக்குடும்பத்தில் ஒரு சிறு அங்கம். சூரியக்குடும்பம் என்பது நம் பூமியையும் சேர்த்து 8 கோள்களையும் அவைகளின் துணைக் கோள்களையும் உள்ளடக்கியது. சூரியக் குடும்பமானது அருகில் உள்ள நட்சத்திர மண்டலத்தில் ஒரு சிறு அங்கம். இதில் நம் சூரியக் குடும்பத்தைப் போல லட்சக்கணக்கான நட்சத்திரக் குடும்பங்கள் இருக்கின்றன. இந்த நட்சத்திர மண்டலமானது பால்வெளித்திரளில் ஒரு சிறு அங்கம். பால்வெளித்திரளில் மட்டும் கிட்டத்தட்ட 40 ஆயிரம் கோடி நட்சத்திரங்கள் இருக்கின்றன (நம் சூரியனும் ஒரு நட்சத்திரம்தான்). பால்வெளித்திரளானது இதுவரை கண்டறியப்பட்ட பிரபஞ்சத்தில் மிகமிகச் சிறிய அங்கம். பிரபஞ்சத்தில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் கோடி கேலக்ஸிகள் (நம் பால்வெளித்திரளை போல்) இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இங்கே ஒரு முக்கியமான தகவலை கூறியே ஆகவேண்டும் மேலே ‘இதுவரை கண்டறியப்பட்ட பிரபஞ்சம்’ என்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா அது அடிக்கோடிடவேண்டிய வரி. ஏனெனில் இந்த பிரபஞ்சத்தின் எல்லைகள் இன்னும் கண்டறியப்படவில்லை. இதில் இன்னும் ஒரு கூடுதல் தகவல் இந்த பிரபஞ்சத்தைப் போல இன்னும் சில பிரபஞ்சங்கள் இருக்கலாம் என பல விஞ்ஞானிகள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
நாம் அவ்வளவு தொலைவு செல்ல வேண்டாம். உங்களிடம் ஒரு கேள்வி
1. நம் மெரினாக் கடற்கரையில் எத்தனை மணல் துகள்கள் இருக்கின்றன?
2. பிரபஞ்சத்தில் எத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றன?
‘ஒரு கேள்வி என்று கூறிவிட்டு இரண்டு கேள்விகளைக் கேட்டுவிட்டாரே’ என நினைக்காதீர்கள். உங்களுக்கான ஒரு கேள்வி இனிதான் கேட்கப்போகிறேன்,
மேலே உள்ள இரண்டு கேள்விகளில் எளிமையான கேள்வி எது?
உங்கள் பதில் என்னவோ தெரியாது, ஆனால் என் பதில் முதல் கேள்வியே எளிமையானது. காரணம் இரண்டாம் கேள்விக்கான பதிலை கண்டறிவது அந்தளவு கடினமானது.
அதற்காக விட்டுவிடமுடியுமா? தோராயமாக கணக்கிட்டுதான் பார்ப்போமே. நம் பால்வெளித்திரளில் கிட்டத்தட்ட 40 ஆயிரம் கோடி நட்சத்திரங்கள் இருப்பதாக கூறியிருந்தேன். 40 ஆயிரம் கோடி வேண்டாம், ஒவ்வொரு கேலக்ஸியிலும் சுமார் 10 ஆயிரம் கோடி நட்சத்திரங்களைக் கொண்டதாக எடுத்துக்கொள்வோம். அப்படியானால் பிரபஞ்சாத்தில் உள்ள 20 ஆயிரம் கோடி கேலக்ஸிகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட 2*1022 (20,00,00,00,00,00,00,00,00,000) நட்சத்திரங்கள் இருக்கவேண்டும். இது நம்மால் கணிக்கப்பட்ட மிகமிகக் குறைந்த அளவிளான மதிப்பீடு. இங்கே அடுத்து ஒரு கேள்வி உங்களுக்காக ‘அப்படியானால் பிரபஞ்சத்தில் இருக்கும் மொத்தக் கோள்களின் எண்ணிக்கை என்னவாக இருக்கும்?’
‘ஸ்ஸூப்பா.. இப்பவே கண்ணகட்டுதே’ என்றெல்லாம் நினைக்காதீர்கள். நம்மால் அதை தோராயமாகக்கூட கணிக்கமுடியாது.
இந்த இடத்தில் ஒரு முக்கியமான கேள்வி, ஆங்கிலத்தில் இதனை ‘BILLION DOLLER QUESTION’ என்பார்கள்.
“நம் பூமியில் வாழ்வதைப் போல வேறுகிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவா?”
இந்த கேள்விக்கு உங்கள் பதிலும், கருத்தும் என்ன என்பதை ஒரு குறிப்பேட்டில் குறித்துவைத்துகொள்ளுங்கள். இந்தத் தொடரை படித்து முடிக்கும் போது உங்கள் கருத்தும் என்கருத்தோடு ஒத்துப்போகும்.
இப்பொழுது என் கருத்தை கூறிவிடுகிறேன், ‘இந்த பிரபஞ்சத்தில் நிறைய கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றன, அதிலும் சில கிரகங்களில் நம்மைவிட அறிவில் மேம்பட்ட உயிரினங்கள் வாழ்கின்றன. அவர்களுக்கும் பூமியில் மனித இனத்தின் தோற்றத்திற்கும் நிறைய சம்பந்தங்கள் உண்டு. அவர்கள் பூமியை கண்கானித்து வருகிறார்கள், இங்கு நிறைய ஆய்வுகளையும் செய்துவருகிறார்கள்’. இனி என் கருத்தின் வேர்களை நோக்கிய பயணம்.
தொடரும்....

No photo description available.

பகுதி 2

முந்தைய பகுதியில் வேறுக்கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவா? என்ற கேள்விக்கான என்கருத்துடன் முடித்திருந்தேன். இன்று அதே கேள்விக்கு உலக புகழ் விஞ்ஞானிகள் மற்றும் பிரபலங்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என்பதை பார்த்துவிடுவோம்.

‘இந்த பிரபஞ்சத்தில் பூமியைப் போல உயிரினங்கள் வாழ தகுதியான கோடான கோடி கிரகங்கள் இருக்கின்றன, இந்த பிரபஞ்சத்தில் நாம் தனியாக விடப்படவில்லை. வேற்றுக்கிரகவாசிகள் இருக்கிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை’.என்று கூறியவர் தன் கண்டுபிடிப்புகளாலும், இயற்பியல் கோட்பாடுகளாலும் புகழின் உச்சிக்கே சென்ற இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டின்.
‘நாம் ஒரு நடுத்தர நட்சத்திரத்தின் சிறிய கிரகத்தில் வாழும் மேம்பட்ட ‘குரங்கினம்’ அவ்வளவுதான். நம்மைவிட அறிவில் மேம்பட்ட உயிரினம் இந்தப் பிரபஞ்சத்தில் இருந்தாக வேண்டும்’.
என்று சவுக்கடி பதில் அளித்தவர் வேறுயாருமல்ல நம் சமகாலத்தில் வாழும் ஐன்ஸ்டின் என்று நாம் பெருமைபட்டுக்கொள்ளும் இயர்பியலாளர், பேராசிரியர் Stepen Hawking.
பொதுஇடங்களில் செய்தியாளர்கள் கேட்கும் இப்படியான கேள்விகளுக்கு தயக்கமின்றி தன் கருத்துகளை கூறிவருகிறார். வேற்றுக்கிரகவாசிகளை தொடர்புகொள்ளும் முயற்ச்சி மனித இனத்திற்கு நன்மையாக அமையுமா? அல்லது ஆபத்தாக மாறுமா? என்ற கேள்விக்கு
“கொலம்பஸ் அமெரிக்காவில் அடி எடுத்து வைத்தபோது அங்கு வசித்துவந்த பூர்வகுடி மக்களுக்கு அது நன்மைபயக்கவில்லை, நமக்கு ஏலியன்ஸ் பற்றி எதுவும் தெரியாது ஆனால் மனிதர்களை மற்றி மிக நன்றாக தெரியும். உலக வரலாற்றை திரும்பி பார்க்கும்போது மனிதனால் அழிவுநிலைக்கு தள்ளப்பட்ட உயிரினங்கள் ஏறாளம், ஒரே இனமான மனிதர்களுக்குள்ளும் சில அறிவியல் தொழில்நுட்பத்தை கொண்டு ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரை அடிமைப்படுத்தியதும், அழித்ததும் நடந்ததுதானே? இன்றளவும் நடந்துகொண்டிருக்கிறது தானே? ஒருவேளை ஏலியன்ஸ் பூமிக்கு வரும்போது அதேநிலை மனித இனத்திற்கும் ஏற்படலாம். அப்படி வருபவர்கள் நம்மைவிட பில்லியன் வருடங்கள் அறிவில்மேம்பட்ட உயிரினமாக இருந்தால், அவர்கள் மனித இனத்தை ‘பாக்டீரியா’ அளவிற்கு மதித்தாலே பெரிய விசயம்”.
இப்படி தலையில் இடியை இறக்கியதுபோல் பதில் அளித்தார். இவரை போல் இன்னும் சிலர் தங்கள் கருத்துக்களை பதிவுசெய்துள்ளனர்.
‘நம்மிடம் இருக்கும் குறைவான அறிவையும், சிறியளவிளான தொழில்நுட்பத்தையும் வைத்துக்கொண்டு இந்த பிரபஞ்சத்தில் வேறுகிரகங்களில் உயிரினங்கள் இல்லை என்று எப்படி கூறமுடியும். அப்படி கூற மனித இனத்திற்கு எந்த உரிமையும் இல்லை. வேற்றுக்கிரகவாசிகள் இருக்கலாமோ என்ற சந்தேக கேள்வியே தேவையில்லை, கண்டிப்பாக இருக்கிறார்கள். நம் பூமியில் வேண்டுமானால் நாம் (மனிதன்) அறிவில் மேம்பட்ட உயிரினமாக இருக்கலாம், இந்த பிரபஞ்சத்தில் நம்மைவிட அறிவில் மேம்பட்ட உயிரினங்கள் இருக்கின்றன. அதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன’.
என்று கூறியவர் பிரெஞ்சு விஞ்ஞானி சார்லஸ் ரிச்சர்ட் (Charles Richet) 1850 - 1935. தனது “Traite De Metapsychique” என்ற புத்தகத்தில் இப்படி குறிப்பிட்டுள்ளார்.
‘சர்ச்சைக்குரிய வேற்றுக்கிரகவாசிகள் பறக்கும் தட்டுகள் மற்றும் பூமிக்கு அடியில் வாழும் அறிவில் மேம்பட்ட பூர்வக்குடி மக்கள் இவை அனைத்தும் உண்மைதான். அவர்கள் நம்மை கண்காணித்து கொண்டிருக்கிறார்கள்’.
என்று கூறியவர் நாசாவில் முன்னால் மக்கள் தொடர்பு துணை இயக்குநர் Albert McHop. (US Air Force Spokesman For Project Blue Book).
சரி வேற்றுக்கிரகவாசிகள் இருக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். அவர்கள் நம்மைவிட அறிவில் மேம்பட்ட உயிரினமாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? ஏன் நம் பூமியில் வாழும் மற்ற உயிரினங்களைப் போல (அறிவில் வளர்ச்சியடையாத) உயிரினங்களாகவோ அல்லது நம்மை ஒத்த அறிவுகொண்ட உயிரினங்களாகவோ இருக்கக்கூடாதா? 
கண்டிப்பாக அப்படியும் சில கிரகங்களில் உயிரினங்கள் வாழலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்களைத் தேடும் முயற்சியை நாம்தான் முன்னெடுக்கவேண்டும்.
அப்படியேதேனும் தேடுதல் வேட்டை நடக்கிறதா? என்று கேட்டால். ஒன்று இரண்டல்ல பல கோடி டாலர்கள் செலவு செய்து தேடுதல் பணி நடந்துவருகிறது.
இப்படியான ஆய்வுகள் நமக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம் வளர்ந்த நாடுகள் என்றோ தொடங்கிவிட்டன. 
தொடரும்...

கடவுள் எனும் வேற்றுக்கிரகவாசிகள்  பாகம் -3
கடவுள்களின் மர்மம்! மனிதர்களை அவதானிக்கும் இருண்ட கிரகம்.. வெளிப்பட்ட இரகசியம்!
பூமியில் வேற்றுக்கிரகவாசிகள் என்ற பதிவின் மூலம் வேற்றுக் கிரகங்களுக்கும் பூமிக்கும், பூமிவாசிகளுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி தொடராக பார்த்துக் கொண்டு வருகின்றோம்.
அந்த வகையில் சென்ற பதிவுகளில் வேற்றுக்கிரகத்தவர் ஏன் பூமிக்கு வந்தார்கள்? அவர்களுக்கு தேவைப்பட்டது என்ன? என்பதோடு பல விடயங்களை பற்றி பார்த்திருந்தோம். பாகம் 01, பாகம் 02
அதனைத் தொடர்ந்து வேற்றுக்கிரகவாசிகளுக்கும், கடவுள்களுக்கும் உள்ள தொடர்பினையும் பற்றி ஆராயலாம்.
இது முற்று முழுதான அறிவியல், விஞ்ஞானம் தொடர்பானதும், ஆய்வாளர்கள் ஆய்வின் மூலம் கூறும் விடயங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது மாத்திரமே. மதக் கோட்பாடுகளையும், நம்பிக்கைகளையும் சுட்டிக்காட்டுவது அல்ல.
இப்போது பூமியில் பல்வேறு கடவுள்கள் காணப்படுகின்றனர், அவர்கள் அனைவருமே ஒரு காலத்தில் மனிதர்களுக்கு ஆணையிட்ட தலைவர்களே என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
Zecharia Sitchin இது குறித்து பல வருடங்கள் ஆய்வு செய்து ஒரு புத்தகத்தினையும் வெளியிட்டார். அதனை பல ஆய்வாளர்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.
மேலும் சுமேரிய பதிவுகள், மற்றும் தொல்பொருள் ஆய்வுகள் ஊடாக கிடைக்கப்பெற்ற சான்றுகளுடன் மதங்களையும், வேதங்களையும் இணைத்து ஆராய்ந்தனர்.
இதன் ஊடாக ஓர் மிகப்பெரிய இரகசியம் வெளிப்பட்டதாக தெரிவித்துள்ளனர். அதாவது ஒட்டு மொத்த உலக மதங்களும் ஒரு இடத்தில் இருந்து ஆரம்பமானதே என்ற உண்மையே அது.
அதன் அடிப்படையில் முதலாவதாக வேதங்களையும், இந்துக் கடவுள்களையும் - வேற்றுக்கிரக சான்றுகளோடும், சுமேரியர்களின் குறிப்புகளோடும் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
அதன் மூலம் இந்துக் கடவுள்களான பிரம்மா, விஷ்ணு, சிவன், காளி போன்றோர் வேற்றுக்கிரகத்தில் இருந்து வந்து மனிதர்களுக்கு தலைவர்களாக இருந்தவர்களே என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இதில் பிரம்மா - அனு எனவும், விஷ்ணு - என்கி எனவும், சிவன் - என்லின் எனவும் சுமேரியர்கள் வணங்கியதாகவும், அவர்கள் நட்சத்திரத்தில் இருந்து வந்தவர்கள் எனவும் குறிப்புகள் கூறுகின்றன. (ANU, ENKI, ENLIL)
மேலும் வேற்றுக்கிரகம் தொடர்பாக ஆய்வு செய்த போது கிடைத்த சான்றுகளையும், பண்டைய குகை ஓவியங்களையும் ஆய்வு செய்து இந்துக் கடவுள்களுக்கும், நட்சத்திரங்களில் இருந்து வந்ததாக சுமேரியர்கள் கூறும் தலைவர்களுக்கும் இடையேயான ஒற்றுமைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சங்கு போன்ற வடிவத்தை கையில் ஏந்தியிருக்கும் என்கி ENKI எனப்படுகின்றவர், இந்துக்கள் வழிபடும், காத்தல் தொழில் செய்யும் விஷ்ணுவின் உருவ அமைப்புகளுடன் ஒத்துப் போகின்றது.
அதேபோல் அனு (ANU) எனப்படும் ஆதி கால மனிதர்களின் வேற்றுக்கிரக தலைவர் இந்துக்களின் பிரம்மன் எனும் கடவுளுடன் ஒத்துப் போவதாகவும், அனு படைக்கும் தொழிலைச் செய்து வந்ததாகவும் சுமேரியப் பதிவுகள் கூறுகின்றன.
அடுத்தது அழிக்கும் தொழிலைச் செய்ததாக சுமேரியக் குறிப்புகள் கூறும் என்லின் (ENLIL) இந்துக்களின் கடவுள் சிவன், உருத்திரன் என்ற கடவுளுடன் மிகச்சரியாக ஒத்துப்போவதாகவும் கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.
அதேபோன்று சிங்கத்துடன் வரும் காளிக்கும், அப்போதைய சுமேரியர்களின் தலைவி இண்ணாவிற்கும் முழு ஒற்றுமைகள் காணப்படுவதாகவும் ஆய்வாளர்கள் அடித்துக் கூறுகின்றனர்.
இதே போன்று பல இந்துக் கடவுள்கள், அப்போது வேற்றுக்கிரகங்களில் இருந்து வந்தவர்களினால் மாற்றம் அடைந்து வந்ததே எனவும் கூறப்படுகின்றது.
அதேபோன்று கடவுள்களின் இருப்பிடங்களாக கூறப்படும் அனைத்து மதங்களின் வழிபாட்டுத்தலங்களுக்கும் ஒரே வகை ஒற்றுமையே காணப்பட்டு வருகின்றது.
இவற்றின் மூலம் நட்சத்திரங்களில் இருந்து வந்ததாக கூறப்படும் அல்லது ஒளியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கடவுள்களைக் கூறுவதற்கும் வேற்றுக்கிரகவாசிகளின் தொடர்பே காரணம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் வேற்றுக்கிரகவாசிகள் தலைவர்களாக செயற்பட்டு மனிதர்களுக்கு நாகரீகத்தையும், வாழ்க்கை முறையையும் கற்றுக் கொடுத்து வந்துள்ளனர். அதன் பின்னர் காலப்போக்கில் அவர்களையே கடவுள்களாக மனிதர்கள் மாற்றியுள்ளனர் (பின்பற்றியுள்ளனர்) எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மதங்களின் நம்பிக்கையும் சரி, புராணங்களும் சரி அனைத்தும் கூறுவது வானத்தில் இருந்தே தமது கடவுள்கள் வருகைத் தந்ததாகவே.
இது தவிர புராணங்களும், சுமேரியப் பதிவுகளும் ஓர் இருண்ட கிரகம் பூமியை அவதானித்துக் கொண்டே இருக்கும் என கூறியுள்ளன.
வேற்றுக்கிரகங்கள் தொடர்பில் ஆய்வு செய்கின்றவர்கள், அது வேற்றுக் கிரகவாசிகளின் இருப்பிடமாக இருக்கக் கூடும் எனவும் ஓர் கருத்தினை தெரிவித்துள்ளனர்.
குறித்த கிரகம் ஒளியை பிரதிபளிக்காத காரணத்தினால் இலகுவாக தெரிவதில்லை எனவும் கூறியுள்ளனர். இதனை விண்வெளி தொடர்பில் ஆய்வு செய்கின்றவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
இது பற்றி விரிவாக பார்ப்பதோடு, இன்னும் பல வகையிலும் வேற்றுக்கிரகங்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள தொடர்பினை ஆராய்வோம் அடுத்த பதிவில்..,

கடவுள் எனும் வேற்றுகிரகவாசிகள்" - பகுதி 4

இதுவரை நம்மை ஒத்த அறிவுகொண்ட வேற்றுக்கிரகவாசிகள் மற்றும் அதை விட குறைவான அறிவாற்றல் கொண்ட வேற்றுக்கிரக உயிரினங்களைத் தேடும் முயற்சி பார்த்தோம். இதே போன்று நம்மைவிட அறிவில் மேம்பட்ட வேற்றுக்கிரகவாசிகளை தேடும் முயற்சி நடக்கிறதா? என்று கேட்டால்.
அதற்கான அவசியம் இல்லை என்றே கூறலாம். நாமே இந்த அளவு செயல்படும் போது வேற்றுக்கிரகவாசிகள் நம்மைவிட அறிவில் மேம்பட்டிருந்தால் அவர்களின் செயல்பாடு நம்மைவிட பலமடங்கு அதிகமாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால் இன்று நாம் செய்யும் மேற்படி தேடுதல் வேலைகளை அவர்கள் என்றோ செய்திருப்பார்கள் (பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே). ஒருவேளை அப்படி அவர்கள் தேடி கண்டுபிடித்த கிரகம்தான் பூமியாகவும் இருக்குமோ?!
வேற்றுக்கிரகவாசிகள் நம்மைவிட அறிவில் மேம்பட்டிருக்க ஏதேனும் சாத்தியம் உண்டா? என்று கேட்டால்.
‘100% சாத்தியம் உண்டு’ அடித்து கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். அதற்கு அவர்கள் முன்வைக்கும் துடுப்பு பரிமாணங்கள் (Dimensions).
ஒருவேளை வேற்றுக்கிரகவாசிகள் நமக்கு அடுத்தடுத்த பரிமாணங்களில் வாழ்வார்களேயானால், அவர்கள் நம்மைவிட பலமடங்கு அறிவில் மேம்பட்ட உயிரினமான இருப்பார்கள்.
பரிமாணம் பற்றி அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை, அதைப் பற்றிய சிறு விளக்கம் பின்வருமாறு.
பரிமாணம் என்பது இடமோ, பொருளோ அல்ல. அது ஒரு நிலை (Level).
இந்தப் பிரபஞ்சத்தில் 10க்கும் மேற்பட்ட பரிமாணங்கள் இருப்பதாக ஸ்ட்ரிங் தியரி கூறுகிறது. ஒவ்வொரு பரிமாணத்திலிருந்தும் அடுத்தடுத்த நிலைக்கு செல்லச் செல்ல அதன் அதிர்வுகள் அதிகரிக்கும், நிறைய உண்மைகள் புரியும், தெளிவான உயர்ந்த நிலையை அடைந்ததாக உணர்வு ஏற்படும். அதிக சுதந்திரம், அதிக சக்தி, புதியவைகளை உருவாக்க நிறை சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.
நாம் இதில் மூன்றாவது பரிமாணத்தில் வாழ்ந்துவருகிறோம். நீளம், அகலம், உயரம் இவை மூன்றும்தான் நாம் வாழும் பரிமாணங்கள். இந்த மூன்றையும் நம்மால் உணரமுடியும் அதில் பயணம் செய்யவும் முடியும். நான்காவது பரிமாணம் என்னவாக இருக்கும் என்றக் கேள்வி உங்களுக்குள் எழத் தொடங்கினால் நீங்கள் தொடரின் வேகத்திற்கு இணையாக இருக்குறீர்கள் என்று உங்களையே தட்டிக்கொடுத்துகொள்ளாம்.
உலகின் பல மூத்த விஞ்ஞானிகளும், இயற்பியலாளர்களும் ‘காலம்’தான் நான்காவது பரிமாணம் என்று நம்புகிறார்கள். நீளத்தில், அகலத்தில், உயரத்தில் எப்படி இருபுள்ளிகளைக் குறித்துக்கொண்டு அதில் பயணம் செய்கிறோமோ, அதே போல காலத்திலும் இருவேறு புள்ளிகளை குறித்துக்கொண்டு அதற்கிடையே பயணம் செய்ய வேண்டும். இதனைக் ‘காலப்பயணம்’ என்பார்கள். அதாவது நாம் எதிர்காலத்திற்கோ, இறந்தகாலத்திற்கோ சென்று திரும்புவது. இது சாத்தியமா? என்ற கேள்வி இங்கே வலுக்கும். அதனை தகர்த்தெறிகிறது ஆல்பர்ட் ஐன்ஸ்டினின் இயற்பியல் கோட்பாடு.
ஐன்ஸ்டின் கூற்றுப்படி ‘எந்த ஒரு பொருள் ஒளியின் வேகத்தில் பயணம் செய்கிறதோ அந்த பொருள் எதிர்காலத்திற்குச் செல்லும்’. அப்படியென்றால் மணிக்கு 108 கோடி கி.மீட்டர் வேகத்தில் பயணிக்கவேண்டும். நம்மிடம் இருக்கும் இன்றைய தொழில்நுட்பத்தை கொண்டு இது சாத்தியமல்ல. ஆனால் வருங்காலத்தில் சாத்தியமாகலாம்.
புராணக்கதைகளில் வரும் முனிவர்கள் சித்தர்கள் சிலரை முக்காலமும் அறிந்தவர் என்று கூறுவது உண்டு. அப்படியானால் அவர்கள் ஒளியின் வேகத்தில் பயணம் செய்திருப்பார்களா? என்று கேட்டால். அதற்கான வாய்ப்புகள் மிகமிக குறைவு. அவர்கள் வேறுவழியில் இதனை அடைந்திருக்கலாம்.
உயிர் சக்தியைச் சேமித்து ஒன்று திரட்டி அதனை ஒரே புள்ளியில் செலுத்தும் போது காலப்பயணம் போன்ற நிறைய விசயங்கள் சாத்தியப்படும் என்று ஆன்மீகரீதியில் நம்பப்படுகிறது.
அறிவியல் நிரூபிக்க படாதபாடு பட்ட பல உண்மைகளை ஆன்மீகம் போகிற போக்கில் சொல்லி சென்றதை நம்மால் மறுக்கமுடியாது.
பொதுவாகவே மனிதன் தன் மூளையை சிறிய அளவில்தான் பயன்படுத்திவருகிறான், இதனை ஆய்வாளர்கள் கணக்கிட்டு சராசரியாக 13% தான் நாம் பயன்படுத்துவதாக கூறினார்கள். அடுத்தடுத்த பரிமாணத்திற்குள் செல்லும் பொழுது அதன் அளவுகள் அதிகரிக்கலாம்.
ஒன்று மட்டும் உறுதி நமக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த மூளை மூன்றாவது பரிமாணத்திற்காக உருவாக்கப்பட்டது அல்ல, சரியாக கூறவேண்டுமானால் “ஒருவயது குழந்தையிடம் கிடைத்த IPhone 6யை போல” சுற்றிப்பார்க்கலாம் தூக்கிப்போட்டு உடைக்கலாமே தவிர அதன் பயன்பாடுகளை புரிந்துகொள்ளவோ, பயன்படுத்தவோ இந்த பரிமாணத்தில் இருந்துகொண்டு நம்மால் இயலாது.
மூன்றாவது பரிமாணத்தில் நம் உடல், உலகில் உள்ள மற்றபொருள்கள் அனைத்தும் உண்மை, இந்த உயிர் இந்த உடலுடன்தான் இருக்கமுடியும் இதனை வேறு உடலுக்கு மாற்றமுடியாது, புவியீர்ப்பு விசைக்கு எதிராக எந்த ஒரு செயலும் செய்ய முடியாது, உலகில் உள்ள அனைத்தும் புவியீர்ப்பு விசைக்குட்பட்டே ஆகவேண்டும் என்றெல்லாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். அடுத்தடுத்த பரிமாணங்களில் இந்த எண்ணங்கள் சுக்குநூறாகக்கூடும்.
அடுத்தடுத்த பரிமாணங்கள் எப்படி இருக்கும் என்று சில இயற்பியலாளர்களால் கணிக்கப்பட்டது. அவை
நான்காவது பரிமாணத்தில் கடந்தக் காலத்தைப் பற்றிய கவலையோ, வருங்காலத்தைப் பற்றிய பயமோ இருக்காது. மிகவும் தெளிவான மனநிலை ஏற்படும். காலத்தை நமக்கு ஏற்றார்போல வளைக்கமுடியும் என்ற உண்மை தெரியவரும். மூன்றாவது பரிமாணத்தில் ஆச்சர்யமாக தோன்றிய பல விசயங்கள் இங்கு சாதாரணமாகத் தோன்றும்.
ஐந்தாவது பரிமாணத்தில் நம் பார்வையில் இந்த உலகமே வேறாகத் தெரியும். நம் உலகைப் போன்றே உயிரினங்கள் வாழத்தகுதியான நிறைய கிரகங்களை கண்டறிந்து. அவைகளின் ஆரம்பநிலையை மாற்றியமைக்க முடியும்.
ஆறாவது பரிமாணத்தில் இந்த பிரபஞ்சத்தின் நிலைப்பாடு மற்றும் ஆரம்பம் பற்றிய நிறைய உண்மைகளை தெரிந்துகொள்ளமுடியும்.
ஏழாவது பரிமாணத்தில் புதிய ஒரு கிரகத்தை உயிர்வாழத் தகுதியானதாக மாற்றியமைக்க முடியும்.
எட்டாவது பரிமாணத்தில் பிரபஞ்சத்தின் ஆதி அந்தங்களை தெரிந்துகொள்ளமுடியும். நம் பிரபஞ்சத்தின் இயற்பியல் கோட்பாடுகள், சட்டதிட்டங்கள், கட்டுப்பாடுகள் அனைத்தும் தெரிந்துவிடும்.
ஒன்பதாவது பரிமாணத்தில் நம் பிரபஞ்சத்தைப் போலவே வேறு பிரபஞ்சங்களை கண்டறியமுடியும், அவைகளை ஒப்பிட்டுப் பார்க்கவும் முடியும். அந்தப் பிரபஞ்சத்தின் இயற்பியல் கோட்பாடுகள், சட்டதிட்டங்கள், கட்டுப்பாடுகளையும் அதன் தொடக்கங்களையும் அறிந்துகொள்ளமுடியும்.
பத்தாவது பரிமாணத்தில் நம் கற்பனைக்கு எட்டக்கூடிய அனைத்தும் இங்கு சாத்தியம். அதனைத் தாண்டியும் பல செய்யமுடியும்.
மூன்றாவது பரிமானத்தில் இருந்துகொண்டு இந்த அளவுதான் நம்மால் யூகிக்கமுடியும். மேலே கூறியவையாவும் இப்படியாக இருக்கலாமோ என்ற கணிப்புதான்.
ஒரு பேச்சுக்கு வேற்றுக்கிரகவாசிகள் நான்காவது, ஐந்தாவது, அல்லது அதற்கு அடுத்த பரிமாணங்களில் வாழ்பவர்களாக இருந்தால் அவர்களில் அறிவுத்திறமையும் தொழில்நுட்பத்தையும் நினைத்துப்பாருங்களேன். இப்பொழுதும் உங்கள் மனம் ஒத்துக்கொள்ளாவில்லையென்றால் இன்னும் ஒரு சிறு விளக்கம்.
தொடரும்....Image may contain: 1 person



கடவுள் எனும் வேற்றுகிரகவாசிகள்" - பகுதி 5

ஒரு பேச்சுக்கு வேற்றுக்கிரகவாசிகள் நான்காவது, ஐந்தாவது, அல்லது அதற்கு அடுத்த பரிமாணங்களில் வாழ்பவர்களாக இருந்தால் அவர்களில் அறிவுத்திறமையும் தொழில்நுட்பத்தையும் நினைத்துப்பாருங்களேன். இப்பொழுதும் உங்கள் மனம் ஒத்துக்கொள்ளாவில்லையென்றால் இன்னும் ஒரு சிறு விளக்கம்.
இந்த பூமி தோன்றி 460 கோடி வருடங்கள் ஆகிறது, 200 கோடி வருடங்களுக்கு முன்பு நம் பூமியில் ஒரு செல் உயிரிகள் தோன்றின. 54.2 கோடி வருடங்களுக்கு முன்புதான் ஜெல்லி மீன்கள், புழுக்கள் போன்றவை உருவாகின. 36 கோடி வருடங்களுக்கு முன்புதான் நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் தோன்றின. 25 கோடி வருடங்களுக்கு முன்பு டைனோசர் இனம் தோன்றி 6.5 கோடி வருடங்களுக்கு முன்பு அடியோடு அழிந்தது. 30 இலட்சம் வருடங்களுக்கு முன்பு குரங்காக இருந்த மனிதன் 10 இலட்சம் வருடங்களுக்கு முன்பு மனிதக் குரங்காக நடமாடினான். சுமார் 80 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு குகைகளில் காட்டுவாசியாக வாழத் தொடங்கி இன்று கம்பியூட்டர் பயன்படுத்துவது வரை இடையில் நடைபெற்ற மாற்றங்கள் அனைத்தும் அனைவரும் அறிந்ததே. இருப்பினும் நமது சமீபத்திய அதாவது கடைசி 100 ஆண்டுகளின் வளர்ச்சி பிரமிப்புக்குரியது. இந்த வளர்ச்சி இத்துடன் நின்றுவிடப்போவதல்ல. 6.5 கோடி வருடங்களுக்கு முன்பு டைனோசரின் ஆதிக்கத்தில் இருந்த இதே உலகம்தான் இன்று மனிதர்களின் கையில் சிக்கி சின்னாபின்னமாகிவருகிறது. மனிதர்களுக்கு அடுத்து பரிணாம வளர்ச்சி உயிரினம் உண்டு. அதனையாரும் மறுக்கமுடியாது. சில கோடி வருடங்களுக்கு பிறகு இந்த பூமி அவைகளின் கைகளுக்கு மாறும் அதனையும் யாரும் தடுக்கமுடியாது. இவை பூமியில் உயிரினங்களுக்கு நடந்த, நடக்கயிருக்கிற மாற்றங்கள்.
460 கோடி வருடங்களுக்கு முன்பு தோன்றிய பூமியில் இன்று மனிதன் என்ற ஒரு இனம் சாத்தியம் என்றால். பெருவெடிப்பினால் இந்த பிரபஞ்சம் தோன்றி 1500 கோடி வருடங்களாகிறது. கற்பனையாக 700 கோடி வருடங்களுக்கு முன்பு பூமியைப் போல் ஒரு கிரகம் உருவானதாக வைத்துக்கொள்வோம். அதில் நம்மை ஒத்த ஓர் உயிரினம் 250 கோடி வருடங்களுக்கு முன்பே தோன்றியிருக்கவேண்டும். அப்படியானால் அவர்களின் இன்றைய அறிவியல் வளர்ச்சி எப்படி இருக்கும்?
மனித இனத்தின் அடுத்த 2000 வருடங்களின் வளர்ச்சியைக் கூட நம்மால் கற்பனை செய்ய முடியவில்லை இதில் கோடிகள் எங்கே? இப்படிக் கற்பனை செய்ய முடியாத அறிவும் ஆற்றலும் கொண்ட வேற்றுக்கிரக உயிரினம் சில ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பூமிக்கு வந்து மனிதர்களை சந்தித்திருந்தால் என்ன நேர்ந்திருக்கும்?
அவர்களின் அறிவாற்றலையும் தொழிநுட்பத்தையும் பார்க்கும் மனிதர்கள் அவர்களை கடவுள் என்று வழிபட்டால் கூட ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.
ஏனென்றால் சில கண்கட்டி வித்தைகளை தெரிந்துவைத்துக்கொண்டு நான் தான் கடவுள், கடவுளின் அவதாரம், கடவுளின் தூதுவன் என்றெல்லாம் கூறி லெட்சக்கணக்கான மக்களை ஏமாற்றி கோடி கோடியாய் சொத்து சேர்க்கும் போலி மதவாதிகளும், அவர்களை நம்பும் மக்களும் இன்றும் இருக்கத்தானே செய்கிறார்கள்.
சரி நாம் விசயத்துக்கு வருவோம்...
மேலே 200 கோடி வருடங்களுக்கு முன்பு நம் பூமியில் ஓர் செல் உயிரி தோன்றியதாக கூறியிருந்தேன் அல்லவா. அப்படித்தான் இன்றுவரை இந்த உலகம் நம்பிவருகிறது.
ஆனால் நாமே இந்த பூமிக்கு வேற்றுக்கிரகவாசிகள்தான் என்று பெரிய குண்டை தூக்கிப்போடும் விஞ்ஞானிகளும் இருக்கிறார்கள், அவர்கள் கூறுவது இதுதான் "முதலில் தோன்றியதாக கூறப்படும் அந்த ஒரு செல் உயிரி இந்தப் பூமியை சேர்ந்தது அல்ல" அவர்கள் அப்படிக் கூற நிறையக் காரணங்கள் உண்டு.
சூரிய குடும்பத்தை பொருத்தவரை பூமியில் உயிரினம் தோன்றுவதற்கு முன்பே செவ்வாயில் உயிரினங்கள் செழிப்பாக வாழ்ந்திருக்கின்றன. கிட்டத்தட்ட 360 கோடி வருடங்களுக்கு முன்பு செவ்வாய் கிரகம் இன்றைய பூமியைப் போல உயிரினங்கள் வாழ எல்லாத் தகுதியுடன் மிகவும் செழிப்பாக இருந்துள்ளது, உயிரினங்களும் வாழ்ந்துள்ளன. அதன்பின் பெரிய விண்கல் ஒன்று செவ்வாய் கிரகத்தை மோதியிருக்கிறது அதனால் அங்கு வாழ்ந்த மொத்த உயிரினங்களும் அழிந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. அந்த விண்கல் மோதிய சுவடு இன்றும் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? அந்தப் படத்தை பார்த்தால் தெரியும். அந்த மோதலினால் சிதறிய விண்கற்களில் 7.5 சதவிகிதம் பூமியைத்தான் வந்தடைந்தனவாம். அப்படி வந்து சேர எடுத்துக்கொண்ட காலம் 100 முதல் 16,000 வருடங்களாம். அதனால் என்ன? என்று கேட்கிறீர்களா?
உங்களுக்கு பேன்ஸ்பெர்மிய கோட்பாட்டை (Penspermia Theory) பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பேன்ஸ்பெர்மிய என்பது கிரேக்க வார்த்தை அதன் பொருள் "Seeds Everywhere" என்பதாகும். விண்வெளியில் ஒழுங்கின்றி சுற்றித்திரியும் விண்கற்களில் நுண்ணுயிரிக்கள் புதைந்திருக்கின்றன, அந்த விண்கற்கள் நுண்ணுயிரிகளை சுமந்து செல்லும் கேப்சூல் போல செயல்படுகிறது. பறந்து விரிந்துகிடக்கும் இந்தப் பிரபஞ்சத்தில் வெவ்வேறு கிரகங்களுக்கு உயிரினங்களை அனுப்ப இது ஒரு சிறந்த வழி என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
அப்படியான நுண்ணுயிரிகள் செயற்கையாக அதனுள் செலுத்தப்பட்டதாகவும் இருக்கலாம். அதெப்படி செயற்கையாக செலுத்துவார்கள்?
சமீபத்தில் நடந்த நிகழ்வை நினைவுக்கூறவும். நாசா அனுப்பிய விண்கலம் பத்துவருட பயணத்திற்கு பிறகு விண்கல் ஒன்றில் வெற்றிகரமாக தரையிறங்கியது. மனித வரலாற்றில் பெரும் சாதனையாக பேசப்பட்ட நிகழ்வு இது. அந்த விண்கலம் அங்கு சில ஆய்வுகள் நடத்தப்போவதாக நாசா தெரிவித்தது ஆனால் பூமியில் வாழும் சில நுண்ணுயிரிகளை அதனுள் செலுத்தும் முயற்ச்சிதான் இது என்ற கூற்றும் நிலவிவருகிறது.
அமெரிக்க விஞ்ஞானிகள் 1984ல் அண்டார்டிக்காவில் இப்படியான ஒரு விண்கல்லைதான் கண்டெடுத்தார்கள். 1.95kg எடை கொண்ட அதன் பெயர் Allan Hills 84001 (ALH84001). இந்த விண்கல் செவ்வாயில் ஏற்பட்ட மோதலில் சிதறி பூமிக்கு வந்த கற்களில் ஒன்றாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஆகஸ்ட் 1996ல் நாசா விஞ்ஞானி David Mckay என்பவர் இதில் நானோபாக்டிரியாவின் எச்சம் இருப்பதை கண்டறிந்தார். அதன்பிறகுதான் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி பில்கிளிண்டன் செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லா விண்கலங்கள் அனுப்பும் திட்டத்திற்கு பெரும் தொகை ஒதுக்குவதாக அறிவித்தார். நமக்கு செவ்வாய் கிரகம் தான் தாய்வீடு என்று பல விஞ்ஞானிகள் தீர்க்கமாக நம்புகிறார்கள்.
இன்று நாசாவின் ஆளில்லா விண்கலம் செவ்வாயில் தேடிக்கொண்டிருப்பது தண்ணீரையும் தாதுப்பொருட்களையும் மட்டுமல்ல. அங்கு வாழ்ந்த உயிரினங்களின் எச்சங்களையும், ஆதரங்களையும் தான். அப்படியான நிறைய ஆதாரங்கள் நாசவுக்கு கிடைக்கப்பெற்றாலும் அதனை ரகசியமாக வைத்துள்ளனர்.
இப்படியாகவும் பூமிக்கு அந்த முதல் ஒரு செல் உயிரி வந்திருக்கலாம் அல்லவா?
இன்றும் பூமிக்கு வெளியிலிருந்து ‘டன்’ கணக்கில் ஒரு செல் உயிரிகள் வந்து கொண்டிருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா?...
தொடரும்...
கடவுள் எனும் வேற்றுகிரகவாசிகள்" - பகுதி 6

