Thursday 30 August 2018

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர உயிர் மொழி(பாகம்-7)

தமிழ் மொழி ஒரு தந்திர மந்திர உயிர் மொழி(பாகம்-7)

(தமிழ் மொழியின் மூல ரகசியங்களை அறிய முழுமையாக இந்த தொடரை படியுங்கள்..... பல வாழ்வியல் உண்மைகள் , யோக அறிவியலின் உண்மைகள் , ஆன்மிக உண்மைகள் புரியும்.)

சென்ற பதிவில் தொடர்ச்சியாக தமிழ்-சமஸ்க்ருத தொடர்பு இன்னும் ஆழமாய் தொடர்கிறது........ ம்

இப்போது சமஸ்கிருதம் பேசும் இடம் இரண்டே இரண்டு கிராமம் தான்.ஒன்று ஒரிசா மாநிலத்தில் கந்தர்புரா மாவட்டம் சியாம்சுந்தர் பஞ்சாயத்துக்குட்பட்ட  சசானா கிராமம். மற்றொன்று கர்நாடகா மாநிலத்தின் ஷிமோகா மாவட்டத்திலிருந்து சுமார் 16 கி.மீ. தூரத்தில் துங்கா நதிக்கரையில் உள்ளது மாத்தூர் கிராமம்.

 இந்தியாவில் இரண்டு கிராமங்களில்தான் இன்று வரை சமஸ்கிருதம் பேச்சுமொழியாக உள்ளது. அதில் மாத்தூர் கிராமம் மிக முக்கியமானது._

மொழியை அழியவிடமாட்டோம் என கொள்கையோடு இருக்கிறார்கள். கிராமம் என்பதால் இன்னும் உள்ளது.

நன்றாக நினைவில் கொள்ளவும் ஒரு இனம் அழிந்தால் அந்த இனத்தின் கலாச்சாரமும்,மொழியும் தானாக அழியும். நாம் இப்போது தமிழ் பேசுவது சரியான உச்சரிப்பு இல்லை என அனைவரும் அறிந்த ஒன்று. உருபடியாக பேசியது யார் என்றால் இலங்கை தமிழ் மக்கள் மட்டுமே, ஏன் 11 நாடுகள் உதவியின் மூலம் இலங்கை தமிழர்கள் கொல்லபட்டனர், யாழ்பாண நூலகம் ஏன் அழிக்கபட்டது என ஆராய்ந்தால் ஒன்று மட்டுமே விளங்கும்.அதை சிந்திக்க!!!

“நாங்கள்(போராளிகள்) எங்களுக்காக போராடவில்லை, எங்கள் இனத்திற்க்காக தான் போராடுகிறோம்.எங்கள் இனத்தின் ஒவ்வொரு நபருக்காகவும் போராடுகிறோம்”. இந்த வரி தமிழினத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களுடையது.
இதற்க்குள் என்ன என்ன உள்ளது என்று உங்களுக்கு புரியும் என நினைகிறேன்.

உலக செம்மொழிகளில் முதலில் இருப்பது தமிழ் என்றால் அடுத்து இருப்பது சமஸ்கிருதம் அதற்கடுத்து இருப்பது சீன மொழி ஆகும்.

ஒரு மொழி செம்மொழி என அறிவிக்க 11 தகுதிகள் அந்த மொழிக்கு இருக்க வேண்டும்.ஆனால் குறைந்தது 7 தகுதி இருந்தால் அது செம்மொழி என ஏற்றுகொள்வர்.

தமிழ் மொழி முழுமையாக 11 தகுதிகளை கொண்டது அதற்கடுத்து இருப்பது சீன மொழி தான் 10 தகுதிகளை உடையது.சமஸ்கிருதம் 7 தகுதிதான் ஆனால் அது பற்றி கவலை இல்லை அது அழிக்கபட்டுவிட்டது.

அப்படியானால் பார்வையெல்லாம் எதன் மீது இருக்கும்?சிந்திக்க

சீன மொழி செம்மொழியாக அறிவிக்கபட்ட ஆண்டு 1948ல், ஆனால் தமிழ் செம்மொழியாக அறிவிக்கபட்ட ஆண்டு 2004 . பலபேர் திரு.கருணாநிதி அய்யா தான் செம்மொழி பட்டம் வாங்கி தந்தார் என நினைகிறார்கள் உண்மை எது தெரியுமா?

இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புக்களினதும், அறிஞர்களினதும் நீண்ட கால முயற்சிகளைத் தொடர்ந்து , இந்திய அரசினால் தமிழ் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கீகாரம் பெற்றுள்ள முதல் இந்திய மொழி தமிழாகும்.

இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளினதும் கூட்டுக் கூட்டமொன்றின்போது, 2004 ஆம் ஆண்டு சூன் 6 ஆம் நாள் அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமால் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டது

ஆனால் இந்த விடயத்தை ……………..
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 ஆம் ஆண்டு சூன் 23 முதல் சூன் 27 வரை கோயம்புத்தூரில் கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. கோயம்புத்தூரில் 2010 இல் நடைபெற இருந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு ஈடாகத் தமிழக முதல்வர் மு. கருணாநிதி இந்த மாநாட்டை ஒருங்கிணைத்து இருக்கிறார். இந்த மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாடும் சேர்த்து நடத்தப்பட்டது.
(என்பதால் திரு.கருணாநிதி அய்யா தான் அறிவிப்பு வாங்கினார் என நாம் நினைகிறோம்.)
------- இந்த அரசியல் தகவல்கள் விக்கிபீடியா மூலம் எடுத்தது

அடுத்த பதிவில் தமிழ் மொழி, சமஸ்கிருத மொழி உபயோகம் மற்றும் மந்திரம் அவற்றின் சக்தி மற்றும் அதன் தன்மையை ஆராய்வோம்.

இன்றைய பதிவில் நாம் காண இருப்பது சமஸ்கிருதத்தில் ஒலி அமைப்புகள் மற்றும் மந்திர சக்திகள். அதாவது உலகம் இயங்குவது சப்தத்தால் என நாம் அறிந்த ஒன்று அந்த சப்தமான பல அதிர்வுகளால் இயங்குகிறது.

நம் உடல் மற்றும் இன்றி காணும் அனைத்தும் அணுக்களால் ஆனது. இந்த அணுக்கள் ஒவ்வொன்றும் அதிர்ந்து கொண்டே இருக்கிறது.இந்த அதிர்வுகளை நாம் உணர்வதில்லை.காரணம் அந்த அலைவரிசையில் நாம் இருப்பது இல்லை.

சமஸ்கிருத உச்சரிப்பு மொழி அதன் அதிர்வுகள் மிகவும் சக்திவாய்ந்தவை ஆனால் திரும்ப திரும்ப எழுப்பவேண்டிய ஒன்று அதன் எழுத்துகள் மற்றும் உச்சரிப்பு கவனமாக கையாள வேண்டும்.

பிரபஞ்சத்தில் இதன் ஒலியலைகள் தாக்கம் அந்த காலத்தில் அதிகம் எழுப்பட்டு இந்த ஒலிகள் குறிபிட்ட அலைவரிசையில் பரப்பி கண்டுபிடித்தனர். அதே அலைவரிசையில் சொன்னால் வான் மண்டலம் சென்று அதற்க்கான பலனை தரும்.

சமஸ்கிருதம் வேதமந்திரங்களுக்கு பயன்பட்டதன் காரணம் அதன்
ஒலியமைப்புகளும், அதன் அர்த்தம் மறைந்திருக்கும் விதமும் தான் காரணம்.சமஸ்கிருத ஒலியலைகள் மிகவும் நுணுக்கமானவை இந்த ஒலியலைகள் பெரும்பாலும்
பிறபொருள் மீது பிராண சக்தியை செலுத்தவும்,தன் மீது பிராண சக்தியை பெறவும் பயன்படுத்தபட்டது.

இந்த மொழி ஒலியலைகள் மிகவும் குறுக்கலைகளை கொண்டது.இது பிராண மண்டலத்தில் சென்று திரும்ப நேரம் எடுக்கும்.ஆதலால் திரும்ப திரும்ப இந்த அலைகளை எழுப்பவேண்டியதாக உள்ளது.இப்படி செய்யும் போது உடல் அணுக்களில் மாற்றம் ஏற்படும் உடல் உஷ்ணம் ஆகும்.இதை சரிசெய்ய கிருதம் என்கிற நெய்வகைகளை அதிகம் உணவில் சேர்க்கவேண்டியதாக உள்ளது.இதனால் இதன் பாதிப்பு குறைக்கபடும்.

