Thursday 27 December 2018

இயற்கை சார்ந்த உடற்பயிற்சி முறைகள் - யோகா பற்றிய வரலாறு.

இயற்கை சார்ந்த உடற்பயிற்சி முறைகள் - யோகா பற்றிய வரலாறு.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, இன்றும் சூட்சமமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்ச்சித்தர்கள் தம்மை சுற்றி நடக்கும் இயற்கை நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்கின்றனர்.
ஒவ்வொரு விலங்குகளும், பறவைகளும் மற்றும் பிற உயிரினங்களும் தங்களுக்கே உரிய இருக்கை நிலைகளை ( Resting Position / Posture ) கொண்டு இயங்குவதை காண்கின்றனர்.
இவ்வாறு பல இருக்கை நிலைகளை கவனித்து பட்டியலிடுகின்றனர்.பிறகு இந்த இருக்கை நிலைகள் ஒவ்வொன்றிலும் தங்கள் உடலை அமைத்து பார்க்கின்றனர்.நாளடைவில் உடல் நலம் நன்கு மேம்படுகின்றது.இதனையே இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகளாக வடிவமைக்கின்றனர்.இவையே பிற்காலங்களில் யோகாசனங்கள் மற்றும் பிரணாயாமங்கள் எனப்படுகின்றன.
இந்த வகையில் மயிலை அடிப்படையாக கொண்டு அமையும் ஆசனம் மயூராசனம் ஆகும்.வடமொழியில் மயூரா என்றால் மயில் ஆகும்.இதை போன்றே பிற உயிரினங்களை அடிப்படையாக கொண்ட ஆசனங்களின் பட்டியலை கீழே காணலாம்.
ஒவ்வொரு ஆசனத்தின் அருகிலும் அதற்கு அடிப்படையான வடமொழி சொல்லும், அதன் தமிழ் பொருளும் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
மகராசனம் (மகரம்–முதலை),
சலபாசனம் (சலபம் – வெட்டுக்கிளி),
சசாங்காசனம் ( சசாங்கம் – முயல் ),
மச்சாசனம் ( மச்சம் – மீன் ),
கூர்மாசனம் ( கூர்மம் – ஆமை ),
புஜங்காசனம் ( புஜங்கம் – பாம்பு ),
பாகாசனம் ( பாக – கொக்கு ),
பேகாசனம் ( பேக – தவளை ),
குக்கூட்டாசனம் ( குக்கூடம் – சேவல் ),
சிம்மாசனம் ( சிம்மம் – சிங்கம் )
உஷ்ட்ராசனம் ( உஷ்ட்ரா – ஒட்டகம் ),
கபோடாசனம் ( கபோடா- புறா )
இதைப் போன்று மரம் மற்றும் மலர்களை அடிப்படையாக கொண்ட ஆசனங்கள் :
பத்மாசனம் ( பத்மா – தாமரை மலர் ),
விருட்சாசனம் ( விருட்சம் - மரம் )
பிறகு அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களை அடிப்படையாகக் கொண்டும் ஆசனங்களை வடிவமைக்கின்றனர்.அவற்றுள் சில பின்வருமாறு,
நாவாசனம் ( நாவா – படகு ),
தனுராசனம் ( தனுரா-வில் ),
ஹலாசனம் ( ஹலா- கலப்பை ),
துலாசனம் ( துலா – தராசு )
சக்கராசனம் ( சக்கரா- சக்கரம் ),
தண்டாசனம் ( தண்டா – கம்பு,தடி )
இதே போன்று சில உயிரினங்களை அடிப்படையாக கொண்டு, மூச்சு பயிற்சிமுறைகளையும் வடிவமைக்கின்றனர்.இவ்வாறாக முற்றிலும் இயற்கை சார்ந்த உடற்பயிற்சி முறைகளை தமிழ் மொழியில் தொல் தமிழர்கள் வடிவமைத்தனர். இதனை நீண்ட உடல் நலத்திற்காகவும்,உடலில் ஏற்படும் நோய்களை தீர்க்கும் பொருட்டும் அன்றாடம் பயிற்சி செய்து வந்துள்ளனர்.
இப்பழக்கம் பின்னர் சில ஆயிரம் ஆண்டுகள் வரை கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது.அதன் பிறகு காலப்போக்கில் கடல்கோள்கள் போன்ற இயற்கை சீற்றங்களாலும்,ஆட்சி மாற்றங்களாலும் இந்த வழக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகின்றது.
பின்னர் ஒரு காலகட்டத்தில் சமஸ்கிருத மொழி செல்வாக்கு பெற்றிருந்த வேளையில் ( இன்றைக்கு ஆங்கிலம் செல்வாக்கு பெற்றிருப்பதை போல ) இந்த இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகள் சமஸ்கிருத மொழியில் அதிகமாக பதிவு செய்யப்படுகின்றன.இவ்வாறு சமஸ்கிருத மொழியில்இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் என பெயர் பெறுகின்றன.
இனி இந்த யோகாசனங்கள் வரலாற்றில் எவ்வாறெல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளன என காணலாம்.
தமிழ்நாட்டில் அகத்தியர்,திருமூலர்,பதஞ்சலி உள்ளிட்ட பதினெட்டு சித்தர்கள் வாழ்ந்துள்ளனர்.இவர்கள் எழுதிய நூல்களில் யோகாசனங்களை பற்றிய செய்திகளை காணலாம்.
இதில் பதஞ்சலி முனிவர் வடநாட்டுக்கு சென்று யோக சூத்திரம் என்ற நூலை எழுதுகின்றார்.இது எட்டு உறுப்புகளை கொண்டதால் அஷ்டாங்க யோகா என அழைக்கப்படுகின்றது.
பிறகு 15 ஆம் நூற்றாண்டில், யோகி ஸ்வாத்மராமா என்பவர் ஹத யோகா பற்றிய நூலை எழுதுகின்றார்.
19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சுவாமி விவேகானந்தர் மேற்கு நாடுகளில் ராஜ யோகம் பற்றி விளக்குகின்றார்.
இதனைத் தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில் அரவிந்தர், சுவாமி சிவானந்தர் போன்றோர் ஆன்மீக ரீதியிலான யோகாவை பரப்புகின்றனர்.
1920 களில் மைசூர் மாகாணத்தை சேர்ந்த திருமலை கிருஷ்ணமாச்சார்யா எனும் யோக நிபுணர் ஆரோக்கிய ரீதியிலான யோகாவை வடிவமைக்கின்றார்.பல்வேறு நோய்களுக்கும் இயற்கை உணவு +மருந்து + யோகாசனங்கள் அமைந்த சிகிச்சை திட்டங்களை தீட்டி நோய்களை குணப்படுத்துகின்றார்.இம்முறை பின்னர் பல்வேறு யோக ஆசிரியர்களாலும் கடைபிடிக்கப்படுகின்றது.
1980 களில் டீன் ஆர்னிஷ் ( Dean Ornish ) எனும் அமெரிக்க மருத்துவ நிபுணர், யோகாவின் மூலம் இருதய நோய்கள் குணமடைவதை மருத்துவ ஆய்வுகள் மூலம் நிரூபிக்கின்றார்.சுவாமி சச்சிதானந்தாவிடமிருந்து இவர் யோகாவை கற்றவராவார்.
இதன் பிறகு மேற்கு நாடுகளில் யோகாவை பற்றிய விழிப்புணர்வு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இன்றைய நிலையில் தமிழ் வழி யோகா என்பது இல்லை.நாம் இன்று பெறக்கிடைப்பது வட நாட்டு யோகா ஆகும்.வருங்கால ஆராய்ச்சிகள் முற்றிலும் இயற்கை சார்ந்த, அனைவருக்கும் பொதுவான தமிழ் வழி யோகாவை உருவாக்கும் என நம்புவோமாக.
யோகா செயல்படும் விதம் :
யோகா பயிற்சிகளின் போது தொடர்புடைய பகுதிகளில் இரத்த ஒட்டம் அதிகரிக்கின்றது.இதனால் ஊட்டச்சத்துக்களும்,ஆக்ஸிஜனும் தேவையான அளவு செல்களுக்கு கிடைப்பதால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கின்றது.இதனால் உள்ளுறுப்புகள் நன்கு இயங்குகின்றன.
பொதுவாக உடல் முழுமைக்குமான யோகா பயிற்சிகளை செய்யும் போது, இரத்த ஒட்டம் நன்கு உறுதி செய்யப்பட்டு உடலின் ஆரோக்கியம் தொடர்ந்து அதிகரிக்கின்றது.
உடல் முழுவதும் பரவியுள்ள நரம்பு மண்டலமும் சீரான நிலையில் வைக்கப்படுகின்றது.
நம் சுவாசத்திற்கும், எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.கோபம், கண்ணீர்,அதிக சந்தோஷம் போன்ற உணர்ச்சி வசப்பட்ட தருணங்களில் நாம் வேகமாக மூச்சு விடுவோம்.அதாவது அந்த நிலையில் நம் மனதின் எண்ண ஒட்டங்கள் அதிகமாக இருக்கும்.
மாறாக அமைதியான தருணங்களில் ஆழ்ந்து மூச்சு விடுவோம்.அதாவது தெளிவான எண்ண நிலையில் இருப்போம்.
இந்த அடிப்படையில் மூச்சு பயிற்சி, நம் சுவாசத்தை ஆழப்படுத்தி அமைதியான எண்ணங்களை நிலை கொள்ளச் செய்யும்.இது உளவியல் ரீதியாக மிகுந்த பலனை நமக்கு தரும்.
யோகா பற்றிய குறிப்புகள் :
• யோகாசனங்கள் எப்பொழுதும் இருபக்க சமச்சீரானவை.முதலில் இடது பக்கம் செய்யப்படும் அசைவுகள்,அடுத்ததாக வலது பக்கமும் அதே அளவு செய்யப்படும்.இந்த அடிப்படையில் பார்க்கும்போது இரண்டு கைகளையும் சமமாக பயன்படுத்தும் பழக்கம் தொல் தமிழர்கள் வாழ்வில் இருந்திருக்க வேண்டும்.இது மூளையின் செயல்திறனை அதிகரிக்கும்.
• ஒவ்வொரு ஆசனத்திலும், ஆரம்ப நிலையில் தொடங்கி ஒவ்வொரு நிலையாக கடந்து இறுதி நிலையை அடைய வேண்டும்.பிறகு அதே படிவரிசையில் ஆரம்ப நிலையை அடைய வேண்டும்.அதாவது 1-2-3-4-5 என்றவாறு ஆசனத்தின் இறுதி நிலையை அடைந்தபின் 5-4-3-2-1 என்றவாறு ஆரம்ப நிலைக்கு திரும்ப வேண்டும்.இதுவே உடலின் பாதுகாப்பை உறுதி செய்யும்.மீறினால் சுளுக்கு,தசைபிடிப்பு ஏற்படலாம்.
• ""''ஸ்திரம் சுகம் ஆசனம்" என்ற அடிப்படையில் பயிற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.முதலில் உடல் ஆடாமல் நிலையாக இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.பிறகு வலியில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.பிறகு இறுதி நிலையை முயற்சிக்க வேண்டும்.இதற்கு உரிய நாட்களை எடுத்து கொள்ளவேண்டும்.சில ஆசனங்களை செய்வதற்கு பல மாதங்கள் கூட ஆகலாம்.மாறாக அவசரப்பட்டால் தவறு நேரலாம்.
• கீழ்நோக்கிய அசைவுகள் மூச்சு விட்டுக் கொண்டே செய்யப்படும்.மேல்நோக்கிய அசைவுகள் மூச்சை இழுத்துக் கொண்டே செய்யப்படும்.இந்த வகையில் யோகப்பயிற்சிகள் புவியீர்ப்பு விசையை கருத்தில் கொண்டவை.
யோகாவின் இன்றைய அவசியங்கள் :
இன்றைய நிலையில் நமது வாழ்வில், உடலுழைப்பு குறைந்து பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றோம். இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள், சிறுநீரக கோளாறு, அல்சர், முதுகு வலி, இடுப்பு வலி, மூட்டு வலி என பல்வேறு நோய்களை சந்தித்து வருகின்றோம்.
பொருளாதார நெருக்கடி, அவசரம் , பதற்றம் காரணமாக பல்வேறு மன அழுத்தங்களுக்கு ஆளாகி வருகின்றோம். இதனால் நம்முடைய மன நலமும் குறைகின்றது.இதனால் சமூகத்தில் உளவியல் பிரச்சனைகள் அதிகரிக்கின்றன.
இவற்றுக்கெல்லாம் தீர்வாக நம் முன்னோர்கள் வழியில், நாமும் யோகாவை தினசரி வாழ்வின் அங்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
தினசரி அரைமணி நேரமாவது யோக பயிற்சிகளை செய்யலாம்.இயலாதவர்கள் வாரத்திற்கு மூன்று முறையாவது செய்ய முயற்சிக்கலாம்.
இதன் மூலம் உங்கள் உடல் நலமும்,மனநலமும் மேம்படுவது உறுதி.நீண்ட காலம் தொடர்ந்து செய்தால் நோய்கள் குறைந்து ஆரோக்கியமாக வாழலாம்.இது சமூகத்தில் இணக்கத்தை ஏற்படுத்தி அமைதிக்கு வழி வகுக்கும்.குடும்பத்தில் ஒருவர் யோக பயிற்சிகள் செய்யும்போது, இந்த பழக்கம் குழந்தைகள்,இளைஞர்களிடமும் பரவும்.
எல்லோரும் இன்புற்று வாழலாம்.🌷
No automatic alt text available.

