Saturday 10 October 2020

மலர் மருத்துவம் அதன் பயன்களும்

 "மலர் குறள்"-1 ;அடியேன் ஆத்ம வணக்கம், இன்று திரு.எட்வர்டுபாட்ச் அவர்களின் இங்கிலாந்து மலர்மருந்துகளின் பெயர்கள்: 1.அஃரிமனி 2.ஆஸ்பென் 3.பீச் 4.ஸென்ட்டாரி 5.ஸெராட்டோ 6.செர்ரிப்ளம் 7.செஸ்ட்நட்பட் 8.சிக்கரி 9.க்ளெமெடிஸ் 10.கிராப்ஆப்பிள் 11.எல்ம் 12.ஜென்ஷன் 13.கார்ஸ் 14.ஹீதர் 15.ஹால்லி 16.ஹனிஸக்கிள் 17.ஹார்ன்பீம் 18.இம்பேஷன்ஸ் 19.லார்ச் 20.மிமுலஸ் 21.மஸ்டர்டு 22.ஓக் 23.ஆலிவ் 24.பைன் 25.ரெட்செஸ்ட்நட் 26.ராக்ரோஸ் 27.ராக்வாட்டர் 28.ஸ்க்ளெரான்த்தஸ் 29.ஸ்டார் ஆஃப் பெத்லஹம் 30.ஸ்வீட்செஸ்ட்நட் 31.வெர்வைன் 32.வைன் 33.வால்நட் 34.வாட்டர்வயலட் 35.ஒயிட்செஸ்ட்நட் 36.வைல்டுஓட் 37.வைல்டு ரோஸ் 38.வில்லோ 39.ரெஸ்க்யூ ரெமடி(5மலர்மருந்துகளின் கலவை) தங்களின் அறிமுக பார்வைக்காக இனி அதன் பயன்கள் பற்றி காண்போம்.


மலர் குறள்:2 

"எல்ம்" மலர் மருந்து

அடியேன் ஆத்ம வணக்கம்! 
இந்த மலர்மருந்தை "அற்புதம்,அதிசயம்,ஆன்மதரிசனம், அமைதி, ஏகாந்தம்,உசத்தி, போன்ற வார்த்தைகளால் வர்ணிக்கலாம்....                   

பழமொழி: யானைபலம்-மஸ்டர்டு              ஆன்ம பலம் -எல்ம்
ஒரு கல் ஒரு மாங்காய்-சிக்கரி                       ஒரு கல் ஒரு மரமேவிழ-எல்ம்                 

எஜமானர் × வேலைக்காரன்
எல்ம்          × ஸென்டாரி
1.அடங்காபிடாரி குழந்தைகளை அடக்க-எல்ம்
2. கல்லூரி முதல்வர், தலைமையாசிரியர், மருத்துவ கல்லூரி டீன், ஒருமாநிலத்தின் முதல்வர் போன்றவர்களுக்கு "எல்ம்" ஜெட் வேகத்தில் வேலைசெய்யும், 
3.ஆன்மீகத்தில் சரியான குரு கிடைத்தால் அவர்களின் வாழ்க்கையே "சுவர்க்கம் "தான் 

அனுபவ கேஸ்கள்- மயிலை ஈசன் அருளால் கிடைத்த அனுபவங்கள்;
1.கடந்த ஒரு ஆண்டிற்கும் எம்மிடம் வந்த அரசியல்வாதி ஒருவருக்கு "எல்ம்"தொடர்ந்து 48நாட்கள் சாப்பிட கொடுத்ததின் பலனாக அவருக்கு மேல்மட்ட செல்வாக்கு ஏற்பட்டதாகவும் நிறைய "பெரும்புள்ளிகள்"என்னை பக்கத்தில் வைத்துக்கொள்ள விரும்புவதாகவும் இவரிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளை திறமையாக முடித்துகொடுப்பதாகவும் கூறி புகழாரம் சூட்டியதாய் கூறி நன்றி கூறினார்....

2.ஒரு மதுவிற்கு அடிமையானவரின் மனைவிக்கு "எல்ம்" கொடுத்த ஒரு வாரத்திலேயே அவரது கணவருக்கு தீடீர் என்று இரத்தவாந்தி எடுத்து பயந்துபோய் "குடிப்பழக்கத்தையே" நிறுத்திவிட்டார் மேலும் இவர்களின் பூர்வீகசொத்து பத்திரம் ஒன்று 1கோடி பெருமானமுள்ளது நினைத்துகூட பார்க்கமுடியாத அளவு செல்வம் வந்ததாகவும் Call செய்து கண்ணீர்விட்டு நன்றி தெரிவித்தார்.... 
 

மலர் குறள்-3

இங்கிலாந்து மலர்மருந்து :"ராக்வாட்டர்"

அடியேன் ஆத்ம வணக்கம்!  ராக்வாட்டர்"ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே"    கடைத்தேங்காயும்-வழிப்பிள்ளையாரும்
ஒரே வரியில் சொல்லவேண்டும் என்று கூறினால் "உலக நன்மைக்காக"-பாசிட்டிவ் ராக்ரோஸ்
பெயரளவு கொள்கை அரசியல்,ஆன்மீகம், சமாதானம்,ஏழையின் வயிற்றில் அடிக்க புன்சிரிப்பு -நெகட்டீவ் ராக்வாட்டர்

சரி விஷயத்திற்கு வருகிறேன் *மேலே உள்ள படத்தை கூர்ந்து கவனியுங்கள் அதில் உள்ள சமண துறவிகள் பாசிட்டீவ் ராக்வாட்டர்
காரணம்:1. அவர்களின் துறவு வாழ்கை
2.யாரைப்பற்றியும் புறம் பேசாமை 
3. எந்த உயிர்களுக்கும் தீங்குசெய்யாமை
4.தனக்கென எந்த ஆசையும் கொள்ளாமை
5.பிறப்பு இறப்பு மீது பற்று இல்லை

மீண்டும் கவனிக்கவும் அப்பொழுது நெகட்டீவ் ராக்வாட்டர் யார்? 1.இந்த கொரோனா பீதியால் முககவசம் அனியும் நாம் ஒவ்வொருவருமோ நெகட்டீவ் ராக்வாட்டர் டைப்தான் 
2.அரசியல்வாதி,காவல்துறை,மருத்துவர், இப்படி சமுதாயத்தில் மக்கள் பணியாற்றுகின்ற யாவரை பார்த்தாலும் நாம் பயந்து நடுங்குகின்றோம் ஆனால் உண்மையில் இவர்கள்தான் நம்மைகண்டு அஞ்சவேண்டும் மக்கள் பணி செய்ய முடியவில்லையே என்று...இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

ராக்வாட்டர் நபர் தனது கொள்கைகளை மற்றவர்மீது திணிக்க மாட்டார்

'நீங்கள் நன்றாக யோசித்து பார்த்தால் உண்மை புரியும் உலகில் அதிகமாக ஜைனதுறவிகள் மட்டுமே வாயை துணியால் மூடிகொள்வர் "காரணம்"இவர்களின் மூச்சு காற்றால் எந்த சிறு உயிர்க்கும் தீங்கு வரக்கூடாது என்பதால் 
ஆனால் இன்று உலகமே வாயை மூடிகொண்டு காரணம் நம்மை எந்த உயிரும் கொல்லக்கூடாது என்ற பயம் இதுதான் ராக்வாட்டர் தேவைப்படும் மனநிலை

"அன்று வாயில்லா ஜீவன்களை எல்லாம் நாம் உணவுஉட்கொள்ளகூடாது என்று "வாய்பட்டி" போட்டு வாயடைத்தோம்
"இன்று இறைவன் எல்லோர் வாயையும் அடைத்துவிட்டான்"

"மிக மிக கவனம்"- உலகில் ஒவ்வொரு நேரத்திலும் ஒரு அவதாரபுருஷர் அவதரிக்கும்போது இதுபோன்ற தாங்கமுடியாத அழிவு நடைபெறும் இப்படி பார்த்தால் இந்த காலத்திற்கான அவதாரபுருஷர் "ஜனனம் " ஆவது உறுதி..

அவதாரபுருஷர்கள்-பாசிட்டீவ் ராக்வாட்டர்
*ராக்வாட்டர் பயன்படும் நேரங்கள்:1.காவல் நிலையம் செல்லும் ஓரிருடோஸ் போட்டு பாருங்கள் "இராஜமரியாதை"
2.ஏரியா கவுன்சிலர் "அரசு அலுவலகம்" E.B, வாட்டர்போர்டு.............
"எங்கெங்கெல்லாம் நீ பேசி ஜெயிக்க வேண்டுமோ அங்கு ராக்வாட்டர் உதவும் 
அப்பாடா.... போதுமா இன்னும் வேண்டுமா.


