Monday 27 December 2021

வெரிகோஸ் வெயின் நோய்க்கு ஹோமியோபதி மருந்து

 .வெரிகோஸ் வெயின் நோய்க்கு ஹோமியோபதி மருந்து

Vericose Veins ( நரம்பு சுருட்டல் )
1. 1.ZINCUM METALLICUM-30C/ 5 மாத்திரைகள் 3 வேளையும் ஒரு வாரம் உணவிற்கு பிறகு சாப்பிட வேண்டும்.
பிறகு
2.VIPER-A 30C /5 மாத்திரைகள் 3 வேளையும் ஒரு வாரம் உணவிற்கு பிறகு சாப்பிட வேண்டும். இது தாங்க முடியாத வலியை போக்கும் .
பிறகு
3.HAMAMELIS-30C/ 5 மாத்திரைகள் 3 வேலையும் ஒரு வாரம் உணவிற்கு பிறகு சாப்பிட வேண்டும்.
4.FLUORIC ACID-30C / 5 மாத்திரைகள் 3 வேலையும் ஒரு வாரம் உணவிற்கு பிறகு சாப்பிட வேண்டும்.

இதே போல முதலில் இருந்து சரியாகும் வரை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.. விரைவில் குணமாகும்..

நன்றி ; bns





Tuesday 14 December 2021

மருக்கள் நீங்க ஹோமியோ மருந்து

மருக்கள் நீங்க ஹோமியோ மருந்து 
பெரும்பாலும் 40வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கண் ,கழுத்து சுற்றி படத்தில் காட்டியது போல மருக்கள் வரும் அது நீங்க 

மருக்கள்
 (எல்லாவிதமான மருக்களுக்கும் பொதுவான மருத்துவம் ஆனால் தடவினால் சுலபமாக .இரத்தம் வரக்கூடிய மருக்களுக்கு மட்டும் இம் மருந்து பொருந்தாது )

1.MAGNESIA SULPHURICA 200C தினமும் ஒரு வேளை சாப்பாட்டுக்கு பின் 90 நிமிடம் கழித்து 5 சொட்டுக்கள் 50ml நீரில் அல்லது 5 மாத்திரைகள் 7 நாட்களுக்கு சாப்பிடவும்.
* பிறகு ஒரு வாரம் கழித்து

2.Thuja- 30 Ch / இரவு ஒரு வேளை மட்டும் சாப்பாட்டுக்கு பின் 90 நிமிடம் கழித்து 5 சொட்டுக்கள் 50ml நீரில் அல்லது 5 மாத்திரைகள் சாப்பிடவும் .
* பிறகு ஒரு வாரம் கழித்து

3. Causticum- 1M / இரவு ஒரு வேளை மட்டும் சாப்பாட்டுக்கு பின் 90 நிமிடம் கழித்து 5 சொட்டுக்கள் 50ml நீரில் அல்லது 5 மாத்திரைகள் சாப்பிடவும் .
* பிறகு ஒரு வாரம் கழித்து

*மீண்டும் ஒரு வாரம் இடைவெளி விட்டு ஆரம்பத்தில் இருந்து இதே போல் மூன்று மருந்துகளும் இதே வரிசையில் தொடர்ந்து சரியாகும் வரை தொடர்ந்து சாம்பிடவும். விரைவில் குணமாகும்..

மேலும்  thuja Q தாய் திரவியம் வாங்கி 
மருக்கள் மேலே விட்டு வர விரைவில் பலன் கிடைக்கும்.
✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

*தடவினால் சுலபமாக .இரத்தம் வரக்கூடிய மருக்களுக்கு NITRICUM ACIDUM 30 ch தினமும் மூன்று வேளை சாப்பாட்டுக்கு பின் 90 நிமிடம் கழித்து 5 சொட்டுக்கள் வீதம் 7 நாட்களுக்கு சாப்பிடவும் அல்லது சரியாகும் வரை தொடர்ந்து சாப்பிடவும்.

நன்றி ; bns ஐயா

Friday 10 December 2021

சித்த மருந்துவம் மூலிகைகள் சுத்தி முறைகள்

சித்த மருந்துவம் மூலிகைகள் சுத்தி முறைகள் :--

          சித்த மருத்துவ மருந்துகள் தாவர வர்க்கங்கள், தாது வர்க்கங்கள், சீவ வர்க்கங்கள் என்று என்று மூன்று பிரிவுகள் உள்ளது அவற்றைப் பற்றிய விபரங்கள் அவை கிடைக்கும் சூழ்நிலைகள் அதன் பாதிப்புகள் என்று பாகு படுத்திப் பார்க்க வேண்டும். மனிதனின் முதல் மருந்தாக தெரிந்து கொண்டது தாவரவர்க்கங்கள் தான் .

            மனிதர்கள் ஆதி காலங்களில் நோய்கள் ஏற்படும் காலங்களில், அக் கோளாறுகளை நிவர்த்தி செய்ய – மிருகம், பறவைகளின் சில இயற்கை நடத்தைகளைப் பின் பற்றி விசய தத்துவங்களை உணர்ந்து கொண்டனர். 
           ஒவ்வொரு மருந்திலும் அதனதன் தன்மைக்கேற்ப நல்ல, தீய என்று இரண்டுவிதக் குணங்கள் உண்டு. இதனால் நற்செயளுக்குப் பதில் தீச்செயல்கள் நோயை தீர்ப்பதற்குப் பதில் அதை அதிகரிக்கச் செய்யும் மற்றும் பின் விளைவுகளும்  ஏற்பட வாய்ப்புண்டு. எனவே தூய்மைப்படுத்தி உபயோகிக்க வேண்டும் இனி அது பற்றிப் பார்ப்போம்.
           திரவவகைகள், பால்வகைகள், நெய்வகைகள், தாவரவகைகள், கடைச்சரக்குகள், உப்புக்கள், உலோகங்கள், உபரசங்கள், பாடனங்கள் என பலவகைப்படும்.

திரவவகைகள் :-- பனிநீர் இவற்றை சேகரிப்பதற்கு மெல்லிய வெள்ளை பருத்தித் துணியை அதில் உள்ள கஞ்சி பாடம் நீங்க துவைத்து வெய்யிலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும். அதை நெல் பயிர், அருகம்புல் போன்ற செடியில் இரவில் பனிகாலத்தில் விரித்து சூரிய உதயத்திற்கு முன் எடுத்து சுத்தமான பாத்திரத்தில் பிழிந்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

ஆலங்கட்டியை– இது மழைக் காலத்தில் விழும் பனிக்கட்டி – இதை சிறிது கறி மஞ்சள் தூள் கூட்டி பீங்கானில் விட்டு  எழு நாளைக்கு வெய்யிலில் வைத்து பின் துணியில் வடிகட்டவும்.

சுத்தநீர் ஆற்றுநீரை– ஏழு முறை ஏழாக மடித்த முரட்டுத் துணியில் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

சுட்டு நீரை -- கறுப்புத் துணியில் மூன்று முறை வடிகட்டவும்.

அரிசிக் கழுநீரை– அரிசியை இரண்டாவது கழுவி எடுத்துக் கொண்டு அதை மூன்று மணி நேரம் ஒரு இடத்தில் வைத்து தெளிவை எடுத்துக் கொள்ளவும்.

காடிநீர்– காடி நீர் உள்ள பானையை அதன் வாயை மூடி கடும் வெய்யிலில் மூன்று தினம் வைத்த பின் வண்டலை நீக்கி வடிக்கவும்.

இளநீரை– வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

கோநீரை– பசு மூத்திரத்தை புதுச் சட்டியில் ஊற்றி பத்து நிமிடம் தயிர் மத்தினால் கடைந்து உண்டாகும் நிறைகளை நீக்கி முரட்டுத் துணியில் ஏழுமுறை வடிகட்டவும். ( எருது, வெள்ளாடு, கழுதை, குதிரை, யானை, நாய், இவற்றின் சிறுநீரை இது போல் சுத்தி செய்யவும்.இது போல் வயதுக்கு வராத சிறுகுழந்தைகளின் சிறுநீரையும் எடுத்துக் கொள்ளவும். ( இதில் நோய்வாய் படாத குழந்தைகளின் சிறு நீரை பயன் படுத்த வேண்டும்.)

பால் வகைகள் :--
பசுவின் பாலை -- மாட்டின் மடியை நன்றாக கழுவிய பின் கறந்து நுரை அடங்கிய பின் வடிகட்டிக் கொள்ளவும்.
வெள்ளாட்டுப் பாலை– முரட்டுத் துணியில் ஏழுமுறை வடிகட்டிக் கொள்ளவும்.
முலைப்பாலை– சூடேற்றிய வெள்ளிக் கிண்ணத்தில் விட்டவுடனேயோ அல்லது சிறிது தும்பைப் பூவையிட்டு ஐந்து நிமிடம் கழித்து வடித்து உபயோகிக்கவும்.
தயிரை தோய்ந்தபின் நீரை விளக்கி விட்டு எடுத்துக் கொள்ளவும், மோரை சிறிதளவு உப்புக் கூட்டி பயன் படுத்தவும்.

நெய்வகை :---
வெண்ணையை சுத்த நீரில் புளிப்பு நீங்க பிசைந்து கழுவி எடுத்துக் கொள்ளவும்.
நெய்யை நீர் சுண்ட காய்ச்சி அடிப்பிடிக்கால் எடுத்துக் கொள்ளவும்.
பாதாம் நெய்யை படிகப் பாத்திரத்தில் நிரப்பி அரைப் பங்கு மணலில் புதைத்து ஆறுமணி நேரம் வெய்யிலில் வைத்து அடிவண்டல் இல்லாமால் எடுத்துக் கொள்ளவும்.
ஆமணக்கு எண்ணையை– ஒரு குப்பியில் ஊற்றி ஒரு சட்டியில் மணல் போட்டு அதில் எண்ணெய் குப்பியை கால் பாகம் மறையும் படி வைத்து இரண்டு நாள் வெய்யிலில் வைத்து  தெளிவை எடுத்துக் கொள்ளவும். இது போல் மற்ற எல்லா வகை எண்ணைகளையும் செய்து எடுத்துக் கொள்ளவும்.
புங்கண் நெய்க்கு – அதன் சம அளவு அளவு புன்கண் பாலை விட்டுக் காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.
இலுப்பை நெய்க்கு– சமனளவு எழுத்தாணிப் பூண்டுக் கியாழம் கூட்டிக் காய்ச்சி வடிகட்டவும்.
வேம்பின் நெய்க்கு–சமனளவு வேப்பம்பட்டை கியாழம் வைத்து அதை சேர்த்து காய்ச்சி வடிக்கவும்.

வேர் வகை :-- இவற்றை ஆற்று நீரில் கழுவ வேண்டும்.
கிழங்கு வகை :-- இவற்றை நான்கு கழுவி மேற்றோலையும் உள் நரம்பையும் நீக்கித் துடைக்கவும்.
பட்டை வகை :-- இவற்றைத் துணியில் அல்லது பிரசில் துடைத்து தூசியை நீக்கி பின் கத்தியால் மேற்புறணியைச் சீவிக்கழிக்கவும்.
இலைவகை :-- இவற்றை நீரில் கழுவாமல் சுத்தத் துணியால் துடைத்துப் பழுப்பு, அழுகல் முதலியவற்றை நீக்கவும்.
மலர் வகை :-- இவற்றுள் காம்பு, புல்லிதழ், மகரந்தம் முதலியவற்றை நீக்கித் தனி இதழாக எடுத்துக் கொள்ளவும்.