பேய்மிரட்டி செடி

பேய்மிரட்டி செடி 

பேய்பூதகண தோஷங்களுக்கு வேப்பிலையைக் கொண்டு மந்திரித்து அடிப்பதைப் போல் பேய் மிரட்டி இலைகளையும் கத்தையாகக் கட்டிக் கொண்டு அடிப்பது வழக்கம் ஆகையால் இது பேய் மிரட்டி எனக் கூறப்பட்டது..
பேய்மிரட்டியின் பச்சிலையை அகல் விளக்கின் திரியாகப் போட்டு விளக்கேற்றி வைத்தால் பச்சை இலை எறிகிறது. உண்மைதான். சித்தர் பாடல்
பேய்மிரட்டி
மாந்தக கணங்கழிச்சல் மாறா வயிற்றுவலி
சேர்த்து வரும் கரப்பான் றீச்சுரமும்-பேர்த்துவிடும்
வேய்மிரட்டுந் தோலுடைய மெல்லியலே ராசியமாய்
பேய்மிரட்டி என்றொருகாற் பேசு
இதுவுமது
ஏக்கமுறு கழிச்சல் மாந்த சுரம்
வீக்கம் வயிற்று வலி விட்டோடும்-தாக்குகின்ற
பேய்மிரட்டும் பாதகமும் பேருலகில் அஞ்சிவிடும்
பேய்மிரட்டி நற்குணத்தை பேசு
பேய்மிரட்டியிலை
வெள்ளடுப்பு சீதம் வெதும்பல் சுரத்துடனே
யள்ளடுக்கு மாந்த மதிவாதந்-தெள்ளு மொழி
மாதே வெதுப்படக்கி வன்றழையுற் காய்ச்சலோடு
கோதேறி ரத்தமும் போக்கும்.

பன்னீர் தயாரிப்பு முறை :

பன்னீர் தயாரிப்பு :
நாட்டுரோஜா இதழ்கள் - 1/4 கிலோ
மழை நீர் - 1 1/4 லி (அ) பானை நீர்
* புது மண்பானையில் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு நடுவில் ஒரு Stand வைத்து அதன் மேல் ஒரு கப் வைத்து கப்பை சுற்றிலும் ரோஜா இதழ்களை போட்டு குழிதட்டைக் கொண்டு மூடி விடவும்.அந்த குழி தட்டில் 1/4 லி தண்ணீர் ஊற்றவும்ங்க.
* பின்பு அடுப்பை வைத்து காய்ச்சவும், மேல் தட்டில்லுள்ள நீர் வற்றும் வரை சுமார் ஒரு 20 நிமிடம்.முடிவில் பானைக்குள் உள்ள கப்பில் நீர் சேர்ந்திருக்கும்.அதுவே தூய்மையான பன்னீர்.
* ரோஸ் மில்க் தயாரிக்க இந்த பன்னீரை உபயோகிக்கலாம். அவ்வளவு சீக்கிரம் கொடாதுங்க. இது போல எல்லா பூக்களிலும் இவ்வாறு எசன்ஸ் எடுக்கலாம்ங்க.
* மல்லி, முல்லை, செண்பகம், மனோரஞ்சிதம், லெமன் கிராஸ், மருகு, மரிக்கொழுந்து, நல்ல வாசனை உள்ள(இலை -பூ -பழம் ) அனைத்திலும் எசன்ஸ் எடுக்கலாம்ங்க.
செய்முறை 2:
*காய்ந்த ரோஜா இதழ்களை சுத்தம் செய்து இரவு முழுவதும் மழை நீரில் ( Ro water) ஊற வைத்து மறுநாள் காலை மீண்டும் கொஞ்சம் நீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிக்கவும்,இதை ரோஸ் மில்க்,சோப்,செய்யப் பயன்படுத்தலாம்ங்க. திரும்பவும் தண்ணீர் சேர்த்து இதே போல் கொதிக்க வைத்து வடித்துக் குளியல் பொடியில் கலந்து குளிக்க பயன்படுத்தலாம்ங்க.
நன்றி : ஜமுனா ராஜேஷ் 
No automatic alt text available.No automatic alt text available.
Image may contain: fireImage may contain: plant

Tuesday 25 December 2018

தாதுபலவீனம் நீங்க நிலப்பனைச் சூரணம்

நிலப்பனைச் சூரணம்
தேவையானபொருள்கள்
நிலப்பனங்கிழக்கு - 100 கிராம்
முள்ளிலவம்பிசின் - 100 கிராம்
நெருஞ்சிமுள் - 100 கிராம்
பெரும்பூனைக்காலிவித்து - 100 கிராம்
நெல்லிவற்றல் - 100 கிராம்
சீந்தில்சர்க்கரை - 100 கிராம்
கற்கண்டு - 100 கிராம்
செய்முறை
மருந்துகளை முறைப்படி சுத்தி செய்து முதல் 5 வரை உள்ள பொருள்களை பொடித்து, சலித்து ஒன்றாக கலந்து கடைசியில் சீந்தில் சர்க்கரை, கற்கண்டு பொடித்து கலந்து கொள்ளவும்.
அளவும்அனுபானமும்: 3 கிராம்முதல் 5 கிராம்வரை
பாலில்அல்லதுபசுநெய்யில்தினம்2அல்லது3வேளைகளுக்குக்கொடுக்கவும்.
தீரும்நோய்கள்
தாதுபலவீனம்,பெண்களுக்கு காணும்வெள்ளை, ஒழுங்கீனமான மாதவிடாய், ஆண்களுக்கு ஏற்படுகின்ற விந்துநட்டம், போன்றவை தீரும். நல்ல உடல்தோற்றி, உடல்பருக்கும்.Image may contain: plant, nature and outdoor

Thursday 20 December 2018

TIME & SPACE " ( காலம் & வெளி)

 TIME & SPACE " ( காலம் & வெளி)
"பீனியல் சுரப்பியின் வேலை என்ன?
மெலடானின் (melatonin) என்ற திரவத்தை சுரக்கிறது.இந்த மெலடானின்,
1.நம்மை தூங்க செய்கிறது. 
2.இந்த இடத்தில் இருக்கிறேன் என்ற உணர்வைத் தருகிறது..
இக உலக வாழ்க்கைக்கு இன்றியமையாத செயல்கள் இவை இரண்டும். ஆனால் ஆன்மீக வாழ்க்கைக்கு எதிரிகள்.
தியானம் சித்தியானால் சமாதி கிட்டும். சமாதி நிலையில் என்ன நடக்கிறது?
தூங்காமல் உணர்வு பூர்வமாகத் தூங்குவது சமாதி.காலம், வெளி உணர்வுகள் அற்று போகும்.இது மனம் கடந்த நிலை.
மனம் என்ற கருவியின் இரட்டை அடிப்படைகள் கால உணர்வும், இட உணர்வும். இவற்றை கடந்தால் ஒழிய மனத்தைக் கடக்க முடியாது.
மனத்தைக் கடக்காமல் சீவன், ஆன்மா, இறை நிலையை அடைய முடியாது.
" சித்தியெல்லாம் கற்றாலும் ,
சினமிறக்க கற்றாலும்,
மனமிறக்க கல்லாதவருக்கு வாய் ஏன் பராபரமே? "
-- மகான் தாயுமானவர்- ---
" காலம் கடந்த கடவுளைக் காண்பதற்கு,
காலம் கருதுவது ஏன்? "
---- அருட்பிரகாச வள்ளலார் ---
என்றும் பாடுகிறார்கள்.
இந்த மெலடானினைப் பற்றி நவீன விஞ்ஞானம் அதிசய செய்தி ஒன்றைக் கூறுகிறது.பறக்கும் தட்டுகளில் வேற்று கிரகத்தை சேர்ந்த உயிர்கள், சில இடங்களில் இறங்கியதாக தகவல் கிடைத்த சில விஞ்ஞானிகள் அந்த இடங்களை ஆராய்ந்தனர். அவ்வெளிகளில் மெலடானின் போன்ற அணு அமைப்பு கொண்ட பொருளை அவர்கள் கண்டறிந்தார்கள். விண்வெளி பயணத்திற்கு பயன்படும் பொருளாக இருக்கலாமோ என்று கருதி தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
தொடர்ந்து தியானம் செய்தால் மெலடானின் சுரப்பது குறைந்து செரோடானின் (serotonin)
என்ற திரவம் சுரக்கிறது.புத்தர் ஞானம் பெற்ற போதி மரக் காற்றில் (அரச மரம்) செரோடானின் அதிகமாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆக செரோடானின் தியானத்தை கொடுக்க கூடிய ஒரு பொருள்.
இவற்றை கடந்து மூன்றாவதாக டிஎம்டி (DMT) என்ற ஒரு பொருளையும் இந்த பீனியல் சுரக்கிறது. டிஎம்டி சுரந்தால் அந்த மனிதருக்கு பூர்வ ஜென்ம நினைவுகள் தோன்றும். புத்தர் நிர்வாண நிலையை பெறு முன் அவருடைய பூர்வ ஜென்ம ஞாபகங்கள் யாவும் தோன்றியதாக 'புத்த சரிதம் 'கூறுகிறது.
இம் மூன்று இரசாயனப் பொருட்களை கடந்தது அமுதம். அமுதம் உயிரை வளர்த்து ஆயுளைக் கூட்டும். மண்ணில் அமரனாக வாழ வைக்கும். அந்த அமுதமே இந்த பீனியல் சுரப்பி என்ற நெற்றிக் கண்ணில் சுரக்கும். அதற்கு "நயன தாரை" என்று பெயர்.
தமிழர் மறந்த இச் சொல் மலையாளிகளிடத்தில் பிரபலம். நயனம் என்றாலேயே நெற்றிக் கண் என்று பொருள் படும்.
"நயனார் என்று மலையாளத்தில் சித்தர்களை குறிக்கின்றனர்.
"சித்தர்களின் சிவயோக நோக்கம் நெற்றிக் கண்ணிலிருந்து அமுதம் சுரக்க வைத்தலே."
Image may contain: 1 person