"மலர் குறள் -4"

தலைப்பு       -ரெஸ்க்யூ ரெமடி
சிறப்புபெயர்-"ஆபத்பாந்தவன்"

முகப்புரை:அடியேன் ஆத்ம வணக்கம்!  இன்றைய மலர்மருந்து "ரெஸ்க்யூ ரெமடி"  ஐந்து சிரம் கொண்ட ஆதிசிவன் அம்சம்  எப்படி சிவனின் ஒவ்வொரு தலைக்கும் ஒரு காரணகாரியம், சிறப்பு உள்ளதோ அப்படி இம்மருந்திற்கு சிறப்பு தன்மையும் உண்டு..
ஐந்து மலர்மருந்து :1.இம்பேஷன்ஸ்(நிலம்)
2.க்ளெமடிஸ்(நீர்)
3.செர்ரிப்ளம்(காற்று)
4.ராக்ரோஸ்(நெருப்பு)
5.ஸ்டார் ஆப் பெத்லகேம்(ஆகாயம்)

பயன்படும் நேரங்கள்:
விபத்து, விஷக்கடி,நெருப்புகாயம்,மின்சார அதிர்வு போன்றவை

ரெஸ்க்யூ ரெமடி பற்றி தவறான கண்ணோட்டம்:
இம்மருந்து அனைத்து நோய்க்கான மருந்து அல்ல
மேலும் சொல்கிறேன் மலர்மருந்து நோய்க்கான மருந்து அல்ல
நோயாளியின் மனதில் இருந்து வெளிப்படும் ஒன்றிற்கு மேற்பட்ட மனநிலைகளை பொறுத்தே மருந்து அமையும்
ஒருவருக்கு கொடுக்கப்பட்ட மலர்மருந்து வோறொரு நபருக்கு 100%பயன் தராது..
எம் அனுபவ கேஸ்;
1. கடந்த ஒரு மாதத்திற்கு முன் திருக்கோயிலூர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி மேலாளர் அவர்களின் கார் திண்டிவனம் அருகில் விபத்திற்குள்ளானது அவரது சுக்குநூறாக ஆனது அவரது தலையில் பலத்தகாயம் இரத்தம் சொட்டசொட்ட கிடந்தார் அவருக்கு "ரெஸ்க்யூரெமடி" பத்து சொட்டு நீரில் கலந்து கொடுக்க இரத்தம் உடனடியாக நின்றது மேலும் அவர் விபத்து நடைபெற்றது போன்ற கவலையே இல்லாமல் தானே Call செய்து தனது காரையும் போலிஸ் வரவைத்து காவல்நிலையம் இன்ஸ்சூரன்ஸ் எல்லா நிலைகளுக்கும் தகவல் கொடுத்து அடுத்த 1மணி நேரத்தில் முழுவதும் சகஜநிலைக்கு வந்தார்... ஆனந்த கண்ணீருடன் நன்றி பாராட்டி விடைபெற்றார்.

2.பள்ளி மாணவர்களுக்கு "மலைத்தேனீ" கொட்டி 6மாணவர்கள் சுருண்டு விழுந்தனர் யாருக்கும் ஒன்றுமே புரியவில்லை உடனே 30ரெஸ்க்யூரெமடி மாத்திரைகளை நீரில் கலந்து கொடுக்க வலி,வீக்கம் ஏதும் இல்லாமல் மாணவர்கள் சாதாரண நிலைக்கு வந்தனர் ...

3. காலில் சோறு வடிக்கும் நீரை ஊற்றிக்கொண்ட 25வயது பெண் "ரெஸ்க்யூரெமடி"காலில் தெளிக்கப்பட்டு சிறு தழும்புகூட இல்லாமல் குணமடைந்தார்...


மலர் குறள்:5

தலைப்பு   :ஒயிட்செஸ்ட்நட்

முன்னுரை: மயிலை ஈசன் மன்னர் பேரருளால் அடியேன் இன்று மலர்மருந்து  ஒயிட்செஸ்ட்நட் ஒரு பார்வை...

இம்மருந்தின் "Code word" வெள்ளைபூவில் வீற்றிருக்கும் கலைவாணி, தில்லைகூத்தன், பிரபுதேவா,மைக்கேல்ஜாக்சன், கடவுள்தான் காப்பாற்றவேண்டும்

பழமொழி: திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை,

ஒரேவாசகம்: தோல்வி

அலோபதி :மருத்துவர்கள் கையை பிசையும் கேசு

சித்தமருத்துவம் : நம்பி ஏமாந்துவிட்டேன் (கடவுள் மேல் பாரம்)

சினிமா நடிகர்கள்: தொடர்ந்து படம் "

பிளாப்"

கல்விகூடங்கள்: 100% ரிசல்ட் எதிர்பார்த்து 65%வந்தது
தொழிலகங்கள்: தேவையற்ற தொழில் போட்டியால் "தற்கொலை"முயற்சி

காதலர்கள்: அவனை/அவளை நம்பியதால் "மானமிழந்து நடுதெருவில்"

 "சுடுகாட்டு சாமியார்களை மாமியார்வீட்டுக்கு வழியனுப்ப" 
"இந்த பாடம் போதுமா-இன்னும் ஒன்னு வேணுமா"

"அனுபவகேஸ்-369"

கோவை மாவட்டம், மேட்டுபாளையம் ரோடு திருமதி.R.சீதாலட்சுமி (Indian bank manager) வயது 33,  கடந்த 2019ல் திருமணம் நடந்தது  திருமணமான 3மாதத்திலே "வெள்ளைபடுதல்"ஏற்பட்டு இல்லறத்தில் சந்தோஷமே இல்லை...

கணவன் மனைவி நிறைய பணம், சொத்து , சொந்தவீடு அனைத்தும் இருந்தும் வெள்ளைபடுதல் முலம் துர்நாற்றம் எப்பொழுதுமே மனஅழுத்தமாக உணர்ந்து தோழி ஒருவர்மூலம் தொடர்புகொண்டார்,,

வெளிப்படையாகவே சொல்கிறேன் இந்த சகோதரிக்கு "ஒயிட்செஸ்ட்நட்" ஒரே மருந்தை தேர்வுசெய்து தினம் 2வேளைவீதம் 100பில்ஸ் அடங்கிய ஒரு புட்டி கொடுத்தேன் ஒரே வாரத்தில் வெள்ளைபடுதலும் நின்றது  தலைமுழுக்கும் நின்றது(தாய்மை அடைந்தார்) மலர்மருந்து எப்போதும் "ஒரே கல்லில் இரண்டு மாங்காய்"

வாசகர்களுக்கு வேண்டுகோல்; சார் அப்போது "வெள்ளைபடுதல்" ஏற்பட்டால் ஒயிட்செஸ்ட்நட் மலர்மருந்து கொடுத்தால் குணமாகிவிடுமா என்று கேட்கவேண்டாம்!!!!

அந்த சகோதரி "ஒயிட் செஸ்ட்நட்" நெகட்டீவ் மனநிலை அதனால் உடனடி ரிசல்ட்


மலர் குறள்:6

தலைப்பு  :1.மலர்மருந்து +பணவரவு

தலைப்பு  :2. அனுபவம் 369

முன்னுரை: உலகெங்கும் வாழும் எம் தமிழ் உறவுகளுக்கு அடியேன் ஆத்ம வணக்கம்!  மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் "பணம்" தேவை அதை எளிமையில் எந்த மலர்மருந்து தன்மையாளர் பெறமுடியும், எப்படி எல்லாம் மலர்மருந்து பயன்படுத்தி பணம் சம்பாதிக்கவும் அனுபவிக்கவும் முடியும் என்பதே பதிவு, 

(எ.கா)- 1.அஃரிமனி -இந்த மலர்மருந்து நெகட்டீவ் தன்மையாளர்களுக்கு பணம் கை நீட்டி பெறவேண்டிய அவசியம் இருக்காது "கொண்டுவந்து கொட்டுவார்கள்" ஆனால் அஃரிமணி பணத்திற்கான மலர்மருந்தா? என்றால் நிச்சயம் இல்லை என்பதே எமது பதில்,,,

காரணம் ; அஃரிமனி மலர்மருந்து தன்மையாளர் பணத்தை பெற எந்த உபாயத்தையும் கையாளவில்லை அதை நோக்கி ஓடவில்லை அதனால் பணம் அவரை நோக்கி ஓடிவருகிறது

பழமொழி : "காசேதான் கடவுள்" "பணம் பந்தியிலே"  "பணம் என்னும் பாவி" 

2.வைல்டுரோஸ்; இதன் நெகட்டீவ் தன்மையாளர் யார்? ஊதாரி, ஒன்றுக்கும் உதவாத, பணத்தை வந்தவழி தெரியாத அளவு செலவு செய்பவர்,  வீட்டில் மனைவிக்கு குழந்தைகளுக்கு,பெற்றோர்களுக்கு தனது கடமையை செய்யாமல் சதா மதுபோதை, சண்டை சச்சரவு இவர்களுக்குதான் வைல்டுரோஸ் மலர்மருந்து கோடிகோடியாக பணம்செல்வம் வரும்....

