Saturday 31 October 2015

மூட்டுவலிக்கு காரணங்கள் எண்ணெயில் வறுக்கக்கூடிய உணவுகலே..

இன்று நான் பேசக்கூடிய தலைப்பு என்னவென்றால் உலகம் முழுக்க இருக்கக்கூடிய மக்களிடையே மிகப்பெரிய பிரச்சனை என்பது மூட்டுவலி. இந்த மூட்டுவலி என்பது மூட்டுகளில் வருவது மட்டுமே என்று கணக்கில் எடுத்துக்கொள்ளமுடியாது. எந்தெந்த இடங்களில் எல்லாம் எலும்பு வளையக்கூடிய தன்மை உள்ளதோ அந்த இடங்களில் உண்டாகக்கூடிய பாதிப்புகள் தான் வலி என்று சேர்ப்போம். உதாரணமாக சொன்னால் மூட்டுவலி, கழுத்துவலி, இடுப்புவலி, குதிங்கால்வலி, கெண்டைக்கால் சதை வலி. இந்த மாதிரியான வலிகள் வருவதற்கான காரணங்கள் பலவகையாக இருக்கிறது. முப்பது வயதைத் தாண்டிய ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் சாதாரணமாக வரக்கூடிய வலி என்ன என்றால் அதை மூட்டுவலி என்று சொல்லலாம்.
moottuvali2வயதான காலத்தில் ஒரு அறுபது வயதிற்கு பின்னால் உடலில் இருக்கக்கூடிய வளர்சிதை மாற்றங்கள் அடிப்படையில் மூட்டுவலி வந்தால் அது ஏற்றுக்கொள்ளக்கூடிய விசயமாக இருக்கும். ஆனால் இன்றைக்கு பார்த்தீர்களானால் இளையதலைமுறைகள் இந்த மூட்டுவலியால் அவதிப்படக்கூடிய சூழல் உண்டாயிருக்கிறது என்றால் நம் வாழ்க்கைமுறையில் ஏற்பட்ட மாற்றம்தான் மிகமுக்கியமான காரணம் என்று சொல்லவேண்டும். அந்த காலத்து உணவுப்பொருட்கள் இன்றைக்கு இல்லாததையும் காரணம் காட்டமுடியும். மேற்கத்திய மோகம் அடிப்படையில், மேற்கத்திய பாணியில் நம் கலையையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் மாற்றிக்கொண்டதால் மேற்கத்திய மக்கள் சாப்பிடக்கூடிய உணவுவகைகளான துரித உணவுகள் அதிகம் எடுக்கக்கூடியவர்கள் இன்று இந்த மூட்டுவலியால் அவதிப்படக்கூடிய சூழல் இங்கு உண்டாகியிருக்கிறது.
moottuvali7முன்பெல்லாம் பார்த்தோம் என்றால் நிறைய சிறுதானியம் சார்ந்த உணவுகளை எடுப்போம். வரகு, திணை, குதிரைவாலி, சாமை, கம்பு, சோளம், ராகி இவையெல்லாம் பிரதான உணவுகளாக இருந்தபொழுது இந்த சிறுதானியங்களின் அடிப்படையில் நிறைய நார்ச்சத்து கிடைக்கக்கூடிய ஒரு வாய்ப்பு இருந்தது. அந்த மாதிரியான நார்ச்சத்து அதிகம் இருந்ததால் நம்முடைய எலும்புகள் நன்றாக வலுவாக இருந்தது, நரம்புகள் வலுவாக இருந்தது, இரத்தஓட்டமும் நன்றாக இருந்தது. நம்முடைய சதை ஒழுங்கான முறையில் இருந்தது, ஒரு பதினெட்டு வயதில் செதுக்கிவைத்த சிற்பம் மாதிரி இருந்த பெண்கள் நிறையபேர் இருந்தார்கள். ஒரு பெண் இந்த உடல் கூறுகளில்தான் இருப்பார்கள், என்று சொல்லி அன்றைய காலத்தில் அன்றைய உணவால் மதிப்பீடு செய்யக்கூடிய ஒரு சூழல் இருந்தது. ஆனால் இந்த துரித கலாச்சாரத்தால், நிறைய எடுக்கக்கூடிய உணவு கலாச்சாரத்தால், நாம் எடுக்கக்கூடிய உணவுகளில் புளிப்புகள் இருக்கிறதால், மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதால் இந்த மூட்டுவலி அதிகமாக உண்டாகக்கூடிய சூழல் உண்டாகியிருக்கிறது. இதை முழுமையாக நீக்கவேண்டும் என்றால் உணவுசார்ந்த சில சீர்திருத்தங்கள் செய்யும் பொழுது கண்டிப்பாக சரிசெய்ய முடியும்.
உதாரணமாக எண்ணெயில் வறுக்கக்கூடிய உணவுகள் நிறைய எடுக்கக்கூடிய ஆணுக்கும் பெண்ணுக்கும் மூட்டுவலி வரக்கூடிய வாய்ப்பு நிறைய உண்டு. எனவே அதீத எண்ணெய் எடுக்கும்பொழுது மூட்டுகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளியில் Inflamation அதாவது கிருமித்தொற்று வரக்கூடிய வாய்ப்பு உண்டு. அதனால் இந்த Infective condition அதிகமாக மூட்டுகளில் இருக்கும் பொழுது அதனாலே அந்த மூட்டில் தொற்று உண்டாகி அதன் அடிப்படையில் இந்த வலி வேகமாக பரவக்கூடிய வாய்ப்பு உண்டு அதே போல் ஆணும் பெண்ணும் இருசக்கர வாகனம் ஓட்டக்கூடிய சூழல் இருக்கிறது. இம்மாதிரியான இருசக்கரவாகனங்கள் ஓட்டக்கூடிய ஆண்களும் பெண்களும் சரியான உணவு எடுக்காத நேரத்தில் தேய்வு, தேய்மானங்கள் வரக்கூடிய வாய்ப்பு உண்டு. ஒரே நாளில் 50 கிலோமீட்டரிலிருந்து 100 கிலோமீட்டர் வரை பயணம் செய்யக்கூடிய ஆண்களுக்கு முதுகெலும்பு பிரச்சனை சாதாரணமாக வரக்கூடிய வாய்ப்பு உண்டு. L4,L5 என்று சொல்லக்கூடிய எலும்புகள் முழுமையாக தேய்ந்துபோய் அல்லது L4,L5 கால்சியம் Decalcificationஆவது. இதனால் கூட அந்த எலும்புவலியால் அவதிப்படக்கூடிய ஆண்கள் நிறையபேர் உண்டு. அதே போல் பெண்களுக்கும் முதுகெலும்பு தேய்ந்து போவது, கழுத்து எலும்பு தேய்ந்துபோவது, மூட்டுஎலும்பு தேய்ந்து போவது என்று சொல்லி, இருபது வயதிற்கு பிறகிலிருந்தே வலிகள் எல்லாம் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்றால் அதற்கான உணவுகளைத்தான் நாம் காரணமாக சொல்லமுடியும்.
moottuvali10மூட்டுவலியெல்லாம் அந்தக்காலத்தில் இல்லாமல் இருந்ததற்கான காரணம் என்னவென்றால் ஒவ்வொரு வீடுகளிலும் உளுத்தங்களி வாரத்திற்கு ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ தொடர்ந்து சாப்பிடக்கூடிய சூழல் அன்றைய சமுதாயத்தில் இருந்தது. ஒவ்வொரு வீடுகளிலேயுமே இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய் இவற்றை நல்லெண்ணெயில் சேர்த்து நன்றாக வதக்கி அதோடு மாவையும் சேர்த்து நன்றாக கூழ் மாதிரி கரைத்து வைத்துக்கொண்டு, நன்றாக தண்ணீர் கொதிக்கவைத்துக்கொண்டு அதனுடன் நல்லெண்ணெய் சிறிது சேர்த்து களியாகக் கிண்டி அதை காரக்களியாகவோ அல்லது இனிப்பு களியாகவோ தொடர்ந்து சாப்பிடுவார்கள். உளுந்தின் தன்மை என்னவென்றால் உடம்பில் இருக்கக்கூடிய 206 எலும்புகளையும் நன்றாக வலுவாக்கக்கூடிய தன்மை உளுந்துக்கு உண்டு. இந்த உளுந்தை சித்த மருந்துகளில், ஆயுர்வேத மருந்துகளில் மருந்துப்பொருளாகவே பயன்படுத்துவது உண்டு. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் சித்தமருந்துகளில் உளுந்து தைலம் உண்டு. இந்த உளுந்து தைலம் நாட்டுமருந்து கடைகளில், சித்தமருந்துகடைகளில் கிடைக்கும். இந்த உளுந்து தைலத்தை பிடிப்புத் தைலம் என்று சொல்லுவார்கள். ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ கை-கால் அசதி, சோர்வு இருக்கும்பொழுது எலும்புகள் தளர்ந்து போகும் பொழுது, எலும்புகளில் வலி இருக்கும்பொழுது அந்தத் தைலம் தேய்த்து பிடித்துவிட்டால் உடனே வலியை நீக்கக்கூடிய தன்மை உண்டு. ஆக உளுந்து தைலம் பிடிப்புத் தைலம் என்று சொல்லுவார்கள். உளுந்து தைலத்தை மிதமாக சூடுசெய்து வலி உள்ள இடத்தில் நன்றாக தேய்த்து பிடித்து விடும்பொழுது கை-கால் வலி, அசதி, சோர்வு எல்லாமே சரியாகிவிடும்.
இன்றும் கிராமங்களில் பார்த்தோம் என்றால் உளுந்தை எலும்பு முறிவாக பயன்படுத்துவார்கள். சிலநேரங்களில் அடிபட்டோ, கிணற்று வேலைக்குப்போகும் பொழுதோ முதுகெலும்பு உடைந்துவிடுவது, மூட்டுகளில் வலி உண்டாவது, தவறி கீழே விழுந்துவிடுவது, சைக்கிள் மற்றும் பிரயாணத்தில் அடிப்பட்டுவிடுவது இந்த மாதிரி நேரங்களில் எலும்பு உடைந்துவிடும். அந்தமாதிரி உள்ளவர்களுக்கு இந்த உளுத்தங்களியை தினசரி உணவாக கொடுத்துக்கொண்டு, அதே உளுந்தோடு நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளக்கருவை சேர்த்து குழைத்து பருத்தி துணியில் நன்றாக தடவி அதை கட்டு மாதிரி கட்டி 21 நாட்கள் தொடர்ந்து செய்யும் பொழுது நல்ல பலன் கிடைக்கும். அந்த கட்டின இடத்தில் உளுந்து தைலத்தை விடாமல் தொடர்ந்து ஊற்றுவது, இந்த மாதிரி செய்யும் பொழுது உடைந்த எலும்புகள் கூட ஒன்றுசேரக்கூடிய தன்மை இந்த உளுந்துக்கு உண்டு. ஆகவே இந்த மூட்டுவலியால் அவதிப்படுபவர்கள், வேதனையில் உள்ளவர்கள் கண்டிப்பாக எந்த அளவிற்கு இந்த உளுந்தை சேர்த்துக்கொள்கிறோமோ அந்த அளவிற்கு நல்ல அபாரமான பலனைப் பெறமுடியும்.
மூட்டுவலி வருவதற்கான காரணங்கள் என்று பார்த்தோமென்றால் இன்றைக்கு இருக்கக்கூடிய உணவைத்தான் நாம் சொல்லவேண்டும். புளிப்பான உணவுகளை எந்த அளவிற்கு முடியுமோ குறைத்துவிடுங்கள். எண்ணெயில் வறுக்கக்கூடிய உணவுகளை முழுமையாக தவிர்த்துவிடுங்கள். அதே போல் வாயுவை அதிகப்படுத்தக்கூடிய உணவுகள் இருக்கிறது. அதில் உதாரணமாக பார்த்தோம் என்றால் வாழைக்காய். மூட்டுவலி இருப்பவர்கள் வாழைக்காயை உட்கொண்டால் வாய்வு அதிகமாகி மூட்டுவலி இன்னும் அதிகமாகக்கூடிய ஒரு சூழல் இருக்கும். எனவே வாழைக்காயை முழுமையாக நீக்கிவிடுங்கள். அதே போல் அகத்திக்கீரை, பாகற்காய் இவைகள் உடலிலே சில முரண்பாடுகளைக் கொடுக்கக்கூடிய காய்கறிகள். மூட்டுவலி இருக்கும்பொழுது பித்தவாயு அதிகமாக இருக்கும். பித்தத்தைக் குறைக்கக்கூடிய உணவுகளைத்தான் நாம் தொடர்ந்து சாப்பிடவேண்டும். அதேபோல் இரத்தத்தை அதிகப்படுத்தக்கூடிய உணவுவகைகளை தொடர்ந்து சாப்பிடும்பொழுது நல்லபலன் கிடைக்கும்.
moottuvali11மூட்டுவலி இருக்கிறது என்றால் பித்தத்தை குறைப்பதற்கு நெல்லிக்காய்க்கு நல்ல பலன் உண்டு. அந்த நெல்லிக்காயை விடாமல் தொடர்ந்து தினசரி 4 நெல்லிக்காயை ஒன்றிரண்டாக நறுக்கி கூடவே சீரகம் சேர்த்து தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து அதை காலையிலும் இரவிலும் தொடர்ந்து சாப்பிடும்பொழுது எப்பேற்பட்ட மூட்டுவலியாக இருந்தாலும் போகப்போக சரியாகிவிடும். ஏனென்றால் இந்த நெல்லிக்காயை ஏழைகளின் ஆப்பிள் என்று சொல்லுவோம். எல்லோராலும் ஆப்பிள் சாப்பிடமுடியாது. ஆனால் ஒரு ஆப்பிள் கொடுக்கக்கூடிய பலனை 4 நெல்லிக்காய் கண்டிப்பாகக் கொடுக்கும். எனவே அந்த நெல்லிக்காயை விடாமல் தொடர்ந்து சாப்பிடும்பொழுது நல்லபலன் கிடைக்கும். இன்னும் ஒருசிலருக்கு பித்தஅடிப்படையிலேயே மூட்டுவலி வருகிறது என்றால் கடைகளில் கிடைக்கக்கூடிய நெல்லிக்காய் லேகியத்தை விடாமல் தொடர்ந்து சாப்பிடும்பொழுது நல்ல ஒரு அற்புதமான பலன் கிடைக்கும். ஒரு சிலருக்கு உடலில் ஆற்றல் பற்றாக்குறையினால் மூட்டுவலி வரலாம். அந்த மாதிரி உடல் பலகீனம் அடிப்படையில் மூட்டுவலி வருகிறது என்றால் கடைகளில் கிடைக்கக்கூடிய அமுக்கரா லேகியம், அஸ்வகந்தா லேகியம் இவைகளை நீங்கள் வாங்கி சாப்பிடலாம். இன்னும் சித்த மருந்துகளில் கிடைக்கும் மகாவல்லாதி லேகியத்தைக்கூட தொடர்ந்து காலை, இரவு என்று இரண்டு வேளைகளிலும் தொடர்ந்து சாப்பிடும்பொழுது எப்பேற்பட்ட வலியாக இருந்தாலும் சரியாகும். ஆக மூட்டுவலிக்கு மேற்கொள்ளக்கூடிய ஆங்கில மருந்துகள் வேறு சில வலிகளைக் கொண்டுவரும் என்பதை நீங்கள் மறக்கக்கூடாது. எந்த அளவிற்கு நீங்கள் மருந்துகளிலிருந்து விலகி இருக்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்களது உடல் ஆரோக்கியம் கூடவே இருக்கக்கூடிய ஒரு சூழல் இருக்கும். எதற்கெடுத்தாலும் வலிநீக்கி மருந்துகள் அதாவது pain killers ஐ தொடர்ந்து சாப்பிடக்கூடிய ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி பல்வேறு பிரச்சினைகள் வரக்கூடிய வாய்ப்பு உண்டு. மூட்டுவலிக்காக எடுக்கக்கூடிய சில மருந்துகள் ஆண்களுக்கு ஆண்மைக்குறைவைக்கூட உண்டாக்கலாம். மூட்டுவலிக்காக எடுக்கக்கூடிய சில மருந்துகள் பெண்களுக்கு மாதவிடாய் சம்மந்தமான சில சிக்கல்களை உண்டாக்கலாம். ஏனென்றால் ஆங்கில மருந்துகளில் steroid கலப்புகள் அதிகமாக இருக்கும். ஒரு மருந்து உடனே வலியை நீக்குகிறது என்றால் அந்த மருந்தில் நிறைய பக்கவிளைவு இருக்கிறது என்பதை நீங்கள் உணரவேண்டும். ஆனால் ஒரு உணவுப்பொருள் உடனே வலியை நீக்குகிறது என்றால் அந்த உன்னதமான உணவு தான் உன்னதமான மருந்தும் கூட என்பதை கண்டிப்பாக உணரவேண்டும்.
moottuvali12கடைகளில் கிடைக்கக்கூடியது பிண்டத்தைலம். இந்தத் தைலம் சித்தமருந்துகடைகளில் சாதாரணமாக கிடைக்கக்கூடிய ஒரு அற்புதமான தைலம். இந்தத் தைலத்தை சூடுசெய்து கை,கால்வலி, உடம்புவலி, மூட்டுவலி, மூட்டு விலகியிருப்பது, பிசங்கியிருப்பது, பித்தவெடிப்பு எதுவாக இருந்தாலும் பிண்டத்தைலத்தை சூடு செய்து தேய்க்கலாம். அது ஒரு அற்புதமான தைலம். ஆக தைலம் முறையின் அடிப்படையில் ஒரு வலிநிவாரணத்தை தேடும்பொழுது கண்டிப்பாக பலன் கிடைக்கும். கூடுதலாக உணவுபொருட்களில் நான் சொன்னமாதிரி வெந்தயக்களி சாப்பிடலாம், உளுத்தங்களி சாப்பிடலாம் இல்லையென்றால் பஞ்சமுட்டி மூங்கில் கஞ்சி சாப்பிடலாம். இதில் பஞ்சமுட்டி மூங்கில் கஞ்சி கை-கால் வலி, உடம்புவலி, மூட்டுசார்ந்த அத்தனை பிரச்சனைகளையும் முழுமையாக சரிசெய்யக்கூடிய ஒரு அற்புதமான கஞ்சி. இதில் பஞ்சமுட்டி என்னவென்றால் பச்சரிசி, சிறுபருப்பு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு இந்த ஐந்தும் கலந்ததுதான் பஞ்சமுட்டி என்று சொல்லுவோம். சித்தர்கள் பதார்த்தகுண சிந்தாமணி என்ற நூலில் இந்த பஞ்சமுட்டியைப் பற்றி சொல்லியிருப்பார்கள். இந்த பஞ்சமுட்டியையும், மூங்கிலரிசி என்பது மூங்கில் மரத்தில் விளையக்கூடிய ஒரு வகையான அரிசி, இந்த அரிசியையும் சேர்த்து எல்லாமே சமஅளவு சேர்த்து ஒன்றிரண்டாக பொடித்து வைத்துக்கொள்ளலாம். இதில் ஒரு கையளவு எடுத்து 3 தம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து இந்த கஞ்சியை விடாமல் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இதுவும் மூட்டுவலிக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

