Thursday 30 August 2018

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர மொழி( பாகம்-1)

*தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர மொழி( பாகம்-1)*
*(தமிழ் மொழியின் ரகசியங்களை அறிய தொடரை முழுமையாக படியுங்கள்....... பல ஆழமான உண்மைகள் புரியும்.)*
*முத்தமிழ் - ஆய்வு*
***********************
தமிழ் மொழி ஆய்வில் பல அறிய விடயங்கள் கிடைத்தன.
தமிழ் மொழி *மூன்று* வகையாக உள்ளது
அவை முறையே
*இயல்* தமிழ்
*இசை* தமிழ்
*கூத்து தமிழ்*(நாடக தமிழ்)
இந்த மூன்று தமிழ் அறியாமல் படிக்காமல் *யாரும் சித்தராக* முடியாது
இந்த மூன்று தமிழை கற்றால் மனிதனை பற்றியும் இறைவனை பற்றியும் எளிதாக அறியமுடியும்.
எல்லா சித்தர்களும் ஏன் *தென்னாட்டுக்கு வந்து தமிழ்* கற்றனர் என ஆராய்க
தமிழ் மொழி உயிர்மொழி அந்த உயிரை வளர்க்க தமிழ் மிகவும் பயன்பட்டது
அதாவது *அறிவு நிலையாக இயல்* தமிழ் அமைந்துள்ளது, *உணர்ச்சி நிலையே இசை* தமிழாக உள்ளது,இவ்விரு நிலையில் இருந்து *இயக்க நிலையாக கூத்து(நாடக)* தமிழ் உள்ளது.
அதாவது
ஞான சக்தி
இச்சா சக்தி
கிரியா சக்தி
இந்த மூன்று சக்திகளையே *வாலை, அன்னையாக* இருந்து நம்மை செயல்பட தூண்டுகிறாள்.
நீங்கள் ஆன்மீகத்தில் உயர்ஞான பெறவேண்டுமானால் தமிழ் மொழி அறிந்திருக்கவேண்டும்.
அதாவது மூன்று தமிழையும் நீங்கள் கற்றிருந்தால் உங்களால் பஞ்சபூதத்தை ஆளமுடியும். பிற உயிரை அழிக்கவோ ஆக்கவோ முடியும். உங்கள் உயிரை இறக்காமல் முக்தி பேறு செல்லமுடியும்.
இவை எல்லமே தமிழ் மொழியில் மறைப்பாக மிகவும் கவனமாக சொல்லப்பட்டுள்ளது.
தமிழ் மொழி அறிந்தால் நீங்கள் சாபம் கொடுத்தால் உடனே அது பலிக்கும்.
பச்சை மரத்தை எறியவைக்க முடியும்
சூரியனை தடுத்து நிறுத்த முடியும். கிரக கதிர்வீச்சை தடை செய்ய முடியும்.
அந்த காலத்தில் அரசர்கள் முனிவரின் சாபத்திற்க்கு மட்டும் அல்ல புலவர்களின் சாபத்திற்க்கும் பயம் கொண்டனர். காரணம் புலவர்கள் தமிழ்மொழி நுணுக்கமாக அறிந்துள்ளதால்.
தமிழ்மொழியில் இலக்கணம், இசையில் இந்த இரண்டில் தான் மிகுந்த சூட்சமம் உள்ளது மூன்றாவதாக உள்ள *கூத்து தமிழ் அழிக்கும் வேலை* செய்யகூடியது அதற்கு மேற்கண்ட இரண்டும் துணை செய்கிறது.
*சங்கத்தமிழ் மூன்றும்..... தா*
---------அவ்வையார்
*முத்தமிழ் அறிந்த முருகபெருமானே*
-------நக்கீரர்
*முத்தமிழே கற்று இயங்கும் மெய்ஞானிக்குச்*
*சத்தங்கள் எதக்கடி குதம்பாய்?*
*சத்தங்கள் எதுக்கடி?*
----குதம்பை சித்தர். பா10
*"முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை*
*எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை*
*நெய்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்*
*அத்தகு சோதியது விரும்பாரன்றே "*
--------திருமூலர்
--------திருமந்திரம்.
*" அருமலர் மொழியுஞான அமுர்த செந்தமிழைச் சொல்வாம் "*
ஞானவெட்டியான்
----திருவள்ளுவர்
*பண்னுடன் பழகி பைந் தமிழுணர்ந்து தெண்ரை மீதிற் றெளிந்தவர் சித்தரே "*
*சிந்தையுறு ஞானந் தெளியவுரை பாடுதற்கு*
*வந்தபஞ்ச பூதத்தின் வாழ்க்கையே- செந்தமிழ் நூல்*
-அகஸ்தியர் ஞானம் 100*
இப்படி எல்லா சித்தர்களும் தமிழ்மொழி கற்று உணர்ந்தனர்.
இதில் வள்ளலார் ஒரு படி மேலே சென்று
தமிழ்மொழி உச்சரிப்பு சாகாகலைக்கு முக்கிய பங்காகும் என வெளிப்படையாக கூறுகிறார்.
*“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,தன்னை* *நன்றாகத் தமிழ் செய்யுமாறே” –திருமூலர்*
*தொடரும்........*
நன்றி சிவசங்கர்

No comments:

Post a Comment