அனுபவ கேஸ் :  ஈரோடு, பஸ்டாண்டு, நெ,67, திரு. கார்த்திகை செல்வன் எழுதுகிறார், கடந்து 5ஆண்டுக்கு முன் ரியல் எஸ்டேட் தொழிலில் கொடிகட்டி பறந்தேன் பணம் நான் போதும் போதும் என்ற அளவிற்கு குறைவில்லாமல் வந்தது ஆனால் தற்போது வந்தவழியே தெரியவில்லை போன வழியும் தெரியவில்லை சாப்பாட்டிற்கே ஜீவனம் செய்வது (கண்ணீரோடு)தொடர்கிறார் " என் நிலைமை எதிரிக்குகூட வரகூடாது" 

உபாயம் :இவரின் நிலைமையை பார்த்து நானே மனம் வருந்தினேன் "வெளிப்படையாக சொல்கிறேன்" 

"ஸ்வீட்செஸ்நட்"என்ற மலர்மருந்து ஒரு புட்டிகொரியரில் அனுப்பி வைத்தேன் தினம் இரணேடு வேளை சாப்பிட சொன்னேன் சாப்பிட்ட 27வது நாளில் எதற்கும் உதவாத பழையபேப்பர்களை கடையில் போடலாம் என்று பார்த்தபோது 
அதில்"நிலபத்திரம்" ஒன்றை தினமலர் பேப்பரில் சுருட்டி இவரின் தந்தை வைத்துவிட்டு இறந்து போய்விட்டுஇருக்கிறார் அதன் அப்போதைய மதிப்பு 7ஆயிரம்கூட இல்லை என்று கிடப்பில் போட்டுவிட்டு மறந்துவிட்டனர் இன்றைய மதிப்பு 68லட்சம் என அறிந்து விற்பனை செய்தனர்....

இந்தசெய்தி பாருங்கள் ஸ்வீட்செஸ்ட்நட் மலர்மருந்து பணத்தை சாப்பிட்டவுடன் தராது ஆனால் பணம் உனக்கு வருவதற்கான "வழி"யை உருவாக்கிதரும்.

 எச்சரிக்கை : யார் வேண்டுமானாலும் "ஸ்வீட்செஸ்ட்நட்" மலர்மருந்து சாப்பிட பணம் வராது "கஷ்டமே மிஞ்சும்" 


மலர் குறள் : 8

தலைப்பு:"மலர்மருந்துகளும் மக்கள் பார்வையும்"

வடிவம் :பூ.சத்தீஷ் (எ)சாய்சத்தீஷ்வரன்
                மலர்மருந்து ஆர்வலர்
                செல்:9500454590

அடியேன் ஆத்ம வணக்கம்! 
                                   மயிலை ஈசன் அருளாலும் மன்னர் கொடையாலும் எழுதுகிறேன்,, இங்கிலாந்து மலர்மருந்து அனைத்தும் 100% பலன் தரக்கூடியது எனது சொந்த அனுபவத்தில் சொல்கிறேன் 
ஒருவருக்கு நிச்சயம் இறையருள் பூர்வஜென்ம தொடர்பு இருந்தால் மட்டுமே "மலர்மருந்து" பற்றி படிப்பதோ(அ)பயன்படுத்த முடியும்..

அடுத்து மலர்மருந்து படுன்படுத்தினால் முழுமையாக பலன் கிடைக்கிறதா என்று சிலர் கேட்கின்றனர்
நிச்சயம் பலன் உண்டு ஆனால் "உங்களின் எண்ணங்களை பொறுத்தே அமையும்"

மேலும் சிலர் நான் மலர்மருந்து ஒரு குறிப்பிட்ட நோய்க்காக சாப்பிட்டேன் ஆனால் பயன்படுவதாக தெரியவில்லை மீண்டும் அலோபதி மருத்துவரால் 2நாளிலே குணமாகியது என்று கூறுகின்றனர்..

உண்மையே! மறுக்கவில்லை,,

(எ.கா)வாட்டர்வயலட் நோயாளி சாப்பிடும்போது உனது நோய் தீர்க்ககூடிய சரியான மருத்துவர் எந்த செலவும் இன்றி உன்னை குணப்படுத்துவார் 

புரிந்துகொள்ளுங்கள்! வாசகர்களே,
மலர்மருந்து சாப்பிட நோய் குணமாகாது எனினும் நோய்கான காரணமும் தீர்க்ககூடிய வழிமுறைகளும் நிச்சயம் தெரியவரும்,,

அடுத்து பணம் வருமா? 
மலர்மருந்து சாப்பிட்டால் பணம் வரும் ஆனால் நீங்கள் நினைக்கும் விதத்தில் அல்ல

 இன்னும் சில சாதுர்யமான மக்கள் "கோடிகோடியாய்"பணம் பெற ஒரு வேளைக்கு 5மருந்து வீதம் ஒரு நாளைக்கு 15மருந்து சாப்பிடுகின்றனர்

உங்கள் நன்மைக்காக! உறவுகளே, 15மலர் மருந்து சாப்பிட்டால் பணம் வராது "நெகட்டீவ் மனநிலை"மட்டுமே வரும்,,

மலர்மருந்து பயன்படுத்தி உலகில் அனைத்தையும் சாதிக்கலாம் ஆனால் முதலில் நீங்கள் செய்யவேண்டியது உங்களுக்கான "மலர்மருந்து "ஐ தேர்வு செய்து சாப்பிட்டாலே அனைத்திலும் வெற்றிதான்...


மலர் குறள் :"9"

தலைப்பு : "கிராப் ஆப்பிள்"

முன்னுரை; மயிலை ஈசன் மன்னர் அருளால் அடியேன் பூ.சாய்சத்தீஷ்வரன் இன்று உங்களுக்காக மலர்மருந்து "கிராப் ஆப்பிள்" அதி சூட்சும தகவல் பகிற்கிறேன்....

பழமொழி :"கந்தையானாலும் கசக்கிகட்டு
                   கூழானாலும் குளித்து குடி"
                                    -அவ்வையார்,
அவ்வைபாட்டி கிராப்ஆப்பிள் டைப் அதனால் தான் நீண்டநாள் உயிர்வாழக்கூடிய "நெல்லிக்கனி"யை அதியமான் தான் உண்ணாது அவ்வைக்கு பரிசளளித்தான்

ஒருநாளைக்கு பல உள்ளாடைகளை மாற்றும் புரட்சிதலைவர் M.G.R கிராப்ஆப்பிள் டைப், அதனால்தான் மருத்துவமனையில் படுத்துக்கொண்டே வெற்றி பெற்றார் "மக்கள் மனதில் இன்றும் நீங்கா இடம் பெறுகிறார்

மலர்மருந்து சாப்பிட எல்லோரும் அவர்களைப்போல் ஆகமுடியாதுதான் ஆனால் நீங்கள் அந்த மருந்தின் நெகட்டீவ் தன்மையாளராக இருந்து "கிராப்ஆப்பிள்"மலர்மருந்து சாப்பிட அவர்களைவிட புகழின் உச்சிக்கே செல்லலாம்,,

அசிங்கம், அருவெருப்பு,கேலி,கிண்டல்,பரிகாசம் மற்றவர்கள் தன்னை செய்வதை பார்த்து ஓடிஒலிவது, உச் கொட்டுவது, கண்ணாடிமுன் நின்று சதா உடம்பை பார்த்து அசடுவழியும் பேர்வழிகளுக்கு கிராப்ஆப்பிள்-வரமே,
கிராப்ஆப்பிள் மலர்மருந்து சாப்பிட நீயும் "ரதி" மன்மதன் போல் வாழலாம்

அடியேன் அனுபவம் ; 
              கடகஇராசி நபர்களுக்கு நல்ல பலனை கிராப்ஆப்பிள் மலர்மருந்து வாரிவழங்குகிறது,,,

காதலித்து பிறகு "கைகழுவ" நினைக்கும் உத்தம புத்திரன்/புத்திரிகளுக்கு "சாட்டையடி" கொடுக்க கிராப்ஆப்பிள் மலர்மருந்து சாப்பிட. "தாயிற்சிறந்த கோயிலும்" "தந்தைசொல்மிக்க மந்திரம்" வேளை செய்யும்,,,

வைட்டமின் குறைபாடுகளுக்கு கொடுத்து 80% பலன் கிடைத்தது...

