Tuesday 21 June 2022

Cinchona Officinalis ஹோமியோ மருந்தின் குணம்

சிங்கோனா அபிஷினாலிஸ் ஹோமியோ மருந்தின் குணம் 
Cinchona Officinalis.

உடலிலிருந்து நீர்களோ, இரத்தமோ அதிகமாக வெளியேறிய பிறகு
ஏற்படும் பலவீனம். அதிக இரத்தப் போக்கு, அதனால் மயக்கம் வரும் நிலை,கண்பார்வை குறைதல்,காதுகளில் இரைச்சல்.வயிற்றில்
அதிகக் காற்று உப்பிசம்,வயிற்றில் எதையோ வைத்து
அடைத்திருப்பது போன்ற
உணர்ச்சி;ஏப்பத்தினாலோ,
அபான வாயு பிரிவதனாலோ சமனப் படாது. வலியோ உபத்திரமோ இல்லாத
வயிற்றுப் போக்கு.முறை
வைத்து வரும் உபாதைகள்,
முக்கியமாக ஒருநாள் விட்டு
ஒருநாள் வருதல்.

சரீரத்திலிருந்து அதிக நீர் வெளியேற்றத்திற்குப் பின்
நீர் வீக்கம்; அதிகப்பலவீனம்
நடுக்கல்கள்,சரீர உழைப்பு
பிடிக்காமை.நரம்பு பலவீனம், தொடுதல்,வலி,காற்று
மேலே வீசுதல் இவை சகிக்காமை;விடியற்காலை மூன்று மணிக்கு மேல் புத்துணர்ச்சி தராத தூக்கம்.

முகம் வெளுத்து, பிணக்களையுடனிருத்தல்; கண்கள்
குழி விழுந்து சுற்றிலும் நீல
வளையங்கள் தென்படுதல்;
முகம் வெளுத்து நோயுள்ளவர் போல் தோற்றம் தரும்.

இரத்தப் போக்கு; உடலின்
எல்லா வெளி துவாரங்க
ளில் இருந்தும் இரத்தம் கருப்பாகவோ, கருப்பு நிறமும்
கட்டி தட்டியதுமாகவோ இருத்தல் ,இத்துடன் காதுகளில் இரைச்சல்,கண்கள்
பார்வை குறைதல்,சரீரமே
சில்லென்றிருத்தல்,சில சமயங்களில் வலிப்புகள்.

      சிங்கோனா அபிசினாலிஷ்.
Cinchona Officinalis.

மனம் மந்தம்.வேலை
செய்ய மனமின்மை.
அலட்சியம்.மௌனம் சாதித்தல்.கவலை.தைரியமின்மை.

தலை கிறு கிறுப்பு.வெடித்தது விடுவது போன்ற வலி.மயிர்கால்களில் அதியுணர்ச்சி மயிரை இழுப்பது போல
உணர்ச்சி.குளிர் காற்றை சகிக்க முடியாது.முகத்தில் நரம்பு வலி.

குளிர் காற்றை சகிக்க முடி
யாது.கடுமையான தும்மல்.
சோகை உள்ளவர்களுக்கு
மூக்கிலிருந்து இரத்தம் வந்
து தலை வலியை குறைக்கும்.

குளிர்காற்று படுவதால் பற்களில் வலி.குழந்தை பால்குடிக்கும் போது தாய்க்குப் பற்களில் வலி.

வாய் காப்பு. ஆகாரத்தில் வெறுப்பு.குளிர்ந்த நீர் அதிகம் குடித்தல்.பால் குடிக்கப்
பிடிக்காது.

கொஞ்சம் சாப்பிட்டதும் வயிறு ஊதி கனத்துடன் பசி அடங்கி விடும்.வயிற்றைத் தொட்டால் அதியு
ணர்ச்சி. அடிக்கடி ஏப்பம்.வயிறு உப்பி முறைவைத்து வரும் வலி,இரவில் வரும் வலி,பழம் சாப்பிடுவதால்
வரும் வலி.தாமதமான ஜீரடம்.ஆகாரத்தை வாந்தியெடுத்தல் .விக்கல் கல்லீரல்,
மண்ணீரலில் வீக்கம்,வலி
மிதமிஞ்சி.டீ குடித்ததால் ஏற்பட்ட கோளாறுகள்.

வலியில்லாத வயிற்றுப் போக்கு, இரவில் அல்லது
சாப்பிட்டவுடன்,அதிக வாயுவுடன் போகும்.மலம் மஞ்சளாகவும், நுழைத்துப்,ஜீரணமாகாத ஆகாரத்துடனும் இருக்கும். குடலிலிருந்து இரத்தப் போக்கு.வயிற்று
போக்கும் இரத்தப்போக்கும்
அதிக பலவீனப்படுத்தும்.
   