கடைச்சரக்கு வகை :---
சுக்கு –- இதன் இருபங்கு சுண்ணாம்புக்கல் கூட்டித் தாளித்து மூன்று மணி நேரம் சென்று கழுவி உலர்த்தி மேற்றோலைச் சீவிக் கழிக்கவும்.
மிளகு – புளித்த மோரில் மூன்று மணிநேரம் உறவைத்து பின் வெய்யிலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
ஆணைத் திப்பிலி– காடியில் மூன்று மணி நேரம் உறவைத்துக் பின் வெய்யிலில் உலர்த்தி எடுத்துக் கொளவும்.
கடுகு ரோகினி :-- வேம்பு அல்லது நொச்சியிலை சாற்றில் மூன்று மணி நேரம் உறவைத்து பின் வெய்யிலில் உலரவைத்து எடுத்துக் கொள்ளவும்.
திப்பிலி :-- கொடிவேலி இலைச் சாற்றில் ஒரு பதினைந்து நிமிடம் ஊறவைத்து எடுத்து உலர்த்தி எடுத்திக் கொள்ளவும்.
வெந்தயம் :-- நீராகரத் தெளி நீரில் பத்து நிமிடம் உறவைத்து எடுத்து உலர்த்திக் கொள்ளவும்.
சேங்கொட்டை :-- மூக்கை வெட்டிக் கழுநீரில், எருமைப் பாலிலும் ஒவ்வொன்றிலும் மூன்று மணி நேரம் முறையே ஊரவிட்டு பின் உலர்த்திக் கொள்ளவும்.அதிவிடையம், சிறுதேக்கு, சாதிக்காய், அரத்தை, இவற்றின் மேற்புரணி நீக்கி எடுத்துக் கொள்ளவும்.
திப்பிலி மூலம் : இதனைக் கணுக்கள் நீக்கி எடுத்துக் கொள்ளவும்.
ஓமம் :-- இதைச் சுன்னநீரில் நனைத்து உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
சித்தரமூலம் :-- இதன் பட்டையை பிட்டவியல் செய்து உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
சீரகம்,சதகுப்பை, வாய்விடங்கம், தாளிசபத்திரி, சிறுநாகப்பூ, ஏலம், கிராம்பு, சடாமாஞ்சில், சாதிப்பத்திரி, சதகுப்பை, மஞ்சிஷ்டி, கிச்சலிக் கிழங்கு, கங்குட்டம், கெந்தமஞ்சில், கோட்டம்,செவ்வள்ளி, பிசின் வகைகள்:-- இவற்றை மண் தூசி நீக்கி வெய்யிலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
புளியன் கொட்டை :-- கோது நீக்கி கழுவி வெய்யிலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
கடுகு, வெண்கடுகு :-- ஆய்ந்து குப்பை நீக்கி உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
கடுக்காய் :-- கழுநீரில் ஊறவிட்டு, விதை நீக்கியும் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
நெல்லி வற்றல் :-- பாலில் வேகவிட்டு விதை நீக்கி உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
தான்றிக்காய் :-- தாளை விழுதுச்சாற்றில் மூன்று மணி நேரம் ஊறவிட்டு விதையை நீக்கி உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
அதிமதுரத்தை :-- நீரில் தோலைச் சீவி துண்டுகளாக்கி உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
கார்போகரிசியை :-- திருநீற்றுப் பச்சிலைச் சாற்றில் நனைத்து உலர்த்தி எடுத்திக் கொள்ளவும்.
வாலுழுவை அரிசி :-- சோற்றுக் கற்றாழை சாற்றில் கழுவி எடுத்து உலர்த்திக் கொள்ளவும்.
வெற்றிலை :--பெருநரம்புகளை நீக்கி எடுத்துக் கொள்ளவும்.
கூகைநீரை :-- ஏழுமுறை நீரில் கரைத்து தெளிவிருத்துக நீக்கி அடியில் படிந்துள்ள மாவை  காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.
கருஞ்சீரகம் :-- ஆய்ந்து தூசு நீக்கி வெய்யிலில் உலர்த்தி பொன்மேனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
கொருக்காபுளி :-- நீர் தெளித்துப் பிசரி நிழலில் ஒரு நாள் ஆறவிடவும்.
வசம்பு :-- சுட்டு கரியாக்கிக் கொள்ளவும்.
கற்கடகசிங்கி :-- வாதுமை நெய்விட்டு வறுக்கவும்.
அரக்கு :--  இதை நொறுக்கி உள்ளிருக்கும் குச்சிகளை நீக்கவும்.
மெழுகு :-- இதை உருக்கி தெளிவை வடித்து எடுத்துக் கொள்ளவும்.
குங்கிலியங்கள் :-- திரிபலாதி கியாழத்தில் தோலாந்திரமாகாக் கட்டி ஆறுமணி நேரம் எரித்து எடுத்துக் கொள்ளவும்.
குக்கில் :-- வேப்பம்பட்டை, கண்டங்கத்திரி, சீந்தில், கோரைக்கிழங்கு, நிலவேம்பு, ஆடாதோடை, வெண்நொச்சியிலை, பேய்ப்புடல் இவை ஒவ்வொன்றிலும்    கைப் பிடி வீதம் ஒரு மண் கலயத்தில் போட்டு நீர் விட்டு அதன் மீது துணி ஏடு கட்டி அதில் குங்கிலியத்தை வைத்து சட்டி மூடி மூன்று மணி நேரம் எரித்து எடுத்துக் கொள்ளவும்.
குந்திரிகம் :-- இதைச் சாராயத்தில் ஒரு நாள் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும்.
குங்குமப்பூ :-- ஒரு தாளில் பரப்பி அதை நெருப்பு அனால் படும்படி காட்டி உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
சந்தனம், சென்சந்தனம், அகரு இவற்றின் வைரம் இல்லாதா பகுதிகளைக் கழிக்கவும்.
பெருங்காயத்தை :-- கறி நெருப்பில் பொரித்தோ, அல்லது தாமரையிலைச் சாற்றில் ஐந்து நிமிடம் ஊறவிட்டு எடுத்துக் கொள்ளவும்.
கஸ்த்துரி, கோரோசனை இவற்றின் இயற்கை தன்மையை அறிய வேண்டும்.
நேர்வாளம் :-- இதை எருமைச் சானிக் கரைசலில் வேகவைத்து பின் மேல் ஓடு, தோல், உள்நரம்பு நீக்கி உலர்த்தி எடுத்துக் கொள்ளவும். பின் எலுமிச்சம் பழச்சாற்றில் ஒருநாள் ஊறவிட்டு எடுத்துக் கொள்ளவும். பின் பாலில் சுண்ட வேகவிட்டு அலம்பி பின் அதை சிறிது விளக்கெண்ணை விட்டு வறுத்து எடுக்கவும்.
இலவங்கப்பட்டை இலவங்கப்பத்திரி, தக்கோலம், வெட்பாலையரிசி, வலம்புரிக்காய், கடலிரஞ்சிப் பட்டை, தலைச் சுருளிப்பட்டை, கோரைக்கிழங்கு, நிலவேம்பு :-- இவற்றை வெய்யிலில் உலர்த்தவும்.
வால்மிளகு :-- இதன் காம்புகளை நீக்கி விடவும்.
வெட்டிவேர், விலாமிச்சம் :- வேர்களைத் துண்டுகளாக்கி எடுத்துக் கொள்ளவும்.
குரோசாணி ஓமத்தைத் :-  தேய்த்துப் புடைத்து எடுத்துக் கொள்ளவும்.
அக்கிரகாரம், கஸ்தூரி மஞ்சள், பீதரோகினி,, வட்டத் திருப்பி :-- இவற்றின் புரணி நீக்கித் துண்டுகளாக்கிக் கொளவும்.
மதனகாமப்பூ :-- காம்பு,மகரந்தத்தை நிக்கி எடுத்துக் கொள்ளவும்.
காட்டாத்திப்பூ :-- இலை,காம்பு நீக்கி உலர்த்தி எடுத்திக் கொள்ளவும்.
புகையிலை :-- இதை சுருட்டி அகத்திக் கீரையின் நடுவில் வைத்து நீர் நிட்டு அவித்து எடுத்து உலர்த்திக் கொள்ளவும்.
காட்டு மிளகு :-- வெற்றிலைச் சாற்றில் பாதினைந்து நிமிடம் உறவிட்டு எடுத்து உலர்த்திக் கொளவும்.
இருவி, நாவி :-- இவற்றை துண்டுகளாக்கி முறையே சிறுநீர், பசு மூத்திரத்தில் மூன்று நாள் உறாவைத்து உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
சிவதைவேர் :-- இதை நடு நரம்பை நீக்கி விட்டு பாலில் வேகவிட்டு எடுத்து உலர்த்திக் கொள்ளவும்.
ஊமத்தை விதைகள் :-- எலுமிச்சம் பழச்சாற்றில் மூன்று மணி நேரம் ஊறவைத்து எடுத்து உலர்த்திக் கொள்ளவும்.
பிரண்டை :-- இதை கணு, புறணி நீக்கி உப்பு போட்ட மோரில் மூன்று நாள் ஊறவிட்டு எடுத்துக் கொள்ளவும்.
கழற்சி விதையை ஓடு நீக்கி நீரில் இரவில் ஊறவிட்டு பின் கழுவி உலர்த்திக் கொள்ளவும்.
கஞ்சா  :--விதைகள்,காம்பு நீக்கி உப்பு போட்ட நீரில் இரவில் ஊறவிட்டு மறுநாள் ஏழுமுறை கழுவி எடுத்து உலர்த்திக் கொள்ளவும்.
பறங்கிச் சக்கை, அமுக்கிராங் கிழங்கு,தண்ணீர் விட்டான் கிழங்கு, நிலாவரை இவற்றைச் சூரணித்து பிட்டவியல் செய்து எடுத்து உலர்த்திக் கொள்ளவும்.
நாகணம் :-- இதை நெய் தடவிய சட்டியிலில் போட்டு வறுக்கவும்.
தேற்றான் கொட்டை :-- பசுவின் பாலில் அல்லது நாளுபங்கு சிறு கீரைச் சாற்றில் போட்டு அரைப் பாகம் சுண்டக் காய்ச்சி கழுவி எடுத்துக் கொள்ளவும்.
எட்டிக் கொட்டை : இதை நெல்லுடன் சேர்த்து அவித்து சிறுகீரை சாற்றில் மூன்று மணி நேரம் ஊறவிட்டு எடுத்துக் கொள்ளவும்.
சீந்தில் :-- இதை புரணி நீக்கி எடுத்துக் கொள்ளவும்.
சமுத்திர சோகி :-- இதை ஓடு நீக்கி பருப்பை எடுத்துக் கொள்ளவும்.
கரும்பு :-- கணு, புரணி நீக்கி எடுத்துக் கொள்ளவும்.
சிற்றேலம் :-- இளவருப்பாக வறுக்கவும்.

உப்பு வகைகள் :--
பூநீர் –இதற்கு நாலுபங்கு நீர் விட்டு கரைத்து தெளிவிருத்து வாயகன்ற பாத்திரத்தில் விட்டு வெய்யிலில் வைத்து உலர்த்தவும்.
பிடாலவணம் -- கோநீர் அல்லது மோரில் ஊறவைத்து உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
இந்துப்பு -- காடியில் மூன்று ஊறவிட்டு உலர்த்தி எடுத்துக் கொளவும். அட்டுப்பு --இதற்கு நான்கு பங்கு நீரில் கரைத்து தெளிவிருத்து சுண்டவைத்து வெய்யிலில் வைத்து உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
வளையல் உப்பு– காடியில் மூன்று மணி நேரம் உறவைத்து உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
எவச்சாரம்– வெள்ளாட்டு சிறுநீரில் கரைத்து வடிகட்டி உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
சவுக்காரம்– பிட்டவியல் செய்து உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
நவச்சாரம்– கோநீரில் கரைத்து சுண்ட எரித்து வெய்யிலி உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
கர்ப்பூரம், பச்சைக் கர்ப்பூரம்– செங்கழுநீர் பூவிதழ்ச் சாற்றில் ஒரு நாழிகை ஊறவிட்டு எடுத்துக் கொள்ளவும்.
சத்திச்சாரம்– காடி அல்லது வெள்ளாட்டுப் நீரில் மூன்று நாள் வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கல்லுப்பு – காடியில் பிசரி துடைத்து எடுத்துக் கொள்ளவும்.
உழமண் உப்பு– நான்கு பங்கு நீரில் கரைத்து மறு நாள் தெளிவிருத்து சுண்டாக் காய்ச்சி வெய்யிலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
வெடியுப்பு – நாலுபங்கு நீரில் விட்டு எரித்து கொதிக்கையில் கோழி முட்டையின் வெண்கருவை விட்டுக் கலக்கி மேல்ப்படியும் அழுக்கை அகப்பையில் மோந்து வழித்து எரிந்து விட்டு பி வேறு சட்டியில் துணி கட்டி வடித்து காற்றுப் புகாத இடத்தில் அசையாமல் வைத்து மறுநாள் வடித்து பீங்கானில் ஊற்றி கடும் வெய்யிலில் உலர்த்தவும். இது போல் எழு முறை செய்ய ஏலாம் காய்ச்சல் வெடியுப்பாகும்.
கறியுப்பு – புது ஓட்டில் இட்டு வறுத்து எடுத்து கொள்ளவும். அல்லது மோரில் கலக்கி வெய்யிலில் வைத்து சுண்டிய பின் எடுத்துக் கொள்ளவும்.
வெங்காரம், படிக்க்காராம்– பொறித்து எடுத்துக் கொள்ளவும்.

உலோக வகைகள் :--
தாம்பிரம்– இதை தகடாக்கி புரசு, விராலி, மருதோன்றி, சரக்கொன்றை, முருங்கை வேர், வித்து இவற்றின் குழித்தைலத்தில் நவசாரத்தூளைக் கலந்து அதில் பத்து முறை காய்ச்சி தோய்த்து எடுக்கவும்.
தங்கம்– இதை தகடாக்கி செம்மண் தடவி காய்ச்சி எடுக்கவும்.
நாகம்– இதை உருக்கி இலுப்பை எண்ணையில் பத்து முறை சாய்த்து எடுத்துக் கொள்ளவும்.
கருவங்கம்– இதை உருக்கி நல்லெண்ணையில் ஏழுமுறையும், கோநீரில் பிரண்டையை அரைத்துக் கலந்த நீரில் ஏழுமுறையும் சாய்த்து எடுத்துக் கொள்ளவும்.
வெண்கலம்– இதைக் காய்ச்சி புளியிலைசாற்றில், கொள்ளுச் சாற்றில் அல்லது கசயத்தில் ஒவ்வொன்றிலும் மூன்று முறையும் தோய்த்து எடுக்கவும்.
இரும்பு– இதை இராவி தூளாக்கி எலுமிச்சம்பழ சாற்றில் மூன்று நாள் ஊறவைத்து    அரைத்துக் கழுவி எடுத்துக் கொள்ளவும்.
வெள்ளி – சமனளவு காரியம் கூட்டி குகையில் வைத்து காரியம் போக ஊதி எடுத்துக் கொள்ளவும்.
பித்தளை– தடாகி பளுக்கவைத்து குப்பைமேனி, புளி இலை, கொள்ளுக்கசாயம், வெள்ளாட்டுப் பால் இவற்றில் தனித்து அல்லது ஒன்று கூட்டியோ மூன்று முறை தோய்த்து எடுத்துக் கொள்ளவும்.
வெள்ளியம்– இதை உருக்கி இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், மோர்,கொள்ளுக் கசாயம் பசும் கோமியத்தில் ஒவ்வொன்றிலும் ஏழுமுறை சாய்க்கவும்.
குறிப்பு :-- வங்கம் நாகம் போன்றவைகளை உருக்கி எண்ணைகளில் உருக்கி சாய்க்கும் போது பாத்திரத்தில் எண்ணையை வைத்து அதில் விடவும். சாறு வகைகள், கசாயங்களில் விடும் போது குழிஉரலில் திரவங்களை விட்டு அதன் மேல் ஓட்டை உள்ள கனமான கல்லு அல்லது அதிக வெயிட்டான கட்டையை வைத்து அந்த ஓட்டை வழியாக விடவேண்டும் இல்லாவிடில் முகம் உடலில் வெடித்து சிதறும் போது பட்டு புண்ணாக்கி விடும் உருக்குவதையும் நீளமான இரும்புக் கரண்டியில் வைத்து உருக்கி தூர நின்று விடவேண்டும்.
உபரசங்கள் :--
பூநாகம்– இதை பசுவின் பாலில் ஆறுமணி நேரம் போட்டு மண்ணைக் கக்கிய பின் நீரில் அலம்பி எடுத்துக் கொள்ளவும்.
இந்திர கோபப் பூச்சி– தைலப் பசை போகாமல் கண்ணாடிப் பாத்திரத்தில் அல்லது பீங்கானில் போட்டு உலர்த்தவும்.
முத்துச் சிப்பி– பூநீர் கரைசலில் போட்டு கொதிக்கவைத்து கழுவி எடுத்துக் கொள்ளவும்.
அபினி– சிறிது நெய் கூட்டி மத்தித்து ஒரு வெற்றிலையில் தடவி அனலில் வெதுப்பிக் கொள்ளவும். முட்டை ஓட்டை பூநிர்க் கரைசலில் போட்டு மூன்று மணிநேரம் கொதிக்க வைத்து சவ்வு நீக்கி உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
நிமிளைகளை– தேனில் மத்தித்து இரட்டை மடிப்பு துணியில் முடிந்து காடி, கோநீர், கொள்ளுக் கசாயம் இவற்றில் முறையே ஒவ்வொருநாள் கிளிகட்டி எரிக்கவும்.
சங்கு – இதை பசுவின்மொரில் ஏழு நாள் ஊறப்போட்டு கழுவி எடுத்துக் கொள்ளவும்.
முத்து – சங்கம் பழம் அல்லது புளி இலை சாற்றில் மூன்றுநாள் ஊறப்போட்டு எடுத்துக் கொள்ளவும்.
பவளம்– பழச்சாற்றில் ஒருநாள் ஊறப்போட்டு எடுத்துக் கொள்ளவும்.
புஷ்பராகம்–வெள்ளாட்டு நீரில், புளி இலைச் சாற்றில் மூன்று மணி நேரம் உறப்போட்டு எடுத்துக் கொள்ளவும்.
வைரம் – இதை பிரண்டைச் சாற்றில் ஒருநாளும்
வைடுரியம் – பூசணிக்காய் சற்றிலும் கருப்பு பெண் குதிரை மூத்திரத்திலும் ஒவ்வொரு நாளும் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும்.
மான் கொம்பு– இதன் துண்டுகளை பசு மூத்திரத்தில் மூன்று நாள் ஊறப்போட்டு எடுத்துக் கொள்ளவும்
கோமேதகம் – இதை நிலக் குமிழ் வேர்ச் சாற்றில், குதிரை மூத்திரத்தில் மூன்று நாள் ஊறப்போட்டு எடுத்துக் கொள்ளவும்.
அஞ்சனக் கல்– புளியாரைச் சாற்றில் ஒருநாள் உறவைத்து எடுத்துக் கொள்ளவும்.
கல்நார் – கோங்கிலவம் பட்டை சாற்றில் ஒருநாள் உர்ரவைத்து எடுத்துக் கொள்ளவும்.
படிகம் – தினமு புதிய புதிய பசும் பாலில் முறையே ஏழு நாள் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும்.
கல்மதம்– செங்கழுநீர் சாற்றில் இரண்டு நாள் உறவைத்து எடுத்துக் கொள்ளவும்.

வெள்ளை அப்பிரேகம்– இதை கறி நெருப்பில் வைத்து பழுத்த பின் எடுத்து பாலில் போட்டு ஆறியபின் எடுத்து இதழ் இதழாக பிரித்து சிறுகீரைச் சாற்றில் ஒருநாள் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும்.

கபரி, கல்கபரி– கோ நீரில் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும்.

துருசு, துத்தம், பால்துத்தம்– இவகைகளை தயிரில் அரைத்து அடைதட்டி ஓட்டில் இட்டு காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.

கிருஷ்ணா அப்ரகம்– இதை காடி விட்டு அரைத்து பின் தெளிவை நீக்கி பின் கழுநீரில் கழுவி அதனுடன் பத்தில் ஒரு பங்கு கொடி வேலிவேர் கூட்டி அரைத்து குடுவையில் போட்டு வாய் மூடிச் சீலைமண் செய்து காயவைத்து கனபுடம் போட்டு எடுத்துக் கொள்ளவும்.

கற்பூர சிலாசத்து– இதை கற்றாழைச் சாற்றில் மூன்று மணி நேரம் அரைத்து வெய்யிலி உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.

காந்தம் ---இதை வரகு வைக்கோலில் சுருட்டி எரித்து எடுத்துக் கொள்ளவும்.

சாஸ்திர பேதி -- சீலையில் முடிந்து நெருப்பினில் சுட்டு எடுக்கவும்.

மயிர் – இதை நரை நீக்கி சிகைக்காய் நீரில் கொதிப்பித்து கசக்கி அலம்பவும்.

ஆமை ஓடு– இதை தீயினால் சுட்டு எடுக்கவும்.

மரகதம் – சிறு பீளை சாற்றில் அரைத்து வில்லை தட்டி உலர்த்தி பின் அதே வேரின் விழுதில் மூசை செய்து அதிலிட்டு சீலை செய்து பத்து எருவில் புடமிட்டு எடுத்துக் கொள்ளவும். இவ்விதம் ஏழு முறை புடம் போடவும்.

நீலம் – இதைக் கழுதை மூத்திரத்தில் ஒரு நாள் ஊறவிட்டு வெய்யிலில் உலர்த்தவும்.

மாணிக்கம் – இதை ஓட்டில் வைத்து நெருப்பில் பழுக்க வைத்து வெள்ளாட்டு பாலில் ஏழுமுறை சாய்க்கவும்.

