Thursday 14 February 2019

பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள் :

பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள் :
கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன்
. . . . உலகோர்க் கெல்லாம் காரமா
மூலியடா பங்கம்பாளை கொண்டு
. . . . வந்து உன் மனையில் வைத்திருந்தால்
கொடிய விடம் அணுகாது குடியோடிப்போம்
. . . . நன்றானநாகதாளிக்கிழங்கு தானும்
நன்மனையிலிருக்க விடம் நாடாதப்பா
. . . . அன்றான ஆகாசகருடன் மூலி
அம்மனை யிலிருக்க விடமற்றுப்போம்
- சித்தர் பாடல்.
ஆடு தீண்டாப்பாளை, நாகதாளிக் கிழங்கு, ஆகாச கருடன் கிழங்கு, சிறியா நங்கை, இம் மூலிகைகளை வீட்டில் வளர்த்து வந்தால் இதன் வாசனைக்கு விச ஜந்துக்கள், பாம்புகளை நெருங்க விடாது என்கிறது பாடல்.
பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் சோற்றுக் கஞ்சியில் உப்பைக் கரைத்து அதனுடன் பூண்டை அரைத்துக் கரைத்து இதில் சிறிது மண்ணெண்ணெய் சிறிது கலந்து பாம்பு இருக்கும் பகுதியில் சுற்றி தெளித்து விட பாம்பு சீராது ,கடிக்காது, ஓடாது அங்கேயே மயங்கி கிடக்கும்.

உடலில் தோன்றும் நச்சு கட்டி கொழுப்பு கட்டி கரைய அடைப்புக்கள் சரியாக மருத்துவம்

உடலில் தோன்றும் நச்சு கட்டி கொழுப்பு கட்டி கரைய அடைப்புக்கள் சரியாக மருத்துவம்
ஆளி விதை 100 கிராம்
கழற்ச்சிக்காய் 100 கிராம்
மிளகு 100 கிராம்
மருதம் பட்டை 100 கிராம்
சதகுப்பை 100 கிராம்
இவைகளை சூரனம் செய்து காலை இரவு 100 மில்லி நீரில் ஒரு ஸ்பூன் போட்டு கொதிக்க வைத்து பாதியாக்கி வடிகட்டி குடித்து வரவும்30 தினம்மேலுக்கு கொடி வேலி என்னை தடவி வரவும்
Image may contain: one or more people and phone