நாம் ஏற்கனவே பார்த்தது தான் பிராணணை வெளியிட நெடில் எழுத்துகள் அதிகம் பயன்படும்.இதன் மூலம் அதிகம் பிராணன் வெளியேறினாலும, அதை காட்டிலும் அதிகம் உள்ளே வரும் ஆனால் அதற்க்கான பீஜங்கள் அறிய வேண்டும்.

நீங்கள் ஒலியை எழுப்பும் போது குறிப்பிட்ட அலைவரிசையில் பயணபடுவீர்கள் அந்த அலைவரிசையின் பண்புகள் அனைத்தும் நீங்கள் அறிவீர்கள். அதற்க்கு அதிர்வுகள் பற்றி சரியான புரிதல் இருந்தால் தான் நீங்கள் சொல்லும் மந்திரத்தின் அதிர்வுகளை உணரமுடியும்.

இந்த உலகமனைத்தும் அணுக்கலானவை அவை எப்போதும் அதிர்ந்து கொண்டே இருக்கும்.இது அறிவியல் கூறும் உண்மை.இதை நாம் எப்படி அறிவது அதானே, நீங்கள் எங்கு உள்ளீர்கள் என பார்த்தால் சுத்திகொண்டே உள்ள பூமியில் அப்படியானால் நீங்களும் அதனோடு சேர்ந்து சுத்திகொண்டே இருக்கிறீர்கள்.

இங்கு நிற்க!
நீங்கள் ஏன் உணவு சாப்பிடுகிறீர்கள் என தெரியுமா? பசிக்காக என்றால் அது நேரடியான பதில்.மறைமுகமான பதில் என்னவென்றால் பூமி சுத்துகிறது நீங்களும் சுத்துகிறீர்கள் அப்படியானால் சுத்துகின்ற ஒரு பொருள், எதன் மீது பட்டாலும், அதன் அணுஅடுக்கு குலையும் அதாவது தேய்மானம் ஏற்படும்.

எந்த பொருள் குறிப்பிட்ட வேகத்தில் தேய்க்கபடுமோ அந்த பொருள் தேய்மானம் ஆகும்

 உங்கள் உடலில் இருந்து அணுசிதறல் அனுதினமும் நடைபெறுவதால் அதனை சரி செய்ய பிராணன் உள்ள, உணவினை எடுத்து உள்ளே கொடுக்கிறீர்கள் அதனால் அதன் அடுக்கு திரும்பவும் அணுகட்டமைப்பு நடக்கிறது. இதன் மூலம் பிராண சக்தி பலம் கிடைக்கிறது.பிராணன் பலம் என்றால் உடலும் பலம் என நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம்.

உதாரணம்: நீங்கள்(சுழலும் இறக்கை) ,பூமி(மோட்டார்), வான்மண்டலம்(அழுத்தம் அல்லது விசை)
நீங்கள் பூமியோடு இணைக்கபட்டுள்ளதால் பூமி சுற்றும் இடம் வானமண்டலம், அங்கு தள்ளும் ஆற்றல் ஈர்க்கும் ஆற்றல் உள்ளதால் அந்த அழுத்த்தில், பூமி(மோட்டார்) சுற்றுவதால், இதனோடு நீங்களும்(இறக்கையும்) சுற்றுவதால் அணுசிதறல் ஏற்படுகிறது. பூமிக்கு சூரியனிடம் இருந்து பிராண சக்திவருவதால் அதன் அமைப்பு சரியாக உள்ளது. ஆனால் நமக்கு உணவின் மூலம் மட்டுமே இயற்க்கையாக கிடைக்கும் படி உள்ளது.

இதை வேறு விதமாக பெறவேண்டுமானால் யோகசாதனைகள் மூலம் பெறலாம்.

இப்போது சமஸ்கிருத மந்திரம் வருவோம்.இப்படி உள்ள பிராண சக்தி உள்ளே பெறவும் வெளியே போகவும் மொழியின் ஒலியலைகள் பயன்பட்டன. இதில் 48 ஒலியன்கள் முக்கியமாக உள்ளன.இந்த ஒலியன்களில் ஹ என்ற எழுத்து அதிகம் பயன்படுத்தபடுகிறது.

