Thursday 30 August 2018

வாதநிவர்த்தி

வாதநிவர்த்தி
******
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்  வளிமுதலா எண்ணிய மூன்று ,
         ---திருவள்ளுவர்,
         வாதம் ,பித்தம் ,கபம் ஆகியவற்றின் சமச்சீர் இன்மைதான் பிணிகளுக்கு காரணம் .இதில் வாத நோயினால் பாதிப்போரின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகம் ,காரணம் காற்று மாசு,
           வாதநோய் வரும் முன்பும் வந்த பின்னரும் நம்மைக் காத்துக் கொள்ளும் வழிமுறைகளை இந்த பகுதியில் பார்ப்போம் .
           வாதம் 84 வகைகள் கொண்டது என நமது ஆதி மருத்துவம் கூறுகிறது .(வீண்வாதம்,பிடிவாதம் ,விவாதம் ஆகியவை இதில் சேராது) . வாத நோய் முக்கியமாக நாடிகளிலும்,முடிச்சுகளிலும் சமானன் எனும் வாயு சீர்கேடு அடைவதால் தோன்றுகிறது .
 வாத நோயை எளிதில் குணப்படுத்தும் மருத்துவம் ஒன்றை இதில் அறிந்து கொள்வோம் .    இதன் மூலம்  உங்களை நீங்களே குணப்படுத்தி கொள்ளலாம் .
                பக்கவாதம்.மூலவாதம்,அக்கினி வாதம்.சுர வாதம் .தோள்பட்டை வாதம்.நடுக்கல் வாதம் .முக வாதம் என பல வாதங்கள் உள்ளன ,இவற்றை எளிதாக குணப்படுத்தலாம்,
          காற்று மாசு ஏற்படுவதால்   வாதநோய்  அதிகரிக்கிறது ,நாம் சுவாசிக்கும் காற்றில் 78% நைட்ரஜன் 21% ஆக்ஸிஜன் கார்பன் மோனாக்ஸைடு,நைட்ரஜன் ஆக்ஸைடு ,சல்ஃபர் ஆக்ஸைடு ,ஓசோன்,மீத்தேன்,.... ஆகியவை ஒரு சுதவீதமும் கலந்துள்ளன. தொழிற்சாலை ,வாகனம் ,மனித நாகரிக வளர்ச்சி ஆகியவற்றால்  காற்று மாசு தொடர்ந்து அதிகரிக்கிறது ,இதை உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது அவசியம் ,இல்லையெனில் நோய் பெருகுவதை தடுக்க முடியாது ,குறிப்பாக வாத நோயாளிகள் அதிகரிப்பார்கள்,
            காற்று மாசுபடுவதற்கும்.வாத நோய்க்கும் என்ன தொடர்பு என்று தானே யோசிக்கிறீர்கள்?
       இருக்கிறது !
   காற்றின் மாசு நாம் சுவாசிக்கும் போது உள்ளே சென்று மூளையைத் தாக்குகிறது. ஆண்டு தோறும் 90 முதல் 120 இலட்சம் பேர் இதனால் இறக்கிறார்கள்,   மாரடைப்பு 25% பக்க வாதம் 25% நுரையீரல் நோய் 43%  இத்துடன் புற்றுநோய் தோன்றுவதும் அதிகரிப்பதாக  புள்ளி விபரம் கூறுகிறது ,
       நமது மூக்கில் உள்ள ஆல்ஃபாக்டரி எபிதீலியம் எனும் உறுப்பு நாம் வாசனையை உணர  மூளையுடன் இணைந்து வேலை செய்கிறது ,குப்பைகள் மூக்கில் வடிகட்டப்படுவதால் மூளைக்கு சென்று அவை பாதிப்பு ஏற்படுத்துவதில்லை.ஆனால் நச்சுக் காற்று இதைக் கடந்து மூளைக்கு செல்லும் போது ப்ளட் ப்ரெய்ன் பேரியர் (blood brain barrier )எனும் மூளையின் பாதுகாப்பு வளையத்தை சிதைக்கிறது,   அண்மையில் டெல்லியில் ஒரு சிறுமிக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்து உள்ளே  இருந்த   புழுக்கள் அகற்றிய செய்தியை கேள்விப்பட்டு இருப்பீர்கள்,
       மூளை பாதிக்கும்போது நோய் கிருமிகள் வளர்வது இதனால் உறுதியாகிறது, 
      இன்று பற்பல  வியாதிகள் மூளையை தாக்குகின்றன, குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் இதன் பிடியிலிருந்து தங்களை காத்துக் கொள்ள ஒரு எளிய வழிமுறை உள்ளது ,
         நாம் சுவாசிக்கும் காற்றில்  பிராண சக்தியை அதிகரிப்பதன் மூலமாக மூளையை தாக்கும்  நோய்கள் ,வாத நோய்கள் ஆகியவற்றிலிருந்து விடுபடலாம்,
1.அரச இலை, 2.அத்தி இலை 3.கருந்துளசி இலை,
       இந்த மூன்றிலும் பிராண சக்தி அதிகம் உள்ளது .
   ஆதி மருத்துவத்தில் இதன் பயன்பாடு பற்றிய குறிப்புகள் ஏராளமாக உள்ளன ,
    இந்த மூன்றையும் நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும் .சம அளவில் ஒவ்வொன்றும் எடுத்து கலந்து கொண்டு வெள்ளை பருத்தி துணியில் இட்டு சிறு மூட்டை போல் கட்டிக் கொள்ள வேண்டும் ,இதை அவ்வப்போது எடுத்து மூக்கின் அருகே வைத்து அதன் வாசத்தை நுகர வேண்டும் ,இவ்வாறு செய்து வருவது உடலுக்கு பிராண சக்தியை அதிகரிக்கும் ,வாத    நோய் வராமலும் .வந்த பின்னர் விரைவில் குணப்படுத்தவும் உதவும் , 
குறிப்பு 
   *சம அளவு என்பது மூன்றும் தலா 5 கிராம்
 *இவற்றின் வீரியம் குறைந்து விட்டால் மீண்டும் புதிதாக தயார் செய்து பயன்படுத்த வேண்டும் ,

     இந்த மருந்து வெளி உபயோகத்திற்கு  அதாவது சுவாசிக்க மட்டுமே ,
    நீங்களே இதை எளிதாக தயார் செய்து பயன்படுத்தலாம் ,நிச்சயம் அனைவரும் பயன்படுத்துவது நன்மை தரும் ,

No comments:

Post a Comment