மஞ்சள் காமாலை ஏன் வருகிறது

எதன் காரணமாக  மஞ்சள் காமாலை  வருகிறது
மஞ்சள் காமாலை என்பது ரத்தத்தில் பிளிருபின் அளவு அதிகமாக இருப்பதே.
இதற்கு முக்கியமாக ஏழு காரணங்கள் உள்ளன.
அவை என்னென்ன, மஞ்சள் காமாலையிலிருந்து எப்படி விடுபட……
வராமல் தடுப்பது எப்படி...
நம் உடலில் உள்ள ரத்த சிவப்பு அணுக்களின் ஆயுள் சுமார் 120 நாட்கள். அதன் ஆயுள் முடியும்போது மண்ணீரலில் சிதைக்கப்படும். அப்போது சிவப்பணுவில் உள்ள ஹீமோகுளோபின், ஹீம் மற்றும் குளோபின் எனத் தனித்தனியாகப் பிரிக்கப்படுகின்றன. ஹீமில் உள்ள இரும்புச் சத்து உடலுக்குள்ளே மறுசுழற்சிக்கு எடுத்துக்கொள்ளப்படும். மீதம் உள்ள கழிவு (பிளிருபின்)வெளியேற வேண்டும்.
மண்ணீரலில் இருந்து இந்த பிளிருபின் கல்லீரலுக்கு செல்லும். இந்த பிளிருபின் நீரில் கரையாததன்மையில் (Unconjugated/ Indirect) இருக்கும். இதை கல்லீரல் உள்வாங்கி, கரையும் (Conjugated) தன்மையுள்ளதாக மாற்றி, பித்தநீர் வழியாக பித்தப்பையில் சேகரிக்கும். உணவு செரிமானத்தின்போது, பித்தப்பையில் இருந்து, பித்தநீரோடு பிளிருபின் சிறுகுடல் வழியாக வெளியே சென்றுவிடும்.
பிளிருபின் ஓர் கழிவு மட்டுமே என்பதால், அது மலம் வழியாக வெளியேறும். சிறிதளவு பிளிருபின் உறிஞ்சப்பட்டு மறுசுழற்சியில் சிறுநீர் வழியாகவும் வெளியேறும்.
பிளிருபின் உடலில் இருந்து வெளியேறுவதில் ஏதாவது பிரச்னை ஏற்படும்போது , அது நம் உடலில் தேங்கிவிடும், பிளிருபின் மஞ்சள் நிறமி என்பதால், நம் உடலில் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது..
சுகாதாரமற்ற உணவுகளைச் உட்கொள்ளும்போது, ஹெபடைட்டிஸ் ஏ, இ போன்ற வைரஸ்கள் உடலுக்குள் சென்று கல்லீரலைப் பாதித்து, மஞ்சள் காமாலையை ஏற்படுத்துகின்றன.
ஃபீகல் (Fecal) ஓரல் வைரஸ் மூலமாக ஹெபடைட்டிஸ் ஏ வைரஸ் பரவும்.
ஒருவர் மலம் கழித்துவிட்டு, கையைச் சரியாகக் கழுவாமல் உணவைத் தொடும்போது, உணவு வழியாக இந்த வைரஸ் பரவும்.
பொதுவாக, சுகாதாரமற்ற இடத்தில் சாப்பிடுபவர்களுக்கு இந்த வகை மஞ்சள் காமாலை வரும் வாய்ப்பு அதிகம்.
ஹெபடைட்டிஸ் ஏ வைரஸுக்குத் தடுப்பூசி உள்ளது.
ஹெபடைட்டிஸ் இ-க்கு தடுப்பூசி இல்லை.
ஹெபடைட்டிஸ் ஏ, இ வைரஸ் காரணமாக மஞ்சள் காமாலை வருபவர்களுக்கு……
பசி குறையும்,
உணவைப் பார்த்தாலே வெறுப்பு ஏற்பட்டு, குமட்டல் வரும்.
கண்கள் மஞ்சளாக இருக்கும்,
சிறுநீர் மஞ்சளாகப் பிரியும்,
ரத்தப் பரிசோதனை செய்தால் எந்த வைரஸ் தொற்று என்பதைக் கண்டுபிடிக்கலாம்.
மஞ்சள் காமாலை நான்கைந்து நாட்கள் முதல் ஓரிரு வாரம் உடலில் இருந்துவிட்டு பின்னர் போய்விடும். இவர்கள் எளிதில் செரிமானமாகும் உணவைச் சாப்பிட்டு, மருத்துவர் சொல்லும் அறிவுரைகளைக் கடைப்பிடித்தால் போதும், குணமாகிவிடும்.
ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் ரத்தம் மூலமாகப் பரவும். சுகாதாரமற்ற ஊசிகளைக்கொண்டு பச்சை குத்துதல், காதுகுத்துதல், ஒருவர் பயன்படுத்திய ஊசி, பிரஷ், ஷேவிங் பிளேடு போன்ற வற்றை மற்றவர்கள் பயன்படுத்துதல் போன்றவற்றால் இந்த வைரஸ் பரவும்.
ஹெபடைட்டிஸ் பி-யைத் தடுக்க இப்போது தடுப்பூசி இருக்கிறது. ஆனால், சி வைரஸுக்கு தடுப்பூசி இல்லை. இந்த வைரஸ் காரணமாக வரும் மஞ்சள் காமாலையை நவீன உயர் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்.
மருந்து
நாம் உட்கொள்ளும் உணவு, மருந்து என அனைத்தும் செரிமானம் ஆகி, கிரகிக்கப்பட்டு கல்லீரலுக்குத்தான் செல்லும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருள் ஒவ்வாமையாக இருக்கும்.
சாதாரணமாக, சளிக்குச் சாப்பிடும் மருந்துகள் முதல் உயர் சிகிச்சை மருந்துகள், உணவுகள், மூலிகைகள் என எதன் காரணமாக வேண்டுமானாலும் ஒவ்வாமை ஏற்பட்டு, மஞ்சள் காமாலை ஏற்படலாம். புதிதாய் ஏதாவது ஒன்றைச் சாப்பிட்ட பின்னர், மஞ்சள் காமாலை வந்தால், எந்த உணவு அல்லது மருந்து என்பதைக் கண்டுபிடித்து அதை நிறுத்தினாலே, மஞ்சள் காமாலை குணமாகிவிடும்.
குறிப்பிட்ட மருந்து சாப்பிட்டே ஆகவேண்டிய நிலையில் இருப்பவர்கள் மருத்துவர் பரிந்துரைப்படி மருந்தை மாற்றிக்கொள்ளலாம்.
மஞ்சள் காமாலை ஏற்பட்டு மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
ஆல்கஹால் காரணமாக கல்லீரல் பாதிக்கப்படுவது ஆரம்பத்தில் தெரியாது. கல்லீரல் 80 சதவிகிதம் பாதிக்கப்பட்ட பின்னர்தான் அறிகுறிகளே தெரியும்.
கல்லீரல் சுருக்க நோய் வந்த பின்னர் பிளிருபின் சரியாக வெளியேற்றப்படாமல் மஞ்சள் காமாலை வந்தால், காப்பாற்றுவது கடினம். கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை தீர்வு என்றாலும்கூட கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைக்கான செலவு, அதன்பிறகு எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்தின் பக்கவிளைவு மிக அதிகம். எனவே, மதுவை அறவே நிறுத்துவதுதான் ஒரே சிறந்த தீர்வு.