எந்த கிழமைகளில் ருதுவானால் என்ன பலன்கள்

எந்த கிழமைகளில் ருதுவானால் என்ன பலன்கள்...!
பெண்ணின் பருவத்தில் ருதுவாவது ஒரு முக்கிய கட்டமாகும், ஜனன காலத்தை வைத்து ஒருவருடைய வாழ்க்கையை கணிப்பது போல் ருதுவான கலத்தை வைத்து ஒரு பெண்ணின் நிகழ் காலத்தையும் எதிர் காலத்தையும் கூற முடியும். ஒரு பெண் ருதுவாகும் கிழமையை வைத்தும் அவளுடைய பொது பலன்களை கூறலாம்.
ஞாயிற்றுக்கிழமை: ருதுவான பெண்கள் அழகாக இருப்பார்கள். சிறிது படபடப்பு சுபாவம் கொண்டவர்கள். இதன் காரணமாக இவர்கள் செய்யும் செயல்களால் ஏதாவது தவறுகள் நேர்ந்துவிடக்கூடும். இவர்கள் கணவனின் கருத்துக்கு மாறுபாடு கொண்டவர்களாக இருப்பர். கணவனை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைப்பர். அவ்வாறே பெரும்பாலும் நிகழ்ந்துவிடுவதும் உண்டு. இவர்களுக்கு அதிக குழந்தைகள் இருக்காது.
திங்கட்கிழமை: ருதுவாகும் பெண்கள் பெரும்பாலும் குளிர்ந்த உடலை கொண்டவர்களாக விளங்குவர். பெரும்பாலும் கனவுலகில் மிதப்பர். இவர்களை பல நோய்கள் வாட்டி எடுக்கும். இவர்களின் பேரழகும், கணவனின் ஏகப்பட்ட பிரியமும் ஒன்று சேர்வதால் இவர்களுக்கு நிறைய குழந்தைகள் பிறக்கும்.
செவ்வாய்க்கிழமை: ருதுவாகும் பெண்கள் போர்க்குணத்திடன் விளங்குவர். இவர்களிடம் வாய் கொடுத்து தப்ப முடியாது இவர்களை யாரும் அவ்வளவு சுலபத்தில் காதலிக்க முடியாது. அதிகமான உஷ்ண உடம்பை கொண்டவர்கள். அடிக்கடி நோய்வாய்படுவார்கள். கண்வனை மதிக்க மாட்டார்கள்.
புதன்கிழமை: இந்த கிழமையில் ருதுவாகும் பெண்கள் அறிவாளிகளாக திகழ்வார்கள் கலைத்துறையில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாகவும், மெல்லிய உடல்வாகு உடையவர்கள். ஆனால் கவர்ச்சியாக இருப்பர். இவர்களுக்கு பெரும்பாலும் காதல் திருமணம் நடக்கும் சுகபோக வாழ்கை நடத்துவர்.
வியாழக்கிழமை: இந்த கிழமையில் ருதுவான பெண்கள் நற்குணம் கொண்டவர்களாக இருப்பர். அழகான இவர்களிடம் தெய்வ பக்தி மிகுந்து இருக்கும். கணவன் சொல்படி நடப்பார்கள். இவர்கள் அதிக பிள்ளைகள் பெறுவார்கள்.
வெள்ளிக்கிழமை: இந்த கிழமையில் ருதுவான பெண்கள் கவர்ச்சியாக இருப்பார்கள். கலை ஆர்வம் உடையவர்கள். தெய்வபக்தி உடையவர்கள். இவர்களிடம் பணபுழக்கம் அதிகமாக இருக்கும். அழுக்கு துணிகளை அணிய மாட்டார்கள். தாய் வீட்டை விட, புகுந்த வீட்டில் மேலும் செழிப்புடன் வாழ்வார்கள்.
சனிக்கிழமை: இந்த கிழமையில் ருதுவான பெண்கள் கருப்பு நிற்த்தில் இருப்பார்கள். இவர்களிடம் சோம்பல் குடி கொண்டு இருக்கும். குண்டாக இருப்பார்கள். அடாவடியாக இருப்பார்கள். கணவனை மதிக்க மாட்டார்கள் இவர்கள் குடும்பத்தில் பிரச்சனை இல்லாத நாட்களே கிடையாது.

வாழ்வில் ஏற்றமும் சிறப்பும் தரும் சிவவிரதங்கள்

வாழ்வில் ஏற்றமும் சிறப்பும் தரும் சிவவிரதங்கள்*
1. சோமவார விரதம்; திங்கள் கிழமைகளில் இருப்பது
2. உமா மகேஸ்வர விரதம்; கார்த்திகை பவுர்ணமியில் இருப்பது
3. திருவாதிரை விரதம்; மார்கழி மாதத்தில் வருவது
4. சிவராத்திரி விரதம்; மாசி மாதம் அமாவாசை தினத்தில் வருவது
5. கல்யாண விரதம்; பங்குனி உத்திரத்தன்று கடைபிடிப்பது
6. பாசுபத விரதம்; தைப்பூச தினத்தில் வருவது
7. அஷ்டமி விரதம்; வைகாசி மாதத்தில பூர்வபட்ச அஷ்டமி தினத்தில் அனுஷ்டிப்பது
8. கேதார கவுரி விரதம்; ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி தினத்தில்) இருக்கும் விரதம்.
முதலாவது மனக்கட்டுப்பாட்டுடன் உணவுக் காட்டுப்பாட்டினையும் கடைப்பிடித்திட வேண்டும். ஈசன் செயலில் ஓர் நன்மையான காரணம் இருக்கும்
*சோமா வார விரதம்*
சோம வார விரதம் – கார்த்திகை மாதம் முதல் சோம வாரத்திலிருந்து இருத்தல் வேண்டும் சோமா வாரத்தில் உண்ணா நோன்பு மேற்கொள்வது முறை இவ்விரதம் வாழ்நாள் முழுமையோ, ஓராண்டு, மூன்று ஆண்டுகள், 12 ஆண்டுகள் என்ற கணக்கில் அனுஷ்டிப்பதே முறை.
*திருவாதிரை விரதம்*
மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்று இருவேளை உண்ணா நோன்பும். இரவு பால், பழத்துடன் முடித்துக் கொள்வது.
*உமா மகேஸ்வரி விரதம்*
இவ்விரதம் கார்த்திகை பௌர்ணமியில் இருக்க வேண்டும். இந்நாளில் ஒரு பொழுது பகல் உணவு அருந்தலாம். இரவு பலகாரம்,பழம் சாப்பிடலாம்.
*சிவசாத்திரி விரதம்*
இவ்விரதம் மாசி கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று இருத்தல் வேண்டும். அன்று உண்ணா நோன்பு மேற்கொள்வது சிறப்பு. நான்கு ஜாமங்களும் உறங்காது சிவபூஜை செய்வது மிக நல்லது.
*கேதார விரதம்*
இந்த விரதம் புரட்டாசி மாதம் சுக்கிலபட்ச அட்டமி முதல் 21 நாட்களும் கிருஷ்ணபட்ச பாதமை முதல் 14 நாட்களும் கிருஷ்ணபட்சத்து அட்டமி முதல் 7 நாட்களும் கிருஷ்ணபட்சத்து சதுர்த்தியன்றும் இருத்தல் வழக்கம்.
இந்த விரதம் அனுஷ்டிக்கும் போது இருபத்தொரு நூலிழைகளினால் காப்புகட்டிக் கொள்வது முறை ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டுதல் வேண்டும். இவ்விரதம் நிகழ்முறை முதல் 20 நாட்கள் ஒருபொழுது மட்டும் உணவு கொள்ள வேண்டும். இறுதி நாளன்று உண்ணாவிரதம் இருத்தல் முறை.
*கல்யாண சுந்தர விரதம்*
இவ்விரதம் பங்குனி உத்திரத்தன்று மேற்கொள்ளப்படும் ஒரு பொழுது மட்டும் உணவு கொள்ளலாம் இரவில் பால் அருந்தலாம். சூல விரதம்:: இந்த விரதம் தை மாசம் அமாவாசையன்று இருக்க வேண்டும். ஒரு பொழுது மட்டும் பகல் உணவு உட்கொள்ளலாம். இரவு உண்ணா நோன்பு இருக்க வேண்டும்.
*இடப விரதம்*
இவ்விரதம் சுக்கிலபட்சம் அஷ்டமியன்று மேற்கொள்ள வேண்டும். ஒரு பொழுது பகல் உணவு மட்டும் உண்ணலாம்.
*பிரதோஷ விரதம்*
இவ்விரதம் சுக்கிலபட்ச திரியோதசி, கிருஷ்ணபட்ச திரியோசி ஐப்பசி அல்லது கார்த்திகை அல்லது வைகாசி மாதங்களில் சனி பிரதோஷம் முதல் மேற்கொள்ள வேண்டும். பகலில் உணவு உட்கொள்ளக்கூடாது. பிரதோஷம் கழிந்த பின் உணவு அருந்தலாம்.
*கந்த சஷ்டி விரதம்*
ஐப்பசி மாதம் சுக்கிலபட்சம் பிரதமை முதல் சஷ்டி வரை விரதம் மேற்கொள்ள வேண்டும். ஆறு நாட்களும் உண்ணா நோன்பிருத்தல் மிகமிக சிறப்பு.ஒன்று முதல் ஐந்து நாட்கள் ஒரு பொழுது உணவு கொண்டு ஆறாம் நாள் முழுமையா உண்ணா விரதம் இருக்க வேண்டும். இது ஆறு ஆண்டுகள் தொடர்ந்து செய்வது மிகமிக சிறப்பான நலம் பெறுதல் உண்டு.