அன்னபேதி – இதை புது ஓட்டில் போட்டுச் சிவக்க வறுக்கவும்

உவர்மண் – சுத்த நீரில் கரைத்துத் தெளிவை எடுத்துக் காய்ச்சி வெய்யிலில் வைத்து உலர்த்தவும்.

கடல் நுரை– இதை கிளிஞ்சல் சுண்ணாம்பில் வைத்து நீர் ஊற்றி கொதித்து அடங்கிய பின் எடுத்துக் கொள்ளவும்.

பவளப் புற்று– இதை பசுவின் பாலில் ஒரு சாமம் கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்.

காவிக்கல் – இளநீரில் கரைத்து வடித்து பீங்கான் தட்டில் விட்டு வெய்யிலில் வைத்து உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.

மயிலிறகு – இதை சட்டியில் இட்டு கருகி எடுத்துக் கொள்ளவும்.

பலகறை– இதை நெருப்பனலில் சுட்டு எடுத்துக் கொள்ளவும்.

கிளிஞ்சல்– இதை உவர் மண் கரைசலில் ஆறு மணி நேரம் கொதிக்கவைத்து எடுத்துக் கொள்ளவும்.

குறிப்பு :-- உவர்மண், பூநீர், உபயோகப்படுத்தி சுத்தி செய்யும் முறைகளில் அதற்குப் பதில் வாசிங் சோடா ( சோடியம் கார்பனேட் ) உபயோகிக்கவும். மேற்கண்ட இரண்டிலும் இருப்பது இப்பொருளே.

பாடனங்கள் :--
வீரம்– இதை ஓட்டில்வைத்து நெருப்பில் வைத்து முட்டை வெண்கருவால் சுருக்கிட்டு எடுத்துக் கொள்ளவும். அல்லது சூடம் மிளகு இரண்டையும் பொடித்து அதை ஒரு குடுவையில் போட்டு அதில் வீரத்தை கட்டி தொங்க விட்டு கலவை சுண்டி எரியுமாறு செய்து எடுத்துக் கொள்ளவும்.

பூரம் – இதை முலைப்பால் அல்லது மிளகு விழுது கலந்த வெற்றிலைச் சார் சுருக்கு கொடுத்து எடுத்துக் கொள்ளவும். அல்லது முலைப்பாலில் பத்து நாள் ஊறவிட்டு எடுத்துக் கொள்ளவும்.

இலிங்கம்—இதை முலைப் பால், குப்பைமேனிசார், எலுமிச்சம்பழச் சார் இவை சமனளவு கூட்டி ஆறு மணிநேரம் முன் போல் சுருக்கு கொடுக்கவும். அல்லது முலைப்பாலில் அல்லது எலுமிச்சம் பலச் சாற்றில் பத்து நாள் ஊறவிட்டு எடுத்துக் கொள்ளவும்.

இரசம்– இதை குழிக்கல்லில் விட்டு நாலு பங்கு செங்கல் தூள் ஒரு மணி நேரம் அரைத்து ஊதி எடுத்துக் கொண்டு பின் மறுபடி ஒட்டடை, உப்பு, வெள்ளம், மஞ்சள்தூள், திரிகடுகு தூள் இவற்றில் தனித்தனியாக நாலு மணிநேரம் அரைத்து பின் கழுவி எடுத்துக் கொள்ளவும்.

வெண் பாடனம்– இதை ஒரு பலம் (35-gram ) மிளகின் விழுது கலந்த ஒருபடி அமுரி, அல்லது பூநீரும் சுண்ணமும்,கலந்த சிறுநீரில், அல்லது மிதி பாகல் சாறு இவற்றில் ஒன்றில் கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்.

இரச செந்தூரம்– இதை முலைப்பாலில் பதினைந்து மணி நேரம் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும்.

கெளரி– இதை பன்றி நெய்யில் மூன்று மணிநேரம் சுருக்கிடவும் அல்லது அமுரியி மூன்று நாள் ஊற விட்டு எடுத்துக் கொள்ளவும்.

குதிரைப்பல்– உமுறிச்சாற்றில் ஊற விட்டுப் பின் அதே சாற்றில் சுருக்கிடவும்.

எலி பாடணம்– தேனில் காய்ச்சவும்

தொட்டி பாடனம்– இதைத் தூள் ஆக்கி துணியில் முடிந்து கோநீரில் பணிரண்டு மணி நேரம் எரித்து எடுத்துக் கொள்ளவும். இப்படி மூன்று முறை செய்யவும்.

கந்தகம் – இதை நெய் விட்டு தீப்பற்றாமல் எரித்து உருக்கி பசுவின் பாலில் ஏழுமுறை ஊற்றி எடுத்துக் கொள்ளவும்.

மனோசிலை– காடி, பழச்சார், ஆட்டுநீர் இவற்றில் கொதிப்பித்தோ அல்லது இஞ்சிச் சாற்றில் ஒருமணி நேரம் அறைத்தோ உலர்த்தவும்.

தாளகம் – கழுதை மூத்திரம், கற்சுன்னம், உவர்மண் கலவையில் தோலாந்திரமாக கட்டி தொங்க விட்டு சுண்ட எரித்து எடுத்துக் கொள்ளவும்.

நாபி – நாயின் சிறு நீரில் ஊறவிட்டு பின் கழுவி எடுத்துக் கொள்ளவும்.

மிருதார்சிங்கி– வெள்ளாட்டு மூத்திரத்தில் கொதிப்பித்து பின் வெள்ளாட்டு பால், முலைப்பால் ஒவ்வொரு நாள் ஊறப்போட்டு கழுவி எடுத்துக் கொள்ளவும்.

கெருடப்பச்சை – துண்டுகளாக தட்டி கற்றாழை சோற்றில் கடுக்காய் தூளை போட்டு பிசைவதால் வரும் நீரில் போட்டு கொதிப்பித்து கழுவி எடுத்துக் கொள்ளவும்.

 எல்லா பாடனங்களுக்கும் பொதுவான சுத்தி முறை – ஒரு படி சிறுகீரை சாறு எடுத்து அதில் முப்பத்திஐந்து கிராம் மிளகைபொடிசெய்து போட்டு அதில் சுத்தி செய்ய வேண்டிய பாடனங்களை சிறு துண்டு களாகச் செய்து தோலந்திரமாககட்டி சாறு சுண்ட எரித்து எடுத்துக்கொள்ளவும்.
வேறு – குப்பைமேனி, கரிசலாங்கண்ணி, மிளகு தக்காளி, எலுமிச்சம் பழம், ஊமத்தை இவற்றின் சார் காடி, அமுரி ஆகியவை வகைக்கு ஒரு படி கூட்டி அதில் படிக்காரம், வெடியுப்பு, பூநீறு, கறியுப்பு இவற்றின் சுண்ணம் வகைக்கு ஒரு பலம் கூட்டி அதில் சுத்திக் குரிய பாடனங்க்களை தோலாந்திரமாகக் கட்டிப் போட்டு ஒரு மண்டலம் சென்று எடுக்க சகலமும் சுத்தியாகும்.

நன்றி ; பிரதீப் ஹெர்பல்.      

Sunday 28 November 2021

ஞானகற்ப மூலிகை சாதனம்

திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய ஞானகற்ப மூலிகை சாதனம்

கரிசலாங்கண்ணி 3பங்கு 
முசுமுசுக்கை 1 பங்கு 
தூதுவளை 1 பங்கு 
சீரகம் 1 பங்கு 
தூளாக்கி கஷாயம் செய்து 4 பங்கு தண்ணீரில் 1 பங்கு சுண்டிய பின் குடித்துவர  தேகம் கற்பமாகும்.
எனக்கு தெரிந்த சன்மார்க்கப் பெரியவர்  திரு முருகன் ஐயா இம்முறை 50வருடங்களாக கையாண்டு 85 வயது வரை நோய் நொடியில்லாமல் இன்னும் பங்கார்பேட்டையில் உயிரோடு ஆரோக்கியமாக உள்ளார்

அகத்தியர் மரபு
சாந்தி 

Saturday 30 October 2021

செயற்கை ஆக்சிஜன் மழை பற்றிய தகவல்கள்

செயற்கை OXYGEN மழை பற்றிய ஒரு விளக்கம்.
*******************************************
இயல்பாக வானத்தில் மேக துகள்கள் எப்போதும் உள்ளன. அவை  16 micron அளவில் உள்ளவை . இவை . கண்ணுக்கு தெரியாது.  இது எப்போது 300 micron அளவை அடைகிறதோ அப்போது சாரல் மழையாக பொழியும். 500 எனில் நல்ல கன மழை, 1000 தாண்டிவிட்டால் மேகவெடிப்பு நிகழும். 

 இந்த மேகங்கள் மழையாக மாற கடற்காற்று உள்ளே வர வேண்டும். அதே சமயம் rain gravity எனப்படும் மேகத்தை மழையாக மாற்றக்கூடிய வெப்பநிலையும் சரியாக அமைய வேண்டும். எனவே மழை பெய்ய மேகத்துகள்கள் , கடற்காற்று , வெப்பநிலை  மூன்றும் சரியான  விகிதத்தில் இருக்க வேண்டும். வெப்பநிலை அதிகமானால் மழை குறையும். குளிர்ச்சியான  பகுதியில் அதிக மழை பொழியும்.

இந்த குளிர்ச்சிக்கு முக்கிய பங்கு மரங்கள் வெளியிடும் oxygen.  இந்த oxygen அளவை செயற்கையாக அதிகப்படுத்தினால் குளிர்ச்சியை அதிகமாக்கலாம். இது மேக துகள்களின் அளவை (micron ) அதிகமாக்கி நாம் வேண்டிய இடத்தில / தேவையான அளவு மழையாக பொழிய வைக்கலாம்.  இதில் humidity - ஈரப்பதமும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.  இதைப்போல காற்றில் கலக்கும் carbon அளவும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

 இதில் பூமியில்  இருந்து மேல் நோக்கி செல்லும்  வெப்ப அலைகள் rain  gravity ஐ பாதித்து மேலே உள்ள மேக கூட்டங்களின் தன்மையை மாற்றுகின்றன. இதுவும் மழை பொழிவதற்கு மிக முக்கிய காரணமாய் அமைகின்றது. அதேபோல் அதிக மழை பெய்யும்போது அதை நிறுத்தவும் முடியும்.

இவைகளை  செயல்படுத்த சில கருவிகளை கொண்டுகொண்டு வெப்பத்தை குறைத்தும், oxygen அளவை கூட்டியும், மேலே செல்லும் வெப்ப அலைகளின் அளவை மாற்றியும் மேக துகள்களை மழையாக மாற்ற செய்வதே இந்த தொழில் நுட்பம். இதில் எந்த ரசாயனமும் பயன்படுத்துவது இல்லை.

தமிழ்நாட்டில் 5 இடங்களில் வான் நீரோட்டங்கள் செல்கின்றன. அதைப்போல தமிழ்நாட்டில் கடற்காற்று அதிகம் நுழையும் முக்கிய பாதைகள் 5 உள்ளன. இதில் ராமேஸ்வரம் வழி நுழைந்து கொடைக்கானலை மோதும் வான் நீரோட்ட பாதை அதிக மழையை நமக்கு தரும். இதை போல் மேலும் 4 வான் நீரோட்ட பாதைகள் உள்ளன. இவைகள் மிக விரிவான விஷயங்கள். இப்போது இது போதும்.

 இவ்வாறு வான் நீரோட்டங்கள் செல்லும் பாதைகளையும் , கடற்காற்று உள்ளே நுழையும் பாதைகளையும் அடிப்படையாக கொண்டு இதன் போக்கில்  OXYGEN  அளவை செயற்கையாக அதிகப்படுத்தி  அதை மழையாக பெய்ய வைக்கும் நுட்பமே செயற்கை OXYGEN மழை .

இந்த நீரோட்ட பாதைகள் மூலமாக தமிழ்நாட்டில் நமக்கு வேண்டிய இடத்தில, வேண்டிய அளவு, வேண்டிய நேரம் வரை தேவையான மழை பெய்ய வைக்கலாம்.

மேலும் இந்த மழை நீரில்  OXYGEN அளவு அதிகம் இருப்பதால் இது நன்மையே செய்யும் என JAYAKRISHNA  அவர்கள் கூறினார்கள்.

இதை பற்றி எனக்கு மேற்கண்ட விவரங்களை தெரிவித்த Jayakrishna Krishna  ஐயா அவர்களுக்கு மிக்க நன்றிகள். 

இது பற்றி தெரிந்து கொள்ள தூண்டுதல் அளித்த Rajendran Kumaresan ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றிகள்.

JAYAKRISHNA ஐயா அவர்களை இந்த வாரம் நேரில் சந்தித்து ஒரு முழு வீடியோ எடுத்து விரைவில் வெளியிட இருக்கிறோம். அதில் இன்னும் மேலும் பல்வேறு விவரங்களை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

நன்றி ; ஹீலர் செந்தில்குமார்..

அகத்தியர் அருளிய32 சிவ தீட்சைகள்

அகத்தியர் அருளிய32
                       சிவ தீட்சைகள்
🙏🕉️📿🙏🕉️📿🙏🕉️📿🙏🕉️📿🙏🕉️🙏🕉️

சிவ தீட்சை பற்றி அகத்தியர் இயற்றிய பாடல்

யாவருக்கும் கிடைத்திடாத இந்த அற்புதமான பதிவை படித்துவிட்டு அனைவருக்கும் பகிருங்கள் உனக்குள் இருக்கும் சிவத்தை உணர்ந்து சிவனுடன் இணைந்து சிவனடியாரக ஆகுங்கள்
🙏🕉️📿🙏🕉️📿🙏🕉️📿🙏🕉️📿🙏🕉️📿🙏

🕉️"தயவான தீட்சைவிதிக் காதிகாப்பு
தான்பாட வாராய்ந்து தெளிந்துபார்த்து
செயலான முப்பதி ரெண்டுதீட்சை
சித்தி செய்த பேர்க்கெல்லாம் ஞானம்சித்தி சுகமான பாவவினை அற்றுப்போகும் சோதிசிவ பாதமதைக் காணலாகும் நயமாக எந்தனுக்கு உபதேசித்த நற்குமரன் திருவருளே தீட்ட்சைக்காப்பு"

🕉️"தீட்சையிலே முதற்தீட்சை சிவதீட்சைதான்..
"ஸ்ரீம் அம் ஓம்" யென் றுலட்சம் ஜெபித்துவோதக்
காட்சிபெறத் தேகமெல்லாம் வியர்வை காணும்கண்மாய்கை இல்லையடா கண்டுதேறு ஆச்சுதடா சிவதீட்சை ரெண்டுங்கேளு "ஆம் ஓம் ஹரீம் ரீம்" யென்று நீயும்மூச்சடா உள்ளடங்கும் லட்சமோதமுத்தியுண்டாஞ் சத்தியுண்டாஞ் சித்தியாமே."

🕉️"சித்தியாஞ் சிவதீட்சை மூன்றுகேளு
செப்புவேன் குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம் யென்று லட்சம் பத்தியாய்ச் செய்துவர மோட்சமாகும் பாணுவைப்போற் தேகமெல்லாம் ஒளியுமாகும்
துத்தியஞ்செய் சிவதீட்சை நாலுகேளு
துடியுடனே ஸ்ரீங் அங் உங் கென்று
முத்திபெற லட்சமுருச் செபித்தாற்சித்தி
மோட்சமய்யா தேவதைகள் பணியுந்தானே."

🕉️பணிந்துதான் சிவதீட்சை அஞ்சுங்கேளுபண்பாக "யங் வங் றீங்" றுந்தான் துணிந்தோது லட்சமுருச் செபித்தாற்சித்தி தொண்டுசெய்வார் தேவதைகள் சட்டைக்கும்
அணிந்துகொள்வாய் சிவதீட்சை ஆறுங்கேளு.அன்புடனே 
"சங் ரங் உம் ஆம்" என்றுலட்சம்குனிந்துநிமிர் தேகமதில் வாசம் வீசும் குணமாகுந் தெகசித்தி சுருக்குத்தானே."

🕉️தானேசெய் சிவதழுட்சை ஏழுநீயும்
சந்தோஸ மாய்ஓது இங் ரங் அவ்வு மென்றுலட்சம் மானேந்தும் ஈசுவரனும் அருகில் நிற்பார் வானவர்கள் மகிழ்வாக வாவென்பார்கள்
நானென்ற தீட்சையெட்டும் உற்றுக்கேளுநன்றாக"மங் றீங் ரா ரா" வென் றுலட்சம் ஆனந்த முண்டாகுந் தேவர்வந்து அன்பாக உனைச்சேர்ந்து அணைவார்பாரே."