வீடுகளில் குப்பையைத் தினந்தோறும் அகற்றிவிடுவோம். ஒரு சிலர், நான்கைந்து நாட்கள் சேர்த்துவைத்து, பின்னர் வெளியேற்றுவார்கள். அதுபோல வெகுசிலருக்கு கல்லீரல் சோம்பலாகச் செயல்படுவதைத்தான் ‘**கில்பர்ட் சிண்ட்ரோம்**’ என்கிறோம்.
100-ல் 3 பேருக்கும், பெண்களில் இரண்டு பேருக்கும் இந்தப் பிரச்னை இருக்கிறது. இவர்களுக்கு ரத்தத்தில் பிளிருபின் கொஞ்சம் அதிகமாக இருக்கும். ஆனால், கல்லீரல் பரிசோதனை செய்யும்போது கரையும் பிளிருபின் வகை குறைவாகவும், கரையாத பிளிருபின் வகை அதிகமாகவும் இருக்கும்.
சளி, காய்ச்சல் என ஏதாவது நோய் இருக்கும் சமயங்களில் மட்டும் மஞ்சள் காமாலை ஓரிரு நாட்கள் அதிகமாக இருக்கும், பின்னர் தானாகவே சரியாகிவிடும்.
கில்பர்ட் சிண்ட்ரோம் இருப்பின் மஞ்சள் காமாலையால் உடல் பாதிக்கப்படுமோ என அஞ்ச வேண்டாம். இவர்களுக்கு எந்த வித சிகிச்சையும் தேவைப்படாது. உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
பித்தப்பையில் உருவாகும் கற்கள் சிலநேரம் உருண்டு இறங்கி பித்த நாளத்தில் அடைப்பை ஏற்படுத்தினால், மஞ்சள் காமாலை ஏற்படும்.இவர்களுக்குக் குளிர் காய்ச்சல் வரும், வாந்தி வரும், வயிறு வலிக்கும். ரத்தத்தில் பிளிருபின் அளவு மிக அதிகமாக இருக்கும். சிறப்பு எண்டோஸ்கோப்பி (E.R.C.P) சிகிச்சை மூலம் பித்தக்குழாயில் இருக்கும் கற்களை அகற்றினால், மஞ்சள் காமாலை மறைந்துவிடும்.
பித்தக்குழாய் சிறுகுடலில் சேரும் இடத்தில் கணையம் இருக்கிறது. கணையத்தின் தலைப்பகுதியில் அழற்சி, கட்டிகள் உருவானாலும் பித்தக்குழாயில் இருந்து பிளிருபின் வெளியேற்றம் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை வரும்.
இவர்களுக்கு ஆரம்பத்தில் வலி இருக்காது, உடல் எடை குறையும், பசியின்மை இருக்கும். உடனடியாகக் கல்லீரல் பரிசோதனை செய்து கணைய நோயைக் கவனித்து, பித்த நாளத்தை பைபாஸ் செய்வதன் மூலம் பாதிப்பில் இருந்து தப்பலாம்.
ஒரு நாளைக்குக் குறிப்பிட்ட அளவு சிவப்பணுக்கள் மட்டுமே உடைய வேண்டும். மாறாக, அளவுக்கு மீறி சிவப்பணுக்கள் உடைந்தால், ரத்தத்தில் பிளிருபின் அளவு அதிகரித்துவிடும். இதனால் மஞ்சள் காமாலை வரக்கூடும். இந்த பிளிருபின் கரையாத வகையாகும். ரத்த சோகை உள்ளவர்கள் அதற்குரிய சிகிச்சை கொடுத்தால் தானாகவே மஞ்சள் காமாலை போய்விடும்.
இவை தவிர, உடலில் இரும்பு, தாமிரச்சத்து அதிகமாக இருப்பவர்கள், நோய் எதிர்ப்புச் சக்தி பிறழ்வு (Autoimmune Hepatitis) உள்ளவர்களுக்கு அரிதாக மஞ்சள் காமாலை ஏற்படலாம்.
சிலர், பிளிருபின் பரிசோதனை மட்டும் செய்துகொண்டு சுய சிகிச்சை எடுக்கிறார்கள். இது தவறு. கல்லீரல் செயல்பாட்டுக்கான முழுப் பரிசோதனை (#LFT) செய்ய வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை மாஸ்டர் ஹெல்த் செக் அப் செய்யும்போது, கல்லீரல் முழுமையாகச் சோதனை செய்யப்படும். இதனால், பாதிப்புகளை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும்.
மஞ்சள் காமாலை
வந்தால் மரணம்தான் என முடிவுகட்ட வேண்டியது இல்லை.
எதனால் மஞ்சள் காமாலை வருகிறது என்பதை அறிந்து, அதற்குரிய சிகிச்சை அளித்தால், கண்டிப்பாகக் குணப்படுத்த முடியும். முன்னெச்சரிக்கை, முறையான பரிசோதனை, முழுமையான சிகிச்சை இவை மூன்றும் இருந்தால், மஞ்சள் காமாலை நோயை விரட்ட முடியும்.
மஞ்சள் காமாலை முதலில் கண்ணில்தான் வெளிப்படுகிறது.
கண்களில் மிகவும் மெல்லிய வெள்ளை நிறப் பகுதி ஸ்க்லீரா.
பிளிருபின் அதிகமாக இருந்தால் ஸ்க்லீரா பாதிக்கப்பட்டு மஞ்சள் நிறத்துக்கு மாறும்.
நாக்கு, மேல் அன்னம், உள் உதடு, கைகள் போன்றவற்றில் மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றும்.
பித்தநீர் சரியாக வெளியேறாது. எனவே, பித்த உப்பு உடலில் தங்கிவிடும்.
பிளிருபின், பித்த உப்புடன் சேர்ந்தால், தோலில் அரிப்பு ஏற்படும்.
பசியின்மை, உணவைப் பார்த்தாலோ, உணவு வாசனையை நுகர்ந்தாலோகூட குமட்டல் உணர்வு இருக்கும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், மஞ்சள் காமாலை இருக்கலாம்.
மது அருந்துவதை நிறுத்த வேண்டும்.
எந்த ஓர் உணவுப் பொருளைச் சாப்பிடுவதற்கு முன்பாகவும் சாப்பிட்ட பின்னரும் கண்டிப்பாகச் சுத்தமாகக் கை கழுவ வேண்டும்.
சாலை ஓரங்கள், சாக்கடை ஓரங்களில் உள்ள கடைகளில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
காய்கறி, பழங்கள் போன்ற எதையும் சுத்தமாகக் கழுவிய பிறகுதான் வெட்ட வேண்டும்.
கழிவறைக்கு அருகில் சமையல் பொருட்களை வைக்கக் கூடாது, சமைக்கவும் கூடாது.
கழிவறையை அவ்வப்போது சுத்தம் செய்வது அவசியம்.
கழிவறையைப் பயன்படுத்திய பின், சிறுநீர் கழித்த பின், கைகளை நன்றாக கிருமி நாசினி பயன்படுத்தி கழுவ வேண்டும்.
நகம் வளர்க்கக் கூடாது.
நகம் கடிக்கக் கூடாது.
பசிக்கு சாப்பிட வேண்டும்.
குறிப்பாக, காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.
நண்பர்கள், உறவினர்கள் என யாருடைய……
பிரஷ்,
ஷேவிங் செட்
போன்றவற்றையும் பயன்படுத்தக் கூடாது.
நன்றி: யாசின்.

