Wednesday 19 September 2018

புத்திரதோஷம்

1.மந்திரசாபம், பிரேத சாபத்தால் ஏற்படும் புத்திரதோஷம்
பில்லி சூன்யம் ஏவல் செய்பவர்கள், பில்லி சூன்யத்தால் மற்ற குடும்பத்தை சர்வநாசம் செய்கிறவர்கள், குட்டிச்சாத்தான், மோகினி, யட்சயினி போன்ற தேவதைகளை வசியம் செய்து வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்துகிறவர்களுக்கு இச்சாபம் ஏற்படும்.
வாரிசு இல்லாமல் வாழும் தம்பதிகளிடம் இருந்து சொத்து சுகங்களை அபகரித்துக் கொண்டு, அவர்கள் இறுதி காலத்தில் அநாதையாக இறந்துப் போனால், அவர்களுக்கு உரிய கர்மாக்களை செய்யாமல் போனால் அவர்கள் சாபமே பிரேதசாபம் என்று பெயர். இறப்புக்கு பிறகு திதிக்கடமைகள் செய்யா விட்டால் ஆத்மா மேலுலகம் செல்லாமல் பிரேத உடலோடு அலைந்து கொண்டிருக்குமாம். அவ்வாறு வேதனைக்கு உள்ளாகும் ஆத்மாக்கள் தரும் சாபமே பிரேத சாபம் என்று பெயர்.
மேலும் சாதுக்கள், ஞானிகளை அவமதித்தல், துன்புறுத்துதல், கோவில் சொத்துக்களை கொள்ளையடித்தல், அபகரித்தல், சிவனடியார்களை நிந்தித்தல் போன்ற காரணங்களாலும் புத்திரதோஷம் ஏற்படுவதுண்டு.

2.பத்தினி சாபத்தால் ஏற்படும் புத்திரதோஷம்
கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழும் பெண்கள், மனதாலும் உடலாலும் கணவனுக்கு துரோகம் செய்யாதப் பெண்களை பத்தினிகள் என்கிறது வேதங்கள். அத்தகைய பெண்களை தவறான கண்ணோடத்தில் அணுகுவதும், அவர்களிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சிப்பதும் குற்றம்.
இத்தகைய பெண்கள் விடும் சாபம் அந்த தலைமுறையோடு அந்த வம்சமே அழிந்து போகும் என்பதுதான் வேதத்தின் வாக்கு.
பத்தினியான சீதையை கவர்ந்து சென்ற இராவணன், சர்வ வல்லமை பெற்றவனாக இருந்தும், தவப் புண்ணியங்கள் சேர்த்திருந்தும் இறக்க நேரிட்டது. சீதையின் சாபத்தால் அவனது வம்சமே இல்லாமல் அழிந்துப் போனது.
பத்தினியான பாஞ்சாலியின் சாபத்தால் துரியோதனன் அழிந்தான். அந்த கௌரவ குலமே ஒருவர் கூட மீதம் இல்லாமல் மண்ணோடு மண்ணாக மறைந்துப் போனது. புராண காலம் என்றில்லை எக்காலத்திலும் பத்தினிகளுக்கு பாதகம் நினைப்பவர்களுக்கு வம்ச விருத்தி இருக்காது.
ஜாதகத்தில் இத்தோஷத்தை அறிந்து கொள்ள நீச்சம் பெற்ற குருவோடு சனிபகவான் இணைந்திருப்பது, அது ஐந்து அல்லது ஒன்பதாம் இடமாக இருப்பது தோஷத்தின் அடையாளம்.

3.பிராமண சாபத்தால் ஏற்படும் புத்திரதோஷம்
வேதங்களின் வழி நடப்பவர்கள் பிராமணர்கள். பொய் களவு சூது என்பது இல்லாமல் நேர்மையாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள். அவ்வாறு நேர்மையாக தர்மசாஸ்த்திர நியதிப்படி வாழும் பிராமணர்களை தூஷித்தல், அவமானப்படுத்துதல், அவர்களுக்கு துரோகம் செய்தல் போன்ற காரணங்களால் வரும் புத்திரதோஷம் பிராமண தோஷம் என்று பெயர்.
ஜாதகத்தில் இத்தோஷத்தை அறிந்து கொள்ள குருவோடு சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் இணைந்து ஐந்து அல்லது ஒன்பதாம் இடத்தில் சஞ்சரிப்பதே தோஷத்தின் அடையாளம்.
4.மாதுல சாபத்தால் ஏற்படும் புத்திரதோஷம்
மாதுலன் என்பது தாய்மாமனை குறிக்கும். தாய்மாமனுக்கு செய்யும் துரோகம், சொத்து மோசடிகள், நம்பிக்கை துரோகங்கள், மாமன் மகளை திருமணம் செய்து, அப்பெண் சந்தோஷமாக வாழாமல் கண் கலங்குவதால் தாய்மாமனுக்கு ஏற்படும் துரயரங்கள் இந்த வரிசையில் வரும்.
இத்தகைய தோஷத்தை ஜாதகத்தில் அறிந்து கொள்ள புதன் மீன ராசியில் இருக்கும் போது, புதனோடு சனி, கேது சேர்ந்திருப்பது அல்லது புதனோடு சனி ராகு சேர்ந்திருப்பது தோஷத்தின் அடையாளம்.