சிவன் பஞ்ச முகம் தொழில் ஆகியவை முழு விளக்கம்

சிவன் தத்புருஷம், அகோரம், வாமம், சத்யோஜாதம், ஈசானம் என்கிற ஐந்து முகங்களைக் கொண்டவர்.
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்கிற ஐந்து தொழில்களையும் செய்பவர். திருநீறு, ருத்ராக்ஷம், பஞ்சாக்ஷரம் ஆகிரயவற்றில் விருப்பமுடையவர். ருத்ரம், சமகம் முதலான மகாமந்திரகளால் மனம் மகிழ்பவர். கோபமான வடிவில் ருத்ரனாகவும், சாந்தமான வடிவில் தக்ஷிணாமூர்த்தியாகவும் திகழ்பவர்.
சிவனுக்கு அவதாரங்கள் இல்லை என்றாலும், காரியார்த்த காரணமாக உருவங்களைக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இவற்றில் தக்ஷனை கொல்வதற்காக வீரபத்திரர்; தாருகவனத்து ரிஷிகளின் கர்வத்தை அடக்க பிட்சாடண மூர்த்தி; மார்க்கண்டேயனுக்காக யமனைக் கொல்ல காலசம்ஹாரமூர்த்தி; பிரம்மாவைத் தண்டிக்க பைரவர்; ஞான வடிவாக அம்பலம் தன்னில் ஆனந்த நடமாடும் தில்லைக் கூத்தன் நடராஜ வடிவம் - இப்படியாக பல வடிவங்களில் சிவனை தரிசித்து மகிழ்ந்திட ஏதுவாகிறது. பதஞ்சலி முதலான முனிவர்கள் தரிசித்து மகிந்த குஞ்சித பாதம் தில்லை சிற்சபேசனின் பொற்பாதமன்றோ!
இதய ஆகாசம் - அதை தகராகாசம் என்பார்கள் - வெளியே வான்வெளி ஆகாசம் போலவே விரிந்து பரந்தது இந்த இதய ஆகாசமும். பரமாகாச சொரூபியான பரமன், ஆன்ம சிற்றணுவிலும் தகராகாத்திலும் திகழ்கிறார். "த்" என உச்சரிக்கையில், நுனிநாக்கு மேற்பல் அடியைத் தீண்டி நிற்பதுபோல, அகமதில் இறையதை உணர்த்தப்பெறும் இடம் தகராகாசம் ஆகும். "த"கரம் எனும் மெய்யெழுத்து, தமிழ் நெடுங்கணக்கில் ஏழாவது வரிசையில் இருப்பதுபோல், ஆறறிவுக்கும் மேற்பட்ட ஏழாவது அறிவு - மெய்யறிவு இந்த தகராகாசத்தில் சித்தியாகின்றதோ! தகரகன நடனபதி என்றும் தகராலய மூர்த்தி என்றும் வழங்கப்படுபவன் நதிப்புனை ஈசன். ஈசனின் திருவருளால் வள்ளாலாரெனும் அருட்கொடைவள்ளல் பெருமான் அருட்பெரும்ஜோதி அகவலதில் தான் பெற்ற காட்சியனுபவத்தை "உபய பக்கங்களும் ஒன்றெனக் காட்டிய அபய சிற்சபையில் அருட்பெரும்ஜோதி" எனப்பாடி மகிழ்கின்றார்.
பிரம்ம தேவன் சிவபெருமானை மேற்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்த போது இறைவன் அழகிய வடிவத்துடன், வெண்மை நிறமான இளையோனாய் பிரம்மன் முன்பு தோன்றினார். இந்த முகமே சத்யோஜாதம் எனப்படும்.
சத்யோஜாத முகத்திலிருந்து தோன்றிய முகங்கள்:
லிங்கோத்பவர்
சுகாசனர்
உமாமகேசர்
அரிஹரர்
அர்த்தநாரி
வாமதேவம்:
மீண்டும் பிரம்ம தேவன் வடக்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்த போது இறைவன் சிவந்த நிறத்துடன் பாம்பை அணிந்தும், மானும் மழுவும் கைகளில் ஏந்தி பிரம்ம தேவனுக்கு காட்சி கொடுத்தார். இறைவனின் இந்த முகமே வாமதேவம் எனப்படும்.
வாமதேவ முகத்திலிருந்து தோன்றிய 5 முகங்கள்:
கங்காதரர்
சக்ரவரதர்
கஜாந்திகர்
சண்டேசானுக்கிரகர்
ஏகபாதர்
தத்புருஷம்:
அதன் பிறகு பிரம்ம தேவன் கிழக்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார். இறைவன் தங்க நிறத்துடன் பிறையை சென்னியில் சூடி காட்சி கொடுத்தார். இறைவனின் இந்த முகமே தத்புருஷம் எனப்படும். பிரம்மனின் தவத்தால் மகிழ்ந்த இறைவன் உளம் மகிழ்ந்து தனது அழகிய உருவத்திலிருந்து காயத்ரீ தேவியை உண்டாக்கி பிரம்ம தேவனிடம் அளித்தார். காயத்ரீயை வணங்கி வருபவர்களுக்கு நரகம் கிடையாது எனவும் வரமளித்தார்.
தத்புருஷ முகத்திலிருந்து தோன்றிய வடிவங்கள்:
பிட்சாடனர்
காமாரி
காலாரி
சலந்தராரி
திரிபுராரி
அகோரம்:
பிறகு பிரம்மா தெற்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார். இறைவன் முக்கண் கொண்டவராய் நெருப்பினையும், வாளினையும் கரத்தில் கொண்டவராய் கரிய நிறத்துடன் தோன்றினார். இறைவனின் இந்த முகத்திற்கு அகோரம் என்று பெயர்.
அகோர முகத்திலிருந்து தோன்றிய வடிவங்கள்:
கஜசம்ஹாரர்
வீரபத்திரர்
தக்ஷிணாமூர்த்தி
கிராதமூர்த்தி
நீலகண்டர்
ஈசானன்:
கடைசியாக பிரம்ம தேவன் ஆகாயத்தினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார். இறைவன் சாம்பல் வண்ணத்துடன் முக்கண் கொண்டவராயும், இளமதியை சென்னியில் சூடியவாறும், கோரைப்பற்கள் கொண்ட உருமாய் இரண்டு பெண்களுடன் தோன்றினார். இறைவனின் இந்த முகமே ஈசானம் எனப்படும். அதில் ஒரு பெண் மாயன் முதல் தேவர்கள் வரை அனைவரையும் ஈன்ற அன்னை ஆவாள். மற்றொரு பெண் வெண் தாமரையில் வீற்றிருக்கும் கலைமகள் ஆவாள்.
ஈசான முகத்திலிருந்து தோன்றிய வடிவங்கள்:
சோமாஸ்கந்தர்
நடராசர்
ரிஷபாரூடர்
கல்யாணசுந்தரர்
சந்திரசேகரர்
இந்த ஐந்து முகங்களையும் நினைத்து தியானம் செய்தாலும் அல்லது வழிபாடு செய்தாலும் இப்பிறவியில் சகல சுகங்களும் கிட்டி மறுபிறவியில் முக்தியும் கிட்டும் என்பது பிரம்ம தேவனின் வாக்கு ஆகும்.
சிவனை ‘ஐமுகச் சிவன்’ என்பார்கள். ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்பன அவ் ஐந்து முகங்கள். ‘நிறங்கள் ஓர் ஐந்துடையாய்! - என்று மணிவாசகர் குறிப்பிடுகிறார்.
நடுவில் இருக்கும் ஈசானம் - பளிங்கு நிறம், கிழக்கு முகமான தத்புருஷம் - பொன்நிறம், தெற்கு முகமாகிய அகோரம்-கருமை, வடக்கு முகமாகிய வாமதேவம்-சிகப்பு, மேற்கு முகமான சத்யோஜாதம் - வெண்மை என ஆதி சிவனுக்கு நிறங்களும் ஐந்தே.
அவர் நடனம் ஆடுவது ஐந்து சபைகளில்: சிதம்பரம்: தங்க சபை, மதுரை-வெற்றி அம்பலம் திருஆலங்காடு - ரத்தின சபை, திருநெல்வேலி- தாமிர சபை. குற்றாலம் - சித்திர சபை.
ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என சிவபிரானுக்கு ஐந்தொழில்கள்.
தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் ஆகிய ஐந்தும் பஞ்சபுராணம் எனும் சிறப்புடன் சிவ சந்நிதிகளில் ஓதப்படுகிறது. சிவனை அர்ச்சிக்க விசேஷமாக பஞ்ச வில்வம் என வில்வம், நொச்சி, விளா, மாவிலங்கை, கிளுவை என ஐந்து பத்திரங்கள் சிறப்பு பெறுகின்றன.
‘ஐந்தெழுத்து - நமசிவய’ நாமம் சொல்லி வழிபட வேண்டும். அவ்ஐந்தெழுத்து மந்திரத்தையும் சிவயநம, மசிவயந, நமசிவய, யநமசிவ, வயநமசி என ஐந்து வகையாக உச்சரித்து உருவேற்ற, உள்ளளி பெருகும் என உரைக்கிறது திருப்புகழ்.
சிவராத்திரி பொழுதில்... விபூதி பூசிக் கொள்ளுதல், ருத்திராட்சம் அணிதல், பஞ்சாட்சரம் ஜபித்தல், வில்வ அர்ச்சனை புரிதல், திருமுறைப் பாடல்கள் பயிலுதல் ஆகிய ஐந்து காரியங்களை நாம் மேற்கொள்ள வேண்டும்.
சிவனின் குணங்கள்
சிவபெருமான் இல்லறத்தில் யோகியாக வாழ்பவராகவும், கையிலையிலும், மயானத்திலும் வசிப்பவராகவும், அரக்கர்கள் தேவர்கள் என தன்னை நினைத்து தியானிக்கும் அனைவருக்கும் பாரபட்சம் பார்க்காமல் கேட்கும் வரங்களை கொடுப்பவராகவும், பாவங்களில் பெரிய பாவமான பிரம்மஹத்தி தோசத்தினை நீக்கும் வல்லமை உடையவராகவும் கூறப்படுகிறார்.
சிவ வழிபாடு
காலையில் தரிசிக்க - நோய்கள் நீங்கும்.
நண்பகலில் தரிசிக்க - தனம் பெருகும்.
மாலையில் தரிசிக்க - பாவம் அகலும்
அர்த்த சாமத்தில் தரிசிக்க - வீடுபேறு கிடைக்கும்.
சிவனின் ஐந்து தொழில்கள்
ஒரு வலக்கையிலுள்ள உடுக்கை படைக்கும் ஆற்றலை குறிக்கும் (கீழிருக்கும் தாமரையும் பிறப்பிற்கு வழிவகுக்குமென கூறுவர்)
ஒரு இடக்கையிலுள்ள நெருப்பு அழிக்கும் ஆற்றலை குறிக்கும்
இன்னொரு வலக்கையின் உட்புறத்தை காட்டுவது அருளும் ஆற்றலை குறிக்கும்
இன்னொரு இடக்கை துதிக்கை போல் உட்புறத்தினை மறைத்தவாறு இருப்பது மறைக்கும் ஆற்றலை குறிக்கும்
தூக்கிய பாதமும் ஆணவத்தை மிதித்தாடும் இன்னொரு பாதமும் மனமாயை உட்பட தீய சக்திகளிலிருந்து காக்கும் ஆற்றலை குறிக்கும்.
சிவபெருமானின் 19 அவதாரங்கள்! – இது எவரும் அறிந்திடாத அரிய தகவல்!
சிவபெருமானை பற்றி பார்க்கையில், வெகு சிலருக் கே அவரின் 19 அவதாரங்கள் பற்றி தெரியும். சிவபெரு மானின் ஒவ்வொரு அவதாரமும் சிறப்பு முக்கியத்து வத்தை கொண்டுள்ளது. அவரின் இந்த 19 அவதாரங் களுக்கும் குறிப்பிட்ட காரணங்கள் இருந்தது. அதன் உட்சபட்ச நோக்கம் மனித இனத்தின் நலனே.
அவதாரம் 1 – பிப்லாட் அவதாரம்