மனிதனுடைய மரணத்துக்குக் காரணம்?

மனிதனுடைய மரணத்துக்குக் காரணம்?
தமிழகத்தில் வாழ்ந்த, சித்த வேதத்தைத் தோற்றுவித்த ‘காகபுஜண்டர்’ எனும் சித்தர், மனிதருக்கு மரணம், நெஞ்சுச் சளி, தொண்டைச் சளி, மண்டைச் சளி ஆகியவற்றால்தான் ஏற்படுகின்றது என்றும், இச்சளிகள் மனிதனது உடலில் இல்லையென்றால், மரணமில்லை என்றும் கூறியுள்ளார். அவ்வாறாயின், மனிதருக்கு மட்டும் நெஞ்சுச்சளி, தொண்டைச் சளி, மண்டைச் சளி ஏன் வருகின்றது?
பால், பால் பொருட்களான தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகிய உணவுகளும், அனைத்து அசைவ உணவுகளும், சமைத்த தானிய உணவுகளும், உப்பும் நாம் தினமும் சாப்பிடுவதால்தான் நமது உடலில் நெஞ்சுச் சளி, தொண்டைச் சளி, மண்டைச் சளி உண்டாகிறது. இவை எல்லாம் வெளியேறாது அங்கேயே தங்கி, நாள்பட்டு மிகுதியாகி மனிதருக்கு இறப்பை ஏற்படுத்துகின்றது. உப்பு சேர்க்காமல் சமைத்த காய்கறிகள், கீரைகள் உண்பதால் உடலில் சளி உண்டாகாது. மேலும் படிப்படியாக அல்லது எடுத்த எடுப்பிலேயே அனைத்து சமையல் உணவுகளையும் தவிர்த்து, சமைக்காத இயற்கை உணவுகளான தேங்காயும், பழவகைகளையும் உணவாக எடுத்துக்கொண்டு வாழ ஆரம்பிக்கும்போது, உடலில் உள்ள அனைத்து சளிகளும் படிப்படியாக உடலிலிருந்து வெளியேறிவிடும். அதன்பின், சளி இல்லாத வலி இல்லாத நோயில்லாத, இறப்புக்கு வாய்ப்பில்லாத உறுதியான உடலாக அந்த உடல் மாறிவிடும்.
உணவுப் பழக்கத்தைத் தவிர உடலை மேலும் உறுதியுடன் ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள உதவுபவை யோகாசனம், பிராணயாமம், தியானம். தினந்தோறும் இவற்றைச் செய்வதன் மூலமும் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ வாய்ப்பு அதிகம் உள்ளது. அவ்வப்போது விரத நாட்களில், அல்லது வாய்ப்பு ஏற்படும் நாட்களில், நீர் உண்ணா நோன்பு அல்லது சாறு உண்ணா நோன்பு மேற்கொள்வதன் மூலமும் மரணமில்லாப் பெருவாழ்வை அடைய முயற்சி செய்யலாம்.
நீர் உண்ணா நோன்பு என்றால், பசித்தபோதெல்லாம், அல்லது தேவை ஏற்படும்போதெல்லாம் எதுவும் சாப்பிடாமல், தூய்மையான குடி தண்ணீர் மட்டும் தேவையான அளவு அருந்துதல் வேண்டும். இப்படி எத்தனை நாட்கள் தொடர்ந்து வெறும் பச்சைத் தண்ணீரைக் குடித்து வாழ முடியுமோ அதுவரை வாழ்வதாகும்.
சாறு உண்ணா நோன்பு என்றால், பசித்தபோதெல்லாம் அல்லது தேவை ஏற்படும்போதெல்லாம் எதுவும் சாப்பிடாமல், இளநீர், எலுமிச்சம் பழச்சாறு + பச்சைத் தண்ணீர் + தேன் கலந்து, திராட்சைப் பழச்சாறு, ஆரஞ்சு சாறு, தேங்காய்ப் பால், பேரீச்சைப் பழச்சாறு, மாதுளம் பழச் சாறு மற்றும் இதர பழச்சாறுகளில் ஏதேனும் ஒன்றை ஒருவேளைக்கு அருந்தி, மற்ற வேளைகளில் மற்ற பழச்சாறு என அருந்தி இயன்ற நாட்கள் வரை வாழலாம்.
இவ்வாறு உண்ணா நோன்பு மேற்கொள்வதன் மூலம், உடலில் தேங்கியுள்ள சளிகள், கழிவுகள், நச்சுகள் உடலிலிருந்து வெளியேறும். உண்ணா நோன்பு முடியும்பொழுது, நன்கு பழுத்த பழ வகைகள் சாப்பிட்டபின் தேங்காயும், பழ வகைகளும் உணவாக உண்டு, தூய பச்சைத் தண்ணீர், அல்லது இளநீர், அல்லது பழச்சாறு மட்டும் உடலுக்குத் தேவைப்படும்போது அருந்தி வாழ்வதன் மூலமும் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ முயலலாம். காபி, தேயிலை, பால், மோர், மற்றும் பிற பானங்கள் முழுவதையும் அருந்துவதை முற்றிலும் தவிர்த்தலும் மரணமில்லாப் பெருவாழ்வுக்கு இன்றியமையாததாகும்.
மரணமில்லாப் பெருவாழ்வுக்கு வள்ளலார் சுவாமிகள் கூறும் வழிமுறைகளைப் பற்றியும் சிந்திப்போம். மனிதரது உடல் அழிய நான்கு காரணங்கள் உள்ளன. அவை 1. உணவு, 2. உறக்கம், 3. உழைப்பு, 4. மைதுனம் எனக் கூறுகிறார்.
இயற்கைக்கு மாறாக சமைத்து உண்பதன் மூலம் மனிதருக்கு நோய் ஏற்பட்டு, உடலும் உயிரும் அழிகிறது. சமைத்துண்ணும் பழக்கத்தினால், மனிதன் மட்டும் கும்பகர்ணன் போன்று குறட்டைவிட்டு, ஆழ்ந்த உறக்கம் கொள்கிறோம். இவ்வாறு உறங்குவதால், உடல் அழிகிறது. பிற உயிரினங்களான விலங்குகள், பறவைகள், மற்றும் இதர உயிரினங்கள் சமைத்து உண்பதில்லை. இயற்கையாக உண்கின்றன; இயற்கையாக வாழ்கின்றன. எனவே, அவையெல்லாம் தூங்காமல் தூங்கி சுகம்பெற்று வாழ்கின்றன. நாம் மட்டும் தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் எனப் புலம்பித் திரிகின்றோம். சமைத்து உண்பதால், நாம் மட்டும் இரவு, பகலாகக் கடின உழைப்பு செய்து பணம் சம்பாதிக்கிறோம். இவ்வாறு, கடின உழைப்புக்குப் பின்னர் நமது உடலும் உயிரும் அழிகிறது. சமைத்து உண்பதால், நாம் மட்டும் மிகுதியான மைதுனம் (உடலுறவு) கொள்கிறோம். அதனாலும்கூட நமது உடலும் உயிரும் அழிகிறது.
மேலும் தமிழ்நாட்டில் வாழ்ந்த மகாகவி பாரதியாரும்,
தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பம் மிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ!
என, வெந்த உணவாகிய சோறு தினம் தின்று, கொடுங்கூற்றுக்கு இரையெனப் பின் மாயும் – இறக்கும் பல வேடிக்கை மனிதர் என நெருப்பில் வெந்த உணவைத் தின்பதால் மனிதருக்கு மரணம் ஏற்படுகின்றது எனத் தீர்க்க தரிசனமாகக் கூறியுள்ளார்.
அடுத்து ‘அலெக்ஸ் கேரல்’ எனும் வெளிநாட்டு உயிரியல் அறிஞர், தனது ‘Man The Unknown’ (மனிதன் புரியாத புதிர்) எனும் நூலில், ஒரு ஆய்வின் மூலம், ‘மனிதன் மரணமில்லாதவன்; மனிதனது மரணத்துக்குக் காரணம், 1. உள் விபத்து; 2. வெளி விபத்து. இவ்விரு விபத்துகளும் இல்லையென்றால், மனிதனுக்குச் சிறிது கூட மரணமேற்பட வாய்ப்பில்லை’ எனத் தெளிவாகக் கூறியுள்ளார்.
அவர் செய்த உயிரியல் ஆய்வின் விவரம் -
ஒரு கோழிக்குஞ்சின் இதயத்தின் சதைத் துண்டை அறுத்தெடுத்து, அதை ஒரு சோதனைக் குழாயில் போட்டார். அச்சதையிலுள்ள செல்கள் உயிருடன் இயங்க, ஒரு நுண்ணூட்டத் திரவத்தை அச்சோதனைக் குழாய்க்குள் ஊற்றினார். அச்சதையின் செல்களின் கழிவுகள் வெளியேறும் வண்ணம் அதற்குரிய ஒரு திரவத்தையும் அச்சோதனைக் குழாய்க்குள் ஊற்றினார். எனவே, கோழிக்குஞ்சின் இதயத் தசையில் உள்ள செல்கள் உயிருடன் இயங்கவும், செல்களிலிருந்து கழிவுகள் வெளியேறவும் உரிய திரவங்களை ஊற்றி, ஒரு நுண்பெருக்குக் கண்ணாடி மூலம், அச்செல்களின் இயக்கத்தைக் கவனித்தார். தொடக்கத்தில், அச்செல்களின் இயக்கம் எவ்வாறு இருந்ததோ, பல ஆண்டுகள் ஆகியும் அந்தச் செல்களின் இயக்கம், சிறிதுகூட குன்றவில்லை. மாறாக எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தொடக்கத்தில் இருந்த இயக்கமே இருந்தது.
இதிலிருந்து அவர் ஒன்றைச் சிந்தித்தார். ஒரு கோழிக்குஞ்சின் செல்லுக்கே, உரிய நுண்ணூட்டமும், கழிவுகள் வெளியேறவும் வாய்ப்புக் கொடுத்தால், திறமையுடன் குன்றாது செல் இயங்கினால், மனிதரது செல், கோழிக்குஞ்சின் செல்லைவிட மிகவும் அளப்பரியது. திறமை வாய்ந்தது. பேராற்றலுடையது. மிகவும் வலுவானது. எனவே, மனிதரது செல்களும் திறமையாக இயங்கத் தகுந்த நுன்ணூட்டமும், கழிவுகள் வெளியேறுவதற்கும் உரிய தக்க வாய்ப்பளித்தால், மனிதரது செல்லும் சிதையாது. வளர்ச்சி குன்றாது, இறக்காது. மனிதரது செல்கள் இறக்காமல் இருந்தால், மனிதருக்கும் மரணமில்லை (Man is immortal). மாறாக மரணம் வந்தால், உயிருக்கு ஒவ்வாத உணவுகளை உண்டு உள் விபத்து ஏற்பட்டு மரணம் வரலாம். அல்லது வெளி விபத்து ஏற்பட்டு மரணம் வரலாம். இல்லையேல் மனிதனுக்கு மரணமே இல்லை. மரணமில்லாப் பெருவாழ்வு உள்ளது எனக் கூறியுள்ளார்.
‘ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்’ - இது குறள் கூறும் கருத்து.
By டாக்டர் அப்பன்