5.
சகோதர சாபத்தால் ஏற்படும் புத்திரதோஷம்
இப்பிறவியிலோ அல்லது முன்பிறவியிலோ ஏற்படும் சகோதர சாபம் புத்திர தோஷத்திற்கு காரணமாக அமைகிறது. அதாவது ஒன்றாக கூடி பிறந்த அண்ணன் தம்பிகளுக்கு இடையே இடையே ஏற்படும் பகை, சொத்துக்களை ஏமாற்றி வஞ்சகம் செய்தல், சொத்துக்களுக்காக கொலை செய்தல், உடன் பிறந்த சகோதரனின் மனைவியை தவறான கண்ணோட்டத்தில் அணுகுதல் போன்ற காரணங்களால் சகோதர சாபம் ஏற்படுகிறது.
இத்தகைய தோஷத்தை ஜாதகத்தில் அறிந்து கொள்ள செவ்வாய் மூன்றாம் இடத்தில் இருந்து, சனி ராகு கேதுவோடு இணைந்து இருந்தால் இத்தோஷம் உறுதிபடும்.

6.
மாத்ரு சாபத்தால் ஏற்படும் புத்திரதோஷம்.
மாத்ரு என்பது தாயை குறிக்கும் ஒரு சொல். தாய்வழி உறவினர்களை கொடுமைப்படுத்தியும், அவமானப்படுத்தியும், அடித்து உதைத்து துன்புறுத்துதல், பத்து மாதம் சுமந்து பெற்ற தாயாரை இழித்துப் பழித்து பேசுதல், அவர்களை சரிவர கவனிக்காமல் தனித்து விட்டுவிடுதல் போன்ற காரணங்கால் மாத்ரு சாபம் ஏற்படுகிறது.
ஜோதிட ரீதியாக இத்தோஷத்தை அறிந்து கொள்ள சந்திரனோடு ராகு கேது, சனி சேர்ந்திருப்பது, புதனோடு சனி, கேது சேர்ந்திருப்பது அல்லது புதனோடு சனி ராகு சேர்ந்திருப்பது தோஷத்தின் அடையாளம்.

7.பித்ரு சாபத்தால் ஏற்படும் புத்திரதோஷம்
பித்ருக்கள் என்பது நம் முன்னோர்களை குறிக்கும். இந்த பிறவியிலோ அல்லது சென்ற பிறவியிலோ நம்மை பெற்றவர்களை சரியாக கவனிக்காமலும், அவர்கள் மனம் நோகும்படி செய்ததாலும், உண்ண உணவு, உடுக்க உடை மற்றும் உறைவிட வசதிகளை செய்து தராமலும், கடைசிக் காலத்தில் அருகில் இருந்து பராமரிக்காமல் அலட்சியப்படுதியதாலும் வருகிற தோஷமே பித்ருசாபம்.
இறந்தவர்களுக்கு உரிய திதி கடமைகளை செய்யா விட்டாலும் பித்ரு சாபம் பின்தொடரும் என்பார்கள். ஆக இத்தகைய தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பித்ரு சாபத்தால் புத்திர தோஷம் வருகிறது. இதை ஜோதிட ரீதியாக அறிந்து கொள்ள ஒன்பதாம் இடத்தில் ராகு கேது சனி போன்ற கிரகங்கள் இருப்பது, சூரியனோடு இக்கிரகங்கள் சேர்ந்திருப்பது இத்தோஷத்தின் அடையாளம்.

8.சர்ப்ப சாபத்தால் ஏற்படும் புத்திரதோஷம்
பாம்புகளை விஷ ஜந்துக்களாக பார்க்கிறோம். ஆனால் நம் முன்னோர்கள் பாம்புகளை தெய்வத்திற்கு சமமாக வைத்தார்கள். இந்த பூமியை தாங்கி நிற்பதே ஆதிசேஷன் என்ற பாம்புதான் என்கிறது புராணங்கள். பாம்பு தீண்டி இறக்க வேண்டும் என்ற விதி அமைப்பு இருந்தால் மட்டும் பாம்பு நம்மை தீண்டுமே தவிர, மற்ற நேரங்களில் மனிதரை கண்டால் அது விலகியே ஓடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இருக்கட்டும்.
இந்த பிறவியிலேயோ அல்லது முன் பிறவியிலேயோ பாம்புகளை அடித்துக் கொன்ற பாவம், பாம்பு புற்றுகளை அழித்த பாவம் போன்ற காரணங்களால் சர்ப்ப சாபம் ஏற்பட்டு புத்திரதோஷம் உண்டாகிறது. ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் ஒன்பதாம் இடத்தில் ராகு கேதுக்கள் இருப்பது தோஷத்தின் ஒரு அடையாளம்.
இந்த இடங்களில் பாம்பு கிரகங்கள் இருந்தாலும், அவரவர் பூர்வ புண்ணியத்திற்கு ஏற்ப குழந்தைப் பாக்கியத்தை பெறுகிறவர்களும் இருக்கிறார்கள்.

nandri : senthil kumar

No comments:

Post a Comment