உடனே கிளம்பி விட்டீர்களா??? "கிராப்ஆப்பிள்" மலர்மருந்து வாங்க!!
பொறுமை!பொறுமை!!
யார் வேண்டுமானாலும் மலர்மருந்து கிராப்ஆப்பிள் சாப்பிட 100%பலன் கிடைக்காது!! நீங்கள் கிராப்ஆப்பிள் தேவைப்படும் நபரா என "தகுந்த"நபரிடம் ஆலோசனை பெறுவது "உம் பணத்திற்கு உத்திரவாதம்"


மலர்பேழை ;10
 தலைப்பு    :கிராப்ஆப்பிள்&வாட்டர் வயலட் ஓர் ஒப்புமை

முன்னுரை; மயிலை ஈசன் மன்னர் பேரருளால் அடியேன் பதிவுகளை வாசிக்கும் அடியவர்கள் பதிவைப் பற்றிய கமெண்ட் லைக் ஷேர் செய்யுங்கள் என்பதை காட்டிலும் "பலனடையுங்கள்" அதுவே பெரும்பாக்கியம்....

"கிராப்ஆப்பிள் மலர்மருந்து"பேசுகிறது!!
(உருவகம்)  அடே! வீணாய் போனவர்களே! கண்ட குப்பைதொட்டிகளையும்,பொது கழிவறைகளையும் பார்த்து தினம்தினம் (காரி துப்புவது)எச்சில் உமிழ்வது, வாந்தி எடுப்பதை நிறுத்த சொல்லவில்லை "இங்கிலாந்து மலர்மருந்து கிராப்ஆப்பிள் " தினம் ஒருவேளை ஒரு வாரம் சாப்பிட்டு மூன்று தலைமுறைக்கு தேவையான "புதையல்"எடுத்து வாழசொல்கிறது....

மேலும் சொல்கிறது!! வாட்டர்வயலட்!!
         வருடத்திற்கு ஒருமுறை வரும் பண்டிகையோ அல்லது வாழ்நாளில் நீங்கள் செய்தே ஆகவேண்டும் என்கிற திருமணம்,முதல் பிறந்தநாள், மஞ்சள் நீர்,வீடுவாங்கிபத்திரபதிவு, போன்றவற்றை செய்வதற்கு ஒருவாரம் வீட்டில் உள்ள அனைவரும் தினம் ஒருவேளை"வாட்டர்வயலட்" சாப்பிட்டுவர நீங்கள் எதிர்பாரா விதத்தில் தேவையான "பணம்"வீடுவந்து சேரும்....

புரிகிறது!!! கோபப்படாதீங்க!! M.G.R அவர்களுக்கும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுக்கும் மலர்மருந்துக்கும் என்ன சம்பந்தம் என்றுதானே!!! இதோசொல்கிறேன்!!
         
              புரட்சிதலைவர் M.G.R அவர்கள் "கிராப்ஆப்பிள் "தன்மை இவரின் படங்களுக்கு யார் யாரோ பாடல் எழுதினார்கள் ஆனால் M.G.Rஅவர்கள் திருப்தி ஆகவும் இல்லை படம் ஹிட் ஆகவும் இல்லை, பட்டுக்கோட்டை அவர்கள் "வாட்டர்வயலட்"மலர்மருந்து தன்மையாளர் தனது வாழ்நாளில் மிகவும் குறைந்த படங்களுக்கு பாடல்கள் எழுதி இன்று "பள்ளி பாடபுத்தகத்தில்"முத்திரை பதிக்கும் அளவிற்கு அவரது பாடல் வரிகள் "தனித்துவம்"வாய்ந்தது
அதனால் M.G.R அவர்கள் மறையும் வரை  பட்டுக்கோட்டை அவர்களை உயர்த்தியே பிடித்தார்...
   ஆகவே! கிராப்ஆப்பிள் தன்மையாளர் வாட்டர்வயலட் தன்மையாளரை நண்பராகபெற்று உதவி செய்தால் "தானும் நண்பரும்"புகழின் உச்சியை அடையலாம்!!!!

     மேலும் "கொசுறு"- எங்கெல்லாம் நீ சமாளித்துதான் ஆகவேண்டுமோ அங்கு வாட்டர்வயலட் சாப்பிட "தேவாமிர்தமாக" வேளை செய்யும்...

எப்போது எல்லாம் உனக்கு அசிங்கம், குமட்டல்,வாந்தி, தாழ்வுமனப்பான்மை வருகிறதோ அங்கு "கிராப்ஆப்பிள்" வேளை செய்யும்,,,

"கிராப்ஆப்பிள் +வாட்டர்வயலட்=பாகுபலி வில்அம்பு"


மலர் குறள்   :12

தலைப்பு :"தண்ணில கண்டம்"

முன்னுரை ;அடியேன் ஆத்ம வணக்கம்! உலகெங்கும் வாழும் எம் தமிழ் உறவுகளான "தமிழ்தாய்"அத்துனை பேர்களின் வாழ்வில் தூண்டுகோளாய் அமைய இந்த பதிவு...
            
தமிழ்பாடல் வரிகள்:

  * "குடிமகனே பெருங்குடிமகனே" -அஃரிமனி(கவலையை மறக்க குடிப்பவர்)
* "கனவிதுதான் நிஜமிதுதான் 
     உலகினிலே எனை யார் வெல்லுவார்"
       -க்ளெமடிஸ் (கற்பனை குடிமகன்)
*  "நாளைமுதல் குடிக்கமாட்டேன்
      சத்தியமடி தங்கம்"-ஸ்க்ளெரான்த்தஸ்
(சத்தியம் செய்து மீண்டும் குடிப்பவர்)

* "தினந்தினம் தினம் தீபாவளி"- வைட்டுரோஸ்(கொண்டாட்டம்)

உணர்வுகள்;
             # கை நடுக்கம் -வால்நட்
             # பைத்தியம்  -செர்ரிப்ளம்
            # காதல்தோல்வி-சிக்கரி
            # எலைட் குடிமகன்- வைன்
            #ஓசிகுடி(மச்சி நீ சொல்லேன்)
                    -சிக்கரி
           # "23ம் புலிகேசி"- அக்கமாலா,கப்சி
                     கிராப்ஆப்பிள்
          "ஆறு மனமே ஆறு ஆண்டவன்
                 கட்டளை  ஆறு"
விளக்கம்:
              அன்பான உறவுகளே! இப்படி பல வகையான "குடிமகன் "உள்ளார்கள் இவர்களை இன்னும் வகைப்படுத்தலாம் இவர்கள் எந்தவகையை சார்ந்தவர்கள் என்பதை கண்டுபிடித்து "மலர்மருந்து "கொடுக்க நிச்சயம் (80-90%) மாற்றலாம்
அடியேன் நிறையபேர்களின் வாழ்வில் நிகழ்த்திகாட்டியுள்ளேன்!!
 
மனதை வருடிய செய்தி:
   கிராமங்களில் அடியேனிடம் பயிலும் மாணவர்களின் தந்தை குடிபழக்கத்தால் இறந்தவர்களே! தந்தையின் முகம் பாரா குழந்தைகள் ஏராளம் ...
    
      "பொறுமையோடு படித்து பயன்பெறுங்கள்"
        


"மலர் குறள்" -13

தலைப்பு  : மலர்மருந்தும் -ராகு கேது பெயர்ச்சியும்

முன்னுரை: மயிலை ஈசன் மன்னர் பேரருளால் அடியேன் இன்று ராகுகேது பெயர்ச்சியில் மலர்மருந்து பயன்படுகிறதா என்று கடந்த ஒரு மாதமாக செய்த ஆய்வினை  "உலகெங்கும் வாழும் எம் தமிழ் உறவுகளுக்கு சமர்பிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!!!

குறிப்பு: இவை ஜோதிட ஆராய்ச்சியோ அல்லது பரிகார ஆராய்ச்சியோ அல்ல முழுக்க முழுக்க "மலர்மருந்து " பயன்பாடு  மட்டுமே,,

இராகு =காளி- "ராக்வாட்டர் "

கேது   = விநாயகர் -"ஓக்"

பழமொழி : "இராகுவைப்போல் கொடுப்பாறில்லை
 கேதுவைப்போல் கெடுப்பாறில்லை"
 
ஆனால் இந்த நவகிரக நாயகர்களான இராகுவோ கேதுவோ எதையும் சும்மா கொடுப்பதில்லை அவரவர் "தர்ம-கர்மா"க்களை பொறுத்தே இலாப நட்டங்கள் மனிதர்களுக்கு கிடைக்கிறது
மேலும் இவர்கள் ஒரு உயரிய தெய்வத்தின் "கட்டுப்பாட்டில்" வருபவர்கள் ஆதலால் இவர்களை வழிபடலாம் என்றாலும் கூட மேலும் காளி,துர்கை,ப்ரத்தியங்கராதேவி கணபதி போன்ற தெய்வங்களை வழிபடசொல்கிறது "ஆன்மீகம்"

இப்பொழுதுதான்  "சூடு" பிடிக்கிறது,,,

கேள்வி????

       வாசகர்கள் நீங்கள் கேட்கலாம் இராகு-கேது பெயர்ச்சியால் பாதிப்படைந்த நபர்கள் "ராக்வாட்டர்" (ம)"ஓக்" மலர்மருந்து சாப்பிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா???