தாதிச்சி துறவியின் வீட்டில் பிப்லாட்டாக பிறந்தார் சிவபெருமா ன். ஆனால் பிப்லாட் பிறப்பதற்கு முன்பாகவே அத்துறவி அவர் வீட்டை விட்டு சென்றார். சனி திசையின் இருக்கை நிலை சரியி ல்லாமல் இருந்ததால் தன் தந்தை வீட்டை விட்டு வெளியேறி னார் என்பதை பிப்லாட் வளரும் போது தெரிந்து கொண்டான். அதனால் சனியை பிப்லாட் சபித்து, தன் விண்ணக இருப்பிடத்தில் இருந்து சனி கிரகத்தை விழச் செய்தான். பின்னர் 16 வயது ஆவ தற்கு முன்பாக யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என்ற நிப ந்தனையோடு சனியை மன்னித்தான். அதனால் பிப்லாட் வடிவி லான சிவபெருமானை தரிசித்தால் நம்மை பிடித்த சனி தோஷம் நீங்கும் என்று நம்பப்படுகிறது.
அவதாரம் 2 – நந்தி அவதாரம்
நந்தி என்ற பெரிய காளை தான் சிவபெருமானின் ஏற்ற மாகும். சிவபெருமானை நந்தி வடிவில் இந்தியாவில் பல இடங்களில் தரிசித்து வருகின்றனர். மந்தைகளின் பாதுகாவலனாக சிவபெரு மானின் நந்தி அவதாரம் பார்க்கப்படுகிறது. நான்கு கைகளை கொண்ட காளை யாக அவர் தீட்டப்பட்டுள்ளா ர். கோடரி மற்றும் மானை இரண்டு கைகள் கொண்டிருக்கும். மற்ற இரண்டா கை கள் ஒன்றாக சேர்த்திருக்கும்.
அவதாரம் 3 – வீரபத்திர அவதாரம்
டக்ஷ்ணா யாகத்தில் சதி தேவி தன்னை பலியாக்கி கொண்டதா ல், சிவபெருமான் கடும் கோபத்திற்கு ஆளானார். தன் தலையில் இருந்து சிறிது முடியை எடுத்து அதனை தரையில் போட்டார். அதிலிருந்து பிறந்தவர்கள் தான் வீரபத்திரர் மற்றும் ருத்ரகாளி. சிவபெருமானின் கடுமையான அவதாரம் இதுவே. மூன்று கடுஞ் சின கண்களோடு, எலும்பு கூடு மாலை அணிந்து பயங்கரமான ஆயுதங்களை கொண்டிருக்கும் கருமையான கடவுளாக அவர் சித்தரிக்கப்பட்டுள்ளார். சிவபெருமானின் இந்த அவதாரம், யாகத் தில் டக்ஷ்ணாவின் வெட்டுண்ட தலையை கொண்டிருக்கும்.
அவதாரம் 4 – பைரவ அவதாரம்
பிரம்மனுக்கும் விஷ்ணுவிற்கும் யார் சிறந்தவர்கள் என்ற சண் டை எழுந்த போது, சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார். தன் உயர்வானநிலையை பிரம்மன் மறைத்த போது, சிவபெருமா ன் பைரவ வடிவத்தை எடுத்து பிரம்மனின் ஐந்தாவது தலையை துண்டித்தான். துண்டித்த பிரம்மனின் தலை பார்த்த போது, ஒரு பிராமணனை கொன்ற குற்ற உணர்வு சிவபெருமானுக்கு ஏற்பட் டது. அதனால் 12 வருடத்திற்கு ஒரு பிக்ஷாடனாவாக, பிரம்மனின் மண்டை ஓட்டை சுமந்து அவர் அவர் சுற்றி திரிய வேண்டி இருந் தது. இந்த வடிவத்தில் அனைத்து சக்தி பீடத்தையும் சிவபெருமா ன் காத்து வந்தார் என்று நம்பப்படுகிறது.
அவதாரம் 5 – அஸ்வத்ஹமா
பாற்கடலை கடைந்த போது, சிவபெருமான் கொடிய நஞ்சை உட் கொண்ட நேரத்திகுள்நேரத்தில், அந்த நஞ்சு அவர் தொண்டையி ல் எரியத் தொடங்கியது. சிவபெருமானின் உள்ளிருந்த விஷ் புரு ஷ் வெளிவந்தது. அதற்கு கடவுள் ஒரு வரத்தையும் அளித்தார். அதன் படி, பூமியில் துரோணரின் மகனாக பிறந்து எதிர்த்து நின்ற அனைத்து சத்ரியர்களையும் கொள்வான் விஷ் புருஷ். அதனால் அஸ்வத்ஹமாவாக பிறந்தான் விஷ் புருஷ்.
அவதாரம் 6 – ஷரபா அவதாரம்
ஷரபா வடிவத்திலான சிவபெருமான் பாதி பறவையாகவும் பாதி சிங்கமாகவும் இருப்பார். சிவ புராணத்தின் படி, விஷ்ணுவின் பாதி சிங்க அவதாரமான நரசிம்மரை அடக்க ஷரபா வடிவத்தை எடுத்தார் சிவபெருமான்.
அவதாரம் 7 – க்ரஹபதி அவதாரம்
விஸ்வனார் என்ற பிராமணரின் வீட்டில் அவரது மகனாக பிற ந்தார் சிவபெருமான். அவருக்கு க்ரஹபதி என பெயரிட்டார் விஸ் வனார். க்ரஹபதிக்கு 9 வயதான போது, அவர் இறக்க போகிறார் என்று அவரது பெற்றோரிடம் தெரிவித்தார் நாரதர். அதனால் மர ணத்தை ஜெயித்திட காசிக்கு சென்றான் க்ரஹபதி. அங்கே சிவ பெருமானிடம் ஆசி பெற்றதால் மரணத்தை ஜெயித்தான் க்ரஹப தி
அவதாரம் 8 – துர்வாசா
அண்ட சராசரத்தில் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க இந்த வடிவத் தை எடுத்தார் சிவபெருமான். துர்வாசா என்பவர் முன் கோபத்தி ற்கு பெயர் போன மிகப்பெரிய துறவியாவார்.
அவதாரம் 9 – அனுமான்
குரங்கு கடவுளான அனுமானும் கூட சிவபெருமானின் ஒரு அவ தாரமாகும். ராமர் வடிவில் இருந்த விஷ்ணுவிற்கு சேவை புரிந் திடவே சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்துள்ளார்.
அவதாரம் 10 – ரிஷப அவதாரம்
பாற்கடல் கடைதலுக்கு பிறகு, கீழோகத்திற்கு சென்றார் விஷ் ணு பகவான். அங்கே ஒரு அழகிய பெண்ணின் பார்த்து மயங்கி னார். அங்கே தங்கியிருந்த போது விஷ்ணு பகவானுக்கு பல மகன்கள் பிறந்தனர். ஆனால் அவரின் அனைத்து குழந்தைகளும் அசுரத்தனத்துடன் கொடியவர்களாக இருந்தனர். அனைத்து கட வுள்களையும் மனிதர்களையும் ஒரே மாதிரியான தொல்லைக ளை அளித்து வந்தனர். அப்போது சிவபெருமான் காளை அல்லது ரிஷப வடிவத்தை எடுத்து விஷ்ணு பகவானின் அனைத்து கொடி ய மகன்களையும் கொன்றார். காளையுடன் சண்டையிட விஷ் ணு பகவான் வந்த போது அது சிவபெருமானின் அவதாரம் என் பதை அவர் உணர்ந்து அவர் இடத்திற்கே சென்று விட்டார்.
அவதாரம் 11 – யாதிநாத் அவதாரம்
ஒரு முறை ஆஹுக் என்று பழங்குடியை சேர்ந்த ஒருவன் வாழ்ந் து வந்தான். அவனும் அவன் மனைவியும் தீவிர சிவ பக்தர்கள் ஆ வார்கள். ஒரு முறை யாதிநாத் வடிவில் சிவபெருமான் அவர்க ளை சந்தித்தார். இரண்டு பேர் மட்டுமே இருக்க கூடிய சின்ன குடி சையில் அவர்கள் இருந்ததால், விருந்தாளியை உள்ளே தங்க வைத்து தான் வெளியே படுக்க தீர்மானித்தான் ஆஹுக். ஆனால் துரதிஷ்டவசமாக அன்று இரவு ஒரு வனவிலங்கால் கொல்லப் பட்டான் ஆஹுக். மறுநாள் காலை, ஆஹுக் இறந்திருப்பதை கண்டு அவன் மனைவியும் சாக நினைத்தால். அப்போது தன் உண்மையான ரூபத்தை வெளிக்காட்டிய சிவபெருமான் அவளு க்கு ஒரு வரமளித்தார். அதன் படி, அவளும் அவள் கணவனும் நளன் மற்றும் தமயந்தியாக மீண்டும் பிறப்பார்கள். அவர்களை சிவபெருமானே சேர்த்து வைப்பார்.
அவதாரம் 12 – கிருஷ்ண தர்ஷன் அவதாரம்
ஒருவர் வாழ்க்கையில் யாகம் மற்றும் சடங்குகளின் முக்கியத் துவத்தை உணர்த்தவே சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார்.
அவதாரம் 13 – பிக்ஷுவர்யா அவதாரம்
அனைத்து விதமான ஆபத்துகளில் இருந்து மனித இனத்தை காக் கவே சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார்.
அவதாரம் 14 – சுரேஷ்வர் அவதாரம்
தன் பக்தர்களை சோதிக்க இந்திரன் வடிவை ஒரு முறை எடுத் தார் சிவபெருமான். அதனால் தான் அவரை சுரேஷ்வர் என்று அழைக்கிறோம்.
அவதாரம் 15 – கீரத் அவதாரம்
அர்ஜுனன் தவத்தில் இருந்த போது கீரத் அல்லது வேட்டைக்கா ரன் வடிவை எடுத்தார் சிவபெருமான். அர்ஜுனனை கொல்ல மூக் கா என்ற அரக்கனை அனுப்பி வைத்தார் துரியோதனன். காட்டுப் பன்றி போல் தன்னை மாற்றிக்கொண்டான் மூக்கா. ஆழ்ந்த தியா னத்தில் இருந்த அர்ஜுனனின் கவனம் ஒரு பெரிய சத்தத்தால் சிதறியது. அவன் கண்ணை திறந்து மூக்காவை பார்த்தான். அந்த காட்டுப்பன்றியை அர்ஜுனனும் கீரத்தும் தங்களின் அம்புகளால் வீழ்த்தினார்கள். பின் யார் அந்த காட்டுப்பன்றியை முதலில் வீழ் த்தியது என்ற சண்டை கீரத்திற்கும் அர்ஜுனனுக்கும் பிறந்தது. கீர த் வடிவில் இருந்த சிவபெருமானை சண்டைக்கு வரச்சொல்லி சவால் விசுத்தான் அர்ஜுனன். அர்ஜுனின் வீரத்தை கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு தன்னுடைய பஷுபதா ஆயுதத்தை பரிசளித்தார்
அவதாரம் 16 – சுண்டன்டர்கா அவதாரம்
திருமணத்தின் போது பார்வதி தேவியின் தந்தை ஹிமாலயாவி டம் பார்வதியின் கரத்தை பிடிக்க அவர் இந்த அவதாரத்தை எடுத்தார்.
அவதாரம் 17 – பிரமச்சாரி அவதாரம்
சிவபெருமானை கணவனாக அடைய சிவனை பிரார்த்தனை செய்த பார்வதி தேவியை சோதிக்க இந்த அவதாரத் தை எடுத்தார் சிவபெருமான்.
அவதாரம் 18 – யக்சேஷ்வர் அவதாரம்
கடவுள்கள் மனதில் குடிகொண்டிருந்த போலியான அகங்காரத் தை ஒழிக்கவே இந்த அவதாரத்தை எடுத்தார் சிவபெருமான்.
அவதாரம் 19 – அவதுட் அவதாரம்
இந்திரனின் இறுமாப்பை அழிக்கவே இந்த அவதாரத்தை எடுத்தர் சிவபெருமான்.
நன்றி .
© சித்தர் மலர் 2017