🕉️"உனைச் சேர்வார் சித்தர்களுஞ் சிவனார் தீட்சை.உன்பதுதான் 
"வங் கிலியும் சிங் அம் ஐம்" என்றுலட்சம் வினையொழிந்து என்தேகம் கல்போலாகும்
மெய்யான சட்டையொன்று தள்ளிப்போடும் தினந்துதிக்கும் சிவதீட்சை பத்தைத்தானுஞ்
செப்பார்கள் செப்புகிறென் 
"வம் வும் அம் இம்" என்று
எனைப்போலே சொல்வார்கள் தேகம் பொன்னாம் இனிதான சிவதீட்சை ஓதினேனே."

🕉️"ஓதியதோர் சிவதீட்சை பதினொன்றுந்தான்
உரைக்கின்றேன் மங் றீங் றீங் கென்று லட்சம் பாதிமதி சடைக்கணிந்த சிவனார்பாதம் பணிந்து தொண்ட னாய் இருப்பாய் செய்துபாரு
நீதிபெறும் பன்னிரெண்டாஞ சத்திதீட்சை நிலைத்தவர்க்குத் தற்புருசம் வம் ஆம் நம் என் றுலட்சம்
சந்தித்துச் செபித்திடவே சித்தியாகும்
சட்டையொன்று தள்ளுமடா கெவுனமாமே."

🕉️"ஆமப்பா சத்திபதி மூன்றாந் தீட்சை
அறிவுடனே ஊம் ஆம் என்றே லட்சம்
நாமப்பா செபித்திடவே வச்சிரதேகம்
நமனும்இவன் கிட்டவந்து அணுகான் பாரு ஊமப்பா பதினாலாஞ் சத்தி தீட்சை உண்மையாம் றம் றூம் ஸ்ரீம் அவ்வு மென்று தாமப்பா லட்சமுரு செபித்தாற்சித்தி சாயுட்சய பதம்பெறுவார் சார்ந்துகேளே!"

🕉️"சார்ந்துகேள் பதினைந்தாஞ் சத்திதீட்சை தயவாக ஸ்ரீம் றீம் றீம் ஓம் என்று லட்சம் தேர்நது பார் தேகமுந்தான் கல்போலாகும்
சிவசிவா நாதவிந்து கட்டிப்போகும்
ஆய்ந்தவர்க்குப் பதினாறாந் தீட்சை கேளுஅப்பனே சங் இங் றங் கென்றே லட்சம் மாந்தளிர்போல் தேகமுள்ள மனோன்மணியாள்வ ருவாளே மகனென்று பணிந்து கொள்ளே."

🕉️"வாய்ப்பான பதினேழாஞ் சிவதீட்சை
வழுத்துவேன் றீங் றீங் ஸ்ரீம் ஸ்ரீம் என்றே லட்சம் காய்ப்பான நரைதிரையும் இல்லையில்லை
கற்பமதை உண்டிடவே சுருக்குமெத்த
ஏய்ப்பார்கள் ஏய்ப்புக்குள் அகப்படாதே
ஈஸ்வரியாள் தீட்சை
பதினெட்டுங்கேளு தீய்ப்பான 
"சங் சிங் ரா ரா" வென்று
செபித்திடுநீ லட்சமுரு சட்டைபோமே."

🕉️"சட்டைதள்ளும் பத்தொன்பதாந் தீட்சை தன்னை தான்கேளு திரிநேத்திராயா வா வா வென்று
இட்டமுடன் லட்சமுரு செபித்தாற்சித்தி
இருபதாஞ் தீட்சையது ஸ்ரீங்கார தேவாயநமா வென்று தொட்டதுவே லட்சத்திற்கு சித்தியாகும்
சொல்லுவேன் மூவேழு தீட்சை கேளு
அட்டதிசை வெல்லுமடா இங் அங் றங் கென்றுந்தான் ஐநான்கு தீட்சைரெண்டும் அறையக் கேளே."

🕉️"அரையக்கேள் அரிஅரி ஓம் என்றுவோத அப்பனே லட்சத்திற் சித்தியாகும் முறையாக இருபத்து மூன்றாந் தீட்ரைச மொழிந்திடுவாய் 
"ரா ரா றீம் றீம என்று குறையாமற் செய்துவிடு சித்தியாகும்
குணமாக மூவெட்டுத் தீட்சை கேளு
மறைவாக லீ லீ லீ அரஹர றீ றி என்று
வாழ்த்துவாய் லட்சமுரு கெவுனிப்பாயே."

🕉️"கெவுனமது ஒடவென்றால் ஐயைந்து தீட்சைகேளு "நீ ஏ ஏ ஏ ஊ ஊ ஊ" வென்று லட்சம் மவனமது சித்தியப்பா இருப்பதாறில் மாதாவின் தீட்சையது இஷாய இஷாய ஓம்என்று லட்சம்
சிவனாகும் இருபத்தேழ் தீட்சை தன்னில் செப்புவேன் ஓம்சிவாய சிவா றீங் கென்று லட்சம் புவனமதில் இருபத்தி யெட்டாந் தீட்சை
பூரிப்பாய் சிவஓம் சிவாயநமவெனப் புகழுண்டாமே."

🕉️"புகழுண்டாம் இருபத்தி ஒன்பதாந் தீட்சை போற்றுவாய் சவ்வும் மவ்வும் என்று லட்சம் நெகிளாது அய்யாறு தீட்சையப்பா நிலைத்தவர்க்கு மங் சங் கங் கென்று லட்சம் அகமகிழ உன்தேகம் ஒருநாளுங் தான்
அழியாது நரைதிரையும் இல்லையில்லை உகம்வறைக்கும் இருத்துமடா முப்பதொன்று
ஓதுவாய் ஸ்ரீம் றீம் கென்று தானே."

🕉️"என்றுதான் லட்சமுரு செபித்தாற் சித்தி இறவாமல் இருத்துமடா கோடிகாலம் நன்றுகாண் முப்பத்தி ரெண்டாந் திட்சை "நங் கிலி சிங்"
 கிலி என்றே லட்சம்
மன்றுள்ள காலம்வரை இரு;ததுந்தேகம்
வாழ்;த்திநீ தோத்திரங்கள் செய்துகொள்வாய்
கொன்றாலும் வாள்கொண்டு வெட்டினாலும்
குறையாமல் வாள்வெட்டுப் பொருந்துந்தானே."

சிவதீட்சை மந்திரங்கள் விளக்கம்
🙏🕉️📿🙏🕉️📿🙏🕉️📿🙏🕉️📿🙏🕉️📿🙏

🕉️சிவதீட்சையில் முப்பத்தி இரண்டு
மந்திரங்கள் . இவை ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான பலன்கள். நமக்கு தேவையான மந்திரத்தை மட்டும் சொல்லி பலன் பெற்றுக் கொள்ளலாமே  என்று நினைக்க வேண்டாம். இந்த முப்பத்தி இரண்டு மந்திரங்களும் ஒவ்வொரு படிநிலையாக கருதப் படுகிறது.ஒவ்வொரு நிலையாக பூரணத்துவம் பெற்று மந்திரம் சித்தியடைந்த பலனை உணர்ந்த பின்னரே அடுத்த நிலைக்கு முன்னேறிச் செல்லுதல் வேண்டும். அகத்தியர் இயற்றிய பாடலுக்கான விளக்கத்தை விரிவாக பார்க்கலாம்.

சிவதீட்சை -1

🕉️ஸ்ரீம் அம் ஓம்" என்று லட்சம் முறை செபிக்க முதல் தீட்சை சித்தியாகும். அப்போது இறைவனின் திருக்காட்சியைக் காணலாம் என்கிறார். காட்சியைக் காணும் போது தேகமெல்லாம் வேர்த்துப் போகும். ஆனால் இந்தக் காட்சி கண் மாயை அல்ல, இதைக் கண்டு தேறுவதே முதல் தீட்சையாகும் என்கிறார் அகத்தியர்.

சிவதீட்சை - 2

🕉️"ஆம் ஓம் ஹரீம் ரீம்" என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க இரண்டாவது தீட்சை சித்தியாகும். அப்போது மூச்சு உள்ளடங்குவதுடன் , முக்தியும், சக்தியும் சித்தியாகும் என்கிறார்.

சிவதீட்சை - 3

🕉️"குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம்" என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க மூன்றாவது தீட்சை சித்தியாகும். அப்போது சந்திரனை போல தேகம் ஒளிவீசும் என்கிறார்.

சிவதீட்சை - 4

🕉️"ஸ்ரீங் அங் உங்" என்று லட்சம் முறை செபிக்க நான்காவது தீட்சை சித்தியாகும். அப்போது மோட்சமும், தேவதைகள் உனக்கு பணியும் தன்மையும் ஏற்படும் என்கிறார்.

சிவதீட்சை - 5

🕉️"யங் வங் றீங்" என்று லட்சம் முறை செபிக்க ஐந்தாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேவதைகள் ஒரு சட்டையைத் தரும். அதை அணிந்துகொள் என்கிறார்.

சிவதீட்சை - 6

🕉️"சங் ரங் உம் ஆம்" என்று லட்சம் முறை செபிக்க ஆறாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேகத்தில் வாசம் வீசும். அத்துடன் தேகசுத்தியும் சித்திக்கும் என்கிறார்.

சிவதீட்சை - 7

🕉️"இங் ரங் அவ்வு" லட்சம் முறை செபிக்க, மானை கையில் ஏந்தி இருக்கும் சிவன் அருகில் இருப்பார். வானவர்கள் மகிழ்ச்சியுடன் வா வா என்று அழைப்பார்கள் என்கிறார்.

சிவதீட்சை - 8

🕉️"மங் றீங் ரா ரா" என்று லட்சம் முறை செபிக்க ஆனந்தம் உண்டாகும். அத்துடன் தேவர்கள் வந்து உன்னுடன் இணைவார்கள் என்கிறார்.

சிவதீட்சை - 9

🕉️"வங் கிலியும் சிங் அம் ஐம்" என்று லட்சம் முறை செபிக்க உன் வினைகள் எல்லாம் தீர்ந்து உடல் கல்லைப் போல் உறுதிபெறும்.இவ்வாறு ஒன்பதாவது தீட்சை சித்தியாகும் என்கிறார்.

சிவதீட்சை - 10

🕉️"வம் வும் அம் இம்" என்று லட்சம் முறை செபித்தால் தேகம் பொன் போல ஆகும். இவை இனிதான பத்தாவது சிவதீட்சை ஆகும் என்கிறார்.

சிவதீட்சை - 11

🕉️"மங் றீங் றீங்" என்று லட்சம் முறை செபிக்க பதினோராவது தீட்சை சித்திக்கும். பாதி மதியை சடையில் அணிந்த சிவபெருமானின் திருவடியைப் பணிந்து என்றென்றும் தொண்டனாய் இருப்பாய் செய்துபார் என்கிறார்.

சிவதீட்சை - 12

🕉️கற்பம் உண்டு நிலைத்தவர்க்கு சிவபெருமானின் ஒருமுகமான தற்புருசமே இது. "வம் ஆம் நம்" என்று லட்சம் உரு செபிக்க சித்தியாகும். கெவுன மார்க்கம் செலல ஏதுவாக சட்டை ஒன்றும் கிடைக்கும் அதை அணிந்தால் கெவுன சித்தி கிடைக்கும் என்கிறார்.

சிவதீட்சை - 13

🕉️அறிவுத் தெளிவுடன் "ஊம் ஆம்" என்று லட்சம் முறை செபிக்க தேகம் வச்சிர தேகமாகும். எமன் கூட அருகில் வர மாட்டான்.இவ்வாறு பதின்மூன்றாவது தீட்சை சித்திக்கும் என்கிறார்.

சிவதீட்சை - 14

🕉️"றம் றூம் ஸ்ரீம் அவ்வு" என்று லட்சம் முறை செபிக்க பதின்நான்காவது தீட்சை சித்தியாகும். சாயுட்சய பதம் பெறுவார் என்கிறார் .
சிவதீட்சை - 15

🕉️"ஸ்ரீம் றீம் றீம் ஓம்" என்று லட்சம் முறை செபிக்க தேகம் கல்போலாகும். தேர்ந்துபார். என்ன அற்புதம் சிவ சிவா நாதவிந்து கட்டிப்போகும்.இதுவே பதினைந்தாவது தீட்சை ஆகும். இவைகளை ஆய்ந்தறிந்தவர்களுக்குப் பதினாறாம் தீட்சையைச் சொல்கிறேன் கேள் என்று தொடர்கிறார்.

சிவதீட்சை - 16

🕉️"சங் இங் றங்" என்று லட்சம் முறை செபிக்க மாந்தளிர் போல் தேகமுள்ள மனோன்மணித் தாய் தன் இருகரம் நீட்டியபடியே மகனே என வருவாள். அவள் வரும் போதே அவளைப் பணிந்துகொள் என்கிறார் அகத்தியர்.இதுவே பதினாறாவது தீட்சையாகும்.
சிவதீட்சை - 17

🕉️"றீங் றீங் ஸ்ரீம் ஸ்ரீம்" என்று லட்சம் முறை செபிக்க காய்ப்பான நரையும் இல்லை. திரையும் இல்லை. கற்பத்தை உண்ண சுருக்கான வழி. வழியறியாதவர்கள் உன்னை ஏய்த்து விடுவார்கள். அவர்களின் ஏய்ப்புக்கு நீ ஆளாகிவிடாதே என்கிறார்.மேலும் இது ஒரு நல்வாய்ப்பு என்கிறார் அகத்தியர். இதுவே பதினேழாம் சிவதீட்சையாகும்.

சிவதீட்சை - 18

🕉️"சங் சிங் ரா ரா" என்று லட்சம் முறை செபிக்க சட்டை போகும். இது ஈஸ்வரியாளின் தீட்சை என்கிறார். இது பதினெட்டாவது தீட்சையாகும்.

சிவதீட்சை - 19

🕉️"திரிநேத்திராயா வா வா" என்று விருப்பமுடன் லட்சம் முறை செபிக்க பத்தொன்பதாவது தீட்சை சித்தியாகும்.இந்த தீட்சை சட்டையை தள்ளும் என்கிறார்.

சிவதீட்சை - 20

🕉️"ஸ்ரீங்காரதேவாய நமா" என்று லட்சம் முறை செபிக்க தொட்டதெல்லாம் சித்தியாகும்.இது இருபதாவது சிவதீட்சையாகும்.

சிவதீட்சை - 21

🕉️"இங் அங் றங்" என்று லட்சம் முறை செபிக்க எட்டுத் திசையையும் வெல்லலாம்.இதுவே இருபத்தியொன்றாவது சிவதீட்சையாகும்.

சிவதீட்சை - 22

🕉️"அரி அரி ஓம்" என்று என்று லட்சம் முறை செபிக்க இருபத்தி இரண்டாவது சிவதீட்சை சித்தியாகும்.

சிவதீட்சை - 23

🕉️"ரா ரா ரா றீம் றீம்" என்று லட்சம் முறை செபிக்க இருபத்தி மூன்றாவது சிவதீட்சை சித்தியாகும்.

சிவதீட்சை - 24

🕉️குணமாகவும் மறைவாகவும் "லீ லீ லீ அரஹர றீ றீ றி" என்று லட்சம் முறை செபித்து வாழ்த்துவாய் என்கிறார் அகத்தியர்.

சிவதீட்சை - 25

🕉️இருபத்தி ஐந்தாவது தீட்சையைக்கேள். கெவுனம் ஓடவென்றால் இதைக்கேள். "ஏ ஏ ஏ ஊ ஊ ஊ" என்று லட்சம் முறை செபிக்க இந்த தீட்சை சித்தியாகும் என்கிறார்.

சிவதீட்சை - 26

🕉️இருபத்து ஆறாவது தீட்சையைக்கேள், இது மாதாவின் தீட்சை இது, "இஷயா இஷயா ஓம்" என்று லட்சம் முறை செபிக்க மௌனம் சித்தியாகும் என்கிறார்.

சிவதீட்சை - 27

🕉️இருபத்தி ஏழாவது தீட்சையைக்கேள். இத்தீட்சையில் நீயே சிவனாவாய். அதைச் சொல்கிறேன். "ஓம் சிவாய சிவா றீங்" என்று லட்சம் முறை செபிக்க வேண்டும் என்கிறார்.

சிவதீட்சை - 28

🕉️இருபத்தி எட்டாவது தீட்சையைக்கேள். "சிவ ஓம் சிவாய நம" என்று லட்சம் முறை செபிக்க உலகத்தில் பூரிப்பான புகழ் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.

சிவதீட்சை - 29

🕉️இருபத்தி ஒன்பதாவது தீட்சையைக்கேள். இது போற்றுதற்குரிய புகழ் கிடைக்கும். அதற்கு "சவ்வும் மவ்வும்" என்று லட்சம் முறை செபிக்க வேண்டும் என்கிறார்.