எமது பதில்! 
                  
                 (எ.கா) ஒரு மனிதன்  ஒரு இடத்திற்கு செல்ல ₹ 1லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது எனில் 1ரூபாய் 
"நாணயம்" ஆக வைத்திருந்தால் அதை தூக்கிக்கொண்டு எவ்வளவு கஷ்டப்படவேண்டி இருக்கும் எண்ணிப்பாருங்கள்!!
     ஆனால்      அதே 1லட்சம் ₹2000/ரூபாய் நோட்டாகவோ அல்லது ATM கார்டாகவோ இருந்தால் எவ்வளவு சிரமம் இல்லாமல் இருக்கும்!!!

      வாசகர்களே! 2000ரூபாய் நோட்டு ATM அட்டை போன்றது மலர்மருந்து "ராக்வாட்டர்" (ம)"ஓக்" 

 ஒருமனிதன் அவரவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப இன்ப-துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தாலும்
"மலர்மருந்து" சாப்பிட "துன்பத்திலும் இரட்டிப்பு இன்பம்"
 
Dr.எட்வர்டு பாட்ச் பேசுகிறார்!
                               சிறு! சிறு! துன்பத்தை உனக்கு கொடுத்து அதன்மூலம் வாழ்க்கையில் நீ "மலர்மருந்து "சாப்பிட்டு "குபேரன்"போல வாழ்வதற்கே உன்னை உலகிற்கு அனுப்பி வைத்தேன்!!!

"இது எம் சொந்த அனுபவ பதிவு"

         

மலர்குறள் :14

தலைப்பு     : அனுபவம் "மலர்மருந்து "369

முன்னுரை : மயிலை ஈசன் மன்னர் பேரருளால் இன்று அடியேன் சமீபத்தில் மலர்மருந்து "எல்ம்"பரிந்துறை செய்து வெற்றிகண்ட அனுபவத்தை எம் உலக தமிழ் உறவுகளான உங்களிடம் பகிர்வதில் பெரும்மகிழ்ச்சி அடைகிறேன்..

அனுபவம் -1. திருமதி. S. கோடீஸ்வரி புதுக்கோட்டை மாவட்டம், கல்லூரி விரிவுரையாளர்,
  இவர் கடந்த ஆகஸ்ட் -3ம் தேதி தொடர்புகொண்டு தான் "பொருளாதாரம்"சார்ந்த ஆய்வு (Phd)செய்வதாகவும் அதற்கான சரியான புத்தகமோ ,ஏதும் கிடைக்கவில்லை என்றும் தங்களின் 'மலர்மருந்து'மூலம் சரிசெய்யமுடியுமா என்று கேட்டார்
நான் அவர்பேசிய வார்த்தைகளை வைத்து அவருக்கு மலர்மருந்து "எல்ம்"மட்டும் கூரியர்ல் அனுப்பி வைத்தேன் 

   தொடர்ந்து ஒருநாளைக்கு 3வேளை வீதம் சாப்பிட சொல்லி பிறகு ஒரு நோட்டில் தினம்தினம் மலர்மருந்து சாப்பிடும்போது ஏற்படும் அனுபவத்தை எழுத சொன்னேன்!! 

"எல்ம்" தனது பணியை சரியாக 16வது நாளில் முடித்துள்ளது

 மிக சிறந்த பொருளாதார வல்லுநர் ஒருவரின் தொடர்பும் அவரின் மிக சிறந்த "கைப்பிரதி"ஒன்றும் கிடைத்து ஆய்வு சரியாக முடிந்ததோடு மட்டுமல்லாமல் "பாராட்டும்"குவிந்ததாம்,, 
கண்ணீர் பெருக மகிழ்ச்சியை வெளிப்படுத்தி நன்றி கூறினார்...

"எல்லா புகழும் "எல்ம்"மலர்மருந்திற்கே"



மலர் குறள் - 15
தலைப்பு    - "மலர்மருந்தும் முக கவசமும்"

முன்னுரை : உலகெங்கும் வாழும் எம் உறவுகளுக்கு மயிலை ஈசன் மன்னர் பேரருளால் அடியேன் அனுபவ ரீதியாக கண்ட மலர்மருந்துகள் பற்றி பகிர்கிறேன்...

மலர்மருந்து பொதுவானவை :-
              
               " அஃரிமனி +ராக்வாட்டர் "

     பயன்பாடு :-
                              முக கவசம் அணிந்து பிறகு அந்த சூழலை நினைத்து மேற்கண்ட இரண்டு மருந்துகளையும் உட்கொள்ள அன்று நீ எதிர்பார்த்த வேலைகள் அனைத்தும்(அ)உனக்கு மிகவும் தேவையென்று பிரபஞ்சத்தால் அங்கீகரிக்கப்பட்ட வேலை ஒன்று "நீ எதிர்ப்பார்த்த விதத்தில் நிச்சயம் அல்ல" வேறு விதத்தில் நடைபெறும்....

         மீண்டும் அடியேன் சொல்கிறேன்
                   "நீங்கள் எதிர்பார்த்த வேலை"அல்ல!!

      இந்த மலர்மருந்து "பழம் நழுவி பாலில் விழுந்துதது போல் அல்ல"
 "அந்த பாலும் பாழமும் உன் கனவு நாயகி/நாயகன் கொண்டுவந்து அவர்களே நழுவி உன் மேல் விழுந்தால் எவ்வளவு மகிழ்ச்சி, சந்தோஷம் நொடிப்பொழுதில் ஏற்படுமோ அதை மேற்கண்ட இரண்டு மலர்மருந்து செய்யும்!!!

"வாசகர்களே! இப்பொழுதே "கனவு நாயகி/நாயகன் வருகிறார்களா????

       "க்ளெமெடிஸ்"மலர்மருந்து 2டோஸ் சாப்பிடு நீயும் "சூப்பர் ஸ்டார்"போல் ஆகிவிடுவாய்...

கொசுறு""- (மேற்கண்ட 2மலர் மருந்துகளையும் "ஸ்பிரே" மூலம் முககவசத்தில் தெளித்தும் பயன்படுத்தலாம்)....

 

மலர் குறள் :- 16

தலைப்பு     :- 1.மலர்மருந்து "எல்ம்"(ELM)

                            
                       2.இம்பேஷன்ஸ்(IMPATIENS)

இந்தியாவின் பொருளாதாரத்தில் சிறந்து "கோடீஸ்வரர்"களில் ஒருவராக விளங்கிய "TATA" (ரத்தன் டாடா)அவர்கள் மலர்மருந்து "எல்ம்" தன்மையாளர் ...
தான் மிகுந்த கோடீஸ்வரர் என்றபோதிலும் மக்களோடு மக்களாகவே வாழ்வதில் தனிகவனம் செலுத்துபவர்,,

"எல்ம்"தன்மையாளர் "பல தொழில்கள்" செய்பவர்

   மேலும் தனக்கு வரும் பணம் பற்றியோ (அ)தன்னிடம் உள்ள பணத்தை மற்றவர்களுக்கு கொடுக்கும்போதோ "சலனம்" இல்லாது இருப்பார்,,,

BATA இது காலணி நிறுவனம் என்ற போதிலும் நன்றாக கவனித்தீர்களானால் புரியும் இவர்களின் தயாரிப்பு மிகவும் நேர்த்தி,அழகு, தனித்தன்மை, கடினமாக உழைக்கும் திறன், பாதத்தின் பாதுகாப்பு போன்றவை பாட்டா காலணிகளில் அதிகம் காணப்படுகிறது...

சரி நாம் விஷயத்திற்கு வருவோம்!
         "எல்ம்+இம்பேஷன்" செய்யும் வேளைகள் அனைத்தும் "ஜெட்"வேகத்தில் நீ  வாழ்க்கையில் முன்னேற கூறப்பட்டது...