ஆண்களின் தாடி மீசையில் ஏற்படும் புழுவெட்டை போக்கும் கலிங்காதி தைலம்

ஆண்களின் தாடி மீசையில் ஏற்படும் புழுவெட்டை போக்கும் கலிங்காதி தைலம் :
கலிங்காதி தைலம் மகளிர் நோய்களான சூதகக்கட்டு,சூதகத் தடை,சூதகக் கிருமிகளுக்கு உள்ளுக்கு வழங்கப்படும் தைலமாக பலகாலமாக பயன்பாட்டில் உள்ளதாகும்.
அதில் சேரும் சரக்குகளான வெங்காயச்சாறு, வெள்ளைப்பூண்டுச்சாறு, மலைவேம்புச்சாறு, எலுமிச்சைச்சாறு, வரிக்குமட்டிச்சாறு போன்ற அனைத்துச் சரக்குகளுமே புழுவெட்டிற்காக வெளிப்புறமாக பூசுவதற்கென தனத்தனியாக நூற்களில் கூறப்பட்டிருக்கிறது.
நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும் இந்த தைலத்தை வெளிபிரயோகமாக,புழுவெட்டால் பாதிக்கப்பட்டட மீசை,தாடி,தலை,கண்புருவத்தில் தினசரி தடவிவந்தால் ஒருமாதத்தில் மீண்டும் முடி செழித்து வளரும்.

புழுவெட்டிற்கு குணபாடம் மூலிகை நூல் கைவைத்தியம் :

புழுவெட்டிற்கு குணபாடம் மூலிகை நூல் கைவைத்தியம் :
புழுவெட்டிற்கு மருந்தாக கைவைத்தியமாக குணபாடம் மூலிகை நூலில் கூறியபடி, சிறிய வெங்காயம் - இரண்டு, மிளகு - இரண்டு, கல்லுப்பு - ஒரு சிட்டிகை மூன்றையும் அம்மியில் அரைத்து புழுவெட்டு பாதித்த இடத்தில் தடவி வர, இரண்டுநாட்களில் வழுவழுவென இருந்த தோல் சொரசொரப்பாக மாறும். அந்நிலையில் மேற்கண்ட கலவையை பூசவதை ஒருநாள் நிறுத்திவிட்டு மறுநாள் முதல் மீண்டும் பூசவும்.
முடி முளைக்கும் வரை மேற்கண்ட கலவையை பூசுவதும் சொரசொரப்பு வந்தவுடன் நிறுத்திப் பின் மறுநாள் பூசுவதையும் தொடரவேண்டும். ஐந்தாறு நாட்களில் முடி முளைக்கத் தொடங்கும். முதலில் பூனைமுடி போல முளைக்கத் தொடங்கி பின் இயல்பான முடியாக சில வாரங்களில் முளைத்து விடும்.
முடி முளைக்கத் தாமதப்படும்போது அவ்விடத்தில் கரிசாலை மடக்குத் தைலம் தேய்த்து வந்தால் விரைவில் குணம் கிடைக்கும்.அதே போன்று மிக அதிகமாக பாதிப்புக்குள்ளாகி இருந்தால் உள் மருந்தாக இரசகந்தி மெழுகை காலை மாலை ஒரு மாதம் உண்டுவர விரைவில் நலம் பெறலாம்.