சிங்கோனா அபிசினாலிஷ்
Cinchona Officinalis.
தொடர்ச்சி...

பிரசவித்தப் பிறகு ஏற்படும் இரத்தப் போக்கு.இரத்தப் போக்கு வெளியாகும் சமயமே வலிப்பு ஏற்படுதல்.கருப்பை இரத்தப்போக்கிற்கும்,
அதிக மாதவிலக்கு இரத்தப்
போக்கிற்கும் சைனா(china ) ஏற்றது. இப்போக்கு கறுப்பாகவும் கட்டிகளாகவும் வெளிப்படுவது முத்திரைக் குறி.மாத விலக்கின் இடைக்காலப்போக்கு.மாதவிலக்கு நிற்கும் காலத்திற்கு பிறகு இரத்தப் போக்குடன் காதில்ரீங்கார ஓசையுடன்,பலவீனம், நீர் வீக்கம் ஏற்பட்டு களைத்து விடுதல்.

உணர்ச்சிகள் அதிகரித்த
நிலை .தலைசீவும் பொழுது
மண்டைத் தோலில் புண்
போன்ற உணர்ச்சி.தொடுவதால் வலி அதிகமடைந்து
உச்ச கட்டத்தை அடையும்.வலி காற்று பட்டால் கூட அதிகமாகும்.நடக்கும் சமயம் முழங்காலில் பலவீனம்.முதுகுத் தண்டில் சில இடங்களில் புண் போன்ற வலி.

சைனாவின் குறிகள் முறை
வைத்து ஒரு நாள் விட்டு மறுநாள் தோன்றும்.இது
போன்று குறிகள் முறை
வைத்து தோன்றுவது சைனாவின் முத்திரைக்குறி.
முறைசுரத்திலும்,நரம்பு வலிகளிலும் இதுபோல்
முறைவைத்து உபாதைகள்
தோன்றும்.சில சமயம் 14 
நாட்களுக்கு ஒரு முறையும்,
வளர்பிறை நாட்களிலும், மூன்று மாதங்களுக்கு ஒரு
முறையும் உபாதைகள் அதிகமடையும்.காய்ச்சல் 7 வது நாளோ, 14 வது நாளோ முறை வைத்துத்
தோன்றும்.ஒவ்வொரு நாளுமோ அல்லது ஒரு நாள் விட்டு ஒருநாளோ,ஓரிரண்டு மணிக்கு முன்பாகவோ முறை வைத்து உபாதை தாக்கும்.

சிங்கோனா அபிசினாலிஸ்
Cinchona Officinalis.
தொடர்ச்சி...

வினோதக்குறிகள்.
பசியும் பசியே இல்லாமையும், உணவில் வெறுப்பும் கடுமையான பசியும்.

களைப்பை உண்டாக்கும் இரவு வியர்வை. கண்பார்வை
மங்குதல். இரவில் கண் தெரியாமை.அடிக்கடி விந்து வெளியாகி பலவீனத்தையும்,களைப்பையும் உண்டாக்குதல். பால் கொடுக்கும்
தாய்மார்களுக்கு வரும் பல்
வலி.உமிழ்நீர் தொடர்ந்து
சுரத்தல்.மஞ்சள் காமாலை.
மலம் கறுப்பாகவும், சிறுநீர்
மஞ்சளாயும் வெளிப்படுதல்
மாதவிலக்கிற்கு பதிலாக
சீழ்போன்ற இரத்தம் தோய்ந்து வெள்ளைப்படுதல்.பழங்களை உண்பதால் உண்டாகும் வயிற்று உபாதை.ஒரு கை குளிர்ச்சியாயும் மற்றது சூடாகவுமிருத்தல். பல்வலி தொடுவதால் அதிக வேதனை.கல்லீரல்
பகுதியில் வலி.பித்தக் கற்களால் வலி. மஞ்சள் காமாலையுடன் கல்லீரல் மண்ணீரல் வீங்கி விடுதல்.

குளிர் காற்று,திறந்த வெளி,
பால் பழங்களை உண்பது,
அதிகமான மன உழைப்பு,
விர் என்று வீசும் காற்று,அதிர்வு ,டீ,வெய்யில் காலம் இவைகளால் உபாதைகள் அதிகமாகும்.                                 
நன்றிகள் - சீரங்கன் ராமலிங்கம் ஐயா.          

No comments:

Post a Comment