மலர் குறள் :-17
தலைப்பு     :- "ஆலிவ்" (மலர்மருந்து)

முன்னுரை :- மயிலை ஈசன் மன்னர் பேரருளால் உலகெங்கும் வாழும் எம் தமிழ் உறவுகள் அடியேனின் இந்த மலர்மருந்து "ஆலிவ்" பதிவினை பொறுமையுடன் வாசித்து பயனடைய கேட்டுக்கொள்கிறேன்,,
  
ஆலிவ் சொல்லும் பழமொழி -             "சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்"    ஆம் உண்மைதான்
ஆலிவ் என்பது மலர்மருந்துகளில் "உடல்சார்ந்தது"

"உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே"
- திருமூலர்

ஆலிவ் மலர்மருந்து பேசுகிறது ஓர் உருவகம் :- ஏ கோமாளிகளே! உயிரை உன்னால் பார்க்க முடியாது ஆனால் உன் உடலை நீ சரிவர கவனித்தால் அதன்மூலம் உயிரை வளர்க்க முடியும்!!
 "உடல் இன்றி உயிரில்லை"

நீங்கள் ஆலிவ் மலர்மருந்து நெகட்டீவ் தன்மையாளராக இருந்து வாரம் ஓரிரு டோஸ் "ஆலிவ்"சாப்பிட்டுவர மனித உடல் உறுப்புகள் பற்றி மருத்துவ பல்கலைக்கழக மருத்துவர்களுக்கே விளக்கம் அளிக்கும் அளவிற்கு தெளிவு உன்னிடம் பிறக்கும்,,
மேலும் நீ வாழ்நாளில் ஒரு மத்திய அரசு உயரதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றால் என்ன பணமும் புகழும் "ஓய்வூதியமும்" கிடைக்குமோ அதே செல்வாக்கு "ஆலிவ்" உனக்கு தினம்தினம் கொடுக்கும்,,

நீயே முடிவு செய்துகொள் 25வருடம் கஷ்டப்பட்டு படித்து TNPSC, UPSC,போன்ற தேர்வெழுதி பிறகு 22வருடம் மேலதிகாரி, அரசியல்வாதி,பொதுமக்கள், அனைவருக்கும் பயந்து பணிமுடித்து எந்த கெட்டப்பேரும் வாங்காமல் வந்தால் மட்டுமே உனக்கு மாலை,மரியாதை,பணம்,புகழ் அனைத்தும்!!

ஆனால் மக்களின் உண்மையான தெய்வமான Dr.எட்வர்டு பாட்ச் அவர்கள் கண்டுபிடித்த இங்கிலாந்து மலர்மருந்துகள் "அறைகூவல்" விடுகிறது 

நீ பிறந்தது கஷ்டப்படுவதற்கு அல்ல

மலர்மருந்து "ஆலிவ்" ஒரிருநாள் ஓரிரு டோஸ் மட்டுமே சாப்பிட்டுபார் 

உன் வாழ்விலும் "குபேரன்"கதவை தட்டுவான்

மலர்மருந்து உபயோகிப்பாளருக்கு "ஆலிவ்"ஓர் டபுள்ஆஃபர்" நீங்கள் மலர்மருந்து ஆலிவ் தன்மையாளராக இல்லாத பட்சத்திலும் உடல்சோர்விற்கு ஆலிவ் ஓர் சஞ்சீவி போல் வேளைசெய்யும்!!

வாரம் மூன்றுநாள் குழந்தைகள் முதல் பெரியவர்வரை "ஆலிவ் "சாப்பிடலாம்.

"நரை திரை மூப்பு"- ஆலிவ் ஒன்றே "காப்பு"

உடல்+மனம்+பணம்(த்ரி ரோசஸ்)


மலர் குறள்:-18
தலைப்பு    :- மலர்மருந்து "லார்ச்"(LARCH)

முன்னுரை :- மயிலை ஈசன் மன்னர் பேரருளால் அடியேன் பயன்படுத்தி வெற்றிகண்ட மலர்மருந்து "லார்ச்" 
பற்றிய தொகுப்பு பதிவிடுகிறேன் 
எனக்கு இந்த தன்னம்பிக்கை வளர வழிவகை செய்தவர்கள் "மயிலைஈசன்"  மற்றும் "மன்னர்"

நம்பிக்கை=கார்ஸ்
தன்னம்பிக்கை =லார்ச்

லார்ச் பற்றிய எமது பொதுவான கருத்து!

                       இன்றைய சூழலில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவமாணவியர்கள் [NEET,JEE, TNPSC,UPSC,] என்னதான் சிறப்பாக படித்தாலும் அவர்களுக்கு "தன்னம்பிக்கை" என்ற "டானிக்" தேவைப்படுகிறது

        மேற்படி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தேர்வை பற்றிய தன்னம்பிக்கை இல்லையென்றால் 
மலர்மருந்து "லார்ச்" சாப்பிட தன்னம்பிக்கை வளருவதோடு மட்டுமல்லாமல் போட்டித்தேர்வு எழுதி வெற்றிபெற்று எவ்வளவு பணம் ஊதியமாக பெறுவாயோ அதைவிட 3மடங்கு வருமானம் பெற வழிகிடைக்கும்,

லார்ச் தேவைப்படும் நபர்கள் சொல்லக்கூடிய ஒரே "ஸ்லோகம்"-என்னால் முடியாது'

          
பாசிட்டீவ் லார்ச் தன்மையாளர் பேசும் மந்திர ஒலி'- என்னால் முடியும் 
என்னால் முடியாது என்றால் யாரால் முடியும்!

      நீலகிரிமாவட்டம் திரு.மாரி என்பவருக்கு 6பெண் குழந்தைகள் 
அவர் மேட்டுப்பாளையம் பேருந்துநிலையத்தில் தீடீரென்று ஒரே கூட்டம் என்னவென்று திரு.மாரி அவர்கள் பார்த்தபோது பிறந்து சில தினங்களே ஆன "பெண்குழந்தை" ஒன்று கேட்பாறற்று கிடந்தது அதை இவர் நான் வளர்த்துக்கொள்கிறேன் என்று கேட்க அதற்கு உடனிருந்த நண்பர் உனக்குதான் ஏற்கனவே 6பெண்கள் இருக்கிறதே என்று கேட்டதற்கு அவரின் கீழ்கண்ட பதிலை பாருங்கள்

      இன்னும் 60பெண்குழந்தைகள் கிடைத்தாலும் வளர்த்து படிக்கவைத்து "மகாராணி"போல் வாழவைப்பேன்,,

* மற்றவர்களை புகழ்ந்து தள்ளும் "தூபம்"  மனிதர்களுக்கு லார்ச் கொடுக்க இவரும் பங்களாவாசிபோல் ஆகிவிடுவார்

*வாழ்க!வாழ்க!! கோஷம் போடும் வாலிப
சிங்கங்கள் லார்ச் சாப்பிட உண்மையிலேயே அவர் கிராமம் நகரம் ஒன்றியம் மாவட்டம் என "பதவி" கள் குவியும்,

* அரசியலில் 'காலூன்ற நினைப்பவர்களுக்கு "லார்ச்" *சிம்மாசனம்* போன்றது

* IPL போட்டியிலேயே காலத்தை கழிக்கும் "அரைட்ரவுசர்" கள் லார்ச் சாப்பிட ஓரிரு வருடத்தில் உன்னையும் மக்கள்  தொலைக்காட்சி, BBC, செய்தித்தாள், இன்டர்நெட் போன்றவற்றில் வலம்வருவாய்

மனித உருவில் வந்த மகான்     DR.எட்வர்டுபாட்ச் என்பதே 100%உண்மை


மலர் குறள்:- 19
நாள்            :- 20/09/2020
தலைப்பு     :-      மஸ்டர்டு(MUSTARD)

முன்னுரை :- 

                        மயிலை ஈசன்மன்னர் பேரருளால் அடியேன் இன்று உலகெங்கும் வாழும் எம் தமிழ் உறவுகளின் 'வாழ்க்கைத்தரம்' உயர மஸ்டர்டு என்ற மலர்மருந்தின் சிறப்புகளையும், பயன்படும் விதத்தினையும் பதிவு செய்கிறேன்,

           "பெஸ்ட் கண்ணா! பெஸ்ட்-பைன்"
"வேஸ்ட் கண்ணா! வேஸ்ட்- ஆஸ்பென்"
"மஸ்ட் கண்ணா!மஸ்ட்-*மஸ்டர்டு
"உசத்தி கண்ணா!உசத்தி- "எல்ம்"

வாசகர்களுக்கு ஒரு கேள்வி:-
                                                     உனக்கு "குபேரசம்பத்து" வேண்டுமா???

                               அந்த குபேரனையே ஆட்டிப்படைக்கும் "அன்னை மகாலஷ்மி" வேண்டுமா????
       அந்த மகாலஷ்மியை மார்பில் தாங்கி உலகையே ரட்ஷிக்கும்                                 ஸ்ரீ வெங்கடாஜலபதி வேண்டுமா???

இவை மூன்றும் ஒருங்கே கிடைக்க.           "மஸ்டர்டு" ஒன்றே போதும்

வாசகர்கள் கேள்வி?
                     
      உடனே சொல்லுங்கள் நாங்கள் என்ன செய்யவேண்டும் இதுதானே "பதில்"

நீங்கள் பூஜை செய்யவேண்டாம்! விரதம் இருக்கவேண்டாம்!! ஹோமம் செய்ய வேண்டாம்!!! 
     