வள்ளலார் அருளிய. *கரிசலாங்கண்ணி மூலிகை* பயன்கள்

வள்ளலார் அருளிய. *கரிசலாங்கண்ணி மூலிகை* பயன்கள் 
*தீராத நோய் தீர்க்கும்* 
*ஞான மூலிகை*
==============================
*கரிசலாங்கண்ணி*
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
சித்தர்களின் தந்தையான இராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படும் *திருஅருட்பிரகாச வள்ளலார்,* மிகவும் முதன்மையான கரிசாலை என்று அழைக்கப்படும் கரிசலாங்கண்ணி கீரையை ஞான மூலிகை என்று கூறுகிறார்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்த கரிசாலை என்னுடைய வாழ்நாளில் எந்த அளவு ஒரு முக்கிய பங்கு வகுக்கிறது என்று நான் குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன்.
இந்த கரிசாலை மஞ்சள்காமாலை, மகோதரம், வலிப்பு மற்றும் இரத்த புற்றுநோய் (AML - Acute Myeloid Leukemia)
போன்ற பல்வேறு வகையான நோய்களை குணப்படுத்தும் என்று சித்தர் பாடல்களில் மிகவும் தெளிவாக குறிப்புகள் உள்ளது.
இந்த கரிசாலை எனது மருத்துவ ஆய்வில் மிக பெரிய வெற்றி கொடுத்துள்ளதை கீழே விளக்கம் அளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
இதனை சித்தர்கள் கரப்பான், பொற்றலை, கையாந்தகரை இன்னும் பல பெயர்களை வைத்து கரிசாலையை அழைத்தார்கள். பல சித்தர்கள் கரிசாலையான அபூர்வ மருந்தை கற்ப மருந்தாக உண்டு பல யுகங்கள் தனது உடம்பினை கற்பமாக மாற்றி வாழ்ந்தார்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
*கரிசாலையை உண்டால் காலமெல்லாம் வாழலாம்* என்ற பழமொழிக்கேற்ப கரிசாலையின் மகத்துவத்தை நாம் உணரலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
மஞ்சள் கரிசலாங்கண்ணி பற்றிய பாடல்:
*திருவுண்டாம் ஞானத்தெளிவுண்டாம் மேலை யுருவுண்டா முள்ளதெல்லா முண்டாங் குருவுண்டாம் பொன்னாகத் தன்னாகம் பொற்றலைக் கையாந்தகரைத் தன்னாகத் தின்றாகத் தான்.*
விளக்கம் :
இம்மஞ்சள் கரிசாலையை உணவாக அல்லது மருந்தாக ஏதேனும் ஒரு வகையில் சேர்த்தால் மூளை திறன் வளம் பெரும், வயிற்றில் ஏற்படும் புண் அல்லது கட்டியை சரி செய்யும், உடல் தங்கம் போன்ற பொலிவு தரும், அறிவாற்றல் வளரும். இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இம்மஞ்சள் கரிசாலையை பொதுவாக உணவிற்காக பயன்படுத்துவார்கள். இதில் கார சுவை குறைந்தது காணப்படும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெள்ளை கரிசலாங்கண்ணி பற்றிய பாடல்:
*குரற்கம்மற் காமாலை குட்டமொடு சோபை யுறர் பாண்டு பன்னோ யொழிய நிரர் சொன்ன மெய்யாந் தகரையொத்த மீளிண்ணு நற்புலத்துக் கையாந்தகரை யொத்தக்கால்*
( *தேரன் வெண்பா*)
விளக்கம் :
இவ் வெள்ளை கரிசாலையை எடுப்பதால் பல் சம்பந்தமான எந்த நோயும் வராது. அத்துடன் இரத்த சோகை அல்லது உடலின் உறுப்புகளின் வீக்கம் இருக்காது. முக்கியமாக 18 வகையான காமாலை நோய் தீரும். மேலும் குரலுறுப்பு நோய் மற்றும் பாண்டு பூரணமாக குணமடையும். இதன் பூக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும் மற்றும் இதன் இலைகள் கரும்பச்சை நிறத்துடன் காணப்படும். இவ் வெள்ளை கரிசாலை சிறிது கார சுவை உடையது. பொதுவாக இதை மருத்துவத்திற்கே அதிகம் பயன்படுத்துவார்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
WHO என்று சொல்லப்படும் உலக சுகாதார நிறுவனம் கணக்கெடுப்பில் குணமாகாது என்று குறிப்பிட்ட பல நோய்களில் ITP (Idiopathic Thrombocytopenic Purpura) என்பது வெள்ளை அணுக்களே
சிகப்பு தட்டணுக்களை அளிக்கக்கூடிய ஒரு வகையான Autoimmune Disease ஆகும். அப்பேற்ப்பட்ட வியாதியை நமது வள்ளல்பெருமனார் சொன்ன இந்த ஞான மூலிகை உடன் தூதுவளை கலந்து கொடுக்கையில் 25 நாட்களில் குணமடைந்தது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
17 வருடமாக இந் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இம்மருந்தை கொடுக்கையில் 25 நாளில் முழுவதுமாக குணமடைந்தது. இதை வைத்தே கரிசாலை மற்றும் தூதுவளை காயகல்ப மருந்து என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதை உணரலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
அதுமட்டுமன்றி சமீபத்திய ஆய்வில் இந்த கரிசாலையில் Gold nanoparticles என்று சொல்லப்படும் தங்க நானோ துகள்கள் உள்ளது. அதேபோன்று தூதுவளையில் Silver nanoparticles என்று சொல்லப்படும் வெள்ளி நானோ துகள்கள் உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதை நிருபிக்கும் ரூபமாக சில மாதத்திற்கு தமிழகத்திற்கே சவாலாக விளங்கிய டெங்கு காய்ச்சல் என்பது உயிர்க்கொல்லி நோய் என்பதை அனைவரும் அறிந்ததே. டெங்கு காய்ச்சல் பல உயிர்களை கொன்று குவித்தது. உயிர் பிரிய முக்கிய காரணமாக பங்கு வகித்த Platelets என்று சொல்லப்படும் இரத்த தட்டணுக்கள் குறைந்தது தான். இரத்த தட்டணுக்களை அதிகப்படுத்த Allopathy என்ற ஆங்கில மருத்துவத்தில் எந்த மருந்தும் இல்லை. ஆனால் இரத்த தட்டணுக்களை அதிகப்படுத்தினால் காப்பாற்ற முடியும். இதை ஆய்வு செய்து பார்க்கையில் கரிசாலையின் உதவிக்கொண்டு ஒரே நாளில் சரிசெய்ய முடியும் என தெரியவந்துள்ளது.
ஒரு நாளுக்கு இரண்டு முறை இளநீரில் கரிசாலை சாறு கலந்து கொடுக்கையில் ஒரே நாளில் 50,000 எண்ணிக்கையில் உள்ள தட்டணுக்கள் 1,50,000-மாக உயர்ந்து தட்டணுக்கள் அதிகமானது தெரியவந்துள்ளது. இக்கரிசாலைக்கொண்டு காய்ச்சலை குணப்படுத்த முடிந்தது. குணமடைய இக்கரிசாலை பெரும் பங்கு வகித்ததை வார்த்தைகளால் சொல்ல இயலாது. இந்த கரிசாலை இளநீரை வைத்தே டெங்குவால் பாதிக்கப்பட்ட பல உயிர்களை காப்பாற்றியுள்ளேன். இவை அனைத்திற்கும் மூலக்காரணம் *வள்ளல்பெருமானே* அவர் கூறிய இந்த ஞான மூலிகையை வைத்து மருந்து செய்கையில்
புற்றுநோய் அல்லாமல்
Liver Cirrhosis என்று சொல்லக்கூடிய கல்லீரல் வீக்கம் மற்றும் கல்லீரல் சார்ந்த அனைத்து நோய்களை முழுக்க குணமாக்க கூடிய ஆற்றல் இவ் கரிசாலைக்கு உண்டு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
சித்தர்கள் மற்றும் சித்த வைத்தியர்கள் தங்களது மருந்துகளில் குரு மருந்து என்று சொல்லக்கூடிய மருந்திற்க்கு எல்லாம் குருவாக விளங்கக்கூடிய மருந்தை கலந்து தான் மருத்து தயாரிப்பார்கள். இக்குரு மருந்தின் ஆற்றல் மருந்தின் வீரீயத்தை 1000 மடங்கு அதிகமாக்கும். ஒவ்வொரு சித்தர்களும் தங்களுக்கென்று உரிய பாணியில் சில குரு மருந்தை சூரணத்தில் கலந்து அம்மருந்தின் வீரீயத்தை அதிகப்படுத்துவார்கள். அதுபோன்று எந்த நோயாக இருந்தாலும் அதில் அவர் அவர்களுக்கு என்று இருக்கும் குரு மருந்தை கலப்பார்கள்.
என் வாழ்நாளில் குரு மருந்து என்று ஒன்று கேட்டால் நிச்சயமாக கரிசாலை தான் முதலிடம் பெற்றுள்ளது. பஷ்பங்கள் மற்றும் செந்தூரங்களைவிட, வள்ளலார் சொன்ன ஞான மூலிகையான கரிசாலை என்ற கரிசலாங்கண்ணி தான் சிறந்ததாக இடம்பெற்றுள்ளது. பொதுவாக கல்லீரல் 300க்கு மேற்பட்ட வேலையை செய்கின்றது. இரத்தத்தை சுத்தம் செய்வதில் இருந்து பித்தநீரை வெளியேறும் வரை பல வேலைகளை செய்கிறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
இரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் தேவையைவிட குறைந்தால் உயிர் பிரிய நேரும். ஆனால் கரிசாலைக்கொண்டு இப்பிரச்சனையை தீர்க்க முடியும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
உடலின்சக்தி (ATP)
சேமித்து வைக்கும் ஓர் உறுப்பு கல்லீரலே... அப்பேற்ப்பட்ட கல்லீரல் பாதிப்படைந்தால் ராஜ உறுப்புகளான சிறுநீரகம், இதயம், மண்ணீரல், கணையம் இன்னும் பல உறுப்புகள் பலவீனமாக வாய்ப்பு அதிகம் உள்ளது.
ஆகவே நான் எந்தவித மருந்து தயாரித்தாலும் அதில் எனது ஒரு குரு மருந்தான கரிசாலை நிச்சயமாக இடம்பெற்றிருக்கும். இதனால் கல்லீரல் புதுப்பிக்கப்பட்டு மூலக்காரணமாக உள்ள உறுப்பை தூண்டி நன்கு வேலை செய்ய வைக்கும்.
காச நோய், சக்கரை நோய், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட அனைத்திற்கும் கரிசாலை முக்கிய பங்களிப்பு தந்துள்ளது என்பது எனது ஆய்வில் தெரியவந்துள்ளது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
கரிசாலை கல்லீரல் சம்மந்தப்பட்ட அனைத்து நோயையும் குணமாக்கும். முக்கியமாக மஞ்சள் கரிசாலையை ஆட்டுப்பாலில் கலந்து காலை மாலை கொடுக்கையில் மகோதரம் என்று சொல்லக்கூடிய கல்லீரல் பாதிப்படைந்து வயிறு வீக்கம், கல்லீரல் வீக்கம் மற்றும் சித்தர்கள் சொன்ன 18 வகையான காமாலைகளுக்கும் இக்கரிசாலை சிறந்த மருந்து. இதேபோன்று கரிசாலையில் புடம் போடப்பட்ட அன்னபேதி செந்தூரமும் கூட தீராத மஞ்சள் காமாலை நோய்களுக்கும் கொடுத்து குணமாக்க முடியும். இன்னமும் சில சித்த வைத்தியர்கள் இம்முறையை பின்பற்றி மிக சிறந்த முறையில் மக்களை பிணியில் இருந்து காத்துவருக்கின்றனர்.
வெள்ளை கரிசலாங்கண்ணியில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. வெள்ளை கரிசாலையை உணவாகவும் எடுத்துக்கொண்டால் நல்லது. தலை முடி நன்கு வளர கருமையாக இருக்க இவ் வெள்ளை கரிசாலை உதவுகின்றன. இவை ஓர் இயற்கை கூந்தல் தைலமாக இருக்கிறது.
கரிசாலை, வெட்டிவேர், கருஞ்சீரகம், நெல்லிவற்றல், செம்பருத்தி பூ, மருதாணி, அவுரிஇலை என அனைத்தும் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்யில் தைலம் காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் உடம்பில் பித்தத்தை சரி செய்து தலை சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் மற்றும் இளநரையையும் சரி செய்யலாம். இக்கரிசாலையை பொற்றகாக கொடுப்பதால் சித்தர்கள் இதனை பொற்றலை என்று அழைக்கின்றனர்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
இன்னும் பல அரிய தகவல்கள் உள்ளன. கரிசாலையின் பயன்களை பற்றியும் மருத்துவ குணப்பற்றியும் எடுத்துச்சொல்ல வார்த்தைகளுள் அடக்கிவிட முடியாது. இருந்தாலும் என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய வள்ளல்பெருமான் சொன்ன குரு மருந்தை வைத்து எனக்கு தெரிந்த மருந்துகளை எனது அனுபவழா முறையில் கையாண்டு மக்களின் பிணியினை நீக்கினேன்.
அதுமட்டுமன்றி கரிசாலையை உண்டு மக்கள் தங்களின் ஞான நிலையை அடைய ஓர் ஊன்றுகோலாக இருக்க விரும்பிய வள்ளல்பெருமான் இதனை கற்ப மூலிகை என்று கூறியுள்ளார்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அதனால் அனைவரும் தங்களுடைய உடல் பிணியையும் உள்ளம் பிணியையும் நீக்குவதற்கு இக்கரிசாலையை வள்ளல்பெருமான் சொன்னதுபோல் எவ்வித தந்திரத்தாலாவது உட்கொண்டு
மனிதர்களுக்கு வரக்கூடிய பிணியினை நீக்கி, மேல் நிலை அடைந்து அனைவரும் சமரச சுத்த சன்மார்க்கியாக ஆக
வேண்டும் என்ற எனது விருப்பத்தை கூறி வேண்டுகிறேன்.
இத்தகவல்களை தங்களிடம் பகிர்ந்தமைக்கு எண்ணி பெருமை அடைகிறேன்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
தகவல் வைத்தியர் மாலிக்
நன்றி
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