இன்றும் பூமிக்கு வெளியிலிருந்து ‘டன்’ கணக்கில் ஒரு செல் உயிரிகள் வந்து கொண்டிருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா?...
நம் அண்டை மாநிலமான கேரளவில் அவ்வப்போது சிவப்பு நிறத்தில் மழை பெய்தது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பரவலாக அனைவரும் இதனை வெறும் நிறம் என்று நினைத்திருந்த வேளையில், கொட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் காட்ஃப்ரே லூயிஸ் (Godfrey louis) மற்றும் சந்தோஷ்குமார் ஆகிய இருவரும் இதில் சிவப்பு நிறத்தில் செல்கள் இருப்பதை கண்டறிந்து கூறினர்.
இதென்ன பெரிய விசயம்? மீன்மழையெல்லாம் பார்த்த நமக்கு இதில் என்ன ஆச்சர்யம் இருக்கப்போகிறது? என்று நினைக்கிறீர்களா
ஆச்சர்யம் இருக்கிறதே! மீன்மழை என்பது கடலில் தோன்றும் பெரிய சுழற்காற்றால் உரிஞ்சி இழுக்கப்படும் கடல் மீன்கள் மேகங்களுடன் இணைந்து பின்பு மழையாக பொழிவது. ஆனால் அந்த சிவப்பு செல் மழை அப்படியல்ல, அந்த செல்கள் இந்த பூமியை சேந்ததே அல்ல என்பதுதான் இங்கு பிரச்சனையே.
காட்ஃப்ரே லூயிஸ் (Godfrey louis) மற்றும் சந்தோஷ்குமார் ஆகிய இருவரும் 2006ல் இது சம்பந்தமாக ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டனர், “The Red Rain Phenomenon of Kerala And It’s Possible Extraterestrial Origin” அதாவது ‘வேற்றுக்கிரகவாசிகளின் செல்கள் கேரளவில் சிவப்பு மழையாக’ என்ற அர்த்தத்தில் கூறப்பட்டிருந்தது. இந்த ஆய்வறிக்கை உலக விஞ்ஞானிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
அதன் பின் நீண்ட நாள் ஆய்வுக்கு பிறகு இருவரும் சிவப்பு செல்கள் பற்றிய தங்கள் ஆய்வு விபரங்களை வெளியிட்டனர். அதில் இந்த சிவப்பு செல்களின் PH அளவு 7 (Neutral - அதாவது காரத்தன்மையும், அமிலத்தன்மையும் இல்லாத நடுநிலை) என்றும், இதில் அதிகளவு கார்பன் மற்றும் ஆக்ஸிஜன் காணப்படுகிறது என்றும் தெரிவித்தார்கள்.
2008 ஆகஸ்ட் மாதம் இவர்கள் இருவரும் இணைந்து மற்றொரு ஆய்வு ஆய்வறிக்கையை வெளியிட்டனர். அதில் ‘இந்தியாவில் வேற்றுக்கிரகவாசிகளால் புதிய உயிர்கள் வளர்க்கப்படுகிறதோ’ என்ற சந்தேகக் கேள்வியை எழுப்பினார்கள். இந்த ஆய்வறிக்கை வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய ஆய்வாளர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதே போன்ற சிவப்பு மழை இலங்கையிலும் பெய்துள்ளது. அந்த செல்களை Stintec ஆய்வகத்தில் ஆய்வு செய்தபோது இன்னும் ஒரு அதிர்ச்சி, அந்த சிவப்பு செல்களில் DNA இல்லை.
அதனால் என்ன? என்று நினைக்கிறீர்களா? செல் பிளவுக்கு DNA மிகவும் அவசியம். இதற்கு முன்பு காட்ஃப்ரே லூயிஸ் மற்றும் சந்தோஷ்குமார் ஆகிய இருவரும் இந்த செல்களை 300 டிகிரி செல்சியஸ் உயர்வெப்பநிலைக்கும், 300 PPs உயர் அழுத்தத்திற்கும் உட்படுத்தி சோதனை செய்ய முடிவு செய்தனர். உலகில் இதுவரைக் கண்டறியப்பட்ட எந்த ஒரு உயிரினமும் இவ்வளவு உயர் வெப்பநிலை மற்றும் உயர் அழுத்தத்தில் உயிர்வாழ்ந்ததில்லை.
ஆனால் இவர்களுக்கு காத்திருந்ததோ பொரும் அதிர்ச்சி, அந்த சிவப்பு செல்கள் இப்படியான உயர் வெப்பநிலை மற்றும் உயர் அழுத்தத்தில் உயிர்வாழ்கின்றன. இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் உயிரை உறையவைக்கும் அடுத்த நிகழ்வும் நடந்தது, அந்த அசாதாரன சூழ்நிலையில் அவைகள் செல்பிளவுக்கு தயாராகின்றன. மைக்ரோஸ்கோப் மூலம் அதனை பார்த்த போது ஒரு பழைய சிவப்பு செல்லின் (Mother) உள்ளே சிறுசிறு நிறமற்ற புதிய செல்கள் (Daughter) உருவாவதை காணமுடிந்தது. இப்படியாக ஒரு Mother செல் உள்ளே அதிகபட்சமாக 15 Daughter செல்கள் இருப்பதை கண்டறிந்தார்கள். இது தெளிவான செல்பிளவுதான் என்று காட்ஃப்ரே லூயிஸ் (Godfrey louis) மற்றும் சந்தோஷ்குமார் இருவரும் கர்ப்பூரம் அடித்து சத்தியம் செய்கிறார்கள்.
அதன்பிறகு நிறைய இடங்களுக்கு ஆய்வுக்காக இந்த சிவப்பு செல்கள் அனுப்பப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டது. காட்ஃப்ரே லூயிஸ் UKயில் உள்ள வேல்ஸ்(Wales) மாகாணத்தின் Cardiff University யில் பணிபுரியும் சந்திர விக்ரம் சிங்’கிற்கு அனுப்பிவைத்தார், அங்கும் ஆய்வுகள் நடந்தது. அதன் பின் UK, Sheffieldல் உள்ள University of England’டிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதன் பின் அமெரிக்காவில் உள்ள Cornell Universityக்கு அனுப்பப்பட்டு, அங்கும் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இப்படி நடந்த ஆய்வுகளில் சிவப்பு செல்களில் சிலிக்கான், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன், அலுமினியம் போன்ற மூலப்பொருள்கள் இருப்பதாக முடிவு வந்ததே தவிர DNA இருப்பதாக ஒருவரும் கூறவில்லை. இன்றும் இதைப்பற்றிய ஆய்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
செல்பிளவு என்பது கிட்டத்தட்ட உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்வதை போலத்தான், எந்த ஒரு உயிரினமும் தனக்கு பாதகமான சூழ்நிலையில் இனப்பெருக்கத்திற்கு தயாராவதில்லை. சாதகமான சூழலில் மட்டுமே இனப்பெருக்கத்திற்கு தயாராகும். அப்படியானால் இந்த செல்களுக்கு சாதகமான சூழல் உயர் வெப்பநிலை மற்றும் உயர் அழுத்தும் என்று தானே பொருள். இதே வெப்பநிலை மற்றும் அழுத்தம் உலகம் முழுவதும் உருவாகுமேயானால் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் இறந்துவிடும் ஆனால் இந்த சிவப்பு செல் பிளவுபடும், பெருகும். அப்படியானால் உலக உயிரினங்களின் அழிவிற்குப்பிறகு தோன்றும் அடுத்த உயிர் சங்கிலி தோற்றத்திற்கு இதுதான் முதல் ஒரு செல் உயிரியாகும்.
இதனை சாதரனமாக எடுத்துக்கொள்ள முடியாது, காரணம்
15 நிமிடம் முதல் 40 நிமிடம்வரை பெய்த சிவப்பு மழையின் 1 மி.லிட்டர் நீரில் 90 லெட்சம் சிவப்பு செல்கள் காணப்படுகிறது. ஒரு லிட்டர் மழைநீரில் 100 மி.கிராம் சிவப்பு செல்கள் எடுக்கப்பட்டுள்ளன. இப்படியான கணக்கீட்டில் கேரளாவில் இதுவரை பெய்துள்ள சிவப்பு மழையால் கிட்டத்தட்ட 50 ஆயிரம் கிலோ சிவப்பு செல்கள் பூமியை வந்தடைந்துள்ளன. இதனை எப்படி சாதரண நிகழ்வாக எடுத்துக்கொள்ளமுடியும். இது என்ன உயிரி? எங்கிருந்து வருகிறது? என்று தெரியாமலே ‘டன்’ கணக்கில் பூமியை வந்தடகிறதே.
மழைபெய்த இடங்களில் விசாரித்தபோது, சிவப்பு மழை பெய்வதற்கு முன் இடியை விட அதிக சத்தம் விண்ணில் கேட்டதாக கூறப்படுகிறது. “Centre For Earth Science Studies (CESS)” இதனை ஆய்வு செய்து 1000 கிலோ விண்கல் வெடித்து சிதறியதால் இப்படி நடந்திருக்கலாம் என்று ஆய்வு முடிவை தெரிவித்தார்கள். இதில் என்ன வேடிக்கை என்றால் விண்கல் 1000 கிலோ தான், அது வெடித்ததால் பெய்த சிவப்பு மழையில் உள்ள சிவப்பு செல்கள் 50 ஆயிரம் கிலோவாம், அதுமட்டுமல்லாது தொடர்ந்து தேடிவந்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் எப்படி விண்கல் வெடிக்கிறது என்பது தெரியவில்லை.
எது எப்படியோ இந்த பூமியில் இல்லாத ஒரு செல் உயிரி பூமிக்கு வெளியிலிருந்து வருவது உறுதியாகிறது.
இப்படியான முறையில் கூட பூமிக்கு முதல் செல் உயிரி வந்திருக்கலாம் அல்லவா? அப்படி நடந்திருந்தால் அதன் பின் இரத்தமும், தசையுமாக அறிவில் மேம்பட்ட உயிரினங்கள் இருப்பதை யாராலும் மறுக்கமுடியாது. அவர்கள்தான் முதல் செல்லை அனுப்பினார்கள் என்றால் கண்டிப்பாக அதனை வளர்க்கவும் செய்திருப்பார்கள். வளர்ப்பது என்றால் சாதாரன வளர்ச்சியல்ல அவைகளை பரிணாம வளர்ச்சியடைய செய்தல், ஒரு உயிரியை இன்னொன்றாக மாற்றுதல்.
நம் பரினாம வளர்ச்சியை பற்றி உங்களுக்கு தெரியாத சில உண்மைகளுடன் அடுத்த பகுதியில் சந்திப்போம்.
தொடரும்...
Image may contain: 2 people

கடவுள் (எ) வேற்று கிரகவாசிகள்... பாகம்-07...


ஆர்டிக் பகுதியில் உள்ள Svalbard என்ற தீவில் நார்வே அரசு மற்ற சில நாடுகளுடன் இணைந்து 2008ல் Svalbard Global Seed Vault என்ற திட்டத்தை உருவாக்கியது. அதில் உலகில் உள்ள மரம், செடி, கொடி, பயிர்வகைகளை சேகரித்து பாதுகாப்பது என்று முடிவுசெய்தார்கள். பூமியில் ஏற்படும் (ஏற்படுத்தப்படும்) அசாதாரண காலநிலைமாற்றம் காரணமாக அழிந்துவரும் மரங்கள், தாவரங்கள், பயிர்வகைகள், இவை அனைத்தையும் அழிவிலிருந்து பாதுகாப்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். 9 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் மார்ச் 2013 வரை 7,70,000 வகையான தாவர இனங்கள் சேமிக்கப்பட்டுள்ளன. இங்கே “தாவர இனங்கள்” சேமிக்கப்பட்டுள்ளன என்றால் முழு மரமாகவோ, செடியாகவோ சேமித்துவைக்கவில்லை, அதன் விதைகளை சேமித்துவைத்துள்ளர்கள்.
உலகம் பேரழிவை சந்தித்தால் கூட அதிலிருந்து தப்பிப்பவர்கள் இந்த விதைகளை பயன்படுத்தி உலகில் மீண்டும் அவைகளை உயிர்த்தெழ செய்யமுடியும்.
இதைத்தான் நம்மவர்கள் அன்றே ஊருக்கு ஊர் கோவில் கட்டி அதன் கோபுரகலசங்களில் சிறுதானிய விதைகளை சேர்த்து வைத்தார்கள். பெருவெள்ளத்தால் ஊரில் உள்ள அனைத்தும் அடித்து சென்றாலும் கோபுரகலசத்தில் இருப்பதை கொண்டு விவசாயம் செய்யமுடியும். அதாவது அன்றைய “இன்சூரன்ஸ் பாலிசீ” எல்லாம் நம் முன்னோர்கள் சொல்லிக்கொடுத்த பாடம்தான்.
இங்கிலாந்தில் உள்ள Zoological Society Of London, Natural History Museum, மற்றும் University Of Nottingham இணைந்து 1996ல் “Frozen Ark” என்ற திட்டத்தை தொடங்கினார்கள். இதன் நோக்கம் அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகள் மற்றும் பூச்சி வகைகளில் DNAகளை எடுத்து உறைநிலையில் சேமித்துவைப்பது. நம் அடுத்தடுத்த தலைமுறைகளில் குளோனிங் தொழில்நுட்பத்தில் பெரிய முன்னேற்றம் அடையும் பொது இந்த உயிரினங்களை மீண்டும் உயிருடன் நம் பூமியில் நடமாடவிடலாம். அதாவது யானையாகவே இருந்தாலும் ஒரு சிறு கண்ணாடி சோதனை குழாயில் அடைத்துவிடலாம்.
இப்போது நான் என்ன சொல்லப்போகிறேன் என்று உங்களுக்கே தெரிந்திருக்கும். நோவாவிடம் கட்டளையிட்டது கடவுள் எனும் உயர்தொழில்நுட்பம் கொண்ட வேற்றுக்கிரகவாசி என்றால் அவர்களிடம் DNA’வை சேகரிப்பது, குளோனிங் போன்ற சகல தொழில்நுட்பமும் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறதல்லவா? இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தியிருக்கும் பட்சத்தில் இந்தக் கதை உண்மையாகிவிடுகிறதே. இப்படி நடந்திருந்தால் நோவாவின் படகே இதற்குப் போதுமானது. இது ஒரு உதாரணம்தான் இப்படியாக தேவையானவற்றை எடுத்துக்கொண்டு தேவையில்லாதவைகளை அழித்துவிடுவது என்று செய்திருக்கலாம் அல்லவா? இங்கு அந்த கடவுள் என்பவரின் அறிவையும் தொழில்நுட்பத்தையும் சிந்தித்துபார்ப்பது அவசியம். இதில் வரும் நோவா ஒரு சாதாரண மனிதன் அல்ல, அவரின் பிறப்பைப் பற்றிய கதை பிற்பகுதியில் வருகிறது.
ஒரு கதைக்கு நீங்க இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கலாமா? என்று யோசிப்பது புரிகிறது. இது கதை அல்ல என்பதற்கு இன்னும் ஒரு ஆதரம் கிடைக்கப்பெற்றது
1812ல் பிரஞ்சு கரீபியன் தீவின் Guadelope எனற இடத்தில் ஒரு பெண்ணின் எலும்புக்கூடு தலைப்பகுதியும், கால்பகுதியும் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. சுமார் 1.6 கி.மீட்டர் நீளம், அகலம் கொண்ட Limestoneனின் உள்ளே அந்த எழும்புக்கூடு புதைந்து காணப்பட்டது. இதன் காலம் கிட்டத்தட்ட 2 கோடியே 80 இலட்சம் வருடங்கள் பழமையானது. இதனை பாறையுடன் பெயர்த்து கொண்டுவந்து மேலே கூறிய Genesis புத்தகப் பெருவெள்ளகதைக்கு ஆதாரமாக பிரிட்டீஸ் அரசு அவர்களின் அருங்காட்சியகத்தில் வைத்தது. ஆனால் டார்வின் தனது பரிணாமக் கோட்பாட்டை வெளியிடுவதற்கு 9 வருடங்களுக்கு முன்பே அதாவது 1850களிலேயே அதனை அருங்காட்சியகத்திலிருந்து எடுத்து அதற்குக் கீழ் இருந்த பாதாள அறையில் மறைத்து வைத்துவிட்டார்கள் இன்றளவும் அது வெளியே வரவில்லை. எதனால் இவை மறைக்கப்படுகின்றன என்பது கேள்விக்குறியே.
சரி வேற்றுக்கிரகவாசிகள் இப்படியான தரம்பிரிக்கும் வேலையை மட்டும்தான் செய்தார்களா? என்றால், இல்லை மனிதர்களின் அறிவை மேன்படுத்த மரபணு மாற்றமும் செய்துள்ளார்கள். DNA மரபணு மாற்றம் செய்தார்களா?? ஆதாரத்துடன் அடுத்த பதிவில் பார்ப்போம்....
Image may contain: one or more peopleImage may contain: 3 people, people smiling




கடவுள் எனும் வேற்றுகிரகவாசிகள்" - பகுதி 8
இன்று பூமியில் வாழும் உயிரினங்களில் அறிவில்மேம்பட்ட இனமாக(?) மனித இனம் திகழ்வதைப்போல டைனோசர் இனம் வாழ்ந்த காலத்தில் அவற்றிலும் அறிவில் மேம்பட்ட உயிரினம் இருந்திருக்கின்றன. அவைகள் டைனோசர் இனத்திலிருந்து பரிணாம வளர்ச்சியடந்தவை.
இங்கே தான் ஒரு கேள்வி எழுகிறது, உண்மையில் டைனோசர் இனத்துடன் சேர்த்து இந்த இனத்தையும் அழிக்க முயன்றிருப்பார்களோ? ஏனென்றால் டைனோசர் இனம் அழிக்கப்பட்டபோது அந்த அழிவிலிருந்து தப்பிப்பதற்காக அவைகள் பூமிக்கு அடியில் சுரங்கங்களும், குகைகளும் அமைத்துத் தப்பித்து வாழ்ந்தனவாம், (காடே தீப்பிடித்து எரிந்தாலும் பூமிக்கு அடியில் வாழும் எலிக்கு எந்த ஆபத்தும் வராது) இன்று வரை அந்த இனம் பூமிக்கு அடியில் வாழ்ந்துவருவதாகவும் நம்பப்படுகிறது.
“பூமிக்கு அடியில் டைனோசர் காலத்தைய மனிதனைப் போன்ற உயிரினங்கள் இருக்கின்றன. வேற்றுக்கிரகவாசிகள் மற்றும் ரகசிய அமைப்பினருக்கும் இவர்களுக்கும் தொடர்பு உண்டு. இந்த உயிரினங்கள் Draco என்று அழைக்கப்படுகின்றன. Dracoதான் பூமியின் பண்டைய உயிரினங்கள், பூமிக்கு அடியிலேயே காலம் காலமாக வாழ்ந்துவருகின்றன. இவர்களைத்தான் நாம் வீழ்ச்சியுற்ற தேவதைகள் (Fallen Angels) என்கிறோமோ? தெரியவில்லை. அவர்களை பொருத்தவரை நம் மனித இனம்தான் அவர்களின் பூமியை ஆக்கிரமித்துள்ளோம் என்று நம்புகிறார்கள்” இதனைக் கூறியவர் Thaomas Edwin Castello. உலகை உலுக்கிப்போட்ட பல ரகசியங்களை வெளிவுலகத்திற்குக் கொண்டுவந்த Speck Out Unter Ground Base Security Officer.
இவர் கூறியவற்றில் பாதி உங்களுக்கு புரிய வாய்ப்பில்லை, அவற்றை பற்றிய விரிவான விளக்கங்கள் பின்னர்வரும் பகுதிகளில் தரப்பட உள்ளன. இதில் நமக்கு இப்போதைய தேவை Draco (டைனோசர் கால மனிதனை ஒத்த உயிரினம்) பற்றிய தகவல்கள்.
இதனை நம்பக் கடினமாக இருந்தாலும் அதற்கான ஆதாரங்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.
சுமேரியர்கள் கடவுளாக வணங்கிய பெண்ணில் சிலை ஒன்று தொல்பொருள் ஆய்வாளார்களால் கண்டெடுக்கப்பட்டது இது கிட்டத்தட்ட 7000 வருடங்கள் பழமையானது. உருவத்தில் மனிதர்களைப்போல் இருந்தாலும் அந்த பெண் மனித இனத்தைச் சேர்ந்தவள் கிடையாதாம். அதனாலோ என்னவோ அந்த பெண்ணை கடவளாக வழிபட்டுள்ளார்கள். அந்த பெண்ணின் உருவம் டைனோசர் கால மேம்பட்ட உயிரினத்தின் மாதிரியுடன் ஒத்துப்போகிறது. இதனையெல்லாம் ஒரு ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியுமா? என்று உங்களுக்கு தோனலாம். ஆனால் அடுத்ததாக கிடைத்த ஆதாரம் மனித இனத்தின் தோற்றம் பற்றி இதுவரை இருந்த கருத்துக்கள் அனைத்தின் ஆணிவேரையும் ஆட்டிப்பார்த்த ஒன்று.
1983ல், Turkmenia’s Institute of Geology யின் இயக்குனரான Professor Amanniyazovக்கு, ஒரு அழைப்பு வந்தது, அதில் Mesozoic, Strata என்னும் இடத்தில் டைனோசர் கால்தடங்கள் இருப்பதாக கூறப்பட்டது. அவருக்கு இப்படியான அழைப்புகளும் டைனோசரின் கால் தடங்களும், எச்சங்களும் புதிதல்ல. தன்னுடன் ஒரு குழுவை அழைத்துக்கொண்டு அந்த இடத்தை நோக்கி புறப்பட்டார். அந்த இடத்தை அடையும் வரை அவருக்கு தெரியாது இந்த நாள் அவர் வாழ்வில் மறக்கமுடியாத நாளாக மாறும் என்று. அங்கிருந்த ஒரு மலைக்குன்றில் டைனோசர்களின் விதவிதமான கால்தடங்கள் 1500க்கும் அதிகமானவை கிடைத்தன. அங்கு டைனோசரின் கால்தடத்திற்கு அருகே வித்தியாசமான ஒரு கால்தடத்தை கண்டார். அருகில் சென்று பார்த்த Amanniyazovக்கு ஒரு நிமிடம் இதயத்துடிப்பே நின்றுவிட்டது. அங்கே டைனோசர் கால்தடத்திற்கு அருகே இருந்தது மனிதனின் கால்தடம். இந்த செய்தி காட்டுத்தீயாக பரவதொடங்கியது. இதைப்பற்றிய செய்திகள் Rubstsov “Tracking Dinosours” Moscow News No24p,10,1983ல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.
இது மனிதனின் கால்தடமா? அல்லது மனிதனைப் போன்ற வேறு உயிரினத்தின் கால்தடமா? என்று ஆய்வாளர்கள் தலையை பிய்த்துகொண்ட நேரம் அது.
இதை மனிதனின் கால்தடம் என்று எடுத்துக்கொண்டால் டார்வினின் பரினாம கோட்பாடு மற்றும் நாம் இதுவரை மனித இனத்தின் தோற்றம் பற்றி வகுத்துவைத்திருக்கும் அத்தனைக் கோட்பாடுகளும் தவிடுபொடியாகிவிடும். ஏனென்றால் இதன் காலம் கிட்டத்தட்ட 15 கோடி வருடங்கள் பழமையானது. மனித இனத்தின் தோற்றமாக நாம் கனித்து வைத்திருப்பது 30 - 10 இலட்சம் வருடங்களுக்கு முன்புவரை தான். மனிதனைப் போன்ற வேறு உயிரினமாக இருக்கும் என்று எடுத்துக்கொண்டால், யார் அவர்கள்? என்ற கேள்வி எஞ்சிநிற்கும்.
இதனைப் பற்றி ஆய்வு செய்த ரஷ்ய பத்திரிக்கையாளர் Alexander Bushey ‘இது கண்டிப்பாக மனித கால்தடமாக இருக்கமுடியாது. மனித இனத் தோற்றத்திற்கும் இந்தக் கால்தடத்தின் காலத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஒரு வேளை இது வேற்றுக்கிரகவாசிகளின் கால்தடமாக இருக்கலாம்’ என்று கூறினார்.
ஆனால் அது வேற்றுக்கிரகவாசிகள் கால்தடமாகவும் இருக்கமுடியாது. காரணம் பல நட்சத்திரமண்டலங்களைத் தாண்டி விண்வெளியில் பயணம் செய்து பூமிக்கு வந்த அவர்கள் வெறும் காலுடன் சகதியில் (அன்று சகதியாக இருந்ததுதான் இன்று பாறையாக மாறியிருக்கிறது) நடந்திருப்பார்களா என்ன?
இவைகளை எல்லாம் பார்க்கும் போது கண்டிப்பாக மனிதனைப் போன்றே அந்தக் காலகட்டத்தில் ஒரு உயிரினம் வாழ்ந்தது உறுதியாகிறது. அவைகளை ஏதோ ஒரு காரணத்திற்காக அழிக்கவும் முயற்சி நடந்துள்ளது.
(Draco இனம் எப்படி தப்பித்தன, பூமிக்கு அடியில் அவைகள் என்ன செய்துகொண்டிருக்கின்றன, போன்ற சுவாரஸ்யமான தகவல்கள் பின்னர்வரும் பகுதியில் விளக்கப்பட உள்ளன.)
அதன் பிறகு தான் சில பரினாம வளர்ச்சிககள் நடந்து மனித இனம் தோன்றியது, சரியாக சொல்லவேண்டும் என்றால் தோற்றுவிக்கப்பட்டது.
இந்த உலகத்தில் தோன்றிய அனைத்து உயிரினங்களுக்கு பின்னும் அறிவில் மேம்பட்ட வேற்றுக்கிரகவாசிகளின் பங்கு உண்டு. அவர்களை பொருத்தவரை நம் பூமி ஒரு உயிரியல் ஆய்வுக்கூடம், அதில் இன்றுவரை ஆய்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
மனித இனத்தில் உருவ அமைப்பு பற்றிய நமக்கு நன்றாகவே தெரியும், சராசரியாக மனிதனின் உயரம் 5.5 அடி என்று வைத்துக்கொள்ளலாம்.
மனித இனம் தோன்றியதிலிருந்து இதே உயரத்தில் தான் இருந்திருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் அடுத்த பகுதி உங்களுக்கானதுதான்.
No photo description available.