How to create your paypal account in Tamil



How to create your paypal account in Tamil 

Monday 26 October 2015

" கடவுளை காண போகிறேன் !"

கடவுளை காண விலகி போ !!!
ஒரு மனிதனுக்கு கடவுளை காண வேண்டும் என்று ஆசை. அவரை எப்படி சந்திப்பது ?
நிறைய பேரை கேட்டான் " கோவிலுக்கு போ !" என்றார்கள் .
உடனே புறப்பட்டான் .
போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான்
அவர் கேட்டார் .
" எங்கே போகிறாய் ?"
" கடவுளை காண போகிறேன் !"
" எங்கே ? "
" கோவிலில் !"
" அங்கே போய் ........"
" அவரை வழிபட போகிறேன் ! "
" அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா ?"
" தெரியாது "
" எந்த வகையிலும் நீ கடவுளை அறிந்திருக்கவில்லை . அப்படி இருக்கும் போது எப்படி நீ அவரை வழிபட முடியும்?"
" அப்படியென்றால் "
" உன்னுடைய வழிபாடு வெறும் சடங்காக தான் இருக்க முடியும் "
அவன் ரொம்பவே குழம்பி போய்ட்டான்
ஞானி தெளிவு படுத்தினார்
" ஏ, மனிதனே ..... நீ செய்யபோவது உண்மையான வழிபாடு அல்ல .... இன்றைக்கு மனிதர்கள் " வழிபாடு " என்ற பெயரில் ஆண்டவனிடம் தங்கள் ஆசைகளை தெரிவித்து கொண்டிருக்கிறார்கள் . தங்களது கோரிக்கைகளை குரல் மூலம் பட்டியலிட்டு சொல்லி கொண்டிருக்கிறார்கள் .தங்களது புகார்களை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்கள் அவ்வளவுதான் "
" நான் கடவுளிடம் அன்பு செலுத்த விரும்புகிறேன் ..."
" நீ அறியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும் ?"
" அப்படியானால் ..  ஆண்டவனை நான் சந்திக்க என்னதான் வழி ?"
" அவரை நீ சந்திக்க முடியாது . உணர முடியும் !"
" அதற்க்கு வழி ?"
" தியானம்"
" தியானத்திற்கும் , கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா ?"
" இல்லை "
மனிதன் வியப்போடு நிமிர்ந்தான் . அவர் சொன்னார் :
" தியானம் உன் மனதோடு சம்பந்தப்பட்டது . அது உனக்குள் ஓர் ஆழ்ந்த மௌனத்தை உண்டு பண்ணும் , அப்படிப்பட்ட ஒரு மௌன நிலையில் கடவுள் இருப்பதை நீ உணர தொடங்குவாய்  . உண்மையான தியானத்தின் பின்விளைவே வழிபடுதல் ஆகும் . தியானம் செய்பவன் மட்டுமே கடவுளை உணர முடியும் "
அந்த மனிதனும் ஞானியும் பேசிக்கொண்டு இருக்கும் போதே , வெளிநாட்டுக்காரர் ஒருபார் அங்கெ வந்தார் . ஞானியின் முன்னால் வந்து பணிவோடு நின்றார் .
தன்னுடைய தேவையை சொன்னார் :
" I WANT PEACE"
ஞானி சொன்னார்:
" முதல் இரண்டு வார்த்தைகளை விட்டு விலகு , மூன்றாவது வார்த்தையை நீ நெருங்கலாம் !"   எனக் கூற , வந்தவர் யோசித்தார் .
' I ' . ' WANT ' இரண்டையும் விட்டு விலகினால் 'PEACE ' நெருங்கி வருகிறது !
' நான் ' என்ற அகங்காரத்தை விலக்குங்கள் . ' என்னுடையது ' என்கிற ஆசைகளை விலக்குங்கள். ' அமைதி ' என்கிற இறைநிலையை நீங்கள் நெருங்கிவிடுவீர்கள் .
வெளிநாட்டுகாரருக்கு விளக்கம் கிடைத்தது .மனநிறைவோடு திரும்பி சென்றார் . கொஞ்ச நேரத்தில் இன்னொரு மனிதன் அங்கெ வந்தான் .
" சுவாமி ! இப்பத்தான் கோவில்லே சாமி கும்பிட்டு வர்றேன் . அருமையான தரிசனம் ! அந்த அளவுக்கு வேறே யாருக்கும்  கிடைச்சிருக்காது !"
" எப்படி அது ?"
" ஸ்பெஷல் தரிசனம் ! 50 ரூபாய் டிக்கெட் ! சுவாமிக்கு நெருக்கமாக போய் சன்னதியிலே கொஞ்ச நேரம் உக்கார முடிஞ்சது !"
அவன் முகத்துல கடவுளை நெருங்கி விட்ட பெருமிதம் !
ஞானி கேட்டார்
" அப்படின்னா உனக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் ?"
" ஒரு பத்தடி தூரம் இருக்கும் . அவ்வளவுதான் !"
உற்சாகமாக சொன்னான் .
" உன் அளவுக்கு வேறு யாரும் நெருங்கவில்லையா ?"
"இல்லை "
" அந்த வகையில்  பார்த்தால் உன்னைவிட கடவுளுக்கு நெருக்கமானவரும் வேறொருவர் உண்டு !"
" யார் அவர் "
" அங்கே இருக்கிற அர்ச்சகர் !"
வந்தவன் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றம் .
" சரி , சுவாமி . நான் வர்றேன் !"
சோர்வோடு நடந்து போனான் .
அதன்பிறகும் விவாதம் தொடர்ந்தது . இறுதியில் மனிதன் எழுந்தான் . ஞானியிடம் விடை பெற்றான் . திரும்பி நடந்தான் .
ஞானி  கேட்டார் :
" எங்கே போகிறாய் ? "
" வீடுக்கு !"
" கோவிலுக்கு போகவில்லையா ?"
" இல்லை "
" அங்கே போக வேண்டும் என்றுதானே புறப்பட்டு வந்தாய் ?"
" ஆண்டவனை உணர்ந்த பிறகுதான் அவரை வழிபட முடியும் என்பதைப் புரிந்துக் கொண்டேன் .
'நான் ' . 'என்னிடம் ' இருந்து விலகினால் தான் இறைவனை நெருங்கலாம் என்கிற உண்மையை தெரிந்து கொண்டேன் "
ஞானி இருகைகளையும் உயர்த்தினார் .
" ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல , விலகுவது ! எவ்வளவு தூரம் விலகியிருக்கிறீர்ககிறீர்களோ , அவ்வளவு தூரம் நெருங்கியிருக்கிறீர்கள் என்பது பொருள் "
-தென்கச்சி .கோ . சுவாமிநாதன்

Sunday 25 October 2015

கான்சர் நோய்க்கு கீமொதெரபீ சிகிச்சை தேவையில்லை அது பற்றிய முக்கிய கட்டுரை!

நீண்டகாலமாக புற்றுநோய்க்கு(CANCER) கீமொதெரபீ(CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ்(JOHNS HOPKINS) சொல்கிறார். இங்கே உங்களின் பார்வைக்காக ஆங்கிலத்திலுருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்துள்ளேன். - RAFEEK AHMED.H - Dubai.
கேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்:
1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது, அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர் சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும்.
2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான செல் உருவாகிறது.
3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாக இருக்கும்போது கேன்சருக்கான செல் அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டயுமர்(tumors) ஏற்படுவதற்கான வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.
4) ஒருவருக்கு கேன்சர் இருக்கிறது என்றால் அவருக்கு பலவிதமான சத்து குறைபாடு (nutritionaldeficiencies) உள்ளதாக அர்த்தமாகிறது. இதற்கு மரபு, சுற்றுச்சூழல், உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணிகளாகிறது.
5) சிறப்பான உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த ஊட்ட சத்து குறைப்பாட்டை நீக்கலாம். தேவையான சத்துள்ள உணவின் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
6) கீமொதெரபீ சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் செல்களை மட்டுமல்லாமல், எலும்பு, இரைப்பை போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. மேலும் குடல், கிட்னி, இதயம், மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது
7) கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான செல்கள், உறுப்புகள்,திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது
8) ஆரம்பகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியின் (tumor) அளவைக் குறைக்க செய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியினை அழிக்க பெரும்பாலும் உதவுவதில்லை.
9) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சு மூலம் நோய் எதிர்ப்புசக்தியானது அதற்க்கு ஏற்றார் போல் சமரசம் செய்து கொள்ளும் அல்லது அழிக்கப் பட்துவிடும். இதனால் மனிதனுக்கு பலவிதமான பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படும்.
10) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் கேன்சர் செல்கள் எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில் அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்கள்மற்ற இடங்களில் பரவ ஒரு காரணமாகி விடுகிறது.
11) கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள் பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை நாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.
12) இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணிக்க கடினமாகவும், ஜீரணமாக அதிக நேரமும் எடுத்துக்கொள்கிறது. மேலும் ஜீரணமாக அதிக செரிமான நொதித் தேவைப்படுகிறது. ஜீரணமாகாத இறைச்சியானது குடலில் தங்கி அழுகி, மெதுவாக நஞ்சாகிவிடுகிறது.
13) கேன்சர் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே இறைச்சி சாப்பிடுவதை தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதால், நொதியானது (enzymes) தனதுசக்தியை கேன்சர் செல்லின் கடினமான சுவரை தாக்கி, உடலின் அழிக்கும் செல்லானது (body's own killer cells) கேன்சர் செல்லை அழிக்க உதவியாகிறது.
14) IP6, Flor-ssence, Essiac, anti-oxidants, vitamins, minerals, EFAs etc, போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைப்பலப்படுத்தி, உடலின் அழிக்கும் செல்கள் (body's own killer cells) மூலம் கேன்சர் செல்களை அழிக்க உதவி செய்கிறது. வைட்டமின் E போன்றவை உடலில் உள்ள பாதிக்கப்பட்ட, தேவையற்றசெல்களை நீக்கும் முறையை ஊக்குவிக்கிறது. (Other supplements like vitamin E are known to cause apoptosis, or programmed cell death, the body's normal method of disposing of damaged, unwanted, or unneeded cells)
15) கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே! நேர்மறையான,ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கிறது. கோபம், மன்னிக்கும் மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின் அமிலத்தன்மையையும் அதிகரிக்கிறது எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும், ஆசுவாசப்படுத்திகொள்ளவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
16) ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலையில் கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை. தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது. மூச்சுப் பயிற்சியானது (Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.
உடலில் கேன்சர் செல் வளர காரணிகள்:-
1) கேன்சர் செல்லுக்கு சர்க்கரை ஒரு நல்ல உணவு. எனவே சர்க்கரையை தவிர்ப்பது கேன்சர் செல்லுக்கு தவையான ஒரு முக்கிய உணவை நிறுத்துவது போன்றது. சர்க்கரைக்கு மாற்றாக உள்ள NutraSweet, Equal, Spoonful, etc போன்றவையும் Aspartame எனும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும் பாதிப்பானாதே! எனவே குறைந்த அளவில் தேன், மொலஸஸ், Manuka போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். Table Salt-ல் வெள்ளை நிறத்திற்க்காக கெமிக்கல் சேர்ப்பதால் இதற்கு மாற்றாக Bragg's amino or sea salt போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
2) பால் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது, குறிப்பாக இரைப்பை-குடல் (gastro-intestinal)பகுதியில் சளியால் கேன்சர் செல் நன்கு வளரும். எனவே பாலுக்கு மாற்றாக இனிப்பில்லாத சோயாப் பாலை எடுத்துக் கொள்வதன் மூலம், கேன்சர் செல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.
3) அமிலத் தன்மையில் கேன்சர் செல் நன்கு வளரும். இறைச்சி சம்பந்தமான உணவுகள் அமிலத் தன்மை வாய்ந்தது. எனவே மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிக்குப் பதிலாக மீன், குறைந்த அளவுசிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் இறைச்சியானது பிராணிகளின் ஹோர்மோன், ஒட்டுண்ணிகள், ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது, இது மிகவும் ஆபத்தானது..
4) ஒரு சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழு தானியங்கள், விதைகள், பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில்வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாக இருக்கலாம், பீன்சயும் சேர்த்து. ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் உயிரோட்டமுள்ள நொதிகளை அளிக்கிறது, இவை 15 நிமிடங்களில் நன்கு உறிஞ்சப்பட்டு, ஊட்ட சத்து அளித்து நல்ல செல்கள் வளர உதவுகிறது. ஆரோக்கியமான செல்கள் வளர உதவும்உயிரோட்டமுள்ள நொதிகளை பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! நொதிகள் (enzymes) 104 degrees F (40degrees C) வெப்பத்தில் அழிந்து போய் விடுகிறது.
5) டீ, காஃபீ, சாக்லெட் போன்றவற்றில் அதிககளவு காஃபீன் உள்ளதால் இவைகளை தவிர்த்து விடவும். இதற்கு மாற்றாக க்ரீன் டீ (Green Tea) எடுத்துக் கொள்ளவும்! இதில் கேன்சர் செல்களை எதிர்க்க கூடிய ஆற்றல் உள்ளது. சுத்திகரீக்கப்பட்ட நீரை மட்டுமே அருந்தவும். நச்சு மற்றும் உலோக கலவை அதிகமுள்ள குழாய் நீரை தவிர்த்து விடவும். Distilled water is acidic, avoid it.