காயத்திரி மந்திரம் சொன்னால் பிராணன் அதிகம் கிடைக்கும். இந்த காயத்திரி மந்திர அதிர்வுகளை நீங்கள் உணர காலை பிரம்மமுகூர்த்த்தில் கூறினால் அதன் அதிர்வுகளை உங்களால் காண முடியும். மந்திரம் சொல்லும்போது நீங்கள் இயற்க்கையாக எழும் அதிர்வுகளில் பயணபடுவீர் அந்த நேரம் சுற்றுபுறம் அனைத்தும் அமைதியாக இருந்து நீங்கள் மந்திர அதிர்வோடு பயணம் செய்வீர் அப்போது இந்த அதிர்வுகளை நிச்சம் உணர முடியும்.

இந்த நேரத்தில் பிராண மண்டல தொடர்பு எளிதாக கிடைப்பதால் அதன் தன்மை உங்களுக்கு புரியும்.

உங்கள் உடல்மேல் ஒரு அழுத்தமான ஒரு விசை போர்வையாக உள்ளதை காண்பீர்கள் சாதனை தொடர்ந்து செய்யும்போது உணரமுடியும்.

� அதிர்வுகளை உணர்ந்து பழகிவிட்டால் சரியான அலைவரிசையை உங்களால் காண முடியும்.

மந்திர ஒலியலைகள் என்பது குறிப்பிட்ட அலைவரிசையில் பிராண மண்டலத்தில் தொடர்பு கொள்வது, அதன் ஆற்றல்களை தொடர்புகொள்வது.

காயத்திரி மந்திரம் தினமும் சொல்வதால் அதிர்வுகளை நீங்கள் கிரகிக்கும் ஆற்றல் எளிதாக கிடைக்கும்.இதனால் மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.

இந்த பிராண மந்திர எழுத்துகளில் 24 எழுத்துகளில், குறைந்தது ஆறு எழுத்துமட்டுமே நெடில்கள் உள்ளாதல் அதிகமாக பிராணனை ஈர்த்து உங்கள் பிராண உடலில் கலந்து பிராணமயகோசத்தை வளிமையடைய செய்கிறது. மற்ற மந்திரங்கள் பிராண பிரிதஷ்டை அனுப்ப பயனபடுகிறது.

தமிழ் மந்திரத்திற்க்கும் சமஸ்கிருத்த்திற்க்கும் உள்ள பெரிய வேறுபாடு என்னவென்றால் தமிழ் மந்திரம் திரும்பதிரும்ப ஒலி எழுப்பதேவையில்லை  அதற்கு ஒரு கூறு உள்ளது. அதனால் நீங்கள் சமஸ்கிருதமந்திரம் 100000தடவை செபிக்க வேண்டும் அப்பதான் நீங்கள் அந்த அலைவரிசையில் பயணபடுவீர் அடுத்த பதிவில் தமிழை காண்போம்.

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” –திருமூலர்

தொடரும்.......

         - shiva shangar

1 comment:

  1. தமிழை விட சமஸ்கிருதம் தான் உயர்ந்தது என்று வாதிட்ட புலவர் நக்கீரர் சாபத்தால் மாண்டார்என்று கேள்விப்பட்டிருக்கிறேன் அப்படி என்றால் நக்கீரர் காலத்திலிருந்தே தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இடையே பூசல் நிலவுகிறது என்று எடுத்துக்கொள்ளலாம்.

    ஆனால் இக்காலத்தில் தமிழர்களுக்கு சமஸ்கிருதத்தின் மேல் உள்ள வெறுப்பு அரசியல் மற்றும் வேறு சில காரணங்களுக்காக சிலரால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டது என்று தோன்றுகிறது

    //இந்த மொழி ஒலியலைகள் மிகவும் குறுக்கலைகளை கொண்டது.இது பிராண மண்டலத்தில் சென்று திரும்ப நேரம் எடுக்கும்.ஆதலால் திரும்ப திரும்ப இந்த அலைகளை எழுப்பவேண்டியதாக உள்ளது.இப்படி செய்யும் போது உடல் அணுக்களில் மாற்றம் ஏற்படும் உடல் உஷ்ணம் ஆகும்.இதை சரிசெய்ய கிருதம் என்கிற நெய்வகைகளை அதிகம் உணவில் சேர்க்கவேண்டியதாக உள்ளது.இதனால் இதன் பாதிப்பு குறைக்கபடும்.//

    இதனால் தான் சமஸ்கிருத அட்சரங்கள் உள்ள மந்திரங்களை பல லட்சம் முறை கூறவேண்டும் என்று கூறுகிறார்களா

    ReplyDelete