கடவுள் எனும் வேற்றுக்கிரகவாசிகள்" - பகுதி 9
#Aliens_vs_God
டைனோசர்களுக்கும், அந்த காலகட்டத்தில் வாழ்ந்த Draco இனத்திற்கும் ஏற்பட்ட நிலை நம் மனித இனத்திற்கும் ஏற்படுமா? என்று கேட்டால். “ஏற்படாது” என்று உறுதியாக கூறமுடியாது. ஏனெனில் இந்த பூமியில் இதுவரை பல முறை தரம் பிரித்தல் பணி நடத்தப்பட்டுள்ளது. எளிமையாக கூறவேண்டுமென்றால் ‘அழித்தல்’. டைனோசர் காலத்தில் நடந்ததை போல மனித இனம் தோன்றிய பிறகும் அழித்தல் வேலை தொடர்ந்துள்ளது.
யாரை அழித்தார்கள்?
மனிதர்களைத்தான்.
ஆனால் நம்மை போன்ற மனிதர்களை அல்ல. புரியவில்லையா?
மனிதன் உருவத்தில் பல வகைகளாக வாழ்ந்துள்ளான்.
தற்பொழுது நாம் கணித்துவைத்திருக்கும் மனித இனத்தின் வரலாறு சரிதானா? என்று கேட்டால் ‘இல்லை’ என்றுதான் கூறவேண்டும்.
குரங்கு - நீளமான கைகளை கொண்ட மனித குரங்கு - நிமிர்ந்து இரண்டு கால்களால் நடக்கும் மனித குரங்கு - உடல் முழுவது ரோமங்களுடன் காட்டுவாசி - நவீன மனிதன்.
இவைதான் நமக்கு பாடப்புத்தகத்தில் சொல்லிக்கொடுத்த மனிதனின் தோற்றம். இதுநாள் வரை பலரும் அப்படித்தான் நினைத்துகொண்டிருக்கிறார்கள். (நானும் அப்படித்தான் நினைத்தேன்)
ஆனால் உண்மை அதுவல்ல, மனிதன் என்ற இனம் பல வகைகளாக வாழ்ந்துள்ளனம். குறிப்பாக உயரத்தை கூறலாம்.
South-cast Turkey, Euphrates Valleyயில் 1950களில் கட்டிடப்பணிகள் தீவிரமாக நடந்துகொண்டிருந்தன. அப்போது நடைபெற்ற தோண்டும்பணியில் பண்டையகால எலும்பு ஒன்று கிடைத்தது. அதன் நீளம் 120 செ.மீ,. அதனை ஆராய்ந்த போதுதான் பேரதிர்ச்சி. அது மனிதனின் தொடைப்பகுதி எழும்பு. ஒரு மனிதனுக்கு தொடைப்பகுதி எழும்பே 120 செ.மீ என்றால் அந்த மனிதனின் மொத்த உயரம் என்னவாக இருக்கும்? சற்று சிந்தித்துபாருங்கள். Mt.Blanco Fossil Museum தின் இயக்குநரான Joe Taylor அந்த எழும்பை கைப்பற்றி தனது அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைத்தார். அவர் கணக்கீட்டின் படி அந்த எலும்புக்கு சொந்தமான மனிதன் சுமார் 14 - 16 அடி உயரம் இருந்திருக்க வேண்டும் என்று கூறினார்.
16 அடி உயரத்தில் மனிதன் கற்பனை செய்துபாருங்கள், சராசரி உயரம் கொண்ட மூன்று பேர் ஒருவர் மீது ஒருவர் ஏறி நின்றால் மூன்றாவது நபர் அந்த மனிதனின் முகத்தை நேருக்கு நேர் பார்த்து பேசமுடியும்.
இதை விட சுவாரஸ்யமானது அடுத்த சம்பவம்,
தென்னாப்பிரிக்கா, Mapluzi அருகே பாறையில் பதிந்திருந்த ஒரு கால்தடத்தை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். அது மனிதனின் கால்தடம்தான் என்று உறுதியாக கூறமுடியாமல் திக்குமுக்காடினர்கள். காரணம் அதன் அளவு, நீளம் மட்டும் 4 அடி என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அந்தக் கால்தடம் பதித்த மனிதனின் உயரம் கிட்டத்தட்ட 25 அடியாக இருக்கவேண்டும். 25 அடியில் மனிதனா? என்று பெருமூச்சுவிடாதீர்கள். ஆய்வாளர்களின் கணக்குப்படி 36 அடி உயர மனிதர்கள்வரை பூமியில் வாழ்ந்திருக்கிறார்கள்.
இவைகளை இல்லாமல் புராண கதைகளிலும் இப்படியான மனிதர்களை பற்றிய குறிப்புகள் உள்ளன.
கிறிஸ்துவர்களின் பழைய ஏற்பாடு மற்றும் Hebrew Bible-லின் முதல் புத்தகமான Book of Genesis-ல் (chapters 6-4) ‘அந்தக் காலகட்டத்தில் Nephilm என்று கூறப்படும் ராட்சசர்கள் வாழ்ந்தார்கள், அவர்களை மனிதர்களின் பெண்ணிற்கும் கடவுளின் மகனுக்கு பிறந்த குழந்தைகள் அழித்தார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது
இந்து மதப் புராணக்கதைகள் ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றிலும் 'ராட்சசர்கள்' என்று உருவத்தில் மிகப்பெரிய மனிதர்களைப் பற்றியக் குறிப்புகள் காணப்படுகிறது. அவர்களை 'கடவுள்' புதிய அவதாரம் எடுத்து அழித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏதோ ஒரு வகையில் மனிதர்களை அல்லாத வேறுவொரு மேம்பட்ட இனம் அவர்களை அழித்திருக்க வேண்டும் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. அவர்கள் யார்? ஏன் அப்படி செய்யவேண்டும்?
தரம்பிரித்தலின் படி பலதரப்பட்ட மனித வகைகளில் இன்றைக்கு இருக்கும் மனித இனம்தான் இறுதி தேர்வு (Final Product) என்றால் மற்ற இனங்களை அழிப்பதுதானே முறை. அவைகள் இறுதி தேர்வான மனித இனத்தைவிட வலிமையான இனமாக இருக்கும் பச்சத்தில் அவைகளை அழிக்க மனிதனை அல்லாத அறிவில் மேம்பட்ட, வலிமையானவர்களின் உதவி அவசியமாகிறது. அவர்கள் தான் கடவுள் (எ) வேற்றுக்கிரகவாசிகள்.
மனித இனம் இன்றை நிலைக்கு வர நிறைய செதுக்கப்பட்டிருக்கிறோம் என்று முன்பே கூறியிருந்தேன்.
இங்கு புராணக்கதைகளையும், மத நம்பிக்கைகளையும் வெறும் கட்டுக்கதை என்று ஒதிக்கிவிட முடியாது. அவைகளை பொய் என்று கூறும் முன் அவைகள் உண்மையாக இருக்க சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என்று சிந்திக்காமல் விட்டால். அதில் உண்மையிருக்கும் பச்சத்தில் இழப்பு நமக்குதான்.
ஒவ்வொரு பண்டைய கதைகளிலும் நமக்கோ, நமக்கு அடுத்த தலைமுறைகளுக்கோ தெரியப்படுத்த வேண்டிய அறிவியல் மறைந்திருக்கிறது. நமக்கு புரியாவில்லை என்ற ஒரே காரணத்தால் அது பொய்யாகிவிடாது.
உதாரணத்திற்கு நமக்கு தேவையான ஒரு தகவலை பண்டைய கதையிலிருந்து எடுத்தேன். அது எந்த அளவுக்கு பொருந்துகிறது என்று படித்துவிட்டு கூறுங்கள்.
நோவா ஆர்க்(Noah’s Ark)
கிறிஸ்துவர்களின் பழைய ஏற்பாடு மற்றும் Hebrew Bible-லின் முதல் புத்தகமான Book of Genesis-ல் (chapters 6-9). “நான் உருவாக்கிய மனித இனத்தில் தீயவர்கள் அதிகமாகிவிட்டதால் நீரைக்கொண்டு உலகை அழிக்கப்போகிறேன்" என்று கடவுள் கூறியிருக்கிறார். இந்த அழிவிலிருந்து தப்பிக்க மரத்தால் ஆன படகு ஒன்றை தயாரித்து, அதில் நோவாவின் குடும்பம் மற்றும் உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளில் இருந்தும் ஒவ்வொரு ஜோடியை அந்தப் படகில் ஏற்றிக் காப்பாற்றவேண்டும் என்று நோவாவிடம் கடவுள் உத்தரவிட்டிருக்கிறார். அவ்வாறே நோவாவும் மரத்தாலான படகு ஒன்றை செய்து அதில் அனைத்து ஜீவராசிகளில் இருந்தும் ஒவ்வொரு ஜோடியை அந்தப் படகில் ஏற்றி காப்பாற்றினார் என்கிறது அந்தப் புத்தகத்தில் இருக்கும் கதை.
இங்கே அந்தப் படகின் அமைப்பு குறிப்பிடப்பட்டுள்ளது 450 அடி நீளம், 75 அடி அகலம், 45 அடி உயரம். இந்த அளவிற்குள் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளில்(பறப்பன, ஊர்வன, கால்நடைகள், வனவிலங்குகள்) இருந்தும் ஒவ்வொரு ஜோடியை இதனுள் ஏற்றிவிட முடியுமா? என்பது முதல் கேள்வி. அப்படி ஏற்றிவிட்டதாகவே வைத்துக்கொள்வோம் சிங்கம், புலி, சிறுத்தை இருக்கும் அதே படகில் தான் மான், வரிக்குதிரை, மாடு, ஆடு இவைகளும் இருக்கும் ஒன்றுக்கு ஒன்று உணவாகிவிடாதா? என்பது இரண்டாவது கேள்வி. ஒருவேளை தனித் தனியாகவே பிரித்து அடைக்கப்பட்டதாக வைத்துக்கொள்வோம், அந்தக் கதையின் படி 40 பகல் 40 இரவுகள் தொடர்ச்சியாக மழை பெய்ததாகவும், அதனால் பூமி முழுவதும் நீரால் மூழ்கிவிட்டதாகவும் அதன் பிறகு 220 நாட்களுக்கு மேல் பூமியில் இருந்த நீர் வடியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. சுமார் 8 மாதங்களுக்கு மேல் நோவா குடும்பத்தாரும் அந்த விலங்குகளும் அந்தப் படகை விட்டு இறங்கவேயில்லை, அப்படியானால் அனைவருக்கும் உணவு வேண்டுமே. ஒரு சின்ன உதாரணம், உள்ளே இருக்கும் இரண்டு யானைகளுக்கு மட்டும் 8 மாதத்திற்கான உணவாக 36,000 கிலோ செடிகொடிகளை சேர்த்துவைக்கவேண்டும். இப்படியான கேள்விகள் மற்றும் சிக்கல்களை ஆராய்ந்துபார்த்து இறுதியில் இதில் எழுதப்பட்டுள்ள அனைத்தும் பொய்யான கட்டுக்கதை என்ற முடிவுக்கு வந்துவிடுவோம்.
இந்த இடத்தில் உங்கள் மனதில் ஒரு கேள்வியை எழுப்புங்கள். “இது ஏன் உண்மையாக இருக்ககூடாது?” “என்னடா குழப்புகிறானே” என்று யோசிக்காதீர்கள். இன்று நாம் தேடிக்கொண்டிருக்கிருக்கும் தொழில்நுட்பத்தில் ஒன்று மட்டும் அப்போது பயன்படுத்தப்பட்டிருந்தால் இந்தக் கதை உண்மை கதையாகிவிடும். புரியவில்லையா?
தொடரும்...
.


கடவுள் (எ) வேற்று கிரகவாசிகள் ..... பாகம் -10
2015 ஜீலை 23ஆம் தேதி, பல விண்வெளி ஆய்வாளர்களை சந்தோசத்தில் திக்குமுக்காட வைத்த நாள்.
உயிரினங்கள் வாழ பூமிக்கு மாற்று இல்லையே என்று தவித்தவர்களின் தவிப்பு தணிந்த நாள்.
நம் பூமியை ஒத்த இன்னொரு கிரகத்தை கண்டறிந்துவிட்டதாக நாசா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
அந்த கிரகம் உருவத்தில் நம் பூமியைவிட 1.5 மடங்கு பெரியது, 1.5 பில்லியன் வருடங்கள் பழமையானது. அதற்கு கெப்ளர் 452B என்று பெயர் வைத்துள்ளார்கள்.
நாசா விஞ்ஞானி Jon Jenkins என்பவர் 'இந்த கிரகத்தில் ஏதேனும் உயிரினங்கள் வாழக்கூடும்' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த மகத்தான பணியை செய்துமுடித்தது 2009ல் விண்வெளிக்கு அனுப்பிவைக்கப்பட்ட 'கெப்ளர் தொலைநோக்கி' (Kepler Telescope) தான்.
கெப்ளர் எப்படி இந்த பணியை முடித்தது என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா?
கெப்ளரின் வேலையானது பறந்து விரிந்துகிடக்கும் விண்வெளியின் ஒரு சிறு பகுதியை கண்காணித்து அங்கே சூரியனைப் போன்ற நட்சத்திரங்கள் மற்றும் அதனைச் சுற்றும் கோள்களைக் கண்டறிவது.
அதாவது இந்த பிரபஞ்சம் கடலென்றால் அதில் ஒரு துளியை எடுத்து ஆராய்வது போல. அந்த ஒரு துளியை ஆய்வு செய்து கெப்ளர் அளித்த தகவல்கள் ஏறாலம்.
இப்படியாக கண்டறியப்பட்ட கோள்களின் எண்ணிக்கை 2740, இதனை 2013ம் ஆண்டு ஜனவரியில் “Kepler’s Planet Candidates” என்ற தலைப்பில் நாசா வெளியிட்டது..
இப்படி கண்டறியப்பட்ட கோள்களை தரம் பிரித்து, அதன் தன்மைகளை ஆய்வுசெய்து இறுதியாக ஒரு கிரகத்தை கண்டறிந்துள்ளர்கள். (நினைவில் கொள்ளுங்கள் ஒரு துளிக்கு ஒரு கிரகம் நம் கிரகத்தை ஒத்த அதைவிட பழமையான கிரகம் இருக்குமெனில் மொத்த பிரபஞ்சத்தில்?)
இதனை அடுத்து அந்த கோள்களில் நீர் இருக்கிறதா? என்றும் அதில் இருக்கும் வாயுக்களின் தன்மை குறித்தும் ஆய்வுகள் நடந்துவருகிறது. நீரைப் பற்றி ஆராயக் காரணம், வேறு கிரகங்களில் உயிரினங்கள் இருக்கின்றனவா? என்ற ஆய்வின் முதல்கட்டம் இதுதான். நீர் இருந்தால் உயிரினங்கள் கண்டிப்பாக இருக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. இதைத்தான் நம் முன்னோர்கள் “நீரின்றி அமையாது உலகு” என்று கூறினார்களோ?
மேலே கூறிய இந்த தேடல், உயிரினங்கள் வாழ தகுதியான கிரகங்களை தேடுவது அதில் வாழக்கூடிய அறிவில் வளர்ச்சியடையாத உயிரினங்களை தேடுவது என்று எடுத்துக்கொள்ளளாம்.
வேற்றுக்கிரகவாசிகள் தேடல் பற்றி எழுதும்போது இவரை பற்றி கூறாமல் இருக்கமுடியாது. அவர்தான் விண்வெளி ஆராய்ச்சியாளர் Dr.Frank Drake. இவரை பற்றி ஏற்கனவே நிறைய எழுத்தாளர்கள் எழுதியிருந்தாலும் நமக்கு தேவையான சில தகவல்களை எழுதவேண்டியது அவசியம். வேறுகிரகங்களில் நம்மை விட அறிவில் மேம்பட்ட உயிரினங்கள் வாழ்கின்றன என்று தீர்க்கமாக நம்புவோர்களில் இவரும் ஒருவர்.
வேற்றுக்கிரகவாசிகளை தேடுவதற்காகவே SETI (Search For Extraterrestrial Intelligence) என்ற நிறுவனத்தை உருவாக்கினார். இந்த நிறுவனத்திற்கு சில தனியார் நிறுவனுங்களும் அமெரிக்க அரசும் பல கோடி டாலர்கள் நிதியுதவி செய்துவருகின்றது.
வேற்றுக்கிரகவாசிகள் எல்லாம் வெறும் கட்டுக்கதை என்று நாம் சொல்லும் அதே கதைக்குத்தான் அவர்கள் கோடி கோடியாக டாலர்களில் செலவு செய்து தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
நம்மை ஒத்த அறிவு கொண்ட ஏலியன்களை எப்படி தேடுகிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா?
காத்திருங்கள்......

Image may contain: one or more people and night
No photo description available.

கடவுள் எனும் வேற்றுக்கிரகவாசிகள்” - பகுதி 11
#Aliens_vs_God

(‘தீவிரமாக’ கடவுள் மற்றும் மத நம்பிக்கையில் இருப்பவர்கள் இந்த தொடரை படிக்காமல் விடுவது நலம்)
பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சிலர் DNAவின் வடிவத்தை அறிந்து அதை நம்மிடம் தெரியப்படுத்த முயற்சி செய்துள்ளார்கள் என்பதுதான் ஆச்சர்யமான உண்மை.
இந்து மதத்தில் நாகதெய்வத்தை வழிபடும் முறை பல ஆயிரம் வருடங்களாக இருந்துவருகிறது. இதற்காக கருங்கல்லில் இருபாம்புகள் பின்னியிருப்பதை போன்ற உருவத்தை செதுக்கி வைத்து வணங்குவது வழக்கம், அதனைக் கூர்ந்து கவனித்தால் அதில் DNA வின் வடிவம் இருப்பதை காணமுடியும். உறுதியாக DNAவின் வடிவத்தைதான் வரைந்துள்ளார்கள் என்று கூறமுடியாது, ஆனால் அதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
உலகளவில் சுமார் 2.1 பில்லியன் மக்களால் கிறிஸ்தவ மதம் பின்பற்றப்படுகிறது. ஏசுவை சிலுவையில் அறைந்த பிறகு அவரின் கொள்கைகளை பின்பற்றியவர்கள் உருவாக்கியதுதான் இந்த கிறிஸ்துவ மதம். இதில் Roman Catholic, Protestant, Orthodox, Anglican என்று பல பிரிவுகள் உண்டு. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு இருந்த பைபிளின் பெயர் Hebrew Bible இதில்தான் மனித இனத்தின் தோற்றம் பற்றி குறிப்பிடபட்டுள்ளது. The Book of Genesisல் மனிதர்களைக் கடவுள்தான் முதலில் உருவாக்கினார் என்றும் அப்படி உருவாக்கப்பட்டவர்கள் தான் ஆதாம், ஏவாள் என்றும், கடவுள் தன்னைப்போலவே மனிதர்களை உருவாக்கியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆதாம் ஏவாள் கதையில் கடவுள் உண்ணவேண்டாம் என்று கூறிய ஆப்பிள் பழத்தை ஒரு பாம்பு வடிவத்திலான சாத்தான் சொல்லைக் கேட்டு உண்டதாக வரும். அதனை விளக்கும் படத்தில் ஆப்பிள் மரத்தைப் பாம்பு சுற்றிகொண்டிருப்பது போன்று வரையப்பட்டுள்ளது. இதுவும் DNA அமைப்புடன் ஒத்துபோகிறது.
இதே கதை சற்று மாறுபட்ட கோணத்தில் சுமேரியர்களிடம் இருக்கிறது. பழமையான சுமேரிய நாகரிக காலத்தில் எழுதப்பட்ட களிப்பட்டைகள்(Clay Tablet) 19ஆம் நூற்றாண்டில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுக்கப்பட்டது.
ஏதோ ஒன்று இரண்டு என்று நினைத்துவிடாதீர்கள், கிட்டத்தட்ட 22 ஆயிரம் களிப்பட்டைகளை கைப்பற்றினார்கள். இதில் எழுதப்பட்டிருக்கும் மொழி Hebrew Bibleலில் இருக்கும் மொழியுடன் ஒத்துப்போகிறது. இதனை 1976ல் Zecharia Sitehin என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து “The Earth Chronicles Expeditions” என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டார். இதில் நாகரிக முதல் மனிதனை Anunnaki தான் 4,50,000 வருடங்களுக்கு முன்பு உருவாக்கினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Anunnaki என்பவர் கடவுளல்ல, மனிதர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக கடவுளால் உருவாக்கப்பட்டவர். (இந்து மதத்திலும் மனிதர்களை உருவாக்கும் வேலையை மட்டுமே செய்ய “பிரம்மா” இருக்கிறார் என்று நம்பப்படுகிறது). Hebrew Bibleலில் முதல் மனிதனின் பெயர் “ஆதாம்” என்று கூறப்பட்டுள்ளது. Anunnaki உருவாக்கிய முதல் மனிதனின் பெயர் “ஆதாமு”. இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.
இதுவரை கண்டரியப்பட்ட நாகரிங்களில் மிகப்பழமையானது சுமேரியர்களின் நாகரிகம், ஒருவேளை சுமேரியர்களின் கதையைதான் Hebrew Bibleலில் மறுபதிவு செய்திருப்பார்களோ?
இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று, ஆதாம் ஏவாள் அந்த ஆப்பிள் பழத்தை சாப்பிட்டால் இறந்துவிடுவார்கள் என்று கடவுள் கூறியதாகவும், ஆனால் அவர்கள் சாப்பிட்டால் இறக்கமாட்டார்கள் மாறாக அவர்களுக்கு அறிவு வளரும் என்று சாத்தன் கூறியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதாம் ஏவாள் அந்த பழத்தை சாப்பிட்டபோது கடவுள் சொன்னது போல எதுவும் நடக்கவில்லை, அதாவது அவர்கள் இறக்கவில்லை. மாறாக சாத்தான் சொன்னது போல அவர்களுக்கு அறிவாற்றால் வளந்திருக்கிறது.
கடவுள்(?) ஏன் பொய் சொல்லவேண்டும்? சாத்தானுக்கு எப்படி அந்த உண்மை தெரியும்? என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.
ஆதாம் ஏவாள் எடுத்துக்கொண்டது பழமா? அல்லது HAR1 மரபணுவா?
அதை வேண்டாம் என தடுத்தது கடவுளா? அல்லது அறிவில்மேம்பட்ட வேற்றுக்கிரகவாசியா?
அதை எடுத்துக்கொள்ள சொன்னது பாம்பு வடிவிளான சாத்தானா? அல்லது டைனோசர் கால மேம்பட்ட உயிரினமான Dracoவா?
(சுமேரியர்கள் Draco உருவ ஒற்றுமை கொண்ட ஒரு பெண் கடவுளை வணங்கினார்கள் என்று முன்பே குறிப்பிட்டிருந்தேன்) (Dracoவை 'சர்பம்' என்றும் அழைக்கிறார்கள், சர்பம் சென்றால் பாம்பு மனிதன் என்று பொருள்)
இவை அனைத்து ஒரு நேர்கோட்டில் அமைவது தற்செயலாக நடந்த ஒன்றா? அல்லது உண்மையாகவே இவைகளுக்குள் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?
இதில் ‘HAR1 மரபணு’ என்ற சொல் வருவதை கவனித்திருப்பீர்கள்,
குரங்கிலிருந்து மனிதன் இயற்கையாக பரிணாம வளர்ச்சியடையவில்லை, அறிவில் மேம்பட்ட ஒரு உயிரினத்தின் உதவியோடுதான் அது சாத்தியமானது என்பதற்கு HAR1 ஐ ஒரு உதாரணமாக கூறலாம்.
2003ல் அமெரிக்க அரசு நடத்திய Human Genome Project மூலம் மனித DNAவில் கிட்டத்தட்ட 20,500 மரபணுக்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது. அதாவது DNAவை ஒரு வீடாக கற்பனை செய்துகொண்டால், அந்த வீடு 20,500 மரபணுக்கள் எனும் செங்கற்களால் கட்டப்பட்டது. இந்த மரபணுக்கள் தான் ஒரு உயிரினத்தில் அனைத்தையும் தீர்மானிப்பது. உதாரணமாக ஒரு மனிதனை எடுத்துக்கொள்ளுங்கள் அவரின் நிறம், கண்ணின் கருவிழி நிறம், முடியின் நிறம், உருவம். முகத்தோற்றம், குரல், சில பண்புகள், அறிவாற்றல், சில பரம்பரை நோய்கள் உட்பட இவைகள் அனைத்தும் அந்த மனிதன் தாயின் கருவில் ஒரு செல்லாக உருவாகும் போதே தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. இவை அனைத்தையும் தீர்மானிப்பது அவன் தாய் தந்தையிடமிருந்து பெறப்படும் மரபணுக்கள்தான். அப்படி உருவாகும் அந்த ஒரு செல்லில் இருக்கும் மரபணுக்களில் செயற்கையாக மாற்றத்தை ஏற்படுத்தும் போது அதன் விளைவை குழந்தையிடம் காணலாம். அப்படியான ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன, அது வெற்றிபெரும் பட்சத்தில் அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கருவில் இருக்கும் போதே ஒரு குழந்தையை நாம் விருப்பம் போல வடிவமைக்களாம். பிறவி ஊனம், பிறவி நோய்களை தடுக்கலாம். இந்த 20,500 மரபணுக்களில் மிகவும் முக்கியமான மரபணுதான் இந்த HAR1.
2006ல் University of Californiaவில் நடந்த ஆய்வில் HAR1(Human Accelerated Regions1) மரபணுவை கண்டறிந்தார்கள். இந்த மரபணுதான் நம்மை விலங்குகளிடமிருந்து வேறுபடுத்துவது. மனித மூளையின் சிந்தனைத் திறனை தூண்டுவதில் பெரும்பங்கு வகிக்கிறது. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் நமது 6ஆம் அறிவின் ஆணிவரே இதுதான்.
விலங்குகளோடு விலங்குகளாக திரிந்துகொண்ருந்த மனிதக் குரங்கிற்கு இந்த மரபணு எங்கிருந்து கிடைத்தது? இதற்கான பதில் விஞ்ஞானிகளிடமும் இல்லை. சொன்னால் நம்பமாட்டீர்கள், விஞ்ஞானிகள் இதனை “ஏலியன் ஜீன்” என்றுதான் அழைக்கிறார்கள்.
இந்த மரபணுவை யார் கொடுத்தது? யாரிடம் கொடுத்தது?
தொடரும்…
No photo description available.
Image may contain: 1 person, outdoor


கடவுள் எனும் வேற்றுக்கிரகவாசிகள்  பாகம்-12
Dr.Frank Drake நவம்பர் 16, 1974ல் “Arecibo Message” என்ற தகவலை Messier 13 என்ற நட்சத்திரக் கூட்டத்தை நோக்கி அனுப்பினர். Messier 13ல் மட்டும் 30 இலட்சம் நட்சத்திரக் குடும்பங்கள் இருக்கின்றன. இவற்றில் ஏதேனும் ஒன்றிலாவது நம்மை ஒத்த அறிவுகொண்ட வேற்றுக்கிரகவாசிகள் இருக்கவேண்டும் என்று Frank தீர்க்கமாக நம்பினார்.
ஏழு வகையான தகவல்களை இணைத்து 01 என்ற Binary வடிவத்தில் 1679 இலக்கங்களாக மாற்றி 2380 MHZ அதிர்வெண்ணில் அனுப்பிவைத்தனர்.
அவர்கள் அனுப்பிய செய்தி இதுதான்
1. ஒன்றிலிருந்து பத்துவரை எண்கள்.
2. ஹைட்ரஜன், கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன், பாஸ்பரஸ் ஆகியவற்றின் அணு எண்கள்.
3. நம் DNAவின் நியூக்ளியோடைட்ஸில் உள்ள சர்க்கரை மற்றும் பேஸ்களின் சூத்திரங்கள்.
4. நம் DNAவில் இருக்கும் நியூக்ளியோடைட்ஸ்களின் எண்ணிக்கை மற்றும் DNA அமைப்பு.
5. மனிதனின் சராசரி உயரம், உருவம், மற்றும் பூமியில் மனிதர்களின் எண்ணிக்கை.
6. நம் சூரியக் குடும்பத்தின் அமைப்பு, அதில் பூமியின் நிலை.
7. இந்தத் தகவலை அனுப்பும் Arecibo Radio Telescope’’ன் வடிவம், மற்றும் விட்டம்.
இந்தத் தகவல்கள் இலக்கைச் சென்றடைய 25 ஆண்டுகள் ஆகும் எனக் கணிக்கப்பட்டது.
இதற்கானப் பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். 2000ஆம் ஆண்டு வரை எந்த பதிலும் வரவில்லை. அப்படியானால் 2001ல்? இதற்கான பதில் 19 ஆகஸ்ட் 2001ல் இங்கிலாந்தில் கிடைத்தது. அதனைப் பின்னர் வரும் பகுதியில் பார்ப்போம்.
1972ல் நாசா Pioneer Plaque என்ற விண்கலத்தை உருவாக்கியது. மனிதனால் உருவாக்கப்பட்டு சூரியக் குடும்பத்தை விட்டு வெளியே அனுப்பப்பட்ட முதல் விண்கலம் இதுதான். அப்போது Cornell Universityயில் பேராசிரியராகப் பணியாற்றிய Carl Sagan என்பவரை நாசா அணுகி வேற்றுக்கிரகவாசிகளுக்கு ஒரு தகவலை வடிவமைத்து தருமாறு கேட்டுக்கொண்டது. நாசாவின் வேண்டுகோளுக்கு இணங்கி Carl Sagan மனித இனத்தின் சார்பாக தங்கத் தகட்டில் வேற்றுக்கிரகவாசிகளுக்கு ஒரு தகவலை வடிவமைத்தார். அந்தச் செய்தியாவது ஆண் மற்றும் பெண்ணின் நிர்வாணப் படம். நம் சூரியக் குடும்பம் அமைந்திருக்கும் இடம், அதில் நம் பூமியின் நிலை ஆகியவையாகும்.
அந்தத் தட்டையும் Pioneer Plaque விண்கலத்துடன் இணைத்து அனுப்பினர்கள்
நாசா அதனைத் தொடர்ந்து 1977ல் அடுத்த விண்கலமான Voyager Spacecraft யை சூரியக் குடும்பத்திற்கு வெளியே அனுப்பியது. இதில் வேற்றுக்கிரகவாசிகளுக்கு தகவல் அனுப்ப Carl Saganக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்தது. இந்த முறை அவர் அனுப்பியது தங்கத்தால் செய்யபட்ட பதிவுத் தட்டு (Voyager Golden Record). விண்கற்களால் மோதிச் சிதைவடையாமல் இருந்தால் குறைந்தது 100கோடி வருடங்களாவது இந்தத் தங்கத் தட்டு விண்வெளியில் உலாவரும்.
அந்தத் தங்கப் பதிவுத் தட்டில் பல்வேறு ஒலிகள் பதிவு செய்யப்பட்டன. உதாரணமாக குழந்தை அழும் சத்தம், காற்றடிக்கும் சத்தம், கடல் அலைகளின் சத்தம், மழை பெய்யும் சத்தம், யானை, சிங்கம், புலி போன்ற விலங்குகள் எழுப்பும் சத்தம், உலகில் பல இடங்களிலில் இருந்து சேகரிக்கப்பட்ட பாடல்கள், மனிதனால் கட்டப்பட்ட வியக்கவைக்கும் கட்டிடங்களின் புகைப்படங்கள், 55 மொழிகளில் வாழ்த்து செய்திகளும் பதிவுசெய்யப்பட்டது. அந்த 55 மொழிகளில் பண்டைய மொழியான சுமேரியர்களின் மொழியும் ஒன்று.
நம் இந்தியா மொழிகளில் இருந்து 7 மொழிகளைப் பதிவுசெய்துள்ளார்கள். அவைகள் தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, கன்னடம், ராஜஸ்தானி. என்ன தேடுறிங்க? தமிழை காணவில்லையே என்றா? தமிழின் தொன்மையும், பெருமையும் தமிழனுக்கே இன்னும் சரியாக தெரியவில்லை. இதில் அன்னியருக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று நாம் நினைப்பதில் நியாயம் இல்லையே. ஆனாலும் தமிழின் மீது காதல் கொண்டவர்களுக்கு இதைப் படிக்கும் போது மனம் கனத்துபோவதை தவிர்க்க இயலாது.
இந்த தங்கப் பதிவுத் தட்டின் மேல் மூடியாக இன்னும் ஒரு தங்கத் தட்டு பொருத்தப்பட்டது. அதில் நம் சூரியக் குடும்பத்தின் அமைப்பும், அந்தத் தங்கப் பதிவுத்தட்டை எப்படி இயக்க வேண்டும் என்ற செய்முறை விளக்கமும் இதில் வரையப்பட்டிருந்தது
ஒருவேளை இந்தத் தங்கப் பதிவுத் தட்டு வேற்றுக்கிரகவாசிகளிடம் கிடைத்தால்கூட அவர்கள் நம்மைப் போன்றோ (அ) நம்மை விட அறிவில் மேம்பட்ட உயிரினமாக இருந்தால் தான் இதனை இயக்கி இதில் இருக்கும் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அதுவே ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களைப் போன்றவர்களிடம் கிடைத்தால் ஒன்று கடவுள் கொடுத்ததாக நினைத்துப் பூஜைகள் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இல்லை நம்மை போன்றவர்களிடம் புரியாத ஒன்று கிடைத்தால் அருங்காட்சியகத்தில் வைத்துவிடுவோமே அப்படி செய்துவிடுவார்கள்.
இதுவரைப் பார்த்தது நம்மை ஒத்த அறிவுகொண்ட வேற்றுக்கிரகவாசிகள் மற்றும் அதை விட குறைவான அறிவாற்றல் கொண்ட வேற்றுக்கிரக உயிரினங்களைத் தேடும் முயற்சி தொடரும்........


கடவுள் (எ) வேற்று கிரக வாசிகள் பாகம்-12
இதுவரை நம்மை ஒத்த அறிவுகொண்ட வேற்றுக்கிரகவாசிகள் மற்றும் அதை விட குறைவான அறிவாற்றல் கொண்ட வேற்றுக்கிரக உயிரினங்களைத் தேடும் முயற்சி பார்த்தோம். இதே போன்று நம்மைவிட அறிவில் மேம்பட்ட வேற்றுக்கிரகவாசிகளை தேடும் முயற்சி நடக்கிறதா? என்று கேட்டால்.அதற்கான அவசியம் இல்லை என்றே கூறலாம். நாமே இந்த அளவு செயல்படும் போது வேற்றுக்கிரகவாசிகள் நம்மைவிட அறிவில் மேம்பட்டிருந்தால் அவர்களின் செயல்பாடு நம்மைவிட பலமடங்கு அதிகமாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால் இன்று நாம் செய்யும் மேற்படி தேடுதல் வேலைகளை அவர்கள் என்றோ செய்திருப்பார்கள் (பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே). ஒருவேளை அப்படி அவர்கள் தேடி கண்டுபிடித்த கிரகம்தான் பூமியாகவும் இருக்குமோ?!
வேற்றுக்கிரகவாசிகள் நம்மைவிட அறிவில் மேம்பட்டிருக்க ஏதேனும் சாத்தியம் உண்டா? என்று கேட்டால். ‘100% சாத்தியம் உண்டு’ அடித்து கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். அதற்கு அவர்கள் முன்வைக்கும் துடுப்பு பரிமாணங்கள் (Dimensions). ஒருவேளை வேற்றுக்கிரகவாசிகள் நமக்கு அடுத்தடுத்த பரிமாணங்களில் வாழ்வார்களேயானால், அவர்கள் நம்மைவிட பலமடங்கு அறிவில் மேம்பட்ட உயிரினமான இருப்பார்கள். நாம் இப்போது மூன்றாவது பரிமாணத்தில் உள்ளோம்... அதாவது நீளம், அகலம் மற்றும் உயர்த்தை காணக்கூடிய 3 - dimensional view ஆகும்... இந்த மூன்றையும் நம்மால் உணரமுடியும் அதில் பயணம் செய்யவும் முடியும்.
நான்காவது பரிமாணம் என்னவாக இருக்கும் என்றக் கேள்வி உங்களுக்குள் எழத் தொடங்கினால் நீங்கள் தொடரின் வேகத்திற்கு இணையாக இருக்குறீர்கள் என்று உங்களையே தட்டிக்கொடுத்துகொள்ளாம். உலகின் பல மூத்த விஞ்ஞானிகளும், இயற்பியலாளர்களும் ‘காலம்’தான் நான்காவது பரிமாணம் என்று நம்புகிறார்கள். நீளத்தில், அகலத்தில், உயரத்தில் எப்படி இருபுள்ளிகளைக் குறித்துக்கொண்டு அதில் பயணம் செய்கிறோமோ, அதே போல காலத்திலும் இருவேறு புள்ளிகளை குறித்துக்கொண்டு அதற்கிடையே பயணம் செய்ய வேண்டும். இதனைக் ‘காலப்பயணம்’ என்பார்கள்.
அதாவது நாம் எதிர்காலத்திற்கோ, இறந்தகாலத்திற்கோ சென்று திரும்புவது. இது சாத்தியமா? என்ற கேள்வி இங்கே வலுக்கும். அதனை தகர்த்தெறிகிறது ஆல்பர்ட் ஐன்ஸ்டினின் இயற்பியல் கோட்பாடு.ஐன்ஸ்டின் கூற்றுப்படி ‘எந்த ஒரு பொருள் ஒளியின் வேகத்தில் பயணம் செய்கிறதோ அந்த பொருள் எதிர்காலத்திற்குச் செல்லும்’. அப்படியென்றால் மணிக்கு 108 கோடி கி.மீட்டர் வேகத்தில் பயணிக்கவேண்டும்.
நம்மிடம் இருக்கும் இன்றைய தொழில்நுட்பத்தை கொண்டு இது சாத்தியமல்ல. ஆனால் வருங்காலத்தில் சாத்தியமாகலாம். ஒரு பேச்சுக்கு வேற்றுக்கிரகவாசிகள் நான்காவது, ஐந்தாவது, அல்லது அதற்கு அடுத்த பரிமாணங்களில் வாழ்பவர்களாக இருந்தால் அவர்களில் அறிவுத்திறமையும் தொழில்நுட்பத்தையும் நினைத்துப்பாருங்களேன். இப்பொழுதும் உங்கள் மனம் ஒத்துக்கொள்ளாவில்லையென்றால் இன்னும் ஒரு சிறு விளக்கம்.
இந்த பூமி தோன்றி 460 கோடி வருடங்கள் ஆகிறது, 200 கோடி வருடங்களுக்கு முன்பு நம் பூமியில் ஒரு செல் உயிரிகள் தோன்றின. 54.2 கோடி வருடங்களுக்கு முன்புதான் ஜெல்லி மீன்கள், புழுக்கள் போன்றவை உருவாகின. 36 கோடி வருடங்களுக்கு முன்புதான் நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் தோன்றின. 25 கோடி வருடங்களுக்கு முன்பு டைனோசர் இனம் தோன்றி 6.5 கோடி வருடங்களுக்கு முன்பு அடியோடு அழிந்தது. 30 இலட்சம் வருடங்களுக்கு முன்பு குரங்காக இருந்த மனிதன் 10 இலட்சம் வருடங்களுக்கு முன்பு மனிதக் குரங்காக நடமாடினான். சுமார் 80 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு குகைகளில் காட்டுவாசியாக வாழத் தொடங்கி இன்று கம்பியூட்டர் பயன்படுத்துவது வரை இடையில் நடைபெற்ற மாற்றங்கள் அனைத்தும் அனைவரும் அறிந்ததே. இருப்பினும் நமது சமீபத்திய அதாவது கடைசி 100 ஆண்டுகளின் வளர்ச்சி பிரமிப்புக்குரியது. இந்த வளர்ச்சி இத்துடன் நின்றுவிடப்போவதல்ல. 6.5 கோடி வருடங்களுக்கு முன்பு டைனோசரின் ஆதிக்கத்தில் இருந்த இதே உலகம்தான் இன்று மனிதர்களின் கையில் சிக்கி சின்னாபின்னமாகிவருகிறது. மனிதர்களுக்கு அடுத்து பரிணாம வளர்ச்சி உயிரினம் உண்டு. அதனையாரும் மறுக்கமுடியாது. சில கோடி வருடங்களுக்கு பிறகு இந்த பூமி அவைகளின் கைகளுக்கு மாறும் அதனையும் யாரும் தடுக்கமுடியாது. இவை பூமியில் உயிரினங்களுக்கு நடந்த, நடக்கயிருக்கிற மாற்றங்கள்.
460 கோடி வருடங்களுக்கு முன்பு தோன்றிய பூமியில் இன்று மனிதன் என்ற ஒரு இனம் சாத்தியம் என்றால். பெருவெடிப்பினால் இந்த பிரபஞ்சம் தோன்றி 1500 கோடி வருடங்களாகிறது. கற்பனையாக 700 கோடி வருடங்களுக்கு முன்பு பூமியைப் போல் ஒரு கிரகம் உருவானதாக வைத்துக்கொள்வோம். அதில் நம்மை ஒத்த ஓர் உயிரினம் 250 கோடி வருடங்களுக்கு முன்பே தோன்றியிருக்கவேண்டும். அப்படியானால் அவர்களின் இன்றைய அறிவியல் வளர்ச்சி எப்படி இருக்கும்?
மனித இனத்தின் அடுத்த 2000 வருடங்களின் வளர்ச்சியைக் கூட நம்மால் கற்பனை செய்ய முடியவில்லை இதில் கோடிகள் எங்கே? இப்படிக் கற்பனை செய்ய முடியாத அறிவும் ஆற்றலும் கொண்ட வேற்றுக்கிரக உயிரினம் சில ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பூமிக்கு வந்து மனிதர்களை சந்தித்திருந்தால் என்ன நேர்ந்திருக்கும்? தொடரும்....
No photo description available.No photo description available.
No photo description available.