சுண்டைக்காய் ! நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் சுண்டைக்காய்.

சுண்டைக்காய் !நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் சுண்டைக்காய்.
===============
கிருமிகளை ஒழிக்கும் சுண்டைக்காய்:
சுண்டைக்காய், கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என்று கசப்புடனும் கசப்பின்றியும் கிடைக்கின்றது. சுண்டக்காயை வாங்கி மோரில் ஊறவைத்து, வற்றலாகப் போட்டு வறுத்தும், குழம்பில் சேர்த்தும் சாப்பிடலாம். கசப்பு சுண்டைக்காய், கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளுக்கு நல்ல மருந்து. ஒரு குடும்பத்தினருக்கு (5 பேர் அடங்கியது) வருடத்திற்கு 2 லிட்டர் கசப்பு சுண்டைக்காய் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர, கிருமித் தொந்தரவு இருக்காது அமிபீயாஸிஸ் போன்ற கிருமிகளையும் சுண்டைக்காய் விரட்டி விடும்.
நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது.
சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தில் உள்ள வைட்டமின்கள், குளுக்கோசைடுகள் போன்ற பல வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. டார்வோனின் ஏ, டார்வோனின் பி, பேனிகுனோஜெனின், டார்வோஜெனின் போன்றவை காணப்படுகின்றன.
சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம்.
சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.
சுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இருவகை உண்டு. மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது மலைச்சுண்டை. இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகிறது.
வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக் காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்கள் இவற்றை போக்கும். மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும்.
சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். சுண்டைக்காயுடன், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து கஷாயம் செய்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்து வருவது நல்லது.
முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். இது மார்புச்சளியைப் போக்கும். குடலில் உள்ள அசடுகளை நீக்கும்.
சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.
சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும்.
இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.
சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம், சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் 3 வேளை சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் குணமாகும்.
சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் புளித்த மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி எடுத்து உணவுடன் உண்டு வர நீரிழிவு நோய் தணியும்.
சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாங்கொட்டை பருப்பு, ஓமம், நெல்லி வற்றல், மாதுளை ஓடு, வெந்தயம் சம அளவாக எடுத்து தனித்தனியே இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து 5 கிராம் பொடியை 2 வேளை 1 டம்ளர் மோருடன் கலந்து சாப்பிட தீக்குற்றத்தால் உண்ட சுவையின்மை, வயிற்றுப் புழு, நிலைக் கழிச்சல், சீதக் கட்டு நீங்கும். இதையே மார்பு சளி செரியாக் கழிச்சல், மூலம், நீரிழிவு இவற்றிற்கும் சாப்பிட கட்டுப்படும்.
சுண்டைக் காயை சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வறுத்து, உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை பொடித்துப் போட்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலம், மந்தம், செரியாமை குணமாகும். சுண்டைக்காய் வேர்ப் பட்டையை பொடி செய்து தேங்காய்க் குடுக்கையில் வைக்க வேண்டும். இதனை ஒரு சிட்டிகை மூக்கிழுக்க, தலை நோய், நீரேற்றம், மண்டைக் குடைச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர்ப்பாய்தல் நீங்கும்.
சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பை பிண்ணாக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடி செய்து முகர இழுப்பு நோய் தணியும். சுண்டை வேர் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வலிகாய்ச்சல் குணமாகும்.

Saturday 24 October 2015

சாம்பிராணி தூப பொடி தயாரிக்க தேவையான மூலிகைகள்

மூலிகை தூப பொடி (கணபதி,நவகிரக ஹோமம் செய்த பலனை கொடுக்கும்)

சதுரகிரிக்கு சென்று வருகிறீர்களே,சாம்பிராணி ,குங்கிலியம் போன்ற பொருள்கள் தரக்கூடாத என்று நண்பர்கள் பலர் கேட்ட போது,அடுத்த முறை சதுரகிரி மலையில் சிவனடியார் ஒருவர் 18 மூலிகைகளை கூறி,இதை கொண்டு தூபம் போட்டால் கணபதி,நவகிரக ஹோமம் செய்த பலனை கொடுக்கும்,தினமும் போடலாம் இல்லை என்றால் செவ்வாய்,வியாழன்,ஞாயிறு செய்தால் சிறப்பாக இருக்கும் என்றார். தற்போது பெரும்பான்மையான மக்கள் விறகு அடுப்பு உபயோகிப்பது இல்லை இதனால் கரிதனல், மேலும் தூபக்கால் கிடைப்பதும் கடினம் ,நாம் சாம்பிராணி ,குங்கிலியம் போன்றவற்றை வாங்கி வைத்தாலும்,உபயோக படுத்த மக்கள் தயாராக இல்லை என்பதால் அதை குறித்து வைத்ததோடு விட்டுவிட்டோம்,

இதில் கலந்துள்ள மூலிகைகள்
1.சாம்பிராணி
2.விலாமிச்சை வேர்
3.தும்பை
4.தேவதாறு
5.அருகம்புல்
6.குங்கிலியம்
7.வேப்ப இலை 
8.நொச்சி இலை 
9.வில்வ இலை 
10.வெண்கடுகு 
11.கருங்காலி
12.நன்னாரி
13.வெட்டிவேர்
14.நாய்க்கடுகு
15.ஆலங்குச்சி
16.அரசங்குச்சி
17.நாவல் குச்சி 
18.மருதாணி விதை

போன்ற 18 வகையான மூலிகைகளை தனித்தனியாக பொடித்து சம அளவு எடுத்து கலந்து காற்று புகாத பாத்திரத்தில் சேமித்து வைத்து உபயோகபடுத்தலாம்.
இந்த மூலிகை கலவையை கொண்டு தூபம் போடுவதால் கிடைக்கும் நன்மைகள் (சிவனடியார் கூறியது,சோதித்து பார்க்கப்பட்டது மேலும் பரிசோதனைக்கு உட்பட்டது)
1.கணபதி மற்றும் நவ கிரக ஹோமம் செய்த பலனை எளிமையாக பெறலாம்(தடைகள் விலகும்,எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும்,ஏவல்,பில்லி சூனியம் போன்ற தடைகள் நீங்கும்,நவ கிரக தோஷங்கள் நீங்கிவிடும் ,எதிரிகள் தொல்லை,இறந்தவர்களின் சாபம் போன்றவை போய் விடும்)
2.கடை மட்டும் தொழில் நிலையங்களில் உபயோக படுத்த வியாபாரம் பெருகும்,எதிரிகள் தொல்லை விலகும்.
3.வீட்டில் நல்ல சக்திகள் நிலை பெரும்,வீண் சண்டை ,அமைதி இன்மை ,தூக்கமின்மை போன்றவை அகலும்.
4.நோய் தொல்லை நீங்கும் ,எந்த விஷ கிருமிகள் மற்றும் விஷ ஜந்துக்கள் வீட்டில் தங்காது.
பொதுவாக அறிவியல் ரீதியாக சாம்பிராணி தூபம் போடுவதால்,வீடு மட்டும் கடைகளில் உள்ள அனைத்து இடங்களில் உள்ள கெட்ட காற்றை அகற்றும் மேலும் விஷ ஜந்துக்களை அண்ட விடாமல் வெளியேற்றும் ,எதிர்மறை எண்ணங்களை குறைக்கும்.மழை காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை குறையாமல் அதிகரிக்கும்.

இதயத்தை பத்திரமா பாத்துக்க உதவும் பழங்களும், காய்கறிகளும்.

இன்றைய உலகில் மக்களை ஆட்டிப் படைக்கும் நோய்களில் நீரிழிவும், இரத்த அழுத்தமும் முக்கியமான இடத்தை பெறும்.ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் வழக்கம், உடற்பயிற்சி செய்யாதிருத்தல், துரித உணவுகள் என இதயத்தை பாதிக்கும் காரணிகள் ஏராளம் என்று சொல்லலாம்.
என்றென்றும் சிறப்பான வாழ்க்கைக்கு இரத்த அழுத்தம் அதிகரிக்காமலும், குறையாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இரத்த அழுத்தமானது இதயத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது.
இவற்றில் இருந்து விடுபட சீரான வாழ்க்கை வாழ இயற்கை நமக்கு அளித்த கொடைகள் தான் பழங்களும், காய்கறிகளும்.
* விளாம்பழத்திலிருந்து கல்லீரல் மற்றும் இதய கோளாறுக்கான டானிக்குகள் தயாரிக்கப்படுகின்றன, இது வயிற்றுபோக்கையும், வயிற்றுகடுப்பையும் நிறுத்தும் குணம் கொண்டது.
வெயில் காலத்தில் அடிக்கடி தாகம் எடுக்கும் போது விளாம்பழம் சாப்பிடலாம், அடிக்கடி நெஞ்சுவலி சாப்பிடும் நபர்கள் விளாம்பழத்தை சாப்பிட்டுவர குணமாகும்.
* அடிக்கடி நெஞ்சுவலி ஏற்பட்டால், மாத்திரை மருந்து சாப்பிடுவதைவிட உளுந்து மாவைக் களியாகக் கிண்டி சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் பலம், நெஞ்சு வலியும் போகும்.
* மாரடைப்பு, இதயநோய் வராமலிருக்க அடிக்கடி உணவில் வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும்.
* நெஞ்சுவலி வந்தால் பேரீச்சம்பழத்தை அப்படியே கொட்டையுடன் இடித்துப் பிசைந்து, கொஞ்சம் கொஞ்சமாக நன்றாக மென்று விழுங்குங்கள். அதில் இரும்புச் சத்து நிறைந்துள்ளதால், நெஞ்சுவலியை எளிதில் குணப்படுத்தும்.
* குப்பைமேனி இலையை உலர்த்தி இடித்து மெல்லிய துணியில் சலித்துக் கொண்டு, சமமாகச் சர்க்கரை சேர்த்து, 200 மில்லி பசும்பாலில் கலந்து, காலையில் மட்டும் சாப்பிட்டு வரவும்.
இவ்வாறு 15 நாட்கள் சாப்பிட்டால் மார்பு வலி நீங்கி தேகத்திற்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும்.
* ஆப்பிள், அன்னாசி, ஆரஞ்சு மற்றும் சீதாப்பழம் போன்ற பழங்களும் இதயத்திற்கு பலம் கொடுக்கும்.
* ஒரு நெல்லிக்கனியில் நான்கு ஆப்பிளுக்கு சமமான சத்துக்கள் உள்ளன, இதனை ஜாமாகவும், லேகியமாகவும் செய்து சாப்பிடுவது நல்லது.

மன அழுத்தம் காரணமாக உடலில் ஏற்படும் தாக்கங்கள்..!