சிவசூத்திரத்தின் முதல் யுக்தியுடன் தியானம்

சிவசூத்திரத்தின் முதல் யுக்தியுடன் தியானம்
"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
.
சிவசூத்திரத்தின் முதல் யுக்தியுடன் தியானம் ஆரம்பம் ஆகிறது.
முதல் யுக்தி : ஒளி வீசுபவளே, இந்த. அனுபவம் இரண்டு. மூச்சுக்களுக்கிடையில் கிடைக்கலாம். மூச்சு உள்ளே வந்து - அதாவது இறங்கி - பின் திரும்புவற்குச்சற்றுமுன் - கிடைக்கப் பெற்றவர் ஆகலாம்."
.
இந்த இரண்டு புள்ளிகளுக்கிடையே விழிப்புணர்வுவோடு இரு..... அப்போது நிகழ்கிறது. உனது மூச்சு உள்ளே வரும் போது, கவனி. அது திரும்புவதற்குச் சற்றுமுன், அது வெளியேறத் துவங்குவதற்குச் சற்றுமுன், ( ஒரு கண. நேரம். அல்லது ஆயிரத்தில் ஒரு பங்கு கண நேரத்திற்கு, மூச்சு. அங்கில்லை ). ஒரு மூச்சு உள்ளே வருகிறது; பின் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மூச்சு நிற்கிறது. அதன்பின் மூச்சு வெளியேறுகிறது. மூச்சு வெளியேறிய பின், மறுபடியும் ஒரு கண நேரத்திற்கு அல்லது கணத்தின் ஒரு பங்கு நேரத்திற்கு, மூச்சு நிற்கிறது. அதன்பின் மூச்சு உள்ளே வருகிறது.
.
மூச்சு உள்ளே வருவதற்கு முன்பு அல்லது வெளியேறுவதற்கு முன்பு, மூச்சு நின்றுவிடுகிற ஒரு கணம் உள்ளது. அந்தக் கணத்தில் அது நிகழ்வது சாத்தியம். ஏனெனில் நீ சுவாசிக்காத போது நீ இறந்துவிட்டாய்; நீ இன்னும் இருக்கிறாய், ஆனால் இறந்துபோனவனாக. ஆனால் இந்த கணம் நீ அதை ஒருபோதும் கவனிக்க முடியாத அளவு மிகச் சிறியதாக இருக்கிறது.
.
தந்த்ராவிற்கு, ஒவ்வொரு வெளிச்செல்லும் மூச்சும் இறப்பு, ஒவ்வொரு உள் வரும் மூச்சும் மறுபிறப்பு. உள்ளே வரும் மூச்சு மறுபிறப்பு; வெளிச்செல்லும் மூச்சு இறப்பு. வெளியே செல்லும் மூச்சு இறப்பை ஒத்தது. உள்ளே வரும் மூச்சு வாழ்வை ஒத்தது. ஆகவே ஒவ்வொரு மூச்சோடும் நீ இறக்கிறாய், மீண்டும் பிறக்கிறாய். இந்த இரண்டுக்கும் இடையிலுள்ள இடைவெளி மிகவும் குறைவானது. ஆனால் உன்னிப்பான, கவனமாக, ஆழ்ந்த பார்வை மூலம் நீ அந்த இடைவெளியை உணர்ந்துவிட்டால், சிவா சொல்கிறார், 'கிடைக்கப் பெற்றவராகலாம்' . பின் வேறு எதுவும் தேவையில்லை. நீ ஆசீர்வதிக்கப்பட்டவன், நீ அறிந்து கொண்டாய், அது நிகழ்ந்துவிட்டது.
.
நீ மூச்சுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டியதில்லை. அதை அப்படியே விட்டுவிட்டு. ஏன் இவ்வளவு சுலபமான யுக்தி ? இது மிகவும் எளிதாக தெரிகிறது. சத்தியத்தை அறிய இவ்வளவு எளிமையான வழியா ? சத்தியத்தை அறிவது என்பதன் அர்த்தம், பிறப்பு இறப்பு இல்லாததை அறிவது, எப்பொழுதும் அழிவற்ற இருப்பை அறிவது. உனக்கு வெளியே போகும் மூச்சு தெரியும், உள்ளே வரும் மூச்சு தெரியும். ஆனால் நீ இரண்டிற்கும் இடையே உள்ள இடைவெளியை ஒருபோதும் அறிந்ததில்லை.
.
முயற்சி செய். திடீரென்று நீ அந்த புள்ளியை உணர்வாய் உன்னால் அடைய முடியக்கூடியதே அது; அது ஏற்கனவே அங்குள்ளது. உன்னிடத்தில் அல்லது உனது கட்டமைப்பில் சேர்க்க வேண்டியது எதுவுமில்லை, அது ஏற்கனவே அங்கிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட விழிப்புணர்வைத் தவிர எல்லாமே ஏற்கனவே அங்குள்ளது. இதை எப்படிச் செய்வது? ,முதலில், உள்ளே வரும் மூச்சைப் பற்றிய விழிப்புணர்வு கொள். அதைக் கவனி. எல்லாவற்றையும் மறந்துவிடு, மூச்சு உள்ளே வருவதை மட்டும் பார்- அதன் பாதையைப் பார்.
.
மூச்சு உன் மூக்கு நுனியைத் தொடும்போது, அதை அங்கே உணரு. பிறகு மூச்சு உள்ளே போகட்டும். முழு உணர்வோடு அந்த மூச்சோடு நீயும் நகரு. நீ மூச்சோடு கீழே போகும்போது, கீழே கீழே போகும்போது, மூச்சைத் தவறவிட்டு விடாதே. அதற்கு முன்னால் போகாதே, அதைத் தவறவிட்டு விடாதே. அதற்கு முன்னால் போகாதே, அதைத் தொடர்ந்து போகாதே, அதோடு கூடவே போ, நினைவில் கொள்: அதை முந்திப் போகாதே, அதற்கு பின்னால் அதன் நிழலைப் போலப் போகாதே அதோடு ஒன்றாக போ.
.
மூச்சும் உன் உணர்வும் ஒன்றாக வேண்டும். மூச்சு உள்ளே போகிறது - நீ உள்ளே போகிறாய். அப்போது மட்டுமே இரண்டு மூச்சுகளுக்கு இடையிலுல்ல புள்ளியை அடைய சாத்தியம் இருக்கிறது. இது சுலபமல்ல. மூச்சோடு உள்ளே நகரு, பிறகு மூச்சோடு வெளியே நகரு: உள்ளே- வெளியே, உள்ளே- வெளியே.
.
குறிப்பாக இந்த முறையை புத்தர் முயற்சி செய்தார்; ஆகவேஇது புத்தமதத்தினரின் முறையாக ஆகிவிட்டது. புத்தமதச் சொற்களில் இது 'அனபனசதி யோகா' என்று அழைக்கப்படுகிறது. புத்தர் ஞானமடைந்தது இந்த யுக்தியின் அடிப்படையில்தான்- இதனால் மட்டுமே.
உலகத்திலுள்ள எல்லா மதங்களும், உலகத்திலுள்ள எல்லா சாதகர்களும் , ஏதோ ஒரு யுக்தியின் மூலமாகவே அடைந்திருக்கிறார்கள், அந்த எல்லா யுக்திகளும் இந்த நூற்றிப் பன்னிரண்டு யுக்திகளில் உள்ளன, இந்த முதலாவது யுக்தி புத்த மதத்தினுடையது. உலகத்தில் இது புத்தமத யுக்தியாக அறியப்படுகிறது, ஏனெனில் கௌதம புத்தர் இந்த யுக்தியின் மூலமாக ஞானமடைந்தார்.
.
புத்தர் சொன்னார், உன் மூச்சு இயல்பாக உள்ளே வருவதையும், வெளியே போவதையும் பற்றிய விழிப்புணர்வு கொள்- உள்ளே வருவது, வெளியே போவது. " அவர் ஒருபோதும் இடைவெளியைக் குறிப்பிடவில்லை. ஏனெனில் அதற்கு தேவையில்லை. நீ இடைவெளியின் மேல், இரண்டு மூச்சுக்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியின் மேல் அக்கறை கொண்டால், அந்த அக்கறை உன் விழிப்புணர்வைப் பாதிக்கும் என்று புத்தர் உணர்ந்து கொண்டார். ஆகவே அவர், "விழிப்புணர்வு கொள். மூச்சு. உள்ளே புகும் பொழுது அதோடு நகரு, மூச்சு வெளியே போகும்போது அதோடு நகரு. இதை மட்டும் செய் : உள்ளே நுழைவது, வெளியே போவது, மூச்சோடு. " அவர்யுக்தியின் அடுத்த பகுதியைப் பற்றி ஒருபோதும் எதுவும் சொல்லவில்லை.
.
அதன் காரணம், புத்தர் மிகவும் சாதாரண மனிதர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். ஆகவே. இதுவே கூட அந்த இடைவெளியை அடைய வேண்டும் என்ற. ஆசையை உருவாக்கி விடலாம். பின் அந்த இடைவெளியை அடைய வேண்டும் என்ற ஆசையே விழிப்புணர்வுக்கு தடையாக மாறலாம். ஏனெனில். இடைவெளியை அடைய . வேண்டும் என்ற ஆசைப்பட்டு விட்டால் நீ. மூச்சை முந்திக் கொண்டு. போவாய். மூச்சு. உள்ளே புகுந்து கொண்டிருக்கும். ஆனால் நீ அதற்கு முன்னால் நகருவாய். ஏனெனில் நீ வரப்போகிற இடைவெளியின் மீதே ஆர்வம் கொண்டிருக்கிறாய். ஆனால் அது எதிர்காலத்திலேயே வரப் போகிறது. புத்தர் ஒருபோதும் இதை குறிப்பிடவில்லை. ஆகவே புத்தரின் யுக்தி இதில் பாதிதான்.
.
ஆனால் மறுபாதி தானகவே பின் தொடரும். நீ தொடர்ந்து மூச்சை முழு உணர்வுக்கு, விழிப்புணர்வுக்கு, கொண்டுவரும் பயிற்சியைச் செய்து வந்தால், திடீரென்று ஒருநாள், உன்னை அறியாமல், நீ அந்த இடைவெளியை அடைவாய். ஏனெனில் உனது விழிப்புணர்வு துல்லியமானதாக, ஆழமானதாக, வலிவுள்ளதாக ஆகும்பொழுது, உனது விழிப்புணர்வு ஒரு குறிப்பிட்ட அடைப்பிற்கு வெளியே என்றாகிவிடுகிறது; உன் மூச்சு உள்ளே வருவது அல்லது வெளியே போவது மட்டுமே உன் உலகம், உன் முழு உணரவிலும் இதுவே நிறைந்திருக்கிறது- திடீரென்று நீ அந்த இடைவெளியை, மூச்சு இல்லாத அந்த இடைவெளியை, கண்டிப்பாக உணருவாய்.
.
நீ உன் மூச்சோடு நுட்பமாக நகர்ந்து கொண்டிருக்கையில், மூச்சு இல்லாத இடத்தை எப்படி நீ உணராமல் போக முடியும்? மூச்சு வெளியே போகவுமில்லை, உள்ளே வரவுமில்லை என்பதை நீ உணரும் ஒரு கணம் வரும். மூச்சு சுத்தமாக நின்று விட்டது. அந்த நின்றுவிட்ட நிலையில்- 'கிடைக்கப் பெற்றவர் ஆகலாம்!'
.
இந்த ஒரு யுக்தியே லட்சக்கணக்கானவர்களுக்குப் போதும். முழு ஆசிய கண்டமும் பலபல நூற்றாண்டுகளாக இந்த யுக்தியின் முயற்சியில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. திபெத், சைனா, ஜப்பான், பர்மா, தாய்லாந்து, இலங்கை- இந்தியாவைத் தவிர்த்து மற்ற முழு ஆசியாவும் இந்த யுக்தியை முயற்சித்தன. இந்த ஒரே ஒரு யுக்தியின் மூலம் ஆயிரம் ஆயிரம் பேர் ஞானமடைந்தார்கள். இது வெறும் முதல் யுக்தியே.
ஆனால் துரதிஷ்டவசமாக, இந்த யுக்தி புத்தரின் பெயருடன் சம்பந்தப்பட்டு விட்டதால், இந்துக்கள் இதை ஒதுக்கவே முயற்சித்து வந்துள்ளனர். இது மேன்மேலும் புத்தரினுடைய முறையாக அறிப்பட்டதால், இந்துக்கள் இதைச் சுத்தமாக மறந்துவிட்டனர். அது மட்டமல்ல, மற்றொரு காரணத்திற்காகவும் அவர்கள் இதை ஒதுக்க முயற்சித்தனர். அது என்னவென்றால், இந்த யுக்தியே சிவா குறிப்பிடும் முதல் யுக்தியாக இருப்பதால், பல புத்த மதத்தினர் இந்த 'விஞ்ஞான் பைரவ் தந்த்ரா' என்ற இந்த புத்தகமே ஒரு புத்த மதப் புத்தகம்தான், இந்து புத்தகம் அல்ல என்று உரிமை கொண்டாடினர்.
.
ஏற்கனவே இருந்த இந்த யுக்தியால் கௌதமர் புத்தரானார்,இந்த யுக்தியால் ஞானமடைந்தார்.ஆனால் இந்த யுக்தி புத்தருக்கு முந்தையது; யுக்தி ஏற்கனவே இருந்தது. முயற்சி செய். இது ஒரு மிகவும் எளிய யுக்தி- உனக்கு எளியது என்று நான் சொல்ல வரவில்லை, மற்ற யுக்திகளோடு ஒப்பிட்டுப் பார்த்து சொல்கிறேன். மற்ற யுக்திகள் இதைவிடக் கடினமாயிருக்கும்.
ஓஷோ