கடவுள் (எ) வேற்று கிரகவாசிகள்.... பாகம்- 13
முன்றைய பகுதியில் கூறியிருந்தேன், 200 கோடி வருடங்களுக்கு முன்பு நம் பூமியில் ஓர் செல் உயிரி தோன்றியதாக கூறியிருந்தேன் அல்லவா. அப்படித்தான் இன்றுவரை இந்த உலகம் நம்பிவருகிறது.
ஆனால் நாமே இந்த பூமிக்கு வேற்றுக்கிரகவாசிகள்தான் என்று பெரிய குண்டை தூக்கிப்போடும் விஞ்ஞானிகளும் இருக்கிறார்கள், அவர்கள் கூறுவது இதுதான் "முதலில் தோன்றியதாக கூறப்படும் அந்த ஒரு செல் உயிரி இந்தப் பூமியை சேர்ந்தது அல்ல" அவர்கள் அப்படிக் கூற நிறையக் காரணங்கள் உண்டு.
சூரிய குடும்பத்தை பொருத்தவரை பூமியில் உயிரினம் தோன்றுவதற்கு முன்பே செவ்வாயில் உயிரினங்கள் செழிப்பாக வாழ்ந்திருக்கின்றன. கிட்டத்தட்ட 360 கோடி வருடங்களுக்கு முன்பு செவ்வாய் கிரகம் இன்றைய பூமியைப் போல உயிரினங்கள் வாழ எல்லாத் தகுதியுடன் மிகவும் செழிப்பாக இருந்துள்ளது, உயிரினங்களும் வாழ்ந்துள்ளன. அதன்பின் பெரிய விண்கல் ஒன்று செவ்வாய் கிரகத்தை மோதியிருக்கிறது அதனால் அங்கு வாழ்ந்த மொத்த உயிரினங்களும் அழிந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. அந்த விண்கல் மோதிய சுவடு இன்றும் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? அந்தப் படத்தை பார்த்தால் தெரியும்.
அந்த மோதலினால் சிதறிய விண்கற்களில் 7.5 சதவிகிதம் பூமியைத்தான் வந்தடைந்தனவாம். அப்படி வந்து சேர எடுத்துக்கொண்ட காலம் 100 முதல் 16,000 வருடங்களாம். அதனால் என்ன? என்று கேட்கிறீர்களா?
உங்களுக்கு பேன்ஸ்பெர்மிய கோட்பாட்டை (Penspermia Theory) பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
பேன்ஸ்பெர்மிய என்பது கிரேக்க வார்த்தை அதன் பொருள் "Seeds Everywhere" என்பதாகும். விண்வெளியில் ஒழுங்கின்றி சுற்றித்திரியும் விண்கற்களில் நுண்ணுயிரிக்கள் புதைந்திருக்கின்றன, அந்த விண்கற்கள் நுண்ணுயிரிகளை சுமந்து செல்லும் கேப்சூல் போல செயல்படுகிறது. பறந்து விரிந்துகிடக்கும் இந்தப் பிரபஞ்சத்தில் வெவ்வேறு கிரகங்களுக்கு உயிரினங்களை அனுப்ப இது ஒரு சிறந்த வழி என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
அப்படியான நுண்ணுயிரிகள் செயற்கையாக அதனுள் செலுத்தப்பட்டதாகவும் இருக்கலாம். அதெப்படி செயற்கையாக செலுத்துவார்கள்?
சமீபத்தில் நடந்த நிகழ்வை நினைவுக்கூறவும். நாசா அனுப்பிய விண்கலம் பத்துவருட பயணத்திற்கு பிறகு விண்கல் ஒன்றில் வெற்றிகரமாக தரையிறங்கியது. மனித வரலாற்றில் பெரும் சாதனையாக பேசப்பட்ட நிகழ்வு இது. அந்த விண்கலம் அங்கு சில ஆய்வுகள் நடத்தப்போவதாக நாசா தெரிவித்தது ஆனால் பூமியில் வாழும் சில நுண்ணுயிரிகளை அதனுள் செலுத்தும் முயற்ச்சிதான் இது என்ற கூற்றும் நிலவிவருகிறது.
அமெரிக்க விஞ்ஞானிகள் 1984ல் அண்டார்டிக்காவில் இப்படியான ஒரு விண்கல்லைதான் கண்டெடுத்தார்கள். 1.95kg எடை கொண்ட அதன் பெயர் Allan Hills 84001 (ALH84001). இந்த விண்கல் செவ்வாயில் ஏற்பட்ட மோதலில் சிதறி பூமிக்கு வந்த கற்களில் ஒன்றாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஆகஸ்ட் 1996ல் நாசா விஞ்ஞானி David Mckay என்பவர் இதில் நானோபாக்டிரியாவின் எச்சம் இருப்பதை கண்டறிந்தார். அதன்பிறகுதான் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி பில்கிளிண்டன் செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லா விண்கலங்கள் அனுப்பும் திட்டத்திற்கு பெரும் தொகை ஒதுக்குவதாக அறிவித்தார். நமக்கு செவ்வாய் கிரகம் தான் தாய்வீடு என்று பல விஞ்ஞானிகள் தீர்க்கமாக நம்புகிறார்கள்.
இன்று நாசாவின் ஆளில்லா விண்கலம் செவ்வாயில் தேடிக்கொண்டிருப்பது தண்ணீரையும் தாதுப்பொருட்களையும் மட்டுமல்ல. அங்கு வாழ்ந்த உயிரினங்களின் எச்சங்களையும், ஆதரங்களையும் தான். அப்படியான நிறைய ஆதாரங்கள் நாசவுக்கு கிடைக்கப்பெற்றாலும் அதனை ரகசியமாக வைத்துள்ளனர்.
இப்படியாகவும் பூமிக்கு அந்த முதல் ஒரு செல் உயிரி வந்திருக்கலாம் அல்லவா?
இன்றும் பூமிக்கு வெளியிலிருந்து ‘டன்’ கணக்கில் ஒரு செல் உயிரிகள் வந்து கொண்டிருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா?...
தொடரும்..
No photo description available.Image may contain: one or more peopleImage may contain: food



கடவுள் எனும் வேற்றுக்கிரகவாசிகள்” - பகுதி 14

கெளரவர்களின் அரசன் சந்தனுக்கும் கங்கை என்ற தேவலோக(வேறு உலகம்) பெண்ணுக்கும் திருமணம் நடக்கிறது. அவர்களுக்கு குழந்தையும் பிறக்கிறது, முதலில் பிறக்கும் 7 குழந்தைகளை அந்த பெண் கொலை செய்துவிடுகிறாள் எட்டாவதாக பிறக்கும் குழந்தையை தானே வளர்த்து கணவனிடம் ஒப்படைப்பதாக கூறி தன்னுடன் எடுத்துக்கொண்டு செல்கிறாள். அனைத்துக் கலைகளையும் கற்பித்து, வளர்த்து, கணவனிடம் ஒப்படைக்கிறாள். என்று கதை வரும். அந்தப் பிள்ளைதான் சத்தியவரதன் (எ) பீஷ்மர். மகாபாரத யுத்தத்தில் இவருக்கு பெரும்பங்கு உண்டு. பீஷ்மரின் வீரம், கலைகள் என்று அனைத்தையும் விட ஆச்சர்யமான ஒன்று அவரின் வயது. மகாபாரதப் போரில் அவர் உயிர்விடும் போது கிட்டத்தட்ட 180 வயதுக்கும் மேல் இருக்கவேண்டும். அத்தனை வயதிலும் இவரின் போர்த்திறன் கண்ணனே பிரமிக்கு அளவுக்கு இருந்ததாம். இறுதியில் உடல்முழுவதும் அம்புகள் தைத்து விழுந்தாலும் அவர் உடலிலிருந்து உயிர்ப்பிரிய 43 நாட்கள் ஆனதாம். இதில் கவனிக்க வேண்டிய விசயம் பீஷ்மருக்கு முன் பிறந்த 7 குழந்தைகளும் கொலை செய்யப்பட்டுள்ளன, ஒரு பெண் தான் பெற்ற குழந்தையைதானே கொலைசெய்வாளா? அப்படி செய்வதானால் ஏதாவது அலுத்தமான காரணம் இருக்கவேண்டும். அது என்ன காரணமாக இருக்கும். ஒருவேளை அந்த குழந்தைகள் குறைபாடுடன் பிறந்திருக்கலாம், அதனால்தான் அவைகளை அழிக்கப்பட்டிருக்கலாம்.
மேலே குறிப்பிடப்பட்ட இருவருவரின் அன்னையும் இந்த உலகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. இருவருமே அசாத்திய திறமைகளும் சக்திகளும் கொண்டவர்கள். சகமனிதர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள்.
இவைகளை வெறும் கட்டுக்கதையாக எப்படி எடுத்துக்கொள்வது. கடலால் பிரிக்கப்பட்டு உலகில் வெவ்வேறு பகுதியில் வாழும் வெவ்வேறு மொழிபேசும், வெவ்வேறு இனமக்கள் எப்படி ஒரே போன்று வானிலிருந்து வந்த கடவுளுக்கும் மனித இனத்திற்கும் பிள்ளைகள் பிறந்தன, அவர்களால் பல மாற்றங்கள் நடந்தன என்று இத்தனைக் கச்சிதமாக கூறமுடிகிறது.
சரி வேற்றுக்கிரகவாசிகள்தான் அவர்கள் சந்ததிகளை இப்படியான வழிகளில் பூமியில் உருவாக்கினார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் இப்படி செய்ய காரணம் என்னவாக இருக்கும்?
ஒருவேளை இந்த சந்ததிகளைக்கொண்டு நிறைய தொழில்நுட்பங்களை மனித இனத்திற்கு கற்றுக்கொடுக்க நினைத்திருக்கலாம். மனித இனத்திற்கு ஆபத்தாக இருக்கும் மற்ற இனங்களை அழிக்க நினைத்திருக்கலாம். அவர்களுக்குத் தேவையான ஒரு இனமாக மனித இனத்தை மாற்ற முயன்றிருக்கலாம்.
ஏனென்றால் நம் கண்முன்னே விரிந்துகிடக்கும் ஆதாரங்களை வரிசையாக அடுக்கி பார்க்கும் போது நாம் மேலே கூறியது உறுதிசெய்யப்படுகிறது.
உதாரணமாக வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு இனமக்களால் வணங்கப்பட்ட கடவுள்கள் தோற்றத்தில் ஒரே போன்று இருப்பது எப்படி சாத்தியமாகிறது.
இந்துமதத்தின் கடவுள் ராமர் மற்றும் கிருஸ்ணர் பல பல சக்திகள் கொண்டு விளங்கினானும் மிக முக்கியமான ஒன்று அவர்களின் நிறம். மனிதர்களைப் போன்ற நிறத்தில் இல்லாமல் கருநீல நிறத்தில் இருந்ததாக குறிப்புகள் காணப்படுகின்றன. இந்து மதத்தின் இன்னொரு கடவுளான சிவபெருமானும் மனித நிறத்திலிருந்து வேறுபட்டு சாம்பல் நிறத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
அதே போல் ஜப்பானின் பண்டையக் கதைகளில் கடவுளின் மகனாக கருதப்படுபவர் கருநீலநிறத்தில் இருந்திருக்கிறார்.
எகிப்தின் வளர்ச்சிகளுக்கு மூலகாரணமானவர் ‘Osiris’. இவரை எகிப்தியர்கள் கடவுளின் மகனாக வழிபட்டார்கள். இவர் எகிப்தின் தான்தோன்றிக் கடவுளாக நம்பப்படும் ‘Atum’யின் சந்ததிகளில் ஒருவர். இவரும் மனிதர்கள் நிறத்திலிருந்து வேறுபட்டு நீலநிறமாக இருந்திருக்கிறார். அது மட்டுமல்ல இவரின் உருவ அமைப்பும் கிருஸ்துவர்கள் கடவுளின் மகனாக வணங்கும் ஏசுவின் உருவ அமைப்பும் ஒன்றுபோலவே இருக்கிறது.
ஒருவேளை இவர்களில் ஒருவர் ஒரு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டு பூமிக்கு அனுப்பி அந்த வேலை முடிந்ததும். அதே போன்று அடுத்தடுத்து மற்றவர்களையும் உருவாக்கி அடுத்தடுத்த நோக்கத்திற்காக அனுப்பியிருக்கலாம் அல்லவா?
இந்த இடத்தில் ஏசுவின் இறப்பைப் பற்றி கூறியாக வேண்டும். ஏசு தான்உயிரிழந்த மூன்றாம் நாள் மீண்டும் உயிர்தரித்து மேல் உலகத்திற்குச் (வேறு உலகத்திற்கு) செல்வதாக இறக்கும் முன்பே கூறியிருக்கிறார். அதே போல நடந்ததாகவும் கூறப்படுகிறது. ஏசுவிற்கு இப்படியான கட்டளையிட்டு, அவர் இறந்த பின் உயிர்பித்து தன் உலகிற்கு அழைத்துக்கொண்ட அந்த கடவுள் (அறிவில் மேம்பட்ட உயிரினம்) யார்? அவர்களின் உலகம் (கிரகம்) எது? மகாபாரதத்திலும் இறந்தபின் உயிர்பிழைக்க வைக்க மந்திரம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உயிர் பிரிந்த உடல்களுக்குள் மீண்டும் உயிரைப் புகுத்துவது சம்பந்தமாக நிறைய ஆய்வுகள் உலகில் நீண்ட காலங்களாக நடந்துவருகிறது, இன்று இல்லாவிட்டாலும் ஒரு நாள் மனிதர்களால் அது சாத்தியமாகும். அப்படியானால் நடந்தது மாயமோ மந்திரமோ அல்ல, நமக்குத் தெரியாத தொழில்நுட்பம் அவ்வளவுதான். எகிப்த்தில் இருக்கும் பிரமிட் இந்த தொழிநுட்பமாகக்கூட இருக்கலாம். (பூமியில் இருக்கும் உயிரை வேறு உலகிற்கு எடுத்து செல்லும் தொழில்நுட்பம்.)
உலகின் பழமையான மதங்களில் ஒன்றான யூத மதத்தைத் தோற்றுவித்த மோசஸ்(Moses) அவர்களுக்கு நேரடியாக கடவுளிடமிருந்து கட்டளை கிடைத்ததாம். அதுவும் ஒன்று இரண்டல்ல பத்துக் கட்டளைகள். அவைகள் அனைத்தும் தங்கத் தகட்டில் எழுதப்பட்டிருந்தனவாம். ஒரு பெரிய மலையின் உச்சியிலிருந்து அந்தக் கட்டளைகளை மோசஸ் பெற்றாராம். அந்த சமயம் புயலைப்போன்று பலமான காற்றுவீசியதாம், மேகங்களுக்கு நடுவே பிரகாசமான ஒளிகளுக்குள்ளிருந்து கடவுள் அந்த கட்டளைகளை வழங்கினாராம். அது ஒரு விண்கலமாகவோ, பறக்கும் தட்டாகவோ கூட இருக்கலாம்.
அந்த கட்டளைகள் இவைதான்
1. உங்களுக்கு என்னைத் தவிர வேறு கடவுள் கிடையாது.
2. நீங்களாகவே சிலை செய்து வழிபடக் கூடாது.
3. உங்கள் கடவுளின் பெயரை தவறாகப் பயன்படுத்தகூடாது.
4. இறுதி நாள் ஒன்று இருப்பதை நினைவில் கொண்டு புனிதமாக வாழவேண்டும்.
5. உங்கள் தாய் தந்தையரை மதிக்க வேண்டும்.
6. கொலை செய்யாதீர்கள்.
7. விபச்சாரம் செய்யாதீர்கள்.
8. களவு செய்யாதீர்கள்.
9. அடுத்தவர்களுக்கு விரோதமாக பொய் சொல்லாதீர்கள்.
10. பிறர் மனைவியை அடைய விரும்பாதீர்கள்.
ஒரு மனிதன் தான் வாழ்நாளில் இதில் எதையாவது ஒன்றை சரியாக பின்பற்றுகிறானா? என்றால் இல்லை என்றுதான் பதில் வரும். அதை விடுவோம், அது ஏன் கடவுள் என்றவுடன் அனைவரும் வானத்தை நோக்கி பார்க்க வேண்டும். கடவுள் தூணிலும் துரும்பிலும் இருப்பார் என்றால் தரையை பார்க்கலாமே அல்லது வலதுபக்கம் இடதுபக்கம் பார்க்கலாமே. அதைவிடுத்து அனைவருமே மேலே பார்க்க காரணம் என்ன? அனைத்து மதங்களும் புராணக்கதைகளும் கடவுள் வானத்திலிருந்துதான் வந்தார் என்கிறது. கடவுள் வானத்திலிருந்து வந்தாரா? அல்லது வானத்திலிருந்து வந்த அனைவரையும் கடவுள் ஆக்கிவிட்டோமா?
மோசஸிடம் மட்டும் அல்ல இன்னும் சிலரிடம் கடவுள் என்னும் வேற்றுக்கிரகவாசிகள் கட்டளைகளை வழங்கியுள்ளன. அவைகள்....
தொடரும்...

கடவுள் எனும் வேற்றுக்கிரகவாசிகள்” - பகுதி 16

எகிப்த் கிரேட் பிரமிட்’டை பற்றி எத்தனை முறை படித்தாலும் அதன்மேல் இருக்கும் ஆர்வம் கொஞ்சமும் குறைவதில்லை. அதனை பற்றி முழுவதும் எழுத ஒரு புத்தகம் போதாது. நமக்குக் தேவை அதிலிருந்து சிறு துணுக்குகள்தான்.
இந்த கிரேட் பிரமிட் கிட்டத்தட்ட 4500 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. எதற்காக கட்டப்பட்டது என்பது இன்றுவரை கேள்விக்குறியே.
இதற்கு 2 - 30 டன்கள் எடை கொண்ட 23 லட்சம் பாறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் சில 50 டன்கள் வரை எடை கொண்டது.
இந்த பிரமிடின் உள்ளே நிலவும் வெப்பநிலை (200C) பூமியின் சராசரி வெப்பநிலைக்கு சமம்.
பிரமிடுக்கு மேல் கூறையாக 15 டன்கள் எடை கொண்ட ஒரு லெட்சத்து நாற்பதாயிரம் Casing Stone’களை கண்ணாடிபோல வளவளப்பாக தேய்த்து அடுக்கியிருக்கிறார்கள். சூரிய ஒளி இதன்மீதுபட்டு மிகவும் பிரகாசமாக எதிரொலித்திருக்கிறது. இதனை பூமியில் இன்னொரு சூரியன் என்று கூறும் அளவுக்கு பிரகாசமாக இருந்திருக்கிறது. எகிப்தியர்கள் இதனை ‘Ikhet’ என்று அழைத்துள்ளார்கள் அதற்கு ‘பிரமாண்ட ஒளி’ என்று பொருள்.
பிரமிடின் நான்குமூளைகளும் நிலநடுக்கம் மற்றும் பிற காலநிலை மாற்றங்களால் பாதிக்காதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாறைகளுக்கு இடையே ஒட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட பசை அந்த பாறைகளைவிட வலுவானது. அதனால்தான் இன்றுவரை எந்த ஒரு இயற்கை சீற்றத்தாலும் பிரமிடை அசைக்கமுடியாவில்லை. அதில் இருக்கும் வேதிப்பொருள்கள் கண்டறியப்பட்டுவிட்டன. ஆனால் அந்த கலவைகளை எப்படி உருவாக்குவது என இன்றளவும் கண்டறிமுடியவில்லை.
பூமியின் Center Of Mass இரண்டு இடங்களில் காணப்படுகிறது. ஒன்று கடலுக்கு அடியில் இருக்கிறது, மற்றொன்றின் மீதுதான் கிரேட் பிரமிட் கட்டப்பட்டுள்ளது.
கிரேட் பிரமிட்’ன் நான்கு பக்கங்களும் சிறிது உள்ளே வளைந்து காணப்படுகிறது. இதனைச் சாதரணமாக பார்க்கமுடியாது. உயரத்திலிருந்து குறிப்பிட்ட அளவு வெளிச்சத்தில் பார்க்கும்போதுதான் இந்த அமைப்பு தெரியும்.
பிரமிடில் உள்ள கற்கதவுகளில் சில 20 டன் வரை எடை கொண்டது. ஆனால் இதனை திறக்க நாம் சிறிய அளவு சக்தியைப் பயன்படுத்தினால் போதும், அவ்வளவு நுட்பமான அமைக்கப்பட்டுள்ளது.
பிரமிடின் இரண்டு வழிகளில் ஒன்று Alpha Draconis’யை பார்க்கிறது. தெற்கில் இருக்கும் மற்றொன்றான King Champer’னின் வழி Alnitak நட்சத்திரத்தை நோக்கிப் பார்க்கிறது. இந்த நட்சத்திரம் எகிப்தின் கடவுளான Osiris என்று கூறப்படுகிறது. இது தற்போதைய Orion நட்சத்திரத்தில் ஒன்று. இந்த அமைப்புகள் பிரமிட் கட்டப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது.
கிரேட் பிரமிட் கட்டப்பட்ட நாளிலிருந்து 3800 வருடங்கள் வரை இதுதான் உலகின் உயரமான கட்டிடமாக இருந்துள்ளது.
பிரமிடின் அமைப்பு Orion நட்சத்திர அமைப்புடன் கச்சிதமாக பொருந்துகிறது.
இதனை Christopher Dunn என்பவர் ஆய்வு செய்து அறிக்கையை ஒன்றை வெளியிட்டார். அதில்
‘பிரமிட் வழிபாட்டு தளமோ, பிணங்களை அடுக்கிவைக்கும் கல்லறையோ அல்ல. அது நம்மால் கண்டறியப்படாத தொழில்நுட்பக்குவியல். அது நம்மால் உருவாக்க முடியாத இயந்திரம். Tectonic அதிர்வுகளை மின்சாரமாக மாற்றும் இயந்திரமாகக்கூட இருக்கலாம். இன்றைய தொழில்நுட்பவல்லுநர்கள் இந்த இயந்திரத்தை மீண்டும் உருவாக்க நினைத்தால் இதில் இருக்கும் தொழில்நுட்பத்தை முழுவதுமாக அறிந்துகொள்ளவேண்டும். அதன்பின் இதற்கு பயன்படுத்திய கருவிகளை உருவாக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
அவர்கூறியது முற்றிலும் உண்மை, எகிப்த் கிரேட் பிரமிட்’ஐ இறந்த உடல்களை பதப்படுத்த உருவாக்கிய கட்டிடம் என்று இன்னும் நாம் நம்பிக்கொண்டிருப்பதும் அடுத்த தலைமுறையை அதே கண்னோட்டத்தோடு சிந்திக்க தூண்டுவதும் மிகப்பெரிய முட்டாள்தனம். அது ஒரு இராட்சச இயந்திரம், அதன் தொழில்நுட்பத்தை நாம் இன்னும் அடையவில்லை. Christopher Dunn கூறியதுபோல மின்சாரம் உருவாக்கும் கருவியாகதான் இருக்கவேண்டும் என்பதல்ல. Teleportation கருவியாக கூட இருக்கலாம். ஆம், நம் புகைப்படங்களை எப்படி 01 என்ற பைனரி கோடாக மாற்றி e.Mail அனுப்புகிறோமோ அதே போல் உயிருள்ள மனிதர்களையும் கோடாக மாற்றி வேறு இடத்திற்கு அனுப்பும் டெலிப்பொடெசன் கருவியாகவும் இருக்கலாம். காலப்பயணத்திற்கு பயன்படும் இயந்திரமாகவும் இருக்களாம். எகித்தியர்களின் கூற்றுப்படி அவர்களின் அரசர் (நட்சத்திர கடவுளின் மகன்) இறந்த பின்னும் உயிர் திரும்புவார் என்றும், வேறு உலகத்தில் உயிர்வாழ்வார் என்றும் நம்பியிருக்கிறார்கள் (இந்த இடத்தில் ஏசுவின் இறப்பை நினைவில் கொள்ளவும்). அதற்கு இந்த பிரமிட் பயன்பட்டதாகவும் கூறப்படுகிறது. (ஏசு உயிர் திரும்பியது ஒரு குகையில்) ஒரு பாலைவனத்தில் செயற்கையாக குகையை உருவாக்கியிருப்பார்களோ? இவர்கள் உயிர் திரும்பும் போது ஏற்படும் வெப்பம் அல்லது ஒளி பிளம்பை தாங்கும் சக்தி பாறைக்குதான் உண்டோ என்னவோ?
அது எதுவாக இருந்தாலும் அதன் தொழில்நுட்பத்தை மனித இனம் இன்னும் நெருங்கவில்லை. அப்படி இருக்க அதனை 4500 வருடங்களுக்கு முன்பு அவர்களால் எப்படி கட்ட முடிந்தது? அதனை அறிவில் மேம்பட்ட வேற்றுக்கிரகவாசிகளின் துணையின்றி மனிதன் தானாக செய்திருக்க வாய்பேயில்லை.
பாறைகளை துண்டாடுவதற்கு, துளையிடுவதற்கு, அதனைத் தூக்கிச் செல்வதற்கு, அடுக்குவதற்கு, என்று அவர்கள் எதனைப் பயன்படுத்தியிருப்பார்கள் என்பது இன்றுவரை கண்டறியப்படாத மர்மகவே இருந்துவருகிறது.
பாறைகளை மிகவும் கச்சிதமாக இன்று நாம் இயந்திரங்களைக் கொண்டு அறுப்பதைப்போல அறுத்துள்ளார்கள். எதனைப் பயன்படுத்தி இப்படி செய்தார்கள்?
இவைகள் மட்டுமல்ல இதே போன்று கடவுள்கள்(?) துணையுடன் கட்டப்பட்ட கட்டிடங்கள் இந்த உலகில் ஏறாளம்…..
Image may contain: 1 person




கடவுள் எனும் வேற்றுக்கிரகவாசிகள்” - பகுதி 18
என்ன 1500 வருடங்களுக்கு முன்பு விமான ஓடுதளமா? என்று ஆச்சர்யமாக இருக்கிறதா?
அருகில் இருக்கும் படத்தைப் பார்த்தால் உங்களுக்கே புரியும். அந்த பெரிய மலைச் சிகரங்கள் அழகாக தட்டி, தட்டையாக்கி விமானம் தரையிறங்கத் தேவையான நீளம், அகலம் என்று மிகத் தெளிவாக ஒரு விமான ஓடுதளத்தையே உருவாக்கியிருக்கிறார்கள்.
இது தானாக உருவானதல்ல என்று புவியியல் ஆய்வாளர்கள் உறுதியாக கூறுகிறார்கள். அப்படியானால் யார் இதனைச் செய்திருப்பார்கள்? இங்கே வாழ்ந்த பண்டைய மக்களா? எதற்காக செய்தார்கள்? அவர்கள் கடவுள் (வேற்றுக்கிரகவாசிகள்) இங்கே தரையிரங்கியிருப்பாரோ? ஒருவேளை அவர்கள்தான் இந்த விமான ஓடுதளத்தை நிறுவியிருப்பார்களோ? அப்படியானால் உலகின் பழமையான விமான ஓடுதளம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.
அப்படியானால் விமானம் கண்டுபிடிப்பை பற்றிய நமது வரலாறு மாற்றியமைக்கப்படவேண்டும். ஏனெனில் விமான ஓடுதளம் விமானத்திற்காகத்தானே உருவாக்கப்பட்டிருக்கவேண்டும்.
பண்டைய காலத்திலேயே விமானங்கள் பற்றியச் செய்திகளை நம் முன்னோர்கள் விட்டுச் சென்றுள்ளார்கள் என்பதை இங்கே தெரியப்படுத்த விரும்புகிறேன். தென் அமெரிக்காவில் 2” நீளம் கொண்ட தங்கத்தால் ஆன சிலப் பொருட்களை ஆய்வாளர்கள் கண்டறிந்தார்கள். இதன் சரியான காலத்தைக் கணிக்க முடியாவிட்டாலும் குறைந்தது 1000 வருடங்களுக்கு மேல் பழமையானது என்பது மட்டும் உறுதி. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அவைகளில் சில பார்ப்பதற்கு இன்றைய நவீன விமானங்களின் உருவத்துடன் ஒத்துப்போகிறது. விமான தொழில்நுட்பவியலாளர்கள் 1997ல் இதன் அளவுகளை அப்படியே பெரிதாக்கி செயல்பாடுகளை ஆராய்ந்தார்கள். எஞ்சின் மற்றும் ஏனைய அத்தியாவசியப்பொருட்கள் இணைத்தல் இது விமானத்திற்கான சரியான வடிவம்தான் என்று கூறினார்கள். சில மறுப்பாளர்கள் இது விமானத்தின் வடிவம் அல்ல, பறவை அல்லது மீனின் வடிவம் என்று கூறிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இதனை ஏற்க மறுப்பவர்களும் வாயடைத்துபோகும் ஆதாரம் தான் எகிப்தில் கிடைத்தது.
எகிப்தில் உள்ள ஒரு கோவில் சுவரில் இருக்கும் கல்வெட்டில் ஹெலிகாப்டர், போர்விமானம், உளவுவிமானம், நீர்முழுகிக் கப்பல், பறக்கும் தட்டு என்று பார்ப்பவர்களுக்கு ஒரு நிமிடம் தலையே சுற்றிவிடும் அளவில் தெளிவாக செதுக்கியிருக்கிறார்கள்.
அவர்களுக்கு எப்படி விமானங்கள் பற்றிய அறிவு கிடைத்திருக்கும்? என்று யோசிப்பவர்களுக்கு இங்கே ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன். ராமாயணகாலத்திலேயே (கிட்டத்தட்ட 17,000 வருடங்களுக்கு முன்பு) விமானங்கள் பயன்படுத்தப்பட்டன என்று ராமாயணத்தில் பார்த்தோம். அன்றைய இலங்கையை ஆண்ட இராவணன் என்ற தமிழ் மன்னன் மிகுந்த அறிவாற்றல் கொண்டவர், இலங்கையிலிருந்து இந்தியா வருவதற்கோ, சீதையுடன் இலங்கைக்கு திரும்பிசெல்வதற்கோ இராவணன் எந்த சிரமமும் படவில்லை. ஆகாய மார்க்கமாக வந்து சென்றுள்ளார். அதற்காக அவர் பயன்படுத்திய விமானத்தை நினைக்கும் இடத்தில் தரையிறக்க முடியும், எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் செங்குத்தாக மேலே ஏறி பறக்க செய்ய முடியும். உண்மையில் அந்தவகைத் தொழில்நுட்பம் இன்றுவரை நம்மால் கண்டறியப்படாத ஒன்று. அப்படியானால் இராவணன் எவ்வளவு பெரிய அறிவியலாளராக இருந்திருக்க வேண்டும்? அந்தத் தகவலை ஏன் வரலாறு ஏந்திவரவில்லை? எந்த இங்கேதான் நம் மக்கள் கோட்டைவிட்டனர், இராவணனுக்கு பத்துத்தலை என்பதை எண்களின் அடிப்படையில் பக்கவாட்டில் பத்துதலைகளை அடுக்கி பார்த்து இராவணனை அரக்கனாக்கிவிட்டோம். உண்மையில் அந்த உவமைக்கு அதுதான் அர்த்தமா?
உதாரணமாக அதிகம் பேசும் ஒருபெண்ணை “இவளுக்கு வாய்நீளம்” என்பார்கள், உண்மையில் அந்தப் பெண்ணின் வாய் நீளமாக இருக்காது அவள் அதிகம் பேசுகிறாள் என்பதையே குறிக்கவே அப்படி ஒரு உவமைச் சொல். அதேபோல பத்துத்தலை என்பது பத்துபேரின் சிந்தனைத் திறனை கொண்டவன் அல்லது சாதாரண மனிதனை போல பத்துமடங்கு புத்திசாலி என்பதை குறிக்கலாமல்லவா? அப்படியானால் இராவணனால் இப்படி ஒரு விமானத்தை கண்டிப்பாக செய்திருக்க முடியும். இங்கே வரலாற்றில் பிழையில்லை நம் புரிதலில்தான் பிரச்சனை.
பண்டைய விமானம் பற்றிய செய்தியே பலருக்கு நம்பமுடியாமல் இருக்கும், அடுத்து நாம் பார்க்கப்போகும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விண்வெளிவீரர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும்.
அந்த படத்தில் காட்டப்பட்டுள்ள சிற்பங்கள் அனைத்தும் இன்று நேற்று செதுக்கப்பட்டதல்ல, மிகவும் பழமையானது.
நவீன அறிவியலுக்கும் இதற்கும் வெகுதூரம் அப்படி இருக்க இவ்வளவுகச்சிதமாக விண்வெளிவீரர் உருவத்தை எப்படி இவர்களால் உருவாக்கியிருக்கமுடியும். தலைக்கவசம், உடல்கவசம், முகத்தில் ஆக்ஸிஜன் மாஸ்க், பின்புறம் ஆக்சிஜன் சிலிண்டர் என்று மிக கச்சிதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்றைய விண்வெளிவீரர்களின் படத்துடன் ஒப்பிட்டு பார்க்கவும்.
மாயன் நாகரிக மக்களிடம் மனிதன் விண்வெளியில் பயணம் செய்வதற்கான தொழில்நுட்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களின் சிற்பக்கலையில் அதனைக் காணமுடிகிறது. ஒரு மனிதன் விண்வெளி ஓடத்தில் அமர்ந்திருப்பதைப் போல செதுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல இறக்கையுடன் கூடிய மனிதர்கள் என்று புராணக்கதைகளில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. கிருஸ்தவர்கள் அவர்களை இறைத்தூதர்கள் அல்லது தேவதைகள் என்று அழைக்கிறார்கள்.
இயற்கையாக அப்படியான உடலமைப்பு சாத்தியமில்லை. ஆனால் செயற்கையில் இறகுடன் கூடிய சிறிய விமானத்தை பொருத்தி பறக்கமுடியும் (Jetman). அந்த தேவதைகள் (வேற்றுக்கிரகவாசிகள்) இப்படியாக ஒரு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கலாம் அல்லவா?
இந்துமதக் கடவுளான விஷ்ணு அவரது வாகனமான கழுகில் ஏறிப் பயணம் செய்வாராம், உண்மையில் கழுகு மனிதனை சுமந்துகொண்டு பறந்து செல்லமுடியுமா? என்றால் அதற்கு கண்டிப்பாக சாத்தியம் இல்லை. ஆனால் மனிதன் பயணிக்கும் விமானம் கழுகைப் போன்ற வடிவத்தில் இருக்கலாம் அல்லவா? அந்தப் படத்தில் இருப்பது ஜெர்மனின் நாசி உளவு விமானம், கீழிருந்து பார்ப்பவர்களுக்கு கழுகு போல் தோற்றமளிக்கும். பறந்துவந்தவர் எல்லா தொழில்நுட்பமும் அறிந்த கடவுள் எனும் வேற்றுக்கிரகவாசியாக இருந்தால் அவரால் இதனை உருவாக்கியிருக்க முடியும்.
சரி நாம் நாஸ்காவுக்கு வருவோம், இந்த ஓடுதளங்களின் மர்மமே தலையை பிய்த்துகொள்ளும் அளவிற்கு இருக்கும் பொது அதனையே தூக்கிசாப்பிடும் அளவில் இருக்கிறது அங்கு காணப்படும் மிக நீண்ட கோடுகள்.
தொடரும்.....
No photo description available.No photo description available.Image may contain: 1 personNo photo description available.

