Wednesday 19 September 2018

தோஷங்கள் என்பது என்ன?

தோஷங்கள் என்பது என்ன?
குழந்தை பிறக்காமல் இருப்பது மட்டுமே புத்திர தோஷம் அல்ல. இந்த புத்திர தோஷங்கள் பல வகைப்படும்.
1. குழந்தை பிறந்து ஒன்றிரண்டு வயதில் இறந்து போவதும் புத்திரதோஷம்தான்.
2. மூளை வளர்ச்சி குறைவாக குழந்தைகள் பிறப்பது புத்திரதோஷம்தான்.
3. பருவ வயதை எட்டிய ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ திடீரென அகால மரணம் அடைவதும் புத்திரதோஷம்தான்.
4. காலம் கடந்து திருமணம் நடந்து, அந்த திருமணமும் நிலைக்காமல் தன் பெற்றோர் வீட்டிற்கு பெண் குழந்தைகள் திரும்பி வருவதும் புத்திரதோஷம்தான்.
5. குழந்தைகள் பிறந்தும் அந்த குழந்தைகளால் எந்த பயனும் இல்லாமல் போவதும், எதிரியாக மாறுவதும் புத்திரதோஷம்தான்.
இத்தோஷங்களை போக்க வியாழக்கிழமை தோறும் குருபகவானை வழிபாடு செய்து வருதல் சிறந்தப் பலனைத்தரும். குலதெய்வ பூஜை செய்வது, பித்ரு காரியங்களை தவறாமல் செய்வதும் சிறப்பு. எந்த கிரகத்தால் புத்திரதோஷம் ஏற்பட்டது என்பதை கண்டறிந்து, அந்த கிரகத்தின் அதி தேவதைக்கு பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் வழிபாடு செய்வது நல்லது.

No comments:

Post a Comment