குழந்தைப் பேறில்லாதவர்களுக்கு குறை தீர்க்கும் எளிய வழி

குழந்தைப் பேறில்லாதவர்களுக்கு :-
குழந்தை பேறில்லாமல் துயரத்தில் அழுந்தும் தம்பதியரின் குறை தீர்க்கும் எளிய வழி ஒன்றினை அகத்தியர் தனது “அகத்தியர் பரிபூரணம்” என்னும் நூலில் அருளியிருக்கிறார்.
இருந்துகொண்டு குருபரனைத் தியானம்பண்ணி
இன்பமுடன் ஓம் றீங் அங் வங் கென்று
வருந்திமனக் கனிவதனால் தேனில்மைந்தா
மார்க்கமுடன் ஆயிரத்தெட்டு உருவேசெய்து
அருந்தவமாய் தலைமுழுகும் போதில்மைந்தா
அன்புடனே பெண்களுக்கு யீய்ந்தாயானால்
திருந்தியந்த மங்கையர்க்குக் கெற்பமுண்டாம்
திட்டமுடன் கண்மணியைக் காண்பார்பாரே.
பாரப்பா மலடாகி இருந்தாலென்ன
பக்குவமாய் யன்பதுக்குள் கெர்ப்பமுண்டாம்
நேரப்பா மணிமந்திர மிதுதானாகும்
நேர்மையுள்ள ரகசியமது சந்தானவித்தை
ஆரப்பா அறிவார்கள் சந்தானகரணி
அறிந்துமன துரிமையனா லடக்கம்பண்ணி
சாரப்பா சாகரத்தில் தவசுபண்ணி
சதாகாலம் பூரணத்தில் சார்ந்துவாழே.
- அகத்தியர்.
வெள்ளியினால் ஆன ஒரு கிண்ணத்தில், ஒரு கழஞ்சு தேன் விட்டு அதனை வலது கையில் ஏந்திக் கொள்ள வேண்டுமாம். பின்னர் கிழக்கு முகமாய் அமர்ந்து/இருந்து கிண்ணத்தில் இருக்கும் தேனை கவனக் குவிப்புடன் பார்த்துக் கொண்டே “ஓம் றீங் அங் வங்” என ஆயிரத்து எட்டு தடவைகள் தொடர்ச்சியாக செபிக்க வேண்டுமாம். இந்த செயல்முறையை குழந்தை பேறு வேண்டும் தம்பதியரில் கணவனே செய்திட வேண்டும் என்கிறார்.
இவ்வாறு செபித்த தேனை மனைவியியானவள் மாத விலக்கு முடிந்து தலை முழுகிய பின்னர், உண்ண்க் கொடுத்து இல்லறத்தில் ஈடுபட்டு வர கருத்தரிக்கும் என்கிறார் அகத்தியர். இந்த முறைக்கு எவ்விதமான பத்தியமும் கூறப் படவில்லை. மலடு என சொல்லப் பட்டவர்களுக்கும் இந்த முறையினால் கருத் தரிக்கும் என்கிறார் அகத்தியர்.
ஆச்சர்யமான தகவல்தானே!, தேவையிருப்பவர்கள் குருவினை வணங்கி முயற்சிக்கலாம். தேவையுள்ளோருக்கு இந்த தகவலை அறியத் தரலாம். என்றும் அன்புடன் உங்கள் ஆச்சார்யா பாபாஜி 

வைகுண்ட ஏகாதசி வரலாறு


வைகுண்ட ஏகாதசி வரலாறு 💐💐
****************************
பரமபதம் -> சொர்க்க வாயில்
மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படுகிறது. இது கிரெகொரியின் நாட்காட்டியில் திசம்பர்-சனவரி மாதங்களில் வரும். வைணவர்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர். இந்நாளின் முன்னிரவில் உறங்காது இருந்து திருமாலின் புகழ்பாடி கோவில் செல்வர். விடிகாலையில் பெருமாள் கோவில்களில் பொதுவாக வடக்குதிசையில் என்றும் மூடப்பட்டிருந்து இன்று மட்டுமே திறக்கும் "சொர்க்க வாயில்" என்றழைக்கப்படும் வாயில்வழியே சென்று இறைவனை வழிபடுவர்.
திருவரங்கம் கோவிலில் இந்நாளின் முந்தைய பத்து நாட்களில் "இராப்பத்து" என்றும் பிந்தைய பத்து நாட்களில் "பகல்பத்து" என்றும் சிறப்பாக விழா நடத்தப்படுகிறது.
சமய நம்பிக்கை
************************
இந்துக்கள் ஒவ்வொரு ஏகாதசி நாளிலும் உண்ணாநோன்பிருந்து இறைவனை வழிபடுவதால் தங்களின் பாவச்செயல்கள் மன்னிக்கப்பட்டு சங்கடங்கள் தீரும் என நம்புகின்றனர். விஷ்ணுபுராணம் என்ற நாலில் அனைத்து ஏகாதசி நாட்களிலும் உண்ணாநோன்பு இருந்து பெறும் பயனை வைகுண்ட ஏகாதசி அன்று இருக்கும் ஒருநாள் விரதத்தால் பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் இந்நாள் சிறப்பினைப் பெறுகிறது.
புராண நூலின்படி திருமால் தனது எதிரிகளாகவிருந்த இரு அரக்கர்களுக்கு இந்நாளன்று வைகுண்டத்தின் கதவுகளைத் திறந்ததாகவும் , இக்கதையைக் கேள்விப்பட்டு இவ்வாயில் வழியே பெருமாளின் திருவுரு வெளியே உலா வரும்போது தரிசிப்பவர்கள் அனைவருக்கும் தாம் பெற்ற நிலை கிடைக்கவேண்டும் என அவர்கள் வரம் வேண்டியதாகவும் கூறப்படுகிறது.
மகாபாரதத்தில் குருச்சேத்திரப் போரின் துவக்கத்தில் கிருட்டிணன் அருச்சுனனுக்கு இந்த நாளில்தான் பகவத் கீதை விளக்கங்களை நிகழ்த்தியதாகக் கருதப்படுகிறது.
திருவரங்கத்தில்
*************************
தமிழ்நாட்டில் அமைந்துள்ள வைணவத்தலங்களில் முதன்மையாகக் கருதப்படுகின்ற திருவரங்கத்தில் உள்ள அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 21 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பகல்பத்து, இராப்பத்து என்று இரு பகுதிகளாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருநாளும் திருமாலின் திருவுரு வெவ்வேறு அலங்காரங்களில் வெவ்வேறு வாகனங்களில் உலா வருகிறது.
ஏகாதசி நாளன்று இரத்தினங்களால் வேய்ந்த ரத்னாங்கி என அழைக்கப்படும் உடையில் கருவறையிலிருந்து வெளிவந்து ஆயிரங்கால் மண்டபத்தில் வீற்றிருக்க வடக்கு வாயில் ("பரம்பத வாசல்", சொர்க்க வாசல்" என்றும் அழைக்கப்படுகிறது) வழியே உலா வருவதைக் காண பெருந்திரளான பக்தர் கூட்டம் கூடும். இந்த வாயில் இந்த நாளிலே மட்டுமே திறக்கப்படும்.
திருமலையில்
**********************
ஆந்திர மாநிலத்தின் திருப்பதி மலைமீதுள்ள திருமலையிலும் இத்தகைய விழா கொண்டாடப்படுகிறது. இங்குள்ள சிறப்பு வாயில் "வைகுண்ட துவாரம்" என அழைக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி நாளில் மட்டுமே திறக்கப்படும் இவ்வாயில் வழியே சென்று வழிபடுவோர் வீடுபேறு பெறுவர் என நம்பப்படுகிறது. எனவே இத்திருநாளில் பெருந்திரளான பக்தர்களும் உயர்நிலையாளர்களும் திரள்கின்றனர்.
No automatic alt text available.

பாவங்கள் விலக மந்திரம்-அகத்தியர் அருளியது,

பாவங்கள் விலக மந்திரம்-அகத்தியர் அருளியது,
காணவே யின்னமொரு
சூட்சங்ககேளுகருணையுட
னுலத்தோடிருக்கும்
போதுபூணவே கண்ணாரக்
கண்டபாவம்புத்தியுடன் மனதாரச்
செய்தபாவம்பேணவேகாதாரக்
கேட்டபாவம் பெண்வதைகள்
கோவதைகள் செய்தபாவம்
ஊணவே பலவுயிரைக்
கொன்றபாவம் ஒருகோடி
பாவமெல்லா
மொழியக்கேளகாரப்பா
கருணைவிழி
மனக்கண்ணாலேகாலறிந்து
யோகமதால் அங்லங்கென்றுநேரப்பா
நிலையறிந்து நிலையில்நின்றுநீ
மகனே நூற்றெட்டு
உருவேசெய்தால்வீரப்பா
கொண்டுயிரைக் கொண்டபாவம்வெகுகோடி
பாவமெல்லாம் விலகுந்தான
அகத்தியர் பரிபூரணம் 1200 நூலில்
இருந்துஉங்களின் பாவங்கள் நீங்க ஒரு
சூட்சமத்தை சொல்கிறேன் கேளுங்கள்,
நீங்கள் கருணை உள்ளம் கொண்டவராக இருந்தாலும் யாருக்கும் எந்த பாவமும்
செய்யாதிருந்தபோதிலும் உங்கள்
வாழ்வில் பாவங்கள் சேர்ந்து
கொண்டுதான் இருக்கிறது.
அது எப்படி என்றால் ஒருவன் செய்யும்
பாவச்செயலை கண்டும் அதை
தடுக்காமல் போவதும்( கண்ணாரக்
கண்டபாவம்),
தீய சொற்களையும், தீயவர்களின்
வஞ்சகப்பேச்சுகளை, அவச்சொற்களை
கேட்பது(காதாரக்கேட்டபாவம்) உங்கள்
மனமகிழ்ச்சிக்காக பிறரை
துன்புறுத்துவது(மனதாரச் செய்தபாவம்)
பெண்களை கொடுமைப்படுத்து,
பசுக்களை துன்புறுத்துவதுஓரறிவு முதல்
ஆரறிவு வரையிலான உயிர்களை
கொன்ற பாவங்கள் உங்களின்
முன்னோர்கள் செய்த பாவமென
எத்தனை கோடிப்பாவங்கள் இருந்தாலும்
அவைகள் நீங்க ஒரு சூட்சம
மந்திரத்தைசொல்கிறேன்கேளுங்கள்.
உடல் சுத்தியுடன் சுத்தமான இடத்தில்
மான்தோல் விரித்து (இன்றைய நிலையில்
அது சாத்தியம் இல்லை என்பதால் அதற்கு
நிகர் கம்பளியை விரித்து வடமேற்கு
திசை நோக்கி அமர்ந்துகொண்டு
மூச்சை இடதுபக்க நாசியில் மெதுவாக
இழுத்து அடக்கிக்கொண்டு
மனஓர்நிலையோடு மனதினுள்
ஓம் அங் லங்"
என்ற மந்திரத்தை 108 -உரு செபிக்க வேண்டும். இப்படி செபிப்பதால் உயிரைக்கொன்ற பாவம் முதல் எப்படிப்பட்ட கொடியபாவங்களும்விலகி விடும் என்கிறார் அகத்திய மாமுனிவர்.
என்றும் அன்புடன் உங்கள் ஆச்சார்யா பாபாஜி 

நவகிரகங்களின் தமிழ்ப் பெயர்கள்தொகுப்பு .