கடவுள் எனும் வேற்றுக்கிரகவாசிகள்” - பகுதி 20
.
மனித இனம் வேற்றுக்கிரகவாசிகளுக்கு தங்கத்தை சேகரித்து கொடுக்கும் தேனீக்களா? என்ன? என்ற கேள்வியுடன் முடித்திருந்தோம்.
அவர்கள் தங்கம் மற்றும் கனிம வளங்களை நம்மிடமிருந்து எடுத்துக் கொண்டிருந்தாலும் அதனை அவர்கள் தானாக செய்யவில்லை நம் மனித இனத்துடன் தொடர்பை ஏற்படுத்தி மனிதர்களின் மூலமாக பெற்றிருக்கிறார்கள். அப்படியானால் அவர்களின் தேவை தங்கம் மட்டும் அல்ல மனித இனத்திற்கிடையேயான தொடர்பும் தான். அன்றைய காலத்தில் தொடர்பு கொண்டவர்கள் ஏன் இன்று தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை? என்ற கேள்வி வரும்.
அவர்கள் தொடர்பில் இருந்தார்கள்… தொடரில் இருக்கிறார்கள்…
அதற்கான ஆதாரங்கள் இனி
Unidentified Flying Object (UFO)
வானில் பறந்து செல்லக்கூடிய கண்டறியப்படாத பொருள், பெரும்பாலும் வட்டவடிவமாகவும், சில சமயங்களில் வெவ்வேறு வடிவங்களிலும் காணப்படுவதாக பார்த்த மக்களாலிடமிருந்து தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. 
National UFO Reporting Centerன் அறிக்கைப்படி உலகம் முழுவதிலிருந்தும் ஒரு மாதத்திற்கு சராசரியாக 400 புதிய தகவல்கள் UFO வை பார்த்ததாக பதிவுசெய்யப்படுகிறதாம்.
இப்படி UFOவை பார்த்தற்கு ஆதாரமாக பலர் தாங்கள் எடுத்த புகைப்படங்களை காட்டுகின்றன, அவைகள் பெரும்பாலும் பொய்யாக உருவாக்கப்பட்டவையாகவே இருக்கின்றன. இதனால் UFOவே பொய் என்ற நிலைக்கு வந்துவிடாதீர்கள். நம்மை ஆச்சர்யத்தின் உச்சிக்கே கொண்டுசெல்லும் பல ஆதாரங்கள் இருக்கின்றன.
1952 ஜூலை 31ல் New Jerseyல் காரில் சென்று கொண்டிருந்த ஒரு தம்பதிக்கு அது மறக்கமுடியாத பயணமாக மாறியது, அவர்களின் காருக்கும் சற்று தொலைவில் வட்டவடிவ பொருள் ஒன்று இங்கும் அங்கும் பறந்து செல்வதை பார்த்தனர். அது என்ன என்று இருவராலும் கணிக்கமுடியாத நிலையில் புத்திசாலிதனமாக தன் கையில் இருந்த புகைப்படகருவியின் மூலம் அதனை படம்பிடித்தனர். இதனைப்பற்றி ஆய்வு செய்பவர்கள் காட்டும் முதல் ஆதாரம் இதுதான். கம்யூட்டர் கிராபிக்ஸ் போன்றவைகள் இல்லாத காலகட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதால் இதற்கு விளக்கம் கொடுப்பது மிகக்கடினம். 
அதனை அடுத்து பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம், 30 ஜூலை 1954ல் நியூயார்க் to லண்டன் விமானத்தில் சென்ற பயணிகள் அனைவரும் ஒருசேரகூறியது. அவர்கள் சென்ற விமானத்திற்கு அருகே பெரிய சிகரெட் வடிவ பொருள் ஒன்று பறந்து வந்ததாம். அந்த விமானத்தில் பயணம் செய்த அனைவருமே அதனை பார்த்திருக்கின்றனர். ஏதேனும் போர்விமானமாக இருக்கக்கூடும் என அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்தகணமே அவர்களின் கண்முன்னே அந்த உருவம் 6 சிறுசிறுப் பகுதிகளாக பிரிந்து இங்கும் அங்கும் சுற்றி திரிந்ததாம். அதனைகண்ட பயணிகளுக்கு பதற்றம் தொற்றிக்கொண்டதாம் ஏனெனில் அப்படியான ஒரு பொருளை அவர்கள் இதற்கு முன்பு பார்த்ததும் இல்லை கேள்விப்பட்டதும் இல்லை. 15 நிமிடங்கள் கழித்து அந்த 6 சிறு பகுதிகளும் ஒன்றாக இணைந்து பழையபடி பெரிய வடிவமாக மாறி விண்ணை நோக்கி பறந்து சென்றுவிட்டதாம். இதனை ஒருவர் மட்டும் கூறியிருந்தால் ஏதாவது தவறு இருக்கும் என்று நினைக்கலாம். விமானத்தில் பயணித்த அனைவரும் கூறும்போது என்னவென்று எடுத்துக்கொள்வது. 
இந்த காலகட்டத்திலிருந்துதான் UFO வின் நடமாட்டம் இருப்பதாக நினைத்துவிடவேண்டாம். 
1680யை சேர்ந்த பிரான்ஸ் நாட்டின் காசுகளில் UFO வானில் இருப்பதை போன்ற உருவம் பதிக்கப்பட்டுள்ளது. 
15ஆம் நூற்றாண்டில் Domenico Ghirlandaio’வால் வரையப்பட்ட உலகப்புகழ் பெற்ற Madonna with saint Giovannio ஓவியத்தில் பெண்ணின் பின்புறம் வானில் ஏதோ பறந்து வருவது போன்றும், அதனை கீழே நின்று ஒரு மனிதன் பார்ப்பது போன்று வரையப்பட்டுள்ளது. அந்த வட்டவடிவப் பொருள் ஒளிர்வதாக வரையப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
14ஆம் நூற்றாண்டில் Romania, Sighisoara’வில் கட்டப்பட்ட Church of the Dominican Monastery’ல் வரையப்பட்டுள்ள ஓவியத்தில் ஒரு வீட்டின் மீது பறக்கும் தட்டு இருப்பதுபோல வரையப்பட்டுள்ளது.
4 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ரோமனிய எழுத்தாளர் Julio Obsequens எழுதிய “Prodigiorum Liber” என்ற புத்தகத்தில் இருக்கும் ஓவியத்தில் UFO ஒன்று வானில் தெரிவதை போன்றும் அதனை மக்கள் ஆச்சர்யமாக பார்பதாகவும் வரையப்பட்டுள்ளது.
அனைத்தில் பங்கேற்கும் சுமேரியர்கள் இதில் மட்டும் இல்லாமலா?
கிட்டத்தட்ட 5000 ஆண்டுகள் பழமையான சுமேரியர்களின் களிப்பட்டையில் வானிலிருந்து வரும் கடவுள் பறக்கும் தட்டில் வருவதாகவும் அவர்களை மக்கள் வணங்குவது போன்று காட்டப்பட்டுள்ளது
மேலும் பல ஆதாரங்களை மெக்ஸிகோ குகை ஓவியங்களிலும், பாறை கீரல்களிலும் காணமுடிகிறது இவைகளின் காலம் பல ஆயிரம் வருடங்கள் முந்தையது. 
இவை அனைத்திலும் உச்சம் கிருஸ்துவர்களின் பழைய ஏற்ப்பாட்டில் Ezekiel (1:4) பகுதியில் UFO பற்றி குறிப்பிடப்பட்டிருப்பது
“ And I looked, and, behold, a stormy wind came out of the north, a great cloud, with a fire flashing up, so that a brightness was round about it; and out of the midst thereof as the color of electrum, out of the midst of the fire” இதில் வட்டவடிவமான பிரகாசமான பொருள் ஒன்று மேகத்தை விளக்கிக்கொண்டு வந்ததாகவும் அந்த நேரத்தில் புயலைப் போன்ற காற்று வீசியதாகவும், பார்ப்பதற்கு நெருப்புடன் கூடிய வெங்கலநிறத்தில் மின்னியதாகவும் அப்படி வந்த பறக்கும் பொருளில் இருந்துதான் கடவுள் வந்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதிலிருக்கும் தகவல் 100% பறக்கும் தட்டில் வந்து இறங்கிய வேற்றுக்கிரகவாசிகளை குறிப்பதாக இருக்கிறது.
அன்று பூமிக்கு வந்து இறங்கிய வேற்றுக்கிரகவாசிகள் இன்று வந்தால் என்ன நடக்கும்?
என்ன நடந்தது என்று கேட்பதே சரியாக இருக்கும்…
ஏனெனில் பறக்கும் தட்டை அமெரிக்க தாக்கிய சம்பவம் உங்களுக்கு தெரியுமா?
தொடரும்…
No photo description available.Image may contain: 1 personNo photo description available.


No photo description available.No photo description available.




பாகம்  --21

என்ன 1500 வருடங்களுக்கு முன்பு விமான ஓடுதளமா? என்று ஆச்சர்யமாக இருக்கிறதா?
அருகில் இருக்கும் படத்தைப் பார்த்தால் உங்களுக்கே புரியும். அந்த பெரிய மலைச் சிகரங்கள் அழகாக தட்டி, தட்டையாக்கி விமானம் தரையிறங்கத் தேவையான நீளம், அகலம் என்று மிகத் தெளிவாக ஒரு விமான ஓடுதளத்தையே உருவாக்கியிருக்கிறார்கள்.
இது தானாக உருவானதல்ல என்று புவியியல் ஆய்வாளர்கள் உறுதியாக கூறுகிறார்கள். அப்படியானால் யார் இதனைச் செய்திருப்பார்கள்? இங்கே வாழ்ந்த பண்டைய மக்களா? எதற்காக செய்தார்கள்? அவர்கள் கடவுள் (வேற்றுக்கிரகவாசிகள்) இங்கே தரையிரங்கியிருப்பாரோ? ஒருவேளை அவர்கள்தான் இந்த விமான ஓடுதளத்தை நிறுவியிருப்பார்களோ? அப்படியானால் உலகின் பழமையான விமான ஓடுதளம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.
அப்படியானால் விமானம் கண்டுபிடிப்பை பற்றிய நமது வரலாறு மாற்றியமைக்கப்படவேண்டும். ஏனெனில் விமான ஓடுதளம் விமானத்திற்காகத்தானே உருவாக்கப்பட்டிருக்கவேண்டும்.
பண்டைய காலத்திலேயே விமானங்கள் பற்றியச் செய்திகளை நம் முன்னோர்கள் விட்டுச் சென்றுள்ளார்கள் என்பதை இங்கே தெரியப்படுத்த விரும்புகிறேன். தென் அமெரிக்காவில் 2” நீளம் கொண்ட தங்கத்தால் ஆன சிலப் பொருட்களை ஆய்வாளர்கள் கண்டறிந்தார்கள். இதன் சரியான காலத்தைக் கணிக்க முடியாவிட்டாலும் குறைந்தது 1000 வருடங்களுக்கு மேல் பழமையானது என்பது மட்டும் உறுதி. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அவைகளில் சில பார்ப்பதற்கு இன்றைய நவீன விமானங்களின் உருவத்துடன் ஒத்துப்போகிறது. விமான தொழில்நுட்பவியலாளர்கள் 1997ல் இதன் அளவுகளை அப்படியே பெரிதாக்கி செயல்பாடுகளை ஆராய்ந்தார்கள். எஞ்சின் மற்றும் ஏனைய அத்தியாவசியப்பொருட்கள் இணைத்தல் இது விமானத்திற்கான சரியான வடிவம்தான் என்று கூறினார்கள். சில மறுப்பாளர்கள் இது விமானத்தின் வடிவம் அல்ல, பறவை அல்லது மீனின் வடிவம் என்று கூறிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இதனை ஏற்க மறுப்பவர்களும் வாயடைத்துபோகும் ஆதாரம் தான் எகிப்தில் கிடைத்தது.
எகிப்தில் உள்ள ஒரு கோவில் சுவரில் இருக்கும் கல்வெட்டில் ஹெலிகாப்டர், போர்விமானம், உளவுவிமானம், நீர்முழுகிக் கப்பல், பறக்கும் தட்டு என்று பார்ப்பவர்களுக்கு ஒரு நிமிடம் தலையே சுற்றிவிடும் அளவில் தெளிவாக செதுக்கியிருக்கிறார்கள்.
அவர்களுக்கு எப்படி விமானங்கள் பற்றிய அறிவு கிடைத்திருக்கும்? என்று யோசிப்பவர்களுக்கு இங்கே ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன். ராமாயணகாலத்திலேயே (கிட்டத்தட்ட 17,000 வருடங்களுக்கு முன்பு) விமானங்கள் பயன்படுத்தப்பட்டன என்று ராமாயணத்தில் பார்த்தோம். அன்றைய இலங்கையை ஆண்ட இராவணன் என்ற தமிழ் மன்னன் மிகுந்த அறிவாற்றல் கொண்டவர், இலங்கையிலிருந்து இந்தியா வருவதற்கோ, சீதையுடன் இலங்கைக்கு திரும்பிசெல்வதற்கோ இராவணன் எந்த சிரமமும் படவில்லை. ஆகாய மார்க்கமாக வந்து சென்றுள்ளார். அதற்காக அவர் பயன்படுத்திய விமானத்தை நினைக்கும் இடத்தில் தரையிறக்க முடியும், எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் செங்குத்தாக மேலே ஏறி பறக்க செய்ய முடியும். உண்மையில் அந்தவகைத் தொழில்நுட்பம் இன்றுவரை நம்மால் கண்டறியப்படாத ஒன்று. அப்படியானால் இராவணன் எவ்வளவு பெரிய அறிவியலாளராக இருந்திருக்க வேண்டும்? அந்தத் தகவலை ஏன் வரலாறு ஏந்திவரவில்லை? எந்த இங்கேதான் நம் மக்கள் கோட்டைவிட்டனர், இராவணனுக்கு பத்துத்தலை என்பதை எண்களின் அடிப்படையில் பக்கவாட்டில் பத்துதலைகளை அடுக்கி பார்த்து இராவணனை அரக்கனாக்கிவிட்டோம். உண்மையில் அந்த உவமைக்கு அதுதான் அர்த்தமா?
உதாரணமாக அதிகம் பேசும் ஒருபெண்ணை “இவளுக்கு வாய்நீளம்” என்பார்கள், உண்மையில் அந்தப் பெண்ணின் வாய் நீளமாக இருக்காது அவள் அதிகம் பேசுகிறாள் என்பதையே குறிக்கவே அப்படி ஒரு உவமைச் சொல். அதேபோல பத்துத்தலை என்பது பத்துபேரின் சிந்தனைத் திறனை கொண்டவன் அல்லது சாதாரண மனிதனை போல பத்துமடங்கு புத்திசாலி என்பதை குறிக்கலாமல்லவா? அப்படியானால் இராவணனால் இப்படி ஒரு விமானத்தை கண்டிப்பாக செய்திருக்க முடியும். இங்கே வரலாற்றில் பிழையில்லை நம் புரிதலில்தான் பிரச்சனை.
பண்டைய விமானம் பற்றிய செய்தியே பலருக்கு நம்பமுடியாமல் இருக்கும், அடுத்து நாம் பார்க்கப்போகும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விண்வெளிவீரர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும்.
அந்த படத்தில் காட்டப்பட்டுள்ள சிற்பங்கள் அனைத்தும் இன்று நேற்று செதுக்கப்பட்டதல்ல, மிகவும் பழமையானது.
நவீன அறிவியலுக்கும் இதற்கும் வெகுதூரம் அப்படி இருக்க இவ்வளவுகச்சிதமாக விண்வெளிவீரர் உருவத்தை எப்படி இவர்களால் உருவாக்கியிருக்கமுடியும். தலைக்கவசம், உடல்கவசம், முகத்தில் ஆக்ஸிஜன் மாஸ்க், பின்புறம் ஆக்சிஜன் சிலிண்டர் என்று மிக கச்சிதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்றைய விண்வெளிவீரர்களின் படத்துடன் ஒப்பிட்டு பார்க்கவும்.
மாயன் நாகரிக மக்களிடம் மனிதன் விண்வெளியில் பயணம் செய்வதற்கான தொழில்நுட்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களின் சிற்பக்கலையில் அதனைக் காணமுடிகிறது. ஒரு மனிதன் விண்வெளி ஓடத்தில் அமர்ந்திருப்பதைப் போல செதுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல இறக்கையுடன் கூடிய மனிதர்கள் என்று புராணக்கதைகளில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. கிருஸ்தவர்கள் அவர்களை இறைத்தூதர்கள் அல்லது தேவதைகள் என்று அழைக்கிறார்கள்.
இயற்கையாக அப்படியான உடலமைப்பு சாத்தியமில்லை. ஆனால் செயற்கையில் இறகுடன் கூடிய சிறிய விமானத்தை பொருத்தி பறக்கமுடியும் (Jetman). அந்த தேவதைகள் (வேற்றுக்கிரகவாசிகள்) இப்படியாக ஒரு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கலாம் அல்லவா?
இந்துமதக் கடவுளான விஷ்ணு அவரது வாகனமான கழுகில் ஏறிப் பயணம் செய்வாராம், உண்மையில் கழுகு மனிதனை சுமந்துகொண்டு பறந்து செல்லமுடியுமா? என்றால் அதற்கு கண்டிப்பாக சாத்தியம் இல்லை. ஆனால் மனிதன் பயணிக்கும் விமானம் கழுகைப் போன்ற வடிவத்தில் இருக்கலாம் அல்லவா? அந்தப் படத்தில் இருப்பது ஜெர்மனின் நாசி உளவு விமானம், கீழிருந்து பார்ப்பவர்களுக்கு கழுகு போல் தோற்றமளிக்கும். பறந்துவந்தவர் எல்லா தொழில்நுட்பமும் அறிந்த கடவுள் எனும் வேற்றுக்கிரகவாசியாக இருந்தால் அவரால் இதனை உருவாக்கியிருக்க முடியும்.
சரி நாம் நாஸ்காவுக்கு வருவோம், இந்த ஓடுதளங்களின் மர்மமே தலையை பிய்த்துகொள்ளும் அளவிற்கு இருக்கும் பொது அதனையே தூக்கிசாப்பிடும் அளவில் இருக்கிறது அங்கு காணப்படும் மிக நீண்ட கோடுகள்.
தொடரும்.....
No photo description available.Image may contain: 1 personImage may contain: one or more peopleImage may contain: one or more people




“கடவுள் எனும் வேற்றுக்கிரகவாசிகள்” - பகுதி 21
25 பிப்ரவரி 1942ல் அதிகாலை 3 மணியளவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைப் பதற்றம் தொற்றிக்கொண்டது. இரண்டாம் உலகப்போர் சமயம் என்பதால் எதிரிகள் விமானம் தாக்க வருவதாக ஏற்படுத்தப்பட்ட எச்சரிக்கை ஒலிதான் அதற்குக் காரணம். இராணுவவீரர்கள் நாலாபுறமும் குவிக்கப்பட்டார்கள். பெரிய பெரிய எந்திரத்துப்பாக்கிகள், பீரங்கிகள் ராணுவவீரர்கள், பெரிய ராட்சச விளக்குகள், பொதுமக்கள் என்று அனைவரின் கண்களும் இமைக்க மறந்து விண்ணைப் பார்த்தப்படியே இருந்தன. சிறிது நேரத்தில் தாக்குதலுக்கான உத்தரவு வழங்கப்பட்டது. அனைத்து ராட்சச விளக்குகளும் வானில் பறந்த ஏதோ ஒன்றின் பக்கம் திரும்பியது, அந்த இடத்தை நோக்கி சரமாரியாக தாக்குதல் நடத்த தொடங்கினார்கள், தோட்டாக்கள் சீறிக்கொண்டு பாய்ந்தன. கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு மேல் தாக்குதல் தொடர்ந்துள்ளது. என்ன நடக்கிறது? யார்வந்தது? என்று மக்கள் குலம்பித்தவிக்க.
மறுநாள் காலையில் புகைப்படத்துடன் ‘Los Angeles Time’ பத்திரிக்கையில் செய்திகள் வெளியாகின. அந்தப் புகைப்படத்தில் அனைத்து ராட்சச விளக்குகளும் குவிந்து இருக்கும் இடத்தில் பறக்கும் தட்டு இருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. மக்கள் அதனை பற்றி பரபரப்பாக பேசத்தொடங்கினர். நடந்த சம்பவம் காட்டுத்தீ போல பரவதொடங்கியது.
அன்றைய அமெரிக்க கடற்படை செயலாளர் Frank Konk தலையிட்டு இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார், அவர் கூறியதாவது, “எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டவுடன் பதட்டத்தில் இப்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, உண்மையில் எந்த ஒரு விமானமோ, பறக்கும் தட்டோ எதுவும் அங்கே வரவில்லை”.
அதாவது வெறும் பதட்டத்தினால், ஒன்றுமே இல்லாத வானத்தை பார்த்து, பல ஆயிரம் தோட்டாக்களை கொண்டு, 20 நிமிடங்களுக்கு மேலாக தாக்கினார்களாம்.
என்ன ஒரு அறிவுப்பூர்வமான அறிக்கை என்று பாருங்கள். “கேட்பவன் கேனையென்றால் கேப்பையில் நெய் வடிகிறது என்பான்” என்ற பழமொழியை இனி “கேட்பவன் அமெரிக்கன் என்றால் வெறும் வானை 20 நிமிடம் தாக்கினோம் என்பான்” என்ற புதுமொழியாக்கிவிடலாம்.
ஆனால் இந்த சம்பவத்தை நேரடியாக பார்த்த மக்கள் இந்த அறிக்கையை ஏற்கவில்லை, பறக்கும் தட்டு ஒன்று வந்ததாகவும் அதிலிருந்து எந்தவிதமான தாக்குதலும் நடத்தப்படவில்லை, அமெரிக்க இராணுவம்தான் அதனை தாக்கிவிரட்டியது என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்கிறார்கள்.
இதில் எது உண்மை என்பது அமெரிக்கா அரசுக்கே வெளிச்சம். ஆனால் அமெரிக்காவை இந்த பறக்கும் தட்டு விசயத்தில் நம்பமுடியாது. ஏன் எனில் இவர்கள் அதன் பிறகு நடந்த சில சம்பவங்களிலும் இதே மழுப்பும் பாணியையே கடைபிடித்து வருகின்றனர்.
அதன் பிறகு நடந்த சம்பவம் அமெரிக்கா மற்றும் நாசா மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியது.
USA, Pennsyvania, Kecksburg என்ற இடத்தில் 09 டிசம்பர் 1965 அன்று நள்ளிரவில் இடியை போன்ற பலத்த சந்தம் கேட்டதை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் அனைவரும் பீதியில் வீதிக்கு வந்துள்ளனர். வானில் மிகத்தாழ்வாக ஒரு பறக்கும் தட்டு தீப்பிடித்து எரிந்தபடியே கிட்டத்தட்ட 4 கி.மீட்டர் தூரம் பறந்து சென்று காட்டுப் பகுதியில் விழுந்திருக்கிறது. இதனை அந்த பகுதி மக்கள் அனைவரும் பார்த்துள்ளார்கள். உடனே அவர்கள் தீயனைப்புத் துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் அனுப்பியிருக்கிறார்கள். சிறிது நேரத்தில் பெரிய பெரிய ட்ரக்குகளுடன் சில வாகனங்கள் அந்த இடத்திற்கு வந்துள்ளன. இதனை பார்த்துகொண்டிருந்த மக்களுக்கு அதிர்ச்சி, ஏனெனில் வந்தவர்கள் தீயனைப்பு துறையோ காவல்துறையோ அல்ல, அமெரிக்க இராணுவம். இராணுவத்திற்கு இங்கு என்ன வேலை? அந்த விபத்து நடந்த இடத்தைக் கைப்பற்றிய ராணுவம், மக்கள் உள்ளே நுழையாதவாறு தடுப்புகள் அமைத்தன. இது என்ன பெரிய விசயம் சாதாரனமாக கார் விபத்து நடந்தாலே இது மாதிரியான தடுப்புகள் அமைப்பது சகஜம் தானே என்று மக்கள் நினைத்தகொண்டிருந்த வேளையில்தான், அடுத்த அதிர்ச்சி. அங்கு வந்த தீயணைப்பு வீரர்களையும் அந்த தடுப்பை தாண்ட ராணுவம் அனுமதிக்கவில்லை. என்ன கூத்து இது? அப்படி அங்கு என்னதான் நடக்கிறது? என்று மக்கள் ஆவலாக பார்த்துக்கொண்டிருக்கையில் ஏதோ ஒரு எரிந்த பெரிய பொருளை போர்த்தியபடி பெரிய ட்ரக்கில் ஏற்றி அருகில் இருக்கும் Wright Peterson Air Force Base’றிக்கு எடுத்து சென்றுள்ளார்கள். இதற்கு அந்தப் பகுதியில் வாழும் மக்கள் அனைவரும் சாட்சி. அடுத்த நாள் செய்திதாள்களின் முதல் பக்கத்தை அலங்கரித்தது இந்த சம்பவம்தான். அந்த பகுதி மக்கள் இந்த சம்பத்தின் நினைவாக நினைவு சின்னங்கள் எழுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வழக்கம்போல அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்றது நாசா.
UFO பற்றிய ஆய்வாளரான Lesile kean என்பவர் 2007ல் FOIA (Freedom of Information Art) சட்டத்தின் படி நாசா மேற்படி சம்பவத்தைபற்றிய கோப்புகளைத் தரவேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி, நாசா அந்தக் கோப்புகளை அவரிடம் தரவேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் நாசா அதனை செய்யவில்லை, தீர்ப்பு வழங்கி 2 வருடங்கள் கழித்து அப்படி ஒரு சம்பவமே அங்கு நடக்கவில்லை என்று கைவிரித்தது. அதாவது ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை கானும்’ படத்தில் விஜய்சேதுபதி சொல்வது போல, ‘என்னாச்சு’ என்று Short & Sweet’ஆக கேட்டுவிட்டது.
ஒன்றுமே நடக்கவில்லை என்று சொல்வதற்கு எதற்கு 2 வருடகால அவகாசம்? ஏன் இவர்கள் இதனை மறைக்க நினைக்கிறார்கள் என்பது மர்மமாகவே இருக்கிறது.
இது இத்துடன் முடியவில்லை, நாசாவும், அமெரிக்காவும் இதைவிட பெரிய சம்பவம் ஒன்றையும் மூடிமறைத்திருக்கிறது.
அந்த சம்பவம் இதை விட சுவாரஸ்யமானது, அதை இவர்கள் மறைக்க நடத்திய நாடகம் அதைவிட சுவாரஸ்யமானது.
முழு பம்கின்’னை பர்கர்’க்குள் மறைத்த கதை அது….
தொடரும்…
No photo description available.Image may contain: 1 person, close-up



பாகம்  22

சரி நாம் நாஸ்காவுக்கு வருவோம், இந்த ஓடுதளங்களின் மர்மமே தலையை பிய்த்துகொள்ளும் அளவிற்கு இருக்கும் பொது அதனையே தூக்கிசாப்பிடும் அளவில் இருக்கிறது அங்கு காணப்படும் மிக நீண்ட கோடுகள்.
கோடுகள் என்றாலே பிரச்சனைதான்… ஒரு காகிதத்தில் அளவுகோள் வைத்து ஆடாமல் அசையாமல் மிகச்சரியாக வரைந்தது போல் வரையப்பட்டுள்ளது.
ஆனால் வரைந்தது காகிதத்தில் அல்ல, நாஸ்காவின் மலைச்சரிவுகளில், ஏதோ ஒரு அடி அல்லது இரண்டு அடி வரையப்பட்டிருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள்.
ஓவ்வொரு கோட்டின் நீளமும் சில பல கிலோமீட்டர்களை தாண்டுகிறது. அவைகள் வேறும் கோடுகள் மட்டுமல்ல, சிக்கலான வடிவியல் சார்ந்த (geometrical) அமைப்புகளும் இங்கு காணப்படுகின்றன. இதனை பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு மனிதன் தான் செய்தான் என்று நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை. அப்படியானால் செய்தது யார்?
அவர்கள் ஏன் இப்படி செய்யவேண்டும்? ஒன்று எதையேனும் கற்பிக்கும்முயற்சியாக இருக்கவேண்டும் அல்லது அந்த இடத்தில் இருந்து சோதனைக்காக மணல் மற்றும் கற்களை எடுத்திருக்க வேண்டும். ஒருவேளை இரண்டுமே காரணமாக இருக்கலாம்.
நான் முன்பே குறிப்பிட்டிருந்தேன் இங்கு மழையின் அளவு மிகமிகக்குறைவு என்பதால் மேலே படிந்திருக்கும் கற்களை நீக்கினால் அதன் தடம் காலம்காலமாக அழியாமல் இருக்குமென்று. நம் வீட்டில் பயன்படுத்தும் வேக்கியும் க்ளீனரை (Vacuum Cleaner) நினைவில் கொள்ளுங்கள். அதே போன்ற உருவில் பெரிய இயந்திரத்தைக்கொண்டு தாழ்வாக பறக்கும் விமானத்தில் மூலம் இந்த இடங்களில் இருந்து மணல் மற்றும் கற்களை சோதனைக்காக எடுத்திருக்கலாம் அல்லவா?
உங்கள் மனம் இதனை ஏற்க மறுத்தால் வேற்றுக்கிரகவாசிகள் சோதனைக்காக மணல் எடுத்திருக்கிறார்கள் என்பதற்கு இன்னும் ஒரு ஆதாரம்.
பெரு நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் Band of holes பற்றி கேள்விப்பட்டதுண்டா? Band of holes என்றால் வரிசையாக உருவாக்கப்பட்டிருக்கும் துளைகள் என்று பொருள். மலைச்சரிவு ஒன்றின் மீது 3 அடி அகலத்தில் 6-7 அடி ஆழத்தில் சரியான இடைவெளியில் துளைகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒன்று இரண்டல்ல, ஆயிரக்கணக்கான துளைகள். செயற்கைக் கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்க்கும் போது அதன் பிரமாண்டத்தை நீங்கள் உணரலாம். இதனை யார் உருவாக்கியது? இங்கு என்ன தேடினார்கள்? எதை எடுத்தார்கள்? என்று ஆய்வாளர்கள் தலையை பிய்த்துக்கொள்கிறார்கள். ஆனால் பல ஆய்வாளர்கள் இங்கு தங்கத்தைத் தேடியிருக்கலாம் என்று கூறுகிறார்கள். அது உண்மையாகவும் இருக்கலாம்.
ஏனெனில் பெரு நாட்டை ஒரு காலத்தில் தங்கப் பூமி என்று அழைக்கும் அளவிற்கு தங்கத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். 16ஆம் நூற்றாண்டில் இங்கு படையெடுத்து வந்த ஸ்பெயினியர்கள் சில கப்பல்கள் நிறைய தங்கத்தை ஏற்றி தங்கள் நாட்டிற்கு கொண்டுசென்றதாக ஒரு ஸ்பெயினியக் குறிப்பில் காணப்படுகிறது.
இங்கு துளைகள் அமைத்து கனிம வளங்களை சோதனை செய்தது வேற்றுகிரகவாசிகள் தான், என்றால்? அவர்கள் ஏன் தங்கத்தை தேடவேண்டும்? அவர்கள் பொருளாதாரமும் தங்கத்தை சார்ந்துதான் இருக்கிறதோ? என்று சிந்திக்கும் போதுதான் ஒரு உண்மை புரிந்தது.
தங்கம் ஆபரணங்கள் செய்யவும் பொருளாதாரத்தை கட்டமைக்கவும்தான் பயன்படுகிறது என்று பெரும்பலானவர்கள் நினைத்து வருகிறார்கள். தங்கத்தின் உண்மையான பயன்பாடே வேறு. தங்கம் என்ற உலோகம் ஒரு சிறந்த மின்கடத்தி. நாம் இன்று பயன்படுத்தும் மின்னனு பொருட்கள் அனைத்திலும் தங்கத்தின் பங்கு நிச்சயம் உண்டு. சிறிய அளவே பயன்படுத்தப்பட்டாலும் அதன் பயன்பாடு பெரிது.
அதுமட்டுமல்ல நம் விண்கலங்கள், செயற்கை கோள்கள், விண்வெளி ஓடங்கள் போன்றவற்றில் கதிர்வீச்சை தடுக்கும் கவசமாக தங்கம் பயன்படுகிறது.
விண்ணில் சுற்றித்திரியும் டெலஸ்கோப்புகள் அனைத்திலும் தங்கம் ஒரு போர்வை போல சுற்றப்படுகின்றன. அப்படி செய்தால்தான் உள்ளே இருக்கும் மின்னனு சாதனங்களை விண்வெளியின் அபாய கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாக்கமுடியும்.
நிலவிற்கு மனிதனை எடுத்து சென்ற விண்கலத்தில் தங்கம் பயன்படுத்தப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.
சிறிய அளவில் விண்வெளியில் விளையாடிக்கொண்டிருக்கும் நமக்கே இந்த அளவு தங்கம் தேவைப்படுகிறதென்றால். நட்சத்திரங்களுக்கு இடையே பயணம் செய்பவர்களாக இருக்கும் வேற்றுக்கிரகவாசிகளுக்கு எவ்வளவு தங்கம் தேவையாக இருக்கும்.
இந்த இடத்தில் கடவுளை வேற்றுக்கிரகவாசிகள் என்று அழைப்பதற்கான சான்று ஒன்று இருக்கிறது.
நம் புராணக்கதைகளில் வரும் கடவுள் தங்கத்தால் ஆன தலைக்கவசம் உடல்கவசம் போன்றவை அணிந்திருந்ததாகவும், தங்கத்தேரில் பவனிவந்ததாகவும் குறிப்புகள் காணப்படுகின்றன. அந்தக் கடவுள் எனும் வேற்றுக்கிரகவாசிகளும் இதேபோல் கதிர்வீச்சிலிருந்து தப்பிக்க இப்படி செய்திருக்கலாம் அல்லவா? அப்படியானால் நாம் நினைப்பது போல கடவுள் தங்கத்தை அழகிற்காக ஆபரணமாக பயன்படுத்தவில்லை.கவசமாகத்தான் பயன்படுத்தியிருக்கவேண்டும். அதனை தவறாகப் புரிந்துகொண்ட மனிதர்கள்தான் அதனை ஆபரணங்கலாக நினைத்து அவர்களும் அணிந்துகொண்டுள்ளனர். தாங்களும் கடவுளாக வேண்டும் என்ற உந்துதலால் அப்படி செய்திருக்கலாம். அதனால் தான் தங்கத்தை அதிகமாக சேர்த்திருக்கிறார்கள, அதன் மதிப்பைக் கூட்டியிருக்கிறார்கள்.
உண்மையை சொல்ல வேண்டுமானால் இன்று நம் பூமியில் இருக்கும் தங்கத்தைவிட அதிக அளவிளான தங்கம் பண்டையக் காலத்தில் பயன்பாடுத்தப்பட்டிருக்கின்றன. ஆபரணமாகவும், மாளிகைகளின் மேற்கூரையாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு சிந்து நதியில் தங்கத்தால் ஆன படகுகள் பயன்படுத்தப்பட்டனவாம். பிரமிடின் மேற்கூறை தங்கத்தகட்டால் நெய்யப்பட்டிருந்தனவாம். அதாவது நாம் இன்று இரும்பை பயன்படுத்து போலவே அன்று தங்கம் அதிக அளவில் இருந்திருக்கிறது.
இந்த இடத்தில் மிக எளிமையான ஒரு கேள்வி, அன்று புழக்கத்தில் இருந்த அந்த தங்கத்தில் 10% தான் இன்று நம் மனிதர்களிடம் இருக்கிறது. மீதம் 90% தங்கம் எங்கே போயின?
புதையலாக மறைக்கப்பட்டுள்ளனவா? காற்றில் கறைந்துவிட்டனவா? அல்லது
கடவுள் (எ) வேற்றுக்கிரகவாசிகளுக்கு காணிக்கையாக்கிவிட்டார்களா?
சுமேரியர்களின் களிப்பட்டையில் அவர்களின் கடவுள் தங்கதைக் கேட்டார் என குறிப்புகள் இருக்கின்றன.
இன்றும், ஒவ்வொரு ஆண்டும் இந்துக்கள் கோவில்களில் தங்கள் கடவுளுக்கு பல ஆயிரம் கிலோ தங்கத்தை காணிக்கையாக்குகின்றன.
இதையேதான் அன்றிலிருந்து இன்றுவரை செய்து வருகிறோமோ? மனித இனத்தின் தோற்றத்திற்கு இதுவே காரணமாகவும் இருக்கலாம்.
மனித இனம் வேற்றுக்கிரகவாசிகளுக்கு தங்கத்தை சேகரித்து கொடுக்கும் தேனீக்களா? என்ன?
தொடரும்…
Image may contain: food
Image may contain: outdoor and water