உடலுக்கு வலிமை தரும் தேக புஷ்டி லேகியம்‌ செய்முறை

உடலுக்கு வலிமை தரும் தேக புஷ்டி லேகியம்‌ செய்முறை :
தேவையானவை பொருட்கள் :
1.பாதாம்‌ - 100 கிராம்‌
2.முந்திரி - 100 கிராம்‌
3.பிஸ்தா - 100 கிராம்‌
4.கசகசா - 100 கிராம்‌
5.கற்கண்டு - 200 கிராம்‌
6.நெய்‌ - 250 கிராம்‌
7.சோற்றுக்கற்றாழை - 200 கிராம்‌
8.பால்‌ - அரை லிட்டர்‌
செய்முறை :
சோற்றுக்கற்றாழையை தோல்‌ நீக்கி நன்றாக கழுவி அரைத்து வைத்துக்கொள்ளவும்‌. பாதாம்‌, முந்திரி, பிஸ்தா, கசகசா ஆகியவற்றை
தனித்தனியே அரைத்து வைத்துக்கொள்ளவும்‌. பிறகு ஒரு சட்டியில்‌ பாலை ஊற்றி 15 நிமிடங்கள்‌ நன்றாக காய்ச்ச வேண்டும்‌. பிறகு
கற்கண்டை போட்டு கிளறி கரைந்தவுடன்‌ அரைத்து வைத்துள்ள சோற்றுக்கற்றாழை, பாதாம்‌, முந்திரி, பிஸ்தா, கசகசா ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு கிளறவும்‌. பிறகு நெய்‌ ஊற்றி 40 நிமிடங்கள்‌ வரை கிளறவும்‌. லேகியம்‌ பக்குவமடையும்‌ போது நெய்‌ பிரிந்து வரும்போது இறக்கிவிடவும்‌.
பயன்படுத்தும்‌ முறை :
நன்றாக ஆறியவுடன்‌ பாட்டிலில்‌ அடைத்து வைத்து தினமும்‌ சிறியவர்களுக்கு அரை ஸ்பூன்‌, பெரியவர்களுக்கு ஒரு ஸ்பூன்‌ அளவு
சாப்பிட்டு வரவும்‌. நீண்ட நாட்களுக்கு வைத்து பயன்படுத்துபவர்கள்‌ குளிர்‌ சாதனப்பெட்டியில்‌ வைத்து பயன்படுத்தலாம்‌.
பயன்கள்‌ :
1.உடலுக்கு நல்ல வலிமையை தரும்‌.
இது உடல்‌ சூட்டை தனித்து குளிர்ச்சி
உண்டாக்கும்‌.
2.அனைத்து மூல நோய்களும்‌ தீரும்‌.
நரம்பு தளர்ச்சி குணமாகும்‌. மெலிந்த உடல்‌ பலம்‌ பெறும்‌.
3.ஆண்மை குறைவினால்‌ ஏற்படும்‌
குழந்தையின்மை கோளாறு நீங்கி குழந்தை பேறு உண்டாகும்‌.
4.வெட்டை நோய்‌ குணமாகும்‌.