1 ) நவகிரகங்களின் தமிழ்ப் பெயர்கள்தொகுப்பு .

சூரியன் (Sun) - ஞாயிறு,கதிரவன்

சந்திரன் (Moon) - திங்கள்

செவ்வாய் (Mars) - நிலமகன், செவ்வாய்

புதன் (Mercury) - , கணக்கன், புலவன்,அறிவன்

குரு (Jupiter) - சீலன், பொன்னன்,வியாழன்

சுக்கிரன் (Venus) - சுங்கன், கங்கன்,வெள்ளி

சனி (Saturn) - காரி, முதுமகன்

ராகு (Raghu) - கருநாகன்

கேது (Kethu) -செந்நாகன்

சூரியனார் கோவில்

திங்களூர் கைலாசநாதர் கோயில்

சீர்காழி வைத்தீசுவரன் கோயில்

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்

ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில்

கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில்

திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்

திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்

கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில்

திருநரையூர் ராமநாதர் கோயில், தஞ்சாவூர்

பவளமலை முத்துகுமார சுவாமி கோயில், ஈரோடு

வன்னிவேடு அகத்தீசுவரர் கோயில், வேலூர்

செவிலிமேடு கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம்

மேலத்திருமணஞ்சேரி லட்சுமிநாராயணப் பெருமாள் கோயில், நாகப்பட்டிணம்

சின்னவெண்மணி பீமேஸ்வரர் கோயில், காஞ்சிபுரம்

திருவாலந்துறை சோழீசுவரர் கோயில், பெரம்பலூர்

பாளையங்கோட்டை பகவதி அம்மன் கோயில், திருநெல்வேலி

வெள்ளலூர் தேனீஸ்வரர் கோயில், கோயம்புத்தூர்

முட்டம் நாகேசுவரர் கோயில், கோயம்புத்தூர்

மூலனூர் சோழீஸ்வரர் கோயில், திருப்பூர்

திண்டுக்கல் தண்டாயுதபாணி திருக்கோயில்

சின்னாளப்பட்டி சதுர்முக முருகன் கோயில், திண்டுக்கல்

ராஜபதி கைலாசநாதர் கோயில், துத்துக்குடி

சவுகார்பேட்டை ஏகாம்பரேசுவரர் கோயில், சென்னை

திருவொற்றியூர் தட்சிணாமூர்த்தி கோயில், திருவள்ளூர்

கொழுமம் தாண்டேசுவரர் கோயில், கோயம்புத்தூர்

கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி கோயில், காஞ்சிபுரம்

வடநாகேஸ்வரம் நாகேஸ்வரர் கோயில், காஞ்சிபுரம்

காங்கேயநல்லூர் சுப்பிரமணியசாமி கோயில், வேலூர்

2 ) கிரகங்கள் - தீர்த்தங்கரர்கள்

புதன் - மல்லிநாதர்

சுக்ரன் - புஷ்பதந்தர்

சனி - மூனிசுவிரதர்

குரு - வர்த்தமானர்

சூரியன் - பத்மபிரபர்

சந்திரன் = சந்திரபிரபர்

செவ்வாய் - வாசுபூஜ்யர்

கேது - பார்சுவநாதர்

ராகு - நேமி

சூரியன்:

நவகிரகங்களில் முதன்மையானது சூரியன். இக்கிரகத்திற்குண்டான கோவில், கி.மு.1100 -ஆம் ஆண்டு முதலாம் குலோத்துங்கச் சோழன் என்னும் மன்னனால், கோவில்களின் சொர்க்கபூமி கும்பகோணத்தில் இருந்து 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சூரியனார் கோவில் என்னும் ஊரில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் வாழ்க்கையில் வெற்றியையும், வளத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்கும் சூரிய கடவுள் என்னும் சூரியன் கிரகத்திற்குண்டானது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் மத்தியில், (தமிழ் தை மாதம் ஆரம்பம்) உழவர் திருநாளாம் பொங்கல் திருநாள், இந்த சூரியக்கடவுளை முன்னிறுத்தியே கொண்டாடப்படுகின்றது. கண்களால் காணக்கூடிய தெய்வமாக, வணங்கக் கூடிய தெய்வமாக, சக்திவாய்ந்த தெய்வமாக மனதில் கொண்டு பல்வேறு உருவகங்களில் ஆராதிக்கப் படுகின்றார். இக்கிரகத்தின் அதி தேவதை சிவனாக கொள்ளப் படுகிறது. சூரிய பகவான் கிரகத்திற்கு சாயா மற்றும் சுவர்ச்சா என்னும் இரண்டு துணைவிகளுடன் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் இந்த கிரக மணடலத்தில் பவனி வருகின்றார் என்று கொள்ளப்படுகின்றது. மேலும் சூரியனை நடுநாயகமாகக் கொண்டு மற்ற கிரகங்கள் தங்களின் இருப்பிடங்களை அமைவிடங்களாகக் கொண்டுள்ளன.

ராகு :

திருநாகேஸ்வரம், ராகு கிரகத்தின் புனித, பெரிய கோவில் கோவில்களின் புனித நகரம் என்றழைக்கப்படும் கும்பகோணத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. புராண வரலாற்றில் இந்த ராகு பகவானின் இத்தலத்தில், ஆதிசேஷன், தக்ஷன் மற்றும் கார்கோடன் போன்ற நாகங்கள் சிவபெருமானை வழிபட்டுள்ளன என்றும், நலமஹாராஜா என்னும் மன்னனும் சிவனை இத்தலத்தில், திருநள்ளாரைப் போல வழிப்பட்டதாகவும் கூறப் படுகிறது. இந்த ராகுவே ஒருவரின் ஆற்றலை வலிமை படுத்தவும் எதிரியை நண்பனாக மாற்றவும் முக்கிய காரணகர்த்தாவாக உள்ளார். இந்த ராகுவின் அதிதேவதை துர்காதேவி ஆகும். மூலநாதரின் பெயர் நாகேஸ்வரர் மற்றும் தேவியின் பெயர் கிரிகுஜாம்பிகை ஆவார். இத்தேவியை காலையில் சிறுமியாகவும், மதியத்தில் இளம் பெண்ணாகவும், மாலையில் தேவியாக, பெண்ணாகவும் அலங்கரிங்கப்படுகிறார். இத்தலத்தில் ராகு தனது தேவியுடன் எழுதருளுகின்றார். ராகு காலத்தில் அபிஷேகம் செய்யப்படும் பாலானது அதிசயக்க விதத்தில் நீலநிறமாக தோன்றுகின்றது. பொதுவாக ராகு தோஷமுள்ளவர்கள், இங்கு வந்து ராகு காலத்தில் அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டு தங்களின் தோஷ நிவர்த்தி செய்து கொள்கின்றனர்.

செவ்வாய் :

கும்பகோணத்தில் இருந்து 55 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வைத்தீஸ்வரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது வைதீஸ்வரன் கோவில். இக்கோவிலில் அங்காரகன் என்று அழைக்கப் படும் செவ்வாய் கிரகத்திற்கு சிறப்புத்தலமான கோவில் உள்ளது. ஆங்கிலத்தில் ‘மார்ஸ்’ (மார்ச்) என்று அழைக்கப் படும் இந்த செவ்வாய் கிரகம் வீரத்தையும், வலிமையையும், வெற்றியையும் வழங்கக் கூடிய தகுதி உடையவர். பக்தர்கள் கோவிலில் நுழைந்தவுடன் முதலில் சரும உபாதைகளுக்கு சிறந்த நிவாரணியாகக் கருதும் குணங்களைக் கொண்ட திருக்குலமாகிய சித்தாமிர்த குளத்தில் குளியல் செய்கின்றனர். மேலும் இத்தலத்திற்கு விஜயம் செய்து, செந்நிற, மண வாழ்க்கைக்கு ஆதாரமான செவ்வாயை ஆராதனை செய்தால், செவ்வாய் தோஷம் நீங்கப் பெற்று விரைவில் மணவாழ்க்கை அமைகின்றது என்பதும் ஒரு நம்பிக்கையாகும். ரோமானியர்களும் இவரைத் தங்களின் குருவாகக் கொண்டுள்ளனர். சுப்ரமணிய கடவுளின் ஆதிக்கத்தில் உள்ள செவ்வாய் பூமாதேவியின் மைந்தனாவார். இவ்விடம் புள்-இருக்கு-வேலூர் என்றும் அழைக்கப் படுகிறது. ஜடாயு என்னும் கழுகு சீதா தேவியை கடத்திச் செல்ல முயன்ற ராவணனை வீரத்துடன் தடுத்து எதிர்த்த பொழுது இராவணனால் சிறகுகள் வெட்டப்பட்டு, இத்தளத்தில் விழுந்திறந்து மோட்சகதி அடைந்ததாக இராமாயண காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதும் நாம் இந்த ஜாடாயுவை தகனம் செய்த இடமான ஜடாயு குண்டத்தை நாம் காணலாம்.

இந்த வைதீஸ்வரன் கோவில் எப்பொழுதும் பக்தகோடிகள் நிரம்பி காணப் படுகின்றது. இங்கு அங்காரகன் என்னும் செவ்வாய் -உடன் வைத்தியநாத சுவாமி (சிவா) தனது துனைவி தையல் நாயகி என்கின்ற வலம்பிகையுடன் எழுந்தருளி தனதருளால் பக்த கோடிகளுக்கு ஆரோக்கியத்தினையும் வளமான வாழ்க்கையினையும் அருள் பாலிக்கின்றார். இங்குள்ள செல்வ முத்து குமார சுவாமி என்னும் முருக கடவுளுக்கு கிருத்திகையில் விசேஷ பூஜைகளும், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. நாயன்மார்கள், அருணகிரிநாதர், குமரகுருபரர், காளமேக புலவர் ஆகியோர் இங்கு வந்து பல பாடல்களால் இத்தலத்தினையும் எழுத்தருளும் தெய்வங்களையும் வாழ்த்திப் பாடியுள்ளார்கள். அங்காரகன் எனப்படும் செவ்வாய் கிரகத்திற்கு வேறு எங்கும் காணாத சிறப்பிடமாக இத்தலம் கருதப் படுகின்றது.