கடவுள் எனும் வேற்றுக்கிரகவாசிகள்” - பகுதி 23
இந்த பிரபஞ்சத்தில் நிறைய கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வது உறுதி. அவைகளில் எந்த கிரகத்தைச் சேர்ந்த வேற்றுக்கிரகவாசிகள் நம் பூமியுடன் தொடர்பில் இருந்தவர்கள், இருக்கிறார்கள்? என்று ஆராய்ந்தால் orion நட்சத்திரமண்டலம்தான் அதற்கு எல்லா வகையிலும் பதிலாகிறது.
முதலில் orion நட்சத்திரமண்டலத்தை பற்றி மேலோட்டமாக தெரிந்துகொள்வோம்.
Orion Beltல் இருக்க கூடிய Alnitak, Alnilam, மற்றும் Mintaka என்ற இந்த மூன்று நட்சத்திரங்கள் தான் மிக முக்கியமானவை. இவை நம் சூரியனை விட பல மடங்கு பெரியதாகவும் வெப்பமாகவும் காணப்படுகிறது. இதுவரை நட்சத்திர கடவுள்கள் வந்துசென்றார்கள் என்று கூறும் அத்தனை பூர்வகுடிகள், பண்டைய நாகரிகங்களும் கைகாட்டும் நட்சத்திரங்கள் இவைதான். இந்த மூன்று நட்சத்திரங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதுதான் Orion Belt. இந்த அமைப்பு மூன்று நட்சத்திரங்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பதை போல் தொன்றும் ஆனால் கூர்ந்து கவனிக்கும் போது அதில் மேலே இருக்கும் சிறிய நட்சத்திரன் மட்டும் நேர்கோட்டிலிருந்து சற்று விலகி இருப்பதை பார்க்கலாம். அதே வடிவத்தில்தான் எகிப்த் பிரமிட்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதனை மேலிருந்து பார்த்தால் மட்டுமே காணமுடியும். இது தற்செயலாக நடந்திருக்க வாய்ப்பேயில்லை. இந்த Orion Belt'ற்கும் நம் பூமிக்கும் ஏதோ ஒரு வகையில் சம்பந்தம் இருக்கிறது. ஒரு வேளை அங்கு இருக்கும் ஏதோ ஒரு கிரகத்தில் வாழும் மேம்பட்ட உயிரினம்தான் நாம் இதுவரை மேலே பார்த்த அனைத்திற்கும் காரணமாக இருக்குமோ. அப்படி பார்த்தால் அவர்கள் ஒவ்வொரு முறையும் 1500 ஒளியாண்டுகள் தூரம் பயணம் செய்து இங்கு வந்து செல்கிறார்களா என்ன?
ஏனெனில் நம்மிடமிருந்து 1,500 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது Orion Belt.
இது எப்படி சாத்தியமாகும்?
ஒன்று அவர்கள் ஐன்ஸ்டினின் கூற்றுப்படி 'வார்ம் ஹோல்'லை பயன்படுத்தியிருக்கலாம்,
வார்ம் ஹோல்'லை பற்றி ஏற்கனவே நிறைய விளக்கங்கள் தமிழில் வந்துவிட்டன. ஆகையால் சுருங்கவிளக்கம்
வார்ம் ஹோல் என்றால் பறந்துவிரிந்து கிடக்கும் இந்த பிரபஞ்சத்தில் ஒரு புள்ளியிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் மற்றொரு புள்ளியை மிக விரைவாக அடையக்கூடிய வழி.
அவர்கள் அறிவியல் தொழில்நுட்பத்தில் நம்மைவிட பல மைல் உச்சத்தில் இருந்தால் அதுவும் சாத்தியமே.
அப்படி இல்லையென்றால் நம்பூமிக்கு அருகிலேயே ஏதேனும் 'Space Station' அமைத்திருக்கலாம்.
பூமிக்கு அருகில் வேற்றுக்கிரகவாசிகளின் 'Space Station'ஆ? என்று கண்களை அகலவிரிக்கிறீர்களா?
நாமே விண்வெளியில் நிறைய ஆளில்லா விண்கலங்களை அனுப்பி பூமியை கண்கானித்து வருகிறோம். பல நாடுகள் இணைந்து 'International Space Station'ஐ உருவக்கி அங்கு மனிதர்கள் சென்று தங்கி கண்கானித்துத் திருப்புகிறார்கள். அடுத்தக்கட்டமாக செவ்வாய்கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையிலும் ஒரு 'Space Station'ஐ உருவாக்க திட்டமிடப்படுள்ளது. நம்மிடமிருக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு நாமே அடுத்தக் கிரகத்தை கண்காணிக்க 'Space Station' உருவாக்கும் போது. நம்மைவிட தொழில்நுட்பத்தில் மேம்பட்ட அவர்களால் ஏன் இதை செய்திருக்க முடியாது?
அப்படி செய்திருந்தால், எங்கே இருக்கிறது அவர்களின் 'Space Station'? நமக்கு தெரியாமல் ஆழ்கடலுக்குள் மறைத்துவைத்திருப்பார்களோ?
ஏன் கூடாது? மனிதனால் அறியப்பட்ட ஆழ்கடல் பகுதிகள் மிகமிக குறைவானதுதான். அப்படியிருக்க 'இருக்கவே இருக்காது' என்று நம்மால் உறுதியாக கூறிவிடமுடியாது.
கொலம்பஸ் கடல்பயணத்தில் இருந்தபோது 11 அக்டோபர் 1492 அன்று இரவு 10 மணியளவில் அதுவரை தன் கடல்பயனத்தில் கண்டிராத அற்புதத்தைக் கண்டார். ஒளிப்பந்து ஒன்று கடலுக்கு அடியிலிருந்து வெளியில் வந்து அங்கும் இங்கும் திரிந்ததாம். பின் கடலுக்குள் சென்று இவர் செல்லும் பாதையிலேயே கடலுக்கு அடியிலிருந்தபடியே பின் தொடர்ந்ததாம். இதனை அவர் தனது குறிப்பேட்டில் கைப்பட எழுதியிருக்கிறார். அன்றைய அரசுக்கும் இதனை தெரியப்படுத்தியுள்ளார். அவர் ஒளிப்பந்தைக் கண்டதாக குறிப்பிட்டிருக்கும் இடம் இன்றும் பல மர்மங்களை தன்னுள்ளே மூழ்கவைத்திருக்கும் பெர்முடா முக்கோணத்திற்கு அருகில்தான் இருக்கிறது.
பெர்முடா முக்கோணம் பற்றி நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டும் என்பதில்லை. உலகில் இருக்கும் அவிழ்க்கமுடியாத மர்மமுடிச்சுகளில் இதுவும் ஒன்று. இந்த வழியாக சென்ற பல கப்பல்கள், பல விமனாங்கள் எங்கே சென்றன என்று தெரியாமல் மாயமாக மறைந்துவிட்டனவாம். பிற்காலத்தில் அவைகள் மறையவில்லை எதிர்பாராத இயற்கை சீற்றத்தால் கடலில் மூழ்கிவிட்டன என்றானர். அதனை தொடர்ந்து ஆய்வுசெய்தவர்கள் அந்த பகுதியில் அதிகப்படியான காந்த சுழல்விசை இருப்பதால் தான் இப்படியான விபத்துகள் நடப்பதாக கூறி மர்மத்திர்க்கு முற்றுபுள்ளி வைத்தனர்.
இந்த இடத்தில்தான் வேற்றுக்கிரகவாசிகளை பற்றிய ஆய்வாளர்கள் அந்த முற்றுப்புள்ளியை தொடக்கபுள்ளியாக மாற்றினர். வேற்றுக்கிரகவாசிகள் உலகமுழுவது பறக்கும் தட்டுகளை கொண்டு வளம்வருவதை முன்பே குறிப்பிட்டிருந்தேன். அந்த பறக்கும் தட்டு இயங்குவதற்கு மின் ஆற்றலையோ, வெப்ப ஆற்றலையோ பயன்படுத்தவில்லை மாறாக காந்த விசையை பயன்படுத்தி பறந்துசெல்கின்றன. அதாவது அவர்கள் காந்த விசையை பயன்படுத்தி அவர்களின் இயந்திரங்களை இயக்கும் தொழில்நுட்பத்தை அறிந்திருக்கிறார்கள். அப்படியானால் அவர்களின் Space Stationனுக்கும் இதே சக்தியை பயன்படுத்தலாம் அல்லவா? ஆக பெர்முடா முக்கோணத்தின் ஆழ்கடலில் Space Station இருக்குமேயானால் அதில் பயன்படுத்தப்படும் காந்தவிசையின் தாக்கம் கடலின் மேல்பரப்பிலும் இருக்கும் அல்லவா?
அதுமட்டுமல்ல எந்த இடத்தில், எந்த சக்தி அதிகமாக கிடைக்கிறதோ அதை பயன்படுத்தி இயந்திரங்களை இயக்குவதுதான் புத்திசாலித்தனம். அந்த வகையில் நம் பூமியே ஒரு பெரிய காந்த துண்டுதான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும், அதனால் அவர்கள் காந்தவிசையை பயன்படுத்துவதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லையே.
சரி கடலில் மட்டும்தான் அவர்களின் Space Station இருக்க வாய்ப்பிருக்கிறதா? என்றால், இல்லை அனைவருக்கும் தெரியும் நிலவில் கூட அவர்கள் Space Station வைத்திருக்கலாம்.
‘உங்கள் கற்பனைக்கு எதை எதையோ சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள்? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. எதையும் காரணம் இல்லாமல் இங்கே சொல்லவில்லை.
நிலவில் அங்கும் இங்கும் நகரும் சிவப்பு புள்ளிகள் பற்றி ஏதேனும் நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?
தொடரும்…
No photo description available.
No photo description available.No photo description available.
No photo description available.

கடவுள் எனும் வேற்றுக்கிரகவாசிகள்” - பகுதி 24
சரி கடலில் மட்டும்தான் அவர்களின் Space Station இருக்க வாய்ப்பிருக்கிறதா? என்றால், இல்லை அனைவருக்கும் தெரியும் நிலவில் கூட அவர்கள் Space Station வைத்திருக்கலாம்.
‘உங்கள் கற்பனைக்கு எதை எதையோ சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள்? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. எதையும் காரணம் இல்லாமல் இங்கே சொல்லவில்லை.
நிலவில் அங்கும் இங்கும் நகரும் சிவப்பு புள்ளிகள் பற்றி ஏதேனும் நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?
நிலவு என்றால் வசிகரம், அழகு, பிரகாசம், கவிதை என்று பார்ப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவத்தை வாரிவழங்கும் அற்புதம்.
சரி, இந்த நிலவு எங்கிருந்து வந்தது? இது என்ன கேள்வி, சூரியனிலிருந்து சிதறிய நெருப்புத்துண்டு பூமியானதை போல, பூமியிலிருந்து பிரிந்து சென்ற ஒரு பகுதி நிலவானது. அப்படித்தானே, இதுவரை பாடபுத்தகத்தில் நாம் படித்தும் அதுதானே.
ஆனால் நிலவு பூமியிலிருந்து பிரிந்த சென்ற ஒரு பகுதிதான் என்று 100% உறுதியாக இன்றுவரை நிரூபிக்கப்படவில்லை. நாம் படித்தது, கேட்டது எல்லாம் யூகம்தான். யூகங்கள் உண்மையாகிப்போவது வழக்கமான ஒன்றுதான், ஆனால் எல்லா யூகங்களும் அப்படி ஆவதல்ல.
நிலவை பற்றி ஆய்வளர்கள் முன்வைத்த இன்னொரு யூகமும் இருக்கிறது, பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கும் யூகம் அது.
நிலவானது பூமியிலிந்து பிரிந்து சென்ற பகுதியல்ல. இன்னும் சொல்லப்போனால் நிலவிற்கும் நம் சூரியகுடும்பத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. நம் சூரியகும்பத்திற்கு வெளியிலிருந்து கொண்டுவந்து நம் பூமியின் சுற்றுவட்டபாதையில் சொறுகப்பட்ட கோள் நிலவு.
நம் பூமியை பொருத்தவரை அது துணைக்கோள்ளாக இருக்கலாம் ஆனால் அது ஒரு Aliens Space Station என்று அடித்துக்கூறுபவர்களும் உண்டு.
நிலவின் மேற்புறம் தூசிப்படலத்தால் போர்த்தப்பட்டுள்ளதாகவும் அதன் உள்ளே மிகப்பெரிய Space Station இயங்கிவருவதாகவும் வேற்றுக்கிரகவாசிகளை பற்றி ஆய்வுசெய்யும் பலர் நம்புகிறார்கள்.
(நம் இந்து மதத்திலும் "சந்திரலோகம்" என்ற ஒரு குறிப்பு இருப்பதை காணமுடிகிறது.)
நிலவின் உட்பகுதியில் சிவப்பு நிறப்புள்ளிகள் இங்கும் அங்கும் நகர்வதாக தொலைநோக்கியின் மூலம் அவதானித்தார்கள்.
அப்படி அவதானித்தவர்கள் ஏதோ ஒன்றிரண்டு பேர்ராக இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள், கிட்டத்தட்ட 579 பேர் இப்படியான தகவல்களை தெரிவித்துள்ளார்கள். இப்படியாக 1540 நவம்பர் 26 லிருந்து 1967 அக்டோபர் 19 வரை கிடைக்கப்பெற்ற தகவல்கள் அனைத்தையும் சேகரித்து ‘Chronological Catalog of Reported Lunar Events’ என்ற பெயரில் Technical Report ஒன்றை நாசா தயார்செய்தது. அந்த தகவல்களை கொண்டு இரகசிய ஆய்வுகளையும் நடத்தியது. இன்றுவரை அந்த ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்படவில்லை. அதில் இருக்கும் உண்மை என்ன என்பது நாசாவுக்கு மட்டும் தான் வெளிச்சம்.
சரி கடலில் இருக்கும் Space Station தான் காந்த விசையில் இயங்குகிறது என்றால், நிலவில் இருக்கும் Space Stationக்கு சக்தி எங்கிருந்து கிடைக்கிறது? ஆய்வாளர்களின் கூற்றுப்படி அவர்கள் அணுசக்தியை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஏனெனில் நிலவின் மேற்புறத்தில் இருக்கும் தூசுப்படத்தில் ஹீலியம் 3 பெருமளவில் காணப்படுகிறது. ஹீலியம் 3 கதிர்வீச்சு இல்லாதா மிகச்சிறந்த அணுசக்தி.
நிலவுக்கு அருகேயும் அதனை சுற்றியும் UFOகள் நடமாட்டம் இருப்பதை நம் செயற்கைக்கோள்கள் நிறைய புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுத்து அனுப்பியுள்ளன. இவை அனைத்தையும் நாசாவும் அமெரிக்காவும் மூடிமறைக்கின்றன.
நாசாவும் அமெரிக்கவும் மறைக்கும் விசயங்கள் ஒன்று இரண்டல்ல...
பனிப்போர் நடந்த காலமாகிய 1961ல் 50க்கும் அதிகமான UFO தெற்கிலிருந்து ரஷ்யாவை கடந்து யூரோப் சென்றதாக தகவல்கள் கசியத்தொடங்கின. Allied படைகளின் உயரதிகாரி இதனைப்பற்றிய ஆய்வுக்குக் கட்டளையிட்டார். அதனைத் தொடர்ந்து உலகம் முழுவதிலும் இதனை பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் நிறைய ஆய்வுகள் நடக்கத் தொடங்கின.
அவை Project Sign, Project Grudge, USAF Regulation 200-2, Project Blue Book, Post-1947 Sightings, The Condon Committee என்று பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றன. பெரும் பொருட்செலவில் இப்படியான ஆராய்ச்சிகள் நடத்தினாலும் இதன் முடிவு மக்களுக்கு தெரியாதவாறு மிகவும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் உலகப்போரிலும் UFOவின் பங்கு இருந்திருக்கிறது.
“எங்கள் ரேடார் கருவியுள் ஏதோ புதிதாக ஒரு விமானம் அருகில் இருப்பதைப் போன்று காட்டியது. அது கண்கூசும் அளவு வெளிச்சமாக இருந்தது அதன் அருகே செல்ல முயன்றபோது ராக்கெட் போல அதிவேகத்தில் நொடிக்கு குறைவான நேரத்தில் கண்ணைவிட்டு மறைந்து சென்றுவிட்டது” இப்படி கூறியவர் - Lt.Col.Harold Augspurger Ex US Air Force.
அதனை அமெரிக்கர்கள் Foo Fighters என்று அழைத்திருக்கிறார்கள்.
நேசநாடுகள் இதனை ஜெர்மனியின் விமானமாக இருக்கும் என்று நினைத்துகொண்டிருந்தார்கள்.
அவர்கள் அப்படி நினைக்க காரணம் உண்டு. ஜெர்மனியின் தொழில்நுட்பம் அன்று உலகமே கண்டுவியக்கும் அளவிற்கு இருந்திருக்கிறது. அந்த திடீர் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு காரணம் அவர்களுக்கும் வேற்றுக்கிரகவாசிகளுக்கும் இடையே இருந்த தொடர்புதான் என்கிறார்கள் பல ஆய்வாளர். “அப்படி என்ன தொழில்நுட்பம்தான் ஜெர்மனியிடம் இருந்தது?” என்று கேட்கிறீர்களா?
அவற்றில் உங்களுக்காக சில...
No photo description available.
No photo description available.No photo description available.


பகுதி 26
இரண்டாம் உலகப்போரில் கடுமையான வான்வெளித்தாக்குதல் நடந்தது அனைவருக்குமே தெரியும். ஆனால் அதில் நாசிப்படை பயன்படுத்திய புதிய தொழில்நுட்பங்களைப்பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்?
Messerschmitt Me 262:-
போர்விமானங்கள் என்றாலே ஜெட்’கள் தான் அனைவருக்கும் நினைவில் வரும். ஆனால் இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில் அனைத்து நாடுகளும் சுழல் இறக்கை கொண்ட விமனாங்களையே பயன்படுத்தினர். அவர்களில் பலருக்கு ஜெட் தொழில்நுட்பம் என்றால் என்னவென்றே தெரிந்திருக்கவில்லை. அப்படியான நேரத்தில் சுழல் இறக்கைகள் இல்லாமல் ஒரு விமானம் சீறிப்பாய்வதை கண்ட கண்கள் இமைக்க மறந்து நின்றன. அதன் வேகத்தையும் அதன் வடிவமைப்பையும் கண்டு மலைத்துப்போய் நின்றன. எப்படி இந்த விமானம் பறக்கிறது? என்ன தொழில்நுட்பம் இது? எந்த படையின் போர்விமானம் இது? என்ற கேள்விகளை தங்களுக்குள்ளாக கேட்டுக்கொண்டனர். பின்னர் இதன் பெயர் ஜெட் தொழில்நுட்பம் என்றும், இவை நாசிப்படைக்கு சொந்தமான விமானங்கள் என்றும் தெரிந்துகொண்டனர். ஆம், விமானங்களில் ஜெட் தொழில்நுட்பத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது ஜெர்மனியின் நாசிப்படைகள் தான். 18 ஜூலை 1942ல் பறக்கவிடபட்ட Messerschmitt Me 262 என்ற விமானம் தான் உலகின் முதல் ஜெட் விமானம்.
அதன்பிறகு வானில் ஏதேனும் வித்தியாசமான பொருள் பறந்தால் அது நாசியின் போர்விமானமாக இருக்குமோ என்ற எண்ணம் தோன்றியது எதிரிகளுக்கு. இதன் படித்தான் UFOவை Foo Fighters என்றும் அவைகள் நாசிப்படைக்கு சொந்தமானவை என்றும் தவறாக நினைத்துக்கொண்டிருந்தனர்.
V1 (Vergeltungswaffe 1)
எதிரிகளின் படை கூட்டமாக நெருங்கிவருகிறது, நாசிப்படை அமைதியாக நின்று வேடிக்கைப்பார்கிறது. என்ன நடக்கிறது? ஏன் இவர்கள் நம்மை நோக்கி முன்னேறவில்லை என்று எதிரிப்படையினர் யோசிப்பதற்குள் வானிலிருந்து பறந்துவந்த ஒரு சிறிய விமானம் அந்த கூட்டத்தில் மீது விழுந்து வெடித்து சிதறியது. உடலும் உயிரும் சிதறி பல போர்வீரர்கள் உயிரிழந்தனர். என்ன நடந்தது? விமானத்தைக்கொண்டு தற்கொலைபடை தாக்குதல் நடத்துகிறார்களோ என்று ஆராய்ந்தால் அதுவும் இல்லை. விழுந்தது விமானமே அல்ல அது ஒரு வெடிகுண்டு.
ஆம், பறந்து சென்று இலக்கை துல்லியமாக தாக்கியழிக்கும் V1 (Vergeltungswaffe 1) என்ற ஏவுகணையை இரண்டாம் உலகப்போரின் போது நாசிப்படை பெருமளவில் பயன்படுத்தியது, அன்றுவரை யாரும் பார்த்திராத தொழில்நுட்பம் அது. அமெரிக்கர்கள் அதனை Flying Bomb என்று அழைத்தார்கள்.
V2 (Vergeltungswaffe 2)
இதெல்லாம் விடுங்க. மனிதனால் உருவாக்கப்பட்ட எந்த பொருள் விண்வெளியில் முதலில் நுழைந்தது தெரியுமா?
நாசிப்படையால் உருவாக்கப்பட்ட V2 (Vergeltungswaffe 2) என்ற ஏவுகனைதான் அது. விண்வெளியில் நுழையவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதல்ல. கண்டம்விட்டு கண்டம் சென்று எதிரிகளை துல்லியமாக தாக்கவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. கூடுதல்தகவல் இதுதான் திரவ எரிபொருளால் இயங்கிய முதல் ஏவுகணையும் கூட. இன்று உலகம் முழுவதும் ஏவப்படும் ஏவுகனைகள், ராக்கெட்கள் அனைத்திற்கும் இதுதான் முன்னோடி. லண்டனை முற்றுமாக அழிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் நாசிப்படையால் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது. ஏதோ ஒன்று இரண்டு உருவாக்கியிருப்பர்கள் என்று தவறாக நினைத்துவிடாதீர்கள். லண்டனை(இங்கிலாந்து) மட்டும் 1358 ஏவுகணைகளை கொண்டு தாக்கியுள்ளனர். பெல்ஜியம், பிரான்ஸ், நெதர்லாந்து போன்ற நாடுகளையும் இதனை கொண்டு தாக்கியுள்ளனர். மொத்தத்தில் 3,172 V2 ஏவுகணைகளை இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
Horten Ho 229 உளவுவிமானம்:-
இன்று உலகிலேயே என்னிடம்தான் மிகச்சிறந்த உளவுவிமானம் இருக்கிறது என்று கொக்கரிக்கும் அமெரிக்காவின் B-2 Spirit என்ற அதிஉயர் தொழில்நுட்பம் கொண்ட உளவுவிமானத்தை கண்டு பல நாடுகள் பயந்து நடுங்குகின்றனர்.
ஆனால் இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா என்று அனைவரையும் கதிகலங்கவைத்த உளவுவிமானம் தான் இந்த Horten Ho 229.
.இரண்டாம் உலகப்போரின் இறுதிக்கட்டத்தில் ஜெர்மனால் உருவாக்கப்பட்டது. இதில்தான் ஜெட் தொழில்நுட்பத்திற்கான இறக்கைகள் வடிவமைக்கப்பட்டு முதன்முதலில் பயன்படுத்தபட்டன. அதிகபட்சமாக 49ஆயிரம் அடி உயரம்வரை பறந்து செல்லக்கூடியது இதனை நாசியின் “3×1000” என்ற திட்டத்திற்காக உருவாக்கினார்கள்.
அது என்ன “3×1000 திட்டம்”?
1000 கிலோ எடை கொண்ட ஆயுதங்களை சுமந்துகொண்டு,
மணிக்கு 1000 கிலோமீட்டர் வேகத்தில்,
1000 கிலோமீட்டர் தொலைவை ஒரே மூச்சில் கடந்து செல்வது.
இதில் என்ன சிறப்பம்சம் என்றால், எதிரிகளின் ரேடார் கருவிகளால் இதனை கண்டறியமுடியாது. ரேடாரிலிருந்து தப்பிப்பதற்காக இவர்கள் கையாண்ட தொழில்நுட்பம் வித்தியாசமானது. கரித் தூளை மரத்திலிருந்து கிடைக்கும் ஒருவகையான பிசினுடன் கலந்து மேல் புறத்தில் பூசியிருக்கிறார்கள் அப்படி செய்வதான்மூலம் ரேடார் கருவிகளிடமிருந்து எளிமையாக தப்பித்திருக்கிறார்கள்.
நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ, அமெரிக்காவின் B-2 Spiritல் பயன்படுத்தப்பட்டிருக்கும் தொழில்நுட்பம் இதனை அடிப்படையாக கொண்டதே.
மேலே கூறிய அனைத்தும் ஜெர்மனியின் நாசிப்படைகள் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தியதொழில்நுட்பங்கள். இவைகள் இல்லாமல் தயாரிப்பு பணிகளில் இருந்த கருவிகள் என்னென்ன? வடிவமைப்புப் பணிகளில் இருந்த புதியதொழில்நுட்பங்கள் என்னென்ன? வெரும் எழுத்துவடிவில் காகிதங்களுக்குள் புதைந்திருந்த தொழில்நுட்பங்கள் என்னென்ன? அதனை உருவாக்கிய விஞ்ஞானிகள் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு என்ன ஆனார்கள்? இவர்களுக்கு எங்கிருந்து அந்த தொழில்நுட்பங்கள் கிடைத்தன? அவற்றை பற்றிய உண்மைகள் ஏன் இருட்டடிப்பு செய்யப்பட்டன? இரண்டாம் உலகப்போரில் நடந்த உண்மைகள் எப்படியெல்லாம் திரிக்கப்பட்டு நம்மிடம் வந்து சேர்ந்துள்ளன போன்றவற்றை அடுத்த பதிவில் பார்ப்போம்.
No photo description available.No photo description available.No photo description available.No photo description available.No photo description available.

கடவுள் எனும் வேற்றுக்கிரகவாசிகள்” - பகுதி 27


இரண்டாம் உலகப்போரில் ஜெர்மன் கண்டுபிடித்து பயன்படுத்திய தொழில்நுட்பங்களை கடந்த பகுதியில் பார்த்தோம். தயாரிப்பு பணியில் இருந்த தொழில்நுட்பங்கள் என்னென்ன என்று இந்த பகுதியில் பார்க்களாம்.
பறக்கும் வெடிகுண்டுகளை நாசிபடை பயன்படுத்தியது என்று முன்பே குறிப்பிட்டிருந்தேன் இந்த வகை வெடிகுண்டுகளை ஏவிய பிறகு அதனை கட்டுப்படுத்த நம்மால் முடியாது. அதற்காக அவர்கள் கண்டரிந்த அடுத்த தொழில்நுட்பம்தான் Fritz X என்ற பறக்கும் வெடிகுண்டு. இதனை ரேடியோ அலைகள் மூலம் ஏவிய பிறகும் கட்டுப்படுத்தலாம், அதன் திசை மற்றும் வேகத்தை மாற்றியமைக்களாம். இதனைக்கொண்டு 1943 செப்டம்பரில் இத்தாலியின் கடற்படைக்கு சொந்தமான பெரிய போர்கப்பல் ஒன்றை நாசிப்படை தாக்கியது, இரண்டு குண்டுகளின் Direct Hitல் அந்த கப்பல் சிதறி சின்னபின்னமானது.
அதற்கு பின் அமெரிக்காவின் நியூயார்க் நகரை வான்வழியாக அட்லாண்டிக்கை தாண்டி சென்று தாக்க வேண்டும் என்பதற்காக மூன்று இஞ்சின்கள் பொருத்தப்பட்ட பறக்கும் வெடிகுண்டை தயாரித்துக்கொண்டிருந்தார்கள்.
வொயர் லெஸ் தொழில்நுட்பத்தில் ரேடியோ அலைகளை கொண்டு வெடிகுண்டுகளை கட்டுப்படுத்தியது அன்றுவரை யாருமே பார்த்திடாத தொழில்நுட்பம்.
சில வருடங்களுக்கு முன்பு கடலில் நடத்தப்பட்ட அகழ்வாராட்சியில் இரண்டாம் உலகப்போரில் நாசிப்படை பயன்படுத்திய நீர்முழ்கி கப்பல் ஒன்று கண்டறிப்பட்டது. இதில் என்ன ஆச்சர்யம் இரண்டாம் உலகப்போரில் நாசிப்படை நீர்முழ்கி கப்பலை பயன்படுத்தியது அனைவரும் அறிந்த ஒன்றுதானே என்ற அலட்சியமாக இதனை எடுத்துகொள்ளமுடியவில்லை. காரணம் இதில் எரிபொருளாக மின்சாரமோ, அணுசக்தியோ, காந்த சக்தியோ இவை எதுவுமே பயன்படுத்தவில்லை மாறாக அவர்கள் பயன்படுத்தியது பாதரசத்தை. பாதரசத்தை கொண்டு எப்படி அவர்களால் அந்த கப்பலை இயக்க முடிந்தது என்பது இன்றுவரை விடையில்லாத கேள்வியே.
வான்வெளி தொழில்நுட்பத்தை எடுத்துக்கொண்டாலும் இன்றுவரை அனைத்து விஞ்ஞானிகளுக்கும் சவாலாக விளங்கும் காந்தவிசையில் இயங்கும் பறக்கும் தட்டுகளை நாசிப்படையின் விஞ்ஞானிகள் அன்றே தயாரித்து, பயன்படுத்தியிருக்கிறார்கள்.
அதனை தரையிறக்குவதற்காக பயன்படுத்திய கட்டிட அமைப்பு இன்றும் ஜெர்மனியில் சாட்சியாக நின்றுகொண்டிருக்கின்றனர்.
சரி ஜெர்மனுக்கு இவ்வளவு புதிய தொழில்நுட்பங்களும் எங்கிருந்து கிடைத்தன?
இப்போழுது நாம் நம் தலைப்புக்கு திரும்புகிறோம். 1936ல் ஜெர்மனியின் Black Forestல் பறக்கும் தட்டு ஒன்று விபத்துக்குள்ளனது. அந்த பறக்கும் தட்டை கைப்பற்றிய நாசிப்படை அதில் உயிருடன் இருந்த வேற்றுக்கிரகவாசியுடன் தொடர்பை ஏற்படுத்தி கொண்டதாகவும். அவர்களுக்கும் ஹிட்லருக்கும் ரகசிய உடன்பாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றன. அந்த உடன்பாட்டின் படிதான் நாசிப்படைக்கு புதிய தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டன என்றும் வேற்றுக்கிரகவாசிகளின் கூற்றுப்படித்தான் ஹிட்லர் யூதர்களை அழித்தார் என்றும் ஒரு சந்தேக கோட்பாடு நிலவுகிறது.
வேற்றுக்கிரகவாசிகள் ஏன் ஹிட்லருக்கு உதவவேண்டும்? அவர்கள் ஏன் யூதர்களை அழிக்கவேண்டும்? போன்ற கேள்விகளுக்கான பதில் பின்னர்வரும் பகுதிகளில் விளக்கப்பட உள்ளன.
நாசிப்படைகளும் நேசப்படைகளும் தீவிரமான போரில் ஈடுபட்டிருந்த நேரத்தில் அமெரிக்கா நடுநிலைவாதியை போல அமைதியாக வேடிக்கை பார்த்ததாகவும் தேவையில்லாமால் ஜப்பான் அமெரிக்காவின் பெர்ல் துறைமுகத்தை தாக்கியதாகவும் அதன் பின்புதான் அமெரிக்கா நேசநாடுகளுடன் இணைந்து போரிட்டதாகவும் வரலாறு கூறுகிறது.
ஆனால் உண்மைவேரு, அமெரிக்கா நேசநாடுகளுடன் சேர்வதற்கான தக்கதருனத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தது. அதுமட்டுமல்ல அமெரிக்க நடுநிலையாக இருக்கவில்லை நேசநாடுகளை மறைமுகமாக ஆதரித்து வந்தது. அதனால்தான் ஜப்பான் அமெரிக்காவை தாக்கியது. இதில் இன்னும் ஒரு சுவாரசிய தகவல் ஜப்பான் அமெரிக்காவின் பெர்ல் துறைமுகத்தை தாக்கப்போவதாக அன்றைய இங்கிலாந்து பிரதமர் சர்ச்சிலுக்கு முன்னரே தகவல் கிடைத்திருக்கிறது. அவர்மூலம் அமெரிக்காவிற்கும் தகவல் தெரிந்திருக்கிறது. அப்படி தகவல் தெரிந்தும் எந்த விதமான எச்சரிக்கையோ? தடுப்பதற்கான முயற்சியோ? பதில் தாக்குதலுக்கான முன் ஏற்பாடோ? எதுவுமே அமெரிக்க தலைமை செய்யவில்லை. காரணம் நேசநாடுகளுடன் இணைந்து போரிட அமெரிக்காவிற்கு இப்படி ஒரு தாக்குதல் தேவைப்பட்டது. தன் மக்களை தெரிந்தே அமெரிக்கா பலிகொடுத்தது.
அமெரிக்கா எதற்காக இப்படி செய்தது என்று ஆராயும் போதுதான் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன. அமெரிக்காவிற்கு ஜெர்மனியிடன் இருந்து அந்த தொழில்நுட்பங்கள் தேவைப்பட்டன. அவற்றை தன்வசப்படுத்த தான் இந்த நரிவேலை. புரியவில்லையா? சற்று விளக்கமாக பார்ப்போம்.
30 ஏப்ரல் 1945ல் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி உலகம் முழுவது பரவியது. இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்ததாக அனைவரும் பெருமூச்சுவிட்ட நேரம் அது. உலகில் ஒருவர் கூட நினைக்கவில்லை இவ்வளவு தொழில்நுட்பங்களைக் காட்டி உலகையே ஆட்டிப்படைத்த ஒருவன் தோற்றுப்போகும் தருவாயில் எப்படி தப்பித்துக்கொள்ளவது என்றுகூடவா யோசிக்காமல் இருந்திருப்பான்? உண்மையில் ஹிட்லர் அன்று இறந்தாரா? என்று கேட்டால் இறந்திருக்கலாம், முட்டாள்களுக்கு மட்டும்.
ஜெர்மன் நேசப்படையிடம் சரணடைந்தது. மொத்த ஜெர்மனியையும் தங்களால் முடிந்த அளவு நேசப்படைகள் சூரையாடின. அதில்
ஜெர்மன் Reichs Bankல் இருந்த நாசிப்படையின் செல்வங்களும் அடங்கும். (1984ல் வெளியான தகவலின்படி அவைகளின் மதிப்பு 7.9 பில்லியனாம்). உலகில் நடந்த மிகப்பெரிய கொள்ளைகளில் இன்றளவும் இதற்கு தனியிடம் உண்டு. இப்படி கைப்பற்றிய செல்வங்களை தங்களுக்குள் பிரித்துகொள்வதில் நேசநாடுகளுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் வேறொரு விதத்தில் பிரச்சனை கிளம்பியது,
தொடரும்…
No photo description available.No photo description available.
Image may contain: plant and outdoorImage may contain: outdoor
No photo description available.