சிவதீட்சை - 30

🕉️முப்பதாவது தீட்சையைக்கேள். "மங் சங் கங்" என்று லட்சம் உரு செபிக்க
உன் தேகம் ஒருநாளும் அழியாது. அகம் மகிழ நரையும் இல்லை திரையும் இல்லை. யுகம் வரைக்கும் உன் தேகத்தை நிலைநிறுத்தும்

சிவதீட்சை - 31

🕉️ "ஸ்ரீம் றீம்" என்று ஓதுவாய் லட்சம் உரு இது முப்பத்தியொன்றாம் தீட்சை என்கிறார்.

சிவதீட்சை - 32

🕉️முப்பத்து இரண்டாந் தீட்சைகேள். "நங் கிலி சிங் கிலி" என்று லட்சம் உரு செபிக்க கோடி காலம் வரை இறவாமலிருத்தும் மற்றுமுள்ள காலமனைத்தும் வாழ்த்தி தோத்திரங்கள் செய்து கொள்வாய். கொன்றாலும் வாள் கொண்டு வெட்டிப்போட்டாலும் வெட்டுப்பட்ட இடம் சற்றும் குறையாமல் ஒட்டிக்கொள்ளும் என்கிறார்.

🕉️பொருள் மாறிவிட கூடாது என்பதற்காக..உள்ளது உள்ளபடி அப்படியே பதிவிடப்பட்டிருக்கிறது.. சில வார்த்தைகள் புரியவில்லையே என்று கவலைப்படாதீர்கள். உங்கள் வேலை முதல் படியில் கால் வைப்பது மட்டுமே. மீதியை அந்த சிவம் பார்த்துக் கொள்ளும்..மறைத்து வைக்க  இனி ஏதும் இல்லை  ,ஈசன்  அருள்  எல்லோருக்குமே  இனைந்து பயணிப்போம் ..
     
             🌙 ஓம் நமச்சிவாயம் வாழ்க
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் நற்றுணையாவது நமச்சிவாயவே
🙏🕉️📿🙏🕉️📿🙏🕉️📿🙏🕉️📿🙏🕉️📿🙏

Thursday 21 October 2021

ஹீலர் பாஸ்கர் அவர்களின் கட்டுரைகள் புத்தகங்கள் வீடியோக்கள் பற்றிய தகவல்கள்

ஹீலர் பாஸ்கர் மற்றும் குழுவினரின் 80 தலைப்புகளில் புத்தகங்கள் இலவசமாக DOWNLOAD செய்து கொள்ளுங்கள். 80 புத்தகங்களின் பெயர் பட்டியல் இந்த பதிவில் கடைசியாக உள்ளது.

https://drive.google.com/drive/folders/15lJH9IMcMIHETb-20ROkXrb9GaJ6L0xN?usp=sharing

மேலும்,

ஹீலர் பாஸ்கராகிய நான்,
" அமைதியும் ஆரோக்கியமும் "
என்ற பெயரில் மாத இதழை 7 வருடமாக 81 மாத இதழ்களில் 400-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். இதோ உங்களுக்காக. 

https://drive.google.com/drive/folders/1HikLXtCAmIrUPwvbjxF-E5Z_fxUs7y9h?usp=sharing

தயவு செய்து, ஒருமுறையாவது அனைத்து இதழ்களில் உள்ள தலைப்புகளை பார்த்து வையுங்கள். எப்பொழுது எந்த தலைப்பு தேவையோ அப்பொழுது படிப்பதற்கு வசதியாக இருக்கும்.

ஹீலர் பாஸ்கரின் ✒️ இந்த 9 கட்டுரைகளை தயவு செய்து முழுவதுமாக ஒரு முறையாவது படியுங்கள். எனது ஐந்து நாள் வகுப்பில் கூறும் விஷயங்களை விட பல மடங்கு அதிகமாக இருக்கும்.

இந்த 9  கட்டுரைகளில் எனது அனைத்து ஆடியோ, வீடியோ, புத்தகங்கள் இலவசமாக டவுன்லோடு செய்வதற்கு லிங்க்குகள் உள்ளது.

📚 *கட்டுரை  1 - உடல்நலம் ( Health )*

4448 நோய்களை மருந்தில்லாமல் மாத்திரையில்லாமல் குணமாக்க வேண்டுமா?

நான் 31 வீடியோக்களில் 4448 நோய்களை மருந்தில்லாமல் மாத்திரையில்லாமல்  எப்படி குணப்படுத்த முடியும் என்ற விசயத்தை புரிய வைத்திருக்கிறேன்.

அந்த வீடியோ லிங்க் ஐ இப்பொழுது நான் உங்களுக்கு கொடுக்கிறேன்

https://www.youtube.com/playlist?list=PL5BxbCwrkmCjNVeWRKhQlm0-e0iYpGXuC

தயவுசெய்து இந்த 31 வீடியோக்களை  வரிசையாக முழுமையாக பாருங்கள்.

இனிமேல் நூற்றில் 95 வியாதிகளுக்கு நீங்கள் மருத்துவரை பார்க்க மாட்டீர்கள். மருந்து மாத்திரை சாப்பிட மாட்டீர்கள்.

என்னிடம் தயவு செய்து சர்க்கரை, மூட்டு வலி, முழங்கால் வலி, தைராய்டு என்று தனித்தனியாக கேள்வி கேட்காதீர்கள்.

இப்படி தனித்தனி கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. மேலும் தனித்தனி நோய்களுக்கு தனித்தனி வைத்தியம் இல்லை.

இந்த 31 வீடியோவை பார்த்தால் மட்டுமே உங்களுக்கு புரியும்.

இந்த 31 வீடியோக்களை பார்த்த பிறகு ஏதாவது சந்தேகம் இருந்தால் *டெலிகிராம் ( Telegram )* என்ற அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யுங்கள். அதில் சர்ச் என்ற இடத்துக்குச் சென்று *@iamhealerbaskar* என்று டைப் செய்தால் "ஹீலர் பாஸ்கரின் சிந்தனைகள்" என்று ஒரு சேனல் வரும்" . அதில் ஜாயிண்ட் செய்யுங்கள்.

Telegram link : https://t.me/IamHealerBaskar

இந்த சேனலில் 140 கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறேன். கண்டிப்பாக உங்கள் கேள்விக்கான பதில் அதில் இருக்கும்.

மேலும் யூட்யூபில் 190 கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறேன் . இதோ அந்த லிங்க் 

https://www.youtube.com/playlist?list=PL5BxbCwrkmCioBPPddKX4TcDJaMF73IvZ 

ஒருவேளை மேலும் கேள்வி இருந்தால்  *healerbaskar@gmail.com* ஈமெயிலுக்கு உங்கள் கேள்வியை அனுப்புங்கள். நான் பதில் சொல்கிறேன்.

இந்த 31 வீடியோவை உலக மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் பத்து வருடமாக கஷ்டப்பட்டு அலைந்துகொண்டிருக்கிறேன். எனவே ப்ளீஸ் பாருங்கள்.

மேலும் இந்த விஷயங்களை 6 மொழிகளில் video and audio மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

*1. ஆங்கிலம்.*
*2. ஹிந்தி.*
*3. மலையாளம்.*
*4. தெலுங்கு.*
*5. கன்னடம்.*
*6. சீன மொழி.*

இந்த 6 மொழிகளில் வீடியோக்களையும் இப்பொழுது நான் கொடுக்கிறேன்.

https://www.youtube.com/playlist?list=PL5BxbCwrkmChC3Q6MviwhtpFhDxaU8lEU

*உங்களது பலமொழி நண்பர்களுக்கு நீங்கள் இதை அனுப்பலாம்.*

ஹீலர் பாஸ்கரின் *புத்தகங்கள்* பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 
*1. ஆங்கிலம்.*
*2. ஹிந்தி.*
*3. மலையாளம்.*
*4. தெலுங்கு.*
*5. கன்னடம்.*
*6. சீன மொழி.*
*7. உருது.*
*8. மலாய்.*

அனைத்து மொழி புத்தகங்களையும் *இலவசமாக* கூகுள் ட்ரைவில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

https://drive.google.com/drive/folders/15lJH9IMcMIHETb-20ROkXrb9GaJ6L0xN?usp=sharing

இந்த கட்டுரையை உங்களது நண்பர்களுக்கு தயவு செய்து பகிர்ந்து ஒருமுறையாவது முழுவதுமாக படிக்கச் சொல்லுங்கள்.

இப்படிக்கு.
ஹீலர் பாஸ்கர்

*Anatomic Therapy Foundation - 9944221007*
( healerbaskar@gmail.com )
*aammii organic shop - 9500655548*

🙏 இலவச வீடியோக்களில் பயனடைந்தோர், மனம் இருந்தால் *நன்கொடை* அளிக்கலாம்.

ANATOMIC THERAPY FOUNDATION- 
ICICI BANK
CURRENT ACCOUNT 
AC no : 034205007062
IFSC : ICIC0000342.
R.S.PURAM branch. Coimbatore

*Google pay : 8870666966*

*கட்டுரை 2 - மனநலம் ( Mind )*

மனம் சம்பந்தப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் வேண்டுமா?

டென்ஷன், கோபம், பயம், கவலை, வஞ்சம், கடுப்பு, வேதனை, துன்பம், தற்கொலை எண்ணம்,கொலை செய்யும் எண்ணம் இவற்றிலிருந்து வெளிவந்து மகிழ்ச்சியாக இன்பமாக வாழ வேண்டுமா?

இது சம்பந்தமாக நான் 12 வீடியோவில் தெளிவாக பேசி இருக்கிறேன். அந்த வீடியோ லிங்கை அனுப்புகிறேன் தயவு செய்து பாருங்கள் புரியும்.

மனநலம் / மனதின் மணம் / Smell Of The Mind.

https://www.youtube.com/playlist?list=PL5BxbCwrkmCjsS23m-X1qWJoHdESHiZ22 

இந்த 12 வீடியோக்களை பார்க்காமல் மனம் சம்பந்தப்பட்ட எந்த கேள்வியும் என்னிடம் கேட்காதீர்கள். என்னால் புரிய வைக்க முடியாது.

இந்த 12 வீடியோக்களை பார்த்த ஒருவருக்கு என்னால் சுலபமாக புரிய வைக்க முடியும்.

இந்த 12 வீடியோக்களை பார்த்தபிறகு சந்தேகம் இருந்தால் எனது ஈமெயிலுக்கு  peaceomaster@gmail.com கேள்விகளை அனுப்புங்கள் நான் பதில் சொல்கிறேன்.

இப்படிக்கு
ஹீலர் பாஸ்கர்.
*Anatomic Therapy Foundation - 944221007*
healerbaskar@gmail.com
*Aammii organic shop*
*9500655548* *Www.aammii.com*

*நன்கொடை தேவை*
Google pay : 8870666966

*கட்டுரை  3 - குடும்ப நலம் ( Relationship )*

காதலில் சிக்கல், கணவண்-மனைவி சண்டை, உறவுகளில் விரிசல், குடும்ப சண்டை இவற்றிற்கு தீர்வு வேண்டுமா?

"காதல் முக்தி" என்று நான் பேசிய 1.5 மணிநேர பதிவை கேளுங்கள். உங்கள் வாழ்க்கையே மாறிவிடும். 

https://youtu.be/FrQffq_vtwU 

காதலும் உறவுகளும் ஒன்று சேர இந்த மூன்று புத்தகத்தை படியுங்கள்.

*1. ஆண்களின் பூர்வீகம் செவ்வாய் பெண்களின் பூர்வீகம் சுக்கிரன்.

https://drive.google.com/file/d/1Qf5592Ni0dilH5HMjqYHolGf3bAABkFq/view?usp=sharing

 ( Men are from Mars women are from Venus )*

https://drive.google.com/file/d/1cKwypU0ece1xHlxvk3TOo20_LrwWzhxq/view?usp=sharing

*2. காதலின் மொழிகள் ஐந்து.*

*3. தந்த்ரா வழியில் தாம்பத்ய வாழ்க்கை.*

https://drive.google.com/file/d/12SNg6STB2WPsFBMCbvkdxJdYlJB5yU8-/view?usp=sharing

இந்த மூன்று புத்தகத்தை கொரியரில் பெற்றுக்கொள்ள தொடர்பு :
*Giri iyya publications*
9629032767
www.giriiyyapublications.com

நீங்கள் அறிவாளியா? இல்லை முட்டாளா? என்ற தலைப்பில் யூட்யூபில் ஒரு பதிவு பேசியிருக்கிறேன். இதைக் கேளுங்கள் வாழ்க்கையே மாறிவிடும்

 https://youtu.be/7f887-V44hg

" narcissistic personality disorder "என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்யுங்கள்.

https://blogs.psychcentral.com/relationships/2017/03/narcissistic-abuse-and-the-symptoms-of-narcissist-victim-syndrome/

https://www.higherperspectives.com/never-get-truth-narcissist-2638688654.html

https://www.thelist.com/41680/know-someone-love-narcissist/

உங்கள் கணவரோ, மனைவியோ, காதலனோ, காதலியோ, அப்பாவோ,அம்மாவோ, மாமியாரோ நண்பரோ, உறவினரோ , மேனேஜரோ , முதலாளியோ, பார்ட்னரோ அல்லது யாராவது " narcissistic personality disorder"  என்ற சைக்காலஜிக்கல் நோய் இருந்தால், உடனே அவர்களைவிட்டு பிரிந்து வாழுங்கள்.

அவர்களால் இந்த ஜென்மத்தில் எந்த நன்மையும் உங்களுக்கு கிடைக்காது. அவர்களால் கூட இருப்பவர்களுக்கு துன்பம் மட்டுமே கிடைக்கும். அவர்கள் இந்த ஜென்மத்தில் திருந்த மாட்டார்கள். அவர்களை பாவம் என்று நினைத்தோ அல்லது மாற்ற முடியும் என்று நினைத்தோ உங்கள் வாழ்க்கையை இழந்து விடாதீர்கள்

அவர்களை விட்டு ஓடி, ஒளிவது, பிரிந்து, தொடர்பில்லாமல் வாழ்வதே புத்திசாலித்தனம்.

*" சந்தோஷ் சுப்பிரமணியம்"* என்ற படத்தை திரும்பத்திரும்ப பாருங்கள் பல விஷயங்கள் புரியும்.

தேவைப்பட்டால் கவுன்சிலிங் கொடுக்கப்படும்.
கவுன்சிலிங் வருவதற்கு முன்னால் மேலே குறிப்பிட்ட அனைத்து விஷயங்களையும் படித்து,பார்த்து ஆராய்ச்சி செய்து முடித்த பிறகு மட்டுமே வரவும். மேலும் விவரங்களுக்கு  Januandram@gmail.com

இப்படிக்கு
ஹீலர் பாஸ்கர்.

*Anatomic Therpay Foundation -*
9944221007 www.anatomictherapy.org
healerbaskar@gmail.com
telegram : @iamhealerbaskar

*கட்டுரை 4 - கல்வி நலம் ( Education )*

இப்பொழுது இருக்கும் கல்வி சரியில்லை!!!!
சரியான கல்வி என்றால் என்ன?

கல்வி சம்பந்தப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில்
*"பானு வீட்டு கல்வி முறை"*
*( Banu Home Education )*

கல்வி சம்பந்தமாக நான் பேசிய 2.5 மணி நேர பதிவை தயவுசெய்து கேளுங்கள். 

https://youtu.be/uICATvY0GPQ

தமிழ் புத்தகம் 1 and 2 Download

https://drive.google.com/file/d/1Lho4CviM8q6SPdenIlMH23gPdE08vSt7/view?usp=sharing

https://drive.google.com/file/d/1kgV1zx3BcE1ddMMEnT3l3V4qp0-c_NYt/view?usp=sharing

கல்வி சம்பந்தப்பட்ட உங்கள் பார்வை முற்றிலுமாக மாறி விடும்.

பல ஊர்களில் பல நாடுகளில் பானு வீட்டு கல்வி முறையில் பள்ளிகள் இயங்குகிறது.

இந்த 2.5 மணிநேர வீடியோவில் குறிப்பிட்டுள்ள மனிதர்கள் மற்றும் பள்ளிகளின் தொடர்பு எண் வேண்டுமா *WhatsApp : 8220667135*

இந்த 2.5 மணிநேர வீடியோவை பார்க்காதவர்கள் யாரும் தயவுசெய்து கல்வி சம்பந்தமாக என்னிடம் எந்த கேள்வியும் கேட்காதீர்கள்.

இந்த 2.5 மணி நேர பதிவு பிடித்திருந்தால். மேலும் விரிவாக தெரிந்துகொள்ள மேலும் 42 வீடியோ லிங்குகளை கொடுக்கிறேன். 

https://www.youtube.com/playlist?list=PL5BxbCwrkmCjqYKmACpdVhKtguGGCCduI

மொத்தம் எல்லா வீடியோக்களை பார்த்தபிறகு சந்தேகம் இருந்தால்
selfeducationathome@gmail.com
 இமெயிலுக்கு கேள்விகளை அனுப்புங்கள் நான் பதில் சொல்கிறேன்.