  நீங்கள் 'மஸ்டர்டு' மலர்மருந்து எதிர்மறை(நெகட்டீவ்) தன்மையாளராக இருந்தால் மட்டும் போதும்

"குட்டு வாங்கினால் கூட மோதிரகையால் வாங்கு பழமொழி"
      "குட்டும் வேண்டாம் மோதிரமும் வேண்டாம் "மஸ்டர்டு" ஒன்றே போதும் -புதுமொழி"

சிக்கரி        -பணக்காரன்
ஹார்ன்பீம்-லட்சாதிபதி
மஸ்டர்டு    - கோடீஸ்வரன்

அப்பப்பா! யார்? தான் அந்த மஸ்டர்டு நெகட்டீவ் தன்மையாளர்??
           இதுதானே அடுத்தகேள்வி
                     சொல்கிறேன் கேளுங்கள்,,

1.சோகமே வடிவான மனிதர்
2.காரணமே இல்லாமல் "கன்னத்தில்" 
    கை வைத்து கொண்டிருப்பவர்
3.கப்பல் கவிழ்ததுபோல் உட்கார்ந்து இருக்கும் "நாட்டாமைகளுக்கு" 

மஸ்டர்டு நேர்மறை தன்மையாளர்:-
        * வருமானவரி துறையால் கூட கணக்கிடமுடியாத அளவு பணம் வைத்திருப்பவர்

"மஸ்டர்டு " பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் நேரமே போதாது.


மலர்குறள்  :- 20

நாள்             :- 23/09/2020

தலைப்பு      :- ஸ்டார் ஆஃப் பெத்லஹம்

முன்னுரை  :- மயிலைஈசன் மன்னர்
                         பேரருளால் அடியேன்      
                         அனுபவத்தில் மலர்மருந்து
                          "ஸ்டார் ஆஃப் பெத்லஹம்
                         செய்யும் அற்புதங்களை
                          பகிற்கிறேன்..
"ஸ்டார்+ஆஃப்+பெத்லஹம்" =இந்த வார்த்தையே ஒரு மிக அற்புதம்வாய்ந்த "மந்திரச்சொல்"
        நாளை 24/09/2020 இந்த மந்திரசொல்லை உருவாக்கிய மகான் "அவதாரதிருநாள்"
        ஆம் வாசகர்களே நீங்கள் எல்லோரும் அதிகமாக அடியேனிடம்(என்னிடம்) கேட்ட ஒரே கேள்வி அய்யா ஒரிஜினல் பாட்ச் மலர்மருந்து மிகவும் சீக்கிரம் வேலைசெய்யுமா? 
       என் அனுபவத்தையே பகிற்கிறேன் 
2018- ஜீலை மாதம் எனது மகளுக்கு தாங்கமுடியாத "டைபாய்டு" ஜீரம் 7வயது பெண்குழந்தை மருத்துவமனையில் அனுமதித்து 8நாட்கள் ஆகியும் காய்ச்சல் குறைந்தபாடில்லை "மலர்மருந்து "கற்றுகொண்ட பலரிடம் உதவிகேட்டும் யாரும் சரியான பதில் தரவில்லை (ஒருவரை தவிர) எம் "மன்னர்" அவர்மட்டுமே அடிக்கடி சொன்ன வார்த்தை எம் மனதில் ஓடியது அதுதான் "உம் எண்ணத்தை எந்த மலர்மருந்து மீது செலுத்துகிறாயோ அது நிச்சயம் வேலைசெய்யும்
       என் கையில் பணமும் இல்லை மலர்மருந்தும் இல்லை மருத்துவமனை வெளியில் அமர்ந்து நான் மந்திரமாக உச்சரித்த அந்த வாக்கியம் "ஸ்டார் ஆஃப் பெத்லஹம்" ஒருசில மணிநேரத்தில் அற்புதம் நடந்தது!!
            குழந்தை ஓரளவு சகஜநிலைக்கு வந்தாள் மேலும் 1லட்சம் வரை பணஉதவி கிடைத்தது மேலும் சென்னையில் சிறப்பான மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது 

      சென்னை புரசைவாக்கம் பிரிக்கிளின்ஸ் ரோடு "பாலாஜிநர்சிங்ஹோம்" மருத்துவர் சுமார் 5மணி நேரத்தில் 75%குணப்படுத்தினார் பிறகு ஓரிரு நாளிலே பூரண குணமாகியது...

   வாசகர்களின் மேலான கவனத்திற்கு!
                     
                   நீ பரிபூரணமாய் இறைவனை சரணாகதி அடைந்தால் "மலர்மருந்து" வார்த்தையை உச்சரித்தாலே கூட பலன்கிடைக்கும்

இது எல்லோருக்கும் எல்லா நிலைகளிலும் சாத்தியம் என்று அடியேன் உறுதி அளிக்கவில்லை..

      மேலும் "ஸ்டார் ஆஃப் பெத்லஹம்"மலர்மருந்தும் இறைதூதர்களும் வேறுவேறல்ல 

"திக்கற்ற ஏழைகளுக்கு தெய்வமே(ஸ்டார் ஆஃப் பெத்லஹம்)துணை

           மேலும் மீண்டும் அடுத்த பதிவில்
                          "ஸ்டார் ஆஃப் பெத்லஹம்"
                      பற்றிய முழுமையான தகவல்களை பதிவு செய்கிறேன்.

                    

மலர்குறள் :-21 
நாள்            :- 27/09/2020
 தலைப்பு   :- ஸ்டார்ஆஃப்பெத்லஹம்
                        (தொடர்ச்சி) 
முன்னுரை:- மயிலை ஈசன் மன்னர் 
                         பேரருளால் அடியேன் உலகெங்கும் வாழும் எம் தமிழ் உறவுகளுக்காக மீண்டும் "ஸ்டார் ஆஃப் பெத்லஹம்" மலர்மருந்தின் மகத்துவத்தின் தொடர்ச்சியை தொடர்கிறேன்,,

'ஸ்டார்ஆஃப்பெத்-மின்சாரகண்ணா' 
இந்த ஒற்றை வார்த்தை போதும் நீங்கள் எந்தெந்த சூழலில் ஸ்டார்ஆஃப்பெத்லஹம் தேவைப்படும் என்பதை புரிந்துகொள்ள

 கோடைக்காலங்களில் வரும் கட்டிகள்,  உடலில் எங்கேயாவது புண் இருந்தால் 
தொடை மற்றும் அக்குள்களில் ஏற்படும் (நெரிகட்டுதல்)அதனால் வரும் ஜுரம் ஸ்டார்ஆஃப்பெத்லஹம் சாப்பிட சரியாவதோடு  உடல் பளபளப்பு ஏற்படும் 

மேலும் நன்றாக கவனியுங்கள்!

   பிறந்த குழந்தைகளுக்கு 4,6,8,10,12 மாதங்களில் ஏற்படும் "தோஷம்"என்று சொல்வார்கள் குழந்தை பச்சைபச்சையாக கழியும், பால்குடிக்காது,எப்போது பார்த்தாலும் அழுதுகொண்டே இருக்கும்(இங்கு செர்ரிப்ளம் உதவவில்லை)
இதற்கு எந்த அலோபதி மருந்தும் உதவாது முஸ்லீம் தர்காக்களில் ஓதி முடிக்கயிறு போட்டால் மட்டுமே குணமாகும்
     ஆனால் அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு "ஸ்டார்ஆஃப்பெத்லஹம்+ ஸ்வீட்செஸ்ட்நட்+மஸ்டர்டு (மூன்றையும் சேர்த்து அல்ல தனித்தனியே)கொடுக்க பூரணகுணம் கிடைத்தது,,
"ஸ்டார்ஆஃப்பெத்லஹம்"- தீர்த்தம்
 
மேலும் 'விரதம்'(நோன்பு) காலங்களிலும் இவை ப்ரபஞ்ச ஆற்றலை மேம்படுத்த "அமிர்தம்" போல் (பேராசையால் சாப்பிட்டால் 'வி-ம்' ஆக மாற வாய்ப்பும் உள்ளது)வேளை செய்கிறது

60-70 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு வரும் 'ஞாபகமறதி' மற்றும் "மூச்சுதிணறல்" போன்றவை ஸ்டார்ஆஃப்பெத்லஹம் சாப்பிட குணமாகும்

வாரம் ஒருமுறை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஸ்டார்ஆஃப்பெத்லஹம் மலர்மருந்து சாப்பிட ஒரு வருடத்தில் நீங்களும் "முதலாளி" என்ற அந்தஸ்து பெறலாம்

    நீங்கள் நினைப்பதுபோல் அல்ல "கடவுள்"மட்டுமே முதலாளி நாம் அவரின் தொழிலாளி அல்லவா?
 ஸ்டார்ஆஃப் பெத்லஹம் சாப்பிட கடவுளின் அங்கீகரிக்கப்பட்ட(உன்னிடம் எவரும் குறையே காணமுடியாது) நபராக மாறிவிடுவாய்!!
 
வாசகர்களுக்கு ஒரு "கொசுரு"
 
                   புரிந்தால் பிஸ்தா!!

      
"ஊசி நுழையாத இடத்தில் ஒட்டகம்
                                 நுழையுமா???