கடவுள் எனும் வேற்றுக்கிரகவாசிகள்” - பகுதி 28
உலகப்போரில் கைப்பற்றிய செல்வங்களை தங்களுக்குள் பிரித்துகொள்வதில் நேசநாடுகளுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் வேறொரு விதத்தில் பிரச்சனை கிளம்பியது,
இந்த உலகை யார் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்வது?
ஆம், இரண்டாம் உலகப்போர் நடந்ததன் காரணமும் அதுதான், ஆனால் போர் முடிந்த பிறகும் அதற்கான முடிவு கிடைக்கவில்லை.
யாரிடம் இந்த உலகையே பயமடைய செய்யும் அளவிற்கு தொழில்நுட்பமும் இராணுவபலமும் இருக்கிறதோ அவர்களின் கையில்தான் அந்த பிடி போய்சேரும் என்ற உண்மையை உணர்ந்த சோவியத் ரஷ்யாவும் அமெரிக்காவும் தங்களுக்குள்ளாக முட்டிக்கொள்ள துவங்கின. இதனை வரலாறு 'பனிப்போர்' என்றது. உண்மையில் உலகை பணியவைப்பதற்காக நடந்த போர் அது.
செல்வங்களை பங்கிட்டுக்கொண்ட நேசப்படைகள் ஜெர்மனியிடம் இருந்த தொழில்நுட்பங்களையும் பங்கிடும்போதுதான் பிரச்சனை வெடிக்க தொடங்கின.
உண்மையில் ஜெர்மன் படை சரணடைந்ததாக வெளிவுலகிற்கு தெரியப்படுத்துவதற்கு முன்பே நாசிப்படையின் பாதிக்குமேற்பட்ட இடங்கள் நேசப்படைகளின் கைவசமானது,
ஜெர்மனியின் தொழில்நுட்பக்குவியல்களில் நுழைந்த அமெரிக்காவும் ரஷ்யாவும் கிடைத்தது லாபம் என்று அவரவர்களிடம் சிக்கிய தொழில்நுட்பங்களை அப்படியே தன்னுடமையாக்கின. இதில் என்ன வேடிக்கை என்றால் ஜெர்மன் தோல்வியை நெருங்கும் தருவாயில் ஹிட்லர் தன் படை தளபதியை அழைத்து நாசிப்படையின் மிக முக்கியமான விஞ்ஞானைகளை தனியாக அழைத்துச் சென்று சந்தமில்லாமல் அவர்கள் கதையை முடித்துவிடும்படி உத்தரவிட்டார்.
அதன்படி நூற்றுக்கும் அதிகமான விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவருமே மிகமிக முக்கியமான விஞ்ஞானிகள். இவர்களை இல்லாமல் இரண்டாம் ரக விஞ்ஞானிகள் ஆயிரக்கணக்கில் நாசிப்படையில் இருந்தனர். அவர்களை அப்படியே அமெரிக்கா தங்கள் நாடுகளுக்கு பார்சல் செய்தது. அதை மூடி மறைக்க எவ்வளவோ முயற்சி செய்தும் இவர்களை பற்றிய கேள்விகள் எழும்பிக்கொண்டே இருந்தன. எனவே ஜெர்மனியுடம் ஒரு கண்துடைப்பு ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்கா ஏற்ப்படுத்தியது அதற்கு பெயர்தான் “Operation Paperclip”. அதாவது நூற்றுக்கும் பேற்பட்ட நாசிப்படையின் விஞ்ஞானிகளை அமெரிக்க தங்கள் ஆராய்சிக்கு பயன்படுத்திக்கொள்வது. ஆனால் உண்மையில் அது நூற்றுக்கணக்கில் அல்ல. ஆயிரக்கணக்கில். (அவர்களும் அவர்களின் சந்ததிகளும் இன்றும் உயிருடன் இருக்கிறார்கள். ஆனால் வெளிஉலகத்துடன் எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் எங்கிருக்கிறார்கள்? என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? என்பதெல்லாம் கட்டுரையின் போக்கிலேயே விளக்கப்படும்.) விஞ்ஞானிகளை இல்லாமல் அவர்களிடம் தயாரிப்புநிலையில் இருந்த ஆயுதங்கள், தொழில்நுட்ப வரைபடங்கள் போன்றவைகளை அமெரிக்க தங்கள் கைவசமாக்கியது. அதில் தயாரிப்பு பணிநிறைவடையும் தருவாயில் இருந்த ஒரு துடுப்புதான் அணுஆயுதம்.
ஆம், அணு ஆயுதம் அமெரிக்காவுக்கு சொந்தமானது அல்ல. என்ன தலை சுற்றுகிறதா? அமெரிக்காவுக்கும் அணு ஆயுதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதற்கு ஒரு சிறு விளக்கம்.
1945 ஜூலையில் ஜெர்மன் படை சரணடைந்தது, ஜெர்மனியுடன் ஓர் அணியில் இருந்த ஜப்பானை பணியவைப்பது அமெரிக்காவிற்கு அவ்வளவு பெரிய காரியம் ஒன்றுமல்ல, ஆனால் அமெரிக்கா ஜப்பானை சரணடைய செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அமெரிக்கா செய்தது உலக நாடுகள் சற்றும் எதிர்பாராத ஒன்று. 06 ஆகஸ்ட் 1945 அன்று இந்த உலகம் அதுவரை பார்த்திராத பயங்கர ஆயுதமான அணுகுண்டை கொண்டு ஜப்பானின் கிரோஷிமா நகரினை தாக்கியது, அதில் மட்டும் கிட்டத்தட்ட 90,000 - 1,66,000 பேர் கொல்லப்பட்டனர். உலகமே அதிர்ச்சியில் உறைந்துபோய் இருந்தது, அதிலிருந்து மீள்வதற்குள் 09 ஆகஸ்ட் 1945 அன்று ஜப்பானின் நாகசாகி நகரின் மீது அடுத்த அணுகுண்டு தாக்குதலை நடத்தியது அமெரிக்கா, இதில் மேலும் 60,000-80,000 பேர் கொல்லப்பட்டனர். இதனை தட்டிக்கேட்கவோ, கண்டிக்கவோ ஒரு நாடும் முன்வரவில்லை, காரணம் ‘பயம்’. அமெரிக்காவிடம் இருந்த அந்த அணு ஆயுதத்தின் மீதிருந்த ‘பயம்’. அமெரிக்காவுக்கு அதுதான் தேவை, அதற்காகத்தான் இந்த கொடூரத்தை அரங்கேற்றியது.
இந்த இடத்தில்தான் ஒரு கேள்வி ஹிட்லர் கொடூரன், இனப்படுகொலையாளன் என்றால் அதே கூண்டில்தானே அமெரிக்காவையும் ஏற்றவேண்டும். ஆனால் நடந்தது என்ன? உலகிற்கே அமெரிக்கா ஹீரோ போன்றல்லவா சித்தரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா பயன்படுத்திய இந்த அணுஆயுத தொழில்நுட்பம் அவர்களுடையதுதான் என்றால் பெர்ல் துறைமுகத்தை ஜப்பான் தாக்கியடுத்த கணமே அதனைப் பயன்படுத்தி ஜப்பானை தாக்கியிருக்கலாமே. பலிவாங்கியிருக்கலாமே? அமெரிக்கா எதற்க்காக காத்திருந்தது?
இவர்களிடம் உலகையே தன்வசமாக்கும் தொழிநுட்பங்களும் அதனை உருவாக்கக்கூடிய விஞ்ஞானிகளும் இருப்பார்களேயானால், எதற்க்காக போருக்கு பின் ஜெர்மனியிடம் ஒப்பந்தம் ஏற்படுத்தி அவர்களின் விஞ்ஞானிகளை தன்வசமாக்க வேண்டும்.
உண்மையில் ஜெர்மன் படை சரணடையவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படாமல் சரியாக 45 நாட்கள் போர் நீடித்திருக்குமேயானால் உலகின் வரலாறு தலைகீழாக மாறிப்போயிருக்கும். ஜப்பானில் விழுந்த அந்த இரண்டு அணுகுண்டுகளில் ஒன்று இங்கிலாந்தின் மீது மற்றொன்று ரஷ்யாவின் மீதும் விழுந்திருக்கும்.
இந்தியாவிற்கும் உண்மையான சுதந்திரம் கிடைத்திருக்கும். சுபாஸ் சந்திரபோஸ் என்ற அற்புதமான தலைவர் கிடைத்திருப்பார்.
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு இந்த உலகம் ஹிட்லரைவிட கொடூரமானவர்களிடம் சிக்கிக்கொண்டிருக்கிறது என்பதில் எள் அளவும் சந்தேகம் வேண்டாம்.
சரி விசயத்துக்கு வருவோம். உலகையே குலைநடுங்க வைக்கும் அளவிளான இத்தகைய தொழில்நுட்பம் ஜெர்மனிக்கு எங்கிருந்து கிடைத்தன? கட்டாயம் மனிதனை அல்லாத ஒரு சக்தி உதவியிருக்கவேண்டும். அப்படி இருப்பார்களேயானால், அவர்கள் ஏன் இப்படியான அழிவிற்கு உதவ வேண்டும்?
உண்மை என்னவென்றால், அறிவில் மேம்பட்ட வேற்றுக்கிரகவாசிகள் இப்படியான அழிவுக்கு உதவுவது ஒன்றும் புதிதல்ல.
நம் வரலாற்று கோப்புப்படி இரண்டு உலகப்போர்கள் தான் இதுவரை நடந்துள்ளன. ஆனால் வரலாற்றுச் எச்சங்களை பார்க்கும் போது இது 5 அல்லது 6வது உலகப்போராக இருக்க வேண்டும்.
ஆம், இந்து மத புராணக்கதைகளில் ஒன்றான மஹாபாரதக்கதையில் வரும் மஹாபாரதபோரும் ஒரு உலகப்போர்தான். அதை நடத்தியவர்களும் வேற்றுக்கிரகவாசிகள்தான்…
தொடரும்…
Image may contain: 1 personImage may contain: outdoor and waterImage may contain: 2 people, text
No photo description available.Image may contain: 3 people


பகுதி 29
கடந்த வாரப் பதிவில் பின்னூட்டமாக கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு கட்டுரையின் போக்கிலேயே பதில் கிடைக்கும். அதில் பெரும்பாலானவர்களின் கேள்வி. வேற்றுக்கிரகவாசிகளின் உதவி இருந்தும், புதிய புதிய தொழிநுட்பங்கள் இருந்தும் ஹிட்லர் ஏன் தோற்றார்? ஏன் தற்கொலை செய்துகொண்டார்? என்பதுதான்.
ஹிட்லரின் தோல்விக்கு முழுக்காரணம் அவரின் தலைகணமும், எதிரியை குறைத்து மதிப்பிட்டதும்தான். இருந்தும் இரண்டாம் உலகப்போரில் அதிக உயிரிழப்பும், பொருளிழப்பும் நேசநாடுகளுக்கே. வெற்றிபெற்றவர்களுக்கு எப்படி அதிக இழப்பு ஏற்பட்டது என்பது சிந்திக்க வேண்டிய விசயம்.
வேற்றுக்கிரகவாசிகளுக்கு யார் தோற்கிறார்கள். யார் வெற்றி பெருகிறார்கள் என்ற கவலை இல்லை, காரணம் அவர்களின் தேவை வேறு.
எந்த ஒரு தலைவனும் தன்னிடம் இருக்கும் சக்திகளை (புதிய தொழிநுட்பங்களை) எதிரிகளிடம் சமர்பிக்கமாட்டான். ஆகையால் நடந்ததே அந்த விஞ்ஞானிகளின் கொலை.
ஹிட்லர் தற்க்கொலை செய்துகொண்டார் என்பது அழகாக காட்சிப்படுத்தப்பட்ட நாடகம். அதனை மொத்த உலகமும் அப்படியே நம்பியது.
புதிதாக ஒரு செயல்திட்டம் முயற்சி செய்து, அதில் வெற்றியும்கண்டு விட்டால் அடுத்து என்ன செய்வோம்? நமக்கு பிடித்தவருக்கும் அதே திட்டத்தை பரிசீலிப்போம் அல்லவா?
சுபாஸ் சந்திரபோஸுக்கு ஹிட்லர் பரிசீலித்த திட்டமும் அதுதான். இறந்துவிட்டதாக உலகை நம்பவைத்து மறைவாக வாழ்வது.
இதில் ஹிட்லர் இறந்ததாக கூறியது தன் உயிரை பாதுகாத்துக்கொள்ள. சுபாஸ் சந்திரபோஸ் இறந்ததாக கூறியது தன் நாட்டு மக்களின் சுதந்திரத்திற்காக.
சரி, இனி இந்த வாரப் பகுதிக்கு வருவோம்
ஆம், இந்து மத புராணக்கதைகளில் ஒன்றான மஹாபாரதக்கதையில் வரும் மஹாபாரதபோரும் ஒரு உலகப்போர்தான். அதை நடத்தியவர்களும் வேற்றுக்கிரகவாசிகள்தான்…
மஹாபரதம் என்றால் “பெரிய உலகப்போர்”. அந்த கதையில் கூறியிருக்கும் அனைத்தும் உண்மை என்றால், மஹாபரதப்போருடன் ஒப்பிடும் போது நாம் கண்ட இரண்டாம் உலகப்போரை சிறுசண்டை என்றுதான் கூறவேண்டும். அந்தளவுக்கு உயிர் சேதமும் பொருள் சேதமும் ஏற்படுத்திய போர் மஹாபாரதப்போர். இந்த போரில் நாம் இன்று பயன்படுத்தும் நிறைய தொழில்நுட்பங்கள் அன்றே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்த தொழில்நுட்பத்தை கொடுத்தவர்களும், போர் நடக்க காரணமானவர்களும் வேற்றுக்கிரகவாசிகள்தான்.
உதாரணமாக போரில் என்ன நிகழ்கிறது என்பதை திருதிராஸ்ட மஹாராஜாவுக்கு தெரியப்படுத்த அவர் தம்பி விதுரருக்கு தற்காலிகமான சக்தி ஒன்று கிடைக்கப்பெற்றது, அதன் மூலம் போர்க்களத்தில் நடக்கும் நிகழ்வுகளை அரண்மனையிலிருந்தே நேரடியாகப் பார்த்து தன் அண்ணனுக்கு கூறியிருக்கிறார் விதுரர். அன்றைக்கு வாழ்ந்தவர்களுக்கு இது மாயசக்தி மந்திரசக்தியாக தெரிந்திருக்கிறது. ஆனால் உங்களுக்கும் அது அப்படியேதான் தோன்றுகிறதா? இது என்ன தொழில்நுட்பம் என்று தெரியவில்லையா? “நேரடி ஒளிபரப்பு தொழில்நுட்பம்”. ஆஸ்திரேலியாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டியை நம் வீட்டு ஓய்வு அறையில் இருந்து பார்க்கிறோமே.
அதிலும் இவர்கள் போர்க்களத்தில் பயன்படுத்திய ஆயுதங்கள் தனி சிறப்புவாய்ந்தது.
போர்களத்தில் பயன்படுத்திய ஆயுதங்களில் சில அந்தந்த நபரின் கையில் இருந்தால் மட்டுமே இயக்ககூடியதாய் இருந்திருக்கின்றன. வேறு யாரேனும் அதனை எடுத்து பயன்படுத்த முயற்சித்தால் அது இயங்காதாம்.
இது என்ன தொழில்நுட்பம் என்று தெரிகிறதா?
“Biometric Lock System” கைரேகையை அறிந்து செயல்படுவது.
போர்வீரர்கள் பயன்படுத்திய சில அஸ்த்திரங்கள் ஏவும் போது ஒத்தையாக ஏவப்பட்டு இலக்கை அடைவதற்குள் பல நூறாக பிரிந்து சென்று தாக்குதல் நடத்துமாம்.
இது என்ன தொழிநுட்பம் என்று தெரிகிறதா?
“Cluster Bombs” கொத்துக்குண்டுகள்.
இது எல்லாவற்றுக்கும் ஒரு படி மேலே, சில முக்கிய கதாப்பாத்திரங்கள் பயன்படுத்திய அஸ்திரங்கள், ஆம் அவற்றை இயக்க வேண்டுமானால் அவர்கள் அதற்குரிய மந்திரத்தை உச்சரித்தால் மட்டுமே அது செயல்படதொடங்குமாம்.
இது என்ன தொழில்நுட்பம் என்று தெரிகிறதா?
‘Voice Recognition Lock System’ குரல் அறிந்து செயல்படுதல்.
இப்படியான நிறைய கண்டறிந்த தொழில்நுட்பங்கள் கண்டறியாத தொழில்நுட்பங்கள் என்று நிறைய மஹாபாரதக்கதையில் கொட்டிக்கிடக்கின்றன.
அதிலும் ‘பிரம்மாஸ்திரம்’ என்ற ஆயுதம் அனைத்திலும் உச்சம். அதனைப்பயன்படுத்தியபோது பூமியில் 10 சூரியன்கள் ஒன்றுசேர்ந்து உதித்தது போல வெளிச்சம் இருந்ததாம். வீடுகள், மரங்கள், கட்டிடங்கள் என்று அனைத்தும் சிதறி தூக்கியெறியப்பட்டதாம். அந்தத் தாக்குதலுக்குப் பிறகு உயிர்வாழ்ந்த மக்களில் பலர் குணப்படுத்த முடியாத புதிய நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்கள் என்று குறிப்புகள் காணப்படுகிறது. அணு ஆயுதத்தால் தாக்கப்பட்ட ஹிரோசிமா, நாகசாகியில் இதேதானே நடந்தது. அப்படியானால் ‘பிரம்மாஸ்திரம்’ என்பது அணு ஆயுதமா? அணு ஆயுதமே தான் ஆனால் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட அணு ஆயுதத்தைவிட பல மடங்கு சக்திவாய்ந்த அணு ஆயுதமாக இருந்திருக்க வேண்டும்.
இந்த இடத்தில்தான் ஒரு கேள்வி ‘பிரம்மாஸ்திரம்’ எங்கிருந்து கிடைத்தது? யார் கொடுத்தது? கதைபடி பார்த்தால் கடவுளால் வரமாக வழங்கப்பட்ட ஆயுதம் அது. ஆம், இந்தப் போரை முன்னின்று நடத்திய கடவுளின் அவதாரமான விஷ்ணுதான் அர்சுனனுக்கு சிவபெருமானிடமிருந்து ‘பிரம்மாஸ்திரம்’ கிடைக்க உதவியிருக்கிறார்.
மக்களுக்கு பெரும் அழிவைத்தரக்கூடிய அந்த ஆயுதத்தை கடவுள் ஏன் அர்சுனனுக்கு தரவேண்டும். கடவுளின் அவதாரமே முன்னின்று பேரழிவை நடத்தியிருக்கிறார். அவர் ஏன் அப்படி செய்ய வேண்டும் என்று பலரும் பல கதைகள், விளக்கங்கள் கொடுத்தாலும் மேலோட்டமாக பார்க்கும் போது அதற்கு இவ்வளவு பெரிய உயிர் இழப்புகள் அவசியம்தானா? என்ற கேள்வி வருதை தடுக்க முடியாது. உண்மையில் அவர்களின் தேவையே அதுவாக இருந்தால்? மக்கள் தொகையை கணிசமாக குறைக்கும் எண்ணத்தில் இப்படி செய்திருக்கலாம் அல்லவா?
இதேபோல் எகிப்தில் நடந்த பெரிய போர்கள், ரோமில் நடந்த பெரிய போர்கள் இவை அனைத்திலும் அவர்கள் கடவுளின் பங்களிப்பு இருந்திருக்கிறது. வேற்றுக்கிரகவாசிகள்தான் இந்த அனைத்து சம்பவங்களிலும் பின்னணியில் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் ஏன் அவ்வாறாக செய்யவேண்டும்? அப்போதுதான் மக்கள் அனைவரின் கவனமும் பல நூற்றாண்டுகள் அதனைப் பற்றியே இருக்கும். வேற்றுக்கிரகவாசிகள் பூமியில் உயர்தட்டு மக்களுடன் இணைந்து நடத்தும் பாதாள உலக ஆராய்ச்சிக்கு எந்தப் பாதிப்பும் குறிக்கீடும் இல்லாமல் இருக்கும்.
இது என்ன புதுக்கதை, பாதாள உலக ஆராய்ச்சியா? என்று நீங்கள் யோசிப்பது தெரிகிறது.
உங்கள் இதயத்துடிப்பை அதிகப்படுத்தும் தகவல்கள் அடுத்தப்பதிவிலிருந்து.
தொடரும்…
No photo description available.Image may contain: 1 person

Image may contain: 2 people
Image may contain: night

கடவுள் எனும் வேற்றுக்கிரகவாசிகள்” - பகுதி 30
பூமிக்கு அடியில் ரகசிய சுரங்கங்கள், குகைகள் அமைத்து அதில் நாம் கற்பனைக்கு எட்டாதா ஆராய்ச்சிகளை செய்துவருகிறார்கள். இன்றல்ல நேற்றல்ல, பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே இப்படியான ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன.
என்ன ஆதாரம் என்று கேட்கிறீர்களா?
Selim Hassan மற்றும் அவரது குழுவினர் இணைந்து எகிப்தில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். 1933-34 காலகட்டத்தில் Selim Hassanன் குழுவினர் கண்டறிந்தது அவர்களுக்கே ஆச்சர்யமாக இருந்தது. The Great Giza பிரமிட்களுக்கு அடியில் ஒரு பெரிய சுரங்கம் இருப்பதைக் கண்டறிந்தனர். அதனுள் சென்று ஆய்வு செய்ய எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களால் முடியவில்லை நீர்புகுந்து கொண்டதால் அவர்களை உள்ளே நுழையமுடியாமல் செய்தது. எனவே Selim Hassanந் குழுவினர் சுரங்கத்திற்குள் செல்லும் முயற்சியை கைவிட்டனர். அதன் பின் 1999ல் Zalti Hawass மற்றும் அவரது குழுவினர் இணைந்து Selim Hassan விட்ட பணியை நவீன தொழில்நுட்பங்களின் துணை கொண்டு மீண்டும் தொடங்கினர். நீரை வேகமாக வெளியாக்கி கொஞ்சம் கொஞ்சமாக சுரங்கத்திற்குள் நுழைந்தனர். உள்ளே செல்லச்செல்ல Zalti Hawass ஆச்சர்யத்தின் உச்சிக்கே சென்றுவிட்டனர். ஏனெனில் இந்த சுரங்கம் கிட்டத்தட்ட 4300 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் எப்படி இவர்களால் இவ்வளவு நேர்த்தியாக இந்த சுரங்கத்தை உருவாக்க முடிந்தது. இப்படியான செங்குத்தான சுரங்கம் அமைப்பது மிகவும் கடினம் இது எப்படி அவர்களால் சாத்தியமானது என்று ஆய்வாளர்கள் வியக்கிறார்கள். அடுத்தடுத்து அதனுள் இருக்கும் மூன்று தளங்களைக் கண்டறிந்தார்கள். அதற்குக்கீழே அவர்களால் செல்லமுடியாவில்லை, எவ்வளவு பெரிய இயந்திரம் கொண்டு தண்ணீரை வெளியாக்கினானும் அடுத்தகனமே தண்ணீர்நிரம்பிவிடுகிறாம். எனவே நீரில் மூழ்கி சென்று ஆய்வு செய்யும் கருவிகளை கொண்டு ஆய்வை தொடரலாம் என்று இருந்த Zalti Hawass குழுவினருக்கு இந்த ஆய்வை இத்துடன் முடித்துக்கொள்ளுமாறு ரகசிய உத்தரவு வந்தது, ஆய்வும் நிறுத்தப்பட்டது. Zalti Hawassன் குழுவினரில் சிலர் வாய்திறந்தனர். அவர்களின் கூற்றுப்படி அவர்கள் கண்டறிந்த மூன்று தளங்களை இல்லாமால் இன்னும் நிறைய தளங்கள் உள்ளே இருக்கின்றனவாம், இன்னும் சொல்லப்போனால் கண்டறிந்த மூன்று தளங்களும் வெறும் நிழைவுப்பாதைதானாம் உள்ளே ஒரு சிறிய நகரமே இருக்கிறதாம். இப்படி பல ஆச்சர்யங்களை அடுக்கிக்கொண்டே போனாலும் இறுதியில் ஒரு கேள்வி அந்த ரகசிய உத்தரவை பிரபித்தது யார்? அவர்கள் இப்படி தடுப்பதை பார்த்தால் அங்கு ஏதோ ஒரு மர்மம் அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.
ஆய்வாளர்கள் சொல்வதைப்போல பூமிக்கு அடியில் ஒரு நகரத்தை உருவாக்குவது சாத்தியமா? என்று கேட்டால் சாத்தியம் தான் என்று சாட்சியாக நிற்கிறது Derinkuyn Underground City.
Derinkuyn Underground Cityயை பற்றி உங்களில் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. துருக்கியில் (Turkey) 2800 வருடங்களுக்கு முன்பு பூமிக்கு அடியில் ஒரு நகரத்தையே உருவாக்கியிருக்கிறார்கள். ஆம் “சுரங்க நகரம்”. இதனை “சுரங்க நகரம்” அழைக்க காரணம் என்னவென்றால் ஒரு மனிதன் இதனுள்ளே நுழைந்துவிட்டால் தன் வாழ்நாள் முழுவதும் வெளியே செல்லாமலே இங்கேயே வாழ்ந்துவிடமுடியும் என்ற அளவுக்கு வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. இடம், உணவு, சுத்தமான நீர், சுத்தமான காற்று, உடை, மருந்துப் பொருள்கள், மருத்துவமனை, என்று அனைத்தும் இங்கே கிடைத்திருக்கிறது. சுமார் 2 ஆயிரம் பேர் தங்குவதற்கு தேவையான இடவசதியும் இருக்கிறது. பார்ப்பவர்கள் இது கனவா? நினைவா? என்று கிள்ளிப்பார்க்கும் அளவிற்கு அவ்வளவு நேர்த்தியான வடிவமைப்பு தனித்தனி அறைகள், நூலகம், மருந்தகம், கல்விக்கூடம் காற்றுவருவதற்கான பித்தியேக சுரங்கங்கள் சன்னல்கள், மழைநீர் சேமிப்பு கலன்கள் என்று நீண்டுகொண்டே போகின்றன. இவை அனைத்திலும் உச்சம் இந்த சுரங்க நகரம் இன்னும் முழுவதுமாக தோண்டி முடிக்கப்படவில்லை. அதிகபட்சமாக 278 அடி ஆழம் வரை கண்டறிந்துள்ளார்கள். ஆனால் அதற்கு கீழும் பல பகுதிகள் மறைந்திருக்கின்றனவாம். இப்படி ஒரு சுரங்கத்தை யார் உருவாக்கியிருப்பார்கள்? என்ன காரணத்திற்காக உருவாக்கியிருப்பார்கள்? கண்டறிந்தவரை அதில் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்கிறார்கள் விஞ்ஞானிகள். வெளியில் சுதந்திரமாக வாழ்வதை விடுத்து ஒரு நகர மக்களே ஏன் சுரகங்கத்திற்குள் வாழவேண்டும்? அண்டை நாட்டு போருக்கு பயந்து ஒழிந்து வாழ்ந்திருப்பார்கள் என்ற கூற்றும் நிலவுகிறது. இப்படியான சுரங்க நகரத்தை உருவக்குவது என்பது சாதாரண காரியமல்ல. அதிக திறன், தொழில்நுட்பம், ஆள்பலம் தேவை. ஒரு சுரங்க நகரத்தையே உருவாக்க தெரிந்த அந்த மக்களுக்கு போர் எல்லாம் சுண்டக்காய் விசயம். அவர்கள் பயந்து வாழ இதை உருவாக்கவில்லை, மறைந்து வாழ உருவாக்கியிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் கண்டிப்பாக மனிதர்கள் இதனுள் வாழ்வதற்காக இந்த சுரங்கங்கள் உருவாக்கவில்லை. வெளியுலகிற்கு தெரியாத ஏதோ ஒன்று இங்கே நடந்திருக்க வேண்டும். அது வேற்றுக்கிரகவாசிகளும் சில மனிதர்களும் சேர்ந்து நடத்திய உயிரியல் ஆய்வாகவும் இருக்கலாம்!
தொடரும்…
Image may contain: textNo photo description available.
No photo description available.Image may contain: text
Image may contain: food, indoor and text
Image may contain: outdoorNo photo description available.No photo description available.
Image may contain: outdoor
No photo description available.
No photo description available.
Image may contain: indoor
No photo description available.



பகுதி 31


வெளியுலகிற்கு தெரியாத ஏதோ ஒன்று அந்த சுரங்க நகரத்தில் நடந்திருக்க வேண்டும். அது வேற்றுக்கிரகவாசிகளும் சில மனிதர்களும் சேர்ந்து நடத்திய உயிரியல் ஆய்வாகவும் இருக்கலாம்!
அது எந்த மாதிரியான ஆய்வு என தெரிந்துகொள்ள நாம் மீண்டும் எகிப்துக்கு தான் செல்லவேண்டும்.
எகிப்தில் நிறைய விசித்திரமான உருவங்களில் ஓவியங்கள் சிலைகள் என பரவலாக காணமுடிகிறது. அதாவது மனித உடலும் வேறு மிருகத்தின் தலையும் அல்லது வேறுமிருகத்தின் உடலும் மனித தலையும். இதனை மேலோட்டமாக பார்க்கும் போது இது கற்பனையான ஓவியம், சிலை என்று கூறிவிட்டு நகர்ந்து விடலாம் ஆனால் அங்கே ஒரு சுவற்றில் தீட்டப்பட்டிருக்கும் ஓவியம் பார்ப்பவர்களின் இதயத்துடிப்பை பல மடங்காக எகிறவைக்கிறது. இது கற்பனையல்ல என்று சாட்சியாக நிற்கிறது. அந்த ஓவியம் தொடர் ஓவியமாக வரையப்பட்டுள்ளது, ஒன்றில் மனிதனும் மிருகமும் அருகருகே நிற்பதுபோலவும், அடுத்தபடத்தில் அவர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டு இரத்தம் பீச்சிக்கொண்டு அடிப்பது போன்றும், அடுத்தபடத்தில் மனிதத் தலை விலங்கின் உடலிலும் விலங்கின் தலை மனிதனின் உடலிலும் இணைக்கப்பட்டது போல் வரையப்பட்டுள்ளது.
கற்பனைசெய்து பார்க்கும் போது குலைநடுங்குகிறதே இது உண்மையாகவே நடந்திருக்குமா?
நிறைய ஆய்வாளர்கள் எகிப்தில் இப்படியான ஆய்வுகள் நடந்துள்ளது என அடித்துக் கூறுகிறார்கள். இப்படியான ஆய்வுகளால் பல விசித்திரமான உயிரினங்கள் எகிப்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பின்னாளில் எதோ ஒரு காரணத்தால் அவை முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கிறது. இதனை பலர் நம்பத்தயாராக இல்லை என்றாலும், நம்பத்தேவையான ஆதாரங்களும் இருந்துகொண்டுதாம் இருக்கின்றன.
1851ல் 80 டன்கள் எடை கொண்ட கல்லினால் ஆன ராட்சச தொட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் திறந்து பார்த்த ஆய்வாளர்களுக்கு பேரதிர்ச்சி, அதில் 7 வெவ்வேறு விலங்குகளின் உடல் உறுப்புக்கள் எலும்புக்கூடாக கிடைத்தது. ஆய்வாளர்களின் கூற்றுப்படி மேலே குறிப்பிட்டதை போல நடந்த ஆய்வுகளில் தோல்வியடைந்த உயிரினங்களை இந்த ராட்சச தொட்டியில் அடைத்துவைத்து அழித்திருக்கலாம் என்கிறார்கள்.
என்ன இது நம்பும்படியாக இல்லையே என்று இன்னும் குழப்பத்தில் இருக்கும் சிலருக்கு ஞாபகப்படுத்த வேண்டிய சில தகவல்கள்
இப்படியான விசித்திரமான உயிரினங்கள் ஒன்று நமக்குப் புதிதல்ல. இந்து மதக் கடவுளாக வழிபடும் விநாயகரை எடுத்துக்கொள்வோம் மனித உடல் யானையின் தலை. இது எப்படி சாத்தியமானது?
உடனே இந்துமதத்தை கொச்சைப்படுத்திவிட்டீர்கள் என்று கொடிபிடிக்க வேண்டாம். இந்த விநாயகர் உருவ வழிபாடு இந்துக்களுக்கு மட்டும் உரியதல்ல, ரோமனியர்களும் விநாயகர் போன்றே உருவ ஒற்றுமைக் கொண்ட கடவுளை வணங்கியிருக்கிறார்கள். அதற்கான குறிப்புகளும் ஆதாரங்களும் இருக்கின்றன.
குறுகிய வட்டத்தைவிட்டு வெளியில் வந்து சிந்திக்கவேண்டிய அவசியம் நம் தலைமுறைக்கு உண்டு.
நாகதேவதை வழிபாடும் அப்படித்தான் பாம்பு உடல் மற்றும் மனித தலை, இதுவும் இந்து மதத்தின் வழிபாடுதான் ஆனால் இந்து மதத்திற்கு மட்டுமே உரித்தானதல்ல சுமேரியர்களின் பெண்கடவுள் நாகதேவதை போலவே காட்சியளிக்கிறது.
இவை அனைத்திலும் உச்சம் கருடபகவான், உலகில் பல இடங்களில் வாழ்ந்தமக்கள் கழுகு தலையும் மனித உடலும் கொண்ட உருவங்களை வணங்கியிருக்கிறார்கள். ஜப்பானில் கிடைத்த மிகப்பழமையான ஓவியம் இதற்கு சாட்சி,
சுமேரியர்களின் களிப்பட்டையிலும் இந்த உருவத்தை காணலாம், சுமேரியர்கள் அந்த கழுகுமனிதனை படைக்கும் கடவுள் என்று வழிபட்டுவந்துள்ளன.
மெக்ஸிகோவில் கிடைத்த பண்டைய சிலையிலும் இதனை காணலாம்,
எகிப்தியர்கள் வணங்கிய கடவுளில் கழுகு மனிதனும் ஒன்று.
இன்றும் கழுகு நம் மனித இன வரலாற்றில் பெரும்பங்கு வகிக்கிறது. நாசிப்படையின் சின்னங்களில் இருப்பது இந்துமதத்தில் தெய்வக்குறியீடு அதனைக் கழுகு தன் காலுக்கு கீழ்வைத்திருப்பதை படத்தில் காணலாம் இந்த புகைப்படம் 11 டிசம்பர் 1941ல் எடுக்கப்பட்டது. அமெரிக்க சின்னத்திலும் கழுகைக் காணலாம். நேர் எதிரெதிர் நாடுகள் எப்படி இந்த ஒரு விசயத்தில் ஒத்துப்போகின்றன. இவைகளுக்கு இடையே என்ன தொடர்பு? எதனால் இப்படி அனைத்து இடங்களிலும் கழுகு முன்நிறுத்துகிறார்கள்?
இவைகளுக்குள் ஏதோ ஒரு உண்மை மறைந்துகிடக்கின்றது, அல்லது மறைக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால் ‘இவை அனைத்தும் கற்பனை” என்று வாய் வார்த்தையாக கூறி நகர்ந்துவிட முடியாது.
இதில் இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் சுமேரியர்கள் களிப்பட்டையில் கிடைத்த ஆதாரத்தின்படி அங்கு வணங்கப்பட்ட ஒரு பெண்கடவுள் பல கைகளுடன் சிங்கத்தை அடிமையாக்கி அதன் மேல் கால்வைத்துக்கொண்டு நிற்பதைப்போல் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த உருவம் அப்படியே இந்து மதத்தில் வணங்கப்படும் பெண்கடவுளுடன் அச்சு அசலாக ஒத்துப்போகிறது. தலையில் கவசம் பல கைகளில் ஆயுதங்கள், சிங்கத்தை அடக்கி அடிபணியவைத்திருப்பது என அனைத்தும் ஒத்துப்போகிறது. ஆடைகள்மட்டும் வணங்குபவர்களின் கலாச்சாரத்திற்கு ஏற்றார்போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இரண்டு இடங்களிலும் வணங்கப்பட்டது ஒரே கடவுளா? அல்லது ஒரே மாதிரியான கடவுள்களா?
அவர்கள் ஏன் சிங்கத்தை அடிபனியவைக்க வேண்டும்?
மனிதர்கள் பார்த்து பயந்துநடுங்கும் ஒரு மிருகத்தை தனக்கு அடிமையாக மாற்றிவிட்டால் மனிதர்கள் தானாக அடிபணிவார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘அவதார்’ என்ற ஹாலிவுட் படத்தில் இப்படியான காட்சியமைப்பை பார்த்திருக்கலாம். நாயகன் வேறு உலகத்தைச் சேர்ந்தவன் என்று தெரிந்ததும் அங்கு வசிக்கும் மக்கள் அவரைப் புறக்கணிப்பார்கள். அந்த மக்கள் பார்த்து பயப்படும் ராட்சச பறவையை நாயகன் தனக்கு அடிமையாக மாற்றியபிறகு அந்த மக்கள் அவனை தலைவனாக ஏற்றுக்கொள்வார்கள். உண்மையில் இதனைப் போன்றே நம் உலகிலும் நடந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது இந்த கடவுள்களை ஒப்பிடும்போது. இது இத்துடன் முடியவில்லை இன்னும் நிறைய ஆதாரங்கள் சுமேரியர்களின் களிப்பட்டைகளில் கிடைத்துள்ளன.
தொடரும்…
No photo description available.
No photo description available.No photo description available.
No photo description available.No photo description available.
No photo description available.No photo description available.
No photo description available.No photo description available.Image may contain: indoorImage may contain: 1 person