நோய்க்கான பொதுக் காரணிகள்
ஒருவருடைய வாழ்கையில் எதிர் பாராது நிகழும் சில சம்பவங்கள், இழக்கப் படாததை இழந்ததால் ஏற்படும் துக்கம், எதிர் பார்த்த சில விடயங்கள் நடைபெறாது போவதால் ஏற்படும் ஏமாற்றம் (பரீட்சையில் சித்தியெய்தமுடியாது போவது, காதலில் தோர்வியடைவது) அல்லது சமூகத்திற்கு முகம் கொடுக்க முடியாத சமூக விரோத செயல்களில் ஏடுபட்டதால் ஏற்பட்ட குற்ற உணர்வு, கடன்பட்டு பின் அதனை செலுத்த முடியாது போவதால் ஏற்படும் மானநஷ்டம், பெரிய எதிபார்ப்புடன் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு முடங்கிப் போவதால் ஏற்படும் திடீர் மாற்றம் என்பனவற்றால் ஒருவர் மனதை துன்புறுத்தும் மன வேதனையும், தாழ்வு உணர்வு (Low Mood) நிலையும் தேவையற்ற யோசனையுமே மன அழுத்தம் உண்டாக காரணமாகின்றது.
நடந்த சில சம்பவங்கள் மறக்க முடியாதவைகளே. அதற்காக என்நேரமும் அதனையே சிந்திக் கொண்டு நேரத்திற்கு உண்ணாது ஊறங்காது மூலையில் இருப்பதனால் அதற்கு துணை போகும் சில ஹோமோன்கள் சுரந்து வேதனையையை அதிகரிக்கச் செய்து மூளையிலும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றது. அதனால் வாழ்கையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்தல், கொலை செய்ய முயற்சித்தல், குடிபோதைக்கு அடிமையாதல் போன்றவற்றை செய்யவும் தூண்டப்படுகிறார்கள். இது ஒரு நோயாகவே கருதப்படுகின்றது.
இந் நோயானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்த வயதினருக்கும் ஏற்படலாம். ஒரு சிறு மன உழைச்சல் கூட பாரிய மன அழுத்தத்தைத் தூண்டி விடுகிறது. இந்த மன அழுத்தத்தின் வெளிப்பாடாகவே கவலை, தனிமை, உதவியற்ற மற்றும் நம்பிக்கையற்ற உணர்வுகள் தோன்றுகின்றன. இந்த மன அழுத்தமானது கோபம், பயம், கவலை, நம்பிக்கையின்மை, குற்ற உணர்வு, அக்கறையின்மை, துக்கம் போன்ற பலதரப்பட்ட உணர்வுகளின் கலவை. இதன்போது செய்யப் படாததை செய்யத் தூண்டுவதும் கூட பொதுவானது
மன அழுத்த நோயாளியின் அறிகுறிகள்
தூக்கமின்மை, கவலை, சோர்வு, பயம், அடிக்கடி தலைவலி, மயக்கம், எரிச்சல், மன உழைச்சல், அஜீரணக் குறைபாடுகள், தனிமை, தாழ்வு மனப்பான்மை, குறைவாக அல்லது மிக அதிகமாக உண்வு அருந்துதல் போன்றவை மன அழுத்தத்தின் சாதாரணமான அறிகுறிகள். மன அழுத்தத்தின் தொடர் தாக்குதலினால் உயர் இரத்த அழுத்தம், நெஞ்சுவலி, தோல் நோய்கள், ஒற்றைத் தலைவலி, வயிற்றுப் புண், ஆஸ்துமா மூச்சுத்திணறல் போன்ற நோய்கள் உண்டாகலாம்.
மன அழுத்த நோயாளியியை கண்டறிவது எப்படி?
கவலை உணர்வுடன் உடம்பின் பலமிழத உணர்வுகள், தன்னம்பிக்கை இழந்து தனிமை எனும் உணர்வுடன் ஒதுங்கிக் கொள்லுதல், வழக்கமாக பொழுதுபோக்குகளில் நாட்டமின்மை போன்றவை மன அழுத்தத்தின் ஆரம்ப அறிகுறிககாகும். அதுவே அதிகமாகி, அதிகாலையில் தூக்கமின்றி விழித்துக் கொள்ளுதல், வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டு வாழக்கையை முடித்துக் கொள்ளலாமோ என்ற எண்ணம் அடிக்கடி மனதில் எழுதல், அதற்கான தற்கொலை முயற்சி போன்றவைகளில் ஏதோவொன்று காணப்பட்டால் தகுந்த அலோசகரையோ மனநல மருத்துவரையோ அணுகி ஆலோசனை வெறுவது முக்கியமாகும்..
ஒருவருடை மன அழுத்தத்தை மூளையின் செயல்பாடு குறைவினால் ஏற்படும் சைக்காட்டிக் (Psychotic) மன அழுத்தம் மற்றும் அவ்வப்போது வாழ்க்கையில் ஏற்படும் பாதகமான சூழலினால் ஏற்படும் நியூராட்டிக் (Neurotic) மன அழுத்தம் என இருவகையாக பிரிக்கலாம். இவற்றுள் நியூராட்டிக் வகையே மிகவும் பரவலாகக் காணப்படுவது. கடந்த காலத்தைக் குறித்த குற்ற உணர்வு, நிகழ்காலத்தைக் குறித்த உதவியற்ற நிலை, எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையின்மை இவையே இத்தகைய மன அழுத்தத்தின் முக்கிய அடிப்படைக் காரணிகள். எனவே அத்தகைய சூழ்நிலைக்குள் ஒருவனைத் திடீரென்றோ படிப்படியாகவோ தள்ளும் எந்தவொரு பாதகமான சூழ்நிலையும் அவனுக்கு மனஅழுத்தத்தைக் கொண்டுவருகிறது.
சரியான திட்டமிடுதல், அவசர மற்றும் அவசியப் பணிகளை முதலில் முடித்தல், வேலைப்பளுவில் அவ்வப்போது ஓய்வு எடுத்தல், மனதை தளர்வாக வைத்திருத்தல், தனிமை மற்றும் எதிர்மறை சிந்தனைகளைத் தவிர்த்து நேர்மறை சிந்தனை நண்பர்களுடன் நிறைய நேரம் செலவிடுதல், தியானம், உடற்பயிற்சிகள், பொழுதுபோக்குக் காட்சிகள் முதலானவை மன அழுத்தத்திற்கு மருந்துகளாக பலராலும் அவ்வப்போது பரிந்துரைக்கப்ப்படுகின்றன. இவைகளெல்லாம் சொல்வதற்கு எளிமையாக இருந்தாலும் இவற்றில் செயல்வடிவில் உள்ள பிரச்சினைகள் அதனை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே எளிதில் புரியும்.
இந் நோயியில் இருந்து நிவாரணம் பெற என்ன செய்ய வேண்டும்?
மன அழுத்தம் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதை தடை செய்ய கீழுள்ள ஆலோசனைகளை பின் பற்றுங்கள், அவை உங்களுக்கு உதவக்கூடும். உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், உணர்வுகளைப் பற்றியும் நடந்தவைகள் பற்றி நீங்கள் கண்டிப்பாக யாருடனாவது பேசுங்கள், உங்கள் குடும்ப அங்கத்தினரிடமோ அல்லது நண்பர்களிடமோ இது பற்றிக் கூறுவதற்கு விரும்பாவிட்டால் இதற்காக தகுந்த ஆலோசனைகள் வழங்க காத்திருக்கும் மனநிலை (Counseling)) ஆலோசகரை அணுகலாம். அப்போதுதான் உங்க்களுக்கு விடிவு கிடைக்கும்.
நீங்கள் அனுபவித்த மகிழ்ச்சியாக விடயங்களை மீண்டும் செய்து பாருங்கள். அன்றாடம் உடற்பயிற்சி செய்ய ஆரம்பியுங்கள். இந்த சக்தியூட்டும் செயற்பாடு உங்கள் பொது சுகாதாரத்தைப் பேணுவதோடு மன உழைச்சலைக் குறைக்கவும் உதவுகிறது.
சுகாதார அலுவலர் ஒருவருடன் பேசுங்கள். அவர்களுடன் நேர்மையாக இருங்கள். அவர்கள் உங்களுக்கு சிறப்பு மருந்துகளை வழங்கி அல்லது சிகிச்சைகளை வழங்கி உதவக் கூடும்.  அடையக்கூடிய இலக்கொன்றைத் தீர்மானித்துக்கொண்டு அது நோக்கி செயற்படுங்கள். போதுமான அளவு உணவு தூக்கம் இரண்டும் உடலுக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இறுதியாக இந்த சின்ன விடயம் உங்கள் வாழ்க்கையின் நீடிப்புத் தன்மையை வழங்கும்.
உங்களுக்கு ஏற்பட்ட துரதிஷ்ட வசமான சம்பவம் உங்க்களைப் பாதித்திருந்தால், சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள். சம்பந்தப்பட்ட பொருட்களை ஒதுக்கி அவற்றை காணாத இடத்தில் பதுக்கி வைத்து விடுங்க்கள். இவ்வாறு செய்வதன் மூலம் நினைவுகளை தூண்டப் படாது தவிர்த்துக் கொள்ளலாம். அத்துடன் பாதித்த நிகழ்வுகள் பற்றி பேசாது இருத்தல் போன்ற செயல்கள் அவற்றை மறக்கச் செய்து சுய நினைவை ஏற்படுத்த உதவுகின்றது.
மது அருந்துதல், போதைப் பழக்கம் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள். தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள சிலர் இவற்றை நாடுகின்றனர். ஆனால் இவை அதிகரிக்கவே செய்யும். ஆரோக்கியமான உணவுக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துங்கள்.
சர்க்கரை மற்றும் கபீன் அடங்கிய உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்வதைத் தவிர்த்து விடுங்கள். மன அழுத்த ஹோர்மோன்களை இந்த கபீன் சுரக்கச் செய்வதோடு உணர்ச்சிகளை கூட்டிக் குறைப்பதில் சர்க்கரை முக்கிய பங்கு வகிக்கிறது.
அவை மட்டுமன்றி பாதிக்கப்பட்டவருடன் உறவினர், நண்பர்கள் பேச்சுக் கொடுத்து அவர்களையும் சம்பாஷனையில் உள்வாங்கி வழமைக்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும். ஒருவர் மன அழுத்ததினால் பீடிக்கப்பட்டு இருக்கும்போது அவரை தனிமைப்படுத்தி வைக்காது தொடர்பாடலை ஏற்படுத்தி அவர்களின் மனநிலை மாற்றம் ஏற்படும் வகையில் ஆறுதல் கூற வேண்டும்
உலகில் வாழும் அனைவருமே தங்கள் வாழ்நாளின் ஒரு முறையாவது தற்கொலை செய்யலாமா என்ற நிலைமைக்கு வருகின்றனர் என்று மனோதத்துவம் சொல்கிறது. இன்றைய வேகமான உலகத்திற்கு ஈடுகொடுத்து நாம் காரியங்களை செய்யும்போது மெல்ல மெல்ல நம்மை அமுக்கி மூழ்கடிக்கவரும் அரக்கனே மன அழுத்தம். இதை உடனே அடையாளம் கண்டுகொண்டு தீர்வு காண்பதன் மூலம் பெரும் இழப்புகளை தவிர்க்க முடியும்.
தற்பொழுது மன அழுத்தத்திற்கான (Depression) காரணங்களும், அதனைத் தீர்ப்பதற்கான வழிவகைகளும் விரிவாக அலசப்படுகின்றன. இருப்பினும் மனஅழுத்தம் என்பது தொன்று தொட்டே இருந்து வரும் ஒன்று தான். அறிவியல், மருத்துவம், தகவல் தொழில்நுட்பம் என அனைத்துத் துறைகளிலும் மனிதன் பெருவளர்ச்சி கண்ட பின்னரும் எதிர்பார்த்த ஏதோவொன்று இன்னமும் கிடைக்காத ஏமாற்றம், தோல்வி, வெறுமை உணர்வில் மன அழுத்தம் அவனை நிலைகுலையச் செய்து விடுகிறது. வான்மழை பொய்த்தால் வறுமையின் கொடுமை தாங்காமல் உயிர்விடும் விவசாயிகள் முதல் பணவீக்க ஏற்றத்தாழ்வினால் பதவியிழந்து பரிதவிக்கும் படித்தவர்கள், காதல் தோல்வியுற்றால் வாழ்க்கையை வெறுக்கும் காதலர்கள் வரையிலும் அது எவரையுமே விட்டு வைப்பதில்லை.
மன அழுத்தம்- ஒரு நோய்
சாதாரணமாக உடல் நலக் குறைவினால் பொது மருத்துவரை அணுகுவோரில் மூன்றில் ஒருவருக்கு இருப்பது அவர்களின் மன அளவில் ஆரோக்கியமின்மையால் அவர்களது உடல் நலத்தில் ஏற்படும் குறைபாடுகள் என்பது வெளிப்படை.
உலகில் வாழும் அனைவருமே நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புகிறார்கள். ஆரோக்கியமாக வாழ்தல் என்பது பெரிய வருத்தங்கள் எதுவுமின்றி வாழ்வது மட்டுமல்ல; உடல், மனம் மற்றும் சமூக அளவில் ஒருவன் நலமாக இருப்பதே ஆரோக்கியமாயிருத்தல் என உலக சுகாதார நிறுவனம் கூறுகின்றது. இந்த வரையறையின்படி உலகில் வாழும் அனைவருமே ஒருவிதத்தில் ஏதாவதொரு கட்டத்தில் நோயாளிகளாக உள்ளார்கள் என்பது வெளிப்படையான உண்மை.
மன அழுத்தத்தின் மதிப்பீடு
மனநல மருத்துவர்களை நாடும் மன நோயாளிகளின்(Mental Disorders) எண்ணிக்கை 20 மில்லியானாக இருக்கும் பட்சத்தில், இதுதவிர மனஅழுத்தத்தினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மட்டும் 120 மில்லியன் என கணக்கிடப்படுகிறது. தண்ணீரில் மிதக்கும் பனிக்கட்டி வெளியில் தெரிவது கொஞ்சமாக இருப்பினும் அதன் மொத்த உருவமோ மிகவும் பெரிதாக இருக்கும். அதுபோன்றே இவர்கள் உட்பட எதோவொரு விதத்தில் மனநலம் குன்றியோரின் எண்ணிக்கை 500 மில்லியனைத் தாண்டுகிறது. உலகில் ஆண்டுதோறும் 8, 00, 000 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். இவர்களில் 90 சதவிகிதம் பேருக்கு மன அழுத்தமே காரணம்.
ஆன்மீகத்தின் பங்கு
மனநல மருத்துவத்துக்கும் ஆன்மீகத்துக்கும் சம்பந்தமில்லை என்றது ஒருகாலம். அப்போது மதம் மற்றும் ஆன்மீக காரியங்களே மன நோயாக கருதப்பட்டன. ஆனால் சமீபத்திய ஆய்வுமுடிவுகள் ஆன்மீகம் மனிதனின் நோய் மற்றும் அதனால் ஏற்படும் மன உழைச்சலுக்கு தீர்வாக அமைவதை உறுதிப் படுத்துகின்றன. இதன் விளைவாக சமீப காலங்களில் உலகமெங்கிலும் பரவலாக பல நாடுகளின் மனநல மருத்துவத் துறையில் ஆன்மீகத்துக்கென்றே தனிபிரிவுகள் செயல்படத் தொடங்கியுள்ளன. தியானம், ஆலய வழிபாடு, பிரார்த்தனைகள் என்பன வாழ்க்கையில் நம்பிக்கையையும் தென்பையும் கொடுத்து மனதை திடப்படுத்திக் கொள்கின்றது.

உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்!

உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்!


bbbbb
இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு.
இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும்.
பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது.
இதுபோன்றவர்களுக்கு எளிய வழியில் உடல் பருமனைக் குறைப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த த‌ண்‌ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும்.
சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.
பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர, மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும்.
அமுக்கிராவேர் பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும். சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும்.
மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும். இதுதவிர, வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம்.
இது எ‌ல்லாவ‌ற்‌றி‌ற்கு‌ம் மேலாக காலை‌யி‌ல் அரை ம‌ணி நேர‌ம் நடைப‌யி‌ற்‌சி மே‌ற்கொ‌ண்டா‌ல் கொழு‌ப்பு‌ம் கரையு‌ம், உட‌‌ல் எடையு‌ம் குறையு‌ம், பு‌த்துண‌ர்வாகவு‌ம் இரு‌க்கு‌ம்.
.1)எப்போதும் நமது எண்ணங்கள் பாசிட்டிவாக இருந்தால்தான் எந்த வெற்றியையும் அடைய முடியும்.அது இந்த உடல் மெலிவதற்கும் பொருந்தும்.உடல் மெலிய வேண்டும் என்று உடற்பயிற்சி,டயட்டிங் இருக்க ஆரம்பித்து விட்டால், இனி உடல் எடை குறையும்,இப்போது கொஞ்சம் குறைந்து விட்டது என்று நீங்களே மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.இதுதான் உங்களை மேலும் முயற்சி செய்ய வைக்கும்.என்ன் இது 2 வாரமாகியும் உடல் எடை குறைய வில்லையே என்று பாதியில் விட்டு விடாதீர்கள்.அப்புறம் மேலும் எடை கூட வாய்ப்பு அதிகம்.
2) எக்காரணம் கொண்டும் சாப்பிட்ட பிறகு உடல் பயிற்சி செய்யாதீர்கள்.சாப்பிடும் முன்பு செய்வதுதான் சரி.
3)குளிர்ந்த தண்ணீர் குடிப்பதை விட சூடான தண்ணீர் குடிப்பது உடல் எடை குறைக்க உதவும்.
4) 3 வேளையாக சாப்பிடாமல் 3 மணி நேர இடைவெளியில் 6 தடவையாக சாப்பிடுங்கள்.அதனால் எப்போதும் சாப்பிடும் ஒரு வேளை உணவை(அதே அளவை) இரண்டாக பிரித்து 2 வேளையாக சாப்பிடுங்கள்.இதுதான் இன்று மிகவும் அதிகமான பேர் பின்பற்றும் டயட்டிங் முறை.எல்லோருடைய மெட்டபாலிசமும் ஒரே மாதிரி இருக்காது.இப்படி பிரித்து சாப்பிடுவதால் உடம்பில் கொழுப்பு தங்க வாய்ப்பு இல்லாமல் எளிதில் உணவு ஜீரணமாகிவிடும்.அதனால்தான் மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளை சிறிய உணவாக உண்ண சொல்லுகிறார்கள்.எப்போதும் சாப்பிடும் தட்டைவிட சிறிய தட்டில் சாப்பிடுங்கள்.அப்போதுதான் நாம் நிறைய சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் வரும்.மெதுவாக,நன்றாக மென்று சாப்பிடுங்கள்.இதனால் உணவு எடுத்துக் கொள்ளும் அளவும் குறையும்.
5)சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.கொள்ளு ரசம்,கொள்ளு சுண்டல் போன்றவை செய்து சாப்பிடலாம்.அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள்.இது நிச்சயம் எடையை குறைக்கும்.
6)என்ன சாப்பிட்டாலும் அதிலிருந்து எவ்வளவு எனர்ஜி கிடைக்கிறது என்று பாருங்கள்.இது வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு எளிது.அதிகம் கிலோ ஜூல்ஸ் உள்ள பதார்த்தங்களை எளிதாக தவிர்த்து விடலாம்.இதில் முக்கியமாக தவிர்க்க வேண்டியவை Sweets.எடை கூட இது முதற் காரணம்.Equal போன்ற கலோரி குறைந்த Sweetener ஐ உபயோகியுங்கள்.
7) டயட் என்றால் பட்டினி கிடப்பதில்லை.அதேபோல் சுவை குறைந்த உணவை சாப்பிட வேண்டும் என்பதும் இல்லை.இப்படி செய்ய ஆரம்பித்தால் வெறுப்புதான் வரும்.எதையும் மனதிற்கு பிடித்து செய்ய வேண்டும்.ஒரு வேளை கூட பட்டினி கிடக்காதீர்கள்.அப்புறம் உங்களையும் அறியாமல் அடுத்த வேளை அதிகம் சாப்பிட்டு விடுவீர்கள்.மீண்டும் உணவு கொழுப்பாக உடலில் தங்கிவிடும்.காலை உணவு எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
8)ஆவியில் வேக வைத்த உணவு,நீர் காய்கறிகள் என்று திட்டமிட்டு சமையுங்கள்.வாரம் ஒரு முறை பொரித்த உணவு,ஸ்வீட்ஸ் என்றுகூட சாப்பிடலாம்.முக்கியமாக டயட் இருந்தாலும் நம் உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் தொடர்ந்து கிடைக்குமாறு பார்த்துக் கொளுங்கள்.புரோட்டீன்,கார்போஹைடிரேட்,நல்ல கொழுப்பு,கால்ஷியம்,இரும்புச் சத்து முதலியவை நம் உடலுக்கு கண்டிப்பாக தேவை.இதன் அளவு குறைந்தால் முடி கொட்டுதல்,ரத்த சோகை,எலும்பு தேய்மானம் முதலியவை ஏற்படும்.பருப்பு,கீரை,அவித்த முட்டை,சாதம்,பால் முதலியவை சேர்த்துக் கொள்ளுங்கள்.சமைக்கும் முறையில் அதிகம் கொழுப்பு சேர்ந்து விடாமல் செய்து சாப்பிடுங்கள்.
8) டயட்டில் ஒன்று சொல்வார்கள்.வெள்ளையாக இருப்பவற்றை, குறைந்த அளவு சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று.ஜீனி,உப்பு,சாதம்,பால்,தயிர் போன்றவை தான் இப்படி அளவை குறைக்க வேண்டிய பொருட்கள்.நிறைய பேர் Full Cream milk, Skim Milk க்கு உள்ள வேறுபாட்டை அறியாமல் இருக்கிறார்கள்.Skim milk தண்ணீரை போன்று இருப்பதால் பலரும் அதை Diluted Full Cream milk அதாவது தண்ணீர் சேர்க்கப்பட்ட பால் என்று நினைத்து விடுகிறார்கள்.அதனால் அதை வாங்கி உபயோகப்படுத்துவதும் இல்லை.Skim milk என்பது கொழுப்பு நீக்கப்பட்ட பால்.ஆனால் பாலில் உள்ள அத்தனை சத்துக்களும் அப்படியேதான் இருக்கும்.எனவே உடல் எடை குறைய skim milk உபயோகிக்கலாம்.சத்துப் பற்றாக்குறை ஏற்படாது.
9)வாரம் ஒரு முறையாவது ஓட்ஸ்,பார்லி சேர்த்துக் கொள்ளுங்கள்.ஓட்ஸ் உடம்பில் உள்ள கொழுப்பையும்,பார்லி உடம்பில் அதிகம் உள்ள நீரையும் குறைக்கும்.ஆனால் பார்லியை அதிகம் முக்கியமாக கருவுற்றிருக்கும் பெண்கள் உபயோகப்படுத்த வேண்டாம்.இது நீரின் அளவை குறைத்து சிசேரியனில் கொண்டு விட்டுவிடும்.சிலர் கால்,கை வீக்கம் கர்ப்ப காலத்தில் ஏற்படும்போது அதிகம் பார்லியை உட்கொண்டுவிடுவதால் இப்படி நேர்ந்துவிடுகிறது.இதற்கு மாற்றாக வெந்தயக்கஞ்சி செய்து சாப்பிடலாம்(கர்ப்பிணிகள்).
10)உங்களது லைப்ஸ்டைலுக்கு ஏற்றார்போல் உடல் பயிற்சியை அமைத்துக் கொள்ளுங்கள்.உங்களால் பிட்னெஸ் செண்டருக்கு தொடர்ந்து சென்று பயிற்சி செய்ய முடியும் என்றால் மட்டுமே அதில் சேருங்கள்.குழந்தை வைத்திருப்பவர்கள்,குழந்தையை ப்ராமில் வைத்து தள்ளிக் கொண்டு வாக்கிங் போகலாம்.அவர்களுக்கு வேடிக்கை காண்பிக்க வெளியில் அழைத்து சென்றது போலிருக்கும்.வாக்கிங் செய்வது மிகவும் அவசியம்.உடம்பில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் குறைக்க நினைக்காதீர்கள்.வாக்கிங்,ஜாகிங் இப்படி வெளியே செல்லும் எந்த பயிற்சியும் செய்ய முடியாதவர்கள் வீட்டிலேயே உடல் பயிற்சி செய்யலாம்.ஒழுங்காக கற்றுக் கொண்டு அல்லது புக்கில் படித்து புரிந்து,அதற்கென உள்ள வீடியோக்களை வாங்கிப் பார்த்து வீட்டினுள்ளேயே செய்யலாம்.
11)அதிக எண்ணெய்,மட்டன்(மாதம் ஒரு முறையோ,வாரம் ஒரு முறையோ கொழுப்பில்லாத கறியாக சாப்பிடலாம்),ஸ்நாக்ஸ்(சிப்ஸ்) போன்ற கலோரி அதிகமுள்ள பொருட்களை தவிர்த்து விடுங்கள்.டீ குடிப்பது உடலில் கொழுப்பை சேர விடாது.அதுவும் க்ரீன் டீ மிகவும் நல்லது.பாலை சேர்க்காமல் அல்லது ஸ்கிம் மில்க்கை சேர்த்து குடிக்கலாம்.
12)சில வகை உணவுகள் செரிப்பதற்கு அதிக எனர்ஜியை எடுத்துக் கொள்ளும்.உதாரணமாக ஆப்பிள்,Broccoli போன்றவை செரிக்க அதிக எனர்ஜி தேவைப்படும்.அப்படி அதிக எனர்ஜி தேவைப்படும்போது நமது உடலில் உள்ள கொழுப்பிலிருந்து சக்தி எடுத்துக் கொள்ளும்.எப்படியிருந்தாலும் மேற்கண்ட பொருட்களை சாப்பிடும்போது உடலில் கொழுப்பு சேர்வதில்லை.
13)Pepsi,Coke போன்ற பானங்களை குடித்தே ஆக வேண்டும் என்றால் Sugar Free அல்லது Diet பானங்களை பருகலாம்.Milo,Horlicks போன்றவை எடையை கூட்டவே செய்யும்.சாலட் சாப்பிட்டாலும் அதில் மயோனைஸ்,சாலட் டிரஸ்சிங் சேர்க்காமல் எலுமிச்சை,மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடலாம்.Baked Beans,Tuna can,Crackers போன்றவற்றை சிறிய உணவாக எடுத்துக் கொள்ளலாம்.இதன் மூலம் புரோட்டீன் போன்ற சத்துக்கள் கிடைத்துவிடும்.முடிந்தவரை வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள்.வெளியில் சாப்பிடுவதுகூட எடை ஏற ஒரு காரணம்.முக்கியமாக பிட்ஸா,சிக்கன் ஃபிரை போன்ற அயிட்டங்கள் நிச்சயம் எடையை கூட்டிவிடும்.

பதப்படுத்தப்பட்ட பிளம்ஸ் பழங்கள்தான் ஆல்பக்கோடா கொழுப்பை குறைக்க வல்லது.

குமட்டலை சரிசெய்யும் ஆல்பக்கோடா !
வாந்தி, குமட்டலை சரிசெய்ய கூடியதும், அஜீரணத்தை போக்கவல்லதும், உடலுக்கு பலத்தை கொடுக்க கூடிய தன்மை கொண்டதும், மலச்சிக்கலை தீர்க்க கூடியதும், கொழுப்பை குறைக்க வல்லதுமான ஆல்பக்கோடா பழம் குறித்து இன்று நாம் பார்ப்போம். ஆல்பக்கோடா உடல் தேற்றியாகவும், பலத்தை தரக்க கூடிய தன்மை கொண்டது. மலக்கட்டுவை சரி செய்கிறது. ஆல்பக்கோடாவில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதால், ரத்த ஓட்டத்தை சீராக்கும். ரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்கும். இதில், வைட்டமின் சி சத்து அதிகமாக இருப்பதால் எலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியது. உடலில் இருக்கும் நச்சுக்களை வெளித்தள்ளக் கூடியது. இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட இந்த ஆல்பக்கோடாவை குமட்டல் வரும்போது வாயில் அடக்கி வைத்தால் குமட்டல் சரியாகும். நோயாளிகள் தினமும் சாப்பிடுவதால் நல்ல பலனை தரும். உடலுக்கு பலத்தை தரும். ஆல்பக்கோடா நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். பிளம்ஸ் பழவகையை சேர்ந்தது.
ஆல்பக்கோடாவை பயன்படுத்தி அஜீரணம், பசியின்மை, வயிறு உப்புசம், வாந்தி, குமட்டலுக்கான மருந்து தயாரிக்கலாம்.3 ஆல்பக்கோடா பழம், 2 துண்டு இஞ்சி, சிறிது பனங்கற்கண்டுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்தால் குமட்டல் சரியாகும். கொழுப்பு சத்தை குறைக்கும்.வைட்டமின்கள் நிறைந்த இந்த பழம் புத்துணர்வை தரக்கூடியது. சோர்ந்துபோன உடலுக்கு தெம்பை தரக்கூடியது. நோய்வாய்ப்பட்டவர்களின் பசியின்மையை போக்கும். குமட்டலுக்கு மருந்தாவதுடன், வாந்தியை தடுத்து நிறுத்தும் தன்மையை கொண்டுள்ளது. வயிற்று புண்களை ஆற்றும். நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை தடுக்கிறது. ரத்த அழுத்தம் சீராகும். ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு சரியாகும்.
பதப்படுத்தப்பட்ட பிளம்ஸ் பழங்கள்தான் ஆல்பக்கோடா. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள இந்த பழத்தை பயன்படுத்தி மலச்சிக்கலுக்கான மருந்து தயாரிக்கலாம்.4 ஆல்பக்கோடா பழம், ஒரு ஸ்பூன் சோம்பு, அரை ஸ்பூன் பனங்கற்கண்டுடன் ஒரு டம்ளர் நீர் சேர்த்து கொதிக்கவைக்கவும். குழந்தைகளுக்கு 2 பழம், அரை ஸ்பூன் சோம்பு சேர்த்தால் போதும். இதை வடிக்கட்டி குடித்தால் மலச்சிக்கல் சரியாகும். செரிமான குறைபாடுகள் இல்லாமல் போகும். வயிறு சுத்தமாகி மலச்சிக்கல் சரியாகும். ஆல்பக்கோடாவை பயன்படுத்தி கொழுப்பை குறைக்க கூடிய மருந்து தயாரிக்கலாம். ஆல்பக்கோடா பழம், கொள்ளு, தேன் எடுத்துக்கொள்ளவும். 4 பழத்தை நீர்விட்டு ஊறவைத்து, அதே நீருடன் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் ஒரு ஸ்பூன் கொள்ளுப்பொடி, நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் சேர்க்கவும்.
இதை குடித்தால் உடல் எடை குறையும். பசியை அடக்கும் தன்மை கொண்டது. ரத்த நாளங்களில் கொழுப்பு படிந்தால் ரத்த அழுத்தம் அதிகமாகும். உடல் எடை கூடும். இந்நிலையில், கொழுப்பு சத்தை குறைக்க கூடியதாக ஆல்பக்கோடா உள்ளது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட இந்த பழத்தில் வைட்டமின், மினரல், நார்ச்சத்து உள்ளது. உடலுக்கு தீங்கில்லாதது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை எடுத்துக்கொள்ளலாம்.