ஆனால்
            "வால்நட் வேலைசெய்யாத நேரத்தில் "ஸ்டார்ஆஃப் பெத்லஹம்"
        99% வேளை செய்யும்

வாசகர்கள் அப்போ 100% வேலை செய்யாதா என்றுகேட்பவர்கள் மட்டும்
ஒரு டோஸ் "கார்ஸ்"சாப்பிட்டு பிறகு 
"ஸ்டார்ஆஃப்பெத்லஹம்" சாப்பிட்டுபாருங்கள்....


மலர் குறள்  :- 22
நாள்              :- 30/09/2020

தலைப்பு       :- வெர்வைன் மலர்மருந்து 
சிறப்புபெயர்:- "வேதம்"

முன்னுரை   :- மயிலை ஈசன் மன்னர் பேரருளால் அடியேன் இன்று உலகெங்கும் வாழும் எம் தமிழ் உறவுகள்
அனைவருக்குமாக மலர்மருந்து 'வெர்வைன்'(வேதம்) வாழ்வில் பயன்படும்விதம், பயன்பட்டவிதம், பயன்படுத்தப்படவேண்டிய விதம்
போன்றவற்றை அடியேன் இறையருளால் எமக்கு தெரிந்தவரை
பகிற்கிறேன்,

      வெர்வைன் மந்திரம்!!
                             வேண்டுதல்,பிரார்த்தனை, தீவிரபிரார்த்தனை,குறிக்கோள், அதிகஆர்வம்,XXXL, ப்ரீசைஸ்

'வெர்வைன் எதிர்மறை தன்மையாளர்'
      *ஏமாற்றுபேர்வழி
      *அடுத்தவர் சொத்தை அபகரித்தல்
      *ஊர் சொத்து ஏமாற்றுதல்
      *"ஸ்வாகா" ஆசாமி
      *ஏழையின் காசில் ஏப்பம்

"ஆடு நனைகிறதே என்று அழும் ஓநாய்களுக்கு 'வெர்வைன்' ஓர்
மாமருந்து"
 புரிந்தால் புத்திசாலி"
                             
#சர்வரோகநிவாரணி-வெர்வைன்

"உங்கள் RAJ T.V காலை 11மணிக்கு
உங்க தாத்தா பேசுகிறேன் சேலம் சித்தவைத்தியர்களை தேடிதேடி 
அலையும் பேரன்களுக்கு-வெர்வைன்

சோதனை-T.T.R [கார்ஸ்]
வேதனை -குத்துவலி[மஸ்டர்டு ]
சாதனை -  ஸ்ரீராமானுஜர்[ஜென்ஷன்]
நரகவேதனை-ஒரு விபத்தில் அடிபட்டு
பிழைக்கவும் இல்லை,சாகவும் இல்லை- தினம்தினம் செத்து பிழைத்தல்
"வெர்வைன்"

* ச'ப'த பேர்வழிகளுக்கும்
   ச'ப'ல பேர்வழிகளுக்கும்
                                 "டானிக்"-வெர்வைன்

"சாகசம் "-என்பது வெர்வைன் பாசிட்டீவ்
    கவனித்து வாசியுங்கள் "சர்க்கஸ்"அல்ல

தேர்தலில் பணமே பிரதானம்

   அரசியல்வாதிகள் -வெர்வைன்(சிலர்)
   மக்கள் -வைல்டுரோஸ்+பீச்

"காமசூத்ராக்கள் --->கடவுளே கதியென்று
கிடக்க--->வெர்வைன்(சாமியார் பிரேமானந்தா)

* தொலைப்பேசியில் ஒயரே இல்லாமல் "தம்பட்டம்" "தற்பெருமை" அடிக்கும் 
சூரியன் பட கவுண்டமணிகளும்
ஓங்கி அடிச்சா ஒன்டறைடன் வெயிட்
#சிங்கம்# பட சூர்யாக்களும்-வெர்வைன்
மலர்மருந்து சாப்பிட்டுவர 100க்கும் மேற்பட்ட "சாமரம்"வீசுமளவிற்கு 

  உலகஅளவில் கொடிகட்டி வாழ்வார்கள்

'நீங்கள் மலர்மருந்து வெர்வைன் தன்மையாளராக இருந்து தினம் சாப்பிட்டுவர கைமேல் பலனும் உண்டு
                         கைமேல் பணமும் உண்டு

வெர்வைன் பழமொழி:-
                                            "ஊர் பெருமை
முந்தானையில்
தற்பெருமை முறம்போட்டு புடைத்தாளாம்

'தினமலர்' நாளிதழ் "டீகடை பென்ஞ்
                                    வெர்வைன்

இன்னும் ஏராளமான வெர்வைன் உதாரணங்களை கொடுக்க அடியேன் ரெடி
ஆனால் "அமிர்தம்" சிறுக சிறுக பருகுவதேபேரானந்தம்...


மலர்குறள் :- 23
நாள்            :- 9/10/2020
தலைப்பு     :-  பீச் மலர்மருந்து

முன்னுரை :- "மயிலை ஈசன் மன்னர் 
                          பேரருளால் அடியேன் 
                         உலகெங்கும் வாழும் எம்
                         தமிழ் உறவுகளுக்காக பீச் என்ற மலர்மருந்து மூலம் அடியேன் அனுபவத்தில் அனுபவித்ததை பகிற்கிறேன்...

* நாம் எதிர்பார்த்தது எதிர்பார்த்தபடி நடக்க/கிடைக்க - பீச்

*தனது இளமைகாலம் முதல் முதுமைகாலம்வரை தனது வாழ்வில் இன்ப-துன்பங்களையே பார்த்தவன் என்று சொல்பவர்கள் -பீச் மலர்மருந்து தேவைப்படும் நபர்

#பீச் மனநிலை தொழிலார்கள்:-

          1. எலக்ட்ரீஷியன்
          2. பியூட்டிபார்லர்
          3. சலூன்கடை
          4. டைலர்
          5. அச்சுகூடம்(பவர்பிரஸ்)

"வாழ்க்கை சுகமாக வாழ்வதற்கே
     சுமையாக அல்ல" -பீச்

"தெரிந்தே தவறுசெய்கிறான் -செஸ்ட்நட்பட்"
"தெரியாமல் தவறு செய்கிறான் -பீச்"

*தலைவர்களுடனும் சினிமா பிரபலங்களுடனும் புகைப்படம் எடுத்து வீட்டில் மாட்டிக்கொண்டு மார்தட்டிக்கொள்ளும் "ரசிகசிகாமணிகள்" பீச் சாப்பிட நீயும் ரசிகர்களின் உண்மையான தலைவனாய் ஜொலிப்பாய்.

சட்டம் தன் பாக்கெட்டில்-ராக்வாட்டர்
கைகலப்பு -ஸ்டார் ஆஃப் பெத்லஹம்
வாயடி அடிக்கிறான் - பீச்

*உனது வீட்டில் நடைபெறும் திருமணம், பிறந்தநாள்விழா, திருமணநாள் போன்ற மகிழ்ச்சியான நாட்களுக்கு ஓரிரு தினம் முன் தொடர்ந்து பீச் மலர்மருந்து சாப்பிட்டுவர உனக்கு விலையுயர்ந்த பரிசுபொருட்கள் நீ மிகவும் ரசிக்கும்படியான பொருட்கள் பரிசாக கிடைக்கும்..
(எ.கா) "YAMAHA-Rx 100" ,                  ஆப்பிள் i-phone ,வைர தோடு போன்றவை...........

செய்வன திருந்தசெய்- பீச்

செய்யாத தவறுக்கு தான் தண்டனை பெறுவார்-பீச்
காவல்நிலையம், நீதிமன்றம், அரசு அலுவலகங்கள் போகும்போது 'ராக்வாட்டர்' சாப்பிட பல வேலைகள் முடியும் 
அப்படியும் முடியாத சில கேசுகளுக்கு பீச் கொடுத்து பாருங்கள்
2நாளில் முடியும் வேலை 2மணிநேரத்தில் முடியும்..

*ஊரார் நோய்களையெல்லாம் குணப்படுத்துகிறேன் ஆனால் என் வியாதியை என்னால் தீர்க்க முடியவில்லையே என சொல்பவர்களுக்கு "பீச்" கண்கண்ட தெய்வம்

"ஆதங்கம் படும் பெண்கள்-பீச்'

மனிதன் தன்னைத்தானே புரிந்துகொண்டு இயற்கையோடு இணைந்து வாழ -பீச்

"ஆண்டவன் நல்லவர்களை சோதிப்பான் ஆனால் கைவிட மாட்டான்- "பீச்" 

மனம்&உடல்பொருளாதாரம் சார்ந்த அனைத்து தேவைகளுக்கும் மலர்மருந்து மூலம் மட்டுமே தீர்வு அளிக்கப்படும்

பூ.சத்தீஷ் (எ)சாய்சத்தீஷ்வரன்
மலர்மருந்து ஆர்வலர்.

No comments:

Post a Comment