பகுதி 32
சுமேரியர்களின் களிப்பட்டைகளில் இப்படியான நிறைய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மனிதர்களுடன் மனிதனைப் போன்றே உருவம்கொண்ட விசித்திரமான உயிரினங்கள் போரிடுவது போலக் காட்டப்பட்டுள்ளது. அதிலும் ஒரு அதிசியம் மூன்று கண்களை கொண்ட ஒரு உயிரினம் காட்டப்பட்டுள்ளது. இந்துக்களின் கடவுள் சிவபெருமானுக்கு மூன்றுகண்கள் என்று நம்பப்படுகிறது. இப்படியான ஆய்வுகள் இன்றல்ல நேற்றல்ல வரலற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் நடந்திருக்கிறது.
அவைகளை நடத்துவது அறிவில் மேம்பட்ட வேற்றுக்கிரகவாசிகள், அதற்கு உதவியாக இருப்பது அந்தந்த காலக்கட்டத்தில் மனித இனத்தை தன் கட்டுப்பட்டில் வைத்திருக்கும் உயர்மட்ட அரசு அல்லது அமைப்பு, எகிப்தில் அரசகுடும்பம், துருக்கியில் Phrygians மன்னர், மஹாபாரதக் காலத்தில் அஸ்தினாபுர அரசகுடும்பம், ஆம் அதற்கு ஒரு சிறு உதாரணம்
மகாபாரதத்தில் துரியோதனனின் தாய் காந்தாரி கர்ப்பமாக இருக்கும் போது கல்லால் தன் வயிற்றில் அடித்துக்கொள்வதால் கர்ப்பம் கலைந்து விடுகிறது, அப்படி கலைந்த கருவின் துண்டுகளை வேதவியாசமுனிவர் ஒரு குகையில் வைத்து 100 நெய் பனைகளில் இட்டு வளர்ப்பார், அப்படி பிறந்தவர்கள் தான் துரியோதனனும் அவரது தம்பிகளும். சாதாரண மனிதர்களை போல பெண்ணின் வயிற்றில் 10 மாதம் கருவாக வளர்ந்து பிறந்தவர்கள் அல்ல.
இது என்ன தொழில்நுட்பம் என்று உங்களால் கணிக்கமுடிகிறதா?
செயற்கை கருப்பையில் (Artificial uterus) உயிரினங்களை உருவாக்கும் தொழில்நுட்பம். மனித உயிர்களை இந்த தொழில்நுட்பத்தால் உருவாக்கவேண்டும் என்று இன்றைய விஞ்ஞானிகள் முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.
நிறைய ஹாலிவுட் படங்களில் பார்த்திருக்கலாம். இன்றுவரை இது சாத்தியப்படாவிட்டாலும், எதிர்காலத்தில் இது சாத்தியமே. இந்த தொழில்நுட்பத்தில் மற்ற உயிரினங்களை உருவாக்கும் முயற்ச்சி தொடங்கப்பட்டுவிட்டது. டோக்கியோவை சேர்ந்த விஞ்ஞானிகள் EUFI (extrauterine fetal incubation) என்ற பெயரில் ஆடுகளை இந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளர்கள்.
இப்படியான ஒரு தொழில்நுட்பத்தை வேதவியாசர் ஏன் அன்றே பயன்படுத்தியிருக்கக் கூடாது? அன்றைய சக மனிதன் இதனை சரியாக புரிந்துகொள்ளாமல் அதை நெய் பனை என்று நினைத்திருக்கலாம் அல்லவா?
அப்படி பார்த்தால் பஞ்சபாண்டவர்கள் உருவாக காரணமும் வேற்றுக்கிரகவாசிகள்தான், துரியோதனாதிகள் உருவாக காரணமும் வேற்றுக்கிரகவாசிகள்தான், மகாபாரதப்போர் நடக்க காரணமும் வேற்றுக்கிரகவாசிகள்தான் இவை அனைத்தையும் ஒரே இனம் செய்ததா? அல்லது வேறு வேறு இனங்கள் செய்தனவா? ஏனெனில் கடவுள்களில் தேவர்கள், அசூரர்கள் அதேபோல் கடவுள், சாத்தான் என்று இருபிரிவினர் இருப்பதாக நம்பப்படுகிறது. அதுவே உண்மையாக இருக்கலாம் அல்லவா?
அப்படியானால் இவர்களுக்கு நம்மிடம் என்னதான் தேவை?
நம்மில் இனம் பிரிக்கிறார்களா? நம்மை அவர்களை போல மேம்பட்ட உயிரினமாக மாற்ற இப்படியான ஆய்வுகள் தேவைப்படுகிறதா? சரி பூமிக்கு வெளியே கூடாரம் அமைத்து பூமிக்கு வந்து வந்து செல்லும் ஒரு இனம். பூமிக்கு உள்ளேயே கூடாரம் அமைத்து தங்கியிருக்கும் ஒரு இனம் என்று இரண்டு இனங்கள் இருப்பதாக எடுத்துக்கொள்வோம். இதனை இந்துக்கள் பண்டைய கதைகளில் தேவலோகம், பூலோகம், பாதாள உலகம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
கிருஸ்துவ மதத்தில் கடவுள் அனுப்பிய தேவதை கடவுள் சொல்வதை கேட்காமல் தன் விருப்பத்திற்கு செயல்படத்தொடங்குகிறது அதனை மேலோகத்திற்கு அழைக்காமல் இங்கே விட்டுசெல்கிறார்கள் அதனை வீழ்த்தப்பட்ட தேவதைகள் என்கிறார்கள். அவைகள் இன்றும் பூமிக்கடியில் வாழ்ந்துவருகின்றன.
ஆக அவர்கள் இரண்டு இனமாக இருக்கவேண்டும் அல்லது ஒரே இனத்தில் இரண்டு பிரிவுகளாக இருக்கவேண்டும்.
இவர்களுக்கு நடுவே மனித இனத்தை மந்தை ஆடுகளைப்போல் வளர்த்து ஒன்றோடு ஒன்று மோதவிட்டு விளையாடுகிறார்கலோ என்ற எண்ணம் கூடதோன்றுகின்றன.
“என்னப்பா, இது வேற்றுக்கிரகவாசிகள் இருக்கிறார்கள் என்றால் கூட நம்பலாம், திடீர் என்று அவர்களில் இரண்டு வெவ்வேறு இனம் இருப்பதாக சொல்கிறாயே நம்பும் படியாகவா இருக்கிறது”என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
உங்களுக்காக ஒரு ஆதாரம்
பயிர்வட்டத்தைப்பற்றி நீங்கள் நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள், தமிழில் பலர் அதனைப்பற்றி வெகு சிறப்பாக எழுதியுள்ளார்கள். அதனால் முழுவதுமாக அதைப்பற்றி விளக்கப்போவதில்லை, நமக்கு தேவையான ஒரு சிறு பகுதியை மட்டும் எடுத்துக்கொள்வோம்.
முதலில் பயிற்வட்டம் பற்றி சிறு விளக்கம்
பயிர்வட்டம் என்பது பெரும்பாலும் கோதுமை, எண்ணைவித்துக்கள் பயிர்களை மடக்கி தரையில் படியவைத்து உருவமாகவோ, வட்டமாகவோ உருவாக்கப்படுகிறது. வருடத்திற்கு 150 – 300 பயிர்வட்டங்கள் உலகமுழுவதும் 50க்கும் அதிகமான நாடுகளில் உருவாகின்றான. இதில் 75 – 80% பயிர்வட்டங்கள் தெற்கு இங்கிலாந்தில் உருவாக்கப்படுகிறது. அதுவும் குறிப்பாக Avebury, Silburg hill, Stonehenge இருக்கும் இடங்களுக்கு அருகில் அதிகம். உலகில் இருக்கும் விடைதெரியாத மர்மங்களின் பட்டியலில் பயிர்வட்டத்திற்கு தனியிடம் உண்டு.
மிக பிரம்மாண்டமான பயிற்வட்டங்கள் கூட இரண்டு மணிநேரத்திற்குள் இரவோடு இரவாக உருவாக்கப்படுகிறது. இதனை நேரில்பார்த்தவர்கள் பறக்கும் தட்டுகள் மூலமாக இவைகள் உருவாக்கப்படுகின்றன என்கிறார்கள். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் பயிரை மடக்கிதான் இந்த பயிர்வட்டத்தை உருவாக்கமுடியும் ஆனால் அதில் மடக்கப்படும் பயிர்களில் ஒன்றுகூட சேதமாவதில்லையாம்.
மெய்சிலிர்க்கவைக்கும் ஆயிரமாயிரம் பயிர்வட்டங்கள் இருந்தாலும் நமக்கு தேவையான ஒன்றைப் பற்றி மட்டும் பார்ப்போம்.
தொடரும்…
No photo description available.
No photo description available.
Image may contain: 1 personNo photo description available.
No photo description available.
No photo description available.


கடவுள் எனும் வேற்றுக்கிரகவாசிகள்” - பகுதி 33
மெய்சிலிர்க்கவைக்கும் ஆயிரமாயிரம் பயிர்வட்டங்கள் இருந்தாலும் நமக்கு தேவையான ஒன்றைப் பற்றி மட்டும் பார்ப்போம்.
ஆகஸ்ட் 15, 2002ல் இங்கிலாந்தில் உள்ள Sparsholt - Hampshire என்ற இடத்தில் ஒரு பிரம்மாண்டமான பயிர்வட்டம் உருவானது. வளக்கம்போல் இதில் இருந்தது கணிதவியல் குறியீடுகளோ, மர்ம குறியீடுகளோ அல்ல, வேற்றுக்கிரகவாசியின் உருவமும் தெள்ளத்தெளிவாக தெரிந்தது. விசயம் காட்டுத்தீபோல பரவத்தொடங்கியது மீடியாக்களும் வேற்றுக்கிரகவாசிகளைப்பற்றிய ஆய்வாளர்களும் கூட்டம்கூட்டமாக குவியத்தொடங்கினர். காரணம், அதுநாள்வரை இப்படி அவர்களின் உருவம் பதித்த பயிர்வட்டம் உருவானதேயில்லை இதுதான் முதல்முறை. பார்த்தவர்கள் அனைவரும் அச்சர்யத்தில் திக்குமுக்காடிப்போனார்கள். பார்ப்பதற்கு தத்ரூபமாக 3D Painting போல மிகவும் நுட்பமாக உருவாக்கப்பட்டிருந்தது, கோவமான பார்வையுடன் கையில் வட்டமாக எதையோ காட்டுவதுபோல இருந்தது அந்த உருவம். அந்த வட்டவடிவம் பார்ப்பதற்கு நாம் பயன்படுத்தும் CD, DVDயை போல இருப்பதால் அதில் ஏதேனும் தகவல் இருக்கலாமோ என்றகோணத்தில் ஆய்வுகள் நடக்கத்தொடங்கின. இறுதியாக கணிணி மொழியான 8 Bit Binary Code ASC II என்ற முறையில் தகவல் அதில் இருப்பதை கண்டறிந்தனர்.
அதிலிருந்த தகவல்களை வெளியே எடுத்தபோதுதான் காத்திருந்தது உயிரையே உறையவைக்கும் அதிர்ச்சி.
அதில் இருந்த தகவல் இதுதான் "Beware the bearers of false gifts and their broken promises. Much pain, but still time. Believe there is good out there. We oppose deception. Conduit closing. Ding (bell sound)” அதவாது
அவர்களின் எதிரிகள் ஏமாற்றுக்காரர்களாம், பொய்யான வாக்குறுதிகளையும், பொய்யான பரிசுகளையும் கண்டு ஏமாறவேண்டாமாம், அதிக வலியிருந்தாலும் இன்னும் நேரம் இருக்கிறதாம், அவர்களிடமிருந்தும் விலகியிருப்பது நல்லதாம். .(கடைசியாக மணியின் சத்தம்)
இதை பார்த்த அனைத்து விஞ்ஞானிகளும் செய்வதறியாது விழிபிதிங்கிப்போனார்கள். ஏனெனில் இந்த பயிற்வட்டத்தை மனிதர்கள் செய்திருப்பார்களோ என்ற கோணத்தில் நடந்த அனைத்து ஆய்வுகளுக்கும் எதிர்மறையான முடிவுகளே வந்தன. மனிதர்கள் செய்திருக்கலாம் என்று சந்தேகப்படும் அளவிற்கு சிறு தடயம்கூட கிடைக்கவில்லை. இதையாருக்குச் சொல்கிறார்கள்? ஏன் சொல்கிறார்கள்? யார் இவர்களின் எதிரிகள்? என்று ஆயிரமாயிரம் கேள்விகளை அடுக்கினானும் அதில் மிக முக்கியமான கேள்வி, இதனை உருவாக்கிய வேற்றுக்கிரகவாசிகள் “நல்லவர்களா? கெட்டவர்களா?” விஞ்ஞானிகளுக்கு இது மிகப்பெரும் தலைவலியாக இருந்த சம்பவம். ஏனெனில் வேற்றுக்கிரகவாசிகள் இருக்கிறார்களா? இல்லையா? என்றே இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத போது, பங்காளி தகராறுடன் இரண்டு வெவ்வேறு இன வேற்றுக்கிரகவாசிகள் இருக்கிறார்கள் என்று தகவல் கிடைத்தால் என்ன செய்ய முடியும்?
இப்போது நான் கடந்த பகுதியில் குறிப்பிட்டது போல் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் தேவர்கள் மற்றும் அசூரர்கள் இவர்களாக கூட இருக்கலாம் அல்லவா?
இதில் இன்னொரு ஆச்சர்யம் அந்த வேற்றுக்கிரகவாசியின் உருவத்திற்கு பின்னால் மூன்று புள்ளிகள் இருப்பதை ஆய்வாளர்கள் அவதானித்தார்கள். அந்த புள்ளிகளை Orion நட்சத்திரத்துடன் ஒப்பிட்டனர். என்ன ஆச்சர்யம்! கனகச்சிதமாக ஒன்றோடு ஒன்று பொருத்துகிறது. எகிப்த்தின் பிரமிடுகளை மேலிருந்து பார்த்தால் இதே அமைப்பில் இருப்பதாக முன்பே குறிப்பிட்டிருந்தேன். அதே Orion நட்சத்திர மண்டலம் மீண்டும் பயிர்வட்டவாயிலாக.
ஒரு விசயம் மட்டும் உறுதி மனித இனத்தின் தோற்றத்திற்கும் Orion நட்சத்திர மண்டலத்திற்கும் ஏதோ ஒரு அழுத்தமான தொடர்பு உண்டு.
இன்னும் சொல்லப்போனால் நாம் புராணங்களில் கூறப்படும் தேவலோகம் அதுவாகக்கூட இருக்கலாம்.
அப்படியானால் பூமிக்கு வெளியிலிருந்து வந்து பயிர்வட்டத்தின் மூலம் நம்மை எச்சரிக்கும் இவர்கள் தேவர்களாகவும், பூமிக்கு அடியில் பாதாளக்குகைகளில் இருப்பவர்கள் அசூரர்களாகவும் கூட இருக்களாம்.
மேலே பயிர்வட்டத்தில் கூறியபடி பார்த்தால், தன்னை மனித இனத்தின் பிரதிநிதியாக காட்டிக்கொண்ட தலைமையும் பாதாளகுகைகளில் இருக்கும் வேற்றுக்கிரகவாசிகளும் ஏற்கனவே தொடர்பில் இருக்கிறார்கள் என்று பொருள்.
அது உண்மை எனில், அவர்களுக்கு இடையில் ஒருவகையான ஒப்பந்தமும் (broken promises), சில கொடுக்கல் வாங்கல்கள் (false gifts) இருப்பதும் உண்மையாகத்தான் இருக்கவேண்டும். (அது முழுக்க முழுக்க உண்மை, அதனைப்பற்றிய விளக்கம் கடைசிப்பகுதியில் பார்ப்போம்)
தற்பொழுது நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு முக்கிய தகவல், தன்னை மனித இனத்தின் பிதிநிதியாக காட்டிக்கொண்டு வேற்றுக்கிரகவாசிகளுடன் இணைந்து இவ்வளவு வேலைகளை செய்துவருபவர்கள் யார்? அவர்களின் பாதாளக்குகைகள் எங்கே இருக்கிறது? என்பதுதான்,
அவைகளை பற்றிய தகவல்களுடன் அடுத்தப்பகுதியில் சந்திப்போம்….
தொடரும்…
No photo description available.No photo description available.
No photo description available.Image may contain: night
No photo description available.


 பகுதி 34
வேற்றுக்கிரகவாசிகளுடன் தொடர்பில் இருக்கும் அந்த மனிதர்கள் யார் யார் என்று தெரிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறீர்களா?
வெளிப்படையாக பார்த்தால் இன்று உலகையே தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள துடியாய் துடிக்கும் அமெரிக்க அரசு, உண்மையில் அந்த அமெரிக்க அரசையே தன் விரல் அசைவுக்கு ஆடவைக்கும் ‘New World Order’ அமைப்பு.
‘New World Order’யை பற்றி சிலருக்கு தெரிந்திருக்கலாம், சிலருக்கு அந்த பெயரே புதிதாக இருக்கலாம். (இதனைப்பற்றிய முழு விபரம் பின்னர் வருகிறது).
தற்பொழுது இவர்களின் ரகசிய ஆய்வுகள் எந்தெந்த இடங்களில் நடக்கிறது என்று பார்த்துவிடுவோம்.
◈ Mt.Archuleta Underground, Dulce, New Mexico.
◈ Groom Lake, Area 51, Nevada.
◈ Los Alamos National Laboratory, New Mexico.
◈ Edwards Air Force Base, Mojave Desert, Southern California.
◈ Death Valley, Panamint Mountains Region, California.
◈ New Schwabenland, Antarctica.
◈ Alsace Lorraine Mountains Area of France Germany.
◈ Camp Hero Near Mountauk Point, Long Island New yark.
◈ Plumas National Forest in Northern California.
◈ Blue Lake New Mexico.
◈ Norton Air Force Base, California.
மேலே குறிப்பிடப்பட்டுள்ளது சில இடங்கள்தான், இணையதளத்திற்கு சென்று “Underground Alien Bases” என்று Google’லில் தேடிப்பாருங்கள். இதைப்பற்றிய தகவல்கள் கொட்டும். USல் மட்டும் 129 ‘Deep Underground Bases’ இருப்பதாக கூறப்படுகிறது. இதில் மிகமுக்கியமான தளவாடங்களாக கருதப்படுவது Area 51, Dulce Base, Los Alamos Base.
அப்போ நம்ம நாட்டில் அப்படியான Underground Bases இல்லையா? என நீங்கள் கேட்பது புரிகிறது. உண்மையை கூறவேண்டுமெனில் உலகிலேயே மிகப்பெரிய Underground Base இருப்பது நம் நாட்டில் தான் இமையமலைத்தொடருக்கு அடியில். இன்னும் சொல்லப்போனால் ஒரு காலத்தில் உலகில் உள்ள அனைத்து Underground Basesக்கு இதுதான் தலைமை செயலகமாக இருந்திருக்கிறது. அதன்பின் எகிப்துக்கு மாற்றப்பட்டது, இன்று USAக்கு அடியில் செயல்பட்டுவருகிறது.
கடவுள் வாழும் கைலாயம் என்று செல்வார்களே நினைவிருக்கிறதா?
இமையமலை அடிவாரங்களில் வசிப்பவர்களின் கூற்றுப்படி அங்கே பல அமானுஷ்ய சம்பங்கள் இமையமலையை சுற்றி நடப்பதாகவும் அவைகள் அனைத்தும் கடவுளின் சித்தம் என்று நம்புகிறார்கள்.
இன்னும் ஒருபடி மேலே செல்லவேண்டும் என்றால் கடவுள் இமையமலைக்கு வந்து வந்து செல்வதாகவும் அதனை சிலர் கண்டதாகவும் கூறுகிறார்கள்.
இன்றும் இமையமலைத்தொடரில் கிட்டத்தட்ட 70%க்கு மேல் மனிதனின் காலடி படாத இடங்களாக இருந்துவருகிறது.
அங்கு புதைந்துகிடக்கும் ரகசியங்களுக்கு அளவே இல்லை.
சரி இதனைப்பற்றிய ஆய்வுகள் ஒருபுறம் இருக்கட்டும்.
இந்தளவுக்கு பிரமாண்டமான Underground Basesகளை எப்படி உருவாக்கியிருப்பார்கள்? என்று தேடிபார்த்தபோதுதான் அடுத்த உண்மை தெரியவந்தது.
பெரும்பாலான Underground Baseகள் இயற்கையாகவே இருந்த குகைகளை அவர்களுக்கு ஏற்றார்போல் மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
குகைகள் என்றால் ‘குணா’ குகையைப் போல் இருக்கும் என்று சிறிதாக கற்பனை செய்துவிடாதீர்கள்.
‘கிட்டத்தட்ட 2.41 – 7.24 கிலோமீட்டர் சுற்றளவுகொண்ட பெரிய குகைகளில் பலதளங்களை கொண்ட பெரிய Underground Bases பூமிக்கடியில் இருக்கின்றன. 11 – 14 அளவிலான நிலநடுக்கங்கள் வரும்போது இந்த உண்மை வெளிவுலகிற்கு தெரியவரும்’ என்று Dr.Bill Degale’s கூறியிருக்கிறார்.
அதெப்படி பூமிக்கடியில் தானாகவே இவ்வளவு பெரிய குகைகள் உருவாகும்?
உதாரணத்திற்கு ½ அடி கனத்தில் உருவாக்கப்படும் காங்ரீட் ஸ்லாப்பின் உள்ளே 0.5mm அளவிற்கு வெற்றிடம் உருவாவதை தடுக்கமுடியாது. நம் பூமிப்பந்து நெருப்புக்குழம்பாக இருந்து பின் இறுகியது நமக்கு தெரிந்த ஒன்றே, அந்தவகையில் பார்த்தால் மேலே கூறிய குகைகளின் அளவுகள் எல்லாம் 0.001mm கணக்கில்தான் வரும்.
இந்த குகைகள் எல்லாம் ஒரே இடத்தில் இருப்பதல்ல. உலகம் முழுவதும் பரவிகிடக்கின்றன.
இதில் என்ன ஆச்சர்யம் என்றால், இவைகள் அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று பல 1000 கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்தும் பெரிய பெரிய சுரங்கப் பாதைகள் உருவாக்கப்பட்டு ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளனவாம்.
10 அல்லது 20 அதிகபட்சம் 100 கிலோமீட்டர் சுரங்கப்பாதை என்றால் கூட ஏற்றுக்கொள்ளமுடியும், இது எப்படி சாத்தியமாகும்? என்று நீங்க யோசிப்பது புரிகிறது.
ஒரு நாளில் கிட்டத்தட்ட 11 கிலோமீட்டர் சுரங்கம் வெட்டும் தானியங்கி இயந்திரம் இருந்தால் இது சாத்தியம் தானே. Los Alamos National Laboratory, New Mexicoவில் தான் இந்த இயந்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன. இப்படியான TBM (Tunnel Boring Machine) இயந்திரங்களை 1982லேயே தயாரித்துவிட்டதற்கான தகவல்களும் புகைப்படங்களும் வெளியாகின.
அவைகள் இன்று வெளிப்படையாகவே சுரங்கம் தோண்டும் பணிகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவைகள் வெளி உலகிற்கு பயன்படுத்துவதற்கு பல வருடங்களுக்கு முன்பே பாதாளக்குகைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அப்படியானால் இன்றைய காலகட்டத்தில் அவர்கள் எந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவார்கள்?
Nuclear Powers Tunnel Boring Machine. இதன் சிறப்பு என்னவென்றால் இதன்மூலம் சுரங்கம் குடைந்துகொண்டு செல்லும் போது கழிவுகளாக சிறுப் பாறைத்துகள் கூட மிஞ்சுவதில்லை. அதனை அதிஉயர் வெப்பநிலையில் உருக்கி பாறைக்குழம்பாக மாற்றி சுரங்கத்தின் சுற்றுச்சுவரிலேயே பூசிவிடுகிறதாம். அப்படி செய்வதால் சுரங்கத்தின் சுற்றுச்சுவர் பார்ப்பதற்கு கண்ணாடிபோல வளவளப்பாக காட்சியளிக்குமாம். இவ்வளவு வேலைகள் பூமிக்கு அடியில் நடக்கிறது என்றால் ஒரு சிறு சத்தமோ, அதிர்வோ வெளிவுலகிற்கு கேட்கமாலா போய்விடும்?
யார் சொன்னது கேட்கவில்லையென்று.
ஒன்று இரண்டல்ல ஆயிரக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள் சாட்சியாக…
தொடரும்…
No photo description available.
Image may contain: indoor
Image may contain: mountain and outdoor
No photo description available.

கடவுள் எனும் வேற்றுக்கிரகவாசிகள்” - பகுதி 35
வணக்கம்…
சில தனிப்பட்ட காரணங்களால் சொன்ன தேதியில் பகுதிகளை வெளியிடமுடியாமல் போனதற்கு வருந்துகிறேன்…
மன்னிக்கவும் நண்பர்களே…
1977ல் நியூசிலாந்தின், Aucklandல் வாழும் மக்களிடமிருந்து ஒரு புகார் எழுந்தது, அதாவது தூரத்தில் டீசல் எஞ்சின் ஓடுவது போல ஒரு சத்தம் மெதுவாக கேட்டுக்கொண்டே இருக்கிறது என்பதுதான் அந்த புகார். பலருக்கு இந்த சத்தம் தெளிவாக கேட்கவே இதன் உண்மையை அறிய ஒருகுழு அமைத்து விசாரணை செய்தார்கள். விசாரணையின் முடிவு, அருகிலும் சரி தொலைவிலும் சரி அப்படி எந்த டீசல் எஞ்சினும் ஓடவில்லை.
ஆனால் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது, கடிகார முள் நகர்வையும் கேட்கக்கூடிய அமைதியான இரவுகளில் மிக தெளிவாக அந்த சத்தத்தை கேட்கமுடிந்தது. திடீர் என்று இந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என்று யாராலும் உறுதியாக கூறமுடியவில்லை.
தரையில் உறங்கும் பளக்கமுடைய சிலர் இந்த சத்தம் தங்கள் வீட்டிற்கு கீழிருந்துதான் வருகிறது என்று புகாரில் பதிவுசெய்திருக்கிறார்கள். இந்த சம்பவம் ஒரு கிராமத்தில் நடந்ததாலோ என்னவோ யாரும் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இதனைத் தொடர்ந்து 1979ல் இங்கிலாந்து Bristol என்ற இடத்தில் வாழும் மக்களும் இதே புகாரை முன்வைத்தனர். இந்தமுறை சம்பவம் காட்டுத்தீயாக பரவத்தொடங்கின செய்தித்தாள்களின் முதல்பக்கத்தில் ‘The Hum’ என்ற தலைப்பில் பரபரப்பாக பேசப்பட தொடங்கினர். புகார் கொடுப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துக்கொண்டே சென்றது. இறுதியாக பார்க்கும் போது கிட்டத்தட்ட் 800க்கும் அதிகமான மக்கள் இப்படியான சத்தம் கேட்பதாக புகார்தெரிவித்தனர். அரசும் தன் பங்குகிற்கு விசாரணை நடத்திக்கொண்டே இருந்தது. இருந்தது.. இருந்தது…
அதனையடுத்து 1992ல் US, New Mexicoவிலும் அதே புகார்கள், அதே சத்தம், அதே விசாரனை, அதேபோல் முடிவில்லை. திடீரென University of New Mexico களத்தில் இறங்கியது, ‘எப்பாடுபட்டாவது இதற்கு ஒரு முடிவு கிடைக்காமல் விடமாட்டேன்’ என தீவிரமாக ஆய்வு நடத்தியது. மக்கள் அனைவரும் எப்படியும் இதற்கு ஒரு தீர்வு கிடைத்துவிடும் என்று நம்பிக்கையில் காத்துக்கிடந்தனர். ஆய்வை முடித்து தனது ஆய்வறிக்கையையும் வெளியிட்டது. அந்த ஆய்வரிக்கையை படித்த மக்கள் கோவத்தின் உச்சிக்கே சென்றனர். University of New Mexico நடத்திய ஆய்வின் முடிவு இதுதான். “மக்களுக்கு கேட்பதாக கூறப்படம் சத்தம் வெளியிலிருந்து வரவில்லை, உண்மையில் அப்படி ஒரு சத்தம் உருவாக்கப்படவில்லை, அவரவர்களின் காதுக்குள்ளிருந்துதான் வருகின்றான. இது ஒரு உடல்நல குறைபாடு” (மக்களை எந்த அளவுக்கு முட்டாளாக நினைக்கிறார்கள் என்பதை இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்).
இப்படியான உடல்நலக்குறைபாடு ஏதோ ஒருவருக்கு இருக்கிறது என்றால் ஒத்துக்கொள்ளலாம். ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான உடல்நலகுறைபாடு ஏற்படுகிறது என்றால் நம்பமுடிகிறதா?
அதிலும் ஒரு பெண்மணி இந்த சத்தம் கேட்பதை சகிக்கமுடியாமல் 100 மைல்க்கு அப்பால் இருக்கும் அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கு சென்றவுடன் இந்த சத்தம் கேட்கவில்லை, மாறாக நீண்ட நாட்களாக இருந்த தலைவலி பூரணகுணமானது என்று ஆய்வுக்குழுவிடம் தெரிவித்தார். ஆனால் ஆய்வுக்குழுவின் பதிலோ???
1999ல் US, Kokomo Indianaவிலும் இப்படியான சத்தங்கள் கேட்பதாக புகார்கள் எழத்தொடங்கின. புகார்கள் அதிகமாகிகொண்டே போனது. 2002ல் இதைப்பற்றிய ஆய்வுக்காக ஒரு இலட்சம் அமெரிக்க டாலர் ஒதுக்கப்பட்டு, ஆய்வுகளும் மிக தீவிரமாக நடத்தப்பட்டன. இந்தமுறை ஆய்வுமுடிவில் நீண்டகாலமாக அந்த பகுதியில் இயங்கிவந்த தொழிற்சாலையின் மீது பலிபோடப்பட்டது.
ஒன்று இரண்டல்ல ஏராளமான இடங்களில் இப்படியான புகார்கள் வரத்தொடங்கின.
Calgary, Alberta, Canada – 2008
Windsor, Ontario, Canada – 2009
Woodland, England, UK – 2011 கனடா அரசு 2013ல் 60 ஆயிரம் அமெரிக்கடாலர் இதைப்பற்றிய ஆய்வுக்கு ஒதுக்கியது.
Beaufort, Country Kerry, Ireland – 2012
Seattle, Washington, US – 2012
Wellington, Newzeland – 2012
இவைகளைப் பற்றிய விளக்கங்கள் எதுவும் இதுவரைக் கிடைக்கவில்லை. ஒரே மாதிரியான சத்தம் வேவ்வேறு இடங்களில் வேவ்வேறு மனிதர்களால் உணரப்படுகிறது. அனைத்து உயர்மட்ட அதிகாரவர்கமும் அதனை மிக அலட்சியமாக கடந்து செல்கிறது. அப்படியானால் நடப்பது என்ன?
எதனால் இந்த சத்தம் வருகிறது என்று அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். அல்லது அந்த சத்தத்திற்கு அவர்களும் ஒருவகையில் காரணமாக இருக்க வேண்டும்.
இப்படியான சத்தம் நிலப்பரப்பில் மட்டுமல்ல கடல் பரப்பிலும் உணரப்பட்டுள்ளது.
தென் அமெரிக்காவின் மேற்கு கடல்பகுதியில் அடியிலிருந்தும் வித்தியாசமான சத்தங்கள் வருவதை அமெரிக்காவின் National Oceanic and Atmospheric Administration (NOAA) 1997ல் பதிவுசெய்தனர். திமிங்கலம் போன்ற உயிரின்ங்கள் எழுப்பும் ஒலிகூட மிகப்பெரியதாய் இருக்கும். அப்படியான ஒலியாக இருக்குமோ என ஆராய்ந்தால், எதிர்மறைமுடிவே மிஞ்சியது இந்த சத்தம் கடலுக்கு அடியில் நிலப்பரப்பிற்கு அடியிலிந்து வந்ததாக தெரியவந்தது. இவைகள் அனைத்தும் பூமிக்கு அடியில் நடக்கும் சுரங்கப் பணியின் விளைவுகள்தான் என்று பல ஆய்வாளர்கள் அடித்து கூறுகின்றனர்.
சரி இப்படி பெரிய பெரிய சுரங்கங்களையும் பல இடங்களில் பலபல தளங்களை பிரம்மாண்டமாக அமைத்து அப்படி என்னதான் ஆய்வுகள் நடத்துகிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கீறீர்களா.
தொடரும்…
Image may contain: nightNo photo description available.