மேலும் கல்வி சம்பந்தமாக விவரங்கள் ,புத்தகம் மற்றும் டிவிடிகள் வேண்டுமா ?.
*Cell : 8220667120* 
*whats apps : 8220667135* *www.selfeducationathome.com*
educationbaskar@gmsil.com

முக்கிய அறிவிப்பு :

Telegram மற்றும் YOUTUBE இருக்கும் உங்களுக்கு பிடித்த, தேவைப்படுகிற  பதிவுகளை தயவுசெய்து DownLoad செய்து Pen Drive  அல்லது Hard Disk ல் வைத்துக்கொள்ளுங்கள்.பாதுகாப்பாக இருக்கும்.

இலவச வீடியோக்களில் பயனடைந்தோர், மனம் இருந்தால் *நன்கொடை* அளிக்கலாம்.

ANATOMIC THERAPY FOUNDATION
ICICI bank 
CURRENT ACCOUNT
AC no : 034205007062
IFSC : ICIC0000342.
R.S.PURAM branch. Coimbatore

Google pay : 8870666966

*கட்டுரை : 5 : யோக நலம் ( Yoga )*

இலவசமாக யோகா கற்றுக் கொள்ள வேண்டுமா?

உடற்பயிற்சி, யோகா,ஆசனங்கள், மூச்சுப்பயிற்சி, தியானம், சூரிய நமஸ்காரம், ஆகியவை செய்வதன் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். ஆரோக்கியமாக வாழ முடியும். மனதை பக்குவமாக வைத்துக்கொள்ள முடியும்.

இது சம்பந்தப்பட்ட அனைத்து 47 யூடியூப் லிங்கங்களையும் உங்களுக்கு இப்பொழுது தருகிறேன்.

https://www.youtube.com/playlist?list=PL5BxbCwrkmCh0IDCROPRC9vCxlfVz95Nz

இப்படிக்கு
ஹீலர் பாஸ்கர்.

*Anatomic Therpay Foundation - 9944221007* www.anatomictherapy.org healerbaskar@gmail.com
telegram : @iamhealerbaskar

*கட்டுரை  : 6 : அரசியல் ( politics )*

அரசியல் கேள்விகளுக்கு பதில் வேண்டுமா?

உள்ளூர் அரசியல் மற்றும் உலக அரசியல் பற்றி நான் 16 வீடியோ பதிவில் விளக்கமாக பேசியிருக்கிறேன். அந்த லிங்கை இப்பொழுது உங்களுக்குக் தருகிறேன் கேளுங்கள். 

https://www.youtube.com/playlist?list=PL5BxbCwrkmChOTwwAxjoUwWI8q07qGDv4

இந்த 16 வீடியோவை பார்த்த பிறகு டிவியில் நியூஸ் பார்க்கும்பொழுது உங்களுக்கு வித்தியாசமான முறையில் புரியும்.

உலகில் நடக்கும் அனைத்து விஷயங்களும் புரிந்துவிடும்.

இந்த 16 வீடியோவை பார்க்காமல் அரசியல் சம்பந்தப்பட்ட எந்த கேள்விகளையும் என்னிடம் கேட்காதீர்கள்.

பிரீமேசன்கள் மூலமாகத்தான் *இலுமினாட்டிகள்* இந்த உலகை அவர்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார்கள் என்ற உண்மை தெரிந்தால் மட்டுமே உலக அரசியல் புரியும்.

இந்த 16 வீடியோவை பார்த்த பிறகு சந்தேகம் இருந்தால் *peaceomaster@gmail.com* இந்த இமெயிலுக்கு கேள்வியை அனுப்புங்கள் பதில் சொல்கிறேன்.

கெட்டவர்களிடம் இருந்து உலகத்தை காப்பாற்ற இந்த நான்கு விஷயத்தை நாம் உடனே அமல்படுத்த வேண்டும்.

*1. ஒற்றுமை...*
*2. கூட்டுப் பிரார்த்தனை...*
*3. சுயசார்பு வாழ்க்கை....*
*4. மேலதிகாரி சொல்லும் கெட்ட விஷயத்தை கீழ் அதிகாரி செய்யக்கூடாது மேலும் செய்யவும் விடக்கூடாது.*

மேலும் விவரங்களுக்கு : *peaceomaster@gmail.com*

*கட்டுரை  - 7 : சுயசார்பு வாழ்க்கை ( Self Sustainable life ).*

வீட்டில் இருந்து பொருட்களை தயாரித்து சம்பாதிக்க வேண்டுமா ?

123 பொருட்களை வீட்டிலேயே நாம் எப்படி தயாரித்து விற்பனை செய்து சம்பாதிக்கலாம் என்பதை இந்த 123 வீடியோவை பார்த்து புரிந்து கொள்ளுங்கள். 

https://www.youtube.com/playlist?list=PL5BxbCwrkmCi8yMFdx2_L8g73ZoNvfKsH

விரைவில் மேலும் 200 பொருள்கள் தயாரிக்கும் முறை யூடியூபில் upload செய்யப்படும்.

*BIO ENZYME* :
சமையலறையில் உள்ள கழிவுகளை வைத்து பயோ என்சைம் தயாரித்து நாமும் பயன்படுத்தி மேலும் விற்பனை செய்து பல ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பது எப்படி என்பதை இந்த வீடியோ மூலம் புரிந்து கொள்ளுங்கள்.  

https://youtu.be/A7Lgd7HwbV8

பயோ என்சைம் தமிழ் புத்தகம்.

https://drive.google.com/file/d/1g9hukLgKOEUV3YqestwIbG8UbZ6H2WQS/view?usp=sharing

Bio Enzymes. - English book.

https://drive.google.com/file/d/1kUjP84mFCucUy-XfoJUuCqdmFmY1je6Y/view?usp=sharing

*அம்மி தற்சார்பு சந்தையின் நோக்கம்.* : 
1. சுயசார்பு பொருட்கள் செய்வதை கற்றுக்கொடுப்பது.( கற்க ) 
2. பொருட்களை வாங்கிக் கொள்வது.( விற்க )
3. விற்பனை செய்வது. ( வாங்க )
4. பொருட்களை பார்க்கச் செய்வது. ( பார்க்க ).

மேலும் விவரங்களுக்கு
*அம்மி இயற்கை அங்காடி*
தொடர்பு கொள்ளுங்கள்.
*9500655548*
*www.Aammii.com*
*aammiisanthai@gmail.com* 

*YouTube :* https://www.youtube.com/channel/UCu3a1kKY22rsGHpUpab0n6Q

*அம்மியில் ஆன்லைன் மூலமாக பொருட்களை பெறலாம்.*

கட்டுரை : 8 : வகுப்புகள் ( Classes ) 

ஹீலர் பாஸ்கர் மற்றும் குழுவினர் நடத்தும் *வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டுமா?*

1. ஹீலர் பாஸ்கரின் நேரடியான 5 நாள் வகுப்பு.
2. ஹீலர் பாஸ்கரின் நேரடியான 1 நாள் வகுப்பு.
3. உளுஜி தியானம் 2 நாள் வகுப்பு.
4. யோகா விபாசனா 3 நாள் வகுப்பு.
5. பெண்கள் நலம் 1 நாள் வகுப்பு.
6. தந்த்ரா வழியில் தாம்பத்ய வாழ்க்கை 2 நாள் வகுப்பு.
7. பானு வீட்டு வழி கல்வி 2 நாள் வகுப்பு.
8. ஜோதிட வகுப்பு.
9. ஞாபகத்திறன் வகுப்பு.
10. தேனி வளர்ப்பு.
11. காற்றோறியன் கலை வகுப்பு. ( 9080169721 & 9442562661 )
12. தமிழர் விவசாயம்.( ஞானப்பிரகாசம் ஐயா : 9360551353 )
13. சிறப்பு குழந்தைகள். ( Special child :  Mrs.Hamsa : 9500015017 )
14. வாசியோகம்.
15. மற்றும் பல வகுப்புகள்.

கடந்த பத்து வருடமாக வகுப்புகள் நடத்துகிறேன். உங்களுக்கு பிராப்தம் இருந்தால் கலந்து கொள்ளுங்கள்.

*வகுப்புகள் புக்கிங்  :  8870666966*    https://anatomictherapy.org/events.php

*கட்டுரை 9 : மாத இதழ் ( Magazine )*

நான் கடந்த 7  வருடங்களாக
*"அமைதியும் ஆரோக்கியமும்"*
என்ற தமிழ் மாத இதழை நடத்தி வருகிறேன்.

இதில் 300க்கும் மேற்பட்ட தலைப்புகளில் கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். இதை நீங்கள் படித்து புரிந்து கொள்வதற்கு ஐந்து வருடம் ஆகும். இதில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது.

*7 வருடத்தின் 81 புத்தகங்களையும் இந்த லிங்க் மூலம் இலவசமாக டவுன்லோட் செய்து  படிக்கலாம்*

https://drive.google.com/drive/folders/1HikLXtCAmIrUPwvbjxF-E5Z_fxUs7y9h?usp=sharing

இந்த புத்தகம் பிரிண்ட் கிடையாது. சந்தாதாரர்களுக்கு வாட்ஸ்அப் மற்றும் இ-மெயில் மூலமாக மட்டுமே அனுப்பப்படும்.  *( Only PDF )*

நீங்கள் சந்தாதாரராக தொடர்பு கொள்ளுங்கள்  *8883805456*

வாழ்க வளமுடன். நன்றி.

இப்படிக்கு.
ஹீலர் பாஸ்கர்.

Anatomic Therapy  -  9944221007 *www.anatomictherapy.org* healerbaskar@gmail.com ) 
telegram:@iamhealerbaskar

*ஹீலர் பாஸ்கரின் அம்மி இயற்கை அங்காடி.*
9500655548 www.Aammii.com

இலவச வீடியோக்களில் பயனடைந்தோர், மனம் இருந்தால் நன்கொடை அளிக்கலாம்.ANATOMIC THERAPY FOUNDATION- ICICI bank CURRENT ACCOUNT - AC no : 034205007062 - R.S.PURAM branch. Coimbatore - IFSC : ICIC0000342.

ஹீலர் பாஸ்கரின் புத்தகங்கள் வீடியோக்கள் கொரியர் மூலம் வேண்டுமா? ( 9629032767 ) ( www.giriiyyapublications.com )

80 முக்கியமான புத்தகங்களின் பட்டியல்.

1. அனாடமிக் தெரபி தமிழ் ஹீலர் பாஸ்கர்.
2. English- Anatomic Therapy- Healer Baskar.
3. Telugu-Anatomic Therapy- Healer Baskar.
4. Kannada-Anatomic Therapy- Healer Baskar.
5. Hindi-Anatomic Therapy- Healer Baskar.
6. Malay-Anatomic Therapy- Healer Baskar.
7. Urudu-Anatomic Therapy- Healer Baskar.
8. பானு வீட்டு கல்வி முறை 1.
9. பானு வீட்டு கல்வி முறை 2.
11. லெமோரியா சமையல்.
12. சுகப்பிரசவம் ஒரு வரம்.
13. மருட்டி சுகப்பிரசவம்.
14. உலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம்.
15. இலுமினாட்டி களுக்கு தீர்வு.
16. World Politics - English.
17. பயோ என்சைம்.
18. Bio Enzyme - English.
19. Dr. காதர்- செல்வ தானியங்கள்
20. மருத்துவ குறிப்புகள்
21. The Secret - Rhonda Byrne- English.
22. சிறு 100 விளையாட்டுக்கள்.
23. மந்திரச்சாவி-நாகூர் ரூமி.
24. ரங்கராட்டின ரகசியம்.
25. சுயசார்பு பொருட்கள் 39 செய்யும் முறைகள்.
26. Men are from Mars women are from Venus.
27. ஆண்களின் பூர்வீகம் செவ்வாய் பெண்களின் பூர்வீகம் சுக்கிரன்.
28. யோகாசனம்.
29. உங்களுக்குள் ஒரு மருத்துவர்-உமர் பாருக்
30. உடலின் மொழி.
31. நீங்களும் ஆங்கில மருத்துவராகுங்கள்.
32. பல்லாங்குழி-ஆடுபுலி-தாயம்-பரமபதம்.
33. மாயாஜாலம்.
34. விவசாய புத்தகம் 1907.
35. இளைப்பாறல்.
36. ஆழ்மன சக்தியைக் கொண்டு செல்வந்தராவது எப்படி..
37. ரகசியம்- தமிழ்.
38. நீர் தாரா-  கர்ப்பவாய் சுத்தி.
39. சித்த வேதம்.
40.மிர்தாதின்_புத்தகம்.
41.பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை.
42. ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்.
43. அக்னிச் சிறகுகள்-DR. அப்துல் கலாம்.
44. Mudhras - English.
45. Natural Way Of Farming Masanobu Fukuoka Green Philosophy.
46. The-One-Straw-Revolution.
49. ஆனா பானா சதி தியானம்.
50. ஏலியன்கள் உண்மையா.
51. அனாகத தியானம்.
52. அஞ்சரைப் பெட்டி வைத்தியம்.
53. கிட்னி கல் - பீன்ஸ் வைத்தியம்.
54. மூளை சிகிச்சை.
54. மூளை சிகிச்சை.
55. தம் சாப்பாடு.
56. டுவா தூக்கம்.
57. முதல் உதவி ( First Aid ).
58. மேட் இட்லி செய்வது எப்படி.
59. மிட் பிரைன் ஆக்டிவேஷன் ( Mid Brain Activation ).
60. தாய்மொழிக் கல்வியே சிறந்தது.
61. மொட்டை மாடியில் பச்சை தொப்பி.
62  பசுமை இல்லம்.
63. பிடித்ததை பிடி.
64. கணவன் மனைவி பஞ்சாயத்து.
65. பிரசவ லேகியம்.
66. பியூரே தெரப்பி( Puree Therapy ).
67. ராமர் பிள்ளை(Ramar Pillai).
68. ரேட் ( Red ) .
69. RTI - தகவலறியும் உரிமைச் சட்டம்.
70. தேவதையா சூண்ய கிழவியா.
71. தோல் வியாதிக்கு துண்டு வைத்தியம் ( Towel Therapy ).
72. தாம்பத்தியம்-உயிரே என்னோடு கலந்துவிடு.
73 வாயை மூடி பேசவும் தியானம்.
74. நீங்களும் வாதாடலாம் - வாரண்ட் பாலா .
75. மன்பானை சமயல்.
76.Heart Mafia-English-Dr.Biswaroop Roy.
77. Heart Mafia-Hindi-Dr.Biswaroop Roy.
78.Why Mortility Rate Drops when doctors go on strike-English.
79.Nutrition Part-I-Advance Training.
80.Nutrition Part-I-Advance Training.

https://drive.google.com/drive/folders/15lJH9IMcMIHETb-20ROkXrb9GaJ6L0xN?usp=sharing

இந்த கட்டுரையை உங்களது நண்பர்களுக்கு தயவு செய்து பகிர்ந்து ஒருமுறையாவது முழுவதுமாக படிக்கச் சொல்லுங்கள்.

வாழ்க வளமுடன்.

இப்படிக்கு.
ஹீலர் பாஸ்கர்.

(9944221007 ) ( www.anatomicthetapy.org )( healerbaskar@gmail.com ) ( telegram : @iamhealerbaskar).

ஹீலர் பாஸ்கரின் அம்மி இயற்கை அங்காடி.
(9500655548 )( www.Aammii.com ).

இலவச வீடியோக்களில் பயனடைந்தோர், மனம் இருந்தால் நன்கொடை அளிக்கலாம்.ANATOMIC THERAPY FOUNDATION- ICICI bank CURRENT ACCOUNT - AC no : 034205007062 - R.S.PURAM branch. Coimbatore - IFSC : ICIC0000342.

Sunday 25 July 2021

மது அருந்துதல் குடிப்பழக்கம் சரி செய்ய மலர் மருத்துவம்

மது அருந்துதல் குடிப்பழக்கம் சரி செய்ய மலர் மருத்துவம் 

குடிப்பழக்கம் சம்பந்தப்பட்ட விஷயத்தில்....

மது குடிப்பவர் மனநிலை மிக முக்கியம்....

#Agrimony டைப் நபர்களாக இருப்பின்....தன் கவலையை மறக்க பொழுது போக்க குடிப்பார்.

#Aspen உள்ளூர ஒரு பயம் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் இருப்பதற்காக குடிப்பார்.

#Beech ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்கள் போன்றவற்றில் மட்டுமே மது அருந்தக் கூடியவர்கள்....மிக உயர்ந்த மதுவை அருந்துகிறேன் பேர்வழி என்று மதுவுக்கு அடிமையாக இருப்பதை ஒப்புக்கொள்ள மாட்டார்.