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில வழிமுறைகள் ;


மனிதர்களாகிய நமக்கு செல்வச் செழிப்பை வழங்குவது அஷ்ட லட்சுமிகள். நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில வழிமுறைகள்: குளித்தபின்பு முதுகைத்தான் முதலில் துடைக்கவேண்டும். பின்புதான், முகத்தை துடைக்கவேண்டும். குளித்தவுடன் துவட்டும்போது முதலில் மூதேவி தான் உடலில் இடம் பிடிப்பாள். பின்தான் லட்சுமி வருவாள்.
மனிதர்களாகிய நமக்கு செல்வச் செழிப்பை வழங்குவது அஷ்ட லட்சுமிகள். நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில வழிமுறைகள் ;
1. காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளை தான் பார்க்கவேண்டும்
2. குளித்தபின்பு முதுகைத்தான் முதலில் துடைக்கவேண்டும். பின்புதான், முகத்தை துடைக்கவேண்டும். குளித்தவுடன் துவட்டும்போது முதலில் மூதேவி தான் உடலில் இடம் பிடிப்பாள். பின்தான் லட்சுமி வருவாள்.
3. சாப்பிடும்போது இடதுகை எப்போதும் வட்டிலைத் தொட்டுகொண்டுதான் இருக்கவேண்டும். வட்டிலை தட்டு என்று சொல்லகூடாது. அது தட்டுபாட்டுக்கு உரிய சொல்.
4. இரவில் தயிர் சேர்த்துகொள்ளக்கூடாது. அது விஷ்ணுவானாலும் சரி, அவரை விட்டு லட்சுமி கடாக்சம் காணாமல் போய்விடும்.
5. வீட்டின் வாசலை பார்த்தவாறு ஏழுமலையான் (பெருமாள்) படம் வைக்க வேண்டும். இதை பல அலுவலகங்களில் வைத்திருப்பதை நாம் இன்றும் காண முடியும்.
6. படத்திற்க்கும் கள்ளாபெட்டிக்கும் அல்லது பீரோவிலும் மல்லிகை பூ கட்டாயம் வைக்கவேண்டும். மல்லிகை லட்சுமிக்கு விருப்பமான பூ.
7. லட்சுமி ,குபேரர் மந்திரங்களை நாள்தோறும் கூற வேண்டும், அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல “ஓம் ஐஸ்வரேஸ்வராய நம “என்றாவது கூறவேண்டும். இதை மல்லிகை பூ போடும் போது கூறலாம்.
8. பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.
9. .விநாயகர் கோபமாக உள்ள கண்திருஷ்டி படமெல்லாம் மாட்டகூடாது.
10. மகா சொர்ணாகர்ஷணபைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தையும் கட்டாயம் வைக்கவேண்டும்
இது எதுவுமே செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை ஒரு நாளைக்கு ஓரு முறையாவது மகான் அரங்கமகாதேசிகர் அருளிய சித்தர் மந்திரம் கூறவும். இதை தினமும் கூற அருள்செல்வம் முதலில் வரும், பின்பு பொருள்செல்வம் தானாக தேடி வரும்.
ஓம் அகத்தீசாய நம!
ஓம் கரூவூர்தேவாய நம!
ஓம் போகதேவாய நம!
ஓம் கோரக்கதேவாய நம!
அஷ்ட லக்ஷ்மிகளும் நமக்கு செல்வ வளத்தைத் தந்துகொண்டே இருப்பதால்,இவர்களின் சக்தி குறையும் என்று கூறுவர்.
இந்த சக்திக்குறைபாட்டை சரிசெய்ய இந்த அஷ்ட லட்சுமிகளும் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வரும் ராகு காலத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலில் வழிபாடு செய்கின்றனர். இதே தேய்பிறை அஷ்டமி நாளில் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலுக்குச் சென்று,ராகு காலம் முழுவதும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம் அல்லது மூலமந்திரத்தை ஜபிப்பதன் மூலமாக பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றன.
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம்
ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி:
தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷணபைரவ ப்ரசோதயாத்!
1.நமக்கு வர வேண்டிய பணம் தானாகவே வரத்துவங்கும்.
2.நாம் தர வேண்டிய பணத்தைத் திருப்பித் தருமளவுக்கு நமக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.
3.இதுவரையில்லாத அளவுக்கு ஒரு ஆழ்ந்த மன நிம்மதி அல்லது தொழில் வளர்ச்சி அல்லது வியாபார முன்னேற்றம் அல்லது குடும்ப ஒற்றுமை(எது நமது ஏக்கமோ அந்த ஏக்கம் தீரத்துவங்கும்) ஏற்படும்.
தமிழ்நாட்டில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கும் கோவில்களின் பட்டியல் :
1.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் 10 வது கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தர ராஜப்பெருமாள் கோவிலில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார்.
2.தேவக்கோட்டை அருகில் தபசு மலையில் இருக்கிறார்.
3.காரைக்குடி அருகே இலுப்பைக்குடியில் இருக்கிறார்.
4.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜாரில் தனி கோவிலில் அருள் பாலித்துவருகிறார்.
5.சிதம்பரத்தில் இருக்கிறார்.
6.காஞ்சிபுரம் அருகே அழிபடைதாங்கி என்னும் ஊரில் இருக்கிறார்.
7.சென்னை தாம்பரத்திலிருந்து வேலூர் செல்லும் வழியில் இருக்கும் படப்பையில் ஸ்ரீஜெயதுர்கா பீடத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார்.
தொடர்ந்து எட்டு தேய்பிறை அஷ்டமிகளுக்கு இந்தக் கோவில்களில் ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று வந்தால்,செல்வச் செழிப்பின் உச்சத்தை அடைய முடியும்
-----------------------------------------------------------------
செல்வம் நிலைக்க ,லக்ஷ்மி கடாட்சம் பெருக......
=============================================================
01,ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.
02,செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில்
நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம்.
03,வாசற்படி, உரல், ஆட்டுக்கல்,அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.
04,இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது.
05,எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும்.
06,,வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் கூறக்கூடாது.
07,அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது.
08.துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது.
09.உப்பை தரையில் சிந்தக்கூடாது.
10.அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.
11.உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக
வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது.
12.வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.
15.சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது.
16.ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள். ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.
17.வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.
18.சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.
19.தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.
20.பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்? பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.
21.செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.
22.சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.
23.காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்
24.தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.
25.விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். ‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.
26.விளக்கை தானாக மலையேற விடக்கூடாது, ஊதியும் அமர்த்தக்கூடாது. புஷ்பத்தினாலும் மலையேற்றக்கூடாது. அப்போ எப்படித் தான் சார் மலையேற்றுவது என்று தானே கேட்க்கிறீர்கள்? அப்படி கேளுங்க…. தீபத்தை எப்போதும் கல்கண்டை கொண்டு தான் அமர்த்தவேண்டும். சரியா?
27.வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது. அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.
28.மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.
ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள்.
30.எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.
31.எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.
32.வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.
33.எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
34.எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது.
சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.
35.தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.
36.குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது. கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும். அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும்.
37.அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.
38.பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.
39.அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது
40.வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.
41.இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.
42.வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.
43.பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது.
44.மங்கையர்கள் நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது.
45.விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறர்க்குக் கொடுக்கக் கூடாது.
விருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது.
46.கோலம் இட்ட வீட்டில் திருமகள் தங்குவாள். வீட்டு வாசலில் கோலம் இடுவது அவசியம். பிளாட்களில் வசிப்பவர்கள் தங்கள் மெயின் டோர் வாசலில் கோலம் வரையலாம்.
47.துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது.
48.பணம், நாணயம் உள்ளிட்டவைகளை கண்ட கண்ட இடத்தில் வைக்கக்கூடாது. ஆண்கள் பணம் வைக்கும் பர்ஸை, ஏ.டி.எம். கார்டுகளை பின்புறத்தில் வைத்துக்கொள்ளாது, சட்டையின் உள் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளவேண்டும்.
49.சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது.
50.பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.
51.அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ அணைக்கவோ கூடாது.
52.அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது
53.நகத்தை கிள்ளி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும்.
54.பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது.
55.சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்கவேண்டும்.
56.ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது.
57.பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது.
58.தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது.
59.பெண்கள் மாதவிடாய் உற்றிருக்கும் சமயம் அவர்களின் நிழல் சுவாமி படங்கள் மீது விழக்கூடாது
60.செல்வச் செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது;அப்படி வீசினால்,பண வரவு குறைந்து கொண்டே இருக்கும்.
61.செல்வச் செழிப்போடு வாழ,நமது வீட்டில் நமது ஆடைகள்,துணிகள் சிதறிக்கிடக்கக் கூடாது.நாம் பயன்படுத்திய ஆடைகளை ஒரு தனி பெட்டியிலும்,புதிய ஆடைகளை இன்னொரு பெட்டியிலும் போட்டு வைப்பது அவசியம்.
62.நமது வீட்டிற்குள் நுழைந்ததும்,எப்போதும் நறுமணம் வீச வேண்டும்.அப்படி இருந்தால்,செல்வம் சேரத்துவங்கும்.எங்கோ போக வேண்டிய பணம்,நமது வீட்டை நோக்கி வரும்.அதே சமயம் அனாவசியமான செலவுகளும் குறையும்.
63.ஒருபோதும் நாம் வாழும் வீட்டில் இல்லை;மாட்டேன்; இதுமாதிரியான அவச்சொல்லை எப்போதுமே பேசக்கூடாது.குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் மாலை 5மணி முதல் 7 மணி வரை இம்மாதிரியான வார்த்தைகளைப் பேசுவது முற்றிலும் தவறு.
64.வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்குள் நமது வீட்டை பெருக்கி,சுத்தம் செய்து,அலசிவிட்டுவிட வேண்டும்.அலசியபின்னர், நமது வீட்டுப்பூஜையறையில் நெய்யில் தாமரை நூலில் தீபம் ஏற்றிட வேண்டும்.அதன் பிறகு,100 கிராம் உப்பு வாங்கி வருவது செல்வ வளத்தை நமது வீட்டிற்கு விரைவாகக் கொண்டு வரும்.
65.ஒருபோதும் இருட்டியபின்னர்,தயிர் சேர்த்த உணவுகளை சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிட்டால்,எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும்,அவன் வறுமைக்குள் விழுந்துவிடுவான்.
66.குளிக்கும்போதும், தூங்கும் போதும் நிர்வாணமாக இருக்கக் கூடாது;அப்படி நிர்வாணமாக இருந்தாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும்.ஆணோ,பெண்ணோ சுய இன்பம் செய்யாமலிருப்பதும் அவசியம்.அடிக்கடி சுய இன்பம் செய்பவர்களின் வீடுகளிலிருந்து செல்வச் செழிப்பு தரும் கடவுளாகிய மகாலட்சுமி,புவனேஸ்வரி வெளியேறிவிட்டு,அவளின் மூத்த சகோதரியான மூதேவி வந்துவிடுவாள்.
67.எக்காரணம் கொண்டும் தம்பதியர் இரவில் வெட்டவெளியில் உடலுறவு கொள்ளக் கூடாது.அப்படி செய்தால்,யாராவது ஒருவரை சூட்சும சக்திகள் பிடிக்கும்.அதன் விளைவாக இருவரில் யாராவது ஒருவர் அளவற்ற காம வெறியை அடைந்துவிடுவர்.குடும்பங்கள் நாசமடைவதற்கான முதல் காரணம் இதுதான்.
68.கரடு முரடான ராக் இசை முதலான மேற்கத்திய இசையை வீட்டில் அதிகமான அலறலுடன் ஒலிக்க வைப்பதாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும்.மெல்லிய இசை(சினிமா பாட்டாக இருந்தாலும் சரி;கர்னாடக இசையாக இருந்தாலும் சரி;மனோதத்துவ இசையாக இருந்தாலும் சரி)யை அடிக்கடி ஒலிக்கச் செய்வதன் மூலமாக செல்வ வளம் நம்மைத் தேடி வரும்.
69.மூன்று நாட்களுக்கு மேல் வீட்டில் குப்பையை சேர்த்து வைத்தாலும் பண வரவு குறைந்துவிடும்.]
70.ஒரு ஆடையை இரண்டு தடவைக்கு மேல் அல்லது இரண்டு நாளுக்கு மேல் அடிக்கடி அணிந்தாலும் பண வரவு குறைந்துவிடும்
71.தினமும் வீட்டில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை வைத்து,பின் வருமாறு வழிபாடு செய்து வருவதால் நமது நீண்டகால கடன்கள் தீர்ந்துவிடும்;வராக்கடன் வசூலாகும்.பணம் மிச்சமாகும்.அதே சமயம்,அசைவம் சாப்பிடுவதை அடியோடு கைவிட வேண்டும்.
தினமும் காலையில் காலைக் கடன்களை முடித்துவிட்டு,ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தின் முன்பாக அவரது மூலமந்திரத்தை 33 தடவை ஜபிக்க வேண்டும்.அப்படி ஜபிக்கும்போது சந்தன பத்தியை அவர் முன்பாக கொளுத்தியிருக்க வேண்டும். பசு நெய்யில் தாமரை நூல் திரியில் தீபம் எரிந்து கொண்டிருக்க வேண்டும்.இவ்வாறு ஒரு மண்டலம் செய்தால்,பண ரீதியான சிக்கல்கள் தீரத்துவங்கும்.ஓராண்டு வரை வழிபட்டு வந்தால்,நமது வருமானம் நான்கு மடங்கு அதிகரிக்கும்;பண வரவும் நான்கு முதல் எட்டு மடங்கு அதிகரிக்கும்;ஓராண்டுக்கு மேலாக
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால்,ஒவ்வொரு ஆண்டும் நமது வருமானம் ,நான்கு மடங்கு முதல் எட்டு மடங்கு வரை அதிகரித்துக்கொண்டே செல்லும்.ஐந்தாண்டுக்கும் மேலாக ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால், ஆறாம் ஆண்டிலிருந்து தங்கம் நம்மிடம் சேரத் துவங்கும்.
72.தைரியமாக ஒருவன் தர்மம் செய்தால், துணிவாக லக்ஷ்மியும் அருளை அவன் மீது சொரிந்துவிடுகிறாள்.
73.அதிகாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். அப்போது விழித்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும். முதலில் சிரமமாக இருந்தாலும் இப்படிப் பழகிவிட்டால் பிறகு பழக்கமாகிவிடும். இப்படி செய்வது ஆரோக்கியம், நீண்ட ஆயுள் முதலிய பலனை கொடுக்கும். அந்த நேரத்தில் தேவர்களும் ,முன்னோர்களும் நம்வீட்டை நோக்கி வருகிறார்கள் . அப்போது விழித்திருந்து மனதால் அவர்களை வழிப்பட்டால் அவர்களைக் கௌரவித்து வரவேற்பதாகும் .அவர்கள் சந்தோசப்பட்டு நமக்கு நன்மை செய்வார்கள்.
74.அதிகாலை 5 மணிக்கு கொல்லைப்புற வாசலை திறந்து வைத்து அதன் பின்னரே தலை வாசலை திறக்க வேண்டும் .
75.அதிகாலை விழித்தவுடவுன் பசுவையாவது ,தன் முகத்தையாவது ,தன் வலது உள்ளங்கையையாவதுமுதலில் பார்த்து விட வேண்டும்.
76.செவ்வாய்,வெள்ளிக் கிழமைகளில் 5 முக கொண்ட குத்து விளக்கு ஏற்றி திருமகளை வழிப்பட வேண்டும். வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோசமும் பெருகும்.
77.ஒவ்வொரு பௌர்ணமி அன்று மாலை குளித்து சத்ய நாராயணரை துளசி, செண்பக மலர் இவைகளால் அர்ச்சித்து , பால், பாயசம், கல்கண்டு ,கனி வகைகளை வைத்து வணங்கிய பின்னரே இரவு உணவு உன்ன வேண்டும்.
78.வைரம், வெள்ளி பாத்திரங்கள் லக்ஷ்மி கடாட்சம் உள்ளவர்களுக்கே
கிடைக்கும். ஒருவர் தனக்குச் சீராக அளிக்கப்பட்ட மேற்கூறியவற்றைத் தனது ஜீவித காலத்தில் விற்கவோ,தன் பிள்ளைகளுக்கோ கூட அன்பளிப்பாகவும் கொடுக்க கூடாது. தன காலத்திருக்குப் பின்னரே அவர்களுக்குச் சேர வேண்டும்,முடிந்தால் அவர்களுக்கு புதியதாக வாங்கிக்கொடுக்கலாம்..
79.நெருப்பும் தண்ணீரும் சிக்கனமாக உபயோகிப்பவர்களுக்கு எப்போதும் லக்ஷ்மி கடாட்சம் உண்டு.
80.அன்றாடம் ஒரு வேளைக்கு ஒரு பிடி அரிசியை ஒரு பெரிய பாத்திரத்தில் கடவுளுக்கு ( அன்னதானம் செய்ய ) என்று போட்டால் தான் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்.லக்ஷ்மி வீட்டில் வாசம் செய்வாள்.
81.காலையில் எழுந்தவுடன் யார் முகத்தையும் பார்க்காமல் தண்ணீர் இரண்டு மடக்கு குடிக்க,லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கும், கோபம் வராது.
82.முதலில் பெண்குழந்தை பிறந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பின் ஆண்குழந்தை பிறந்தால் நல்லது.தம்பி மேல் பாசம் அதிகம் இருக்கும்.
83.நம் பெரியோர்கள் எப்போதும் வீட்டில் சிரிப்பும் ஆனந்தமும் பெருக வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்கள். குழந்தைகள் விளையாடும் சந்தோஷ ஒலி, பறவைகள் எழுப்பும் இனிய கீதங்கள், வீணை, மிருதங்கம் போன்ற வாத்தியங்களின் இனிய இசை நம் இல்லங்களில் நிறைந்திருந்தால் லட்சுமி கடாட்சம் பெருகும்.
* * இதையெல்லாம் செய்தால் இருக்கிற செல்வம் தங்கும். லட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள்.
அனைவரும் சகல சௌபாக்கியங்களும் பெற்று ஆரோக்கியத்துடனும் சந்தோஷத்துடனும் வாழ வாழ்த்துகிறேன். அன்னை திருமகளை வேண்டுகிறேன் .

