Friday 6 May 2022

Root cleaner இருதய அடைப்பை நீக்கும் மருந்து

*Root Cleaner*
==============
ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்புகளை கரைத்து மாரடைப்பில் இருந்து காக்கும் சக்தி வாய்ந்த மூலிகை தீநீர்.

இந்த தீநீர் ரத்தக்குழாயில் உள்ள அடைப்புகளை கரைத்து அதை ஜீரணிக்க உதவுகிறது. கொலாஸ்ட்ரால் அடைப்பை கரைகின்றது. ரத்த உறைவால் ஏற்பட்ட அடைப்புகளை கரைகின்றது. வெரிகோஸ் வெயினால் ஏற்பட்ட இரத்த கட்டுகளை கரைக்கின்றது.

கொரானா வைரஸால் பாதித்தவர்களுக்கு ரத்தக்குழாயினுள் ரத்த உறைவு துணுக்கினால் அடைப்பு ஏற்பட்டு திடீரென மாரடைப்பு ஏற்படுகின்றது அதே போல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ரத்த உறைவு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுவதாக பரவலாக பேசிக் கொள்கிறார்கள்.

கொரோனா தடுப்பு ஊசி போட்டு கொண்டவர்களுக்கு, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டாலோ நடக்கும்போது மூச்சு வாங்கினாலோ அவர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்படலாம்.

இந்த Root cleaner என்ற மூலிகை தீநீரை சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்படவதிலிருந்து தப்பிக்காம்.

இந்த தீநீர் இரத்த உறைவு துணுக்குகளால் ஏற்பட்ட அடைப்புகளையும், கொலஸ்ட்ராலினால் ஏற்பட்ட அடைப்புகளையும் கரைக்கும். இதன் காரணமாக உயர்ந்த ரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.

*தேவையான பொருட்கள்*

1) எலுமிச்சம் பழச்சாறு ஒரு லிட்டர்

2) பூண்டுச்சாறு ஒரு லிட்டர்

3) சின்ன வெங்காயச் சாறு ஒரு லிட்டர்

4) இஞ்சிச் சாறு ஒரு லிட்டர்

5) மாதுளம் பழச்சாறு ஒரு லிட்டர்

6) புதினா இலைச்சாறு ஒரு லிட்டர்

*செய்முறை*

இவைகளை ஒரு பிளாஸ்டிக் கேனில் ஊற்ற வேண்டும்.

1) சதகுப்பை =250 கிராம்

2) ஓமம் = 250 கிராம்

3) சோம்பு = 250 கிராம்

4) பட்டை = 250 கிராம்

5) ஏலரிசி = 100 கிராம்

6) கிராம்பு = 150 கிராம்

7) கருஞ்சீரகம் = 150 கிராம்

8) மருதம் பட்டை = 250 கிராம்

9) கர்கத் பூ = 100 கிராம்

10) வெண்தாமரை பூ = 100 கிராம்

11) ரோஜா பூ = 100 கிராம்

12) செம்பருத்தி பூ = 100 கிராம்

13) சந்தனம் = 100 கிராம்

*செய்முறை*

இவைகளை ஒன்றிண்டாக இடித்து 15 லிட்டர் தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைத்து, அதன் பின்பு அடுப்பேற்றி 10 லிட்டராக சுண்ட வைத்து திப்பியை நீக்காமல் முன்பு கேனில் ஊற்றி வைத்த மூலிகை சாறுகளுடன் கலந்து வைக்கவும். தினந்தோறும் நன்கு கலக்கி விடவும் இந்த கலவை கெட்டுப்போகாதுமசாலா வாசம் வீசும் பத்து நாட்களுக்கு பின்பு  திப்பியை நன்கு வடிகட்டி கொள்ளவும்.

இந்தக் கலவை நீரை வாலையில் வடித்துக் கொள்ளவும்.  எண்ணெய் உறவான தீநீர் கிடைக்கும் அதாவது வழவழப்பான நீர் கிடைக்கும் இந்த Root Cleaner என்ற Heart drops ஐ  பட்டதாரி மருத்துவர்களும் பாரம்பரிய சித்த மருத்துவர்களும் என்னிடம் வாங்குகின்றனர்.

 அற்புதப் பலனை தரும் இந்த மூலிகை தீநீரை திறமையுள்ள மருத்துவர்கள் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். தீநீர் என்பதால் கெட்டுப்போவதில்லை. சாப்பிடுவதற்கு சுலபமானது சிறிது காரம் புளிப்பு சுவையும் உள்ளது.

சிலர் இதனை எலுமிச்சம் பழச்சாறு இஞ்சிச் சாறு பூண்டு சாறு வினிகர் மற்றும் தேன் கலந்து சிரப் போல் தயார் செய்கிறார்கள். இதில் எரிச்சல் தன்மை அதிகம் உள்ளதால் சிலருக்கு வயிற்றில் புண்களை உண்டாக்கும். 

ஆனால் இது தீநீர் என்பதால் எரிச்சல் தன்மை இல்லை அதனால் வயிற்றில் புண்களை உண்டாக்காது வாலையில் வடிப்பதால் மூலிகைகளின் சத்துக்கள் மட்டுமே வெளியேறி நமக்கு எண்ணெய் கலந்த நீராக கிடைக்கும் அதனால் சாப்பிடுவதற்கும் சுலபமானது. எளிதில் ஜீரணிக்கும் தன்மை உடையது. தீநீருக்கு பலன்கள் அதிகம்.

இந்த தீ நீருடன் ரச வீரப்பதங்கம், முப்பூர பதங்கம் போன்றவைகளை சேர்த்து தர ரத்தக்குழாயினுள் எங்கு அடைப்புகள் ஏற்பட்டாலும் எளிதில் கரையும். மருந்து சாப்பிட்ட முதல் நாளே வலி நிற்கும். மருந்தை தொடர்ந்து சாப்பிட மாரடைப்பில் இருந்து தப்பிக்கலாம்.

ரத்தக்குழாயினுள் ஏற்பட்ட அடைப்புகளுக்காக ஆங்கில மருந்து சாப்பிடுபவர்களும் ஆங்கில மருந்துகளுடன் இதனையும் துணை மருந்தாக ,  உணவுப் பொருளாக எடுத்துக் கொள்ளலாம்.

*உட்கொள்ளும் அளவு*

7 மில்லி முதல் 10 மில்லி வரை இந்த தீ நீரை எடுத்து 200 மில்லி வெதுவெதுப்பான நீரில் கலந்து காலை மாலை உணவிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு உட்கொள்ள வேண்டும்.

நன்றி  - jeevasakthi ஐயா

225ml விலை ரூ.350 +50(கொரியர்).கிடைக்கும் தமிழகம் முழுவதும் .. அழைக்க ராஜேந்திரன் 9952206050..

No comments:

Post a Comment