#Centaury குடிக்காவிட்டால் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை, கை கால்கள் நடுங்கும் என்று சொல்பவருக்கு.

#Cerato வாழ்க்கையின் பிரச்னைகளை  எப்படி தீர்ட்பதென்று புரியாமல் குழப்பங்கள் எற்பட்டு குடிப்பவருக்கு.

#Cherryplum டைப் நபர்கள், பிறர் குடிப்பதை பார்க்கும் போது, பிறர் குடிக்க தூண்டும் போதும்; தன் கோபத்தை கொட்டி தீர்க்க குடிப்பார்.

#Chestnutbud 
வாழ்க்கையில் பல்வேறு தவறுகளை செய்து, அதன் விளைவால் வரும் பிரச்சனை எண்ணி குடிப்பார்.
குடிக்க கூடாது என்று நினைபார், ஆனால் குடித்து விட்டு இப்படி குடித்து விட்டேனே என்று வருந்துவார்.

#Chicory தன் பணத்தில் குடிக்க மாட்டார். ஓசியில் கிடைத்தால் குடிப்பார். அல்லது தன் பணத்தை குறைவாக செலவு செய்து குடிக்க வாய்ப்பு கிடைத்தால் குடிப்பார். அல்லது யாரைவாது மது வாங்கி தரும்படி தொல்லை செய்வார்.
குடிப்பதற்காக பிச்சைக்கூட எடுப்பார்.

#Clematis தூக்கம் வரவில்லை என்பதற்காக குடிப்பவர்கள்.

#CrabApple அறுவருப்பை
சகித்துக் கொள்ள குடிப்பார்.
வைன் குடித்தால் முகம் அழகுப்பெறும். பீர் குடித்தால் முகம் வடிவாய் இருக்கும் என்று யாரோ சொல்லப்போய்
அதை நம்பி குடிக்கு அடிமையானவர்கள்.

#Elm வாழ்க்கை பிரச்சனைகள், தொழில் பிரச்னைகள், போட்டி, பொறாமை சமாளிக்க முடியாமல், குடியை நாடுபவர்கள்.

#Gentian வாழ்வின் தோல்வி துக்கம், துயரம், எல்லாம் மறக்க குடிப்பார்கள்....

#Gorce நம்பிக்கை துரோகத்தால், உற்றார் உறவினர் எமாற்றிவிட்டனர் என்ற நிலையில் குடிக்கு அடிமையானவர்கள்.

#Heather குடித்துவிட்டால், பிறரை பேசியே கொல்லும் நபர்கள்.

#Holly மனைவி மீது சந்தேகம்
மக்கள் மீது சந்தேகம், குரோதம் இதையெல்லாம் பிறர்மீது கொட்டி தீர்க்க குடிப்பவர்கள்.

#Honeysuckle காதல் தோல்வி தேவதாஸ் இவர்கள் தான். தன் பழைய கால வாழ்வில் உன்னத நிலையில் வீழ்ச்சியடைந்தவர்கள். பழைய புராணம் பாடிக்கொண்டு இருப்பவர்கள்.
 
#Hornbeam குடிப்பதால் தனக்கு ஏதோ மனோ பலம் வந்துவிட்டதாக நினைப்பவர்கள்.

#Impatience தான் நினைத்தது நினைத்த போது நடக்கவில்லையே என்ற வெறுப்பில் குடிப்பவர்கள். ஒரு போதை தெளிய தெளிய குடிப்பவர்கள் இவர்கள்.

#Larch தன் இயலாமை மறக்க குடிப்பவர்கள்.....குடித்தால் தன்னம்பிக்கை வருவதாக நினைப்பவர்கள்.

#Mimulus  தன் பயத்தை சமாளிப்பதற்கு குடிப்பவர்கள்.

#Mustard உற்றார் உறவினர்....அன்பும் பாசத்திற்கும் உரியவரின் பிரிவின் ஆற்றாமையால் குடிப்பவர்கள்.

#Oak குடித்துவிட்டு வாந்தி எடுப்பவர்களுக்கு.....அப்படியும் மீண்டும் மீண்டும் குடிப்பவர்கள்.

#Olive குடிப்பது உடல்வலிமை தரும் என்று நினைப்பவர்கள்.

#Pine தான் பாவங்கள் காரியங்களை செய்துவிட்டதாக நினைத்து வருந்தி குடிப்பவர்கள்.

#Redchestnut 
தன் சொந்த பந்தத்தில் யாருக்கேனும் உள்ள பிரச்சனையை வலி வேதனை தீர்க்க முடியவில்லையே நினைப்பில் குடிப்பவர்கள்.

#Rockrose எவ்வளவு குடித்தாலும் நிலை தடுமாறாமல் இருப்பதாக
நினைப்பவர்கள்.

#Scleranthus டைப் நபர்கள் நாளை முதல் குடிக்க மாட்டேன் என்பார், நாளை முதல் குடிக்கூடாது உறுதி ஏற்பார், ஆனால் மறுநாளும் அதே கதை தான்.

நன்றி ; மலர் மருத்துவம் பக்கம்.

குழந்தைகளுக்கான சித்தா தடுப்பூசி 🔱*

*குழந்தைகளுக்கான சித்தா தடுப்பூசி 🔱*
--------------------------------------------------------

*கட்டுரை வெளியிட்ட தேதி : 25.07.2021*

*வெளியிட்ட நேரம் : 9:15 Pm*

*பிறந்த குழந்தை முதல் 5 வயது குழந்தைகள் வரை கொரோனா தடுப்பு சித்த மருத்துவ முறைகள்*

*உங்கள் குழந்தைகளை கொரோனாவில் இருந்து காக்க போகும் ஐந்து மருந்துகள் இதோ*
 
*1 - உரை மாத்திரை 🌿* 

*2 - சண்முக சூரணம் மாத்திரை 🌿*

*3 - நெல்லிக்காய் இலேகியம் 🌿*

*4 - கடுக்காய் சூரண கசாயம் 🌿* 

*5 - உச்சி பொடி 🌿*

*இந்த ஐந்து மருந்துகளை ஒன்றாக பயன்படுத்தும் முறை*

*உரை மாத்திரை - தினம்*

*1 வது நாள் : சண்முகசூரணம் மாத்திரை* 

*2 வது நாள் : இடைவேளை* 

*3 வது நாள் : நெல்லிக்காய் இலேகியம்* 

*4 வது நாள் : இடைவேளை* 

*5 வது நாள் : கடுக்காய் சூரண கசாயம்*

*6 வது நாள் : இடைவேளை*

*7 வது நாள் : சண்முகசூரணம் மாத்திரை* 

*இப்படி சண்முகச்சூரண மாத்திரை, நெல்லிக்காய் இலேகியம், கடுக்காய் சூரண கசாயத்தை ஒரு நாள் விட்டு ஒரு நாள் என தொடரலாம், உரை மாத்திரை தினம் எடுக்க வேண்டும்* 

*உச்சி பொடி (வெளிமருந்து) - தலைக்கு குளித்த பின் உச்சந்தலையில் ஒரு சிட்டிகை பொடி லேசாக தேய்த்துவிட வேண்டும்*

*மருந்துகள் செய்முறை மற்றும் பயன்படுத்தும் முறை 💓* 
-----------------------------------------------------------

*உரை மருந்து 🔱* 
--------------------------------

*தேவையான பொருட்கள்*

*வசம்பு             - 10 கிராம்* 
*அதிமதுரம்     - 10 கிராம்*
*அக்ரகாரம்      - 10 கிராம்*
*மாசிக்காய்      - 10 கிராம்*
*சாதிக்காய்      - 10 கிராம்*
*பெருங்காயம்  - 10 கிராம்*
*சித்தரத்தை      - 10 கிராம்*
*வெள்ளைப் பூண்டு - 10 கிராம்*

*செய்முறை 🌿*
-----------------------------

*அனைத்தையும் சுத்தி செய்து பொடி செய்து கலந்தால் உரை மருந்து தயார்*

*பயன்படுத்தும் முறை 🌿*
-----------------------------------------------

*200 மிலி கிராம் அளவு, மாத்திரைகளாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்*

*பிறந்த குழந்தை முதல் 5 வயது குழந்தைகள் வரை தினம் எடுக்க வேண்டும்*

*200 mg உரை மாத்திரை பயன்படுத்தும் முறை*

*பிறந்த குழந்தை முதல் 3 மாத அளவு : 1 மாத்திரை*

*வேளை : 1 வேளை* 

*3 மாத குழந்தை முதல் 1 வயது அளவு : 2 மாத்திரை*

*வேளை : 1 வேளை* 

*1 வயது முதல் 3 வயது வரை : 2 மாத்திரை*

*வேளை : 2 வேளை* 

*3 முதல் 5 வயது வரை : 3 மாத்திரை* 

*வேளை : 2 வேளை* 

*அனுபானம் : தாய் பால்*

*தாய்ப்பால் குடிக்காத குழந்தைகளுக்கு மாத்திரையை பொடித்து தேனில் கலந்து கொடுக்கலாம், நாட்டு பசும் பாலில் கொடுக்கலாம், வெந்நீரில் கொடுக்கலாம்*

*சாப்பிட்ட பின் கொடுக்கவும்*

*உரைமாத்திரை கொரோனா வராமல் தடுக்கும் என்று ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளது*

*இதோ ஆய்வு முடிவுகள் link*

The Multi-faceted role of Urai Mathirai – The Immune pill of Siddha - This was published in the 'Asian Journal of Pharmaceutical and Clinical Research'. 

https://www.researchgate.net/publication/314238918_The_Multi-faceted_role_of_Urai_Mathirai_-_The_Immune_pill_of_Siddha

*தீரும் நோய்கள் 🌿*
-------------------------------------

*கொரோனா வராமல் தடுக்கிறது, பசியின்மை, மாந்தம், மலச்சிக்கல், தூக்கமின்மை, குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது*

*சண்முகச் சூரணம் 🔱*
-------------------------------------------

*தேவையான பொருட்கள்*

*நூல் ஆதாரம் : அகத்தியர் பரிபூரணம்*

*1 - சுக்கு*
*2 - மிளகு*
*3 - வால்மிளகு*
*4 - திப்பிலி*
*5 - ஆனை திப்பிலி*
*6 - சீரகம்*
*7 - கருஞ்சீரகம்*
*8 - நெல்லிமுள்ளி*
*9 - கடுக்காய்*
*10 - தான்றிக்காய்*
*11 - ஓமம்*
*12 - சுருள்பட்டை*
*13 - கிராம்பு*
*14 - கோஸ்டம்*
*15 - கோரைக்கிழங்கு*
*16 - பற்படாகம்*
*17 - தாளிசபத்திரி*
*18 - அகில் பட்டை*
*19 - அமுக்ரா*
*20 - சித்தரத்தை*
*21 - அதிமதுரம்*
*22 - ஏலரிசி*
*23 - கருங்காலி தூள்*
*24 - மஞ்சள்*
*25 - கஸ்தூரி மஞ்சள்*
*26 - தனியா*
*27 - சிறுநாகப்பூ*

*மேற்கண்ட சரக்குகள் அனைத்தும் 1பலம்(35கிராம்)*

*28 - தூதுவேளை*
*29 - ஆடாதொடை*
*30 - கருந்துளசி*
*31 - விஷ்ணுகிராந்தி*
*32 - ஓரிதழ் தாமரை*
*33 - நிலவேம்பு*
*34 - கரிசாலை*
*35 - கீழாநெல்லி*

*மேற்கண்ட மூலிகைகள் அனைத்தும் 70 கிராம்*

*செய்முறை 🌿*
-----------------------------

*அனைத்தையும் பொடிசெய்து கொள்ளவும், மொத்தம் 1 கிலோ சூரணம் வருகிறது என்றால் ஒரு லிட்டரிற்கு சற்று அதிகமாக நாட்டு பசும்பால் எடுத்துக்கொள்ளவும்*

*ஒரு இட்லி பாத்திரத்தில் நாட்டு பசும் பால் ஊற்றி இட்லி தட்டு வைத்து அதில் துணி விரித்து இந்த சூரணத்தை வைத்துத்து மூடி*

*அந்த ஒரு லிட்டர் பால் முழுவதும் சுண்டிய பின்னர் சூரணம் தயார் என்று அர்த்தம்*

*பின்னர் இந்த சண்முக சூரணத்தை சேகரித்து வைக்கவும்*

*இதை பாலில் பிட்டு அவியல் இடுதல், பாலேற்றம் செய்தல் என சொல்வார்கள். இதன் பலன்கள் பிட்டு அவியல் செய்தால் சூரணத்தின் ஆயுட்காலம் 1 வருடம், செய்யாவிட்டால் 6 மாதம், மேலும் பிட்டு அவியல் செய்தால் சுரணத்தின் சக்தி அதிகரிக்கிறது, இதில் உள்ள குற்றங்கள் நீங்குகிறது*

*பயன்படுத்தும் முறை 🌿*
------------------------------------------------

*இம்மருந்தை 1 வயது முதல் தரலாம்* 

*மாத்திரை அளவு : 200 மிலி கிராம்*

*1 வயதிற்கு மேல் 3 வயது அளவு : 1 மாத்திரை*

*வேளை : 1 வேளை சாப்பிட்ட பின்*

*3 வயதிற்கு மேல் 5 வயது அளவு : 1 மாத்திரை*

*வேளை : 2 வேளை சாப்பிட்ட பின்*

*தடுப்பு மருந்தாக செயல்பட* 

*அனுபானம் : தாய்ப்பால், நாட்டுப்பசும்பால், பச்சை தண்ணீர்*

*சாப்பிட்ட பின்*

*காய்ச்சலை சரி செய்ய* 

*அனுபானம் : தாய்ப்பால், தேன், வெந்நீர்*

*சாப்பிட்ட பின்*

*தீரும் நோய்கள் 🌿*
-------------------------------------

*அனைத்து கொரோனா symptoms, கபம் தொடர்பான அனைத்து பிரச்சனைகள், தொற்று காய்ச்சல், கொரோனா*

*நெல்லிக்காய் இலேகியம் 🔱*
---------------------------------------------------------

*தேவையான பொருட்கள்*

*நெல்லி வற்றல்                 - 3500 கிராம்*
*சுக்கு                                    - 35 கிராம்* 
*ஓமம்                                    - 35 கிராம்*
*திப்பிலி                               - 35 கிராம்*
*கிராம்பு                                - 35 கிராம்*
*தக்கோலம்                          - 35 கிராம்*
*ஏலம்                                      - 35 கிராம்*
*வெண்குங்கிலியம்            - 35 கிராம்*
*பூனைக்கண் குங்கிலியம் - 35 கிராம்*
*வாய்விடங்கம்                      - 35 கிராம்*
*சீரகம்                                     - 35 கிராம்*
*கொத்தமல்லி                       - 35 கிராம்*
*அதிமதுரம்                             - 35 கிராம்*
*கூகைநீரு                               - 35 கிராம்*  
*பனங்கற்கண்டு                    - 350 கிராம்*
*நெய்                                        - 1400 மி.லிட்டர்*

*செய்முறை 🌿*
-----------------------------

*அனைத்தையும் பொடி செய்து நெய்யில் சிறுதீயில் கிளரவும், இலேகிய பதம் வந்ததும் அடுப்பை அனைத்து ஆற வைத்து கண்ணாடி பாட்டலில் சேகரிக்கலாம்* 

*பயன்படுத்தும் முறை 🌿*
------------------------------------------------

*இம்மருந்தை 2 வயது முதல் தரலாம்* 

*அனுபானம் : நாட்டு பசும்பால், வெந்நீர், தேன்*

*2 வயது - 0.5 கிராம்* 

*3 வயது - 1 கிராம்*

*4 வயது - 2 கிராம்* 

*5 வயது - 3 கிராம்*

*வேளை : 1 வேளை சா.பின்*

*அப்படியே சாப்பிடும் குழந்தைகளுக்கு அப்படியே கொடுக்கலாம்* 

*அப்படியே சாப்பிடாத குழந்தைகளுக்கு நாட்டுப்பசும் பாலில் கலந்து கொடுக்கலாம்* 

*மேலும் வெந்நீரில் அல்லது தேனிலும் கலந்து கொடுக்கலாம்*

*தீரும் நோய்கள் 🌿*
-------------------------------------

*நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், மேகம், கிராணி, அஸ்திசுரம், பொருமல், காந்தல், இருமல், கபம், ஈளை, சிலேற்பனம்*

*கடுக்காய் சூரணம் 🔱*
--------------------------------------------

*தேவையான பொருட்கள்*

*கடுக்காய் பொடி          - 20 கிராம்*
*நிலாவாரை சூரணம்  - 20 கிராம்* 
*திப்பிலி பொடி              - 5 கிராம்* 