சந்திரன் :
திங்களூர், என்றழைக்கப்படும் இந்த தலம் எப்போது, யாரால் அமையப் பெற்றது என்று ஐயப்பாடு இருந்தாலும், வரலாற்று ஆசிரியர்கள், பக்தி மார்க்க காலம் ஆகிய , கி.மூ.ஏழாம் நூற்றாண்டிற்கு வெகுகாலம் முன்பே, ஆங்கிலத்தில் மூந் என்றும் சமஸ்கிருதத்தில் சந்திரன் என்றும் தமிழில் திங்கள் என்றும் அழைக்கப்படும் இந்த கிரகத்துக்குரிய இத்தலம் அமைந்திருக்க வேண்டும் என்று கருதுகின்றார்கள். நீண்ட ஆயுளையும் வசதியான வாழ்க்கையையும் பெற இக்கிரகத்தினை ஆராதிக்கின்றனர். ஜோதிடத்தில், இந்த சந்திரன் வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தங்களையும், துன்பங்களையும் போக்கக் கூடிய கிரகமாக கூறப்படுகிறது. தேவி பார்வதி இக்கிரகத்தின் அதி தேவதை ஆவார். கும்பகோணத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இத்தலம்.
சனி :

திருநள்ளார், கோவில்களின் சொர்க்க பூமியான கும்பகோணத்தில் இருந்து 55 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஆங்கிலத்தில் ஸ்யாடர்ந் என்றும் தமிழில் சனீஸ்வரன் என்றும் அழைக்கப்படும், இக்கிரகத்திற்கு அமைந்துள்ள ஒரே கோவிலாகும் இத்தலம். தனது வான வெளி சஞ்சாரத்தின் பொழுது, இத்தளத்தின் மீது தனது அனைத்து ஆதிக்கத்தையும் கொண்டுள்ள, இந்த சனி கிரகத்தை, புராணக் கதைகளில் புகழ்பெற்ற நலமஹாராஜா இங்குள்ள நளதீர்த்தம் என்னும் குளத்தில் குளித்து, ஆராதித்து, தனது பெரும்துன்பங்களில் இருந்து விடுதலை அடைந்ததை அக்காவியம் குறிப்பிடுகிறது. இத்தளத்தில் உள்ள நளதீர்த்தம் என்னும் குளத்தில் குளித்து, சனி பகவானை ஆராதித்தால், சனி கிரகத்தால் ஏற்படும் எல்லா வித துரதிருஷ்டங்களும், துன்பங்களும் கழுவப்பட்டு, நிவர்த்தி பெறலாம் என்ற நம்பிக்கை நிலவுகின்றது. இந்த சனி கிரகம் ஒருவரின் ஜாதகத்தில், ஜனன காலத்திலும், சஞ்சார காலத்திலும் தனது இருப்பிடம் முகாந்திரமாக அந்த ஜாதகருக்கு துன்பங்களும், தொல்லைகளும், துயரங்களும் கொடுப்பவர் எனவும், அதேபோல் ஈடாக இவரை மனப்பூர்வமாக ஆராதிக்கும் பக்தர்களுக்கு நலம் பயக்கும் நல்லவராகவும் இருப்பார் என்றும் ஜோதிட குறிப்புக்கள் கூறுகின்றன. இந்த சனி கிரகத்தின் அதி தேவதை யமதர்மா ஆகும். நாச விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளையும் அதிசயிக்க வைக்கும் தகவல்களும் உண்டு. இத்தளத்தை கடக்கும் விண்வெளி கலங்கள் ஒரு குறிப்பிட்ட நேரம் வரையிலும் எந்த ஒரு சமிக்கையும் வழங்காமல் இருந்ததைக் கண்ட விஞ்ஞானிகள் அவ்விடம் இதுவென கண்டு பல ஆராய்ச்சிகளின் மத்தியில் ஒன்றும் அறியாமல் அதிசயப்பட்டுப் போனார்கள். இதனைப் பற்றிய குறிப்புக்களை தங்களின் பதிவேடுகளில் பதிவும் செய்துள்ளார்கள்.

சுக்கிரன்:

கோவில் நகரமான கும்பகோணத்தில் இருந்து 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கஞ்சனூர், ஆங்கிலத்தில் வீனூஸ் என்றும் தமிழில் சுக்கிரன்(வெள்ளி) என்றும் அழைக்கப்படும் கிரகம் தொடர்புடைய மதுரை ஆதீனத்தால் நிர்வகிக்கப் படுகின்ற ஒரு சிவஸ்தலமாகும். இத்தலம் திருவாடுதுறை என்னும் அமைதியான கிராம சூழ்நிலையில் அமைந்துள்ளது. இத்தலம் அக்னிஸ்தலம் என்றும், பிரம்மபுரி என்றும், பலாசவனம் என்றும் அழைக்கப் படுகிறது. சிவ பார்வதி திருமண கோலத்தை பிரம்மன் இங்கு கண்டதாக ஐதீகம். தங்களின் துனைவிமார்களின் நலம் நாடி பக்தர்கள் இங்கு வருகின்றனர். சுக்ரா அல்லது வீனஸ் என்னும் இந்த கிரகம் நல்ல கல்வி அறிவுடன், வளமான சுகமான வாழ்க்கையையும், வம்சாவழியையும், நீண்ட ஆயுளையும், செல்வ சம்பத்துக்களையும் வழங்கக்கூடியவர் ஆவார். இக்கிரகத்தின் அதி தேவதை மகாலட்சுமி ஆவார்.

கேது :

கீழ்பெரும்பள்ளம், கும்பகோணத்தில் இருந்து 57 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள புராதன, வரலாறு கொண்ட சிவஸ்தலம் ஆகும். கேது என்னும் கிரகம் இக்கோவிலில் சிவனை வழிபாடு செய்து அமைந்துள்ளார். ராகுவும் கேதுவும் பாற்கடலில் கிடைத்த அமுதத்துடன் தொடர்புகொண்டு, சாபத்திற்கு ஆளாகி, சிவனை வழிபாட்டு, கிரக அந்தஸ்த்தையும், மனித தலையும் பாம்பின் உடலையும், பாம்பின் தலையையும் மனித உடலையும் பெற்று, இத்துன்பங்களுக்கு காரணமான சூரிய சந்திரர்களை பழி கொள்ளும் நோக்கத்துடன் கிரக சஞ்சாரம் செய்வதாக ஜோதிடக் குறிப்புக்கள் கூறுகின்றன. அதன் பலனாகவே சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் நிகழ்வதாகவும் கூறப் படுகின்றன. இத்தலத்தில் கேதுவுக்கு தனிக் கோவில் உண்டு. கேது என்னும் இக்கிரகம் தனது பக்தர்களுக்கு வளமான வாழ்க்கையையும், நல்ல ஆரோக்கியத்தையும், செல்வ சம்பத்துக்களையும், கால்நடை போன்றவைகளையும் பொதுவாக அனைத்து நலன்களும் அளிப்பவர் என்று கூறப் படுகிறது. இக்கேதுவுக்கு அதி தேவதைகள் கணேசர் எனப்படும் விநாயகக் கடவுளும், இந்திரனும் ஆவார்கள்.

குரு:

ஆலங்குடி, கும்பகோணத்தில் இருந்து 19 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குருஸ்தலம். தக்ஷிணாமூர்த்தி மூலவராகக் கொண்ட இத்தலத்தில் ஆங்கிலத்தில் ஜூபிடர் என்று அழைக்கப்படும் குரு(வியாழன்) என்னும் இந்த கிரகம், கற்றுளியால் சுவற்றில் புடைப்பு சிற்பமாகக் செதுக்கப்பட்டு, காணப்படுவது சிறப்பு அம்சமாகும். குருபெயர்ச்சி எனப்படும் காலகட்டத்தில் இந்த தலத்திற்கு அதிக அளவில் வருகை தருகின்றனர் பக்தகோடிகள். பார்வதி தேவியானவள் இங்குள்ள அமிர்தபுஷ்கரணி கரையில் பிறந்து, பின், சிவனுடன் இணைந்ததாக ஐதீகம். நோய் நொடிகளில் இருந்து நிவாரணம் கொடுப்பதும், பூர்வ புண்ணிய பாவங்களில் இருந்து நலம் தருவதும், நீண்ட ஆயுள், வலிமை, ஆரோக்கியம், குழந்தை பாக்கியம், நல்ல கல்வி வழங்குவதும் இக்குரு கிரகத்தின் ஆதிக்கமாகும். ‘குரு பார்க்க கோடி புண்ணியம்’ என்பது

புதன் :

திருவெண்காடு, இத்தலம் கும்பகோணத்திலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது. வால்மீகி ராமாயணத்தில் இதனைப் பற்றிய குறிப்பு உள்ளது. ஆகையால் 3000 ஆண்டுகளுக்கு மேல் மிகப் பழமை வாய்ந்ததாக கருதப் படுகிறது. நவக் கிரகங்களில் இறுதியாக கருதப்படுகின்ற புதன் என்றும் ஆங்கிலத்தில் மர்க்யுரீ என்றும் அழைக்கப் படும் இக்கிரகம் ஆற்றலையும் அறிவையும் கொடுக்கக் கூடிய கிரகமாக கருதப் படுகிறது. அதிமேதாவிதனத்தையும், அறிவுக் கூர்மையையும், செல்வ சம்பத்தையும் தனது பக்தர்களுக்கு வழங்குவதில் முதன்மை பெற்றது. இக்கிரகத்தின் அதி தேவதை மகா விஷ்ணு ஆவார். சைவதிருமறைகளிலும், சாஸ்திரங்களிலும் இத்தலம் குறிப்பிடப்படுகிறது. காசிக்கு இணையான அந்தஸ்த்தை பெற்றுள்ளது. காசியில் செய்யும் சிரார்த்தங்களுக்கு என்ன பலனோ அதே பலன் இத்தலத்திலும் உண்டு. அனைத்து கர்ம காரியங்களும் காசிக்கு ஈடாக இங்கு நடைபெறுகின்றது. புதன் என்று தமிழிலும், மர்க்யுரீ என்று ஆங்கிலத்திலும் அழைக்கப் படும் இக்கிரகம் கல்வியும், கலைத்துறையும் தனது அதிகாரத்தில் கொண்டது.

கிரக வழிபாடும் பலன்களும்...
சூரியனை வழிபட்டால் வாழ்வில் மங்களமும், ஆரோக்கியமும் கிடைக்கும்.
சந்திரனை வணங்கினால் புகழ் கிடைக்கும்.
செவ்வாயை (அங்காரன்) வழிபட்டால் தைரியம் அதிகரிக்கும்.
புதனை வழிபட்டால் நற்புத்தி கிடைக்கும்; அறிவாற்றல் பெருகும்.
குரு பகவானை (வியாழன்) வணங்கினால் செல்வமும் புத்திர பாக்கியமும்கிடைக்கும்.
சுக்கிரனை வணங்கினால் நல்ல மனைவி அமையும், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.
சனி பகவான் வழிபட்டால் ஆயுள் பலம்பெறும்.
ராகுவை வணங்கினால் பயணத்தால் நன்மை கிடைக்கும்.
கேதுவை வணங்கினால் ஞானம் பெருகும்; மோட்சம் கிடைக்கும்; ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

3 ) கிழமைக்கு ஏற்றவாறு அந்தந்த கிரகத்துக்கு உரிய கடவுளை வணங்கும்போது கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

பலன் தரும் பாடல் ⬇️⬇️

திருஞானசம்பந்தரின் 'கோளறு திருப்பதிகத்தின் முதல் பாடல்:
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே. ⬅️⬅️

இந்தப்பாடலை நவகிரகங்களை சுற்றிய பிறகு கோயில் பிராகாரத்தில் அமர்ந்து, மனதிற்குள் பாராயணம் செய்தால் நவகிரக தோஷங்கள் விலகும். ⬅️⬅️

நன்றி .

முரசு அஞ்சல் 2016 .