Monday 19 October 2015

உங்கள் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் தோஷமும் அதன் பரிகாரங்களும்..!

உங்கள் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் தோஷமும் அதன் பரிகாரங்களும்..!
ஒருவரின் ஜாதக கட்டத்தில் செவ்வாய் கிரகம் 1, 2, 4, 7, 8 மற்றும் 12-ஆவது இடங்களில் இருக்கலாம் என ஜோதிடம் கருதுகிறது. மொத்தம் இருக்கும் 12 கட்டத்தில் இந்த 6 கட்டங்கள் ஏதேனும் ஒன்றில் இருந்தாலும் இந்த தோஷம் இருப்பதாக கருதப்படும். இந்த தோஷம் உள்ளவர்களை செவ்வாய் தோஷக்காரர்கள் என கூறுகிறோம். இந்த செவ்வாய் தோஷ விஷயம் சமீபத்தில் கூட ஒரு பிரபலமான பாலிவுட் நடிகைக்கு திருமணமான போது பெரிதாக பேசப்பட்டது. அவர் தான் நம் ஐஸ்வர்யா ராய். அதனால் இந்த தோஷத்தால் ஏற்பட உள்ள தீய தாக்கங்களுக்கு தீர்வு காண, அபிஷேக் பச்சனை திருமணம் செய்வதற்கு முன்பு அவர் ஒரு மரத்தை திருமணம் செய்ய வேண்டியிருந்தது.
செவ்வாய் தோஷ யூகங்களைப் பற்றி புரிந்து கொள்ள செவ்வாய் தோஷம் என்றால் என்ன என்பதையும், அதன் தாக்கங்களையும் மற்றும் அதற்கான பரிகாரங்களையும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
செவ்வாய் தோஷம் என்றால் என்ன? ஒருவரின் ஜாதகத்தில் மொத்தம் 12 கட்டங்கள் இருக்கும். 1, 2, 4, 7, 8 அல்லது 12-ஆம் கட்டத்தில் செவ்வாய் வந்தால், ஜோதிட சாஸ்திரத்தின் படி, அந்த நபருக்கு செவ்வாய் தோஷம் இருக்கும்.
செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு செவ்வாய் கிரகத்தின் எதிர்மறை தாக்கங்கள் இருக்கும் என கருதப்படுகிறது. அதுவும் திருமணத்தின் மீது இந்த தாக்கம் அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது. அதற்கு காரணம், திருமணத்திற்கு ஜாதக பொருத்தம் பார்க்கும் போது, இதை ஒரு முக்கியமான பொருத்தமாக பார்க்கப்படுகிறது. திருமணத்தை தீர்மானிக்கும் போது ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா எனவும், பொருத்தம் உள்ளதா எனவும் உறுதி செய்ய வேண்டும்.
1. ஆண் மற்றும் பெண் என இருவருக்கும் தங்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கலாம்.
2. செவ்வாய் என்பது உமிழும் கோபத்தை குறிக்கும். அதனால் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு கோபம் கொள்ளும் குணம் அதிகமாக இருக்கக்கூடும்.
3. செவ்வாய் தோஷக்காரர்களுக்கு உமிழும் அளவிலான ஆற்றல் திறன் இருக்கும். அதனை அழிவிற்கு பயன்படுத்தாதவாறு அதனை அவர்கள் சரியாக வழிநடத்திட வேண்டும்.
4. செவ்வாய் தோஷத்தால் திருமணம் தாமதமாகும்.
5. செவ்வாய் தோஷம் திருமணத்தில் டென்ஷன் மற்றும் முரண்பாடுகளை உண்டாக்கும்.
6. செவ்வாய் தோஷம் கொண்ட இருவர் திருமணம் செய்து கொண்டால் இந்த கிரகத்தின் தாக்கங்கள் ஒன்றுமில்லாமல் போய்விடும் என நம்பப்படுகிறது.
7. சென்ற ஜென்மத்தில் தங்கள் கணவன் அல்லது மனைவியை ஒழுங்காக நடத்தாதவர்களுக்கு தான் இந்த தோஷம் உண்டாகும் என நம்பப்படுகிறது. உங்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் இரகசியம்! எப்போது செவ்வாய் பிரச்சனைகள் செய்யும்?
1. செவ்வாய் முதல் கட்டத்தில் வரும் போது, திருமணத்தில் சண்டை சச்சரவுகளையும், வன்முறைகளையும் எதிர்ப்பார்க்கலாம். 2. செவ்வாய் இரண்டாம் கட்டத்தில் வரும் போது, திருமணம் மற்றும் சொந்த வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டு, அந்த நபரின் குடும்பம் பாதிக்கப்படும்.
3. செவ்வாய் நான்காம் கட்டத்தில் வரும் போது, தொழில் ரீதியான வாழ்க்கையில் பெரும் தோல்வியை சந்திப்பார்கள். ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாறிக்கொண்டே இருப்பார்கள்.
4. செவ்வாய் ஏழாம் கட்டத்தில் வரும் போது, அந்த நபரிடம் இருக்கும் அளவுக்கு அதிகமான ஆற்றல் திறன் அவரை கடும் கோபக்காரராக வைத்திருக்கும். அவருடைய ஆளுமை குணத்தால் அவருடைய குடும்பத்தாருடன் அவருக்கு நல்லுறவு இருக்காது.
5. செவ்வாய் எட்டாம் கட்டத்தில் வரும் போது, தன் வீட்டு பெரியவர்களின் பகைக்கு ஆளாகி தந்தை வழி சொத்தை இழப்பார்கள்.
6. செவ்வாய் பத்தாம் கட்டத்தில் வரும் போது, அந்த நபர் மனநிலை பிரச்சனையால் அவதிப்படுவார். மேலும் எதிரிகளுடன் கூடிய நிதி சார்ந்த நஷ்டங்களை சந்திப்பார்.
செவ்வாய் தோஷத்தை எப்படி வெல்வது:
1. செவ்வாய் தோஷம் கொண்ட இருவர் திருமணம் செய்து கொண்டால் இந்த கிரகத்தின் தாக்கங்கள் ஒன்றுமில்லாமல் போய் விடும்.
2. கும்ப விவாகம் என்ற ஒரு வகையான திருமணம் இந்த தோஷத்தின் தாக்கங்களை குறைக்க உதவிடும். இந்த வகை திருமணத்தில், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் ஒரு மரத்தையோ அல்லது தாழியையோ திருமணம் செய்ய வேண்டும். இது செவ்வாய் தோஷத்தை ஒன்றுமில்லாமல் செய்து விடும்.
3. செவ்வாய்க்கிழமைகளில் உண்ணாவிரதம் இருந்தால் செவ்வாய் தோஷங்களின் எதிர்மறையான தாக்கங்கள் குறையும். விரதத்தின் போது, செவ்வாய் தோஷக்காரர்கள் துவரம் பருப்பை மட்டுமே உண்ணலாம்.
4. செவ்வாய்க்கிழமைகளில் நவகிரக மந்திரம் மற்றும் ஆஞ்சநேயர் மந்திரங்களை பாடினால், செவ்வாய் தோஷக்காரர்களுக்கு நல்ல பலனை அளிக்கும்.
5. செவ்வாய்க்கிழமைகளில் பூஜைகள் புரிவதும், ஆஞ்சநேயர் கோவில்களுக்கு செல்வதும் கூட இந்த தோஷத்தை போக்குவதற்கான சிறந்த வழியாகும்.
6. செவ்வாய் தோஷக்காரர்கள் இரத்தக்கல் பதித்த தங்க மோதிரத்தை தங்கள் வலது கரத்தில் உள்ள மோதிர விரலில் அணிய ஜோசியர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
7. இந்த தோஷத்தின் தாக்கம் 28 வயதுக்கு பிறகு குறையும் என்பதால், அதற்கு பிறகு திருமணம் செய்யவே அறிவுறுத்தப்படுகிறது

Image result for marriage couple matching