*செய்முறை 🌿* 
-----------------------------

*மூன்று பொடிகளையும் கலந்து சேகரிக்கவும்*

*பயன்படுத்தும் முறை 🌿*
------------------------------------------------

*5 கிராம் கடுக்காய் சூரண பொடியை 200 ml தண்ணீரில் கொதிக்க வைத்து 100 மிலி ஆன பின் பருத்தி துணியில் வடித்து ஆற வைத்து தரலாம்**

*இம்மருந்தை 6 மாதம் முதலே தரலாம்*

*6 மாதம் முதல் 1 வயது வரை - 5 மில்லி*

*1 வயதிற்கு மேல் 2 வயது வரை - 10 மில்லி*

*2 வயதிற்கு மேல் 5 வயது வரை - 15 மில்லி*

*கொரோனா Symptoms உள்ள பெரியவர்கள் இதே மருந்து 100 ml வரை எடுக்கலாம்* 

*தீரும் நோய்கள் 🌿*
-------------------------------------

*ஆக்சிஜன் பற்றாக்குறை, மூச்சு திணறல், கோழை, தொண்டை கரகரப்பு, மார்பு சளி, தீராத இருமல்*

*உச்சி பொடி 🔱*
-----------------------------

*நாட்டு மருந்து கடைகளில் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்*

*பயன்படுத்தும் முறை 🌿*
-------------------------------------------------

*6 மாத குழந்தைகள் முதல் தினம் பயன்படுத்தலாம்*

*தலைக்கு குளித்த பின் 1 சிட்டிகை உச்சந்தலையில் லேசாக தேய்த்துவிடலாம்*

*பிறந்த குழந்தை முதல் 6 மாத குழந்தை வரை தலைக்கு குளித்த பின் கற்பூரவள்ளி இலை சாறு மட்டும் ஒரு துளி உச்சியில் வைத்து விடலாம்*

*தீரும் நோய்கள் 🌿*
--------------------------------------

*சளி பிடிக்காது, வீசிங், மூச்சுத்தினறல், ஆஸ்துமா வராமல் தடுக்கும் (உடலில் சளி தங்காது)* 

*குறிப்பு : இந்த அளவுகள் மற்றும் மருந்து எடுக்கும் முறைகள் தடுப்பு மருந்தாக எடுப்பதற்கு மட்டுமே, பிரச்சனைகள் உள்ள குழந்தைகளுக்கு சித்த மருத்துவரை ஆலோசித்து அவர்கள் கூறும் அளவுகளை தரலாம்*

*சித்தா தடுப்பு மருந்துகளை உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்திடுங்கள் 🌿*

*அனைத்து வகை கொரோனாவில் இருந்து குழந்தைகளை காத்திடுங்கள் 💓*

*நன்றி*

*இரா.மதிவாணன்*

🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥
🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹

Wednesday 14 July 2021

சர்க்கரை நோயினால் வந்த புண்கள் மற்றும் ஆறாத புண்களை குணமாக்கும் சித்த மருந்துகள்.

ஆறாத புண்களுக்கு
திரு வோட்டு எண்ணெய்

சர்க்கரை நோயினாலோ வெரி கோஸ் வெயின் என்ற நோயினாலோ , காலில் ரத்த ஓட்டத்தில் ஏற்பட்ட தடைகளினாலோ புண்கள் ஏற்பட்டால் விரைவில் ஆறாது
எந்த வகையான புண்களையும் தேங்காய் ஓட்டை மூலப்பொருளாகக் கொண்டு தயார் செய்யப்படும் எண்னெய் குணப்படுத்தும். 

தேவைப்படும் பொருட்கள்
ஆடு தின்னாப் பாளை சாறு 500 ML
நார் நீக்கி சுத்தம் செய்யப்பட்ட தேங்காய் ஓட்டு துண்டுகள் 300 கிராம்
மஞ்சள் தூள் 50 கிராம்
பச்சை கற்பூரம் 30 கிராம்
சுத்தமான தேங்காய் எண்ணெய் 600 ML

ஒரு பாத்திரத்தில் ஆடு தின்னா பாளை சாறு
தேங்காய் ஓட்டு துண்டுகள்  மஞ்சள் தூள்   தேங்காய் எண்ணெய் இவைகளைப் போட்டு அடுப்பேற்றி சிறு தீயாக எரித்து வரவும் சாறு சுண்டி மணல் பதம் வந்ததும் இன்னொரு பாத்திரத்தில் பச்சைக் கற்பூரத்தை பொடித்துப் போட்டு அதில் எண்ணெயை வடிக்கவும்  சூடு ஆறின பின் பத்திரப்படுத்தவும்
இது மருத்துவர்களுக்கான செய்முறை.
பொதுமக்களுக்கு ஆடு தின்னாப் பாளை சாறு கிடைக்காது  அதனால் சாறு இல்லாமலும் தயார் செய்யலாம்
ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி அதில் தேங்காய் ஓட்டு துண்டுகள்  மஞ்சத்தூள் இவைப் போட்டு 24 மணி நேரம் ஊற வைக்கவும் பின்பு அதனை அடுப்பேற்றி சிறு தீயாக எரித்து எண்ணெய் புகை வர ஆரம்பித்ததும் இன்னொரு பாத்திரத்தில் பச்சைக் கற்பூரத்தை பொடித்துப் போட்டு துணியால் வேடு கட்டி எண்ணெயை வடிகட்டவும்
எண்ணெய் ஆறின பின்பு பத்திரப் படுத்தவும்.
புண்களை கழுவும் முறை
புளியன் இலைகசாயத்தினாலோ  வேப்பன் இலைகசாயத்தினாலோ அல்லது படிகாரம் கரைத்த வெதுவெதுப்பான நீரிலோ புண்களை கழுவ வேண்டும்
அதன் பின் ஈரமில்லாமல் துடைத்து மேலே செய்த எண்ணெயை காலை மாலை தடவி வர வேண்டும்'
இந்த எண்ணெய் எல்லா வகை புண்களையும் ஆற்றி குணப்படுத்தும்  குழிப் புண்கள் ஆற சற்று தாமதமாகும்  ஆனால் கண்டிப்பாக குணமாகும்
இதனை தோல் நோய்களுக்கும் வெளிப்பூச்சாகபூசி வர நல்ல குணம் கிடைக்கும்

ரத்த ஓட்டத்தில் ஏற்படும் தடைகளினாலேயே கால்கள் கறுப் படித்து புண்கள் ஏற்பட்டால் குணமாவது நீண்ட நாட்களாகும்
ரத்த ஓட்டத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்க  தேங்காய் ஒட்டு கசாயம் நன்கு பலன் தரும் தொடர்ந்து கசாயத்தை சாப்பிட்டு வர தடைகள் கரைந்து குணமாகும்
ரத்த ஓட்டம் சீரானால் கால்கள் இயல்பான நிறத்திற்கு மாறும்

தகவல் தொடர்புக்கு
KKE அக்பர்ஜி
ஜீவசக்தி ஹெர்பல் கிளினிக்
145 மாணிக்கவாசகர் காலணி
ஈரோடு 2

Sunday 11 July 2021

கைபேசியில் அழிந்து போன போட்டோவை மீண்டும் எடுக்க சிறந்த app (recovery app)

ஒரே ஒரு ஆப்பு 👇👇 ( App) தான் பழைய போட்டோ files எல்லாமே
ரெக்கவரி ஆகி இருக்கு...கைப் பேசிய விக்கிறவங்களும் , போன பார்மேட் பன்னா இல்ல போன அழிச்சிட்டா கூட உங்கள் குப்பைகள் ( Digital Datas)  உங்களுடனேயே(gmails ல்) பயணிக்கும், மறந்துவிட வேண்டாம். 

நன்றி ; பொழிலன்.

Sunday 20 June 2021

வெற்றிலை மருத்துவ பயன்கள்

வெற்றிலை மருத்துவ பயன்கள்..

Eugenol கெட்டசாதி வெஷம்... முழுங்குனோம்னா ... பாத்துக்கங்க ... lever ஐ damage பண்ணி உட்டுடும்.

oxalic acid கெட்டபய அமிலமுங்க ... acetic acid விட strong. உள்ளே முழுங்குனோம்னா வச்சிக்குங்க ... வயித்தையே பொத்தல் போட்டு உட்டுடும்....

 Xtracal ங்கறது ஒரு calcium, vitamin D , Magnesium எல்லாம் சேர்ந்த கலவை..

இதையெல்லாம் முழுங்கினா ... பரலோகத்துக்கு பாஸ்போர்ட் எடுத்ததா அர்த்தம்.. போயே சேர்ந்துடுவோம் ...

 ஆனாலும் என்ன ... முழுங்கறோமே ... தனியா பொட்டி ஒன்னு வச்சிக்கிட்டு ... அதுக்குள்ள இதை போட்டுக்கிட்டு... எங்க போறோமோ ... அங்கெல்லாம் இதையும் தூக்கிகிட்டு ... திவ்யமா முழுங்கறோமே ...

நாம பரவாயில்ல ... அந்த கால ராஜாவெல்லாம் ... இந்த மாதிரி ஒரு பொட்டிய set பண்ணிகிட்டு ... பொட்டிக்குள்ள இருக்கறதை ... எடுத்துக் குடுக்கறத்துக்குனே ... அமைச்சர் அந்தஸ்துல இருக்கற ஒருத்தற ... கூடவே எப்போதும் வச்சிருப்பாராம்...  இவரோட designation 'அடப்பகாரர்'.

நம்ம மதுரை நாயக்கரு ... ஆரம்பத்துல கிருஷ்ணதேவராயருகிட்ட ... முதன்முதலா ... அடப்பக்காரராதான் appoint ஆனாராம்...

சரி இப்ப என்னத்த இப்பிடி வளைச்சி வளைச்சி சொல்லிக்கிட்டு இருக்கேன்? ...

வெத்தலை ...

 வெத்தலையத்தான் சொல்லிக்கிட்டு இருக்கேன்.

தனி வெத்தலைக்குதான் ... இந்த கொடுமையா கொணமெல்லாம் ... பாக்கு, சுண்ணாம்பு சேத்துப்புட்டா ஜபர்தஸ்த்தா ஆயிடும்.

வேற சிலதை சேர்த்தா மருந்தா மாறிடும்...

எதிரி வீட்டுல போயி சாப்புட போனா ... ரெண்டு வெத்தலையும் எட்டு மிளகும் ... சாப்டோடனே தின்னம்னா ... நம்மாளு ... எதிரி sir ... சோத்துல வெஷம் வச்சிருந்தா கூட ... முறிச்சி உட்டுடும் ... ஒன்னும் பன்னாது.

இதை எப்பிடியெல்லாம் கூப்புடுவாங்கங்கறத்துக்கு ஒரு பட்டியலே இருக்கு ...தாம்பூலம், தாம்பூலவள்ளி, திரையல், நாகவல்லி, மெல்லிலை, வெள்ளிலை, மெல்லடகு ... இப்பிடி பல பேரு

இந்த piper betle இருக்கே ... அதாங்க அந்த வெத்தலை . அதை அந்தகாலத்துல பாகவதர்ல யாருமே ...  'தரிக்காதவங்க' இல்லை. எல்லோருமே .. வாயில போட்டு கொதப்பிக்கிட்டு வர பயபுள்ளைங்கதான்... ஏன்னா ... குரல்வளம் நல்லா வரும்... அதனால...

வெளியே வேலைக்கு  போயிட்டு வர ஆம்பளைங்களுக்கு ... அந்த காலத்துல பொழுது போக்கு ... (சரி அப்ப என்ன டிவி, செல்போன் இருந்திச்சா என்ன?) ... பொழுது போகாம .. கைய கால ... நீட்டிவுட்டு (!!!) ...  ஏற்கனவே நாலு பெத்தாச்சி ... ஏன் தொல்லைனு நெனைச்சா ... வெத்தலை வேரோட கூட மிளகு 50:50 விகிதாச்சாரத்துல அரைச்சி 40 நாளைக்கு பொம்பளைங்க சாப்டாங்கன்னா... ஆம்பளை எதுவோ பண்ணிட்டு போவட்டும்னு உட்டுடலாம்... எளிய கருத்தடை மருந்து...

ரெண்டு வெத்தலையோட 20 மிளகை சேத்துக்கிட்டு ... நற, நற'னு மென்னு தின்னுபுட்டுமுன்னா ... பாம்பு கடிச்ச வெஷம் போயே போயிடும் ... அத்தோட கொஞ்சம் தேங்காய் பத்தைய தின்னுட்டோமுன்னா தேளு கடி வெஷம் முறிஞ்சிடும்.

வெற்றிலை இல்லாத .. எந்த தமிழர் வீட்டு கடவுள் வழிபாடு இல்லவே இல்லை... இதை ரங்கநாதன் பேரை தனக்கு வச்சிக்கிட்டு ... ரங்கநாதசாமியை ஒதுக்குபவர்கள் கூட ஒத்துக் கொள்வார்கள்.

கொழந்தேயளுக்கு சளி புடிச்சா உடவே மாட்டேங்குதா? வெத்தலை ... இலைய மட்டும் கசக்கி உட்டு வர சாறை ... தேன் கலந்து கொடுத்தா சரியா போயிடும்.

பெரியவங்களுக்கு தீராத சளியா? ... கூட காய்ச்சலும் சேந்துகிச்சா ... அதுக்கும் வெத்தலைத்தான் .. 
2 வெத்தலை, 5 துளசி, 3 தூதுவேளை, 1 ஸ்பூன் தேன், கொஞ்சம் மிளகு, சீரகம், 1 துண்டு சுக்கு... அதிமதுரம், சித்தரத்தை ... 2 ஸ்பூன் பனங்கற்கண்டு .. 2 டம்ளர் தண்ணி ஊத்தி அது அரை டமளர் அளவுக்கு சுண்டி கொறைஞ்ச பிறகு ... இறக்கி ஆற வச்சி ... வெறும் வயித்துல ... காலை மாலை குடிச்சு வந்தோமுன்னா ... பெரியவங்களுக்கு சளி போயிடும் ... திரும்ப வந்து தொந்தரவு குடுக்காது ... எது? சளிதான்.
 
தலைல தண்ணி கோத்துக்கிட்டு ... கார்ப்பொரேஷன் பைப்பு மாதிரி மூக்கு ஒழுகிகிட்டே கெடக்குதா? வெத்தலைய சாறு புழிஞ்சி மூக்கில ஊத்துங்க ... சரியாபூடும்.

கட்டி வந்து நாளாயிடுத்து ... ஒடைய மாட்டேங்குது ... வலிச்சி தொலைக்குதா? வெத்தலையில ஆமணக்கு எண்ணெய வச்சி தடவி உட்டுட்டு ... லேசா தனலுல வாட்டி ... அந்த சூட்டோடவே ... கட்டி மேல வச்சி நல்ல துணிய வச்சி கட்டி வச்சிப்புட்டா ... பெறவு கட்டி ஒடைஞ்ச பின்ன அவுத்துடலாம் ... ரெண்டு நாளுல சரியாபூடும்.. 

diabetics இருக்கா ... இரண்டு வெத்தலை ... ஒரு புடிச்சபுடி வேப்பிலை ... ஒரு புடிச்சபுடி அளவு அருகம்புல் ... அரை லிட்டரு தண்ணி உட்டு ... அது கால் லிட்டர் மூலிகைத் தண்ணியா ஆக்கிப்புட்டு ... தெனம் மூனு வேளை சோத்துக்கு முன்னாடி குடிச்சிக்கிட்டு வந்தோமுன்னா ... மதுமேகம் சரியாயிடும்..

ensemble போயி பாட்டுபாடி கலக்குனுமா? சுக்கு, மிளகு, திப்பிலி ... (இதுக்கு பேருதான் திரிகடுகம்) சம அளவு கலந்துகிட்டு ... இத்தோட வெத்தலை சாறு, தேன் கலந்து தினமும் காலேல சாப்பிட்டு வந்தோமுன்னா ... குரல் வளம் நல்லா வரும்... என்னா அர்த்தம் ... குரல் நாளங்களில் இருக்குற சளியை ... தொடைச்சி வெளியே தள்ளிடும் ... பாடும்போது குரல் பிசிறில்லாம பாடலாம்...

வெத்தலைய பாத்து பாத்துதான் ... நம்ம வூட்டு பக்கம் வர ஜக்கம்மா குறி சொல்லும்...

வெத்தலையில கருப்பு மைய தேச்சு உட்டுதான் ... நம்மூரு மஸ்தான் ... காணாப்போன பொருளை கண்டுபிடிச்சித் தரேன்னுட்டு ... காசு புடிங்கிப்பார் ... காக்கா ஒக்காற பனம்பழம் உழுந்தாலும்  ... உழும்!

வயாகரா இல்லாம வசீகரா ஆகணுமா ? நெதமும் மதிய சாப்பாட்டோட ... நாக்கு செவக்க வச்சிகிடுங்க!!!
-------------------------
நூல் ; செப்படுவித்தை..