Wednesday 22 August 2018

ஜென்ம ராசி மந்திரம் யந்திரம் மூலிகை



ஜென்ம ராசி மந்திரம் யந்திரம் மூலிகை
*******************************************
ராசிக்கு உரிய மந்திரங்கள் யந்திரங்கள் மூலிகைகள்
கீழ்க்கண்ட எந்திரங்களை முறையாக எழுதி உரிய மந்திரங்கள் கூறி தாயத்தில் அடைத்து கட்டிக்கொள்ள கெட்ட நேரத்தையும் நன்மையாக வசியப்படுத்தி பயன்படுத்திக் கொள்ள முடியும் அனுபவத்தில் இம்முறைகள் சிறப்பாக செயல்படுகின்றன
மேஷ ராசி: மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும் !
ஓம் ஸம் சரஹனபவாய ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ
எந்திரம் : பால ஷண்முக ஷடாஷர யந்திரம்
மூலிகை : வைகுண்ட மூலிகை.
ரிஷப ராசி: ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மகாலட்சுமி பூஜை செய்தும், வெள்ளிக்கிழமை விரதம் இருந்து கீழ்க் கண்ட சுலோகத்தைத் தினசரி 11முறை கூறி வந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும்.
ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யை
ஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ
எந்திரம் : மஹாலட்சுமி யந்திரம்.
மூலிகை : அம்மான் மூலிகை.
மிதுன ராசி: மிதுன ராசியில் பிறந்தவர்கள் விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 54முறை தினசரி கூறி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ
எந்திரம் : ஸ்ரீ தன ஆகர்ஷனயந்திரம்
மூலிகை : அற்ற இலை ஒட்டி.
கடக ராசி: கடக ராசியில் பிறந்தவர்கள் பவுர்ணமி தோறும் அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து விரதம் இருந்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 21முறை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.
ஓம் ஐம் க்லீம் ஸோமாய நமஹ
எந்திரம் : ஸ்ரீ துர்கா யந்திரம்
மூலிகை : நத்தைசூரி மூலிகை.
சிம்ம ராசி: சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.
ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சூர்யாய நமஹ
எந்திரம் : ஸ்ரீ சிதம்பர சக்கரம்
மூலிகை : ஸ்ரீ விஷ்ணு மூலி.
கன்னி ராசி: கன்னி ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு புதன்கிழமை விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்தால் நல்ல பலன் ஏற்படும்.
ஓம்-ஐம்-ஸ்ரீம்-ஸ்ரீம்-புதாய நமஹ
எந்திரம் : ஸ்ரீ சுதர்ஸன யந்திரம்
மூலிகை : துளசி.
துலா ராசி: துலா ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு முறை பவுர்ணமி நாள் அன்று விரதம் இருந்து சத்யநாராயண பூஜை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.
ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சுக்ராய நமஹ
எந்திரம் : ஸ்ரீ சூலினியந்திரம்
மூலிகை : செந்நாயுருவி.
விருச்சிக ராசி: விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து துர்க்கையை பூஜித்து வணங்கி கீழ்க்கண்ட சுலோகத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.
ஓம் ஹ்ரீம் தும் துர்காயை நமஹ
எந்திரம் : பாலசண்முக ஷாடத்ச்சர யந்திரம்
மூலிகை : மஞ்சை கிளுகிளிப்பை.
தனுசு ராசி: தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி கடவுளுக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல நன்மைகள் உண்டாகும்.
ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நமஹ
எந்திரம் : தன சக்ர யந்திரம்
மூலிகை : சிவனார் மூலி.
மகர ராசி: மகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை விரதம் இருந்து சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல காரியங்களும் சித்தி அடையும்.
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நமஹ
எந்திரம் : ஸ்ரீ பைரவ யந்திரம்
மூலிகை : யானை வணங்கி.
கும்ப ராசி : கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.
ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோ நமஹ
எந்திரம் : ஸ்ரீ கணபதி யந்திரம்
மூலிகை : தகரை மூலிகை.
மீனம் ராசி: மீன ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் துன்பங்கள் நீங்கும்.
ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நமஹ
எந்திரம் : ஸ்ரீ குபேர தன ஆகர்ஷண யந்திரம
மூலிகை : குப்பைமேனி

No comments:

Post a Comment