நோய்கள் போக்க மெல்லிசை"- கேட்போம்

(S.Harinarayanan)
"நோய்கள் போக்க மெல்லிசை"- கேட்போம்
பல நோய்களை குணமாக்கும் சக்தி இசைக்கு இருப்பதது பல நேர‌ங்க‌ளி‌ல் ‌நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. கர்நாடக இசையில் குறிப்பிட்ட சில ராகங்களையும் அது தொடர்பான இசைக்கோர்வைகளை கேட்பதன் மூலம் நோய்களை குணமாக்க முடியும் என்று தமிழகத்தில் நடைபெற்ற ஆய்வுகள் தெரிவித்தன.
இத்தாலி நாட்டு விஞ்ஞானிகளும் இதை தங்களது ஆய்வுகள் மூலம் உறுதி செய்துள்ளனர். இ‌த்தா‌லி‌யி‌ன் பாவியா நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருந்துகள் பிரிவு பேராசிரியர் லுசியானோ பெர்னார்டி தலைமையில் இது தொடர்பான ஆய்வுகள் நடைபெற்றது.
இசை கேட்கும் போது இருதய நோய் படிப்படியாக குணம் ஆகிறது. குறிப்பாக மாரடைப்புக்கு பிறகு நோயாளி குணமாக மெல்லிசை பெரிதும் உதவுகிறது. இரத்த அழுத்தமும் குறைகிறது.
மன அழு‌த்தமு‌ம், ‌விர‌க்‌தி‌யி‌ல் இரு‌ப்பவ‌ர்களு‌ம் ‌சில ரா‌க‌ங்களை‌‌ கே‌ட்பத‌ன் மூல‌ம் நாளடை‌வி‌ல் அவ‌ர்களது மனம் அமைதி பெற வழி ஏ‌ற்படுவதாகவு‌ம் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
சுகமான, இதமான இசையைக் கேட்டதன் மூலம் நரம்பு சம்பந்தமான கோளாறுகள், நரம்பு தளர்ச்சி, சோகமான நிகழ்வில் ஏற்படும் அதிர்ச்சிகள் என இவைகளை இசை ஒரு கட்டுக்குள் கொண்டு வருகின்றன. ஒரு நபர் இசைக்கும் வயலின் இசையைக் கேட்டாலே கொடிய தலைவலியும் போய்விடும் என்கின்றனர். ஹிஸ்டீரியா என்ற நோயை நரம்புக் கருவிகளின் இசை குணமாக்கி விடுகிறதாம். அமெரிக்காவில் ஒரு பல் மருத்துவர் மயக்க மருந்தோ அல்லது வலி குறைப்பு மருந்தோ இல்லாமல், மெல்லிய இசையை எழுப்பியே நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
சுக பிரசவத்திற்கும் இசை:
இந்திய மருத்துவத்துறையில் குறிப்பிடத்தக்க மைல் கல் இசைமருத்துவம் ஆகும். அதாவது கர்ப்பிணிகளுக்கு இனிய இசை வாயிலாக சுகப்பிரசவம் நிகழுகின்ற அதிசயம் நிகழ்த்தப்பட்டு வருகிறது. கர்ப்பிணிப் பெண்கள் தினமும் காலை, மாலை வேளையில் குறைந்தபட்சம் அரைமணி நேரம் நல்ல ராகமுள்ள பாடலைப் பாடி வந்தால் அல்லது இனிய இசையைக் கேட்டு வந்தால் அவர்களுக்கு நிச்சயம் சுகப்பிரசவம் ஏற்படுகிறதாம். இந்த முறை இந்தியாவில் தமிழகத்தில் தான் முதலாவதாக அமலுக்கு வந்திருக்கிறது என்பது தமிழ்ப் பெண்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் ஆகும்.
மனச்சோர்வை குறைக்கிறது:
இசை நமது ஹார்மோன்களில் நேரடி விளைவை ஏற்படுத்துவதால் , இது மனச்சோர்வை போக்க இயற்கையாகவே உதவுகிறது. சில ராகங்கள் மூளையில் செரோட்டின் மற்றும் டோபமின்களை வெளியேற்றுகிறது. இதனால் மகிழ்ச்சி மற்றும் நல் வாழ்வை ஏற்படுத்தும் உணர்வுகள் உண்டாகின்றன . அதிகமாக கிளாசிக்கல் மற்றும் மனதை வருடும் இசையை கேட்பதனால் மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைகிறது மற்றும் அவர்கள் மனநிலை நேர்மறையாக மாறுகிறது என்று ஆய்வுகள் கூறுகிறது . பிடித்த இசையை கேட்கும்போது, ஒருவரது மூளை "டோபமைன்" என்ற வேதிப்பொருளை வெளியிடுகிறது. இது ஒரு நரம்பியல் கடத்தி.இதன் மூலம் சந்தோசம், உற்சாகம் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கிறது.
இசை தூக்கத்தை மேம்படுத்தும் :
இன்று பலர் தூக்கமின்மை எனும் இன்சோம்னியாவால் (Insomnia) பாதிக்கப்படுகின்றனர். தூங்க செல்லும் 1 மணி நேரம் முன், ஏதேனும் ஒரு மனதை வருடும் இசை கேட்பவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் கிடைக்கிறது என்று ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது.

மாட்டுச் சாணத்தை வீட்டில் மெழுகுவதால் வரும் நன்மைகள்

உண்மை என்ன?...*
1. மாட்டுச் சாணத்தை வீட்டில் ஏன் மெழுகச் சொன்னார்கள்?
மாட்டுச் சாணத்தை வீட்டில் மெழுகுவதால், வெளியிலிருந்து வரும், தவறான உணர்வுகளின் நஞ்சானது அடக்கப்படுகின்றது.
நாம் வெளியே எங்கே சென்றாலும், அங்கே விஷ அணுக்களின் தன்மை பரவிப் படர்ந்துள்ளது. அவைகள் நம் பாதங்களில் பட்டவுடன், நமது உடலில் சேர்கின்றது அந்த உணர்வின் வலிமையை நுகர்ந்தால், நமக்குள் அது வலிமை பெறுகின்றது.
விஷத்தின் உணர்வின் தன்மையை நமக்குள் எடுத்தாலும்,
வாசனையுள்ள சாணத்தின் மீது நமது பாதம் பட்டபின்,
நமக்குள் விஷத்தை ஒடுக்கும் ஆற்றலைப் பெறுகின்றோம்.
ஏனென்றால், மாடு விஷத்தின் தன்மையைத் தன் உடலாக்கியபின், விஷத்தை நீக்கிய நல்ல உணர்வின் தன்மையாக, மாட்டின் சாணம் வெளிப்படுகின்றது. ஆகவே, விஷத்தை ஒடுக்கும் வல்லமை மாட்டின் சாணத்திற்கு உண்டு.
ஆகையால், ஞானிகள் “மாட்டின் சாணத்தை வீட்டில் தெளி” என்றார்கள். மாட்டுச் சாணத்தை வீட்டில் மெழுகினால், நம்மால் வெளியிடப்பட்டு, வீட்டில் பதிந்துள்ள சங்கடம், சலிப்பு, வேதனை, போன்ற உணர்வுகளை அது கொல்கின்றது.
2. எந்த எண்ணத்துடன் கோலம் போடவேண்டும்?
அதே மாதிரி வீடுகளில் கோலம் போடுவார்கள். இது சாஸ்திரங்கள் நமக்காக உருவாக்கிக் கொடுத்த வழிமுறை.
கோலம் எதற்காகப் போடுகிறார்கள்?
பல புள்ளிகளை வைத்து இணைத்துப் பார்க்கிறார்கள்.
கோலப்பொடி தயாரிக்கப் பயன்படும் கற்கள் காந்தப் புலன்கள் கொண்டது. காந்தப் புலன்கள் கொண்ட, கோலப்பொடியைக் கொண்டு கோலமிடும் பொழுது, நாம் எண்ணுகின்ற உணர்வுகள், கோலப் பொடியில் கலந்து விடுகின்றது.
வீட்டில் வெறுப்பாக இருப்பார்கள். சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். ஆக, இந்த வெறுப்பின் உணர்வுடன், கோலப்பொடியைக் கையில் எடுத்தோம் என்றால், அதிலிருக்கும் காந்த சக்தி நமது வெறுப்பின் உணர்வை அது கவர்ந்து கொள்ளும்.
நாம் நமது வீட்டில் கோலப்பொடி வைத்திருக்கிறோம். மற்ற எல்லாவற்றையும் வைத்திருக்கிறோம். ஆனால், மாமியார் மீது வெறுப்பு, மாமனார் மீது வெறுப்பு, கணவர் மீது வெறுப்பு என்று மனதில் வெறுப்பு கொண்டு, புள்ளி வைத்தால் எப்படியிருக்கும்?
இந்த உணர்வுடன் கோலமிடத் தொடங்கினால், என்னாகும்? அது ஒழுங்காக வராது. அழித்து அழித்துக் கோலம் போட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் சந்தோசமாக இருப்பவர்கள், ஒரு புள்ளியை வைத்தால், தொடர்ந்து அழகாகக் கோடு இழுத்துக் கொண்டே போவார்கள்.
ஆக, இதையெல்லாம் மாற்றியமைப்பதற்காக தன் குடும்பத்தின் மீது, பற்றும் பாசமும் கொள்ளும் பொழுது, மகிழ்ச்சியான உணர்வின் தன்மையை உருவாக்கும் ஆற்றல் வருகின்றது.
குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒன்று சேர்ந்து வாழவேண்டும் என்று எண்ணி
கோலப் பொடியை எடுத்து, புள்ளிகளை வைத்துக் கோலமிடும் பொழுது, நம்முடைய நிலைகளும் ஒன்றுபடும் தன்மை வருகின்றது.
ஆக, நமக்குள் வேற்றுமை இல்லாத நிலைகள் கொண்டு, அனைவரையும் அரவணைக்கும் தன்மை வர வேண்டுமென்ற எண்ணத்தால், நமது குடும்பத்தின் மீது பற்றும் பாசமும் வரவேண்டும், இணைந்து வாழும் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வுகளை எண்ணித்தான், இங்கு கோலமிட வேண்டும்.
நன்றி : குருமுனி